In சிறுகதை

மைதிலி

"டேய் மைதிலிக்கு கல்யாணமாம்டா. உனக்குத்தான் மொதப்பத்திரக்கை வச்சிரிக்கா ஒழுங்கு மரியாதையா வந்து சேரு... அவளைக் கல்யாணம் தான் பண்ணிக்க மாட்டேன்னுட்ட, கல்யாணத்தை பார்க்கிறதுக்காகவாவது வந்துசேரு."

அம்மாவிற்கு பச்சை, மஞ்சள், சிகப்பு என்ற மூன்று விஷயங்களில் அடங்கிவிடும், என்னுடைய வேலையின் தீவிரம் புரிந்ததில்லை, உங்கக்காவிற்கு மாப்பிள்ளை பாத்திருக்கோம் வந்து சேரு, சித்திக்கு உடம்புக்கு சரியில்லையாம் வந்து சேரு, அவ்வளவுதான் அமேரிக்காவிலிருந்து நான் கிளம்பிவிட வேண்டும், பணம் என்பது இரண்டாவது பிரச்சனைதான். நான் அங்கில்லாத இரண்டொரு நாட்களில், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு தாவி, சில நாட்களில் சிகப்பில் படுத்துக்கொள்ளும் ப்ரொஜக்ட் தான் முதல் பிரச்சனை. இந்த முறை எக்காரணமாக இருந்தாலும் வந்துவிடுவேன் என்று அம்மாவிற்கு தெரிந்திருக்கும், ஆனாலும் உறுதி செய்து கொள்வதற்காகத்தான் சொல்லியிருப்பார்கள்.

மைதிலி இந்தப் பெயரை நினைக்கும் பொழுதெல்லாம் மனதிற்கு இயல்பாய் ஒரு மரியாதை வந்துவிடும். சாமி, பூதம், ஹிப்னாட்டிஸம், மனசைப் படிக்கிறது இதிலெல்லாம் எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கையிருந்ததில்லை. ஆனால் மைதிலியுடன் பழக ஆரம்பித்ததில் இருந்து இப்படிக்கூட ஒருவரால் மற்றவருடைய மனதை புரிந்து கொள்ள முடியுமா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

"டேய் அதோ வர்றாளே அந்த பச்சக் கலர் சுகிதார் அவக்கிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லுடா." ரேகிங் செய்வதாக சொல்லிக்கொண்டு சீனியர் ஸ்டுடண்ட் இப்படி செய்யச் சொன்னதும் திரும்பிப்பார்த்தவனுக்கு அங்கே வந்து கொண்டிருந்த பச்சைக் கலர் சுகிதாரைப் பார்த்தால் பரிதாபமாகவும் வேதனையாகவும் இருந்தது. இன்னும் நான்காண்டுகள் இந்தக் கல்லூரியில் குப்பைக் கொட்ட வேண்டுமே என நினைத்தவனாய், பச்சையிடம் பச்சையாகச் சொல்லப் போக கொஞ்சமும் முகம் சுழிக்காதவளாய் என்னைச் சட்டை செய்யாமல் விலகிப்போனது முதலில் ஆச்சர்யப்படுத்தியது என்றாலும் பின்னர் அவளைப் பற்றி கொஞ்சம் தெரிந்ததுமே, அவளுடைய மனம் கணக்குப்போடும் வேகத்திற்கு அன்றைக்கு நான் என் சீனியர்களிடம் இருந்து அரக்க பறக்க வேகமாய் வந்தது, முகத்தில் மறைக்க நினைத்தாலும் முடியாமல் பெருகிவந்து கொண்டிருந்த வியர்வை, அதுவரை பார்த்திராத ஒரு பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்னது இதையெல்லாம் வைத்து பிண்ணனியை அவள் ஊகித்திருக்காவிட்டால் தான் தவறு.

ரோட்டில் டுவீலர் ஓட்டும் சமயங்களில் எப்பொழுதுமே லைட்டை High Beam போடாமலிருக்கும் நான் சில சமயத்தில் மட்டும் போட்டு, பார்க்கும் அளவிற்கு சாதாரணமானவன் தான். திரிஷாவின் பிட்டு படம் வெளியாகியிருந்த சமயத்தில் அது திரிஷாவா இல்லையா என்பதைப்பற்றி பிஎச்டி செய்யும் அளவிற்கு ஆராய்ந்து விஷயத்தை சேகரித்து வைத்திருந்தவன். இதிலெல்லாம் தவறில்லை தான், ஆனால் இதையெல்லாம் வைத்துக் கொண்டும் நான் அசாதாரணமானவன் என்று நினைத்துக் கொண்டிருந்ததைத் தான் போட்டு உடைத்தாள் மைதிலி.

நான் ஆங்கிலத்தில் ஜீரோவாக இருந்து வந்ததற்கு பெரும்பாலும் சொல்லும் காரணம் தமிழில் ஹீரோ என்பது, அதையும் போட்டுடைத்தாள் ஒருநாள், ரேகிங் தந்த உரிமையிலும் சாரி சொல்லும் சாக்கிலும் சென்ற என்னிடம் மிகச்சாதாரணமாக பேசத் தொடங்க, நான் என்னைப் பற்றி பெருமை பீற்றத் தொடங்கினேன், டிஸ்டிரிக்ட் பர்ஸ்ட், எல்லாவற்றிற்கும் வைரமுத்துவின் சிலவரிகளை எடுத்துவிடும் சாகஸம், ல, ள, ழ வில் காட்டும் வித்தியாசம், எல்லாவற்றையும் சிறிய புன்சிரிப்புடன் புறக்கணித்தவள். தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் கேட்க நான், சுஜாதாவையும் பாலாவையும் பொன்னியின் செல்வனையும் வைரமுத்துவையும் பற்றிச் சொல்ல, புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.

"அப்போ சுஜாதா எழுதறதெல்லாம் இலக்கியமே கிடையாதுங்கிறீங்களா?" என்று கேட்டு வந்த என்னை "ஏன் மைதிலி சுஜாதா இப்படியெல்லாம் எழுத மாட்டேங்கிறார்." என்று கேட்க வைத்தில் இருந்த சாமர்த்தியம் அத்துனையும் மைதிலியுடையதே, இந்த விஷயத்தை சாதாரணமாக தமிழ் இலக்கியத்தின் தடம் அறிந்த யாருமே செய்திருக்க முடியும் ஆனால் மைதிலியின் சிறப்பே, இதுபோல் நான் தமிழிலும் தெரிந்து கொண்டது மிகச்சாதாரணமானதே எனத்தெரிந்ததும் எனக்குள் வந்த தாழ்வுமனப்பான்மையை வந்த இடம் தெரியாமல் ஆக்கமுடிந்ததுதான். இது ஒரு பக்கமாகவே இருந்துவிடாமல் அவளைப்பற்றிய என் கருத்துக்களை மறைக்காமல் சொல்லும் உரிமையும் இருந்தது.

"மைதிலி இனிமேல் நீ என் கூட டுவீலரில் வரவேண்டாம்."

நான் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டே நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொண்டிருந்தாலும்,

"ஏன்?" என்று அவள் சிரித்துக்கொண்டே கேட்டது, நான் சொல்லவருவதை என் வாயால் கேட்கும்

"இல்லை எங்கே மேல பட்டுடுமோன்னு வண்டியின் பின்னாடி உட்கார்ந்திருக்கிறதும், சில நேரம் பட்டுவிடக்கூடிய சமயங்களில் முதுகில் கையை வைத்து தடுத்துற்றதும் கஷ்டமாயிருக்கு, நான் ஒன்னும் அவ்வளவு நல்ல பிள்ளைக் கிடையாதுதான் அதைப்பத்தி ஒன்னும் பேசவேண்டாம், இது சரியா படலை. நான் என்னமோ தப்பு செய்ற மாதிரி ஒரு ப்லீங் வருது தெரியுமா?"

பலமாகச் சிரித்தவள்,

"தெரியும் நீ இதைப் பத்தி பேசுவேன்னு நிச்சயமாத் தெரியும். என்னத்தைச் சொல்லச் சொல்ற, எனக்கென்னமோ உரசிக்கிட்டுப் போறது பிடிக்காதுன்னு வைச்சிக்கோயேன், நீ மட்டுமில்லை, கல்யாணம் ஆனதுக்குப்பிறகு என் புருஷன் கூட போனாலும் இப்படித்தான் போவேன். அதுமட்டும் நிச்சயம்."

சொல்லிவிட்டு நிறுத்தியவள்,

"அப்படியில்லாட்டி இப்படி வைச்சுக்கோயேன், வண்டியிலப் போறப்ப எங்கப் பட்டுற்ற மாதிரி இருந்தா, சின்னப் பையனாச்சே எதாவது கனாக் கண்டுக்கிட்டே வண்டியைக் குடை சாச்சிடுவான்னு பயப்படுறனோ என்னவோ?" கேட்டுவிட்டு பலமாகச் சிரித்தாள், நான் மெதுவாக,

"அப்படியே பட்டுட்டாலும்..." சொல்ல,

நான் எதைச் சொல்ல வர்றேன்னு தெரிந்ததால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டாள். இதே போன்றதொரு உரையாடல் இதற்கு முன்பொறுமுறை வந்திருக்கிறது,

"ஏய் உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் என்னைப் பத்தி தப்பா பேசுறாங்க."

"என்ன பேசுறாங்க."

"அயர்ன் பாக்ஸ் அப்படின்னு..."

நான் உண்மையில் மைதிலி என்னிடம் இதைப்பற்றிய பேச்சை எடுக்க மாட்டாள் என்றே நினைத்தேன், பல சமயங்களில் எங்கள் பேச்சு பல தளங்களில் பரவியிருக்கும் நேரங்களில் கூட தவறான திசையில் செல்ல ஆரம்பிக்கும் பொழுது சில நேரங்களில் முதலில் முற்றுப்புள்ளி வைப்பவள் மைதிலியாகத்தான் இருக்கும். அதெல்லாம் கொஞ்ச காலம் நாங்கள் பழக ஆரம்பித்த கொஞ்ச காலம் வரைதான் பின்னர் சிறிது பழக்கமான பிறகு, அதெல்லாம் போய் இருந்தது, நான் அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு,

"என்னை என்ன பண்ணச் சொல்ற மைதிலி, பசங்கக் கிட்ட அப்படி பேசாதீங்கடான்னு சொல்லவா, இல்லை அவங்க ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணச் சொல்றியா இது இரண்டுமே என்னால முடியாதுன்னு உனக்குத் தெரியும். எல்லாரும் என்னை மாதிரி நல்லவங்களா இருப்பாங்கன்னு நீ எப்படி மைதிலி நினைக்கலாம். மற்றபடிக்கு நான் அதை எப்பவுமே ஒரு இஷ்யுவா பார்க்கலை..." என்று பிம்பத்தை உருவாக்க நினைத்து என்னென்னவோ பிதற்ற, கன்னத்தில் இடித்தவள்.

"ரொம்பத்தான், அப்ப அவங்க மேலெல்லாம் தப்பேயில்லேங்கிறியா?"

இதுபோல் பலசமயம் அவள் என்னிடம் கேட்ட விடையில்லா கேள்விகளுக்கு கஷ்டப்பட்டு விடைதர என்றுமே நினைத்ததில்லை, அப்படித்தான் கல்லூரியின் கடைசி வருடத்தில் ஒரு நாள் அவள் கேட்ட அந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தேன்.

"ஏண்டா உங்கம்மாக்கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே, மோகனா அக்கா சொன்னாங்க." நான் பதிலே சொல்லவில்லை. ஆனால் எங்கம்மாவிடம் நான் சொன்ன விளக்கம் அவள் காதிற்கு வந்திருக்கும் என்று தெரியும் எனக்கு,

சாதாரணமாக பின்னால் சுற்றிக் கொண்டிருந்த பெண்களைப்பற்றியே அம்மாவிடம் சொல்லிய எனக்கு மைதிலியைப் பற்றி வீட்டில் சொல்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அம்மாவிற்கும் மைதிலியை பிடித்திருந்தது, ஆரம்பத்திலிருந்தே என்னைப் பற்றிய பெரும்பாலான முடிவுகளை பெண்கள் தான் எடுத்துவந்தார்கள்.

"டேய், உன் ஹைட்டுக்கு உனக்கு பேஸ்கெட் பால் நல்லாயிருக்காது, வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்துக்கோயேன்." அம்மா சொல்ல, ஆசை ஆசையாய் பேஸ்கெட்பால் கோச்சிங்கில் சேர இருந்தவன், மைக்கேல் ஜோர்டன் மற்றும் இன்னபிற ஆட்களை புறந்தள்ளிவிட்டு வாலிபாலில் சேர்ந்தேன்.

"தம்பி மேக்ஸ் உனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் அதில பெரிய ஆளா வர்றதுக்கு நிறைய உழைக்கணும் அதை நீ பண்ணவே மாட்ட, அதனால சும்மா பீலா உட்டுக்கிட்டு அலையாம, கம்ப்யூட்டர்ஸ்ல சேர்ந்துறு. நல்ல பேக்ரவுண்டும் இருக்கு சாப்ட்வேர்ல பெரிய ஆளா சீக்கிரமே வந்திருவே." கணக்கில் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் வாங்கிய சென்டம் அதன் பேரில் ஆர்வத்தைத் தூண்ட ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கப்பட்டு கம்ப்யூட்டர்ஸில் சேர்ந்தேன்.

"தாஸ் ஜாவாவில் எல்லாம் ப்ரொக்கிராம் எழுத ஆயிரம் பேர் வருவான், விண்டோஸ், லினக்ஸில் டிவைஸ் டிரைவர்ஸ் எழுதுறதுக்கு ஆளுங்களே கம்மியாத்தான் இருப்பாங்க, உனக்கு இருக்குற அறிவுக்கு நீ பெரிய ஆளா வருவ அந்த பீல்டில், நான் நினைத்தால் இப்ப படிக்க முடியுமா சொல்லு." மைதிலி சொல்ல, ஆசை ஆசையாய் திட்டம் போட்டு வைத்திருந்த ஜாவா ஜேடுஈ ப்ரோஜெக்ட்டை கைகழுவினேன்.

இதில் அம்மா அக்காவிற்கு சிறிது அதிர்ச்சியிருந்தாலும் சந்தோஷம் தான், எங்கள் குடும்பமும் மைதிலி குடும்பமும் பேமிலி பிரண்ட்ஸ்களா ஆனதில் இருந்து வாரக்கடைசி நாட்கள் பார்ட்டிதான். ஆனாலும் மைதிலியின் அம்மா, எங்க அம்மாக்கிட்ட கேட்டு அம்மா என்னிடம் கேட்டதும் நான் முற்றிலுமாக மறுத்துவிட்டேன்.

"அம்மா மைதிலியை என் பொண்டாட்டியா நினைத்துக் கூட பார்க்கமுடியலை. அவ எனக்கு ஒரு நல்ல பிரண்ட் அவ்வளவுதான். இப்ப நம்ம கிரி மாமா பெண்ணையே எடுத்துக்கோயேன். என் கூடவேத்தான் படித்து வளர்ந்தாள் அவளையும் என்னால பொண்டாட்டியா நினைத்து பார்க்க முடியவில்லை. அது ஏன்னு தெரியலை."

என்னை ஓட்டுவதற்கு மைதிலிக்கு இது ஒரு சாதகமா போய்விட்டது.

"உனக்கெல்லாம் கடலை போடுவதற்கு என்னை மாதிரி பொண்ணு வேணும், கல்யாணத்துக்கு வேண்டாம் அப்படித்தானே. தலையில கொட்டி, தப்பு பண்ணா தப்பை சுட்டிக்காட்டி இதெல்லாம் வேண்டாம், உனக்கும், உனக்கும் நீ சொல்றத கேட்கிற மாதிரி பொண்ணுதான் வேணும் அதானே..."

பின்னர் டிஷர்ட்டை இழுத்து விட்டுக்கொண்டே,

"இல்லை வேற எதாவது காரணம் இருக்கா?" சிரித்துக் கொண்டே கேட்க,

"அசிங்கமா பேசின பல்லை உடைச்சிருவேன்."

உண்மையிலேயே கோபமாக பதில் சொன்னேன்.

"சரி, விஜய் படம் ஏதோ வந்திருக்காம் கலையரங்கத்தில் வர்றியா?"

அழகாக பேச்சை மாற்றினாள், இருந்தாலும் நான் தமிழ்ப்படங்கள் பார்ப்பதில்லை என்று தெரிந்திருந்தும் கேட்பவளைப்பார்த்தால் கோபமாக வந்தது,

"அந்தப் படத்தையெல்லாம் மனுஷன் பார்ப்பான்."

"ஆமாமாம், நீங்கல்லாம், கலைப்படம்னு சொல்லிக்கிட்டு பிட்டுப்படத்தைத் தானே பார்ப்பீங்க, அதுக்கு விஜய் படம் எவ்வளவோ தேவலாம்."

அவள், நான் நகிஸா ஒஷிமாவின், இன் த ரிஆல்ம் ஆப் சென்ஸஸ் படத்தின் டிவிடியை ஆயிரத்திற்கும் அதிகமான விலைகொடுத்து வரவழைத்துப் பார்த்ததைத்தான் அப்படிச் சொல்கிறாள் எனத் தெரிந்தாலும், அது போன்ற என்று சொல்ல முடியாவிட்டாலும் வெளிநாட்டு கலைப்படங்களை அறிமுகப்படுத்தியது மைதிலிதான். நான் சிரித்தபடியே,

"மைதிலி நீ அந்தப் படத்தை பாக்கலையே தரவா?" லேசாய் பயமாய் இருந்தாலும் கேட்க,

"உதைபடுவே படவா."

ஒருவழியாக நான் செய்திருந்த ப்ரொஜெக்டின் பயனாய் நல்ல அமேரிக்கக் கம்பெனியில் வேலை கிடைக்க, அமேரிக்கா வந்து இரண்டு வருடமாகிறது, மைதிலி ஏதோ ஒரு கல்லூரியில் லெக்சரரா இருக்கிறாள், இப்பக் கல்யாணமாம். சந்தோஷமாக இருந்தது என்றாலும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே மைதிலியை கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லையா என்று. எல்லா தடவையும் இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.

அமேரிக்காவிலிருந்து திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பி வந்திருந்தேன். நேராய் மைதிலியைப் பார்ப்பதற்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் பூசியதைப் போலிருந்தாள் மைதிலி, கல்யாணக் கலை முகத்தில் தெரிந்தது, என்னைப் பார்த்ததும் சிறிது வெட்கப்பட்டாள் எனக்கே கூட ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

"என்னா மைதிலி மாப்பிள்ளை எப்படி போட்டோ எதுவும் வைச்சிருக்கியா?"

"ம்க்கும் அது ஒன்னுதான் குறைச்சல் இப்ப யாரு நான் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு வருத்தப்பட்டா, இதுக்காக நீ கூட வந்திருக்க பாரு அமேரிக்காவில் இருந்து.

அப்புறம் அந்தப் பையனைப் பத்திக் கேட்டல்ல, எங்கப்பாவோட தூரத்துச் சொந்தம். அப்பாவும் நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னதும், என்கிட்ட இவனைக் கட்டிக்கிறியான்னு கேட்டாரு நான் மறுக்கலை ஆமாம்னும் சொல்லலை."

எனக்கு கொஞ்சம் ஆர்வமாய் இருந்தது மைதிலியின் மாப்பிள்ளையைப் பார்க்க, மனது இல்லை இல்லையென்று சொன்னாலும் அவனுடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்சம் கல்யாண வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தேன். மாப்பிள்ளை வீட்டிலிருந்து கல்யாணத்திற்கு முதல் நாள் இரவு வரவேண்டியது தான் பாக்கி, வந்ததும் மாப்பிள்ளை அழைப்பு பின்னர், இரவு நிச்சயத்தார்த்தம் பின்னர் காலையில் ஆறு பத்துக்கு கல்யாணம்.

