In Only ஜல்லிஸ்

ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்

தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினிகள் தேவையா என்று யோசித்திருக்கிறேன், அப்படியே பாடல்களும். ஹீரோயினிகள் இல்லாமல் போய்விட்டால் நிச்சயமாய் பாடல்கள் நின்றுவிடும். எப்படிப்பட்டவையென்றால், சட்டுன்னு "எனக்குத்தேவை தமிழ்க்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு" என்று சொன்னதும் "பல்லேலக்கா பல்லேலக்கா" என்று ரஜினிகாந்த், நயன்தாராக்களின் தொப்புள்களுடன் டான்ஸ் ஆடவேண்டிய அவசியம் இருக்காது. ரஜினிகாந்த் வாழ்க்கையை வெறுத்து "விடுகதையா இந்த வாழ்க்கை" போன்ற பாடல்கள் இதில் அடங்காது, அதெல்லாம் கொஞ்சம் சப்தமாகயிருக்கும் பின்னணி இசை என்று வைத்துவிடலாம் இல்லையா? ஆனால் தமிழ்ச்சினிமாவின் இன்றைய நிலை என்ன? பாடல்கள் ஹிட் ஆகாத எத்தனை படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன?

இது போன்ற காரணங்களால்; தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்கலாமா கூடாதா என்பதை தீர்மானிக்க வேண்டியது யார்? ஓராயிரம் இன்டலக்சுவல்ஸா இல்லை தங்கள் கவலைகள் மறந்து, டிவிக்களின் ஆதிக்கத்தை ஒரு நாள் நிறுத்தி படம் பார்க்க வரும் கோடிக்கணக்கான மக்களா? சாரி கோடின்னு சொல்லிட்டனே நம்பர் சரிவருமா? இங்கே யாருக்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது என்ற கேள்வி பெரும்பாலும் எல்லா சமயங்களிலுமே கேட்கப்படுகிறது. ஆனால் பதில் தங்களுக்கு சாதகமானதாக இல்லாமல் இருப்பதால் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அர்பனைஸ்ட் ஏரியாக்கள் இல்லாமல் ரூரல் ஏரியாக்களாலும் இளைஞர்களாலும் தான் இன்று சினிமாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்று நான் சொல்லப்போனால் உனக்கெப்படி தெரியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் படம் ஓடுகிறதே! பாபா ஓடலையே!!! அதனால் மக்கள் தரமில்லாத தாங்கள் விரும்புவதைத் தராத சூப்பர்ஸ்டார் படங்களைக் கூட மக்கள் பார்ப்பதில்லை.

மற்ற குப்பைகளை விட்டுவிடுகிறேன்; என்னை எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கு பெண் பார்க்கிறார்கள் பார்த்த பெண்களில் இரண்டு பெண்களை எனக்கு சரிசமமாகப் பிடித்திருக்கிறது. ஒரு பெண் ஆத்தீகவாதி மற்றவள் நாத்தீகவாதி. நீங்கள் நினைக்கிறீர்களா நாத்தீகவாதியாகயிருப்பதால் நான் இன்னொரு நாத்தீகவாதியை விரும்புவேன் என்று. இருக்காது ஆத்தீகவாதியைத்தான் திருமணம் செய்வேனாயிருக்கும்; ஏனென்றால் ஆண்களுக்கு(க்ரூப் அடிக்கிறேன்னு நினைக்க வேண்டாம் என்னையும் சேர்த்து வேண்டுமானால் %) இன்டலக்சுவல் பெண்களைப் பிடிப்பதில்லை. டிகிரி முடிச்சதும் 2 வருஷம் சும்மா இருந்து, தையல், சமையல்னு கத்துகிட்டு கல்யாணத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் டிபிகல் தமிழ்ப்பெண்களைத் தான் பிடிக்கும். உண்மை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவோ இல்லை எழுதும்படியாகவோ இருக்காது. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலகக்காரனாகவும்(இந்த விஷயத்தில் மட்டும்) MCP ஆகவும் இருப்பதால் இதுதான் உண்மை என்று சொல்லிக்கொள்கிறேன்.

