In தொடர்கதை பெங்களூர்

ஆவியை யாகுலஞ் செய்யும்

ராமின் அறிமுகம் நன்மொழித்தேவனுக்கு ஒரு பெண் விபச்சாரியின் மூலம் கிடைத்தது, ராம் ஒரு ஜிக்லோ.

நன்மொழித்தேவன் பிரபல எழுத்தாளன் ஒருவனுடன் இலக்கியம் பேசிக் கொண்டிருந்த பொழுது அதாவது மது அருந்திக் கொண்டிருந்த பொழுது, ஒரு விபச்சாரியைக்கூட நேரில் பார்க்காம நீ எப்படி எழுத்தாளனாக முடியும் என்று அந்த எழுத்தாளன் சொன்ன அடுத்தநாள் நன்மொழித்தேவன் பெங்களூர் வீதிகளில் விபச்சாரிகளைத் தேடி அலையத் தொடங்கினான், உடன் அவனுடன் வேலை பார்த்த இருவர். பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது MG Roadல் இரவு ஒன்பது மணிக்கு மேல் நிற்கும் விபச்சாரிகள் அவர்கள் கண்ணிற்குப் படாததும் கூட நன்மைக்குத் தான் என்று. அந்த இருவரில் கொஞ்சம் தேர்ச்சி பெற்ற ஒருவன் சொல்லப்போய் தான், ஃப்ரீ ஆட்களில் மசாஜ் என்ற பெயரில் வந்திருக்கும் விளம்பரம் எல்லாம் - குற்றம் கண்டுபிடிப்பவர்களிடம் இருந்து தப்பிக்க, பெரும்பாலும் போட்டுத் தொலையணும் - இதற்குத்தான் என்று தெரியவந்து அவனும் ஆட்ஸ் வாங்கி ஃபோன் செய்த முதல் முறை அவனுக்கு விபச்சாரிகள் என்பவர்கள் தேவதைகளாகவே மனதில்பட்டனர். எப்பப்பாரு பான்பராக் போட்டுக்கொண்டு, வந்தது முதலே தன்னுடைய அல்லது கிடைக்கும் மொபைல் போனில் யாரோ ஒருவனிடம் பேசிக் கொண்டு, சிகரெட் இருக்கா, சாராயாம் இருக்கா, பசிக்குது போய் சாப்பாடு வாங்கிட்டு வா, சீக்கிரம் செய் வந்துத் தொலை, வாய்லல்லாம் செய்ய முடியாது, ட்ரெஸ்ஸையெல்லாம் கழட்ட முடியாது எனத் தொடர்ந்த பொழுதுகளில் இலக்கியத்திற்கும் இவர்களுக்கும் சம்மந்தமே இருக்க முடியாது என்ற நம்பிக்கைக்கு நன்மொழித்தேவன் வந்திருந்தான்.

முந்தைய நாள் வேறொரு நண்பன் கூட உட்கார வைத்துச் சொன்ன அவன் கேர்ள் ப்ரண்டை போட்டக் கதையில் சிக்கி, அடுத்த நாள் தற்செயலாய் பார்த்த எதிர்வீட்டு ஓனர் பெண்ணின் பிரா போடாத முலைகளில் மயங்கி ஹைதரபாத் பிரியாணி ஹவுஸில் உட்கார்ந்து மட்டன் பிரியாணி வந்துவிடாத பொழுதின் அவன் முடிவெடுத்து ஏற்கனவே சேவ் பண்ணியிருந்த மசாஜ் செய்துவிட ஆள் அனுப்புவனிடம் கால்செய்த பொழுதுகளில் வரப்போவது என்ன என்று அவன் அறிந்திருக்கவில்லை. கால் செய்பவன் ஏற்கனவே காசு கொடுத்து மேட்டர் செய்தவன் என்கிற நம்பிக்கை மாமாப் பயலுக்கு வந்ததும், “தொர இங்கிலீஸ் பேசுற குட்டி ஒன்னு இருக்கு வேணுமா? பஜ்ஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸில் வேலை பார்க்கிற குட்டியாம்” இவர்களின் தொடர்ச்சியான பொய்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று மட்டும் நினைத்துக் கொண்டு, “எவளாயிருந்தாலும் 3500 தான். எல்லா மாதிரியும் செய்யணும்” என்று சொல்லி உறுதிமொழிவாங்கிக் கொண்ட நன்மொழித்தேவனுக்கு அவன் அவளை ஃபோரமில் காஃபி டேயில் இருப்பா அரைமணி நேரத்தில் போய் பிக்கப் செய்துகொள் என்று சொன்ன பொழுது கூட நம்பிக்கை வரலை.

காஃபி டேவில் பார்த்த பொழுது அவலட்சணமாக அந்த காஃபிடேவின் சூழலுக்கு ஒவ்வாவதது போல் உட்கார்ந்திருந்தது அவளாய்த் தான் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் எல்லா சமயங்களிலும் அப்படி ஒரு பெண் காஃபிடேவில் உட்கார்ந்திருந்து போல் பட்டதால், ஃபோன் செய்து உறுதி செய்து கொண்டு அவளாய் இருந்தால் போய்விடலாம் என்றே கொஞ்சம் தொலைவில் இருந்து கால் செய்தான். ஆனால் அவள் குரலில் இருந்த ஆங்கிலம் நிச்சயம் பொய்யானது இல்லை என்று உறுதியானது, கால்கள் வெளியில் போக நினைத்தாலும் மனம் வராமல் தடுத்த ஒன்றிற்கும் அவன் மனிதநேயத்திற்கும் சம்மந்தம் இருக்கமுடியாது என்றே அவனும் நினைத்தான். தன்னுடன் மற்றொரு சமயம் பேசிக்கொண்டிருந்த மற்றொரு சூழலில் “ஏன்தான் எல்லாரும் இந்த நடிகைங்க பின்னாடிப் போறானுங்களோ அவளுக்கும் இருக்கிறது இத்துனோண்டு...” கைகளில் காட்டியபடி “... தான” என்று அவன் சொன்னது நினைவில் வந்திருக்கவேண்டும். அவளிடமும் தன்னைப் பார்த்ததும் பிடிக்காமல் விட்டிவிட்டு சென்றுவிடுவானோ என்று பயம் தெரிந்தது.

அழைத்துவந்தான். அதுவரை நண்பர்களது வீட்டிலேயே இதுபோன்ற வேலைபார்த்து வந்த அவன் அந்த முறை தனியாளாய் செய்ய நினைத்தததால் வேறு வழியில்லாமல் அவன் வீட்டிற்கு அழைத்துவரவேண்டியதாயிற்று. வீட்டில் நுழைந்ததும் அவள் கழற்றிவீசிய ஓவர் கோட்டுக்குள் அவளுடைய உடை ரசனை தெரிந்தது, குளித்துவிட்டு வந்திருந்தாள் அவள் ஹேர் ஸ்ப்ரே போட்டிருப்பது தெரிந்தது. ஷாம்பு போட்டு கண்டிஷ்னர் போட்டு சீரம் அப்ளை செய்திருந்த தலை முடி. அவளை விடவும் அழகான பெண்களை அவன் பார்த்திருக்கிறான், பஞ்சாபி, பெங்காலி முஸ்லீம் பெண்கள் ஆனால் அவளுடைய மதர்ப்பான உடலுக்கும் அவளுடைய ஆங்கிலத்திற்கும் அவளுடைய நடவடிக்கைகளுக்கும் சம்மந்தமில்லாத அவலட்சணமான முகம். நன்மொழித்தேவன் அவளது மார்புகளில் கைகளை ஓட்டியதும், “இப்பவே செய்யணுமா! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேனே!” அவள் சொன்னது அவன் இதுவரை செய்த அத்தனை பெண்களும் சொன்னது தான். ஆனால் அவள் மற்றப் பெண்களைப் போல மொபைல் போன்களில் அவளுடைய பாய் பிரண்டுகளுடன் கடலை போடாமல் வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். உள்ளறைக்குச் சென்று அங்கே நான் வரைந்து வைத்திருந்த, ஆரம்பித்து முடிக்காமல் வைத்திருந்த ஓவியங்களைப் பார்த்து மயங்கி ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். நேரம் கடத்த இவளது வழிமுறை இது போல என்று நினைத்தான்.

பல பெண்களை இதுபோலவே பார்த்து வெறுத்துப்போயிருந்த நன்மொழித்தேவன் அவளை வற்புறுத்தி மற்றொரு படுக்கையறைக்கு அழைத்து வந்து நிர்வாணப்படுத்தி மேயத் தொடங்கினான். ஆனால் அவளுடைய ஒத்துழைப்பும் அவள் கண்களில் பார்த்த காதலும் அவன் இதுவரை அனுபவித்திராதது. பிரியாணி சாப்பிடப்போகும் முன்பு இருமுறை செய்த சுய இன்பம் அவனை அவள் என்ன செய்தாலும் இன்னும் ஒருமணிநேரத்திற்கு வரவிடாது. விபச்சாரிகளுடனான பழக்கம் அவனை அப்படிச் செய்யப் பழக்கியிருந்தது, அவளுக்கு ஆச்சர்யம். அரை மணி நேரத்தில் மூன்று முறை வந்துவிட்டதாகச் சொல்லி, உனக்கு இன்னமும் வரலையே எதுவும் மாத்திரை போட்டிருக்கிறாயா என்று அவள் கேட்டது நன்மொழித்தேவனுக்கு அவன் செய்த கோட்டித்தனத்தை அவள் உணராததை வெளிப்படுத்தியது. ஆனால் சட்டென்று அவன் எதிர்பாராத கணத்தில் அவள் நிரோத் விலக்கி அவள் வாய்க்குள் விட்டது, அதுவரை அப்படிச் செய்து பழக்கமில்லாததால் உடனே உச்சமடைந்து அவள் வாயிலேயே வந்தது. அவள் சிரித்தாள், இதுக்கே இப்படின்னா அப்ப டீப் த்ரோட் செய்தாள் என்ன ஆவாய் என்றாள். பின்னர் அரைமணிநேரத்தில் அவள் வாயால் மீண்டும் எழுப்பி மற்றதால் அடக்கி அவள் நன்மொழித்தேவனுடன் விளையாண்ட விளையாட்டு அவனை மூன்று நாள் ஜூரத்தில் தூக்கிப் போட்டது.

இடைப்பட்ட நேரத்தில் அவள் சென்று மீண்டும் அந்த ஓவியங்களைப் பார்த்தது ரசித்தது புரிந்து கொள்ள முயற்சித்தது எல்லாம், அவள் மழுப்புவதற்காகவே நேரத்தைக் கடத்துவதற்காகவோ செய்ததல்ல என்பதை உணர்த்தியது. அவளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தது, “Forgive me for doing this” என்று சொல்லி அவள் பணத்தை எண்ணியது என அவள் மற்றவர்களைப் போலில்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தியது. அதை மீறியும் அவளிடம் மற்றவர்களைப் போன்ற செய்கைகள் இல்லாமல் இல்லை, அவள் பைகளில் இருந்த சிகரெட்டை என் வருதல்களுக்குப் பிறகு ஊதித்தள்ளினாள் ஒரே வித்தியாசத்துடன் “Hope you dont mind”. “You want a surprise" என்று சொல்லி அவளுடைய ஐடி கார்டைக் காட்டினாள். “I know you were not believing me" அழகாய்ச் சிரித்தாள். உடனே எல்லா விபச்சாரிகளிடமும் போடும் பிட்டை நன்மொழித்தேவன் அவளிடம் போட்டான் “நான் ஒரு எழுத்தாளன், எனக்கு இது போன்ற விஷயங்களில் ஈடுபடும் ஆட்களைப் பற்றி எழுதணும். நீ உதவ முடியுமா” என்று. அவள் அவனை கொஞ்ச நேரம் தீர்க்கமாய்ப் பார்த்தாள், பின்னர், “I believe that you are not bluffing.” என்று சொல்லிச் சிரித்தவள் “I will introduce you to one of my friend. That will suite your requirement”. சொன்னவள் ஜீரோ-ஜி பப்-ல் தொடர்ச்சியான ஒரு நாளில் ராமை அறிமுகப்படுத்தினாள், ராம் ஒரு ஜிக்லோ - ஆண் விபச்சாரன்.

புதன்கிழமைகளில் பெண்களுடன் வந்தால் மட்டும் அனுமதிக்கும் ஜீரோ-ஜியில் நன்மொழித்தேவன் அவளுடன் சென்றேன், ராமிற்கு அங்கே அப்படியொரு ரெஸ்ட்ரிக்‌ஷன் கிடையாதாம். பப் முழுவதும் இசை வழிந்தோடிக்கொண்டிருந்தது ஜோடிகளின் கண்களில் தெரியும் காமவெறி அங்கே வழிந்து கொண்டிருந்திருந்த மதுவுடன் சேர்ந்து நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. ராம் ஒரு அழகன். அப்படியிருந்துவிடக்கூடாதே என்று நினைத்தபடியே நன்மொழித்தேவன் உங்கள் முழுப்பெயர் என்று கேட்க, சிரித்தபடி ராமச்சந்திரமூர்த்தி என்றான். அவனிடம் தன் இலக்கிய வாழ்க்கை ஒரு தொடக்கம் இல்லாமல் இருப்பதையும் அவன் கதை மூலமாகவே இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்க நினைத்திருப்பதாயும் அதுவரை அடித்திருந்த இரண்டு மக் பியரில் உளரத் தொடங்கினான். “நன்மொழித்தேவ நான் என் கதையை மட்டுமே சொல்லமுடியும் அதுவும் உனக்காக இல்லை, உன்னிடம் எதையோ கண்டு மயங்கியிருக்கும் இவளுக்காக ஆனால் இலக்கியம் என்னிடம் இல்லை” என்றான். அவசரமாய் அவளுக்கு அவளுடைய மாமா ஃபோன் செய்து, மசாஜ் செய்ய அவளை ஜேசி ரோட் அனுப்ப, ராம் தன் கதை சொல்லத் தொடங்கினான். கதைகளில் வரும் மாய உலகமாய் ஜீரோ-ஜி அன்றிரவு நீள்வதாய்ப்பட்டது எனக்கு.

ராம் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்தவன், அவங்க அப்பா ஒரு இந்து அம்மா முஸ்லீம் காதல் திருமணம். பிறன்மலைக் கள்ளருங்க, அவங்க அப்பா டெல்லி பக்கம் ஒரு முறை திருடப்போனப் பொழுது அடிவாங்கியே செத்துப்போனவர். உடம்புக் கூட கிடைக்கலை அவங்க அம்மா ராம் அப்பாவின் தம்பியையே மணந்து கொண்டாள். ராம்ஜி நகரின் நினைவிருக்கக்கூடாதென அவர்கள் எழில் நகரில் குடியேறினார்கள். ராம் பாண்டிச்சேரியில் இருந்து சரக்கு கடத்துவதை அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் எதிர்வீட்டில் இருக்கும் ஒருவன் சொல்லியே தெரிந்துகொண்டான். தொடர்ந்த சனி ஞாயிறுகளில் அவனுக்கு இது ஒரு தொழிலானது, அவனுடைய வயது அவனது அம்மாவிடம் இருந்து பெற்ற நிறம் என அவன் மீது யாரும் சந்தேகப்படாமலேயே இருந்தனர். அவனுடைய ஸ்கூல் பேக்கில் வைத்து சாராயம் கடத்தி ஒரு முறை காரைக்காலில் வைத்து அவனைப் போலீஸ் பிடித்த பொழுது அவனுக்கு பிடிபட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றிய எந்த அறிவும் அவனுக்கு இல்லை.

ராம், “ஒரு இரவு உன் வாழ்க்கையை மாற்றிவிடும்னு சொன்னா நம்புவியா, நன்மொழித்தேவ, அந்த இரவு என் வாழ்க்கையை மாற்றிப்போட்டது” என்று சொல்லிச் சிரித்தான்.

உடலுறவென்பது எத்தனை அசிங்கமானது என்று ராம் அப்பொழுதுதான் கற்றுக்கொண்டான், முதல் இரண்டு நாள் அவனை வைத்திருந்த பொம்பள சப்-இன்ஸ்பெக்டர், பின்னர் அவளுடைய ப்ரெண்ட் ஒருத்தி ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டபிள் என்று அத்தனையையும் ஒரு வாரத்திலேயே பார்த்திருந்தான். எல்லாம் முடிந்ததும் அந்த சப்-இன்ஸ்பெக்டரின் ப்ரண்ட் அவன் கையில் கொடுத்தனுப்பிய பத்தாயிரத்தில் இருந்து தான் எல்லாம் தொடங்கியது. அவன் மாதம் முழுவதும் பாண்டிச்சேரியில் இருந்து திருடி வந்து கொடுத்தாலும் அத்தனைப் பணம் கிடைக்காதென்பது அவனுக்கு அப்பொழுது முக்கியமாகக் கற்றுக் கொண்டது.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In ஆண்டாள் உபநிஷதம் சமணம் நம்மாழ்வார் பாலியல் பௌத்தம் வேதம்

கட்டுரையும் கட்டுக்கதையும்

எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியதும், மருள வைக்கக் கூடியதுமான நான்கு நூல் தொகுப்புக்கள் எப்படியோ இவர்கள் கையில் கிடைத்துவிட்டன; வேதங்கள் என்ற அந்தத் தொகுதிகளே அனைத்திற்கும் அடிப்படை என்று அவர்கள் நம்புவதோடு அனைவரையும் நம்பவும் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வேதங்களில் என்னதான் இருக்கிறது இந்த வேதங்களுடன் உபநிஷதங்களும் கீதையும் சேர்ந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான். எல்லாவற்றுக்கும் இவற்றில் பதில் இருக்கிறது, நாமும் மிரண்டு போய் நிற்கவேண்டியது தான்.





சரி சற்றே பொறுப்பாக வேதங்களைக் கற்போம், உபநிஷதங்களை வாசிப்போம். கீதையை ஒரு முறைக்கு நான்குமுறை படிப்போம். வேதங்கள் என்பவை என்ன – ஒரு இனக்குழு கூட்டம் தான் வணங்கிய சிறு தெய்வங்களை புகழ்ந்து, வேள்வி செய்து, சோம பானம் கொடுத்து மகிழ்வித்துத் தனக்கான தேவைகளைக் கேட்டுப் பெருவதற்கான பாடல் தொகுதிகள். ரிக் என்பதில் அக்னி, இந்திரன், வருணன் போன்ற ஆற்றல் உடைய தெய்வங்களுக்கு சோமமும் பலியும் தந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதல் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடிகளில் நிரம்பிக் கிடக்கிறது. சாம வேதமும் அதே அக்னி, இந்திரன், வருணன் தொடங்கி பலநூறு தேவர்களுக்கான புகழ் பாடல், யஜூர் வேள்வி செய்வதற்கான பலி தருதலுக்கான விதிமுறைகளின் தொகுப்பு, அதர்வம் மருந்து, சிகிச்சை, மந்திர தந்திரம், வசியம், வாலை என நடமுறை தொழில்நுட்பங்களின் தொகுப்பு. இவை அனைத்துமே ஒரு இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கை, அச்சம், ஏக்கம், ஆசை, கோபம், பயம், பெருமை, வன்முறை, சமூக ஒற்றுமை, வாழ்க்கையின் விதிமுறைகள் என்ற சமிக்ஞைகளின் தொகுப்பு ஒருவகையில் இவை இனக்குழுப் பாடல் தொகுதிகள். இப்படித் தொகுத்தெடுத்தால் எல்லா கிராம ஆதிவாசிக் குடி மரபுகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைக்கும். கிடைத்திருக்கும். ஆனால் இவற்றில் மட்டும் என்ன மாபெரும் சிறப்பு என்பதுதான் புதிதாக உள்ளது. மாறாத விதிகளின் தொகுப்பு மாபெரும் ஞானத்தின் களஞ்சியம். பிரபஞ்ச உண்மையின் சாரம் என்றெல்லாம் சொல்வதற்கு இவற்றில் என்ன இருக்கிறது என்பதை கோபப்படாமல் எந்த ஞானியாவது விளக்கினால் நாமும் சோம பானம் பருகிய அளவுக்கு பேரின்பம் பெறலாம்.

-          பிரம்ம வித்யா, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்

பாலியல் உளவியல், பாலியல் நடத்தைகள், பாலியல் விதிகள், பாலியல் செயல்பாடுகள், பாலியல் உந்துதல்கள், பாலியல் உள்ளீடுகள், பாலியல் வடிவ மாறுபாடுகள், பாலியல் பதிலீடுகள் என்பவை பற்றிய அறிவும் அணுகுமுறைகளும் இன்னும் கூட மர்மமானதாகவும் பூடகமானதாகவும் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை இவை குறித்தான பேச்சுக்களும் புரிதல் முறைகளும் ஏதோ ஒரு வகையில் மறைபொருள் சார்ந்தவையாகப் பேணப்பட்டு வருகின்றன. பொதுக் களத்திலும் சமூகச் செயல்வெளிகளிலும் நீக்கமற நிறைந்துள்ள பால் செயல்பாடுகள் அந்தந்தக் களங்களிலேயே மறைப்புக்கும் தணிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டு பேச்சிழந்த உற்றுணர்வழிந்த பூடகங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூடக நிலை அவற்றின் மேல் மீது சுமத்தப்பட்டுள்ள கவர்ச்சி, மயக்கம், ஈடுபாட்டு ஈர்ப்பு, தவிர்க்க முடியாத தன்மை ஆகியவற்றை நீட்டித்தும் பெருக்கியும் வருகின்றது.

-          காமம் பெரிதே களைஞரோ இலரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

தாகூரின் எழுத்துக்களை ஆரம்பகட்ட எழுத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் ஒரு தொடக்கம். ‘கீதாஞ்சலி’ ஒரு பதின்பருவப் பாடல்தான். ஆனால் வங்காளிகள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று யாரும் தாகூர் போல எழுதினால் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த இரண்டுமே வங்காளிகளின் குணம். ஆக்கப்பூர்வமாக, புதிதுபுதிதாக உலக அரங்கில் தற்காலத் தன்மையுடன் எழுதப்படும் எழுத்தைத்தான் அவர்கள் வெளியே கொண்டு தருகிறார்கள். பிறவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்.



-          இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.

பௌத்தர், சமணர் படுகொலை செய்யப்படுதல், பௌத்த, சமணப் பள்ளிகள் விஹாரைகள் இடிக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்படுதல், பௌத்த சமணம் மற்றும் பிற சமய நூல்கள் எரித்தழிக்கப்படுதல், பௌத்த சமண சமயங்களைப் பின்பற்றிய மக்கள் வாளின் முனையில் சமய மாற்றம் செய்யப்படுதல், சமயம் மாற மறுத்தோர் தீண்டாமைக்குட்படுத்தல், சமண, பௌத்த சான்றோர் தமிழக எல்லைக்கு வெளியே ஓடித் தப்பிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தல், மீண்டும் பேரரசுகளை உருவாக்குதல் போன்றவை இக்காலக்கட்டத்தின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரம் ஆயிரம் இருந்தும் இன்றுவரை தமிழறிவின் மறைக்கப்பட்ட பகுதியாக இவை இருந்து வருகின்றன. சைவமும், வைணவமும் மக்கள் மேல் முதலில் திணிக்கப்பட்ட, பிறகு ஏற்கப்பட்ட சமயங்கள் என்பதை இன்று கூறுவது ஏதோ பயங்கரவாதச் செயல் என்பது போல மனித வெறுப்பும் ஆதிக்க வெறியும் கொண்ட சாதி ஒடுக்குதலை ஏற்ற அறிவு மரபு ஒன்று இங்கே கூச்சல் இடலாம். ஆனால் உண்மை கூச்சல்கள் மறைக்கப்படுவதில்லை.


-          ஏடுகளில் படிந்த இருண்ட காலம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

 தமிழ் ஒரு மொழி அடையாளமாக ’மட்டும்’ என்றும் இருக்கமுடியாத மொழியாகவே இருந்து வருகிறது. எல்லா மொழிகளுக்கும் மொழி என்பதற்கு மேல் பண்பாடு, அரசியல் சமூகம் என்ற வேறு அடையாளங்களும் உண்டு. இன்றைய புரிதலில் மொழியென்பது மனமும் – உடலும் – வாழ்வும் என விரிந்த பொருள் தரக்கூடியதாக புலப்பட்டிருக்கிறது. ஆனால் ‘தமிழ்’ என்பது இவற்றிலும் கூடுதலான உள்ளடக்கங்களைக் கொண்டுவிட்ட்து. இது கொண்டுள்ள கூடுதலான அர்த்த அடர்த்திக்கு இதன் தொன்மை ஒரு அடிப்படைக் காரணம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இதன் தொன்மையும் மீறித் தமிழ் நமக்கு வேறுபல நினைவுகளைக் கொண்டு வருகிறது. மொழியென்றால் அது நினைவுத் தளத்திலும் நினைவுள் தளத்திலும் நினைவிலித் தளத்திலும் படிந்து கிடைப்பது. ஒரு பேச்சில் மட்டுமின்றி மௌனத்திலும் அம்மொழியே நிறைந்து நிற்கிறது. மௌனத்தை ‘உலகப் பொதுமை’ என்பவர் உண்டு; ஆனால் தமிழரின் மௌனம் தமிழ் மௌனம். வேறெந்த மொழியின் மௌனத்தைப் போலத் தனித்தன்மை உடையது. அது தமிழ்க் கூறுகளால் ஆனது. தமிழின் இலக்கியங்கள் இவ்வகையில் பலநூறு தமிழ் மௌன்ங்களால் நிறைந்து கிடக்கின்றன.

-          ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

‘ஐம்புலனுக்குமான இன்பம் பெண்ணிடமே உண்டு’ என்பதில் மையமாக நிற்கும் ‘ஆண்’ பாலின்பம், பாலியல் என்பதில் மட்டுமின்றி ‘உலகம்’ என்பதிலும் மையமாக வைக்கப்பட்டிருக்கிறான். அதனால் தான் பாலியல் ஏற்போ, பாலியல் மறுப்போ இரண்டிலுமே ‘ஆண்’ முன்னிற்க முடிகிறது. பெண் பாலியலை ஏற்பதோ துறப்பதோ இங்கு முதன்மைக் கேள்வியாக மட்டுமல்ல, கேள்வியாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை. அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதொறும் சேயிழை மாடு(குறல்) என்பதில் அறியும் தன்னிலையாக ஆண் உறுதிப்படுத்தப்படுவதின் காரணமும் இதுவே. ‘பெண்’ இவ்விட்த்தில் ஆணால் அறிந்து தெளியப்படவேண்டிய ஒரு பொருளாக வைக்கப்படுவதன் மூலம்; பாலியல் ஒருவகையில் ஆணின் செயல்பாடாக, ஆணியத் தொழில் நுட்பமாக மாற்றப்பட்டுவிடுகிறது. இந்த ஆண்மையத் தன்மைதான் தமிழக, இந்தியப் பாலியல் ஒழுக்கவிதிகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமாக இருந்து வருகிறது –என்னும் இதே வேளையில் பாலியல் விதிமீறல்கள், பாலியல் பிறழ்வுகளுக்கும் கூட இதுவே அடிப்படையாக இருக்கிறது.



பரத்தமை, கணிகையர் வாழ்வு என்பதை தனது பண்பாட்டின் ஒரு பகுதியாகக் கொண்ட தமிழ்ச் சமூகம் ஓயாமல் கற்பு, தெய்வக் கற்பு என்பதைக் கொண்டாடி மகிழ்வதில் உள்ள சமூக உளவியல் மிகவும் கவனத்திற்கு உரியது. தலைமை, அரசநிலை, அதிகார மையம், பேராண்மை என்ற வடிவங்களில் இயங்கும் ‘ஆண்மைய’ அடையாளங்களுக்கும் அதிக அளவிளான பெண்ணுடல்களை துய்த்தல், உரிமை கொள்ளல் என்பதற்கும் உள்ள உறவு புராதனத் தன்மை உடையது. இந்த உரிமையே அதிகாரத்தின் கேள்விக்கு உட்படாத உடல்களின் மீதான ஆதிக்கதிற்கு அடிப்படையானது. இந்த ஆதிக்க உரிமை இன்றுவரை கொண்டாடப்படுவதின் அடையாளமே ஆணுக்கு வழங்கப்பட்ட பெண்ணுடல்களின் மீதான ஆக்கிரமிப்பு உரிமை.

-          மலரினும் மெல்லியதோ காமம், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

’இருமலை போலெதிர்ந்த மல்ல

திருவரங்க மெரிசெய்தாய் உன்

திருமலிந்த திகழ மார்பு தேக்கவந்தென் அல்குலேறி

ஒருமுலையை வாயில் மடுத்தொரு முலையை நெருடிக்கொண்டு

இருமுலையும் முறைமுறையா ஏங்கியேங்கி இருந்துணாயே.’

(பெரியாழ்வார்)


‘பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோ ராசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலித்து
ஆவியை யாகுலஞ் செய்யும்.’

(ஆண்டாள்)



இங்கு காமம், காதல், தாய்மை, திளைப்பு, போதை அனைத்தும் பிணைந்த பித்தநிலை பக்தியில் உருவாகி வெம்மை கொள்கிறது.

‘ஆணல்லன் பெண்ணல்லனல்லா அலியுமல்லன்’

(நம்மாழ்வார்)

என்று பாலின்மை நோக்கியும் பால் மாற்றம் நோக்கியும் அது பாவனை கொள்கிறதும் மேற்பரப்பில் ஆண் மையத்தன்மை கொண்ட தமிழ் – இந்திய மன அமைப்பு உள் பகுதியில் பெண் மையம் மற்றும் பெண் மேலாண்மை என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால் அதற்கு எதிரான மொழி மற்றும் உருவகங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பெண்மை பற்றிய அச்சம், பெண்மை பற்றிய பூடகம் இதனை நோய்த்தன்மை கொள்ள வைக்கிறது. அந்நோய்த் தன்மைக்கு பலவித மூடு திரைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பெண்மையின் இயக்கத்தை கட்டுப்படுத்த கற்பு உத்தியாகிறது, கற்பின் பொறியில் சிக்கவைக்க காதல் உத்தியாகிறது. இதே போல பெண்மை மீதான அச்சத்திலிருந்து தப்பவும், பெண்மையை எதிர்ப்பற்ற ஒடுக்கத்தில் வைக்கவும் தாய்மை என்ற உருவகம் உத்தியாகிறது. பெண்மையின் முழு எதிர்ப்பற்ற நிலை தாய்மையில் உறுதி செய்யப்படுகிறது. இதன் அடுத்த கட்டமே பக்தியென்பது. காமம், காதல், தாய்மை, திளைப்பு அனைத்தையும் புலன் சார்ந்ததாகவும் நம்ம் சார்ந்ததாகவும் மாற்றும்போது பக்தியின் கட்டமைப்பு உருவாகிவிடுகிறது. ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலை ஒரு பாலற்ற நிலையே. ஆனால் ’ஆண்’ என்பது அங்கு முன்னிலைப்படுத்தப் படும்போது ஆண் மையம் சார்ந்த காதலாக அது மாறிவிடுகிறது.

-          பக்தி காதல் காமம் : பெண்மை பற்றிய சில கருத்தாக்கங்கள், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்

தனது பதவியேற்பு நிகழ்ச்சியில்(12-4-1945) அமெரிக்க மரபுப்படி பேசிய ஹாரி எஸ். ட்ருமன் சொன்னார்:  The supreme need of our time is for men to learn to live together in peace and hormony. We believe that all men are created equally because they are created in the image of God.

உருக்கமான உண்மைகள். அவரே மேலும் சொன்னார்: கம்யூனிசம் மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பிழையான தத்துவம் கம்யூனிசமே. அது மனிதர்களை வன்முறை நோக்கித் தள்ளுகிறது. பெரும் பலம் பொருந்திய ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் மனிதர்களை கொண்டு வருவதுதான் கம்யூனிசம், இதற்காக பலர் தமது சுதந்திரத்தையே பலியிட்டிருக்கிறார்கள். கம்யூனிசம் வன்முறையை நியாயப்படுத்துகிறது. போர் தவிர்க்க முடியாத்து என்கிறது. ஆனால் நமது ஜனநாயகம் அமைதியான முறையில் மாற்றத்தைக் கொண்டுவரப் பாடுபடுகிறது. புஷ் இப்போதும் சொல்கிறார்: மனிதர்களின் மாபெரும் பேறு சுதந்திரம். அதை எப்போதும் காக்க வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – வாழ்க்கை, சுதந்திரம், இன்பம் – மேற்கு சொல்கிறது. நாம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

விடுபட்ட சிறு தகவல்:

1945 ஜூன் மாதத்தில் ட்ருமன் சோவியத் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துக் கூறுகிறார்: We have a new weapon of unusual destructive force. அதற்கு மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் ஸ்டாலின் கூறுகிறார்: We would make good use of it against Japanese.

-          எல்லாரும் அமெரிக்கரே, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்

அறிவாற்றலைக் கேள்வி கேட்டு, அடிப்படைகளை மாற்றுவதற்கு நமக்கு நிறைய ஆற்றலும் அர்ப்பணிப்பும் சுயமறுப்பும் தேவைப்படுகிறது. இருப்பதைப் பெருக்கி ஒருமுகப் போலிகளை உருவாக்குதல் எப்பொழுதும் நிகழும் ஒன்று. கடந்த காலங்களில் இளங்கோ, சாத்தன், வள்ளுவன், திருமூலன், அயோத்திதாசர், பெரியார் போன்றவர்களின் சொல்லாடல் பரப்பு முடிவுகளுக்கு வெளியே நழுவும் தன்மையுடையது. இந்த ‘முடிவுகளுக்கு வெளியே’ மரபைத் தொடர்ந்து கொண்டு செல்வது எமக்கும் ஒரு வாழ்நாள் முயற்சி.


பிரேம் – ரமேஷ்(19-03-2006)  புத்தக முன்னுரை, கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் – ரமேஷ்.

PS: இந்த புத்தகத்திற்கெல்லாம் விமர்சனம் என்கிற பெயரில் எதையாவது எழுதும் அளவிற்கு இன்னும் நான் வளரலை என்பதால், பிடித்த பகுதிகளை அப்படியே காப்பி செய்து தந்திருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In பதிவுச் சண்டை பெயரிலி ஜல்லி

இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!

தற்சமயம் தமிழ்மணத்தில் நடந்து வரும் பிரச்சனைப் பற்றிய பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன். சுழட்டி சுழட்டி எழுதியிருக்காங்க நான் பாத்தப்ப வரைக்கும் 263 கமெண்ட் மொத்தத்தையும் படிச்சி முடிக்கிறப்ப தாவு தீர்ந்திருச்சு. எனக்கு இந்தப் பதிவிற்கும் தற்சமயம் தமிழ்மணத்தில் தொடங்கியிருக்கும் முஸ்லீம் எதிர் பெயரிலி பதிவுகளுக்குமான தொடர்பு புரியலை(சாந்தியும் சமாதானம் பத்திப் புரிஞ்சாலும்).

ஏறக்குறை இரண்டு வருஷம் கழித்து தமிழ்மணத்தில் ரீ எண்ட்ரி போட்டாலும் இன்னமும் பெயரிலி, தமிழ்மணம், அட்மின், எழுதினது பெயரிலியா, தமிழ்மணமா. போன்ற பிரச்சனைகள் போய்க் கொண்டிருப்பதும். இன்னமும் பெயரிலி பதில் அளித்துக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. எப்பொழுதும் நடப்பதைப் போல் எங்கோ தொடங்கிய பிரச்சனை இப்ப எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. நான் உண்மையில் பெயரிலி முஸ்லீம் நண்பர்கள் மன வருத்தப்படும்படி எதுவும் எழுத நினைத்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

இங்கே பொதுவாக blogdomல் பெயரிலிக்கு எதிரான ஒரு கும்பல் அன்றும் இன்றும் என்றும் உண்டு, சில இடங்களில் அவர்களும் புகுந்து இதைப் பெரிதாக்கிக் கொண்டிருப்பதால், நான் இதை எழுதித் தொலைய வேண்டியதாயிற்று. எப்பொழுதிலிருந்து பெயரிலி இத்தனை தெளிவாய் எல்லோருக்கும் புரியும்படி எழுதத் தொடங்கினார் என்று பதிவின் ஆரம்பப் பின்னூட்டங்களில் யோசித்துக் கொண்டிருந்தேன், அவருக்கு ஆங்கிலம் உதவியிருக்கிறது, தமிழில் அவ்வளவு தெளிவா பெயரிலி பொதுவாய் எழுதி நான் பார்த்ததில்லை. பெயரிலி அண்ணை தமிழ்(எங்கள் தமிழ்) உங்களுக்கு கைகூடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் இப்பொழுது புரிகிறது நீங்கள் சுற்றிச் சுற்றி எழுதியதன் தாத்பரீயம்.

தலைப்பைப் பற்றி பெரிதாய் விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது, முன்னம் போலவே சொல்லாமல் விட்டுவிடுகிறேன். அண்ணை முன்னர் ஒரு விரலைக் காண்பிக்கும் ஒரு புகைப் படத்தைப் போட்டிருந்தார் இதே போன்ற பிரச்சனையொன்றி. Well composed photo. இப்ப அதுமாதிரி ஒன்னு போட முடியுமான்னு கேட்டுக்கிறேன். தமிழ்மண பதிவுகள் பாணியில், இப்ப முடிஞ்சா போட்டுப் பாரு(டா) பெயரிலி!

ஏதோ நமக்கும் நாளு ஹிட்டு வந்தா சந்தோஷப்படாமையா போயிருவீங்க -/பெயரிலி!

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In தாகூர் பாரதி பிரேம் - ரமேஷ் மகாகவி ரமேஷ் - பிரேம் ஜெயமோகன்

ஜெயமோகனும் பாரதியும் பின்னே தாகூரும்

...தாகூரின் எழுத்துக்களை ஆரம்பகட்ட எழுத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அவர் ஒரு தொடக்கம். ‘கீதாஞ்சலி’ ஒரு பதின்பருவப் பாடல்தான். ஆனால் வங்காளிகள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இன்று யாரும் தாகூர் போல எழுதினால் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த இரண்டுமே வங்காளிகளின் குணம். ஆக்கப்பூர்வமாக, புதிதுபுதிதாக உலக அரங்கில் தற்காலத் தன்மையுடன் எழுதப்படும் எழுத்தைத்தான் அவர்கள் வெளியே கொண்டு தருகிறார்கள். பிறவற்றை பொழுதுபோக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள்...



   இலக்கியம் அற்ற வெளியும் தமிழ்ப் பின்நவீனத்துவப் பேயும், கட்டுரையும் கட்டுக்கதையும், பிரேம் - ரமேஷ்.


நல்லவேளை தாகூர் ஒரு மகாகவியா என்ற தேடலில் ரமேஷ் - பிரேம் இறங்கலை.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In ஆண்டாள் சுஜாதா போர்னோ

கணையாழி கடைசிபக்கங்கள்

ஒரு வாரத்திற்கு முன்பு சமீபத்தில் ஆர்டர் செய்திருந்த பதின்மூன்று புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன. பெரும்பாலும் பொதுபுத்தி புத்தகங்கள் வீட்டு மக்களுக்காக, மனுஷங்க படிக்கிற புக்கெல்லாம் நீ வாங்கவே மாட்டியா என்ற கேள்விக்காகவே வாங்க வேண்டாமென்று நினைத்தேன். அதில் கணையாழி கடைசிபக்கங்களும் ஒன்று. புத்தகக்கண்காட்சியிலேயே வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் சென்றிருந்த அன்று வரவில்லை.



என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.

"சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு...", "ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்...", "'எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்' சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்"

போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.

மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜிவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,

"...இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட...", "...இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்...", "...என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்...", "...வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்..."

பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, "...நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு 'தோபார்ளு இன்டலக்சுவல்' என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது..."


மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்

"...ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்..."

"'நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.' இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்."

"...இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது..."

போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.

இடையில் Erica Jong ன் The Teacher.

The Teacher stands before the class.
She's talking of Chaucer.
But the students arent hungry for Chaucer.
They want to devour her.
They are eating her knees, her toes, her breasts, her eyes and spitting out her words
What do they want with words?
They want a real lesson.

She is naked before them.
Psalms are written on her thighs.
When she walks sonnets divde
Into octaves & sestets.
Couplets fall into place
When her fingers nervously toy
With the chalks…

Eat this poem.

சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,

In the future everybody will be famous for at least fifteen minutes.

"தமிழில் போர்னோகிராஃபி இருக்கிறதா என்ன" மனிதர் நிறைய தேடியிருக்கிறார். கண்டும் பிடித்திருக்கிறார்.

"தமிழில் ஆதியிலிருந்தே பார்த்தால் சங்கப்பாடல்கள் செக்ஸ் உணர்ச்சியற்று இருக்கின்றன. சில களவுப்பாடல்களில் உள்ள கலவையைப் பதம் பிரிப்பதற்குள் உயிர் போய் விடுகிறது. திருக்குறளில் காமத்துப்பாலில் உண்மையான காமம் கொஞ்சமே. மற்றவை பெருமூச்சுக்கள், ஊடல், வளை கழல்வது இன்ன பிறவே. தமிழில் ஏகமாகப் பரவிக் கிடக்கிற காவியங்களிலும் பிரபந்தங்களிலும் அவ்வப்போது தோன்றும் பெண்கள் யாவரும்(out of proportion) கொங்கைகளில் ஈர்க்கிடை போகாதாம். இல்லையென்றால் மலைக்குன்றுகளாம். இடை இல்லவே இல்லையாம்(உலோபியின் தருமம்) சமாளிக்கச் சிரமமான பரிமாணங்கள். அருணகிரிநாதர் சில சமயங்களில் Pure Porno.

அருக்கு மங்கையர் மலரடி வருடியும்
கருத்தறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழத்தும் அங்குள...
மேலே 'திருப்புகழில்' தேடிக்கொள்ளவும்."

என்று போட்டிருக்கிறது, தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளவும் கண்டுபிடித்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும்.

சரி மனுஷன் சுத்திச் சுத்தி இலக்கியத்தில மாரைத்தான் தேடுறாருன்னு நினைச்சிக்கிட்டே அடுத்த பக்கத்தைத் திருப்பினால். நான் நினைத்ததை ஒரு முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டது மாதிரி அடுத்தப் பக்கத்தில் விளக்கம் தருகிறார்.

"தமிழ் இலக்கியத்தில் போர்னோ என்று நான் தேடுவது முலைகளைப் பற்றிய பாடல்களை இல்லை. ஐம்பெரும்காப்பியங்களிலும் அகத்திலும், புறத்திலும் ஆழ்வார்களிலும் குங்குமம் கழுவின கொங்கைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது எனக்குத் தெரியும் நான் தேடுவது இன்னும் கொஞ்சம் Subtle ஆன விஷயம். ஆழ்வார் பாடலிலிருந்தே உதாரணம் சொல்கிறேன்.

'மையார் கண் மடலாச்சியார் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கோய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்று
குற்றம் பலபல செய்தாய்'



என்பது ஆண்டாள் பாடல்களை விட Better Porno."

ஏன் அந்த மாரைப் பற்றிய சந்தேகம் வந்ததுன்னா, தமிழ் சிபியில் முலைகளைப் பற்றிய ஒரு இலக்கியக் கட்டுரை நான் படித்த ஞாபகம் இருக்கிறது அதனால் தான் இதைப் போயா தேடினார்னு நினைச்சேன். ம்ம்ம் மனுஷன் பெரிய ஆள்தான்.

"இந்த நூற்றாண்டின் தமிழ் எழுத்திலும் அதிகம், போர்னோ கிடையாது. பாரதியார் இதைத் தொடவில்லை. பாரதிதாசனின் ஓடைக் குளிர் மலர்ப் பார்வைகள் தான் உண்ணத் தலைப்பட்டன. உடல்கள் இல்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, போன்றவர்கள் தலைவைத்துப் பார்க்கவில்லை. ஏன் புதுக்கவிஞர்களும் புது எழுத்தார்களும் கூட இந்த விஷயத்தில் ஜகா வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாடனின் காமரூபம் சற்று வேறு ஜாதி. எடுத்துக்கொண்ட செக்ஸை நேராகச் சொல்வதில் எல்லோருக்குமே தயக்கம் இருந்திருக்கிறது. மார்பகம் விம்மித் தணியும், அதற்கப்புறம் என்னடா என்றால் இருவரும் இருளில் மறைந்தார்கள்? ஏன் மறைய வேண்டும்?"

என்னமோ இப்படி ஆரம்பித்து இப்படியே போய்க்கொண்டிருக்கிறது. சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,

"கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்" இது என் ஜல்லி கிடையாது, தக்ஷினாமூர்த்தி 'திவ்ய தரிசனம்' இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.

மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, Aஹுக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.

நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.

"ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது 'திரும்ப ஜப்பான் போகலாமா?' என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.

எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?

எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?

எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?

மேரா பாரத் மஹான்."

சில ஹைக்கூகள்.

மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை

மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்

கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு

-----------------

பசுவய்யா கவிதை

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை...
பின்னும் உயிர்வாழும் கானல்...

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! Australia Vs India Quarters

உலகக்கோப்பை முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது, நம் எதிர்பார்ப்புக்கள் எப்பொழுதும் அப்படியே நிறைவேறிவிடுவதில்லை. நான் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பைனலுக்கு முன் சந்தித்துவிடக்கூடாது என்று பயந்தபடியிருந்தேன். அதற்கு ஆஸி டீமின் வெற்றிவாய்ப்பைப் பற்றிய சந்தேகம் கிடையாது காரணம். எனக்கு மிகவும் பிடித்த தோனியின் எதிர்காலத்தை உலகக்கோப்பை மாற்றிவிடக்கூடாது என்பதில் தான் பயம் அதிகம் இருந்தது.



ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியா இந்தியா காலிறுதியில் மோத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டத்தின் இறுதியில் டாரன் ஸாமி முகத்தில் தெரிந்த Subtle சிரிப்பு என்னை அசைத்துப் பார்த்தது, நான் இந்தியாவுடன் ஜெயிக்க வேண்டும் என்று மேற்கிந்தியத்தீவுகள் ஆடியதைப் போல் உணரவே இல்லை. நான் முதலாவது காலிறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் சுலபமாக ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன். அதற்கு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வென்றது காரணம் கிடையாது.

எனது அலுவலகத்தில் ஒரு ஜோக் ஓடிக்கொண்டிருந்தது, ஆஸ்திரேலியாவை காலிறுதியில் சந்திக்க விரும்பாத தோனி, யுவராஜிடம் ‘தம்பீ ஒழுங்கா ஆடாத நாம் இந்த மேட்ச் தோற்று, ஸ்ரீலங்காவிடம் காலிறுதி விளையாடலாம்’ என்று சொல்ல யுவராஜ் ‘நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது’ என்று செஞ்சுரி அடித்து ஜெயிக்க வைத்ததாக. இதில் இருக்கும் அர்த்தம் ஒன்று தான், யாரும் ஆஸ்திரேலியாவோ இந்தியாவோ காலிறுதியில் தோற்க விரும்பவில்லை என்பது. சரி அந்த ஆட்டத்திற்கு வருவோம்.

ஆஸ்திரேலிய அணி வலுவான பௌலிங் கொண்ட அணியாக இருக்கிறது. என்ன தான் பாகிஸ்தானை அவர்களால் 176ல் சுருட்ட முடியாவிட்டாலும் ஆனால் அன்று ஆஸ்திரேலியா 200+ ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் பாகிஸ்தானை ஆஸி சுருட்டியிருக்கும். பான்டிங் சொன்னது போல் டைய்ட்-ற்கு எந்தப் ப்ளானும் ஆஸி போட முடியாது, வைட் போடாமல் குச்சிக்கு பந்து போட்டுக் கொண்டிருந்தாலே டைய்ட்டால் ஆஸிக்கு விக்கெட்டுக்கள் விழும். அதுவும் ஷேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா என அடித்து ஆடத்துடிக்கும் நபர்களுக்கும் 150+KMPS வரும் பந்துகளில் கிடைக்கும் அவுட்டர் ஸ்விங் பந்துகள் விக்கெட் கொடுக்கும்.

லீ எப்பொழுதையும் போல சிறப்பாக பந்துவீசுவதால் சச்சின், கோ(ய்)லி விக்கெட் அவரிடம் விழ வாய்ப்பு உண்டு. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ப்ராக்டீஸ் மேட்சில் இந்தியா ரன் எடுக்கத் தடுமாறியதை நேரில் பார்த்தவனாதலால். 100/3 ரொம்பவும் சாதாரண விஷயமாக இருக்கும். சச்சினும் ஷேவாக்கும் சரியான ஓப்பனிங் தராமல் மூன்றாவது விக்கெட்டும் விழுந்தால் தற்போதைய நிலையில் இந்தியா 300+ ஸ்கோர் அடிப்பது என்பது இமாலய இலக்கு. இதுவே ஆஸி 300+ ஸ்கோர் அடித்திருந்து முதல் மூன்று விக்கெட் விழுந்தால் அதைத் திரும்ப அடிப்பது என்பதும் இமாலய இலக்கே!

ஆடுகளம் எப்படிப்பட்டதாகயிருக்கும் என்பது மில்லியன் டாலர் கொஸ்ஸீன், என்னைப் பொறுத்தவரை இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக Flatஆகத்தான் இருக்கும். டாஸ் முக்கியத்துவம் வாய்ந்தது - டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்யவே ஆஸ்திரேலியா விரும்பும் - இரண்டாவது இன்னிங்க்ஸ் ட்யூ ஃபேக்டரால் பௌலிங் அத்தனை போட முடியாது என்பதால் ஸ்பின் ரொம்பவும் எடுபடாது. ஆனால் பியுஷ் சாவ்லாவை, தோனி இந்த ஆட்டத்திற்கு எடுப்பதற்கான காரணம் ப்ராக்டீஸ் மேட்சில் இருக்கிறது. இல்லாமல் தோனி மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக ஆடிய டீமை செலக்ட் செய்தால்(ஷேவாக் மட்டும் இன் / ரெய்னா அவுட்) அஷ்வினை ஆடுவதில் ஆஸ்திரேலியாவிற்குப் பிரச்சனை இருக்காது.

ரிக்கி பான்டிங் இன்னும் எந்த ஆட்டத்தையும் அவருடைய ஸ்டான்டர்ட்க்கு விளையாடாததால், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அந்த லெவலில் ஃபார்மிற்கு வர ஐந்து ஆறு ஓவர்கள் கூட போதும். வாட்சன், ஹேட்டின், பான்டிங் மூவரில் ஒருவர் செஞ்சுரி அடித்தால் இந்தப் போட்டில் சுலபமாக ஆஸி வசம் விழும். வாட்சன் இருக்கும் ஃபார்மிற்கு அது ஒன்றும் அத்தனை பெரிய விஷயம் கிடையாது, ப்ராக்டீஸ் மாட்சில் ஹேட்டினும் வாட்சனும் அடித்த அடி இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆஷஸ் தொடர் ஆரம்பத்திலிருந்து ஹேட்டின் காத்திருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு காலிறுதியில் இருக்கலாம். கொஞ்சம் சம்ஜோதிமாக விளையாண்டால் ஹேட்டின் இந்தப் போட்டியின் திருப்புமுனையை உருவாக்குவார்.

மிடில் ஆர்டர் கொஞ்சம் மக்கர் செய்தாலும், மைக்கேல் க்ளார்க், வொய்ட், மைக்கேல் ஹஸ்ஸி எல்லாம் பெரிய ஆட்டக்காரர்கள், முக்கியப் போட்டிகள் இம்மாதிரியான ஆட்டக்காரர்களிடமிருந்து திறமையான ஆட்டத்தை வெளிக்கொணரும் என்பதால் பிரச்சனை இல்லை. பான்டிங் புலம்பிக் கொண்டிருந்தது போல் அவருடைய மிடில் ஆர்டர் கொஞ்சம் பேட்டிங் செய்தது குறிப்பாய் ஸ்டீபன் ஸ்மித், பாகிஸ்தானுக்கு எதிராய் எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய கான்பிடன்ஸை அதிகரிக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, சச்சின் இன்னமும் விளையாடுவதால் ஏற்படும் டிபெண்டென்ஸி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முக்கியமான ஆட்டங்களில் போங்கடிக்கும் சச்சின் காலிறுதியில் அதையே செய்வார் என்பதில் பெரிய சந்தேகம் கிடையாது. ஷேவாக் பற்றிச் சொல்ல எதுவும் இல்லை, பத்து ஓவர் ஆடினால் எதிரணி தோல்வியைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த பத்து ஓவரிலும் ஏகப்பட்ட வாய்ப்புக்களை எதிரணிக்குத் தந்து கொண்டேயிருப்பார். யுவராஜ் இதுவரை இந்த உலகக்கோப்பையில் ஆடியதே பெரிய விஷயம் இவரிடம் இருந்து இனிமேல் எதிர்பார்க்க ஒன்றுமில்லை, கோலி அருமையான ஆட்டக்காரர் கொஞ்சம் ஆஸ்திரேலியா இவரிடம் கவனமாக இருக்க வேண்டும். 30 ஓவருக்குள் தோனி ஆட வந்துவிட்டால் அதுவே இந்தியாவின் தோல்வியை முதல் பேட்டிங்கோ இரண்டாவது பேட்டிங்கோ சொல்லிவிடும். ஆனால் தோனி பொறுப்பான ஆட்டக்காரர் என்பதால் லூஸு போல் ஆடாமல் 50 ஓவர் விளையாடி போட்டியாவது இருக்கச் செய்வார்.

இந்திய பௌலிங் பற்றிச் சொல்ல எதுவுமில்லை, தோனி டாஸ் ஜெயித்து ஃபீல்டிங் கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. பாவம் தோனி அவ்வளவு தான் இந்திய அணியில் பௌலிங்கை அவர் நம்ப முடியும். ஜாகீர், முனாஃப், ஹர்பஜன் மற்றும் பியுஷ் சாவ்லாவைத் தான் தோனி நம்புவார். யூசுப் பதானை விடுத்து ரெய்னாவை எடுப்பார் என்று நான் நம்பவில்லை. ஆஸ்திரேலியா சேசிங் செய்தால் நிச்சயம் ஜெயிக்கும் என்றாலும் முதலில் பேட்டிங் செய்யும் கான்செப்டையை அவர்கள் எடுப்பார்கள்.

இந்தியாவை நினைத்து பரிதாபப்படவேண்டியிருக்கிறது தற்சமயத்தில். ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா காலிறுதியில் போட்டி பலமாகக் கொடுத்தாலே பெரிய விஷயம். இல்லாவிட்டால் இது ஒரு ஒன் சைடட் கேமாக ஆஸ்திரேலியாவிற்குச் சாதகமாகவே இருக்கும்.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In Only ஜொள்ளூஸ்

You see! டாப்ஸி


டாப்ஸி,
தாகமெடுத்தா பெப்ஸி
பாவம் செஞ்சா போகணும் காசி
விடுதலைச் சிறுத்தைக்கு
ஷார்ட் பார்ம் விசி
பிரச்சனை பெரிசானா
மேனேஜருக்கு போடணும் சிசி
இப்படியெல்லாம் போஸுகொடுத்தா
நான் என்னாவேன், You see!

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2011 - என் கணிப்பு

பொதுவாக உலகக் கோப்பைக்கு முன் இப்படி ஒரு பதிவு எழுதுவது வழக்கம். கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி என்னை பொதுவாக இக்கட்டில் விடவில்லை. இந்த முறையும் அப்படியே ஆகும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா பங்குபெறும் Group A லீக் ஆட்டங்கள் எதுவும் அத்தனை கஷ்டமாக இருக்காது. Sri Lankaவுடனான ஆட்டத்திலும் நான் பெரிய பிரச்சனை எதையும் பார்க்கவில்லை, சுலபமாகவே ஆஸ்திரேலிய அணி வென்றுவிடும்.



Group A லீக் ஆட்டங்களின் முடிவில் வெற்றி எண்ணிக்கை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்.

Australia - 6
Sri Lanka - 5
Pakistan - 4
New Zealand - 3
Zimbabwe - 2
Kenya - 1

Group A லீக் இப்படி.

India - 6
South Africa - 5
England - 4
West Indies - 3
Bangaladesh - 2
Ireland - 1

இதன் மூலம் கால் இறுதி போட்டிகள் இப்படி வரும்.

Australia - West Indies (A1 - B4)
Sri Lanka - England (A2 - B3)
Pakistan - South Africa (A3 - B2)
New Zealand - India(A4 - B1)

கால் இறுதிப் போட்டியின் முடிவில் கீழ் காணும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு வரும்.

Australia - South Africa
India - Sri Lanka

முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் என்று நான் உணர்கிறேன், ஆனால் மற்ற செமி ஃபைனல் ஸ்ரீலங்காவில் நடப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பு அதிகம் என்றாலும் இந்தியா தான் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன்.

Australia - India

Dream final, 2003 போன்று இல்லாமல் இந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா ஃபைனல் வந்தால் கொஞ்சம் கலை கட்டும். ஆனால் நிச்சயம் ஆஸ்திரேலியா தான் உலகக் கோப்பை வெல்லும்.

Go Aussie Go!!!

PS: ஆஸ்திரேலிய அணி பற்றி ஒரு பதிவு எழுதணும்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In அரசியல்

சீமான்!

தொடர்ச்சியாக இவரைப்பற்றி படித்துக் கொண்டிருந்தாலும் பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை, பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்லும் கருத்து politically correctஆக இருக்காது. சீமான் இப்பொழுது எடுத்திருக்கும் நிலைப்பாடு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதுமே முக என்ன செய்தாலும், அவர் முன்னம் செய்ததை மட்டும் மனதில் கொண்டு(இதில் அவர் குடும்பத்தை இழுக்கலை) அவரை சப்போர்ட் செய்திருக்கிறேன். ஆனால் இந்த முறை திமுக தேர்தலில் தோற்கும் என்று பர்ஸனலாக தோன்றாவிட்டாலும், தோற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கடந்த முறை திமுக தோற்று அதிமுக வந்த பொழுது ஒரு வாரகாலம் மனதில் துக்கம் அப்பியிருந்தது, ஆனால் இந்த முறை திமுக தோற்றாலும் அப்படி ஒன்று நடக்காது. ஏன் கருணாநிதி தோற்றாலும் கூட, சீமானிடம். கருணாநிதி என்ன செய்திருக்க முடியும் என்று என்னால் நிச்சயமா சொல்ல முடியாவிட்டாலும், ஒன்றும் செய்யாமல் இருந்தார் ஈழ விஷயத்தில் என்றே நான் மனதளவில் நினைக்கிறேன். அந்த ஒரே ஒரு காரணம் மட்டுமே என்னை சீமான் பக்கம் இழுத்துச் செல்கிறது.



ஈழத்தமிழர்கள் பட்டதற்கான வலி கருணாநிதியின் ஆட்சியிழப்பு மூலமே சரியாகும் என்று மனதளவில் நிச்சயம் நினைக்கிறேன். கருணாநிதி பர்சனலாய் தோற்பது எனக்கு ரொம்பவும் வலிமிகுந்ததாய் இருக்கும் என்றாலும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். திமுக தோற்றால் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பார்த்தால் வேதனை இன்னும் அதிகம் தான் என்றாலும், ஆப்போஸிட் ரியாக்‌ஷனைப் பற்றி இப்பொழுது கவலைப்படும் மனநிலையில் நான் இல்லை. பொதுமக்களுடன் அரசியல் பெரும்பாலும் பேசுவேன் என்பதால் கருணாநிதி தோற்பதோ அல்லது திமுக தோற்பதோ இந்த முறை நிகழாது என்றே நினைக்கிறேன் ஆனால் நிகழவேண்டும் என்று ஆசை.

சீமான் எடுத்த முடிவு மிகச்சரியானது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

என் வரையில் கலைஞர் தோற்க வேண்டும் என்பது ஆசையென்றால், சீமான் வரையில் எப்பாடு பட்டாலும் அவரை தோற்கடிக்கவேண்டும் என்பதும் சரியானதே. வைகோ போல் தாபாண்டியன் போல் சீமான் ஆவாரா மாட்டாரா என்பதைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை. அதற்கான அவசியமும் இல்லை, அவரவர்களுக்கான Priority அவரவர்களுக்கு, ஏன் கருணாநிதிக்கு இல்லையா Priority. சோனியாவின் காலின் அவர் விழுந்துகிடப்பது கருணாநிதியின் குற்றம் இல்லை என்றால் சீமான் ஜெயலலிதாவின் காலில் விழப்போவதும் கூட அவரது குற்றமாய் இருக்க முடியாது. இது ஒரு வேதனை வருத்தம் இதை நான் இப்படித்தான் சரிசெய்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். கருணாநிதிக்கு இது தேவைதான், கருணாநிதியின் மரணம் அவர் முதல்வராக இருக்கும் பொழுது நிகழக்கூடாது என்றே நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவருக்கான மானசீகமான தண்டனை அதுவே.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In தொடர்கதை

தேவதையின் காதலன் - 5

அடுத்த இரண்டு வருடமும் இப்படித்தான் போனது. ஆனால் எங்கள் இருவருக்கும் வாழ்க்கையைப் பற்றிய பயம் வரத்தொடங்யிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனக்கும் காதலிக்கிறோம் என்று சொல்லிக்கொள்வது நன்றாக இருந்தது. ஆனால் கல்யாணத்தைப் பற்றி நினைத்தபொழுது யாரோ மனதைப் பிழிவது போலிருந்தது. ஆறாம் செமஸ்டர் அதாவது கடைசி செமஸ்டரில் மிகவும் பயந்து போயிருந்தோம். இப்பொழுதெல்லாம் லெட்டருடன் சாயங்காலம் கொஞ்சநேரம் என்னிடம் பேசிக்கொண்டிருப்பாள்.



பெரும்பாலும் அவளுடைய அப்பா அம்மாவைப்பற்றி- அவள் குடும்பத்தைப் பற்றி, சொல்லிக் கொண்டிருப்பாள். அந்தச் சமயங்களில் எங்கள் இருவருக்கும் இடையில் சிவசங்கரி பெரும்பாலும் இருப்பாள். ஐயாயிரம் ரூபாய் கொடுத்து நாங்கள் கடைசி செமஸ்டர் ப்ரோஜக்ட் வாங்கியிருந்தோம், ஆளுக்கு ஒன்றாய். ஏற்கனவே இருக்கும் மொத்த புரோஜக்டையும் நாங்கள் படித்து முடித்து, கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

இடையில் சிவசங்கரி, கௌசியின் வீட்டிற்குப் போய் இரண்டு நாள் தங்கியிருந்தாள். என்ன பேசினார்களோ, அதை கௌசியின் அம்மா எப்படிக் கேட்டார்களோ தெரியாது, கௌசியை அழைத்து மெதுவாய் பேசியிருக்கிறார்கள். அந்த நாளில் இருந்து கௌசி என்னிடம் பேசமாட்டாள்; லெட்டர் வருவதும் நின்றது. என்னுடைய பயம் அதிகமானது. ஆனால் எங்கள் கடைசி செமஸ்டர் தேர்வுகளும், புரோஜக்ட் பற்றிய எண்ணங்களும்தான் அதிகமாக வந்தது. சங்கரிதான் அண்ணே அவங்க வீட்டில் என்னமோ சொல்லியிருப்பாங்க போலிருக்கு. ஆனா நீங்க பயப்படாதீங்கன்னு சொல்லி என்னைத் தேற்றிக்கொண்டிருந்தாள்.

ப்ரோஜக்ட் சப்மிட் செய்தாகிவிட்டது, வைவாவும் முடிந்திருந்தது. அவள் சிவசங்கரியிடம் மட்டும் பேசிக் கொண்டிருந்தாள். நான் பக்கத்தில் வருவதைப் பார்த்தால் விலகிச் சென்றுவிடுவாள். நானும் சரி இப்பொழுது பேசவேண்டாம்மென்று விட்டுவிட்டேன். நாட்கள் குறைந்துவிட்டது, தேர்வுகள் நெருங்கின. கடைசி ஸ்டெடி ஹாலிடேக்களில் நான் அவளைப் பார்க்கவேயில்லை. அடுத்தநாள் எக்ஸாம் தொடங்குகிறது. அவள் நாங்கள் படிக்குமிடத்திற்கு வந்தாள். சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகு என்னைப் பார்க்க வந்திருந்தாள்.

"தாஸ் எங்கம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு! முதலில் அழுதாங்க பிறகு, நீ அந்தப் பையன்கிட்ட இனிமே பேசினா நம்ம வீட்டில இன்னொரு சாவு விழும்னு சொன்னாங்க. நான் ரொம்ப பயந்து போயிருக்கிறேன். இந்த காலேஜ் படிப்பை வைச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது தாஸ். அதனால நீங்க என்னை மறந்திடுங்க, நீங்க ரொம்ப நல்லவரு; நானா உங்ககிட்ட பேசாதவரைக்கும் நீங்களா வந்து பேசாம இருந்தீங்கள்ள, இதுபோலவே இருந்திடலாம். எங்கவீட்டில் இன்னொரு சாவு விழுவதைவிட நாம பிரிஞ்சி இருக்கிறதுதான் நல்லாயிருக்கும். அம்மாகிட்ட நான் உங்களைப் பத்தி பேசவேயில்லை, இன்னமும் அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியாது. அதை நினைச்சாலே மனசு படபடன்னு அடிச்சுக்குது. எனக்கு சுத்தமா தைரியம் கிடையாது. உங்களை என்னால மறக்க முடியுமான்னு கேட்டா தெரியாது. ஆனா கடவுள் அருள் இருந்தா, நாம மீண்டும் சந்திக்கலாம். நான் அப்பவே இப்படித்தான் நினைத்தேன் அதனால்தான் உங்களை காதலிக்கிறேன்னு கூட நான் சொல்லலை. என்னை மன்னிச்சிருங்க தாஸ், எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் கூட நான் இதைச் சொல்லியிருப்பேன். ஆனா அடுத்தநாளே ஊருக்கு போறோம், நீங்க இதை எப்பிடி எடுத்துக்கிறீங்கன்னு எனக்கு தெரியணும் அதான் இப்ப சொன்னேன். நல்லா படிங்க, நல்லா எக்ஸாம் எழுதுங்க, நல்ல வேலைல சேருங்க, பார்ப்போம் கடவுள் நம்மளை சேர்த்து வைக்கிறாராருன்னு. 90 சதவீதம் நடக்க வாய்ப்பேயில்லை, நம்மக்கிட்ட இருந்தது சாதாரணமான நட்பா நினைச்சு மறந்திருங்க தாஸ். உங்களுக்கு என்னைவிட நல்ல பொண்ணு கிடைப்பாள்..." சொன்னவள் நெருங்கி வந்து உதட்டில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நான் சுதாரிப்பதற்குள் மறைந்து போனாள்.

இது நான் ஒருவாறு யோசித்திருந்ததுதான் ஆனால் நேரில் அவள் சொன்னதும் என்னால் ஒன்றுமே சொல்லமுடியவில்லை. அடுத்த ஐந்து நாள்கள் என்னிடம் கண்ணாமூச்சி ஆடினாள். நாங்கள் எக்ஸாம் ஹாலிற்குள் நுழைந்ததும் உள்ளே வருவது, நான் வெளியே வருவதற்குள் திரும்பிவிடுவது என்று. அவளுக்கு நன்றாகத் தெரியும், நான் எக்காரணம் கொண்டும் எக்ஸாமோடு விளையாடமாட்டேன் என்று. ஆனால் கடைசி எக்ஸாம் வேகமா எழுதிவிட்டு வந்து பார்த்தேன், அப்பொழுதுதான் வெளியே வந்து கொண்டிருந்தாள். நான் அவள் அருகில் போக நினைத்தேன். அங்கிருந்தே கைகூப்பி அழுது வராதீங்கன்னு சைகைகாட்டினாள். பிறகு பஸ் ஏறிச் சென்றுவிட்டாள். நான் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

o

வாழவே பிடிக்கலை, அவளைப் போய் வீட்டில் பார்ப்போம் என்று நினைத்தேன் அதற்கும் மனது இடமளிக்கவில்லை. நான் இப்படி பைத்தியமாய் அலைவதால் வீட்டில் பயந்துபோய், என்னை டெல்லி சித்தப்பா வீட்டிற்கு பேக் செய்தார்கள். மனசு முழுக்க திருச்சியில் இருக்க, நான் மட்டும் டெல்லிக்குப் போனேன். சித்தப்பா வீட்டிற்கு போய் சில காலம் சிம்லா, குல்லு, மணாலியென்று ஊரைச் சுற்றிவிட்டு அவர்கள் ஆசைக்காய், பிறகு வேலையில் சேர்ந்தேன். அதன் பிறகு வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்ததால், வார நாட்களில் அவள் ஞாபகம் வராது. வாரக் கடைசியில் வாழ்க்கை கொடுமையாக இருக்கும்.

நான் முனிர்க்காவில் இருந்து கிளம்பி, கனாட்பிளேசிற்குப் போய்விடுவேன். அந்த பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தை பார்த்துக்கொண்டே நிற்பேன். இல்லையென்றால் இந்தியா கேட்டில் உட்கார்ந்து பிள்ளைகள் விளையாடுவதைப் பார்ப்பேன். அந்த இரண்டு நாள்கள் ஓடுவதற்குள் நான் பலமுறை செத்துப் பிழைத்துவிடுவேன். டெல்லியில் சிலசமயம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வேலையிருக்கும்; கலீக்குகள் வெறுப்புடன் வர நான் மட்டும் சிறிது சந்தோஷமாய் வருவேன். அவளை சிறிது மறந்திருக்கலாமே. எனக்கு நம்பிக்கை சுத்தமாய் போயிருந்தது. இனிமேல் அவளை சந்திப்பதாவது; கல்யாணம் செய்துகொள்வதாவது. ம்ஹூம்; முடியாது என்ற முடிவிற்கு வந்தேன்.

காலேஜ் கான்வொக்கேஷனுக்குக் கூட போகவில்லை நான். அப்பா அம்மாவும் போகவில்லை, பிறகு டிகிரியை ஆஃபிஸ்ரூமிலிருந்து வாங்கினார்கள். எப்பொழுதாவது பிரபுவோ ராஜேஷோ மெய்ல் அனுப்புவார்கள். நான் கான்வொகேஷன் சமயத்தில் வந்த மெயிலில் கேட்டிருந்தேன், கௌசி வந்திருந்தாளா என்று. அதற்கு அவன், அவள் வரவில்லையென்றும் அதன் பிறகு ஒரு செய்தியும் அவளைப்பற்றி இல்லையென்றும் சொல்லியிருந்தான். சிவசங்கரியும் வரவில்லையென்றும் அவளுக்கு வேறொரு இடத்தில் அவள் மாமனுடன் கல்யாணம் ஆகிவிட்டதென்றும், கௌசியைப் போலவே சங்கரியும் பிரபுவிடம் வந்து அழுது, மறந்துடுங்கன்னு சொன்னதாகவும் சொன்னான். ஆனால் உண்மையில் பிரபு சங்கரியை மறந்துதான் போயிருந்தான். விஜியென்றொரு அவன் வீட்டிற்கு எதிரில் இருக்கும் பெண்ணைக் காதலிப்பதாகச் சொன்னான்.

வருத்தமாக இருந்தது, நான் கௌசிக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். ஆனால் அவள் இல்லாத ஒரு கல்யாண வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த மெயிலுக்கு பிறகு நான் தாடியை ஷேவ் செய்துகொள்ளவில்லை, அது வளரத்தொடங்கியது. நான் என் சோகத்தை வெளியில் காட்டியது இப்படி மட்டும் தான். ஆபிஸில் கூட சிலமுறை சொல்லிப் பார்த்தார்கள், நான் செய்ய மாட்டேன் என்று மறுக்கவே விட்டுவிட்டார்கள்.

ஒரு வருடம் இப்படியே டெல்லியில் ஓடியது. ஆனால் அவள் முகமும் அந்தக் காதலும் என் மனதை விட்டு அகலவேயில்லை. ஆனால் நம்பிக்கை போயிருந்தது. நல்லகாலம் எங்கள் குடும்ப வழக்கப்படி 28,29ல் தான் கல்யாணம் செய்வார்கள். அதற்கு இன்னும் 7,8 ஆண்டுகள் இருந்தது. நான் நினைத்தேன் அதற்குள் இந்த ஞாபகம் மறந்துவிடுமென்று. ஆண்டுகள்தான் ஓடியது. ம்ஹூம் முதல் காதல் மறந்துபோகவேயில்லை.

o

வேலை மாறி நான் பெங்களூர் வந்தேன்; இங்கே கொஞ்சம் அதிக சம்பளம். இரண்டாம் வருடம் இங்கே கழிந்தது, அற்புதமான ஊர், அழகான மக்கள், சுமாரான சேலரி என அத்துனையும் வரப்பெற்றேன். காதல், கௌசி, தாடி மட்டும் மாறவேயில்லை. இப்பொழுது முடியும் வளர்க்கத் தொடங்கியிருந்தேன்; போனிடைல். இடையில் ஊருக்குப் போயிருந்த பொழுது கொஞ்சம் கூட மறைக்காமல் பிச்சைக்காரனைப்போல் இருக்கிறாய்னு அம்மா சொன்னார்கள்.

இங்கே ஒரு வருடம் பெங்களுரில் ராஜேஷ் மற்றும் பிரபு பட்ட மேற்படிப்பு படித்துக்கொண்டிருந்தார்கள். சிலசமயம் எப்படி வேலை வாங்குவது எனக் கேட்டு சில மெய்ல்கள் வரும்; அவ்வளவே. நான் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியில் நல்லவிதமாய் வேலைசெய்து நிறைய கற்றுக்கொண்டிருந்தேன். பெங்களுர் ஒரு சௌத்இண்டியன் சிட்டி கிடையாது என்றுதான் சொல்லுவேன். எல்லா ஊரிலுமிருந்து மக்கள் வந்து குடியேறிக்கொண்டிருந்தார்கள். நான் வேலை செய்த மகாத்மா காந்தி ரோடு, மிகப் பிரசித்தம். அத்துனை ஊர் மக்களையும் குறிப்பாக, நிறைய பெண்களை குறைந்த ஆடைகளுடன் பார்க்கலாம்.

குறைந்த ஆடை பெண்களைப்பற்றிச் சொல்லியதால் இதைப்பற்றியும் சொல்ல வேண்டும், நான் வேலை செய்த கம்பெனியில் நிறைய முழு ஆடை அணிந்த பெண்கள் இருந்தார்கள். இதற்கு என் கம்பெனியைத் தவிர பெங்களூரில் குறைவான ஆடை அணிந்த பெண்களே இருந்தார்கள் என்ற பொருள் ஆகாது. நான் கம்பெனியில் சாமியார் என்று பெயர் எடுத்திருந்தேன். பதினெட்டு மணிநேரம் கம்பெனியில்தான் இருப்பேன், வேலைசெய்து கொண்டு. மீதி நேரம் கம்பெனியிலேயே தூங்கிக்கொண்டு இருப்பேன். எங்கள் கம்பெனி அதற்கு அனுமதி கொடுத்திருந்தது.

நான் வேலை செய்துகொண்டே பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதேசமயம் என்னுடைய வேலை சம்மந்தமான சில சர்டிபிகேஷன்களும் செய்து கொண்டிருந்தேன். அதன் காரணமாக ஒரு நல்ல சம்பளத்துக்கான வேலை புனேவில் கிடைத்தது. ஆனால் இடம் ஒரு பெரும் காடு. நான் டெல்லியில் கனாட்ப்ளேசிலும், பெங்களுரில் மகாத்மா காந்தி ரோடிலும் வேலை பார்த்து, புனேவில் காட்டில் வேலைபார்ப்பதை போன்ற உணர்வே அதிகமாக ஏற்ப்பட்டது. ம்ம்ம் இப்படியே புனேவிலும் ஒரு வருடம் ஓடியிருந்தது. இடையில் நான் ப்ரோஜக்ட் சம்மந்தமாய் சிலமுறை ஐரோப்பாவும் சென்றுவர, மூன்று ஆண்டு முடிவில் என் கையில் பட்ட மேற்படிப்பும் மூன்றாண்டு வேலைசெய்த எக்ஸ்பீரியன்சும் இருந்தது.

எனக்குச் சுலபமாய் இப்பொழுதெல்லாம் கௌசியின் நினைப்பு வராது. நான் நிச்சயமாய் சாமியார் கிடையாது. பார்த்த சில மணிநேரத்தில் லவ்லெட்டர் கொடுத்த நான் சாமியாராக இருக்க முடியாது. கம்பெனியில் சிலசமயம், சில பெண்களைப் பார்க்கும் பொழுது கௌசியின் ஞாபகம் வந்துவிடும். நான் நினைப்பேன் அவளுக்கு கல்யாணமாகி இந்நேரம் ஒன்று இரண்டு குழந்தையிருக்கும் என்று. இப்பொழுது தாடியும் நன்றாக வளர்ந்து முடியும் நீளமாக போனிடைல் போட்டு, பார்க்க சாமி யார் மாதிரியே இருந்தேன்.

அம்மாவிடம் சின்னவயதில் விவேகானந்தரைப் பற்றி கேட்டு, அவரைப் போலவே ஆகவேண்டும் என நினைத்ததுண்டு, சில சமயம் அம்மாவை பயமுறுத்தியிருக்கிறேன், சாமியாராய் போகிறேன் என்று. அம்மா கூலாய் சொல்லுவார்கள், நீ இந்த உலகத்தில் கஷ்டப்படுவதை விட விவேகானந்தரைப் போலவோ, இல்லை மிலிட்டிரியில் சேர்ந்து தாய்நாட்டுக்காக உயிரை விட்டாலோ சந்தோஷம்தான் என்று. அப்பொழுது விளையாட்டாய் சொன்னது இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஞாபகம் வரத் தொடங்கியிருந்தது.

அன்றைக்கு ஒரு நாள், என்னிடம் வந்த புரோஜக்ட் மேனேஜர், "தாஸ், புரோஜக்ட் லீடர் வரவில்லை, புரோஜக்ட் பெஞ்சில் இருந்து ஒரு டெவலப்பர் எடுக்க வேண்டும். இன்டர்வியூ பண்ண வர்றியா?"

இது பல சமயம் நடக்காது; இதுவரை நடந்ததேயில்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் வெறும் பிஎஸ்ஸி என்பதால் பலசமயம் கூப்பிடமாட்டார்கள். ஏனென்றால் நிச்சயம் நான் இன்டர்வியூ பண்ண இருப்பவர்கள் பிஈ படித்தவர்களாகவோ இல்லை, அதற்கு மேல் படித்தவர்களாகவோத்தான் இருப்பார்கள்.

"கிரீஷ், ப்ராப்ளம் வராதுன்னா பரவாயில்லை. வேணும்னா நீ நம்ம கிருஷ்ணகுமாரை கூப்பிட்டுக்கோயேன்." வயதில் மிக மூத்தவன்தான் என்றாலும் கம்பெனி பழக்கம் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதுதான்.

"அதுவும் இல்லாமல் பையன் என்னைப் பார்த்து பயந்திரப்போறான்." நான் சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

"அவன் பயப்படுகிறானோ இல்லையோ, நான் உன்னை முதலில் பார்த்ததும் பயந்திட்டேன்." சொல்லிச் சிரித்தான்.

"சரி கிரீஷ், நீ ஆரம்பிச்சிறு; நான் வந்து கலந்துக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம்!" சொன்னதும் அவன் கிளம்பினான். நான் ஒரு பத்து நிமிஷம் கழித்து உள்ளே போனேன்.

அங்கே சோபாவில் ஒரு பெண் உட்கார்ந்து என்னவோ குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். கொஞ்சம் குண்டாய் இருந்தாள். அவளை கிரீஷ் அவளுடைய பழைய புரோஜக்ட் ஆர்க்கிடெக்சர் வரையச் சொல்லியிருக்கணும். கருத்தாய் வரைந்து கொண்டிருந்தாள்.

நான் நேராய் அவனிடம் போய், "கிரீஷ் பையன்னு சொன்னே, பெண்ணு இருக்கு?"

"இந்த ரெக்ருட்மெண்ட் டிபார்ட்மெண்ட் எப்பவுமே இப்படித்தான். நாம ஏதாவது ஒன்னு சொன்னா அதுக்கு நேர்மாறா எது இருக்கோ அதைத்தான் செய்வாங்க. ஃபிரஷ்ஷர் அனுப்புங்கடான்னா எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்களை அனுப்புவாங்க. இன்னிக்கும் பார் பையன்னு சொல்லிட்டு பெண்ணை அனுப்பிட்டாங்க. உன் கொஸ்டின்ஸ் கிளயர் பண்ணி இந்தப் பெண்ணு ப்ரோஜக்ட்ல வந்து, ம்ம்ம் இன்னும் பத்து மெயில் அனுப்புனும் நான் இன்னொரு ஆள் பிடிக்க." எப்பொழுதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசும் கிரீஷ் இந்தியில் சொன்னான் இதை அதுவும் அந்தப் பெண் இருக்கும்போதே. மிகவும் நல்ல மனிதன் கிரீஷ்; இப்படிச் செய்யவே மாட்டான். நான் ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தேன். அவன் ஆங்கிலத்தில், "இது தமிழ்நாட்டுப் பெண்ணாம், இந்தி தெரியாதாம். பேர் என்னவோ சொன்னிச்சே?" சொல்லி யோசிக்க, அந்தப் பெண் தலைநிமிர்ந்து, "என் பெயர் கௌசல்யா ரங்கனாதன்." என்றாள்.

o

அவளே தான், ஆனால் நன்றாய் குண்டடித்திருந்தாள். என்னை அடையாளம் தெரிந்ததா இல்லையா தெரியவில்லை, ஒருவேளை இன்டர்வியூ பயமாய் இருக்கலாம். நானும் கரடிபோல் இருந்தேன். சுடிதார் போட்டு, ஷால் போட்டிருந்ததால், தாலி இருக்கிறதா பார்க்க முடியவில்லை, கால்களை டீப்பாய்க்குக் கீழே வைத்திருந்ததால், மெட்டி போட்டிருந்தாளா தெரியவில்லை. அப்பா பெயரும் ஞாபகமில்லை, ரங்கனாதனா... அந்த சமயத்தில் உண்மையிலேயே என் மூளை வேலை செய்யவில்லை; நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்; அவளும் தான்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த கிரீஷ், "தாஸ் இவங்களை உனக்கு முன்பே தெரியுமா?" நான் அவன் கேட்டது புரியாதது போல் முழிக்க, அவன் திரும்ப ஒரு முறை அதே கேள்வியைக் கேட்டான். நான் தெரியும்னு தலையாட்டியதும், "சரி பேசிக்கிட்டு இருங்க, நான் வந்திருறேன்." சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான். நான் சொன்னேனல்லவா கிரீஷ் நல்ல மனிதன்னு அந்தப் பண்புதான்.

நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க, அவள்தான் ஆரம்பித்தாள்,

"உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?"

"இல்லை..."

"யாரையாவது காதலிக்கிறீங்களா? காதலிச்சீங்களா எனக்கப்புறம்?"

"இல்லை... ஆமாம் ஏன் கேக்குற இதையெல்லாம். என்ன இவ்வளவு குண்டாயிட்ட?"

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் அதான்."

"அப்பிடியா ரொம்ப சந்தோஷம். உனக்கு எத்தனை குழந்தைங்க, புருஷன் என்ன வேலை பார்க்கிறார்?" கேட்டதும் சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தவள்.

"உதை வாங்குவீங்க, நீங்கத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தை கொடுக்கணும்." சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

"என்னடி சொல்ற?" நான் பதற்றமடைந்தேன்.


"பின்ன நான் உங்கள காதலிச்சனா? ஊர்ல இருக்கிறவனையெல்லாம் காதலிச்சனா? உங்ககூட தானே நான் சினிமாவுக்கு, கோயிலுக்கெல்லாம் வந்தேன். அதுசரி இதென்ன கோலம் சாமியார் மாதிரி, ஆனா முன்னவிட இப்பத்தான் நீங்க அழகா இருக்குறீங்க." நான் இப்ப அந்த இன்டர்வியூ ரூமிற்குள் இருப்பதாக நினைக்கிறீங்களா. ம்ஹூம் நான் எங்கேயே பறந்து போய்க்கிட்டிருந்தேன். பறந்து.......

யாரோ தொடுவது போலிருந்ததால், நினைவு திரும்பிய என்முன்னால் கிரீஷ் நின்றிருந்தான்.

"கூல்டிரிங்ஸ் வரச்சொல்லவான்னு கேட்கவந்தேன்."

அவனை திரும்பிப் பார்த்து, "சாப்பாடே எடுத்துட்டு வரச்சொல்லுங்க கிரீஷ்!"

நான் சொன்னதும் நம்பாததைப் போல் பார்த்தவன், பிறகு என்ன நினைத்தானோ சிரித்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டான். நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவள் பழைய கௌசியில்லை; சிறிது சதை போட்டிருந்தாள். முடியின் நீளம் அதிகமாகியிருந்தது. மற்றபடிக்கு அதே முகம், அதே கண், அதே..., என்னால் என் கண்களை நம்பவேமுடியவில்லை. நான் அவளை இப்படி பலமுறை கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். பார்வை கொஞ்சம் ஏடாகூடமாய் ஆனதும் ஒன்று என்னைத் தலையில் கொட்டித் திருத்துவாள், இல்லை அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவாள். ஆனால் இன்று இரண்டும் இல்லை. அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"சரி என்ன நடந்துச்சு இந்த மூணுவருஷமா சொல்லு?"

நான் மெதுவாய் எங்கள் பக்க சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தேன், அவள் என் எதிரில் இருந்த சோபாவில் இருந்து எழுந்து வந்து என்னருகில் உட்கார்ந்தாள் பிறகு, "அம்மாகிட்ட வந்து நடந்ததச் சொன்னேன், இனிமே உங்களை பார்க்க மாட்டேன்னு சொன்னேன். நான் வீட்டுக்கு வராதீங்கன்னு சொன்னாலும் மீறி நீங்க வருவீங்கன்னு நினைச்சேன், ஒரு நாள் சங்கரி கல்யாணம்னு ஃபோன் பண்ணின பொழுதுதான் தெரிந்தது, நீங்க டெல்லிக்குப் போய்ட்டீங்கன்னு. என்னதான் பாக்க வராதீங்கன்னு சொன்னாலும் மனசு கேக்கலை, இரண்டு நாள் அழுதுக்கிட்டேயிருந்தேன், என்னன்னு கேட்ட அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன், நீங்க டெல்லி போய்ட்டதா. அம்மாவால நம்பவே முடியலை. அவங்க நினைச்சாங்க, நீங்க வீட்டுக்கு முன்னாடி ஆளுங்களை கூட்டிக்கிட்டு வந்து ரகளை பண்ணுவீங்கன்னு. இப்படியே நானும் அம்மாவும் ரகசியமா இதைப்பத்தி பேசுறதை பார்த்த அப்பா என்கிட்ட வந்து, என்ன விஷயம்னு கேட்டார். நான் அம்மாகிட்டு கேளுங்கன்னு சொன்னேன். அன்னிக்கு நைட்டு அவங்க ரூமில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது." சொல்லிவிட்டு நிறுத்தியவள் பிறகு, என் ஒரு கையை எடுத்து அவள் கையில் வைத்துக் கொண்டாள்.

"அடுத்த நாள் என்கிட்ட வந்த அப்பா, ’கௌசி, ஏற்கனவே ஒரு சாவு விழுந்ததால உங்க அம்மா ரொம்ப பயப்படுறா, ஆனா நான் இன்னொரு சாவு விழுந்துடக்கூடாதுன்னு பயப்படுறேன். உங்கக்காவும் இதே தப்பைதான் பண்ணினாள். உனக்கு ஒரு இருபது வயசு இருக்குமா. அதுக்குள்ள காதல்னுட்டு..., சரி அது போகட்டும் நீ உங்க அக்கா மாதிரி கிடையாதுன்னு எனக்குத் தெரியும். சொல்லு அந்த பையன் யாரு, நல்ல பையனா, படிப்பானா, குடும்பம் எப்படி, உன்னையும் கொன்னு, எரிச்சு, சாம்பலை ஆத்தில கரைக்கிற அளவுக்கு திடம் இப்ப இல்லை. நான் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுறேன்..' அப்பா சொன்னதும் நமக்குள்ள நடந்த அனைத்தையும் அப்பாகிட்ட சொன்னேன்.

நீங்க டெல்லியில இப்ப இருக்கிறதாகவும், ஏதோ வேலை பார்ப்பதாகவும் சொன்னேன். நீங்க பிரச்சனையெதுவும் பண்ணாமல் நான் சொன்னதும் போனீங்க பாருங்க அதில் தான் எங்கப்பாவுக்கு ரொம்ப சந்தோஷமே. நானும் சொல்லிட்டேன், "அப்பா நான் தாஸ்கிட்ட சொல்லிட்டேன் என்னை மறந்துடுங்கன்னு; அவனும் சோகத்தையெல்லாம் மனசில வைச்சுக்கிட்டு என்னைத் தனியா விட்டுட்டுபோய்ட்டான். ஆனா நிச்சயமா ஒரு நாள் திரும்பி வருவான். நீங்க அதுவரைக்கும் ஒன்னும் பண்ணவேண்டாம். வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் நானும் மேல்படிப்பு எதாச்சும் படிக்கிறேன்"னு சொன்னேன். அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கப்புறம் என்ன, பிரபுகிட்ட கேட்பேன் நீங்க எங்க இருக்கிறீங்க, என்ன பண்ணுறீங்கன்னு.

ஆனா என்னைப்பத்தி சொல்லவேணாம்னு சொல்லியிருந்தேன். உங்களுக்கும் என்ன சின்ன வயசுதானே, இன்னும் கொஞ்சநாள் போகட்டும்னுதான் விட்டுவைச்சேன். ஒரு விஷயம்தான் உறுத்திக்கிட்டேயிருந்தது, என்னடா இது நாம ஒன்னும் அவ்வளவு அழகில்லை நம்மளுக்கே முதல்நாள் லவ்லெட்டர் கொடுத்தவராச்சே, டெல்லியில் ஃபிகருங்களெல்லாம் சூப்பரா இருக்குமே. எங்க கவுந்திடப் போறீங்களோன்னு தான் ஒரே பயம். ஆனா நான் உங்களை நம்பினேன். நீங்க எனக்கு பத்திரமா திரும்பக் கிடைப்பீங்கன்னு முழுசா நம்பினேன். அதே சமயம் நீங்க நல்ல வேலையில் இருந்து வந்தீங்கன்னா நம்ம கல்யாணம் சீக்கிரம் ஆகிடும்னுதான் அப்படிச் செய்தேன். நீங்க எங்க இருக்கீங்கன்னு மட்டும் தான் தெரியும். ஏன்னா எனக்கும் பிரபுக்குமே தொடர்பு அவ்வளவா கிடையாது."

"அப்ப இந்தக் கம்பெனி?"

"இல்லை தெரியாது, நீங்க புனேவில் இருக்கிறதா தெரியும் அவ்வளவுதான், நானும் மூணு வருஷம் காத்துக்கிட்டிருந்தாச்சு, இனிமேலாவது உங்களை பார்க்கலாம்னுதான், இந்தக் கம்பெனியில் இன்டர்வியூ கிளியர் பண்ணி சேர்ந்தேன். இங்க வந்து தேடிக்கலாம்னு. நீங்க இந்தக் கம்பெனியில் இருப்பீங்கன்னு தெரியாது."

அவள் சொல்வதை நம்பமுடியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும், ரொம்ப நேரம் அழுகழுகையா வரும். என்னடா உங்கக்கிட்ட இப்படி பண்ணுறமேன்னு, என்கிட்டயாவது நீங்க எழுதின லவ்லெட்டர், புரோக்கிராம் பத்தி எழுதின லெட்டர், கவிதைகள், நான் எழுதி, நீங்க படிச்ச லெட்டர்ன்னு இருந்துச்சு, உங்ககிட்ட என் நி னைவா ஒன்னுமே கிடையாது, அந்தக் கடைசி முத்தத்தை தவிர; இப்படி பண்ணிட்டமேன்னு சில நாள் ராத்திரி முழுக்க அழுதிருக்கேன். சில சமயம் முடியாம மெய்ல் அனுப்பிரலாம்னு நினைப்பேன். ஆனா கட்டுப்படுத்திக்கிட்டேன். சோகமா இருக்கிறப்பல்லாம் உங்க லவ் லெட்டரை படிச்சால் சிரிக்கத் தொடங்கிவிடுவேன்.

எப்படி ஒருத்தனால் முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கு லவ்லெட்டர் தரமுடியும், அதுவும் முதல் நாளே; இதை யோசிக்காத நாளே கிடையாது. நானே நினைச்சு நினைச்சு சிரிச்சிக்கிட்டு இருப்பேன், அம்மா பார்த்துட்டு பயந்திருவாங்க. ஆமாம் தாஸ் நீங்க எனக்குப் பிறகு அழகான பொண்ணுங்களை பார்க்கவேயில்லையா?"

"நீ ஒன்னு! சூப்பரானா பெண்ணுங்களையெல்லாம் பார்த்திருக்கேன். ஆனா உன்னை மறக்க முடியலை. என்ன சொன்ன? உன் நினைவா ஒன்னுமேயில்லைன்னா; இருக்கு; நீ போட்டு என்கிட்ட கொடுத்த செயின்!" கையில் ப்ரேஸ்லெட் மாதிரி போட்டுக்கொண்டிருந்ததைக் காண்பித்தேன்.

"சில சமயம் எனக்கு உன்மேல் ரொம்பக் கோபமா வரும். அதுவும் யாராவது ஒரு பொண்ணும் பையனும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு பைக்ல போறதைப் பார்த்தா அப்பிடியே பத்திக்கிட்டு எரியும். அப்புறம் இந்த செயினைக் கழட்டி என் லாப்டாப் மேல போட்டு, அதை நீயா நினைச்சுக்கிட்டு கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டி, என் மனசை சமாதானப்படுத்துக்குவேன்." சொல்லிவிட்டுச் சிரித்தேன்.

"ஆனா ஒன்னு இப்ப உன்னைப் பார்த்த பிறகு சொல்றேன், உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. எங்க சித்தப்பா சொல்லியிருக்காரு, சந்தோஷத்துக்கும் குண்டாயிருக்குறதுக்கும் சம்மந்தமே கிடையாதுன்னு. நீ நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி, இப்ப குண்டா அசிங்கமா இருக்க, இதைவிட இங்க புனாவில ஃபிகருங்க எல்லாம் சூப்பரா இருக்குங்க, அதில ஒரு குஜராத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பண்ணிப்பேன். ம்ஹூம் உன்னைப் பண்ணிக்க மாட்டேன்." நான் சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தேன்.

"தாஸ் வேணும்னா சொல்லுங்க இரண்டு மாசம் சாப்பிடாம இருந்து, ஒல்லியாயிருறேன். நீங்க விளையாட்டுக்குத்தான் சொல்றீங்கன்னு தெரியும், ஆனால் இனிமேல் விளையாட்டுக்குக் கூட அப்பிடி சொல்லாதீங்க. ஆளையும் பார்க்காம, உங்களை பத்தி முழுவிவரமும் தெரியாம, நீங்க யாரையும் காதலிச்சிருக்க மாட்டீங்க, கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்க மாட்டீங்கன்னு வெறும் உங்க மேல வெச்ச நம்பிக்கைலதான் வாழ்ந்துக்கிட்டிருந்தேன். ஆனா அதைத்தவிர வேற ஒரு பிரச்சனையே கிடையாது இந்த மூணு வருஷத்துல; அதான் கொஞ்சம் குண்டாயிட்டேன்."

நான் அவளை இன்னும் வம்பிழுக்க எண்ணி, "இல்லை கௌசி, இந்த மூணு வருஷத்துல, சில சமயம் சாமியாரா போயிடலாமான்னு நினைச்சதுண்டு. அப்பல்லாம், "சாமி நான் சாமியாரா ஆகாம, கௌசியை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவளை திருப்பதி கூட்டிக்கிட்டு வந்து மொட்டை போடுறேன்"னு வேண்டிக்கிட்டேன், அதனால நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா மொட்டை போடவேண்டியிருக்குமே?" கேட்டுவிட்டுச் சிரித்தேன்.

சிறிது நேரம் என்னையே பார்த்தவள், "தாஸ் உங்களுக்காக ஆ·ப்டரால் இந்தத் தலைமுடிய இழக்க மாட்டேனா? நீங்க விளையாட்டுக்கு சொன்னீங்களோ, இல்லை உண்மையா சொன்னீங்களான்னு தெரியாது. நான் சாமிக்கிட்ட இப்படி வேண்டிக்க மட்டும்தான் இல்லை, ஆனா தினம் தினம் சாமிக்கிட்ட சொல்லிக்கிட்டேயிருப்பேன், தாஸை என்கூட சேர்த்துரு, சேர்த்துருன்னு. இப்ப நீங்க சொன்னதை சாமியே என்கிட்ட கேக்கிற மாதிரி எடுத்துக்கிறேன். சாமி அப்பிடியே அழகா உங்களை என்கிட்ட சேர்த்துருச்சு; இனிமேல் நீங்களே மறுத்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் மொட்டைதான்; அதுவும் திருப்பதியில." சொல்லிவிட்டு என்னைக் கட்டிக்கொண்டாள்.

இரண்டு வருடம் கழித்து அவளுக்கும், எங்களுக்கு பிறந்த பெண்ணிற்கும் சேர்த்து திருப்பதியில் மொட்டை போட்டோம்.

முற்றும்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In குறுந்தொகை

குறுந்தொகை - இளமையின் அழகு உச்சத்தில் மயங்கினான்

கணைக் கோட்டு வாளைக் கமஞ்சூல் மடநாகு
துணர்ந் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பௌவம் அணங்குக - தோழி!
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!

காதற் பரத்தை தலைமட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.

- மாங்குடி மருதனார்.

நான் புரிந்து கொண்டது:

தன்னைப் பிரிந்த சென்ற தலைவனை நினைத்து வருந்திய தலைவி, தலைவனை தன்னிடம் இருந்து பிரித்த பரத்தையைப் பற்றித் தவறாகப் பேசினாள். இதைக் கேள்விப்பட்ட பரத்தை, வாளைமீன் ஒன்று நிறை மாதமாய் சூள் கொண்டிருக்கும் பொழுது துள்ளித் தாவி சாப்பிட இயலாமல் தானாய் வளைந்து கிடைக்கும் மாமரக் கிளையில் பழுத்து நீரில் கிடக்கும் மாங்கனியை உண்பதைப் போல இளமையில் அழகின் உச்சத்தில் இருக்கும் என்னை நானாய்ச் சென்று தலைவனை மயக்காமல் என் அழகில் மயங்கி அவனாய் வந்து தான் சேர்ந்து கொண்டான். அது தெரியாமல் நான் தலைவனை மயக்கினேன் என்று தலைவி நினைத்தது உண்மையானால் கடல் தெய்வம் என்னை பழிதீர்த்துக் கொள்ளட்டும் என்றாள்.



பொருள்:

தோழி, திரண்ட கொம்பினையுடைய வாளைமீனின், நிறைந்த சூலினைக் கொண்ட இளைய பெட்டை, கொத்தாக உள்ள தேமாவின் இனிய கனிகளைப் பற்றிக் கொள்ளும். மனையாட்டி, அறியாமையால் புலத்தற்குக் காரணமாகும் அத்தன்மையுடையேமாகத் தலைவன் திறந்து யாங்கள் ஆயினோம் என்றால், இத்தகைய வளம் பொருந்திய பழமையாய், அறிவுச் சுற்றத்தால் முதிர்ந்த வேலிர் குலத்திற்கு உரியவர்களின் குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள குளிர்ந்த பெரிய கடல் எம்மை வருத்துக.

விளக்கம்:

குன்றூர்க்குக் கிழக்கில் உள்ள கடல், கீழ்க்கடலைக் குறிப்பதாகும் தேமாவின் கனி, நீர் நிலையில் உதிர்ந்த கனியன்று, நீரில் படியும் கிளைகளில் பழுத்த கனி ஈண்டு குறிக்கப்பட்டது.

வாளை மீனின் தலையீற்றுப் பெடை ஆதலின், நீரில் பல இடங்களிலும் விரைந்து சென்று, இரை தேட இயலாமை உணர்த்தப்பட்டது. இருக்கும் இடத்திலேயே வளமான, இனிய, கொத்தோடு விளங்கும் மாங்கனி, வாளையின் மடநாகு முயற்சி ஏதுமின்றிப் பற்றிக் கொள்வதற்கு ஏற்ப, நீரில் தோய்வதாய்க் கிடந்தது. தலைவனும், தானே வலியச் சென்ற தங்களை நுகர்ந்தானேயன்றி, தாங்கள் அவனை மனையாட்டியிடமிருந்து, அவள் கூறுவதுபோல் நயப்பித்துப் புறம் போகாதவாறு பிரித்திலம் என்றாள். மனையாட்டி, உண்மை அறியாமல் தம்மீது குறை கூறிப் புலந்தனள் என்றும், யாம் அத்தகையேம் ஆயின், அத்தவற்றிற்குத் தண்டமாகக் கடல் தெய்வத்தால் ஒறுக்கப்படுவேம் ஆகுக என்றும் பரத்தை சூள் உரைத்தனள்.

மனையோள் என்ற சொல், பரத்தை தலைவனின் மனைக்குரியளாம் பேறு பெறாமை குறித்தது. ‘வாளை மடநாகு’ எனப் பரத்தை குறிப்பிடுதல், தலைவன் நுகர்தற்கு ஏற்ற இளமை நலம் வாய்க்கப்பெற்றமை கருதியாகும். இல்லறக் கடமைகளுக்கு மட்டும் உரியளாம் தன்மை பெற்ற தலைவி, ’மனையோள்’ எனப் பரத்தையால் இகழ்ந்துரைக்கப்பட்டனள். மனையோள் என்ற சொல், புறத்தில் நிகழ்வது அறியும் வாய்ப்பு இல்லாதவள் மனைவி எனக்குறிப்பதாகும். தீது நீங்கக் கடலாடும் மரபு ஈண்டுக் குறிக்கப்பட்டது.

சொற்பொருள்:

நாகு : இளைமை குறித்த சொல்
கணைக்கோடு - திரண்ட கொம்பு, செதிலைக் குறித்தது.
கமஞ்சூல் - நிறைந்த சூல், முதற் சூல்
தேக்கொக்கு - இனிய மா; மாவினுள் ஒரு சாதி - தேமா
துணர் - கொத்து
பவ்வம் - கடல்
அனையேம் - அத்தகையேம் - நெஞ்சறி கட்டு
அணங்குக - வருத்துக

மேற்கோள்:

1. “நீடிய மரத்த கொடுநோய் மலிர் நிறை” குறுந்தொகை 99
2. “பைந்துணர், நெடு மரக் கொக்கின் நறுவடி” பெரும்பாணாற்றுப்படை 308-309
3. “தொன்று முதிர் வேளிர் குன்றூர்” நற்றிணை 280
4. “அணங்குடை முந்நீர்” அகநானூறு 207
4. “உருகெழு தெய்வம், புனை இருங்கதுப்பின் நீ வெய்யோள் வயின் அனையேன் ஆயின் அணங்குக என் என” அகநானூறு 166
6. “அவரும், பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம்பாடு ஆதல் அதனினும் அரிதே” நற்றிணை 330
7. “கழனி மாஅத்து விளைந்து உகுதீம்பழம் பழன வாளை கதூஉம்” குறுந்தொகை 6

பொருள் முடிவு:

தோழி மனையோள் புலக்கும், மகிழ்நற்கு அனையேம் ஆயினம் எனின் பவ்வம் அணங்குக. 

முனைவர் வி. நாகராசன் உரை

நானா காரணம்?

தோழி!
வாளைமீன்கள் பழங்களைக் கவ்வும்
வேளிர்குன்றத்தின்
கிழக்கே உள்ள கடல்
என்னைக் கொள்ளட்டும்.
அறியாமையால் அவர் மனைவிக்கு
என்னால் புலம்பல்
ஏற்பட்டதென்றால்.

சுஜாதா - மருதம் _ காதற் பரத்தை கூற்று

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In தொடர்கதை

தேவதையின் காதலன் - 4

அன்றைக்கு மனசு சுத்தமாய் நொறுங்கிப் போயிருந்தது எனக்கு. நான் அவளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, காதலால் சாவு விழுந்த வீட்டின் ஒருபெண், லவ்லெட்டர் கொடுத்தால் அப்படித்தான் நடந்துகொள்வாள் என்பதை. என் மீதே எனக்கு கோபமாக இருந்தது. பிரபுவும் ராஜேஷம்தான் சிறிதளவு சமாதானப்படுத்தினார்கள். ஏதோ ஞாபகமாய் மாலை நோட்டை சிவசங்கரியிடம் வாங்காமலே சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலையில் வந்ததில் இருந்து, கௌசி என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்ருந்தாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.



அன்று மாலை எல்லோரும் சென்றவுடன், சிவாவும் கௌசியும் எங்கள் அருகில் வந்து நின்றார்கள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிவசங்கரி தான் தொடங்கினாள்.

"கௌசி உங்ககிட்ட என்னவோ பேசணுமாம்." சிவசங்கரி தான் சொன்னாள் அதையும்.

"சொல்லச் சொல்லு." அந்த விளையாட்டு போரடிக்கத் தொடங்கினாலும் சொன்னேன்.

பிரபுவும், ராஜேஷம் அங்கிருந்து நகரத்தொடங்க, "நீங்களும் இருங்க!" என்று கௌசி சொல்லிவிட்டு, இருவரும் நின்றதும், "இங்க பாரு சங்கரி, எனக்கு இப்ப இவர் மேல கோபம் இல்லை, நான் என் குடும்பத்தில் நடந்ததை மனசில் வைச்சிக்கிட்டு, அவரு சாதாரணமா லவ்லெட்டர் கொடுத்ததை பெரிய அளவில் கொண்டுவந்திட்டேன். ஆனா அவர் பண்ணியதும் தப்புத்தான். பரவாயில்லை, காதல்ங்றதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை கிடையாது, அவரோட நோட்டை படிச்சேன் நான் மனசால அவரை பாதிச்சிட்டேன்னு நினைக்கிறேன். இவரைப் பார்த்தா எனக்கு பாவமாயிருக்கு, இன்னும் சொல்லப்போனா எனக்கு அவரைக் கொஞ்சம் பிடிச்சிருக்கு, இதுக்கு நிச்சயமா நான் அவரை காதலி க்கிறேன்னு அர்த்தம் இல்லை. எங்க அப்பா அம்மா சம்மதத்தோடத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன், அது யாராயிருந்தாலும் சரி; அவராயிருந்தாலும். அவ்வளவுதான். இனிமேலும் நான் அவர்கிட்டையும் அவர் என்கிட்டையும் பேசாம இருக்க வேணாம். ஆனா சில கண்டிஷன்ஸ். உங்கள்ல யாராவது கூடயிருக்கிறப்ப அவர் பேசலாம், இதுகூட ஆரம்பிக்கிறதுக்காத்தான். ஆனா எக்காரணம் கொண்டும் காதலை பத்தி மட்டும் பேசக்கூடாது. பேசுறது கல்லூரிக்குள்ல மட்டும்தான். வெளியே நான் அவரை இதுவரைக்கும் என்னைப் பின்தொடர்ந்து பார்த்ததில்லை, அதுவே போதும். கல்லூரிக்கு வெளிய பேசக்கூடாது. என்னை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இதுக்கெல்லாம் சம்மதம்னா பேசலாம்!" சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள். எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.

நான் அவள் சொன்ன விஷயம் அளித்த மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டவனாய், "என் நோட்டைக் கொடு!" நேராக அவளிடம் கோபமாகக் கேட்டேன்.

"மறந்திட்டேன், அதையும் சொல்லணும்னு நினைச்சேன். என் பேரை இனிமே நீங்க நோட்டில எல்லாம் எழுதாதீங்க. ப்ளீஸ். அப்புறம் உங்க நோட்டில் இருந்த பாட சம்மந்தப்பட்ட பேப்பர்களை தவிர மற்றவற்றையெல்லாம், எரித்துவிட்டேன். அதுக்காக மன்னிச்சுக்கோங்க." சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள்.

நான் கோபமாக பதில் ஏதும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டேன்.

அதிலிருந்து எங்களுக்குள் சிறிது பேச்சுவார்த்தை ஆரம்பமானது. சிலமுறைதான் அவள் என்னுடன் நேரடியாகப் பேசுவாள். பல சமயங்களில் முன்புபோல் யாராவது ஒருவரிடம் சொல்லித்தான் பேசிக்கொண்டிருந்தாள். நான் பெரும்பாலான சமயங்களில் அவள் பேசும்போது அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் இதை கவனித்துவிட்டு அவள் பேச்சை முறித்து கிளம்பிப்போய்விடுவாள். சிறிது நாள்களிலேயே அவள் வீட்டில் இருந்து எனக்கு சாப்பாடு வரத்தொடங்கியது. ஆனால் அவள் என்னிடம் வாங்கிச் சாப்பிட மாட்டாள். அவள் சிவசங்கரியின் டிபனைச் சாப்பிட, சிவாதான் குஸ்கா சாப்பிட்டு வந்தாள்.

எங்கள் லெக்சரர் எல்லோருக்கும் ஒரு அசைன்மெண்ட் கொடுத்து எழுதி வரச் சொன்னார். எழுதினால் தான் இன்டர்னல் மார்க் என்று சொல்லிவிட்டதால், நான் சிவசங்கரியிடம் என்னுடையதையும் எழுத சொன்னேன். அவளுக்கு கோபம்.

"அண்ணே நான் ஏற்கனவே பிரபுவோடதையும் எழுதணும். இருந்தாலும் பரவாயில்லை எழுதிக் கொடுக்கிறேன். நீங்களும்தான் பார்த்து பார்த்து லவ் பண்ணுணீங்களே ஒருத்திய. அய்யோ..." தலையிலடித்துக் கொண்டாள். கௌசி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் இதை. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த வாரம் திங்கட்கிழமை காலேஜ் வந்ததும் என்னிடம் வந்து அசைன்மெண்டை சிவசங்கரி கொடுத்துச் சென்றாள்.

பார்த்ததுமே புரிந்துவிட்டது எழுதியது கௌசிதான் என்று.

லெக்சரர் வந்தார், வந்தததுமே ஞாபகமாய், "அசைன்மெண்ட் கொடுத்திருந்தேன். எழுதாதவங்க மட்டும் எழுந்து நின்று காரணத்தைச் சொல்லிவிட்டு, உட்காரலாம். மத்தவங்க லேப்பில் அட்டண்டரிடம் கொடுத்துவிடுங்கள். ம்ம்ம் சொல்லுங்கள் யார் யார் எழுதலை?"

நான் எழுந்து நின்றேன். நான் மட்டும் தான் எழுந்து நின்றேன். கிளாஸே என்னைத் திரும்பிப் பார்த்தது. எங்கள் கூட்டம் ஆச்சர்யத்தில் பார்த்தது.

o

அந்த லெட்டர் சிவசங்கரிக்கு இல்லை, நேராகவே என்னிடம் தான் வந்தது. நான் படித்ததும் சிவாவிடம் கொடுத்தேன் படித்தவள். சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் கேரியரில் ஒரு அடுக்கை எடுத்துக் கொண்டு எனக்கு ஒரு அடுக்கை கொடுத்தாள். சாயங்காலம் கௌசி என்னிடம் வந்து நின்றாள்.

"என்ன?"

"அந்த லெட்டரை திரும்பக் கொடுங்கள்."

நான் பதில் சொல்லாமல் சிறிது நேரம் தாமதித்தேன். பிறகு,

"இன்னும் நீ என்னை நம்பலைல்ல?" நான் கேட்டதும், அமைதியாக இருந்தாள்.

மீண்டும், "ப்ளீஸ் அந்த லெட்டரைக் கொடுத்துடுங்க."

நான் லெட்டரை திரும்பக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவள், "இப்பத்தான் நல்லபிள்ளை!"ன்னு சொல்லிவிட்டு நகர்ந்தாள். இப்படி அடுத்த ஒரு மாதத்தில் நாள்தவறாமல் கடிதம் வருமெனக்கு; எதையாவது எழுதியிருப்பாள். ஆனால் காதலைப்பற்றி ஒரு வார்த்தைகூட இருக்காது, எப்பப் பார்த்தாலும் நல்லா படிங்க, அப்பத்தான் நல்ல வேலை கிடைக்கும் இப்படித்தான் இருக்கும். ஆனால் எல்லா லெட்டரிலும் ஒரு விஷயம் மட்டும் மாறாமல் இருக்கும்; அது சி வசங்கரிக்கு என்ற தலைப்பு. முதல் சிலநாள்கள், சாயங்காலம் வந்து லெட்டருக்காக நிற்பாள். பிறகு நானே படித்துவிட்டு அவளிடம் திரும்பக் கொடுத்துவிடுவேன்.

எங்கள் செமஸ்டர் மார்க் வந்தது, நான் எப்பொழுதும் போல மார்க் வாசிக்கும் பொழுது வெளியே கிளம்பிப் போய்விட்டேன், அது என்னுடைய ஒரு சூப்பர்ஸ்டிஷன். மொத்தமும் படித்துவிட்டு, லெக்சரர்கள் வெளியே போனதும் தான் திரும்பவும் கிளாசிற்கு வந்தேன். நாங்கள் நினைத்தது தான். நாங்கள் மூன்று பேரும்தான் முதல் மூன்று இடங்களில் வந்திருந்தோம். மொத்தம் அரியர் இல்லாமல் பாஸானவர்கள் ஏழுபேர் தான். எங்களுக்குள் சில மார்க் வித்தியாசங்களே இருந்தன. எல்லா பேப்பர்களிலும் எங்கள் மூன்று பேரில் ஒருவர்தான் முதலிடம் வாங்கியிருந்தோம், ஆனால் பிராக்டிகலில் நாங்கள் மூன்று பேருமே நாற்பத்தைந்து மதிப்பெண்தான் ஐம்பதுக்கு. கௌசிமட்டும் ஐம்பதுக்கு ஐம்பது.

அவள் அழுது கொண்டிருந்தாள், நான் பக்கத்தில் சென்று, "என்ன ஆச்சு, ஏதாச்சும் பேப்பர் ஊத்திக்கிச்சா?"

"இல்லை, இதுவரை நான் படித்த பள்ளிகளில், நான்தான் முதல் மார்க் வாங்குவேன், இரண்டாம் இடம் கூட வந்ததில்லை, இங்கே நாலாவதோ, ஐந்தாவதோ தான் வந்திருக்கிறேன். அதுதான் பொறுக்கவில்லை."

ஆனால் இதைக்கேட்டு சிவசங்கரி கோபமானாள். "எனக்கு ஒரு பேப்பர் அரியர் வந்திருக்கு, நானே அழுவலை; நிறைய மார்க் வரலைன்னு அழறாளாம். இதெல்லாம் ரொம்ப ஓவர். உங்காள கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள் ஆமாம்." சொல்லிவிட்டு சிரித்தாள் சங்கரி.

இதைக்கேட்ட கௌசி மெதுவாக அவளை அடித்தாள். அன்றும் ஒரு லெட்டர் வந்தது, எல்லாவற்றையும் போல்தான் ஆனால் இந்த முறை ஒரு கூடுதல் வரி, இன்னும் நிறைய மார்க் வாங்கணும், அப்படியென்று. அன்று உண்மையிலேயே எனக்குக் கோபம் வந்தது. நான் நேராக அவளிடம் வந்து, "யேய், உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா, இல்லை என் மார்க்கையா? எப்பப் பார்த்தாலும் மார்க் வாங்குங்க, இன்னும் நிறைய, இன்னும் நிறையன்னா எப்படி?"

