In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - நன்றிகள் பல

இது போன்று தமிழ்மணத்தின் நட்சத்திரமாய் இருக்க ஒரு அருமையான வாய்ப்பை நல்கிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)

இந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, இதுவரை ஆதரவளித்து வந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்களிடம் கூகுளின் அனலைடிக்ஸ்ஸைப்(google.com/analytics) பற்றி முன்பே சொன்னவன் ஆதலால் அதனால் கிடைக்கும் ஒரு பயனாக கீழ்வரும் ஒரு ஸ்ட்டாட்டிஸ்டிக்ஸ் விவரத்தை அளிக்கிறேன். எத்துனை பேர் இதை பயன்படுத்திவருகிறீர்கள் என்பது தெரியாது ஆனால் முன்பே சொன்னது போல் ஒரு அற்புதமான் டூல் இது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒருவாரமாக என் பதிவைப்பற்றி விவரங்களை தருகிறேன்.

அதற்கு முன் உங்களில் பலருக்கு கூகுளின் வீடியோவைப்(video.google.com) பற்றி தெரிந்திருக்கும். அதை அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளில் இருந்து உபயோகிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதை மீறியும் கூகுளின் இந்த வீடியோ சேவையை பயன்படுத்த ஒரு வழிமுறையைத் தருகிறேன். இதுவும் சொல்லப்போனால் கூகுளில் இருக்கும் ஒரு பக்(BUG) கே.

1. இதற்கு முதலில் உங்களுக்கு தேவையான கூகுளின் வீடியோ உரல் தெரிந்திருக்க வேண்டும், உதாரணமாக கீழே உள்ள உரலை எடுத்துக் கொள்ளுங்கள்:
http://video.google.com/videoplay?docid=-4319256606292930218

2. உங்களால் இந்த உரலை நேரடியாக உபயோகிக்க முடியவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ளது போல் கூகுளின் டிரான்ஸ்லேட்டர் சர்வீசை உபயோகித்து: http://www.google.com/translate?langpair=en|en&u=(url of the video)

3. அதாவது:
http://www.google.com/translate?langpair=en|en&u=http://video.google.com/videoplay?docid=-4319256606292930218

4. சந்தோஷமா இருங்க.


பாரதியின் தீவிரதாசனாய் கீழேயுள்ள கவிதை வரிகளுடன் இந்த நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.

தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?


-----------------------


Read More

Share Tweet Pin It +1

24 Comments

In கிரிக்கெட் சினிமா புத்தகங்கள்

நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்

"யாராச்சும் சரியான `சினிமா கிறுக்கு’ன்னு சொன்னால் கோபமாய்த்தான் வரும். சினிமா பார்ப்பவர்களெல்லாம் அறிவில் கொஞ்சம் மட்டமானவர்கள் என்ற வியாக்கியானத்தை உடைய கோஷ்டி ஒன்று உள்ளது. சினிமா பார்ப்பவர்களின் அறிவு எதனால் குறையுமென்று அவர்களால் விளக்க முடிவதில்லை. இன்னொரு கோஷ்டி தமிழ்ப் படங்கள் பார்ப்பவர்களெல்லாம் காட்டான்கள் போலவும் ஆங்கில அல்லது பிற மொழிப் படம் பார்ப்பவர்களே அறிவு ஜீவிகள் என்பது போலும் பேசித் திரிவார்கள். மொழி வேறு அறிவு வேறுன்னு புரியாத அவர்களின் விமர்சனம் தேவையற்றது."

தாணு அவர்கள் அவர்களுடைய நட்சத்திரப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தார்கள். இப்படி சில விஷயங்கள் சிலருக்கு ஒன்றாய் இருப்பதைப் பற்றி நான் நினைத்து வியந்திருக்கிறேன். ஆங்கிலப்படங்கள் பற்றி விமர்சனங்களை செய்தவன் என்ற முறையில் சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்கிறேன்.

சினிமா

எங்க வீடு ஒரு மிடில்கிளாஸ் வீடு என்பதால், தொலைக்காட்சிப்பெட்டி எங்கள் வீட்டிற்கு வந்தது ரொம்பநாள் கழித்துத்தான். அப்பொழுதும் சில குடும்ப பிரச்சனைகளால் படத்தின் கிளைமாக்ஸ் வரை(இல்லை அதற்கு சற்று முன் வரை) பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் பார்க்கப்படாமல் விட்டிருக்கிறேன். இதனால் நான் கிளைமாக்ஸ் மட்டும் பார்க்காத படங்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இதனாலெல்லாம் சின்னவயதில் ஒரு வெறி சினிமா பார்ப்பதென்றால்!

உங்களிடம் நீங்கள் உங்கள் அப்பா, அம்மா மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சினிமாத் தியேட்டர் சென்று பார்த்த படங்களை பட்டியலிடச் சொன்னால் முடியுமா ஆனால் என்னால் முடியும்.

காரணம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டான அப்பா அம்மா என்பதால், நாங்கள் எங்கள் ஏரியாவிற்கு, பிலக், சாந்தி படம் வந்தால் மட்டும் தான் அழைத்துச் செல்லப்படுவோம். அதாவது முதன்மை தியேட்டர்களில் படம் வந்து ஓடி, பிறகு இரண்டாம் தன்மை தியேட்டர்களில் ஒடும் பொழுது அப்பொழுதும், குறிப்பாக ரஜினி படங்கள் மட்டும் தான் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறோம். இதற்கு சில மிகச்சில விதிவிலக்குகள் உண்டு, அஞ்சலி, சேரன்பாண்டியன் போல், மொத்தம் ஒரு பத்து படங்கள் தான் நாங்கள் பார்த்திருப்போம் குடும்பமாக மீதி எட்டுபடங்கள் ரஜினியினுடையதே. மற்றபடிக்கு அந்த படங்கள் சன்டிவியில் காட்டப்படும்வரை காத்திருக்கவேண்டும்.

இப்படியிருந்த எனக்கு காலேஜ் வாழ்க்கை இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது என்றாலும் காலேஜை கட் அடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் தவறானவர்கள் என்பது போல் போதிக்கப்பட்டிருந்ததால் இது ஆரம்பித்தது இரண்டாம் ஆண்டில் தான். பிறகு மூன்றாம் ஆண்டில் பிராஜக்ட் ஏற்கனவே செய்துவிட்டு அதற்காக கொடுக்கப்பட்ட கல்லூரி நேரத்தில் சினிமாத்தியேட்டரில் குடித்தனம் நடத்தியிருக்கிறேன்.

அதன் பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்த நாட்களில் ஆரம்பித்தது சினிமாவின் மீதான பைத்தியம் என்றால் அது கொஞ்சமும் மிகையல்ல, நான் பார்த்த படங்கள் கொஞ்சம் அதிசயமாகவே இருக்கும், சன், ராஜ், ஜெயா,கே போடப்படும் எல்லா படங்களையும் பார்த்துவிடுவேன், எல்லாப்படங்களையும்.

எங்க அம்மாவும் அக்காவும் எப்பிடிடா இந்தப்படத்தையெல்லாம் பார்க்குற என்பது மாதிரியான படங்கள் அந்த லிஸ்டில் அதிகம்.(இப்படித்தா இருக்கும் எனத்தெரிந்தும் தீபாவளி முதல் நாள் பார்க்கும் விஜய் படங்கள் உள்ளிட்டு.) யார் இயக்குநர், யார் நடிகர் என்று பார்க்காமல் படம் பார்த்திருக்கிறேன். இதில் மொழிமாற்றப்பட்ட பூதப்படங்கள், சில ஆந்திரமொழி டப்படங்கள் என எல்லாம் அடக்கம். படங்களின் வரிசை தரவில்லை அவ்வளவுதான்.

ஆனால் ஆங்கிலப்படங்களின் தாக்கம் என்னிடம் அதிகமாகத்தான் இருந்தது, எச்பிஒ வும் ஸ்டார் மூவிஸ்ம் பின்னர் சன்,ராஜ், ஜெயா, கேயை அடக்கிவத்திருந்தாலும் நேற்றுவரை இரவு 10.30 க்கு கேடிவியின் படத்தை பார்த்துவருகிறேன். இதில் எனக்கு எந்த பிம்ப உடைதலும் நிச்சயம் கிடையாது.

ஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமையில் சன்டிவியில் போடப்படும் நான்கு மணிப்படத்தை பார்க்கவிட்டால் என்னமோ ஞாயிற்றுக்கிழமை வீணாய்ப்போய்விட்டதாய் நினைத்த காலம் உண்டு. இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது ஏனென்றால் இன்று நான் தனிக்காட்டு ராஜா, அதிகம் காசு, டிவிட் ப்ளேய்ர், டிவிடி, விசிடி கலெக்ஷன் என்னிடம் பெரிதாக உள்ளது அதனால் படங்கள் பார்ப்பது குறைந்தது கிடையாது.

பிரச்சனைகளின் மத்தியில் நடமாடிக்கொண்டிருப்பதால் சினிமா எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியாக நடமாட வைத்திருக்கிறது. இதில் நான் தாணுவின் கூற்றை முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன். மிடில்கிளாஸ் மக்களின் பொழுதுபோக்கில் முக்கியமானது சினிமாதான்.

கிரிக்கெட்

இரண்டாவது விஷயம் கிரிக்கெட், இந்திய இளைஞர்களின் இன்னொரு பொழுதுபோக்கு, விளையாடுவது இல்லை பார்ப்பது. வாழ்க்கையில் காலங்கார்த்தாலை அஞ்சுமணிக்கு நான் எழுந்து படித்ததா சரித்திரமேக் கிடையாது ஆனால் அலாரம் வைத்து முந்தைய நாளே, நொறுக்குத்தீனி வாங்கி வைத்திருந்து எழுந்து பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் எனச் சொல்வதற்கு காரணம். நான் ஒரு ஆஸ்திரேலிய அணியின் பைத்தியக்காரத்தனமான விசிறி. ஒரு நிகழ்ச்சி நடந்தது எங்கள் வீட்டில் அதை சொல்லவேண்டு இந்த நேரத்தில்,

நான் ஒரு மாலை நேரம் விளையாடிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்திருந்தேன் அக்கா என் அம்மாவின் முன்நிலையில், "தம்பி உனக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரங்கள் யார்" என்று கேட்க, நான் கொஞ்சமும் தயங்காமல் "மார்க் வா, ஷைன் வார்ன்." சொல்லிட்டு மார்க் வா ஒரு நேட்சுரலி கிப்டட் எலகண்ட் ப்ளேயர், அப்புறம் ஷைன் வார்ன், இந்த நூற்றாண்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்னு ஆரம்பிக்க, அக்காவும் அம்மாவும் சிரித்தபடியே, அன்று மார்க்கும் வார்னேவும் ஒரு கிரிக்கெட் ஊழலில் மாட்டியிருந்ததை சொல்லி சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

எனக்கு ஆஸ்திரேலிய அணியை பிடித்திருந்ததற்கு காரணம் அவ்வளவு நிச்சயமாகத் தெரியவில்லயென்றாலும் ஒரு க்ளூ கிடைத்திருக்கிறது. ஆனால் அது வேண்டாம் இங்கே. சினிமாவின் மீதான மோகம் இன்று வரை தொடர்வதைப்போன்று கிரிக்கெட்டின் மீதான மோகம் இன்று இல்லை.முன்பெல்லாம் சினிமா போலத்தான் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே விளையாடும் ஆட்டத்தைக் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தை நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்களும் மிகச்சிலவே.

இதற்கு ஒரு முக்கிய காரணம். பல நாட்களில் வீட்டிலோ இல்லை நண்பர்களிடமோ என்னால் வாக்குவாதத்தில் இறங்க முடிந்திருப்பதில்லை, அந்த மாட்ச் பார்க்கவேண்டுமென்று. மற்றபடிக்கு விவரங்கள் இன்று வரை நுனிவிரலில் தான் (ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டும். Thanks to baggygreen.com indeed cricinfo.com) உண்மையில் கிரிக்கெட் மீதான பித்து குறைந்தததைப்போல் சினிமா மீதான் பித்தையும் குறைத்துவிட அதிகம் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். முடிவதில்லை. முடிந்தால் ஒன்று மட்டும் நிச்சயம் நான் இப்பொழுது இருப்பதை விட நல்ல இடத்திற்கு சென்றுவிடமுடியும். ஏனென்றால் டிவியும் திரைப்படங்களும் மனிதவாழ்க்கையில் One of the Time Eating habits.

புத்தகங்கள்

ஆசிரியர்கள் வீட்டில் இருந்ததால் புத்தகங்களின் அறிமுகம் மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது நான் முதன் முதலில் படித்த புத்தகம், அது மீண்டும் ஜூனோ. முதல் பாகம் படிக்காமல் இரண்டாம் பாகம் படித்ததற்கு காரணம் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்து அதை பைண்ட் செய்து வைத்திருந்தார்கள் அதனால் தான். ஆனால் அந்தப் புத்தகம் முதலில் படிக்கும் பொழுது ஒன்றுமே புரியவில்லை, நல்ல சூப்பரான ஓவியங்கள் இருக்கும் அழகான நாய்க்குட்டி அவ்வளவுதான்.

பின்னர் அம்மாவால் அறிமுகம் செய்யப்பட்டது இருவர் ஒருவர், பாலகுமாரன் மற்றவர் எண்டமூரி வீரேந்திரநாத். எங்கவீடுகளில் சில எழுத்தாளர்களின் புத்தகங்களை அந்தக் காலத்தில் காசுகொடுத்து வாங்குவார்கள் என்றால் அது இவர்கள் இருவர் தான்.

பின்னர் தான் என் வாழ்வில் மறக்க முடியாத லைபிரரியன் ஒருவரை சந்தித்தேன். அந்த நாட்களில் எல்லாம் லைப்ரரியனாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை கூட இருந்தது :-). அவர் தான் எனக்கு வரிசையாக அறிமுகப்படுத்தினார். எப்படி, சி, சி++, ஜாவா என்று படித்தால் கொஞ்சம் நன்றாய் இருக்குமோ அதுபோல் எனக்கு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் வரிசையாக,

அவர் தான் தேர்ந்தெடுத்து தருவார் புத்தகங்களை பொன்னியின் செல்வர், சிவகாமியின் சபதம், கடல் புறா, யவனராணி இப்படி ஆரம்பத்தில் எப்படி என்னுடைய புத்தக ஆர்வத்தை வளர்க்க முடியுமோ அப்படி வளர்த்தாவர் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் சோதனை முயற்ச்சியாக சில நாவல்களை தருவார் பின்னர் நாங்கள் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்போம். அப்படி சோதனை நாவலாக தந்தது அலை ஓசை. அதை அவர் என்னிடம் தந்த பொழுது நான் பள்ளியில் தான் படித்துக்கொண்டிருந்தேன் அதாவது பன்னிரண்டாம் வகுப்புக்கு கீழ் ஏதோ ஒன்று. அதிகமாய் புரிந்திருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான் ஆனால் அந்த அனுபவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

இப்படி எனக்கு எல்லா நேரத்திலேயும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்கள். பின்னர் தான் தமிழ் இலக்கியங்களுக்கு வழிகாட்டினார் அந்த லைப்ரரியன். அது ஒரு சுகமான அனுபவம் அதைப்பற்றி அப்புறம்.

ஆனால் இத்தனையிலும் நான் ஆங்கில நாவல்கள் படித்ததுகிடையாது. லைப்ரரியன் வற்புறுத்திய பொழுதும் வேண்டாமென்று மறுத்திருக்கிறேன். காரணம் ஒரு இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ். எனக்கு கொஞ்சமாவது புரிந்து படிக்க வேண்டும். மேலோட்டமாக படிக்க பிடிக்காது. அதனால் கொஞ்சம் வற்புறுத்தி லைப்ரரியில் வைக்கப்பட்டிருக்காத சில ஆங்கில நாவல்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் ஒரு வழமையான தொடக்கம், இதை நானும் மற்றவர்களுக்கு வழிமொழிவேன் நீங்கள் ஆங்கில நாவல்களோ இல்லை கதைகளோ படிக்கும் வழக்கத்தை ஆரம்பிக்க விரும்புகிறீர்களா? சிட்னி ஷெல்டனில் இருந்து ஆரம்பியுங்கள். இது என்வரை நன்றாக உதவியது. பதின்ம வயது ஆட்களுக்கு ஏற்ற மாதிரியான் ஒரு ஆங்கில நாவல்களின் தொடக்கம் இதில் இருக்கும்.

இப்படி ஒரு சரியான ஆரம்பம் இல்லாமல் சுந்தரராமசாமியை படிக்க முடியாதோ அது போல் ஒரு நல்ல ஆரம்பத்தை எனக்கு ஆங்கிலத்தில் ஏற்படுத்திக்கொடுத்தது சிட்னி ஷெல்டன். ஒரே ஒரு புத்தகத்தைப் பற்றி மட்டும் நான் இந்த நேரம் பேச விரும்புகிறேன். யாரவது ராகிராவின் ஒரு புத்தகம் பெயர் பட்டாம்பூச்சு என்று நினைக்கிறேன். ஒரு ஆங்கில நாவலின் மொழிப்பெயர்ப்பு நாவல் அது. நாயகன் செய்யாத குற்றத்திற்காக நாடுகடத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பித்து பிறகு மாட்டிக்கொண்டு சிறையில் இருந்து தப்பித்து என்று ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்ட நாவல் அது.

என் வாழ்க்கையில் ஒரு நாவலை எடுத்துவிட்டு தொடர்ச்சியாக படிக்கவும் முடியாமல், படிக்காமல் இருக்கவும் முடியாமல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நாவல் அது. யாரவது அந்த நாவல் படித்திருக்கிறீகளா? உங்களுக்கு எப்படி இருந்தது அந்த அனுபவம். ப்ளீஸ் சொல்லுங்களேன்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In சோழர் வரலாறு சோழர்_வரலாறு நட்சத்திரம்

சோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்

கொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்டியன் தன்னுரிமையுடன் ஆண்டுவந்தான். சேவூர்ப் போரில் பராந்தகன் தன் பகைவர்களின் யானைகளை வெட்டிவீழ்த்தி, இரத்த ஆறு ஒடச்செய்தான் என்றும் அவனது மகன் ஆதித்தன் சிறுவனாய் இருந்தும் சிங்கம், யானையுடன் போரிடுவதுபோல், வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன.

புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

இரண்டாம் ஆதித்தன்

இரண்டாம் ஆதித்தனைத் தவிர, மேலும் இருவர், வீரபாண்டியனை வெற்றிகண்டதாகக் கூறுகின்றனர். இவரில் ஒருவன், பார்த்திவேந்திர வர்மன்.

வட ஆற்காடு தென் ஆற்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் பார்த்திவேந்திரவர்மன் என்பவன் யார்? என்று தெளிவாக அறிய முடியவில்லை. இவன் பராந்தகனுக்குக் கட்டுப்பட்டிருந்த கங்க மன்னன் இரண்டாம் பிரதிவீபதியே என்று கருத்து நிலவுகிறது. இக்கருத்து பிரதிவீபதி, பார்த்திவேந்திரவர்மன் என்ற இரு பெயர்களுக்கு இடையே இருப்பதாக நம்பப்படும் ஒற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டதாகும்.

இரண்டாம் ஆதித்தன் மற்றும் பார்த்திவேந்திரவர்மன் ஆகியோரது கல்வெட்டுக்களை ஆராய்ந்த கிருஷ்ணசாஸ்திரி கீழ்கண்ட முடிவுகளுக்கு வந்துள்ளார்.

"இவ்விரு மன்னருமே, 'பாண்டியன் தலைகொண்ட' அல்லது 'வீரபாண்டிய தலை கொண்ட பரகேசரிவர்மன் என்ற விருதுகளைப் பெற்றனர். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ மன்னனுடன் போரிட்ட பாண்டிய மன்னனே இவ்வாறு குறுப்பிடப்படுகிறான். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் மிகக்குறைவே. தென்பகுதியில் மட்டுமே கிடைக்கும் இக்கல்வெட்டுகள். இவனுடைய 5-ம் ஆட்சி ஆண்டுமுதல் ஏற்பட்டன.

பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுகள் ஏராளமாகத் தொண்டை மண்டலத்தில் காணப்படுகின்றன. இவை 13-ம் ஆண்டு முதல் ஆனவை. பார்த்திவேந்திர ஆதித்த வர்மன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசனாக இருந்து, தொண்டை மண்டலத்தின் பிரதநிதியாக இருந்திருக்கக்கூடும். ஆதித்த கரிகாலனே உண்மையில் அரியணை ஏறியவனாக தோன்றுகிறது. "

பாண்டிய தலைகொண்ட பரகேசரியின் கல்வெட்டுகள் மிகக்குறைவு என்று கூற முடியாது. அதோடு அவை தெற்கே மட்டுமே, அதாவது தொண்டை மண்டலத்திற்கு வெளியே தென்பகுதியில் மட்டுமின்றி, பிற பகுதிகளிலும் கிடைக்கின்றன. பார்த்திவேந்திர வர்மனின் கல்வெட்டுக்கள் ஆதித்தனின் கல்வெட்டுகளிலிருந்து, அவை கிடக்கும் இடங்களைப்பொறுத்து மட்டுமே வேறுபடுகின்றன.