அப்படி இருக்கும் பொழுது ரஜினிகாந்த் சர்ரியலிஸம் பேசிக்கொண்டு சார்த்தரையும், பெட்ரிக் நீட்ஷேவையும் துணைக்கிழுக்கும் ஒரு அறிவுஜீவி பெண்ணை அதாவது லாப்டாப்பை திறந்து "ஹாய் ஃபட்டி திஸ் ஈஸ் சிவாஜி! கூல்" என்று சொல்லி வாய்ஸால் பாஸ்வேர்ட் வைத்து திறந்து எப்படி கருப்புப்பணம் வெள்ளையாச்சு என்று சொன்னதாலும், கிங்காங்கையே கிழித்துக்கொண்டு வானத்தில் பறந்து சண்டை போடுவதாலும் தன் புருஷனை லீகலாகவும், இல்லீகளாகவும் ஒன்னும் செய்யமுடியாது என்று புரிந்து கொள்ளும் பெண்ணாகவும் இருந்துவிட்டால்; சாரி எக்ஸ்கியூஸ் மி மூணுமணிநேரம் படம் எப்படி காட்டுறது.(அப்பாடா ஃபுல்ஸ்டாப் பொட்டாச்சு) ரஜினிகாந்திற்கு நீங்கள் தான் ஒரு கதை எழுதுங்களேன் இப்படி.

நீங்க யாரும் "சிட்டி ஆஃப் காட்" படம் பார்த்திருக்கீங்களா? அதில் படம் முழுவதும் பெண்களே வரமாட்டார்கள் சொல்லப்போனால் காட்டப்பட்ட பெண்களுமே கூட வாழைக்காயை எப்படி பயன்படுத்துவது என்று கேட்கும்படியாய் கேவலமாய் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் உலகமெங்கும் "இன்டலக்சுவல்" சினிமா விமர்சகர்கள் ஆதரித்த படம். அது ஆண்களின் உலகம் அங்கே பெண்களுக்கு இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் அப்பட்டமான உண்மையைப் பற்றியது அந்தப்படம் என்ற ஜல்லிகள் அடிக்கப்படலாம். ஆனால் உண்மையை அப்படியே எடுத்துவிடலாமா? பாய்ஸில் சுஜாதா எழுதிய வசனங்களை தங்கள் காதுகளால் மால்களிலோ ஷாப்பிங் காப்ளக்ஸ்களிலோ எத்தனை பேர் கேட்டிருக்கவில்லை; சொல்லுங்கள். இங்கே பிரச்சனை அது இயல்பானதா உண்மையில் நடக்கக்கூடியதா என்பதில்லை. வாசகர்களுக்கு ஏதுவானதா? என்பதுதானே கேள்வி. ஞானிகூட கூறியது இதைத்தானே. (அந்தாளின் சுஜாதா கூறித்தான பர்ஸனல் ஜல்லிகளை விடுத்து)


இன்னமும் நாம் அஜீத்குமாரின், விஜய்-ன் ஆண்குறிகளின் அளவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை நம்மகத்தே கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம்(%). அவர்களுக்கு ஷாலினிகளைப் பற்றிய கேள்விகள் கிடையாது இதுதான் உண்மை. இப்படிப்பட்ட சமுதாயத்தை திருத்த வேண்டும்தான் அந்தவிஷயத்தில் இருவேறு கருத்து கிடையாது. ஆனால் எங்கிருந்து தொடங்கப்படவேண்டும் என்பதுதான் கேள்வி. சினிமாக்களின் லாஜிக் பற்றி பேசும் விமர்சனங்களில் இருந்தா? ஏசி தியேட்டர்களில் சாப்பிட்டு விட்டு, பாதியில் சினிமா தியேட்டரின் ஏசியை நிறுத்திவிட்டான் என்ற "கோட்"களுடன் இருக்கும் விமர்சனங்களை விடவும், "காசு கொடுத்தேன் ஏன்யா ஏசியை பாதி நிறுத்தின" என்று கேட்கப்படும் கேள்விகளால் சமுதாயம் திருந்தலாம்.

அரசியல் ரீதியான தீர்வாக இல்லாமல் போகும் எந்த ஒரு தீர்வும் வெற்றிபெற முடியாது இல்லாவிட்டால் ஆவிகளிடம் கேட்டுப் பார்க்கலாம்; இந்த சமுதாயத்திற்கான தீர்வை. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் குடியரசுத்தலைவர்களையே தீர்மானிக்கும்/ தேர்ந்தெடுக்கும் அளவு சக்தி பெற்றவையாய் அவைகள் தானே இருக்கின்றன.

Related Articles

21 comments:

  1. //இல்லாவிட்டால் ஆவிகளிடம் கேட்டுப் பார்க்கலாம்; இந்த சமுதாயத்திற்கான தீர்வை. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் குடியரசுத்தலைவர்களையே தீர்மானிக்கும்/ தேர்ந்தெடுக்கும் அளவு சக்தி பெற்றவையாய் அவைகள் தானே இருக்கின்றன.//

    :)

    ReplyDelete
  2. மோகன்தாஸ்,

    இந்த விசயத்துல வாதிட்டு ஒன்னும் வெளங்கமுடியாதுங்கறதால ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லறேன்...

    பெண்கள் ஆறாம் விரலா கட்டை விரலான்னு கண்டுணர்வதற்கு உமக்கு இன்னும் காலம் இருக்கு ஓய்! அதுவரைக்கும் உங்க "பெண்ணீய" பதிவுகளையெல்லாம் அழிக்காம வைச்சிருங்க! பிற்காலத்துல படிக்க சிரிப்பா இருக்கும்! :)))

    ReplyDelete
  3. இளவஞ்சி,

    கான் டெக்ஸ் புரிஞ்சிக்கலை என்று நினைக்கிறேன். இங்கே ஆறாம் விரல்கள் என்பது நேரடியாய் பெண்களைக் குறிப்பதல்ல.

    குறிப்பது சினிமா கதாநாயகிகளை, அதுவும் நான் சொன்னதில்லை ;)

    ReplyDelete
  4. \\பெண்கள் ஆறாம் விரலா கட்டை விரலான்னு கண்டுணர்வதற்கு உமக்கு இன்னும் காலம் இருக்கு ஓய்! அதுவரைக்கும் உங்க "பெண்ணீய" பதிவுகளையெல்லாம் அழிக்காம வைச்சிருங்க! பிற்காலத்துல படிக்க சிரிப்பா இருக்கும்! :)))//

    :)

    ReplyDelete
  5. முத்துலட்சுமி, மேற்சொன்ன பதில் தான் உங்களுக்கும்.

    அது நேரடியாய் குறிப்பது சினிமா கதாநாயகிகளை.

    இப்ப பதில் சொல்லுங்க.

    --------------------

    இளவஞ்சி, என் பெண்டாட்டியிடம் காண்பிக்கப்போகிறேன் என்ற முன்ஜாக்கிரதையுடன் தான் என்னுடைய பதிவுகள் எழுதப்படுகின்றன. அதுமட்டும் உறுதி.

    ReplyDelete
  6. \\என் பெண்டாட்டியிடம் காண்பிக்கப்போகிறேன் என்ற முன்ஜாக்கிரதையுடன் தான் என்னுடைய பதிவுகள் எழுதப்படுகின்றன. அதுமட்டும் உறுதி//

    மிக மனதைரியம் வேண்டும்...உங்களுக்கில்லை வரப்போற பொண்ணுக்கு..:)

    ReplyDelete
  7. என்னைச் சொல்லிவிட்டு, ரஜினி படத்தை விமர்சித்து வந்திருக்கும் ஒரு பதிவிற்கு எதிராய் கமென்ட் ஒன்றும் போடலையே தல.

    போய்ப் பாருங்க நம்ம சூப்பர்ஸ்டாரை பகுத்தறிவு சிங்கம்னெல்லாம் வம்பிழுக்கிறாங்க - பிடறியை கிளப்பிக்கொண்டு நீங்க வருணுமா இல்லையா?

    ReplyDelete
  8. //மிக மனதைரியம் வேண்டும்...உங்களுக்கில்லை வரப்போற பொண்ணுக்கு..:)//

    ஆனா முத்துலட்சுமி என் மனைவி என்னை, என்னுடைய எழுத்துக்களுக்களில் தேடுவதை விடவும் எழுத்துக்குப் பின்னால் இருக்கும் "பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனதில் தேடுபவராகயிருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. \\பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனதில் தேடுபவராகயிருப்பார் என்று நினைக்கிறேன்.\\

    ஓஓகோ...அப்ப எழுத்திற்கும் உண்மை கருத்திற்கும் வித்தியாசம் இருக்குமோ..எப்படியோ நல்லா இருந்தா சரி.

    ReplyDelete
  10. உண்மைகள் நம்புறதுக்கு கஷ்டமாயிருக்கும்னு இப்பத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  11. தாஸூ,

    தவறான காக்டெக்ஸ்டில் எனது புரிதல் இருந்தால் தயவுசெய்து மன்னிக்க!

    உங்கள் பதிவில் இருந்த சில வார்த்தைகளைக் கொண்டும் மற்றும் உங்கள் எழுத்துக்குப் பின்னால் இருக்கும் "பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனதின்மீது நீங்கள் வேண்டுமென்றே வலியத் திணிக்கும் MCP ( இதுவும் உங்களைப் பற்றிய "எனது" உருவகம் மட்டுமே! ) இமேஜிக்குமான பின்னூட்டம் அது! :)

    MCPக்ள் எல்லாம் உங்களைப்போல சபையினில் அறிவித்துக் கொள்ளும் ஆண்களாக இருக்க மாட்டார்கள். என்னைப் பொருத்தவரை எனது அதிகாரமோ, ஆணாதிக்கமோ, பணபலமோ அல்லது மனபலமோ செல்லுபடியாகும் "எனது" எல்லைக்கு்ள் எப்படி பெண்களை நடத்துகிறேன் என்பதில் தான் MCPத்தனம் அடங்கியுள்ளது என்பேன். பெரும்பாண்மையாக இது நமது வீட்டின் 4 சுவற்றுக்குள் தீர்மாணிக்கிற விசயமாகத்தான் இருக்கும்! இந்த எல்லைக்கு வெளியே 100க்கு 90 ஆண்கள் பெண்களை மதிக்கும் பெருந்தண்மை மிக்கவர்களாகவே இருப்போம்! :)))

    மீண்டும் தவறான புரிதலில் ஏதேனும் சொல்லியிருந்தால் மன்னிக்க!

    // போய்ப் பாருங்க நம்ம சூப்பர்ஸ்டாரை பகுத்தறிவு சிங்கம்னெல்லாம் வம்பிழுக்கிறாங்க - பிடறியை கிளப்பிக்கொண்டு நீங்க வருணுமா இல்லையா? //

    விடுங்க! ஜீராவுக்கு சொன்னதேதான்! நமக்கு பிடிச்சிருக்கு.. ரசிக்கறோம். அவங்களுக்கு பிடிக்கலை. அதை இப்படி வெளிப்படுத்தறாங்க அவ்வளவுதான். ரஜினியை ரசிக்க முடியறதால நமக்கு படமும் பிடிச்சிருக்கு. 3 மணிநேர சந்தோசமும் கிடைச்சிருக்கு. அவங்களுக்கு பிடிக்காததால காசும் போச்சு. படம் பார்த்து நிம்மதியும் போச்சு! :)))

    // பிடறியை கிளப்பிக்கொண்ட // என்னைப் பார்த்து... எப்படி.. இப்படி ஒரு... இந்த உள்குத்தை வன்மையாக கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  12. //தவறான காக்டெக்ஸ்டில் எனது புரிதல் இருந்தால் தயவுசெய்து மன்னிக்க!//
    //மீண்டும் தவறான புரிதலில் ஏதேனும் சொல்லியிருந்தால் மன்னிக்க!//

    இப்படியெல்லாம் பதில் போட்டா அழுதுறுவேன். நான் சத்தியமா நீங்கள் சினிமா கதாநாயகிகள் கட்டைவிரலான்னு கேக்க மாட்டீங்கன்னும், இந்தப் பதிவில்(;)) நான் பொதுவான பெண்குலங்களை கூறியுள்ளதாக நினைக்காததாலும்(அப்படி கூறியிருந்தாலும் அதை சினிமா கதாநாயகிகளைப் பற்றிச் சொல்ல எடுத்துக் கொண்டு உதாரணங்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்) இன்னும் ஒரு முறை கூறினேன். அவ்வளவே.

    //என்னைப் பொருத்தவரை எனது அதிகாரமோ, ஆணாதிக்கமோ, பணபலமோ அல்லது மனபலமோ செல்லுபடியாகும் "எனது" எல்லைக்கு்ள் எப்படி பெண்களை நடத்துகிறேன் என்பதில் தான் MCPத்தனம் அடங்கியுள்ளது என்பேன்.//

    அழகான வார்த்தைகளில் அடிப்படை MCP தனத்தை எழுதியிருக்கிறீர். ஆனால் இதைப் போன்ற பட்டங்கள் நமக்கு நம்முடைய பின்புலத்தை அறியாமலே கொடுக்கப்படுவது தானே. இங்கே பர்ஸனலாய் நான்கு சுவற்றுக்குள் காதை வைத்து கேட்டுப் பார்க்காதவரை MCPness புரியாதென்றால். அப்படித்தானே?

    //ரஜினியை ரசிக்க முடியறதால நமக்கு படமும் பிடிச்சிருக்கு. 3 மணிநேர சந்தோசமும் கிடைச்சிருக்கு. அவங்களுக்கு பிடிக்காததால காசும் போச்சு. படம் பார்த்து நிம்மதியும் போச்சு! :)))//

    நச்சு வரிகள். ஆனால் பலசமயம் மனசு தாங்குறதில்லை ஹிஹி.

    ReplyDelete
  13. ஷாஷங்க் ரிடம்ப்ஷன் ‍ங்ற ஆங்கிலப்படத்திலயும் பெண்களே கிடையாது. ஒரு இடத்துல கூட போர் அடிக்காது. நல்ல படத்துக்கு கதை தான் தேவைங்கறது இப்ப கொஞ்சம் கொஞ்சமாதான் தமிழ் சினிமாவுல நிரூபிக்கப்பட்டு வருது. கொஞ்ச நாள் ஆகும் நீங்க நினைக்கறமாதிரி படங்கல் வர!!

    ReplyDelete
  14. //ஷாஷங்க் ரிடம்ப்ஷன் ‍ங்ற ஆங்கிலப்படத்திலயும் பெண்களே கிடையாது. ஒரு இடத்துல கூட போர் அடிக்காது. நல்ல படத்துக்கு கதை தான் தேவைங்கறது இப்ப கொஞ்சம் கொஞ்சமாதான் தமிழ் சினிமாவுல நிரூபிக்கப்பட்டு வருது. கொஞ்ச நாள் ஆகும் நீங்க நினைக்கறமாதிரி படங்கல் வர!!//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அதுவரை காத்திருக்கணும் :(

    ReplyDelete
  15. ஏற்கனவே உங்ககிட்ட சொன்னா மாதிரி 5 நாள் தொடர் விடுமுறைல இருக்கேன், சொந்த வேலைகள் காரணமா. சோ படிச்சுட்டேன்னு அட்டெனென்ஸ் போடத்தான் இந்த பின்னூட்டம். கொஞ்சம் கூலா இருங்க தலை. வந்து நான் இதுக்கும் சேத்து பதில் சொல்றேன். அப்புறம் இன்னொரு மேட்டர், இந்த மாதிரியான தொடர் விவாதங்களில் முந்தைய பதிவின் சுட்டி கொடுத்துட்டா சில குழப்பங்களை தவிர்க்கலாம் இல்லையா? இப்போதைக்கு நான் இங்க கொடுத்துடறேன் சுட்டிய சரியா?

    ReplyDelete
  16. லக்ஷ்மி ஆகட்டும் வெய்ட் பண்ணுறேன்.

    உங்க பதிவின் லிங்க் கொடுக்காததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

    சிலசமயம் நாம் எதிர்பதிவு பொழுது, பதிவெழுதிய நபர் நம் பதிவை விரும்புவதில்லை. நான் பதிவெழுதியவருக்கு லிங்க் கொடுக்கப்போய் அது அவருடைய பதிவில் என்னுடைய விளம்பரமாய் வந்துசேரும்.

    அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பதிவெழுதியவரை சிக்க வைக்க விரும்பாமல் தான் லிங்க் கொடுப்பதில்லை. இதை என் பல பதிவில் பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
  17. //MCPக்ள் எல்லாம் உங்களைப்போல சபையினில் அறிவித்துக் கொள்ளும் ஆண்களாக இருக்க மாட்டார்கள். என்னைப் பொருத்தவரை எனது அதிகாரமோ, ஆணாதிக்கமோ, பணபலமோ அல்லது மனபலமோ செல்லுபடியாகும் "எனது" எல்லைக்கு்ள் எப்படி பெண்களை நடத்துகிறேன் என்பதில் தான் MCPத்தனம் அடங்கியுள்ளது என்பேன். பெரும்பாண்மையாக இது நமது வீட்டின் 4 சுவற்றுக்குள் தீர்மாணிக்கிற விசயமாகத்தான் இருக்கும்! இந்த எல்லைக்கு வெளியே 100க்கு 90 ஆண்கள் பெண்களை மதிக்கும் பெருந்தண்மை மிக்கவர்களாகவே இருப்போம்! :)))//

    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  18. யோவ் நந்தா, நீர் நேரடியாவே நம்ம பதிவுக்கு வரமாட்டீரா எப்பப்பார்த்தாலும் இன்னொரு பதிவின் லிங்கைப் பிடிச்சிட்டே வர்றீர். ;-)

    ReplyDelete
  19. என்ன மோகனா இப்படி சொல்லிட்டீங்க. பழைய இடுகைகளைப் பாருங்க.

    ReplyDelete
  20. //மற்ற குப்பைகளை விட்டுவிடுகிறேன்; என்னை எடுத்துக் கொள்ளுங்கள்........ இருப்பதால் இதுதான் உண்மை என்று சொல்லிக்கொள்கிறேன்.//

    குஷ்பு, சுஹாசினி மாதிரி ஒட்டு மொத்த இளைஞர்கள் சார்பா நீங்களே பேசிட்டீங்க. ஒரே ஒரு சின்னத் திருத்தம்.

    ஏனென்றால் ஆண்களுக்கு(க்ரூப் அடிக்கிறேன்னு நினைக்க வேண்டாம் என்னையும் சேர்த்து வேண்டுமானால் %)

    என்பதை

    ஏனென்றால் MCP ஆண்களுக்கு

    என்று மாற்றிக்கொண்டால் இன்னும் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  21. //குஷ்பு, சுஹாசினி மாதிரி ஒட்டு மொத்த இளைஞர்கள் சார்பா நீங்களே பேசிட்டீங்க. ஒரே ஒரு சின்னத் திருத்தம்.//

    இல்லீங்க நீங்க அந்த க்ரூப்பில் இல்லை :), நீங்க வேற க்ரூப் நான் ஒத்துக்குறேன் அதை எழுதியும் இருக்கேன் % என்று போட்டு. நீங்கள் அந்த மறுபாதியில் வருவீங்க :)

    ReplyDelete

Popular Posts