ஏழுமணியிருக்கும், மைதிலியின் அப்பா என்னைப் பார்ப்பதற்கு வந்திருந்தார்,

"மோகன், மாப்பிள்ளை கடைசி நேரத்தில் பிரச்சனை பண்றார், யாரோ நம்ம மைதிலியைப் பத்தி தப்பா லெட்டர் போட்டுட்டாங்களாம். இப்ப கல்யாணத்தை நிறுத்தணும்ங்கிறாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..."

நானும் என் பங்கிற்கு மாப்பிள்ளைக்கு போன் போட்டு பேச, அந்தப்பக்கம் மைதிலியைப் பற்றி ரொம்பவே கேவலமாப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். விஷயம் தெரிந்து மைதிலியின் அம்மா அழத்தொடங்க, மைதிலியின் கண்களில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. நான் மெதுவாக என் அம்மாவின் சம்மதத்தை வாங்கிவிட்டு பின்னர் மைதிலியின் தந்தையிடம்,

"மாமா உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லைன்னா நான் மைதிலியைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்." சொன்னதும் கையைப் பிடித்துக் கொண்டார்.

நான் ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கல்யாண மண்டபத்திலும் சரி, மற்றவர்களுடைய முகத்திலும் சரி அப்படியொரு சந்தோஷம், சற்று நேரத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை அனைவரும் நொடிப்பொழுதில் மறந்துவிட்டது ஆச்சர்யமாகயிருந்தது. நான் நேராய் அம்மாவிடம்,

"அம்மா இங்க நடந்ததில் எதுவும் அரசியல் இல்லையே?"

நான் கேட்க வந்ததை புரிந்து கொண்ட அம்மா, வந்து கன்னத்தில் குத்திவிட்டு,

"ஆமாம் உன்னை கட்டிக்கிறதுக்காகத்தான் மைதிலி செஞ்ச நாடகம் இதுன்னு நினைச்சியா? ஆனாலும் உனக்கு மிதப்பு ஜாஸ்திடா. ஆளைப்பாரு ஆளை, மைதிலியை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அந்தப் பையன் கொடுத்து வைச்சது அவ்வளவுதான். உன்னோட இந்த லூசுத்தனமான கேள்வியை அவக்கிட்ட கேட்டு வைச்சிறாதே." சொல்லிவிட்டு காதைத்திருகினார்.

முதலிரவின் பொழுது,

"மைதிலி, இங்கப்பாரு இது எப்படி நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. இதில் எதுவும் உள்குத்திருந்து அதுக்கு நீயோ, இல்லை எங்கம்மா அக்காவோ, இல்லை உங்க வீட்டில் இருப்பவர்களுக்கோ சம்மந்தம் இருந்தால் அது என் பார்வைக்கு வருவதை மட்டும் தவிர்த்துவிடு..." நான் சொன்னதும் மைதிலி சிரித்தாள் எப்பொழுதையும் போல என்னால் இந்தமுறையும் அவளின் சிரிப்பில் இருந்து ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

Read More

Share Tweet Pin It +1

14 Comments

In Only ஜல்லிஸ்

தமிழிஷ் ஓட்டு நம்பகமானதா?

நண்பர் ஒருவர் தமிழிஷ் ஓட்டு காரணமாய் பெரிய சண்டை போகுதே பார்த்தீங்களா என்று கேட்டார், நான் அத்தனை தூரம் பதிவுகளில் தற்சமயம் இயங்காவிட்டாலும் கண்ணில் படத்தான் செய்தது. நான் தமிழ்மண ஓட்டுப்பட்டையைக் களவாடி மகுடும் சூட்டிக்கொண்ட சூத்திரம் தெரிந்தவர் என்பதால் தமிழிஷில் முடிந்தால் செய்து காட்டுங்கள் என்றார். ஆனாலப் பட்ட 32 digit key வைத்து செய்யும் என்கிரிப்ஷனையே உடைத்து களவாடிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் தமிழிஷ் எல்லாம் பெரிய விஷயம் இல்லை என்று சொல்லி விட்டு எப்படி ஓட்டிங் முறை செய்திருக்கிறார்கள் என்று பார்த்தேன். ம்ம்ம் ஓட்டை இருந்தது. அதற்கான டெஸ்டிங்கைத்தான் நேற்றைய பதிவில் செய்தேன்.

அந்தப் பதிவிற்கு ஓட்டுப் போட்டதாகச் சொல்லும் யாரும் எனக்கு ஓட்டுப் போட்டிருக்க நியாயம் இல்லை. sayanthan, sanjaigandhi, jaichan, nandhuu, senthazalravi, fedthemaster இதில் சயந்தன், சஞ்செய் காந்தியிடம் முன்னமே பேசியாகிவிட்டது ஆனால் நான் டெஸ்டிங்கை கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்ததால் செய்து வந்ததை நிறுத்திவிட்டேன். kks, chuttikurangu, hihi12, kilukku இவர்கள் எல்லாம் நான் டெஸ்டிங் நிறுத்திய பிறகு போட்டவர்கள். ஆனால் ஒரு விஷயம் சொல்ல முடியும், உங்கள் அனுமதியில்லாமலே ஒருவர் உங்கள் பெயரில் தனக்கு வேண்டிய பதிவிற்கு ஓட்டுப் போட முடியும் தமிழிஷில்.

எப்படி என்பதை சொல்ல விரும்பவில்லை.

PS: கள்ள வோட்டு போட உபயோகித்துக்கொண்ட அனைத்து நபர்களிடமும் ஒரு சைலண்ட் மாப்பு கேட்டுக்கிறேன் :(, nothing personal only testing.

Read More

Share Tweet Pin It +1

29 Comments

In Layoff ஈழம்

ஐயோ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை

சசி ஒரு பதிவெழுதியிருந்தார், அவரளவிற்கு தைரியம் கிடையாதென்பதால் அது போன்றதொரு பதிவை நான் போடவில்லை. அவ்வளவே. 'தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்' என்பதில் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது, அப்படியே ஸ்டாலினின் 'You cannot make a revolution with silk gloves.' என்பதும். ஆனாலும் மக்கள் இப்படிக் கொத்துக்கொத்தாய் உயிரிழக்கும் பொழுது, நாம் இது வரை மனதில் வைத்திருந்த நியாயங்கள் எல்லாம் அநியாயங்களாய் நீள்கின்றன. அடிப்படைகளையே மாற்றிக்கொள்ளக்கூட மனம் தடுமாறுவதில்லை, மரணம் அத்தனை வலிமையான ஆயுதம். ஆனால் இதைக் கொண்டு தான் இராஜபக்ஷே போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து பயமுறுத்துகிறார்கள் எல்லாவற்றையும் துறந்து விட்டு இழந்து விட்டு ஓடிவிடு இல்லையென்றால் அழிக்கப்படுவாய் எனும் பொழுது எந்தப் பக்கம் பேசுவது என்ற குழப்பமே நீள்கிறது. இந்திய சுதந்திரம் அஹிம்சையால் பெறப்பட்டது என்பதில் எனக்கு இன்னமுமே கூட நம்பிக்கையில்லை, அதேபோல் ஆயுதம் தாங்கிய போராட்டாம் விடுதலை பெற்றுத்தராது என்பதிலும் கூட.

Capgemini ல் இருந்து 1600 நபர்களை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது, சென்னை, புனே, ஹைதராபாத் என்று Kanbay இருந்த இடங்களில் இருந்து வெளியேற்றம் நடந்திருக்கிறது. Kanbayவின் முக்கியமான க்ளையண்டான HSBC அதனுடைய ப்ராஜக்ட்களை திரும்ப வாங்கிக் கொண்டதால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம். என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் இப்படி நடந்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, உச்சிக் கொண்டையாகிய சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியின் ஈறும் பேனும் இது போன்ற லே ஆஃப்கள் ஆனால் தாழம்பூக்களை மனம் இயற்கையாகவே விரும்புகிறது என்ன செய்ய, தனக்கு வந்தால் தெரியும் ஈறும் பேனும் என்று இளக்காரம் பேசும் மக்களுக்கு புன்சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு நகரவேண்டியிருக்கிறது.



ஜெயமோகனின் அனல் காற்று படித்தேன், ஒரே காரணம் அய்யனார் அதைப்பற்றி எழுதியிருந்த சில வரிகள், முன்னர் யாரோ ஒருவர் பெயர் மறந்துவிட்டது கேட்ட 'படிச்சிட்டீங்களா'விற்கு இல்லை என்றும் படிக்கும் ஆவல் இல்லையென்றும் சொல்லியிருந்தது நினைவிற்கு வருகிறது. அய்யனார் சொல்லியிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளுக்காக படிக்க நேர்ந்தது, ம்ஹூம் தூக்கம் வராதா ஒரு இரவில் இன்னும் கொஞ்சம் நேரம் தூக்கத்தை தள்ளிப் போட உதவியது. ஜெயமோகனின் வகையான எழுத்தில்லை இது, என்பதைத் தவிர்த்து, வேறு யாராவது எழுதியிருந்தால் இரண்டாம் பாக முடிவில் தூக்கியெறிந்திருப்பேன். எனக்கு ஆதவன் வாசனை அதிகம் தெரிந்தது, நான் ஆதவனை அதிகம் படித்தது காரணமாய் இருந்திருக்கலாம். ஆதவன் பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தைப் பற்றிய் எழுதியதும் காரணமாய் இருந்திருக்கலாம், கொஞ்சம் போல் சாரு வாசனை வந்தது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. எப்பொழுது ஜெமோ எழுத்து படித்தாலும் நான் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பேன் என்பதைப் போலவோ என்னுடைய கற்பனைகளைப் போலவே இருப்பதைப் போலவோ இருக்கும். அனல் காற்று இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு மூன்று முறை Mother Fucker என்று வந்துவிட்ட காரணத்தாலேயே இதை இன்செஸ்ட் வகைக் கதை என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன், என் பெயர் ராமசேஷனில் Mother Fucker வார்த்தைகள் இல்லாமலே அதைப் பற்றிச் சொல்லியிருப்பார். ஒரு எல்லையைத் தாண்டாமல் ஜெமோ எழுதியிருப்பதைப் போலவே தோன்றியது அவராய் வகுத்துக் கொண்ட அந்த எல்லையெல்லாம் தாண்டி மக்கள் எழுதத் தொடங்கி எழுதி காலமாகுது என்று சொல்ல நினைத்தேன். சொல்லிட்டேன்.

இந்தப் பதிவை வைத்து ஒரு டெஸ்டிங் செய்யலாம் என்ற ஒரு ஆசை, செய்யப் போகிறேன். ரிசல்ட் நான் எதிர்பார்ப்பதைப் போல் வந்தால் சொல்கிறேன்.

பசங்க படம் இன்னும் பெங்களூரில் வெளியாகலை நல்லாயிருக்கு என்று மக்கள் சொல்லும் பொழுது பார்க்க ஆசையாகயிருக்கிறது. வெளியாகாமல் போகக்கூட வாய்ப்பிருக்கிறது, இப்படி மிஸ் ஆன படம் தான் சுப்பிரமணியபுரம்.

தலைப்பை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. புரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க புரியாதவங்க புரிஞ்சவங்களைக் கேளுங்க

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

நியூட்டனின் 3ம் விதி படத்திற்குச் சென்றிருந்தேன் எல்லாம் தலைவிதி தான். 'இன்னும் எத்தனை சபர் போக வைப்பாய் என் ரப்பே' என்ற புலம்பலைப் போல இன்னும் எத்தனை திருப்பங்கள் வைப்பாய் 'தாய்முத்துசெல்வா'('ச்'சன்னா கிடையாது இடையில்) என்று கேட்க நினைக்கும் அளவிற்கு திருப்பங்கள். மொக்கையான S.J. சூர்யா படமல்ல என்ற திருப்தி மட்டும் தான். ஹீரோயின் பயப்படும் பொழுது நமக்கு உண்மையிலேயே பயமாய் இருக்கிறது! தமிழ்நாட்டுக்காரர்களின் மூளையே மூளை என்று நினைக்க வைத்த கமெண்டுகள் சில காதில் விழுந்தன, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவரிடம் இருந்து. பாடல் காட்சி ஒன்றில் ஹீரோயின் துண்டொன்றை மட்டும் கட்டிக் கொண்டு வந்து நிற்க, இவர், "பிடிமானமே இல்லாம எப்படி நிக்குது பார்? பெஃபிகால் எதுவும் போட்டு ஒட்டியிருப்பாங்க்யலோ!" என்று கேட்டார் நான் யோசித்துப் பார்த்தேன் 'ஆம்பிள்ளைகளுக்கெல்லாம் நிக்குமே நமக்கென்ன இருக்கு' என்று. அப்பத்தான் ஞாபகம் வந்தது நாமென்னைக்கு மாரோட டவல் கட்டியிருக்கோம் கட்டினா இடுப்பில் தான கட்டுவோம், அங்கத்தான் பிடிமானம் இருக்குமேன்னு. :lol: தேடிப்பிடிச்சிருப்பாங்க்யன்னு நினைக்கிறேன், ஒன்னையுமே காணோம். cleavage காண்பிப்பதற்கு தூக்கி நிறுத்த வேண்டியிருக்கிறது, பாவம் சின்னப்புள்ளைங்ய பார்த்து பயப்படுதுல்ல.



ஜெயலலிதாவின் இந்த மாற்றம் நம்ப முடியாததாக இருக்கிறது என்றாலும் ஜெயலலிதாவின் மூலமாய் ஈழத்திற்கு ஒரு தீர்வு வருமென்றால் அதை நிச்சயம் நான் ஆதரிக்கிறேன் இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஓட்டுப்பொறுக்கி அரசியலின் இன்னொரு முகம் தான் இந்த மாற்றம் என்றால் அதைப் பார்த்து வேதனைப்பட மட்டுமே முடிகிறது. ஈழ மக்களைத் தொடர்ச்சியாக இந்த மூன்றாண்டுகளில் அவதானித்து வந்திருக்கிறேன், பெரும்பான்மையானவர்களுக்கு தமிழக அரசியலில் அத்தனை பெரிய ஈடுபாடு கிடையாது, அதைப்போலவே தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றியும். நான் அது அவசியம் என்று நினைக்கவில்லை ஏனென்றால் அவர்கள் நிலை அப்படி, ஆனால் தமிழகத்தின் பின்புலத்திலிருந்து ஈழத்தின் நிலையைப் பார்ப்பவர்களுக்கு தற்பொழுது நடைப்பெற்று வரும் தமிழக அரசியல் விளையாட்டுக்களை கவனிப்பவர்களுக்கு ஈழத்தவர்களைப் போல் சடாறென்று ஜெயலலிதாவை நம்பிவிட இயல்வதில்லை. எல்லாவற்றையும் மறந்து ஞானியை ஏற்றுக்கொண்டதைப் போல் ஏற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அருகதை உள்ளவரும் அல்ல.

எதேட்சையாகப் பார்த்த சீமானின் நெல்லைப் பேச்சு சட்டென்று கவர்வதாக இருந்தது, நல்ல தமிழ் வளம் இருக்கிறது அவரிடம் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், கமல் அளவிற்கு தடுமாற்றம் இல்லாமல் எளிய தமிழில் அவரால் அழகாக பேச முடிந்திருக்கிறது. சீமான் அது இது கைது என்று கிளப்பிவிட்ட பிரச்சனையில் எப்பொழுதையும் போல் அந்தப் பக்கம் தலை வைத்துப் பார்க்கவில்லை. எத்தனை பெரிய மேடை திரண்டிருந்த மக்கள் என்று தெரியாது கேமரா ஒரு பக்கத்தில் இருந்து நகரவில்லை. ஆனால் அவர் மேடையை உபயோகித்துக் கொண்ட விதம் பிடித்திருந்தது.



இந்த விளம்பரங்கள் அனிமேஷன் இல்லை என்று சொன்ன பொழுது என்னால் நம்ப முடியவில்லை தான். இவை மனிதர்களை நடிக்க வைத்து எடுக்கப்பட்டவை என்பது கொஞ்சம் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

IPL இந்த முறை கொஞ்சம் போல் சீரியஸாக போகிறது. எல்லோரும் ஒரே அளவில் இருக்கிறார்களாயிருக்கும் KKR தவிர்த்து. ஆஸ்திரேலியர்கள் விளையாடும் அத்தனை அணியையும் சப்போர்ட் செய்தாலும் ;) ராஜஸ்தான் ராயலும், சென்னையும் ஃபேவரைட்ஸ். போன முறை இருவரும் ஃபைனல் வந்து நெஞ்சில் பாலை வார்த்தார்கள், இந்த முறை எப்படி நடக்கும் தெரியவில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி வீரர்களே IPLல் சிறப்பாக ஆடுவது சந்தோஷமாக இருக்கிறது.

ட்விட்டரில் ப்ரூனோவுடன் சச்சின் டெண்டுல்கர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு வருடமாக இதைப் போன்ற ஒரு விவாதத்தை அவர் நிறைய பேரிடம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அத்தனை பொறுமை கிடையாது, முதல் இரண்டாம் முறை எல்லாம் சரியாகப் பேசுவேன் மூன்றாவது முறை செய்த விவாதத்தையே திரும்பவும் இன்னொரு முறை செய்ய மாட்டேன் என் பக்கம் சரியாகவே இருந்தாலும் கூட. சச்சின் விஷயத்தின் என் பக்கம் சரி என்று 100% சொல்ல முடியாது ஆனால் நான் அதைப் பற்றி சொல்ல வந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள வித்தியாசமான ஒரு அட்டிட்டியூட் வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன். சச்சினை அவருடைய ஆட்ட நேர்த்திக்காக பாராட்ட நினைத்தாலும் அவருடைய சுயநல விளையாட்டு அதை முற்றிலுமாக என்வரையில் மறைத்துவிடுகிறது. அவர் இந்திய அணிக்காகவென்று விளையாடி வெற்றி பெறவைத்த ஆட்டங்கள் அவர் தனக்காக விளையாடிக் கொண்ட ஆட்டங்களுடன் ஒப்பிட்டால் மிகக்குறைவாக இருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

76 Comments

In அகிலா கதைகள் அறுபத்தைந்து காதல் காமம்

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்


அகிலாவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த பொழுது மணி மூன்றரை இருக்கும். வீட்டிற்கு வந்ததில் இருந்து அகிலா கேமராக் கண்கள் கொண்டு வீட்டை ஸ்கேன் செய்வதாய் உணர்ந்தேன் நான்.

"என்னடி பார்க்கிற!"

"இல்லை பாச்சுலர் வீடு மாதிரி தெரியலையே! யாரோ ஒரு பொண்ணு இருந்து கவனிச்சிக்கிற வீடு மாதிரியில்ல இருக்கு. அதான் பார்த்தேன்."

அகிலாவிற்கு பொறாமையா? காலையில் இருந்து எவ்வளவோ பார்த்தாகிவிட்டது இதுவும் இருந்துவிட்டு போகட்டும். "வேற எதாவது கேர்ள் ப்ரண்டு இருக்கான்னு சந்தேகப்பட்டுடாத தாயே! வாழ்க்கையில் அந்தத் தப்பை நான் ஒரேயொரு தரம் தான் செய்திருக்கேன்."

அவள் சிரித்தாள்.

