In சினிமா சினிமா விமர்சனம் நாட்குறிப்பு பயணம்

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

இந்த முறை லதாக் செல்லும் திட்டத்தை நண்பர் அறிவித்ததும் நானும் சேர்ந்து கொண்டேன். சென்ற முறை காஷ்மீர் சென்று வந்த பொழுதே லதாக் போய் வரவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் உண்டாகியிருந்தது. சென்ற முறை போலில்லாமல் இந்த முறை குழுவாய் செல்லும் வாய்ப்பு, xBhp நண்பர்கள் தங்கள் பைக்களுடன் வருகிறார்கள். இங்கிருந்து ஸ்ரீநகர் வரைக்கும் ப்ளைட்டில் பயணம் பின்னர் ஸ்ரீநகரில் இருந்து லே - லதாக் - பின்னர் மணாலி - குல்லு என்று அவர்கள் பைக்கிள் பயணம் நான் ஜீப்பில். திரும்பவும் சிம்லாவிலிருந்து - டெல்லி - பெங்களூர் ப்ளைட்டில். மொத்தம் 14 நாட்கள் பயணம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சென்ற முறை காஷ்மீர் சென்ற பொழுது, போவதற்கு முன் - பயணத்தில் - பின்னர் வந்தபின் என எழுதிய பதிவுகள் ஒரே இடத்தில்.

நெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்

சில முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள்

மரணம் பற்றிய சில உதவாத குறிப்புகள்

காஷ்மீர் பயணம்

காஷ்மீர் பயணம் - ஜம்முவிலிருந்து

காஷ்மீர் பயணம் - இன்னொரு முறை ஜம்முவிலிருந்து

காஷ்மீர் பயணம் - பெங்களூரில் இருந்து ஆக்ரா வரை

காஷ்மீர் பயணம் - டெல்லியிலிருந்து காஷ்மீர்

ஒற்றைக்கை காஷ்மீரியர்கள்

காஷ்மீர் பயணம் - இரண்டாவது நாள் - பெனசிர் கொலை செய்யப்பட்ட அன்று

-------------------------------------------

இது யாவா புஸ்தகா? - இது எந்த புஸ்தகம்

இது யார புஸ்தகா? - இது யாருடைய புஸ்தகம்

இதர ஹெசுரு ஏனு? - இதனுடைய பெயர் என்ன

இது நிம்ம புஸ்தகானா? - உது உங்கள் புஸ்தகமா?

இது ராமன் அவர புஸ்தகா அல்வா? - இது ராமன் உடைய புஸ்தகமா?

அது யார பென்-னு? - அது யாருடைய பேனா

ஈ பென்-னு நிம்ம அண்ணன்-தா - இந்த பேனா உங்களுடைய அண்ணனுடையதா?

ஈ பென்-னு நிம்ம தம்மன்-தா - இந்த பேனா உங்களுடைய தம்பியுடையதா?

ஆ ஹுடுகி நன்ன தங்கி - அந்தப் பெண் என் தங்கை

இவரு நன்ன அக்கா அல்லா - இவர் என் அக்கா இல்லை.

ராமா யார மக - ராமன் யாருடைய மகன்

ராமா தசரதன மக - ராமன் தசரதனின் மகன்

ராமான்ன தாயி யாரு? - ராமனுடைய தாய் யார்?

ராமன்ன தாயிய ஹெசுரு கௌசல்யே - ராமனுடைய தாயின் பெயர் கௌசல்யா

ராமான்ன ஹெண்டத்திய ஹெசுரு ஏனு - ராமனுடைய மனைவியின் பெயர் என்ன?

ராமான்ன ஹெண்டத்திய ஹெசுரு சீதே - ராமனுடைய மனைவியின் பெயர் சீதா

---------------------------------

Persepolis படம் பார்த்தேன், அனிமேட்டட் திரைப்படம் ரெவல்யூஷனுக்கு முன் பின்னான ஈரானைப் பற்றி குறிப்பாக ரெவல்யூஷனுக்கு முன் பின்னான ஈரானில் பெண்களின் நிலைமை மற்றும் தனிமனித உரிமைகளைப் பற்றி பேசுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர்களில் ஒருவரான Marjane Satrapi எழுதிய Persepolis என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது, அந்த நாவல் Marjane உடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்து அவரால் எழுதப்பட்டது.



அனிமேட்டட் படம் என்பதால் ஏற்படக்கூடிய சில போதாமைகளில் இருந்து படம் இயல்பாய் நகர்ந்துவிடுகிறது. சிறுமி பெண்ணாக மாறும் அந்த மாற்றத்தை படம் நிகழ்த்தும் பொழுது அப்படியே அந்தச் சமயத்தில் நடந்த வரலாறும்(அல்லது இயக்குநர் நடந்ததாக எடுத்திருக்கும்) விஷயமும் இயல்பாய் படத்துடன் ஒட்டியபடியே வருகிறது. சில கதாப்பாத்திரங்களின் மூலம் சில சமயம் நேரடியாய் கதை சொல்லல் மூலமும் நமக்கு கதை நடக்கும் சூழ்நிலை அறியத் தரப்படுகிறது. அயத்துல்லா கொமானி பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல்(நான் கேட்காமல் இருந்திருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு) ஈரானிய ரெவல்யூஷன் சொல்லப்படுகிறது. ஈரான் - ஈராக் போர், கம்யூனிஸம், ஈரானில் அமேரிக்க ஐரோப்பிய தலையீடு என்று படம் நிறைய விஷயங்களைப் பேசுகிறது.

அப்படியே ஒரு சிறுமி இளம் பெண்ணாக மாறுவதையும் அவளுடைய இயல்பால் - கற்பிக்கப்பட்ட இயல்பால் - ஏற்படும் பிரச்சனைகள் அதனால் அவள் ஈரானை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை என்று இன்னொரு பக்கம் ஒரு அழகான - நகைச்சுவை உணர்வுடன் கூடிய - கதை. இந்த நகைச்சுவை உணர்வு நான் ஈரானிய படங்களில் வியக்கும் ஒரு விஷயம், வீரியமான விஷயம் ஒன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அதை மழுங்கடிக்காத வகையில் நகைச்சுவை படத்தில் இயல்பாய் கோர்க்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திலும் அப்படியே. சாதாரணமாய் நடுத்தர அல்லது அதற்கு கீழ் வாழும் ஈரானிய மக்களைப் பற்றிய படங்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இது சற்றே நடுத்தர வர்க்கத்தை விட மேலான ஒரு கதாப்பாத்திரத்தைப் பற்றியது என்பதால், இதில் இன்னமும் அதிகமாய் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

ஓவியங்கள் படு பிரம்மாதமாய் இருக்கிறது, கதாப்பாத்திரங்களுக்கான பேச்சும் இயல்பாய் பொறுந்தி வருகிறது. ஒட்டுமொத்தத்தில் ஒன்றரை மணிநேரத்தில் இந்தப் படம் என்னைக் கவர்ந்து இழுத்துவிட்டது. படம் பேசும் அரசியல் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் - இன்னமும் தெரிந்து கொள்ள வேண்டும் - படம் பிரமிக்க வைக்கிறது. வெகு சாதாரணமான ஒரு கதையை எப்படி அவர்களால் இத்தனை நளினமாகக் கொடுக்க முடிகிறது என்று ஆச்சர்யப்பட்டு நிற்கிறேன். படம் ஆங்கிலத்தில் இருப்பதால் எல்லோரும் பார்க்கலாம், நிச்சயம் பரிந்துரை செய்கிறேன் இந்தப் படத்திற்கு.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை

என்னை மன்னித்துவிடு அகிலா

என்ன முயற்சித்தாலும் சிவத்தால் மேலாடை இல்லாத ஷில்பாவின் உடலை மனதின் நினைவுப் பின்னல்களிலிருந்து அகற்றவே முடியவில்லை. பதின்ம வயதில் முதன்முறைப் பார்த்த நீலப்படம் மனதிலிருந்து நீங்க சிறிது நாளானது பற்றி நினைத்தவன் மனம் மேலும் குழப்பமடைந்தது, ஷில்பாவை நீலப்படத்துடன் ஒப்பிடுவது சரியா என யோசிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து என்னவோ நினைவுக்கு வந்தவனாய், மெத்தையை முகர்ந்து பார்த்தவனது முகம்; அவன் எதிர்பார்த்த வாடை வராததால் மலர்ந்தது. இப்படித்தான் கடந்த இரண்டு நாட்களாக அவன் மனம் ஒரு நிலையிலேயே இல்லாமல் தவித்தது. நான்கைந்து முறை ஸ்வெட்டரை அணிந்து டீ குடிக்கக் கிளம்பியவன், செப்பல் அணிந்ததும் மனம் மாறி திரும்பவும் படுக்கைக்குத் திரும்பினான்.



என்னவெல்லாம் கனவு கண்டிருப்பான் ஷில்பாவுடன் அமையப்போகும் தன் வாழ்க்கையைப்பற்றி, எல்லாம் ஒரே நாளில் இல்லாமல் போகவில்லைதான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் அவளைப் பற்றிய பிம்பம் அழிந்து கொண்டே வந்ததையும் அதே சமயம் அகிலா என்ற பெரிய சொத்தை இழப்பதாக தோன்றியதையும் அவனால் எப்பொழுதையும் போல், மிடில் கிளாஸ் மனப்பான்மையாக நினைத்து ஒதுக்கிவிடமுடியவில்லை. மிடில்கிளாஸ் மனப்பான்மை எவையெவை என்று அவனால் முழுமனதாக வரையறுக்க முடியாததைப் போலவே இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் ஷில்பாவைக் கலியாணம் செய்து கொள்வதை மறுபரிசீலனை செய்வது, எந்த விதத்திலும் மிடில்கிளாஸ் மனப்பான்மையுடன் சம்மந்தப்பட்டதா இல்லையா என்பதையும் அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

ஷில்பாவின் தந்தை அவனிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததில் இருந்தே சிவத்தின் மனம் ஒருவாறு அகிலா மற்றும் ஷில்பாவை ஒப்புமை செய்யத் தொடங்கியிருந்தது, அந்த நாட்களுக்கும் இன்றைக்குமான வித்தியாசம் ஒன்றுதான். முதலில் ஷில்பாவை நோக்கி சரிந்து கொண்டிருந்த தராசு இன்றைக்கெல்லாம் அகிலாவின் பக்கமே நின்றது, இதிலெல்லாம் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாய் அவன் தராசு, ஷில்பா பக்கம் சாய்ந்த பொழுதும் சரி மற்ற பக்கத்தில் சாயும் இந்தச் சமயத்திலும் சரி, தவறானது அவன் பக்கத்தில் இல்லை என்பதை மட்டும் முழுமனதாக நம்பியது.

ஆரம்பத்தில் இருந்தே அழகைப்பற்றிய தடுமாற்றம் தன்னிடம் இல்லை என்பதில் சிவத்திற்கு பெருமிதம் அதிகம். அழகென்ற விஷயத்தை எதை வைத்து தீர்மானிப்பது என்பதில் இருந்த குழப்பத்தினால் தான் அந்த விஷயம் இரண்டு பெண்களையும் ஒப்புமைப்படுத்தும் பொழுது கணக்கில் வரவில்லை என்றும் சிலசமயம் நினைத்திருக்கிறான். நிறம், கண்கள், மூக்கு, மார்புகள், மற்றும் ஏனைய விஷயங்களை மட்டும் கருத்தில் கொண்டு அழகைப்பற்றிய தீர்மானத்திற்கு வருவதா இல்லையா என்ற குழப்பம் இருந்தாலும், அதனால் பிரச்சனை வராததற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். மேற்ச்சொன்ன அனைத்து விஷயங்களிலுமே இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தது தான் அது. மேலும் அது மட்டும் தான் உண்மையாகவும் இருக்கமுடியும்.

அதுமட்டுமில்லாமல், அவனுக்கு ஒப்புமைப் படுத்திப் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவர்களுடைய கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், குடும்பப் பின்னணி, அவர்களைக் கல்யாணம் செய்வதால் கிடைக்கப் போகும் அசௌகரியங்கள், சௌகரியங்கள், இப்படி. திருச்சி போன்ற ஒரு சிட்டியையே தாண்டியிராத, ஏழை பிராமணப் பெண் அகிலாவிற்கும். பெரிய சாப்ட்வேர் கம்பெனி பார்ட்னரின் மகள் ஷில்பாவிற்கும் இத்தனை வித்தியாசங்கள் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

இரண்டு நாட்களாக, முன்பு அவனுக்கும் அகிலாவிற்கும் நடந்த சில விஷயங்களை அவனுக்கும் ஷில்பாவிற்கும் இடையில் நடத்திப்பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே ஷில்பாவிற்கும் தனக்குமானதை அகிலாவுடனும். இந்த முயற்சியின் ஒவ்வொருமுறையும் அகிலா உயர்ந்த பண்புடையவளாக மனதில் படுவதற்கு நிச்சயமாக தன் மிடில்கிளாஸ் மனப்பான்மைதான் காரணம் என்ற ஏக முடிவிற்கு வந்தும்விட்டான். ஏனென்றால், எது உயர்ந்த பண்பாடு என்பதிலும் அவனுக்கு நிச்சயமான முடிவிற்கு வரமுடியாத பிரச்சனைகள் இருந்தன.

ஒருமுறை கெஞ்சி கூத்தாடி அகிலாவை முக்கொம்பிற்கு அழைத்துவந்து ஒரு முத்தம் கேட்டதும் "என்னைய நீங்க எப்படி அப்படி நினைச்சீங்க..." என்று புலம்பி கடைசிவரை அழுதுகொண்டிருந்தவளை நினைத்துப் பார்த்தவனுக்கு; சென்ற வருஷப் பிறப்புக்கு பியர் அடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்த ஷில்பா 12.00 மணிக்கு ஹோட்டலில் விளக்குகளை அனைத்ததும் கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டது நினைவுக்கு வர, ஷில்பாவை அகிலாவுடன் ஒப்பிடுவதே தவறாகப்பட்டது. எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல் இருந்தது ஷில்பா கடைசியில் செய்தது. சிவம் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே நல்லவனாகவும் எல்லோருக்கும் பிடித்தமானவனாயும், தொழில்முறையில் தேர்ச்சிபெற்றவனாயும் இருக்கப்போக; ஷில்பாவின் தகப்பனாரால் சுலபமாக கண்டறியப்பட்டு பல தேர்வுகளைச் செய்து கடைசியில் ஷில்பாவிற்கான மாப்பிள்ளையாகவும் முடிவு செய்யதிருந்தார்.