இவனது மூன்றாம் ஆண்டு கல்வெட்டில் பார்த்திவேந்திர ஆதித்த பருமர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவனது பட்டத்தரசியார் உடையார் தேவியார் வில்லவன் மாதேவியார், பெருமானடிகள் தேவியார், தன்மப் பொன்னார் ஆகிய திரைலோக்கிய தேவியார் போன்ற பட்டங்களைப் பெற்றவராவார். கரிகாலக்கண்ணன் எனப் பெயருடையவன், இரண்டாம் ஆதித்தனின் மகனாய் இருக்கலாம், இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் அப்படியொருவன் இருந்ததாய் தெரிகிறது.

எனவே இவன் சோழர் அதிகாரத்திற்கு உட்பட்ட மன்னனாக இராமல், இவனே ஒரு சோழ மன்னனாக இருத்தல் கூடும். ஆதித்தன் என்ற பெயரும் பரகேசர் என்ற விருதும் பெற்ற இம்மன்னனே, ஆதித்த கரிகால பரகேசரி என்பதைத் தெளிவாக்குகிறது. பார்த்திவேந்திர ஆதித்திய வர்மன் என்ற பட்டமும், சில சிறு மாற்றங்களுடன் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் இவனது கல்வெட்டுக்களில் காணப்படும் பட்டமும், இவன் பார்த்திவேந்திரவர்மன் என்ற பட்டத்தை ஏற்றதைக்காட்டுகின்றன.

சோழர்கள் புகழ்ச்சியான பட்டங்களை விரும்பி ஏற்றனர். மேலும் ஒவ்வொரு மன்னனும் பல பட்டங்களையும் சூடிக்கொண்டனர். இவனது கல்வெடுகள் 13ம் ஆண்டிலிருந்தே தொடங்குவதால் இவன் தந்தை சுந்த்ர சோழன் அரியணை ஏறியதும் இவன் இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிறுவனாக இருந்தபோதே வெற்றியுடன், வீரபாண்டியனைத்தாக்கியவன் என்று லெய்டன் பட்டயம் புகழ்வதால், இது உண்மை என்று தெரிகிறது இதற்குப்பின்னர், சோழ நாட்டின் வடபகுதிய ஆட்சி செய்யும் பொறுப்பை இவன் ஏற்றான். தந்தையின் வாழ்நாளிலேயே இவன் மரணமடையவே, இவனுக்கு பதிலாக பரகேசரி உத்தமசோழன் இளவரசன் ஆனான்.

இந்தக் காலத்தின் வரலாற்றைச் சொல்லுமுன் இதுவரை நாம் தெரிவித்ததின் முடிவுகளைச் சுருங்கச்சொல்லுவோம்.

இராஜகேசரி கண்டராதித்தன் கிபி 949/50 - 957
பரகேசரி அரிஞ்சயன் கிபி 956 - 957
இராஜகேசரி சுந்தரசோழன் கிபி 956 - 73
இரண்டாம் ஆதித்த பரகேசர் பார்த்திவேந்திர கரிகாலன் கிபி 956 - 969.

பரந்தூர்க் கல்வெட்டு

பார்த்திவேந்திர வர்மனின் 15ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு செங்கற்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இக்கல்வெட்டு அழிந்திருப்பதாலும், இதைக் கூர்ந்து ஆராயும் பொழுது இரு விவரங்கள் உறுதிப்படுகின்றன. இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள் ஆண்டு பதினைந்து, இதில் காணப்படும் எழுத்துக்கள் நன்கு செதுக்கப்பட்டிருந்தாலும், இவை எழுதப்பட்டுள்ள கல் பாழ்பட்டுள்ளது.

அக்கால எழுத்து வடிவங்களுடனான இக்கல்வெட்டின் உண்மையை சந்தேகிப்பதற்கான காரணம் ஒன்றும் இல்லை. 15-ம் ஆண்டு என்று ஒப்புக்கொள்வோமேயானால் இரண்டாம் ஆதித்தனே பார்த்திவேந்திர வர்மன் என்ற அடிப்படையில் நாம் மேலே கொடுத்திருக்கும் அட்டவணை பெரும் மாற்றத்திற்குள்ளாகும். உத்தமசோழன் வருவதற்கு முன்னும் 15ஆண்டுகளைக் கணக்கிட இயலாது 13 ஆண்டுகளைக் கணக்கிட்டாலே கால வரையறையை மீறுவதால், சுந்தர சோழன் தன் ஆட்சி தொடக்கத்திலேயே ஆதித்தனையும் உடன் வைத்துக் கொண்டு அவனுடன் ஆட்சிப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டான் என்ற கருத்தை ஏற்கச் செய்துள்ளது. அதே சமயம் பரந்தூர்க் கல்வெட்டு மட்டுமே, பார்த்திவேந்திரனுக்கு 13க்கு மேற்பட்ட ஆட்சி ஆண்டைத் தருகிறது. 13ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் பல இருந்தாலும் 14ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றேனும் இல்லை. 15-ம் ஆண்டுக் கல்வெட்டு இது ஒன்றே.

எனவே மேலே குறிப்பிட்ட முடிவுக்குத்தான் வர இயலும் பார்த்திவேந்திரந்தான் ஆதித்தன் என்று ஏற்காவிடில், இவ்விருவரிடையே கண்ட பல ஒற்றுமைகளை நாம் அறவே ஒதுக்கிவிட முடியாது. இவ்வொற்றுமைகள் அனைத்துமே எதிர்பாரா வகையில் காணப்படுபவை அல்ல.

ஆகையால் பரந்தூர்க் கல்வெட்டில் காணப்படும் ஆட்சி ஆண்டில் "இ" என்று இரண்டாவது எண் தவறாக பொறிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கலாம். 13-ம் ஆட்சி ஆண்டிற்கு மேற்பட்ட வேறு கல்வெட்டுகள் இனிக் கிடைக்கும் வரை, இக்கல்வெட்டை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

நாம் இதுவரை ஏற்ற வாதங்களுடன் மற்றொரு முடிவான வளத்தையும் காண வேண்டியுள்ளது. ஆதித்தனும் பார்த்திவேந்திரனும் ஒருவரே என்று ஏற்காவிடில், ஆதித்தனின் வீரபாண்டிய பரகேசரி கல்வெட்டுகளில் மிக அதிகமானது கிபி 969/0 உத்தம சோழ அரியணையில் அமருவதற்கு முன்பாக இந்த ஐந்தாண்டுகள் என்று நாம் கருத வேண்டும். இந்த அடிப்படையில் ஆதித்தனுடைய ஆட்சி ஏறக்குறைய கிபி 694 - 5ல் தொடங்கியிருக்க வேண்டும்.

இதுவே மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணைப்படி சுந்தர சோழனின் 8 அல்லது 9 வது ஆண்டாகும். தன் ஆட்சியின் 7-ம் ஆண்டிற்கு முன்பே பாண்டியனுடனான போரில் பெரும் வெற்றி பெற்றான் என்ற விவரமும் இப்போரில் செவ்வூர் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிறுவனான ஆதித்த கரிகாலன் பங்கேற்றான் என்று லெய்டன் கூறுவதிலிருந்து. சுந்தரசோழனின் ஆட்சித் தொடக்கத்திலேயே, ஆதித்தன் துணை அரசனாக விளங்கினான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. ஆயினும் இதை முழுக்க முழுக்க நம்ப முடியாது. ஏனெனில் துணை அரசனாக இல்லாமலேயே ஆதித்தன் இந்தப் போரில் பங்கேற்றிருக்க முடியும்.

இரண்டாம் ஆதித்தன் கொலை

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கச் சபை மேற்கொண்டதாக, இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தரசோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூட்ம் என்பது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்)" கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

நாம் முன்பே இராஜகேசரி, பரகேசரி பிரச்சனைகளைப்பற்றி பார்த்துள்ளோம். அதைப்போலவே, சுந்தர சோழனால் இரளவரசுப்பட்டம் அளிக்கப்ப்ட்ட இரண்டாம் ஆதித்தன் தன் தந்தையின் வாழ்நாளிலேயே மரணம் அடையவே, இராஜகேசர் சுந்தரசோழன் இறந்தபிறகு, அரியணையேறிய மன்னன் நியதிப்படி ஒரு பரகேசரியாகவே ஆட்சி செய்தான்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை - இறுதிப்பகுதி

சிறிது நேரத்தில் இராஜேந்திரனை அழைத்துக் கொண்டு குந்தவை சென்றுவிட. இராஜராஜரும் வந்தியத்தேவரும் மட்டும் அங்கிருந்தனர். அந்த இடத்தில் நிலவிய மௌனம் இருவருக்குமே விசித்திரமாய் இருந்தாலும், இருவருமே அதை முடிவுக்கு கொண்டுவரும் மனநிலையில் அப்பொழுது இல்லை.

பிறகு சிறிது நேரத்தில் இராஜராஜரே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

"தேவரே நீங்கள் எனக்கு ஒரு உறுதிமொழியளிக்க வேண்டும். எனக்குப் பிறகு இராஜேந்திரனே பட்டத்திற்கு வருவான் என்ற உறுதிமொழி வேண்டும்."

"அருண்மொழி என்னயிது???"

சாதாரண சந்தர்ப்பங்களில், வந்தியத்தேவர் 'மன்னரே' என்று தான் விளிக்கும் வழக்கம் இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவும், குந்தவை தேவியை மணந்ததால் வந்த உறவும் வந்தியத்தேவருக்கு அருண்மொழி என்று அழைக்கும் உரிமையை அளித்திருந்ததது இருந்தும் அதுநாள் வரை அப்படி விளித்திருக்காத அவர் அருண்மொழி என்று அன்று விளித்ததற்கு காரணம் அவரிடம் கேட்கப்பட்ட வாக்குறுதி.

இன்னும் சொல்லப்போனால் இராஜராஜர் அப்படிக் கேட்பதற்கான காரணமும் வந்தியத்தேவருக்கு நன்றாகவே விளங்கியது. இருந்தாலும் அப்படியொரு கேள்வி தன்னிடம் கேட்கப்படாது என்றே நினைத்துக்கொண்டிருந்தவரை அந்தக் கேள்வி அதிகமாய்த் தான் அசைத்தது.

"தேவரே இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் இந்த ஒன்று மனதில் அடியில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் பொழுது என்னால் மற்ற அரசியல் விவகாரங்களில் முழுமனதாக ஈடுபடமுடியாமல் செய்துவருகிறது. உங்களுக்குத் தெரியாததென்ன,

இன்னும் பாண்டியர்கள் கூட முழுமையாக நம் கட்டுப்பாட்டில் வரவில்லை, ஈழதேசத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாண்டியன் உதவி கிடைத்ததும் நிச்சயம் பிரச்சனையளிப்பான்.

கீழைசாளுக்கியத்தின் தாயாதிப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும், மேலைச்சாளுக்கியம் தொடர்ந்து பலம்பெற்றுவரும் நிலையில் என்றைக்கிருந்தாலும் அவர்களால் பிரச்சனையிருக்கிறது. இவை மட்டுமல்லாமல் என்னுடைய கனவான ஒரு கடற்படையை உருவாக்கி பலநாட்களை நோக்கி செல்லவேண்டும்.

இப்படி நாளாப்பக்கமும் பிரச்சனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் ஒருவரிடம் குறிப்பாக உங்களிடமாவது நம்பிக்கை வைக்கவேண்டுமில்லையா? பல சமயங்களில் அந்த நம்பிக்கை விட்டுப்போய் என்னை பாடாய்ப்படுத்துகிறது. உங்களுக்குத் தெரியாததல்ல, பதினாறு வருடம் நான் பட்டபாடு.

சிறுவயதில் சேவூர்ப்போர்க்களத்தில் பகைவரை சொல்லிச்சொல்லி அடித்த தமையனாரையே, சில ஆட்கள் பின்னணியில் இருந்த பலத்தால் மட்டுமே கொன்று, நியாயமாயும் தர்மப்படியும் எனக்குவரவேண்டிய பட்டத்தை உத்தமசோழனால் பறிக்கமுடியுமென்றால்..." முடிக்க முடியாமல் இராஜராஜர் இழுத்துக்கொண்டிருக்க, வந்தியத்தேவருக்கு மன்னருடைய நிலை நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.

வந்தியத்தேவர் எதையோ சொல்ல வாயெடுத்தார், ஆனால் அவரைத்தடுத்த இராஜராஜர்,

"தேவரே நான் முடித்துவிடுகிறேன், அரியணைக்கு எல்லா உரிமையும் உள்ள, தமையனாரின் மகன், கரிகாலக்கண்ணன், இராஜேந்திரனுக்கு எதிரியாய் கொண்டுவரப்படுவானோ என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. கரிகாலக்கண்ணன் அப்படியொரு ஆசைவசப்படுவானாயின் என்னால் கூட அவனை மறுத்து பேசயியலாதே, தந்தையில்லாமல் வளர்ந்தவனுடைய ஆசையை நிறைவேற்றமுடியாத சிற்றப்பனாய் இராஜேந்திரனை அரியணையில் அமர்த்தும் அளவிற்கு கல்நெஞ்சக்காரனா நான்.

நீங்கள் தான் இராஜேந்திரனை வளர்த்து வருகிறீர்கள், உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக்கூடாதுதான் என்றாலும் அப்படியொரு சமயம் வரும்பொழுது நீங்கள் என் மகனுக்கு சாதகமாக இருப்பீர்களா?"

முதன் முதலில் வந்தியத்தேவருக்கு, இராஜராஜர் இந்தக் கேள்வியை கேட்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது வருத்தம் இருந்தாலும். தற்பொழுது சிறிது சந்தோஷமாகக்கூட இருந்தார். உண்மைதான் இரண்டாம் ஆதித்தனின் மகனான, கரிகாலக்கண்ணனுக்கு இராஜேந்திரனுக்கு இருப்பதைப் போன்று அரியணையின் மீது அத்துனை உரிமையும் இருந்தது.

சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தின் பொழுதே ஆதித்த கரிகாலனும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது, முதலில் துணை அரசனாகயிருந்து பின்னர் அரசனாகவும் பதின்மூன்று ஆண்டுகள் தொண்டைமண்டலத்தை ஆட்சிசெய்தவர். இதனால் முறைப்படியோ இல்லை தருமப்படியோ கரிகாலக்கண்ணன் ஆட்சிப்பொறுப்பைக் கேட்டால் மறுக்க முடியாதுதான்.

இராஜராஜரின் அருகில் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டவர். சிறிது நேரத்தில் விலகிவிட்டு,

"மன்னரே உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு நீங்கள் இன்று கேட்ட வாக்குறுதியை நினைத்து கொஞ்சம் நகைப்பாய்க் கூட இருக்கிறது. இதே போன்றதொறு வாக்குறுதியை நான் உங்களிடம் கேட்பதற்காக எத்தனை முறை முயற்சிசெய்து பின்னர் அமைதியாகியிருக்கிறேன் தெரியுமா.

எங்கே உங்கள் தமையனாரின் மேல் பாசமில்லாதவனாக, பக்தியில்லாதவனாக சித்தரிக்கப்படுவேனோ என நினைத்து எழுந்த கேள்விகளை அப்படியே உள்ளுக்குள் கட்டிவைத்திருக்கிறேன். புரியவில்லையா?

நான் உங்களிடம் எக்காரணம் கொண்டும் இராஜேந்திரனைத் தவிர்த்த ஒருவரை அடுத்த மன்னராக அரியணையில் ஏற்ற நீங்கள் நினைக்கக்கூடாது என்று உறுதிமொழி வாங்க நினைத்திருந்தேன். நீங்களே இன்று கேட்டுவிட என்னைப்போல் மகிழ்ச்சியாய் இருப்பவன் இந்த உலகத்தின் யாருமே இருக்கமுடியாது. இதனாலெல்லாம் கரிகாலக்கண்ணனின் மேல் எனக்கு பாசம் கிடையாது என்பதில்லை. இராஜேந்திரன் ஒரு கண் என்றால் கரிகாலக்கண்ணன் மற்றொரு கண்ணைப்போன்றவன்.

வீரத்திலும் விவேகத்திலும் இராஜேந்திரனை அடித்துக்கொள்ளும் ஒருவனை இந்தப் பிறவியில் நான் இன்னும் பார்க்கவில்லை. நம்மையெல்லாம், நம் சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடப்போகிறான் இராஜேந்திரன். என் மனதை உறுத்திக் கொண்டிருந்ததெல்லாம். நியாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் என்று எதையோ ஒன்றை சொல்லி உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தின் எங்களில் கைகளை கட்டி வைத்திருந்ததைப்போல் இப்பொழுது நடந்துவிடக்கூடாதென்று தான். அப்படியொரு சூழ்நிலை வந்திருந்தால் உங்களைக் கைது செய்துவிட்டு என் மருமகனை அரியணையில் அமரச் செய்திருப்பேன்."

வந்தியத்தேவர் சொல்லிமுடித்ததும் இராஜராஜர் வந்தியத்தேவரின் முதுகெலும்புகள் உடையும் படி கட்டிப்பிடித்துக்கொள்ள,

"என்னது என் தம்பியைக் கைது செய்வதா? அதற்கு இப்படியொரு உபசரிப்பா? என்ன நடக்கிறது சோழ தேசத்தில் என்று கேட்டவாறு குந்தவை உள்ளே நுழைய, வந்தியத்தேவர் மகிழ்ச்சி சாகரத்தில் நீந்திக்கொண்டிருந்தவர், விளையாட்டாக,

"தேவி நீ ஆள்வதற்கு நாடு கேட்டாயல்லவா? போரிட்டு வேறு நாடுகளைப் பிடித்து நிறைய ஆண்டுகள் ஆகும் வேலையது. பேசாமல் இராஜராஜரை சிறைபிடித்து விட்டு, நாமிருவரும் ஆட்சிசெய்தால் என்ன என்று நினைத்தேன், அதைப்பற்றி மன்னரிடம் ஆலோசனைக் கேட்கத்தான் சந்தோஷமாய் ஆளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அதற்குள் நீயும் வந்துவிட்டாய்."

வந்தியத்தேவர் வேடிக்கையாய் சொல்ல, சோழ வரலாற்றில் பெரும் பெயர் எடுக்கப்போகும் அந்தச் சிறுவன் வந்தியத்தேவருக்கும், இராஜராஜருக்கும் இடையில் நடந்தவற்றை அறியாதவனாய், குந்தவைதேவி வந்தியத்தேவரின் மீது காட்டிய பொய்க்கோபத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்

இளங்கோவனுக்கும் கார்த்திகாயனிக்கும் பிறந்ததால் நான் இந்துவானேன், டேவிட்டிற்கும் எலிசபெத்திற்கும் பிறந்ததால் நான் கிறிஸ்துவனானேன், அன்சாரிக்கும் பேகத்திற்கும் பிறந்ததால் நான் முஸ்லீமானேன், யாருக்கும் யாருக்கும் பிறந்தால் நான் மனிதனாவேன்.

எங்கேயோ ஒருமுறை கேள்விப்பட்டு, அதன் பிறகு என்னுடைய எல்லா பேச்சுப்போட்டிகளிலும், இந்த வரிகளை நான் உணர்ச்சிப்பூர்வமாக சொல்வேன். ஆனால் பேசி ஓய்ந்து போன ஒரு நாளில் உணர்ச்சிகளை ஓரங்கட்டிவிட்டு சாதாரணமாக யோசித்த பொழுது இந்த வரிகளின் பின்னால் இருக்கும் வருத்தமும் வேதனையும் என்னை என்னவோ செய்தது.

நம்மில் பலருக்கு, ஒரு நபரை அவருடைய, ஜாதியையோ இல்லை மதத்தையோ இல்லை அவர்களுடைய செழிப்பையோ வைத்துதான் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி அந்த நபரை நம்மில் ஒருவனாக, ஒரு தனிப்பட்ட மனிதனாக அறிய முடிந்திருக்கிறதா? என்னால் முடிந்ததில்லை இன்றுவரை. இந்து, முஸ்லீம், கிறிஸ்டீன், என்பதைப்போல மனிதனுக்கான உருவகத்தையா இல்லை மனிதனையே தேடிக்கொண்டிருக்கிறோமா இன்று வரை.

நண்பனே!

ஆகாயத்தில் அளவற்ற சாதனைகளை
நிகழ்த்திக்காட்டினாய்
மகிழ்ச்சி!

நொடிப்பொழுதில் உலகத்தின் இரண்டு முனைகளை
இணைக்கும் வலிமையைப் பெற்றாய்
சந்தோஷம்!!

நாளை ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு
செயற்கைக்கோளை பறக்கவிடுவாய்
பாராட்டுக்கள்!!!

ஆனால்
இந்த மண்மண்டலம் இருக்கட்டும்
மனிதநேயம் இருக்கட்டும்.
நமக்கு முன்னே வாழ்ந்து மறைந்தவர்கள்
விட்டுச்சென்ற சுவாசங்களெல்லாம்
இந்த மண்மண்டலத்தில் இருக்கின்றன
இருக்கட்டும்.

உன்னுடைய இந்த ஆக்கங்கள்
இந்த உலகை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்.


(இந்த கவிதை வரிகள் யாருடையது என்று நினைவில் இல்லை, அதுமட்டுமல்லாமல் கவிதை வரிகளுமே, எனது நினைவில் இருந்ததை வைத்து எழுதியிருக்கிறேன். இன்னும் அருமையாக இருக்கும் உண்மை வரிகள்.)

எனக்கும் ஒவ்வொரு புதுப்புது விஷயமாக கண்டுபிடிக்கப்படும் பொழுதும் இது மனித சமூகத்தை அழித்துவிடும் வல்லமைபெற்றதா? என்று என்னை நானே இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். மனிதகுலம் இல்லாமல் போய்விட்ட ஒரு உலகத்தில் நானோ டெக்னாலஜி வந்தென்ன, குவாண்டம் கம்ப்யூட்டர் தான் வந்தென்ன பயன் உபயோகிக்க மனிதன் வேண்டாமா???