"சரி இரு நான் ஒரு காப்பி போட்டுட்டு வர்றேன்." நான் சிறிய அளவில் சமைப்பேன் என்பதுவரை அகிலாவிற்குத் தெரியும் அவளும் நான் போடுறேன் என்று வரவில்லை, வரமாட்டாள் என்றுதான் நானும் நினைத்தேன் தெரியும்.

நான் சமையற்கட்டில் பாலில் காபிப் பொடி கலந்து கொண்டிருந்த பொழுது அகிலா,

"தாஸ் நான் வாலிபால், கொக்கொ எல்லாம் விளையாடுவேன் தெரியுமா?"

எதற்காக அகிலா இதைச் சொல்கிறாள் என்று உண்மையில் புரியவில்லை. நான் சமையல்கட்டில் இருந்து வெளியில் வந்து,

"அதக்கு என்ன?" அவள் என் புத்தக ஷெல்பின் பக்கத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தாள். கேட்டுவிட்டு மீண்டும் உள்ளே நகர்ந்து சர்க்கரை கலக்கத் தொடங்கினேன்.

"அதனால என் ஹைமன்..." அவள் முடிக்கவில்லை நான் கைகளில் இரண்டு காப்பி கோப்பைகளை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தபடி.

"இன்னிக்கு நீ உதைபடாம போகமாட்டேன்னு நினைக்கிறேன். வாழ்க்கையில் பொண்டாட்டிகிட்ட கையை நீட்டுறது பெரிய அயோக்கியத்தனம்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை. என்னை நீ அது தப்புன்னு நினைக்க வைச்சிருவேன்னு நினைக்கிறேன்."

அவள் கைகளில் ஒரு கோப்பையை திணித்தபடி சொன்னேன். அவள் என்னை நிமிர்ந்து பார்க்கவேயில்லை, காலையில் இருந்து போய்க்கொண்டிருந்த இந்த விஷயத்தைப் பற்றி அகிலா கடைசியாக சொல்ல நினைத்தது இதுவாகத்தான் இருக்கும் இதற்கு மேல் பேசமாட்டாள் என்று தெரிந்ததால் நானும் அதற்கு மேல் வளர்க்காமல் விட்டுவிட்டேன். காபி குடிக்கும் வரை சும்மாயிருந்தவள்,

"நான் உன் பெட்ரூமைப் பார்க்கலாமா?"

அந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் நான் சிரித்தேன், அவளும் சிரித்தாள். என் பதிலுக்காய் காத்திராமல் என் பெட்ரூமிற்குள் நுழைந்தாள்.

"ம்ம்ம் பரவயில்லையே சுத்தமா வைச்சிருக்க!" மெத்தைக்கு பக்கத்திலிருந்த அபூர்வமாய் நானும் அவளும் சேர்ந்து இருக்கும் படி ஒரு புகைப்பட்டதை பெரிதாக்கி வைத்திருந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள், சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் என்னிடம்,

"எனக்கும் இதை ஒரு காப்பி போட்டுக்கொடுக்கிறியா தாஸ்!"

"செய்துட்டா போச்சு."

நகர்ந்து அறையில் நான் வரைந்து மாட்டிவிட்டிருந்த வண்ண ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இதெல்லாம் நீ வரைஞ்சதா!" நான் பதில் சொல்லவில்லை, அவளும் எதிர்பார்க்கவில்லை, "பிரமாதமாயிருக்கு! நீ இவ்வளவு நல்லா வரையுவன்னு சொல்லவேயில்லையே!" நான் வெறுமையாய் சிரித்து வைத்தேன்.



அதுவரை என்பக்கம் திரும்பாதவள் என்னை நோக்கித் திரும்பி காதலுடன் பார்த்து, "என்னையும் ஒரு படம் வரைஞ்சு கொடேன்!" என்று கேட்டாள். எனக்கு அந்தக் கண்களின் மொழி புரிந்தது. நான் நேரடியாகவே,

"தாயே உன்னை இனிமே தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு வைச்சிருக்கேன். தயவு செய்து வம்பு செய்யாமல் போய்டு தாயே!" என்றேன்.

அவள் மழுப்பவில்லை, நான் உன்னிடம் அதைக் கேட்கலையே என்று நடிக்கவில்லை.

"அதுக்குள்ள அலுத்துவிட்டதா?" என்றாள். காலையில் என்னிடம் அவள் உரையாடத் தொடங்கியதிலிருந்து அன்றைய பொழுது முழுவதும் ஒரு முறை கண்முன்னே வந்து மறைந்தது. நான் அகிலாவை முதலில் பார்த்து பின்னர் அவளைப் பிடித்துப் போனதிலிருந்து மனதில் உருவாக்கி வைத்திருந்த தருணம். எத்தனை முறை கற்பனை செய்து வைத்திருந்த உரையாடல்கள், ஆனால் எல்லாம் சுருண்டு கொண்டு கல்யாணத்திற்கு முன் இனிமேல் எனக்கு எதுவுமே வேண்டாம் என்பது போலிருந்தது.

"என்கிட்ட காண்டம் இல்ல!" நான் நடித்தேன்.

"பயமுறுத்திப் பார்க்கிறியா! ஊட்டியில் படுக்கைக்கு வரும் முன்ன உன்கிட்ட இருந்ததான்னு கேட்டுக்கிட்டா வந்தேன். இருந்தது உபயோகிச்சிக்கிட்ட இல்லாமல் இருந்திருந்தால் என்னால் என்ன சொல்லியிருக்க முடியும்..." அவள் உரையாடலில் இருந்த அறிவுஜீவித்தனம், அவளிடம் சற்று முன் நான் பார்த்த காமம் இல்லாமல் போயிருந்ததை காட்டிக் கொடுத்தது. "...பிடிக்கலைன்னா விடு, நான் பிடிக்காதவங்களை கம்பெல் செய்வதில்லை." நக்கலாய்ச் சிரித்தாள்.

அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று தெரிந்தது, என்னை உரையாடலுக்குள் இழுக்க நினைக்கும் அவள் மனம் புரிந்தது. நான் விலகிக் கொண்டிருந்தேன்.

"அகிலா, இது ஒரு கனவெனக்கு. எவ்வளவு சாதாரணமா கேட்டுவிட்ட ஒரு கண் பார்வையால் சம்மதமான்னு. எத்தனை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து எது சரியா வரும் என்று நான் கணக்கு போடாத நாட்களே இல்லை. இந்த ரூமுக்கு மட்டும் காதிருந்து கைகள் இருந்திருந்தால் நான் மனதிற்குள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு விட்டு உன்னை இந்நேரம் தன் கைகளால் நிர்வாணப்படுத்தியிருக்கும். அத்தனை கற்பனைகள் அத்தனை கள்ளச்சிரிப்புக்களைப் பார்த்திருக்கும் இந்த ரூம். என்ன செய்ய இன்னிக்கு காலையில் இருந்து நீ செஞ்சதுக்கு நான் உனக்கு கொடுக்கிற தண்டனை உன்னைத் தொடாம இங்கேர்ந்து அனுப்புறதுதான். இனி நான் உன்னை தொடறதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் தான். நீ கிளம்பு."

நான் பேசிக்கொண்டிருக்கும் பொழுது உன் முகம் வெளிப்படுத்தின உணர்ச்சிகள் அத்தனையையும் தனித்தனி ஓவியமா தீட்டணும் என்கிற ஆர்வம் வந்ததெனக்கு. முடித்ததும் சட்டென்று நெருங்கி வந்து காலையில் இருந்து நோகடித்த இதயத்திற்கான மருந்தை உதட்டு வழியாக வழங்கிவிட்டு நீயாய் பிரிந்து நின்றாய். நான் உன்னை தடுத்திருக்கவில்லை. கல்லாய் இருக்க உனக்கு மட்டும் தான் தெரியுமாயென்ன.

"இதிலேர்ந்து ஒரு ட்ராயிங்கை நான் எடுத்துக்கலாமா?" தேவையில்லாத கேள்வி உனக்கு என்று இல்லாத ஒன்று அந்த அறையில் எதுவுமே இருக்க முடியாது. நிர்வாண நிலையடையாத ஓவியம் ஒன்றை எடுத்துக் கொண்டாய்.

"ஞாபகம் வைச்சிக்கோ நீ ஒரு நாள் ஆசையா கேட்கிறப்போ நான் நிச்சயம் மறுத்து உன்னை அழவைப்பேன்." சிரித்தப்படி சொன்ன உன்னை வழியனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்ததும் அசைபோட நிறைய மீதியிருந்தது அன்றைய பொழுதுகள்.

March 05, 2009

10:11 AM aeswari: defloration - the act of having sexual intercourse with a virgin; devirgination.
me: எனக்கு அதுக்கு அர்த்தம் முன்னமே தெரியும்
aeswari: அப்ப ஜெயா முன்னாடி அப்படியான்னு கேட்டதுக்கு என்ன அர்த்தம்.
me: சும்மா ஜோக் பண்ணினேன் அகிலா :(
aeswari: இல்லை உனக்கு என் மேல டவுட்.
உன் கூட படுத்தவ தான வேற யார் கூடவும் படித்திருப்பான்னு
me: akila, this is idiotic
rubbish
உனக்கே நல்லா தெரியும், நீ வெர்ஜினா இல்லையா என்பது கூட எனக்கு ஒரு பெரிய பிரச்சனையே இல்லை என்று
aeswari: அப்ப நீ என்ன நம்பலை அதான

அடுத்த வரி அடிப்பதற்குள் அவள் அங்கே இல்லை, எல்லாம் என் முட்டாள்த்தனம். ட்ரீட் கேட்ட ஜெயஸ்ரீ காரணமாய்ச் சொன்ன defloration வார்த்தையும் அதை உபயோகித்து அகிலாவை வம்பிழுக்க நான் அவளிடம் கேட்ட 'அப்படியா'வும் இத்தனை தூரம் பெரிதாகும் என்று நான் நினைக்கவில்லை. அன்றைக்கு தலையில் ஜூஸைக் கொட்டிவிட்டுப் போனவள் தான், மொபைல் போனை அணைத்து வைத்திருந்ததால் என்னால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. அடுத்த நாள் காலை அலுவலகம் வந்த உடனேயே அவளிடம் இருந்து வந்த இந்தத் தாக்குதல் என்னைக் கொஞ்சம் நகர்த்தித் தான் பார்த்தது. என்னால் அகிலா அப்படிப் பேசுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் யோசனைத் திறன் மீதே எனக்குச் சந்தேகம் வந்த பொழுது ஜெயஸ்ரீயின் அழைப்பு வந்தது.

"சொல்லு ஜெயா"

"என்னப் பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை.

"என்னப் பிரச்சனையோ அவ அழறா! மூணு வருஷத்தில் அகிலாவை நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவுதானா. அவ தன்னோட ஷெல்லுக்குள் போய்க்கிட்டிருக்கா, சாட்டிங்கில் எதுவும் பேசாதீங்க போனிலையும் கூட எதுன்னாலும் நேரில் பேசுங்க. காலையில் என்னையுமே காரணமில்லாமல் திட்டிக்கொண்டிருந்தாள், அவ எது சொன்னாலும் மனசில் வைச்சிக்காதீங்க ப்ளீஸ்!" சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.

ஒரே அலுவலகம் தான் என்றாலும் வேறு வேறு கட்டடங்களில் இருந்ததால், என் இடத்திலிருந்து அவளிடத்திற்கு வந்திருந்தேன். நான் வருவதைப் பார்த்ததும் அவளாய் போய் ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ராஜா எனக்கும் அவளுக்கும் ஒரு நல்ல நண்பன், ஆனால் அவளை விடவும் சீனியர் சொல்லப்போனால் அவளுக்கு வேலை பகிர்ந்தளிப்பவன். பெரும்பாலும் அது போன்ற சமயங்களில் நான் நகர்ந்துவிடுவேன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று, அவள் அதை அன்றும் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்.

நான் ராஜாவிடம் நேரடியாய், "dude excuse me.," என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை சொல்லவில்லை என்னுடன் வந்தாள். சிறிது தூரம் வந்ததும், அவளாய்,

"அதான் வர்றேன்ல கையை விடு!" மெதுவாய்த்தான் சொன்னாள். அவள் என்னிடம் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் அமில மழை கொட்டிய அகிலாவாக அல்லாமல் பழைய சிடுமூஞ்சி அகிலாவாகத்தான் இருந்தாள், நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவளிடம் கோபமில்லை, கண்களில் ஆத்திரமில்லை அவள் அழுதிருப்பதற்கான சாயல் எதுவும் இல்லை ஜெயஸ்ரீ பொய் சொல்லியிருக்க ஞாயமில்லை. அவள் 'என்ன' என்பதைப் போல் தோளைக் குலுக்கிக் காட்ட, நான் அவள் கையை விடுவித்தேன். அலுவலகத்தை விட்டு வெளியில் பார்க்கிங்கிற்கு வந்து வண்டியை வெளியில் எடுத்தேன், அருகில் வந்து உட்கார்ந்து கொண்டவள் எதையும் பேசவில்லை.

டிஃபென்ஸ் காலனி அண்ணாச்சி ரெஸ்டாரண்டில் மூலையொன்றைக் கண்டுபிடித்து உட்கார்ந்ததும்.

"சொல்லு என்ன தான் உன் பிரச்சனை."

அவள் பதில் பேசவில்லை, டேபிளில் இருந்த பெப்பர் சால்ட் குடுவைகளைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.

"என் தப்பு தான் மன்னிச்சிக்கோ அப்படி கேட்டிருக்கக்கூடாது தான். நான் சத்தியமா விளையாட்டுக்குத்தான் கேட்டேன், நீ இவ்வளவு சீரியஸா எடுத்துப்பேன்னு நான் நினைக்கவேயில்லை!" அகிலா முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள், அவள் அழுதுவிடுவாள் என்று நினைத்தேன். சர்வர் இடைபுகுந்தார், அவள் சமாளித்துக் கொண்டாள்.

"நீ என்னயிருந்தாலும் ஜெயா முன்னாடி அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."

நான் அவள் முடிக்கட்டும் என்றிருந்தேன். அவளால் வார்த்தைகளைத் தேர்ச்சி செய்து அமைத்து பேச முடியவில்லை தடுமாறிக் கொண்டிருந்தாள்.

"மனசில இல்லாமையா வார்த்தையா வரும், உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. இதெல்லாம் நான் சரின்னு சொன்னதால தான இல்லாட்டி அப்படி ஒரு வார்த்தையை நான் கேட்டிருக்க வந்திருக்குமா? இந்த மூணு வருஷத்துல இப்படி ஒரு வார்த்தை நீ சொல்லியிருப்பியா? உன்னால என்னை அப்படி எப்படி நினைக்க முடிஞ்சது. அன்னிக்கு நான் உனக்காக எதையெல்லாமோ செஞ்சப்ப நீ என்னை அப்படித்தான பார்த்திருப்ப, நினைச்சிறுப்ப, அலையறா பாருன்னு..." அவள் தொடர்ந்து கொண்டிருந்தாள். எனக்கு அன்றைக்கு பொழுது நினைவிற்கு வந்தது, நான் எதிர்பார்க்காத விஷயங்களை எல்லாம் அவள் செய்தாள் தான் ஆனால் அவளை என்னால் ஒரு நிமிடம் கூட அவள் சொல்லிக் கொண்டிருப்பது போல நினைக்க முடியாது, அது அவளுக்கும் தெரியும். மூன்று வருட பழக்கம் எங்களிடையே அன்றைக்கு சுமூகமான உறவை சுலபமாகவே ஏற்படுத்தியது, சாட்டிங்கில் நாங்கள் பேசாத விஷயங்களே இருந்திருக்காது. என்னுடைய எல்லைகள் மூன்றாண்டுகளில் அவளுடைய நீள அகலங்களுக்கு நீண்டிருக்கிறது, நேரில் பேசிக்கொள்ளாத குறையே இல்லாமல் இருந்தது. அது அன்றைக்கு புரியவும் செய்தது, என்னைப் பற்றி அவளுக்கு அவளைப் பற்றி எனக்கு நாங்கள் தெரிந்து கொண்டதாக நினைத்ததை விடவும் அதிகம் தெரிந்திருந்தது.

நண்பர்கள் எச்சரித்திருந்ததால் நான் முதலில் எதையும் அவளிடம் வித்தியாசமாக முயற்சி செய்யவில்லை. ஆனால் அவளுக்கு அதெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவது என்பது அவள் உடலைப் பெறுவதற்கான லைசென்ஸ் கிடையாது என்று அவள் எனக்கு எழுதியிருந்தது நினைவில் இருந்தது. அவள் எழுதுவற்கென்று எழுதாமல் முழு மனதுடன் எழுதியிருந்தது புரிந்ததால், நண்பனே கணவனே அமைந்த விட்ட சந்தோஷத்தை அவள் கொண்டாடிக் கொண்டிருந்தாள் என்று நான் உணர்ந்து கொண்டேன். நான் அவளை இன்னும் மனைவியாகப் பார்க்காமல் காதலியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் காதலியுடனான திருமணத்திற்கு முன்பான உறவானது சொர்கத்திற்கு ஒப்பானது என்ற கற்பனை என்னிடம் இருந்தது. அவளுடைய கம்பீரம் கலந்த காமத்தில் நான் எப்பொழுதையும் போல் ஆச்சர்யத்துடன் பங்கு கொண்டேன், அந்த ஆச்சர்யத்தை சாமர்த்தியமாக நான் மறைத்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் நான் அவளிடம் காண்பித்திருக்கக்கூடிய ஆச்சர்யம் தான் என் முன்னால் அவள் பெய்யென பெய்யும் கண்ணீருடன் உட்கார வைத்திருந்தது என்று புரியத் தொடங்கியது. ஆனாலும் கூட என்னால் இந்தப் பிரச்சனையை தள்ளி நின்று பார்க்க முடியவில்லை, நான் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தேன், ஜெயஸ்ரீ, அகிலா அழுதாள் என்று சொன்னது என்னை நிலைகொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது. என் எதிரில் அகிலா எப்பொழுது அழலாம் எனக் காத்திருப்பது போல் இருந்தது இன்னும் தடுமாறச் செய்தது, நிர்வாணத்தில் கூட குறைந்திடாத அவளது கம்பீரம் இங்கே இல்லாமல் போயிருந்தது. ஒரு அபூர்வமான பொழுதாகத்தான் அது இருந்திருக்க வேண்டும் என் கண்கள் கசியத் தொடங்கியிருந்தன.

அவள் பேச்சை நிறுத்தியிருந்தாள், "நீ உண்மையிலேயே நினைக்கிறியா என்னால் உன்னைப் பத்தி அப்படி நினைக்க முடியும்னு." சாதாரணமான வார்த்தைகள் தான் ஆனால் அந்தச் சமயத்தில் அவளை உலுக்கிப் பார்த்திருக்க வேண்டும். அவள் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எத்தனை தடவை நீ என்கிட்ட கேட்ட, என்னால அப்படி எப்படி நினைக்க முடிஞ்சதுன்னு. நீதான் என்னை தப்பா நினைச்சிக் கிட்டிருக்க. உன்னைய நான் எங்க வைச்சிருக்கேன் தெரியுமா?" கடகடவென்று கண்களில் வெகுவாகவே வரத் தொடங்கியிருந்தது. நான் பெரும்பாலும் அழுததில்லை என்றாலும் நான் அழுத பொழுதுகள் எல்லாம் நம்பிக்கை துரோகங்களை முன்வைத்தாகத்தான் இருந்திருக்கும். நான் நம்பிய ஒருவர் என்னை நம்பாமல் போன பொழுதுகள் என்னை வெகுவான சுயபச்சாதாபத்திற்கு உள்ளாக்கி அழுகையாக நீண்டிருக்கிறது. ஆனால் முகம் கோணி என்னை மறைத்த தனிமையில் பொங்கியிருக்கிறேன், பொதுவில் இரண்டாம் நபர் முன் அழுதது சின்ன வயதிலாகத்தான் இருக்கும். ஆனால் இங்கே நம்பிக்கை துரோகம் இல்லை முகக் கோணலாகி விகாரமான மனமொருமித்த அழுகை இல்லை. ஆனால் கண்ணீர் இருந்தது, அகிலா என்னை தவறாகப் புரிந்து கொண்டாள் என்ற வருத்தம் இருந்தது. மனம் சட்டென்று தன் கட்டுக்குள் இருந்து விடுவித்துக் கொண்ட ஒரு அபூர்வமான பொழுது, சினிமா மெலோட்டிராமக்களின் பொழுது எதேட்சையாக வெளியாகும் கண்ணீரை ஒத்தது என்னுடைய இந்தக் கண்ணீர்.