டெல்லியிலேயே பிறந்து வளர்ந்தவள், பெரிய கோடீஸ்வரனின் மகள் என்பதால் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் ஏடாகூடமாகத்தான் இருக்கும் என்று தெரிந்துதான் இருந்தது சிவத்திற்கு. ஷில்பா அவர்கள் குடும்பத்திற்கு ஒரே பெண் என்பதால் அவளைக் திருமணம் செய்துகொள்ளப்போகிறவனுக்குத் தான் மொத்த சொத்தும் என்றும் உணர்ந்திருந்ததால் கொஞ்சம் விட்டுப்பிடிப்போம் என்றே நினைத்திருந்தான். இடையில் திருச்சியில் இருந்து டெல்லிக்கு வந்த நண்பன் ஒருவன் மூலமாக அகிலா இன்னும் தன்னையே நினைத்துக் கொண்டிருப்பதாக தகவல் தெரிந்ததும் முதலில் தொலைபேசாமல் இருந்தவன் பின்னர் ஏதோ ஒரு மனநிலையில் பேசப்போக அவள் அன்று அப்படி நடந்துகொண்டதைப் பற்றி நிறையப் பேசியிருந்தாள். சிவத்திற்கு அகிலா அப்படி செய்தது தவறாகத் தெரியவில்லை தான்; சொல்லப்போனால் ஷில்பாவின் அப்பா அவனிடம், ஷில்பாவைப் பற்றியும் அவர்களுடைய திருமணத்தைப் பற்றியும் பேசாமல் இருந்திருந்தால்; அவனாகவே சென்று அகிலாவிடம் மன்னிப்பு கேட்டிருப்பான் தான்.

அகிலா அவனிடம் தன்னை மன்னித்துவிடும்படி கேட்டது அவனுக்கு கஷ்டமாகவேயிருந்தது, அதை அவன் அவளிடம் சொல்லவும் செய்தான். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அகிலா அவனிடம் இருந்து டெல்லி முகவரியை வாங்கிக்கொண்டு வாரம் தவறாமல் கடிதம் எழுதுவாள்; சிவம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசுவான். ஷில்பாவுடன் டிஸ்கோத்தேவிற்கு செல்வது, காரில் கொண்டுபோய் கல்லூரியில் விடுவது போன்ற விஷயங்களின் மத்தியிலும் கூட அவனால் அகிலாவுடன் தொலைபேச முடிந்திருந்தது. அவனுக்கான அகிலாவின் எல்லைக்கோடுகள் அகலமானதைப் போல அகிலாவிற்கான அவனுக்கான எல்லைக்கோடுகள் இல்லாமல் போயிருந்தன. அதென்னமோ அகிலாவின் முதல் கடிதத்திலிருந்தே சிவத்தை கணவனாக வரித்து எழுதத் தொடங்கியிருந்தாள்.

அவனாக மறுத்து பேசாவிட்டாலும் அதை ஆதரித்துப் பேசுவதில்லை என்ற முடிவெடுத்திருந்தான். அவர்கள் இருவருக்குமான திருமணம், குழந்தைகள் என அவளுடைய ஒவ்வொரு கடிதமும் சிவமாக கட்டிக்கொண்டிருந்த சுவற்றை அடித்து நொறுக்குவதாகவே இருந்தன. சிவத்தால் ஷில்பாவைப் பற்றி அகிலாவிடம் பேசவேமுடியவில்லை; காலமாக இதற்கு ஒரு வழிசொல்லும் என்று அதை அப்படியே விட்டுவிட்டேன். இந்தச் சமயத்தில் தான் ஒரு விஷயம் நடந்தது .

காலை ஜாக்கிங் போய்விட்டு அப்பொழுது தான் திரும்பவும் வந்தவன் ரிலாக்ஸ்டாக படுக்கையில் சாய்ந்து கிடக்க யாரோ கதவையொட்டி நகர்ந்ததைப் போலிருந்ததால் எழுந்து உட்கார்ந்தவன் அதிர்ந்து தான் போய்விட்டான். ஷில்பா அவன் எதிரில் நின்று கொண்டிருந்தால் சொல்லப்போனால் இருபது நாட்கள் தொடர்ச்சியாய் சாப்பிடாமல் இருந்தால் எப்படியிருபார்களோ அப்படி. கண்கள் எல்லாம் ஒட்டிப்போய் பரதேசி மாதிரி உடுத்திக்கொண்டு முன்னால் நின்றாள்.

"என்ன விஷயம் ஷில்பா என்னயிது இப்படி வந்து நிக்குற" கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதுதான் பார்த்தான் அவளுக்குப் பின்னால் ஒருவன் நின்றுகொண்டிருந்ததை. அவனைப் பார்த்தால் அச்சு அசல் ஒரு ஹிப்பி போலவேயிருந்தான்.

"சிவம் எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபா வேணும். உடனடியா"

சிவத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை, அவனுக்கு சம்பளம் தருவதே ஷில்பாவின் அப்பாதான். அதுமட்டுமில்லாமல் அவளிடம் இல்லாத பணமா, இல்லை அந்த ஹிப்பி எதுவும் இவளை மிரட்டுகிறானோ, ஒன்றுமே புரியாமல்.

"எதுக்கு ஷில்பா உனக்கு ஐயாயிரம் சொல்லு."

"கேள்வியெல்லாம் கேக்காதீங்க உடனே ஐயாயிரம் கொடுங்க." சொல்லிவிட்டு நீட்டியவளின் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன.

மனதுக்குள் ஆயிரம் கணக்குகள் போட்டுப் பார்த்தான் ஆனாலும் ஒன்றுமே விளங்கவில்லை; சிவம் யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவள்.

"இப்ப கொடுக்க முடியுமா முடியாதான்னு சொல்லுங்க நான் போய்க்கிட்டேயிருக்கேன்."

"என்ன ஷில்பா உனக்கு இல்லேன்னு சொல்லுவேனா என்கிட்ட ஐயாயிரம் ரூபாய் ஹார்ட் கேஷாயில்லையே ஏடிஎம்ல் எடுத்துத்தரவா."

இது எதுவும் விவகாரமாய் இருந்தால் அவளுடைய அப்பாவுக்கோ இல்லை போலீஸுக்கோ தொலைபேசலாம் என்று யோசித்துத்தான் சிவம் ஏடிஎம் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அதைக்கேட்டதும் ரொம்பவும் கோபமானவளாய் என்ன செய்வதே என்றே தெரியாமல் வாசலுக்கு இரண்டு முறை வேகமாய்ப் போய் திரும்பிய ஷில்பா சட்டென்று அணிந்திருந்த டீஷர்ட்டை கழட்டி வீசினாள். பின்னர் கைகள் இரண்டையும் விரித்து,

"இந்தா என்னையே எடுத்துக்கோ ஐயாயிரம் கொடுத்துடு..." சொல்லிக்கொண்டிருக்க சிவம் திகைத்துப்போய் நின்றான். அவனுடைய யோசனைச் சக்திகள் அத்துனையும் இழந்துபோனவனாய் மேலாடை இல்லாத அவளுடைய உடம்பையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் செய்துகொண்டிருக்கும் தவறு புரிந்திருக்க வேண்டும் வேகவேகமாய் அவள் கழட்டிப்போட்ட டீஷர்ட்டை திரும்பி அவளிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு அப்படியே பர்ஸில் இருந்து ஐயாயிரம் எடுத்து அவளிடம் நீட்டினான்.

கைகளில் இருக்கும் பழங்களைப் பிடிங்கிக்கொள்ளும் குரங்கின் வேகம் இருந்தது அவளுடைய கைகளில்; டீஷர்ட்டைக் கூடப்போடாமல் காசைப் பிடிங்கிகொண்டு வெளியில் சென்றவள் அந்த ஹிப்பியிடம் கொடுக்க அவன் ஏதோ சிரிஞ்சியைக் கொடுக்க கைகளில் குத்திக்கொண்டவள். வெறி தீர்ந்தவள் போல் சிவத்தைப் பார்த்துச் சிரித்தாள் இந்த இடைவெளியில் அந்த ஹிப்பி வெளியேறிவிட; அவள் போட்டுக்கொண்ட போதை மருந்து தந்த மயக்கத்தில் ஆடிக்கொண்டே சிவத்தின் அருகில் வந்தவள் தொப்பென்று கட்டிலில் விழுந்தாள். இத்தனையிலும் அவள் டீஷர்ட்டைப் போடாமல் கைகளிலேயே வைத்திருந்தாள்.

அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவள் குத்திக் கீழே போட்ட சிரிஞ்சி அங்கேயே கிடந்ததால் அதை அப்புறப்படுத்திவிட்டுப் பார்த்தால் நன்றாகத் தூங்கத் தொடங்கியிருந்தாள். அவளைத் தொட்டெழுப்பி டிஷர்ட் மாட்டிவிடும் அளவிற்கு துணிச்சல் இல்லையாகையால் பெட்ஷீட்டை எடுத்துப் போர்த்திவிட்டான். அவள் வீட்டுக்குத் தொலைபேசி விவரம் சொல்வதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அதைவிடவும் நல்ல யோசனை கிடைக்காததால் மொபைலை எடுத்து ஷில்பாவின் தந்தையை அழைத்தான்.

தொலைபேசியை எடுத்த அவருடைய பர்ஸனல் அஸிஸ்டென்டிடம் ஒரு முக்கியமான விஷயம் என்று ஷில்பாவின் தந்தையிடம் பேசவேண்டும் என்றும் சொல்ல அவள் சிவத்தை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொன்னாள். இடைப்பட்ட நேரத்தில் சிவத்தின் பேச்சால் ஷில்பா கட்டிலில் அசைவது போலிருந்ததால் கதவை லேசாய் சார்த்திவிட்டு வெளியில் வந்தான். தொலைபேசியை அவரிடம் வந்ததும் விஷயத்தைச் சொன்னவன், என்னசெய்வதென்றே தெரியவில்லை என்றதும். அவன் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு அவர் வருவதாகவும் சொல்லி தொலைபேசியை வைத்தார்.

சிறிது நேரத்தில ஷில்பாவின் தந்தை டிரைவரோடு அங்கே வந்து சேரும் வரை, சிவத்தால் அவனுடைய அறைக்குள்ளே கூட போக மனம் வரவில்லை. வந்தது சேர்ந்ததுமே அறைக்குள் சென்ற அவளுடைய தந்தை பெட்ஷீட்டை உருவி அவளுக்கு டீஷர்ட் மாட்டி கைகளில் தூக்கிக்கொண்டு காருக்குச் சென்றார். அப்பொழுது தான் கவனித்தான் சிவம் அவள் படுக்கையை நனைத்திருந்ததை.

"சிவம் நாம் இதைப் பற்றி பேசுவோம் இப்ப இவளைக் கூட்டிக்கிட்டு நான் வீட்டுக்குப் போறேன். சாயங்காலமா நீ வீட்டுக்கு வா. இன்னொரு விஷயம் வேலைக்காரியை அனுப்புறேன் அவ பெட்டை சரி செய்து தருவாள்."

என்று சொல்லிவிட்டு வேகமாய் நகர்ந்தார். அவருக்கு தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்த ஒருவன் முன்னிலையில் இப்படியெல்லாம் நடந்தது கலவரத்தை அளித்திருக்கவேண்டும். அவர் கண்களில் ஏகப்பட்ட கோபம். பெரும்பாலும் ஷில்பாவின் அப்பாவின் முகம் கல்லைப்போலிருக்கும் அவர் என்ன யோசிக்கிறார் என்பது எதிரில் இருப்பவருக்கு தெரியவே தெரியாஅது. இன்று ஏகப்பட்ட உணர்ச்சிகளை கொட்டிக்கவிழ்த்து வெளிப்படுத்தியிருந்தார்.

சிவத்தின் மனம் ஒரு நிலையில் நில்லாமல் ஏகப்பட்ட விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தது. அகிலாவைப் பற்றி, ஷில்பாவைப் பற்றி, தன்னுடைய மிடில் கிளாஸ் மனப்பான்மையைப் பற்றி, பணத்தைச் சார்ந்ததாக இருக்கும் வாழ்வைப் பற்றி இப்படி. ஆனாலும் ஷில்பாவின் அப்பா அவனுடைய முதலாளியும் ஆதலால் சாயங்காலம் அவர் வீட்டிற்குப் போயிருந்தான். அவருடைய பர்ஸனல் அறையில் இருப்பதாகவும் உள்ளே போகுமாறும் உதவியாளினி சொல்ல உள்ளே சென்றான்.

லாப்டாப்பில் எதையோ வேகமாக தட்டிக் கொண்டிருந்தவர், சிவம் வந்ததும் அவனை வரவழைத்து அருகில் உட்காரவைத்துக் கொண்டார்.

"சிவம் சாரி உங்கக்கிட்ட சொல்லியிருக்கணும் நான், ஷில்பாவிற்கு போதைப் பழக்கம் உண்டு. அவள் கல்லூரி படிக்கும் பொழுது தொடங்கியிருக்கும்னு நினைக்கிறேன் இடையில் நிறுத்தியிருந்தாள், ஒரு மாசமா திரும்பவும் ஆரம்பிச்சிருக்கா. அவளுக்கு காசு கொடுப்பதை நிறுத்திட்டதால உங்க வீட்டுக்கு வந்திருக்ணும்." சொன்னவர் மூச்சை இழுத்துவிட்டார். சிவத்திற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அமைதியாக அவரையே கவனித்துக் கொண்டிருந்தான்.

"நீங்க ஷில்பாவைக் கல்யாணம் செஞ்சுக்கிற உங்க நினைப்பை மாத்திக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஆனால் நான் ஒரு விஷயம் உங்கக்கிட்ட சொல்லிக்கிறேன், அதுக்கப்புறம் என்ன டிசிஷன் எடுத்தாலும் எனக்குச் சம்மதம் தான். உங்களோட முடிவு உங்க ப்ரொபஷனல் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பா இருக்காதுன்னு உறுதியா சொல்லிக்கிறேன்."

எழுந்து நின்றவர் சிவத்திற்கு முதுகைக் கொடுத்து ஜன்னல் பக்கத்தில் நின்று பேசினார்.

"ஷில்பா முழுசா மாறிடுவான்னோ இல்லை உங்க கல்யாணத்துக்கு அப்புறம் போதை மருந்தே உபயோகிக்க மாட்டான்னோ நான் உத்திரவாதம் தரமாட்டேன். பணம் அதிகமாக அதிகமாக தானே வர்ற பிரச்சனைல்ல இதுவும் ஒன்னு. ம்ம்ம் ஆனா உங்கத் திறமையால என் கம்பெனி நல்லபடியா வரும்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு பப்ளிக்கா அவளுக்கு புருஷன் அப்படிங்கிற Tagல் இருங்க. அது என் பொண்ணுங்கிறதுக்காக.

