In வகைப்படுத்தப்படாதவை

[no title]

கொஞ்ச நாளுக்கு விடுமுறையில் போகிறேன். இந்த முறை கொஞ்சம் போல் பெரிய அளவிலேயே(இடைவெளி) இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இந்த வருஷக் கடைசி வரைக்குமாவது அது நீள் வேண்டுமென்று ஏகவல்லோன் எல்லோர்க்கும் பொதுவான இறைவனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

பூனைக்குட்டிக்கும் அலைதலுக்கும்(பயணங்கள் எழுதுவதற்கு) விடுமுறையே.

இந்தத் தொடர்புகளையும் கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்பதால். mohandoss.i@gmail.com ம் பதிவுலகச் சொந்தக்களுக்கு பூட்டி வைக்கப்படுகிறது ;).\\

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற கான்செப்டில் முழு நம்பிக்கை உள்ளவன் என்பதால் தொடரப்போகும் தமிழிணைய வலைத்தளங்களுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி எஸ்கேப் ஆகிறேன்.

PS: வழமை போல் பின்னூட்டங்கள் வெளியிடப்படாது இந்தப் பதிவிற்கு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In

மாமல்லபுரம் பயணம்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In பதிவர் சந்திப்பு

பதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள் - 1

வெளியில் சென்று வந்ததும் என்று நினைக்கிறேன் உள்ளே மாலன் வலை நன்னடத்தை தலைப்பில் பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன் ஒரு வார்த்தை, முன்னால் நடந்த ஒரு விவாதத்தில் இராம.கி அய்யா ஈழத்தமிழர் இல்லையென்றால் தமிழ் இணைய உலகில் இத்தனை தூரம் வளர்ந்திருக்குமா தெரியாது என்று சொல்லியிருந்தார். கான்டெக்ஸ்ட் - மா.சிவக்குமார் தான் வெளிநாட்டில் இருக்கும் பொழுது தான் தமிழ் பற்றிய உணர்வு வந்ததாகச் சொல்ல இன்னும் சிலரும் அந்தக் கருத்தில் பதில் சொல்ல, இராம.கி அய்யா ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையில் உறவினர்கள் பலரும் பல இடங்களில் இருக்க வேண்டியிருக்கும் நிலையைச் சொல்லி அதன் காரணமாக அவர்களின் தமிழ் மீதான ஈடுபாடு அதிகாகயிருக்கும் என்று சொன்னார்.

முன்பே மாலன் அவர்கள் தன் பதிவுகளில் பேசியிருந்த விஷயங்களான, தனிப்பதிவுகளில் இருக்கும் பொழுது கூட ஒருவர் என்ன விஷயம் பேசுகிறார்(கருத்து சுதந்திரத்தை) என்பது பெரிய விஷயமாயிருக்காது என்றும் அவரே ஒரு திரட்டியில் இணைந்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் பொழுது கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார் என்று சொன்னார். எவர் ஒருவருக்கு பொறுப்புணர்ச்சி அதிகமாக இருக்கிறதோ அவருக்கு சுதந்திரமும் அதிகம் இருக்கலாம் என்றும். பொறுப்புணர்ச்சி இல்லாத சுதந்திரம் சரியான ஒன்றாய் இருக்காதென்று சொன்னார். உதாரணமாய் தனியாய் வீட்டில் அலையும் பொழுது நிர்வாணமாக இருக்க நினைக்கும் ஒருவருக்கு தன்னுடைய மனைவி முன்னால் கூட அப்படி நிற்க மனது வராதென்றும் இந்த விதமான உணர்வு எழுத்திலும் இருக்கவேண்டும் என்று சொன்னார்.

நாளிதழ்களில் இருக்கும் பிரச்சனைகளைக் கூறிய மாலன் அதை ஒப்பிட்டு வலைபதிவுகளால் என்ன விதத்தில் நன்மைகள் அதிகம் என்று சொன்னார். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டது வாசகர் கடிதம். பொதுவாகவே எல்லா இடங்களிலும் கட்டற்ற சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் செல்லா அவருடைய இருக்கையில் இருந்தே துடித்துக் கொண்டிருந்தார் கட்டுப்பாடுடைய சுதந்திரத்தை வம்பிழுக்க. அந்தச் சமயத்தில் வளர்மதி இந்தக் கருத்தை(மாலனுடையதை) சரியென்பது போல்(ஆள் பின்நவீனத்துவவாதி - கொஞ்சம் போல் சுத்திச் சுத்தி புல்ஸ்டாப் இல்லாமல் பேசினார் என்னால் ஃபாராகிராப்களைத் தாண்டி கவனம் செலுத்த முடியவில்லை) செல்லா உடனே எழுந்து, "நான் வலை உலகில் எழுதுவதை யாரால் கட்டுப்படுத்த முடியும் உங்களால் முடியுமா?" என்று வளர்மதியைக் கேட்டார். பின்னர் மாலனிடம் "நாம் முன்பே வலைப்பதிவுகளில் பேசிய இந்த விஷயத்தை இங்கேயும் தொடர விரும்பவில்லை" என்றார்(கான்டெக்ஸ்டாக நான் நினைப்பது மாலன் எழுதிய பொழுதே செல்லா - கட்டுப்பாடுடைய திரட்டியைப் பற்றி மாலன் எழுதியது - அதை மறுத்து எழுதியிருந்தார். மாலன் திரும்பவும் மேடையில் கட்டுப்பாடுடைய திரட்டி பற்றி இடையில் கோடிட்டார் அதனால் சொன்னார்) கட்டுப்பாடுடைய சுதந்திரம் சரிவராது என்று சொன்னார்.

இப்படி போய்க் கொண்டிருந்த விவாதம் அப்படியே முற்றுப் பெற்றிருந்தால் சந்தோஷம் ஆனால் பத்ரி கடைசி கேள்வி என்று சொல்லி வளர்மதியிடம் நகர்ந்த பிறகு மாலன், "கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுறோம் அதனால இதையும் சொல்லலாம் தப்பில்லை, பெயரிலி ஒரு பதிவில் இராமைப் பற்றி பேசும் பொழுது அவருடைய மகளைப் பற்றிக் கேள்வி எழுப்பினார்," (அது தப்புன்னோ என்னவோ சொன்னார் எனக்கு நினைவில் இல்லை.)
என்று சொல்லி இராமின் மகளின் படிப்பை கொஞ்சம் டிபண்ட் செய்தார். இதில் தான் கடைசியில் சொன்னது, ஈழத்தமிழர்கள் இலங்கைப் பாஸ்போர்ட்டுடன் இருக்கும் முரணையும் இராமின் மகள் கொலம்பிய யுனிவர்சிட்டியில் படிப்பதையும். அவர் அதைச் சொல்லிவிட்டு சட்டென்று அடுத்த டாபிக்கான வலை உலகில் இருந்து எழுத்தாளர்கள் மாயமான காரணத்தை விளக்கத்தொடங்கினார். இதனால் உடனே இதைப் பற்றிய கேள்வி கேட்கும் வாய்ப்பை இதனால் நான் தவறவிட்டேன் ஏனென்றால் சுஜாதா கூட ராகாகியில் எழுதியது எனக்குத் தெரியும் அதனால். அதுவும் இல்லாமல் பத்ரி மைக் உடன் வளர்மதியிடம் நின்றார்.

திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவே சற்று நேரமானதால் மாலனின் எழுத்தாளர்கள் வெளியேறியதைப் பற்றிய பேச்சு பற்றி கான்டெக்ஸ்டிற்கு அப்பால் கூட சரிவர நினைவில் வரமறுக்கிறது. வளர்மதி இன்னொரு கேள்வியைக் கேட்டு முடிக்க, நான் தொடங்கினேன். முதலில் மைக் இல்லாமலும் பின்னர் மைக்குடனான சுய அறிமுகத்தோடும்

"எப்படி ஜார்ஜ் புஷ் ஒரு விஷயத்தைப் பற்றி பேச முடியாதோ; ஜார்ஜ் புஷ் இன்னொரு நாட்டிடம் சென்று சண்டை போடாதே என்று சொல்வது எப்படி தவறாக இருக்கும் இல்லையா? அது போல் யார் எந்தக் கருத்தைச் சொல்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது அவருடைய பின்புலம் பார்க்கப்படுவது ஒன்றும் பெரிய பிரச்சனை கிடையாது..." என்று சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே மா. சிவக்குமார் அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம் இது இல்லை என்று சொல்லிவிட்டார். நானும் விட்டுவிட்டேன்.

பின்னர் எழுந்த இன்னொரு நபர், மாலன் சொன்ன எழுத்தாளர்கள் விலகியதைச் சொல்லி; நீங்க ஒரு செட் ஆப் மக்களுக்காகத்தான் எழுதுவதாக இருந்தால் பிரச்சனை இல்லை என்றோ இன்னும் சிலவற்றைச் சொன்னார். உடனே மா.சி மாலன் வலைபதிவுலகத்தை விட்டு வெளியேறியதற்கு காரணம் வேறு என்று சொல்லி அவரையும் நிறுத்திவிட்டார். பின்னர் அந்த விவாதம் அங்கோடு முற்றுப்பெற்றது.

பின்னர் லக்கிலுக்கின் - வலைபாதுகாப்பு பற்றிய அறிமுகம் தொடர்ந்தது. நான் வெளியில் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த பிரகாஷிடமும் மா.சியிடமும் இது சரியில்லை ஆளில்லாதப்ப அவரைப் பத்தி பேசக்கூடாது என்று மட்டும் சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தேன். பக்கத்தில் இருந்த என்னுடைய நண்பர்கள்(பெயரைச் சொல்ல விரும்பவில்லை) என்னை மட்டுறுத்தியதைச் சொல்லிக் காட்ட; நான் இங்கே உறுத்திவீர்கள் நாளை பதிவில் எழுதுவேன் என்று சொன்னேன் இரண்டு நாளானாலும் எழுதிவிட்டேன்.

நாகூர் இஸ்மாயில் பின்னர் வலைபாதுகாப்பைத் தொடர்ந்து முடிக்க மதிய உணவிற்காக பட்டறை உணவு இடைவேளை விடப்பட்டது. சாப்பாடு பட்டறை நடத்தியவர்களாலேயே வழங்கப்பட்டது, நான் கேட்க நினைத்து கேட்காமல் போன கேள்வியான கூப்பன் வாங்காதவங்களுக்கெல்லாம் சாப்பாடிற்கு, மா.சி பதில் சொல்லியிருந்தார் சாப்பாடு கூப்பன் இல்லாவிட்டாலும் சாப்பாடு தரப்படும் என்று.

ஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் "ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...

ஏனென்றால் பதிவுலகத்தில் ஒருவருடைய கருத்தை தவறேன்று சொல்லும் பெரும்பான்மையான சமயங்களில் அது தனிநபர்த் தாக்குதல் போல் தோற்றமளித்து அந்த நபர் நமக்கு எதிரியாகும் சூழ்நிலைகள் அதிகம் உண்டு. எனக்கு டிஸ்க்ளெய்ம்பர் போடுவது என்னவோ ரொம்பவே உறுத்தினாலும் வேறுவழியேயில்லை என்பதால்; இங்கே நான் வைத்திருந்த கேள்விகள் முதற்கொண்டு கருத்து சார்ந்தவைதானே தவிர தனிநபர் சார்ந்தவை அல்ல. மா.சிவக்குமாரின் மட்டுறுத்தலை பலசமயம் நானே ரசித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பரிடம் சுட்டிக் காட்டிக் கொண்டும் இருந்தேன் என்பது உண்மை.

அம்மா என் வீட்டில் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஏண்டா உங்களுக்கெல்லாம் பாராட்டுறதுங்குறே தெரியாது வெறும் குற்றம் கண்டுபிடிக்கிறது மட்டும் தான் தெரியுமா என்று, அதென்னமோ டீச்சர் வீட்டுப் பிள்ளையானதாலோ என்னவோ பாராட்டுதல்களை விடவும் குற்றம் கண்டுபிடிப்பது அதிகம் இருக்கும். அதனால் இத்தனை அருமையான ஏற்பாடுகளைச் செய்திருந்த பட்டறை நடத்துபவர்களை பாராட்டாமல் குற்றம் மட்டும் சொல்வது அயோக்கியத்தனம் என்று உள்மனம் சொல்வதால் பாராட்டுகிறேன். அந்தப் பாராட்டுதல்களுக்கு முற்றிலும் தகுதியானவர்களே பட்டறையை நடத்தியவர்கள்.

PS: சொல்லப்போனால் இந்த டிஸ்க்ளெய்ம்பரும் பாராட்டும் கடைசி பதிவில் போட்டிருந்தால் தான் நன்றாகயிருந்திருக்கும். ஆனால் இந்தப் பதிவில் பேசப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு தேவைப்படும் என்றே மனம் சொல்கிறது.

PS1: எழுதியவைகள் என் நினைவில் இருந்து எழுதியவையே தவறிருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

தொடர்வேன்...

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In பதிவர் சந்திப்பு

பதிவர் பட்டறை என் பக்கத்துக் குறிப்புகள்

ஞாயிற்றுக்கிழமை காலை நானும் நண்பரும் பட்டறை நடக்கும் இடத்திற்குள் நுழைந்த பொழுது 9.45 இருக்கும். நண்பர் முன்பே பதிவு செய்யாதவர்கள் வரிசையில் பதிவுசெய்து கொள்ள, நான் பதிவு செய்தவர்கள் வரிசையில் கையெழுத்துப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தேன். முதலிலேயே கண்டுக்கிட்டது உண்மைத் தமிழன், பிரகாஷரு, பின்னாடி மா.சி. அவர் என்னை விரட்டி பாட்ச் அணிந்து கொள்ளுமாரும் சாப்பாடு கூப்பன் வாங்கிக்கொள்ளுமாறு சொன்னார். அப்புறமா பொன்ஸ்; பார்த்த இரண்டு மூணு தடவ "வாங்க தல"ன்னு சொல்ல நான் என் மண்டையைத் தடவிப் பார்த்ததை அவர் கவனிக்காமல் பிஸியா நகர்ந்துட்டார் :(. அப்புறம் பாலராஜன் கீதா.



உள்ளே விக்கி unconference பற்றி பேசிக் கொண்டிருந்தார், மாப்பிள்ளை பெஞ்சில் இரண்டு இடங்கள் காலியாயிருக்க உட்கார்ந்தோம். என்னைப் பற்றிய கவலையில்லை, நண்பருக்கு அதுதான் முதல் முறையாயிருந்திருக்க வேண்டும்(ஹிஹி).