அவள் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை, சோற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் டிஷ்யூ ஒன்றை எடுத்து துடைத்துக் கொண்டேன், எனக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது ஒரு பெண்ணின் முன்னால் கண்ணீர்விட்டது. நான் நிலைமையை சரியாக்க நினைத்தேன், ஆனால் என்ன சொல்லி அகிலாவை சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை. அவளே உதவினாள்,

"தாஸ் என்னை நம்பு தாஸ், நான் ஒரு வெர்ஜினாத்தான் இருந்தேன்..." அவள் முடிக்கவில்லை, நான் தலையில் அடித்துக் கொள்ளாதது தான் குறை. வேதாளம் இப்பொழுது இன்னொரு வழியாக முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு உண்மையில் சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொண்டேன். இதற்கு நான் நேரடியாய் என்ன பதில் சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் அவள் இப்பொழுது சரியாகிவிட்டிருந்தாள் அவள் கூண்டுக்குள் இருந்து முற்றிலும் வெளியில் வராவிட்டாலும் நேரடியாய், ஒரு வழிக்கு, விஷயத்திற்கு வந்திருந்தாள். நான் என் பழைய முறையை உபயோகிக்க தீர்மானித்தேன். ஏனென்றால் அவள் மனதிற்குள் எனக்கு அவளுடைய கற்பைப் பற்றிய கேள்விகள் இருக்காது என்று தெரிந்திருக்கும், இதுகூட அவள் என்னுடன் வைத்துக் கொண்ட உறவை மய்யப்படுத்தி தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்ளும் தன்னைத் தானே சிலுவையில் ஏற்றிக் கொள்ளும் ஒரு வழியாகத்தான் அவள் முன்வைத்திருக்க வேண்டும். என்னைத் திட்டுவதன் மூலம் ஜெயாவை திட்டுவதன் மூலம் அவள் தன்னைத் தானே திட்டிக் கொண்டு, தவறாக அவள் உணர்ந்ததற்கு ப்ராயச்சித்தம் செய்து கொண்டிருந்தாள்.

இதுவும் கூட ஒரு நாடகமாக அந்த உறவை, இயற்கையாக அவளிடம் பொழிந்த ஆர்வத்தை, அதன் வழியே அவள் பெற்ற சந்தோஷத்தை மறைத்து கேள்விக்குள்ளாக்கி அவள் எல்லோருக்கும் வெளிப்படுத்தும் அந்த முதல் முகத்தை திருப்தி செய்வதற்காகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டியை நான் ஊட்டி இரவில் பார்த்தேன், இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த விளையாட்டெல்லாம், நான் மட்டுமல்லாமல் அவளும் முதல் முறையாய்ப் பார்த்த அந்த மற்ற முகம் அவளுடையது அல்ல என்று நம்ப வைக்கும் முயற்சி என்று நான் நினைத்தேன்.

"சரி அகிலா, நம்புறேன். நீ இதுக்கு முன்ன ஒரு தடவை கூட மாஸ்டர்பேஷன் செய்யலைன்னு சொல்லு அதையும் நம்புறேன்."

அது ஒரு ஆயுதம் ஒரு நேரடித் தாக்குதல் அவள் தாக்க நான் பதுங்க நான் தாக்க அவள் மறைந்து கொள்ள என்று சென்று கொண்டிருந்த ஒரு அழகான யுத்தத்தில் என் தரப்பு பிரம்மாஸ்திரம். நாங்கள் இதைப் பற்றி உரையாடியிருக்கிறோம், ஆரம்பித்த முதல் கணத்தில் சாட்டிங்கில் இருந்து மறைந்து போய், வாரக்கணக்கில் முகம் காட்டாமல் இருந்து, பின்னர் சாட்டில் மௌன மொழி பகர்ந்து கடைசியில், "நம்பினால் நம்பு நம்பாட்டின்னா போ! நான் செய்ததில்லை!" என்பது வரையில் வந்து நின்றிருந்தது. அவள் பேரில் எனக்கு ஊட்டி செல்வது வரை இருந்த ஒரு சிறிய பயம் அதற்கு மேல் அந்த விஷயத்தில் என்னை நகர விடாமல் செய்திருந்தது.

கிசுகிசுப்பாய் தலையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு நான் சொன்ன அந்த வார்த்தைகள் முதலில் அவளிடம் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்தன. என்னால் பொதுவிடத்தில் அவளிடம் அப்படி பேச முடியும் என்று அவள் நினைத்திருக்க மாட்டாள், ஏனென்றால் நான் அதுவரை அப்படிச் செய்ததில்லை. ஊட்டியில் கூட நான் அவளிடம் பொதுவில் அத்துமீறுதல் எதையும் செய்யவில்லை. இந்தப் பிரச்சனையை நான் இழுத்துச் செல்லும் இடம் அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் அவள் சப்தமாய்ச் சிரித்தாள், நான் அவள் என் தலையில் சாப்பாட்டைக் கொட்டிவிடக்கூடாதென்று பயந்து கொண்டிருந்தேன். எனக்கு நன்றாய்த் தெரியும் அந்த விஷயம் அவளை கூண்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வருமென்பதையும் அதைவிட அவளுடைய கம்பீரத்தை அவளுக்கு திரும்பக் கொடுக்குமென்பதையும்.

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை, "உன்னை மாதிரின்னு நினைச்சியா!" இடைவெளி விட்டவள், நான் சிரித்துக் கொண்டிருந்ததால், "உன் கிட்டப்போய் இதையெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன் பார்! என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்."

அவள் கட்டிக்கொண்டிருந்த கூண்டு இப்பொழுது அவளில்லாமல் அநாதையாக இருந்திருக்க வேண்டும். இருவரும் சாப்பிடுவதை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம், கடைசி மூன்று நாட்கள் எங்களிடம் கொண்டு வந்த மாற்றத்தை நினைத்து.

"சரி ஆபீஸ் போறியா. பிரச்சனை எதுவும் பண்ண மாட்டியே திரும்ப?" அவள் இல்லை என்று தலையாட்டியபடி.

"உன் வீடு இங்க பக்கத்தில் தான கூட்டிக்கிட்டு போயேன்." எத்தனையோ முறை அழைத்திருப்பேன் அவளை, அவள் வந்ததில்லை. இப்பொழுது வருகிறேன் என்கிறாள் நான் அதை மீறியும் அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று படிக்க முயன்றேன்.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In காதல் காமம் சிறுகதை

மலரினும் மெல்லிய காமம்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

புணர்ச்சிவிதும்பல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்

அகிலாவும் ஜெயஸ்ரீயும் வந்ததில் இருந்தே சிரித்துக் கொண்டு குசு குசு என்று ரகசியம் என்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தாலும் நேற்று ஜெயஸ்ரீயிடம் அடித்த கூத்தால் என்னால் அவளிடம் முகம் கொடுத்தே பார்க்க முடியவில்லை. ஜெயஸ்ரீ, அகிலாவிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த பொழுதும் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டிருந்தாள். அகிலாவிற்கு ஆப்பிள் ஜூஸும் எனக்கும் ஜெயஸ்ரீக்கும் கோல்ட் காப்பியும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தோம்.

நான் நேரடியாய் அவளிடம் "ஜெயா சாரி, நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது! மன்னிச்சிக்கோ." சொன்னதும் தான் தாமதம்.

"அது பரவாயில்லை இன்னிக்குப் பொழச்சிப்போங்க, இன்னொரு நாள் வைச்சிக்கிறேன் அதுக்கு. எப்ப ட்ரீட்?". அந்தப் பிரச்சனையை அதற்கு மேல் அவள் இழுக்க விரும்பவில்லை என்பது எனக்கு தெரிந்துதான் இருந்தது.

"எதுக்கு ட்ரீட்." எதற்கென்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்கக் கேட்டேன்.

"உங்களுக்குத் தெரியாதா?" இந்த முறை அகிலா குறுக்கே வந்து அவளைக் கிள்ளினாள்.

"ஏன் நீ தான் சொல்லேன்" அகிலா இந்தப் பிரச்சனையில் வருவதும் வெட்கப்பட்டு நிற்பதும் என்னை இன்னும் குஷியாக்க நான் அவளையும் சேர்த்து வம்பிழுக்க ஜெயஸ்ரீயிடம் கேட்டேன்.

"defloration" பெரிய ஆள் தான் அழகான வார்த்தையைக்க் கொண்டுவந்து திணித்தாள். அகிலா ஜெயஸ்ரீயை முறைக்க நான் மெதுவாய் அகிலாவிடம், "அப்படியா?" என்று கேட்க அப்பொழுது தான் வந்து சேர்ந்திருந்த ஆப்பிள் ஜூஸை என் தலையில் கவிழ்த்துவிட்டு போயேவிட்டாள். இருள் கவிழத் தொடங்கியிருந்த நேரம் ஜீஸ் கடையில் பெரிய கூட்டமில்லை, நான் வழியும் ஜூஸுடன் சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஜெயஸ்ரீ, "ஆனாலும் இப்படியா கேப்பாங்க. லூஸுங்கிறது சரியாத்தான் இருக்கு!"

---------------------------

நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள்

---------------------------

"கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்." என்று நான் அகிலாவிற்கு அவள் காதலின் நீட்சியாய் பார்க்காத காமத்தையும் வலிந்து மறுப்பது போன்றிருக்கும் செயற்கைத்தன்மையையும் விவரித்து கடிதம் எழுதி அனுப்பிய நான்காவது நாள் அவள் அதைப்பற்றி நிறைய யோசித்ததாகவும் தனக்கும் சம்மதம் என்று சொல்லி எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தாள்.

நாங்கள் ஊட்டி செல்லத் தீர்மானித்தோம், என் பள்ளி இறுதி வரை அங்கே தான் படித்தேன் என்பதாலும் பெங்களூரில் இருந்து இரண்டு நாள் ஊர் சுற்ற சென்று வருவதற்கான இடங்களில் முக்கியமான ஒன்று என்பதாலும். புதிதாய் வாங்கியிருந்த ஹுண்டாய் கெட்ஸிலேயே சென்று வரலாம் என்ற என் திட்டதற்கு மறுப்பொன்றும் சொல்லவில்லை, அவள் முகத்தில் என் ஓட்டுநர் திறமையைப் பற்றிய சந்தேகம் இருந்தது மட்டும் பிரகாசமாய் தெரிந்தது. அவள் என்னுடன் வெளியில் இதுவரை வந்ததேயில்லை என்ற எண்ணம் என் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டது. திட்டமிட்டது போலவே ஆறுமணிக்கு அல்சூர் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தாள், பேருந்து நிலையத்தில் இருந்து அவள் வீடு கூப்பிடு தூரம் தான். ஷோல்டர் பேக் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள், நான் பயந்தது எங்கே சென்று பின் சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று தான், நான் எதிர்பார்த்தது போலவே காரை நெருங்கியவள் பின் சீட்டைத் திறந்ததும் நான் கொஞ்சம் போல் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அவள் தன் பையை மட்டும் அங்கே வைத்துவிட்டு முன் சீட்டில் வந்தமர்ந்தாள், அவள் உதட்டில் புன்னகை அரும்பியிருந்தது.

"ஒரு நிமிஷத்தில் உன் மூஞ்சி என்ன கோணத்துக்கெல்லாம் போகுது, இப்பல்லாம் நீ என்ன நினைக்கிறேன்னு என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியுது! தெரியுமா?"

எனக்கு அவள் குஷி மூடில் இருந்ததே மகிழ்ச்சியளித்தது. என்ன தான் அவள் என் ஏற்பாட்டிற்கும் ஆசைக்கும் ஒப்புக் கொண்டிருந்தாலும் அவள் சந்தோஷமாய் இல்லாமல் என்னவோ போல் இருந்தால் மற்ற ப்ளானைத் தள்ளிப் போட்டு விட்டு சும்மா ஊர் மட்டும் சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தேன். நல்லவேளை அதற்கான அவசியம் இருக்காது போலிருந்தது.

"இப்ப என்ன தெரிஞ்சிக்கிட்ட?"

பெரும்பாலும் இது போன்ற கேள்விகளுக்கு அகிலா பதில் சொல்ல மாட்டாள். நான் அவள் பின்சீட்டில் உட்கார்ந்துவிடுவாளோ என்று பயந்தது அவளுக்குத் தெரிந்திருக்கும்.

"ம்ம்ம் உன் மொகரைக்கட்டை!"

என் மனம் துள்ளிக் குதிக்கத் தொடங்கியது, அவளுக்கும் அது தெரிந்திருக்க வேண்டும். சட்டென்று தலையில் தட்டி,

"ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டு! என்னா?" என்றாள்.

அவள் என்னைத் தொட்டுப் பேச மாட்டாள், மூன்றாண்டுகளில் நான் சில முறை தொட்டுப் பேசியிருப்பேன், வெகுசில சமயம் கைகளை பிடித்துக் கொண்டு விளையாடியிருப்பேன். ஆனால் சுவரிலிருந்து நீண்ட இன்னொரு குட்டிச் சுவர் போல் உணர்ச்சியற்றதாய் அவள் கைகள் இருக்கும் அப்பொழுதுகளில். அவள் தலையில் தட்டி சொன்னதன் அர்த்தம் புரிந்ததும் என் கண்கள் தானாய் அவள் மார்பு பக்கம் திரும்பியது. நான் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை, அதுவும் அகிலாவிடத்தில் கொஞ்சம் இதைப்பற்றிய ஜாக்கிரதை உணர்வுடனேயே இருப்பேன். பெரும்பாலும் அட்டிட்டியூட் காண்பிக்கும் பெண்களிடம் கொஞ்சம் சீரியஸாய் வம்பிழுக்க அவர்களுக்குத் தெரியும்படி மார்புகளை வெறிப்பேன் சிறிது நேரம். ஆனால் அகிலாவிடம் அதுவரை செய்ததில்லை, அதாவது அவளுக்கு தெரியும் வகையிலோ அல்லது அவள் உணர்ந்து கொள்ளும் வகையிலோ அவள் மார் பகுதியை நோட்டம் விட்டதில்லை, ஆனால் அவளுக்குத் தெரியாமல் செய்திருக்கிறேன். இப்பொழுது அவளாய்ச் சீண்ட செய்திருந்தேன்.

அகிலா கைகள் நீட்டி நான் லாவகமாக இருக்கட்டும் என்று அணிந்து வந்திருந்த பெர்முடாஸால் மறைக்கப்படாத என் தொடைப் பகுதியில் கிள்ளினாள். அவளுடைய வலது கை விரல்களில் பராமரிக்கப்பட்ட நகங்கள் இருந்ததால், உண்மையிலேயே வலித்தது. நான் "அம்மா" என்று கத்தினேன் தொடர்ச்சியாய்.

"நீ செஞ்சது தப்பு, அப்படிப் பார்ப்பது அநாகரீகமாயிருக்கு! எந்தப் பொண்ணு கிட்டையும் அப்படி நடந்துக்கக்கூடாது" கொஞ்சம் சீரியஸாகவே சொன்னாள்.

"நான் சரிங்க மேடம்" என்று சொன்னதும் சகஜ நிலைக்கு வந்தவள். நான் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்களிலிருந்து என் பார்வை மார்பகத்திற்கு நீளத் தொடங்குவதும் பின்னர் நான் பெரு முயற்சி செய்து கட்டுப் படுத்துவதையும் பார்த்து, சப்தமாய் சிரித்தாள்.

"எத்தனை நாளுக்கு இதைச் செய்யப்போற நீ, இன்னும் இரண்டு நாளைக்கு? அப்புறம் 'சீ'ன்னு சொல்லி விடப்போற! எனக்கென்ன?" என்றவாறு மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். எனக்கென்னமோ பார்த்துத் தொலை என்று சொல்லிவிட்டது போலிருந்தது. அவள் எப்பொழுதும் அணியும் கொஞ்சம் தொல தொலா சுகிதார் அல்ல அன்று அவள் அணிந்திருந்தது, ப்ரேசியர் அதன் மேல் டாப்ஸ் ஒன்று அணிந்து மேல் அவள் சுகிதார் அணிவது தான் வழக்கம் இன்றும் அப்படித்தான் என்றாலும் இறுக்கமான சுகிதார் அவள் மார்பகங்களை இன்னும் எடுப்பாய்க் காட்டியது. கல்லூரிக் காலத்தில் இருந்தே பெண்களின் மார்புகளை நோட்டம் விடுவது தான் வேலை என்றாகியிருந்ததால், அகிலாவினுடையவை சராசரிக்கும் குறைவானவை என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். சுகிதார் அவள் அளவில் இல்லையென்பதால் தோள்பட்டையில் அவள் பிராவினுடையதும் டாப்ஸினுடையதுமாய் இரண்டு வெவ்வேறு வகையான உப்பல்களுடன் கண்களைத் துருத்துக் கொண்டிருந்தது.

"இந்த சுடி நீ போட்டு நான் பார்த்ததில்லையே! புதுசா?'

சட்டென்று கேட்ட கேள்வியால் திரும்பியவள்,

"என்னைய நீ அவ்வளவு நோட் பண்ணுவியா? ஆமாம் இது என் தங்கச்சியோடது! அவள் தான் கொடுத்தாள் போட்டுக்கோன்னு. ஏன் நல்லாயில்லையா?"

இன்பத்தேன் வந்து காதில் பாய்ந்தது போலிருந்து, அவள் உடுத்தும் உடையைப் பற்றிக் கேட்டால் சொல்ல ஆயிரமாயிரம் உரையாடல்களைத் தயார் செய்து வைத்திருந்தேன், ஒன்றும் உதவவில்லை.

"ச்ச, சூப்பராயிருக்கு. நீதான் என் டைரி படிச்சியே! எனக்கு நீ பண்ணுற ட்ரெஸ்ஸிங்க் சுத்தமா பிடிக்காது. இந்த ட்ரெஸ்ஸில் நீ ரொம்ப அழகாயிருக்க!" என் கண்கள் தானாய் அவள் கண்களில் இருந்து டைவ் அடித்தது. இந்த முறை அவள் ஒன்றும் சொல்லவில்லை, முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை. ரசித்தாள். அவள் அழகை நான் ரசிப்பதை ரசித்தாள்.