நான் இன்னமும் அமேரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்பட்டதை ஒரு தனிமனிதனின் உயிருக்கு இந்த உலகத்தில் மதிப்பில்லாமல் போய்விட்டதாகத்தான் கருதுகிறேன். அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற மனிதனுக்கு அவன் உயிரின் மீது மரியாதையில்லாமல் போனதெப்படி.

இப்படி மரியாதையில்லாமல் போனதற்கு மதங்களும் அவற்றின் நம்பிக்கைகளுமா காரணம். இன்று நீ உன் உயிரைத்துறந்தால் நாளை உனக்கான சொர்க்கம் அல்லது இப்பொழுது வாழ்ந்து வருவதை விட உயரிய வாழ்க்கை உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்று மதங்களா வழிமொழிகின்றன என்றால் நிச்சயமாக இல்லை,

பாபர் மசூதியை இடித்துத்தான்
இராமர் கோயிலைக் கட்டவேண்டுமென்று
எந்த பகவத்கீதையும் சொல்லவில்லை

தீவிரவாதம் தான் ஒரே வழி, அதன் மூலம் தான்
நம்மத்தை வாழ்விக்க முடியும் என்று
எந்த திருக்குரான் சொல்கிறது?

இல்லை வருமையில் வாடிக்கொண்டிருக்கும்
மக்களுக்கு உதவிசெய்து
உங்கள் மதத்திற்கு மாற்றுங்கள்
என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதா?

நிச்சயமாகக் கிடையாது, இவைகளெல்லாம் மதம் பிடித்த சில மதவாதிகள் செய்வது தான். இவற்றிற்கும் எந்த மதத்திற்குமே சம்மந்தம் கிடையாது. இது என்னுடைய மறுக்கமுடியாத ஒரு நம்பிக்கை.

நான் சொல்லவந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறேன். மனித நேயத்தைப்பற்றி உண்மையில் நான் இங்கே சொல்லவரவில்லைதான். அதைவிட முக்கியமான ஆனால் நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றைப் பற்றியும். அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதைப் பார்த்து வருத்தப்படுவதால் தான் இந்தப்பதிவே.

என்னைப் பொறுத்தவரை நீங்கள், சுனாமியால் வாழ்விழந்தவர்களுக்கு உதவியதையோ இல்லை இதைப்போன்ற இன்னும் நிறைய விஷயங்களி எடுத்துக்காட்டினாலும், மனிதநேயம் குறைந்துவிட்டது, உலகம் சிறியதாக சுருங்கிவிட்டாலும் மனிதனுக்குள் வந்துவிட்ட தனிமையென்பது உலகத்தை விட பெரியதாகிவிட்டது. மனிதநேயத்தை காப்பாற்ற நிறைய பேர் வரலாம், வருவார்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு மனிதநேயம் இல்லாமல் போய்விட்டதால் பாதிக்கப்பட்டது மனித இனம் மட்டுமல்ல. அவனுக்கு முன்பிருந்தே இருந்துவரும், அவனுக்கு பிறகும் இருக்கப்போவதாக நான் கருதும் விலங்கினம் கூடத்தான். இதில் நடந்து வரும் ஒரு அரசியலைத்தான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.



உங்களுக்கெல்லாம் மேலே உள்ள ஆளைத் தெரிந்திருக்கும். இவரைப்பற்றி மேலும் ஒரு சிறு அறிமுகம். ஆப்பிரிக்காவிற்கு பிறகு இவர் இருக்கும் ஒரே நாடு, இந்தியா தான், இந்தியாவிலும் குஜராத்தில் உள்ள, கிர் வனப்பிரதேசத்தில் மட்டும் காணக்கிடைக்கும்; இன்னும் சில ஆண்டுகள் தொடர்ச்சியாக தற்பொழுது நிகழ்வதைப் போன்றதொரு சூழ்நிலையில் இருந்தால், இல்லாமல் போய், வெறும் புத்தகத்தில் மட்டும் நீங்கள் பார்க்கக் கிடைக்கப்போகும் ஒருவர் தான் மேற்காணும் காட்டுராஜா, பூனை வம்சத்தின் மிகப்பெரியவர், வெறும் முன்னூறு தன்னைப்போன்றவர்களேயே இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ள துரதிஷ்ட்டசாலி. சிங்கராஜா.

உண்மை தான், வெறும் முன்னூறு சிங்கங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன், அவையும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நிலையிலும் குஜராத் அரசு செய்துவரும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். 1907ல் வெறும் 13 சிங்கங்களே மீதமிருந்த சூழ்நிலையில் ஜுனாகத்தின் நவாப்பால் முழுப்பாதுகாப்பு அளித்து காப்பாற்றப்பட்ட சிங்கங்கள் இன்று அப்படுயொருவர் கிடைப்பாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றன. 1412 கிமீ2 மற்றும் 558ல் ஸ்கொயர் மைல்ஸ் இடத்தில் இப்பொழுது இருக்கும் இந்த முன்னூறு சிங்கங்களும் வாழ்ந்து வருகின்றன.

தொற்றுநோய் ஒன்று பரவுவினால் ஒட்டுமொத்த சிங்க இனமே அழிந்துவிடும் நிலையில் இருப்பதை உணர்ந்த விலங்கின ஆராய்ச்சியாளர்கள், அதுமட்டுமில்லாமல் இவ்வளவு குறைந்த இடத்தில் இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டே சிங்கங்கள் அழிந்துவிடும் சூழ்நிலையில் இருப்பதால் அவற்றில் சிலவற்றையோ இல்லை ஒரு பகுதியையோ மத்தியப்பிரதேசத்திலுள்ள, குனோ பாரஸ்ட் ரிசர்விற்கு மாற்றிவிடச் சொல்கிறார்கள்.

இதற்காக பல கோடி மதிப்பில் சிங்கங்களை வரவேற்பதற்காக தயார்செய்யப்பட்டு குனோ பாரஸ்ட் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஒரேயொரு மாநிலமாம் குஜராத்தில் மட்டுமிருக்கும் சிங்கராஜாக்களை மற்ற மாநிலத்துக்குத் தர குஜராத் அரசாங்கம் மறுத்து வருகிறது. சமீபகாலத்தில் அதன் பல்லிற்காக சுமார் 12 சிங்கங்கள் கொல்லப்பட, இந்தப் பிரச்சனை பெரிதானது. ஆனாலும் இன்னும் குஜராத் அரசு வெட்டிப்பிடிவாதம் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கல்ல, நேற்றைக்கல்ல ஒரு புதிய வம்சாவழியை உருவாக்க வேண்டி சில சிங்கங்களை குஜராத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றச் சொல்லி, ஒரு திட்டத்தை இந்திய வனவிலங்குகள் அமைச்சகம் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்று வரை இது செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் இது சகஜம்தானே, மனிதனின் அத்தியாவசியத்தேவையான தண்ணீரையே கொடுக்க மறுக்கும் மாநிலங்கள் இருக்கும் நிலையில் தங்களின் ஏகபோக உரிமையான சிங்கங்களை குஜராத் அரசு தரமறுப்பதில் வியப்பெதுவும் இல்லைதான். இவர்களின் தலைகளில் இயற்கையிலேயே பிறக்கும் பொழுதே மூளைக்கு பதில் மண் நிரப்பப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுகிறது.

ஆனாலும் சில தொலைக்காட்சிகளின் தொடர்ச்சியான் வற்புறுத்தலினால் தேசிய வனவிலங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் எச் ராஜா, மத்தியபிரதேச மாநிலத்து வனத்துறை அமைச்சரையும், குஜராத் மாநிலத்து வனத்துறை அமைச்சரையும் அழைத்து பேசுவதாக சொல்லியிருக்கிறார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குடியரசுத்தலைவரிடம் தான் முறையிட முடியும் என்று வனத்துறை ஆர்வாலர்கள் சொல்கின்றனர். எனக்கென்னமோ இன்னும் கொஞ்சம் காலத்தில் சிங்கத்தை பார்பதென்பது இயலாதஒன்றாகிவிடும் என்ற பயம் இப்பொழுதே வந்துவிட்டது. அதனால் தான் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டி இப்படியொரு பதிவு.

இன்று சல்மான்கான் 1998ல் மான்வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கூட விலங்குகளை பாதுகாக்க விரும்பும் இந்திய அரசின் வேட்கை தெரிகிறது.

Read More

Share Tweet Pin It +1

16 Comments

In சோழர்கள் தொடர்கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - ஒரு சோழ பரம்பரைக் கதை

திருமகள் போல பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனைக்கொள காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி... என்ற ராஜராஜ சோழனின் கட்டியம் எங்கே உரத்துக் கூறப்பட, அதன் பின் சோழம் சோழம் என்ரு வீரர்க்ள் டங்கள் கேடயத்தில் வேலை இடிக்கும் பெரும் சத்தமும் அதன் பின்பே தொடர்ந்தது, வந்தியத்தேவர் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்தார். அருகில் ஒரு ஆசனத்தில் குந்தவை பிராட்டியும் அவரது மடியில் சோழ குல வாரிசு இராஜேந்திரன் உட்கார்ந்திருந்தான்.

"தேவி கேட்டாயா, சோழ ராஜ்ஜிய முழக்கத்தை. இங்கிருந்து கேட்கும் போழுதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கிறது."

பிறகு ராஜேந்திரனிடம் திரும்பி, "ராஜேந்திரா நீயும் உன் தந்தை போலவே பெரும் பேரும் புகழும் அடையவேண்டும் அதுதான் எங்களுடைய விருப்பம்."

"மாமா, பெரியவன் ஆனதும் நானும் தந்தையை போல் நாடுகளையெல்லாம் பிடிக்கிறேன். இதெல்லாம் இருக்கட்டும். அப்பாவிற்கென்று இவ்வளவு பெரிய நாடும், மக்களும் இருக்கிறார்களே. உங்களுக்கென்று சொந்தமாக நாடு கிடையாதா?" சிறுவயது பாலகனாகையால் தைரியமாக கேட்டுவிட்டான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த குந்தவைபிராட்டி,

"அப்படிக்கேள் என் செல்லமே, பெண்டாட்டி வீட்டில் உட்கார்ந்து அரசியல் செய்கிறீர்களே. உங்களுக்கெல்லாம் தனியாக வீடே கிடையாதா?" என்று கேள் சொல்லிவிட்டு சிரித்தார்கள்.

அவருடைய ஆசனத்திலிருந்து சட்டென்று எழுந்த வந்தியத்தேவர், குந்தவை அமர்ந்திருந்த இருக்கையின் முன் முழங்காலிட்டு உட்கார்ந்து, பிராட்டியின் கைகளை தன் கையில் வைத்துக் கொண்டு,

"தேவி இளவரசன் கேட்டதை விடு, சின்னப்பிள்ளை, நீ சொல், இந்த கணம் சொல், உனக்கு ஆழ்வதற்கு ஒரு நாடு வேண்டுமா? சோழ சாம்ராஜியத்தை விட பெரிய நாடு வேண்டுமா? சொல் நான் வென்று தருகிறேன். பல போர்க்களங்களை வென்று தருகிறேன், உன் தம்பிக்கு போட்டியாக வேண்டாம், வடக்கே போய்விடுவோம். மேலை சாளுக்கியத்தையும் தாண்டி, இல்லையேல் பாரதகண்டத்திலேயே வேண்டாம், கடல்கடந்து, கடாரம், சாவகத்தீவு பக்கம் போய், உனக்கான ராஜ்ஜியத்தை நான் நிறுவுகிறேன். நீ மட்டும் இந்த சோழ தேசத்தை விட்டுவருவதாக ஒரு வார்த்தை சொல், ராஜராஜனை விட்டு, ராஜேந்திரனை விட்டு, வருவதாக சொல்." கேட்டுவிட்டு குந்தவையையே பார்த்தார்.

ராஜேந்திரன் தான் கேட்டதனாலே தான் வந்தியத்தேவர் இப்படி கேட்கிறார் என்று கவலைப்படத்தொடங்கினான். அந்தச் சமயம் அங்கே வந்த இராஜராஜரிடம் குந்தவை,

"அருள்மொழி கேட்டாயா! நான் சோழதேசத்தை விட்டு வரவேண்டுமாம்." சொல்லிவிட்டு வந்தியத்தேவரை திரும்பி பார்த்தாள்.

"கேட்டுக்கொண்டுதான் இருந்தேன், அக்கா நீ என் ஒருவனை நாடு பிடிக்கும் பைத்தியமாய் அலையவிட்டதும் இல்லாமல், இப்பொழுது தேவரையும் உனக்காக நாடு பிடிக்க சொல்லி கேட்கிறாயா. விட்டால் நீ எனக்கும் தேவருக்கும் இடையில் பொறாமையை வளர்த்துவிடுவாய் போலிருக்கிறது." சொல்லிவிட்டு சிரித்தார்.

இதற்குள் வந்தியத்தேவர், குந்தவைதேவியின் கைகளை அவரிடமே கொடுத்துவிட்டு, எழுந்து நின்றார், பிறகு,

"அரசே உங்களுக்கும் எனக்குமிடையில் பொறாமையை யாராலும் வளர்த்துவிட முடியாது. நம் தேவியாலும்தான். அதுமட்டுமில்லாமல், பொறாமை ஒரு மிகக்கொடுமையான நோய், உலகத்தின் எல்லா கொடுரங்களையும் அதுதான் ஆரம்பித்து வைக்கிறது. உங்களுக்குத்தான் அர்ஜூனன் கதை கூட தெரிந்திருக்குமே!" சொல்லிவிட்டு நகர்ந்து சென்று தூணுக்கருகில் நின்றார். குந்தவைபிராட்டியின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ராஜேந்திரன் நேராக வந்தியத்தேவரிடம் வந்து.

"அது என்ன கதை மாமா?"

அர்ஜூனனைப்பற்றிய அந்தக் கதையை ராஜேந்திரனிடம் சொல்லத் தொடங்கினார்.

"இராஜேந்திரா, அர்ஜூனன், மிகவும் பொறாமை பிடித்தவன் தன்னைவிட வில்வித்தையில் சிறந்தவர் யாரும் கிடையாது, தன்னைவிட அழகில் சிறந்தவர் கிடையாது என்று, இதை அருகில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட நினைத்தார். அதே போல் ஒரு நாள், அர்ஜூனனும் கண்ணனும் பேசிக்கொண்டிருந்த பொழுது, கன்னனை பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுது அர்ஜூனன், கண்ணனிடம், இது என்ன யாரைக்கேட்டாலும் கன்னனைப்போல் கொடையில் சிறந்தவனே கிடையாது என்று சொல்கிறார்கள். நானும் தான் தானம் செய்கிறேன்.

யார் வந்து எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன். அப்படியிருக்க கன்னன் மட்டும் எப்படி கொடையில் சிறந்தவனாக இருக்க முடியும் என்று கேட்டான், கண்ணனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அர்ஜூனன் கேட்கவேயில்லை, அவனுடைய பொறாமை குணம் மாறவேயில்லை, இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர நினைத்த கண்ணன், அர்ஜூனனிடம் தான் ஒரு போட்டி வைப்பதாகவும் அப்பொழுது புரிந்து கொள்வாய் என்றும் அர்ஜூனனிடம் சொன்னார். கண்ணன் சின்னதாக ஒரு தங்க மலையை உருவாக்கினார். பிறகு அர்ஜூனனை அழைத்து, இன்று இரவுக்குள் நீ இதை தானமாக கொடுக்க வேண்டும் கொஞ்சம் கூட மிச்சம் மீதி இல்லாமல் என்று சொன்னதும் முதலில் சிரித்த அர்ஜூனன்.

மக்களையெல்லாம் அழைத்தான், பிறகு ஒரு மண்வெட்டியை எடுத்து வெட்டி வெட்டி கொடுக்கத் தொடங்கினான். நேரம் ஆகியும் கொஞ்சம் மட்டுமே குறைந்திருந்ததால், பிறகு தன் காண்டீபத்தை எடுத்து மலையை கொஞ்சம் கொஞ்சமாக அம்பெய்து வெட்டிக் கொடுக்கத் தொடங்கினான். ஆனால் அந்த மலை எவ்வளவு வெட்டியும் குறையவேயில்லை. இரவானது கண்ணன் அங்கு வந்து பார்த்தபொழுது மலை சிறிதளவே குறைந்திருந்தது.

கண்ணன் அருகில் வந்த அர்ஜூனன், கண்ணா, என்னால் இவ்வளவுதான் கொடுக்க முடிந்தது, கன்னன் இந்தப்போட்டியில் கலந்து கொள்ளாமல் எப்படி யார் கொடைவள்ளல் என்று தீர்மானிக்க முடியும் என்று கேட்டான். அதைக்கேட்டு சிரித்த கண்ணன் திரும்பிப் பார்த்தார். கன்னன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்த கன்னனிடம் கண்ணன், போட்டியென்றெல்லாம் சொல்லாமல் தங்கமலையை காட்டி, இந்த மாதிரி ஒரு தங்க மலையென்றும் தானம் கொடுக்க வேண்டுமென்றும் சொன்னார். அதைக்கேட்ட கன்னன்.

அங்கே நின்று வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயியை அழைத்து, இனிமேல் இந்த மலையை நீ வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் சிரிக்கத்தொடங்கினார். பிறகு அர்ஜூனனிடம், இப்பொழுது புரிகிறதா காண்டீபா யார் கொடைவள்ளல் என்று, நீ இந்த மலையை தங்க மலையாய் பார்த்தாய், ஒருவனிடம் கொடுக்க உனக்கு மனது வரவில்லை, தகுதி, தராதரம் பார்த்து இவருக்கு இவ்வளவு என்று பிரித்துக்கொடுத்தாய்.

நீ எப்படி கொடைவள்ளல் ஆகமுடியும், அதே சமயம் கன்னனைப்பார் அவன் அதை தங்கமலையென்று பார்க்கவில்லை, யாரிடம் கொடுக்கிறோம் என்று பார்க்கவில்லை, கொடுத்துவிட்டான் அவன்தான் கொடைவள்ளல். இதனால் நீ இனிமேலாவது பொறாமைபடுவதை நிறுத்துவிடு என்று சொன்னார். இதைக்கேட்ட அர்ஜூனனும் திருந்தினான் அதனால் இராஜேந்திரா நீயும் யாரையும் பார்த்து பொறாமைபடக்கூடாது. அது ஒரு பெரிய நோய்!" வந்தியத்தேவர் முடித்துவிட்டு திரும்பி இராஜராஜனைப்பார்த்தார்.

......(1).....


ராஜராஜர் உடனே,

“தேவரே, இது ராஜேந்திரனுக்காக சொல்லப்பட்ட கதையா, இல்லை எனக்கானதா?” கேட்டுவிட்டு நகைத்தார்.

“அரசே, இது உங்கள் இருவருக்குமான கதையல்ல, எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் பலகதைகளில் இதுவும் ஒன்று.”

சொல்லிவிட்டு இராஜராஜரைப் பார்த்து நகைத்தார் வந்தியத்தேவர். இடையில் தலையிட்ட குந்தவைதேவி,

“உங்கள் சண்டையில் எனக்காக நாடுபிடிக்கும் எண்ணத்தை மறந்துவிட வேண்டாம்.”

“அக்கன் இன்னொருமுறை இப்படி கேட்கவேண்டாம். அவர் சொன்ன அத்துனையும் உண்மையே, தேவர் நினைத்தால் மாநக்காவரத்தையோ, இல்லை கடாரத்தையோ, இலாமுரித்தேசத்தையோ உனக்காக வென்று தரமுடியும் இதில் எனக்கு சந்தேகமே கிடையாது.

சிலசமயங்களில் வாள் பயிற்சிகளின் போது, வல்லவரையரின் வாளை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பறக்கடிக்கச் செய்திருக்கிறேன். ஆனால் நாங்கள் “பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழன்” ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க, என் ஆட்சியேற்ற இரண்டாம் ஆண்டில் காந்தளூர்ச்சாலை மீது போர்புரிந்த பொழுதுதான் உண்மையை உணர்ந்தேன்.

அந்த முன்குடுமி அந்தணர்கள் போர்வீரர்கள் போல் உடையணிந்து வந்ததும் தான் தாமதம், வந்தியத்தேவரின் முகத்தில் தெரிந்த கோபமும், அவரின் வாளின் வேகமும் என்னை வியப்படையசெய்தது.

பதினாறு ஆண்டுகள், ம்ம்ம், ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க இத்தனை காலம் பொறுத்திருந்த அந்த வெறியை நான் அவர் கண்களில் பார்த்தேன். இவரது குதிரை சென்ற இடமெல்லாம் தலைகள் உருளுகின்றன. அப்பப்பா என்ன வேகம் அப்பொழுதுதான் தெரிந்தது, தேவரால் என்னுடைய வாளை ஒரு நொடிப்பொழுதில் விசிறி எறிந்துவிடமுடியுமென்ற உண்மை.”

சொல்லிமுடித்துவிட்டு பெருமூச்சுவிட்டார் ராஜராஜர்.

சுமார் பதினாறு ஆண்டுகள், இரண்டாம் ஆதித்தன் இறந்தபிறகு, இராஜராஜருக்கு பதில் அவருடைய சிற்றப்பனான உத்தமசோழன் ஆட்சிபுரிந்த காலம்.

