In சினிமா சினிமா விமர்சனம் நாட்குறிப்பு பயணம்
தொடர்ச்சியற்ற எண்ணங்கள்
Posted on Thursday, June 26, 2008
இந்த முறை லதாக் செல்லும் திட்டத்தை நண்பர் அறிவித்ததும் நானும் சேர்ந்து கொண்டேன். சென்ற முறை காஷ்மீர் சென்று வந்த பொழுதே லதாக் போய் வரவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் உண்டாகியிருந்தது. சென்ற முறை போலில்லாமல் இந்த முறை குழுவாய் செல்லும் வாய்ப்பு, xBhp நண்பர்கள் தங்கள் பைக்களுடன் வருகிறார்கள். இங்கிருந்து ஸ்ரீநகர் வரைக்கும் ப்ளைட்டில் பயணம் பின்னர் ஸ்ரீநகரில் இருந்து லே - லதாக் -...
என்ன முயற்சித்தாலும் சிவத்தால் மேலாடை இல்லாத ஷில்பாவின் உடலை மனதின் நினைவுப் பின்னல்களிலிருந்து அகற்றவே முடியவில்லை. பதின்ம வயதில் முதன்முறைப் பார்த்த நீலப்படம் மனதிலிருந்து நீங்க சிறிது நாளானது பற்றி நினைத்தவன் மனம் மேலும் குழப்பமடைந்தது, ஷில்பாவை நீலப்படத்துடன் ஒப்பிடுவது சரியா என யோசிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து என்னவோ நினைவுக்கு வந்தவனாய், மெத்தையை முகர்ந்து பார்த்தவனது முகம்; அவன் எதிர்பார்த்த வாடை வராததால் மலர்ந்தது....
"இன்னிக்கென்ன நாயா? பூனையா?"இதுதான் என் பொண்டாட்டிங்கிறது. நாம தேடித்தேடி பொய்யெல்லாம் சொல்லணும்னு அவசியமேயிருக்காது. அவளாவே கரெக்டா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் கல்யாணம் ஆன புதிதில் இப்படிக்கிடையாது. எங்களுக்கிடையேயான அலைவரிசையில் நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் இந்த பத்து வருடங்களில் அவள் என்னை புரிந்துகொண்டது ரொம்ப அதிகம்."சொல்லுங்க கேக்குறேன்ல, இன்னிக்கு எந்த நாய், நரி ரோட்டில் அடிபட்டுக்கிடந்துச்சு, அய்யா எந்த ஆஸ்பத்திரிக்கு போய் ரத்தம் கொடுத்துட்டு வர்றீங்க. ஆபிஸ்லேர்ந்து கிளம்புறப்ப...
வரவர சன்டிவியைப்பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது. அப்படியொன்றும் தொலைக்காட்சி பார்ப்பவனல்ல என்றபொழுதுதிலும். சில காலமாய் அது என் வாழ்க்கையில் உருவாக்கிய மாற்றங்களால் வந்த எரிச்சல் அது. சில சமயம் நம்முடைய தேர்வுகள் தவறாகிப்போகின்றன, என்னதான் நம்மை நாமே பெருமையாய் எண்ணிக்கொண்டாலும் நம்முடைய செயல்கள் அதை வழிமொழிவதில்லை. இப்படித்தான் போய்விட்டது கல்யாணம் செய்து கொள்ள நான் தீர்மானித்த பெண்ணைப்பற்றிய தெரிவும்.அமேரிக்காவிலிருந்து சென்ற முறை தமிழ்நாட்டிற்கு வந்திருந்த பொழுது இந்த விடுமுறையில்...
இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கவிதையை எழுதியது ரமேஷ் பிரேம் தான் நானில்லை நானில்லை. இது பேரழகிகளின் தேசம் என்ற ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை. புத்தக வெளியீடு மருதா.டைப்பி இங்கே போட்டது மட்டும் தான் நான்.பேரழகிகளின் தேசம்பாயிரம்வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவரில்எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிடஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்பகலில்...
In Only ஜல்லிஸ் Science ஜல்லிஸ் சுய சொறிதல்
வாசகர் பரிந்துரை அரசியல், blogger wordpress அரசியல், கன்னடம் படிக்கலாம் வாங்க!
Posted on Wednesday, June 18, 2008
வாசகர் பரிந்துரை சம்மந்தப்பட்டு நிறைய மடல்கள் வந்த வண்ணம் இருந்தன. சொல்லப்போனால் அது எப்படி 20/20 வரைக்கும் போனதோ அப்படியே 0/40 கொண்டு வந்துவிட்டு பின்னர் ஆட்டத்தை முடிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். போய்த் தொலையுது என்று விட்டேன், நண்பர்கள் அதை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி நண்பர்களே 0 ற்கு கொண்டு வந்து விட்டால் இன்னும் சந்தோஷம்.வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தொடக்கத்தில் இருந்த அதற்கான importance...
அமராவதியின் பூனைக்கான தேடல்ஆத்மார்த்தியின் பூனையோடுபுனைவொன்றின் மாயயதார்த்தவாத பக்கத்தில் முடிவுற்றதுமுடிவுற்ற இடத்தில் இருந்து துவங்கியபெருங்கனவொன்று பெங்களூர் வீதிகளில்கருப்பு வெள்ளை சினிமாவில் நடித்ததுஎன்றவாறு நகர்ந்து தேடிவந்த ஆத்மார்த்தியின் பூனையைமறந்து கையில் கிடைத்தபெயரில்லாத பூனையில் சமாதானமாகிறது ...
அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லைபோட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லைஉருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லைஆனாலும் நாங்கள் காதலித்தோம்முகமூடிகள் இளகின நாளொன்றில்காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்காமம் மறந்த / மறைத்த காதல்தரமுடியாத சோகம் அவள்கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'பிரதிபலிக்கிறதுயாசித்தலின் குரூரம் இல்லாமையைஉரத்துச் சொல்ல மூக்கின் வழிஒழுகும் 'ஜூஸின்' துளியைஇருத்தலியத்தை ருசித்தபடிசுவைத்துப் பார்க்கிறேன்.------------------------------------------------இதனுடன் தொடர்புடைய ஒரு பதிவு:Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல்...
In புகைப்படம்
மேல்கோட்டை, தென்னூரு ஏரி, பைலகுப்பே நடனத் திருவிழா - புகைப்படங்கள்
Posted on Friday, June 13, 2008
தலாய்லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், கூர்கின் அருகில் அமைந்துள்ள, குஷால் நகர் - பைலகுப்பே - திபெத்திய மக்கள் குடியிருப்பில் நடைபெறப்போவதாகவும் புகைப்படம் எடுக்க வாறீகளா என்ற மெயில் நாங்கள் கூர்க் போய்வந்த ஒரு மாதத்திலேயே வந்தது. ஆனாலும் ஒரு விழா என்ற வகையில் போய் வருவதற்கான ஆர்வம் இயல்பாய் எழ வருகிறேன் என்று சொல்லி வைத்திருந்தேன்.peevee, இளவஞ்சி, இலக்குவண ராசா, ஆதித்த நடராஜன், நாதன்...
அதிக நாட்கள் கழித்து ஒரு இந்திப்படம் பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றியதும், சரி செய்து பார்த்திடுவோம் என்று சர்க்கார் ராஜ்ஜிற்கு முன்பதிவு செய்தேன். நல்லவேளை செய்தேன், இல்லாவிட்டால் 'கதை தெரிந்துவிட்டது', 'முதல் நாள் பார்க்கவில்லை' என்று தோன்றும் ஏதோ ஒரு காரணம் சொல்லி இந்தப் படத்தை பார்க்காமலேயே இருந்திருப்பேன். அப்படி பார்க்காமல் போன இந்திப் படங்கள் நிறைய இருக்கும்.இதன் முந்தைய வரிசைப் படமான 'சர்க்கார்' பார்த்திருக்கவில்லை, இன்று...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...