நாங்கள் பெங்களூரை விட்டு வெளியில் வந்திருந்தோம், இனி மைசூர் போய் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டால் போதும் என்று நினைத்தேன். என்றைக்கும் இல்லா அதிசயமாய் ரோடு கொஞ்சம் ட்ராஃபிக்கா இருந்தது அதிகாலையிலேயே. நான் அகிலாவிடம்,

"அகிம்மா உனக்கு தூக்கம் வந்தா தூங்கு என்ன!" என்றேன்

"சரி" என்றவள் தூங்கப்போவதில்லை போலத்தான் இருந்தது, ரொம்ப தீவிரமாய் இரண்டு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். நான் எனக்குத் தெரிந்த கடக்கும் ஊரைப்பற்றிய விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளும் எதுவும் தெரியவேண்டுமென்றால் கேட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் மைசூர் வந்து காலை உணவு முடித்த பிறகு குண்டல்பேட் வழியாக ஊட்டி செல்லும் பாதையை எடுத்தேன். கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டிய சாலையாகையால் விளையாட்டுத்தனங்களை விடுத்து பக்கத்தில் அமர்ந்திருக்கும் தேவதையை மறந்து கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் அகிலா தூங்கவேயில்லை, அவள் கண் அசந்து கூட நான் பார்க்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் டயர்டாக தோன்றத் தொடங்கியது, பெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும் பொழுது சிறிது நேரம் கழித்து யாரிடமாவது ஸ்டேரிங்கைக் கொடுத்துவிட்டு தூங்கப் போய்விடுவதுண்டு. பெங்களூரில் இருந்து ஊட்டி வரை இதுதான் முதல் முறை தனி ஆளாய் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அகிலா என்னைத் தொந்தரவு செய்யவில்லை, நான் சீரியஸாய் ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அமைதியாகிவிட்டிருந்தாள். நான் கொஞ்சம் போல் டயர்டாகியது தெரியத் தொடங்கியது டீ குடிக்கலாம் என்றாள், அவள் அத்தனை டீ குடிப்பவள் இல்லை என்பதால் எனக்காகத் தான் கேட்கிறாளென்று புரிந்தது. நாங்கள் ஒரு வழியாய் கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி ஊட்டி வந்த பொழுது மதியம் இரண்டாகியிருந்தது, பெங்களூரில் இருந்து கொண்டை ஊசி வளைவு வரை என் டிரைவிங் பற்றி எதுவும் சொல்லாதவள், வளைவொன்றில் ஓரங்கட்டி நிறுத்தி வியூ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கேட்டாள், "நல்லா வண்டி ஓட்டுறீங்க! இங்க நிறைய தடவ வந்திருக்கீங்களோ?!"

அவள் கண்களில் சில்மிஷம் இல்லை, ஆனால் நான்,

"வந்திருக்கேன் இதான் முத தடவையா ஒரு பெண்ணோட!" இதற்கு நான் அகிலாவிடம் இருந்து லேசான கோபப்பார்வையை எதிர்பார்க்க அவளோ,

"ம்ம்ம் நம்பிட்டேன்" என்று சிரித்தபடி சொல்லி கலவரப்படுத்தினாள்.

நான் பரிதாபமாய் "அகிலம் நான் பொய் சொல்லலை, உண்மையிலேயே இதான் மொத தடவை ஒரு பொண்ணு கூட ஊட்டி வர்றேன். ஊட்டி மட்டுமில்லை எங்கையுமே என்னை நம்பு".

அவள் கொஞ்சம் இறங்கிவந்து, "ச்ச சும்மா சொன்னேன் தாஸ், உன்னைத் தெரியாதா?" என்று சொல்லி குடலுக்கு பியர் வார்த்தாள்.

"ஹாங் வண்டி ஓட்டுறதைப் பத்தி கேட்டள்ல, நான் இங்கத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன் அதனால எனக்கு ஹில் ஸ்டேஷன் ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது!" கொஞ்சம் படம் காட்டியிருந்தேன்.

ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் பிருந்தாவனில் ஒரு டபுள் ரூம் கன்ப்ஃர்ம் செய்துவிட்டு ஹோட்டல் அறைக்குள் நுழையும் முன் ஒரு பரீட்சை அறைக்குள் நுழையப் போகும் மாணவனைப் போன்ற பயம் வந்தது, வயிற்றுத் தசைப் பகுதி இறுக்கிப் பிடிக்கப்பட்டது போல் இருந்தது. அதுவரை இருந்த டயர்ட்னஸ் காணாமல் போயிருந்தது, திரும்பி அகிலாவைப் பார்த்தேன் வேறெதையோ பார்ப்பதைப் போல் அவள் முகத்தில் அந்தப் பதற்றம் இல்லை.

அறைக்குள் வந்து தாழிட்ட பொழுது ஏனோ மனசுக்குள் தவறு செய்வது போன்ற ஒரு உணர்வு, கதவுக்குப் பின்னிருந்த குப்பைத் தொட்டியில் அந்த எண்ணத்தைப் போட்டுவிட்டு வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அகிலா பாத்ரூம் சென்றுவிட்டு அப்பொழுது தான் வந்தாள், வந்ததும் வராததுமாய் மொத்த அறையையும் நோட்டம் விட ஆரம்பித்தாள். நான் அவளாய் செட்டில் ஆகட்டும் என்று பெட்டில் இருந்த ரிமோட்டை எடுத்து டிவியை துவக்கினேன். சேனல்கள் மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட ஈஎஸ்பிஎன் டிவியில் ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் மாட்ச் போய்க் கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு நான் அகிலாவை மறந்து மேட்சில் ஆழ்ந்துவிட்டேன்.

"உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யார் தாஸ்?" கவனம் கலைந்து பார்க்க அகிலா கட்டிலில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள், என்னால் அந்தப் பொழுதை நம்பமுடியவில்லை.

"அகிம்மா, எனக்கு மார்க் வாஹ் தான் பிடிக்கும், நான் ஒரு தீவிர ஆஸ்திரேலிய சப்போர்ட்டர்!"

அவள் அப்படியா என்பதைப் போல் பார்த்தாள், பின்னர் மேட்சில் ஆழ்ந்துவிட்டாள், ஆனால் என்னால் தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்ப முடியவில்லை. எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்றரை அடிதான் வித்தியாசம் இருந்தது. மூன்றாண்டுகளில் இந்த நொடியைப் பற்றி நிறைய கற்பனையை வளர்த்திருந்தேன், திருமணத்திற்கு முன் / பின் என்ற எல்லைகளில் வைத்து விரிந்திருந்த கற்பனை ஒரு முடிவை நோக்கி நகர்த்தவே முடியாததாய் இருந்தது. இந்தப் பொழுதில் அவள் நிராகரித்தாள், அடுத்தக் கணத்தில் அவள் நிராகரித்தாள் என்று மனம் பல்வேறு கணக்குகளை போட்டபடிதான் முடிந்திருக்கிறது. அவளுடைய நிராகரிப்பு என்பது எங்கள் கம்ப்யூட்டர் சைன்ஸ் ப்ளோ சாட்டில் வரும் Endஐப் போல. அவளை வற்புறுத்தும் எண்ணம் துளியும் கிடையாது, இப்பொழுதைக்கு மட்டுமல்ல திருமணத்திற்குப் பிறகும் கூட அப்படியே தொடர வேண்டுமென்றே நினைத்திருந்தேன்.

நான் மெல்ல அவளருகில் நகர்ந்து உட்கார்ந்தேன். அவள் ஒரு நொடி திரும்பி என்னைப் பார்த்தாள், அப்பொழுது அவள் கண்களை என்னால் படிக்க முடியவில்லை. ஒரு வெறுமை மட்டுமே இருந்தது அதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் டிவி பக்கம் திரும்பிவிட்டாள். நான் அவள் கைகளை அவளிடமிருந்து விடுவித்து என்னிடம் வைத்துக் கொண்டேன். இதற்கு முன் இப்படிச் செய்தது வெகு சில முறைதான் என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அவள் கைகள் காய்ச்சல் வந்தவளின் கரங்கள் போல் சூடேறியிருந்தன, என் கைகளின் தொடுதலால் அவள் கையில் இருந்த மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டு நின்றன. அவளுக்கு பின்புறம் முதுகை நோக்கி அமர்ந்தவாறு இருந்தாலும் அவள் கண்களை மூடிக் கொண்டதை உணர முடிந்தது. மெதுவாய் அவள் முதுகில் விரல்களை ஓட்டினேன். அவள் கைகள் மரக்கத் தொடங்கியது, அது நான் எதிர்பாராதது அவள் தன்னை கூட்டுக்குள் கொண்டு செல்கிறாள் என்று உணரமுடிந்தது. நானாய் கைகளை எடுத்துவிடவே நினைத்தேன் ஆனால் மறுப்பு அவள் பக்கத்தில் இருந்து வரட்டும் என்று விட்டது என் தவறு தான்.

"தாஸ் இப்பவே இதைச் செய்தாகணுமா?" முடிந்தது, இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட என்னால் இதைப்பற்றி பேச முடியாது. என் கைகள் தானாய் அவள் முதுகிலலிருந்து அகன்றன, அவள் கைகளை விடுவித்தேன், அந்த மாற்றம் அவளுக்குத் தெரிந்திருக்கவேண்டும், இயலாமையால் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னால் அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் மேல் கொஞ்சம் கோபம் வந்தாலும் அது நான் வண்டி ஓட்டிக் கொண்டு வந்த களைப்பால் வந்ததாகத்தான் இருக்க முடியும், என்னால் அகிலாவை கோபிக்க முடிந்தது கூட ஆச்சர்யமாக இருந்தது. அவள் கண்கள் என்னைக் கெஞ்சின, 'ப்ளீஸ் கல்யாணத்துக்குப் பிறகு இதைச் செய்து கொள்ளேன்' என்று. உண்மையில் எனக்கு அதில் பிரச்சனை இல்லை, நானே கூட என்னைக் காதலிக்கிறாய் என்றால் நாம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்வோம் என்று சொல்ல நினைத்த பொழுது தான் அவள் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆண் மனம் கலவிக்கு அலைந்தது. என்னால் அகிலாவை அப்படிப் பார்க்க முடியவில்லை, நான் மெதுவாய் படுக்கையில் சாய்ந்த படி கண்களை மூடினேன் அவ்வளவுதான் தெரியும்.

கண்களைத் திறந்த பொழுது நினைத்துக் கொண்டேன், மன்மதன் தான் எழுப்பியிருக்க வேண்டுமென்று. அகிலா ஒரு டர்க்கி டவல் மட்டும் உடுத்தி என் முன்னால் நின்று கொண்டிருந்தாள், ஹமாம் சோப்பின் மணம் நாசிகளைத் துழைத்தது. அவள் ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள். நான் எழுந்ததைப் பார்த்ததும் என் பக்கம் திரும்பிச் சிரித்தவள் அசப்பில் பாலு மகேந்திரா படத்து ஹீரோயின்களைப் போலிருந்தாள் அவள் மாநிறம் இல்லை என்றாலும் கூட, அவளுக்குப் பின்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பமும் அவள் அசலும் சேர்ந்து என்னை நிலை கொள்ள முடியாதபடி ஆக்கின. எனக்கு இவை நிஜத்தில் தான் நடக்கிறது என்று தெரிந்தாலும் வேடிக்கைக்காக கைகளைக் கிள்ளிக் கொண்டேன், அவள் கைகளில் வைத்திருந்த சீப்பை என் மேல் வீசினாள்.



"மணி என்னாகுது தெரியுமா?" எனக்கு அப்பொழுது தான் நான் அதிக நேரம் தூங்கிவிட்டிருந்தது தெரிந்தது, என்னால் இது சனிக்கிழமை இரவா இல்லை ஞாயிற்றுக் கிழமை விடியலா என்ற குழப்பம் இருந்தது. கைகளில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்க்க ஒன்பதரை காட்டியது. ஜன்னல்களுக்கு வெளியில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சனி இரவுதான் என்பது உறுதியாக. கிட்டத்தட்ட ஏழு மணிநேரம் தூங்கியிருக்கிறேன் என்பது தெரிந்தது, தேவதை போல் ஒரு பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு. அவள் முகத்திலும் அது தெரிந்தது.

"சாரி! நல்லா தூங்கிட்டேன்."

"இப்புடியா தூங்குவாங்க! நான் எப்படா 'இப்ப வாண்டாம்'னு சொல்லுவேன்னு காத்திக்கிட்டிருந்த மாதிரி தூங்கிட்ட நீ! ஏற்கனவே மூணு வருஷம் செய்தது போதாதுன்னு இங்க ஹோட்டலில் வந்து வேற ஏண்டி உயிரை வாங்குறன்னு சொல்ற என் மனசாட்சி கூட தனியா சண்டை போட்டிக்கிட்டிருக்கேன் ஏழு மணி நேரமா! தெரியுமா?"

நான் படுத்திருந்த கட்டில் நிச்சயம் தரையில் இல்லை.

"லஞ்ச் வாங்கிக் கொடுத்தியா நீ, என்ன ஆளுய்யா. இப்படித் தூங்குறவங்களை நான் எழுப்பவே மாட்டேன். நீயாதான் எழுந்துட்ட. எனக்கு பசி தாங்காதுப்பா நான் நல்லா லஞ்ச் ஆர்டர் செய்து சாப்டேன்." கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள், காதுக்குள் அவள் சொல்வது எல்லாம் மாற்றம் செய்யப்பட்டு இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சுசீலாவின் குரலில் சென்று கொண்டிருந்தது. கட்டிலில் குனிந்து அவள் தூக்கி வீசிய சீப்பை எடுக்க முயல, அவள் தலை முடி இரு பக்கங்களில் இருந்தும் முன்பக்கம் சரிந்தது. சரியாய் டவலில் முடிப்பை வலது கைகளில் பிடித்தபடி, இடது கையால் சீப்பை எடுத்து விட்டு அவள் நகர ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்த நான் தொப்பென்று மல்லாக்க மறுபுறம் விழுந்தேன்.

மீண்டும் கண்ணாடி பக்கம் திரும்பியவள் வெள்ளை நிற டவலில் அன்றலர்ந்த மலர் போல் இருந்தாள், மார்பிலிருந்து முழங்கால் வரை வந்திருந்த அந்த டவல், அவளுடைய நிர்வாணத்தை விடவும் அதிக கிளர்ச்சியைத் தந்தது, அவளுடைய பரிமாணங்களை அந்தத் டவல் வேற எதாலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது என்று நான் நினைத்தேன். அவள் பக்கமிருந்து மெதுவாய் ஒரு வசனம். சாதாரண நாட்களாகயிருந்திருந்தால் நான் அதைக் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு கூட குறைவு தான்.

"இப்படியேவா! குளிச்சிட்டு வர்றியா?"

அவள் லேசாய் தலையைத் திருப்பி என்னை மோகக் கண்களுடன் பார்த்தாள், நான் நினைத்தேன், இங்கே முடிந்தது என்று. அவளிடம் இருந்து தப்பிக்க நினைத்து எழுந்தவன் அவளைப் பார்த்து புன்னகையொன்றை செய்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன். இதற்கு மேல் அவளால் மறுக்க முடியாது என்று தெரிந்ததும் மனம் குதியாட்டம் போட்டது, பந்தையத்திற்காக காத்திருக்கும் குதிரையைப் போலிருந்தது மனம். இதயத் துடிப்பு முறுக்கேற்றப்பட்ட ஒரு வலுவான எந்திரத்தின் வேகத்தில் இருந்தது, என் வசத்தில் இல்லை. அவள் உபயோகப்படுத்திவிட்டு வைத்திருந்த சோப்பில் அவள் மனம் வந்தது. எனக்கு இன்னொரு விஷயம் சட்டென்று மனதிற்குள் வந்தது, இந்தத் துடிப்பில் போனால் அவளுடைய நிர்வாணம் என்னை கீழே அழுத்தித் தள்ளிவிடும் என்று நான் எப்பொழுதும் செய்யும், 'அபிராமி அந்தாதி' பாடல்களை மனதிற்குள் வேகமாக நினைக்கத் தொடங்கினேன். சிறுவயதில் மனனம் செய்திருந்ததால், பாடல்கள் நினைவுக்கு வருவதற்கு மனதை அதன் பக்கம் திருப்ப வேண்டும், அந்தாதி என்பதால் ஒரு பாட்டின் முடிவில் இருந்து தொடங்கும் மற்ற பாடல் சாதாரணமாய் நினைவில் இல்லாமல் முடிவில் தான் நினைவில் வரும் என்பதால் மனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். வந்தது.

நான் பாத்ரூமை விட்டு துவட்டிக் கொண்டு வெளியில் வந்த பொழுது அறையில் நைட் லேம்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் அறையில் அத்தனை வெளிச்சமில்லை, என்னை நோக்கி வரவேற்பது போல் காத்திருந்தவள் உடம்பில் துணி எதுவும் இல்லை. என் எதிர்பார்ப்பை அவள் மார்பகங்கள் ஏமாற்றவில்லை.

"Doss I don't want to get pregnant" சொல்லத் தேவையில்லாத விஷயம் என்றாலும் தவறாகி விடக்கூடாதென்ற கவனம் அதைச் சொல்ல வைத்தது. அவள் சட்டென்று ஆங்கிலத்திற்கு மாறியிருந்தாள் நான் நினைத்தேன் அவள் சொல்ல வருவதை அவள் காதுகள் கேட்கபதைக் கூட அவள் விரும்பவில்லை என்று. அந்நிய மொழி அவளுக்கு அந்த விஷயத்தில் உதவுவதாக இருந்தது.

"Don't worry I have condoms" சிரித்தபடியே சொன்னேன். அவளுக்குத் தெரிந்து தான் இருக்க வேண்டும், இந்த அளவிற்காவது நான் தயாராய் இருப்பேன் என்று. படுத்த படியே இரு கைகளையும் நீட்டி என்னை அழைத்தாள், கனவு போல் இருந்தது.



அரை மணிநேரத்தில் இன்னொரு முறை அவளும் குளித்து என்னையும் வற்புறுத்தி குளிக்க வைத்து குளியலறையில் நான் இன்னொரு முறை தொடங்க பொய்க்கோபம் காட்டி தடுத்தவள், 'பசிக்குது தாஸ்' என்று சொல்ல பாவமாய் இருந்தது. சட்டென்று காலையில் இருந்து சாப்பிடாதது எனக்கும் பசியெடுத்தது. சின்னச் சின்ன சிணுங்கல்கள், சீண்டல்களுடன் அவள் உடைமாற்ற அகங்காரமாய் நேரெதிரில் அவளை மட்டும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள் என்று நினைத்தாளாயிருக்கும், நான் இருப்பதை அவள் பொருட்படுத்தவேயில்லை.

அவளிடம் ஆரம்ப விளையாட்டுகளின் பின், உணர்ந்து "you already came is it?" கேட்ட கேள்வி அதன் மொக்கைத்தனத்தைத் தாண்டியும் என் அனுபவமின்மையைக் காட்டியதாக நினைத்தேன். அவள் சட்டென்று அதைக் கேட்க விரும்பாதவளைப் போல இரண்டு கைகாளாலும் அவள் காதுகளை மூடிக்கொள்ள முயற்சித்தது நினைவில் வந்தது. அவளை வெட்கம் தின்று கொண்டிருந்த நேரத்தில் கேட்பதற்கு இதைவிடவும் மோசமான கேள்வியொன்று இருந்திருக்காது என்று நினைத்தேன். சட்டென்று தாவி எழுந்து என்னை இழுத்து அவளோட அணைத்து அதைச் சமாளித்திருந்தாள்.

"என்ன அதுக்குள்ளையே கனவா?" என் தலையைக் கோதியபடி கேட்டவளிடம்,

"இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை நேரில் பார்க்கலைன்னா கூட பரவாயில்லை, இந்த நினைவுகளோடு சமாளிச்சிறுவேன்."

ஒரு அடி பின்னகர்ந்தவள், கைகளை இடுப்பில் வைத்தபடி, "அப்ப நான் வேணாமா?" கேட்க, இதற்கு என்ன பதில் சொன்னாலும் ஆபத்து என்று பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு,

"என்ன விட்டுடு தாயி!" என்றேன்.