ஏன்னா உங்கக்கிட்ட நான் என்னையையே பார்க்குறேன் இதே மாதிரி தான் நான் இருந்தேன். எனக்குக் கிடைச்ச ஆப்பர்டியூனிட்டியை வச்சு நான் பெரிய அளவுக்கு வந்துட்டேன். உங்களுக்கும் அப்படி ஒரு ஆப்பர்டியூனிட்டி இப்ப வந்திருக்கு. காசை வைச்சு பேரம் பேசுற மாதிரி இருந்தாலும் உங்க மேல இருக்கிற அபிப்பிராயத்தாலத் தான் இதைச் சொல்றேன். என் பொண்ணுக்கு உங்களை மாதிரி நிறைய பேர் கிடைப்பாங்க, அவளுடைய போதைப் பழக்கம் தெரிஞ்சவங்களே கூட. ஆனால் எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. யோசிங்க யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க. என் பொண்ணுக்காக பயப்பட்டீங்கன்னா 50% ஷேரை உங்க பேரில் எழுதி வைக்கிறேன் சரியா?"

அவர் சிவத்தை திரும்பிப் பார்த்தார், அவன் பதிலெதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருக்க.

"சரி நான் உங்களுக்கு மூணு நாள் டைம் தர்றேன். ஒரு முடிவைச் சொல்லுங்க"

அதிலிருந்து தான் அவன் அகிலாவையும் ஷில்பாவையும் ஒப்பிடத்தொடங்கியது. ஷில்பாவைக் கல்யாணம் செய்த பிறகு திருத்திவிட முடியுமா என்ற கேள்வி ரொம்பவும் குழப்பமான ஒன்றாய் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் அதாவது போதை மருந்தை அவள் மறந்திருந்த காலங்களில் அவளுடன் பழகியிருக்கிறான். அவள் அப்பா அவளிடம் இவனை உனக்கு முடிக்கலாம் என்று சொல்லி வைத்திருந்ததால் நன்றாகத் தான் பழகிக் கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுது எல்லாம் நடிப்பாகத் தோன்றியது.

மூன்றுநாட்கள் மண்டையை உடைத்துக் கொண்ட பிறகு அகிலாவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

அகிலா,

சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மை பிரித்துவிட்டது. நான் என் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது. அதற்கான ஒரு படிக்கட்டாக என்னுடைய கல்யாணத்தைப் பார்க்கிறேன். நான் வேலை செய்யும் கம்பெனியின் ஓனர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதாய் முடிவெடுத்துக்கிறேன்.

வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடுகின்றன. இன்று இப்படி ஒரு முடிவை எடுத்துருக்கிறேன். உண்மையில் இந்த முடிவால் எங்கே போய் இந்தப் பாதை முடியுமென்று தெரியவில்லை தான். ஆனால் உன் பாதை நல்லபடியாக இருக்குமென்றே நினைக்கிறேன்; நானில்லாவிட்டாலும். ஏனென்றால் பாசாங்கில்லாத அன்பை நீ உனக்கு வரப்போகும் கணவனுக்குத் தருவாய் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது; எனக்கு என்னைப் பற்றி அப்படியொரு நம்பிக்கையில்லை.

உன் வாழ்க்கையை கெடுப்பதைக் காட்டிலும் ஏற்கனவே கெட்டிருக்கும் என் வாழ்க்கையை இப்படியே தொடர்கிறேன். உன்னை மறக்கமுடியாமா போன்ற கேள்விகள் எல்லாம் மனம் முழுக்க இருக்கு, சந்தர்ப்பவாதியாக இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

வேறென்ன சொல்ல,
மன்னித்துவிடு அகிலா,

சிவம்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிறுகதை திண்ணை

ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்

"இன்னிக்கென்ன நாயா? பூனையா?"

இதுதான் என் பொண்டாட்டிங்கிறது. நாம தேடித்தேடி பொய்யெல்லாம் சொல்லணும்னு அவசியமேயிருக்காது. அவளாவே கரெக்டா கண்டுபிடித்துவிடுவாள். ஆனால் கல்யாணம் ஆன புதிதில் இப்படிக்கிடையாது. எங்களுக்கிடையேயான அலைவரிசையில் நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனால் இந்த பத்து வருடங்களில் அவள் என்னை புரிந்துகொண்டது ரொம்ப அதிகம்.

"சொல்லுங்க கேக்குறேன்ல, இன்னிக்கு எந்த நாய், நரி ரோட்டில் அடிபட்டுக்கிடந்துச்சு, அய்யா எந்த ஆஸ்பத்திரிக்கு போய் ரத்தம் கொடுத்துட்டு வர்றீங்க. ஆபிஸ்லேர்ந்து கிளம்புறப்ப போன் பண்ணிட்டுத்தானே கிளம்புனீங்க?"

இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு பத்ரகாளி போன்ற ஒரு உருவகத்தை கொண்டுவர அவள் நினைத்தாலும் அந்த சாந்தமான அழகான முகத்திற்கு ஒத்துவரவில்லை. வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவளை நெருங்கிவந்து லேசாய் கன்னத்தை கிள்ளினேன்,

"அம்முன்னா அம்முதான், எப்பிடிடா கரெக்டா கண்டுபுடுச்ச, எவனோ ஒரு லூசுப்பய வண்டியே நாய் மேல ஏத்திட்டான், அது கதறித்துடிக்குது அவன்பாட்டுக்கு கண்டுக்காம போறான். ரொம்ப குட்டிடா இரண்டுமாசம் கூட ஆயிருக்காது, ஒரே ரத்தம் வேற. எனக்கு மனசு கேக்கலை. நம்ம அன்புக்கு இப்படி ஆகியிருந்தா பார்த்துட்டு அப்பிடியே உட்டுருவோமா சொல்லு?"

நான் மெதுவாய் அவளைக் கொஞ்சத்தொடங்க, கையைத் தட்டியவளாய்,

"இன்னிக்கு நம்ம மணீஷோட பிறந்தநாள் ஞாபகமிருக்கா. இவ்ளோநேரம் இங்க வாசல்லயே உட்கார்ந்துக்கிட்டிருந்தா, 'நைனா எப்பவருவாங்க'ன்னு கேட்டுக்கிட்டே. வண்டிச்சத்தம் கேட்டதும் கோபத்தில உள்ள போய் உக்காந்திருக்கா. நீங்களே போய் சமாதானப்படுத்துங்க, நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. நம்மளால முடியாது,"

கோபம் அம்முவுக்குத்தான் அதிகமிருக்கும் ஆனால் வெளியில் காண்பிக்கமாட்டாள். மணீஷோட பிறந்தநாளுக்கு வெளியில் அழைத்துச்செல்வதாய் ஏற்பாடு. இப்பொழுது எல்லாம் அரோகரா ஆகியிருந்தது. மணீஷ் என்ன சின்ன பொண்ணு, எட்டு வயசாகுது. நாளைக்கு கொஞ்சநேரம் அதிகமா போகோ சேனல் பாத்துக்கோன்னு சொல்லிட்டா சமாதானமாயிருவா. ஆனா இங்க அப்படி முடியுமா? காலைலேர்ந்து ஆரம்பிக்கணும் தாஜா பண்ண, அவளுக்கு முன்னாடி எழுந்திருச்சி காபிபோட்டுத்தந்து, அவள் வேண்டாம் வேண்டாம்னு சொல்லும்பொழுதும் சமையல்ல அவளுக்கு உதவி செஞ்சு, சாயங்காலநேரமாய் அவளுக்குத்தெரியாமல் வெளியில் சென்று மணீஷிற்கு நொறுக்குத்தீனியும் இவளுக்கு மல்லிகைப்பூ வாங்கிவந்து இப்படி நிறைய செய்யவேண்டியிருக்கும் சமாதானப்படுத்த. இதெல்லாம் பண்ணுறமோ இல்லையோ அன்னிக்கு மட்டும் அவள் சமையல்ல நொட்டாங்கு சொல்லாமயிருக்கணும்.



இதையெல்லாம் நினைத்துக்கொண்டவனாய் மணீஷாவை சமாதானம் செய்ய வீட்டிற்கு உள்ளே நுழைந்தேன். அவ என்னைக் கவனித்தாலோ இல்லையோ அன்பு வந்துட்டான் முன்னாடி வாலை ஆட்டிக்கிட்டே. பொண்டாட்டி புள்ளயக்கூட சமாதானப்படுத்திரலாம், அய்யோ இவனை சமாதானப்படுத்த முடியாது. சிலசமயம் கோபத்தில் அம்மு நேரடியாகவே சொல்லிவிடுவாள்.

"உங்களுக்கு என்னையும் என் புள்ளையும் விட இவன்தான் முக்கியம்" என்று.

நமக்கு விளங்குதோயில்லையோ, அன்புக்கு கோபம் வந்திரும். அவளைப்பார்த்து குரைத்து தன் எதிர்ப்பைக்காட்ட, அம்முவின் வேதாளம் சீக்கிரமே முருங்கைமறம் ஏறிக்கும். அவ்வளவுதான் அன்புவின் வாய்க்கு போடவேண்டிய பெல்டை போட்டுட்டுத்தான் மறுவேலைன்னு அம்மு ஒத்தைக்காலில் நிற்க, சாதாரணமா அவனோட கழுத்து சங்கிலியை போட நினைத்தாலே கோபமாகிவிடும் அன்பு; ஒரே ராகமாய் அவளைப்பார்த்து குரைக்கத்தொடங்க, அப்புறமென்ன ரெண்டு வேளைக்கு எனக்கும் அன்புக்கும் வெளியில் தான் சாப்பாடு.

சமையல்கட்டிற்கே போகமாட்டாள், ஆனால் அவளும் அவள் பொண்ணும் மட்டும் எப்படியோ சாப்பிட்டிருப்பார்கள். இத்தனைக்கும் அன்புமேல அம்முவுக்கு பாசமில்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன். அவனுக்கு உண்ணி எடுத்து விடுவதில் தொடங்கி, அவனைக்குளிப்பாட்டி, வாக்கிக் அழைத்துச்சென்று எப்பவாவது வீட்டில் அசிங்கம் பண்ணிட்டான்னா கழுவிவிட்டு அத்தனையும் அவள்தான் செய்வாள். என்ன நான் கொஞ்சம் செல்லம் கொடுப்பேன் அவள் மொத்தமாய்க் கண்டிப்புதான்.

ஒருநாள் இப்படித்தான் ஆபிஸில் முக்கியமான வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது இவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. இரண்டு வார்த்தை பேசமாட்டேங்கிறா, அழுகுறா. எனக்கு தூக்கிவாறிப்போட அவசரஅவசரமாய் வீட்டிற்கு கிளம்பிவந்துபார்த்தால். அன்பு தேமேன்னு ?£லில் படுத்திருக்க பக்கத்தில் அவனைத்தடவிக் கொடுத்தபடியே இவள் அழுதுகொண்டிருந்தாள்.

என்னாடின்னு கேட்டா, அன்புவிற்கு உண்ணி வராமயிருக்கிறதுக்கான ஷேம்புவை போட்டு குளிப்பாட்டிவிட்டிருந்தாளாம். சமையல்கட்டில் ஏதோ அவசரவேலையாய் நன்றாய் கழுவிவிடாமல் விட்டிருக்கிறாள். அன்பு உடம்பை நக்கிவிட்டிருக்கிறான், பிறகென்ன தலைவர் வாந்தியெடுத்து, பெரிய பெரிய பிலிம்மெல்லாம் காட்டியிருக்கிறான்.

இவள் ஒரே அழுகையாய் அழத்தொடங்க, நான் அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். இவள் அதற்கு பிறகும் நிறுத்தாமல் அழுதுகொண்டேயிருக்க, ஸ்கூல்லேர்ந்து வந்த மணீஷா அம்மா அழுவதைப்பார்த்து அவளும் அழத்தொடங்க, நம்ம ஆளு, ?¦ரோ அன்பு டாக்டர்கிட்ட அழகா ஊசியை போட்டுக்கிட்டு; நல்லா ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையும் ஒரெயடியாய் விழுங்கிவிட்டு; ஜம்முன்னு வண்டியில் காத்துவாங்கிக்கிட்டே வந்து இறங்கினான்.

உள்ள நுழைஞ்சானோ இல்லை, நேராய் மீன் பொம்மையை எடுத்துக்கிட்டு ஒவ்வொருத்தரிடமாப் போய் விளையாடிக் கொண்டிருந்தான். அம்முவுக்கு அவன் திரும்புவும் ஆடிஓடி விளையாடத்தொடங்கவும் தான் உயிரே வந்தது போல் இருந்தாள். இரண்டு பேர்க்கிட்டையும் முடிச்சிக்கிட்டு என்கிட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு வர எனக்கு கோபமுன்னா கோபம், பின்ன என் பொண்டாட்டி புள்ளையை அழவச்சிட்டான்ல!!!, நான் விளையாட வரமாட்டேன்னு சொல்ல. உடனே அம்மு,

"அந்தாளு கிடக்குறாரு! நீவாடா குட்டி நாம விளையாடலாம்' னு சொல்லி கொஞ்ச நேரம் சார்கிட்ட விளையாடிக்கிட்டிருந்தாள். பின்னர் டாக்டர் போட்ட ஊசி வேலைசெய்யத்தொடங்க அன்பு அப்படியே தூங்கிட்டான். அப்புறம் மணீஷாவும் தூங்கினதுக்குப்பிறகும் அம்மு அன்பின் பக்கத்தில் உட்கார்ந்து அவனைப் பாவமாய்ப் பார்த்தபடியே தடவிவிட்டுக்கொண்டிருக்க, நான் மெதுவாய்,

"நானும் பாவந்தானே அம்மு, இன்னிக்கு பூரா இவனால ஒரே அலைச்சல்." ஆரம்பிக்க, திரும்பி முறைத்தவள்.

"பேசாமப்போய்ப் படுத்துக்கோங்க, அன்பை அப்படி பார்த்ததிலிருந்து எனக்கு மனசே சரியில்லை, பாவம் புள்ள காலைலேர்ந்து சாப்டதையெல்லாம் வாய்லெடுத்துட்டு கஷ்டமா படுத்துறுக்கான். உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனசுவருதோ தெரியலை. மரியாதையாய் போயிருங்க, இல்லைன்னா ஒருமாசத்துக்கு அவ்வளவுதான்..." சொன்னவள் என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் அவன் கால்களை நோண்டிக்கொண்டிருந்தாள். அன்பு விழித்திருக்கும் பொழுது காலில் இருக்கும் உண்ணியை எடுக்கவிடமாட்டான்.

எனக்கோ அன்னிக்கு இரவைக் கெடுத்துட்டானே பாவின்னு கோபத்தோட அவனைப்பார்த்தேன். அவனோ, அவள் தடவிக்கொடுக்கும் சொகுசில் ஒரு கண்ணை மட்டும் உயர்த்தி என்னை ஏளனமாகய்ப்பார்த்தான். இப்படியாக அவளுக்கு அன்பு என்று நாங்கள் செல்லமாய்க் கூப்பிடும் அன்பரசன் என்ற லேப்ரடார் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்க்குட்டியை ரொம்ப அதிகமாகவே பிடிக்கும்.