விக்கி அவர்கள் வைத்திருந்த அஜண்டாவை சொல்லிவிட்டு, இதற்கு மேல் தேவைப்பட்டால் அதற்கான முயற்சியையும் செய்வதாகவும். வந்திருந்தவர்கள் பட்டறைக்கு எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகச் சொல்லச் சொல்லவும். சூடுபிடித்தது. இந்தச் சமயத்தில் அரங்கிற்குள் நுழைந்த செந்தழல் ரவி உட்கார, அவரிடம் காஜி போடுவதற்காக பக்கத்தில் உட்கார்ந்தேன். கொஞ்சம் வழமைபோல் பேசிக்கொண்டிருந்தோம் இந்தச் சத்தத்தை எங்கேயே கேட்டதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு திரும்பிய லிவிங்ஸ்மைல் வித்யாவை ரவி அக்கா என்று அழைக்க அவர் கோபமானார்.



பின்னர் ஆசிப் அண்ணாச்சி எழுந்து அவர் "துபாயில் இதே போன்ற பட்டறை நடத்துவற்கான சாத்தியக்கூறுகளை பார்க்க வந்திருப்பதாகச்" சொல்ல அண்ணாச்சியைப் பார்த்த சந்தோஷத்தில் ரவியிடம் இருந்து தெறித்து அவரை நோக்கி நகர்ந்தேன். வணக்கம் சொல்லி ஃபார்மலாகத் தொடங்கினோம் பின்னர் ஆசிப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆசாத் அண்ணனிடம் அறிமுகம் செய்து வைக்க, அவரிடமும் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எல்லாம் பத்ரி தன்னுடைய "தமிழிணைய அறிமுகத்"தைத் தொடங்கினார்.



பின்னால் உட்கார்ந்திருந்த பிரகாஷரிடம் ஏன்யா ரொம்பவும் ஃபார்மலாயிருக்கிற மாதிரியில்லை என்றேன், அவர் நீயே மைக்கில் சொல்லு என்று கழண்டு கொள்ள நான் மைக்கிற்காக காத்திருந்தேன். ஆனால் பத்ரியிடமிருந்த அந்த ஃபார்மலான பேச்சு முதல் சில நிமிடங்களிலேயே கழண்டு கொண்டது. நல்லதொரு தொடக்கத்தை அண்ணாத்தை கொடுத்தார் அரசாங்கம் செய்ய வேண்டியவை இருப்பதாகவும் MLA அளவில் சென்று பேசவேண்டும் என்றும் சொன்னார். மாலன் உடனேயே கணிணிகளை தமிழ்நாட்டில் விற்கும் பொழுதே தமிழ் எழுதப் படிக்கக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அமல்படுத்தலாம் என்று சொன்னார்.(அவர்தான்னு நினைக்கிறேன் :()

விவாதம் சில சமயங்களில் நம்முடைய கணிணிகளில் இருந்தாலுமே பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்; அந்த மக்களை எப்படி சென்று சேர்ப்பது என்பதைப் பற்றியும் நகர்ந்தது. பத்ரி தமிழ் டிக்ஷனரிகளைப் பற்றி(அகரமுதலிகளாமா!) சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இராம.கி அய்யா தமிழிணைய இணையத்தளத்தில் TAMல் ஒன்று இருப்பதாகவும் அது உபயோகப்படும் யுனிக்கோடில் மாற்றினால் என்று சொன்னார். இதற்கு சற்று பின்னால் என்று நினைக்கிறேன் செல்லா "விக்கிஷனரி" பற்றிச் சொல்லி தமிழிணைய பல்கலைக்கழக டிக்ஷனரியா இல்லை விக்கிஷனரியா என்று வரும் பொழுது அவர் விக்கிஷனரியைத் தான் சப்போர்ட் செய்வார் என்று சொன்னார்.



சில காரணங்களால் வேகவேகமாய் கேமராவை வாங்கி சுடத் தொடங்க நினைத்தேன் அதற்கான வேலைகளைச் செய்து எடுக்க நினைத்த பொழுது ஆசிப் கூப்பிட்டு நான் செய்ய இருந்த தவறைச் சுட்டிக் காட்டினார். அதை உணர்ந்து நானும் விட்டுவிட்டேன் ஆசிப்பின் சமூக அக்கறையைப் பற்றிய கேள்விகள் எனக்கு எப்பொழுதுமே கிடையாதென்றாலும் இன்னொரு பக்கம் எழுதி நிரப்பப்பட்டது. பின்னர் அரங்குகளை பேசிக் கொண்டிருந்தவர்களைச் சுடத் தொடங்கினேன்; அங்கிருந்து பாட்டரி காலியாகும் வரை காமெரா கண்சிமிட்டிக் கொண்டேயிருந்தது.

முகுந்த் தன்னுடைய "தமிழிணைய மைல்கற்கள்" தொடங்க ஸ்னாப் மட்டும் எடுத்துவிட்டு வெளியில் வந்தேன். ஆசிப் எல்லாம் வெளியில் வந்த காரணம் தான். அங்கே தான் பாலபாரதியைப் பார்த்தது அவர் ஆசிப்புடன் ஒரு போட்டோ எடுக்கச் சொல்ல எடுத்துக் காண்பித்தேன் ரொம்பவும் நன்றாய் வந்திருந்ததாய்ப் பட்டது. காசியிடம் என்னை இவருதான் அவரு என்று ஒரு மார்கமாக அறிமுகப்படுத்தினார் ஆசிப். ஆனால் காசி நான் அத்தனை கெட்டவன் இல்லை என்று சப்போர்ட் செய்தது ஆறுதலாய் இருந்தது. அப்பத்தான் உள்ள நுழைஞ்சாங்க ஒரு அக்கா, லேட்டா வந்துட்டு சீக்கிரமா எஸ்கேப்பும் ஆய்ட்டாங்க; நான் காரணம் கிடையாதென்று நினைக்கிறேன்.



இங்கத்தான் செல்லா என்னைப் படம் எடுத்து மொபைல் ப்ளாக்கிங் செய்தது :(. தருமி பக்கத்தில் வந்து யோவ் முடிவெட்டினா சொல்லிட்டு வெட்டுங்கய்யா என்று சொன்னார்; அடையாளம் காண்பதில் இருந்த பிரச்சனைக்காகத்தான் சொன்னார் என்றாலும் நான் சொல்லிட்டுத்தான் வெட்டுனேன் இல்லாட்டி வெட்டிட்டு பெரிய பதிவு போட்டேன். டெல்ஃபைன் மேடம் வந்த பேசிக் கொண்டிருந்தார் நான் "மோகன்தாஸ்" என்று அறிமுகப் படுத்துக் கொண்டேன். அவருக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை :(.



ஒரு முறை மேலே சென்று என்ன நடக்குது என்று ஜஸ்ட் பார்த்துவிட்டு கீழிறிங்கேனேன் இறங்கும் வழியில் பிரகாஷ் புகை பிடித்துக் கொண்டிருக்க அதையும் கண்சிமிட்டி சேகரித்துக் கொண்டு உள்ளே வந்து நிற்க பக்கத்தில் நின்ற ஆளை நல்லாத் தெரிஞ்சது மாதிரியிருந்தது. அவரைத் தட்டி நான் மோகன்தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அது ரஜினி ராம்கி பின்னர் அவருடன் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்து அப்படியே வெளியில் வர ரவியும் லக்கியும் வாய்யா புகைப்போட்டுட்டு வரலாம் என்று சொல்ல அவர்களுடன் பீச்சிற்கு வந்தேன்.

