In சொந்தக் கதை

என்னைப் பற்றி பெருமைப்பட இருக்கும் விஷயங்கள் எட்டு

பெரிய கைகளின் தொடக்கத்தில் இருந்து வந்திருக்கிறது இந்த விளையாட்டு, என்பதால் மட்டுமே இதை மறுக்க இயலாமல் தொடருகிறேன். ஒரு விஷயம் நான் இதுவரை பெருமைப் படும்படி எட்டு விஷயங்கள் எதுவும் செய்யவில்லை.

என்னை இந்த ஆட்டத்தில் சந்தோஷும், ப்ரசன்னாவும் இழுத்துவிட்டிருந்தார்கள். Grrr. அதை மறந்திட்டேன்.

பிற்காலத்தில் நான் பெருமைப் படும்படியாக செய்ய இருக்கும் நினைத்திருக்கும் எட்டு விஷயங்களை வேண்டுமானால் சொல்கிறேன்.

1) எப்பாடுபட்டாவது கடைசி வரை சிகரெட் தண்ணி அடிக்காமயிருக்கணும்.

2) நல்லபடியா கல்யாணம் செய்து கொண்டு நல்ல கணவனாய் நடக்கணும்.

3) கடைசி வரைக்கும் அம்மாவை பார்த்துக்கணும்.(பெண்டாட்டியுடன் பிரச்சனை இதனால் வருமென்றால் எத்தனை பொய் சொல்லியாவது. இரண்டு பேருக்கும் நல்லவனாயிருக்கணும்).

4) Giving back to the society அப்படிங்கிற கான்செப்டில் நம்பிக்கை அதிகம் இருந்தாலும் இதுவரை அதற்கான இனிஷியேட்டிவ் எடுக்காமல் இருக்கிறேன். அப்படி இல்லாமல் என் மனசு பெருமைப்படும் அளவிற்கு திரும்பித் தரணும்.

5) இவனால கெட்டழிஞ்சாங்க நாலு பேர்னு இல்லாமல் என்னால நல்ல நிலைமைக்கு வந்தாங்க நாலு பேர் அப்படின்னு பேர் வாங்கணும்.

6) எனக்கு சாப்பாடு போட்டு, வாழ்க்கை கொடுத்த ஜாவாவிற்கு என்னால் எதுவும் செய்ய முடியுமென்றால் செய்ய வேண்டும்.

7) அதிகமா வாழ்ந்து யாரையும் நச்சு பண்ணாம உடல்நிலை திடமாயிருக்கிற வரை உயிர்வாழ்ந்து நல்லபடியா இதே திடகாத்திரமான உடல்நிலையோட யாருக்கும் பிரச்சனை எதுவும் செய்யாமல்(இதில் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும், மனைவியும் அடக்கம்) இறந்துடனும்.

8) கடைசி வரைக்கும் நாத்தீகனா இருக்கணும்.

அவ்வளவு தான்.

தொடர அழைப்பவர்கள் :-

1. பிகேஎஸ் அண்ணாச்சி
2. ஹரன்பிரசன்னா அண்ணாச்சி
3. கேவிஆர் அண்ணாச்சி
4. பெயரிலி அண்ணாச்சி
5. மதுரா அக்காச்சி
6. சயந்தன் அண்ணாச்சி
7. வசந்தன் அண்ணாச்சி
8. ஜெயஸ்ரீ அக்காச்சி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தான் பெருமைப்படும் 8 விஷயங்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

PS: யாரையும் நான் வற்புறுத்துவதில்லை இந்தமாதிரி விளையாட்டுக்கள் ஆட என்பதால், அவர்கள் விரும்பினால் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In சினிமா விமர்சனம்

Curse of the Golden Flower

இன்செஸ்ட் ரிலேஷன்ஷிப் பேசும் படங்கள் முன்பே பார்த்திருக்கிறேன், The Dreamers ஒரு உதாரணம்; அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் "வளரவில்லை" ஆதலால் இந்த Curse of the Golden Flower. $45 million செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, சொல்லப்போனால் சிவாஜி படத்தில் நான் எதிர்பார்த்தது இந்தப்படத்தில் காணக்கிடைக்கும் ஒரு ரிச்னஸ். படத்தின் கான்செப்ட் படி தமிழ்நாட்டில் படம் வர இன்னும் வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.



Star Moviesல் இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சில காட்சிகள் பார்த்திருக்கிறேன், ஆர்வத்தை தூண்டும் விதமாகயிருந்ததென்றால் மிகையல்ல. பிரம்மாண்டம் என்றால் என்ன என்று காணத் துடிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம் அதே சமயம் கதையென்ற ஒன்றும் பின்னிப் பிணைந்து பிரமாண்டம் எப்படி சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

மார்ஷல் ஆர்ட்ஸில் இனி Chinese மக்கள் செய்வதற்கு ஒன்றுமேயில்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் இன்னொரு முறை அந்த எண்ணத்தை தகர்த்தெரிந்திருக்கிறார்கள். மன்னரின் படைகளுக்கும் ராணியின் படைகளுக்கும் நடக்கும் சண்டை அத்தனை தத்ரூபம். சொல்லப்போனால் இதைப் போன்ற படங்களைப் பார்த்ததால் தான் சிவாஜியில் வரும் கார் ஃபைட் அத்தனை ரசிக்கக்கூடியதாகயில்லை.

சின்னம்மா(தந்தையின் இரண்டாம் மனைவி)விற்கும் மகனிற்கும் இருக்கும் உறவு, அண்ணனுக்கும் தங்கைக்கும் இருக்கும் உறவு என ஒரு சிக்கலான கதைக்களனில் படத்தை எடுக்க திறமைவாய்ந்த இயக்குநர் Zhang Yimou ஆல் முடிந்திருக்கிறது. இரண்டு மிகத் திறமையான நடிகர்கள் ரொம்பவும் சிக்கலான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Chow Yun-Fat, Gong Li எத்தனை திறமையான நடிகர்கள் என்பது அவர்கள் வெளிக்காட்டும் உணர்ச்சிகளில் தெரிகிறது.

Chow Yun-Fat தன்னுடைய வழமையான சண்டைக் காட்சிகளில் பரிமளிப்பதைக் காட்டிலும், வெகு அழகான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார், தன் மனைவிக்கும் தன் மூத்த மகனுக்கும் இருக்கும் தொடர்பு தனக்கு தெரியும் என்பதை வெளிக்காடும் இடத்திலும், மனைவி பலர் முன்னிலையில் தன்னை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொள்ளும் பொழுது உன்னைக் கொன்றுபோட்டிருப்பேன் ஆனால் நீ ராணி என்பதால் விட்டு வைத்திருக்கிறேன் என்று முகத்தில் ஏகக்கடுப்பை வைத்துக் கொண்டு வெளிப்படுத்தும் பொழுதாகட்டும். கடைசி காட்சியில் தன்னுடைய இரண்டாவது மகன் Jai இடம் உன் தாயாருக்கு விஷம் கலக்கப்பட்ட மருந்தை இனி நீயே கொடுப்பதாக இருந்தால் உன்னை மன்னிக்கிறேன் என்று சொல்லும் பொழுது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் பிரமாதம்.

Chow Yun-Fat ற்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல என்பதை Gong Li நிரூபித்திருக்கிறார், தன் மகனிடம்(மூத்த தாரத்தின்) தன்னைவிட்டுச் செல்லக்கூடாது என்று தாபத்தில் கதறும் பொழுதாகட்டும், ஏகப்பட்ட ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு அரண்மைனையில் வேகவேகமாக நடந்துவரும் பொழுது, அதுவரை அருந்திய விஷத்தின் காரணமாக சுழற்றிக் கொண்டு வரும் நிலையில், அவருடைய நடிப்பு அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

படத்தின் சண்டைக்காட்சிகளில், முதன் முறை ராஜாவிற்கு இளவரசனுக்கும் நடக்கும் கத்திச் சண்டை நன்றாகயிருக்கிறது. பின்னர் மருத்துவரை கொன்றுவர அனுப்பப்படும் ராஜாவின் கொலையாளிகளின் உத்தி பிரம்மாதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் நடைபெறும் சண்டைக் காட்சிகளில் மனம் செலுத்தமுடியாமல் கதையில் நான் ஊறிப்போயிருந்தேன்; இருந்தாலும் அவ்வளவாக ரசிக்கவில்லை.



எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டதிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்டதாம். இழைத்திருக்கிறார்கள் கிராபிக்ஸும் கண்களை உறுத்தவில்லை. ஆடை விஷயத்தில் ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ராஜா மற்றும் ராணியின் Chrysanthemum Festival உடை பிரம்மாதம். ராணி மற்றும் ராணியின் வேலை பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் Cleavage தெரியும் உடைகளைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; சில சமயங்களில் ஆடைகளுக்குள் அடங்காமல் அலைகிறது உடல்.

இதுபோன்ற படங்கள் உங்கள் மனநிலையை பாதிக்காதென்றால் நிச்சயமாக ஒருமுறை பார்க்ககூடிய படம் தான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிறுகதை

குவாண்டம் சுஜாதா மற்றும் காதல்

"பாக்டரைசிங்க்பற்றி எழுதிய இடத்தில் சில வார்த்தைகள் விடப்பட்டது(சரிபார்க்காததால்), அதாவது அந்த பெருக்குத்தொகையை பகுப்பது என்பது முடியாத ஒன்றேன்று. இது எனக்கு மட்டும் நடந்ததில்லையே....."

நான் வேகவேகமாய்த் தட்டச்சிக்கொண்டிருக்க, பின்னாலிருந்து பூனம் கூப்பிடுவது கேட்டது. கேட்காதது போல் தட்டச்சிக்கொண்டிருந்ததால் சப்தம் இன்னும் அதிகமானது,

“மோகன்...”

“இங்கப்பாரு, நான் கொஞ்சம் டென்ஷனாயிருக்கேன். இப்ப டிஸ்டர்ப் பண்ணாத.”

நான் திரும்பிக்கூட பார்க்காமல் சொல்லியபடியே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அலுவலகத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் தன் சுழல் நாற்காலியை வேகமாய் என்பக்கம் நகர்த்தி வந்து சட்டென்று கணிணிக்கு வந்துகொண்டிருந்த மின்சாரத்தொடர்பை துண்டித்தாள்.

“இங்கப்பாருங்க இனிமேல் முடியாது. நாலு மாசமாவே நீங்க சரியில்லை, ஏதோ நாம லவ் பண்ணுற ஆளாச்சேன்னு, உங்களோட வேலையையும் சேர்த்து நான் பண்ணிக்கிட்டிருக்கேன். பெரிய வேலை வெட்டி முறிக்கிற மாதிரி தமிழ்ல எழுதிக்கிட்டு இதுல டென்ஷன் வேறயாம். இனிமேல் நம்மால முடியாது, நானும் நீங்க திருந்திருவீங்கன்னு பார்க்கிறேன். ம்ஹும் அப்படித்தெரியலை. இனிமேலும் நீங்க இப்படித்தான் என்னைக்கூட கண்டுக்காம எழுதிக்கிட்டிருப்பீங்கன்னா?” கொஞ்சம் நிறுத்திவள், “எல்லாம் அவ்வளவுதான்...”

அவள் கொஞ்சமும் கோபம் குறையாதவளாய் சொல்லத்தொடங்க, எனக்கு என் நிலைமை புரிந்தது. புனே வந்த முதல் மாதத்தில் என்னுடன் வேலை செய்யும் விதமாய் அறிமுகமான பூனம் தமிழ்ப்பெண்தான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கிடையில் நட்பு வளர்ந்து இந்த எட்டு மாதங்களில் காதலாகி இப்பொழுது இருவர் வீட்டிலும் கல்யாணம் பேசும் அளவிற்குவந்து நிற்கிறது. இன்று அவள் கோபமானதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்தது, மதியம் ஒரு மணிபோல் என்னிடம் வந்து அவள் மதிய உணவிற்கு அழைக்க முக்கியமான வேலையாய் மறுத்துவிட்டேன். சிறிது நாட்களாகவே நாங்கள் இருவரும் ஒன்றாய் பேசிக்கொண்டிருக்கும் நேரமும் குறைந்து போனதால் ஏகக்கடுப்பில் இருந்த பூனம், நான் இப்பொழுது கொஞ்சம் கோபமாகப்பேச எல்லாவற்றையும் எடுத்தெரிந்து பேசிவிட்டாள்.

அவ்வளவு சுலபமாய் எல்லாம் அவ்வளவுதான்னு போய்விடமுடியாது தான் அது அவளுக்கும் தெரியும். ஆனால் இந்த வார்த்தையை அவள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை நான் ஏற்படுத்திவிட்டேன்னு அவள் சொல்ல நினைத்திருக்கலாம். ஒருவாறு அதில் அவள் வெற்றியும் பெற்றிருந்தாள், ஏனென்றால் அவளில்லாத ஒரு வாழ்க்கையை இனிமேல் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத ஒரு நிலையில் இருந்தேன் நான். இதன் போன்ற காரணங்களால் வேறென்ன மன்னிப்பு கேட்கும் படலத்தை தொடங்கினேன்.

“இங்கப்பாரு பூனம் நீயே இப்படி சொன்னா எப்படிடா, நானே டென்ஷன்ல இருக்கேன், நீவேற ஏம்மா இப்படி மனசை கஷ்டப்படுத்துற.”

நான் அவளின் கோபத்தை குறைப்பதற்காய் பேசத்தொடங்கினேன், எங்கள் கியூபில் மூன்று பேர் உட்கார்ந்து வேலை பார்க்கமுடியும் ஆனால் என்ன காரணத்தாலோ அந்த மூன்றாவது இடம் பெரும்பாலும் காலியாகவே விடப்பட்டிருந்தது எனது மேலாளரால். அவருக்கும் நன்றாய்த்தெரியும் நாங்கள் காதலிப்பதும் திருமணம் செய்துகொள்ள இருப்பதும்.

ஆனால் அவள் இன்னும் முகத்தைக்கூட திரும்பிப்பார்க்காத காரணத்தால்,

“சரிடா, இப்ப என்ன பண்ணணும்னு சொல்ற. நான் பண்றேன், கோடிங் எழுதவா, இல்லை ரிவ்யூ பண்ணவா, இல்லை நான் தமிழ்ல எழுதிக்கிட்டிருக்குறது பிடிக்கலைன்னா சொல்லு கொஞ்ச நேரத்துக்கு கம்ப்யூட்fடரை மூடி வைச்சிற்றேன். என்ன பண்ணட்டும் நான்.” அவள் அருகில் சென்று நான் மெல்லக்கேட்க, திரும்பிப் பார்த்தவள்,

“நாம இப்பவே வெளியில் போகணும்.”

“அப்ப வேலையை யார் பார்க்குறது. ஆன்சைட் குவார்டினேட்டர் ஆப்படிச்சிடுவான்.”

“எல்லார்க்கிட்டையும் பேசியாச்சு, நாம எப்பவேணும்னா போகலாம். முதல்ல நாம இங்கேர்ந்து நல்லா ஹோட்டலுக்கு போறோம். அப்புறம் புனே சிட்டிக்கு போய் ஐநாக்ஸிலேயோ இல்லை இ-ஸ்கொயரிலோ, கிங்காங் படம் பார்க்கிறோம். அப்புறம் நாளைக்கு ஷீரடிக்கு போறோம் போறப்ப அப்படியே அஜந்தா எல்லோராக்கும் போய்ட்டு வர்றோம். இந்த நாலு நாளும் நீங்க கம்ப்யூட்டர் பக்கத்திலோ, தமிழ் பாண்ட் பக்கத்திலேயோ போகவேக்கூடாது. போகவும் விடமாட்டேன்.”

நான் நினைச்சேன் இப்படி ஏதாவது இருக்கும்னு, எல்லாத்தையும் நல்லா முன்னாடியே திட்டம் போட்டு வைச்சிக்கிறது. பின்னாடி நான் எங்கத்தட்டினா எப்பிடி ஆடுவேன்னு தெரிஞ்சிக்கிட்டு வேலையைப்பார்க்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் கணிணி முன்னாடி உட்கார்ந்து தலையை முட்டிக்கிட்டிருக்கிற நேரமாப்பார்த்து வேணும்னே கூப்பிட்டிருக்கிறாள். நான் என்ன சொல்வேன்னும் அவளுக்கு தெரிஞ்சிருக்கும். திட்டம் போட்டு என்னை மடக்கியிருந்தாள்.

“இங்கப்பாரு எனக்கு இந்த கார்டுன் படமெல்லாம் பார்க்கிறதில் ஆர்வமில்லை வேணும்னா நாம வேற படத்திற்கு போகலாம் அதேபோல் ஷீரடியும் வேண்டாம். நீ அங்கப்போய் சாய்பஜன் பாட ஆரம்பிச்சிறுவே நமக்கு ஆகாது. வேணும்னா எல்லா லவ்வர்ஸ் மாதிரி நாமலும் லோக் கர்(Loaghgarh) போகலாம். ஷீரடிக்கு எத்தனை தடவைத்தான் போறது அதுவுமில்லாம ஷீரடிக்குன்னா குவாலிஸோ வாடகைக்கு எடுக்கவோ இல்லை வால்வோவோ பிடிக்கணும், லோக் கர்னா நாம இரண்டுபேரும் வண்டியிலேயே போய்விடலாம். என்ன சொல்ற அடுத்த நாளும் வெளியில் போகணும்னா சிங்காட் போகலாம் என்ன சொல்ற?”



அவள் சொல்லவதை நான் மறுத்துவிடுவேன்னு நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு நான் அவள் திட்டத்தை இன்னும் செளுமைபடுத்தியது பிடித்திருந்தது போலும் அவள் கண்கள் பிரகாசமாவதை என்னால் கவனிக்க முடிந்தது. ஷீரடிக்கு போக வேண்டாமென்று சொன்னதற்கு என் கடவுள் மறுப்பு மட்டுமே காரணம் கிடையாது. காதலர்கள் செல்வதற்கான இடம் இல்லை அது மட்டுமில்லாமல் மனதில் துளியும் நம்பிக்கையில்லாமல் கைகூப்பி கடவுளை வணங்குவதில் எனக்கு சுத்தமாய் விருப்பமில்லை.

அதுவுமில்லாமல் லோக் கர், சிங்காட் என்ற சொல்லப்படும் இடங்கள் புனேவில் சிவாஜியால் கட்டப்பட்ட மலைக்கோட்டைகள். நானும் பூனமுமே சிலமுறை லோக் கர் போய்வந்திருக்கிறோம். இருசக்கர வாகனத்தில் காதலர்களாக, லோக்கருக்கு செல்வது ஒரு அற்புதமான அனுபவம். இடையில் வரும் அணைக்கட்டில் சிறிது நேரம் அலவளாவிவிட்டு, லோக்கருக்குச் சென்றால் வழிப்பயணம் ரம்மியமாகயிருக்கும், அந்த கோட்டையை விட அதற்கு செல்வதற்கான வழிதான் எனக்கு பிடித்திருந்தது. பிரயாணம் செய்வதில் ஆர்வமுடையவனாய் இருந்ததாலும், இருசக்கர வாகனத்தில் மனதிற்கு பிடித்த காதலியுடன் வேகமாய் செல்வது சுகமான அனுபவம். இடையிடையில் நிறுத்தி அந்த குளிர்காலத்தின் மலைப்பிரதேசத்தில் தேநீர் அருந்துவதன் அருமையை உணர்ந்த காரணத்தால் தான் உடனே அவள் சொன்ன திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் உடனே சம்மதிக்கவும் செய்தேன்.