நாங்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த ரெஸ்டாரெண்டிற்கு வந்து உட்கார்ந்ததும் தான் தாமதம், அகிலாவின் மொபைல் சிணிங்கியது. நம்பரைப் பார்த்தவள், வெட்கப்பட்டு சிரித்து,

"தாஸ் அவதான் போன் பண்ணுறா, அவளுக்கு எல்லாம் தெரியும் நான் இப்ப அவகிட்ட பேசினா அவ்வளவுதான். நீங்க வெளியில் போயிருக்கான்னு சொல்லி வைச்சிடுங்க." சொல்லி என்னிடம் திணித்தாள்.

நான் "ஹலோ!" என்று சொல்ல,

மறுபுறம் ஜெயஸ்ரீ, "நான் நினைச்சேன் நீங்கதான் போனை எடுப்பீங்கன்னு குடுங்க அந்த கழுதைகிட்ட."

நான் தீவிரமாய், "அவள் இங்க இல்லை ஜெயா" என்று மழுப்ப ஏண்டா அப்படிச் செய்தோம் என்று ஆகியது.

"சின்னப் பொண்ணு ஒன்னை ஊட்டிக்கு தனியா கூட்டிக்கிட்டு போய்ட்டு இப்ப அங்க இல்லைன்னு வேற சொல்றீங்களா? அவளை ஏமாத்தி எல்லாம் முடிச்சாச்சா?" எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலுடன் இல்லை.

வேதனையுடன் அகிலாவிடம் போனைத் தந்தேன். அவள் நேரடியாய் "ஏண்டி பாவம் அவனை வம்பிழுக்கிற, பச்சை புள்ள மூஞ்சி எப்படிச் சுண்டிப் போச்சு பாரு" என்று ஆரம்பித்தாள்.

"ஆமாம்!" "ஒரு தடவை தான்" "ம்ம்ம்" "ம்ம்ம்னு சொல்றேன்ல" "தாஸ்கிட்டையே கேளேன்" என்று சொல்லி மீண்டும் என் கையில் திணித்தாள். நான் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தேன்.

"இங்கப் பாருங்க, அவளை சரி செஞ்சி இதெல்லாம் உலகமகா தப்பில்லைன்னு சொல்லி உங்கக்கூட ஊட்டிக்கு அனுப்பி வைச்சதே நான் தான். கழட்டி விடணும்னு நினைச்சீங்க அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. பூனை இனிமேல் சும்மாயிருக்காது பண்டத்தை கண்காணிக்க என்னால் முடியாது, மரியாதையா பெங்களூர் வந்ததும் உங்க வீட்டில் பேசுறீங்க. என்ன?"

நான் வெறுமனே "ம்ம்ம்." என்றேன்.

"இந்தக் குரங்கு மூஞ்சியைப் பார்க்க நான் அங்க இல்லாமப் போய்ட்டேனே!" அவள் சொன்னதும் தாமதம்.

"நான் தான் உங்க அக்காகிட்ட உன்னையும் கூட்டிக் கிட்டு வான்னு சொன்னேனே! அவதான் என்னமோ உங்க ரெண்டு பேத்தையும் வைச்சிக்கிட்டு நான் த்ரீஸம் பண்ணப்போறேன்னு பயந்து கூட்டிக்கிட்டு வரலை!" உளறிக்கொட்டியிருந்தேன்.

அகிலா நான் இந்த முனையில் சொன்னதைக் கேட்டு என்னை ஆச்சர்யமாய்ப் பார்த்தாள், நான் சொன்னது எனக்கு விளங்கியதும் எனக்கு நானே தலையில் அடித்துக் கொண்டேன்.

ஜெயஸ்ரீ, "அக்காகிட்ட போனைக் கொடுங்க..." நான் அகிலாவிடம் கொடுத்தேன்.

இவள் போனை வாங்கியதில் இருந்து கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தாள், எனக்குப் புரியவேயில்லை. நான் மௌன மொழியில் தோப்புக் கரணம் போட்டுக் காட்டினேன். அகிலா கண்டுகொள்ளவில்லை, சிறிது நேரத்தில் போனை அணைத்தவள். நான் அப்படி ஒன்று சொன்னதாய்க் காட்டிக் கொள்ளவேயில்லை.

"சாரி ஏதோ உளறிட்டேன்!" மன்னிப்பு கேட்கும் தொணியில் சொன்னேன்.

அவள் சப்தமாய் சிரித்தபடி, "இதோட ஜெயஸ்ரீ மேல இருக்கிற ஆசையை விட்டுடுங்க" என்று சொல்ல நான் உண்மையிலேயே வேதனையில் நொந்து போயிருந்தேன்.

"அகிம்மா சாரி I didn't mean it. மன்னிச்சிக்கோம்மா" சொல்ல அவள்,

"ச்ச தாஸ், என்னைய விட ஜெயஸ்ரீக்குத்தான் உங்க மேல மதிப்பு அதிகம். நான் இன்னிக்கு உங்கக்கூட இருக்கேன்னா அதுக்கு 90% காரணம் அவதான். என்னை விட அவதான் உங்களை நம்புறா! இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைக்க மாட்டான்னு கூட சொன்னா. உங்களை அவ தப்பா நினைக்க மாட்டா! நானும் நினைக்கலை கவலைப்படாதீங்க."

போன உயிர் திரும்ப வந்தது.

இது காதலாய் யாசிக்கிறேன்னின் தொடர்ச்சி.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In கவிதைகள் சிறுகதை

காதலாய் யாசிக்கிறேன்

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

புணர்ச்சிமகிழ்தல் - காமத்துப்பால் - திருவள்ளுவர்

சட்டென்று விழுந்துவிடும் வார்த்தை வெளிப்பட்டுவிடக்கூடாதென்பதற்காக கட்டப்பட்டிருக்கும் அதற்கான கயிற்றிலிருந்து எப்படி அறுபட்டுக்கொண்டு வந்துவிடுகிறது என்று ஆச்சர்யமாகயிருந்தது. வார்த்தைகளுக்கு உயிர் இருந்துவிட்டால் சாதாரணமாய் நிகழக்கூடிய ஒன்றுதான் என்றாலும் தவறி விழுந்துவிட்டதாய் பிரயாசைப்பட்டு நிரூபிக்கத்துடிக்கும் மனதிற்கு வார்த்தையின் கட்டை லேசாய் அவிழ்த்துவிட்டிருந்தது தெரிந்தே இருக்கிறது. ஆனால் அது ஒரு அபூர்வமான காரியம், எல்லா சமயங்களிலும் மனதிற்கு சுயத்தை இழக்கும் சக்தி வந்துவிடுவதில்லை அதிலும் விழப்போகும் வார்த்தை தோல்வியை மட்டுமே கொடுக்கும் என்று நிச்சயமாய்த் தெரிந்த பின்னரும் கட்டவிழுத்துவிட மனதிற்கு முடிவதில்லை. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வெளிப்படுவதால் தான் விழுந்துவிட்ட அந்த வார்த்தை எதிராளியை சீண்டி துன்புறுத்துகிறது என்று நினைத்தேன். விழுவதற்குத்தான் நேரம் காலம் அமைய வேண்டியிருக்கிறதே தவிர உருவாவதற்கு இல்லை, சட்டென்று உருவாகும் எண்ணம் வெகு சுலபமாய் தனக்கான வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு மனதில் கருக்கொள்கிறது பின்னர் காலம் வார்த்தைகளின் வெவ்வேறான சேர்க்கைகளில் கூடி உச்சமடைந்து தனக்கான சொற்றொடரை உருவாக்கிவிட்டு அமைதியாகிவிடுகிறது, மனம் வார்த்தைகளைக் கட்டியிருக்கும் கயிற்றை மெல்லியதாய் அவிழ்க்க ஒற்றை வார்த்தையிலோ, வார்த்தைச் சேர்க்கையிலோ உருவான எண்ணத்தை கொட்டிக் கவிழ்த்துவிட்டு அடங்கிப் போய்விடுகிறது.

"உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?"

உரையாடல்கள், காதலின் உன்னதமான போதை. காதலிக்கத் தொடங்கிய பின் மனம் உரையாடல்களாகத் தான் சிந்திக்கத் தொடங்குகிறது. நடந்து முடிந்ததாய், கொண்டிருப்பதாய், போவதாய் உரையாடல்களின் நிஜம், நிகழ், கனவிலேயே காதல் தன்னை வளர்த்துக் கொள்கிறது. நேற்றைய உரையாடல்களின் மீது படுத்துக் கொண்டு நாளைய உரையாடல்களைக் கற்பனை செய்கிறது மனம், தொடர்ச்சியாய் கற்பனையில் உருப்போட்டுக் கொண்டேயிருப்பதால் உரையாடல்களில் புதிதான விஷயம் உண்மையில் நடப்பதில்லை. நேரடியான கருத்தாய் இல்லாமல் தான் உருவாக்க நினைக்கும், விவாதிக்க நினைக்கும் விஷயத்தை உரையாடலில் செம்புலப்பெயல்நீராய் கலக்கிறது மனம். அகிலாவுடனான உரையாடலில் அந்தக் கேள்வி வரவேண்டும் வரும் என்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளுடனும் சென்றாலும், கேள்வி, உண்மையின் வீரியத்தில் நடிப்பின் சாகத்தை நகர்த்திப் பார்க்கிறது.

"ஆமாம்"

------------------------------------------------------------------------------

March 1, 2008

2:34 PM me: இன்னிக்கு பீச்சிற்குப் போலாமா?
aeswari: ம்ஹூம் வேண்டாம்
me: ஏன்?
2:36 PM ஏன்னு கேட்டேன்?
2:45 PM உனக்கு என்னையெல்லாம் காதலிக்கிறதே பெரிசின்னு நினைப்பு
இல்லையா?
aeswari: உன்னைக் காதலிக்கிறேன்னு எப்ப சொன்னேன்!
நீதான் அப்படி சொல்லிக்கிட்டிருக்கிற
2:50 PM r u thr?
2:52 PM ???
2:56 PM Okay I am leaving bye

காதல் உயிரை அலைக்கழிக்கும் ரகசியம் தெரிந்தும் திரும்பவும் விழுவதும் எழுவதுமாய் எத்தனையோ முறை பெண்களின் மீதான மையலில் நிலை தடுமாறியிருந்தால் பித்தம் கொள்ள வைத்தது நீ மட்டும் தான். ஒற்றை ரோஜாப்பூவை கைகளில் ஏந்திக் கொள்வதில் வரும் பெருமையாய் நினைத்து காதல் விளையாடிருக்கிறேன், பெருமைக்கான தகுதியை பெற்றுத்தருவது காதலின் வேலையில்லை என்று உணரவைத்தவள் நீ. கைகோர்த்து கடற்கரையில் நடப்பதோ, முதுகோடு மார் உரசும் பயணங்களோ காதல் இல்லை என்ற உன் தத்துவங்கள் கேட்கும் பொழுதும், நீ அருகில் இல்லாமல் இருக்கும் பொழுதும் நன்றாகத்தான் இருக்கின்றன. உள்ளத்தின் மேல் மட்டும் காதல் என்பது கட்டமைக்கப்பட்ட பொய்யாகத்தான் இருக்கமுடியும் என்று ஒப்புக்கொள்ளும் உன்னால், உன் உடல் மேல் எனக்கிருப்பது காமம் அல்ல அதுவும் காதலே என்று ஏன் புரியவில்லை.

March 3, 2008

4.11 PM raja: hi
me: hi dude :)
raja: நான் அகிலம்
4:13 PM me: சொல்லு
raja: call me
me: சரி

“சொல்லு என்ன விஷயம்”
எங்களுக்கிடையில் அப்படியொரு உரையாடல் நடக்கவேயில்லாதது போல் அவளால் பேசமுடிந்திருந்தது, “என் தங்கச்சிக்கு புனேல ஒரு இன்டர்வியூ இருக்கு! யாராவது கூட்டிக்கிட்டுப்போகணும்”
“ஏன் சுத்தி வளைக்குற நேரா என்னைக் கூட்டிக்கிட்டு போகச்சொல்லேன்”
கனத்த மௌனம் ஒற்றை வார்த்தையில் முடிந்தது “சரி” தொலைபேசியை அணைத்தேன்.

March 12, 2008

10:15 AM aeswari: thanks
me: சரி
11:36 AM aeswari: un status message kEvalamaa irukku!
me: அப்படியா?
aeswari: illaiyaa
me: மாத்தணுங்கிறியா?
aeswari: athu un ishtam
11.40 AM me: //நெஞ்சமெல்லாம் காதல் - தேகம் எல்லாம் காமம்
- உண்மை சொன்னால் என்னை - நேசிப்பாயா//
இது எப்படியிருக்கு?
11.45 AM me: இருக்கியா?
aeswari: hmm
innikku freeya irukkiyaa?
me: இருக்கேன் என்ன விஷயம்
aeswari: oru vishayam pesanum
me: வரவா?
aeswari: hmm
4.30 PM me: கிளம்பிக்கிட்டிருக்கேன்
4.32 PM aeswari: hmm

உன்னைவிட்டு இரண்டடி விலகியிருக்கும் சமயங்களில் ‘ஏன் நடிக்கிற இயல்பாய் இரேன்!’ என்றாய் இயல்பை இயல்பாய் இருக்கமுடியாமல் தான் விலகியிருந்தேன் என்பது உனக்குத் தெரியாததா! வேண்டுமென்றே சாலையோர சுடிதாரை கவனிக்கும் உச்சுக்கொட்டும் ஜொள்ளுவடிக்கும் என் சீண்டல்களைப் பொருட்படுத்தாமல் விலகியிருக்க முடிந்திருக்கிறது உன்னால், கவனிக்காதது போலவே கண்டுகொள்ளாதது போலவோ இருந்துவிடும் உனக்கு நான் முந்தைய இரவு ஒத்திகை பார்த்த உரையாடல்கள் கனவோடு கரைந்து போவது தெரிந்திருக்கப் போவதில்லை.

“முத தடவை நான் உன்கிட்ட காதல் சொன்னப்ப எப்படியிருந்தது”

எங்களுக்கிடையில் அமர்ந்திருந்த மௌனத்தை விரட்டும் ஆயுதமாய் கேள்வியொன்றைப் பொறுத்தி எய்த அம்பு அவளை அவ்வளவு சீண்டியதாகத் தெரியவில்லை. என் கேள்விக்கான அவள் பதிலைப் பற்றிய கற்பனைகளைச் சிதைத்து இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கவே கூடாது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு பதில் இருந்தது.

“கோபமா வந்ததுச்சு, கால்ல போட்டிருக்கிறதைக் கழட்டி ஒன்னு வைக்கணும்னு நினைச்சேன்”
இதைச் சொல்லத்தான் அத்தனை யோசித்தாயா? இல்லை இப்படி நீ போடும் நாடகங்களை நான் நம்பிவிடுவதாய் நினைக்கிறாயா?

“அப்ப நீ என்னைக் காதலிக்கவே இல்லேங்கிறியா?”

எனக்காக இல்லாவிட்டாலும் அவள் தங்கையை பத்திரமாய் புனே அழைத்துச் சென்று வந்ததால் நன்றிக்கடனாய் கடற்கரையில் என் அருகில் அமர்ந்திருந்தாள். அருகில் என்றால் நானாய் உருவாக்கிய இரண்டடி தாண்டி சுண்டல்காரன் இடைபுகுந்து கூவிச் செல்லும் தொலைவில்.

“இல்லை”

“அப்ப நமக்குள்ள இப்ப நடக்கிறது”

இதற்கு அவளுடன் சாட்டிங்கில் உரையாடிவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு மௌனம் அவள் மேல் பரவியிருந்தது. வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருக்கலாம், கொட்டுவதற்கான அமிலத்தை அவளது உதடுகள் உருவாக்கிக் கொண்டிருக்கலாம், அங்கிருந்து விலகினால் வீட்டிற்குச் செல்ல எந்த பேருந்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்...

“நீ கன்ஸிடரேஷனில் இருக்கேங்கிறது தான் அதுக்கு அர்த்தம்.” அவள் அன்று வேதாளத்தை மட்டுமல்ல தன்னுடைய தேவதையையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருக்க வேண்டும். நான் வேதாளத்தை கழட்டிவிடவில்லையே?

“இன்னும் எத்தனை பேர் இருக்காங்க உன் கன்ஸிடரேஷனில்...?” தேவையில்லாததுதான், தவிர்த்திருக்கக் கூடியது தான், ஆனால் எங்கள் உறவில் முகமூடி ஒன்று என் முகத்தில் மாட்டப்பட்டு விடக்கூடாதென்பதில் நான் மிகவும் தெளிவாகயிருந்தேன். அவளை அத்தனை பாதிக்கவில்லை என் கேள்வி,

“நீ டைரி எழுதுவதானே?”

பேச்சை மாற்ற விரும்பினாளா தெரியாது, என் கேள்வி அவளுக்கு அயர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று ஊகித்தேன்.

“சாரி!”

“அது பரவாயில்லை சொல்லு...?”

“ஏன் கேக்குற?” என் பதில் கேள்விக்கு அவள் பதில் சொல்லப்போவதில்லை என்பதாய் அவள், நான் அவளிடம் கேள்வியொன்றையே கேட்காதது போல் உட்கார்ந்திருந்தாள். “எழுதுவேன்”

“எனக்கு உன் டைரி வேணும். எல்லா வருஷ டைரியும் இருந்தா கொடு இல்லாட்டி கடைசி மூணு வருஷ டைரி வேணும்.”

என்ன தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாய், என்னிடம் நேரடியாய் கிடைக்காமல் அப்படியென்ன உனக்கு என் டைரியில் கிடைத்துவிடப் போகிறது.

“எதுக்கு?”

“உன்னைக் காதலிக்க” அத்தனை இனிப்பான ஒன்றை இத்தனை கசப்புணர்ச்சியுடன் சொல்ல எங்கே படித்தாய், I love you இந்த மூன்று வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று எத்தனையோ நாள் நினைத்திருக்கிறேன் ஆனால் இன்று உன்னைவிடவும் உன் வாய் உச்சரிக்கப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்கும் உன் கை தட்டப்போகும் அந்த மூன்று வார்த்தைகளுக்குத் தான் மதிப்பு அதிகமாய் இருக்கிறது என்பது எனக்கே கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான்.

10.10.2007
அகிலாவை வழியில் வைத்துப் பார்த்தேன், நல்லவேளை திருப்பிக்கொண்டு போகாமல் நின்று பேசினாள் ஹாஹா.

அவளும் அவளோட ட்ரெஸ்ஸிங் சென்ஸும் லூஸா ஒரு சுடிதார் போட்டுக்கொண்டால் அவள் உடலைப்பற்றிய உணர்வில்லாமல் போய்விடுமா?

சுடிதாரைத்தாண்டியும் அவள் உடலை உணர்ந்து கொண்டிருந்தேன், டைட் ஜீன்ஸும் டீஷர்ட்டும் அவளுக்கு எவ்வளவு பொறுத்தமாக இருக்கும் என்ற கற்பனையுடன். ஹாஹா.

March 15, 2008 மாலை என் அலுவலக கஃப்டேரியாவில்

“என்ன இது” முகத்தில் வீசியெறிந்த டைரி பக்கத்தை இன்னொருமுறை படித்துப் பார்த்துவிட்டு.