குறிப்பு கொஞ்சம் நீளமாய்டுச்சு நாளைக்கு மீதியைப் போடுறன்...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In பதிவர் சந்திப்பு

சென்னை பதிவர் பட்டறை























































Read More

Share Tweet Pin It +1

29 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை

இரண்டு வருஷம் தான் ஆச்சுதா

நான் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்தது ஆகஸ்ட் 2005; ஆக இரண்டு வருஷம் ஆச்சுது. என்ன எழவ சாதிச்சேன்னு என்ற கேள்வி எழும் பொழுது "நான் ஏன் பிறந்தேன்" அப்படிங்கிற கேள்வி எழுற மாதிரி எழுதினேன் அப்படின்னு பெருமையா சொல்லலாம். ;-) நிறைய நட்பைச் சம்பாதித்திருக்கிறேன் அப்படியே விரோதத்தையும் எப்படி நட்பு நாம் கேட்காமலே கிடைக்கிறதோ அதைப் போன்றே விரோதமும்.

இரண்டு மூணு பேர் உங்களாலத்தான் பதிவுலகத்திற்கு வந்தேன் என்று சொல்லும் பொழுது திகிலாயிருக்கிறது. பின்னாடி பதிவுலகம் சரிவரலைன்னதும் அடிக்க வந்திடுவாங்க்யலோன்னு :). மற்றபடிக்கு இரண்டறை வருஷத்துக்கு முன்னாடி எழுதின "ஒரு காதல் கதை" யை அப்பப்ப யாராவது படிச்சிட்டு சூப்பராயிருக்கு - ஆனா அப்படி ஒரு முடிவை வைத்திருக்கக்கூடாதுன்னு சொல்றப்ப மட்டும் அப்படியே காற்றில் பறக்குறது மாதிரியிருக்கும். ஹிஹி.

2005 மற்றும் 2006ல் வெறும் 75 & 76 பதிவுகள் போட்டதாக கணக்கு சொல்லுது; இந்த வருஷம் இப்பவே 150 ஐ தாண்டிடுச்சு. இது இல்லாமல் பூனை வேற; அப்பப்ப, அதை ஏன் தொடங்க வேண்டி வந்ததுன்னு சமீபத்தில் நடந்த ஒரு பெங்களூர் இரகசிய சந்திப்பில் கலந்துகொண்ட ரகசிய பதிவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவ்வளவு சுவாரசியமாக அதை அவர்கள் கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தப் பதிவை தொடங்கியதன் காரணம் போய் இப்ப என்னவோவாக வந்து நிற்கிறது. ஆனால் மாற்றம் என்பது மாறாத்தத்துவம் இல்லையா சல்தா ஹை.

ஒரு விஷயம் தான் மலைப்பாயிருக்கு - நான் இங்க வந்து இரண்டு வருஷம் தான் ஆகுதா??? என்பதுதான் அது.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In கேரளா பயணம்

கடவுளின் தேசம்

சோழர்களின் மேலிருந்த காதலால் என்ன நடந்ததோ தெரியாது, பாண்டியர்களையும் சேரர்களையும் பிடிக்காமல் போனது. ஆமாம் உண்மையில் எனக்கு மதுரையும் கேரளமும் பிடிக்காது சின்னப் பிள்ளையாய் இருக்கும் பொழுது. இதெல்லாம் ஒரு நாளில் மாறியதா என்றால் மாறியது; இன்னும் அந்த நாள்(ட்கள்) நினைவில் இருக்கிறது. எங்கள் நேரு ஸ்டேடியத்தில் தேசிய கோ-கோ விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்ற சமயம்.

கேரளத்தில் இருந்து பெண்கள் அணி வந்திருந்தது, அப்பா PET என்பதாலும் நானும் கோ-கோ விளையாடுவேன்(எங்கக்காகிட்ட மட்டும் இதை சொல்லிடாதீங்க) என்பதாலும் ஸ்டேடியத்திலேயே இருந்தேன். அப்பொழுது பார்த்த மகளிர் கேரள கோ-கோ வீராங்கனைகளைப் பார்த்து கேரளத்தைப் பற்றிய என்னுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டேன்(அப்ப மிஞ்சி மிஞ்சிப் போனால் எட்டாவது படித்துக் கொண்டிருப்பேன்.) மஞ்சக்கலரில் சந்தனப் பொட்டொன்றை புருவங்களுக்கிடையில் வைத்திருந்த பெண்களைப் பார்த்து நானும் சந்தனம் வைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

கொடுமை என்னான்னா எங்கள் வீட்டில் சந்தனக் கட்டை இருக்கும்(சிறிசுங்க - சந்தனக் கட்டையும் கல்லும் இருக்கும் நீங்கள் அரைத்து வைத்துக் கொள்ளலாம். வைச்சீங்கன்னா சந்தன வாசனை ஒரு நாள் முழுக்க உங்கக்கூடவேயிருக்கும்) அம்மா எப்பப்பார்த்தாலும் புலம்பல் தான்; சந்தனம் வச்சாத்தாண்டா நீ அழகாயிருக்க என்று அதைவிடுங்க காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு, ஆனா சந்தனம் வச்சா நானும் அழகாத்தான் இருப்பேன் ;-). ஆனால் வைத்துக் கொண்டதில்லை, படித்த சாமியார்ப் பள்ளியில் சந்தனம் வைக்காமல் இருக்கக்கூடாது சின்ன வயதில் எப்பொழுதும் சந்தனம் இருக்கும் நெற்றியில், என் கை அந்தப்பக்கம் போகாதென்பதால் பெரும்பாலும் அழியாமல் இருக்கும் மாலை நேரம் வரை.(நிறைய பேர் உறுத்தும் என்பதால் கைகொண்டு அழித்துவிடுவார்கள் தெரியாமல்).

ஆனால் ஏதோ ஒரு நாளில் ஆரம்பித்த சோம்பேறித்தனம் சந்தனம் வைக்காமல் ஆக்கியிருந்தது. ஆனால் அந்தப் பெண்களைப் பார்த்ததும் சந்தனம் ஒட்டிக்கொண்டது; அந்த முகங்கள் நினைவில் இல்லாமல் இல்லை, புகைபடிந்த ஓவியமாய் அந்தப் பெண்கள் என் நியூரான்களின் பின்னால் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள்; நிச்சயமாய். பொய்கள் இல்லாத வரிகள் இவை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் எழுதவேண்டும் என்று எப்பொழுதும் நினைத்திருக்கிறேன். ஆனால் பிரச்ச்னை என்னவென்றால் அப்படிஎழுதும் பொழுது உடைந்து போகும் பிம்பங்கள் பெரும்பாலும் திரும்பவும் ஒட்டவைக்க முடியாதவையாகயிருக்கின்றன. செல்ப் சென்ஸாருக்குப் பிறகுதான் வெளியில் வருகிறது என்னுடைய பதிவுகள்.

அப்பா சபரிமலைக்குப் போவார் என்று முன்னமே எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் சாதாரணமான நடை திறப்பிற்கும் விஷூவிற்கும் தொடர்ச்சியாக எட்டு வருஷம் போல் போனதாக நினைவு. ஆனால் என்னை அழைத்துச் செல்லவில்லை எனக்கு உண்மையில் கோபம் ஏற்படுத்தி நிகழ்வுகள் இவை(அப்பல்லாம் நான் ஆத்தீகன் தான் ;-) இது நான் நாத்தீகன் ஆனதற்காக ஒரு காரணம் கிடையாது). ஆனால் அப்பா நான் தீவிரமாக எதையும் செய்யமாட்டேன் என்று நம்பி என்னை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டார். நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் சபரிமலைக்குச் செல்லும் பாதைகள் மிகவும் அருமையாக இருக்கும் என்று.