அன்பை அப்படியே இரண்டு கைகளாலும் தூக்கிக்கொண்டு மணீஷாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். பின்னர் அவளை பக்கத்தில் இழுத்து உட்காரவைத்துவிட்டு,

"என்னம்மா செல்லம் கோபமா நைனாமேல, பாருடா நம்ம அன்பு மாதிரியே ஒரு குட்டி நாய், ரோட்டில ஒருத்தன் அடிச்சிபோட்டுட்டு போய்ட்டான். பாவமில்லையாடா அது. நம்மள மாதிரி ஒரு உயிர்தானே அதுவும், அதான் நைனா ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுபோய் வர்றேன்."

நான் சொல்லச்சொல்ல மணீஷாவின் கண்களில் நீர்முட்டத் தொடங்கியிருந்தது.

"இல்ல நைனா எனக்குத்தெரியும் இப்புடித்தான ஏதாவதிருக்கும்னு. ஆனா அம்மாத்தான்..." சொல்லிவிட்டு திரும்பியவளை அம்மு முறைக்க மணீஷ் நிறுத்திக்கொண்டாள்.

பின்னர் நானும், அன்பும் மணீஷாவும் சேர்ந்துகொண்டு கொஞ்ச நேரம் அம்முவை வம்பிழுத்துக்கொண்டிருக்க, அவள் நேரமாகியிருந்ததால் வெளியில் செல்லவேண்டாமென்று சொல்லிவிட்டு சமைக்கத்தொடங்கினாள்.

அன்றிரவு,

"என்னங்க நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்."

"ஏய் இங்கப்பாரு உங்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்தச் சமயத்தில் உன்னோட எண்ணங்களை என்மேல திணிக்காதேன்னு." நான் சப்தமில்லாமல் அதே சமயம் கோபமாய்க் கேட்டேன்.

"நான் என்ன அவுசாரியா உங்க பொண்டாட்டிதானே, கண்டதையும் காண்பிச்சு கேக்கணும்ங்ற அவசியம் எனக்கு கிடையாது தெரிஞ்சிக்கோங்க." அவளும் கோபமாய்ச் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள. நான்,

"சரி சொல்லித்தொலை என்ன விஷயம்." கொஞ்ச நேரம் அவளிடம் இருந்து பதிலெதுவும் வரவில்லை. பின்னர் திரும்பிப்பார்த்தவள்,

"நம்ம மணீஷைப்பத்தித்தான். எனக்கு அவ பண்றது சுத்தமாப் பிடிக்கலை."

இதை நான் எதிர்பார்த்தேன்தான். அவள் என்னைப்பற்றியோ என் குடும்பத்தைப்பற்றியோ சொல்ல அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உண்டாக்க மாட்டாள். ஆனால் மணீஷாவைப்பற்றி குறைசொல்ல மட்டுமே இப்படிச் செய்வாள். அப்பொழுது இவளுக்கு டெலிவரி டைம், அதுவரைக்கும் நார்மல் டெலிவரின்னு சொல்லிக்கிட்டிருந்த டாக்டர்ஸ் அந்த டைம் பார்த்து குழந்தையோட தலை கொஞ்சம் பெரிசாயிருக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. கடைசியில் அம்மா பொண்ணு இரண்டுபேரும் டெலிவரி முடிஞ்சு நல்லபடியாயிருக்காங்கன்னு சொன்னவுடன்தான் எனக்கு உயிரேவந்தது.

மணீஷா என்னைப்போலவே இடதுகாலில் ஆறு விரல்களுடன் பிறந்திருந்தாள். குட்டிக்குட்டியான கைகள், பஞ்சு போன்ற உடம்பு, பிறந்த கொஞ்சம் நாட்களுக்கு நான் அவளை தூக்கவேயில்லை. எனக்குப் பயம் கீழேப் போட்டுவிடுவேனோ என்று. அதற்குப்பிறகு சில நாட்களில் சரியாகிவிட்டது. அதிலிருந்து இன்றுவரை பெரும்பாலும் அவள் என்னிடம் தான் இருப்பாள். இன்னும் சொல்லப்போனால் அப்படியே அவள் என்னைப்போலவே வளர்ந்துவந்தாள். அதனால் மணீஷாவைப்பற்றி குற்றம் சொன்னாள் எனக்கு பிடிக்காது என்றுதான் அம்மு இத்தனையும் செய்வது.

மணீஷா டெல்லியில் பெரிய வீட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த வயதிலேயே மணீஷா மூன்று மொழிகளில் அழகாய்ப் பேசுவாள். தமிழும் இந்தியும் நாங்கள் டெல்லியில் இருப்பதால் எங்கள் பேச்சுவழக்கில் வந்தது, பள்ளியில் படிப்பதால் ஆங்கிலமும். என் டெல்லிவாழ் நண்பர்கள் பெரும்பாலோனோர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆதலால் அவளுக்கு சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் ப்ரெஞ்சும் சொல்லிக்கொடுத்து வந்தார்கள். மற்ற குழந்தைகளைப் போலில்லாமல், ஓவியம் வரைவது, என்னுடன் செஸ் விளையாடுவது என அவள் படிப்பைத்தவிர மற்றவிஷயங்களில் நன்றாகத்தான் ஈடுபாட்டோடு இருந்தாள். ஆனால் அம்மு எதைச்சொல்லவருகிறாள் என்று எனக்கு புரியவில்லை.

"அம்மு எதைச்சொல்ற, இன்னிக்கு மணீஷாவை நீதான் அப்படி கோபமாயிருக்கும் படி இருக்கச் சொன்னங்கிறத என்கிட்ட சொன்னாலே அதைச் சொல்றியா? அவ சின்ன குழந்தைம்மா இதிலென்ன தப்பிருக்கு சொல்லு?"

"இங்கப்பாருங்க உங்களுக்கு புரியலை, அவளுக்கு இந்த வயசில இருக்கக்கூடாத தௌ¤வு இருக்கு. யார்க்கிட்ட எப்படி பேசினா விஷயம் ஆகும்னு தெரிஞ்சிருக்கா. இன்னிக்கு நடந்தத மட்டும் வைச்சு சொல்லலை, ஆனாலும் பாருங்க இன்னிக்கு நான் உங்கமேல கோபமாயிருந்ததால நீங்க வர்றவரைக்கும் அவளும் உங்க மேல கோபமாயிருக்குற மாதிரி இருந்தா, பின்னாடி நீங்க வந்ததும் உங்களுக்கு ஏத்தமாதிரி பேசுறா.

இந்த டெல்லி சூழ்நிலை எனக்குச் சரியாப்படலைங்க, இந்த வயசுல நான் செய்யத்தயங்குற பல விஷயங்களை ரொம்ப சாதாரணமா செய்றா. எல்லாம் நீங்க கொடுக்குற இடம். நாலு அடிவைச்சா சொல்பேச்சு கேட்டுறுவா. நீங்கத்தான் சிங்கத்துக்கு பிறந்ததால மட்டும் சிங்கக்குட்டி சிங்கமாகிவிடுறதில்லை, சிங்கம் தன் குட்டியை நக்கி நக்கித்தான் சிங்கமாக்குதுன்னு விளங்காத தத்துவம் எல்லாம் சொல்லி அவளை அடிக்க விடமாட்டேங்குறீங்க.

இன்னிக்கு பாருங்க அவங்க ஸ்கூல்ல இவ பிறந்தநாளுக்கு ஒரு கெட்டுகெதர் வைச்சிருந்தாங்க. அங்க வந்த இவ ப்ரண்ட்ஸ்ல யார் இவளுக்கு கிப்ட் கொடுத்தாங்களோ அவங்க கிட்ட மட்டும்தான் போய்ப்பேசுறா. இதுல ஒரு பையன் கிட்ட நேர்லையே கேட்டாகுது. நீ கிப்ட் வாங்கிட்டு வரலையான்னு. எனக்கென்னமோ இது சரியாப்படலை. அப்பிடியே உங்க சாமர்த்தியம், இதை நான் பார்த்ததும் ஒன்னுமே நடக்காதது போல அந்தப் பையனுக்கும் கொண்டு போயிருந்த சாக்லேட்டை கொடுக்குறா.

எனக்கென்னமோ நாம அவளை தப்பா கைட் பண்றமோன்னு தோணுது. எதுக்கெடுத்தாலும் ஒரே பிடிவாதம். தான் சொல்றததான் எல்லோரும் கேட்கணும்னு. அன்னிக்குத்தான் நீங்க பார்த்தீங்களே உங்க பிரண்ட்ஸ்ங்களோட நாம ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுக்கு சாப்பிடப்போயிருந்தப்ப நடந்தத. இவளாலத்தானே நாமெல்லாம் அன்னிக்கு பனியில உக்கார்ந்து சாப்பிட்டோம். அன்னிக்கே உங்கக்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன் ஆனால் விட்டுட்டேன். இன்னிக்கு இவ ஸ்கூல்ல பண்ணது ரொம்ப ஜாஸ்தி.

டெல்லி மாதிரி எஜூகேஷன் கிடைக்காதுதான் ஒத்துக்குறேன். ஆனா இந்த வயசிலேயே இவளை நாம மாத்திட்டாத்தான் உண்டு. இல்லைன்னா பெரிய பிரச்சனையாயிரும் சொல்லிட்டேன்."

மூச்சுவிடாமல் பேசிவிட்டு நிறுத்தியவள், என்னையே பார்த்தாள். எனக்கும் இது ஒருவாறு தெரிந்துதான் இருந்தது. அப்படியே மணீஷா நார்த் இண்டியன் குழந்தைகளைப்போல் வளர்ந்திருந்தாள். என்னையே சிலநேரம் கோபப்படுத்திவிடும் அளவிற்கு மணீஷாவின் பிடிவாதம் வளர்ந்திருந்தது. இதைப்பற்றி நானும் சில மாதங்களாகவே யோசித்து வந்திருந்தேன். அதை இன்று அம்மு சொல்லவும்.

"சரி இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற?" நான் கேட்க. அவள்,

"நாம டிரான்ஸ்பர் வாங்கிட்டு தமிழ்நாடு போய்டலாம், அவளோட பேஸ் நல்லபடியா வந்ததும் வேண்டுமானால் திரும்பும் டெல்லியோ இல்லை நார்த் இண்டியாவில் வேற இடமோ வந்திடலாம். நம்ம ஊரு வழக்கப்படி வளர்ந்தா கொஞ்ச நாளில் சரியாய்டுவா. அவளுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை இதுதான். ஆனா கொஞ்சம் சீரியஸான பிரச்சனை. மற்றபடிக்கு நம்ம பொண்ணுக்கென்ன என்னைமாதிரி முட்டாளா? உங்களமாதிரியே அறிவுக்கொழுந்து. அதெல்லாம் சரியா பிக்கப் பண்ணிக்குவா..." அம்மு எனக்கு ஐஸ்போட ஆரம்பிக்க அவள் பேச்சை இடைமறித்தவனாய்.

"இங்கப்பாரு இதைப்பத்தி நானும் கொஞ்ச நாளாவோ யோசிச்சிட்டுத்தான் வர்றேன். ஆனா நாம மெட்ராஸ் போனாலும் நான் அடையார் பக்கத்தில் வீடு பாக்கமாட்டேன் நல்லா ஞாபகம் வைச்சிக்கோ. இன்னும் சொல்லப்போனால் அடையாறுக்கு ஆப்போஸிட்டாத்தான் எங்கையாவது வீடு எடுப்பேன். நீ இதை சாக்கா வைச்சு உங்கம்மா, அப்பாக்கிட்ட கொஞ்சலாம்னு நினைச்சேன்னா அதை இப்பவே மறந்திரு. நாம மெட்ராஸ் போனா அதற்கு ஒரே காரணம் மணீஷாவின் பழக்கவழக்கத்தை சரி பண்றதுதான்."

நான் சொல்ல வேகமாய்க் என் கையைக் கிள்ளியவள்,

"எக்கேடோ கெட்டு ஒழிங்க." சொல்லிவிட்டு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

அவள் சுலபமாய்ச் சொல்லிவிட்டாள் மெட்ராஸ்க்கு டிரான்ஸ்பர் வாங்குங்கன்னு. நான் அதன் சாதக பாதகங்களை கணக்கிடத்தொடங்கினேன். பிறகு சிறிது நேரத்திலேயே இதில் இருக்கும் பாதகங்கள் அனைத்துமே மணீஷாவின் நல்லதுக்குத்தான் என நினைத்தவனாய் தூங்கத்தொடங்கினேன்.

----

Thinnai.com

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In கல்யாணம் காதல் சிறுகதை

நிற்க அதற்குத் தக

வரவர சன்டிவியைப்பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது. அப்படியொன்றும் தொலைக்காட்சி பார்ப்பவனல்ல என்றபொழுதுதிலும். சில காலமாய் அது என் வாழ்க்கையில் உருவாக்கிய மாற்றங்களால் வந்த எரிச்சல் அது. சில சமயம் நம்முடைய தேர்வுகள் தவறாகிப்போகின்றன, என்னதான் நம்மை நாமே பெருமையாய் எண்ணிக்கொண்டாலும் நம்முடைய செயல்கள் அதை வழிமொழிவதில்லை. இப்படித்தான் போய்விட்டது கல்யாணம் செய்து கொள்ள நான் தீர்மானித்த பெண்ணைப்பற்றிய தெரிவும்.

அமேரிக்காவிலிருந்து சென்ற முறை தமிழ்நாட்டிற்கு வந்திருந்த பொழுது இந்த விடுமுறையில் திருமணம் முடித்துவிட்டுத்தான் திரும்பிச்செல்வது என ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்த எனக்கு முதலில் கிடைத்த பதிலே எரிச்சலடையச் செய்தது. ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த அக்காவிடம் ரொம்ப நேரம் ஒற்றைக்காலில் நிற்கமுடியாமல் விஷயத்தைச் சொல்ல.

“இப்ப உனக்கென்ன வயசாகுது. கொஞ்சம் பொறுத்து பண்ணிக்கிட்டா என்ன குறைஞ்சாபோயிரும். நான் இந்த சின்னவயசுல இந்தாளைக் கட்டிக்கிட்டு என்னத்தைக் கண்டேன். கொஞ்சம் விட்டிருந்தா ஐஏஎஸ் ஐபிஎஸ் படிச்சிட்டிருந்திருப்பேன். நீயும் உங்கம்மாவும் சேர்ந்து எப்புடியாவது என்னை வீட்டிலிருந்து தொரத்திட்டா போதும்னு பண்ணி வச்சிட்டீங்க. இப்பப்பாரு அதுக்குள்ளயே ஆறுமாசம் இந்த மனுஷனுக்கிட்ட சொன்னா கேட்டாத்தானே.” காரில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாவாவுக்கும் கன்னத்தில் குத்து விழுந்தது.

அவளின் பதிலில் திருப்தியாகாமல் நான் அந்தப்பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டேன். அதற்கு பிறகு வீட்டிற்கு வரும்வரையில் அவளிடம் பேசவேயில்லை. ஆனால் வீட்டிற்கு வந்ததும் நான் என்முடிவில் தீவிரமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட அக்காதான் முதல் வரனைப்பற்றி சொன்னாள்.