அரியணையின் மேல் உள்ள ஆசையால் தனக்கு ஆதரவான ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, உத்தமசோழன், தன்னை இளவரசனாக்குமாறு, சுந்தர சோழரை வற்புறுத்த, உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாதென கருதிய ராஜராஜரும் இதற்கு மனமாற ஒத்துழைக்க, இரண்டாம் ஆதித்த பரகேசரி பார்த்திவேந்திர கரிகாலனுக்கு பிறகு, உத்தமசோழன் பதவியேறான்.

சுமார் பதினாலு ஆண்டுகள் தன்னுடன், துணை அரசனாக இருந்த தன் மகன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை பழிவாங்க முடியாமல் பின்னப்பட்ட சூழ்ச்சிகளை பொறுக்கமுடியாமல், சுந்தரசோழரும் இறந்து போக. உத்தமசோழனின் ஆட்சிகாலத்திற்கு பிறகு பதவியேற்ற இராஜராஜர் முதல் காரியமாக படைதிரட்டி, கரிகாலனின் கொலைக்காகவும், காந்தளூர்க்கடிகையில் சோழர்களுக்கெதிராக போர்ப்பயிற்சி அளஇத்துவந்ததற்காகவும் முன்குடுமி சோழ அந்தணர்களை பழிவாங்கும் பொழுது நடந்த சம்பவங்கள் அவரின் மனக்கண்ணில் விரிந்தது.

“அக்கன் இன்னுமொறு உண்மையை உங்களுக்கு விளக்கவா?” என்று கேட்டுவிட்டு, ராஜேந்திரனை தன்னருகில் அழைத்தார்.

“இராஜேந்திரா, மாமாவிடம், உங்களுக்கென்று சொந்தமாக நாடு இல்லையா என ஏன் கேட்டாய்? சொல்.”

இதுவரை நடந்த சம்பாஷனைகளை கேட்டுக்கொண்டிருந்த இராஜேந்திரன், இத்தனைக்கும் தான் கேட்ட கேள்விதான் காரணம் என நினைத்து வருந்திக் கொண்டிருந்ததால். இராஜராஜர் கேட்டதும்,

“தந்தையே மாமாதான் அத்தையிருக்கும் சமயமாய்ப் பார்த்து இப்படியொரு கேள்வியை கேட்க சொன்னார்கள்.”

இதைக்கேட்டு சிரித்த இராஜராஜர்,

“அக்கா இந்த விஷயம் எனக்கு முன்னரே தெரியும், ஒன்றும் அறியாத பிள்ளை கேட்ககூடிய கேள்வியல்ல அது. மேலும் இப்படி செய்ய வந்தியத்தேவரை தவிர ஒருவராலும் முடியாதென்பதும் தெரியும்.” சொல்லிவிட்டு வந்தியத்தேவரின் அருகில் வந்து அவரை கட்டிக்கொண்டார்.

ஆனால் ராஜேந்திரன் கேட்டதைப்போல் அல்லாமல், வந்தியத்தேவர், சோழ சாம்ராஜியத்தின் கீழ் “வல்லவரையர் நாடு” என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். அதுமட்டுமில்லாமல் அவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர். தன் தலைமையின் கீழ் மாதண்ட நாயக்கராக, சோழகுலத்தின் வெற்றிக்காக அவரும் அவரது படையும் பங்குபெற்றிருக்கிறது.

“தம்பி இதெல்லாம் எனக்கு தெரியாதென்றா நினைக்கிறாய். சரி இது எத்துனை தூரம் செல்கிறது என்று பார்க்கத்தான் பேசாமல் இருந்தேன்.”

....2......தொடரும்...

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In திரில்லர் தொடர்கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - கொலைத்தொழில் வல்லவன் 1 & 2

அந்த கண்ணாடி அறைக்குள் உட்கார்ந்திருந்த இருவரின் முகமும் இறுக்கமாய் இருந்தது. அந்த அறையில் நிலவிய நிசப்தத்தை போல.

“அவனை முடிச்சிடுங்க.”

எதிரே உட்கார்ந்திருப்பரின் உணர்ச்சிகளற்று முகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து ஏமாந்தவாராக,

“அந்த முக்கியமான் கோப்புக்களை அவன் பார்த்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் தான் சொல்கிறேன்.”

இதற்கும் பதில்வராத காரணத்தால்,

“அவனுக்கு குடும்பம் எதுவும் உண்டா?”

“இல்லை.”

மீண்டும் நிசப்தம் அந்த அறையில் பரவத்தொடங்கியது.

...

நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், முனிர்கா வீதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரை பற்றிய எந்த விவரமும் தெரியாத நிலையில் காவல் துறை அதிகாரிகள் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

...

முக்கியமான அழைப்புக்காக காத்திருப்பவள் போல் தொலைபேசி எதிரிலேயே உட்கார்ந்திருந்த தீபிகா, மணி பன்னிரெண்டு அடித்ததும் ஓவென்று அழத்தொடங்கினாள்.

அவளுக்குத் தெரியும் இனிமேல் தான் காத்திருந்த அந்த அழைப்பு வராதென்றும், அவளை அழைக்க வேண்டியவர், இந்நேரம் உயிருடன் இருக்க மாட்டாரென்றும்.

...

“தீபி, நாளைக்கு பன்னிரெண்டு மணிக்குள் நான் உனக்கு தொலைபேசவில்லையென்றால், நான் இறந்துவிட்டதாக அர்த்தம். அதன் பின் நீ என் சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகள், நிழற்படங்கள் அத்துனையையும் அழித்துவிடு. முன்பே சொன்னது போல் உன் தேவைக்கான பணம், வங்கியில் இருக்கிறது. எதுவும் பிரச்சனையென்றால் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பிரச்சனையை சொல். தீர்த்து வைக்கப்படும்.”

இது வழக்கமாக அவள் தந்தை சொல்வதுதான். சிறுவயதில் இருந்தே கேட்டு கேட்டு பழக்கமாகிவிட்டதென்றாலும். எல்லாமுறையும் அப்பா தொலைபேசிவிடுவார். இந்தமுறை, இந்தமுறை...

...

இரண்டாம் நாள் அவளுக்கு ஒரு தபால் வந்தது. பிரித்து படித்தாள்.

“தீபி, இத்துனை நாள் உனக்கு சொல்லாத ரகசியங்களை இன்று சொல்லப்போகிறேன். நான் இந்திய அரசின் உளவுத்துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒருவாறு நீ இதை ஊகித்திருப்பாய். பலநாட்கள் அந்நியதேசத்து ஆட்களால் தான் கொல்லப்படப் போகிறோம் என்று ஆனந்தமாய் இருந்தேன்.

நீ இந்தக் கடிதத்தை படித்துக்கொண்டிருக்கும் பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் வேலை பார்த்த உளவுத்துறையே என்னை கொலை செய்யப்போகிறது. அரசாங்கத்தின் ஒரு முக்கியமான் கோப்பை மீட்டுவரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நானும் முடித்துவிட்டேன், ஆனால் உயரதிகாரிகள் என்மேல் சந்தேகப்படுவதாகப்படுகிறது.

எனக்கு ஒரு குடும்பம் இருப்பதாக இவர்களுக்கு தெரியாது. அதனால் நீ இந்தக் கடிதத்தை படித்ததும் கிழித்துவிடு. இந்தக் கடிதத்தை வைத்து எதுவும் செய்யலாம் என்று கனவிலும் நினைக்காதே. அவர்கள் உன்னையும் அழித்துவிடுவார்கள். உன்னிடம் மட்டும் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது. நான் இறந்துபோனால் அதற்கு முழுக்காரணம் உள்துறை அமைச்சர்தான்.

அடுத்த பிரதமர் ஆவதற்கான அத்துனை முயற்சிகளும் செய்து வருகிறார் அவர். உன்னுடன் அதிக காலம் கழிக்கமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன்.”

...

கடிதத்தை படித்து முடித்ததும் தீபிகாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததில் இருந்தே. அப்பாவின் முகம் ஞாபகத்தில் இல்லை. அதிகம் பேசியிருக்கமாட்டாள். எல்லாமே கடிதத்தொடர்புதான். சில வருடங்களில் அவளுடைய தாயாகப்பட்டவளும் இறந்துபோக விடுதிவாழ்க்கைதான் அவளுக்கென்றாகியது.

ஒரு முறை நேரில் பார்த்தபொழுது அவசர அவசரமாய், அவர் எழுதும் கடிதங்களை படிக்கும் வித்தையை சொல்லிக்கொடுத்தவர். அதற்கு பிறகு முழுவதும் கடிதங்களால் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்தார். அவள் கேட்காமலேயே அவளுக்குறிய அனைத்தும் கிடைத்தது. அன்பை தவிர.

...

அவள் தந்தையினுடைய நாட்குறிப்பேட்டை படிக்கத்தொடங்கினாள், அதுவரை அந்த நாட்குறிப்பேடு அவளிடம் இருந்தாலும் தந்தையே ஆனாலும் இன்னொருவருடயதென்பதால் படிக்காமல் இருந்தவள். இப்பொழுதுதான் படிக்கத்தொடங்கினாள்.

படிக்க படிக்க அவரின் மேல் அளவுக்கதிகமான அன்பும் பாசமும் ஏற்பட்டது. உயிரைக் கூடமதிக்காமல் நாட்டிற்காக உளவறியப்போகும் இவர்களை போன்றவர்களை, சந்தேகத்தால் அநாதைகளாக சாகடிப்பது அவளுக்கு சரியாகப்படவில்லை.

அவளுக்குள் மெதுவாக பழிவாங்கும் எண்ணம் ஊற்றெடுக்கத்தொடங்கியது. தன் தந்தையை கொன்றவர்களை நிச்சயமாக பழிவாங்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு தெரிந்துதான் இருந்தது. அவள் பழிவாங்க நினைக்கும் ஆட்கள் எப்படிப்பட்டவர்களென்று.

...(1)

தான் பங்கேற்ற, வெளிநாட்டு உளவுவிவகாரங்களஇல் சிலவற்றை தந்தை நாட்குறிப்பில் எழுதியிருந்து, அதை படித்துவிட்ட பிறகு, தீபிகாவிற்கு ஆச்சர்யமே அதிகரித்தது. எங்கெல்லாம் ஊடுருவுகிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள். பயன்படுத்தும் தந்திரங்கள். விநோதம்.

இப்படித்தான் சுவிட்ஸர்லாந்தில் இந்தியாவின் ஒரு முக்கியமான புள்ளியின் வங்கிவிபரங்களைப் பற்றிய துணுக்குகளை சேகரிக்க சென்றிருந்த சமயத்தில் தான் உபயோகப்படுத்திய ஒருவனைப் பற்றி எழுதும் பொழுது, அவன் செய்த அரசியல் கொலைகளுக்காக உலகம் முழுவதும் தேடப்பட்டு வரும் ஒருவன் என்றும். இந்திய அரசிற்கே தெரியாமல், அவனை அணுகி அந்த வேலையை கச்சிதமாக முடித்ததாகவும் எழுதியிருந்தது. அவளுக்கு ஆச்சர்யமாயிருந்தது.

என்ன இருந்தாலும் அவன் கொலைகாரன் இல்லையா, அவனுடைய உதவியை எப்படி நாடலாம் என்று நினைக்கும் பொழுது. அவனைப் பற்றி அவள் தந்தையெழுதிய ஒற்றை வரி நினைவில் வந்தது.

ஆந்தனி கன்ஸாலஸ் – கொலைத்தொழில் வல்லவன்.

.

பெர்ன், ஆந்தனிக்கு மிகவும் பிடித்த ஒரு நகரம். பழமையான கருங்கற்கலால் ஆன, சொல்லப்போனால் 18ம் நூற்றாண்டுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் நிறைந்த ஒரு அற்புதமான நகரம். பெர்ன் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரம். அந்த நகரின் மனிதர்கள் ஆழ்ந்து யோசித்து நகர்பவர்களாகவும், மெதுவாக பேசுபவர்களாகவும் இருப்பதாக அவனுக்குப்பட்டது.

ஆறடி உயரமாய் இல்லாமல் சாதாரணமான ஒருவனாக இருந்தான் ஆந்தனி. அவனுடைய உருவத்தை வைத்து அவன் இந்த நாட்டை சேர்ந்தவன் என் தீர்மானிக்க முடியாதவனாகவும் தோன்றினான். கூர்மையான கண்கள், நீண்ட பெரிய கைகள், அதிகம் பேசாதவனாகவும், எப்பொழுதும் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனாகவும் இருந்தான்.

“குடென் டக்.” சுவிஸ் நாட்டின் உச்சரிப்பில் அவன், தங்கயிருந்த விடுதியின் காப்பாளனை அழைக்க,

“சொல்லுங்க சார். நான் எதுவும் உதவி செய்ய வேண்டுமா?”

“டாங்கே, இல்லை, எனக்கு முக்கியமான தகவல் எதுவும் வந்ததா?”

“இல்லை.” அந்த காப்பாளான் சொல்லிவிட்டு அவனையே பார்க்க மீண்டும் நன்றி சொல்லியவனாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

உலகமே தேடும் ஒரு கொலைகாரன், சுவிட்ஸர்லாந்தில் அதன் தலைநகரத்தில் சுதந்திரமாக உலாத்துகிறான் என்றால் அவனுடைய அடையாளம் தெரிந்து நேரில் பார்த்தவர்கள் வெகு சிலரே. இன்டர்போல் இவனை தேடுவதற்காக, உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் புகைப்படம் கூட சுமார் பத்துவருடங்களுக்கு முன்னர் எடுத்தது.

பல நாட்டு உளவு நிறுவனங்கள் இவனை கொல்வதற்காக தேடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் சில உளவு நிறுவனங்கள் இவன் உதவியை பெறவும் அவனைத் தேடுகின்றன. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாட் கூட சில சந்தர்ப்ங்களில் அவர்கள் பெயர் வெளியாக வேண்டாம்மென்று நினைத்து, ஆந்தனியை வைத்து பாலஸ்தீன தலைவர்களை, அரசியல் படுகொலை செய்திருக்கிறார்கள். ஆந்தனியை பொறுத்தவரை அவனுக்கு மதம் கிடையாது, மொழி கிடையாது. பலருக்கு அவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்பதே தெரியாது. ஜெர்மன், ப்ரெஞ்ச், ஆங்கிலம் உட்பட உலகின் பலமொழிகளை எழுதவும் படிக்கவும் பேசவும் வல்லவன்.

யாரோ ஒருநாள், ஆந்தனியை கொலைத்தொழிலில் வல்லவனாக உருவாக்கியது அமேரிக்காதான் என பத்திரிக்கைகளில் எழுத எப்பொழுதுமே சிரிக்காத ஆந்தனி அன்று முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.

.

செய்தி

உள்துறை அமைச்சர், சந்த்கோஷ் முகோபாத்யாய், எதிர் கட்சிகள் வெளியிட்ட கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தனது பேட்டியில், தங்கள் கட்சியில் எந்த உட்கட்சி பூசலும் இல்லையென்றும் அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கும் தற்போதைய பிரதமரே, தங்கள் கட்சியின் பிரதமர் உறுப்பினராக நிறுத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.

.

கடந்த சில நாட்களாகவே தீபிகாவின் மனதில் ஆந்தனி கன்ஸாலஸ் என்ற பெயர் சுழன்று கொண்டேயிருந்தது. ஆளைப்பார்த்ததேயில்லை, தந்தையின் நாட்குறிப்பை படிக்கும் முன் அந்தப் பெயரை கேள்விக்கூட பட்டதில்லை. ஆனால் ஆந்தனியை வைத்து உள்துறை அமைச்சரை பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணம் மட்டும், மேலெழத்தொடங்கியிருந்தது.

அவனை எப்படி தொடர்பு கொள்வது, உலகமே தேடும் கொலைக்காரன், தான் சொன்னதற்காக, உள்துறை அமைச்சரைக் கொல்ல வருவானா? வந்தாலும் அவனுக்கு கொடுக்க தன்னிடம் பணம் ஏது. இதுபோன்ற சிந்தனைகளால் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த தீபிகா தான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லையென்பதைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவளுக்கு முட்டாள்தனமாக தெரிந்தாலும், இன்டர்நெட்டில் உட்கார்ந்து அந்த பெயரில் ஒரு தேடுதல் வேட்டையே நடத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஒரு தகவலும் உபயோகமாய் கிடைக்கவில்லை.

.

சில நாட்கள் தீவிரமாக யோசனை செய்த பிறகு, அவளுக்கு ஏதோ ஒருயோசனை தட்டுப்பட்டதை போல் உணர்ந்தவள். ஒரு முடிவுக்கும் வந்தவளாய்,

அந்த எண்ணுக்கு தொலைபேசினாள்.

“ஹுலோ, இந்திரஜித், நான் தீபிகா, ஜகதலப்பிராதபனின் மகள். ஒரு உதவி வேண்டும். மிகவும் முக்கியமானது.”

...(2)

Read More

Share Tweet Pin It +1

18 Comments

In Science ஜல்லிஸ் நட்சத்திரம்

நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்

சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும்.

நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில்.

சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் என்னுடைய உண்மையா மென்ட்டர், ஆசான் எல்லாமே எங்க மாமாதான். அதாவது எங்க அம்மாவோட தம்பி, சின்ன வயதிலேயே நல்லா படிச்சிட்டு, 90களின் தொடக்கத்தில் வந்த கம்ப்யூட்டர் சகாப்பதத்தால் அமேரிக்கா சென்றவர்.

இன்றைக்கு நான் படித்த படிப்பு, நான் செய்து கொண்டிருக்கும் வேலை, நான் வேலை செய்து கொண்டிருக்கும் விஷயம் உட்பட பல இவரால் தீர்மானிக்கப்பட்டவைதான். நான் நிச்சயமாக இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அது இவரால் தான். +2 அதிகம் மதிப்பெண் எடுக்காத பொழுதும் நம்பிக்கையளித்து கணிணி படிக்கவைத்து, வேலை தேடிக்கொண்டிருந்த பொழுது இதைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லி அதைப் படிக்க வைத்தவர்.

இதெல்லாம் நல்ல விஷயங்களைப்பற்றி நான் சொல்ல வந்தது. இந்த தாக்கங்கள் எல்லாம் எனக்கு நல்லவையாகவே இருந்தது.

நான் நட்சத்திரப் பதிவின் ஆரம்பத்தில் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

எங்க மாமாவிற்கும், அய்யர் ஆட்களுக்கும் என்ன பிரச்சனை என்றெல்லாம் தெரியாது. சரியாக நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இவர் அமேரிக்காவில் இருந்து வந்து பின்னர் ஆஸ்திரேலியா சென்றது. அந்த சமயத்தில் இவர் என்மேல் திணித்த சில விஷயங்களில் ஒன்று, அய்யர் வீட்டு ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற ஒன்று.

இன்னும் சொல்லப்போனால், BHEL, 16 வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு அம்மா மண்டபத்தில் டியூஷன் படிக்கவேண்டிய கட்டாயத்தால், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் மாமாவின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. அந்த சமயத்தில் எனது வீட்டிலும், எங்க மாமா வீட்டிலும் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு அட்வைஸ், “ஸ்ரீரங்கத்தில் இருக்கப்போற, அந்த ஆளுங்கக்கிட்ட பார்த்து இருந்துக்கோ” அப்படிங்கிறது மட்டும்தான்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நான் இருந்த பொழுதுதான் நான் குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்தது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வயது, அமேரிக்கா மாமாவின் ஆலோசனை, (பின்னர் அமேரிக்கா அழைத்துச் செல்லும் கனவு.) இத்தனையும் சேர்ந்திருந்த நிலை.

அந்த ஹரன் ஒரு பிராமணப்பையனாப் போக, எல்லாம் சேர்ந்துப்போச்சு, மனசுல ஒரு ஆழமான சுவடா பதிந்திருச்சு, மாமா சொன்ன விஷயத்தை மறக்கவே முடியலை, தவறு என்பேரில் இருந்தாலும், போட்டுக் கொடுத்தானே அப்படிங்கிற ஒரு உணர்வுதான் அதிகமிருந்தது. இதனாலெல்லாம் பிராக்டிகலா வேற நடந்ததிற்குப் பிறகு, என்ன செய்ய மாமா சொல்றது தான் வேதவாக்கு, சில சமயம், நாள் கணக்கா மாமா என்னிடம் அவருக்கு நடந்த சில சம்பவங்களை சொல்லியிருக்கிறார். எனக்கு ஒரு பிராமின் பிரண்ட் இருக்கான்னு சொன்னாக்கூட திட்டுற ஒரு காலம் அது. இன்னும் புரியவில்லை அப்படி என்ன பிரச்சனையென்று.

ஆனாலும் எல்லாவற்றிலும் வித்தியாசமாய் எங்க மாமாவிற்கு ரொம்பவும் பிடித்த ஒரு நபர்களில் இராமானுஜமும் ஒருவர். மனுஷன் அவ்வளவு புத்தகம் வைச்சிருப்பார். அடிக்கடி தப்பிப் பிறந்திட்டான் தப்பிப் பிறந்திட்டான்னு சொல்லிக்கிட்டேயிருப்பார்னா பாருங்களேன். ஏதாவது ஒரு விஷயம்னா இராமானுஜத்தை தான் இழுப்பார் அவ்வளவு படிப்பறிவு அவரைப்பத்தி மாமாவிற்கு.

ஆரம்பக்காலத்தில் மாமா சொல்றாரேன்னு, சில புஸ்தகங்களைப் படித்திருக்கிறேன் இராமானுஜத்தைப் பற்றி. இப்பத்தான் இந்தப் பதிவின் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். கொஞ்சம் நாளில் எனக்கும் அவருக்கும் என்னமோ ஒரு சின்ன பிரச்சனை வந்திருச்சு, எனக்கெல்லாம் பிரச்சனை வந்திருச்சுன்னா நிறையப் படிப்பேன், அந்த சமயத்தில் இராமானுஜத்தைப் பற்றி என்ன தவறான விஷயங்கள் கிடைக்கும் தேடித்தேடி படித்திருக்கிறேன். இன்று நினைத்தால் சிரிப்பாக வருகிறது, அன்று நான் செய்தது.