பூனமும் கொஞ்சம் கொஞ்சமாய் நான் இருந்த டிப்ரஷன் நிலையிலிருந்து மீண்டு சாதாரணமான நிலைக்கு வருவதை உணர்ந்திருக்கலாம். அவளுக்கு தேவையானதும் இதுவே. எனக்கும் இந்த மாறுபாடு தேவையாய் இருந்தது. நாளைந்து நாட்களுக்கு கணிணியை விடுத்து, ப்ரோக்கிராம்களை விடுத்து, கொஞ்சம் சுகமாய் ஊர்சுற்றுவதில் மனமடையும் வித்தியாசத்தை உணர்ந்துதான் இருந்தேன்.

என் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டவளாய், அவள் கிளம்ப நாங்கள் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தோம். பிறகென்னவோ நினைத்தவளாய்,

“தாஸ் நாம வடாபாவ் சாப்பிடுவோமா?” கேட்க எனக்கு சிரிப்பாய் வந்தது. இந்தப் பெண்களுக்குத்தான் எவ்வளவு துணிச்சல், நாம் அவர்களின் பேச்சிற்கு கட்டுப்பட்டு நடக்கும் சூழ்நிலையில் பெரும்பாலும் அவர்களுடைய மனநிலையை நம்மீது திணிக்காமல் விடுவதில்லை. பூனத்திற்கு நன்றாகவேத்தெரியும் நான் வடாபாவ் சாப்பிடமாட்டேனென்று. ஆனால் இன்று கூப்பிட்டதும் மறுக்காமல் சென்றேன். ஒரு வடாபாவ் ஆர்டர் செய்தவள் என்னை நன்கு உணர்ந்தவளாக எனக்காக ஒரு தனி வடையை மட்டும் சொல்லியிருந்தாள். இந்த ஊரில் வடை என்பது நடுவில் ஓட்டையில்லாமல், வட்டமாய் உருளைக்கிழங்கு வைத்து நம்மூர் பஜ்ஜியைப்போலிருக்கும்.

அந்த வடையை பாவ் எனப்படும் சின்ன பிரட்டின் நடுவில் வைத்து சாப்பிட்டிக் கொண்டிருந்தவள்.

“தாஸ் எப்பவும் ஒரு குட்டிக்கதை சொல்வீங்களே இப்பவும் ஒன்னு சொல்லுங்க கேக்கணும் போலிருக்கு.”

எனக்கும் ஆச்சர்யம்தான் இருந்தாலும் கேட்டுவிட்டாளே என்பதற்காக,

“இங்கப்பாரு பூனம் இந்தக்கதையை எங்கப்பா எப்பவும் சொல்லுவாறு, கொஞ்சம் தண்ணியடிச்சிட்டா மகன்மேல பாசம் பொத்துக்கிட்டு ஊத்தும் ஒரே கதையா வரும். அதில ஒன்னுதான் இது, அப்பா சொந்தமா யோசிச்சதா இல்லை எங்கையாவது படிச்சதான்னு தெரியாது ஆனா எனக்கு பிடிச்சக்கதைகளில் இதுவும் ஒன்று.

அதாவது, ஒருத்தன் தெருவழியா நடந்து எங்கேயே போய்க்கிட்டிருந்தானாம் அப்ப அவனோட செருப்பு அருந்துருச்சாம், பக்கத்தில் தைப்பதற்கும் ஆளில்லாமல் இருக்க, போகும் இடத்திற்கும் அறுந்த செருப்பை கொண்டு போகமுடியாமல் பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்று, 'ஐயா இந்த செருப்பு அருந்துருச்சு, முக்கியமான வேலையாப்போறேன். உங்கவீட்டில் விட்டுட்டு போறேன் வர்றப்ப எடுத்துக்குறேன்' அப்படின்னு சொன்னானாம். அந்த வீட்டிலேயும் ஒத்துக்கிட்டாங்க. அந்த காரியத்துக்கு போய்ட்டு வந்து செருப்பை எடுத்துட்டு போனானாம்.

அடுத்த சில நாள்களில் ஏதோ பிரச்சனையால் அவன் இறந்துபோக, அவன் உடலை முன்னாடி அவன் செருப்பை விட்டுட்டு போன வீடிருக்கும் தெரு வழியிலேயே எடுத்துட்டு போனாங்களாம். அப்ப அடாத மழை பெஞ்சிச்சாம். கரெக்டா அந்த செருப்பை விட்டுட்டு போன வீட்டிற்கு எதிரில் வந்ததும் கொஞ்சமும் நகர முடியாத சூழ்நிலை.

இங்கத்தான் எங்கப்பா சொல்வாரு இதே இந்த பொணத்தை மழை விடறவரைக்கும் உங்க வீட்டில் வைத்திருக்கிறோம்னு சொன்ன விடுவாங்களா வீட்டில் அதனால பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாத செத்த பொணத்துக்கு கிடையாதுன்னு. இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்வாருன்னு கேட்குறியா, ஏன்னா நான் வேகமா வண்டி ஓட்டுவேன் யார் யாரோ சொல்லியும் நான் கேட்டதேயில்லை. அதற்காக ஒருநாள் தண்ணியடிச்சிட்டு பாசமா சொன்ன கதைதான் இது நல்லாயிருந்துதா.” நான் கேட்க,

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது வேறென்ன சொல்ல.” சொல்லிவிட்டு என் தலையில் கொட்டினாள். நான் கொஞ்சம் சாதாரணமாய் ஆகியிருந்ததை அறிந்தவள் போல்,

“சரி இன்னிக்கு அப்படியென்னத்தான் பிரச்சனை.” அவள் எதைக்கேட்க வருகிறாள்னு புரிந்துதான் இருந்தது எனக்கு.

“பிரமாதமான பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்லைடா, ஆனாலும் கொஞ்சம் டென்ஷனாயிட்டேன் அவ்வளவுதான்.” நான் சொல்ல,

“தாஸ், எந்தப்பிரச்சனையாயிருந்தாலும் நேரடியா பேசிடு. நேரடியா பேசாம, ம் குறிச்சி வைச்சிட்டேன், காத்திருக்கிறேன், அப்படியெல்லாம் மனசை குழப்பிக்காத. இதையெல்லாம் விட உனக்கு ஒரு அட்வைஸ் நான் கொடுக்கணும்னா இதையெல்லாத்தையும் விட்டுறு. கேட்டா வாத்தியார் சொன்னார் அது இதும்பே, வாத்தியார் எங்கச்சொன்னார் உன்கிட்ட எழுதிக்கிழிக்க, நீயா ஏகலைவனா மாற நினைக்கிறது ரொம்பப் பெரிய தப்பு.”

எனக்கு உண்மையிலேயே சிரிப்புத்தான் வந்தது. என்னை நன்றாய்ப் புரிந்துகொண்டிருக்கிறாள் பூனம் இருந்தாலும் அவள் சொன்ன உருவகத்தில் தவறிருந்ததால்,

“பூனம் உண்மைதான் வாத்தியார் இப்படி எழுதச் சொல்லலைதான். இருந்தாலும் ஏகலைவன்ங்கிறது அவ்வளவு சுலபமான வார்த்தைப் பிரயோகம் கிடையாது. நானென்னவோ நாயைப்பார்த்து அம்பெய்த மாதிரியில்ல சொல்ற, நானெல்லாம் இன்னும் வில்லையே எடுக்கலை. வாத்தியாருக்கு ஏகலைவனாயிருக்குறதுல ஒன்னும் தப்பே கிடையாது, ஏற்கனவே நிறைய ஏகலைவர்கள் இருக்கலாம் இருக்காங்க. எனக்கு அந்த தகுதியிருக்குதான்னு தான் முதல்ல பார்க்கணும்.

இதையெல்லாம் விடு, இந்த விஷயங்கள் நம்ம மனசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் வேண்டும் நான் ஒன்னும் எருமைமாடு கிடையாது. என்ன நடந்தாலும் அப்படியே இருக்கிறதுக்கு, கொஞ்ச நேரத்துக்கு பாதிப்பை இந்த விஷயங்கள் ஏற்படுத்தணும் அதுதான் நல்லதும்கூட. அது அப்பவே முடிஞ்சிறுச்சு. அதனால இதைப்பற்றிய பிரச்சனையில்லை. நீதான் ரொம்ப சங்கடப்படுத்திட்ட, தமிழை விட, வாத்தியாரை விட, நீதான் எனக்கு ரொம்ப முக்கியம் அதை மட்டும் நீ புரிஞ்சிக்கிட்டா போதும். நம்ம கல்யாண விஷயமா உங்க வீட்டில் என்ன சொன்னாங்க அதைச்சொல்லு முதல்ல.”

“என்னமோ தெரியாது மாதிரி கேட்குறீங்க, நீதான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற, எங்கவீட்டில் இப்பவேக்கூட தயார்தான். என்னை கல்யாணம் பண்ணிக்கொடுக்க.” கொஞ்சம் யோசித்தவளாய்.

“அதான் சரியாய்டன்னு சொல்றீங்க, நாம இப்ப வெளியில் போயே ஆகணுமா, எனக்கு நாலுநாளா நிறைய வேலை செஞ்சதுனால தூங்கணும் போலிருக்கு என்னை ஹாஸ்டலில் எறக்கிவிட்டுடுங்க. நான் போய் தூங்குறேனே.”

அவள் கேட்க எனக்கும் பாவமாய்த்தான் இருந்தது. ஆனாலும் படத்திற்கு போகவும் லோக் கர் போகவும் ஆசையைக் கிளப்பிவிட்டதால் முடியாதென்று சொல்லி வண்டியை வேகமாய்ப் புனே சிட்டியை நோக்கி செலுத்தினேன்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In ஜாவா

ஜாவா ஃபார் டம்மீஸ் - எந்தவகையில் சிறந்தது ஜாவா

ஒரு வகையாக ப்ரொக்கிராம்(மிங்) என்றால் என்ன? எதற்காக எழுதுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டோம். இப்பொழுது எந்த வகையில் ப்ரொக்கிராமிங் செய்ய ஜாவா சிறந்தது என்று பார்ப்போம். தற்சமயங்களில் எல்லாம் என்னுடைய மனநிலை, ஜாவா பெரிதா VB பெரிதா என்பது போன்ற சண்டையில் விருப்பம் இல்லாமல். க்ளயண்டுக்கு நாம் எழுதிக் கொடுக்கும் ப்ரொடக்ட், இல்லை ப்ரொஜக்ட் எந்த அளவிற்கு உபயோகமாகயிருக்கிறது என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இதற்கு நான் தற்சமயம் வேலை செய்து வரும் ப்ரொடக்ட் ஒரு காரணம் அதைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.

சொல்லபோனால் VBயும் சரி, ஜாவாவும் சரி ஏறக்குறைய எல்லா விதங்களில் தங்களை தங்களின் தவறுகளில் இருந்து சரிசெய்து நல்ல "ப்ரொக்கிராமிங்" லாங்க்வேஜ்களாக மாற நினைக்கின்றன. ஏறக்குறைய இரண்டுமே ஒன்றுக்கொன்று சமமான நிலையிலேயே தராசில் வைத்துப் பார்த்தால் நிற்கின்றன.

பலர் ஜாவாவை ப்ரொக்கிராமிங் லாங்க்வேஜாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஜாவாவை ஆப்பரேட்டிங் ஸிஸ்டமாகவும்(விண்டோஸ், லினக்ஸ் போல்) ஒப்புக்கொள்ள முடியாது. ஜாவாவை ஏன் ஆப்பரேட்டிங் ஸிஸ்டமாக பார்க்க வேண்டி வருகிறதென்றால். ஜாவா ப்ரொக்கிராம்கள் எல்லாமே Java Virtual Machine என்ற ஒன்றால் தான் செயல்படுத்தப் படுகிறது. இந்த JVM(Java Virtual Machine) உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சம்மந்தப் படாதது, இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ஆப்பரேட்டிஸ் சிஸ்டத்தோடு சம்மந்தப்படாமல் தனியாக இயங்கக் கூடியது.

நீங்கள் ஜாவாவை அதனுடைய வெப்சைட்டான java.sun.com ல் தேடினால் எல்லா இடங்களிலும் Java Platform, Standard Edition என்று குறிப்பிடுவதைப் பார்க்கலாம்(இதைப்போலவே Java Platform - Enterprise Edition, Java Platform - Micro Edition). நான் ஆரம்பக் காலங்களில் இன்டர்வியூ அட்டெனட் செய்யும் பொழுது இது நிச்சயமான ஒரு இன்டர்வியூ கொஸ்டீன். ஆனால் ப்ரஷ்ஷர்களுக்காக மட்டுமே. இதில் இந்த ப்ளாட்ஃபார்ம் எனப்படும் விஷயம் தான் நான் சொன்ன JVM பற்றியது. இதன் காரணமாகவே ஜாவாவை சாப்ட்வேர் ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் என்றும் சொல்வதுண்டு.

இப்பொழுது Java Operating System என்றொரு ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.(முடிந்துவிட்டன - செயலிலும் உள்ளது) அது சாஃப்ட்வெர், ஹார்ட்வேர் இரண்டிற்குமான சப்போர்ட்டை உள்ளடக்கியது.

அப்படியே கொஞ்சம் JIT பற்றியும் பார்த்துவிடுவோம், கொஞ்சம் டெக்னிக்கலாகயிருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் படித்துப் பார்த்து சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.



JIT என்பது Just In-time Compiler, இதைப் பற்றி பார்ப்பதற்கு முன் இதன் பின்னால் இருக்கும் வரலாற்றைப் பார்த்துவிடலாம். ஜாவாவின் முக்கியத்துவமாக எல்லோரும் சொல்வது ஜாவாவை எந்த ஆப்பரேட்டிங் ஸிஸ்டத்திலும் எந்த ப்ராசசரிலும் உபயோகிக்கலாம் என்பது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நீங்கள் மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் உட்கார்ந்து எழுதிய ஜாவா ப்ரொக்கிராமை(ப்ரொக்கிராம் என்று சொல்லும் இடத்தில் எல்லாம் அதை கலெக்ஷன் ஆ வைத்து ப்ரொஜெக்ட்டாவும் பார்க்கலாம்) எந்த வித மாற்றமும் இல்லாமல் நாளை லினக்ஸில் உபயோகிக்கலாம்.

சரி இன்னும் கொஞ்சம் விரிவாக, நீங்கள் C, C++ இலோ ஒரு ப்ரொக்கிராம் எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை கம்பைல் செய்வது என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது மனிதன் புரிந்து கொண்டு எழுதும் ஒரு விஷயத்தை மெஷின் புரிந்து கொள்ளும் விஷயமாக மாற்றுவது. உங்களுக்கு கம்ப்யூட்டரில் எல்லா விஷயங்களுமே 0 மற்றும் 1 ஆக மாறி மட்டுமே பாதுகாக்கப் படவோ இல்லை செயல்படுத்தப்படவோ செய்யும். சின்ன உதாரணம் நீங்கள் கம்ப்யூட்டர் கால்குலேட்டரில் 2 + 3 என்று சொன்னால் அது, உண்மையில் இரண்டிற்கான 0001 யையும் மூன்றிற்கான 0010 வையும் எடுத்துக் கொண்டு போய், மைக்ரோ ப்ராஸஸரில் போட்டு கூட்டி 0101 என்ற விடையை எடுத்துக் கொண்டு வந்து பின்னர் அந்த 0101 வை மனிதன் புரிந்து கொள்ளும் விதமாக 5 என்றும் காட்டும்.

இப்படி மனிதன் புரிந்துகொள்ளும் விஷயத்தை மைக்ரோப்ராஸஸர் புரிந்து கொள்ளும் ஒன்றாகவும், மைக்ரோ ப்ராஸஸர் புரிந்து கொள்ளும் ஒரு விஷயத்தை மனிதன் புரிந்து கொள்ளும் ஒரு விஷயமாகவும் மாற்றுவதே கம்பைல் மற்றும் டிகம்பைல் என்று சொல்லலாம்.

இப்படித்தான் எழுதப்பட்ட C, C++ ப்ரொக்கிராம் கோடுகளையும் மைக்ரோ ப்ராஸஸர் புரிந்து கொள்ளும் ஒரு விஷயமாக மாற்றும் பொழுது ஒரு பிரச்சனை ஏற்படும். எப்படி என்றால் மேற்சொன்ன கூட்டல் விஷயத்தை நடத்த Intel Pentium microprocessor உபயோகிக்கும் முறைகளும் IBM System/390 processor உபயோகிக்கும் முறைகளும் வேறுபடும். எனவே நீங்கள் ஒரு கம்ப்யூட்டரில் Pentium Processor உபயோகிக்கிறீர்கள் என்றால் அதற்கான கூட்டல் முறையாகத்தான் உங்கள் கம்பைலர் மாற்றிக் கொடுக்கும். இப்படித்தான் ஜாவாவிற்கு முன்னால் இருந்த கம்பைலர்கள் இருந்தன.

இதன் காரணமாக நீங்கள் Pentium Processor க்கு எழுதப்பட்ட ஒரு ப்ரொக்கிராமை(உதாரணத்திற்கு நம் கூட்டல்) IBM Processor ல் உபயோகப்படுத்த முடியாது. இதையெல்லாம் சரிசெய்தது ஜாவா. சரி சரிசெய்ததென்றால் எப்படிச் செய்தது. இங்கே தான் வருகிறது ஜாவாவின் கம்பைலர். சரி விஷயத்திற்கு வருகிறேன். இந்த ஜாவா கம்பைலர் கம்பைலர் தான் அந்த மேஜிக்கை செய்கிறது, அதாவது ஜாவாவில் நேரடியாக ஜாவா ப்ரொக்கிராமை மைக்ரோ ப்ராஸஸர் புரிந்து கொள்ளும் விதமாக மாற்றாமல் இடைப்பட்ட ஒன்றாக மாற்றிக்கொள்ளும் (டெக்னிக்கலாக Byte code). அந்த இடைப்பட்ட ஒன்றைத்தான் உண்மையான ப்ராஸஸருக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொடுக்கும். இதனால் நீங்கள் எந்த ஆப்பரேட்டிங் ஸிஸ்டத்தில் உட்கார்ந்து எந்த ப்ராஸஸருக்கு ப்ரொக்கிராம் எழுதினாலும் அதை மற்ற ப்ராஸஸருக்கு உபயோகிக்க முடியும். ஏனென்றால் நீங்கள் எழுதிய ப்ரொக்கிராமின் இடைப்பட்ட மாற்றத்தை(Byte Code)ஐ அந்தந்த ப்ராஸஸருக்கு ஏற்றது போல் மாற்றிக் கொடுக்கும் JVM.


ரொம்பவும் டெக்னிக்கலாகப் போய்விட்டது என்று நினைக்கிறேன். இதுதான் ஜாவாவின் மேஜிக் எனப்படும் ஒன்று. புரியாவிட்டால் கேளுங்கள் என்னால் முடிந்த வரை விளக்கப் பார்க்கிறேன். ரொம்ப டெக்னிக்கலாக இருப்பதால் இது போதும்.

PS: இதில் கான்செப்ட் வைஸ் எதுவும் தவறிருந்தால் சொல்லவும் திருத்திவிடுகிறேன்.

முன்பு எழுதியவை

(ஜாவா) ப்ரொக்கிராமிங் ஃபார் டம்மீஸ்
என் ஜாவா அனுபவங்கள்
என் முதல் இன்டர்வியூ அனுபவம்(ங்கள்)

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In ஜாவா

என் முதல் இன்டர்வியூ அனுபவம்(ங்கள்)

நான் ஒரு மாதிரியாக, பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்துமுடித்துவிட்டு தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ஏறியதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். எனக்கு நிச்சயமாய் வேலை கிடைக்கும் என்பதில் எனக்கு அதுவரை சந்தேகமேயிருந்ததில்லை; இத்தனைக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்மீடியம், கல்லூரியில் பரிட்சைகள் ஆங்கிலத்தில் எழுதுவோம் என்றாலும் பேச்சுவார்த்தைகள் எல்லாமே தமிழ்தான். செமினார்கள் கூட தமிழில் தான் எடுத்ததாக ஞாபகம். எனக்கு பிரச்சனையில்லாமல் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை(வேண்டுமானால் மூடநம்பிக்கை) எங்கிருந்து வந்தது என்று தெரியாது.

எல்லாவற்றிற்கும் சேர்த்து ஆப்பு வைத்தது என்னுடைய முதல் மாத டெல்லி அனுபவங்கள் என்று சொல்லலாம். டெல்லிக்குள் வந்ததும் தான் பிரகாசமாகப் புரிந்தது ஆங்கிலம் நமக்கு சுத்தமாக வராததும், அப்படி வரும் ஒன்றிரண்டு வாக்கியங்களைப் பேசவும்; எங்கே கிரமேட்டிகள் மிஸ்டேக்ஸ் வந்திடிமோ என்ற பயம். 9 - 10 வகுப்புகள் படிக்கும் பொழுது பாலாஜி வாத்தியார் இங்க்லீஷ் கிராமர் கத்துக்கோ கத்துக்கோன்னு பிரம்பால அடிச்சும் கத்துக்கலைன்னு அப்பத்தான் வருத்தப்பட்டேன்.

முதலில் பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சைன்ஸ், ப்ரஷ்ஷர் என்றால் உள்ளேயே விடமாட்டார்கள். அப்படி இப்படின்னு உள்ளே போய் இன்டர்வியூவிற்குள் போனால், அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியும் ஆனால் அதை ஒரு சொற்றொடராக அமைத்து ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாது. இத்தனைக்கும் கடைசி வருட பரிட்சைகளில் ஆங்கிலத்தில் தான் பொளந்து கட்டியிருந்தேன், எல்லா பேப்பர்களுக்கும் குறைந்தது 70 பக்கம் எழுதுவேன். ஆறு அடிஷினல் இல்லாமல் நான் பேப்பர் கட்டிக்கொடுத்த வரலாறே இருக்காது.

நான் சீரியஸாக VBயில் வேலை தேடிக்கொண்டிருந்தேன், என்னைப் பொறுத்தவரை அந்தச் சமயத்தில் VBயில் தெரியாததே கிடையாது என்ற எண்ணம். ஏன் என்றால் ஒரு ரியல் டைம் ப்ராஜக்ட் செய்த காரணம். அது ஒரு கதை, பிஎஸ்ஸி பைனல் இயர் ப்ராஜக்ட் செய்ய நான் இரண்டாம் ஆண்டே தயாராகியிருந்தேன். அப்பொழுது மாமாவின் நண்பர் என்ற முறையில் அறிமுகமான ஒருவர் தான் ஒரு கம்பெனி நடத்திவருவதாகவும் அதற்கு ப்ரொஜக்ட் செய்து தரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அப்பொழுதே அந்த நண்பருடன் உட்கார்ந்து டேட்டாக்களை எல்லாம் கலெக்ட் செய்து ஸ்கீரின் எல்லாம் பேப்பரில் வரைந்து காட்டியிருக்கிறேன். பின்னர் இரண்டு நாளில் அவர் சொன்ன ஸ்கிரீனை VBயில் காட்டுவேன்.

அவர் கம்ப்யூட்டர் நன்கறிந்த ஒருவர் என்பதாலும், அவருடைய ரெக்வைர்மென்ட் நன்றாகத் தெரிந்தவர் என்பதாலும் ஸ்கிரினில் சில மாற்றங்கள் சொல்வார். சொல்லப்போனால் Functionality கூட பிரச்சனையாயிருக்காது சில இந்த மாற்றங்கள் படம் காண்பிக்கும். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு ஸ்கிரினில் சர்ச்(Search) பட்டன் இருக்கிறது நீங்கள் உங்கள் கஸ்டமர்களை தேடப் போகிறீர்கள் இதுதான் கிரைட்டீரியா. நான் நீங்கள் பேரை "Mohan" என்றோ இல்லை "Mohandoss" என்றோ எழுதி தேடினால் கிடைப்பது போல் கோட் எழுதியிருந்தேன். அந்த நபர் கேட்டது, "M" என்று நான் டைப் செய்ய ஆரம்பித்ததுமே அந்த டெக்ஸ்ட்பாக்ஸில் கீழே ஒரு டிராப் டவுன் பாக்ஸ் போல வந்து "M" ஆரம்பிக்கும் பெயர்களைக் காட்ட வேண்டும். இப்படியே தேடும் நபர் ஒவ்வொரு கேரக்டராக டைப் செய்ய கீழிருக்கும் டிராப்டவுன் மாற வேண்டும்.

சொல்லப்போனால் தற்சமயம் நான் வேலை செய்யும் கம்பெனியில் கூட இந்த ஒரு Functionality செய்ய தனியாய் ஒரு நபர் போட்டு, தனியாய் ஒரு யூஸ்கேஸ் போட்டுச் செய்வார்கள். நான் அப்பொழுது இந்த விஷயத்தைச் செய்துகாட்டினேன் அவருக்கு, இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் அவர் கேட்ட பலவிஷயங்களை செய்யவில்லை என்பது தான் உண்மை. சொல்லப்போனால் Google இம்ளிமெண்ட் செய்திருக்கும் Fuzzy Logic க்கை என்னை இம்ளிமென்ட் செய்யச் சொன்னார் மனிதர். அதெல்லாம் ரொம்பவும் பெரிய விஷயம் நான் கல்லூரியில் படித்த பொழுது.

ஆனால் நல்ல அனுபவத்தைக் கொடுத்திருந்த அந்த கோடிங் எக்ஸ்பீரியன்ஸ் தான் என்னிடம் VBயில் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்ற தலைக்கனத்தைக் கொடுத்திருந்தது. இன்றும் நீங்கள் ஒரு பெரிய அப்ளிகேஷனை என்னிடம் கொடுத்து VBயில் செய்யச் சொன்னால் சுலபமாகச் செய்துவிடுவேன், அதுவும் இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டரில் கொஞ்சம் லாஜிக்கலாக யோசிக்கத் தெரிந்த யாருமே ப்ரொக்கிராம் சுலபமாக எழுதிவிடலாம், கூகுளாண்டவர் துணையால். சரி விஷயத்திற்கு.

நான் மட்டும் VBயில் Bsc ப்ரொஜெக்ட் செய்திராமல் VB.net செய்திருக்கணும் என்று கிருபா ஷங்கரைப் போல், ஜாவாவை வெறுப்பனாக இருந்திருப்பேன். என் அதிர்ஷ்டம்(அந்தக் காலத்தில் துரதிஷ்டம்) VBயில் ப்ரொஜக்ட் செய்திருந்தேன். VBயிலுமே எந்த வேலையாயிருந்தாலும் செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையிருந்தாலும் அதை என்னால் என்னை Interview செய்பவரிடம் வெளிக்காட்ட முடிந்ததில்லை. என்மேலேயே எனக்கு கோபம் வந்த நாட்கள் அவை. ஆனால் சின்னப் பையன் என்பதால்(அப்பொழுதுதான் இருபது வயது எனக்கு) யாரும் வம்பிழுக்கவில்லை ஆரம்பத்தில், ஆனால் எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்திருந்தது ரொம்ப சீக்கிரம் நான் நல்லா வந்திடுவேன்னு.

இப்படியாக நான் VB படித்துவிட்டு இன்டர்வியூ கிடைக்காமல் அலைந்த பொழுது தான் என் மாமா டெல்லிக்கு வந்திருந்தார். அவருக்கு VBன்னாலே ஆகாது மைக்ரோசாஃப்ட், பில்கேட்ஸ்ன்னா உதைக்க வருவார். சரி ஏதாவது ஒரு கோர்ஸ் மாதிரி படிச்சு வேலை வாங்கிடலாம் அப்படின்னு சொன்னவர் என்னிடம் கேட்டார் எதைப் படிக்க விரும்புற என்று, VB.net ஆ Java, J2EE ஆ என்று. அவருக்கு இந்தச் சமயத்தில் எல்லாம் சந்தேகம் வந்திருந்தது ஒரு வேலை இவன் சாஃப்ட்வேருக்கு லாயக்கில்லையோ என்று. இப்படியாக மாமாதான் உனக்கு Java, J2EE சரிவரும் அதைப் படி என்றார்.

நான் கைக்கு கிடைத்த ஒரு சிறிய வேலையில் சேர்ந்து கொண்டு(மாமா சிபாரிஸில் - நான்காயிரம் சம்பளம்) Java, J2EE படிக்கத் தொடங்கினேன். கம்பெனியில் டப்பா ஸ்விங்ஸ்(Swing) எழுதும் வேலை. என் வாழ்க்கையை திருப்பிப் போட்ட நாட்கள்.

சில இன்டர்வியூ குறிப்புகள்.

1) இப்ப நினைச்சா சிரிப்பு வருது, இன்டர்வியூவில் ஆங்கிலத்தில் பேச பயந்து, இன்ட்ர்வியூவரிடம் இந்தியில் பதில் சொல்லவா என்று கேட்டது. இதில் கூத்தென்னன்னா இந்தியே தெரியாது எனக்கு.

2) மாமா எவ்வளவோ சொல்லியும் இன்டர்வியூ ஏற்பாடு செய்வார்கள் என்பதால், கன்ஸல்டென்ஸிக்காரர்களிடம் காசு கொடுத்து பதிந்து கொண்டது.

3) கேட்கும் கேள்விக்கான பதில் ஓரளவிற்கு தெரியும் என்பதால் அதை என்னுடைய ஓட்டை ஆங்கிலத்தில் எப்பாடுபட்டேனும் சொல்லிவிடுவது, அதுவும் தமிழில் இப்பொழுது எழுதுவது போல் புல்ஸ்டாப்பே இல்லாமல் பேசுவது. அவன் நான் ஆரம்பிச்ச இடம் பேசிக்கொண்டிருந்தது, முடித்தாது எல்லாம் யோசித்தால் தலை சுற்றணும்.

4) தைரியமாக ஓட்டை இந்தியுடன் நார்த் டெல்லி எல்லாம் சென்று அடாத மழையிலும் விடாமல் அடிக்கப்படும் காஜி போல் வேலை தேடியது. ஏன் என்றால் நார்த் டெல்லியில் சுத்தமாக ஆங்கிலம் பேசமாட்டார்கள். எல்லாம் இந்தி தான்.

5) தியரடிக்கலாகப் படிப்பவர்களை நக்கல் செய்வதே பொழப்பு என்பதால், டெல்லியில் இன்டர்வியூ போன பொழுது இரண்டு லைன் கோடு எழுதச் சொன்னால் பேப்பரில் எழுத முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் VBயில் செய்துவிடுவேன். பிறகு கற்றுக் கொண்டதுதான் வேறவழியேயில்லை, சில விஷயங்களையாவது கடம் போட்டே ஆகவேண்டும் என்ற விஷயத்தை.

6) வியாழக்கிழமைகளில் காலங்கார்த்தால எழுந்து குளிச்சு, ஷூ எல்லாம் போட்டுக்கொண்டு பேப்பருக்காக உட்கார்ந்திருப்பேன், பேப்பர் வந்ததும் யாராவது வாக்-இன் சொல்லியிருந்தால் உடனே அட்ரஸ்ஸை மட்டும் எழுதிக்கொண்டு கிளம்புவது. ஏன் என்றால் நான் அட்ரெஸ் கண்டுபிடிச்சு போறதுக்குள்ள இன்டர்வியூ முடிஞ்சிறக்கூடாதில்லையா? அதான்.

7) நான் நாலாயிரத்தில் காஜி அடித்துக் கொண்டிருந்த பொழுது, RS 15,000 சாலரியில் கால்சென்டர் வேலைக்கு கூப்பிட்டார்கள்; நல்ல வேலை தப்பித்தேன். எல்லாம் மாமாக்கள் புண்ணியம் தான்.

அடுத்தது ஜாவா படிக்க எங்கிருந்து தொடங்கலாம், எதையெல்லாம் படிக்கலாம் என்பதைப் பற்றி எழுதுகிறேன்.

முன்பு எழுதியவை

(ஜாவா) ப்ரொக்கிராமிங் ஃபார் டம்மீஸ்
என் ஜாவா அனுபவங்கள்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

Same Girl - Kelly & Usher



சமீபத்தில் பார்த்த இந்தப் பாடல் மீண்டும் கேட்கக்கூடியதாகயிருந்தது. Usher'ன் Yeahh! எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

அதுவும் உங்கள் பார்வைக்கு,



Lyrics: Yeah! - Usher

[Usher:]
A Town's Down!

[Lil' Jon:]
Yeah, Ok! Lil' Jon!

[Usher:]
Yeah, Yeah Yeah, Yeah yeah, Yeaah
Yeah, Yeah yeah, Yeah yeah, Yeaah

[Usher (Verse 1):]
I'm in the club with my homies, tryna get a lil V-I, keep it down on the low key, cause you know how it feels.
I said shorty she was checkin up on me, from the game she was spittin my ear you'd think that she knew me.
So we decided to chill

Conversation got heavy, she had me feelin like she's ready to blow!
(Watch Out!, Watch Out!)
She saying come get me, come get me,
So I got up and followed her to the floor, she said baby lets go,
When I told her I said

[Usher (Chorus):]
Yeah (yeah) Shorty got down to come and get me
Yeah (yeah) I got so caught up I forgot she told me
Yeah (yeah) Cause if my girl new it'd be best to hold me
Yeah (yeah) Next thing I knew she was all up on me screaming:

Yeah, Yeah yeah, Yeah yeah, Yeaah
Yeah, Yeah yeah, Yeah yeah, Yeaah

[Usher (Verse 2):]
Shes all up in my head now, got me thinking that it might good idea to take her with me,
Cause she's ready to leave.
Now I gotta keep it real now, cause on a one-to-ten she's a certified twenty, and that just aint me.

Cause I do know if I take that chance just where is it gonna lead,
But what I do know is the way she dance makes shorty alright with me.
The way she getting low!
I'm like yeah, just work that out for me.
She asked for one more dance and I'm
Like yeah, how the hell am I supposed to leave?
And I said

[Chorus]

[Lil' Jon:]
Luda!

[Ludacris (Verse 3):]
Watch out!
My outfit's ridiculous, In the club lookin' so conspicuous.
And Rowl! These women al on the prowl, if you hold the head steady I'm a milk the cow.
Forget about the game I'm a spit the truth, I won't stop till I get em in they birthday suits.
So gimmie the rhythm and it'll be off with they clothes, then bend over to the front and touch your toes.
I left the jag and I took the roles, if they aint cutting then I put em on foot patrol.
How you like me now, when my pinky's valued over three hundred thousand,
Lets drank you the one to please, Ludacris fill cups like double d's.
Me and Ush once more and we leave em dead, we want a lady in the street but a freak in the bed to say

[Chorus]

[Ludacris (Bridge):]
Take that and rewind it back, Lil' Jon got the rhythm make ya booty go (clap)
Take that and rewind it back, Ursher got the voice make ya booty go (clap)
Take that and rewind it back, Ludacris got the flow make ya booty go (clap)
Take that and rewind it back, Lil' Jon got the rhythm make ya booty go (clap)

a let me see you do tha A town star
a do the A town star
and do the muscle
and do the muscle
and do the muscle
and do the muscle
a thunderr clap hey
a thunderr clap hey
a thunderr clap hey
a thunderr clap hey
and rock away
rock away
rock away
rock away
and turn!!


கேட்டுச் சொல்லுங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று!

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம் சுய சொறிதல்

கருப்புப் பணம், யாழ்ப்பாணம், சிவாஜி

நானும் சிவாஜி பார்த்தேன், வெள்ளிக்கிழமை நான் எதிர்பார்த்திருந்ததைப் போலவே, அழகாக டிக்கெட் கிடைத்தது. காலை கொஞ்சம் வேலையிருந்ததாலும் வேலை சிவாஜியை விடவும் முக்கியமானதால் மதியம் தான் நேரம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை பாட்டி முகமாம் அதாவது அமாவாஸ்யாவிற்கு அடுத்த நாள். எனது வீட்டிலும் ஒரு முக்கியமான நிகழ்விற்கான கையொப்பம் போடத்தான் திருச்சி போயிருந்தேன், அம்மா நான் கிளம்பும் முதல் நாள் இந்த பாட்டிமுகம் விஷயத்தைச் சொல்லி திங்கட்கிழமையும் சேர்த்து லீவு போடவும் என்று சொல்லி நன்றாய்த் திட்டு வாங்கிக் கொண்டார்கள். கடைசியில் வெள்ளிக்கிழமை தான் கையெழுத்து போட்டேன், பாட்டிமுகமாய் இருந்ததால் எல்லா இடங்களிலுமே வேகமாகவே பேப்பர் நகர்ந்தது. சாதாரண நாட்களில் ஒரு நாள் ஆகும் வேலை அரைமணிநேரத்தில் முடிந்தது. நான் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இனிமேல் இதுபோன்ற ஏதாவது காரியம் செய்வதாகயிருந்தால், பாட்டிமுகம் ராகுகாலத்தில் செய்துவிடலாம் என்று.

கையெழுத்து போட்டு முடித்ததுமே வண்டியைக் கட்டிக் கொண்டு சிவாஜி பார்க்கக் கிளம்பினேன், முற்காலமென்றால் அதாவது நான் படித்துக்கொண்டிருந்த பொழுதுகளில் அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டுத்தான் போகமுடியும், பிற்காலங்களில் அதாவது சம்பாதிக்க ஆரம்பித்த நாட்களில் வளவளவென்று அரைமணிநேரம் பாட்டு வாங்கிவிட்டுத்தான் திரைப்படத்திற்குச் செல்லமுடியும். இப்பொழுதெல்லாம் அப்பா இதை கண்டுகொள்வதில்லை, ஒரளவு வயதுவந்த பிறகு சொந்தபுத்தியும் வரவேண்டும் என்று நினைத்திருக்கலாம் இல்லையென்றால் இது சொல்லியும் திருந்தாத ஜென்மம் என்று நினைத்து விட்டிருக்கலாம்.



கொஞ்சம் அதிக டிக்கெட் விலை எதிர்பார்த்துத்தான் தியேட்டர் சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அதுமட்டுமில்லாமல் திருச்சியில், ரம்பா, கலையரங்கம், காவேரி என மூன்று தியேட்டர்களில் படம் ரிலீஸ், இதில் கலையரங்கம் ரொம்பவும் பெரியது ஆனால் டிடிஎஸ், ஏசி வசதி கிடையாது(நான் சமீபத்தில் போகவில்லை) காவேரியைப் பற்றி தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்ராயம் கிடையாது.(ஆம்பளைங்களை நிக்க வைச்சு முதல்ல பொண்ணுங்களுக்கு டிக்கெட் போடுவாங்க்ய). ஆனால் மூன்றிலும் காவேரிதான் சிறந்தது என்றாலும் தன்மானம் இடங்கொடுக்காமல் நழுவினேன். ரம்பாவில் ஏசியும் உண்டு, டிடிஎஸ்ஸும் உண்டு, பொதுவாக எல்லா ரஜினி படங்களும் இங்கேதான் ரிலீஸ் ஆகும், படையப்பாவும், பாபாவும் இங்கே பார்த்ததுதான்.(சந்திரமுகி - பெங்களூருவில்)

எனக்கு முந்தைய காட்சி பார்த்துவிட்டு வந்த ரசிகர்களிடம் அத்தனை சுரத்தில்லை, இங்கே பார்க்கக் காத்திருந்த மக்கள் பலரின் முகம் வாடத்தொடங்கியது. சப்தமே இல்லாமல் ரசிகர்கள் கலைந்ததும் நான் நினைத்தது தளபதி போல் ரஜினி இறந்துபோய்விடுகிறார் போல் என்றுதான். தியேட்டரில் முழு போலீஸ் பாதுகாப்பு இருந்தது, பச்சா பசங்க விஜய், அஜித் படத்திற்கே போலீஸ் சப்போர்ட் கேட்பார்கள் திருச்சியில் ரஜினி படத்திற்கு கேட்கவும் வேண்டுமா.

படத்தைப் பற்றி என்ன சொல்ல, நான் எதிர்பார்த்ததை விடவும் குறைவு தான். அதுவும் சண்டைக் காட்சிகளில் ரஜினிகாந்த் தெரியவேயில்லை என்பது வருத்தம். ஆனால் பாட்ஷா படத்தை முதல் முறை பார்த்த பொழுது அதன் சண்டைக்காட்சிகள் பிரம்மாதமாக இருப்பதாகப் பட்டது ஆனால் திரும்பவும் பார்த்தபொழுது அத்தனை நன்றாகயில்லை. மற்ற படங்களை ஒப்பிட சண்டைக்காட்சிகள் பிரம்மாதமாகவேயிருந்தது. ஆனால் தொடர்ச்சியான ஹாலிவுட் படங்களை பார்த்து அதனுடன் ஒப்பிட என்னமோ குறைவது போலவேயிருந்தது. இன்னும் ஒரு தடவை INOX யிலோ PVR யிலோ பார்க்கவேண்டும்.(இரண்டாவது முறை பார்த்த பொழுது எனக்கு பாபாவே பிடித்திருந்தது ;)).

காமெடி என்ற பெயரில் விவேக்கின் அளும்பு கொஞ்சம் ஓவர் தான், எல்லாமே பழைய காமெடிகள் தான், இளவஞ்சி சொல்லியிருந்ததைப் போல் இல்லாமல் எனக்கு இந்தப் படத்தில் அவ்வளவு தூரம் சிரிப்பதற்கு எதுவுமே தென்படவில்லை. பழகபழக எனக்கு சகிக்ககலை. ஒட்டுமொத்தத்தில் இடைவேளைக்கு முன்புவரை என்னை சீட்டில் அழுத்தி உட்கார வைத்திருந்தேன் என்றுதான் சொல்லணும். ஆனால் இடைவேளைக்குப் பிறகு சூடு பிடிக்கிறது. Cardiopulmonary resuscitation(CPR) எவ்வளவு நேரம் வரைக்கும் கொடுக்கமுடியும் என்பது போன்ற கேள்விகள் எல்லாம் தொக்கி நிற்கின்றன, லாஜிக்கல் ஓட்டைக்காக இல்லையென்றாலும் படத்தின் முக்கியமான திருப்பம் என்று சொல்வதால்.

டிசே தமிழன் ஒரு பதிவெழுதியிருந்தார், சிவாஜி - ஒரு தமிழ்த்துவ ஆய்வென்று; இவர்கள் ரஜினியின் படத்தில் ஷ்ரேயா போன்றவர்களுக்கு வேறென்ன மாதிரியான வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் தெரியவில்லை. தமிழ்ப்பண்பாடுப் பெண் என்பது போன்ற கற்பனைகள் கலியாணம் ஆகாத எல்லோரிடமும் இருக்கும் என்று நினைக்கிறேன்(இது என்னை வைத்து) ஓரளவிற்கு இதை இயக்குநர் சரியாகப் பிடித்திருப்பதாகவே நினைக்கிறேன். அதுவும் வெளிநாடு போய் வேலைபார்த்துவிட்டு வந்த என்னுடைய அத்தனை நண்பர்களும் உறவினர்களும் இதே வார்த்தையைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு ஜீன்ஸ் போட்டு, டிஸ்கோத்தே சென்று, பியர் அடிக்கும் பெண்களைப்(இல்லை இதில் ஏதோ ஒன்றை செய்யும் பெண்ணை) பிடிக்காமல் போவதற்கான உளவியல் காரணங்களை யாராவது PhD செய்யலாம்.

வசனத்தின் கடைசியில் வருவதைப் போல் தமிழ்ப்பண்பாட்டு பெண்கள் லெமூரியாவுடன் தொலைந்து போய்விட்டதாகவும் வேண்டுமென்றால் யாழ்ப்பாணத்தில் ஒரு முறை பார்க்கலாம் என்று வருவதைப் போல, தமிழ்ப்பண்பாட்டுப் பெண்கள் யாழில் கிடைப்பார்கள் என்றால் ஒரு முறை தேடுதல் வேட்டையை அங்கேயும் நடாத்தலாம்.(இந்த குறிப்பு எங்க வீட்டிற்கு - யாழ்த் தமிழர்கள் உதைக்காமல் இருந்தால் சரிதான்.) மற்றபடிக்கு பில்டிங் போர்டிகோ என்று வரும் இரட்டை அர்த்த வசனங்களும், "பில்லா ரங்கா பாட்ஷா தான் இவன் 'பிஸ்டல்' பேசும் பேஷாதான்" போன்ற இரட்டை அர்த்த பாடல் வரிகளும் பாய்ஸை ஒப்பிடும் பொழுது குறைவுத்தான் என்றாலும் இல்லாமல் இல்லை. வசனம் சுஜாதா - ஷங்கராம், தாத்தா பேஷா தப்பிச்சிட்டார்.

கருப்புப்பணத்தைப் பற்றி பேசவாவது செய்கிறார்களே, சமீபத்தில் வீடு வாங்க அலைந்த பொழுது தான் எத்தனை தூரம் இதன் ஆழம் இறங்கியிருக்கிறது என்று தெரிந்தது. கடைசியில் வீடு வாங்க இருந்த மற்ற கிரைட்டீரியாக்கல் இல்லாமல் போய் எல்லாம் ஒய்ட்டில் வாங்கிக் கொள்ளும் ஓனர்களைத் தேடி அலைந்தது நினைவில் வந்து கொண்டேயிருந்தது; படம் பார்க்கும் பொழுதெல்லாம். 32,00,000 கோடி ரூபாய்கள் கருப்புப் பணம் இந்தியாவில் இருப்பது உண்மையானால், ஆபீஸ் ரூம் / மற்றும் ஏனைய ஷங்கரின் உத்திகள் இல்லாமல் அவற்றை வெள்ளையாக்க யாராவது முயலவேண்டும்.(சிதம்பரம் கூட எதையோ செய்து கொஞ்சம் போல் வெள்ளையாக்கியது நினைவில் உண்டு.) ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்களிடம் உங்களுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தால் பேசிப்பாருங்கள், சீட்டிங், கருப்புப் பணம், கவர்மெண்டை ஏமாற்றுவது சர்வசாதாரணமாக பேசப்படும்.

வீடு வாங்க நினைத்த பொழுது; வீட்டை 10,00,000(10 லட்சம்)த்திற்கு கீழ் ரிஜிஸ்டர் செய்தால் டாக்ஸ் பிரச்சனையில்லை(யோ அதைப் போல ஏதோ ஒன்று) என்பதால் 20,00,000 - 40,00,000 வரை பொருமானமுள்ள வீட்டை இவர்கள் 10,00,000 க்கு ரெஜிஸ்டர் செய்துவிட்டு மற்றதை கொஞ்சம் கூட முகம் சுருக்காமல் ப்ளாக்கில் கொடுத்திருங்க என்று சொல்கிறார்கள். அந்தப் 10,00,000(பத்து லட்சத்திற்கு) பேங்க் கொடுக்கும் 85% போக மீதிப் பணத்திற்கே அவனைப் பிடி இவனைப் பிடி என்று இருக்கிறவர்கள் மத்தியில் - 20,00,000 - 30,00,000 யாரிடம் இருக்கிறது ப்ளாக்காக, கொள்ளை தான் அடிக்கணும் எதாவது பேங்கைப் பார்த்து. இவர்கள் யாரும் அரசியல்வாதிகள் கிடையாது, கொஞ்சம் அடியாள் பலம் எல்லாம் கிடையாது சாதாரண மக்கள் தான் அவர்களும். இப்பொழுது நான் வாங்கிய வீட்டையும் விற்பதென்றால் இப்படித்தான் முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் படத்தில் சொல்லியிருப்பதைப் போல் கருப்பை வெள்ளையாக ஆக்கமுடியுமா என்பது கேள்விக்குறியே!!! எனக்கு அதிலும் லாஜிக்கலாக நிறைய கேள்விகள் உண்டு.

படம் பார்த்து முடித்ததும் எனக்குத் தோன்றியது ஷங்கருக்கான ஹீரோ ரஜினி கிடையாது ரஜினிக்கான டைரெக்டர் ஷங்கர் கிடையாதென்று. ஆனால் சிவாஜி படம் மற்றபடங்களுடன் ஒப்பிடும் பொழுது நன்றாகவேயிருக்கிறது. கமல் படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரஜினி படத்திற்கான எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும் பொழுது வித்தியாசமாகயிருக்கும். இடைவேளைக்குப் பிறகான படத்தின் எண்டர்டெயின்மெண்டிற்கு நான் கியாரண்டி. நிச்சயமாக ஒரு முறை பார்க்கக்கூடிய படம் தான் சிவாஜி.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

இப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா?

இப்பொழுது நடக்கப்போகும் ஜனாதிபதி தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்று எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இந்த UPA ஆட்சிக்குப் பிறகு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்ததில் பிஜேபிக்கும் சரி, காங்கிரஸ்க்கும் சரி பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. இப்பொழுது இருக்கும் அளவிற்குக் கூட கிடைக்கப்போவதில்லை.

அதனால் இப்பொழுது தேர்ந்தெடுக்கப் படப்போகும் ஜனாதிபதியைப் பற்றிய கேள்விகள் அதிகமாய் யோசனைகள் நிலவுகின்றன. இதனால் தான் கலாமை ஜனாதிபதியாக்கக்கூடாதென சொன்னதாகக் கூட செய்திகள் வெளிவந்தன.

சமூக நல நோக்கர்களிடம் இருந்து அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர் இந்தப் பதவிக்கு வரக்கூடாதென்றும் எண்ணங்கள் வெளிப்பட்டன. ஆனால் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள அரசியல் வாதிகள் அதற்கு உடன்பட மறுக்கிறார்கள். இதுவும் அவர்களுக்கு அரசியல் செய்யும் வாய்ப்பு அவ்வளவே. நம்ம கருணாநிதி தாத்தா கூட டெல்லிக்கு ரொம்ப சீரியஸா ஜனாதிபதிய தேர்ந்தெடுக்கப் போனதுக்கான காரணம் இதுதான். வரும்காலத்தில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் குழுவாக ஏதாவது ஒன்று அமையுமானால் அப்பொழுது தானும் முக்கியமானவர் என்பதை இப்பொழுதே சொல்லத்தான் தலைவர் போயிருக்கிறார்.

இது போன்ற காரணங்களினால் தான் வரப்போகிறவர் பெண் ஜனாதிபதியாகவோ இல்லை ஆண் ஜனாதிபதியாகவோ இல்லை யாராகவோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் சுயமாய்ச் சிந்தித்து முடிவெடுப்பவராய் இருக்க வேண்டும் என்கிறேன். எல்லாம் வல்ல ஆண்டவன் தற்பொழுது அடிபடும் இரண்டு பெண் பெயர்களுக்கும் மற்ற ஆண் பெயர்களுக்கும் அந்த வலிமையை நல்குவானாக.

சாதாரணமாகவே நம்ம நாட்டின் ஜனாதிபதிக்கு ரப்பர் ஸ்டாம்ப் என்ற பெயர் உண்டு. என்ன தான் Supreme Commander of the Indian Armed Force ஆகயிருந்தாலும், கொலு பொம்மைதான் ஜனாதிபதிகள்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

சிவாஜி எதிர்பார்ப்புகள் மற்றும் அப்டேட்ஸ்

இங்கே பெங்களூருவில், INOX தியேட்டர் காம்ப்ளக்ஸில் சிவாஜி ரிலீஸாம். நாளை ரிலீஸுக்கு இன்னிக்குத்தான் டிக்கெட் கொடுக்கிறார்களாம். நாமத்தான் தமிழ்நாடு போறோமே; நம்ம ப்ரண்ட் ஒருத்தன் போய் வந்திருந்தான். டிக்கெட் 10.30 கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்களாம். நம்பாளு 8.30க்கு போயிருக்கான், 500 நின்று கொண்டிருந்தார்களாம். நம்ப பையன் திரும்ப வந்துட்டான். வேறயாரு என்கூட கோயம்புத்தூர் வந்த அதே நபர் தான். இப்ப ஒசூர் போய் பார்க்கப் போறதா சொல்லிக் கொண்டிருக்கான்.

நான் இப்ப சொல்றேன், அப்படின்னு சொல்லுறதுக்குள்ள ஒரு வாரத்துக்கு பெங்களூரில் புக் ஆய்டும் பாருங்க. சொல்லப்போனால் தமிழ் மக்களை விட கன்னடக்காரர்கள் தான் அதிகம் டிக்கெட் வாங்கியிருப்பார்கள். ஏன்னா கன்னடப் படம் பார்த்துப் பார்த்து செத்து சுண்ணாம்பா ஆய்ருப்பாங்க அவங்க.

என்னைப் பொறுத்தவரை சிவாஜி பாடல்களும் சரி டிரைலரும் சரி அத்தனை தூரம் கவரவில்லை, வேண்டுமானால் என்னுடைய எல்லைகள் விரிவடைந்தது காரணமாகயிருக்கலாம். எல்லோரையும் போல் இந்த விஷயத்தில் சும்மா சொல்லமுடியலை, எனக்கென்னமோ ரஹ்மானை விடவும், ஹாரிஸிடம் கொடுத்திருந்தால் இன்னும் நச் பாடல்கள் கிடைத்திருக்கும் என்ற எண்ணம் உண்டு. படம் அப்படி என்னை ஏமாற்றாது என்றே நினைக்கிறேன். அப்படியும் அன்னியன் என்னை அவ்வளவாக இம்ப்ரஸ் செய்யவில்லை.

டிரைலரும் அத்தனை பிரகாசமாகயில்லை. இவர்களை எல்லாம், ஆங்கிலம் என்னா இந்தி பட டிரைலர்களை பார்க்க அனுப்ப வேண்டும். தூம் 2 ன்னு ஒரு பக்வாஸ் படத்துக்கு அவங்க கொடுத்த டிரைலரைப் பார்க்கணுமே. சூப்பராகயிருந்தது.

இங்கே எப்பொழுதும் ஒரு விஷயம் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, அது மற்ற கஷ்டப்படும் பொழுது உங்களால் எப்படி சந்தோஷமாக பார்க்க முடிகிறது என்று. உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததில்லை, நீங்கள் பிரச்சனைகளையே பார்த்துக் கொண்டிருந்தால் சரிவராது என்பது என் எண்ணம். நேற்று சயந்தன் போட்ட ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல, கொழும்பில் மக்களிடம் இருக்கும் பீதியோ, பயமோ விடுதலைப் புலிகள் வாழும் பகுதியில் உள்ள மக்களிடம் இல்லை என்று.

புலிகளை விடவும் திறன் அதிகம் வாய்ந்த ஆயுதங்களையும் விமானங்களையும், அனைத்துலக ஆதரவையும் பெற்றிருந்தும் ஏன் சிங்களவர்களால் நிம்மதியாகயிருக்க முடியவில்லை. என்னக்கென்னமோ ஒரு விஷயம் தான் படுகிறது உங்களின் சோகமே பெரிய கதையாக இருக்கும் பொழுது, மற்றவர்களின் சோகங்களைப் பார்த்து பரிதாபப்படவும், உங்களின் கையாலாகாத்தனத்தை நினைத்து வருத்தப்படவும் மட்டுமே முடியும். அந்த வேதனையும் வலியும், வருத்தமும், சிந்தனையும் எனக்கு சிவாஜி பார்க்கும் பொழுது கூட இருக்கும்.

Entertainment என்ற ஒரு விஷயம் தமிழ்நாட்டில் வித்தியாசமாக இருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ்

பிட்(டுப்) போடும் அஜாக்ஸ்

சாயங்காலம் ப்ளாக்கரை Hack செய்வதைப் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். முதலில் தீர்மானித்தது தமிழ்மணத்தில் இப்பொழுது புதிதாகச் சேர்த்திருக்கும் "அதிக பின்னூட்டமிட்டவர்கள்" பகுதியை Hack செய்யலாம் என்றுதான் நினைத்தேன்.

ஆசிப் அண்ணாச்சிக்கு "டெஸ்ட் பண்ணுறேன், பப்ளிஸ் பண்ணாதீங்க"ன்னு பின்னூட்டத்தில் ஒரு டெஸ்டிங் வேலை செய்தேன். "Operation Success, patient Died" அப்படிங்கிற மாதிரி டெஸ்டிங் சக்ஸஸ் ஆனாலும் அண்ணாச்சி பின்னூட்டத்த வெளியிட்டுட்டாரு.

அப்படியே இணையத்தில் எங்கடா கோட் கிடைக்கும்னு அலைஞ்சப்ப தான் கிடைச்சது ஒரு அற்புதமான அஜாக்ஸ் கோட். இப்ப என் ப்ளாக்கில் உள்ள "Label" அல்லது "பிரிவுகளில்" ஏதாவது ஒன்னில் கிளிக்கினீர்கள் என்றால் தெரியும் மாஜிக். இந்த மாஜிக் நானாய் செய்ததில்லை. காப்பி-பேஸ்ட் தான், ஆனால் கொடுக்கப்பட்ட கோடை காப்பி-பேஸ்ட் பண்றதுக்குள்ள நான் செத்தே போய்ட்டேன்.

நேத்தும் இப்படித்தான், 1.30 AM க்கு கீதா சாம்பசிவத்தின் "சிதம்பர ரகசியம்" பதிவுக்குள்ள மூக்குமுட்ட முங்கியும், ரகசியம் புலப்படாததால் கடைசியில் அவரிடமே கேட்டுவிட்டேன். அதைப் போலத்தான் இன்றைக்கும். 11.30 PM வரைக்கும் கம்பெனியில் உட்கார்ந்து சரிசெய்து பார்த்தேன். அப்புறம் இது உருப்புடாதுன்னு வீட்டுக்கு வந்த பிறகு, என் தன்மானம்(யாரோ இதைப் பத்தி இன்னிக்கு ஒரு பதிவெழுதியிருந்தாங்க) இடம் கொடுக்காததால். திரும்பவும் ஏகப்பட்ட டிபக்கிங் டூல் எல்லாம் வைத்து ஒருவழியாய் சரிசெய்து விட்டேன்.

அப்பா என்ன ஒரு ஜல்லி. ஹிஹி.

பயர் பாக்ஸில் தெரிகிறது, எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பதில்லையாததால் தெரிகிறதா என்று சொல்லவும்.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In Only ஜல்லிஸ்

நான் சிவாஜி பார்க்கப் போறேன்!!!

நாளை மறுநாள் சிவாஜி ரிலீஸ் இல்லையா? அதனால் நான் திருச்சிக்குப் போறேன் சிவாஜி பார்க்க. வெள்ளிக் கிழமையாச்சேன்னு கேக்குறீங்களா. எல்லாம் லீவு போட்டாச்சு. வேறு இரண்டு வேலைகளுக்காகப் போனாலும், முதல் நாள் முதல் ஷோ அதுவும் தமிழ்நாட்டில், திருச்சியில்.

அம்மா நான் சிவாஜி பார்க்கப்போறேன்னு சொன்னதுமே டிக்கெட் புக் பண்ணியாச்சான்னு கேட்டாங்க, திருச்சியில புக் பண்ணனுமா டிக்கெட். எல்லாம் ப்ளாக் டிக்கெட் தான். என்ன 150 ரூவாய்க்கு அழகா கிடைக்கும். காலேஜ் படிக்க ஆரம்பிச்சதிலேர்ந்து எத்தனை படம் பார்த்திருப்பேன் முதல் நாளே எனக்குத் தெரியாதா?

அம்மா கேட்டாங்க, அப்படி என்ன முதல் நாள் பார்க்கணும்னு. நான் சொன்னேன் மத்த மக்கள் சந்தோஷாமாயிருக்கிறதப் பாத்தா நமக்கும் தானா சந்தோஷம் வரும்மா. அதான்னேன் நீங்க என்ன சொல்றீங்க, வெள்ளிக்கிழமை வீடியோ, புகைப்படங்களுடன் கூடிய ஒரு ரிவ்யூவை எதிர்பார்க்கலாம் குறைந்த பட்சம். திருச்சிவாழ் ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை.

அதுவரைக்கும் ஜூட்டு, இங்கைக்கும் பூனைக்கும். வர்ட்டா

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா விமர்சனம்

Ocean 13

இந்தப் படத்தின் மற்ற பாகங்கள் பார்த்தவன் என்ற முறையில் இதன் டிரைலர் பெங்களூருவில் ரிலீஸ் ஆகியவுடனேயே முடிவு செய்திருந்தேன் இந்தப் படத்தை பார்ப்பதென்று. ஏறக்குறைய பெங்களூர் சிட்டியின் இதயத்தில் இருக்கும் கருடா மாலின் INOX தியேட்டர் காம்ப்ளக்ஸில் பார்ப்பதாக முடிவெடுத்திருந்தேன். சென்றுமுறை போலில்லாமல்(கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ்) கவர்ச்சி கொஞ்சம் குறைவாகயிருந்தாலும் கூட ஜார்ஜ் க்லோனி, பிராட் பிட், மாட் டாமென்-க்காக பார்க்க நினைத்திருந்தேன்.



கதையென்னமோ பழைய Ocean கதை தான், இந்த முறை பழிவாங்குவதற்காக திருடுகிறார்கள். ஆனால் எனக்கு ஆச்சர்யம் தரும் விஷயம் என்னவென்றால் இத்தனை சூப்பர்ஸ்டார்களை வைத்துக் கொண்டு, ஒரு துப்பாக்கி குண்டு கூட பறக்காமல் ஒரு கார் சேஸிங் கூட செய்யாமல் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். அதுதான் ஆச்சர்யமே.

மாட் டாமென்னை சைக்கிள் கேப்பிள் நக்கல் அடிக்கும் பொழுது, டேனிக்கு(ஜார்ஜ் க்லோனி) அடுத்ததாக மாட் வரத் துடிப்பதையும், அதாவது எங்க பாஷையில் ஆக்கோ. அது தவறிப்போவதையும், அவரை ஜார்ஜ் க்லோனியும், பிராட் பிட்டும் விளையாட்டாகப் பயன்படுத்துவதும் நகைச்சுவைக்கானது. போன பகுதியிலும் இப்படியே.

நல்லா தேடித்தேடி நிறைய விஷயங்களை செய்திருப்பது போல நம்மை வியக்க வைப்பது தான் இந்தப் படத்தின் முக்கிய அம்சமே. ஆனால் நான் படித்தவரையில் சில விஷயங்கள் அவர்கள் செய்ததுபோல் செய்யமுடியாதென்றே தெரிகிறது. அதாவது சூதாட்டக் கலத்தில் செய்யும் சில தில்லுமுள்ளுகள். சிரித்துக் கொண்டே பார்க்ககூடிய படம் இந்த Ocean 13. நிறைய எழுதணும் போலிருந்தாலும் இந்தப் படத்தை பார்த்து வருவதால் வரும் புன்னகையை என்னால் எழுதிக் கொண்டுவரமுடியாது என்பதால்.

கொஞ்சம் ஜல்லிகள் மட்டும்.

கீழிருக்கும் பதிமூன்று திருட்டுகளும் ஏறக்குறைய சுவாரசியமானவை. படித்துத்தான் பாருங்களேன். இவை உலகின் மிகச் சிறந்த திருட்டுகள் ;)

1) In September of 1992, Bill Brennan, a cashier at the Stardust's (which has since been demolished) sports book, casually left for lunch after a shift with over $500,000 in cash and chips inside of a bag draped over his shoulder -- the biggest theft from a Las Vegas casino in history. Even after being on the the FBI's most wanted list, and appearing on America's Most Wanted, there have been no signs of Brennan. Some believe he worked with an accomplice who later killed him for his half of the money, though others -- such as the police -- are convinced he worked alone and fled the country. Fifteen years later and still no sign of Bill Brennan.

2) Meet Heather Tallchief. In October of 1993, Tallchief, 21, and accomplice Roberto Solis, 48, made off with a Loomis Armored truck filled with $2.5 million USD outside of Circus Circus. The two escaped the United States via the Cayman Islands and St. Martin, though Solis -- a man who Tallchief thought was in love with her -- later left, leaving her with only $1,000 to her name and a kid to raise alone. After running from the law for over 12 years, Heather Tallchief finally surrendered in September of 2005. "There's no running away anymore," she told MSNBC. "I've done enough of that." Her sentence: 63 months in prison.

3) In August of 2005, Brazil saw its largest bank robbery to date, a heist that netted its masterminds $65 million USD. Police estimate that at least 20 members spent three months tunneling 80 meters underground from a nearby house (just like Short Circuit 2) and carted out over 20,000 pounds of money without as much as an alarm going off. Two suspects have since been caught, though only $500,000 has been found, which is a shame for the bank. It turns out their insurance only covered theft during transportation, not while it sat in the vault. Oops.

4) February, 1994. Across the pond, in Oslo, Norway, Edvard Munch's famous painting, The Scream, was stolen from a lower level gallery in the National Gallery of Norway. Two men, a ladder, some wire cutters, and 50 seconds is all it took to wander off with Norway's most famous and valuable painting. A few months later the thieves offered the painting back in exchange for a $1 million USD ransom, but the offer was refused. Good thing, too, as a sting operation held in May of 1994 successfully recovered the unharmed painting and returned it to its owners. Four men were convicted and sentenced for the theft in 1996. However, the drama for The Scream wasn't over yet. In August of 2004, nearly 10 years after the first theft, The Scream, along with Munch's Madonna, was stolen once again -- this time at gun point at the Munch Museum. "The paintings were simply attached by wire to the walls," a French radio producer and witness to the theft told the BBC. "All you had to do is pull on the painting hard for the cord to break loose - which is what I saw one of the thieves doing." Have no fear -- the paintings were once again recovered, and in much better condition than expected. But come on, Norway, twice?

5) You've seen the movie Goodfellas, right? The character, Henry Hill, played by Ray Liotta, is responsible for the Air France Robbery of 1967 in which Hill and crew simply walked into the Air France cargo terminal at JFK and left with USD $420,000. It really happened. Working on a tip from cargo supervisor Robert McMahon, the team used a woman to seduce a security guard into getting a copy of a key that locked the main security door separating the criminals from the money. Keys replaced unnoticed, Hill and Tommy DeSimone (portrayed by Joe Pesci in Goodfellas) walked in, unlocked the door, and walked out with the bags without as much as a peep from an alarm or question from a guard. This robbery later led up to the famous Lufthansa Heist, " the largest cash robbery ever committed on American soil at the time."

6) In December of 2006, a delivery man in Santa Clara, California had just loaded up his Mazda MPV with nearly $200,000 worth of microchips from his employers warehouse when an unmarked white van lightly rear-ended him in traffic. Both parties got out to investigate the damage, while a second man jumped into the Mazda and drove off, stealing the car and the pricey microchips inside. Peanuts compared to a well-orchestrated November 2006 heist on the Island of Penang, in the pirate-infested waters of the Strait of Malacca. Two box trailers entered the MASKargo Complex under the charade that they were there to sniff out illegal workers. The customs officials believed them, of course, and let them into the facility without as much as a search of the trailer. Once inside, 20 men armed with parangs (a machete-like knife, not a style of Caribbean folk music) jumped out and rounded up the complex workers in the area. "To neutralise the threat of a fight-back, the robbers plied their captives with chloroform. Some were forced to drink a white solution which caused them to vomit. Anyone still standing was beaten with sticks," according to The Star Online. They made off with 585 cartons and 18 pallets of microchips and motherboards, a heist worth roughly $12 million USD. Not too shabby for an hours worth of work.

7) Not everyone steals famous paintings, cash, or microchips. In fact, some people go to great lengths to get their hands on some very unsavory -- yet quite expensive -- items. In November of 2005, a farmer at Smithburg, Maryland's Stonewood Acres had ventured to Pennsylvania to visit relatives. When he returned to the farm, he noticed a 70-pound tank filled with $75,000 worth of bull semen had been opened up, with sixty-five "straws" containing the sperm of nearly 50 bulls missing. "Frozen bull semen is big business because it saves on the transportation cost of putting a bull and a cow into the same pen to breed," explains the Washington Post. "Frozen semen can also last for many years, outliving the bull who produced it." Moo?

8) The Securitas depot robbery of 2006 is the single most profitable (for the criminals, that is) crime in Britain's history, just barely beating out the 2004 Northern Bank robbery of Belfast, Ireland. The Securitas heist began on the evening of February 21st, when the depot manager, Colin Dixon, was heading home. Posed as a policeman, one of the robbers pulled Dixon over and forced him into their car, where he was handcuffed and driven to a nearby farm. Meanwhile, Dixon's wife and kid were also abducted and driven to the same farm, where the family were bounded together and driven to the Securitas depot. Fourteen depot employees were also restrained while £53 million in used bills ($92.5 million USD) was loaded into a truck.

9) Here's one you've probably never heard of: The Robert Zemelsky Musky Heist, or the Day That Everything Changed. In 1963, Robert Zemelsky, a Spooner, Wisconsin area fisherman, reeled in a world record 70-pound muskellunge and hauled it into the Hayward, Wisconsin Department of Natural Resources to have it weighed and measured. Unfortunately for him, he failed to take any pictures of the gigantic fish, and the employees at the department immediately seized the fish and kicked him out. You see, Hayward prides itself on having the largest "musky" on record, and the Department of Natural Resources couldn't bare seeing someone from a rival town capturing anything larger than their hometown pride. So they stole it. These days, Hayward folks don't have to worry about any larger fish popping up -- they've built not only the world's largest fiberglass structure, but the world's largest fish (above). The 4.5-story-tall, 143-foot-long musky replica is the centerpiece of Hayward's National Freshwater Fishing Hall of Fame, built in 1960. Oddly enough, the Robert Zemelsky Heist isn't the only musky-related controversy in Wisconsin. It happens quite often.

10) D.B. Cooper is one of America's most notorious hijackers, one that is still at large after 35 years of being on the run. On November 24, 1971 -- the day before Thanksgiving -- "Dan Cooper" hijacked Northwest Orient Airlines flight 305 with a briefcase "bomb." He handed a flight attendant a note saying "I have a bomb in my briefcase. I will use it if necessary. I want you to sit next to me. You are being hijacked." With that, the flight attendant alerted the pilot who then relayed details of the situation to Seattle-Tacoma International Airport. The pilot was instructed by radio control to comply with Cooper's requests: four parachutes and USD $200,000. Why four parachutes? Allegedly he requested the extra three for the pilot, co-pilot, and flight attendant as a way to insure they were not fake. Passengers were dropped off at the Seattle-Tacoma airport, in exchange for the parachutes and cash. Loot in hand, Cooper instructed the pilot to take to the skies again, this time headed for Mexico. Not even the trailing F-106 fighter jet saw D.B. Cooper as he jumped out of the slow-moving plane; it's believed that he landed safely somewhere near Ariel, Washington. The Wikipedia entry on D.B. Cooper has a massive amount of information -- everything from possible suspects to pop cultural reference. Most definitely worth a read.

11) The Isabella Gardner Museum heist of 1990 is called "the biggest art heist in history," and the culprits, after 17 years, are still unknown. Just a few hours after Boston's St. Patrick's Day festivities ended, two men dressed as policemen knocked on the side security door at the Isabella Gardner Museum, where they were greeted by two museum guards. It only took a few minutes for the guards to realize they had made a mistake -- these weren't Boston's finest, they were art theives. Before they knew it, they were handcuffed, duct taped and dragged into the basement. The con men cut three Rembrandt's from their frames (which still hang empty today) as well as "The Concert" by Johannes Vermeer, "Landscape with an Obelisk" by Govert Flinck, and other various sketches. The paintings have never been found, and the museum never reimbursed. Moral of the story: make sure your valuable art is insured!

12) What's the biggest bank robbery in history? On the eve of the first round of Baghdad bombings in March of 2003, a gang broke into the Central Bank of Iraq and filled up three tractor trailers with cash totaling approximately USD $1-billion. Over half of that billion was later found hidden in the walls of Saddam Hussein's palace by US troops, yet the rest still remains unaccounted for. Just down the road in Basra, Iraq, UK troops foiled yet another high-dollar bank heist. Roughly 60 men blasted their way into the national bank in broad daylight, using another round of explosives to penetrate the vault. The loud explosions alerted nearby UK troops, who broke up the party.

13) In August of 1963, fifteen gun-less men wearing ski masks and helmets jumped on a stopped Royal Mail traveling post office train running from Glasgow to London, stealing £2.3 million in used bank notes. Today that amount would be worth nearly £40 million. Bruce Reynolds (left) was the mastermind behind the heist, and after his capture and subsequent prison time, he was treated as a celebrity. There are numerous books, films, and musical tributes devoted to telling the story of the Great Train Robbery. Among them is a film called Buster starring Phil Collins, who plays the lead role of Buster Edwards, one of them men involved in the robbery. After his release from prison in 1980, he ran a flower stall outside of London's Waterloo station.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In ஜாவா

(ஜாவா) ப்ரொக்கிராமிங் ஃபார் டம்மீஸ்

இது வலை உலகத்தில் இருக்கும் சாஃப்ட்வேர் அல்லாத மக்களுக்காக, ஒரு சின்ன இன்ட்ரோ மாதிரி வைச்சுக்கலாம். முதலில் ப்ரொக்கிராமிங் அப்படின்னா என்ன அப்படிங்கிறதை என்னுடைய முறையில் எழுதி இதில் ஜாவா எங்கே வருகிறது என்பதை என்னால் முடிந்தவரை எளிமையாக எழுத முயற்சிக்கிறேன். நான் வேலை செய்த விஷயங்களையே பெரும்பாலான உதாரணங்களுக்கு பயன்படுத்துகிறேன். இதில் உங்களுக்கு(சாஃப்ட்வேர் அல்லாத மக்களுக்குச்) சந்தேகம் வந்தால் தீர்த்து வைக்கிறேன்.

எல்லோருக்குமே ஒரு மாதிரி ப்ரொக்கிராமிங்(நிரலி எழுதுதல்) பற்றி ஒரு அடிப்படை ஐடியா இருக்கும். ரொம்ப சிம்பிளா சொன்னா கூட்டல் கழித்தல் கணக்கு போடவதில் இருந்து ப்ரொக்கிராமிங் டெக்னாலஜியை ஆரம்பிக்கலாம். நீங்க ஒரு கடைக்குப் போறீங்க, நாலு ஹமாம் சோப்பு வாங்குறீங்க, 100 கிராம் கோல்கேட் டூத்பேஸ்ட் ஒரு ஐந்து வாங்குறீங்கன்னு வைங்க. இதில் அந்தக் கடைக்காரருக்கான ப்ரொக்கிராமிங் எப்படி இருக்கும்னா, நீங்க வாங்கின அந்த நாலு ஹமாமோட டோட்டலையூம் 100 கிராம் கோல்கேட் ஐந்தோட டோட்டலையும் போட்டு கூட்டி, அதை ஒரு பில் மாதிரி ரெடி பண்ணி கொடுக்கும் விஷயத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது ஒரு பகுதி என்று வைத்துக் கொள்ளலாம்; ஆனால் இதில் முக்கியமான பகுதி ஒன்றிருக்கிறது. அதுதான் ஸ்டாக் மேனேஜ்மென்ட்.

எப்படின்னா அந்தக் கடைக்காரர் ஒரு ஐம்பது ஹமாம் சோப்பையும், ஐம்பது 100 கிராம் கோல்கேட் பாக்கெட்களையும் வைத்திருக்கிறார் என்றால். நீங்கள் பர்சேஸ் செய்து முடித்ததும் மொத்த ஹமாம் சோப்பின் எண்ணிக்கை நான்கு குறைந்து 46 ஆகவும். கோல்கேட் 100 கிராம் எண்ணிக்கை 45 ஆகவும் ஆகவேண்டும். இதனால் என்ன நன்மை என்றால் உங்களின் இருப்புக்களின் எண்ணிக்கை ஒரு இலக்கை அடைந்தவுடன்(அதாவது 10 என்று வைத்துக் கொள்வோமே) உங்களுக்குத் தெரியப்படுத்த முடியும். இதைச் சாதாரணமா ஒரு அலமாரியில் வரிசைக்கிரமாக அடுக்கி வைத்தாலே குறையக் குறைய நமக்குத் தெரியும் என்று சொல்லலாம்.

ஆனால் 1000 பொருள்களை விற்கும் அங்காடி உங்களுடையது என்று வைத்துக் கொள்வோம், இதில் ஐம்பது பொருள்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் அன்றிரவே வாங்க வேண்டுமென்றால் உங்களால் ஞாபகப் படுத்தியோ இல்லை ஒன்றொன்றாகவோ பார்த்தோ சொல்வது என்பது கடினமாகயிருக்கும். அப்பொழுது உங்களுக்கு ப்ரொக்கிராமிங் உதவக் கூடும். இந்தக் கூட்டல் கழித்தல் வேலைகளையும்; குறைந்திருக்கும் பொருள்களின் எண்ணிக்கையையும் அழகாக கொடுப்பதற்குத்தான் நாங்கள் ப்ரொக்கிராம் எழுதுவோம் என்று வைத்துக் கொள்ளலாம்.

இதே இன்னும் கொஞ்சம் பக்காவான சிஸ்டமாகயிருந்தால், நீங்கள் யாரிடமிருந்து பொருள்கள் வாங்குகிறீர்களோ அவர்களுக்கே கூட தேவைகளின் விகிதத்தின் படி மெய்ல் அனுப்ப முடியும். அதாவது எனக்கு இந்த இந்த பொருட்கள், இன்றைக்குள் வரவேண்டும் என்று. இதில் எல்லாம் முக்கியத்துவமானது என்னவென்றால் நீங்கள் இதற்காக எதுவும் செய்யவேண்டாம். ஒரு குறிப்பிட்ட பொருள் இருப்பு தீரப்போகிறதென்றால் அந்தப் பொருளை எந்த நபரிடம் இருந்து நீங்கள் வாங்குவீர்களோ அவருக்கு மெய்ல் அனுப்பும் படி உங்கள் "ப்ரொக்கிராமை" வடிவமைத்துக் கொள்ளமுடியும்.

அதேபோல் உங்கள் கடையில் இன்ன இன்ன நாட்களில் இந்த பொருட்கள் விற்பனையாகின்றன, எதற்கான தேவை அதிகமாகயிருக்கிறது. எது அதிகமாக விற்பனையாகிறது எது உங்களுக்கு அதிக லாபம் தருகிறது என்பன போன்றவற்றை வார வாரியாக, மாத வாரியாக உங்களால் பார்க்கமுடியும். இவை எல்லாவற்றையும் யாருடைய தலையீடும் இல்லாமல் தானாக செய்யும் வகையில் எழுதிக் கொடுப்பது தான் ப்ரொக்கிராமருடைய வேலை. அப்படி எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு விஷயத்தை நீங்கள் அப்ளிகேஷன் என்று சொல்லலாம்; கொஞ்சம் பெரியா அளவில் இருப்பதை ப்ராடக்ட் என்றும் சொல்லலாம்.

-------------------------------------------------------------------------

ஓரளவிற்கு ப்ரொக்கிராமிங் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் இனி இதில் ஜாவா எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். இப்பொழுது வழக்கத்தில் இருக்கும் அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால்(ரொம்ப ஜெனரலா) இது போன்ற அப்ளிகேஷன்களை, ப்ரொடக்ட்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று டெக்ஸ்டாப் அப்ளிகேஷன் மற்றொன்று வெப் பேஸ்ட் அப்ளிகேஷன். இரண்டிற்குமான வித்தியாசம் பெயரிலேயே புரிந்திருக்கும், ஒன்று இணையத்தின் தேவையில்லாதது மற்றது இணையத்தின் தேவை உடையது. இரண்டைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

டெக்ஸ்டாப் அப்ளிகேஷன்

இதற்கான உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் மேற்ச்சொன்ன மளிகைக் கடை உதாரணத்தையே எடுத்துக் கொள்ளலாம். இதில் முக்கியமான வித்தியாசம் எங்கே வருமென்றால்(வெப் பேஸ்ட் அப்ளிகேஷன்களுடன்)

1) உங்கள் விவரங்களை சேமித்து வைப்பது உங்கள் சிஸ்டத்திலேயே நடக்கும்.(புரியுமென்றால் டேட்டபேஸ் உங்கள் கணிணியிலேயே இருக்கும்)
2) உங்கள் கடைக்கு வந்துதான் பொருட்களை வாங்குவார்கள் என்பதால், வேறு யாரும் இந்த அப்ளிகேஷனை உபயோகப்படுத்த மாட்டார்கள். (அதாவது இணையத்தின் வழியாக பொருட்கள் வாங்கமாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.)
3) இன்னொரு விஷயம், இந்த டெக்ஸ்டாப் அப்ளிகேஷன்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கணிணிகளை உபயோகப்படுத்த முடியும். அது நெட்வொர்க்கினால் சாத்தியம் அதாவது கம்பிவழித் தொடர்பு என்று சொல்லலாம். எப்படியென்றால் உங்கள் கடை கொஞ்சம் பெரியது என்று வைத்துக் கொள்ளலாம், சாரதாஸை உதாரணம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆறு ப்ளோர் கடை உங்களுடையது என்றால் ஆறு ப்ளோர்களில் உள்ள கணிணிகளையும் இணையம் இல்லாமல் வெறும் நெட்வொர்க்கினாலே கூட தொடர்பு படுத்து உபயோகிக்க முடியும். அப்படிப்பட்ட கடைகளில் இருக்கும் அப்ளிகேஷன்ஸ் கூட டெக்ஸ்டாப் அப்ளிகேஷன்ஸ் தான். எப்பொழுது உங்கள் அப்ளிகேஷன் இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறதோ அப்பொழுது தான் அது வெப்-பேஸ்ட் அப்ளிகேஷன் ஆகிறது.
4) நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களுமே உபயோகிக்கப் போகிறீர்கள் என்பதால் செக்யூரிட்டி அவ்வளவு பெரியதாகப் போடவேண்டிய தேவையில்லை. ஏனென்றால் எல்லா கணிணிகளையும் உபயோகிக்கப் போவது உங்கள் ஆட்கள் மட்டுமே.

இன்னும் நிறைய வித்தியாசங்கள் சொல்லலாம் என்றாலும் இதுவே போதும் என்று நினைக்கிறேன். விஷயங்களைப் பற்றி எழுதும் பொழுது நினைவில் எந்த புது விஷயமும் வந்தால் எழுதுகிறேன்.

இந்த டெக்ஸ்டாப் அப்ளிகேஷன்களை எழுதத்தான் ஜாவாவை உபயோகிப்பார்கள். சொல்லப் போனால் நீங்கள் C, C++, Java, VB, COBOL ஆகிய எல்லா ப்ரொக்கிராமிங் லாங்க்வேஜ்களையும் உபயோகித்து டெக்ஸ்டாப் அப்ளிகேஷன் எழுத முடியும். இவைகள் ஒவ்வொன்றிற்கும் அவற்றிற்கான சாதக பாதகங்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரை இணையத்தின் தேவை இல்லையென்றால் ஜாவாவை விடவும் VB உங்களுக்கு டெக்ஸ்டாப் அப்ளிகேஷன் எழுத அதிகம் உதவக்கூடும்.

ஏனென்றால் உங்களுக்கு மைக்ரோசாஃப்ட் பற்றியும் லினக்ஸ் பற்றியும் தெரிந்திருந்தால் இன்னும் சுலபமாகவே விளக்கமுடியும். வித்தியாசம் யூசர் ப்ரண்ட்லினஸ்; கணிணி என்றாலே என்னவென்று தெரியாதவர் விண்டோஸை உபயோகிப்பது லினக்ஸை உபயோகிப்பதை விட சுலபமாகயிருக்கும். அதைப் போலவே VBக்கும் ஜாவாவிற்குமான வித்தியாசம்.

நாங்கள் ப்ரொக்கிராமை எழுத உபயோகிக்கும் டூலை நீங்கள் இப்படி(ஆப்பரேட்டிங் ஸிஸ்டமாக) ஒப்பிட்டால் சுலபமாகயிருக்குமென்று நினைக்கிறேன். இருபது டெக்ஸ்ட் பாக்ஸ் உள்ள ஒரு அப்ளிகேஷனை நீங்கள் VBயில் எழுதி உருவாக்குவதற்கும், ஜாவாவில் எழுதி உருவாக்குவதற்கும் ஆகும் நேரம் நிச்சயமாக வித்தியாசப்படும். இப்பொழுது கொஞ்சம் போல் சுலபமாகச் செய்துவிடலாமென்றாலும் VBயில் முடிவது போல் சுலபமாகவும் வேகமாவும் ஜாவாவால் செய்யமுடியாது. இன்னும் கொஞ்சம் விரிவாக VB ஜாவாவிற்கான வித்தியாசங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

என்னுடைய ஜாவா அனுபவங்கள் தொடரும்....

முதல் பாகம்

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In ஜாவா

என் ஜாவா அனுபவங்கள்

எப்பொழுதோ எழுத வேண்டும் என்று நினைத்து உட்கார்ந்த விஷயம். என்னமோ சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் இனிமேல் டெக்னிக்கல் விஷயங்கள் எழுதவதில்லை என்று முடிவு கட்டி ஒதுக்கி வைத்திருந்தேன். நிறைய காரணங்கள் உண்டென்றாலும், என்னையே நானே மாற்றிக் கொள்ளும் முக்கியமான விஷயமாக இதைப் பார்க்கிறேன். இன்னமுமே கூட எத்தனையோ முறை எடுத்து எழுதத் தொடங்கி ஏதோ ஒன்று உறுத்த "Draft" ஆகவே உட்கார்ந்திருந்த இந்தப் பகுதியை மீண்டும் எழுத மா.சிவக்குமார் ஒரு முக்கியமான காரணம்.

என் கல்லூரி வாழ்க்கையில் இருந்து ஆரம்பிக்கிறேன்; அங்கே தான் ஆரம்பம் ஆனது ஜாவா எனக்கு. எனக்கு மூன்றாம் ஆண்டு முதல் செமஸ்டர்(அதாவது கணக்குப்படி ஐந்தாவது செமஸ்டர்) ஜாவா ப்ரொக்ராமிங் லாங்க்வேஜாகவும், லேப்பிற்கான லேங்க்வேஜாகவும் இருந்தது. சரியாக 2003, அப்பொழுதெல்லாம் ஜாவா ஒரு செத்துப் போன மொழி(குறைந்தபட்சம் எங்கள் கல்லூரியில்) நான் கல்லூரி படிக்க ஆரம்பித்த பொழுது ஜாவா "Out of fashion" ஆகயிருந்தது. இது ஒரு டைரி போல இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்; ஆனாலும் வழக்கமான என் ஜல்லிக்கதைகள் அதிகம் ஆகிவிடக்கூடாதென்ற எண்ணமும் உண்டு.

நான் படித்த கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பெரும்பாலும், படித்து முடித்துவிட்டு சாப்ட்வேர் போட்டியில் வேலை கிடைக்காமல்; சும்மாவும் இருக்க முடியாமல் வேலைக்குச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மாணவர்களுடைய சைக்காலஜி தெரியாது; மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுக்க வேண்டும் என்று தெரியாது. ஒரு ஆசிரியரின் மகன் என்ற விதத்தில் இதை நான் தைரியமாகச் சொல்ல முடியும். ஏதோ ஒரு பக்கத்தில் வேலை தேடிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதற்காக எங்கள் கல்லூரியில் ஆசிரியர் பணி. அவர்களை நான் குறை சொல்லவில்லை; நான் ஒழுங்காக மதிப்பெண் எடுத்திருந்தால் நல்ல கல்லூரியில் சேர்ந்திருக்கமுடியும். முதல் தவறு என்னுடையது.

இதன் காரணமாகவும், மேலும் ப்ராக்டிகல் என்ற ஒரு விஷயம் எங்கள் தேர்வுக்கான ப்ரொக்ராம்களை நெட்டுறு செய்வதாக மட்டுமே இருந்ததால், முதலாம் ஆண்டு நான் என் கல்லூரியை முடித்த பொழுது எனக்கு For லூப் எப்படி வேலைசெய்கிறதென்றே தெரியாது என்றால் நம்புங்கள். இத்தனைக்கும் நான் நல்ல மதிப்பெண் வாங்கித்தான் தேறியிருந்தேன். என் முதலாம் ஆண்டு செமஸ்டருக்கு தமிழ், ஆங்கிலம், மேக்ஸ் ஒரு பேப்பர் போக வெறும் C மட்டும் தான் கம்ப்யூட்டர் சம்மந்தமாக, கூடவே C ப்ராக்டிகல்.

எங்க மாமா அடிக்கடி சொல்வார் C ஒரு கடல் போல் என்று, எனக்கெல்லாம் ஒரு For லூப் போட்டு அது எப்படி வேலை செய்யும் என்று சொல்லித் தந்ததாக தெரியவில்லை. நானும் படித்து முடித்திருந்தேன்; இரண்டாம் செமஸ்டருக்கு COBOL அதில் Error வராமல் கொடுக்கப்பட்டிருந்த 15 ப்ரொக்ராம்களை அடித்து, கம்பைல் செய்து நெட்வொர்க்கில் என் லாகினில் சேர்த்து வைக்கவே ஆறுமாதம் சரியாகயிருந்தது. ப்ரொக்கிராமேட்டிகலா யோசிக்கவே தெரியாமல் என்னுடைய இரண்டு செமஸ்டர்கள் முடிந்திருந்தது. இதெல்லாம் நான் ஹாஸ்டலில் இருந்த சமயம், முன்பொறுமுறை சொல்லியிருந்தது போல் கல்லூரி முடிந்ததும் கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு ஆடுவது, பேச்சுப்போட்டிக்கு தயார் செய்வது. அவ்வளவுதான் வேலை.

நான் ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்தேன் மூன்றாவது செமஸ்டருக்கு; இந்தச் சமயத்தில் தான் என்று நினைக்கிறேன் அதாவது ஒரு Bard Festival (Bharathidasan University festival) க்கு தயாராக வேண்டி என் சீனியர் அண்ணன்களின் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது தான், Visual Basic ல் அவர்கள் பைனல் செமஸ்டர் ப்ரொஜெக்ட் செய்து கொண்டிருந்தார்கள். சொல்லப்போனால் அதுவரை என் மாமாவால் மிரட்டப்பட்டிருந்ததால் ப்ரொக்கிராம் மேல் ஒரு பயமே கூட வந்திருந்தது; ஆனால் அந்தப் பயத்தை போக்கியது Visual Basic.

அப்பாவை நச்சரித்து, மாமாவை நச்சரித்து நான் Visual Basic கத்துக்கிறதுக்கு CSCயில் சேர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு அன்று எடுத்த அந்த முடிவு ஒர் பெரிய காரணம். நானெல்லாம் For, While லூப்கள் எப்படி வொர்க் ஆகிறது என்று தெரிந்து கொண்டது Visual Basic மூலமாகத்தான். அதுமட்டுமல்லாமல் எங்கள் கல்லூரியில் கிடைக்காத எக்ஸ்ட்ரா கணிணி நேரம் இங்கே கிடைத்தது. மாமாக்கள் அவர்கள் வேலையில் பிஸியாகயிருந்ததால், எனக்கு அவர்களின் கணிணி கிடைக்காது. நான் நிறைய புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்த்து அதிலுள்ள ஐட்டங்களை வொர்க் செய்து பார்க்க என்று என் மூன்றாவது செமஸ்டரில் தான் ப்ரொக்கிராமேட்டிக்கலாக சிந்திப்பதாக உணர்ந்தேன்.

எங்கள் கல்லூரி போன்ற ஒன்றில் படிப்பவர்களுக்கு இருக்கும் பிரச்சனை, நான் என்னுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆட்கள் கிடைக்கவே மாட்டார்கள். நான் அவர்களுடன் ஒப்பிட்டு என்னை பெரிய ஆளாக நினைக்கும்/நினைத்த ஒவ்வொரு கணத்திலும் செருப்படி(யாய்) மாமா கொடுத்துக் கொண்டிருந்தார். இன்று நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். சாதாரண விஷயம் கிடையாது என்னிடம் நேரில் சொன்னது கிடையாது நீ செய்வதெல்லாம் ஒரு விஷயமே கிடையாதென்று; ஆனால் நான் ஒரு அற்புதமான விஷயத்தைச் செய்து கொண்டிருக்கவில்லை என்பதை மட்டும் மறைமுகமாக உணர்த்திக் கொண்டிருந்தார். ஏனென்றால் வெகுசுலபமாக நாற்பத்தைந்து பேர் படிக்கும் ஒரு வகுப்பில் முதல்வனாகயிருக்கும் எனக்கு தலைக்கனம் வந்திருக்க வேண்டியது; வந்திருந்தது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

மாமாவிற்று விஷுவல் பேஸிக் பிடிக்காது, ஆனால் நான் அன்று என் தலையை ஜாவாவில் விட்டிருந்தேன் என்றால் பல நபர்களைப் போல நானும் எனக்கு ப்ரொக்கிராமிங் வராது என்று வீட்டில் உட்கார்ந்திருக்க வேண்டியது தான். இன்றுமே நாங்கள்(நான் மற்றும் என் நண்பர்கள்) எங்களிடம் அட்வைஸ் கேட்டு தேடிவருபவர்களிடம், அவர்களிடம் உண்மையான திறமையிருந்தால், ஆர்வமிருந்தால் மட்டுமே Java, J2EE பரிந்துரைப்போம். இல்லையென்றால் இருக்கவேயிருக்கிறது VB.Net ASP.Net. அதென்னமோ ஜாவா, ஜே2ஈ போல் .Net ஐ யோசிக்க முடியவில்லை. எனக்குத் தேவையான் ப்ரேக் VBயில் கிடைத்தது; ஒரு அற்புதமான ப்ரேக். For லூப் கோடிங் எழுதத்தெரியாமல் இருந்த எனக்கு ஒரு பிஸனஸ் அப்ளிகேஷனை செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது VB.

இதெல்லாம் நடந்தது மூன்றாவது நான்காவது செமஸ்டரில். ஐந்தாம் செமஸ்டரில் தான் ஜாவா; அப்படியொன்றும் என் வாழ்க்கையை புரட்டிப்போடப்போகும் லாங்க்வேஜாகவும், ஒரு குடும்பத்தின் நிலையையே மாற்றிப்போடப்போகும் ஒரு விஷயமாகவோ எனக்கு ஜாவா அறிமுகம் ஆகவில்லை. எனக்கு ஜாவா பாடம் எடுத்தது மீனா மேடம்; இவர்கள் தான் எனக்கு C++ ம் கொஞ்ச காலம் எடுத்தார்கள். அவருக்கும் எனக்கும் சண்டை வராத நாளே இருக்காது. ஏதாவதொரு ப்ரொக்கிராம் போர்டில் எழுதிப்போட்டு எழுதிக்கொள்ளச் சொன்னால் என்னமோ என் மண்டையில் JVM(Java Virtual Machine) இருப்பதைப் போல் இது வொர்க் ஆகாது என முதலில் சொல்வேன். பின்னர் அந்தம்மா லேபில், நாளை நடத்தப் போகும் ப்ரொக்கிராமை எழுதி, கம்பைல் செய்து ரன்செய்து பிரிண்ட் அவுட் என்னிடம் கொடுத்துவிட்டு பாடம் நடத்தினார்கள். அப்படியும் நிறைய கேள்விகள் கேட்பேன் ஏனென்றால் அந்தப் ப்ரொக்கிராமில் எல்லாம் ஆப்டிமைஷேஷன் நிறைய செய்யமுடியும். அப்பொழுது Optimization பற்றி எல்லாம் தெரிந்திருக்கா விட்டாலும், இன்னும் நன்றாக செய்யமுடியும் என்று நிரூப்பிக்க(மீனா மேடத்திடம்) அரும்பாடுபட்டேன்.

அதனால் மீனா மேடத்திடம் கேள்விகள் கேட்கவேண்டுமென்றே ஜாவா படித்தேன், தீவிரமாய் என்றால் அது பொய்யில்லை. இந்தச் சமயத்தில் எல்லாம் VBதான் என் மனம் முழுவதும்; என் பைனல் இயர் ப்ரொஜக்ட் என் கண் முன்னே ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. இடைப்பட்ட நேரத்தில் மீனா மேடத்திற்காக படித்தது தான் ஜாவா. ஒரு உண்மை தெரியுமா நான் ப்ராக்டிகலில் எல்லா பாலிடிக்ஸ்-ம் தாண்டி, முதல் முறையாக 100 வாங்கியதும் ஜாவாவிற்காகத்தான். அப்படித்தான் வகுப்பிலேயே முதல் முறையாக ஒரு பாடத்தில் முதல் மதிப்பெண் வாங்கியதென்றால் அதுவும் ஜாவாவிற்காகத்தான்.

நாங்க கடம் தட்டுவது என்று சொல்வோம் என்னுடன் படித்த ஆறு பெண்களில் மூன்று பெண்கள் மிகவும் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். அவர்கள் தான் முதல் மதிப்பெண் வாங்குவார்கள் பெரும்பாலும், இதை நான் ஜாவாவில் முறியடித்த அதே சமயத்தில் தான் என் நண்பர்கள் ராஜேஷ் மற்றும் உதய சங்கர் வேறு பாடங்களில் அவர்களை முந்தியிருந்தார்கள். இதில் எங்களின் பங்கு எவ்வளவோ அதே அளவு பங்கு அந்தப் பெண்களுடையது அவர்கள் காதலில் விழுந்திருந்த சமயம் அது. காதல் கண்ணை மறைக்க மதிப்பெண் பட்டியல் வாசித்த பொழுது மூவரும் அழுதது என் மனதில் இன்னும் இருக்கிறது.

இப்படியாக ஜாவா தான் என் லாங்க்வேஜ் என்று தெரியாமலே என் கல்லூரி வாழ்க்கை முடிந்தது என்று வைத்துக் கொள்ளலாம் நான் என் பைனல் இயர் ப்ரொஜக்ட் VBயில் தான் செய்தேன் சொல்லப்போனால் அந்தக் கல்லூரியிலேயே சொந்த ப்ரொஜக்ட் கொடுத்தது நான் மட்டுமாகத்தான் இருப்பேன். அப்படியே என்னுடைய ஒரு நண்பனுக்கும் முழு ப்ரொஜக்ட் செய்து கொடுத்திருந்தேன். இந்த நம்பிக்கைகள் எல்லாம் இருக்கத்தான் நான் MCA படிக்காமல் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் வண்டியேறியது. என் வாழ்க்கையை புரட்டி போட்ட நாட்கள் அவை.

என் ஜாவா அனுபவம் தொடரும்...

PS: தனித்தமிழில்(கொடுந்தமிழில்) எழுத எனக்கு விருப்பமில்லை அதனால் அதற்காக என்னை வற்புறுத்தாதீர்கள். நான் இன்று எழுதுவது நிச்சயமாக இன்னொரு நாள் யாராவது ஒருவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றுதான்.

என் சாப்ட்வேர் வாழ்க்கையை பாதிக்காத அளவிற்குத்தான் இந்தப் பதிவுகளில் உண்மையிருக்கும்.

ஜாவாவில் ப்ரொக்கிராம் எழுதுவது எப்படி என்பது மாதிரியான விஷயங்களை நீங்கள் தூய தமிழில் எதிர்பார்க்கிறீர்கள் என்றால்; சாரி என்னிடம் அது கிடைக்காது பெட்டர் நல்ல புத்தகம் வேறு கடைகளில் கிடைக்கக்கூடும்.

ஆரம்பத்தில் இப்படி ஆரம்பித்து பின்னர் கொஞ்சம் போல் ஆர்க்கிடெக்சர், Struts, Spring, ஜாவா இண்டர்வியூ எப்படி அட்டெண்ட் செய்வது என்பது வரையில் எழுதலாம் என்று உத்தேசம். ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான "இறைவன்" அதற்கு உதவுவானாக.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In காப்பி-பேஸ்ட்

நகுலன் என்றோரு இலக்கியப் புதிர்

இம்மாதம் 18 ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில் இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஷ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை. ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்... சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை... பார்த்து நாளாயிற்று...’’ இப்படியாக

கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!

தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!

‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி... ‘அஹ்ஹா...’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.

கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.

இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சு.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா... நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை... நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்...’’ ...நகுலனின் ஒட்டுமொத்தமான அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு .... இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.

‘இன்னார் போல் அவர்...’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை! றீ

சீரிய இலக்கியச் சூழலில் ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று சிறப்பிக்கப்பட்டவர் நகுலன்.இந்த அடைமொழி ஒரு தேய்ந்த சொற்சேர்க்கை (க்ளீஷே). எனினும் இது நகுலனுக்குப் பொருந்திப் போவது ஒரேசமயத்தில் இயல்பானதாகவும் முரண்பாடானதாகவும் படுகிறது. பொதுவான வாசிப்புத்தளத்தில் நகுலனுக்கு வாசகர்கள் அதிகமில்லை.சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டவர்களே அவரது வாசகர்கள்.

அவர்களே நகுலனை அப்படிக் கருதுகிறார்கள்; அல்லது அப்படிக் கருதுவதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அர்த்தத்தில் முன் சொன்ன அடைமொழி நகுலனுக்கு இயல்பாகப் பொருந்துகிறது. தமிழில் இன்றுள்ள பிற எந்த எழுத்தாளரையும் விட அதிகமாகப் போற்றப்படுபவர் அவர்தான். எண்பதுகளுக்குப் பின் வந்த இளம் இலக்கியவாதிகளிடையே அவர்தான் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ள எழுத்தாளர்.நகுலனின் படைப்புகளால் தூண்டப்பெற்றவர்களை விட, இலக்கிய உலகில் உருவாகியிருந்த படிமத்தைச் சார்ந்து அவர்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம் என்று தோன்றுகிறது.படைப்பு, வாழ்க்கை இரண்டுக்கும் அதிக வேற்றுமையில்லாத எழுத்தாளர் என்ற உண்மையும் நகுலனை ஓர் ஆராதனைப் பாத்திரமாக்கியிருக்கிறது.தீவிர இலக்கிய வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஓர் ஆர்வலனுக்கு அவர் முன்னுதாரணமாகத் தென்பட்டது இயல்பானது. அதே சமயம் நகுலனின் எழுத்தும் வாழ்க்கையும் பின் தொடர அரிதானவை என்பதால், இந்த மனநிலை முரண்பாடானதாகவும் தோன்றுகிறது. நகுலன் கல்லூரி ஆசிரியராக ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியிருக்கிறார்.அதை விடவும் கூடுதலான ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இந்த இரண்டு செயல்பாடுகள்தாம் அவரது வாழ்க்கையை உருவாக்கியிருக்கின்றன. மொழியையும் இலக்கியங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர் என்ற நிலையில் அவரது வாழ்வனுபவங்கள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தவையாகவே இருந்திருக்கின்றன. இலக்கியம் சார்ந்து உருவான நட்புகள்,பாதிப்புகள்,செல்வாக்குகள்,ஆற்றாமை இவைதாம் அவரது வாழ்வின் அனுபவங்கள். இந்த அர்த்தத்தில் நகுலன் உருவாக்கியது அவருக்கு மட்டுமேயான உலகம். அவரது அனுபவங்கள் புற உலகின் தாக்கமில்லாதவை. எனவே வெளியில் விரிவதற்குப் பதிலாக உள் நோக்கி ஆழமாகச் செல்லும் குணம் கொண்டது அவர் உலகம். மனதின் தோற்றங்களுக்கு இசைய அந்த உலகம் வடிவம் கொள்ளுகிறது. தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் இப்படி ஓர் உலகை உருவாக்கிக் கொண்டவர் அவர் மட்டுமே. நகுலனை அணுகும் வாசகனுக்கு அவரது படைப்புலகம் வியப்பூட்டக் கூடியதாகவும் அமைகிறது. பூடகங்களும் மௌனங்களும் நிறைந்து தீவிர மனநிலை கொண்டதாகத் தோன்றுகிறது. உண்மையில் நகுலனின் படைப்பு மனநிலை தீவிரமானது. சிக்கலானது. மறைமுகமான அர்த்தங்கள் கொண்டது. நடப்புக்கும் கனவுக்கும் வேறுபாடில்லாத படைப்பு நிலையே அதன் மையம். இந்த இயல்பு அவரது தனி வாழ்க்கையிலிருந்து உருவானது. ஒரு நேர்காணலில் அவர் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்யவில்லையா? என்று கேட்கப்பட்டிருந்தது.அதற்கான வயதில் பெண் பார்க்கப் போனதையும் கல்லூரி விரிவுரையாளர் பணியிலிருப்பவருக்கு சம்பந்தம் பேச விருப்பமில்லை என்று பெண்வீட்டார் மறுத்ததையும் குறிப்பிடுகிறார். சாதாரணமான ஒருவரிடம் இந்த சம்பவம் லௌகீகமான சலனங்களை உருவாக்கும். நகுலனிடம் இது வாழ்வையே நிர்ணயிக்கும் முடிவுக்கு வந்து நின்றிருக்கிறது. அது அவருடைய படைப்பின் கூறாகிறது. சுசீலா என்ற நிரந்தரமான பிரதிபிம்பத்தை உருவாக்குகிறது. இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. புற வாழ்வின் நிகழ்ச்சிகள் எல்லாம் உளவியல் விசாரணைகளாக ஆவது நகுலன் படைப்புகளின் இன்னொரு அம்சம். வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் மனவுணர்வுகளின் உச்ச நிலைதான் அவரது படைப்பின் மையம். அவையும் சக மனிதர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படும் ஒருவனின் கழிவிரக்கமாகவும் ஏமாற்றப்பட்டாலும் நன்மையையட்டி இருக்க வேண்டும் என்ற தார்மீக இச்சை கொள்வதாகவும் இருக்கிறது. எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து ஏமாற்றப்படுபவர்களாகவே பலரும் உணரும் வாழ்நிலையில் நகுலன் வாசகனுக்கு நெருக்கமானவராகிறார். அவரது உலகத்தில் விலகி நின்று பார்க்கும் இயல்புக்கு இடமில்லை. எனவே வாசகன் நகுலனிடமும் தன்னையே பார்க்கிறான். இந்த நோக்கில்தான் வாசகனுக்கு நகுலன் ஈர்ப்புக்குரியவராகிறார். இந்த ஈர்ப்பை நகுலன் தன் வாழ்வின் நடவடிக்கைகளிலிருந்து எடுக்கிறார். அதையே வாழ்வின் இயல்பாகவும் மாற்றுகிறார். புற உலகம் நகுலனைப் பொறுத்தவரை பொருட்படுத்தப்படக் கூடியதல்ல; அதன் மதிப்பீடுகளுக்கு அவரிடம் கிஞ்சித்தும் மதிப்பில்லை. முன்முடிவுகள் அவருக்கு உவப்பில்லை. எனவே அவரது தனிவாழ்க்கை அந்நியமான ஒன்றாகவே இருந்தது. தனக்கு நேர்ந்த ஏமாற்றங்கள்,தோல்விகள்,என்றும் அவரைத் தொடர்ந்திருந்த மனிதர்கள் பற்றிய பயம் இவற்றின் மொத்தம் அவரது தனி வாழ்க்கை. இவற்றை எதிர்த்து தன்னுடைய வாழ்க்கைக்கு ஓர் அராஜகச் சாயலை வரித்துக்கொண்டிருந்தார். அதுதான் எழுத்தைத் தீவிரமானதாகக் கருதுபவர்கள் அவரை தமது ஆதர்சமாகக் கருதக் காரணமாக இருக்கலாம். வாழ்க்கை சமரசங்களின் தொடரல்ல என்று நம்புகிறவர்களுக்கு நகுலனின் வாழ்க்கை முன் உதாரணமாகத் தென்படுகிறது. அவரைச் சுற்றி ஒரு சாகசப் படிமம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படிமம்தான் நகுலனின் இலக்கிய ஆளுமையாகவும் மாறியிருக்கிறது. நகுலனை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் இந்தப் படிமத்தையட்டியே அவரை வாசிக்கிறான். பொருள் கொள்ளுகிறான். நகுலனின் படைப்புகள் இரண்டு கோணங்களில் பொருள் கொள்ளுகின்றன. ஒன்று அவரது வாழ்க்கை உருவாக்கியிருக்கும் படிமம் சார்ந்தது. இரண்டு அவரைப் பற்றி இலக்கியச் சூழலில் உருவாகியுள்ள கருத்துநிலை சார்ந்தது. பிற எழுத்தாளர்கள் தமது படைப்பால் இந்தக் கருத்து நிலையை எட்ட முயலும்போது நகுலன் தனது வாழ்க்கையால் இதை அடைந்திருக்கிறார் என்று கருதலாம். அவரை நேரில் சந்தித்துப் பேசக் கிடைத்த குறைவான சந்திப்புகள் ஒன்றில் இந்த அபிப்பிராயத்தை முன்வைத்திருக்கிறேன்.’ எனக்கு யாருமில்லை, நான் கூட’ என்பது அவருடைய ஒரு கவிதை. இதை நீங்கள் எழுதாமல் நான் எழுதியிருந்தால் கவிதையாகக் கருதப்படுமா? என்று கேட்டேன்.இல்லை. நகுலனின் மொழி,நகுலனின் படைப்பு இயல்பு என்று ஒன்றிருக்கிறதே. அதுதான் இதைக் கவிதையாக்குகிறது என்பது அவருடைய பதில். நகுலன் என்ற கவிஞரை ஒதுக்கிவிட்டு அவருடைய ‘மழை மரம் காற்று’ கவிதையைப் படித்தால் அது கவிதையாக அனுபவப்படுவது சிரமம். அதில் கவித்துவமானது என்று மேற்கோள் காட்டக் கூடிய வரிகள் பெரும்பாலும் இல்லை.ஆனால் மொத்த வரிகளும் இணைந்து ஒரு உணர்வுநிலையை முன்வைக்கும். அந்த நிலையை உருவாக்குவதில் நகுலனின் படைப்பு முறைக்கும், அது இயங்கும் சூழலுக்கும் பங்கிருக்கிறது. கவிதைகள் மட்டுமல்ல. அவரது படைப்புகள் அனைத்தும் இந்தத் தன்மை கொண்டவைதாம். எழுத்தின் இந்தத் தன்மையைப் பின்வருமாறு பகுக்கலாம். நகுலனின் எழுத்துக்கு தன்னிச்சையான இருப்பு இல்லை என்ற குறையாக; அல்லது எழுத்தாளனும் வாசகனும் நெருங்கும் ஒருமை என்ற மேனமையாக.இவை இரண்டுக்கும் நகுலனின் படைப்பில் வாய்ப்பிருக்கிறது. இலக்கிய வாசகர்கள் நகுலன்பால் ஈர்க்கப்பட இன்னொரு அம்சமும் காரணம். அது அவரது சுதந்திரமான படைப்பாக்கம். எழுதி வந்த அரை நூற்றாண்டுக் காலமும் தன்னை ஒரு சுதந்திரமான படைப்பாளியாகவே நிலை நிறுத்திக்கொண்டிருந்திருக்கிறார். தமிழில் ஆர்வம் கொண்டு முறையாகப் படித்தவர்.பின்னர் ஆங்கில இலக்கியத்தைப் பயின்று புலமை பெற்றவர். இவ்விரு மொழிகளின் இலக்கியங்களிலிருந்து பெற்ற வாசிப்பு அவரது படைப்பை செழுமைப்படுத்தியுள்ளது. திருமூலரிலிருந்து ஒரு வரி, எமிலி டிக்கின்சனின் ஒருவரி. போதும் நகுலனின் படைப்பைத் தூண்டிவிட. அதை நேர்மையாக வெளிப்படுத்தும் அவரது சிரத்தை அந்த எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கிறது. இத்தனை பாதிப்புகளையும் செரித்துகொண்டு அவரது படைப்புகள் தொடர்ந்து சுதந்திரமானவையாக இருக்க முயல்கின்றன என்பதை நகுலனின் படைப்பாக்க வெற்றியாகச் சொல்லலாம். நகுலனை ஓர் இலக்கிய ஆர்வலனாக நான் எப்படி அணுகுகிறேன் என்பதன் வரைபடம் இது. அவருடைய அராஜகமான வாழ்க்கை முறையும் (Anarchic life) எந்தக் கோட்பாடுகளுடனும் உறவு கொள்ளாத சுதந்திரமான படைப்பாக்கமும் (Avant garde) என்னையும் ஈர்க்கிறது. அது ஒரு வசீகரமான நிழல். அதைப் பின் தொடர்வது சற்றுக் கடினம். எனக்கு மட்டுமல்ல; நகுலனை வழிபடுகிறவர்களுக்கும். ஏனெனில், நகுலன் கவிதையில் சொல்வது போல, ஓவ்வொருவருக்கும் ‘நான் சரி,நான் மாத்திரம் சரியே சரி’. றீ

‘‘ஒரு கட்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் / ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ் / ஒரு புட்டி பிராந்தி / வத்திப்பெட்டி / சிகரெட் / சாம்பல்தட்டு பேசுவதற்கு நீ நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு.’’

நகுலன்

சென்ற ஞாயிறு (13.05.2007), ஏகதேசம் இந்த குறிப்பு எழுதும் இந்நேரம் இன்றும் ஞாயிறுதான். தேதி 20, ஒரு வாரம் கடந்து விட்டது, குருவாயூரிலிருந்து நான் வீடு திரும்பியதும் கிடைத்த செய்தி நகுலனை அவர் வீட்டுப் பக்கம் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருப்பதாக. சென்ற மாதம், ஏப்ரல் 27ல் டில்லி நண்பர்கள் ஏ.ஆர். ராஜாமணி, ராமலிங்கம் கூட அவரைப் பார்க்க வீட்டுக்குச் சென்றிருந்தபோது கட்டிலில் படுத்திருந்தார். பக்கத்தில் பங்களூரிலிருந்து வந்திருந்த அவர் தம்பியும், தம்பி மனைவியும் இருந்தார்கள். சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அவர் முகத்திலும் பேச்சிலும் சோர்வும் களைப்பும் முன்பைவிட அதிகமாக இருந்ததைக் கவனித்தேன். இரண்டொரு நாட்களில் அவர் தம்பியும், மனைவியும் பங்களூர் சென்று விட்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் மறுபடியும் அவர்கள் திரும்ப வந்து நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருப்பதாக தெரிய வந்தது. எப்படியோ, ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அவர் அறைக்கு வந்தபோது, படுக்கையில், ஒருக்களித்து படுத்திருக்கிறார். அந்த முகத்தைப் பார்த்ததும், மனதில் வந்து சூழும் பல்வேறு நினைவுகள். வீட்டிலிருக்கும்போதும் நீங்க வந்துட்டீங்களான்னு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்... அவர் தம்பி மனைவிதான் சொன்னாள். பக்கத்தில் அவர் தம்பி மணி, நகுலனை இந்நாள் வரை கவனித்து பணிவிடை செய்து கொண்டிருந்த ‘புறுந்தை’ என்று அழைக்கும் கோமதி அம்மாள். சற்று சென்று அவர் கண் விழித்ததும், கொஞ்சம் கூட அவர் பக்கம் நெருங்கி, சார் என்னைத் தெரியுதா? என்று கேட்கிறேன். ஒரு கணம் உற்றுப் பார்க்கிறார். புரிந்தது என்பதற்கு அடையாளமாக தலையாட்டுகிறார்.

தலை சற்று உயரமாக வைப்பதற்கான பலகையுடன் வந்த ஆஸ்பத்திரி சிப்பந்தி இருவர் _ ஒரு நர்ஸ், இன்னொரு இளைஞர், அதைச் செய்யும் போது, உதவிக்காக நாங்கள் அவரைப் பிடித்து சற்று மேலே நீக்குவதற்கிடையில் ஓவென்று கத்தினார். இங்கே வரும் முந்தியே சொல்லியிருக்கிறார் மூக்கில் குழாயன்றும் நுழைக்கக் கூடாது என்றெல்லாம். நல்லவேளை, அதைச் செய்ய வேண்டிவரவில்லை. க்ளூக்கோஸ் நரம்பு வழி கொடுத்திருக்கிறார்கள். பிறகு யூரின் போக இந்த டியூப் போட்டிருக்கிறார்கள். சற்று நேரம் கூட கண்ணயரும் அவரையே பார்த்துக் கொண்டு அங்கே உட்கார்ந்திருந்தேன். இதற்கு முன், இரண்டொரு தடவை அவரை இன்பேஷன்டாக மருத்துவமனையில் வந்து பார்த்துச் சென்ற நினைவுப் பொறிகள்.

பல வருடங்களுக்கு முன் மூத்திரப்பை ஆபரேஷன் பண்ணி, நகர் மத்தியிலிருந்த ஒரு பிரபல ஐந்து நட்சத்திர தனியார் ஆஸ்பத்திரியில் ...

பல ஆண்டுகளுக்கு முன் (1965), நகரின் புறப் பகுதியில் அமைதியான இடத்தில் அமைந்திருந்த ராமகிருஷ்ண ஆஸ்பத்திரியில் கடுமையான வயிற்று வலிக்காக அட்மிட்டாகி அவர் இருந்த சில நாட்கள்..

அவரது ‘ரோகிகள்’ நாவல் அந்த அனுபவத்திலிருந்து விளைந்ததுதான். (1966_ல் நான்கு நாட்களில் எழுதப்பட்டது)

ஆனால்,

இப்போதைய இந்தக் கிடப்பு

இவர் ஸ்டூடண்ட்தான் டாக்டர். அவர் சொன்னார் : வயது எண்பத்து அஞ்சாகி விட்டதல்லவா, ஒன்றும் சொல்ல முடியாது. அப்படீன்னு!

அவர் தம்பி சொன்னார் :

உள் மனதில் பலவிதமான அசுபமான நினைவுகள்

ஒரு வேளை.

ஒரு வேளை

இவரை ‘இவராக’ நான் ஊனக் கண்களால் பார்ப்பது இதுதான் கடைசியாக இருக்குமோ...

கடவுளே.. அப்படி இல்லாமல் இருக்கட்டும். மேலும் அங்கே இருக்க இயலாமல், விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் வீடு திரும்புகையிலும் முணுக் முணுக்கென்று அந்த பயம்

ஒரு வேளை, இதனால்தானோ என்னவோ, குருவாயூரிலிருந்து வீடு திரும்பியதும், போக வர இருநாட்கள் இரவு ரயில் பயணக் களைப்பு, உடல் உபாதைகளை மீறி, ‘போ போய் பார்த்து விடு’ என்று உள்ளிருந்து ஒரு குரல் என்னை விரட்டியடித்து. பஸ்ஸில் ஏற வைத்து இதுநாள்வரை தெரிந்திராத இந்த ஆஸ்பத்திரிக்கு இழுத்து வந்ததோ? இரண்டு மூன்று நாட்கள் ஒரு வித உள்ள, உடல் உபாதைகளுடன் மல்லிட்டவாறு கழித்தேன். வியாழக்கிழமை, 17_ம் தேதி மாலை போனில் மணியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘சார் கொஞ்சம் சீரியஸ் தான். நேற்று லூஸ் மோஷன்_பேதி போனவாறு இருந்தது. இப்போ ரொம்ப சோர்ந்து போனார். வேண்டியவங்களுக்குத் தெரிவித்து விட டாக்டர் சொல்லிவிட்டார்.

டில்லியிலிருக்கும் எங்க சிஸ்டர் கிட்டேயும் ஸ்டேட்ஸிலிருக்கும் என் மகன் பிரசாத்திடமும் தெரிவித்து விட்டோம் என்று சொன்னார். நெஞ்சில் ஒரு பதற்றம். இப்போதெல்லாம், எந்த அதிர்வையும் தாங்க முடியாத இதயம். நெடுநேரம் உள்ளுக்குள் தடுமாற்றம்.

உடனையே போய்ப் பார்ப்பதா? வேண்டாமா? ஞாயிறன்று பார்த்த காட்சி அப்படியே நெஞ்சில் இருக்கட்டும். இந்த ராத்திரிப்பொழுதில் அவ்வளவு தூரம் படபடத்து ஓடிச் சென்று என்ன பார்ப்பது.

உள்ளூரிலேயே இருந்த அவருக்கு நெருக்கமான ஓரிருவரைத் தவிர வேறு யாரிடமும் போன் பண்ணிச் சொல்லும் வலு கூட என்னிடம் அப்போது இருக்கவில்லை. கடைசியில் வெள்ளி 18.05.07 அதிகாலையில் மணியிடமிருந்து செய்தி

நேற்று இரவு 11.30 மணி சுமாருக்கு அண்ணா காலமாகிவிட்டார். பிரசாத் அமெரிக்காவிலிருந்து கிளம்பிவிட்டான், டில்லியிலிருந்து சிஸ்டரும் ப்ளைனில் வருகிறாள். பாடியை மெடிக்கல் காலேஜ் மார்ச்சுவரியில் வைத்திருக்கிறோம். நாளைக் காலை 9 மணிக்கு வீட்டுக்குக் கொண்டு வருவோம். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழிலக்கியத்தில் நிறைந்து நின்று செயல்பட்டு அமரரான நகுலனுக்கு நேற்று 19.05.07 சனிக்கிழமை காலையில் இறுதி மரியாதை செய்ய வந்தவர்களில், அவர் உறவினர்கள், மாணவர்கள், அண்டைவாசிகள், நண்பர்கள் போக இலக்கியவாதிகள் என்று கைவிரல்களை எல்லாம் மடக்கி எண்ணும் அளவுக்கில்லை

பாரதி, இதே திருவனந்தபுரத்தில் இறுதி நாட்களைக் கழித்து காலமான புதுமைப்பித்தன்... தமிழைச் சேவித்த இவர்களுக்கெல்லாம் நடந்த அதே இறுதி மரியாதைதான்..

தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அதற்கொரு குணமுண்டு.

«««

என் இலக்கியவாழ்வின் ஆரம்ப திசையிலிருந்து ஆங்கிலம் கற்பித்த ஆசான்களாக, நெருக்கமான நண்பர்களாக என்னை வழிநடத்திய இருவர் நகுலனும், ஐயப்பப் பணிக்கரும். பணிக்கர் காலமாகி ஒரு ஆண்டு திகையும் முன் (ஆகஸ்ட் 23, 2006) அவரைப் பற்றி எழுதியதைப்போல், நகுலனைப் பற்றியும் இப்படியரு குறிப்பு எழுதவேண்டிவரும் என்று நான் கனவில் கூட எண்ணவில்லை.

நகுலனைப் பொறுத்தவரையில், நான் 1953ல் பள்ளி இறுதி வகுப்பிலிருந்து இடைநிலை வகுப்புக்காக (இன்டர்மீடியட்) கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து ஆரம்பமான பழக்கம், நெருக்கம். இந்த 55 ஆண்டுகால அற்றுப்போகாத நெருக்கத்தின் நினைவுகளையெல்லாம் இந்த நினைவஞ்சலியில் வடித்தெடுக்கும் மானசீகமான தயார் நிலைமையில் நான் தற்போது இல்லை..

கதை, கவிதை, நாவல், கட்டுரை என்று தொட்டதையெல்லாம் தனக்கே உரித்த தனிபாணியில் துலங்க வைத்தவாறு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் நிறைந்து நின்றவர் நகுலன் (1922_2007) ‘நிழல்களில்’ (1965) துவங்கி, ரோகிகள் (1966) நினைவுப்பாதை (1972) நாய்கள் (1974), நவீனன் டயரி (1978) இவர்கள் (1983), சில அத்தியாயங்கள் (1983) வாக்குமூலம் (1992) என்று நாவல்கள், மூன்று (1979), ஐந்து (1981), கோட் ஸ்டான்ட் (1981), இரு நீண்ட கவிதைகள் (1991) என்று கவிதைகள், ஆங்கிலத்தில் words to the listening air (1968), poems by nakulan (1981), a tamil writers journal vol 1 (1984), vol II (1989). selections from bharathi that little sparrow (1982), non being (1986), words for the wind noval (1983) முதலிய படைப்புக்கள் வழி தொடர்ந்த நகுலனின் இலக்கியப் பயணத்தின் பாதையும் பார்வையும் முற்றிலும் நவீனமானது, தன்னிகரற்றது.

மொழிபெயர்ப்பிலும் அவருடைய பங்களிப்பு அலாதியானது, குறிப்பாக ஆங்கில, மலையாள இலக்கியப் படைப்புக்களை தமிழில் கொணர்ந்து பரஸ்பர பரிவர்த்தனைக்கும், புரிந்து கொள்ளலுக்கும் அவர் அளித்த பங்கும் கணிசமானது. பிரபல மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கரின் நெடுங்கவிதை ‘குரு«க்ஷத்திரம்’ மூலமொழி மலையாளத்தில் வெளிவந்த அறுபதுகளிலேயே தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்ததுடன் நின்று விடுவதல்ல இது. நகுலனின் படைப்புக்களில் குன்றாத உயிர்ப்புடன் உலவும் எஸ்.நாயர், சுசீலா போன்ற கதை மாந்தர்களாலும் செழுமை பெறுகிறது, இந்த பரிவர்த்தனையும் பரஸ்பர புரிந்துகொள்ளலும்.

««««

நகுலனின் எழுத்தாற்றலைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு தனி அம்சம் அவர் படைப்புக்களின் ஆழம் அவற்றின் வாசிக்கும் தன்மைக்கு (readability்) குந்தகம் விளைவிப்பதில்லை என்பதுதான். எந்தத் தடையோ சலிப்போ இன்றி வாசித்துச் செல்லலாம். ஆனால் முதல் வாசிப்பில் புலனாகாத உட்பொருட்களுக்கு மீண்டும் மீண்டும் நம்மை வாசிக்கத் தூண்டுவதும் அவற்றின் சிறப்பம்சம் என்றே தோன்றுகிறது. அவருடைய படைப்பின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி எத்தனை சொன்னாலும் முழுமையை எட்டுமென்று தோன்றவில்லை. ஆனால் அதற்கெல்லாம் மேலே புதியவர்களை, புதிய எழுத்துக்களை அவர் திறந்த மனதுடன் ஆதரித்து, அங்கீகரித்து வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்ததை எடுத்துச் சொல்ல வேண்டும்.

அறுபதுகள், எழுபதுகளில் நகுலனும் ஷண்முக சுப்பய்யாவும் அவரவர் சைக்கிள்களை உருட்டிக்கொண்டு வர, அவர்கள் கூட நான் நடந்தவாறு தீராத இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டு திருவனந்தபுரம் நகர வீதிகளில், சந்து பொந்துகளில் உலா வந்திருக்கிறோம். ஷண்முக சுப்பய்யா மிகவும் சங்கோஜ சுபாவமுடையவர்.. ஆனால் நிறைய வாசிப்பவர். சூரநாடு குஞ்ஞன் பிள்ளை என்ற பிரபல மலையாள அறிஞர் தலைமை வகித்த லெக்ஸிக்கன் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அப்போதைக்கப்போது எழுதிக்கொண்டு வந்து காட்டும் சிறு கவிதைகளை வாசித்து அதன் கலைநயத்தில் எந்தத் தணிக்கையுமின்றி வியந்து போற்றுவார் நகுலன். நகுலனின் இந்தத் தூண்டுகோல் ஒரு தொகுப்புக்கான கவிதைகளைப் படைக்க சுப்பய்யாவுக்கு மிகவும் பயன்பட்டது.

இது சுப்பய்யா விஷயத்தில் மட்டுமல்ல.. என் ‘தலைமுறைகள்’ நாவலில் இருந்து ‘கூண்டிவள் பட்சிகள்’ நாவல் வரை அவருடைய இந்தப் படிப்பும் பாராட்டும் சலிப்பின்றித் தொடர்ந்திருக்கின்றன. இங்கே திருவனந்தபுரத்திலேயே இருக்கும் நண்பர் ஆ.மாதவன், இருந்த காசியபன், தவிர, தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனையெத்தனையோ, எழுத்தாளர்கள் நேரடியாக அனுபவித்து அறிந்த உண்மை இது.

பல ஆண்டுகளுக்கு முன், நகுலனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை என்னிடமிருந்து கேட்டு வாங்கி அவர் புகைப்படத்துடன் ‘குமுதம்’ வெளியிட்டிருந்தது. அதற்கு இடப்பட்டிருந்த தலைப்பு ‘எழுத்தை மணந்த எழுத்தாளர்’ என்று ஒரு ஞாபகம். கல்யாணம், குடும்பம் இவைபற்றி அவரிடம் பேச்சு எடுக்கும் போது, ‘எனக்கு எப்போதும் வாசித்துக் கொண்டிருக்க வேணும், எழுதிக் கொண்டிருக்க வேணும். அதுக்கு பெண்டாட்டி, குடும்பம் எல்லாம் தடைதானே...’ அவர் சொல்வது, ஒரு கோணத்தில், எழுத்தின் மீதுள்ள அவருடைய அபாரமான நெருக்கத்தைப் புலப்படுத்தும். ஆனால், கடைசிக் காலகட்டத்தில் எழுதுவதை அவர் அடியோடு நிறுத்தி விட்டார் என்பதுதான் பரிதாபம். அடிக்கடி அவரைச் சந்திக்கும் போதெல்லாம், ‘நீங்கள் எழுதவேண்டாம்; சொல்லுங்கள், நான் எழுதுகிறேன்..’ என கட்டாயப்படுத்தி அவரை மீண்டும் ஈடுபடுத்த முயன்றும், அதையும் தொடர அவரால் இயலவில்லை.

வயது ஏற ஏற, ஷண்முக சுப்பய்யாவுடன் இருக்கையில் யார் முந்தியோ’ என்று சுப்பய்யாவோ, நானோ சொன்னால் கூட அவர் பேச்சை திருப்பி விடுவார். ‘சாவிலும் சுகமுண்டு’ என்ற ரீதியில் கவிதை, கதை, நாவல்களில் கையாண்டிருந்தாலும் அதை எதிர்கொள்ளும் ‘தீரம்’ ஒன்றும் அவர் வெளிக்காட்டியதில்லை. ஷண்முக சுப்பய்யா காலமானபின், பேசிக்கொண்டிருக்கும்போது, ‘அவர் போயிட்டார்’ என்று குறிப்பிடுவதோடு சரி, சில நேரங்களில் அவர் கவிதைகளில் சில அப்படியே சொல்லும் நினைவு சக்தியும் அவரிடம் இருந்தது. சென்ற ஆண்டு ஐயப்பப் பணிக்கரின் மறைவும் அவரை பாதித்தது. அடிக்கடி, பேச்சுவாக்கில் ஐயப்பப்பணிக்கரைப் பற்றி திடீரென்று ஏதாவது கேட்பார். கடந்த சில ஆண்டுகளாக மறதி வியாதி அவரை அலட்டியதேயானாலும், முன்பு நடந்த பல நிகழ்ச்சிகள், மனிதர்கள் அவர் நினைவுப் பாதையில் அழியாமல் வந்து போய்க் கொண்டிருப்பதை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தெரிய வரும். நானும், சுப்பய்யாவும் அவரிடம் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், அவர் ஒரு குழந்தையைப் போல் அடியோடு மறந்துவிடுவார் என்று சொல்ல முடியாது, அடிக்கடி சீண்டி வேடிக்கை பார்ப்பார்... ஆனால் குடும்பத்தில் நெருக்கமான ஒருவராக உரிமையுடன் அவர் காட்டும் பாசமும், நலம் நாட்டமும் அவரை வெறுக்க நம்மை அனுமதிக்காது. அதுதான் அவர் தனித்தன்மை என்று தோன்றுகிறது.

நகுலன் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் இல்லைதான். ஆனால் வாசிக்கும் யாரையும், அவருடைய வித்தியாசமான தன்மையை இனம் காட்டும் ஒரு எளிமையும் இனிமையும் ஆழமான அவர் எழுத்தில் இருந்தன. யாப்புத் தெரியாததால் யாப்பு மீறிய கவிதை எழுதுகிறார்கள் என்ற பழியை பரிகசிப்பவை நகுலன் கவிதைகள். இந்நோக்கில் அவருக்கு சமதையாகச் சொல்ல முடியும் இன்னொரு பெயர் மா. இளையபெருமாள். இருவரும் யாப்பு உட்பட்ட தமிழ் இலக்கணத்தை நன்கு கற்றுத் தேறியவர்கள், கவிதையில் பிரயோகித்து வெற்றி அடைந்தவர்கள். பெயர்கள், முகங்கள் மறந்து போகும் வியாதிக்கு ஆட்பட்டு, வீட்டுக்குள் ஒரு கனவுலகில் சில ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த நகுலன் ஆர்.ஆர். சீனிவாசன் தேர்வு செய்த, புகைப்படங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘‘நகுலனின் கண்ணாடியாகும் கண்கள்’’ நூலை (காவ்யா வெளியீடு, சென்னை_டிசம்பர் 2006) புரட்டி அவர் படங்களுடன் வெளியாகியுள்ள சிறுகவிதைகளை ஒருவித சூன்யமான முகபாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது (நகுலன் உயிர் வாழும் போதே, இங்கு வந்து மிகவும் சிரமப்பட்டு மிக அற்புதமாக கறுப்பு வெள்ளை புகைப்படங்களைத் தயாரித்து, சென்னையில் புகைப்பட கண்காட்சியும், அந்தப் படங்களைப் பொருத்தமான கவிதைகளுடன் நூலாகவும் தொகுத்து வெளியிட்ட சீனிவாசனையும் காவ்யா ஷண்முக சுந்தரத்தையும் எத்தனைக்கு பாராட்டினாலும் தகும்)...

நூலின் 44வது பக்கம் (புகைப்படங்கள் நிரம்பி நிற்கும் இந்நூலில் பக்க எண் இல்லை) வந்ததும்...

காலம் கடந்தாலும் அழியாது படைப்புக்களைச் செய்த அவர் கரத்தின் படத்தின் கீழ் ஒரு சிறுகவிதை

அணைக்க ஒரு / அன்பில்லா மனைவி/வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்/ வசிக்க சற்றும் / வசதியில்லா வீடு / உண்ண என்றும் / ருசியில்லா உணவு/பிழைக்க ஒரு/பிடிப்பில்லா தொழில்/எல்லாமாகியும்/ஏனோ உலகம் கசக்கவில்லை.’’

‘‘இந்தக் கவிதை யாருடையது? நீங்க எழுதியது தானா?’’ நான் கேட்கிறேன். மீண்டும் மீண்டும் கவிதையையும் என்னையும் பார்க்கிறார்..

முகத்தில் கேள்விக்குறி...

அது அவர் எழுதியதல்ல என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல்..

‘‘இது ஷண்முக சுப்பய்யா எழுதிய கவிதை...’’ நான் விளக்கினேன்.

இதை இங்கே நான் எடுத்துச் சொல்லக் காரணம், ‘‘குழந்தைகளின் கவிஞர், குழந்தைகளுக்குப் பிடிக்கும்’’ என்று கவிதையிலிருக்கும் எளிமை காரணமாய் கேலிக்குள்ளான ஷண்முக சுப்பய்யாவின் எளிமையான ஆனால் ஆழமும் அர்த்த புஷ்டியுமுள்ள ஒரு கவிதை, யாப்பு சரிவரத் தெரிந்தும் அதை பேதமுடன் உடைத்து சாதனை படைத்த நகுலன் கவிதைககளின் கூட வைத்தபோது, உண்மை தெரியாதவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத ஒருவித தர ஒற்றுமை இனிமையாய், எளிமையாய் அதில் ஒளிர்கிறது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். 1968_ல் நகுலன் தொகுத்து வெளியிட்ட ‘குரு«க்ஷத்திரம்’ இலக்கியத் தொகுப்பில் பின்னட்டையில் அவர் பொறித்திருந்த வாசகங்களை எடுத்தாண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

‘‘இலக்கியத்தில், வாழ்க்கையில் போல், ஒவ்வொரு புதுக்குரலும் ஒரு எதிர்க் குரலாகவே தொடக்கம் எய்தி. இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கிறது. ஒரு புதுக்குரல் வெறும் ஒரு எதிரொலியாக மாறுகிற பொழுது அதன் அடிப்படை ஆற்றல் வீழ்ச்சி ஆரம்பமாகிறது. பாரதி கூறிய மாதிரி, ‘சிறுமை கண்டு சீறு, ‘ரௌத்திரம் பழகு’, ‘ரஸனையில் தேர்ச்சி கொள்’, ‘நூலினை பகுத்துணர்’ என்பவை இலக்கிய சிருஷ்டியிலும் தாரக மந்திரங்களாகக் கருதப்படலாம்.’’

நன்றி - தீராநதி

Read More

Share Tweet Pin It +1

5 Comments

Popular Posts