“இங்கப்பாருடா தம்பி, அவருக்கு நெருங்கின சொந்தத்தில ஒரு பொண்ணிருக்கு பேரு, அமலாவோ விமலாவோ என்னவோ சொன்னாங்க. இவரோட அத்தைப்பொண்ணு நிச்சயத்துக்கு வந்திருந்தா. நல்லா கலரா உனக்கேத்தமாதிரி இருப்பா, சரின்னு சொன்னா நான் உன் பாவாகிட்ட சொல்லி பேசச்சொல்றேன்.”

நான் அவளிடம் நேரடியாய் சரியென்று சொல்லாமல், புகைப்படம் எதுவுமிருந்தால் அனுப்பச்சொல்லு பாத்துட்டு சொல்றேன் சொன்னதும் கொஞ்சம் கோபப்பட்டவளாய். நான் அவளுக்காய் வாங்கிவந்திருந்த சென்ட் பாட்டில்களையும் அமேரிக்க சாக்லேட்டுக்களையும், போன்போட்டு வாங்கிவரச்சொல்லியிருந்த முத்துமாலையையும் வாங்கிக்கொண்டு கிளம்பினாள். அக்கா அந்தப்பக்கம் போயிருக்கமாட்டாள் அம்மா,

“என்னடா சொல்றா உங்கக்கா?”

“ஏதோ வாவாவோட சொந்தத்தில் ஒரு பொண்ணு இருக்காம். கட்டிக்கிறியான்னு கேட்டா?”

அவ்வளவுதான் அம்மா ஆரம்பித்துவிட்டார்கள், அக்காவைப்பற்றி ஒரே குறையாய்ச்சொல்லிவிட்டு அவர்கள் பங்கிற்கு மூன்று பெண்களின் புகைப்படங்களையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். இதில்லாம எங்க நைனா வேற அவரு பங்குக்கு இரண்டு பொண்ணு புகைப்படம். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை எனக்கு இந்தவிஷயத்தில் உதவுவாள் நான் நினைத்திருந்த அக்காவும் ஒரு பெண்ணைப்பற்றிய சிபாரிசுடன் வந்திருந்தது கவலையளித்தது. அடுத்த நாள் அக்கா சொன்ன அந்தப்பெண்ணின் புகைப்படமும் வர என்னிடம் ஆறு பெண்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள்.

நான் என் மனதிற்கு சரியென்றுபட்டதாய் புகைப்படத்தின் படியும் விவரங்களின் படியும் தேர்ந்தெடுத்த பெண்ணைப்பற்றி வீட்டில் சொல்ல களேபரம் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கு எங்கள் வீட்டில் யாருக்கிடையிலும் ஈகோ இல்லாத காரணமே. அந்தப்பெண்ணின் பெயர் தீபிகா, அதன் பிறகு அந்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றி சாதகபாதகங்ளை விவாதிக்கத் தொடங்கினார்கள்.

“தம்பி பெண்ணெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ரொம்ப சின்ன பெண்ணாயிருக்காளேடா சரிபட்டுவருமா. தர்ட் இயர் படிக்கிற பொண்ணுக்கு வயசு ரொம்ப கம்மியா இல்லடாயிருக்கும்.”

நான் பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“இங்கப்பாரு இப்பயே நல்லா முடிவு பண்ணிக்க, இன்னிக்கு கலராயிருக்கா, நல்லா மதமதன்னு இருக்கான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் பிரச்சனைன்னு வந்து நிக்கக்கூடாது. அதேமாதிரி அவசரப்படாத இன்னும் நிறைய பொண்ணுங்க பார்க்கிறதுன்னாலும் பார்க்கலாம். இந்ததடவையே கல்யாணம் பண்ணிக்கிட்டு போகணும்னு நினைக்காத.

இருபது வயசு பொண்ணுக்கு என்ன தெரிஞ்சிருக்கும்னு தெரியலை. சமைக்கத்தெரியுமா, அம்மா அப்பாவை விட்டுட்டு தனியா உன்கூட அமேரிக்காவுக்கு வருவாளான்னு தெரியலை. இவனென்னான்னா அவளைத்தான் கல்யாணம் பண்ணின்பேன்னு அடம்பிடிக்கிறான்.”

பிறகு ஒருவழியாய் எல்லோரும் சம்மதித்து ஒரு நாள் பொண்ணு பார்க்கப்போயிருந்தோம். அங்கே பாவாவுடன் வந்திருந்த மோகனா அந்தப் பெண்ணிடம் தனியாய் அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தாள். பின்னர் முடிவைச் சொல்வதாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்திருந்தோம். ஒருவழியாய் அந்தப்பெண்ணை அக்காவிற்கும் பிடித்திருந்தது. என்னைத் தனியாய் அழைத்துப்போய் மொட்டைமாடியில் வைத்து அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.

“இங்கப்பாரு உனக்கென்ன இப்ப அவசரம்னு தெரியலை, கேட்டாலும் சொல்லமாட்டேங்குற, நானோ அம்மாவோ உன்கிட்ட நிறைய காசுவாங்குறோம்னு நினைக்கிறியா அதுதான் பிரச்சனைன்னா சொல்லிடு நான் அம்மாகிட்ட பேசுறேன். ஏன்னா இவ்ளோ சீக்கிரமா பொண்ணுபார்த்து ஒரு கல்யாணம் நீ நிச்சயம் செய்துக்கத்தான் வேணுமா? நான் சொன்ன பொண்ணை விட்டுறு, அது உங்க வாவாவுக்காக சொன்னது. மனுஷன் உயிரைவாங்கி என்னை அந்தப்பொண்ணைப்பத்தி உன்கிட்ட சொல்லச் சொன்னார். வேற என்னத்தான் பிரச்சனை?”

நான் இந்தக்கேள்விக்கு எப்படி பதில் சொல்வதுன்னு தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். அக்கா தம்பி என்ற வரையறைகளை மீறி நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், என் அம்மாவைவிட என்னைப்பற்றி நிறையத்தெரிந்தவள் என் அக்காதான். ஆனாலும் அவளுடைய இந்தக்கேள்விக்கு பதிலளிக்கு முடியவில்லை.

“சரி நீ சொல்ல வேணாம், ஏதோ ஒரு பிரச்சனையா இருந்துட்டு போகுது. நீ செலக்ட் பண்ணியிருக்கிற பொண்ணு ரொம்ப சின்னதுடா. அவளுக்கு ஒன்னுமேத்தெரியலை அதுவுமில்லாம ஒரே பொண்ணுங்கிறதால குழந்தை மாதிரி வளர்த்துவைச்சிருக்காங்க அவங்க வீட்டில். நீ ஏன் இவ்வளவு சின்ன பொண்ணைத்தான் கட்டிப்பேன்னு சொல்றன்னு தெரியலை. யாருக்கிட்டையாவது மனசுவிட்டு பேசு. அப்புறம் தப்பாயிருச்சுன்னா நல்லாயிருக்காதுடா தம்பி, நான் சொல்றது புரியுமுன்னு நினைக்கிறேன்.”

“இங்கப்பாரு மோனா, நீ நெனைக்கிற மாதிரி பணம் உங்களுக்கு அனுப்புறதெல்லாம் ஒரு பிரச்சனையில்லை. அந்த மாதிரியான ஆளும் நான் கிடையாதுன்னு உனக்கு நல்லாத்தெரியும். அமேரிக்கா போனதிலேர்ந்தே என்னவோ தப்பு பண்ணிடுவனோன்னு ஒரு பயம் எனக்கு அதிகமாய்ட்டே வருது. தண்ணி, தம்மைப்போலவே இந்த விஷயத்திலும் நானேதான் என்னைக்காப்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. நான் தம்மடிச்சிருந்தாலோ, தண்ணியடிச்சிருந்தாலோ நீங்க தடுத்திருப்பீங்களான்னு தெரியாது. ஆனா நான் பண்ணமாட்டேன்னு நினைச்சிறுப்பீங்க. அதேமாதிரிதான் இதுவும்.

அது சின்னப்பொண்ணுன்னு நீ சொல்றது தெரியது. வாழ்க்கையில இந்தமாதிரி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் நம்ம சைடுக்கு கொண்டு வந்திரலாம். இதுவே கொஞ்சம் வயசான பொண்ணுன்னா அவளுக்குன்னு ஒரு சூழ்நிலையை ஏற்கனவே அவமனதில் உருவாகியிருக்கும். நாம அதுக்கு போறதும் கஷ்டம் அவளை நம்ம பக்க இழுக்குறதும் கஷ்டம். அதான் அந்த முடிவை எடுத்தேன்.”

நான் சொன்னதும் சிறிதுநேரம் யோசித்துக்கொண்டிருந்தவள்.

“நான் அப்பவே நினைச்சேன் இப்படித்தானிருக்குமுன்னு, நீ தண்ணியடிச்சிருந்தாளோ, தம்மடிச்சிருந்தாளோ நாங்க தடுத்துறுக்க மாட்டோம்தான் ஆனா நம்ம வீட்டு பிள்ளைங்களுக்கு அதெல்லாம் வராதுங்ற நம்பிக்கை கொஞ்சம் மாறியிருக்கும்.

நீ நினைக்கிற மாதிரி 20 வயசு பொண்ணுங்களுக்குன்னு ஒரு உலகம் இருக்காதுன்னு நீயே கற்பனைத்தான் பண்ணிக்கணும், அதுவும் இந்தக்காலத்தில. ஆனா அந்தப்பொண்ணைப்பார்த்தா அப்படித்தெரியலை பார்ப்போம். நம்மவீட்டில் எல்லோருக்கும் சொல்றதுதான் அந்தப்பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எந்தப்பிரச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக்கத்தான் வேணும். அதில்லாம கண்ட கண்ட அமேரிக்க கலாச்சாரம் மாதிரி இன்னிக்கு கல்யாணம் பண்ணிக்குறேன் நாளைக்கு ரத்து பண்ணிக்கிறேன்னு வந்து நிக்கக்கூடாது.

நீ பண்ண மாட்டேன்னு தெரியும் ஆனாலும் பார்த்க்கோ. அந்தப்பொண்ணை உன்வழிக்கு கொண்டுவர்றதும் பெரிய பிரச்சனையாத்தான் இருக்கும். ஓக்கே ஆல் த பெஸ்ட் பார் யுவர் மேரிட் லைப்.” சொல்லிவிட்டு கையைக்குலுக்கியவளாய் கிளம்பிவிட்டாள்.

விடுமுறை குறைவாகவே இருந்ததால் ஆடம்பரமாய் இல்லாமல் சாதாரணமாய் கல்யாணம் செய்துகொள்வதாய் முடிவாகி நடந்து முடிந்து அமேரிக்காவிற்கு வந்தாகிவிட்டது. இங்கே வந்ததும்தான் ஆரம்பித்தது பிரச்சனை.

தமிழ்நாட்டில் இருந்தவாளயிற்றே, சன்டிவியில்லாமல் இருக்கமுடியாதேன்னு டிஷ்வாங்கித்தந்திருந்தேன். அதுவரை டிவியின் பக்கமே நான் தலைவைத்துப்பார்த்ததில்லை. எங்க பக்கத்தில் அதை டைம் கில்லிங் மெஷின்னு சொல்வாங்க. ஆனால் எனக்கும் தீபிகாவிற்கும் இடையில் இது வேறுவொறு பிரச்சனையை கிளப்பிவிட்டது.

காலையில் வணக்கம் தமிழகத்தில் வரும் மகளிருக்கான தற்காப்புக்கலை நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பவள் ஒருநாள் இரவு கேட்டாளே பார்க்கணும்,

“மோகன் பக்கத்தில இருக்குற கராத்தே ஸ்கூல்ல நான் சேர்ந்துக்கவா? நானும் சும்மாத்தானேயிருக்கேன் எங்கவீட்டில் கேட்டதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சின்னவயசிலேர்ந்தே இதுஒரு ஆசை. ப்ளீஸ், ப்ளீஸ் ம்னு சொல்லுங்க.”

அக்கா சொன்னது உண்மைதான் சின்னக் குழந்தைதான் அவள். கண்ணில் படும் அனைத்தையும் நோக்கி கையைத்திருப்பும் குழந்தைபோல் இப்பொழுது கராத்தே.

“இங்கப்பாரு தீபி, சும்மாயிருக்க ஒருமாதிரியிருந்துச்சுன்னா மல்டிமீடியா கோர்ஸ் சேர்த்துவிடுறேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்காயிருக்கும். அதைவிட்டுட்டு கராத்தே அது இதுன்னா எப்புடிம்மா? அதுவுமில்லாம ஆம்பளைங்க இருக்குற இடத்தில் நான் இல்லாம தனியா போய்ட்டு வரணும் முடியுமா இதெல்லாம்.”

“அய்ய, இதப்பத்தித்தான் பயந்தீங்களாக்கும் இது மகளீருக்கான கராத்தே, அங்க பொண்ணுங்க மட்டும்தான் வருவாங்க, பொம்பள மாஸ்டர்தான் சொல்லித்தர்றதும். நம்ம தமிழ்நாட்டு மாமிங்க நிறையபேர் வர்றாங்க தெரியுமா? நான் கராத்தேவுக்கும் போறேன் மல்டிமீடியா கோர்ஸ்க்கும் போறேன் என்ன?”

நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் அந்த மாமிங்க வேலையாத்தான் இருக்குமுன்னு. இதுக்கெல்லாம் ஒரு அஸோஷியேஷன் வேற. அன்னிக்கு இவளை பார்டிக்கு கூட்டிட்டு போறப்பவே நினைச்சேன் இதெல்லாம் நடக்குமுன்னு. கொலுவைக்கிறேன், விளக்கு பூஜை நடத்துறேன் பேர்வழின்னு ஒரே அலம்பல் தான் நான் இருக்கிற இடத்தில், ஆனா கராத்தே அளவிற்கு போகுமுன்னு நினைக்கலை. எப்பொழுதுதான் நினைத்தேன் சின்னப்பேண்ணை மணம் செய்து கொள்ளக்கூடாதோன்னு.

“என்னங்க நீங்க இன்னும் பதிலே சொல்லலை.” கட்டிலில், கட்டிப்பிடித்துக் கொண்டு கல்யாணம் ஆன இரண்டாவது மாதத்தில் கேட்டால் வேறென்ன பதில் சொல்லமுடியும்.

“தீபி, போறதுன்னா பத்திரமா போய்ட்டுவா. இதப்பத்தி காலைல பேசலாம் என்ன.”