"நான் உங்ககிட்ட எப்பயாவது உங்களை பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்கேனா?" சொல்லிவிட்டுச் சிரித்தாள். பிறகு, "ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, நீங்க மட்டும் கிளாசில் முதல் மார்க் வாங்காத பையனா இருந்திருந்தீங்கன்னா உங்களைத் திரும்பிக் கூட பார்த்திருக்காமாட்டேன். அதுவும் நீங்க பண்ணிணதுக்கு!" மூஞ்சை குரங்காட்டம் வைத்துக் காட்டினாள். பிறகு, "ஏதோ நல்லா படிக்கிற பையன்கிறதாலதான் உங்கக்கிட்ட பேசுறதே. அதனால ஒழுங்கா போய்ப் படிங்க." சொல்லிவிட்டுச் சிரித்தாள். அன்று மதியம் கல்லூரி விடுமுறை விட்டார்கள். நாங்களெல்லாம் ஒரு படத்துக்கு போவது என்று முடிவானது. வழக்கம்போல் ஏகப்பட்ட கன்டிஷன் போட்டாள்.

நானும் சங்கரியும் தனியா வருவோம், நீங்க தனியா வரணும். நாங்க தனியா உட்கார்ந்து பார்ப்போம், வெளியில என்கிட்டையோ சங்கரிகிட்டையோ நீங்க யாரும் பேசக்கூடாது, இதுக்கு ஓக்கேன்னா வரேன்னு சொன்னா. எங்களுக்கு ரொம்ப கோபம் ஆனால் சங்கரிதான் கண்ணடித்தாள். தியேட்டர் போய் பார்த்துக்கலாம்னு சொன்னாள். நாங்கள் சோனா மீனா தியேட்டர் வந்தோம். 'உன்னைத்தேடி' அஜித்தோட படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம். நாங்கள் அதிகம் படம் பார்க்க மாட்டோம். பக்கத்து பக்கத்து சீட்டு ஐந்து கொடுத்திருந்தார்கள்.

கௌசிக்கும் லேசாய் பயம் இருந்தது, அந்த தியேட்டரிலேயே மொத்தம் சில பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் அனைவருமே காலேஜ் பெண்கள் தான். எனக்கும் கௌசிக்கும் இடையியில் சங்கரியை உட்கார வைத்தாள். நான் படம் பார்க்காமல் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கௌசியையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதனால் கோபமான சங்கரி, என்னை எழுப்பி கௌசியின் பக்கத்தில் உட்கார வைத்து, இங்கேயிருந்து பார்த்தா இன்னும் கிளியரா தெரியும்' சொல்லிவிட்டுச் சிரித்தாள். இதற்கு கௌசியும் ஒன்றும் சொல்லவில்லை.

அரைமணிநேரம் படம் ஓடியிருக்கும், நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கௌசியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு அஜித்தை ரொம்பப் பிடிக்கும் ஆதலால் ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சிலசமயம் திரும்பி என்னைப் பார்ப்பாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன். கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாள். சிறிது நேரம் ஆனதும் நான் என் கையை அவள் கையின் மீது வைத்தேன். அந்த ஏசி அறையிலும் எனக்கு வேர்த்துக்கொட்டிக் கொண்டிருந்தது.

ஐந்து நிமிடம் ஒன்றும் சொல்லிவில்லை; பிறகு திரும்பி என்னைப்பார்த்தவள், "எழுந்திருங்க...!" சொல்லிவிட்டு, அவளும் எழுந்தாள். கூடவே எழுந்த மற்றவர்களை உட்காரச் சொல்லிவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தோம். நேராக அங்கு வந்த சத்திரம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள். நானும் ஏறி உட்கார்ந்தேன். நேரே மெயின்கார்ட்கேட் வந்தவள். உள்ளே நுழைந்து உச்சி பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்தாள். எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியவள். என்னை கேட்ககூட இல்லை; நேரே சிவன் கோயிலுக்குள் நுழைந்தாள். பலருக்கு அங்கே ஒரு சிவன்கோயில் இருப்பதே தெரியாது. எல்லோரும் உச்சி பிள்ளையார் கோயிலுக்குத்தான் வருவார்கள்.

மதிய நேரமாதலால் யாருமே இல்லை, சாமியைத் தவிர. சாமிக்கு எதிரில் நின்றவள். என் எதிரில் கையை நீட்டினாள்.

"சத்தியம் பண்ணுங்க, இனிமே எங்க அப்பா, அம்மா சம்மதத்தோட நமக்கு கல்யாணம் ஆகிறவரை என்னை தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. அதுமட்டுமில்லாம வேற எதுக்காகவும் என்னை வற்புறுத்த மாட்டேன்னும் சத்தியம் பண்ணுங்க!" சொல்லிவிட்டு நின்றாள்.

நான் மெதுவாய், "ஏன் என்மேல் நம்பிக்கையில்லையா, இதை கோயிலில் வைத்துதான் கேட்கணுமா, தியேட்டரிலேயே கேட்டிருக்கலாமே?"

"இல்லை வரவர என்மேலையே எனக்கு நம்பிக்கை போய்க்கிட்டிருக்கு, இன்னும் சொல்லப்போனால் என்னைவிட உங்கமேல் தான் நம்பிக்கை அதிகம்; சத்தியம் பண்ணுங்க." இதற்கு மேல் என்ன செய்ய? நான் அவள் கையில் அடித்து சத்தியம் செய்தேன். பிறகு அவள் பிரகாரத்தில் உட்கார்ந்து சத்தமாக சாமி பாடல்கள் பாடத்தொடங்கினாள். அவள் குரல் மிக அருமையாக இருந்தது. ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு எழுந்தவள். வீட்டிற்குக் கிளம்பினாள். நான் அவளிடம், "நீ போறதுன்னா போ! நான் போய் தலைவரை (வேற யாரு, உச்சிப் பிள்ளையார்தான்) பார்த்துட்டு வரேன்." அவள் வரவில்லையென்று சொல்லி வீட்டுக்குக் கிளம்பினாள். நான் அவளை அனுப்பிவிட்டு, மேலே வந்தேன். அந்தச் சூட்டில் மலைமேல் லவ்வர்ஸ் உட்கார்ந்து கடலை வறுத்துக் கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன், கௌசி மேலே வந்தாலும் பிள்ளையார் பாட்டைத்தான் பாடிக்கொண்டிருப்பாள். அதற்கு வராமல் இருப்பதே மேல். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அன்று அவள் பேசியது.

அடுத்த நாள் வந்ததுமே சங்கரி, "எண்னண்னா அதுக்காட்டியுமே பூரிக்கட்டையா. செம அடியாமே நேத்திக்கு, கேள்விப்பட்டேன்." கேட்டுவிட்டுச் சிரித்தாள். நான் தியேட்டரைவிட்டு வெளியே வந்ததும் நடந்ததைச் சொன்னேன். கேட்டுவிட்டுச் சிரித்தாள்; அவ்வளவுதான்.

அதற்கு பிறகு நான் அவளைத் தொட்டது கிடையாது, முன்புபோல் கிளாசிலும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். வெறும் லெட்டர் தான் எங்களுக்குள் கருத்துப்பரிமாற. அதுவும் ஒருபக்கம்தான். அவள்தான் எழுதித் தருவாள். பிப்பிரவரி 14 வந்தது, நாங்கள் படித்தபொழுதெல்லாம் எங்கள் கல்லூரியில் ஒரு பழக்கம்; பெண் பிள்ளைகள் பெரும்பாலும் சுடிதாரில் வரும், இல்லையென்றால் எப்போதாவது சேலையில் வரும். தாவணியில் வரமாட்டார்கள். அதுவும் பிப்பிரவரி 14 நிச்சயம் வரமாட்டார்கள். ஏனென்றால் அன்றைக்கு தாவணிபோட்டிருந்தால் யாரையோ காதலிக்கிறார்கள் என்று அர்த்தம்.

நான் அடிக்கிற நீலத்தில் பேண்ட் சட்டை போட்டு வந்திருந்தேன், அதுதான் ஆண்களுக்கு காதலிக்கிறார்கள் என்பதைக் காட்ட. ஆச்சர்யம் அன்று கௌசி தாவணியில் வந்திருந்தாள், சங்கரியும் தான். நான் நினைத்தேன் தெரியாமல் போட்டுவந்திருப்பாள் என்று. இதற்கு முன்பும் ஒரு நாள் பரிட்சையில் போட்டு வந்தவள்தான் அவள். ஆனால் சங்கரி தான் வந்து, "அண்ணே தெரியுதா உங்க ஆளு தாவணியில வந்திருக்கு இன்னிக்கு."

"தெரியாம வந்திருப்பாம்மா அவ, உன்னை மாதிரி விவரமெல்லாம் தெரியாது அவளுக்கு."

"நீங்கத்தான் மெச்சிக்கணும், நான் நேத்தி சொல்லித்தான் அனுப்பினேன். இந்த விஷயத்தை நாளைக்கு தாவணி போட்டுட்டு வந்தா இந்த அர்த்தம் தான் என்று. தெரிஞ்சிதான் போட்டுட்டு வந்திருக்கா."

அவள் முன்பே எங்கள் கல்யாணத்தை பற்றியெல்லாம் பேசியதால் இதை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆனாலும் அவளை அன்று வம்பிழுக்க வேண்டுமென்று ஆசையாய் இருந்தது. அதனால் கடைசி பெஞ்சில் இருந்து வந்து முதல் பெஞ்சில் அவளுக்கு இடதுபுறமாக உட்கார்ந்தேன். பிறகென்ன அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் செய்வதுதான் என்பதால் அவள் முதலில் ஒன்றும் நினைக்கவில்லை. சிறிது நேரத்தில் சிவசங்கரி அவள் காதில் ஏதோ ஓதினாள். அவ்வளவுதான்.

கோபமாகிவிட்டாள், நேராக என் பக்கத்தில் வந்தவள். என் தலையில் வேகமாக கொட்டிவிட்டு, "அப்பவே நினைச்சேன் சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு, போங்க போய் ஒழுங்கா பின்னாடி உட்காருங்க!"

ரொம்ப நாள் கழித்து வகுப்பில் என்னிடம் பேசினாள், நான் அவள் பேசுவதையே கவனிக்காமல், அவள் கண்களையும் பார்க்காமல் வேறெங்கையோ பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் வேகமாக தலையில் கொட்டியவள், "தாஸ் ஒரு மாதிரி இருக்கு ப்ளீஸ் போங்க. போய் பின்னாடி உட்காருங்க" நான் வந்து பின்னாடி உட்கார்ந்துகொண்டேன். ஆனால் அவள் திரும்பும் போதெல்லாம் பயங்கரமாக சிரித்து வம்பிழுத்தேன். அடுத்த செமஸ்டர் எக்ஸாம் வந்தது; கௌசி எங்களிடம் பெட் கட்டியிருந்தாள். இந்த முறை எங்களை விட மார்க் அதிகம் வாங்குவதாய். ராஜேஷும் பிரபுவும் இதைக் கேட்டுச் சிரித்தார்கள். ராஜேஷுடைய கேர்ள்ஃபிரண்ட் அவனை விட்டுப் போய்விட்டாள். அதனால் அவன் சில நாள்களாகவே மிகவும் அமைதியாக இருந்தான். நாங்கள் மீண்டும் குரூப்ஸ்டடி ஆரம்பித்திருந்தோம். நாங்கள் மூன்று பேரும் இந்தமுறை யூனிவர்ஸிட்டி ரேங்க் வாங்க முயற்ச்சித்தோம்.

எக்ஸாம் அருமையாக நடந்து முடிந்தது, நாங்கள் எப்பொழுதும் போல் மிகவும் நன்றாய் எழுதியிருந்தோம். ஆனால் கௌசி ஒரு பேப்பர் ஒழுங்காய் எழுதவில்லையென்று சொல்லியிருந்தாள். சிவசங்கரி, எக்ஸாமில் பிரபுவின் பேப்பரை வாங்கி எழுதியிருந்தாள். நான் கௌசியிடம், "ஏன் ஒரு பேப்பர் ஒழுங்கா எழுதலை?"

"அன்னிக்கு கொஞ்சம் மனசு சரியில்லை, உங்கக்கிட்ட பேசலாம்னு பார்த்தேன். ஆனா உங்க மூட கெடுக்க விரும்பலை. அன்னிக்கு அக்காவுக்கு நினைவுநாள். அதான். எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு தாஸ். இப்பல்லாம் ஒழுங்கா தூக்கமே வரமாட்டேங்குது. படிக்கவே முடியலை. நீங்கள்லாம் எப்பிடித்தான் படிக்கிறீங்கன்னே தெரியலை. தேதியை பார்த்ததுமே அம்மா அழ ஆரம்பிச்சிடாங்க. அப்பாதான் வந்து சமாதானம் பண்ணினார். நாளைக்கு நான் ஊருக்கு போறேன்; லீவெல்லாம் முடிஞ்சிதான் திரும்பவருவேன்." சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

ஒரு மாதம் கழித்துத்தான் நான் மீண்டும் அவளைப் பார்த்தேன். முதல் நாள் காலேஜ், இந்த வருடம் நாங்கள் சீனியர்கள்.

புதுவகுப்பிற்கு வந்திருந்தோம். கௌசி வந்து உட்கார்ந்ததுமே, அவளிடம் சென்ற நான் ஒரு தங்கச் சங்கலியைக் கொடுத்தேன்.

"என்னாயிது?"

"உனக்குத்தான், நான் லீவெல்லாம் ஒரு புரௌசிங் சென்டரில் வேலை பார்த்து வாங்கினேன், போட்டுக்கோ!"

"போய் உங்கம்மாகிட்ட கொடுங்க, சந்தோஷப்படுவாங்க, நான் போட்டுக்க மாட்டேன் எடுத்துட்டுபோங்க!" அவள் திரும்பி அந்தச் செயினை மேஜையில் வைத்தாள். நான் அதை எடுத்துக்கொள்ளாமல் திரும்பவந்து பெஞ்சில் உட்கார்ந்து, தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். தலை நிமிர்ந்து பார்த்தபொழுது அந்தச் சங்கிலி அவள் கழுத்தில் இருந்தது. சாயங்காலம் திரும்ப என்னிடம் வந்தது,

"இங்கப் பாருங்க, உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் இதை இவ்வளவுநேரம் போட்டுக்கிட்டு இருந்தேன். இதை ஒன்னு உங்க அம்மாகிட்ட கொடுங்க, இல்லை திரும்ப வாங்கிய இடத்திலேயே கொடுத்திடுங்க." சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

இரண்டாம் வருடம், தமிழ் ஆங்கிலம் பேப்பர்கள் கிடையாது. அதனால் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. முந்திய செமஸ்டர் மார்க்குகளிலும் நாங்கள் தான் முதன்மையாக வந்திருந்தோம். கௌசி அந்தப் பேப்பரில் பார்டரில் பாஸ் பண்ணியிருந்தாள். முன்பை விட இந்த வருடம் நாங்கள் பேசிக்கொள்வது குறைந்தது. ஆனால் அவள் லெட்டர்களின் நீளம் அதிகரித்தது. கிளாசிற்கு வந்ததில் இருந்து எழுதத் தொடங்குவாள். மதியம் என்னிடம் வரும். நான் படித்ததும் சாயந்திரம் அவளிடம் கொடுத்துவிடுவேன்.

எங்கள் வகுப்பில் படித்த பலருக்கு நாங்கள் பழகுவது தெரியாது, எங்களுக்குள் சண்டை என்று தான் நினைப்பார்கள். ஏனென்றால் பெரும்பாலும் நாங்கள் வகுப்பில் பேசினால் அது எதையாவது பற்றிய வாக்குவாதமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த விஷயங்கள் எதுவுமே எங்கள் கடிதத்தொடர்பை பாதிக்கவில்லை. ஒரு முறை கௌசியை செமினார் எடுக்கச் சொன்னார் லெக்சரர். எங்களிடம் கேட்டதுக்கு மாட்டோம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் செமினாருக்கு டாபிக் எழுதி தந்தது நான்தான்.

ஆங்கிலம் அவ்வளவு நன்றாக பேசமாட்டாள் அவள். செமினார் எடுக்க ஆரம்பித்ததும் நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்து கொண்டு வந்திருந்தவள் தடுமாற ஆரம்பித்தாள். பிரபுவும் ராஜேஷும் என்னைத் தடுத்தார்கள். இருந்தும் நான் கேட்டுக்கொண்டேயிருந்தேன். சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தவள். மற்ற கேள்விகளுக்கு விழித்தாள். லெக்சரர் என்னை அழைத்து லாப்-இல் போய் உட்காரச் சொன்னார். நான் போனதும், நன்றாக செமினார் எடுத்ததாக கௌசி லெட்டர் எழுதினாள்.

தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts