ஒரு நபர் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் நேரடி அனுபவத்தை விடவும் எழுத்தின் வழி தீர்க்கமாக பதிந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன். எனக்கு நாகார்ஜுனன் அறிமுகமானது அத்தனை நல்லவிதமாய் இல்லைஜெயமோகனின் இந்த கோணங்கியைப் பற்றிய பதிவில் தான் எனக்கு நாகார்ஜுனனின் அறிமுகம் கிடைத்தது. 'பின் தொடரும் நிழலின் குரல்' பற்றிப் பேசும் பொழுதெல்லாம் சொல்லும் 'ரஷ்ய வரலாறு' அப்படிங்கிற ஒரு ஐட்டத்தை தனிப்பட்ட முறையில் எங்கையாவது படிச்சிட்டு பின்னாடி இந்தப்...
அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு...
குத்துங்க எசமான் குத்துங்க, இந்த சாஃப்ட்வேர் வேலை செய்யறவனுங்களே இப்படித்தான். குத்தங்க எசமான் என்கிற அளவில் சாஃப்ட்வேரில் வேலை செய்பவர்களையெல்லாம் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்கள் என்கிற ரேஞ்சில் அடிக்கடி போட்டு கும்முவது தெரிந்தது தான், அறிவுரை சொல்வதற்கு தகுதி என்கிற பெயரில் ஒன்றும் தேவையில்லை. சிலருக்கு வயதாகிவிட்டதே தகுதி இன்னும் சிலருக்கு 'வேலை விட்டு தூக்கப்பட்ட இரண்டு பேருக்கு' வேலை வாங்கித் தந்ததே தகுதி.தகுதியைப்...
கபி அல்விதா நா கெஹ்னா, கட்டுடைத்தல், கரண்ஜோஹர் மற்றும் ஜல்லி
Posted on Monday, November 17, 2008
கட்டுடைத்தல் அப்படின்னு சொன்னதும் உங்களுக்கெல்லாம் யார் யார் நினைவுக்கு வருவாங்கன்னு தெரியாது எனக்கு ஆசிப் அண்ணாச்சியும் 'நண்பன்' பீர் முகமது அண்ணாச்சியும் தான் நினைவுக்கு வருவாங்க, குஷ்பு மேட்டர் வந்திருந்தப்ப கட்டுடைத்தலை படம் போட்டு விளக்கினவரு ஆசிப்புன்னா, பின்நவீனத்துவ கவிதை எழுதி விளக்கினவரு பீர் முகமது. சுட்டிகள் தேடிப்போட்டு மீண்டும் உதைவாங்க நான் தயாராயில்லை. இணைய உலகில் வலம் வரும் சில பெயர்களுக்காக கதைகளைப் படிக்க ஆரம்பிப்பதுண்டு,...
பெங்களூர் புத்தகக் கண்காட்சியை புறக்கணித்த பதிப்பகங்கள்
Posted on Saturday, November 15, 2008
தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு தமிழ்ப்...
வாரணம் ஆயிரம் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யும் பொழுது வெறும் 2 சீட்டுகள் தான் மீதமிருந்தது. சூர்யாவிற்கும், காக்க காக்கவினால் கௌதம் மேனனுக்கும் நல்ல மவுசு பெங்களூரில் என்று நினைத்துக் கொண்டேன். இன்று காலையில் டிவிட்டரில் என் விருப்பமில்லாமல் கண்ணில் பட்டுவிட்ட, வாரணம் ஆயிரம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'த்தைவிட கேவலம் என்ற ரிவ்யூ காண்டாக்கியது என்னவோ உண்மை. நானாய்ப் போய் பார்க்காமல் தானாய் வந்து விழுந்த இரண்டு வரி...
நேற்று Quantum of Solace படத்திற்குச் சென்றிருந்தேன், இரண்டு வருடங்களுக்கு முன் நான் தற்சமயம் வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அன்று ரிலீஸாகியிருந்த - Casino Royale பார்த்த நினைவு; இரண்டு வருடம் ஆகிவிட்டது. அதிரடி ஆக்ஷன் பட ஆர்வலர்களுக்கான படம் - அவ்வளவு தான். எனக்குப் பிடித்திருந்தது. Hi-fi கார்களின் பயணம் செய்யும் பாண்ட், ஓட்டை அம்பாஸிட்டர் வகையறா கார்களிலும், BMTCயை விடவும் கேவலமான...
முதலில் ஒரு டிஸ்க்ளெம்பர், இது எந்தப் பதிவிற்கு பதில் சொல்லும் விதமாய் எழுதப்பட்ட பதிவில்லை; நல்ல ஒரு நாளில் இந்த விதமான எண்ணம் கொண்ட ஒரு பதிவெழுத முடிந்ததற்கு வேண்டுமானால் அந்தப் பதிவிற்கு நன்றிகள். நேரடியாய் விஷயத்திற்கு வருகிறேன்.என்னிடம் கூகுளில் சாட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். முதலில் உன்கிட்ட இருக்கும் ஈகோ போனால் தான் உனக்கு பெண் நண்பர்கள் கிடைப்பார்கள் என்று. சொல்லப்போனால் இது நான்...
In Only ஜல்லிஸ் உண்மைக்கதை மாதிரி சிறுகதை தேன்கூடு
ஆட்டோபயோகிராஃபி
Posted on Friday, October 31, 2008
வாழ்க்கையில் ஆட்டோபயோகிராபி எழுதும் ஐடியா சின்னவயதிலிருந்தே உண்டு, யாராவது வாங்கி படிப்பார்களா என்றால், அதற்காகயெல்லாம் வருத்தப்படுவதென்றால் நான் பதிவுகள் கூடத்தான் எழுதமுடியாது. சரி விஷயத்திற்கு வருகிறேன், அப்படி எழுதும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக குறிப்புக்களை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்கிறேன். அப்படி எழுதத்தொடங்கிய ஒரு சிறுகுறிப்பு போட்டிக்காக...,------------------------------------------------------------------அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி சொல்லப்போகத்தான் எவ்வளவு தவறான அனுமானத்துடன் என்னை மற்றவர்கள் அணுகுகிறார்கள் எனத்தெரிந்தது, அதில்...
இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில்...
நிகழ்காலமென்னும் உலகில் நுழையகடந்தகாலத்தின் செருப்புக்களின்தேவையில்லைஅப்படியே கேள்விகளும்எளிமையானதாய் மென்மையாய்வன்மமானதாய் சுழலின்தன்மையானதாய்விடைகளில்லாததாய்புரிந்துகொள்ளமுடியாததாய்புறக்கணிப்பின் பொல்லாத பொறுக்கித்தனத்தில் பொசுங்கிப் போகின்றன அத்தனையும்சுமந்தபடி செல்கிறேன்புதுச்செருப்புடனான பயணத்தில்கழட்டிப்போட்ட செருப்புக்களின் எண்ணிக்கையைப் பற்றிய கேள்விகள்எழுப்பும் புன்முறுவலை சுமந்தபடி ...
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?ஏழு எட்டு வயதில் ஆரம்பித்தது, நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் கர்ணன். டிவிப் பெட்டிக்குள் உண்மையில் எல்லாம் நடக்கிறது என்று நம்பினேன். அம்புகள் டிவியின் கண்ணாடித்திரையைத் தாண்டி வரக்கூடாது என்று பயந்தேன், டிவிப் பெட்டியை உடைத்துக் கொண்டு கர்ணனுக்காக உதவ எண்ணினேன்.2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?’காதலில் விழுந்தேன்’3.கடைசியாக...
“என்னது கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா?”ஐம்பது ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டும் நினைவு திரும்பியுள்ள தாத்தா கேட்டது, மோகனுக்கு பெரிதும் ஆச்சர்யமளிக்கவில்லை,“அட நீங்க வேற தாத்தா ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சாதகமா பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க...” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்த பவானி, மோகனின் முதுகில் செல்லமாகத் தட்டியபடி,“டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தாத்தாவை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு.” சொல்லிவிட்டு, பின்னர் தன் தந்தையிடம்,“என்ன நைனா இப்ப எப்படியிருக்கு?”“பவானி என்னடா சொல்றான்...
In பயணம் புகைப்படம் லதாக் பயணம்
இன்னும் கொஞ்சம் லதாக் படங்கள்
Posted on Saturday, September 20, 2008
மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser god
Posted on Sunday, September 14, 2008
வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...