பெரிய ஜீனியஸ் அந்தாளு, கொஞ்சம் கஷ்டப்படுற பேமிலி, இயற்கையாவே கணக்கு போடுவதில் பெரிய கை. சின்ன வயதிலிருந்தே அந்த கணக்கு மேல அப்படியொரு பிரியம். ஜி எஸ் கார்(GS Carr) அப்படிங்கிற ஒருத்தரோட புஸ்தகத்தை வைச்சிக்கிட்டு தானாவே கணக்கு கத்துக்கிட்டவரு. அவர் தன்னோட பள்ளிப்படிப்பில் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கும்பகோணத்தில் இருந்து கவர்மெண்ட் காலேஜில் ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்துவந்தார். ஆனால் தலைவர் கணக்கில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மற்ற சப்ஜெட்டை எல்லாம் கோட்டைவிட்டதால் அடுத்த ஆண்டிற்கான ஸ்காலர்ஷிப் காலாவதியானது.

வீட்டில் யார்கிட்டையும் சொல்லிக்காம விசாகப்பட்டினத்துக்கு ஓடிப்போய்ட்டு, அங்கேயிருந்து கணக்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு 1906ல் மீண்டும் பச்சைப்பாவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் எக்ஸாமில் தேர்ச்சிபெற்று யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க நினைத்திருந்தார். மூன்று மாத படிப்பிற்கு பிறகு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கணக்கில் மட்டும் நல்ல மார்க் எடுத்திருந்து மற்றவற்றில் மீண்டும் கோட்டைவிட்டிருந்தார். இதன் காரணமாக அவரால் யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க முடியாமல் போனது.

பின்னர் தொடர்ச்சியாக கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1909ல் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். பிறகு அதே வருடத்தில் பத்து வயதே நிரம்பிய அவர் மனைவியை திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மாவின் பெயர் ஜானகி அம்மாள். அவர், மனைவியுடன் அடுத்த இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்தவில்லை, அதாவது அவர் மனைவிக்கு 12 வயதாகும் வரை.

பிறகு அவருடைய கணித ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத்தொடங்கி, கிளர்க்காக வேலை செய்து கொண்டே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு தான் இவருடைய திறமையை புரிந்து கொண்ட யுனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸ் இவருக்கு இரண்டு வருட ஸ்காலர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தின் டிரினிட்டி கல்லுரியில் சேர்ந்தார் இது நடந்தது, 1914. இங்கத்தான் ஆரம்பிச்சது ஒரு புதுப்பிரச்சனை.

நம்மாளு அய்யரு, அசைவம் சாப்பிடமாட்டார், பால்கூட குடிக்கமாட்டார்னு நினைக்கிறேன். இங்கிலாந்தில் சைவம் கிடைக்காம ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனோடயே தன்னோட கணிதத்திறமையை பேப்பர்களாக பப்ளிஷ் செய்து பெரும் புகழை சம்பாதித்திருந்தார். இதெல்லாம் நடந்தது 1916, இப்ப இருக்கிற பிஎச்டி பட்டம் மாதிரி அந்த காலத்து Bachelor of Science by Research கிடைத்து.

இந்த சமயத்தில் எல்லாம் கூட அவருடைய உடல்நலனில் பல பிரச்சனைகள் இருந்துதான் வந்திருந்தது. அதன் பிறகு மேத்தமேட்டிக்ஸ் உலகத்தின் ஒரு உயர்ந்த விருதாக கருதப்படும், Fellow of Royal Society of England(FRS) என்று விருது கூட 1918ல் கிடைத்தது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 1917 மிகவும் சங்கடமான காலம் ராமானுஜத்திற்கு, அதாவது அந்த சமயத்தில் மருத்துவர்கள் இவர் இறந்துவிடுவார் என்று கூட பயந்தனராம். அப்படியொரு நிலை.

பின்னர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து கொஞ்சம் காலம் கிளார்க்காக பணிபுரிந்திருக்கிறார். 1919ல் இங்கிலாந்தில் இருந்த வந்த அவர் அதே வருடமே இறந்தும் போயிருக்கிறார்.

எங்க மாமா அடிக்கடி சொல்வது, ராமானுஜம் தன் டைரியில் எழுதி வைத்திருந்த சில சமன்பாடுகளை விளக்க முடியாமல் இன்னும் தடுமாறிக்கிட்டிருக்காங்க, அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருப்பாரு அப்படின்னு.

அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு முதல் காரணம், அவர் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் மிகவும் கடுமையா இருந்திருந்ததால் ரொம்பவும் பிரச்சனை செய்திருக்கிறது. இன்று வரை கூட உலக கணிதவல்லுநர்கள் மதிக்கும் ஒரு மிகப்பெரிய கணிதமேதை தான் ராமானுஜம்.

என்னைப் பொறுத்தவரை அவர் வைத்திருந்த சில பழக்கவழங்கள் முற்றிலும் தவறானவை, தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு சிறிய கொள்கை மீது நம்பிக்கை வைத்திருந்தது முட்டாள்த்தனம்.

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். இவரைப்பற்றியும் எழுத என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நிச்சயம் அவருடைய கணிதத்திறமையைப் பற்றி இன்னுமொறு பதிவு எழுதுவேன்.

உங்களுக்கெல்லாம் தெரியுமா, 1917ல் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் மனநலம் கூட பாதிக்கப்பட்டிருந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் இராமானுஜம். அவருடைய நண்பர் ஹார்டிதான் அவர் ஒரு எப்ஆர்எஸ் என்று பொய் சொல்லி(அப்பொழுது அவர் வாங்கியிருக்கவில்லை.) அவரை தப்பிக்க வைத்தார்.

என்னைப் பொறுத்தவரை நமக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நாம்கிடையாது. ஒருவேளை மிகப்பெரியவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம், இருந்திருக்கலாம் இராமானுஜத்தைப் போல, என்ன இருந்தாலும் என் மாமாவால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய தாக்கம் இந்த இராமானுஜம். அதை மறுப்பதற்கில்லை.

ஒரு விஷயத்தை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் போனால் தவறாகிவிடும். மாமாவின் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதில் முக்கியமாக, பிராமணர்கள் மீதான கருத்து கொஞ்சம் காலத்தில் மாறியது எப்படியென்றால், பிராமணர்கள் மட்டுமல்ல, யாராகயிருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை வரும்பொழுது நடந்துகொள்ளும் நிலை மாறுபடும். இதனால் இப்பொழுதெல்லாம் யாரையும் நம்புவதில்லை அவ்வளவே.

அதிகம் படிக்க படிக்க, வாழ்க்கையை அனுபவிக்க அனுபவிக்க நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டும் அது எனக்கு இந்த விஷயத்தில் நடந்திருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Science ஜல்லிஸ் நட்சத்திரம்

நட்சத்திரம் - ஹாக்கிங் பண்றாங்கப்பா ஹாக்கிங்

இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வு பதிவே, சமுதாயத்தில் இருக்கும் தீய விஷயங்களில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழிமுறையை என்னால் ஆனவரை தர முயன்றிருக்கிறேன். எந்த தவறான நோக்கத்திற்காகவும் இந்தப் பதிவு கிடையாது. முழுக்க முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்தப் பதிவு.

எப்பொழுதுமே ஒரு நல்ல விஷயத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடிய வழிகள் பல சமயங்களில் அமைந்துவிடுகின்றன. உதாரணமாக நம்முடைய வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்ளலாம். நல்ல விஷயங்களை எழுதுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று தான் இந்த ப்ளோக்கர்கள் எனப்படும் வலைப்பதிவுகள். ஆனால் இதில் இருக்கும் சில ஓட்டைகளை பயன்படுத்தி குளிர்காயும் மக்கள் இருப்பதைப் போலத்தான் இந்த ஹாக்கர்கள் என்ற மக்களும்.

இதன் வரலாறு சொல்லப்போனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. யார் இந்த மக்கள், ஏன் இப்படிச் செய்கிறார்கள், எப்படி இவர்களால் இது முடிகிறது. போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழுவதற்கு வாய்பிருக்கிறது.

நம்மைப் போலவே இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட சாதாரணமான மனிதர்கள் தான் இவர்களும் ஆனால் கொஞ்சம் புத்திசாலிகள். ஒரு நல்ல விஷயத்தை எப்படி தவறாக பயன்படுத்தலாம் என அறிந்து கொள்வதையே வாழ்நாளின் நோக்கமாக கொண்டவர்கள். இது ஒரு விதமான நோய்னு கூட சொல்லலாம். அடுத்தவர்களுடைய பர்ஸனல் விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவதில் இருந்து, தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரப்பளவு அதிகரித்து அடுத்த நாட்டின் பர்ஸனல் விஷயங்களை நோண்டுவது வரை செல்கிறது. இது போன்ற விஷயம் இவர்களால் மட்டுமல்ல நினைத்தால் எல்லோராலும் செய்ய முடிந்ததே.

இதை சொல்வது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் அதாவது அவர்கள் நம்மைவிட அதிபுத்திசாலிகள் எல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் நம்முடைய திறமையை நல்ல வழியில் பயன்படுத்துகிறோம் அவர்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் அவ்வளவே.

இந்தப் பதிவெழுதுவதின் முக்கிய நோக்கமே எனக்குத் தெரிந்த இப்படியெல்லாம் உங்களின் பணத்தை, ஐடென்டிடியை, தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவே. இன்னும் சில முறைகளை உங்களுக்கு தெரியப்படுத்தி, நீங்கள் இது போன்றதான ஒரு தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முறைகளை சொல்ல நினைக்கிறேன்.

முன்பே சொன்னது போல், இந்தப்பதிவின் முக்கிய நோக்கமே, ஹாக்கர்களுக்கு எதிராக உங்களை பாதுகாக்க சில வழிமுறைகளை சொல்வதே. வேறொன்றுமில்லை. இப்பொழுது இந்தத் துறை(Ethical Hacking) கூட சாதாரணமானது கிடையாது. தனக்கென்று தனிப்பெரும் இயக்கமாக உருவாகி வருகிறது.

எத்திகல் ஹாக்கிங் எனப்படும் உங்கள் கணிணியோ இல்லை உங்கள் தகவலோ திருடப்படாமல் இருப்பதற்கான வழிகள் பல இடங்களில் கிடைக்கத்தான் செய்கிறது. ஹாக்கிங்க வளர்ந்து வரும் நிலையில் எத்திகல் ஹாக்கிங் எனப்படும் அதனை தடுக்கும் முறையும் தீவிரமாக வளர்ந்து வருகிறது.

முதலில் எங்கிருந்து பிரச்சனை ஆரம்பிக்கிறது எனத் தௌiவாக சொல்லிவிடுகிறேன். அதாவது நீங்கள் இன்டர்நெட் மையத்திலிருந்து இணையத்தை உபயோகப்படுத்துபவராக இருந்தால், உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் 5% க்கும் குறைவே.

எப்படியென்று ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், நீங்கள் ப்ரௌசிங்க சென்டரில் உபயோகப்படுத்தும் கணிணிகளில் சில மென்பொருள்களை பதிந்துவிட முடியும், அதாவது உங்கள் கண்ணுக்கு தெரியாமல் அந்த மென்பொருள் நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும் தன்னகத்தே சேமித்துக் கொள்ளும்.

இது ஒரு பேக்ரவுண்ட் ப்ராஸஸிங் மாதிரியானது. அதாவது அந்த மென்பொருள் ஓடிக்கொண்டிருப்பது உங்களுக்கு சில சமயங்களில் அந்த ப்ரௌசிங் சென்டர் உரிமையாளருக்கோ கூட தெரியாமல் இருக்கலாம். அந்த மென்பொருளின் முக்கிய வேலையே நீங்கள் தட்டச்சும் ஒவ்வொரு வார்த்தையும் சேகரித்து வைப்பது. அதுமட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் உங்கள் கணிணியின் திரையை புகைப்படம் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளவும் முடியும்.

இதன் விபரீதம் என்னவென்றால், நீங்கள் யாகூவில் உங்கள் பெயரையும் பாஸ்வேர்டையும் அடித்தீர்களேயானால் அது அப்படியே பெயர் மற்றும் பாஸ்வேர்டை சேகரித்துக் கொள்ளும். இதைவிட விபரீதம் என்னவென்றால் நீங்கள் கிரெடிட் கார்டை உபயோகிப்பாளராக இருந்தால், உங்கள் கார்டைப் பற்றிய அத்துனை தகவல்களையும் அவர்கள் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.

எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் ஒரு விபரீத ஆசாமி இப்படி எல்லா கணிணிகளிலும் பதிந்து விட, அத்துனை பேரின் விவரங்களும் அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்திருக்கிறது. பின்னர் அவனைப் பிடித்து போலீஸில் விட்டுவிட்டதாக நண்பர் சொன்னது.

அதனால் இன்டர்நெட் ப்ரௌஸிங்க சென்டர்களில் பாதுகாப்பு பூஜ்ஜியம் தான் இதை எப்படி தெரிந்து கொள்வது என்றால் அதிலும் சிக்கல். இதை சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாது, அந்த கம்பெனியில் பதிக்கப்பட்ட மென்பொருளை கண்டுபிடிக்க வேண்டுமென்றால். கன்ட்ரோல், ஷிப்ட், ஆல்ட், மற்றும் ஒய்யை அழுத்தினால் அந்த மென்பொருளின் திரை வரும் என்று நினைக்கிறேன். இது ஒரு கூட்டு இதைப்போல பல விஷயங்களைப் பயன்படுத்த முடியும். அதனால் மிகவும் அவசியம் என்றால் மட்டும் கடனாளர் அட்டை போன்ற விஷயங்களை அது போன்ற இடங்களிலிருந்து பயன்படுத்துங்கள்.

எனக்குத் தெரிந்த வரை யாகூ மெயிலில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் மற்ற மெயில் அக்கவுண்ட்ஸ் போல் பாஸ்வேர்ட் மறந்து விட்டீர்களேயானால் அதை இன்னொரு மெயில் அக்கவுண்டிற்கு அனுப்ப மாட்டார்கள். உங்களுக்கே கூட தெரிந்திருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்கள் மிகக் குறைவானவையே, உங்கள் ஐடி, பிறந்தநாள், பின்கோட். பிறகு ஒரு சீக்ரெட் கேள்வி.

இதில் சீக்ரெட் கேள்விக்கான பதிலைத்தவிர மற்ற விஷயங்களை உங்களுக்கு நெருக்கமானவர்கள் அறிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அதனைப்பயன்படுத்தினால் கடைசியில் உங்களைப் பாதுகாக்க இருப்பது சீக்ரெட் கேள்வி மட்டுமே. அதையும் நீங்கள் என்னைப்போல் ப்ளேஸ் ஆப் பர்த்னெல்லாம் சொல்லியிருந்தீர்களோ அவ்வளவுதான் காலி. உங்கள் யாகூ ஐடி உடைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

அதனால் யாகூ பயன்படுத்தும் மக்கள் தயவுசெய்து சீக்ரெட் கேள்விக்கான பதிலை மற்றவர்களால் கணிக்க முடியாத அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனை கூகுளில் கிடையாது. அவர்கள் நீங்கள் முன்னமே சொல்லியிருக்கும் இன்னொரு இடத்திற்குத்தான் பாஸ்வேர்டை அனுப்புவார்கள். அதனால் பிரச்சனை கிடையாது. நான் அறிந்த வரை யாகூவில் இந்த பிரச்சனை உண்டு, நண்பர்களே இனிமேலாவது கவனம்.

நான் இங்கே சொல்லி வருவதெல்லாம் சின்ன சின்ன விஷயங்களைப்பற்றி மட்டுமே. அமேரிக்காவின் பாதுகாப்பை உடைப்பது போன்ற விஷயங்களைப் தடுப்பது என்பதைப் பற்றியெல்லாம் கிடையாது.

மற்றபடிக்கு வீட்டில், கணிணி உபயோகிக்கும் மக்களுக்கு சில எச்சரிக்கைகள்.

உங்கள் கணிணியில், ஆன்ட்டி வைரஸ் ஸாப்ட்வேர்களை அவ்வப்பொழுது சரி பார்த்துக்கொள்வது அவசியம். அவை இருந்தாலும் தேவையற்ற கடிதங்களை திறக்காமல் இருப்பதுவே உத்தமம். நாம் பெரும்பாலும் வீட்டில் உபயோகிக்கும் கணிணி என்பதால் இதை அப்படியே விட்டுவிடுவதுண்டு அது என்னன்னா?

உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில், டுல்ஸ், இன்டர்நெட் ஆப்ஷன்ஸ், கன்டன்ட், ஆட்டோ கம்ப்ளிட் ஆப்ஷனை கிளிக்குங்கள்(Tools, Internet Options, Content, Auto Complete, UserName and Password on Forms), அதில் யுஸர் நேம் பாஸ்வேர்ட் ஆன் பார்ம்ஸ் என்றொரு செக் பாக்ஸ் பட்டன் இருக்கும் அது பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்டே(Selected) இருக்கும் பல கணிணிகளில், என்னுடய கணிணியிலும் கூட, இதன் காரணமாக நமக்கு சில, பல உபயோகங்கள் கிடைக்கலாம்.

உதாரணமாக, நீங்கள் ப்ளாக்கர் அக்கவுண்டிலோ, இல்லை, உங்கள் மெயில் அக்கவுண்டிற்கோ நுழைய பாஸ்வேர்ட் எதுவும் கேட்காமல் அதுவே உள்ளே நுழைந்து விடும். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது. உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை கணிணி ஒரு இடத்தில் சேமித்து வைக்கும்.

அது போன்ற விஷயங்கள் எதிரிகளில் கைகளில் சிக்கிவிடக்கூடிய அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் நீங்கள் ப்ரௌசிங் சென்ட்ரோ இல்லை வீட்டு கணிணியோ அந்த ஆப்ஷனை அன் செலக்ட் பண்ணிவிடுங்கள். இது எப்பொழுதுமே உங்களுக்கு உபயோகமாகயிருக்கும்.

அதைப்போல கடனாளர் அட்டை உபயோகிக்கும் மக்களுக்கு தெரிந்திருக்கும் நீங்கள் கடனாளர் அட்டை விவரங்களை ஒரு பக்கத்தில் தருகிறீர்களென்றால் அந்தப்பக்கம் சாதாரணமான HTTP யாக இல்லாமல், HTTPS பக்கமாக இருக்க வேண்டும். இது முக்கியம் இதுமட்டுமில்லாமல் அவர்கள் ஏதாவது ஒரு தரமான சர்டிபிகேட் வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டும் அந்த பக்கத்தை உபயோகியுங்கள்.

சில பொதுவான விஷயங்கள், இணையத்தளம் வைத்திருக்கும் அன்பர்களுக்கு, அதாவது கூகுளின் நன்மைகளைப்பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது கூகுளால் அதாவது ஒரு சர்ச் இன் ஜின் வேலை செய்யும் விதம் தெரிந்திருக்கும் நண்பர்களுக்கும் கூகுள் தகவல்களை எப்படி எடுத்து வருகிறது என்பது தெரிந்திருக்கும்.

இதன் போன்ற காரணங்களால், சில தடவைகள், வெப்சைட் தயாரிக்கத்தெரியாத ஆட்களாள் தயாரிக்கப்பட்ட வலைத்தளங்கள் பல மோசமான பாதிப்பை சந்திக்கும். அதாவது கூகுளில் உள்ள சில ஆப்ஷன்களைப் பயன்படுத்தி கூகுளிடும் பொழுது அது, அந்த வெப்சைட்டிற்கான அத்துனை பைல்களையும் தந்துவிடும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பாதுகாப்பாக வைக்கப்படாத பைல்கள்.

சில தடவைகளில் பாஸ்வேர்ட் சேகரித்து வைத்திருக்கும் பைல்கள் உட்பட, ஆனால் இந்த பைல் பெரும்பாலும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். அப்படி என்கிரிப்ட் செய்யப்படாமல் சேகரித்து வைக்கப்படும் பைல்கள் பாதுகாப்பானது கிடையாது. இது நிச்சயமாக கூகுளில் தவறு கிடையாது. தரமான வெப்சைட் தயாரிக்கத் தெரியாதவர்களின் குறைபாடே.

ஒரு சின்ன உதாரணத்திற்கு பிகேஎஸ்ஸின் இந்தப்பதிவு எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
இதில் அவர் இன்னாருடைய முகவரியை கண்டறிந்தேன் என்று சொல்லியிருப்பார். என்னைப் பொறுத்தவரை அவர் இதை தெரிந்து கொள்ள கூகுளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். (தவறாகவும் இருக்கலாம்.)

மற்றவர்கள் சிலர் அப்பொழுது சில கேள்விகள் கேட்டனர் அதாவது பிகேஎஸ் மற்ற நண்பர்களின் பதிவிலும் இடப்படும் பின்னூட்ட முகவரியையும் கண்டறிந்து சொல்ல வேண்டு என்பதான ஒன்றை.(அப்படிதானென்று நினைக்கிறேன்.)