“ஒட்டுமொத்த டைரியில் உனக்கு இதுதான் தெரிஞ்சிதா?” மெல்லக் கேட்டேன்.
மௌனம், பேரர் கொண்டு வந்து வைத்த ஜூஸ் முழுவதையும் நான் குடித்து முடிக்கும் வரை மௌனம். அவளுடைய வார்த்தைகளை விட மௌனம் என்னை அலைக்கழிக்கக்கூடியது அவளுக்கும் அது தெரிந்து தானிருக்கும்.

“எனக்கு பயமாய் இருக்கு, என் உடம்பு மேல இருக்கிற க்ரேஸ் போனதுக்கு அப்புறம் நீ என்ன செய்வேன்னு நினைச்சா... இன்னிக்கு என் மேல் இருக்கிற க்ரேஸ் எல்லாம் நான் மறைச்சு வைச்சிருக்கிறதால - அப்படி நீ நினைக்கிறதால - நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஹாய் பாய்னு பழகியிருந்தா என்கிட்டயும் ‘மையல்’ தான் இருந்துச்சு ‘பித்தம்’ இல்லன்னு நீ போய்டுவ வேற ஒருத்திய பார்த்துக்கிட்டு இல்லையா?”

ஒரு ஸ்டேட்டஸ் மெஸேஜ் இத்தனை பாடுபடுத்தும் என்று நான் நினைத்திருக்கவில்லை அவளுடைய மௌனத்தை நான் எடுத்துக் கொண்டேன்,

“என் உடம்பு மேல உனக்கு இப்ப இருக்கிற க்ரேஸை என்னால் வாழ்நாள் முழுக்க காப்பாத்திக்க முடியாது. அது யாராலையும் முடியும்னு நினைக்கலை.” எத்தனை நாட்களாய் இந்த விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை.

“என் தங்கச்சி கூடயிருந்தப்பையும் நீ இப்படித்தானே நினைச்சிருப்ப?”

“அகிலா இது ஓவர், நீ பேசுறது அநாகரிகமாயிருக்கு.”

“ஆமாவா இல்லையா சொல்லு?”

“இல்லை, இப்ப என்ன தான்டி உன் பிரச்சனை, டைரியிலேர்ந்து ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு வந்து ஏன் என்னை டார்ச்சர் பண்ணுற. மீதி பக்கமெல்லாம் உன் மனசைப் பத்தி கவலைப்பட்டிருக்கேங்கிறதாலையா? இல்லை இந்த ஒரு பக்கத்தை கிழிச்சிட்டு என்னால் டைரியை உன்கிட்ட கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறியா?” நாங்கள் இருப்பது காஃபிடேரியா என்ற உணர்வில் மெதுவாய்க் கத்தினேன்.

“உனக்கு என்னை விட என் உடம்பு மேல தான காதல் அதிகம்?” வைரமுத்துவின் வரிகளை உணரும் பொழுது இருந்த துள்ளல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது இல்லை.

“ஆமாம்” நான் சொல்லி முடித்திருக்கவில்லை அதுவரை குடிக்கப்படாமல் இருந்த அவள் பக்கத்து ஜூஸ் முழுவதும் என்மேல் ஊற்றிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள்.

------------------------------------------------------------------------------

இந்தப் பதிலை நான் சொல்லியிருப்பதற்கான காரணங்கள் உண்மையில் கண்டுபிடிக்கப்பட முடியாததாய் இருந்தது. ஆயிரம் முறை அரங்கேற்றிப் பார்த்த வார்த்தைகள் காணாமல் போயிருந்த சமயம் எங்கிருந்தோ இந்த வார்த்தை அதன் உண்மைக்கான உறுதியில் கட்டவிழ்க்கப்பட்ட குதிரையாய் தடைகளைத்தாண்டி கடைசியில் வென்று நின்ற பொழுது விழுந்த அந்தச் சொல் தரும் அர்த்தம் விளங்கிக் கொள்ள முடிந்தது. வெறும் உண்மை ஒப்பனையில்லாத நடிகையைப் போல நம்பமுடியாததாயும் ஒப்புக்கொள்ள முடியாததாயும் இருக்கும். மேலே இரண்டு வார்த்தைகள் கீழே இரண்டு வார்த்தைகள் நடுவில் கொஞ்சம் பொய் கலந்து வந்திருந்தால் அந்த 'ஆமாம்' எனக்கு நல்லதொரு பொழுதை பரிசளித்திருக்களாம். ஆனால் மொட்டையாக வந்து குதித்த உண்மை, அதற்கான வீர்யத்துடன் வெளிப்பட்டு அகிலாவை சட்டென்று சீண்டியிருந்தது. வார்த்தையின் அர்த்தத்தை விடவும் அது சொல்லப்பட்டுவிட்டது தான் அகிலாவிற்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும் என்று நினைத்தேன். மூன்று வருட பழக்கத்தில் முகமூடிகளுக்கான தேவை அருகியிருந்தாலும் வார்த்தைகளுக்கான முகமூடி நிராகரிக்க முடியாததாய் இருந்தது.அவளுக்கும் அது ஆச்சர்யமானதாகத்தான் இருந்திருக்க முடியும் எல்லைகளுக்குள்ளான வார்த்தைச் சீண்டல்களை நான் புறக்கணித்தது, கணித் திரையில் காண்பதற்கும் நேரில் கேட்பதற்குமான வித்தியாசம் தான் என் மீது ஜூஸாகக் கவிழ்ந்திருந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

உரையாடலின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்காத பொழுது கிடைக்கும் தருணம் அவகாசம் மற்றதில் இல்லையாகையால் அவளால் முடிந்த எதிர்ப்பு.

அவள் நகர்ந்து சென்ற நிமிடத்தில் என்னைச் சுற்றி நின்றவர்கள் பார்த்தப் பார்வையில் நான் மிதக்கத் தொடங்கினேன், காதல் எப்பொழுதும் தரையிறங்க அனுமதிப்பதில்லை என்றாலும் எங்களுடையது இன்னமும் காதலாக பரிணாமம் அடையாமல் குரங்கிலேயே நின்று கொண்டிருந்தது. பொது இடங்களில் தனக்காய் கட்டமைத்துக் கொண்ட எல்லைகளுடன் அவள், தனி இடங்களில் எங்கள் சந்திப்பு நடந்ததேயில்லை, அவளுக்காய் இல்லாவிட்டாலும் என் கொள்கைகளுக்காய் அவள் கட்டமைத்துக் கொண்டிருந்த எல்லைக்கு வெளியில் இருந்தே சண்டை செய்து வந்த நான். என் சீண்டல்கள் இணையத்தில் எல்லை மீறத் தொடங்கியிருந்ததும் அப்பொழுது தான், சுவருடன் பேசவும் உரையாடவும் கிண்டல் செய்யவும் எல்லை மீறவும் நான் இன்னமும் கற்றுக் கொள்ளாததால் ஒரு பக்கம் மட்டும் வேகமாக வீசி வீசி சோர்வடைந்த பொழுதுகளில் இது நிச்சயமாய் வேறானது. சுவரொன்று ஆப்பிள் ஜூஸை தலையில் கவிழ்ப்பது, உணர்ச்சிகளற்ற சுவரு என்பது கூட தவறான உவமை தான், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரிந்த சுவர். தன் சுவற்றில் இருந்து வெளிப்பட்டு அவள் சுயம் எட்டிப்பார்த்த பொழுது அது, என் வெற்றியைக் கொண்டாட இன்னொரு ஆப்பிள் ஜூஸ் கேட்க தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தான் ஹோட்டல் சிப்பந்திக்கு என் சந்தோஷம் புரிந்திருக்க நியாயமில்லை தான்.

நாங்கள் ஒரே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து ஏற்பட்ட பழக்கம் காதலாகி நான் காதல் சொல்ல ஏற்கவும் மறுக்கவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த முதல் வருடத்திலேயே அவளைப் பற்றிய என் புரிதல்களுக்கு கை கால் முளைக்கத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கான அவள் பதில் அறிவு சம்மந்தப்பட்டதாக இல்லாமல் மனது சம்மந்தப்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவள் என்னை ஏமாற்றவில்லை. தான் செய்யப்போவது என்னவென்று அவள் அறிந்திருந்தாள் நிச்சயம் அதைச் செய்திருக்க மாட்டாள் தான், கோபத்தை வெளிப்படுத்துவது தோல்விக்குச் சமானம் தான் எப்பொழுதுமே! அவளுக்கும் அது தெரிந்துதானிருந்தது. அந்தச் சீண்டலை அவள் கண்டு கொள்ளாமல் போயிருந்தால் நான் தோற்றுத்தான் போயிருப்பேன், பெரும்பாலும் அது அப்படித்தான் நடக்கும். அன்று அவளை வென்று விட்டதாக நான் நினைத்ததற்கும் அதுதான் காரணம். இன்னமுமே கூட அவள் என் மீது ஆப்பிள் ஜூஸ் ஊற்றியது எனக்கு உதவும் என்றே நினைத்தேன்.

அன்றிரவு அவளிடம் இருந்து செல்லிடைபேசியில் அழைப்பு வந்தது, நான் காலையில் இருந்து அதை அணைத்து வைத்திருந்தது அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது.

"ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்."

நான் பதில் சொல்லவில்லை.

------------------------------------------------------------------------------

"சொல்லுங்க சார்! ஞாயித்துக் கிழமை எங்கப் போயிருந்தீங்க?"

அகிலா கம்பெனி நம்பருக்கே கால் செய்திருந்தாள்.

"ஆசிப் அண்ணாச்சி வீட்டுக் கல்யாணத்துக் போயிருந்தேன் என்னயிப்ப?"

"உங்க டப்பா மொபைல் போன் எங்க சார்?"

"இன்னும் காசு கட்டலை அதனால வொர்க் ஆகலை".

"ஏன் சார் ஒரு வார்த்தை அதைச் சொல்லிட்டுப் போறதுக்கென்ன? உங்கக்காகிட்ட என் ப்ரண்டொருத்தனை வைச்சி பேசி விஷயம் வாங்கினேன். தெரியுமா?"

நான் மௌனமாயிருந்தேன்.

"பதில் சொல்லுங்க சார்." கத்தினாள் மறுமுனையில்

"ஏண்டி உயிரை வாங்குற, உங்கிட்ட சொன்ன ஞாபகமாயிருந்துச்சு அதான்."

கேட்டவள் சிரித்தாள்.

"ஏண்டி சிரிக்கிற!"

அவள் அவசரப்படாமல் மெதுவாய்ச் சிரித்துமுடித்துவிட்டு "உங்கக்கிட்ட 'ஒரு வார்த்தை பேசினீங்கன்னா போனை வைச்சிடுவேன்'ன்னு சொல்லி போன் பேசி ஒரு ஆறு ஏழு மாசமிருக்குமான்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி."

எனக்கும் கொஞ்சம் சிரிப்பாய்த் தான் இருந்தது, நாங்கள் அந்த உரையாடலுக்குப் பிறகு அடித்த லூட்டி. நான் சிரித்தால் அதையே காரணமாய்க் காட்டி இன்னமும் வம்பிழுப்பாள் என்பதால் வெறுமனே "ம்ம்ம்" என்றேன். ஆனால் மனதிற்குள் அவள் பேசியது அப்படியே ஓடியது.

"என்னைய ரொம்பக் கஷ்டப்படுத்துறீங்க மோகன், காலையில் அப்படி நடந்துக்கிட்டது என் தப்பு தான், Sorry. என்கிட்டேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு தெரியலை, மனசு விட்டுப் பேசணும்னா? மனசுக்குள்ளே இருக்கிறதை எல்லாம் வெளிய கொட்டிடணும்னா என்னால அது முடியும்னு தோணலை. உங்களை காதலிக்கலைன்னு சொல்லலை அதே மாதிரி காதலிக்கிறேன்னும் சொல்ல முடியலை சொல்லப்போனா காதல்னா என்னான்னே ஒரே குழப்பமாயிருக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளைப்பத்தி நினைக்கிறப்ப.

நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்காம விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நான் பயப்படலைன்னு சொல்ல முடியாது, அந்த பயம் எனக்கு இருக்கத்தான் செய்யுது. போனா இத்தோட போகட்டுமேன்னு தான் நான் இப்படியிருக்கிறதா கூட சிலசமயம் நினைச்சிருக்கேன், போய்ட்டீங்கன்னா அப்படியே துடைச்செறிஞ்சிட்டு போய்ட முடியும்னு இப்ப தோணலைன்னாலும் இது தேவலைன்னு நினைக்கத்தோணுது. இந்த பயம் போகாம என்னால காதலிக்க முடியாதுன்னே நினைக்கிறேன், ஆனால் விட்டுட்டுப் போய்டுவீங்கன்னு நினைக்கிறதுக்கு என்கிட்ட எந்த ரீஸனும் கிடையாது. நான் ரொம்ப குழப்பமாயிருக்கேன்.

சில சமயம் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறதா நினைச்சி பேசாம எதையாவது சொல்லி உங்களை என்ன வெறுக்குற மாதிரி செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். மூணு வருஷம் கழிச்சி இதெல்லாம் ரொம்ப ட்ரமேட்டிக்கா இருக்கும்னும் நீங்க நம்பமாட்டீங்கன்னும் தெரியிறதால என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்க கேக்குற மாதிரி என் கேர்ள் ப்ரண்ட்ங்க கிட்ட பழகிற மாதிரி என்னால் உங்கக்கிட்ட பழக முடியலை, எங்கையோ ஒரு இடத்தில் என்னத்தையோ நான் மிஸ் பண்ணுறேன். என்னான்னு தான் தெரியலை.

சரி எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவோம், என்ன உங்களுக்கு என் உடம்பப் பார்க்கணும் ஆசை தீர அனுபவிக்கணும் அவ்வளவுதானே போய்த் தொலையுதுன்னு அதைச் செஞ்சிரலாம்னு கூட நினைச்சிருக்கேன். ஆனால் கடைசியில் நீங்களும் இவ்வளவு தானான்னு நினைக்கிறப்ப மனசுக்கு கஷ்டமாயிருக்கு அதே சமயத்தில் என்னமோ உங்களுக்கு மட்டும் தான் இதில் விருப்பம் இருக்கு எனக்கு இல்லவேயில்லை சாமியார் நானுன்னு ஃப்ரூப் பண்ண நினைக்கிறனான்னு சந்தேகமாவும் இருக்கு. எனக்கு செக்ஸ் ஃபீலிங் இல்லாம இல்ல, எனக்கும் அதைப் பற்றி கனவு கற்பனை கவிதை எல்லாம் இருக்கு சொல்லப்போனா பாட்டுக் கூட இருக்கு உங்கள மாதிரி..."

சிரித்தாள் நான் எதுவும் சொல்லவில்லை.

"...ஆனா சீக்கிரமே ஒரு முடிவு எடுக்கணும்னு இன்னிக்கு காலைல தான் நினைச்சேன். அதுக்குள்ள இப்படி பண்ணிட்டீங்க, ஒன்னு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறது இல்லாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன மாதிரி தொறந்து காண்பிச்சிட்டு போய்ட்றதுன்னு இருக்கேன். ஆறுமாசம் ஒரு வருஷம் காதலிக்கிறவங்க எல்லாம் எப்படி நடந்துக்கிறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் வர்றேன், மூணு வருஷமா உங்களைக் காதலிச்சும் காயப்போட்டேங்கிறப்ப எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. மூணு வருஷம் பொறுத்தியே இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ பொறுத்திட்டா நான் முழுசா உனக்குத்தானேன்னு தான் சொல்லத் தோணுது. ஆனா அது என்ன ஃபார்மாலிட்டி தாலி கட்டுறது கூட படுத்துக்கிறதுக்கு லைசன்ஸான்னும் தோணுது. மூணு வருஷம் காதலிச்ச உங்களை விட தாலி பெரிய விஷயமா படலை எனக்கு.

என்னால ஒரு முடிவுக்கு வரவே முடியலை, இப்படி என்னைத் தடுமாற வைச்சு என்னை உபயோகிச்சிக்கப் பார்க்கிறீங்களான்னும் சில சமயம் தோணுது. என்ன எழவோ நான் எதுக்கும் தயாராய்ட்டேன், உங்களுக்கு விருப்பம்னா நாளைக்கே கூட நீங்க என்னை எடுத்துக்கலாம். இப்ப எதுவும் பேசாதீங்க எதார்ந்திருந்தாலும் நாளைக்கு சொல்லுங்க. நான் எதுக்கும் தயார். நான் போனை வைக்கிறேன்."

சிரிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் முயன்றாலும் முடியாமல் சிரித்துவிட, எதிர்ப்பக்கத்தில் அவள் போனைத் துண்டித்துவிட்டு சென்றுவிட்டாள்.

எல்லாம் ஒரு கடிதத்தில் முடிந்து போயிருந்தது அவள் தொலைபேசிய மறுநாள் இந்தக் கடிதத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். எங்கள் ஊடல் பின்னர் உணரப்பட்டு புணர்தலால் காமமான அந்நிகழ்ச்சிக்கு அடையாளமாய் இந்தக் கடிதம் மீந்து நின்றது.

------------------------------------------------------------------------------

அன்புள்ள அகிலாவிற்கு,

நேற்றைக்கு நீ பேசிய பொழுது என்னன்னமோ பேசிய பொழுது பதில் சொல்ல என்னிடம் எதுவுமில்லை, நீ பதில் பேசாதே என்பதால் மட்டும் நான் பேசாமலிருக்கவில்லை.

காமக் கொடூரனாய் நான் உன்னிடம் நடந்து கொண்டேனா தெரியாது, காதலாயும் யாசித்தலாயும் வந்திருந்தாலும் கேட்டதென்னமோ காமம் என்ற வகையில் உன்னைக் காயப்படுத்தி விட்டதாயே நினைக்கிறேன். அதற்காகவே அதற்காக வருத்தமும் படுகிறேன். உன்னிடம் இந்த மூன்று வருடங்களில் நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற எண்ணத்தைக் கூட வரவழைக்கவில்லை என்பதிலும் வருத்தமே!

அந்த அளவிற்கு கூட நம்பிக்கை வராத பொழுது நீ என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு முற்றிலும் சம்மதமே. இந்த அளவிற்கு கூட நான் நம்பிக்கை வைக்காத ஆட்களிடம் பழகுவதில்லை என்பதும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கடைசியாய் என்னன்னமோ சொன்னாய் 'வேணும்னா நாளைக்கே எடுத்துக்கோ' அப்படின்னெல்லாம். கொடுக்கப்படாதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்.

வருகிறேன்

காதலுடன்
அன்புடன்
மோகன்தாஸ்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In விளம்பரம்

இரண்டு நிமிட ஆச்சர்யங்கள்

விளம்பரங்கள் பார்ப்பது என்பது எனக்கு எப்பொழுதும் பிடித்தமான ஒரு விஷயம், அக்காவிடம் இதற்காக திட்டு வாங்கிய நினைவுகள் கூட உண்டு. இரண்டு நிமிடங்களில் ஒரு அற்புதமான விஷயத்தை சொல்லிவிடும் பொழுது மனம் லேசானதைப் போல் உணர முடிகிறது. ஏறக்குறைய சமீபத்தில் வெளிவந்த எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரமும் எனக்கு பிடித்தமான ஒன்று. மெல்லியதான ஒரு ஆணாதிக்க உணர்வு இந்த விளம்பரங்களில் என்னை மிகவும் மனதிற்கு நெருக்கமாக ஆக்கிய ஒன்று. ஆரம்பத்தில் இருந்தே இந்த விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன், அந்த செட் ஆஃப் விளம்பரங்கள் எங்கேயும் கிடைக்குமா தெரியவில்லை வீடியோவாக?

எப்பொழுதாவது படிக்க நேர்கிற அழகான ஹைக்கூ கவிதை போல் கடைசியாக வெளிவந்த 'த்ரீ ரோஸஸ்' விளம்பரம். கணவன் மனைவிக்காக வாங்கி வந்த தோடுகளை பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை எழுப்பிக் காட்ட, வந்த மலர்ச்சியை/ஆச்சர்யத்தை மறைத்துக் கொண்டு, பிறந்த நாள் அடுத்த மாசம் என்று சொல்லும் மனைவி பின்னர் ஒரு நாள் அம்மா வீட்டிற்கு கிளம்பும் பொழுது தான் கட்டியிருக்கும் சேலை எப்படியிருக்கு என்று கேட்க பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு கணவன் நல்லாயிருக்கு ஆனால் போன தடவையும் இதைத் தான் கட்டினாய் என்று சொல்லும் பொழுது, மனைவி சட்டென்று கோபமடைந்து திரும்பி பின்னர் கணவரைப் பார்த்து அழகாய் சிரித்து தேங்க்ஸ் சொல்லும் பொழுது, கவிதை, கவிதைன்னு நான் எழும்பிக் குதித்துக் கொண்டிருந்தேன் டிவியின் முன். இது ஒரு உதாரணம் மட்டுமே ஏறக்குறைய எல்லா 'த்ரீ ரோஸஸ்' விளம்பரங்களும் இதே வகையான ஹைக்கூக்களே. தொடர்ச்சியாக இப்படி அழகான ஹைக்கூக்களை நான் ஒரு கவிஞர் எழுதிக் கூட பார்த்ததில்லை. த்ரீ ரோஸஸ் கான்செப்ட் செய்பவரைப் பார்த்து ஒரு 'ஹாய்' சொல்ல வேண்டும் போலிருக்கிறது.



இந்த விளம்பரம் இன்னொரு அழகு, ஒரு அழகான சிறுகதைக்கான இன்ஸ்பைரேஷன்.



இதைப் போலவே கொஞ்ச காலம் முன்னால் வந்த 'Tata Sky'ன் அமீர்கான் விளம்பரமும் அப்படியே. அந்த செட்டில் வந்த முதல் விளம்பரம், அமீர்கான் தன் பெண்டாட்டிக்காக என்னவெல்லாமோ செய்துவைப்பார்; பார்க்க இயல்பாய் இருக்கும் கடைசியில் அன்றைய இரவு மேட்சிற்கான ஏற்பாடு அது என்று தெரியவரும் பொழுது ஒரு அழகான புன்னகை பரவும் உதடுகளில். அந்த விளம்பரத்தில் அமீர்கான் மற்றும் அவர் மனைவியாக வரும் குல் பனாக்கின் உணர்ச்சி வெளிப்பாடு அருமையாக இருக்கும். கடைசியில் "ச்சலோ ஜாவ் ஜாக்கே சாய் பனாக்கே லாவ்!" ஹைக்கு கவிதையின் ஆச்சர்யப் பகுதி!



தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் Airtelன் விளம்பரமும் அப்படித்தான்.



ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்தப் பையனின் தாயாக வரும் கதாப்பாத்திரம் அழகாக(?!) இல்லாததைப் போல் ஒரு வருத்தம் இருந்தது எனக்கு. ஆனால் கடைசியில் "பாப்பாகா ஃபோன் ஆயாத்தான்னா?" என்று அந்த குட்டீஸ் கேட்கும் பொழுது அவன் கையில் இருக்கும் பொம்மை ஃபோனைப் பார்த்து மெதுவாய் புன்னகைத்துவிட்டு நகரும் பொழுது. அருமை. இன்னொரு கவிதை.

HDFC Childrens Plan விளம்பரமும் சட்டென்று மனதைக் கவர்ந்த ஒன்று, தொடர்ச்சியாய் செல்லும் தியேட்டர்களில் எல்லாம் போட்டாலும் இன்னமும் மனதைக் கவர்ந்த ஒன்று.

இதில் ஒரு விஷயம், அந்த நான் சொன்ன எல்லா த்ரீ ரோஸஸ் விளம்பரங்களிலும், HDFC விளம்பரத்திலும் நடிக்கும் அந்தப் பையன் துள்ளுவதோ இளமையில் தனுஷுடன் நடித்த பையனாமே! ஆச்சர்யம்! என் அக்கா புருஷன் சொல்லப்போய் தான் எனக்கு தெரிய வந்தது. அந்தப் பையனின் உணர்ச்சி வெளிப்பாடு எனக்கு மிகவும் பிடித்ததாய் இருக்கிறது. கன்கிராட்ஸ் ட்யூட். இந்த இரண்டு நிமிட ஆச்சர்யங்களுக்கு/கவிதைகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு ஒரு குட்டி சல்யூட். நின்றபடியே, சின்னதாய் ஒரு Stand up Ovation.

Read More

Share Tweet Pin It +1

30 Comments

In Only ஜல்லிஸ் சோழர்கள் பயணம்

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

சுஜாதா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, அவர் விட்டுச்சென்ற இடைவெளி நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என் வரையில். சொல்லப்போனால் என் வரையில் அவருக்கான இடம் நிரப்பப்படமுடியாதென்றே நினைக்கிறேன், தற்சமயம் சுஜாதாவிற்கான இடம் sweet and short ஆக இருக்கிறது. அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

“நான் கடவுள்” படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து பின்னர் விட்டுவிட்டேன், காரணம் தெரியாது அதைப் பற்றி எழுத மேலும் ஒன்றும் இல்லை என்பது மட்டுமே காரணமாய் இருக்க முடியாது. கொஞ்சம் போல் பாலா பக்கம் நான் ஒரு தலைப்பட்சமாய் சாய்கிறேன் என்பது கூட காரணமாயிருக்கலாம். டிவிட்டரில் எழுதியது, இந்த ட்ராஃப்ட் என நான் என் பக்க சாய்வை உறுதிசெய்து கொண்டேயிருக்கிறேன்.

Gym செல்ல ஆரம்பித்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டது, இன்னும் இரண்டு மாதங்களுக்கான சேர்த்து பணம் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டது. எங்களின் இரண்டு மாத உழைப்பே கூட எங்களுக்கான வெற்றி தான், எந்த உடல் உழைப்பும் இல்லாமல் சும்மா தட்டிக் கொண்டிருப்பதற்கு, இது தேவலை. உடலளவில் வந்திருக்கும் மாற்றத்தை விடவும் மனதளவில் அடைந்திருக்கும் மாற்றம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

Dev D, Delhi 6 படங்கள் பார்த்தேன், நிச்சயம் என் அளவுகோல்களுக்கு இணங்க இந்தப் படங்களைப் பற்றி எழுதித்தான் இருக்கவேண்டும் கொஞ்சம் பெரிய அளவில். “சோறுபோடும் என் முதலாளிக்கு நேர்மையாக இருக்க” வேண்டியிருப்பதால் இரண்டு வரி கூட எழுத முடியாமல் இருப்பதில் வருத்தமே. “தேவதாஸ்” கதையின் இந்த Dev D, interpretation எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Y tu mamá también அளவிற்கு ஒரு படம் தமிழில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன், இப்பொழுது என்னைப் பொறுத்தவரை தமிழ், இந்தி சினிமாக்களின் அத்தனை வேறுபாடு இல்லை என்பதால் இந்திய சினிமாவில் அப்படி ஒரு படம் Dev D. Multiplex சினிமா இந்தியில் சாத்தியப்படுத்தியிருக்கும் விஷயங்கள் தமிழில் உருவாகுமா என்றால் தெரியவில்லை. ஆற அமர ஒரு பதிவு போட்டு எழுத வேண்டிய அளவிற்கான படம் Dev D. படம் பார்த்துவிட்டு வந்ததும் டிவிட்டரில் போட்ட ஒரு வரி கமெண்ட் மட்டும் இப்பொழுது இங்கே.

“Saw Dev D, movie was pretty interesting. read lot of v good reviews. film didn't disappointed me at all, great music and camera work. if u r in2 this multiplex cinema and if u r not a hypocrite u can enjoy this movie. but thought like theய் should've cut down the scenes.”

Delhi 6 ஒப்பீட்டளவில் எனக்கு Dev D அளவிற்கு பிடிக்கவில்லை என்றாலும், பிடித்துத்தான் இருந்தது. தேவையில்லாத அந்த அபிஷேக் சோனம் காதலைக் கைவிட்டிருக்கலாம். Dev D அளவிற்கு raw வாக படம் இல்லை, சோடா ஊற்றி கலந்த எஃபெக்ட்டில் இருந்தது. இங்கும் அங்கும் குதிக்கும் அபிஷேக்கின் குரங்கு சேட்டை, அமிதாப் பச்சன் என்று கொஞ்சம் இறுக்கிப் பிடித்திருந்தால் நல்ல படமாகயிருந்திருக்கும். ஆனால் நண்பர்களுக்கு Dev Dயை விடவும் Delhi 6 பிடித்திருந்தது என்று அறியும் பொழுது ராகேஷ் ஒம்பிரகாஷ் மெஹ்ரா யோசிச்சு தான் செய்திருப்பார் என்று பட்டது.

சமீபத்தில் பதிவொன்றில் தப்பித்தவறி நுழைந்த பொழுது, கரிகாலக் கண்ணன் பற்றிய பின்னூட்டங்களைப் பார்க்க முடிந்தது. கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது, பதிவுகளில் பொன்னியின் செல்வனைப் பற்றி யாராவது பதிவெழுதியிருந்தால் அந்தப் பக்கம் தலைவைத்துக் கூட பார்க்க முடியாத “சுய கட்டுப்பாடு” கொஞ்சம் தவறோ என்று நினைக்க வந்தது அந்தப் பதிவில் பார்த்த சில விஷயங்களும் சில பின்னூட்டங்களும்.

கரிகாலக் கண்ணன் பற்றி பதிவாக எழுதாமல் ஒரு கற்பனைக் கதையை கலந்து கட்டியதற்கு முக்கியக் காரணம், அவனைப் பற்றி நான் படித்த ஒற்றை வரி மட்டுமே. இரண்டாம் ஆதித்த கரிகாலன் சோழர் குலத்தில் அரசாண்ட ஒரு மன்னன் என்பதும், அந்தக் காலத்தில் அரியணை ஏறும் பொழுது திருமணம் செய்து கொள்வது இயல்பு என்றும் புரியும் பொழுது கரிகாலக் கண்ணனுக்கான சாத்தியக்கூறுகள் விரிவடைகின்றன.





மன்னர்காலம்
இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.


மேற்சொன்ன அட்டவணை "The Chola" எழுதிய நீலகண்ட சாஸ்திரி கொடுப்பது. இதற்குக் காரணம் அவன் பெயரில் கல்வெட்டுக்கள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. ஆனால் கடைசியில் முடிக்கும் பொழுது “சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.” ஆதித்த கரிகாலன் பற்றி எழுதிய இந்தக் கட்டுரை இன்னும் கொஞ்சம் விளக்கமாக இது பற்றி பேசக்கூடும்.

எதையாவது பற்றி நாலுவரி எழுதலாம் என்று நினைக்கும் ஒவ்வொரு சமயமும் இலங்கைப் பிரச்சனை கண்முன் தோன்றி இந்தச் சூழ்நிலையில் என்ன எழுதுவது என்று மனம் மூடிக் கொள்கிறது. ஈழத்தைப் பற்றி, ஈழத்தமிழர்களைப் பற்றி கேட்கும் எந்த ஒரு செய்தியும் மனதை சட்டென்று துன்பமடையச் செய்கிறது.

என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவிலான எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் மாநிலக் கட்சிகளின் துணைகொண்டு மட்டும் தான் ஆட்சி அமைக்கக்கூடிய நிலை வர வேண்டும். அது காங்கிரஸோ பிஜேபியோ இப்போதைக்கு பிரச்சனை கிடையாது. அறுதிப் பெரும்பான்மையோ அதன் பக்கத்திலோ கூட வர முடியாமல் இருக்க வேண்டும். மூன்றாம் அணியில் ஜெ வருவார் மாட்டார் என்ற குழப்பத்திலேயே இருப்பதால் மூன்றாம் அணியின் வாய்ப்பு பிரகாசமாகவே தெரிந்தாலும், என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஜெ.வின் துணிச்சல் அவருடைய மிகப்பெரிய பலவீனம். The possession of power, unavoidably spoils the free use of reason - Immanuel kant. இது ஜெ.வின் விஷயத்தில் 200% நிஜம்.

புதுக்குடியிருப்பிற்குள் நெருக்கப்பட்டிருக்கும் புலிகளுக்கும் சரி, ஈழ மக்களுக்கும் சரி இந்தப் பக்கம் கலைஞர் இருப்பது தான் உத்தமமாகயிருக்கக்கூடும்.

ஹைதராபாத் சென்றிருந்த பொழுது எடுத்த ஒரு போர்ட்ராய்ட் மிகவும் பிடித்திருந்தது,

Portrait

தஞ்சாவூரில் எடுத்த பல புகைப்படங்கள் கைவசம் இல்லாததால் மாற்ற அப்லோட் செய்ய முடியவில்லை சில படங்கள்

தஞ்சை கோவில்

சிவ பார்வதி

அர்த்தநாரீஸ்வரர்

தஞ்சை பெரிய கோவில் சிற்பம்

இது பெங்களூர் Aero Show சென்றிருந்த பொழுது எடுத்தது

Surya Kiran formation

F - 18 in action

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிற்பங்கள் சோழர்

தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு விசித்திர சிற்பங்கள்

தஞ்சை பெரியகோவிலில் பார்த்த இந்த இரண்டு சிற்பங்களும் எங்கள் கவனத்தைக் கவர்ந்தன. நான் இது போன்ற சிற்பங்கள் இருப்பதைப் பற்றி எங்கேயும் படித்ததில்லை. பார்த்துச் சொன்னது அக்காவின் கணவர், நல்ல ஷார்ப்பான கண்கள் அவருக்கு என்று நினைக்கிறேன். நான் என் மற்ற கண்ணில் பார்த்தது இங்கே கீழே புகைப்படங்களாய்.

Mysterious Sculpture

இந்தச் சிலையில் இருப்பவரைப் பார்ப்பதற்கு ஒரு சீன நாட்டுக்காரர் போலவே தோற்றமளிக்கிறார். தலையில் தொப்பி அணிந்து இருக்கும் இந்தச் சிலை எங்கள் கவனத்தைக் கவர்ந்தது. இதைப்பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. நான் பார்த்தவரையில் இப்படிப்பட்ட ஒரு சிற்பம் எந்தக் கோவிலிலும் பார்த்ததில்லை.

Mysterious Sculpture

அதே போலவே இந்தப் பெண் உருவமும், இந்த வகையான அலங்காரத்துடன், இந்த வகையில் உட்கார்ந்திருக்கும் சிலையையும் நான் பார்த்ததில்லை. இதற்குப் பின் எதுவும் ரகசியங்கள் இருக்கிறதா? தெரியவில்லை. இன்னும் நன்றாய் தஞ்சை பெரிய கோவில் பற்றி அறிந்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In வகைப்படுத்தப்படாதவை

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

ஈழப்பிரச்சனை பற்றி எழுதாமல் இருப்பது உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் என்ன எழுதி புண்ணியம் என்று எதையும் எழுதாமல் போய்க்கொண்டிருக்கிறேன். "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" பாடலில் நம்பிக்கை இருந்தாலும், எதையும் மாற்றுவதற்கு சக்தியில்லாதவனாய் ஆகிவிட்டதாய் ஒரு எண்ணம் ஒவ்வொரு முறையும் ஈழம் பற்றி நினைக்கும் பொழுது வந்துவிடுகிறது. தானாய் எதுவும் மாறப்போவதில்லை, அந்த மாற்றத்திற்கான ஒரு சிறிய பங்களிப்பைக் கூட செய்யமுடியவில்லை என்பது வருத்தமே. முத்துக்குமார் தீக்குளிப்பு பற்றிய இருவேறு மனநிலையில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேன். என்னால் எக்காரணம் கொண்டும் 'தற்கொலை' என்பதை கொள்கை அளவில் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. If you live long enough, you'll see that every victory turns into a defeat. Simone de Beauvoir சொன்னதைப் போல் நினைத்துக் கொண்டு காலம் வழங்கப்போகும் தோல்வியை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன். என் ஈழ ஆதரவைப் போல முத்துக்குமார் தீக்குளிப்பைப் பற்றி நான் சொல்லிக் கொள்ளும் காரணங்கள் விவாதத்திற்கு உட்படுத்த முடியாததாய் நான் நம்பும் விஷயத்தையே மறுக்கவேண்டிய கட்டாயத்திற்கு என்னை உள்ளாக்குகிறது. எல்லாவற்றையும் சார்பு நிலை இல்லாமல் அணுக முடிந்திருக்கவில்லை, என்னுடைய ஈழ ஆதரவும் ஒரு பக்க சார்பு நிலை உடையதே. என்னுடைய ஆதரவிற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டேயிருப்பவனாகயிருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையிலே கூட பல கடுமையான சந்தர்ப்பங்களைத் தாண்டி வந்தவன் என்கிற முறையில் தற்கொலை என்பது தீர்வாகாது என்று மட்டும் என்னால் உணர்முடிகிறது. நாளொரு விதமாய் எம் தமிழர் செல்லடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பொழுதும் வாழ்க்கையை நகர்த்தத்தான் வேண்டியிருக்கிறது. எந்த விஷயமும் காலத்தின் கால்களை கட்டிப்போடும் வலிமை இல்லாதவையாகவே இருக்கிறன.

----------------------

அக்கா கல்யாணம் நல்லபடியாய் நடந்து முடிந்தது . இதைப்பற்றி விரிவாய் பின்பொறு முறை எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

----------------------

//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது//

என்று ராஜேந்திரன் பற்றியும் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைப்பற்றி எனக்கிருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டிருந்தேன். பதிலில்லை, சரி நம்மவர்கள் தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்கள் என்று ஒரு இங்கே வைக்கிறேன்.

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது.//

இப்படி எழுதியிருந்தீர்கள்.

நான் அறிந்த வரையில் சோழர்களின் கடைசி மன்னன் மூன்றாம் இராஜேந்திர சோழன் வரை தலைநகரமாக வைத்து அரசாண்டது - கங்கை கொண்ட சோழபுரத்தை தான்.

என்னிடம் இருக்கும் விவரங்களை மட்டும் வைத்து இந்த முடிவிற்கு வரக்கூடாது என்பதால் இந்தக் கேள்வி. நீங்கள் நேரடியாக எந்த மன்னன் என்று கூறாததால் நேரடி சோழ மன்னர்களுக்கு(குலோத்துங்க சோழன் அவனைத் தொடர்ந்தவர்களைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்) பிறகுவந்த மராட்டிய மன்னர்கள் வழியைக் குறிப்பிடுகிறீர்கள் என்றே கருதுகிறேன். சரிதானா?

இதை உங்கள் இணையத்தில் ஏற்றாமல் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மோகன்தாஸ்



விவரம் அறிந்தவர்கள் பதில் சொன்னால் தேவலை.

-------------------------

எங்கள் கம்பெனி 2009ற்கான Salary Freeze அறிவித்திருக்கும் வேளையில் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கிறது. சரி கம்பெனி சரியாய்ச் செய்யவில்லை என்றால் பரவாயில்லை, நல்லவிதமாய்ப் போய்க்கொண்டிருக்கும் பொழுதும் சிச்சுவேஷனை உபயோகித்துக் கொள்வதற்காய் இப்படி இறங்குவது வேடிக்கையாக இருந்தாலும். பொறுமை பொட்டுக்கடலையைவிட பெரியது என்பதால் பொறுத்துப் போகவேண்டியிருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts