In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - நன்றிகள் பல
Posted on Sunday, February 19, 2006
இது போன்று தமிழ்மணத்தின் நட்சத்திரமாய் இருக்க ஒரு அருமையான வாய்ப்பை நல்கிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)இந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல...
"யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு...
In சோழர் வரலாறு சோழர்_வரலாறு நட்சத்திரம்
சோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்
Posted on Saturday, February 18, 2006
கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்டியன் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தான். சேவூர்ப் போரில் பராந்தகன் தன் பகைவர்களின் யானைகளை வெட்டிவீழ்த்தி, இரத்த ஆறு ஒடச்செய்தான் என்றும் அவனது மகன் ஆதித்தன் சிறுவனாய் இருந்தும் சிங்கம், யானையுடன் போரிடுவதுபோல், வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத்...
சிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை. பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்."தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்.""அருண்மொழி என்னயிது???" சாதாரண சந்தர்ப்பங்களில்,...
In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்
Posted on Friday, February 17, 2006
இளங்கோவனுக்கும் கார்த்திகாயனிக்கும் பிறந்ததால் நான் இந்துவானேன், டேவிட்டிற்கும் எலிசபெத்திற்கும் பிறந்ததால் நான் கிறிஸ்துவனானேன், அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் நான் முஸ்லீமானேன், யாருக்கும் யாருக்கும் பிறந்தால் நான் மனிதனாவேன். எங்கேயோ ஒருமுறை கேள்விப்பட்டு, அதன் பிறகு என்னுடைய எல்லா பேச்சுப்போட்டிகளிலும், இந்த வரிகளை நான் உணர்ச்சிப்பூர்வமாக சொல்வேன். ஆனால் பேசி ஓய்ந்து போன ஒரு நாளில் உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக யோசித்த பொழுது இந்த வரிகளின் பின்னால் இருக்கும்...
திருமகள் போல பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனைக்கொள காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி... என்ற ராஜராஜ சோழனின் கட்டியம் எங்கே உரத்துக் கூறப்பட, அதன் பின் சோழம் சோழம் என்ரு வீரர்க்ள் டங்கள் கேடயத்தில் வேலை இடிக்கும் பெரும் சத்தமும் அதன் பின்பே தொடர்ந்தது, வந்தியத்தேவர் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு ஆசனத்தில் குந்தவை பிராட்டியும் அவரது மடியில் சோழ குல வாரிசு இராஜேந்திரன் உட்கார்ந்திருந்தான். "தேவி...
In திரில்லர் தொடர்கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - கொலைத்தொழில் வல்லவன் 1 & 2
Posted on Thursday, February 16, 2006
அந்த கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்திருந்த இருவரின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அந்த அறையில் நிலவிய நிசப்தத்தை போல. “அவனை முடிச்சிடுங்க.” எதிரே உட்கார்ந்திருப்பரின் உணர்ச்சிகளற்று முகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏமாந்தவாராக, “அந்த முக்கியமான் கோப்புக்களை அவன் பார்த்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் சொல்கிறேன்.” இதற்கும் பதில்வராத காரணத்தால், “அவனுக்கு குடும்பம் எதுவும் உண்டா?” “இல்லை.” மீண்டும் நிசப்தம் அந்த அறையில் பரவத்தொடங்கியது. ... நாற்பத்தைந்து வயது...
In Science ஜல்லிஸ் நட்சத்திரம்
நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்
Posted on Tuesday, February 14, 2006
சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும்.நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத்...
இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவே, சமுதாயத்தில் இருக்கும் தீய விஷயங்களில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழிமுறையை என்னால் ஆனவரை தர முயன்றிருக்கிறேன். எந்த தவறான நோக்கத்திற்காகவும் இந்தப் பதிவு கிடையாது. முழுக்க முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு. எப்பொழுதுமே ஒரு நல்ல விஷயத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடிய வழிகள் பல சமயங்களில் அமைந்துவிடுகின்றன. உதாரணமாக நம்முடைய வலைப்பதிவுகளையே எடுத்துக்...
உங்களிடமெல்லாம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்றால், ஜாவா ப்ரொக்ராமராகவோ, இல்லை பேச்சுப்போட்டியாளனாகவோ, தமிழனாகவோ, இந்தியனாகவோ, சுஜாதாவின் தீவிர விசிறியாகவோ, இல்லை வேறுவேறு வகையாகவோ என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மாட்டேன். கார்த்திகாயினி டீச்சர் என்ற இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மகனாக உங்களின் மத்தியில் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்பல்லாம் அவரவர் தவமாய் தவமிருந்து பார்த்துட்டு நைனாக்களுக்கு சப்போர்ட் செய்யும் வேலையில் மீண்டும் ஒரு அம்மா(அந்த அம்மா இல்லை)...
நட்சத்திரம் - வாசகர் சாய்ஸ் & லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்
Posted on Monday, February 13, 2006
“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”கௌசல்யா இப்படி சொல்லிக் கொண்டிருக்க எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.அதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய...
மக்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள். முன்பே ஒரு முறை நான் காதலித்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன். அது கொஞ்சம் சின்ன வயசு என்றால் என்னுடைய அடுத்த காதலும் அப்படியே இதுவும் சின்னவயசுக்காதல் தான். இதக் காதலான்னு கேட்டா எனக்கு பதில் சொல்லத்தெரியாது ஆமாம் சொல்லிட்டேன். அப்ப வந்து, நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு எக்ஸாம் எல்லாம் எழுதிக் கிழித்துவிட்டு, என்ட்ரென்ஸ்க்காக படித்துக் கொண்டிருந்தேன். அங்கே தான்...
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உரையைத் தொடங்குகின்றேன்.நினைத்த நிமிடத்திலே ஆயிரம் ஆயிரம் கவிதைகளை அள்ளித்தருவாயே தாயே, தமிழே உன்னை வணங்காமல் இருப்பேனா? உன்னைப்பாடாமல் இருப்பேனா?காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்மீதொளிரும் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் - சிலம்பாரின்பப் போதலிர்ப்பூந்தாழினையும் பொன்முடி சூளாமணியும் - பொலியச்சூடி நீதியொளிரும் செங்கோலாய்த் திருக்குறளைத்தாங்கும் தமிழ்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...