அப்படிக் கண்டுபிடிக்க முடியாது, பிகேஎஸ் கண்டுபிடித்ததற்கு ஒரு முக்கிய காரணம், ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) என்று காசி பயன்படுத்தும் ப்ளாக்கர் சேவையை தரும் ஒரு மென்பொருளின் சிறு குறைபாடே. அந்த குறைப்பாட்டின் காரணமாக காசியினுடையது மட்டுமல்ல, ப்ளாக் சிஎம்எஸ்(BLOG CMS) உபயோகப்படுத்தும் அத்துனை நபர்களின் ப்ளாக்குகளிலும் பின்னூட்டமிடும் அத்துனை நபர்களின் ஐபி முகவரியை தெரிந்து கொள்ளமுடியும். பிகேஎஸ் இதை நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தியிருந்தார்.(என்னைப்பொறுத்தவரை).

அப்படிக் கண்டுபிடிப்பதொன்றும் பெரியவிஷயம் கிடையாதுதான். ஒரே ஒரு சர்ச் கீவேர்டில் கண்டறிந்துவிடலாம்.

site:kasi.thamizmanam.com "promise-this-is-not-a-spam"

இவ்வளவுதான் விஷயம் அந்த கீவேர்ட் தேடித்தரும் பதிவில் இருந்து விஷயத்தை பிகேஎஸ் எடுத்திருக்கலாம்.(இப்போ போட்டுப்பாக்காதீங்க, அந்த பின்னூட்டத்தை காசி அவர்கள் நீக்கிவிட்டார்.) நான் இதை உங்களுக்கு சொல்வதற்கான முக்கியமான காரணம் விழிப்புணர்வு தான், அதாவது இதுபோன்றதொறு இணையத்தளத்தில் உங்களை யாராவது தவறாக சொல்லியிருந்தால் அந்த நபரின் ஐபி முகவரியை இப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதற்காகத்தான்.

என்னைப்பொறுத்தவரை, டோண்டு அவர்கள் அவருடைய இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என நினைத்தால், காசி அவர்களைப்போல், தேசிகன் அவர்களைப்போல், இல்லை இன்னும் சிலரைப்போல் சொந்தமாக வெப்சைட் வைத்துக்கொள்ளலாம். அந்த இணையத்தளத்தில் உங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது, உங்கள் இணையத்தளத்தை பார்த்தவர்களைபற்றிய எல்லா விவரங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.(டோண்டு சார் நீங்க என்ன சொல்றீங்க.) கடைசியாக ஒரு விஷயம் மக்களே பாதுகாப்பா இருங்க. நான் சொன்னதெல்லாம் ரொம்பக்கம்மி இணையத்தில் இன்னும் நிறைய நடக்கிறது. பார்த்து இருந்துகொள்ளுங்கள்.

இன்னும் நிறைய விஷயங்களை சொல்லலாம், ஆனால் நேரப்பிரச்சனை தான் பெரிதாகயிருக்கிறது. இவ்வளவுதான் நான் இந்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் சொல்ல விரும்புவது.

பிகேஎஸ்ஸின் பெயரையும், காசி அவர்களுடைய பெயரையும் ஒரு உதாரணத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

Read More

Share Tweet Pin It +1

26 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - நான் யார்????

உங்களிடமெல்லாம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்றால், ஜாவா ப்ரொக்ராமராகவோ, இல்லை பேச்சுப்போட்டியாளனாகவோ, தமிழனாகவோ, இந்தியனாகவோ, சுஜாதாவின் தீவிர விசிறியாகவோ, இல்லை வேறுவேறு வகையாகவோ என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மாட்டேன்.

கார்த்திகாயினி டீச்சர் என்ற இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மகனாக உங்களின் மத்தியில் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்பல்லாம் அவரவர் தவமாய் தவமிருந்து பார்த்துட்டு நைனாக்களுக்கு சப்போர்ட் செய்யும் வேலையில் மீண்டும் ஒரு அம்மா(அந்த அம்மா இல்லை) புராணம்.

வெறும் வார்த்தைக்கான வாக்கியம் அல்ல அது. நான் மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எனக்கு பெருமை சேர்த்த விஷயங்கள் தான். ப்ரொக்கிராமராக இருப்பதில் அடையும் பெருமிதம் தமிழனாக இருப்பதிலும் இந்தியனாக இருப்பதிலும் அடையும் பெருமிதத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. அதைப்போலவே பேச்சுப்போட்டியாளன் என்பதும். என்னை ஆரம்பக்காலத்தில் பரவலாக அறிமுகப்படுத்தியது இதுதான். இப்படித்தான் சுஜாதாபற்றியதும். இதையெல்லாம் மீறித்தான் நான் சொல்கிறேன் முன்பிருந்த வாக்கியத்தை.

புதுசா சொல்றதுக்கு ஒன்னுமில்லைனு நினைக்கிறேன். எல்லோருக்குமே தாயின் அருமை நல்லா தெரியும். இருந்தாலும் எதுக்கு இந்த பதிவுன்னா ஒரு சின்ன காரணம் இருக்கு.

சின்ன வயசிலிருந்தே இருந்து வந்த என்னோட வாழ்க்கை முறையில் அம்மா என்ற விஷயம் ரொம்ப மேலானதாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் நான் வெளிப்படுத்துவதில்லை. அது மட்டுமில்லாமல் இதை ஏன் வெளியில் காமிக்கணும் என்று நினைத்துவந்தவன் தான் நானும். இதன் போன்ற காரணங்களால் அம்மாவின் வேதனைகள் பல சமயங்களில் தெரிந்தாலும் புரிந்தாலும் அதற்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசவோ இல்லை நான் இருக்கிறேன் என்று சொல்லவோ கூட இல்லாத சமயங்கள் தான் இருந்திருக்கின்றன.

என்னுடைய உறவினர் ஒருவர் அவர் தாய்க்கு கொடுத்த சப்போர்ட் பார்த்துத்தான், எனக்கும் நமக்கு இவ்வளவு செய்த அம்மாவிற்கு ஒன்றுமே செய்யாமல் இருந்திருக்கிறோமே என்று முதன் முதலில் தோன்றியது. பண விஷயம் கிடையாது. ஒரு மாரல் சப்போர்ட். அதன் பிறகு கொஞ்சமாவது அதுபற்றி சிந்திக்க தொடங்கியிருந்தேன் சில சமயங்களில் செயல்படுத்தவும்.

நாம் நினைக்கலாம் அம்மாவைப் போய் என்ன பாராட்டுவது. சாப்பாடு நல்லாயிருந்ததுக்கா? இல்லை வீட்டை சுத்தமா வைச்சிருந்ததுக்கா?? என்று. ஆனால் எனக்கு தெரிந்தவரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் இது போன்ற விஷயங்களை. தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டுமென்றும் திருமண வாழ்த்து சொல்லவேண்டுமென்றும். இதை நிச்சயமாகக் கேட்டு வாங்க முடியாதில்லையா அவர்களால்?

அதுதான், அவ்வளவுதான் சில சில சந்தோஷங்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறேன். சரி என்னைப் பார்த்தாவது சிலர்(குறிப்பாக சில ஆண்கள் :-)) இவனெல்லாம் இவங்க அம்மாவுக்கு செய்றான் நம்ம அம்மாவுக்கு நாம செஞ்சா தப்பே கிடையாதுன்னு நினைத்தால் நான் நினைத்த காரியம் கைகூடிவிட்டதாக எண்ணுவேன்.

துளசி அம்மா எழுதும் பொழுதோ, இல்லை உஷா(அம்மான்னா அடிக்க வருவாங்க :-)) மற்றும் பல பெண் பதிவர்கள் எழுதும் பதிவுகளை படிக்கும் பொழுதும் என் தாயாரை இது போல எழுத வைக்க வேண்டுமென்று நினைப்பேன். நானெல்லாம் கத்துக்குட்டி, விவரம் தெரியாது, என்ன எழுதுறதுன்னு புரியாது. அவங்களெல்லாம் டீச்சருங்க, நான் ஒன்னாம் வகுப்பு படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து பேச்சுப்போட்டி பேசிக்கிட்டு வர்றேன். வயசுக்கேத்த மாதிரி பேச்சுப்போட்டிக்கு ஆழமாவோ கருத்து செறிவாவோ எழுதித்தந்தவங்க அவங்களெல்லாம். எழுத வந்தாங்கன்னா என்னையெல்லாம் தூக்கிவீசிறுவாங்க. அந்த நிலைமை கொஞ்ச நாளில் வருவதற்கு ரெய்மண்ட் ஸ்பென்சரையும்(சம்பளத்தை அதிகமாக்க), பிஎச்யிஎல் க்கு பிராட்பேண்ட் தரும் ஆக்களையும் வேண்டிக்கிறேன்.

இதுதான் நட்சத்திர வாரத்தில் இரண்டாவதாக வரவேண்டியது. அதனால் அப்படியே தருகிறேன். இன்று காதலர் தினமுமாக ஆகிவிட்டதாலும், மதி என்னிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுது இந்த நாளை குறிப்பிட்டு சொல்லியிருந்ததாலும். காதலர் தின சிறப்புப்பதிவாக ஒரு உண்மைக்கதையும் ஒரு கற்பனைக் கதையும் இதனுடன் வெளிவிடுகிறேன் தனித்தனியாக.

ரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதின தலைப்புடன் தொடர்புடைய கதையொன்னை உங்களுக்கு தர்றேன். இது கீற்றுவில் வந்தது, மரத்தடியில் ஆரம்பக்காலத்தில் எழுதியது. மரத்தடி மக்கள் படித்திருக்கலாம். (நிறைய மாற்றியிருக்கிறேன்.)

------------------------------


சொர்க்கவாசல் கதவு - குந்தவை வந்தியத்தேவன்



"திருச்சியில் குஷ்புவுக்கு கோயில் கட்டுனாங்கல்ல அதை அறநிலையத்துறையில் சேர்க்கணும் பெரிய போராட்டமே நடந்தது தெரியுமா உங்களுக்கு?"

உடன் தண்ணியடிக்க வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்த இந்தக் கேள்வி எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய்ப்பட்டது மோகனுக்கு, வேறொரு சமயமாயிருந்தால் மறுத்துக்கூட பேசியிருப்பான் ஆனால் அது சரியான சமயமும் கிடையாது சரியான இடமும் கிடையாது.

அவர்கள் இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கியிருந்த நேரம் அது. அந்த போதை மோகனை எப்பொழுதும் விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. இடையில் அவர்களின் பேச்சை மாற்ற விரும்பிய மோகனுடைய சித்தி,

என்னங்க தெரியுமா இவன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கூட பாத்ரூம் போறதில்லை.

என்னவோ அவன் சித்தியின் நோக்கம் சரியானதுதான். அவர்களுடைய சிக்கலான பேச்சிலிருந்து காப்பாற்றிவிடும் எண்ணமிருந்தாலும் அதுவும் அன்று உதவவில்லை இன்னும் விவகாரமானது.

"வேறென்ன ஹீரோன்னு நினைப்பு, அடிக்கடி பாத்ரூம் போனால் கேவலம்னு நினைத்திருப்பான்." சில சமயங்களில் சில விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத திருப்பத்தை சந்திக்கும் அதுமாதிரிதான் அன்றும். இந்த விஷயத்தை விடாத அவருடைய நண்பரும்.

"ஒரு நாளைக்கு கிளின்டன் எத்தனை தடவை பாத்ரூம் போனான் எந்த பாத்ரூமில் போனான்னு கேட்டாத் தெரியும் சொந்தமா பாத்ரூம் போகத்தெரியாதா?" வளர்த்திவிட்டார்.

தண்ணியடிச்சிட்டா என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், யாரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறந்துவிடவேண்டும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது என்று பட்டது மோகனுக்கு.

நீண்ட அகலமான வீதிகள், சாலையில் இரண்டு பக்கங்களிலும் மரங்கள், ஒரே மாதிரியான ஆனால் அழகுக்காக வேறு வேறு வண்ணத்தில் இருக்கும் வீடுகள் கொண்ட குடியிருப்பு மோகனுடையது. மக்கள் அடுத்த நாளின் வேலையை நினைவில் வைத்திருந்து எட்டு மணிக்கே உறங்கிவிடுவார்கள். அமைதியான அந்த வீதி இன்றும் தெளிவாக மனதில் நிழலாடியது மோகனுக்கு. கூடவே ஜன்னலில் நின்று கொண்டிருந்த அவன் அம்மாவும்.

அவன் தாய் எட்டுமணிக்கெல்லாம் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, ஜன்னலின் அருகில் வந்து நிற்க ஆரம்பித்தால் மோகனுக்கு அடிவயிற்றில் பீதியெழும்ப ஆரம்பிக்கும். அவனுக்கும் அவன் சகோதரிக்கும் உணவு ஏற்கனவே பரிமாறப்பட்டு, தூங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் கண் இமைக்காமல் ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் தாயின் கண்களில் தெரிந்த வெறுமை, பயம், கோபம், இயலாமை அவனை தூங்கவிடாது. ஆனால் இவன் தூங்காமல் இருப்பது தெரிந்தால் உதைபட வேண்டியிருக்கும், பலநாட்கள் செருப்படிபட்டிருக்கிறான்.

அவன் அம்மாவிற்கோ மோகன் தூங்கவேண்டும்; அடித்தால் அழுதுகொண்டே தூங்கிவிடுவான் என்பதால் பாரபட்சம் பார்க்காமல் விழும் அடியில் தூங்கித்தான் போவான் அவனும். ஒன்பது மணிக்கு ஊரையே அளந்து கொண்டு வருவார் அவங்கப்பா, வந்ததிலிருந்தே அவன் அம்மாவிற்கு சோதனைதான், பல சமயங்களில் அவன் அம்மாவின் தலை சுவற்றில் முட்டப்படும் சப்தத்தின் கொடுமை தாங்கமுடியாததாக இருக்கும். கதவு பூட்டப்பட்டிருக்கும் ஆதலாம் வேறொன்றும் செய்வதறியாமல் பூட்டப்பட்ட கதவின் இன்னொரு நின்று கொண்டு அழுது கொண்டிருப்பான். தூங்கிக் கொண்டிருந்தவன் எப்பொழுது எழுந்தான் என்பதறியாமல் அதைப் போலவே மீண்டும் தூங்கிப்போய்விடுவான்.

காலையில் அவன் அம்மா காபி போட்டுக் கொண்டுவந்து தவலையை கீழேவைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தால், புருஷன் பொண்டாட்டி இருவரும் சிரித்துப்பேசிக்கொண்டு தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். வெகுசில நாட்களிலே தான் அவனுக்கு இரவின் தொடர்ச்சியாக பகல் இருந்திருக்கிறது. பல நாட்களில் இரவு வந்தால் வேறுவாழ்க்கை பகலில் வேறுவாழ்க்கை. தினமும் இதே கூத்து, இத்தனை கொடுமையிலும் தற்கொலை என்ற ஒன்றை நினைத்துப்பார்க்காத அவன் தாயைப்பற்றி இப்பொழுது நினைத்தால் அவனுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்காது. உயிரோட இருக்கிறவங்களோட வேதனையை விட தற்கொலை பண்ணிக்கிட்டவங்களோட வேதனை அதிகமான்னு கேட்டால் மோகன் நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்வான், தற்கொலை செய்து கொள்வது வேதனையைப் பொறுத்ததல்ல, மனதைப் பொறுத்தது.

அதே இரவு, அதே வீதி, அதே ஜன்னல், அதே முகம் ஆனால் நிகழ்வுகள் வேறு. சில நாட்கள் எங்கோ விழுந்து கிடந்த அவன் தந்தையை சுமந்து கொண்டு ஆட்டோ வரும். சில சமயங்களில் அவன் தந்தை இங்கே விழுந்து கிடக்கிறார் என்று செய்தி கொண்டு ஆட்கள் வருவார்கள். அந்த இரவில் தனியாளாக அவன் அம்மா புருஷனை அழைத்துவருவதற்கு ஆள்தேடி கிளம்புவார். வீட்டிற்கு அழைத்து வந்ததும் சாதத்தை பிசைந்து கூளாக்கி, வெறும் வயிறா படுக்கக்கூடாதுன்னு ஊட்டிவிட்டு அப்பப்பா பெரும்பாடு.

அதெல்லாம் மோகனுடைய வாழ்க்கையின் கொடுமையான நாட்கள் இத்தனையும் பத்தாதென்று எல்லா குடிகாரர்களையும் போல் தன் மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிக்கும் கணவனாக பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் இரவில் தனிஅறையில் பூட்டிவைக்கும் என்னுமொறுகொடுமை.

அதுவரை புருஷனிடம் அடி, உதைபட்டு வரும் அவன் தாய்க்கு அடுத்து அவன் சகோதரியின் வசவு தொடங்கும் அவசரத்திற்கு பாத்ரூம் போகமுடியாத சோகம் அவளுக்கு. தாயைப்பற்றி என்னென்ன பேச்சுக்கள். மோகனுக்கோ கேட்கவே பொறுக்காது. இதன் காரணங்களால் தண்ணீர் குடிப்பதையே மறந்து போன மோகன் கூட சில சமயங்களில் அவன் தாயை நச்சரித்திருக்கிறான் அவசரத்திற்கு. கணவனை எழுப்ப பயப்படும் அவன்தாய், வேறுவேறு வழிகளை ஏற்பாடு செய்வார், ஜன்னலுக்கு மேலேர்ந்து, பீரோவுக்கு பின்னார், பெட்ஷீட்டிற்குள் இப்படியெல்லாம் ஆத்திரத்தை அடக்கியிருக்கிறார்கள்.

இந்தக்காலம் எல்லாம் மாறியது, அதெல்லாம் மோகனின் அப்பாவிற்கு ரத்தம் வேகமாக ஓடிய காலங்கள், இரத்தம் சுண்டத் தொடங்கிய பிறகு கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை பயம் விட்டுப்போய் கதவைத் தட்டியிருக்கிறார்கள் அவசரத்திற்கு. வீட்டிற்குள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார் மோகனின் அப்பா, ஒருமணிநேரம் அடி அதிகமாக விழுந்தாலும் மோகன் அவன் தாயை அந்த ஜன்னலின் பக்கத்தில் அதற்குப்பிறகு பார்த்ததில்லை. இன்னமும் ஆளரவமற்ற ஜன்னலைப்பார்த்தால் பித்துப்பிடித்தார்ப் போல் நின்றுவிடும் மோகனின் மனம் பலருக்கும் புரியாது.

இளங்கலை முடித்துவிட்டு வேலைபார்க்கும் மோகன், இன்றும் பூட்டப்பட்டிருக்கும் அவன் வீட்டு கதவு அம்மாவிற்காக அக்காவிற்காக எதையும் கேட்கயியலாமல் கோழையாய் இப்பொழுது டெல்லியில். அவனுடைய கோபங்களை எப்பொழுதாவது கதையெழுதிதான் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

கோழை என்று பெயரளவில் சொல்லிவிட்டாலும் கூட இன்றும் கேட்டுவிடமுடியும் மோகனால். ஆனால் அவன் தாய் இத்தனை வருடம் கஷ்டப்பட்டது வீணாய்ப்போய்விடும். அவனும் அவன் சகோதரியும் அதன் பிறகு பெரிய நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் வளர்ந்த நிலை அப்படி. ஆனால் அவன் தந்தையை நினைத்துத்தான் பயந்திருக்கிறான். அவன் தாய் இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர். இது தெரியாதவரும் இல்லை அவர். ஆனால் போதை இதையெல்லாம் மறக்கச் செய்துவிடும்.

இன்று, திறந்தேயிருக்கும் கதவு, வந்து கொண்டேயருக்கும் தண்ணீர், அழகான வேலைப்பாட்டுடன் பாத்ரூம் வந்துதான் தொலைக்கமாட்டேன் என்கிறது இங்கே ஒரு முறைக்கு மேல். ஸ்ரீரங்கத்தில், திருச்சியிலென மாறிமாறி அவன் இருந்த காலங்களில் சொர்க்கவாசல் திறக்கும் பொழுது மட்டும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போவதுண்டு, கடவுள் நம்பிக்கையில்லாத மோகன் சொர்க்கவாசல் நாளில் மட்டும் கோயிலுக்கு போவது ஏதோவொறு நம்பிக்கையில் அவன் வீட்டுக்கதவும் திறக்குமென்றுதான்.

-------------------------------

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சிறுகதை நட்சத்திரம்

நட்சத்திரம் - வாசகர் சாய்ஸ் & லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்

“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”

கௌசல்யா இப்படி சொல்லிக் கொண்டிருக்க எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.

அதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய அம்மா அதாவது எங்க அக்கா, புருஷன் வீட்டில் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்ததுதான் அதிகம். இவளை எனக்கு தக்குணோண்டு இருந்ததில் இருந்து தெரியும். இன்றைக்கு இப்படி பேசியது வேடிக்கையாகயிருந்தது.

பாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து கையைப் பிடித்தது கோபமேற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. சொந்த அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப்போகிறவன் ஊர் உலகத்திற்கே தெரிஞ்சது தான் இது. திருச்சியில் நாங்க சுத்தாத இடமா, பேசாத பேச்சா, கொடுத்துக்காத முத்தங்களா?

மீண்டும் வம்பிழுக்கும் நோக்கத்தில் அவள் கையைப்பற்றி இழுக்க,

“டேய்.”

“என்னது டேய்யா?”

“ஆமாண்டா...”

“என்னாடி இன்னிக்கு ரொம்ப ஓவராத்தான் போகுது. நானும் போனாப்போகுது போனாப்போகுது, நாம பார்த்து வளர்த்தப் பொண்ணுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆய்டுச்சு இன்னிக்கி. டா போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியா? என்னாடி ஆச்சு உனக்கு.”