பின்னர் நான் படித்த கல்லூரியில் ஏகப்பட்ட கேரளப் பெண்கள் படிப்பார்கள். அந்தக் காலத்தில் (நான்குவருடங்கள் முன்பு) கேரளாவில் நிறைய கல்லூரிகள் கிடையாதோ என்னவோ எங்கள் கல்லூரியில் நிறைய மல்லு மக்கள். ஆனால் அவர்கள் செட்டாக வருவார்கள் செட்டாகப் படிப்பார்கள் செட்டாகப் போவார்கள் ;-). சும்மா வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம். இப்படி எனக்கும் கேரளத்திற்குமான தொடர்பு ஒரு விதத்தில் பெண்களைத் தொடர்பு படுத்தியே இருந்தது.

எனக்கு கேரளாவிற்கு டூர் செல்ல வேண்டுமென்ற ஆர்வம், ரொம்பகாலமே உண்டு. ஆனால் நல்ல வாய்ப்பு அமையாமலே இருந்தது. மிகச் சமீபத்தில் அந்த வாய்ப்பு அமைந்தது. ஏற்காடு செல்வதற்கான முயற்சியொன்றை நண்பர்கள் குழாம் செய்துகொண்டிருந்தது தெரியும். மற்றவர்களிடம் கூட நான் இந்த வாரக் கடைசியில் ஏற்காடு போகப்போகிறேன் என்று தான் சொல்லிவைத்திருந்தேன். சனிக்கிழமை காலை 2 மணிக்கு மீட்டிங்க் பாய்ண்ட் சென்றதும் தெரியும், கேரளாவின் வயநாட்டிற்கு(WAYANAD) போகப்போகிறோம் என்று.

நண்பர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். நிறைய தூரம் டூவிலரில் பயணம் செய்யாதே அது இது என்று. உண்மைதான் முதுகுவலி வரப்போவது இந்தப்பயணத்தால் வெகுசீக்கிரம் என்று அவர்கள் சொல்ல வந்ததும் உண்மைதான். ஆனால் இந்த இரண்டு நாள் பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்றாய் அமைந்துவிட்டது.

கேரளத்தை கடவுளின் சொந்த நாடென்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், God's own country. ம்ம்ம் உண்மைதான் அப்படியும் ஒன்றும் கேரளத்தை முழுவதுமாகச் சுற்றிவிடவில்லை என்றாலும். சுற்றிப்பார்த்த வரையிலுமே நிச்சயமாகச் சொல்லலாம் அருமையான ஒரு பிரதேசம் கேரளம். இந்த முறை டூவீலரில்(பில்லியன் ரைடர் தான் - சொல்லிட்டேன்பா) பயணம் செய்ததால் முன்னர் குல்லு-மணாலி போயிருந்த எஃபெக்ட் இருந்தது. இதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.















அப்பார்ட்ச்சர், ஷட்டர் ஸ்பீட் சொல்லிக்கொடுத்த புண்ணியவான்களுக்கு சமர்ப்பணம். இது நண்பரின் கேமிராவில் என்னுடைய கைவண்ணம். நாளை அக்காவின் மொபைலில் எடுத்த என்னுடைய கைவண்ணத்தைப் போடுறேன்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In வகைப்படுத்தப்படாதவை

ஒரு உதவி வேண்டுமே

பொற்கொடி என்னைப் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தார், மிக முக்கியமான அலுவலில் இருந்ததால் சனி, ஞாயிறு இணையத்தளங்களுக்குள் நுழையவில்லை. அந்தப் பதிவு காணாமல் போயிருப்பதால், யாரிடமாவது அந்தப் பதிவின் காப்பி இருக்குமானல் அனுப்பி வைக்கவும்.

Danke இது முன்பாகவே சொல்லிவிடும் நன்றிகள்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In ஓவியம்

இது கணிணி ஓவியப் போட்டிக்கு இல்லை



ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெயிண்டில் கை வைத்தேன். இந்த வேலைக்கு வந்த பிறகு வேலை டென்ஷனைக் குறைக்க எப்போதாவது பெயிண்டில் கைவைத்து விளையாடுவதுண்டு.

இன்னும் நன்றாகச் செய்யமுடியும் என்று நினைப்பதால்; இதைப் போட்டிக்கு அனுப்பவில்லை. ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் அழகான ஒன்றை அனுப்புவேன்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Y tu mamá también

இந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்தே இரண்டு வரி இந்தப் படத்தைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிய படம். ரொம்ப காலமாக எழுதப்போகும் திரைவிமர்சனங்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தது; ஆனால் என்னமோ ஒவ்வொரு முறை எழுத உட்காரும் பொழுதும் ஏதோ ஒரு விஷயம் தடுத்து மீண்டும் மீண்டும் ட்ராஃப்ட் ஆகவே இருந்ததை கொஞ்சம் ஒப்பேற்றி வெளியிடுகிறேன். இன்னொரு விஷயம் படமே அடல்ஸ் ஒன்லி தான் எனும் பொழுது அதைப் பற்றிய விமர்சனமும் அப்படித்தான் இருக்குமென்பதால் வயதுக்கு வந்தவர்களுக்கான பதிவு இது. இதை தலைப்பிலேயே போட்டிருக்கலாம் தான் என்றாலும் அது வாசகர்களை குழப்பிவிடும் வாய்ப்பிருப்பதால் இங்கே அறிவிக்கிறேன். வயசுக்கு வராதவர்கள் அப்படியே எஸ்கேப் ஆகிவிடவும்.



நான் பாபெல்(Babel) பார்த்துவிட்டு, அலெஜாண்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரிட்டுவையும்(Alejandro González Iñárritu), கெய்ல் கார்சியோ பெர்னாலையும்(Gael García Bernal) தேடிக்கொண்டு அலைந்த பொழுது கண்ணில் பட்ட படம் இது. Alfonso Cuarón பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் ஹாரி பாட்டர் வகையறாவின் ஒரு பகுதியைக் கூட இவர்தான் இயக்கியிருந்தார்(Harry Potter and the Prisoner of Azkaban -2004). அவருடைய படம் தான் இந்த Y tu mamá también ஆங்கிலத்தில் "And your mother, too" என்று மொழிபெயர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

படம் இரண்டு இளைஞர்களையும் ஒரு இளம் பெண்ணையும்(In her late 20's ஆமா) சுற்றி சுழல்கிறது. ஜூலியோ(Julio), மற்றும் தெனொச்(Tenoch) இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் இதில் ஜூலியோ நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன், தெனோச் மெக்ஸிகோ அரசியிலில் இருக்கும் பெரும் புள்ளி ஒருவரின் மகன். இருவரும் அவரவர்களின் பெண் தோழிகளை உறவு கொள்வதில் இருந்து தொடங்குகிறது படம்; எதனால் இந்தக் காட்சி முக்கியத்துவம் பெருகிறதென்றால் இவர்கள் இருவரின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது அந்தக் காட்சிகள். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் மையமே ஒரு மாதிரி "உடலுறவு" கொள்வது என்பதைப் பற்றி பேசுவதால் அப்படிப்பட்ட ஒரு தொடக்கம் படத்திற்கு தேவைபடுகிறது.



கதைசொல்லி ஒருவர் கதை சொல்வதாக நகரும் கதையில் ஆரம்பத்திலேயே இருவரின் சமூகநிலை எப்படி அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று இயக்குநர் சொல்லிவிடுகிறார். தெனொச்'சின் காதலியின் வீட்டாருக்கு இவர்கள் இருவதும் காதலிப்பதும் உறவு வைத்திருப்பதும் தெரியும் என்றும் ஆனால் கண்டுகொள்ளாமல் விடுவதாகச் சொல்லப்படுகிறது அதே சமயத்தில் ஜூலியோவின் காதலியின் வீட்டாருக்கு முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் ஒரு மாதிரி காதலியின் அப்பா சந்தேகப்படுவதாகக் காட்டபடுகிறது.

இப்படி தானுண்டு தன் பிகருண்டு என்று அலைந்து கொண்டிருக்கும் நண்பர்கள் இருவரும் மேற்ச்சொன்ன அந்த இளம் பெண்ணை சந்திக்கிறார்கள் ஒரு திருமணத்தில். அவர்களை அந்தப் பெண் கவர்ந்துவிட "சொர்க்கத்தின் வாய்" என்று அழைக்கப்படும் கற்பனையில் மட்டுமே இருக்கும் ஒரு கடற்கரைக்கு தாங்கள் இருவரும் செல்லவிருப்பட்தாகவும் சேர்ந்து கொள்ள விருப்பமா என்று சைக்கிள் கேப்பில் கேட்கிறார்கள். ஆனால் அந்த இளம் பெண் லூயிஸா(Luisa)தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறார்.(லூயிஸா ஏற்கனவே திருமணம் ஆனவர் - ஒருவகையில் தெனொச்'சின் உறவுக்காரரையே மணந்தவர்).





ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறுவிதமாக அமைந்துவிட லூயிஸா, ஜூலியோ மற்றும் தொனோச்'சுடன் சொர்க்கத்தின் வாசலுக்கு வருவதாய்ச் சொல்ல வேண்டிய கட்டாயம்(இங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு - படத்தின் அந்தக் காட்சியில் சொல்லப்படும் பொழுது, லூயிஸாவின் கணவன் ஒரு நாள் தொலைபேசி தான் வெளியூர் சென்ற இடத்தில் இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள நேரிட்டதை குடிபோதையில் இவளிடம் புலம்புவதால் லூயிஸா இளைஞர்களுடன் பயணம் செல்ல ஒத்துழைப்பதாக வரும் - இதில் இன்னொரு ட்விஸ்ட் இருக்கு) இவர்கள் மூவரும் அந்தக் கடற்கரைக்குப் போவதாய் முடிவெடுத்ததும் படம் சூடுபிடிக்கத் தொடங்கும்; அதற்காக முன்னால் மெதுவாகச் சென்றதாய்ப் பொருள் இல்லை. இன்னும் வேகமெடுக்கும்.

மூன்று பேரும் காரில் சொர்க்கத்தின் வாசலுக்குப் பயணிக்கும் பொழுது தங்களுடைய முன் அனுபவங்களைப் பற்றிச் சொல்கிறார்கள் தங்கள் காதலன் காதலிகளைப் பற்றி, அவர்களுடனான உறவு பற்றி. இந்த இடத்தில் ஒரு விஷயம் மூவருமே உண்மைகளைச் சொல்வதாய் இயக்குநர் சொல்லியிருப்பார். இந்த நேரத்தில் ரொம்ப சீரியஸான விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசுவார்கள் அதையெல்லாம் நான் எழுதினேன் என்றால் உதைவிழும். சரி மீண்டும் கதைக்கு போகும் வழியில் ஒரு இடத்தில் தங்கியிருக்கும் பொழுது லூயிஸா அவளுடைய கணவனுக்கு தொலைபேசி தான் அவனை விட்டுக் கிளம்புவதாகச் சொல்லி மெஸேஜ் சொல்லுவாள்.



இப்படியாக போய்க்கொண்டிருக்கும் பயணத்தில் இன்னொரு ட்விஸ்ட் வரும் எப்படியென்றால் முதலில் தெனோச்'சுடன் லூயிஸா உறவு கொள்வாள்; இதை மறைந்திருந்து ஜூலியோ பார்த்துவிட இதனால் கோபமடையும் ஜூலியோ தானும் தெனோச்'சுடைய காதலியும் உறவு கொண்டதாகச் சொல்லுவான். இதைத் தொடரும் அடுத்த நாளில் லூயிஸா ஜூலியோவுடன் உறவுகொள்ள தெனோச் தான் ஜூலியோவின் காதலியுடன் உறவு கொண்டதைச் சொல்வான். இதைவிடவும் முக்கியமான ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லாமல் சொல்வார் அது இவர்கள் இருவருமே ஒரு விதத்தில் அந்தப் பெண்ணுடன் உறவு கொள்ளத்தான் அத்தனையும் செய்வார்கள். ஆனாலும் அவர்கள் இருவரிடையேயும் பகை வரக்கூடிய அளவிற்கு இந்த விஷயம் கொண்டு சென்றுவிடும்.

ஒரு விதத்தில் நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் லூயிஸா அவளுடைய கணவனை பழிதீர்க்கத்தான் இவர்களுடன் பயணம் செய்வதாய் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கும் அப்படிப்பட்ட பிம்பத்துடன் நீங்கள் இருக்கும் பொழுது; இவர்கள் இருவராலுமே லூயிஸாவிற்கு பயனொன்றும் இல்லை என்று இயக்குநரால் சொல்லாமல் சொல்லப்படும்; இரண்டு இளைஞர்களும் இந்த விஷயத்தில் பேசத்தான் லாயக்கு என்பது போல் புனையப்படும். இந்தக் காட்சிகள் இயக்குநரால் மிகவும் திறமையாக கையாளப்பட்டிருக்கும்.

இவர்கள் இருவரும் கற்பனையில் இருப்பதாய் நம்பப்படும் கடற்கரையை கண்டுபிடிக்கிறார்கள். மூவரும் கடற்கரையின் அழகை ரசிக்கிறார்கள் விளையாடுகிறார்கள் ஒட்டுமொத்தமாக என்ஜாய் செய்கிறார்கள். ஆனால் நண்பர்கள் இருவருக்கும் மனத்தாங்கள் ஏற்பட்டு விடுகிறது; பயணத்தையே இவர்கள் பாழ் செய்து விடுவார்கள் என்று லூயிஸா ஏகப்பட்ட கன்டிஷன் போட்டு அவர்களுடன் வரப்போக மனஸ்தாபங்களை மறந்து இருவரும் ஒன்றாக இருப்பார்கள். பின்னர் லூயிஸா கடற்கரையிலேயே தங்கி அங்கிருக்கும் குகைகளுக்குச் செல்லப்போவதாகச் சொல்ல. இவர்களின் வீட்டில் தேடுவார்கள் என்பதால் இவர்கள் திரும்பவும் சொந்த ஊருக்கே வர கதை முடிவை நோக்கி பயணிக்கும்.