காலையில் முழித்துப்பார்த்தால் கராத்தேக்குரிய வெள்ளை பேண்டும் சட்டையும் போட்டுக்கிட்டு நின்றுகொண்டிருந்தாள். ஒரு மாதம் காலையில் ஆ, ஊ என்ற சப்தத்துடன் தான் என் காலை பொழுது விடிந்தது. பிறகு என்ன நினைத்தாளோ தெரியாது நான் கராத்தேவிற்கெல்லாம் போகலைன்னு சொல்லி நின்றுவிட்டாள். நானும் விட்டுச்சு சனியன்னு நினைச்சா அதான் இல்லை. அப்புறம் வாரத்தில் இரண்டு தடவை வர்ற அந்த தற்காப்புக்கலை நிகழ்ச்சியை ரெக்கார்ட் பண்ணி வைச்சிக்கிட்டு என்னை வைத்துக்கொண்டு பயிற்சி வேற.

காலைத்தூக்கி உதைக்கிறேன்னு, கையால் குத்துறேன்னு ஒரே அலப்பற, அதிலிருந்தே சன்டிவியைப் பார்த்தேலே எரிச்சல் வரத்தொடங்கியது. அதுவும் அந்தாளு மூஞ்சியைப்பார்த்தாலே பத்திக்கிட்டு வரும், கராத்தே, அக்கிடோ, ஜடோ அப்பிடின்னு சொல்லிக்கிட்டு இதற்குத்தேவை முறையான பயிற்சி சரியான குரு அப்படின்னு சொல்ல நேரா டிக்கெட் எடுத்துட்டு போய் அந்தாளை உதைக்கணும் போலயிருக்கும். ஒறு வேலை அக்கா சொன்னது தான் சரியோ அப்பிடின்னெல்லாம் நினைப்பேன்.

அடுத்த மாதத்தில் இந்த வினையும் நின்றுபோயிருந்தது. தீபி முழுகாமல் இருந்தாள் அதனால் இந்த கராத்தேவை தூக்கி குப்பையில் போட்டாகிவிட்டது. எங்கேயோ கணக்கில் நடந்துவிட்ட தவறால் கர்ப்பமாகியிருந்தாள், அவள் உடலளவில் ரொம்பவும் தளர்ந்துபோயிருந்தாள், இரண்டாம் மாதத்திலேயே முடியலைன்னு சொன்னதால் எங்களுக்கிடையேயான தாம்பத்தயம் இல்லாமல் போயிருந்தது. தினமும் சாயங்காலம் எங்கம்மாவிற்கு, அவங்கம்மாவிற்கு, எங்கக்காவிற்கு என போன்போட்டு பேசி அமேரிக்க தொலைதொடர்புத்துறைக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அடுத்த இரண்டு மாதங்கள் இப்படியே சென்றது.

“காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வேலையை.”

ஒரு சனிக்கிழமை தீபிகா விழித்துப்பார்க்கும் பொழுது நான் கையில் லாப்டாப் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததால் ரொம்பவும் அலுத்துக்கொண்டவளாய் பிரச்சனையைத் தொடங்கினாள்

“ஏய் நீ பேசாதடி, எழுந்திருக்கிறா பாரு எட்டுமணிக்கு. என்னமோ ஆடி ஓடி வேலைசெஞ்ச மாதிரி. ஊட்டுல உக்காந்துக்கிட்டு தின்னு தின்னுட்டு தூங்குற, இதுல காலங்காத்தாலயே ஆரம்பிச்சிட்டிங்களான்னு கேள்வி வேற. ஆளப்பாரு, போய் காபி போடுறீ.”

அதற்காக சென்றுகொண்ருந்தவள் நான் அதிகாரமாய்க் கத்தவும் என்னை நோக்கி திரும்பி வந்து,

“இங்கபாருங்க திங்கறேன் கிங்கறேன்னெல்லாம் பேசினீங்க, அவ்வளவுதான் நடக்குறதே வேற, இந்த மூஞ்சிக்கு வேலைக்கு போற பெண்டாட்டி கேக்குதாக்கும் எல்லாம் இது போதும். இன்னிக்கு காலையிலேயே எதுக்கு நீங்க அடிபோடுறீங்கன்னு எனக்கு நல்லாத்தெரியும். இந்த விளையாட்டல்லாம் வேற யார்க்கிட்டையாவது வச்சுக்கோங்க. இன்னிக்கு பூரா உங்கக்கிட்டேர்ந்து சத்தமே வரக்கூடாது ஆமாம் சொல்லிட்டேன்.” சொல்லியபடி சமையல்கட்டிற்கு சென்றாள்.

நான் வேண்டுமென்றே அவளை சீண்டிக்கொண்டிருந்தேன்.

“ஏய் இந்தாடீ, பாஸ்வேர்ட் மாத்தினியா இதுக்கு.” லேப்டாப் உள்ளே நுழைய அனுமதிக்காது குழப்பமாய் இருந்தது.

“ஆமாம் நான் தான் மாத்தினேன், நீங்க தப்பான படத்தையெல்லாம் எனக்கு முன்னாடியே பார்த்துக்கிட்டிருந்தா நல்லாயிருக்கா. அதான் மாத்தினேன்.” உள்ளேயிருந்தே சப்தம் கொடுத்தாள்.

இதுவும் என் சீண்டல்களில் ஒன்றுதான், அவளுக்கும் நன்றாய்த்தெரியும் அப்படிப்பட்ட படம் ஒன்று அந்த லேப்டாப்பில் இல்லாதது. ஆனால் வேண்டுமென்றே விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

“அதெல்லாம் சரி, என் பாஸ்வேர்ட் உனக்கெப்பிடி தெரியும்.” நான் கேட்க சமையல்கட்டிலிருந்து வெளியே வந்தவள்.

“பெரிய தங்கமலை ரகசியம், அவபேரு தானே வைச்சிருந்தீங்க. சக்காளத்தி சிறுக்கி. எனக்கு உங்க மேட்டர் எல்லாந்தெரியும். உங்கம்மாகிட்ட தான் இன்னும் சொல்லலை. நேத்திக்கு மாதிரி இன்னைக்கும் எதாவது பிரச்சனை பண்ணீங்க உங்கம்மாகிட்டையும் சொல்லிடுவேன்.” அவள் சிரித்துக்கொண்டே சொல்ல,

“இங்கப்பாரு அவளைப்பத்தி தப்பாப் பேசின அப்புறம் நடக்கிறதே வேற. நீதான் முடியாதுன்னு சொல்லிட்டல்ல, அதோட நிறுத்திக்க. என் பர்ஸனல் விஷயத்திலெல்லாம் தலையிடாத.” நான் கத்தினேன்.

“அதான் தெரியுமே உங்க குடும்பத்தைப்பத்தி, யாரு ஒரு பெண்டாட்டியோட நிறுத்தியிருக்கீங்க, அந்த ரத்தம்தானே உங்ககிட்டையும் ஓடுது.”

“ஏய் நீ ரொம்ப அதிகமாப்போற, இந்த விஷயத்தில் எங்க குடும்பத்தையெல்லாம் ஏன் இழுக்குற. அப்படியேப்பாத்தாலும் எங்கப்பாவுக்கு ஒரு பொண்டாட்டிதான்.”

இல்லாத ஒருத்தியைப் பற்றி நான் இருப்பதாய்ச் சொல்ல, நம்பாத அவளும் நம்புவதாய் நடிக்க நாடகமாடிக் கொண்டிருந்தோம். பலசமயம் எனக்குள் இந்தக்கேள்வி எழும் ஏன் இந்த நாடகமென்று ஆனால் எங்களுக்கிடையில் தாம்பத்யம் இல்லாத குறையை இதைப்போன்ற ஊடல்களால் நாங்கள் சரிசெய்து கொள்கிறோம் எனத்தோன்றியதால் நானும் அப்படியே தொடர்ந்தேன். அவள் சொல்வதும் உண்மைதான் எங்கள் பரம்பரையில் என் தந்தையைத்தவிர அனைவருக்குமே ஒன்றோ இல்லை அதற்கு மேற்ப்பட்ட சின்னவீடுகளோ செட்டப்புக்களோ இருந்தது. ஆனால் நான் என் தந்தைவழியைப் பின்பற்றி சுந்தரசோழரைப்போல் ஏகபத்தினிவிரதனாய் இருந்து வருகிறேன்.

சிறிது நேரம் என்னிடமிருந்து சத்தமே சமையல் அறையிலிருந்து வெளியில் வந்துப்பார்த்தவள். நான் விண்டோஸிற்குள் நுழைந்து விட்டது தெரிந்ததும்,

“எப்பிடி உள்ளே வந்தீங்க?”

“போடீ பாஸ்வேர்ட் மாத்துறாளாம், பாஸ்வேர்ட். கம்ப்யூட்டரைப்பத்தி ஒரு ஆறுமாசமாத்தெரியுமா உனக்கு இல்லை மிஞ்சி மிஞ்சிப்போனா ஒரு வருஷமா? எனக்கெல்லாம் சாப்பாடு போடுறதே இதுதான். போ போய் காப்பி போடுற வேலையைப்பார்.” சிரித்துக்கொண்டே நான் சொல்ல, செல்லமாய்க் கோபப்பட்டவளாய் நறுக்கென்று தலையில் கொட்டியவள்,

“என்ன எழவையோ பாத்துத்தொலைங்க, யாரு வேணாங்கிறா, என்னைத் தொடறதுன்னா குளிச்சிட்டு தொடுங்க அசிங்கம் அசிங்கம்.” சொல்லிவிட்டு நகரப்பார்த்தவளை பிடித்து நிறுத்தினேன்.

“இப்பச் சொல்லு ஓக்கேன்னு ஒரு தடவையென்ன பத்துதடவை குளிச்சிட்டு வர்றேன். ஓக்கேவா?”

திரும்பிப்பார்த்து முறைத்தவள் ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் காபி டபராவைக் கொண்டுவந்து கொடுத்தவள் சற்றுகூட நிற்காமல் சமையலறைக்குச் சென்றுவிட்டாள். நான் திரும்பத்திரும்ப அன்றைக்கு வம்பிழுத்துக்கொண்டேயிருந்ததால், சற்றே கோபமான அவள்,

“இங்கப்பாருங்க என்னால முடியலை அவ்வளவுதான் உங்களுக்கு வேணும்னா உங்க குடும்பத்தை மாதிரி இங்க ஒரு கூத்தியாலை வைச்சிக்கோங்க நானொன்னும் கேக்கலை.” சொல்லிவிட்டு அங்கிருந்த சேரில் அசதியாய் உட்கார்ந்துவிட்டாள். நானும் இதுதான் சமயமென்று, சட்டை பேண்டை போட்டுக்கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டேன்.

காலையில் பத்துமணிக்கு போனவன் இரவு எட்டுமணிக்குத்தான் திரும்பிவந்தேன். தீபிகாவை நேரில் பார்க்கும் துணிவு இல்லாததால் நேராய் படுக்கையறைக்கு போக,

“நில்லுங்க சாப்டீங்களா?”
“இல்லை சாப்பிடலை, நீ சாப்டியா இன்னிக்கு என்ன சமையல் மதியம் என்ன சாப்பிட்ட?” நான் கேட்க பதில் சொல்லாதவள் நேராய் போய் சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து தட்டை நீட்டியவளிடம்.

“நான் எங்கப்போயிருந்தேன்னு நீ கேட்கவேயில்லை?”

“அதான் தெரியுமே. நீங்க யாரோ ஒரு எழுத்தாளரோட கலந்துரையாடலுக்கு இன்னிக்கு போகப்போறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்களாக்கேட்டா குறைஞ்சு போயிருவீங்க பாருங்க அதான என்கிட்ட சொல்லாமக்கூட போய்ட்டீங்க.” லேசாய் கண்ணில் நீர்க்கட்டியது. அவளை சமாதானம் செய்ய பக்கத்தில் இழுத்தேன். அம்மான்னு அலறியபடி வயிற்றைப்பிடித்துக்கொண்டு அவள் கத்தத்தொடங்கினாள். நான் வெளிறிப்போனேன். அடுத்த பத்துநிமிடம் எனக்கு உலகமே மறந்து போயிருந்தது, அவள் கதறுவதை பார்க்க சகிக்காமல் எதுவும் செய்ய முடியா என் இயலாமையை நினைத்து அழத்தொடங்க, அவள் சிரிக்கத்தொடங்கினாள்.

“காலங்காத்தால என்னை தனியா விட்டுட்டு போனீங்கள்ல அதுக்கு பனீஷ்மெண்ட் இது.”

அவள் சொல்லிவிட்டு சிரிக்க, எனக்கு நன்றாய் இழுத்து கன்னத்தில் ஒன்றுவிடவேண்டுமென்று நினைத்தேன். இருப்பது அமேரிக்கா பொண்ணு ஏதோ கோபத்தில் 911 அழுத்திட்டான்னா ஒருநாள் உள்ள உக்காந்திருக்கணும். அதனால் பக்கத்தில் இழுத்து இறுக்க அணைத்துக்கொண்டேன்.

“தம்பி உனக்கு எல்லா விஷயத்திலேயுமே அவசரம் தான், ரொம்ப தப்புடா நீ பண்றது. குழந்தை பெத்துக்குற வயசாடா அவளுக்கு எவ்வளவோ சொல்லியும் கேட்காம இவளத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இந்த சின்னவயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பிரி பிளான்கூட இல்லாம இப்ப குழந்தைவேற. பேசாம வேலையை மாத்திக்கிட்டு தமிழ்நாடு பக்கம் வந்துசேறு. இவளையும் சொல்லணும் இவனுக்குத்தான் தெரியலைன்னா உனக்குமா. ஏதோ என் புருஷன் அப்பிராணியா இருக்குறதால என்னால உன் பிரசவத்துக்கு அமேரிக்கா வரமுடிஞ்சுது இல்லைன்னா? இதோட நிறுத்திக்கோடா ஏற்கனவே இந்தியாவோட ஜனத்தொகை ஜாஸ்தியாயிருக்கு.” அக்கா இங்கேவந்தும் அட்வைஸ் மழை கொட்ட. நான்,

“குழந்தை அமேரிக்காவில் பிறந்ததால அமேரிக்க சிட்டிஸன். அதனால இன்னொன்னு இந்தியா போய் இந்தியாவுக்காக பெத்துக்கலாம்.” சொல்ல மோனாவும் தீபிகாவும் என்னைத் துரத்தினார்கள்.

Read More

Share Tweet Pin It +1

17 Comments

In கவிதைகள் ரமேஷ் - பிரேம்

பேரழகிகளின் தேசம்

இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கவிதையை எழுதியது ரமேஷ் பிரேம் தான் நானில்லை நானில்லை. இது பேரழகிகளின் தேசம் என்ற ரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை. புத்தக வெளியீடு மருதா.

டைப்பி இங்கே போட்டது மட்டும் தான் நான்.

பேரழகிகளின் தேசம்

பாயிரம்

வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவரில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் கறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனயால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியாலான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.