நான் கேட்டதும் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர். எனக்கோ பயமாகிப்போய்விட்டது, அப்படியொன்றும் மைக்கேல் ஐஸ்கிரீமில் எங்களைத் தெரியாதவர் கிடையாது. குடும்பத்துடன் வந்தும் சாப்பிட்டிருக்கிறோம், தனியாகவும் வந்திருக்கிறோம். இருந்தாலும் கூடவந்திருக்கும் பொண்ணு அழுதுச்சுன்னா அவ்வளவுதான் நம்மளை போட்டுத்தள்ளிருவாங்கன்னு நினைச்சிக்கிட்டே, அவளை வெளியே தள்ளிக்கொண்டுவந்தேன்.

வெளியே வந்ததும், என்னை ஒன்றுமே கேட்காமல் நேராய் மலைக்கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினாள், மொட்டைவெய்யலில் உச்சிப்பிள்ளையார் படிக்கட்டொன்றில் உட்கார்ந்தாள், நானும் அருகில் உட்கார்ந்ததும். அழுத மேனியாய்,

“நேத்திக்கு நைனாக்கிட்ட என்ன சொன்னீங்க?”

அவள் கேட்டதும் தான் எனக்கு விஷயமே புரிந்தது. ஆகா இதுதான் மேட்டரா, அதான் பொண்ணு பிலிம் காட்டுதுன்னு நினைத்தவனாய். ஒன்றுமே புரியாததைப்போல,

“நான் பாவாக்கிட்ட என்ன சொன்னேன்.”சிறிது யோசிப்பதுபோல் இருந்துவிட்டு, ”உண்மையிலேயே மறந்து போச்சு, நீங்கதான் உங்க காலேஜிலேயே மனப்பாடம் பண்ணுறதுல கெட்டிக்காரியாமே நீயே சொல்லு?” நான் அவளைச் சீண்ட.

“நைனாக்கிட்ட நேத்திக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்களாம். நேத்தெல்லாம் தண்ணியடிச்சிட்டு ஒரே ரப்சரு. இனிமே உங்களைப் பார்க்கக்கூடாதுன்னு வேற நைனா சொன்னிச்சு. ஏன் வேற யாராவது வெள்ளத் தோலுக்காரியை சிக்கிக்கிட்டாளாக்கும்.”

மனதிற்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியில் கோபப்பட்டவனாய்,

“உதைபடப்போற பார்த்துக்கோ, யார் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியலை உனக்கு. உங்கம்மா என்ன வளர்த்துருக்கா உன்னை. வெள்ளத்தோலுக்காரியாமுல்ல, அமேரிக்காவுல உண்மையான வெள்ளக்காரியே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கியூவில் நின்னாலுங்க. நான்தான் அக்கா பொண்ணுக்கூட ஊரெல்லாம் சுத்தியிருக்குறோமே, நாளைக்கு நாம கைவிட்டுட்டா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சு அதையெல்லாம் விட்டுட்டு, இந்த வேப்பெண்ணை பின்னாடி கைகட்டிக்கிட்டு, லோலோன்னு 12 மணி வெய்யலில் அலைஞ்சு, மொட்டை வெய்யலில் மலைக்கோட்டையில் உக்காந்திருக்கேன்.” சொல்லிவிட்டு சிரிக்க.

“வேப்பெண்ணைதான் நாங்கல்லாம், வேப்பெண்ணைதான். ஏன் அமேரிக்காவில் வெள்ளக்காரியையே கட்டிக்கிறது யாரு வரச்சொன்ன தமிழ்நாட்டுக்கு. பொய்யப்பாரு, வெள்ளக்காரி கிடைச்சாளாம், உங்க மூஞ்சிக்கு கருப்பிங்க கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டாளுங்க. ஏதோ மாமனாச்சே நாமளே கல்யாணம் பண்ணிக்கிலைன்னா வேற யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. உங்களுக்கு ஒரு வெள்ளக்காரி கிடைச்சா எனக்கொரு வெள்ளக்காரன் கிடைக்கமாட்டானா என்ன?”

ஒருவழியாய் சமாதானம் ஆகிவருவதைப் போலிருந்ததால் நானும் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு, அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் விட்டவள்,

“இங்கப்பாருங்க, இந்த ஏமாத்துற வேலையெல்லாம் ஆவாது. மரியாதையாய்ச் சொல்லுங்க, நேத்தி நைனாக்கிட்ட அப்படி சொன்னீங்களா? இல்லையா?” அவள் தலைமுடியை இழுத்தபடி கேட்க. நான்,

“ஆமாம் இருக்குறது நாலு முடி, அதையும் பிச்சுறு. அப்புறம் கல்யாணத்தன்னிக்கு டோப்பா வைச்சிட்டுத்தான் உக்காரணும்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னதும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிரித்தவள். இரண்டு படி இறங்கிவந்து என்னருகில் உட்கார்ந்து தலையை தோளில் சாய்த்தவாறே,

“பின்ன அப்படி ஏன் சொன்னீங்க. அதைச் சொல்லுங்க.”

“இங்கப்பாரு கௌசி, பெரியவங்க விவகாரத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. உனக்குத் தெரியுமுல்ல உன்னையில்லாம இன்னொருத்தியை நான் நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்னு அப்புறமென்ன. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம் நீ பேசாம இரு.”

நான் சொன்னதும் தோளிலிருந்து சற்றே முகத்தை விலக்கி என்னைப்பார்த்தவள்,

“நைனாக்கிட்ட வரதட்சணைப்பத்தி பேசப்போய் ஏதாச்சும் பிரச்சனையா?” அவள் கேட்க ஓங்கி பளிரென்று கன்னத்தில் ஒன்னு கொடுக்கணும் நினைச்சேன். பின்னால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாய்.

“எனக்கு இந்த வேப்பெண்ணைக்காரி மட்டும் போதும். என்னைப் போய் வரதட்சணை வாங்குறவங்க லிஸ்டில் சேர்த்துட்டியே. உருப்புடுவியா நீ?” நான் கொஞ்சம் உற்சாகம் குறைந்தவனாய் சொல்லத்தொடங்க, இடை மறித்தவள்.

“என்னையும் பிடிச்சிறுக்கு, பணமும் வேணாம் வேறென்னத்தான் அப்படியொரு பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு.” கேட்டதும் என் நினைவெல்லாம் பின்னோக்கி சென்றது. இதே கௌசியோட அப்பா, எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடிச்ச கூத்து சின்னவயசாயிருந்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு.

அப்ப எனக்கு ஏழோ எட்டோ வயசிருக்கும், எங்க அப்பா அம்மாவிற்கு கடைசி பிள்ளை நான், கௌசியோட அம்மா முதல் பொண்ணு, அவங்களுக்கு அப்புறம் நாலு புள்ளைங்க பிறந்து இறந்து போக, அதுக்கப்புறம் எங்க சின்னக்கா, அதற்குப்பிறது சங்கரண்ணன். அப்புறமா நான். சொல்லப்போனால் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடிவரைக்கும் கௌசியோட அம்மாத்தான் என்னை வளர்த்தது.

இத்தனைக்கும் கௌசியோட அப்பா அதான் எங்க மாமாவொன்னும் தூரத்து சொந்தமெல்லாம் இல்லை, எங்க அம்மாவோட அண்ணன் பையன் தான். அதாவது கௌசியோட அம்மாவும் அப்பாவும் அத்தைப்பொண்ணு மாமாப்பையன் உறவுமுறைதான் வேணும். அந்தக்காலத்திலேயே எங்க பாவா, பெரிய வேலை பார்த்து வந்தாரு, எங்கப்பாவோ ரிட்டைர் ஆகியிருந்த சமயம். அதுமட்டுமில்லா, பாவா கொஞ்சம் கலரு, எங்கம்மா மாதிரி, எங்கக்கா கொஞ்சம் கருப்பு எங்கப்பா மாதிரி.

அவ்வளவுதான், மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து, மூன்றாம் நாள் மறுவீடு அழைப்பு வரைக்கும் எங்க பாவா பண்ணின அளும்பு, மூவாயிராம் கையில் கொடுத்தாத்தான் தாலி கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நிற்க, அந்த சமயம் அப்பாபோய் மோதிரத்தை அடகு வைச்சு மூவாயிரம் எடுத்துட்டு வந்தது இன்னமும் கண்ணிலேயே நிற்கிறது. அது அப்படியே இன்னிக்கு வரைக்கும் தொடர்கிறது. இப்படித்தான் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை முருக்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க, அப்படியொரு முருக்கு. அதான் கொஞ்சம் போல் பழிவாங்கணும் அப்படி சொல்லியிருந்தேன். இதை இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன். என்னயிருந்தாலும் அப்பா. இவங்கம்மாவே இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் புருஷனை விட்டுக்கொடுக்க மறுக்கும் பொழுது. அப்பாவா அவரோட கடமையை முழுமையா செஞ்ச அந்த மனுஷனை கௌசி எப்படித்தான் தப்பா புரிஞ்சிப்பா.


நானும் அன்றைக்கு காரணம் எதையும் சொல்லாமல் கௌசியை பேசி அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் பிடிவாதமாய் இருந்தாள்,

“இங்கப்பாருங்க பாவா, உங்களுக்கு உண்மையிலேயே புரிலையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களான்னு தெரியலை. நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கன்ற தைரியத்தில் உங்கக்கூட சுத்தாத இடம் கிடையாது. இதெல்லாம் ஒரு நம்பிக்கையில் தான். இன்னிக்கு வந்து பட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னு கேள்விப்பட்டதும் அப்புடியே யாரோ மனசுல ஆணியடிக்கிற மாதிரி இருந்துச்சு. அம்மாதான் தைரியம் சொன்னிச்சு, படவா ராஸ்கல், உங்க நைனா மட்டும் தனியா இருக்கிற நேரமாப் பார்த்து சொல்லிட்டு போயிருக்கான். என் முகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லு பார்ப்போம்னு சொன்னிச்சு. அதுமட்டுமில்லாம அவன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லட்டும் நான் அவனை கடத்திட்டு வந்து உங்க கல்யாணம் நடத்திவைக்கிறேன்னு சொன்னதும் தான் கொஞ்சமா தேறினேன்.

ஆனால் திரும்பவும் உங்களை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் வந்துச்சே கோபம். அதான் கண்டபடிக்கு திட்டிட்டேன். பாவா நான் டேய் வாடா போடான்னு சொன்னதாலல்லாம் கோச்சுக்கலையே. எப்படியோ போங்க நீங்களாச்சு உங்க பாவாவாச்சு. என்னக் காரணம்னு என்கிட்டயாவது சொல்லிடுங்க.”

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அன்று மாலை காரணத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினேன். நான் இதைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தவளிடம்.

“இங்கப்பாரு சிரிக்கிறது முதல்ல நிறுத்து, ஏற்கனவே கட்டிக்கப்போறவனை வாடா போடான்னு பேசுற பொண்ணு தேவையான்னு யோசிச்சிட்டு இருக்கேன். வாணாம் விட்டுறு. காலையில் பேசினதுக்கும் இப்பவே சரி செஞ்சிட்டு போகலைன்னா அப்புறமா நான் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிறுவேன். எங்க கணக்க தீர்த்துக்கோ பார்க்கலாம்.”

“ம்ம்ம், ஆசை தோசை அப்பளம் வடை. இரு இரு நான் உன்னை அம்மாச்சி, தாத்தாகிட்ட போட்டு கொடுக்குறேன். அசிங்கம் அசிங்கமா பேசுறேன்னு.” அவள் முடித்ததும்.

அவளை அவள் வீடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, கன்னம் சிவக்க எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்தேன். அடுத்த மாதம் எங்களிருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்த முதலிரவில்,

“ஆமாம் உன் பழிவாங்குற நடவடிக்கையெல்லாம் என்னாச்சு.” அவள் ஒய்யாரமாய்க் கேட்க, பெண்ணழகில் மயங்கி லட்சியங்களைக் கோட்டைவிட்ட இன்னுமொருவனாக,

“இல்லடி அடுத்தநாள் உங்கப்பாவை நேரில் பார்க்கிறப்ப. உங்கப்பா பாவமா ஒரு லுக்கு கொடுத்தாரே பார்க்கணும். சில பேரு சில மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க பாவா முருக்கிக்கிட்டிருந்தாதான் நல்லாயிருக்கும்னு உன்னைக்கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்.”

இப்படியாக இன்னுமொறு காதல் கதை சுகமாக முடிக்கப்பட்டது.

PS: இந்தக் கதையில் கருப்பி, வெள்ளைக்காரி என்று நான் குறிப்பிட்டிருப்பது ஒரு சகஜமான உரையாடலை கொடுக்கவே. யாரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிறுகதை நட்சத்திரம்

நட்சத்திரம் - உண்மைக் காதல்

மக்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள். முன்பே ஒரு முறை நான் காதலித்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன். அது கொஞ்சம் சின்ன வயசு என்றால் என்னுடைய அடுத்த காதலும் அப்படியே இதுவும் சின்னவயசுக்காதல் தான். இதக் காதலான்னு கேட்டா எனக்கு பதில் சொல்லத்தெரியாது ஆமாம் சொல்லிட்டேன்.

அப்ப வந்து, நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு எக்ஸாம் எல்லாம் எழுதிக் கிழித்துவிட்டு, என்ட்ரென்ஸ்க்காக படித்துக் கொண்டிருந்தேன். அங்கே தான் அந்த தேவதையைப் பார்த்தேன் அப்படின்னு கதையெல்லாம் சொல்லலை. அந்தப் பொண்ணைப் பார்த்தேன் இன்னும் அந்த முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவங்க மாமான்னு நினைக்கிறேன் நான் என்ட்ரென்ஸ் எக்ஸாமுக்கு படிச்ச அதே சென்ட்டரில் சேர்க்கிறதுக்கு வந்திருந்தாரு. முதல் நாள் என்பதால் சும்மா இன்ட்ரொடக்ஷன் போய்க்கிட்டிருந்தது.

ஏன் இதை சொல்றேன்னா அந்தப் பொண்ணு இங்கிலீஷ் மீடியம், நானோ பாழாய்ப்போன தமிழ்மீடியம், (இந்த பாழாய்ப்போனவிற்கான அர்த்தம் அப்புறம்). சுத்திசுத்தி பார்த்து எங்கேயுமே சேர் இல்லாம என் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தாள். ரொம்ப தீவிரமா நான் அவ்வளவு நாளா ஒன்னும் பண்ணியிருக்காம, அன்னிக்குன்னு பார்த்து ஆர்இஸி லெக்சரர் ஒருத்தரு கருப்பா, ஹைட்டா இருப்பாரு அவர் கொடுக்குற லெக்சரை நோட் எடுத்துக்கிட்டிருந்தேன்.

அவ வந்து உட்கார்ந்ததும் திரும்பிப்பார்க்க, அவள் என்னைப்பார்த்து சிரித்தாளே பார்க்கணும் அன்னிக்கு விழுந்தவன் இன்னும் எழுந்திருக்கவேயில்லை. எப்படின்னு கேக்குறீங்களா, இன்னிக்கு வரைக்கும் அந்தப் பொண்ணோட பேர் தான் என்னோட பாஸ்வேர்ட். அப்படியே விட்டிருந்தால் கூட என்னமோ கொஞ்ச நாளைக்கு சைட் அடிச்சமா, மறந்தமான்னு இருந்திருப்பேன். அவளோ தன்னோட பேரைச்சொல்லி என்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டா பாருங்க அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.(பேரைச் சொல்லாதது என் பாஸ்வேர்ட் ஸீக்ரஸிக்காக.)

நானும் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள, முடிந்தது முதல் சந்திப்பு. இங்க தான் நான் சொன்ன அந்த பாழாய்ப் போன மேட்டர் வரும். அதென்னான்னா ஆங்கிலத்தில் படித்தங்களுக்கு தனியாவும் தமிழில் படித்தவங்களுக்கு தனியாவும் அவங்க பாடம் எடுத்தாங்க. கூட இருந்ததே சுமார் ஒரு மாதம் தான் அதிலேயும் தனித்தனியா ரொம்பக் கொடுமை ரொம்பக் கொடுமை.

மனசு கேக்குமா அப்புறம் படிப்பு போனாப்போகுதுன்னு ஒன்னுமே புரியாத ஆங்கில பயிற்சி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன் கொஞ்ச நாள். ஆனால் அட்டென்டென்ஸ் எல்லாம் எடுப்பாங்க அவங்க. அதிலெல்லாம் சமாளஇச்சு தான் உட்கார்ந்திருந்தேன். ஆனா அங்க பார்த்தீங்கன்னா கொடுமையிலும் பெருங்கொடுமையா, ஆர்கானிக் கெமிஸ்டிரி, இன்ஆர்கானிக் கெமிஸ்டிரி, பாரபோலா, ஹைப்பர் போலா, கர்வ், பர்ப்ன்டிக்குலர் அப்படின்னு ஒரே புரியாத பாஷையில் பேசிக்கிட்டிருப்பாங்க. சரி இதுதான் போவுது படிப்பு இப்ப யாருக்கு முக்கியமுன்னு நானும், பண்ணுங்கடா, பண்ணுங்கடா இதுவும் எத்தனை நாளைக்குன்னு தெனாவட்டா எல்லாம் புரிஞ்சமாதிரி வடிவேலு கணக்கா உட்கார்ந்திருப்பேன்.

அதிலேயும் பிரச்சனை, அப்பப்ப எழுப்பி கேள்வி வேற கேப்பாங்ய அங்க அதுவும் ஆங்கிலத்தில், அப்பல்லாம் இங்கிலீஷில் பெருசா பேசுற ஒரு வாக்கியம் ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனஸின்ஸ் அப்படிங்கிறது மட்டும்தான். இந்த நிலைல அவன் என்ன கேக்குறான்னு புரிஞ்சு, அது முதல்ல எனக்கு தமிழ்ல தெரிஞ்சு நான் இங்கிலீஷில ட்ரான்ஸிலேட் பண்ணி கிளிஞ்சது கிருஷ்ணகிரி வேறென்ன. இதெல்லாம் இப்படியிருந்தாலும் கணக்குல மட்டும் நம்மல அடிச்சிக்க முடியாது. கேள்வி கேட்டு முடிக்கிறதுக்குள்ள பதிலை சொல்லிட்டு நம்மாளை வேற திரும்பி பார்க்குறது. ஒரே அலம்பல்தான் கணக்கு கிளாஸ்னா மட்டும். ஏன்னா அங்கே தமிழ் ஆங்கிலம்னு அவ்வளவு பெரிய பிரச்சனை வராது.

இன்னும் அந்தப் பொண்ணு நினைவில் இருக்குறதுக்கு முக்கிய காரணம், அந்தப் பொண்ணும் என் கிட்ட நின்னு பேசினதுதான் காரணமாயிருக்கும். அப்பல்லாம் பித்து பிடிச்சமாதிரி அலைஞ்சிருக்கேன். அந்தப் பொண்ணு எப்படா ப்ரெண்ட்ஸ்களை விட்டுட்டு தனியா வரும்னு பார்த்துட்டு பின்னாடியே போய் பேசுறது. கணக்கு புரிஞ்சுதா, அது புரிஞ்சுதா? இது புரிஞ்சுதா? இப்படி. அந்தப் பொண்ணு என்ன நினைச்சிருக்கும்னு எல்லாம் தெரியாது. ஆனால் பதில் சொல்லும். நின்னு பேசும் அவ்வளவுதான் அந்த வயசுல இது போதாதா? காதல் தான், நிலைக்கண்ணாடிதான்.

ஆறு வருஷம் ஆனதால நிறைய விஷயங்கள் மறந்துவிட்டது, நினைவில் இருக்கும் முக்கியமான ஒரே ஒரு விஷயம். ஆர்இஸியில் மாக் டெஸ்ட் ஒன்று வைத்தார்கள். என்ட்ரென்ஸ் மாதிரியே, இன்னும் நினைவில் இருக்கிறது. முதல் டெஸ்ட் எழுதலை அது வந்து பிஸிக்ஸ்னு நினைக்கிறேன். அப்புறமாத்தான் அந்தப்பொண்ணு எழுதப் போயிருக்கான்னு தெரிஞ்சு கஷ்டப்பட்டு காசு சேர்த்துத்துட்டு போய் மீதி டெஸ்ட் எழுதினேன்.

நீங்களா போய் உங்களுக்கு பிடிச்ச இடத்தில் உட்கார்ந்து எழுதலாம், நான் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். உக்கார்ந்ததிலேர்ந்தே அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரே கடலை. பேனா கொடு, ரப்பர் கொடு அப்படின்னு. நாமத்தான் ஒரு இடத்தில் உக்காருவோமா அரை மணிநேரத்தில் எல்லாம் முடிச்சிட்டு, ஆன்ஸர் பேப்பரை கொடுத்தேன். ஆர்இஸி லெக்சரர்ங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னு எல்லாம் இப்ப கவலைப்படுற மாதிரி அப்ப கவலைப்படவில்லை.

ஒரே விஷயம் அவளோ கவனத்தை கவரணும் அதுதான். அப்பத்தான் ஒரு விஷயம் நடந்தது. அதாவது ஒரு நல்ல பயிற்சித்தேர்வா அது இருக்கணும்னு நினைச்ச ஆர்இஸி மக்கள் அந்தத் தேர்வுக்கான விடைகளையும் ஒரு பேப்பரில் அச்சடித்துக் கொடுத்தார்கள். நாமத்தான் ஒரு மணிநேரத்தில் வெளஇய வந்திட்டமா. எனக்கு மொதல்ல அந்த ஷீட்டைத்தந்தாங்க. உடனே உதிச்சது ஒரு ஐடியா, வாட்சை மறந்திட்டேன்னு சொல்லி திரும்பவும் உள்ளே வந்து அந்தப் பெண்ணிடம் ஆன்ஸர் பேப்பர் இருக்கு வேணுமா? வேணுமான்னு கேட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் தேடுறதப்போல கடலைப் போட்டுக்கிட்டிருந்தேன். அவளோ வேணான்னு சொல்லிட்டா, நாம சும்மாயிருப்போமா அவ சீட்டில் வைச்சிட்டு வந்திட்டேன். அப்புறமென்ன டெஸ்ட் எழுதிட்டு வந்ததும் இதப்பத்தி ஒரு இரண்டு மணிநேரம் கடலை.

அப்புறமென்ன இப்படியே ஓடிப்போன நாட்களுடன் என் இன்ஜினியரிங் ஆசையும் ஓடிப்போய்விட்டது. பின்ன பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டிருந்தா இன்ஜினியரிங் ஸீட் எங்க வாங்குறது. கடைசி நாள் நான் அவளுக்கு ஒரு ஓவியம் வரைந்து பரிசளித்துவிட்டு என்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை அவளிடமும் கொடுத்தேன். அவ்வளவுதான் முடிந்துவிட்டது எங்கள் பழக்கம். அதற்குப்பிறகு நான் யாரோ அவள் யாரோ.

என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் உண்மையான என்னுடைய காதல் என்றால் இதைத்தான் சொல்வேன். அதன் பிறகு காதலிக்காததற்கு பல காரணங்கள். ஒருவேளை என் முகம் பார்க்கும் கண்ணாடி அப்பொழுது தான் வேலையை சரியாக செய்யத் தொடங்கியிருக்கலாம். ப்ரொக்கிராமை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் இன்புட் அவுட்புட் விஷயமாக நான் பார்க்கத் தொடங்கியதாகயிருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை நீங்கள் கணக்குப் போடத்தொடங்கிவிட்டால் காதலிக்க தகுதியற்றவர்களாகிறீர்கள். நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரியில் நுழைந்ததுமே கணக்குப்போட ஆரம்பித்துவிட்டேன். அப்படியும் இல்லாமல், உங்கள் வீட்டிலோ, இல்லை மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டிலோ காதலால் பெரும் பிரச்சனை வந்திருந்து அதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும் காதலிக்க முடியாது. அதுபோன்ற விஷயத்தால் கூட நான் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை என்னுடைய இந்த இரண்டு காதல்களும் மிகவும் பிடித்தமானவை. உண்மைக்காதல் எப்பவுமே சப்புன்னுதான் இருக்கும். இல்லையா???

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - அட நான் தான்

"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உரையைத் தொடங்குகின்றேன்.

நினைத்த நிமிடத்திலே ஆயிரம் ஆயிரம் கவிதைகளை அள்ளித்தருவாயே தாயே, தமிழே உன்னை வணங்காமல் இருப்பேனா? உன்னைப்பாடாமல் இருப்பேனா?

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்
மீதொளிரும் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் - சிலம்பாரின்பப்
போதலிர்ப்பூந்தாழினையும் பொன்முடி சூளாமணியும் - பொலியச்சூடி
நீதியொளிரும் செங்கோலாய்த் திருக்குறளைத்தாங்கும் தமிழ் நீடுவாழ்க.

தமிழுக்கு என் வணக்கம்

நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நீதி வழங்க வந்துள்ள நீதிபதி அவர்களுக்கும் என் வணக்கங்களைக்கூறி என் உரையைத்தொடங்குகின்றேன்."

என்னுடைய பேச்சுப்போட்டிகளை இப்படித்தான் தொடங்குவது வழக்கம். அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்ததில் கிடைத்த பல நல்லவிஷயங்களில் இந்த திறமையும் ஒன்று. ஒரு வாரம் தொடர்ச்சியாய் எழுதும் பொறுப்பை நட்சத்திரமாக தமிழ்மணம் என்னை தேர்ந்தெடுத்ததில் ஏற்றிருக்கிறேன். அந்த ஆயிரம் பேர்களும் நீதிபதிகளும் நீங்கள் தான், இது போட்டியில்லை என்றாலும் தவறிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டியவர்கள் என்பதை சொல்லவந்தேன்.


இந்த பதிவில் இரண்டு விஷயங்களை சொல்ல நினைத்திருக்கிறேன். முதலாவது என்னைப்பற்றிய சுயவிளம்பரம். இரண்டாவது என் வாழ்க்கையில் நடந்த, நான் மறக்க நினைக்கும், ஆனால் மறக்க முடியாத ஒரு நாளைப்பற்றியது. இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது தொடர்ந்து படித்தால் புரியும்.

இனி முதலாவது, நான் முதன் முதலில் திருவிளையாடல் தருமி வசனத்தை தனிநபர் நாடகமாக அரங்கேற்ற மேடையேறிய பொழுது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தால் இது சர்வ சாதாரணம். அதேபோல் அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமானது கிடையாது. தினமும் காலையிலிருந்தே மனப்பாடம் செய்து வந்த வசனங்கள் ஆதலால் பிரச்சனையெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. நல்லபடியாக பேசி பரிசு வாங்கியிருந்தேன். ஆனால் அதே வயதில் நடந்த இன்னொரு சுவையான சம்பவம் உண்டு அது, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியின் பொழுது நடந்தது.

இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் இரண்டு அதிகாரம் மனப்பாடம் செய்து, அதிலிருந்து கேட்கப்படும் ஒரு முழு அதிகாரத்தைச் சொல்லவேண்டும். இதுதான் போட்டி. எனக்கு கடவுள்வாழ்த்து சொல்லவேண்டி வந்திருந்தது. முதல் ஆறு குரள்களைச் சரியாகச் சொன்ன நான் ஏழாவது தெரியாமல் சிறிது திகைத்து பின்னர் சிறிதும் கவலைப்படாமல் நடுவரிடமே ஏழாவது குரளின் ஆரம்பத்தைக்கேட்டு பின்னர் அதன் தொடர்ச்சியாக பத்தையும் முடித்தேன்.

அந்த காலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே சிறிதும் மேடைப் பயமில்லாமல் நான் நடந்து கொண்டது நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்திருந்தது. எப்படியென்றால் அப்பொழுதிருந்த அதே நடுவர் பின்னர் நான் பத்தாவது படிக்கும் பொழுது நடந்த பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற என் பெயரை அறிவித்து விட்டு இந்த நிகழ்ச்சியை மேடையில் சொல்லிப்பாராட்டினார் இப்படி.

என்னிடம் ஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கே உரிய சில விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அது நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதாடும் குணம். பாலகுமாரன் ஒரு முறை சொல்லியிருந்ததாக ஞாபகம், டீச்சருங்களுக்கு எந்த பிரச்சனையையும் தங்களால் தீர்த்துவிடமுடியுமென்ற நம்பிக்கையிருக்கும் என்றும் அது தான் ஆசிரியர்களின் பெரிய பிரச்சனையென்றும். வீட்டில் இருவருமே ஆசிரியர்களாகயிருந்ததால் அந்த பிரச்சனை எனக்கும் இருந்தது.

எந்த விஷயமாயிருந்தாலும் மூக்கை நுழைக்கிறதும் அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன் பேர்வழின்னு பேசுறதும். இதெல்லாம் ஆரம்பக்காலத்தில் அப்பொழுதெல்லாம் என்னைச்சுற்றி மக்கள்கூட்டம் இருந்துக்கிட்டேயிருக்கும். ஏற்கனவே எனக்கு எட்டுக்கட்டையில், குரல். நான் சாதாரணமாப் பேசினாலே ஊருக்கெல்லாம் கேக்கும், அப்படியொரு குரல். சின்ன வயதில் பேசியவர்களின் பெயர்களை கிளாஸ் லீடர் எழுதினால் முதல் பேர் நம்மோடதாத்தான் இருக்கும். பிராக்கெட்டில் அவி(அடங்கவில்லை) மிமிஅவி(மிகமிக அடங்கவில்லை) இப்படி மிமி அதிகரித்துக்கொண்டேபோகும் அளவிற்கு பேசுவேன் நான்.

ஆனால் இதன் காரணங்களாலெல்லாம் எனக்கு நிச்சயமாகக் கெட்ட பெயர் கிடைத்ததில்லை, ஆனால் நிறைய நல்ல பெயர் எடுத்திருந்தேன். அதுவரை பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் மட்டும் பரிசு பெற்று வந்த நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதுன்னு நினைக்கிறேன்; திருச்சியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் வாங்கியிருந்தேன். அதிலிருந்து ஒருஅடி உசரமாத்தான் நடந்து வந்தேன். அப்புறமென்ன இரண்டுவருஷத்துக்கு போற இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பரிசு.

பேச்சுப்போட்டிக்கென்று சில சூட்சமங்கள் உண்டு. தலைப்பை பற்றித்தான் பேச வேண்டுமென்பது கிடையாது. சில பொதுவான விஷயங்களை எல்லா இடங்களிலுமே பேசலாம். எப்படியென்றால் முன்பு கூறியது போல் முன்னுரை பாட்டு எல்லாம் முடிஞ்சு தலைப்புக்கு வர்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகிவிடும். பின்னாடி முடிவுரைக்கு ஒரு நிமிஷம். மீதியிருக்கும் மூணு நிமிஷத்தில் தலைப்புக்கு இரண்டு நிமிஷம், மற்ற பொதுவான விஷயங்கள் ஒரு நிமிஷம். இவ்வளவு தான் பேச்சுப்போட்டி. அந்த இரண்டு நிமிட தலைப்பு விஷயம் மட்டும் தான் பெரும்பாலும் போட்டிகளில் மாறும். மற்றபடிக்கு எல்லாம் ஒரே விஷயம் தான் பேசப்படும்.

கூட்டத்தில் ஒரு மூலையைப்பார்த்து பேசாமல் இடையில் குழம்பி நிற்காமல், 'சீ' என்று சொல்லாமல் தடுமாறாமல் கணீரென்று பேசினால் போதும் பரிசை வாங்கிவிடலாம்.

"காந்தி சிலையின் கீழ் சாராயக்கடை
மனு கொடுத்ததும் தூக்கப்பட்டது"

என்று சொல்லிவிட்டு சற்று நிறுத்தி மக்களைப்பார்க்க வேண்டும், பின்னர் அதே குரலில்,

"காந்தி சிலையின் கீழ் சாரயக்கடை
மனு கொடுத்ததும் தூக்கப்பட்டது"
சற்று நிறுத்தி
"தூக்கப்பட்டது காந்தி சிலை"

இவ்வளவுதான் விஷயம். ஒரேஅப்லாஸ் தான்.(இதை ஆரம்பித்து வைப்பதற்கென்று சில ஆட்களை கூட்டிப்போகவேண்டும்.) தமிழ்முரசு போல் நச்சென்று பேசினீர்களேயானால் பரிசு உங்களுக்கே.

இதை நான் புரிந்து கொண்டதிலிருந்து பரிசு வாங்காமல் விட்ட போட்டிகள் மிகக்குறைவே. அப்படி பரிசு கொடுக்கப்படாவிட்டால் மேடையேறி ஏனென்றும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்கு பரிசளிக்க வேண்டியே நிராகரிக்கப்படும்; பட்டிருக்கிறேன். இதனாலெல்லாம் எங்கள் வீட்டில் என்னைப்பற்றி பெருமைப்பட்டார்களோ இல்லையோ சிறுமைப்படவில்லை. ஏன் பெருமையைப்பற்றியும் சந்தேகமாகச்சொல்கிறேன் என்றால். என் அக்கா சில பல ஸ்டேட் மெடல்களை என் அப்பாவின் வழியில் விளையாட்டுத்துறையில் வாங்கியிருந்தார்கள். ஸ்டேட் வாங்கின அக்காவை விட உள்ளூர் டிஸ்டிரிக்ட்ஸ் வாங்கிய நான் எங்கே அளும்புவிடமுடியும் அதனால்தான்.

சிறுமையைப்பத்தி சொன்னேன் இல்லையா அதுவும் நடந்தது, அது தான் நான் சொல்லவந்த இரண்டாவது விஷயம். இப்படியாக நான் தலையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு திரிந்தநாட்களில் நடந்த சம்பவம் இன்னமும் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது ஒரு கதை போல் இருக்கலாம் ஆனால் உண்மை.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த சமயம், என் வகுப்பில் படித்து வந்த ஒரு நண்பன் தன்னுடன் டியூசன் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தான். அவன் பெயர் தன்ராஜ்னு வச்சுப்போமே, அந்தப்பொண்ணோட பேரு தங்கம்(வச்சுப்போமே). நான் அந்த பெண்ணை நேரில் பார்த்ததில்லை இன்று வரை.

அந்த இரண்டு பேரும் படிக்கும் டியூசனில் படிக்கும் இன்னொரு பையன் ஹரன்,(அப்படின்னு வச்சுப்போமே) அவனும் அந்த பொண்ணு தங்கத்தை விரும்பினான் போலிருக்கு. இது எனக்கு தன்ராஜ் சொன்னது. ஹரனையும் எனக்குத் தெரியும் கொஞ்சம் நல்ல பழக்கம் கூட. ஒன்னா பேச்சுப்போட்டிக்கு தயார்செய்து ஒன்றாக சென்று பேசியிருக்கிறோம். அவனும் பேச்சுபோட்டியில் கலந்து கொள்பவன். இவனுங்க இரண்டு பேரும் லவ் பண்ணுறது அந்த பொண்ணுக்கு நிச்சயமாத் தெரியாது.

நானும் தன்ராஜும் கொஞ்சம் க்ளோஸ் ப்ரண்ட்ஸ்(அதாவது ஹரனைவிட தன்ராஜ் க்ளோஸ்). அவன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி புலம்புவான். அதாவது ஹரன் நல்லா படிக்கிற பையன். நம்மாலு கொஞ்சம் அப்படி இப்படி. அவன் அவளுக்கு சொல்லித்தரேன் பேர்வழின்னு ரொம்ப நேரம் பேசுறான்னு சொல்லி ஒரே புலம்பல். அப்புறம் நான் கொஞ்சம் டிராயிங் எல்லாம் வரைஞ்சுத்தந்து, ஆர்ட்டிஸ்ட் மாதிரியெல்லாம் படம் காட்டினது வேற மேட்டர்.

அப்பவே நான் டைப்பிங், மற்றும் ஷார்ட் ஹாண்ட் படித்துவந்தேன். எல்லாம் நான் இப்பொழுது பார்க்கும் வேலைக்காகத்தான். அப்படி ஒரு நாள் தன்ராஜின் ஹரனைப்பற்றிய ஏகப்புலம்பலைக் கேட்டுவிட்டு; டைப்பிங் கிளாஸ் சென்று ஒரு மணி நேரம் தட்டோதட்டென்று ASDFGF தட்டிவிட்டு வரும்வழியில், ஹரனை கிரிக்கெட் விளையாடும் கிரௌண்டில் பார்த்தேன்.

அவனும் புன்னகைத்தவறே அருகில் வந்தவன், அவனுடன் விளையாடக் கூப்பிட்டான், பிறகுதான் கவனித்தவனாய் கையில் வைத்திருக்கும் டைப் அடித்த காகிதத்தைப்பற்றிக் கேட்டான். அந்த காலத்தில் எல்லாம் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி சொல்வது கிடையாது. அதனாலும் மற்றும் அவனை நக்கல் செய்யும் எண்ணத்துடனும் வேடிக்கையாய்,

அது ஒரு காதல் கடிதம் என்று சொல்ல, அவன் ரொம்பவும் தீவிரமாய் யாருக்கென்று கேட்டான், நானும் அவனை விளையாட்டாகக் கோபப்படுத்தும் எண்ணத்துடன், தன்ராஜின் கூடப்படிக்கும் தங்கம் என்ற பெண்ணுக்கு என்று சொன்னேன். அவனும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான் நானும் அன்று விளையாண்டுவிட்டு மறந்துவிட்டேன்.

அந்த வாரம் சனிக்கிழமை காலை ஹரன் வீட்டிற்கு வந்திருந்தான், என்னவென்று கேட்டதற்கு ஒரு கிரிக்கெட் டீமிற்காக விளையாட வேண்டுமென்று சொல்ல, நானும் இது யதார்த்தமானதென்று நம்பி, கிரிக்கெட் கிட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். வந்தால் யாரோ ஒரு பையன் அங்கே நின்று கொண்டிருந்தான், நான் ஹரனிடம் அந்தப்பையன் யாரென்று கேட்க, அதுவரை பேசாமல் இருந்த அந்த பையனே நேராய்.

நான் தங்கத்தினுடைய அண்ணனென்றானே பார்க்கணும், சில விநாடிகள் பிடித்தது எனக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க. அந்த பையன் பருப்பு மாதிரி நேராய 'டா' போட்டு பேசி 'அடிப்பேன்' 'உதைப்பேன்' என்று ஆரம்பிக்க, நான் நேராய் தங்கத்தின் அண்ணனுடைய சட்டையை கோத்துப்பிடித்தேன் முதலில் பின்னர், 'யாரோட ஏரியாவிற்கு வந்திருக்க தெரியுமா? அடி பின்னிருவேன் மரியாதையா நடந்துக்கோ' என்று சொல்ல அவன் பயந்திருக்க வேண்டும். அதற்கு பிறகு நியாய தர்மத்தை பேசத்தொடங்க, நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். 'இங்கபாருங்க. நான் இவன் கிட்ட சொன்னது சும்மா விளையாட்டுக்கு அவன் இதை பெரிசு பண்ணிட்டான்' என்று. ஆனால் அவன் அதற்கு பிறகு சொன்ன சில வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. அவன் தங்கையிடம் என்னைப்பற்றி விசாரிக்க, அந்த பெண். மோகன்னு ஒருத்தனைப்பத்தி கேள்விப்பட்டதேயில்லைன்னு சொல்லி அழுதுச்சாம்.

நான் அங்கேதான் உடைந்து போனேன், என்னயிருந்தாலும் ஒரு பெண்ணை இந்த விஷயத்தில் சம்மந்தப்படுத்தி விட்டேன் அது முழுக்க முழுக்க என் தவறு என்று. நான் அவனிடம் இதற்கு மன்னிப்பு கேட்க, அந்த பையன் என் தகப்பனாரிடம் பேச வேண்டும் என்று சொன்னான். அவன் பயந்திருக்கலாம், என்னை மிரட்டியதால் அவன் தங்கையை நான் எதுவும் செய்து விடுவேனென்று. நான் அவனிடம் நடந்து கொண்ட முறை அப்படி. அவன் பக்கம் நியாயம் இருக்கும் பொழுதும் நான் அவன் சட்டையை பிடித்ததில் முழு தவறு என்னுடையது.

இந்த விஷயத்தில் நான் அதிக விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக பெண்களைப்பற்றிய கருத்துக்களை பேசுவதைப்பற்றி. அந்தநாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள். எங்க அம்மாவால் நம்பவே முடியவில்லை நான் இப்படி செய்திருப்பேன் என்று. ஆனால் அன்று தங்கத்தின் அண்ணனுக்கு சாதகமாகத்தான் இருவருமே பேசினார்கள். அதாவது தவறு என்பக்கம் தான் என்று. இந்த விஷயத்தால நான் கத்துக்கிட்டது நிறைய. அன்னிக்கு தப்பு யார் மேலன்னு தெரியலை, ஆண்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கலாம், நண்பர்களுடைய காதலியைப் பற்றி சாதாரணமாய் நட்பாய் சீண்டுவது எல்லோருமே செய்வது. அதுபோன்றதொறு சீண்டலே அன்று நான் செய்தது. என் பெயரில் இருக்கும் தவறை முழுவதுமாக ஒப்புக்கொண்டாலும் சில பல வாழ்க்கை ரகசியங்களை நான் கற்றுக்கொள்ள ஆரம்பமாய் இருந்த நாள் அந்த நாள்.

இன்னொரு பதிவிலும் இந்த சம்பவத்தை இழுக்க உத்தேசம் அதனால் விஷயத்தை மறந்துறாதீங்க ஆமாம் சொல்லிட்டேன். இதன் போன்ற காரணங்களால் தான் ஒரு முறை பத்மா அர்விந்தின் பதிவில் இன்னமும் தவறு செய்தால் எங்கள் வீட்டில் செருப்படி கிடைக்குமென்று.

அந்த காலத்தில் எல்லாம் நான் பேசுவதில் திறமையானவனாக இருந்த போதிலும் எழுதுவதில் கலந்துகொண்டதில்லை. சொல்லப்போனால் எழுதியதேயில்லை. இப்பொழுது சுத்தமாய் பேசுவதை விட்டுவிட்டேன் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்திற்கு கொஞ்சம் தீவிரமாய் எழுதவேண்டும். நட்சத்திரமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்களே, சுவையான தலைப்புகள் தரும் எண்ணத்துடன் விடைபெறுகிறேன். தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

import com.thamizmanam.GroupList.*;

public class WelcomeThamizmanam {
public static void main(String args[])throws PoliDonduException {
try{
String[] thamizmanamGroup = com.thamizmanam.GroupList.createList();
int i=0;
while(thamizmanamGroup.length!=0){
System.out.println("Welcome "+thamizmanamGroup[i]);
++i;
}
}
catch(PoliDonduException pde)
{
com.thamizmanam.GroupList.thamizManamGroup().findMember("Dondu").giveAlert();
}
}
}

Read More

Share Tweet Pin It +1

47 Comments

Popular Posts