இவர்கள் சொந்த ஊருக்கு வந்ததும் தத்தமது காதலிகளை கழட்டிவிடுவார்கள் பின்னர் இருவரும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் சந்தித்துக் கொள்ளும் பொழுது பரஸ்பரம் விஷயங்களை பரிமாறும் சமயத்தில் தான் தெனோச் சொல்லப்போய் ஜூலியோவிற்குத் தெரியவரும் லூயிஸா கேன்ஸரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவளுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருந்ததாகவும். அப்பொழுது தான் படம் பார்ப்பவர்களுமே இந்த விஷயம் சொல்லப்படும். இது தெரிந்தபின் படத்தை இன்னொரு முறை பார்த்தால் வித்தியாசமாகயிருக்கும் லூயிஸாவின் நடவடிக்கைகள்.

மிகவும் நெருக்கமானதாய் இருக்கும் இருவரின் நட்பென்பது எத்தனை பாசாங்குகளை உள்ளடக்கியதாகயிருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம். அல்பான்ஸோ கியூரன் இந்த பாசாங்குகளை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இந்தப் படத்தில்; டிவிடிக்கள் கிடைக்கும் இந்தியாவில் என்று நினைக்கிறேன். பதின்ம வயது இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம் ;-).

படத்தில் அங்கங்கே மெக்ஸிகோவின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கை இடித்துக் காட்டப்படும். கதை சொன்ன விதமும் படமெடுக்கப்பட்டிருக்கும் விதமும் மிக அருமையாக இருக்கும். அதைப் போலவே நடிகர்களும் கெய்ல் கார்சியோ பெர்னாலைப் பற்றி கேட்கவே வேண்டாம் அருமையாக நடித்திருப்பார் படத்தில். மொத்தமாக மூன்று கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்து வேண்டுமானால் ஒரு கார் கூட சேர்த்துக் கொள்ளலாம் படத்தை அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குநர். இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் நிலவும் இளைஞர்களின் வாழ்க்கையை படம் பிடிப்பாதாகயிருக்கும் இந்த Y tu mamá también.

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In சினிமா விமர்சனம்

கிரீடம் திரைவிமர்சனம்

ஆசிப் அண்ணாச்சி பெங்களூர் வந்திருந்த பொழுது இந்தப் படத்தைப் பற்றி ஞாபகப்படுத்தினார். என்னய்யா கிரீடம் வெளிவரப்போகுதாமே என்று, அவர் மலையாளத்தில் இந்தப்படம் பார்த்ததிருந்ததாகவும் தமிழில் எப்படி வரப்போகுது என்று தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். நான் சொன்னேன் விஜய் மாதிரியில்லாம அஜித் நல்லா டிரை பண்ணுவாருங்க அதனால நல்லாவரும் என்று சொல்லியிருந்தேன்.

நான் மலையாளப்படம் பார்த்திருக்கவில்லை, வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றதும் கால் தரையில் பரவவில்லை, முன்னாலே வாலி, அமர்க்களம், வில்லன், வரலாறு போன்ற படங்களை முதல் நாள் பார்த்திருந்தேன். காரணம் ரொம்ப சிம்பிள் கதை தெரிவதற்கு முன் பார்ப்பதில் உள்ள சுவாரசியம் பெரும்பான்மையான சமயங்களில் கதை தெரிந்த பின் பார்க்கும் பொழுது கிடைப்பதில்லை. இன்டர்நெட்டில் தேடினேன், ஞாயிற்றுக்கிழமைதான் டிக்கெட் இருந்தது வெள்ளி சனிக்கிழமைகள் ஹவுஸ் புல். சரியென்று ஞாயிறுக்கான டிக்கெட் இரண்டை புக் செய்து 5.45 க்கே கிளம்பினேன் கம்பெனியில் இருந்து; சரி கடைசி டிரை பண்ணிவிடலாம் என்று.

கம்பெனியின் அருகில் இருக்கும் INOXல் தான் முதலில் தேடினேன் படமே ரிலீஸ் இல்லையாம், அங்கிருந்து Forum வந்தால் PVRல் மேலே டிஸ்ப்ளேவில் கீரிடத்திற்கு ஹவுஸ்புல் போர்ட் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் மனதைத் தவறவிடாத விக்ரமாதித்தனாக கியூவில் நின்று கவுண்டரை நெருங்கியதும், எதுவும் கேன்ஸல் ஆன டிக்கெட் இருக்கா என்று கேட்க, நான் நின்ற கியூவிற்கு டிக்கெட் தரும் நபர் இல்லையென்றதும், பக்கத்து கவுண்டர் நபர் இரண்டு டிக்கெட் இருப்பதாகச் சொன்னதும் இந்த நபர் ஒரு டிக்கெட்டாய் கொடுக்கமுடியாதென்றும் சொல்லி வீம்பு பிடிக்க. இரண்டையுமே வாங்கிக்கொண்டேன்.

மணி ஏழு இருக்கும் 10.00 மணி ஷோ, என்ன தான் இருப்பது Forum என்றாலும் எனக்கு window ஷாப்பிங்கில் நம்பிக்கையில்லாததால் கீழ் ப்ளோரில் இருந்த Relienceல் ப்ரவுஸிங்க் செய்து மூன்று மணியை கழிக்கலாம் என்று முடிவுசெய்தேன். Gmailல் லாகின் செய்து பார்த்தால் ராம் ஆன்லைனில் இருக்க "என்னய்யா ஒரு டிக்கெட் இருக்கு வர்றீரா கிரீடத்திற்கு" என்று கேட்க, நான் ரிவ்யூ எல்லாம் பார்க்காம அஜித் படம் பார்ப்பதில்லை என்று சொல்லிவிட நானும் விட்டுவிட்டேன்.

சரி படத்தைப் பற்றி, மலையாளப்படத்தை தமிழில் எடுத்திருக்கிறார்கள், மூலக்கதை லோகிததாஸ். நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்பதால் இது ஒப்பீட்டளவிலான விமர்சனமாக இருக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் படத்தை விமர்சனம் செய்யும் பொழுது எனக்குள்ளே ஒட்டிக்கொள்ளும் ரசிகன் tagகினால், விமர்சனத்தைப் பார்த்து படத்திற்குச் செல்பவர்கள் என் விமர்சனத்தை ஒதுக்கிவிடுங்கள்.

அஜித்தின் ஏப்பை சாப்பை படங்கள் போலில்லாமல், இயக்குநருக்கும் கதைக்கும் நல்ல முக்கியத்துவத்தை கொடுத்து எடுத்திருப்பதாகத்தான் பட்டது, அஜித்தின் இண்ட்ரொட்யூஷன் சாங், பைட் கனவு, மற்றும் கிளைமாக்ஸ் கதறல்(இது மலையாளத்தில் இருந்ததா தெரியாது) போன்றவற்றை தவிர்த்துப் பார்த்தால் அஜித் ஏன் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறது; எப்பொழுதென்றால் தமிழ்ச்சினிமா ஹீரோயிசங்களுடன் ஒப்பீடும் பொழுது. படத்தில் அஜித்தும் ஒருவராகயிருக்கிறார், அவர் ஹீரோவென்று சீன்களை ஆக்கிரமித்து ஹிம்ஸை செய்யவில்லை.

மென்மையானக் காதலைச் சொல்லியிருக்கிறார்கள், த்ரிஷா மாமி அழகாகப் பொருந்தியிருக்கிறார் கொஞ்சம் போல் குண்டாகி ஹிஹி அருமையாக இருக்கிறார். "யோவ் பாட்டைப் போடுங்கய்யா" என்று தியேட்டரே கதறிவிடும் வகையில் அநாவசியமான பாடல் திணிப்புகள் இல்லை(முதல் அஜித் பாடலைத் தவிர்த்து - அஜித்தும் என்ன தான் செய்வார் சொல்லுங்கள், 'எங்கடா உங்க தல' என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டுமில்லையா).

ராஜ்கிரண், சரண்யா, விவேக், சந்தானம் என்று ஏகப்பட்ட நடிகர் கூட்டம்.(ஒரு ஜொள்ளு விஷயம் அது யாருய்யா அஜித்தின் சின்ன தங்கையா நடிக்கிறது - மூன்றடியில் அழகாயிருக்கு பொண்ணு.) விவேக்கின் சந்தானத்தின் மூன்றாம் தர ஜோக்குகள் தனித்து தெரிகின்றன - தேவையில்லாத இடைச் சொறுகல்கள்களாக; நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம்(வைரம் பாஞ்ச கட்டை எல்லாம் ரொம்ப ஓவர்) ஆனால் தியேட்டரே அதிர்கிறது என்ன சொல்ல நம் ரசனை மாறவேண்டும் என்ற ஒன்றைத் தவிர, இந்தப் படத்தை தியேட்டரில் மக்கள் பார்க்கும் பொழுது தயாரிப்பாளர் கவனிக்கிறார் என்றால், இரட்டை அர்த்த வசனங்களை தொடரச் சொல்வார் என்று தான் படுகிறது. என்னயிருந்தாலும் வியாபாரமல்லவா.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த நபர்கள் எல்லாம் இன்டர்வெல்லுக்காக ரொம்ப முன்னமே யோசிக்கத்தொடங்கியிருந்தாலும் எனக்கென்னமோ முதல் பாதி வேகமாகச் சென்றதாகவே பட்டது. ராஜ்கிரண் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார், இன்னமும் ஹீரோ ரோல் தான் செய்வேன் என்று வீம்புபிடிக்காமல் நடிக்கத்தொடங்க நல்ல கேரக்டர் ரோல்கள் கிடைக்கின்றன. படத்தில் பாதி நேரம் திரையை ஆக்கிரமித்திருக்கிறார் ஆனால் எடுபடுகிறது. அவரோட புருவத்திற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை; இதிலும் வரைந்திருக்கிறார்கள் க்ளோசப்பில் பளீரென்று தெரிகிறது முன்பு; தவமாய் தவமிருந்துவிலும்(நான் படம் பார்க்கவில்லை - சன் டீவியில்(;)) பார்த்த காட்சிகளை வைத்து) அப்படித்தான்.

படத்தின் உற்சாகமான நேரத்தில் கூட அஜித்தின் முகத்தில் ஒரு மென்சோகம் இளையோடுகிறது; திரும்பவும் குண்டடிச்சிட்டாரோ லைட்டா தொப்பையிருக்கிற மாதிரி தெரியுது. அவருடைய கதாப்பாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். ஃபைட் சீக்வென்ஸ் நல்லாயிருக்கு கொஞ்சம் போல் எதார்த்தமாய் அடிக்கப் பயன்படுத்தும் விஷயங்களும் சண்டையும்; அஜித் நன்றாகச் செய்திருக்கிறார். த்ரிஷா மாமி நல்லாவேயிருக்கிறார் ரொம்ப நாட்களுக்குப் பிறகு அவருடைய ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கிறேன்; சாமி பார்த்தேன் என்று நினைக்கிறேன் கடைசியாக. எங்கம்மா போனீங்க தெலுங்கிற்கா.

டப் டப் டப் என்று துப்பாக்கியால் ஆயிரம் பேரை, சென்னையின் ஒட்டு மொத்த ரௌடிகளை கொலைச் செய்யும் இந்தக் காலத்தில் ஒரு நபரை கொலை செய்வதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களையும் இப்படி சொல்வது தமிழ் சினிமாவில் எடுபடுமா? தங்கச்சியைக் கற்பழிக்காமல் அம்மாவையோ அப்பாவாவையோ சுட்டுப்போடாமல் வில்லன் லேசாய் அடிப்பட்டதாய் காண்பிப்பதும் எடுபடுமா. அஜித் இந்த மலையாள வாசனையுள்ள டைரக்டர்களையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களையும் கொஞ்சம் நாளைக்கு பக்கத்தில் விடாதீர்கள் ;-).

எனக்கு உண்மையிலேயே கன்ஃப்யூஸ்டா இருக்கு தமிழ் மக்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா என்று, கதாநாயகியுடன் கதாநாயகன் சேர்வதில்லை, படத்தின் ஆரம்பத்தில் இருந்து ஹீரோ கஷ்டப்பட்டு செய்யும் விஷயங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவது. அதாவது அவரது இன்ஸ்பெக்டராகும் கனவு. பெரிய கனவுப் பாடலொன்றும் கிடையாது; வரும் கனவுப்பாடலிலும் அடிக்கடி நிகழ்காலத்தில் நடப்பது காண்பிக்கப்படுகிறது.(பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர் ஒருவர் இந்தப் பாடலில் சில காட்சிகள் வரும் த்ரிஷாவின் மார்புப் பகுதியில் வரைந்திருக்கும் டாட்டுவை பார்த்து அதை பார்க்காத நண்பர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். அங்க எப்படி வரைந்திருப்பான் என்ற கேள்வியும் தொக்கி வைத்தார்.)

படத்தில் ஆரம்பப் காட்சிகள் சென்று கொண்டிருக்கும் பொழுது தியேட்டரில் ஒருமுறை சப்தம் போடாமல்(அல்லது வராமல்) மௌனமாகச் சென்றது ஏன் சொல்கிறேன் என்றால் இடைவேளைக்குப் பிறகு அஜித் சிறையில் இருக்கும் ஒரு காட்சியில் வசனமும் இல்லை பேக்ரவுண்ட் மியூஸிக்கும் இல்லாமல் மௌனமாக இருக்க அதே டாட்டு பார்ட்டி திரும்பவும் விசிலடித்தார் சவுண்ட் விடுமாறு; அவருக்கு தெரிந்துதான் இருந்தது படத்தின் அந்த காட்சி அப்படி என்று; அந்தக் காட்சி முடிந்தது "ஆமாண்டா ஆர்ட் படம் எடுத்திருக்கிறான்" என்று சொன்னதை இந்தப் படத்தின் விமர்சனமாக எடுத்துக்கொள்ளலாமா தெரியவில்லை.

பெரும்பான்மையான காட்சிகளில் இயக்குநர் மலையாளத்தின் இயல்பு போய்விடக்கூடாதென்றும் அதே சமயத்தில் தமிழ் சினிமா பார்ப்பவர்களின் மேல் மலையாள வாசனையை தூவிவிடக்கூடாதென்று கஷ்டப்பட்டிருப்பது பிரகாசமாத் தெரிகிறது. ஆனால் அதில் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பது டைரக்ட்லி ப்ரப்போஷனல் டு இந்தப் படத்தின் வெற்றி.

என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல படம் தான் அஜித்திடன் நான் எதிர்பார்த்த ஒரு மாறுதலான படத்தை அஜித் கொடுத்டிருக்கிறார் தான். ஆனால் இதை விமர்சனமாக எடுத்துக்கொண்டு இந்தப் படத்திற்குப் போகவேண்டாம்.






























Read More

Share Tweet Pin It +1

17 Comments

Popular Posts