வேறு

என் தியானம் நிலைகொண்ட மையப்புள்ளியென சமைந்த
உனது தொடைகள் சந்திக்கும் மாடத்து அகலின்
திரிமுனையில் சுடர் பொருத்த எனது நாவின்
தணல்கொண்டு வருகிறேன்

இதுவுமது

சுருள் கேசக் கோதுகளை நீக்கிவிட்டு
முற்றிய பலாச்சுலை உதடுகளை மெல்லப் பிளந்து
வாய்கொண்டு தின்று எழும் போதையின் நீரோட்டத்தில்
மிதந்து செல்லும் ஆளற்றப் படகெனவே என் மனம்

பூமியிலோடும் எல்லா நதிகளும் சந்திக்கும்
ஒரு புள்ளியைப் போல உனது உடம்பிலோடும்
எல்லா நரம்புகளையும் சேர்த்திழுத்து
முனைகளை முடிச்சிட்டு அறைந்த ஆணி ஒன்று
உனது மதனபீடத்தில்
அந்த ஆணியை எனது முன்பற்களால் மெல்லக்
கவ்வி இழுக்கும்போது
உனது உயிரின் இறுதித் துளி உன்னைவிட்டுச் சிந்துகிறது
ஒரு துளி எல்லையற்ற வெளியில்
வளர்ந்து வளர்ந்து பெரும் நீர்க் கோளகையாய்த் திரண்டு
பூமியை மோத இறங்கிக்கொண்டிருக்கிறது

வேறு

கொங்கைகளனைத்தும் குழந்தைகளுக்கே என்று
வேதகாலத்தில் நான் ஒருமுறை சொன்னேன்

இதுவுமது

ஓங்கி வளர்ந்த இரண்டு முலைகளுக்கு நடுவே
ஓடும் வியர்வைப் பாட்டையில் மிதக்கிறது
ஆளற்ற படகு - அதிலே
சிட்டுக்குருவிகள் வந்தடையும் உனது
யோனியின் வாடையை ஞாபகம்கொண்டு துய்க்கும்
எனது மனம் படுத்துக்கிடக்கிறது

இந்தத் தேசம் கொங்கைகளல் ஆந்து
கொங்கைகளைத் தின்று உயிர்வாழச் சபிக்கப்பட்டவன் நான்
கொங்களைக் கடைந்து பொறியெழுப்பி
கூந்தலைக் கொளுத்தித் தீ வளர்த்து
எனது இரவு உள்ளங்கை அளவே வெளிச்சம்கொண்டு கழிகிறது

வேறு

யோனி புணர்வதற்கல்ல
பிறப்பதற்கு - என்று வேதநூலில் நான்
சொல்லியிருந்த வாக்கியத்தை
காலத்தில் என்றோ யாரோ உருவியெடுத்து
வேள்வித் தீயிலிட்டுவிட்டார்கள்

தீயணைந்த கரியிலிருந்துப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
வெண்சாம்பலிலிருந்த்ப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்
நிறைந்த இந்தத் தேசம்
மனிதகாலத்திற்கு முன்பு நீருக்கடியிலிருந்து
அந்த நீர்நிலையைத் தாங்கும் மண் கிண்ணமாக
இந்த்ப் பூமி இருந்தது
அதை மெய்ப்பிக்கிறேன் கேள்.

இதுவுமது

யோனிச் சுரப்பை வாய்க்கொண்டுப் பருக
ஒரு மிடறு நீர்
எனது வாய்க்குள் அலையடிக்கும் கடல்
அதன் உப்புக் கரையோரத்தில் எனது படகு தனித்திருக்கிறது
நீரலைகளென அசையும் அவளது
தொடைகளுக்கிடையே திரளும் சுழலில்
எனது ஒற்றைத் துடுப்பு சிக்கிச்சுழன்று
அடிமண்ணில் புதைகிறது செங்குத்தாய்

கிளையோடு பொருத்தி அம்பு தைத்தப் பிறவையென
றெக்கைத் துடிக்கிறது யோனி
வெட்டவெளி தேசமெங்கிலும் இந்த
ஒற்றைப் பறவையின் ஓலத்தைக் கொண்டு வீசுகிறது காற்று
மனிதகாலத்துக்கு முந்தி நீருக்கடியில் இருந்த மணல்வெளி
கிளர்ந்து புகைகிறது
கூந்தலால் போர்த்திய கருணைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறேன்.

வேறு

நிலவைப் போன்ற பிருஷ்டங்களைக் கொண்ட அவர்கள்
சாயும்கால ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக
தொடுவானத்திலிருந்து
மந்தையைப் போலப் புலப்படத் தொடங்கினர்
தண்டவடம் கீழிறங்கி முடியும் சறுக்கலின்
வெயில்படாத பால் நிறச் சருமத்தில்
என் பெயரைப் பச்சைக் குத்தியிருந்த ஒருத்தியைக் கண்டேன்
என்னையறியாமலேயே என் குலதெய்வத்தின்
பெயரால் அவனை விளித்தேன்
திரும்பிப் பார்த்த அவள் கூட்டத்திலிருந்து விலகி
குறுஞ்சிரிப்போடு என்னை நோக்கி வந்தாள்
ஒற்றை முலையோடு
வந்தவளை வாறி மடியிலிருத்தி
முலையிழந்து பொருக்காடும் காயத் தடத்தைத் தொட்டுத்தடவி
வரல் சுட்டுப் பதறி
உயிர்த்துடித்து உதறி எடுத்த விரலை
எனது வாய் எச்சிலில் நனத்தேன்
உறிந்த பொருக்கினூடே உள்ளே
கணன்ற நெருப்பைக் கண்டேன்.

கொங்கை நெருப்பி எனது மடிவிட்டு எழுந்து
குறுஞ்சிரிப்போடு நடந்காள்

இதுவுமது
வியர்வை கசியும் பேரழகியின் அக்குள்கள் நக்கினேன்
அங்கே மணங்கமழும் புற்கள் முளைத்திருக்க
ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் அவற்றை மேய்ந்தேன்
என் முகத்தை அவள் அள்ளியெடுப்பது
முத்தமிடத்தானே என நெகிழ்ந்துகொடுக்க
என் குரல்வளையை ஆடெனக் கருதி கவ்விக்
குருதி குடித்தபோதுதான் தெரிந்தது
இவள் எனது ஊரைச் சேர்ந்த துஷ்டதேவதை என்பது

உதிர்ந்த கூந்தல் இழைகளைக்கொண்டு திரிந்த கயிறால்
பிணைந்த எனது படகை
தொடுவானத்திற்கு அப்பாலிருந்து இழுத்தபடி
முலைகள் குலுங்கிச் சிரிக்க ஓடிவந்தார்கள்
படகில் ஒருத்தி மல்லாந்து படுத்துக்கொண்டு
உச்சிச் சூரியனைப் புணர்ந்துகொண்டிருந்தாள்

நான் அவர்கள் முன்நின்று எனது படகைத்
தரும்படி வேண்டினேன்
அவர்களில் ஒருத்தி பதிலுக்கு
தாங்கள் எனக்கு வழங்கிய போகத்தையெல்லாம்
திரும்பிக் கேட்டாள்
எல்லோரும் சிரித்தார்கள்
பாலைவெளி ஆதி ஞாபகம்கொண்டு அலை நடித்தது

படகில் சூரியனைப் புணர்ந்தபடி ஒருத்தி
நெருப்பாக்கிக் கொண்டிருந்தாள்
படகு பற்றிப் புகையத் தொடங்கியது
பேரழகிகள் எல்லோரும் குலவையிட்டார்கள்

வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்
திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவற்றில்
எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட
ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்
பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்
பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்
நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்
வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்
பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று
வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்
உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்
உடல் வாசனையால் கவரப்பட்டு
எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு
வெட்டவெளியான இத்தேசத்தின் ஒரே உயிரியான
பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


----------------------------

இதற்கு முன்னால் செய்த சில ரமேஷ் - பிரேம் காப்பிகள்.

தாமதமாக வந்துசேரும் அறிவு
கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் Science ஜல்லிஸ் சுய சொறிதல்

வாசகர் பரிந்துரை அரசியல், blogger wordpress அரசியல், கன்னடம் படிக்கலாம் வாங்க!

வாசகர் பரிந்துரை சம்மந்தப்பட்டு நிறைய மடல்கள் வந்த வண்ணம் இருந்தன. சொல்லப்போனால் அது எப்படி 20/20 வரைக்கும் போனதோ அப்படியே 0/40 கொண்டு வந்துவிட்டு பின்னர் ஆட்டத்தை முடிக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். போய்த் தொலையுது என்று விட்டேன், நண்பர்கள் அதை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்றி நண்பர்களே 0 ற்கு கொண்டு வந்து விட்டால் இன்னும் சந்தோஷம்.

வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட தொடக்கத்தில் இருந்த அதற்கான importance சிறிது காலத்திற்கு முன்பு இல்லை. எல்லோரும் சூடான இடுகைகளில் கால் கழுவிக் கொண்டிருக்கையில், தமிழ்மணம் மீண்டும் முகப்பிறகு 'வாசகர் பரிந்துரை'யை கொண்டு வந்து இங்கையும் கொஞ்சம் கழுவிக்கோங்க என்று விட்டிருக்கிறது.

நண்பர் ஒருவர் நிறைய '-' வருவதைப் பற்றி வருத்தப்படுவதாக, நண்பரின் நண்பர் என்னிடம் சொன்னார். ஒரு முறை எனக்கும் இதே பிரச்சனை வந்த பொழுது தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா? என்று எழுதி அவர்களும் கவனித்து, பதிவர் பட்டை 'செப்புப்பட்டயம்' திற்கு 'நட்சத்திரக் குத்து' இல்லாமல் வந்து கொண்டிருந்தது. நான் mohandoss.comற்கு மாறும் வரை. இப்பொழுதைய செப்புப்பட்டயத்தில் '+' '-'ற்கான ஆப்ஷன் வந்தாலும் இரண்டுமே 99% செய்ய முடியாது. அதனால் விட்டுவைத்திருக்கிறேன். (அந்த 1% வேலையை யாரும் நண்பர்கள் செய்தால் தமிழ்மணத்திடம் மீண்டும் முறையிட வேண்டியது தான்.)

மேற்சொன்ன நண்பரின் பதிவுகளைப் படிப்பவன் என்ற முறையில் 'உள்ளடி அரசியல்' காரணங்களுக்காக அந்த '-' போடும் பழக்கம் இருப்பது புரிந்தது. நண்பர் இந்த வகையறா 'வாசகர் பரிந்துரை' பிரச்சனையை மூட்டை கட்டிவிட்டு நகரணும் என்பது என் அவா.

--------------------------------------------

WordPress, Blogger இரண்டில் bloggerஐயே அதிகம் சப்போர்ட் செய்தவன் என்ற முறை என் பதிவை, mohandoss.comல் ப்ளாக்கர் கொண்டே இணைத்தேன். பதிவு feedburner மூலம் வருவதால் கிடைக்கும் statistics அத்தனை தூரம் ப்ளாக்கரை தேர்ந்தெடுத்ததை சரியென்று மனதிற்குச் சொல்லவில்லை.

என் செப்புப்பட்டயம், பூனையாக இல்லாமல் போன சோகங்கள் பதிவுகளின் மொத்தமும் 2004லிலிருந்தே அவ்வப்பொழுது WordPressல் சேகரிக்கப்பட்டிருப்பதால் wordpress statistics அற்புதமாக இருக்கிறது. நாம் பதிவெழுதும் நாட்கள் தவிர்த்து இன்னும் சொல்லப்போனால் அதற்கு ஒரு வாரம் கழித்து எனக்கு வருகை 30 - 40 தான் இருக்கும் நாட்கணிக்கில் பார்க்கும் பொழுது. ஆனால் பதிவு எழுதுகிறோமோ இல்லையோ ஒரு நாளைக்கு 250 - 350 வருகை wordpressற்கு வருகிறது. கூகுள் தேடலிலும் wordpress பதிவே முன்னால் வருகிறது, புது domainஐ தொடங்கியவுடன் கூகுள் indexingற்காக Webmaster centralல் இணைந்து பதிவை இணைத்து எல்லாம் செய்தும் கொஞ்சம் வேலை காட்டிக் கொண்டிருந்தது என் புது domain.

இப்பொழுது பிரச்சனையில்லை 'செப்புப்பட்டயம்' என்று தேடினால் blog.mohandoss.comற்கு வருகிறது, முன்னர் google index சரிவர செட் ஆகாததால் என் wordpress பதிவிற்கோ இல்லை AnyIndianன் உடைய பக்கமான பாலகுமாரனின் செப்புப்பட்டயம் புத்தகத்திற்கோ சென்று கொண்டிருந்தது.

ஆனால் இப்பொழுது என் kundavai.wordpress.com பதிவிற்கு இருக்கும் கூகுள் ரேங்க் 4, என் blog.mohandoss.comற்கு வர எவ்வளவு நாட்கள் ஆகுமோ? SEO எல்லாம் அத்தனை தூரம் தெரியாவிட்டாலும் இந்த விஷயத்தில் wordpress, bloggerஐ விட நன்றாக இருக்கிறது என்றோ சொல்வேன்.

--------------------------------------------
என் கம்பெனியில் தேவையென்றால், பெங்களூருவில் கன்னடத்தில் பேச கஷ்டப்படுகிறீர்கள் என்றால் கம்பெனி உங்கள் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கன்னடம் கற்றுக் கொடுக்கும் என்றும் விருப்பப்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்றதும் நானும் 'yes' பட்டனைத் தட்டி சேர்ந்து கொண்டேன்.

சொல்லப்போனால் பெங்களூரில் இருப்பதற்கு நல்ல உபயோகமாக வகுப்புகள் இருப்பதால் அதை ஒரு பதிவாக தர உத்தேசம். நான் இங்கே எழுதுவதும் தனிநபர் விருப்பத்தின் பெயரில் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கே. அவர்கள் சென்ற வழியிலேயே நானும் செல்கிறேன்.

சரி இனி கன்னடம்,

நானு மோகன்தாஸ் - நான் மோகன்தாஸ்

நீவு யாரு? - நீங்க யாரு?

நிம்ம ஹெசுரு ஏனு - உங்க பெயர் என்ன?

நன்ன ஹெசுரு மோகன்தாஸ் - என் பெயர் மோகன்தாஸ்

நிம்ம கெலசா ஏனு - உங்கள் வேலை என்ன?(அல்லது) நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?

நிம்ம தந்தைய ஹெசுரு ஏனு - தந்தைய - அப்பாவுடைய
நிம்ம தாயிய ஹெசுரு ஏனு - தாயிய - அம்மாவுடைய
நிம்ம அக்கன ஹெசுரு ஏனு - அக்கன - அக்காவுடைய
நிம்ம தங்கிய ஹெசுரு ஏனு - தங்கிய - தங்கச்சியுடைய
நிம்ம அண்ணன ஹெசுரு ஏனு - அண்ணன- அண்ணனுடைய
நிம்ம தம்மான்ன ஹெசுரு ஏனு - தம்மான்ன - தம்பியுடைய
நிம்ம கண்டன ஹெசுரு ஏனு - கண்டன - கணவனுடைய
நிம்ம ஹெண்டத்தியிய ஹெசுரு ஏனு - ஹெண்டத்திய - மனைவியுடைய

இவத்து - இன்று
நாளே - நாளை
நினே - நேற்று
நாடிட்டு - முந்தா நேற்று
மொன்னே - நாளை மறுநாள்

யாரது - யார் அது?
யாவத்து - எது?

நந்து - என்னுது
ஈ பேனா நந்து!
ஈ புஸ்தகா நந்து!

இது தொடரும்...

-------------------------------------------------------

தமிழ்மணத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் படிப்பவர்கள்(அல்லது என் பதிவுகளை) எண்ணிக்கையை நான் 150லிருந்து 200க்கு மேல் உயர்த்தமாட்டேன். அவ்வளவு பேர் தான் தொடர்ச்சியாக என்ன எழுதினாலும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன். சமீபத்தில் கூகுள் ரீடரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அதில் Recommendation என்று வரும் இடத்தில் வந்த பதிவுகள் அனைத்திற்கும் ஏறக்குறைய 70 - 120 வரை கூகுள் ரீடரில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்தி கிடைத்தது. இது நபர் எத்தனை பிரபலம் என்ற விகிதத்தில் மாறியது.

அப்படிப்பார்த்தால் ஏறக்குறைய 100 நபர்கள் ரீடரில் இருந்தே பெரும்பாலும் பதிவுகளைப் படிக்கிறார்கள், பதிவின் தீவிரத்தை - நோக்கை கொண்டு பின்னூட்டம் இடவோ பின்னூட்டம் படிக்கவோ பதிவை நாடுகிறார்கள். பெரும்பாலும் பின்னூட்டங்கள் வரவே வராது என்னும் பதிவுகளை க்ளிக்கி படிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இளவஞ்சியிடம் நான் ரீடருக்கு மாறியதைச் சொன்னதும் அவர் வழமை போல் என் கொள்கையை வம்பிழுத்து, போலி கம்யூனிஸ்ட் என்று திட்டினார். கொள்கையை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று வீம்பு பிடிப்பதனால் கொள்கைக் குன்று என்ற பெயரைத் தவிர்த்து ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததால் விட்டுவிட்டேன்.

பல பதிவுகளுக்கு இப்பொழுது என்னுடைய ஒரு ஹிட் கிடைக்காதாயிருக்கும் பெரும்பாலும் பின்னூட்டம் படிக்க விரும்பமாட்டேன் என்பதால் எனக்கு ரீடர் 100% ஏதுவாயிருக்கிறது. இடையில் feedஐ குறைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். anonymous chatல் வந்த பல நண்பர்கள் ப்ளாக்கர், flickr போன்ற பல தடை செய்யப்பட்ட நாடுகளில் ரீடர் மூலமாக படிப்பதாகச் சொல்லியதாலும், நானும் ரீடருக்கு மாறியதாலும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In கவிதைகள் புகைப்படம்

ஆத்மார்த்தியின் பூனை



அமராவதியின் பூனைக்கான தேடல்
ஆத்மார்த்தியின் பூனையோடு
புனைவொன்றின் மாயயதார்த்தவாத
பக்கத்தில் முடிவுற்றது
முடிவுற்ற இடத்தில் இருந்து துவங்கிய
பெருங்கனவொன்று பெங்களூர் வீதிகளில்
கருப்பு வெள்ளை சினிமாவில் நடித்தது
என்றவாறு நகர்ந்து
தேடிவந்த ஆத்மார்த்தியின் பூனையை
மறந்து கையில் கிடைத்த
பெயரில்லாத பூனையில் சமாதானமாகிறது

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In கவிதைகள் புகைப்படம்

யாசித்தலின் குரூரம்

அவள் கரம் பிடித்து காற்றாடியதில்லை
போட்டியொன்றின் பூரணமாய் முத்தம் பரிமாறியதில்லை
உருவாக்கிக் கலைக்கும் பிம்பம் கடந்து வேறு பேசியதில்லை
ஆனாலும் நாங்கள் காதலித்தோம்
முகமூடிகள் இளகின நாளொன்றில்
காமம் சொல்லியதால் மீண்டும் காதல் யாசிக்கிறேன்
காமம் மறந்த / மறைத்த காதல்
தரமுடியாத சோகம் அவள்
கொட்டிக்கவிழ்த்து வைத்த 'ஜூஸ் டம்ளரில்'
பிரதிபலிக்கிறது
யாசித்தலின் குரூரம் இல்லாமையை
உரத்துச் சொல்ல மூக்கின் வழி
ஒழுகும் 'ஜூஸின்' துளியை
இருத்தலியத்தை ருசித்தபடி
சுவைத்துப் பார்க்கிறேன்.

------------------------------------------------

இதனுடன் தொடர்புடைய ஒரு பதிவு:

Mohandoss's new status message - பெண்கள் மேலே மையல் உண்டு நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In புகைப்படம்

மேல்கோட்டை, தென்னூரு ஏரி, பைலகுப்பே நடனத் திருவிழா - புகைப்படங்கள்

தலாய்லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள், கூர்கின் அருகில் அமைந்துள்ள, குஷால் நகர் - பைலகுப்பே - திபெத்திய மக்கள் குடியிருப்பில் நடைபெறப்போவதாகவும் புகைப்படம் எடுக்க வாறீகளா என்ற மெயில் நாங்கள் கூர்க் போய்வந்த ஒரு மாதத்திலேயே வந்தது. ஆனாலும் ஒரு விழா என்ற வகையில் போய் வருவதற்கான ஆர்வம் இயல்பாய் எழ வருகிறேன் என்று சொல்லி வைத்திருந்தேன்.

peevee, இளவஞ்சி, இலக்குவண ராசா, ஆதித்த நடராஜன், நாதன் பின்னர் இலக்குவண ராசாவின் இன்னொரு நண்பர், இளவஞ்சியின் நண்பர் ஒருவர் என எட்டு பேர் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கிளம்பினோம். அப்படியே வழியில் மேல்கோட்டைக்கும், தென்னூரு ஏரிக்கும் சென்ற வருவதாகவும் உத்தேசம் இருந்தது. ராமானுஜரை சோழர் தேசத்திலிருந்து வெளியேற்றியதும் அவர் வந்து தங்கியிருந்தது இந்த மேல்கோட்டையில் தான்.

நல்ல நண்பர்கள் குழு அமைந்தது - அருமையான பயணம் - நகைச்சுவையுடனே நகர்ந்தது மொத்த பயணமும். அப்பொழுது எடுத்த சில படங்கள்.

Landscape

Tree

Melkottai Kovil

Bylakuppe Dance Festival

Greatness of being

Expectation

Smart & Cute boy in Melkottai Koil Theru

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சர்க்கார் ராஜ் - திரைப்படம்

அதிக நாட்கள் கழித்து ஒரு இந்திப்படம் பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றியதும், சரி செய்து பார்த்திடுவோம் என்று சர்க்கார் ராஜ்ஜிற்கு முன்பதிவு செய்தேன். நல்லவேளை செய்தேன், இல்லாவிட்டால் 'கதை தெரிந்துவிட்டது', 'முதல் நாள் பார்க்கவில்லை' என்று தோன்றும் ஏதோ ஒரு காரணம் சொல்லி இந்தப் படத்தை பார்க்காமலேயே இருந்திருப்பேன். அப்படி பார்க்காமல் போன இந்திப் படங்கள் நிறைய இருக்கும்.



இதன் முந்தைய வரிசைப் படமான 'சர்க்கார்' பார்த்திருக்கவில்லை, இன்று மதியம் நண்பர்களிடம் கதை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது. அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை, God Father பார்த்திருக்கிறாயில்லையா? அதில் Marlon Brando நடித்த கதாப்பாத்திரம் தான் அமிதாப் பச்சன், Al Pacino நடித்த கதாப்பாத்திரம் தான் அபிஷேக் பச்சன் என்றார்கள். அதில் இருக்கும் நிறைய காட்சிகள் பழைய படத்திலும் இருந்தது என்றும் சொன்னார்கள். God Father பார்த்தவர்கள் யாருக்கும் அதன் காப்பியைப் பார்ப்பதில் அத்தனை விருப்பம் இருக்காது தான், Francis Ford Coppolo வின் இயக்கத்தில் மூன்று படங்களையும் பார்த்தவன்ன் என்ற முறையில் எனக்கும் ஒரு அலட்சியம் இருந்தது சர்க்கார் ராஜ் பற்றி. சரி பார்த்துவிடுவோம் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது, நாளை(இன்று) அதிகாலை வேறு பயணம் இருக்கிறது என்று பார்க்கத் துணிந்தேன்.

படம் பிரம்மாதமாக இருக்கிறது, ஏன் இதை முதலில் சொல்கிறேன் என்றால் பிற்பாடு சொல்லப்போகும் விஷயங்களை வைத்து படம் நன்றாகயில்லையோ என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதில்லையா அதனால் தான்.

என்னால் God Father I, II, III ற்கும் இந்தப் படத்திற்கும் சில ஒற்றுமைகள் சொல்லமுடியும் நிச்சயமாய், அபிஷேக் பச்சனின் முதல் மனைவி இறந்து போவது அதுவும் God Fatherல் வெடித்தது போலவே கார் குண்டு. பின்னர் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் தன் சகோதரனைக் கொன்ற விஷயம், God Father III ல், Freddoவைக் கொன்றதற்காக இன்னமும் வருத்தப்படும் Micheal Corleone போலவே பட்டது. அதைப் போல் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் "மே சம்பாலூங்கா பாபா" வும் God Father Iல் மர்லான் ப்ராண்டோவிடம் அல்பாசினோ சொல்லுவதோடு ஒப்பிட முடியும். இந்த மாதிரி படங்களுக்கேயான பிரத்யேகமான டயலாக் எனக்கு God Fatherல் புரிந்த அளவு இந்தியில் புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் என்னால் ரிலேட் செய்ய முடியும், சூழலோடு பொருத்தி வசனத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்த விஷயத்தில் எனக்கு God Father வசனங்கள் மிகவும் பிடித்தவை, நான் க்ளாசிக் என்று நினைக்கும் சில உதாரணங்கள். "Never hate your enemies. It affects your judgement", "Your enemies always get strong on what you leave behind.", "Never let anyone know what you are thinking." சொல்லப்போனால் இவை தாதா உலகத்திற்கு மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையில் கூட பொருந்தக் கூடியவை தான். சரி திரும்பவும் படத்திற்கு.

நான் இந்தியில் மதிக்கும் இன்னொரு விஷயம் ஹீரோ தவிர்த்தும் எல்லோருக்கும் முக்கியத்துவம் தருவது. படத்தில் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ரவி காலே, சாயாஜி ஷிண்டே என அவரவர்க்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தனிஷா முகர்ஜிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வருத்தம் லேசாக(ஹிஹி) மனதிற்குள் இருந்தாலுமே கூட என்னைக்கேட்டால் God Father IIIல் Coppola, தன் மகளை Mary Corleone நடிக்கவைத்ததில் எத்தனை பேருக்கு கடுப்பு இருந்ததோ அந்த அளவு கடுப்பு எனக்கு இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்ததில் எனக்கு இருந்தது, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவுடன் பேசும் பொழுது சுவரு ஒன்றுடன் பேசுவது போல் இருந்தது எனக்கு. எக்ஸ்ப்ரஷன் கிலோ என்ன விலைன்னு கேட்கிறார். அபிஷேக் பச்சனும் இன்னமும் கொஞ்சம் நிறைய செய்திருக்கலாம், அல் பாசினோ அளவிற்கு ஒட்டவில்லை, அல் பாசினோ உடன் ஒப்பிடுகிறேன் என்று யாராவது சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா, படத்தில் Sepia Effect உபயோகித்திருக்கிறார்கள், அளவு கொஞ்சம் முன்ன பின்ன மாறினாலும் படம் முழுவதும் அந்த எஃபெக்ட் இருக்கிறது. ஒளிப்பதிவும், காமெரா வைக்கும் ஆங்கிளும் ரொம்ப அழகாக இருக்கிறது. அதிகம் சில்லவுட்வும் பயன்படுத்தியிருக்கிறார்கள், இதுவும் கூட படத்திற்கு தனி அழகைத் தருகிறது. முகத்திற்கு க்ளோசப் வைக்கும் பொழுது அவர் எத்தனையை ப்ரேமிற்குள் கொண்டு வருகிறார் என்று கவனித்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. ஒளிப்பதிவு பிரம்மாதம். அமிட் ராயாமாம், பிரம்மாதம். ஆனால் ஒரு முறை ஆட்டோ ஃபோகஸ் போட்டுவிட்டு பின்னர் சூம் இன் செய்யும் பொழுது ஸ்கிரீன் கொஞ்சம் shake ஆனது போல் இருக்கிறது. உதாரணம் க்ளைமாக்ஸ் காட்சி, அதில் அமிதாப்பிற்கு அப்படித்தான் ஆகிறது. இது வேண்டுமென்றே செய்ததா தெரியவில்லை. படத்தில் அபிஷேக்கிற்கு ஆரம்பத்தில் இருந்து இந்த எஃபெக்ட் இருந்தது.

கதை நன்றாக அமைந்திருக்கிறது. உண்மையில் கடைசியில் க்ளைமாக்ஸில் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சியை நான் ஊகித்திருக்கவேயில்லை. என்னைப் புரட்டிப்போட்டது அங்கே தான். அதற்கு நிச்சயம் லஹே ரஹோ முன்னா பாய் தான் காரணம் என்று நினைக்கிறேன். அந்தப் படம் பார்த்த பாதிப்பு இந்தப்படத்தில் நிச்சயம் இருக்கும் என்றே நினைக்கிறேன். படத்தின் கதை பற்றி பேச விருப்பமில்லை, ஆட்டத்தோடு பாடல்கள் இல்லை, ஐட்டம் நம்பர்கள் இல்லை, தமிழில் இந்த அளவிற்கு நிச்சயம் துணிந்து பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம். ஹாலிவுட் போல் படத்தின் இடையில் காட்சிகளுக்கு பின்னணியாக பாடல்கள் உண்டு, ஹாலிவுட்டிலிருந்து வித்தியாசம் என்னவென்றால் கொஞ்சம் சவுண்ட் கூட இருக்கிறது அஷ்டே.

ராம் கோபால் வர்மா இன்னொரு அருமையான படம் கொடுத்திருக்கிறார். அமிதாப் பச்சன் பற்றி, 'கபி அல்விதா நா கெய்க்னா' படம் பற்றி எழுதியபொழுது எழுதியது தான் நினைவில் வருகிறது, அவருடைய Screen presence அருமையாக இருக்கிறது. மற்றபடிக்கு வேறு என்ன சொல்ல, படத்தில் ஒரு பெரிய தூண் அமிதாப் பச்சன். நிச்சயம் எல்லோரும் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் தான். இந்தி தெரியணும் என்பது ஒரு டிஸ்கிதானென்றாலும் கொஞ்சம் தெரிந்தவர்களும் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

Popular Posts