In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - நான் யார்????

உங்களிடமெல்லாம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வது என்றால், ஜாவா ப்ரொக்ராமராகவோ, இல்லை பேச்சுப்போட்டியாளனாகவோ, தமிழனாகவோ, இந்தியனாகவோ, சுஜாதாவின் தீவிர விசிறியாகவோ, இல்லை வேறுவேறு வகையாகவோ என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள மாட்டேன்.

கார்த்திகாயினி டீச்சர் என்ற இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மகனாக உங்களின் மத்தியில் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்பல்லாம் அவரவர் தவமாய் தவமிருந்து பார்த்துட்டு நைனாக்களுக்கு சப்போர்ட் செய்யும் வேலையில் மீண்டும் ஒரு அம்மா(அந்த அம்மா இல்லை) புராணம்.

வெறும் வார்த்தைக்கான வாக்கியம் அல்ல அது. நான் மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எனக்கு பெருமை சேர்த்த விஷயங்கள் தான். ப்ரொக்கிராமராக இருப்பதில் அடையும் பெருமிதம் தமிழனாக இருப்பதிலும் இந்தியனாக இருப்பதிலும் அடையும் பெருமிதத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல. அதைப்போலவே பேச்சுப்போட்டியாளன் என்பதும். என்னை ஆரம்பக்காலத்தில் பரவலாக அறிமுகப்படுத்தியது இதுதான். இப்படித்தான் சுஜாதாபற்றியதும். இதையெல்லாம் மீறித்தான் நான் சொல்கிறேன் முன்பிருந்த வாக்கியத்தை.

புதுசா சொல்றதுக்கு ஒன்னுமில்லைனு நினைக்கிறேன். எல்லோருக்குமே தாயின் அருமை நல்லா தெரியும். இருந்தாலும் எதுக்கு இந்த பதிவுன்னா ஒரு சின்ன காரணம் இருக்கு.

சின்ன வயசிலிருந்தே இருந்து வந்த என்னோட வாழ்க்கை முறையில் அம்மா என்ற விஷயம் ரொம்ப மேலானதாகத்தான் இருந்து வந்துள்ளது. ஆனால் நான் வெளிப்படுத்துவதில்லை. அது மட்டுமில்லாமல் இதை ஏன் வெளியில் காமிக்கணும் என்று நினைத்துவந்தவன் தான் நானும். இதன் போன்ற காரணங்களால் அம்மாவின் வேதனைகள் பல சமயங்களில் தெரிந்தாலும் புரிந்தாலும் அதற்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசவோ இல்லை நான் இருக்கிறேன் என்று சொல்லவோ கூட இல்லாத சமயங்கள் தான் இருந்திருக்கின்றன.

என்னுடைய உறவினர் ஒருவர் அவர் தாய்க்கு கொடுத்த சப்போர்ட் பார்த்துத்தான், எனக்கும் நமக்கு இவ்வளவு செய்த அம்மாவிற்கு ஒன்றுமே செய்யாமல் இருந்திருக்கிறோமே என்று முதன் முதலில் தோன்றியது. பண விஷயம் கிடையாது. ஒரு மாரல் சப்போர்ட். அதன் பிறகு கொஞ்சமாவது அதுபற்றி சிந்திக்க தொடங்கியிருந்தேன் சில சமயங்களில் செயல்படுத்தவும்.

நாம் நினைக்கலாம் அம்மாவைப் போய் என்ன பாராட்டுவது. சாப்பாடு நல்லாயிருந்ததுக்கா? இல்லை வீட்டை சுத்தமா வைச்சிருந்ததுக்கா?? என்று. ஆனால் எனக்கு தெரிந்தவரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் இது போன்ற விஷயங்களை. தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டுமென்றும் திருமண வாழ்த்து சொல்லவேண்டுமென்றும். இதை நிச்சயமாகக் கேட்டு வாங்க முடியாதில்லையா அவர்களால்?

அதுதான், அவ்வளவுதான் சில சில சந்தோஷங்கள் அவர்களுக்கு கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறேன். சரி என்னைப் பார்த்தாவது சிலர்(குறிப்பாக சில ஆண்கள் :-)) இவனெல்லாம் இவங்க அம்மாவுக்கு செய்றான் நம்ம அம்மாவுக்கு நாம செஞ்சா தப்பே கிடையாதுன்னு நினைத்தால் நான் நினைத்த காரியம் கைகூடிவிட்டதாக எண்ணுவேன்.

துளசி அம்மா எழுதும் பொழுதோ, இல்லை உஷா(அம்மான்னா அடிக்க வருவாங்க :-)) மற்றும் பல பெண் பதிவர்கள் எழுதும் பதிவுகளை படிக்கும் பொழுதும் என் தாயாரை இது போல எழுத வைக்க வேண்டுமென்று நினைப்பேன். நானெல்லாம் கத்துக்குட்டி, விவரம் தெரியாது, என்ன எழுதுறதுன்னு புரியாது. அவங்களெல்லாம் டீச்சருங்க, நான் ஒன்னாம் வகுப்பு படிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து பேச்சுப்போட்டி பேசிக்கிட்டு வர்றேன். வயசுக்கேத்த மாதிரி பேச்சுப்போட்டிக்கு ஆழமாவோ கருத்து செறிவாவோ எழுதித்தந்தவங்க அவங்களெல்லாம். எழுத வந்தாங்கன்னா என்னையெல்லாம் தூக்கிவீசிறுவாங்க. அந்த நிலைமை கொஞ்ச நாளில் வருவதற்கு ரெய்மண்ட் ஸ்பென்சரையும்(சம்பளத்தை அதிகமாக்க), பிஎச்யிஎல் க்கு பிராட்பேண்ட் தரும் ஆக்களையும் வேண்டிக்கிறேன்.

இதுதான் நட்சத்திர வாரத்தில் இரண்டாவதாக வரவேண்டியது. அதனால் அப்படியே தருகிறேன். இன்று காதலர் தினமுமாக ஆகிவிட்டதாலும், மதி என்னிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுது இந்த நாளை குறிப்பிட்டு சொல்லியிருந்ததாலும். காதலர் தின சிறப்புப்பதிவாக ஒரு உண்மைக்கதையும் ஒரு கற்பனைக் கதையும் இதனுடன் வெளிவிடுகிறேன் தனித்தனியாக.

ரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதின தலைப்புடன் தொடர்புடைய கதையொன்னை உங்களுக்கு தர்றேன். இது கீற்றுவில் வந்தது, மரத்தடியில் ஆரம்பக்காலத்தில் எழுதியது. மரத்தடி மக்கள் படித்திருக்கலாம். (நிறைய மாற்றியிருக்கிறேன்.)

------------------------------


சொர்க்கவாசல் கதவு - குந்தவை வந்தியத்தேவன்



"திருச்சியில் குஷ்புவுக்கு கோயில் கட்டுனாங்கல்ல அதை அறநிலையத்துறையில் சேர்க்கணும் பெரிய போராட்டமே நடந்தது தெரியுமா உங்களுக்கு?"

உடன் தண்ணியடிக்க வந்திருந்த நண்பரிடம் சின்நைனா கேட்டுக்கொண்டிருந்த இந்தக் கேள்வி எதையோ பிடிக்க வீசிய தூண்டிலாய்ப்பட்டது மோகனுக்கு, வேறொரு சமயமாயிருந்தால் மறுத்துக்கூட பேசியிருப்பான் ஆனால் அது சரியான சமயமும் கிடையாது சரியான இடமும் கிடையாது.

அவர்கள் இருவருக்கும் போதை தலைக்கேறத் தொடங்கியிருந்த நேரம் அது. அந்த போதை மோகனை எப்பொழுதும் விடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. இடையில் அவர்களின் பேச்சை மாற்ற விரும்பிய மோகனுடைய சித்தி,

என்னங்க தெரியுமா இவன் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கூட பாத்ரூம் போறதில்லை.

என்னவோ அவன் சித்தியின் நோக்கம் சரியானதுதான். அவர்களுடைய சிக்கலான பேச்சிலிருந்து காப்பாற்றிவிடும் எண்ணமிருந்தாலும் அதுவும் அன்று உதவவில்லை இன்னும் விவகாரமானது.

"வேறென்ன ஹீரோன்னு நினைப்பு, அடிக்கடி பாத்ரூம் போனால் கேவலம்னு நினைத்திருப்பான்." சில சமயங்களில் சில விஷயங்கள் நாம் எதிர்பார்க்காத திருப்பத்தை சந்திக்கும் அதுமாதிரிதான் அன்றும். இந்த விஷயத்தை விடாத அவருடைய நண்பரும்.

"ஒரு நாளைக்கு கிளின்டன் எத்தனை தடவை பாத்ரூம் போனான் எந்த பாத்ரூமில் போனான்னு கேட்டாத் தெரியும் சொந்தமா பாத்ரூம் போகத்தெரியாதா?" வளர்த்திவிட்டார்.

தண்ணியடிச்சிட்டா என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், யாரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை மறந்துவிடவேண்டும். இந்த ஒருமைப்பாடு இல்லாத குடிகாரனே கிடையாது என்று பட்டது மோகனுக்கு.

நீண்ட அகலமான வீதிகள், சாலையில் இரண்டு பக்கங்களிலும் மரங்கள், ஒரே மாதிரியான ஆனால் அழகுக்காக வேறு வேறு வண்ணத்தில் இருக்கும் வீடுகள் கொண்ட குடியிருப்பு மோகனுடையது. மக்கள் அடுத்த நாளின் வேலையை நினைவில் வைத்திருந்து எட்டு மணிக்கே உறங்கிவிடுவார்கள். அமைதியான அந்த வீதி இன்றும் தெளிவாக மனதில் நிழலாடியது மோகனுக்கு. கூடவே ஜன்னலில் நின்று கொண்டிருந்த அவன் அம்மாவும்.

அவன் தாய் எட்டுமணிக்கெல்லாம் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, ஜன்னலின் அருகில் வந்து நிற்க ஆரம்பித்தால் மோகனுக்கு அடிவயிற்றில் பீதியெழும்ப ஆரம்பிக்கும். அவனுக்கும் அவன் சகோதரிக்கும் உணவு ஏற்கனவே பரிமாறப்பட்டு, தூங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் கண் இமைக்காமல் ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் அவன் தாயின் கண்களில் தெரிந்த வெறுமை, பயம், கோபம், இயலாமை அவனை தூங்கவிடாது. ஆனால் இவன் தூங்காமல் இருப்பது தெரிந்தால் உதைபட வேண்டியிருக்கும், பலநாட்கள் செருப்படிபட்டிருக்கிறான்.

அவன் அம்மாவிற்கோ மோகன் தூங்கவேண்டும்; அடித்தால் அழுதுகொண்டே தூங்கிவிடுவான் என்பதால் பாரபட்சம் பார்க்காமல் விழும் அடியில் தூங்கித்தான் போவான் அவனும். ஒன்பது மணிக்கு ஊரையே அளந்து கொண்டு வருவார் அவங்கப்பா, வந்ததிலிருந்தே அவன் அம்மாவிற்கு சோதனைதான், பல சமயங்களில் அவன் அம்மாவின் தலை சுவற்றில் முட்டப்படும் சப்தத்தின் கொடுமை தாங்கமுடியாததாக இருக்கும். கதவு பூட்டப்பட்டிருக்கும் ஆதலாம் வேறொன்றும் செய்வதறியாமல் பூட்டப்பட்ட கதவின் இன்னொரு நின்று கொண்டு அழுது கொண்டிருப்பான். தூங்கிக் கொண்டிருந்தவன் எப்பொழுது எழுந்தான் என்பதறியாமல் அதைப் போலவே மீண்டும் தூங்கிப்போய்விடுவான்.

காலையில் அவன் அம்மா காபி போட்டுக் கொண்டுவந்து தவலையை கீழேவைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தால், புருஷன் பொண்டாட்டி இருவரும் சிரித்துப்பேசிக்கொண்டு தினமலர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். வெகுசில நாட்களிலே தான் அவனுக்கு இரவின் தொடர்ச்சியாக பகல் இருந்திருக்கிறது. பல நாட்களில் இரவு வந்தால் வேறுவாழ்க்கை பகலில் வேறுவாழ்க்கை. தினமும் இதே கூத்து, இத்தனை கொடுமையிலும் தற்கொலை என்ற ஒன்றை நினைத்துப்பார்க்காத அவன் தாயைப்பற்றி இப்பொழுது நினைத்தால் அவனுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்காது. உயிரோட இருக்கிறவங்களோட வேதனையை விட தற்கொலை பண்ணிக்கிட்டவங்களோட வேதனை அதிகமான்னு கேட்டால் மோகன் நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்வான், தற்கொலை செய்து கொள்வது வேதனையைப் பொறுத்ததல்ல, மனதைப் பொறுத்தது.

அதே இரவு, அதே வீதி, அதே ஜன்னல், அதே முகம் ஆனால் நிகழ்வுகள் வேறு. சில நாட்கள் எங்கோ விழுந்து கிடந்த அவன் தந்தையை சுமந்து கொண்டு ஆட்டோ வரும். சில சமயங்களில் அவன் தந்தை இங்கே விழுந்து கிடக்கிறார் என்று செய்தி கொண்டு ஆட்கள் வருவார்கள். அந்த இரவில் தனியாளாக அவன் அம்மா புருஷனை அழைத்துவருவதற்கு ஆள்தேடி கிளம்புவார். வீட்டிற்கு அழைத்து வந்ததும் சாதத்தை பிசைந்து கூளாக்கி, வெறும் வயிறா படுக்கக்கூடாதுன்னு ஊட்டிவிட்டு அப்பப்பா பெரும்பாடு.

அதெல்லாம் மோகனுடைய வாழ்க்கையின் கொடுமையான நாட்கள் இத்தனையும் பத்தாதென்று எல்லா குடிகாரர்களையும் போல் தன் மனைவியின் ஒழுக்கத்தை சந்தேகிக்கும் கணவனாக பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் இரவில் தனிஅறையில் பூட்டிவைக்கும் என்னுமொறுகொடுமை.

அதுவரை புருஷனிடம் அடி, உதைபட்டு வரும் அவன் தாய்க்கு அடுத்து அவன் சகோதரியின் வசவு தொடங்கும் அவசரத்திற்கு பாத்ரூம் போகமுடியாத சோகம் அவளுக்கு. தாயைப்பற்றி என்னென்ன பேச்சுக்கள். மோகனுக்கோ கேட்கவே பொறுக்காது. இதன் காரணங்களால் தண்ணீர் குடிப்பதையே மறந்து போன மோகன் கூட சில சமயங்களில் அவன் தாயை நச்சரித்திருக்கிறான் அவசரத்திற்கு. கணவனை எழுப்ப பயப்படும் அவன்தாய், வேறுவேறு வழிகளை ஏற்பாடு செய்வார், ஜன்னலுக்கு மேலேர்ந்து, பீரோவுக்கு பின்னார், பெட்ஷீட்டிற்குள் இப்படியெல்லாம் ஆத்திரத்தை அடக்கியிருக்கிறார்கள்.

இந்தக்காலம் எல்லாம் மாறியது, அதெல்லாம் மோகனின் அப்பாவிற்கு ரத்தம் வேகமாக ஓடிய காலங்கள், இரத்தம் சுண்டத் தொடங்கிய பிறகு கொஞ்சம் நாட்களுக்கு முன்பு வரை பயம் விட்டுப்போய் கதவைத் தட்டியிருக்கிறார்கள் அவசரத்திற்கு. வீட்டிற்குள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார் மோகனின் அப்பா, ஒருமணிநேரம் அடி அதிகமாக விழுந்தாலும் மோகன் அவன் தாயை அந்த ஜன்னலின் பக்கத்தில் அதற்குப்பிறகு பார்த்ததில்லை. இன்னமும் ஆளரவமற்ற ஜன்னலைப்பார்த்தால் பித்துப்பிடித்தார்ப் போல் நின்றுவிடும் மோகனின் மனம் பலருக்கும் புரியாது.

இளங்கலை முடித்துவிட்டு வேலைபார்க்கும் மோகன், இன்றும் பூட்டப்பட்டிருக்கும் அவன் வீட்டு கதவு அம்மாவிற்காக அக்காவிற்காக எதையும் கேட்கயியலாமல் கோழையாய் இப்பொழுது டெல்லியில். அவனுடைய கோபங்களை எப்பொழுதாவது கதையெழுதிதான் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

கோழை என்று பெயரளவில் சொல்லிவிட்டாலும் கூட இன்றும் கேட்டுவிடமுடியும் மோகனால். ஆனால் அவன் தாய் இத்தனை வருடம் கஷ்டப்பட்டது வீணாய்ப்போய்விடும். அவனும் அவன் சகோதரியும் அதன் பிறகு பெரிய நிலைக்கு வந்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் வளர்ந்த நிலை அப்படி. ஆனால் அவன் தந்தையை நினைத்துத்தான் பயந்திருக்கிறான். அவன் தாய் இல்லாமல் ஒருநாள் கூட வாழமுடியாதவர். இது தெரியாதவரும் இல்லை அவர். ஆனால் போதை இதையெல்லாம் மறக்கச் செய்துவிடும்.

இன்று, திறந்தேயிருக்கும் கதவு, வந்து கொண்டேயருக்கும் தண்ணீர், அழகான வேலைப்பாட்டுடன் பாத்ரூம் வந்துதான் தொலைக்கமாட்டேன் என்கிறது இங்கே ஒரு முறைக்கு மேல். ஸ்ரீரங்கத்தில், திருச்சியிலென மாறிமாறி அவன் இருந்த காலங்களில் சொர்க்கவாசல் திறக்கும் பொழுது மட்டும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போவதுண்டு, கடவுள் நம்பிக்கையில்லாத மோகன் சொர்க்கவாசல் நாளில் மட்டும் கோயிலுக்கு போவது ஏதோவொறு நம்பிக்கையில் அவன் வீட்டுக்கதவும் திறக்குமென்றுதான்.

-------------------------------

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சிறுகதை நட்சத்திரம்

நட்சத்திரம் - வாசகர் சாய்ஸ் & லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்

“இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னைத் தொட்டீங்கன்னா கெட்ட கோவம் வந்திரும் ஜாக்கிரதை.”

கௌசல்யா இப்படி சொல்லிக் கொண்டிருக்க எனக்கு ஆச்சர்யமே எஞ்சியது. அப்படியொன்றும் நான் மூன்றாம் ஆள் கிடையாது அவளுக்கு. இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே தவிர, பிறந்ததிலிருந்தே எனக்கு அவள் அவளுக்கு நான் என்பது தீர்மானமாகிவிட்டிருந்த ஒன்று. மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஆறுமாதத்திலேயோ இல்லை ஒரு வருடத்திலேயே எங்கள் இருவருக்கும் கல்யாணம் முடிந்துவிடப்போகிறது.

அதுமட்டுமில்லாமல், கௌசியினுடைய அம்மா அதாவது எங்க அக்கா, புருஷன் வீட்டில் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்ததுதான் அதிகம். இவளை எனக்கு தக்குணோண்டு இருந்ததில் இருந்து தெரியும். இன்றைக்கு இப்படி பேசியது வேடிக்கையாகயிருந்தது.

பாவா, பாவான்னு ஆசையா சுத்தி சுத்தி வந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக ஐஸ்கிரீம் பார்லரில் வைத்து கையைப் பிடித்தது கோபமேற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. சொந்த அக்கா பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கப்போகிறவன் ஊர் உலகத்திற்கே தெரிஞ்சது தான் இது. திருச்சியில் நாங்க சுத்தாத இடமா, பேசாத பேச்சா, கொடுத்துக்காத முத்தங்களா?

மீண்டும் வம்பிழுக்கும் நோக்கத்தில் அவள் கையைப்பற்றி இழுக்க,

“டேய்.”

“என்னது டேய்யா?”

“ஆமாண்டா...”

“என்னாடி இன்னிக்கு ரொம்ப ஓவராத்தான் போகுது. நானும் போனாப்போகுது போனாப்போகுது, நாம பார்த்து வளர்த்தப் பொண்ணுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆய்டுச்சு இன்னிக்கி. டா போட்டு பேசுற அளவுக்கு வந்துட்டியா? என்னாடி ஆச்சு உனக்கு.”

நான் கேட்டதும் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டவளின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர். எனக்கோ பயமாகிப்போய்விட்டது, அப்படியொன்றும் மைக்கேல் ஐஸ்கிரீமில் எங்களைத் தெரியாதவர் கிடையாது. குடும்பத்துடன் வந்தும் சாப்பிட்டிருக்கிறோம், தனியாகவும் வந்திருக்கிறோம். இருந்தாலும் கூடவந்திருக்கும் பொண்ணு அழுதுச்சுன்னா அவ்வளவுதான் நம்மளை போட்டுத்தள்ளிருவாங்கன்னு நினைச்சிக்கிட்டே, அவளை வெளியே தள்ளிக்கொண்டுவந்தேன்.

வெளியே வந்ததும், என்னை ஒன்றுமே கேட்காமல் நேராய் மலைக்கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினாள், மொட்டைவெய்யலில் உச்சிப்பிள்ளையார் படிக்கட்டொன்றில் உட்கார்ந்தாள், நானும் அருகில் உட்கார்ந்ததும். அழுத மேனியாய்,

“நேத்திக்கு நைனாக்கிட்ட என்ன சொன்னீங்க?”

அவள் கேட்டதும் தான் எனக்கு விஷயமே புரிந்தது. ஆகா இதுதான் மேட்டரா, அதான் பொண்ணு பிலிம் காட்டுதுன்னு நினைத்தவனாய். ஒன்றுமே புரியாததைப்போல,

“நான் பாவாக்கிட்ட என்ன சொன்னேன்.”சிறிது யோசிப்பதுபோல் இருந்துவிட்டு, ”உண்மையிலேயே மறந்து போச்சு, நீங்கதான் உங்க காலேஜிலேயே மனப்பாடம் பண்ணுறதுல கெட்டிக்காரியாமே நீயே சொல்லு?” நான் அவளைச் சீண்ட.

“நைனாக்கிட்ட நேத்திக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்களாம். நேத்தெல்லாம் தண்ணியடிச்சிட்டு ஒரே ரப்சரு. இனிமே உங்களைப் பார்க்கக்கூடாதுன்னு வேற நைனா சொன்னிச்சு. ஏன் வேற யாராவது வெள்ளத் தோலுக்காரியை சிக்கிக்கிட்டாளாக்கும்.”

மனதிற்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியில் கோபப்பட்டவனாய்,

“உதைபடப்போற பார்த்துக்கோ, யார் கிட்ட என்ன பேசுறதுன்னே தெரியலை உனக்கு. உங்கம்மா என்ன வளர்த்துருக்கா உன்னை. வெள்ளத்தோலுக்காரியாமுல்ல, அமேரிக்காவுல உண்மையான வெள்ளக்காரியே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கியூவில் நின்னாலுங்க. நான்தான் அக்கா பொண்ணுக்கூட ஊரெல்லாம் சுத்தியிருக்குறோமே, நாளைக்கு நாம கைவிட்டுட்டா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு நினைச்சு அதையெல்லாம் விட்டுட்டு, இந்த வேப்பெண்ணை பின்னாடி கைகட்டிக்கிட்டு, லோலோன்னு 12 மணி வெய்யலில் அலைஞ்சு, மொட்டை வெய்யலில் மலைக்கோட்டையில் உக்காந்திருக்கேன்.” சொல்லிவிட்டு சிரிக்க.

“வேப்பெண்ணைதான் நாங்கல்லாம், வேப்பெண்ணைதான். ஏன் அமேரிக்காவில் வெள்ளக்காரியையே கட்டிக்கிறது யாரு வரச்சொன்ன தமிழ்நாட்டுக்கு. பொய்யப்பாரு, வெள்ளக்காரி கிடைச்சாளாம், உங்க மூஞ்சிக்கு கருப்பிங்க கூட திரும்பிப் பார்த்திருக்க மாட்டாளுங்க. ஏதோ மாமனாச்சே நாமளே கல்யாணம் பண்ணிக்கிலைன்னா வேற யாரு கல்யாணம் பண்ணிப்பான்னு நினைச்சா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க. உங்களுக்கு ஒரு வெள்ளக்காரி கிடைச்சா எனக்கொரு வெள்ளக்காரன் கிடைக்கமாட்டானா என்ன?”

ஒருவழியாய் சமாதானம் ஆகிவருவதைப் போலிருந்ததால் நானும் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டு, அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். சிறிது நேரம் விட்டவள்,

“இங்கப்பாருங்க, இந்த ஏமாத்துற வேலையெல்லாம் ஆவாது. மரியாதையாய்ச் சொல்லுங்க, நேத்தி நைனாக்கிட்ட அப்படி சொன்னீங்களா? இல்லையா?” அவள் தலைமுடியை இழுத்தபடி கேட்க. நான்,

“ஆமாம் இருக்குறது நாலு முடி, அதையும் பிச்சுறு. அப்புறம் கல்யாணத்தன்னிக்கு டோப்பா வைச்சிட்டுத்தான் உக்காரணும்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னதும். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சிரித்தவள். இரண்டு படி இறங்கிவந்து என்னருகில் உட்கார்ந்து தலையை தோளில் சாய்த்தவாறே,

“பின்ன அப்படி ஏன் சொன்னீங்க. அதைச் சொல்லுங்க.”

“இங்கப்பாரு கௌசி, பெரியவங்க விவகாரத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கக்கூடாது. உனக்குத் தெரியுமுல்ல உன்னையில்லாம இன்னொருத்தியை நான் நெனச்சுக்கூட பார்க்க மாட்டேன்னு அப்புறமென்ன. இந்த விஷயத்தை நாங்க பார்த்துக்குறோம் நீ பேசாம இரு.”

நான் சொன்னதும் தோளிலிருந்து சற்றே முகத்தை விலக்கி என்னைப்பார்த்தவள்,

“நைனாக்கிட்ட வரதட்சணைப்பத்தி பேசப்போய் ஏதாச்சும் பிரச்சனையா?” அவள் கேட்க ஓங்கி பளிரென்று கன்னத்தில் ஒன்னு கொடுக்கணும் நினைச்சேன். பின்னால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டவனாய்.

“எனக்கு இந்த வேப்பெண்ணைக்காரி மட்டும் போதும். என்னைப் போய் வரதட்சணை வாங்குறவங்க லிஸ்டில் சேர்த்துட்டியே. உருப்புடுவியா நீ?” நான் கொஞ்சம் உற்சாகம் குறைந்தவனாய் சொல்லத்தொடங்க, இடை மறித்தவள்.

“என்னையும் பிடிச்சிறுக்கு, பணமும் வேணாம் வேறென்னத்தான் அப்படியொரு பிரச்சனை என்கிட்ட சொல்ல முடியாத அளவிற்கு.” கேட்டதும் என் நினைவெல்லாம் பின்னோக்கி சென்றது. இதே கௌசியோட அப்பா, எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அடிச்ச கூத்து சின்னவயசாயிருந்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு.

அப்ப எனக்கு ஏழோ எட்டோ வயசிருக்கும், எங்க அப்பா அம்மாவிற்கு கடைசி பிள்ளை நான், கௌசியோட அம்மா முதல் பொண்ணு, அவங்களுக்கு அப்புறம் நாலு புள்ளைங்க பிறந்து இறந்து போக, அதுக்கப்புறம் எங்க சின்னக்கா, அதற்குப்பிறது சங்கரண்ணன். அப்புறமா நான். சொல்லப்போனால் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடிவரைக்கும் கௌசியோட அம்மாத்தான் என்னை வளர்த்தது.

இத்தனைக்கும் கௌசியோட அப்பா அதான் எங்க மாமாவொன்னும் தூரத்து சொந்தமெல்லாம் இல்லை, எங்க அம்மாவோட அண்ணன் பையன் தான். அதாவது கௌசியோட அம்மாவும் அப்பாவும் அத்தைப்பொண்ணு மாமாப்பையன் உறவுமுறைதான் வேணும். அந்தக்காலத்திலேயே எங்க பாவா, பெரிய வேலை பார்த்து வந்தாரு, எங்கப்பாவோ ரிட்டைர் ஆகியிருந்த சமயம். அதுமட்டுமில்லா, பாவா கொஞ்சம் கலரு, எங்கம்மா மாதிரி, எங்கக்கா கொஞ்சம் கருப்பு எங்கப்பா மாதிரி.

அவ்வளவுதான், மாப்பிள்ளை அழைப்பில் ஆரம்பித்து, மூன்றாம் நாள் மறுவீடு அழைப்பு வரைக்கும் எங்க பாவா பண்ணின அளும்பு, மூவாயிராம் கையில் கொடுத்தாத்தான் தாலி கட்டுவேன்னு ஒத்தைக்காலில் நிற்க, அந்த சமயம் அப்பாபோய் மோதிரத்தை அடகு வைச்சு மூவாயிரம் எடுத்துட்டு வந்தது இன்னமும் கண்ணிலேயே நிற்கிறது. அது அப்படியே இன்னிக்கு வரைக்கும் தொடர்கிறது. இப்படித்தான் வீட்டிற்கு வந்தால் மாப்பிள்ளை முருக்குன்னு கேள்விப்பட்டிருப்பீங்க, அப்படியொரு முருக்கு. அதான் கொஞ்சம் போல் பழிவாங்கணும் அப்படி சொல்லியிருந்தேன். இதை இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன். என்னயிருந்தாலும் அப்பா. இவங்கம்மாவே இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் புருஷனை விட்டுக்கொடுக்க மறுக்கும் பொழுது. அப்பாவா அவரோட கடமையை முழுமையா செஞ்ச அந்த மனுஷனை கௌசி எப்படித்தான் தப்பா புரிஞ்சிப்பா.


நானும் அன்றைக்கு காரணம் எதையும் சொல்லாமல் கௌசியை பேசி அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அவள் பிடிவாதமாய் இருந்தாள்,

“இங்கப்பாருங்க பாவா, உங்களுக்கு உண்மையிலேயே புரிலையா இல்லை புரியாதமாதிரி நடிக்கிறீங்களான்னு தெரியலை. நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்கன்ற தைரியத்தில் உங்கக்கூட சுத்தாத இடம் கிடையாது. இதெல்லாம் ஒரு நம்பிக்கையில் தான். இன்னிக்கு வந்து பட்டுன்னு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னு கேள்விப்பட்டதும் அப்புடியே யாரோ மனசுல ஆணியடிக்கிற மாதிரி இருந்துச்சு. அம்மாதான் தைரியம் சொன்னிச்சு, படவா ராஸ்கல், உங்க நைனா மட்டும் தனியா இருக்கிற நேரமாப் பார்த்து சொல்லிட்டு போயிருக்கான். என் முகத்தைப் பார்த்து சொல்லச் சொல்லு பார்ப்போம்னு சொன்னிச்சு. அதுமட்டுமில்லாம அவன் கட்டிக்க மாட்டேன்னு சொல்லட்டும் நான் அவனை கடத்திட்டு வந்து உங்க கல்யாணம் நடத்திவைக்கிறேன்னு சொன்னதும் தான் கொஞ்சமா தேறினேன்.

ஆனால் திரும்பவும் உங்களை ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்ததும் வந்துச்சே கோபம். அதான் கண்டபடிக்கு திட்டிட்டேன். பாவா நான் டேய் வாடா போடான்னு சொன்னதாலல்லாம் கோச்சுக்கலையே. எப்படியோ போங்க நீங்களாச்சு உங்க பாவாவாச்சு. என்னக் காரணம்னு என்கிட்டயாவது சொல்லிடுங்க.”

அவள் மீண்டும் மீண்டும் வற்புறுத்த அன்று மாலை காரணத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பினேன். நான் இதைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தவளிடம்.

“இங்கப்பாரு சிரிக்கிறது முதல்ல நிறுத்து, ஏற்கனவே கட்டிக்கப்போறவனை வாடா போடான்னு பேசுற பொண்ணு தேவையான்னு யோசிச்சிட்டு இருக்கேன். வாணாம் விட்டுறு. காலையில் பேசினதுக்கும் இப்பவே சரி செஞ்சிட்டு போகலைன்னா அப்புறமா நான் வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்கலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சிறுவேன். எங்க கணக்க தீர்த்துக்கோ பார்க்கலாம்.”

“ம்ம்ம், ஆசை தோசை அப்பளம் வடை. இரு இரு நான் உன்னை அம்மாச்சி, தாத்தாகிட்ட போட்டு கொடுக்குறேன். அசிங்கம் அசிங்கமா பேசுறேன்னு.” அவள் முடித்ததும்.

அவளை அவள் வீடு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, கன்னம் சிவக்க எங்கள் வீட்டைநோக்கி நகர்ந்தேன். அடுத்த மாதம் எங்களிருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்த முதலிரவில்,

“ஆமாம் உன் பழிவாங்குற நடவடிக்கையெல்லாம் என்னாச்சு.” அவள் ஒய்யாரமாய்க் கேட்க, பெண்ணழகில் மயங்கி லட்சியங்களைக் கோட்டைவிட்ட இன்னுமொருவனாக,

“இல்லடி அடுத்தநாள் உங்கப்பாவை நேரில் பார்க்கிறப்ப. உங்கப்பா பாவமா ஒரு லுக்கு கொடுத்தாரே பார்க்கணும். சில பேரு சில மாதிரி இருந்தா தான் நல்லா இருக்கும். எங்க பாவா முருக்கிக்கிட்டிருந்தாதான் நல்லாயிருக்கும்னு உன்னைக்கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்.”

இப்படியாக இன்னுமொறு காதல் கதை சுகமாக முடிக்கப்பட்டது.

PS: இந்தக் கதையில் கருப்பி, வெள்ளைக்காரி என்று நான் குறிப்பிட்டிருப்பது ஒரு சகஜமான உரையாடலை கொடுக்கவே. யாரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிறுகதை நட்சத்திரம்

நட்சத்திரம் - உண்மைக் காதல்

மக்கள் அனைவருக்கும் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள். முன்பே ஒரு முறை நான் காதலித்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன். அது கொஞ்சம் சின்ன வயசு என்றால் என்னுடைய அடுத்த காதலும் அப்படியே இதுவும் சின்னவயசுக்காதல் தான். இதக் காதலான்னு கேட்டா எனக்கு பதில் சொல்லத்தெரியாது ஆமாம் சொல்லிட்டேன்.

அப்ப வந்து, நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சு எக்ஸாம் எல்லாம் எழுதிக் கிழித்துவிட்டு, என்ட்ரென்ஸ்க்காக படித்துக் கொண்டிருந்தேன். அங்கே தான் அந்த தேவதையைப் பார்த்தேன் அப்படின்னு கதையெல்லாம் சொல்லலை. அந்தப் பொண்ணைப் பார்த்தேன் இன்னும் அந்த முதல் சந்திப்பு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவங்க மாமான்னு நினைக்கிறேன் நான் என்ட்ரென்ஸ் எக்ஸாமுக்கு படிச்ச அதே சென்ட்டரில் சேர்க்கிறதுக்கு வந்திருந்தாரு. முதல் நாள் என்பதால் சும்மா இன்ட்ரொடக்ஷன் போய்க்கிட்டிருந்தது.

ஏன் இதை சொல்றேன்னா அந்தப் பொண்ணு இங்கிலீஷ் மீடியம், நானோ பாழாய்ப்போன தமிழ்மீடியம், (இந்த பாழாய்ப்போனவிற்கான அர்த்தம் அப்புறம்). சுத்திசுத்தி பார்த்து எங்கேயுமே சேர் இல்லாம என் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்தாள். ரொம்ப தீவிரமா நான் அவ்வளவு நாளா ஒன்னும் பண்ணியிருக்காம, அன்னிக்குன்னு பார்த்து ஆர்இஸி லெக்சரர் ஒருத்தரு கருப்பா, ஹைட்டா இருப்பாரு அவர் கொடுக்குற லெக்சரை நோட் எடுத்துக்கிட்டிருந்தேன்.

அவ வந்து உட்கார்ந்ததும் திரும்பிப்பார்க்க, அவள் என்னைப்பார்த்து சிரித்தாளே பார்க்கணும் அன்னிக்கு விழுந்தவன் இன்னும் எழுந்திருக்கவேயில்லை. எப்படின்னு கேக்குறீங்களா, இன்னிக்கு வரைக்கும் அந்தப் பொண்ணோட பேர் தான் என்னோட பாஸ்வேர்ட். அப்படியே விட்டிருந்தால் கூட என்னமோ கொஞ்ச நாளைக்கு சைட் அடிச்சமா, மறந்தமான்னு இருந்திருப்பேன். அவளோ தன்னோட பேரைச்சொல்லி என்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டா பாருங்க அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.(பேரைச் சொல்லாதது என் பாஸ்வேர்ட் ஸீக்ரஸிக்காக.)

நானும் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள, முடிந்தது முதல் சந்திப்பு. இங்க தான் நான் சொன்ன அந்த பாழாய்ப் போன மேட்டர் வரும். அதென்னான்னா ஆங்கிலத்தில் படித்தங்களுக்கு தனியாவும் தமிழில் படித்தவங்களுக்கு தனியாவும் அவங்க பாடம் எடுத்தாங்க. கூட இருந்ததே சுமார் ஒரு மாதம் தான் அதிலேயும் தனித்தனியா ரொம்பக் கொடுமை ரொம்பக் கொடுமை.

மனசு கேக்குமா அப்புறம் படிப்பு போனாப்போகுதுன்னு ஒன்னுமே புரியாத ஆங்கில பயிற்சி வகுப்பில் உட்கார்ந்திருந்தேன் கொஞ்ச நாள். ஆனால் அட்டென்டென்ஸ் எல்லாம் எடுப்பாங்க அவங்க. அதிலெல்லாம் சமாளஇச்சு தான் உட்கார்ந்திருந்தேன். ஆனா அங்க பார்த்தீங்கன்னா கொடுமையிலும் பெருங்கொடுமையா, ஆர்கானிக் கெமிஸ்டிரி, இன்ஆர்கானிக் கெமிஸ்டிரி, பாரபோலா, ஹைப்பர் போலா, கர்வ், பர்ப்ன்டிக்குலர் அப்படின்னு ஒரே புரியாத பாஷையில் பேசிக்கிட்டிருப்பாங்க. சரி இதுதான் போவுது படிப்பு இப்ப யாருக்கு முக்கியமுன்னு நானும், பண்ணுங்கடா, பண்ணுங்கடா இதுவும் எத்தனை நாளைக்குன்னு தெனாவட்டா எல்லாம் புரிஞ்சமாதிரி வடிவேலு கணக்கா உட்கார்ந்திருப்பேன்.

அதிலேயும் பிரச்சனை, அப்பப்ப எழுப்பி கேள்வி வேற கேப்பாங்ய அங்க அதுவும் ஆங்கிலத்தில், அப்பல்லாம் இங்கிலீஷில் பெருசா பேசுற ஒரு வாக்கியம் ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனஸின்ஸ் அப்படிங்கிறது மட்டும்தான். இந்த நிலைல அவன் என்ன கேக்குறான்னு புரிஞ்சு, அது முதல்ல எனக்கு தமிழ்ல தெரிஞ்சு நான் இங்கிலீஷில ட்ரான்ஸிலேட் பண்ணி கிளிஞ்சது கிருஷ்ணகிரி வேறென்ன. இதெல்லாம் இப்படியிருந்தாலும் கணக்குல மட்டும் நம்மல அடிச்சிக்க முடியாது. கேள்வி கேட்டு முடிக்கிறதுக்குள்ள பதிலை சொல்லிட்டு நம்மாளை வேற திரும்பி பார்க்குறது. ஒரே அலம்பல்தான் கணக்கு கிளாஸ்னா மட்டும். ஏன்னா அங்கே தமிழ் ஆங்கிலம்னு அவ்வளவு பெரிய பிரச்சனை வராது.

இன்னும் அந்தப் பொண்ணு நினைவில் இருக்குறதுக்கு முக்கிய காரணம், அந்தப் பொண்ணும் என் கிட்ட நின்னு பேசினதுதான் காரணமாயிருக்கும். அப்பல்லாம் பித்து பிடிச்சமாதிரி அலைஞ்சிருக்கேன். அந்தப் பொண்ணு எப்படா ப்ரெண்ட்ஸ்களை விட்டுட்டு தனியா வரும்னு பார்த்துட்டு பின்னாடியே போய் பேசுறது. கணக்கு புரிஞ்சுதா, அது புரிஞ்சுதா? இது புரிஞ்சுதா? இப்படி. அந்தப் பொண்ணு என்ன நினைச்சிருக்கும்னு எல்லாம் தெரியாது. ஆனால் பதில் சொல்லும். நின்னு பேசும் அவ்வளவுதான் அந்த வயசுல இது போதாதா? காதல் தான், நிலைக்கண்ணாடிதான்.

ஆறு வருஷம் ஆனதால நிறைய விஷயங்கள் மறந்துவிட்டது, நினைவில் இருக்கும் முக்கியமான ஒரே ஒரு விஷயம். ஆர்இஸியில் மாக் டெஸ்ட் ஒன்று வைத்தார்கள். என்ட்ரென்ஸ் மாதிரியே, இன்னும் நினைவில் இருக்கிறது. முதல் டெஸ்ட் எழுதலை அது வந்து பிஸிக்ஸ்னு நினைக்கிறேன். அப்புறமாத்தான் அந்தப்பொண்ணு எழுதப் போயிருக்கான்னு தெரிஞ்சு கஷ்டப்பட்டு காசு சேர்த்துத்துட்டு போய் மீதி டெஸ்ட் எழுதினேன்.

நீங்களா போய் உங்களுக்கு பிடிச்ச இடத்தில் உட்கார்ந்து எழுதலாம், நான் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். உக்கார்ந்ததிலேர்ந்தே அந்தப் பொண்ணுக்கிட்ட ஒரே கடலை. பேனா கொடு, ரப்பர் கொடு அப்படின்னு. நாமத்தான் ஒரு இடத்தில் உக்காருவோமா அரை மணிநேரத்தில் எல்லாம் முடிச்சிட்டு, ஆன்ஸர் பேப்பரை கொடுத்தேன். ஆர்இஸி லெக்சரர்ங்க என்ன நினைச்சிருப்பாங்கன்னு எல்லாம் இப்ப கவலைப்படுற மாதிரி அப்ப கவலைப்படவில்லை.

ஒரே விஷயம் அவளோ கவனத்தை கவரணும் அதுதான். அப்பத்தான் ஒரு விஷயம் நடந்தது. அதாவது ஒரு நல்ல பயிற்சித்தேர்வா அது இருக்கணும்னு நினைச்ச ஆர்இஸி மக்கள் அந்தத் தேர்வுக்கான விடைகளையும் ஒரு பேப்பரில் அச்சடித்துக் கொடுத்தார்கள். நாமத்தான் ஒரு மணிநேரத்தில் வெளஇய வந்திட்டமா. எனக்கு மொதல்ல அந்த ஷீட்டைத்தந்தாங்க. உடனே உதிச்சது ஒரு ஐடியா, வாட்சை மறந்திட்டேன்னு சொல்லி திரும்பவும் உள்ளே வந்து அந்தப் பெண்ணிடம் ஆன்ஸர் பேப்பர் இருக்கு வேணுமா? வேணுமான்னு கேட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் தேடுறதப்போல கடலைப் போட்டுக்கிட்டிருந்தேன். அவளோ வேணான்னு சொல்லிட்டா, நாம சும்மாயிருப்போமா அவ சீட்டில் வைச்சிட்டு வந்திட்டேன். அப்புறமென்ன டெஸ்ட் எழுதிட்டு வந்ததும் இதப்பத்தி ஒரு இரண்டு மணிநேரம் கடலை.

அப்புறமென்ன இப்படியே ஓடிப்போன நாட்களுடன் என் இன்ஜினியரிங் ஆசையும் ஓடிப்போய்விட்டது. பின்ன பொண்ணுங்க பின்னாடி சுத்திக்கிட்டிருந்தா இன்ஜினியரிங் ஸீட் எங்க வாங்குறது. கடைசி நாள் நான் அவளுக்கு ஒரு ஓவியம் வரைந்து பரிசளித்துவிட்டு என்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை அவளிடமும் கொடுத்தேன். அவ்வளவுதான் முடிந்துவிட்டது எங்கள் பழக்கம். அதற்குப்பிறகு நான் யாரோ அவள் யாரோ.

என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் உண்மையான என்னுடைய காதல் என்றால் இதைத்தான் சொல்வேன். அதன் பிறகு காதலிக்காததற்கு பல காரணங்கள். ஒருவேளை என் முகம் பார்க்கும் கண்ணாடி அப்பொழுது தான் வேலையை சரியாக செய்யத் தொடங்கியிருக்கலாம். ப்ரொக்கிராமை மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் இன்புட் அவுட்புட் விஷயமாக நான் பார்க்கத் தொடங்கியதாகயிருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை நீங்கள் கணக்குப் போடத்தொடங்கிவிட்டால் காதலிக்க தகுதியற்றவர்களாகிறீர்கள். நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரியில் நுழைந்ததுமே கணக்குப்போட ஆரம்பித்துவிட்டேன். அப்படியும் இல்லாமல், உங்கள் வீட்டிலோ, இல்லை மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டிலோ காதலால் பெரும் பிரச்சனை வந்திருந்து அதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும் காதலிக்க முடியாது. அதுபோன்ற விஷயத்தால் கூட நான் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை என்னுடைய இந்த இரண்டு காதல்களும் மிகவும் பிடித்தமானவை. உண்மைக்காதல் எப்பவுமே சப்புன்னுதான் இருக்கும். இல்லையா???

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்

நட்சத்திரம் - அட நான் தான்

"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உரையைத் தொடங்குகின்றேன்.

நினைத்த நிமிடத்திலே ஆயிரம் ஆயிரம் கவிதைகளை அள்ளித்தருவாயே தாயே, தமிழே உன்னை வணங்காமல் இருப்பேனா? உன்னைப்பாடாமல் இருப்பேனா?

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்
மீதொளிரும் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் - சிலம்பாரின்பப்
போதலிர்ப்பூந்தாழினையும் பொன்முடி சூளாமணியும் - பொலியச்சூடி
நீதியொளிரும் செங்கோலாய்த் திருக்குறளைத்தாங்கும் தமிழ் நீடுவாழ்க.

தமிழுக்கு என் வணக்கம்

நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நீதி வழங்க வந்துள்ள நீதிபதி அவர்களுக்கும் என் வணக்கங்களைக்கூறி என் உரையைத்தொடங்குகின்றேன்."

என்னுடைய பேச்சுப்போட்டிகளை இப்படித்தான் தொடங்குவது வழக்கம். அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்ததில் கிடைத்த பல நல்லவிஷயங்களில் இந்த திறமையும் ஒன்று. ஒரு வாரம் தொடர்ச்சியாய் எழுதும் பொறுப்பை நட்சத்திரமாக தமிழ்மணம் என்னை தேர்ந்தெடுத்ததில் ஏற்றிருக்கிறேன். அந்த ஆயிரம் பேர்களும் நீதிபதிகளும் நீங்கள் தான், இது போட்டியில்லை என்றாலும் தவறிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டியவர்கள் என்பதை சொல்லவந்தேன்.


இந்த பதிவில் இரண்டு விஷயங்களை சொல்ல நினைத்திருக்கிறேன். முதலாவது என்னைப்பற்றிய சுயவிளம்பரம். இரண்டாவது என் வாழ்க்கையில் நடந்த, நான் மறக்க நினைக்கும், ஆனால் மறக்க முடியாத ஒரு நாளைப்பற்றியது. இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது தொடர்ந்து படித்தால் புரியும்.

இனி முதலாவது, நான் முதன் முதலில் திருவிளையாடல் தருமி வசனத்தை தனிநபர் நாடகமாக அரங்கேற்ற மேடையேறிய பொழுது நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தால் இது சர்வ சாதாரணம். அதேபோல் அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமானது கிடையாது. தினமும் காலையிலிருந்தே மனப்பாடம் செய்து வந்த வசனங்கள் ஆதலால் பிரச்சனையெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. நல்லபடியாக பேசி பரிசு வாங்கியிருந்தேன். ஆனால் அதே வயதில் நடந்த இன்னொரு சுவையான சம்பவம் உண்டு அது, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியின் பொழுது நடந்தது.

இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் இரண்டு அதிகாரம் மனப்பாடம் செய்து, அதிலிருந்து கேட்கப்படும் ஒரு முழு அதிகாரத்தைச் சொல்லவேண்டும். இதுதான் போட்டி. எனக்கு கடவுள்வாழ்த்து சொல்லவேண்டி வந்திருந்தது. முதல் ஆறு குரள்களைச் சரியாகச் சொன்ன நான் ஏழாவது தெரியாமல் சிறிது திகைத்து பின்னர் சிறிதும் கவலைப்படாமல் நடுவரிடமே ஏழாவது குரளின் ஆரம்பத்தைக்கேட்டு பின்னர் அதன் தொடர்ச்சியாக பத்தையும் முடித்தேன்.

அந்த காலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே சிறிதும் மேடைப் பயமில்லாமல் நான் நடந்து கொண்டது நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்திருந்தது. எப்படியென்றால் அப்பொழுதிருந்த அதே நடுவர் பின்னர் நான் பத்தாவது படிக்கும் பொழுது நடந்த பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற என் பெயரை அறிவித்து விட்டு இந்த நிகழ்ச்சியை மேடையில் சொல்லிப்பாராட்டினார் இப்படி.

என்னிடம் ஆசிரியர் வீட்டுப்பிள்ளைகளுக்கே உரிய சில விஷயங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அது நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று வாதாடும் குணம். பாலகுமாரன் ஒரு முறை சொல்லியிருந்ததாக ஞாபகம், டீச்சருங்களுக்கு எந்த பிரச்சனையையும் தங்களால் தீர்த்துவிடமுடியுமென்ற நம்பிக்கையிருக்கும் என்றும் அது தான் ஆசிரியர்களின் பெரிய பிரச்சனையென்றும். வீட்டில் இருவருமே ஆசிரியர்களாகயிருந்ததால் அந்த பிரச்சனை எனக்கும் இருந்தது.

எந்த விஷயமாயிருந்தாலும் மூக்கை நுழைக்கிறதும் அந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன் பேர்வழின்னு பேசுறதும். இதெல்லாம் ஆரம்பக்காலத்தில் அப்பொழுதெல்லாம் என்னைச்சுற்றி மக்கள்கூட்டம் இருந்துக்கிட்டேயிருக்கும். ஏற்கனவே எனக்கு எட்டுக்கட்டையில், குரல். நான் சாதாரணமாப் பேசினாலே ஊருக்கெல்லாம் கேக்கும், அப்படியொரு குரல். சின்ன வயதில் பேசியவர்களின் பெயர்களை கிளாஸ் லீடர் எழுதினால் முதல் பேர் நம்மோடதாத்தான் இருக்கும். பிராக்கெட்டில் அவி(அடங்கவில்லை) மிமிஅவி(மிகமிக அடங்கவில்லை) இப்படி மிமி அதிகரித்துக்கொண்டேபோகும் அளவிற்கு பேசுவேன் நான்.

ஆனால் இதன் காரணங்களாலெல்லாம் எனக்கு நிச்சயமாகக் கெட்ட பெயர் கிடைத்ததில்லை, ஆனால் நிறைய நல்ல பெயர் எடுத்திருந்தேன். அதுவரை பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் மட்டும் பரிசு பெற்று வந்த நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதுன்னு நினைக்கிறேன்; திருச்சியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் வாங்கியிருந்தேன். அதிலிருந்து ஒருஅடி உசரமாத்தான் நடந்து வந்தேன். அப்புறமென்ன இரண்டுவருஷத்துக்கு போற இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பரிசு.

பேச்சுப்போட்டிக்கென்று சில சூட்சமங்கள் உண்டு. தலைப்பை பற்றித்தான் பேச வேண்டுமென்பது கிடையாது. சில பொதுவான விஷயங்களை எல்லா இடங்களிலுமே பேசலாம். எப்படியென்றால் முன்பு கூறியது போல் முன்னுரை பாட்டு எல்லாம் முடிஞ்சு தலைப்புக்கு வர்றதுக்கு ஒரு நிமிஷம் ஆகிவிடும். பின்னாடி முடிவுரைக்கு ஒரு நிமிஷம். மீதியிருக்கும் மூணு நிமிஷத்தில் தலைப்புக்கு இரண்டு நிமிஷம், மற்ற பொதுவான விஷயங்கள் ஒரு நிமிஷம். இவ்வளவு தான் பேச்சுப்போட்டி. அந்த இரண்டு நிமிட தலைப்பு விஷயம் மட்டும் தான் பெரும்பாலும் போட்டிகளில் மாறும். மற்றபடிக்கு எல்லாம் ஒரே விஷயம் தான் பேசப்படும்.

கூட்டத்தில் ஒரு மூலையைப்பார்த்து பேசாமல் இடையில் குழம்பி நிற்காமல், 'சீ' என்று சொல்லாமல் தடுமாறாமல் கணீரென்று பேசினால் போதும் பரிசை வாங்கிவிடலாம்.

"காந்தி சிலையின் கீழ் சாராயக்கடை
மனு கொடுத்ததும் தூக்கப்பட்டது"

என்று சொல்லிவிட்டு சற்று நிறுத்தி மக்களைப்பார்க்க வேண்டும், பின்னர் அதே குரலில்,

"காந்தி சிலையின் கீழ் சாரயக்கடை
மனு கொடுத்ததும் தூக்கப்பட்டது"
சற்று நிறுத்தி
"தூக்கப்பட்டது காந்தி சிலை"

இவ்வளவுதான் விஷயம். ஒரேஅப்லாஸ் தான்.(இதை ஆரம்பித்து வைப்பதற்கென்று சில ஆட்களை கூட்டிப்போகவேண்டும்.) தமிழ்முரசு போல் நச்சென்று பேசினீர்களேயானால் பரிசு உங்களுக்கே.

இதை நான் புரிந்து கொண்டதிலிருந்து பரிசு வாங்காமல் விட்ட போட்டிகள் மிகக்குறைவே. அப்படி பரிசு கொடுக்கப்படாவிட்டால் மேடையேறி ஏனென்றும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அப்படிப்பட்ட நிலையில் பெண்களுக்கு பரிசளிக்க வேண்டியே நிராகரிக்கப்படும்; பட்டிருக்கிறேன். இதனாலெல்லாம் எங்கள் வீட்டில் என்னைப்பற்றி பெருமைப்பட்டார்களோ இல்லையோ சிறுமைப்படவில்லை. ஏன் பெருமையைப்பற்றியும் சந்தேகமாகச்சொல்கிறேன் என்றால். என் அக்கா சில பல ஸ்டேட் மெடல்களை என் அப்பாவின் வழியில் விளையாட்டுத்துறையில் வாங்கியிருந்தார்கள். ஸ்டேட் வாங்கின அக்காவை விட உள்ளூர் டிஸ்டிரிக்ட்ஸ் வாங்கிய நான் எங்கே அளும்புவிடமுடியும் அதனால்தான்.

சிறுமையைப்பத்தி சொன்னேன் இல்லையா அதுவும் நடந்தது, அது தான் நான் சொல்லவந்த இரண்டாவது விஷயம். இப்படியாக நான் தலையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு திரிந்தநாட்களில் நடந்த சம்பவம் இன்னமும் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது ஒரு கதை போல் இருக்கலாம் ஆனால் உண்மை.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த சமயம், என் வகுப்பில் படித்து வந்த ஒரு நண்பன் தன்னுடன் டியூசன் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்தான். அவன் பெயர் தன்ராஜ்னு வச்சுப்போமே, அந்தப்பொண்ணோட பேரு தங்கம்(வச்சுப்போமே). நான் அந்த பெண்ணை நேரில் பார்த்ததில்லை இன்று வரை.

அந்த இரண்டு பேரும் படிக்கும் டியூசனில் படிக்கும் இன்னொரு பையன் ஹரன்,(அப்படின்னு வச்சுப்போமே) அவனும் அந்த பொண்ணு தங்கத்தை விரும்பினான் போலிருக்கு. இது எனக்கு தன்ராஜ் சொன்னது. ஹரனையும் எனக்குத் தெரியும் கொஞ்சம் நல்ல பழக்கம் கூட. ஒன்னா பேச்சுப்போட்டிக்கு தயார்செய்து ஒன்றாக சென்று பேசியிருக்கிறோம். அவனும் பேச்சுபோட்டியில் கலந்து கொள்பவன். இவனுங்க இரண்டு பேரும் லவ் பண்ணுறது அந்த பொண்ணுக்கு நிச்சயமாத் தெரியாது.

நானும் தன்ராஜும் கொஞ்சம் க்ளோஸ் ப்ரண்ட்ஸ்(அதாவது ஹரனைவிட தன்ராஜ் க்ளோஸ்). அவன் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி புலம்புவான். அதாவது ஹரன் நல்லா படிக்கிற பையன். நம்மாலு கொஞ்சம் அப்படி இப்படி. அவன் அவளுக்கு சொல்லித்தரேன் பேர்வழின்னு ரொம்ப நேரம் பேசுறான்னு சொல்லி ஒரே புலம்பல். அப்புறம் நான் கொஞ்சம் டிராயிங் எல்லாம் வரைஞ்சுத்தந்து, ஆர்ட்டிஸ்ட் மாதிரியெல்லாம் படம் காட்டினது வேற மேட்டர்.

அப்பவே நான் டைப்பிங், மற்றும் ஷார்ட் ஹாண்ட் படித்துவந்தேன். எல்லாம் நான் இப்பொழுது பார்க்கும் வேலைக்காகத்தான். அப்படி ஒரு நாள் தன்ராஜின் ஹரனைப்பற்றிய ஏகப்புலம்பலைக் கேட்டுவிட்டு; டைப்பிங் கிளாஸ் சென்று ஒரு மணி நேரம் தட்டோதட்டென்று ASDFGF தட்டிவிட்டு வரும்வழியில், ஹரனை கிரிக்கெட் விளையாடும் கிரௌண்டில் பார்த்தேன்.

அவனும் புன்னகைத்தவறே அருகில் வந்தவன், அவனுடன் விளையாடக் கூப்பிட்டான், பிறகுதான் கவனித்தவனாய் கையில் வைத்திருக்கும் டைப் அடித்த காகிதத்தைப்பற்றிக் கேட்டான். அந்த காலத்தில் எல்லாம் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி சொல்வது கிடையாது. அதனாலும் மற்றும் அவனை நக்கல் செய்யும் எண்ணத்துடனும் வேடிக்கையாய்,

அது ஒரு காதல் கடிதம் என்று சொல்ல, அவன் ரொம்பவும் தீவிரமாய் யாருக்கென்று கேட்டான், நானும் அவனை விளையாட்டாகக் கோபப்படுத்தும் எண்ணத்துடன், தன்ராஜின் கூடப்படிக்கும் தங்கம் என்ற பெண்ணுக்கு என்று சொன்னேன். அவனும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான் நானும் அன்று விளையாண்டுவிட்டு மறந்துவிட்டேன்.

அந்த வாரம் சனிக்கிழமை காலை ஹரன் வீட்டிற்கு வந்திருந்தான், என்னவென்று கேட்டதற்கு ஒரு கிரிக்கெட் டீமிற்காக விளையாட வேண்டுமென்று சொல்ல, நானும் இது யதார்த்தமானதென்று நம்பி, கிரிக்கெட் கிட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். வந்தால் யாரோ ஒரு பையன் அங்கே நின்று கொண்டிருந்தான், நான் ஹரனிடம் அந்தப்பையன் யாரென்று கேட்க, அதுவரை பேசாமல் இருந்த அந்த பையனே நேராய்.

நான் தங்கத்தினுடைய அண்ணனென்றானே பார்க்கணும், சில விநாடிகள் பிடித்தது எனக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க. அந்த பையன் பருப்பு மாதிரி நேராய 'டா' போட்டு பேசி 'அடிப்பேன்' 'உதைப்பேன்' என்று ஆரம்பிக்க, நான் நேராய் தங்கத்தின் அண்ணனுடைய சட்டையை கோத்துப்பிடித்தேன் முதலில் பின்னர், 'யாரோட ஏரியாவிற்கு வந்திருக்க தெரியுமா? அடி பின்னிருவேன் மரியாதையா நடந்துக்கோ' என்று சொல்ல அவன் பயந்திருக்க வேண்டும். அதற்கு பிறகு நியாய தர்மத்தை பேசத்தொடங்க, நான் முதலிலேயே சொல்லிவிட்டேன். 'இங்கபாருங்க. நான் இவன் கிட்ட சொன்னது சும்மா விளையாட்டுக்கு அவன் இதை பெரிசு பண்ணிட்டான்' என்று. ஆனால் அவன் அதற்கு பிறகு சொன்ன சில வார்த்தைகள் என்னை பெரிதும் பாதித்தது. அவன் தங்கையிடம் என்னைப்பற்றி விசாரிக்க, அந்த பெண். மோகன்னு ஒருத்தனைப்பத்தி கேள்விப்பட்டதேயில்லைன்னு சொல்லி அழுதுச்சாம்.

நான் அங்கேதான் உடைந்து போனேன், என்னயிருந்தாலும் ஒரு பெண்ணை இந்த விஷயத்தில் சம்மந்தப்படுத்தி விட்டேன் அது முழுக்க முழுக்க என் தவறு என்று. நான் அவனிடம் இதற்கு மன்னிப்பு கேட்க, அந்த பையன் என் தகப்பனாரிடம் பேச வேண்டும் என்று சொன்னான். அவன் பயந்திருக்கலாம், என்னை மிரட்டியதால் அவன் தங்கையை நான் எதுவும் செய்து விடுவேனென்று. நான் அவனிடம் நடந்து கொண்ட முறை அப்படி. அவன் பக்கம் நியாயம் இருக்கும் பொழுதும் நான் அவன் சட்டையை பிடித்ததில் முழு தவறு என்னுடையது.

இந்த விஷயத்தில் நான் அதிக விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக பெண்களைப்பற்றிய கருத்துக்களை பேசுவதைப்பற்றி. அந்தநாட்கள் கொஞ்சம் சோகமான நாட்கள். எங்க அம்மாவால் நம்பவே முடியவில்லை நான் இப்படி செய்திருப்பேன் என்று. ஆனால் அன்று தங்கத்தின் அண்ணனுக்கு சாதகமாகத்தான் இருவருமே பேசினார்கள். அதாவது தவறு என்பக்கம் தான் என்று. இந்த விஷயத்தால நான் கத்துக்கிட்டது நிறைய. அன்னிக்கு தப்பு யார் மேலன்னு தெரியலை, ஆண்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கலாம், நண்பர்களுடைய காதலியைப் பற்றி சாதாரணமாய் நட்பாய் சீண்டுவது எல்லோருமே செய்வது. அதுபோன்றதொறு சீண்டலே அன்று நான் செய்தது. என் பெயரில் இருக்கும் தவறை முழுவதுமாக ஒப்புக்கொண்டாலும் சில பல வாழ்க்கை ரகசியங்களை நான் கற்றுக்கொள்ள ஆரம்பமாய் இருந்த நாள் அந்த நாள்.

இன்னொரு பதிவிலும் இந்த சம்பவத்தை இழுக்க உத்தேசம் அதனால் விஷயத்தை மறந்துறாதீங்க ஆமாம் சொல்லிட்டேன். இதன் போன்ற காரணங்களால் தான் ஒரு முறை பத்மா அர்விந்தின் பதிவில் இன்னமும் தவறு செய்தால் எங்கள் வீட்டில் செருப்படி கிடைக்குமென்று.

அந்த காலத்தில் எல்லாம் நான் பேசுவதில் திறமையானவனாக இருந்த போதிலும் எழுதுவதில் கலந்துகொண்டதில்லை. சொல்லப்போனால் எழுதியதேயில்லை. இப்பொழுது சுத்தமாய் பேசுவதை விட்டுவிட்டேன் எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்திற்கு கொஞ்சம் தீவிரமாய் எழுதவேண்டும். நட்சத்திரமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்களே, சுவையான தலைப்புகள் தரும் எண்ணத்துடன் விடைபெறுகிறேன். தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

import com.thamizmanam.GroupList.*;

public class WelcomeThamizmanam {
public static void main(String args[])throws PoliDonduException {
try{
String[] thamizmanamGroup = com.thamizmanam.GroupList.createList();
int i=0;
while(thamizmanamGroup.length!=0){
System.out.println("Welcome "+thamizmanamGroup[i]);
++i;
}
}
catch(PoliDonduException pde)
{
com.thamizmanam.GroupList.thamizManamGroup().findMember("Dondu").giveAlert();
}
}
}

Read More

Share Tweet Pin It +1

47 Comments

In சிறுகதை திண்ணை

déjà vu

மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக மட்டும் அவன் இந்த நாளுக்காக காத்திருக்கவில்லை. அவன் செய்த கொலையையே இல்லாமல் செய்துவிடும் வல்லமை பெற்ற நாள்தான் என்பதற்காகவும்தான்.

இன்னும் அந்த நாள் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது. அவனுடைய நண்பனுக்கும் அவனுக்குமிடையில் ஏற்பட்ட தொழில்முறை பிரச்சனைகளின் காரணமாக, ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மோகன் அவன் நண்பனை கொன்றுவிட்டான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நிமிட குழப்பத்தில் அவன் அந்தக்கொலையை செய்துவிட்டான். அணுஆயுதப்போரால் உலகமே பேரழிவுக்கு உட்பட்டிருந்த காலமது. உயிரின் மதிப்பு மிக அதிகமாகயிருந்தது. அவனுடைய நண்பன் அவனை ஏமாற்றியிருந்த பொழுதும் அது சரிவர நிரூபிக்கப்பட்ட பொழுதும் அவனுக்கு ஏழாண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மனித குலமே அழிவின் பிடியில் இருந்ததால், உலகின் எல்லா நாடுகளிலுமே மரணதண்டனை இல்லாமல் இருந்தது.


முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று மோகன் படித்திருந்த உலகப்போர்கள் நடந்துமுடிந்த மூன்றாவது நூற்றாண்டில் பூமியை பெரும் ஆபத்திற்குள்ளாக்கிய அணுஆயுதயுத்தம் நடைபெற்றது. ஒரு நூற்றாண்டாகவே எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் நடந்தது பலருக்கு வியப்பை அளித்திருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கணிணித்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஐன்ஸ்டினின் புவியீர்ப்பு விசையையும், க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறியும் ஆசை நிறைவேறியிருந்தது. க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வந்திருந்தன.


ஸ்டிரிங் தியரி என அறியப்படும் பல பரிமாணக் கொள்கை அதன் எல்லைகளைத் தொட்டிருந்த காரணத்தினால், வார்ம்«?£ல் எனப்படும் மனிதன் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் உதவும் இயந்திரங்கள் உருவாக்கபட்டிருந்தன. இதன் காரணமாக ஐன்ஸ்டனின் சில கோட்பாடுகள் தவறானவை என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தன. அதாவது விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்ன ஐன்ஸ்டின் விண்வெளியை நீட்டவோ மடக்கவோ முடியுமென்றார். ஆனால் விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதென்பது முடியாதென்று நம்பியிருந்தார். ஆனால் ஸ்டிரிங் தியரி விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபித்திருந்தது. நாம் சாதாரணமாய் அறிந்திருந்த முப்பரிமாணங்களை விடவும் அதிகமான பரிமாணங்களாலும் நாம் இதுவரை அறிந்திராத இடங்களாலும் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதான ஒன்றை ஸ்டிரிங் தியரி விளக்கியது.


கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் ஊர்திகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் துணை கொண்டு வரலாற்றை மாற்ற நினைக்கும் முயற்சிகளை அடியோடு நிறுத்திவிடும் எண்ணத்தால் இதன் அத்தனை செயல்பாடுகளும் கணிணிமனிதர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற பரீட்சிதார்த்த முயற்சிகள் உட்பட்ட, மனிதனால் நடைபெறக்கூடிய சிறு தவறுகளும் நடைபெற்று விடாமல் இருப்பதற்காக கணிணிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வரலாறு மாற்றப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சோதனை முயற்சியாக கொலைகள் நடந்து அதற்கான தண்டனையை கொலைசெய்த நபர் அனுபவித்துவிட்ட நிலையில் கடந்த காலத்திற்கு செல்லும் ஊர்திகளைப் பயன்படுத்தி அந்த கொலை நடந்ததற்கு சில விநாடிகளுக்கு முன்னர் சென்று அந்தக் கொலைகளை நிறுத்திவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுவந்தன. ஆனால் இதிலும் சில விதிமுறைகள் இருந்தது, அதாவது கொலை செய்த மனிதனின் மனதிலிருந்து, அவன் கடந்த காலத்தில் கொலை செய்த அந்த நொடியிலிருந்து சோதனை முயற்சிக்கான காலம் வரையிலான நினைவுகள் அகற்றப்படும். அவன் அந்தக்கொலை செய்த குறிப்பிட்ட நிமிடத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தானோ அதே மாதிரியான ஒருமனநிலையை அவர்கள் உருவாக்குவார்கள்.


வரலாற்றை தாங்களாகவே மாற்றாமல் அந்த மனிதனின் மனம் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் தானாகவே மாறி கொலை செய்வது தடுக்கப்படுகிறதா? இரண்டாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கொலை செய்யாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவந்தது. அப்படி அந்த சூழ்நிலையில் கொலை செய்யாமல் இருந்தால் அவர் அந்த நொடியிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் வாழலாம். அப்படியில்லாமல் மீண்டும் கொன்றுவிட்டால், அவர் தண்டனைக்காலம் முடிந்த நொடியிலிருந்து தன் வாழ்க்கையை தொடரலாம். இதனுடைய ஒரே பயனாக அந்த கொலை செய்த நபரின் சமுதாய மதிப்பு மாற்றப்படும். அதாவது அவர் கொலை செய்யாதவராக சமூகத்தில் மீண்டும் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலை அமையும்.


ஆனால் இதுவரை ஏறத்தாழ ஆயிரம் மனிதர்களிடம் நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை எவருமே மீண்டும் அந்தக்கொலையை செய்யாமல் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொலையாளியும் அந்த முயற்சியை செய்யவே விரும்பினர், மோகனைப்போல.


"நீங்கள் சோதனை முயற்சிக்குத் தயாரா?" கணிணிக்காவலர்கள் கேட்டதும், ஒருவழியாய் மீண்டும் சுயநினைவிற்கு வந்தான் மோகன்.


அவன் தயார் என்று சொல்ல அந்த கணிணிக்காவலர்கள் மோகனை வார்ம்«?£ல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மோகன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். அந்த முயற்சி இதுவரை வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் கூட அவன் முழுமனதாக தான் அந்த கொலையை மீண்டும் செய்துவிடமாட்டோம் என்று நம்பினான்.


அதற்காக அவன் தீவிரமான மனப்பயிற்சி எடுத்துவந்தான். தன்னுடைய நினைவை அவர்கள் அழித்துவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் மனதை ஒருவிதமாகப் பக்குவப்படுத்திவிட்டால் அந்த கொலைசெய்யும் நேரத்தில் மனமானது அன்னிச்சையாக கட்டுப்பட்டுவிடும் என்று நினைத்திருந்தான். இதற்காக அவன் இது போன்ற ஒரு சோதனை முயற்சி செய்கிறார்கள் எனத்தெரிந்த நாளிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். மோகனை பொறுத்தவரை அவன் கொலை செய்தது சற்றும் எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. சூழ்நிலைக்கைதியாக அவன் அன்று கொலை செய்துவிட்டான் ஆனால் இன்னொறு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கொலை நிச்சயமாக நடக்காது என்று அவன் மனம் கணக்குப்போட்டது.


மோகன் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சிறை நிர்வாகத்திற்கே தெரிந்திருந்தது. அவர்களுக்கும் ஒருவாறு இந்தமுறை அவன் நிச்சயமாய் சூழ்நிலையை வென்றுவிடுவான் என்றே தோன்றியது. அப்படி அவன் வென்றுவிட்டால் வரலாற்றை மாற்றிய முதல் மனிதன் என்ற பெயர் அவனுக்குக் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அரசாங்கம், சிறை நிர்வாகம், கடந்த காலத்திற்கு செல்வது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அனைவருமே ஒருவாறு இந்த நாளுக்காக காத்திருந்தனர். அவன் அப்படி சூழ்நிலையை வென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி கடந்த சில மாதங்களாகவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். கேயாஸ் தியரியின் படி ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கூட பெரும்மாற்றத்தை உருவாக்கிவிடும் சூழ்நிலையில் அந்த கொலை இல்லாமல் போனால் என்னாகும் என்பதற்கான ஆராய்சிகள் தீவிரமாக நடந்துவந்தது.


அந்த சோதனை முயற்சியின் பொழுது இரண்டு கணிணிமனிதர்கள் அவனுடன் கடந்த காலத்திற்கு வருவார்கள். அவன் அந்த கொலையை மீண்டும் செய்துவிட்டால் மீண்டும் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவரும் பொறுப்பு அவர்களுடையது. இதுவரை நடந்த முயற்சிகள் அனைத்திலும் இது சற்றும் தவறில்லாமல் நடந்துள்ளது. கணிணி மனிதர்கள் மோகனை அழைத்துக்கொண்டு வார்ம்«?£லிற்கு வந்திருந்தார்கள். அந்த வார்ம்«?£லின் ஒரு பகுதியை அதிநுட்பம் வாய்ந்த விண்வெளி ஊர்தியின் மூலமாக ஒளியின் வேகத்திற்கு முடுக்கிவிடப்பட்டு பின்னர் சாதாரணமான நிலைக்கு வரும், இப்பொழுது கிடைக்கும் நேரயிடைவெளியின் பயனாய் மற்றொரு பக்கம் இருக்கும் மோகன் பழங்காலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.


இவ்வாறாக மோகனும் அந்த இரண்டு கணிணி மனிதர்களும் கடந்த காலத்திற்கு வந்திருந்தனர். மோகனின் நினைவுகள் அந்த நிமிடம் வரை மட்டும் விட்டுவிட்டு மற்றவை முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. மோகனைப்பொறுத்த வரை நிகழ்காலத்திற்கு வந்திருந்தான், அவனுக்கு மற்ற சம்பவங்கள் முற்றிலுமாக நினைவில் இல்லை. கோபமாக தன்னை ஏமாற்றிவிட்ட நண்பனை பழிதீர்ப்பதற்காக, அவனுடைய அடுக்கு மாடி குடியிறுப்பை நெருங்கிக் கொண்டிருந்தான். மோகன் நிச்சயமாய் அவனுடைய நண்பன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்டிருந்த நஷ்டத்தை அவனால் பலகாலம் கடுமையாக உழைத்தாலும் அடைக்க முடியாதென்பது நன்றாகத் தெரிந்துவிட்டது.


நண்பனுடைய அறைக்குள் நுழைந்தவன் நேராய் அவன் கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் காட்டினான்.


"ஏன் என்னை ஏமாத்தின, உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன் தெரியுமா?" அவன் கேட்க நண்பனால் பதிலெதுவும் சொல்லமுடியவில்லை.


"என்னை மன்னிச்சிறு மோகன், தெரிஞ்சு நான் இதை செய்யலை. நான் போட்டிருந்த கணக்குகள் தப்பாயிடுச்சி. இன்னும் ஒரு வருடம் டைம் கொடு எல்லாவற்றையும் சரிசெய்து தர்றேன்." அவன் சொல்லிக் கொண்டிருக்க மோகனுடைய கோபம் அளவுக்கதிகமாகியது. தன்னை தெரிந்தே ஏமாற்றியது மட்டுமில்லாமல் இவ்வளவு நடந்தபிறகும் தன்னிடம் நடிக்கிறானே என்று நினைத்தவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்தான்.


"உன்னையெல்லாம் மன்னிக்கவே கூடாது, நீ பண்ணினது நம்பிக்கைத் துரோகம் அதற்கு ஒரே ஒரு தண்டனை தான். அது நீ சாகறது மட்டும்தான்." சொல்லியவன் அவனை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்தான். அந்த நிமிடம் அவன் மனது இந்த கொலை அவசியமா என் ஒருமுறை யோசித்துப்பார்க்க வைத்தது. ஆனால் அந்த நினைவுகளை ஓரங்கட்டியவனாய் துப்பாக்கியின் குதிரையை அழுத்தினான். மூன்று குண்டுகள் வலது தோல்பட்டையில் ஒன்றும், கன்னத்தில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்ப் பாய, அவனுடைய நண்பன் ரத்தச்சேற்றில் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.


மீண்டும் ஒருமுறை மனிதனால் வரலாறு மாற்றப்படாமல் நிகழ்காலத்திற்கு மோகனுடன் திரும்பினர் கணிணிமனிதர்கள். மோகன் அவனுடைய தண்டனைக்காலம் முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டான். முன்பு மோகனால் அவனுடைய நண்பன் கொல்லப்பட்டதற்கும் தற்சமயம் சோதனை முயற்சியில் கொல்லப்பட்டதற்குமான நிமிடக்கணக்கில் மைக்ரோ செகண்டுகளில் வித்தியாசம் இருந்தது. அதாவது மோகனுடைய பயிற்சியால் முன்பில்லாதது போல் தற்சமயம் ஒரு மைக்ரோ நிமிடம் அவனுடைய மனம் யோசித்தது. ஆனால் அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும் அந்த ஒரு மைக்ரோ நிமிட வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் குறித்துக்கொண்டனர். பிற்காலத்தில் வேறுவொரு மனிதனால் வரலாறு மாற்றப்படுமா என்ற கேள்வியுடன் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தனர்.

Thinnai.com

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In Only ஜல்லிஸ் சுய சொறிதல்

செசன்ய குடியுரிமை கிடைக்குமா???

"வாழ்க்கை என்பது நாடகமேடை, அதில் நாம் அனைவரும் நடிகர்கள்."

போனவாரம், பாக்கிஸ்தானின் ஜெனரல், பர்வேஷ் முஷாரப்பின் செவ்வியை ஐபிஎன்னில் பார்க்கமுடிந்தது. முன்பே சொன்னது போல ஐபிஎன் தன்னுடைய இருப்பை, செய்தியுலகில் கொஞ்சம் தீவிரமாகவே நிரூபித்துவருகிறது.முன்னர், சர்தேசாய் நடத்திய சோனியாவின் செவ்வியாகட்டும், கரன் தாப்பரின் முஷாரப்பின் செவ்வியாகட்டும் அருமை.

முஷாரப்பின் செவ்வியை மிகவும் ரசித்தேன், ஒரு ராணுவ ஜெனரலை இப்படியும் கேள்விகள் கேட்க முடியுமா என்று ஆச்சர்யமாகயிருந்தது. இதே சமயம் ஜெயலலிதாவின் இப்படியான ஒரு செவ்வி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. சோனியாவின் பேட்டியைப் பற்றி, அலெக்ஸ் பாண்டியனின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன். சோனியாவின் உள்ளுணர்வைப்பற்றிய கேள்வியும், அதற்கான சோனியாவின் பதிலும் நன்றாக இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு விஷயம் அரசியல்வாதிகளிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் இருப்பது நலம்.

இந்தவாரம் ப.சி யின் செவ்வியும் அருமை, பைனான்சுக்கும் நமக்கும் காத தூரம் இருந்தாலும், கரன் தாப்பரின் நேர்கொண்ட பார்வையையும் ப.சிதம்பரத்தின் சில அழகான புன்னகைகளையும் ரசித்தேன். அவர்களுடைய இணையத்தளமும் நன்றாக வந்துள்ளது.



செசன்யாவின் தற்போதைய பிரதமமந்திரி, கொடுத்திருக்கும் ஒரு அறிவிப்பு வியப்பில் ஆழ்த்தியது. அவர்களின் ரஷ்யாவிற்கெதிரான போரில் அதிக அளவிலான வீரர்களை இழந்ததால், ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வதை சட்டமாக கொண்டுவர கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.

அதே போல் அறிவியல் ஆட்களுக்கு, சூரியக்குடும்பத்தில் உள்ள கோமெட் எனப்படும் சிறிய கோள், மலைகள், தூசி, மற்றும் பனிப்பாறைகளால் ஆனது. இதன் தூசிகளை சேகரிக்க நினைத்த நாசாவின் முயற்சி வெற்றியில் முடிந்துள்ளது. ஏழுவருட நீண்ட பயணத்தின் பயனாய் கிடைத்திருக்கும். இந்த கோமெட்டின் தூசிகளை வகைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.





மேலும் செய்திகளுக்கு.

போபர்ஸ் பற்றியும் வலைபதிவு நண்பர்களிடையே பேச்சைக்காணோம். ஒட்டோவா குட்டோரோச்சியின் வங்கிக்கணக்கை திரும்பவும் திறக்கப்பட்டதில் சட்ட அமைச்சரின் தலை உருளுகிறது. மீண்டும் பூட்டப்படுமா தெரியவில்லை. இதன் அரசியல் விளையாட்டு வேடிக்கையாக இருக்கிறது. (சுப்பிரமணியசாமியைக்காணோம் அவரிருந்தால் நல்ல காமெடிக்கதையெல்லாம் சொல்வார். :-) )

பீகாரில் தலித் இல்லாத ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, பஞ்சாயத்து பழிவாங்கியதைப்பற்றி பார்த்தேன் இன்னும் பீகாரின் வடக்கு மாகாணங்களில் பெண்ணுரிமை பற்றிய பேச்சே எழுப்பப்பட முடியாதென தெரிகிறது. வெட்கம்.

யாராகயிருந்தாலும் அவர்களுடைய நிறை, குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான்.பெற்றவர்களை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை அப்படித்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதை போலவே ஆசானையும், வரப்போகும் மனைவியையும் அப்படியே. இங்கே நிறை எது குறை எது என்ற வாக்குவாதம் வைக்கவில்லை. ஆனால் குறைகள் அற்ற நிறைகள் கிடைப்பதில்லை, கசக்கும் பொங்கலைப்போலவே. :-)

மற்றபடிக்கு இணையத்தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப்பொங்கல், கன்னிப்பொங்கல்(காணும் பொங்கல்) வாழ்த்துக்கள்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ் சுய சொறிதல்

ஆங்கிலப்புத்தாண்டு, சொர்க்கவாசல் மற்றும் சில எருமைமாடுகள்

ஆங்கிலப்புத்தாண்டு, சொர்க்கவாசல் மற்றும் சில எருமைமாடுகள்
"டேய் எருமைமாடு ஹாப்பி நியூயியர்"

இப்படித்தான் ஆரம்பித்தது இந்த புதுவருஷம், பிறகு இன்னும் சில அன்பு நாயேக்களும் எருமைமாடுகளுக்கும் பிறகுதான் நல்ல வாழ்த்துக்களே வந்தது.

எல்லா வருடங்களையும் போல இந்த வருடமும் டான்ஸ் ஆடுவதற்கென்று கிளம்பியிருந்தோம். ஆனால் கொஞ்சம் விஷேஷமாக மும்பைக்கு "Essel World" என்ற இடத்திற்கு சென்றிருந்தோம்.


Elephanta Caves


Elephanta Caves


Essel World





பிறகு அப்படியே, எலபெண்டா கேவ்ஸ் போய்விட்டு வீடு திரும்பினோம். இடையில் டான்ஸ் ஆடும் பொழுது மூன்று முறை கண்ணாடி கீழே விழுந்தும் உடையாததால் நல்ல அதிர்ஷ்டமான வருடமாக(???? அதிர்ஷ்டமான வருஷமோ இல்லையோ, கண்ணாடி உடையலை அது பெரியவிஷயம், கண்ணாடி அணிபவர்களுக்குத்தான் அதைப்பற்றித்தெரியும். போட்டிருக்கும் கண்ணாடி உடைந்தால் நான் ரொம்பவே அப்செட் ஆகிவிடுவேன்.) இருக்கும் என்று நம்புகிறேன்.

சுமார் ஐயாயிரம் பேர் இருந்த அந்த இடத்தில் டான்ஸ் கலைகட்டியது, பெரும்பாலும் புனேவிலுருந்தும் மும்பையிலிருந்தும் ஜோடிகள் வந்திருந்ததால் கொண்டாட்டமாகவேயிருந்தது. எனக்கென்னவே அன்றைக்கென்று பார்த்து சொர்க்கவாசல் நினைவில் வந்தது. உண்மையில் இது போன்ற டான்ஸ் பார்டிகளுக்கும் சொர்க்கவாசலுக்கும் சென்றிருப்பவர்களுக்கு நான் சொல்லவருவது விளங்கலாம்.

எஸ்ஸெல் வேர்ல்ட் பற்றி சில வார்த்தைகள், நீங்கள் குடும்பத்துடன் பாம்பே சென்றால் பார்க்கக்கூடிய மிக நல்ல இடங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்துடன் போய் ஒருமுறை அனுபவித்துவிட்டு வாருங்கள். அதேபோல் எலிபெண்டா கேவ்ஸ், கடலின் நடுவில் இருக்கும் ஒரு தீவில் மிக நல்ல சிற்பங்கள் இருக்கின்றன. முகலாயர்களின் ஆட்சியில் சில சிற்பங்கள் அழிக்கப்பட்டதாக அங்கிருந்த கைடு சொன்னார்.

ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய இடம்தான் இரண்டுமே. மற்றபடிக்கு போனபதிவில் பிக் பேங்க்ஸ் பற்றியும், ஸ்டிரிங் தியரி பற்றியும் சொல்லியிருந்தேன். அதைப்பற்றிய டாக்குமெண்டரிகளை இந்தியாவிலிருந்து பார்க்க கீழே கிளிக்கவும்.

Documentry

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான் இந்த டாக்குமெண்டரிகள்.

மற்றுமொறு முறை அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Science ஜல்லிஸ்

Of Big Bangs, Parallel Universes and 11 dimensions - The String Theory

நீண்டகால யாஹூ உபயோகிப்பாளன் என்ற முறையில் யாஹூவின் இந்த புதிய பீட்டா மெயிலைப்பற்றி தீவிரமாகப்படித்துவருகிறேன்.

கூகுளைப்போல யாஹூவும் டாட் அய்ட்டத்தை உபயோகத்தில் கொண்டுவந்துள்ளது. என்னோட பேவரைட் ஐடிதான் கிடைக்கலை. mohandoss.i@yahoo.com() டாட்டுக்கு பிறகு நான்கு கேரக்டர்கள் வரணுமாம். அதுனால வேற ஒரு ஐடியை எடுதுக்கொண்டேன்.(ஹிஹி உண்மையில் இரண்டு. இன்னும் ஆசை போக மாட்டேங்குது.)

அப்புறம் ஒரு ஆன்லைன் வேர்ட் புரொசசிங் டூல் ஒன்னு வந்திருக்கு. இன்னும் சிறிது காலத்தில் ப்ளாக் எழுதும் மக்களிடம் வரவேற்பு நிச்சயமாய்க்கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன் உபயோகப்படுத்தி பாருங்கள்.

அப்புறம் கொஞ்சம் சைன்ஸ் பத்தி, அறிவியல் உலகத்தில் இருக்கும் மோசமான வேலைகள் பற்றி ஒரு கட்டுரை படித்தேன் சமீபத்தில். நீங்களும் படித்துப்பாருங்கள்.

கட்டுரை குறிப்பு இலகிய மனம் கொண்டவர்கள் படிக்கவேண்டாம்.

வழக்கம் போல ஒரு சூப்பரான ஐட்டம் படிக்கக்கிடைத்தது. ஆனால் தமிழில் எழுதும் எண்ணம் இல்லாததால் அப்படியேத் தருகிறேன். தனித்தமிழ் மக்கள் மன்னிக்கவும். இதைப்பத்தி ஒரு சைன்ஸ் பிக்சன் கதை எழுதியாகிவிட்டது. அடுத்தவாரம் போடுகிறேன். (செத்தீங்கடே)

உங்கள் அனைவருக்குமே, Big Bang Theory, Parallel Universes பத்தி தெரிஞ்சிருக்கும். சில அறிவுஜீவிகளுக்கு 11 dimensions and The String Theory பற்றியும். அதைப்பற்றி சில டாக்குமெண்டரிக்களை பார்க்கமுடிந்தது.

என்னால் முடிந்த சில பில்டப்புகளை மட்டும் கொடுக்கிறேன். ஐன்ஸ்டின் தியரி ஆப் எவரிதிங் என்ற ஒன்றை நிரூபிக்க நினைத்திருந்தார். தலைவரின் வார்த்தகளின் படி "ஐன்ஸ்டைன் ஐம்பதாண்டுகளுக்கு முன் இறந்து போகுமுன், The Theory of Everything என்ற உலகின் நான்கு வகை ஆதார சக்திகளை, குறிப்பாக புவிஈர்ப்பு விசை யையும் க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறிய முற்பட்டார்... முடியவில்லை! இன்னும் அது விஞ்ஞானிகளுக்குக் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு இருக்கிறது."

இந்த ஸ்டிங் தியரியால் அது முடியும்னு சொல்றாங்க(????) சில டாக்குமெண்டரிக்களும் கிடைத்தது. கூகுள் அனுமத்தித்திருக்கும் நாடுகள் மட்டுமே பார்க்கமுடியும். முக்கியமாய் இந்தியாவிலிருந்து பார்க்கமுடியாது. நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்தேன்.

நான் சில தகடுத்திதங்கள் செய்து பார்த்த, வெளியில் சொல்லக்கூடிய முறைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

உண்மையிலேயே விளக்கமான டாக்குமெண்டரிகள். அனைவரும் பார்க்கவேண்டியது. யாரோ எழுதியிருந்தார்கள், வாத்தியாரும் கூட, ஐன்ஸ்டின் சொன்ன கடவுள் டைஸ் விளையாடுவதில்லை என்பதைப்பற்றி, அந்த வரிகளில் உள்ள தவறுகளைக்கூட டாக்குமெண்டரியில் சொல்லியிருந்ததாக ஞாபகம். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.


ஒன்னாம் நம்பர்
இரண்டாம் நம்பர்
மூன்றாம் நம்பர்



கட்டக்கடேசியா,

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அடுத்த வருஷமும் வருவோமுல்ல தொல்லை பண்ண.

Credits: geetham.net, pbs.org, yahoo.com, writely.com, popsci.com.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சோழர்கள்

சோழர்களும் கேசரிப்பிரச்சனையும்

பராந்தகன் இறந்ததற்கும், முதலாம் இராஜராஜன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகள் கொண்ட குறுகிய காலமாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். இப்பகுதிக்கான ஆதாரங்கள் அறிஞர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் முழு விவாதத்திற்கு பிறகே யார் யார் எப்போது அரியணை ஏறினர் என்பதை ஒருவாறு நிர்ணயிக்க முடியும்.

கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்

முதலில் நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் தன்மையை ஒருவாறு அறிய வேண்டும், இவற்றில் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளே முக்கிய ஆதாரங்களாகும்.

இந்த காலநிலையைப்பற்றிய கல்வெட்டுக்களைத்தவிர, பல செப்புப்பட்டயங்களும் நமக்குச் சான்றுகளாக உள்ளன. இச்சான்றுகளிலிருந்து முதலாம் பராந்தகனுக்கும் இராஜராஜனுக்குமிடையேயான சோழமன்னரின் வமிசாவழியை நாம் முடிவு செய்யவேண்டும்



கண்டராதித்தன்

இராஜகேசரி கண்டராதித்தனின் ஆட்சிக்குத் திருவாலங்காடு, லெய்டன் பட்டயங்களும் திருச்சிராய்ப்பள்ளி மாவட்டத்தில் கிடைக்கும் 8-ம் ஆண்டைச்சேர்ந்த பிள்ளையார் மற்றும் ஆழ்வார் அரிகுலகேசரி தேவ என்று குறிப்பிடும், பல இராஜகேசரி கல்வெட்டுக்களும் தென் ஆற்காட்டில் கிடைக்கும் மும்முடிச் சோழ கண்டராதித்தனின் 2-ம் ஆண்டைச்சேரந்த கல்வெட்டு ஒன்றும் சான்று கூறுகின்றன.

இவனது பட்டத்தரசி

செம்பியன் மாதேவி என்ற மனைவி மூலம் பிறந்த உத்தமசோழன் என்ற சிறுகுழந்தையை விட்டுச்சென்றான். இவ்வரசி மிகுந்த சிவபக்தியுடையவள். இளவயதிலேயே தன் கணவனையும் பின் தன் மகனையும் இழந்த செம்பியன் மாதேவி, கி.பி. 1001 வரை பல ஆண்டுகள் வாழ்ந்தாள். இவ்வரசி எடுப்பித்துள்ள சிவன் கோயில்களும், இவற்றைப்பராமரிக்கும் பொருட்டு தன் மகனுடைய ஆட்சியில் விடப்பட்ட பல அறக்கட்டளைகளை இதற்கு சான்றுகூறுகின்றன.

அரிஞ்சயன்

அரிகுலகேசரி, அரிஞ்சயன் அல்லது அரிந்தமன் ஆகிய பட்டங்களின் பொருள் ஒன்றாயிருப்பதன் அடிப்பஆயில், இவை முதலாம் பராந்தகனின் இளையமகனையே குறிப்பிடுகின்றன. அரிஞ்சய பரகேசரி தன் சகோதரன் கண்டராதித்தனை அடுத்து சிறிது காலம் ஆட்சிசெய்தான்

அரிஞ்சயனைப் பொருத்தமட்டில் இவனது ஆட்சியைப்பற்றிக் கூறும் சில செப்பேடுகளுடன் 12-ம் ஆட்சிஆண்டைச் சேர்ந்த இராஜகேசரிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அரிஞ்சயன் நெடுநாள் வாழ்ந்து அரசுரிமையைப் பெற்றிருந்தபோதும், இவ்வுரிமையைச் சிறிதுகாலமே அவன் நுகரமுடிந்தது.

வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி.

சுந்தரசோழன்

அரிஞ்சயனுக்குப்பின் அவனுக்கும் அன்பில் பட்டயங்களில் கூறப்படும் அவனது ஒரே பட்டத்து அரசியான வைதும்பை இளவரசி கல்யாணிக்கும் பிறந்த ஒரே மகனே அரியணை ஏறினான். இவன் பெயர் இரண்டாம் பராந்தகச் சுந்தர சோழன். இவன், மதுரை கொண்ட இராஜகேசரி என்றும் அழைக்கப்பட்டான்.

காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னைடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டதாலும், இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்று அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து வானவன் மாதேவி என்ற இவன் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.


தலைகொண்ட என்பதற்குப் பொருள்

இக்காலப்பகுதியின், வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைகொண்ட என்ற சொற்றொடரின் பொருள் என்ன என்பதை காணலாம். சோழ மன்னன் ஒருவனின் தலையைக் கொண்டதாக, வீரபாண்டியனும், வீரபாண்டியனது தலையைக்கொண்டதாக மற்றவரும் கூறியிருக்கின்றனர்.

பாண்டிய மன்னனால் தலையை வெட்டி எறியப்பட்ட சோழ மன்னர் யார் என்பதைப்பற்றி சர்ச்சைகள் இருந்துவருகின்றன. ஆனால் இந்தச் சொற்றொடர், தன்னை வெற்றிகொண்ட மன்னனிடம் தன் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் வகையில், ஒரு மன்னன் தலைசாய்ந்து நிற்பதையே குறிக்கும்.

இதே காலத்தில், இரண்டாம் ஆதித்தன் வீரபாண்டியனைப் போரில் கொன்று, வெட்டப்பட்ட அவனுடைய தலையைச் சோழநாட்டின் தலைநகருக்குக் கொணர்ந்தான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் திட்டவட்டமாகக்கூறுகின்றன. இவ்வாறிருக்க ‘தலைகொண்ட’ என்ற விருதை வீரபாண்டியன் ஏற்றிருப்பது தான் ஒரு சோழ மன்னன் அல்லது இளவரசன் மீது தற்காலிகமாகக்கொண்ட வெற்றியைப் புகழ்ச்சியுடன் கூறிக்கொள்வதையே குறிக்கும்.

கேசரி பிரச்சனை

அதாவது சோழ மன்னர்கள் தங்களின் பெயர்களுக்கு பின்னால் பரகேசரி, மற்றும் இராஜகேசரி என்ற பட்டப்பெயர்களை ஒரு ஒழுங்குமுறையில் வைத்துக்கொண்டனர். அதாவது பட்டத்தில் இருக்கும் மன்னன் இராஜகேசரியாக இருந்தால் அடுத்து பட்டத்திற்கு வரும் மன்னர் பரகேசரி. இது அப்படியே அடுத்த முறை மாறும் அதாவது இராஜகேசரியாக. இப்பொழுது உள்ள பிரச்சனையைப் பார்ப்போம்.

அதாவது, மதுரை கொண்ட இராஜகேசரி என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுவது யார்? என்பதைப்பற்றிய கேள்வி. கண்டராதித்த இராஜகேசரி, ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கல்வெட்டுக்களில் உள்ளது.

பராந்தகன், வாழ்நாளிலேயே இராஜாதித்தன் இறந்தபிறகு, இளவரசுப்பட்டம் பெற்ற இவனது ஆட்சி தொடங்கி இருக்கவேண்டும். கண்டராதித்தன் ஒரு பரகேசரி என்றும் திருவாலங்காட்டு பட்டயங்களில் இவனுக்கு அடுத்துக் கூறப்பட்டுள்ள அரிந்தமனே, மதுரை கொண்ட இராஜகேசரி ஆவான் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே கூறியபடி இந்தவாதம் தவறானது. இராஜாதித்தன், இளவரசுப்பட்டம் பெற்ற பொழுது இராஜகேசரி விருதைப் பெற்றிருக்கலாம், ஆனால் இவன் தன் தந்தைக்கு முன்பே இறப்பதனால், இவனுடைய விருதையே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் பராந்தகப் பரகேசரியை அடுத்தவந்த மன்னன், ஒரு இராஜகேசரியே ஆவான் கண்டராதித்தன் ஒரு இராஜகேசரியே என்பது பொதுவான கருத்தாகவே உள்ளது என்றாலும். இது இராஜாதித்தன் தன் தந்தைக்கு முன்பே இறந்ததன் விளைவே இது என்பது தளிவாக உணரப்படவில்லை.

அரியணையில் அமர்ந்திருக்கும் மன்னர் இராஜகேசரியா? அல்லது பரகேசரியா? என்பதைப் பொறுத்தே இளவரசனோ அல்லது இளவரசர்களோ, இராஜகேசரி அல்லது பரகேசரி என்ற விருதினை ஏற்ற வழக்கத்திலிருந்து, வாரிசுப்பிரச்சனையை நாம் தளிவாக தீர்க்கமுடியும்.

அரிஞ்சயனின் மகன் சுந்தரசோழன் ஒரு இராஜகேசரி என்று அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. இவனே மதுராந்தகன் என்ற பட்டத்தையும் பெற்றிருந்தான். இவன் பாண்டியர்களுடன் போரிட்டான் என்பதையே ‘பாண்டியனை சுரம் இறக்கின‘ என்ற இவனுடைய பட்டத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். இக்குறிப்புக்களின் படி, இரண்டாம் பராந்தகச் சுந்தரசோழனே இவன் எனவும். இவனுடைய கல்வெட்டுக்கள் சிலவற்றில் மதுரை கொண்ட இராஜகேசரி எனக் குறிப்பிடப்பட்டான்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சாமுராய்கள் & Last Samurai, The (2003)



சாமுராய்கள் பற்றி நான் முதன்முதலில் அறிந்தது பள்ளிப்பருவத்தில் இரண்டாம் உலகப்போரைப் பற்றி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அமேரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டு போட்டதற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த ஆச்சர்யமளித்தது. அதாவது ஜெர்மானியர்களையோ இத்தாலியர்களையோ போலில்லாமல், ஜப்பானியர்கள் இறக்கும் வரை போரிடுபவர்கள் என்றும் 1945ன் இறுதிகளில் ஜெர்மனி, மற்றும் இத்தாலி சரணடைந்துவிட ஜப்பானியர்கள் மட்டும் சரணடையாமல் இறக்கும் வரை சண்டையிட முடிவுசெய்ததாகவும். அமேரிக்கா ஜப்பானிற்குச் சென்று தரைவழியாகவோ, கடல்வழியாகவோ ஜப்பானை வீழ்த்துவதன் பொருட்செலவும் நேரத்தையும் கருத்தில் கொண்டு ஜப்பானை சரணடையச்செய்யவே அணுகுண்டு போட்டது என்பதான ஒன்றை என் வரலாற்று ஆசிரியர் சொல்லியிருந்தார்.



அந்தக்காலத்தில் ஆசிரியர் சொல்வதே வேதவாக்கு, எதிர்த்து கேள்வி கேட்கவோ, இல்லை அதற்கு எதிரான ஒன்று இருக்குமென்றோக்கூட அறியாத வயது அது. அப்படி ஜப்பானியர்கள் சண்டை செய்ததற்கு முக்கிய காரணமாக ஆசிரியர் சொன்னது, ஜப்பானியர்கள் அனைவரும் சாமுராய்கள் என்று அதாவது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவர்கள், சாகும்வரை போராடுபவர்கள். அதே போல் சரணடைந்தபிறகு ஜப்பானிய மன்னர், மக்களிடம் அவர்களை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டதாகவும் சொல்ல மனதில் ஜப்பானியர்கள் பற்றிய மதிப்பு அதிகமானது. உண்மையில் ஜப்பானியர்களைப்பற்றியோ, சாமுராய்களைப்பற்றியோ எதுவுமே தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு ஆர்வம் அது.

சாமுராய்

சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழிற்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய ராணுவத்தில் இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இந்த வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகளை எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது.



சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின் வயிற்றில் இடத்திலிருந்து வலமாக வெட்டி சரணடையாமல் கொல்லப்படுவர். இதுவே பெண்கள் இந்த செபுக்குவை செய்யும் முறை வேறுபடும், அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே. சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, சுயக்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, புராதனக் கோட்பாடுகளுடன் வாழ்வது. இவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் அவர்களின் சேவகர்களாகவுமே இருந்து வந்தனர்.



ஹியான் காலம் (794 – 1185)

சாமுராய்களின் தேவை இந்தக்காலத்தில் அதிகரித்தது, நிலச்சுவாந்தார்கள் அவர்களுடைய உடைமைகளைப்பாதுகாக்க இதுபோன்ற சாமுராய்களை வேலைக்கு அமர்த்தினர். இந்தக்காலத்தின் முடிவில் இருபெரும் சாமுராய் இனம் இருந்துவந்தது. ஒன்று மினமோட்டோ இனம், மற்றொன்று டைய்ரா இனம். இவர்கள் ஜப்பானின் பெரும்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பிறகு தங்களுக்கிடையில் ஆதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுவந்தனர்.

கமாகுரா காலம்(1192 – 1333)

கி.பி. 1185ல் மினமோட்டா இனத்தினர் டைய்ரா இனத்தினரை வென்றனர். இதன் காரணமாக மினமோட்டா யோரிட்டோமோ ஒரு இராணுவ ஆட்சியை காமகுரா காலத்தில் தோற்றுவித்தார். ஷோகுன் எனப்படும் இராணுவத்தின் உயர்ந்த அதிகாரியாய் இருந்ததால் அவர் ஜப்பானின் மன்னராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

முரோமச்சி காலம்(1333 – 1573)

இந்தக் காலத்தில் ஜப்பானின் பல உள்பிரிவுகளாக பிரிந்து தனித்தனியா சாமுராய் இனங்களின் கையில் இருந்துவந்தது. இவர்கள் தங்களுக்கிடையில் பெரும்பாலும் போரிட்டு தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தனர். இந்தக்காலத்தில் சாமுராய்களின் ஆதிக்கம், அல்லது தேவை அதிகமாகயிருந்தது. போர்காலத்தைத்தவிர இடைப்பட்ட காலத்தில் சாமுராய்கள் நிலங்களில் விவசாயமும் செய்துவந்தனர்.

அகிரா குரோசோவா எடுத்தப்படங்கள் பெரும்பான்மையானவை இந்தக்காலத்தைப்பற்றியதுதான்.

அழுசி-மோமோயாமா காலம்(1573 – 1603)

டோயோடோமி ஹிடேயோஷி ஜப்பானின் சிறுசிறு பகுதிகளை ஒன்றிணைத்தப்பின், மக்களை இனவகைப்படுத்தும் முறையை தோற்றுவித்தார். இதுபின்னர் டோகுகவா லேயாசு என்பவராலும் அவருடைய வழித்தோன்றல்களாலும் நிறைவேற்றப்பட்டது. ஹிடேயோஷி சாமுராய்களை வகைப்படுத்தினார் அதாவது விவசாயம் செய்யும் சாமுராய்களையும், போரிடும் சாமுராய்களையும் வேறுபடுத்தினார். அதற்குப்பின்னர் போரிடும் சாமுராய்கள் மட்டும் தான் வாளை அணிந்திருக்கலாம் என்ற சட்டத்தையும் கொண்டுவந்தார்.

இடோ காலம்(1603 – 1868)

இந்தக்காலத்தில் மக்களின் இனப்பாகுபாட்டில் முதல் இடத்தில் இருந்தவர்கள் சாமுராய்கள், இவர்களுக்குப்பின்னர் விவசாயிகள், கலைஞர்கள், மர மற்றும் இரும்பு வேலை செய்பவர்கள் என ஜப்பானிய இனப்பாகுபாடு இருந்துவந்தது.

அவர்களின் நிரந்தர குடியிறுப்பு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்ள கட்டுப்படுத்தப்பட்டார்கள் சாமுராய்கள். பின்னர் அவர்களுக்கான கூலி தானியங்களாய் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் அவர்களின் நிரந்தரக்குடியிறுப்பு சிறிது சிறிதாக அழிக்கப்படத்தொடங்க, 1615ல் டோகுகவாவின் எதிரி அழிக்கப்பட்டுவிட, ஒருவகையான அமைதியான சூழ்நிலை ஜப்பானில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 250 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இதன் காரணமாக சாமுராய்களின் தேவை இல்லாமல் போனது. சாமுராய்கள் போரிடுவதை விட்டுவிட்டு மற்ற தொழில்களை செய்பவர்களாக மாறினர். கிட்டத்தட்ட 1868ல் ஜப்பானில் சற்றேறக்குறைய சாமுராய் இனம் வழக்கொழிந்தது.

சாமுராய்களின் கொள்கை

ஆரம்பக்காலத்தில் இருந்து புத்த மதக்கொள்கை மற்றும் ஜென் கொள்கைகளைப் பின்பற்றி வந்தனர் சாமுராய்கள் அதேசமயம், மிகக்குறைவாக கன்பூஷியஸின் மற்றும் ஷின்டோவின் கோட்பாடுகளும் இவர்கள் வாழ்க்கையில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

ஆயுதங்கள்



சாமுராய்களைப்பற்றிய கதைகளைப்போலவே அவர்களுடைய ஆயதங்களைப்பற்றிய கதைகளும் அதிகம். ஆரம்பத்தில் பார்த்த புஷிடோவின் வழிகாட்டுதலில் சாமுராய்களின் ஆத்மாவானது அவர்கள் பயன்படுத்தும் கடனா என்ற முக்கியமான வாளில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் சாமுராய்கள் அந்த வாளுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களை வழிபடுத்துவதின் ஒரு முக்கிய பங்கு அவர்களின் வாளிற்கு உண்டென்பதைப்போன்ற தத்துவங்கள் ஜப்பானில் நிறைய இருந்துவந்துள்ளது.



இந்த கடானா என்றழைக்கப்படும் வாளை உருவாக்குவதற்கு சில குறிப்பிட்ட முறைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் சாமுராய்கள். அதன் நீளம், அகலம், வலிமை பற்றிய நிறைய விதிமுறைகள் இருந்துவந்துள்ளது. சாமுராய்களைப்போலவே கடானாவின் வடிவமும் ஆரம்பக்காலத்தில் இருந்தே நிறைய மாறுபாடுகளை சந்தித்துவந்துள்ளது.



இந்த கடானாவைத்தவிர வில், பிச்சுவா, சிறிய கத்திகள் போன்றவற்றை சாமுராய்கள் பயன்படுத்திவந்துள்ளனர்.

த லாஸ்ட் சாமுராய்



இந்தப்படம் 2003ல் வெளிவந்தது, பெரும்பாலான டாம் படங்களைப்போலவே இந்தப்படத்தையும் நான் வெளியான சில வாரங்களில் பார்த்திருந்தேன். சில படங்கள் நமக்குள் தீவிரமான ஒரு அதிர்வை உருவாக்கும் என்னைப்பொறுத்தவரை என்னில் கொஞ்சம் அதிர்வை உண்டாக்கிய படம் இந்த த லாஸ்ட் சாமுராய்.

இந்தப்படம் நான் பார்த்த டாம் படங்களில் மிகச்சிறந்ததொன்றும் கிடையாது, போர்க்காட்சிகள் சம்மந்தபட்ட காட்சிகளின் படியும் நான் பார்த்த மிகச்சிறந்த படமாக இதைச்சொல்லமுடியாது. ஆனால் இதையெல்லாம் மீறிய ஒன்று இந்தப்படத்தில் எனக்குப்பிடித்திருந்தது.

நாதன் அல்கெரன், ஜார்ஜ் ஆர்ம்ஸ்டிராங் கஸ்டர்(உண்மை கதாப்பாத்திரம்) என்னும் கமெண்டரின் கீழுள்ள இராணுவத்தின் ஒரு தளபதி, படத்தில் அவருடைய மிகப்பிரபலமான ‘பாட்டில் ஆப் லிட்டில் பிக்ஹார்ன்’ ல் பங்குபெற்றதாக அறியப்படுபவர். இவர்களுடைய ராணுவம் அமேரிக்க சிவில் யுத்தம் மற்றும் இந்தயப்போர்களில் பங்குபெற்றது. குறிப்பிட்ட அந்தப்போரில் மிகக்குறைவான தன்னுடைய படையை அமேரிக்கப்பழங்குடியினரின் பெரும் படையை எதிர்த்து போரிடவைக்க அவரின் படை நிர்மூலமாக்கப்பட்டது. தோல்வி முன்பே தெரிந்திருந்தும் இந்தப்போரில் கலந்துகொண்ட கஸ்டரின் ஒரு படைப்பிரிவு தளபதி தான் நாதன் அல்கெரன். நன்றாகத்தெரிந்தும் இப்படி சக போர்வீரர்களை இழந்ததால் தன்னுடைய ஏதோவொன்றை தொலைத்ததைப்போல் இருக்கும் அல்கெரன் தன்னுடைய தளபதி பதவியில் இருந்து விலகி, துப்பாக்கிகள் பற்றிய காட்சிகளை நடத்துபவராக இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஜப்பானின் மன்னர், தன்னுடைய படைகளுக்கு துப்பாக்கி பயிற்சியளிக்க விரும்ப அதற்காகச் செல்லும் அல்கெரனின் மற்றுமொறு முன்னால் கமெண்டர் அவரையும் தன்னுடன் வருமாறு அழைக்க சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்கெரன் ஜப்பான் வருகிறார். இங்கே தொடங்கும் கதை.

இங்கே ஜப்பான் வந்ததும் மன்னரின் படைகளுக்கு அல்கெரன் பயிற்சியளித்துக் கொண்டிருப்பார். பயிற்சியின் ஆரம்ப நிலையிலேயே மன்னர் தன்னுடைய படைகளை தன்னுடைய எதிரியான சாமுராய் கட்ஸுமோட்டோவிற்கு எதிராக போர்புரிய அனுப்புவார். அல்கெரன் எவ்வளவோ தடுத்தும் அனுப்பும் படைகள், துப்பாக்கிகள் கைவசம் இருந்தும் சண்டையில் சாமுராய்களின் வாள், அம்பு, மற்றும் வேல்களுக்கு பலியாகி பாதிபேர் சண்டையிலிருந்த உயிர்பிழைக்க ஓடிவிடுவார்கள். கடைசிவரை சண்டை செய்யும் அல்கெரனை கொல்ல வரும் சாமுராயின் மருமகன் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் அல்கெரனால் கொல்லப்படுவார்.

பின்னர் அல்கெரனை பழிக்குப்பழி வாங்காமல், சாமுராய் கட்ஸுமோட்டோ தன்னுடன் பிணைக்கைதியாக அழைத்து சென்றுவிடுவார். பின்னர் சாமுராய்களின் இடத்திற்கு வந்ததும் அவருக்கு சண்டையில் கிடைத்த காயங்களை குணப்படுத்தப்பட்டு, சிறிது சிறிதாக அவர் சாமுராய்களின் நல்லெண்ணத்தைப்பெறுவார். பின்னர் கடைசியில் சாமுராய்களுக்கும் மன்னரின் படைகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் சாமுராய்களின் சார்பாய் பங்கேற்பார். சண்டையில் அல்கெரன் தவிர மற்ற அனைவருமே கொல்லப்படுவார்கள் சாமுராய் உட்பட. இதுதான் கதை.



எனக்கு இந்தப்படத்தில் டாமின் நடிப்பைவிட, கட்ஸுமோட்டோவாக நடித்த கென் வாட்டனபேவின் நடிப்பு பிடித்திருந்தது. தன்னுடைய இருப்பை மிகப்பிரமாதமாக படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் வாட்டனபே, அதுவும் குறிப்பாக அல்கெரனுக்கும் கட்ஸJமோட்டோவிற்கும் இடையில் நடக்கும் அந்த உரையாடல்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். சாமுராய்களின் வாழ்க்கை முறைகளை இயக்குநர் மிகஅழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப்படம் படமாக்கப்பட்ட விதத்திலும் அழகாகயிருக்கும்.



டாம் வாள்பயிற்சியில் ஈடுபட்டிக்கும் பொழுது செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கட்ஸJமோட்டோவின் மகன், சொல்லும் விஷயங்கள் நன்றாக இருக்கும்."Mind the sword, Mind the people, Mind the Enemy, three many minds." அதேபோல் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு உதவி செய்துவருவது. சண்டையில் தான் கொன்ற சாமுராயின் மனைவிதான் எனத்தெரிந்து கொண்டவுடன் டாம் படும் அவஸ்தைகள் நன்றாகயிருக்கும்.



கட்ஸுமோட்டோவை அவருடைய இருப்பிடத்தில் வந்து கொல்ல முயலும் காட்சியின் பொழுது நடக்கும் சண்டையும், பின்னர் ஜப்பானிய மன்னரிடம் சென்று தன்னுடைய சேவையைப் பெற்றுக்கொள்ளக்கேட்கும் கட்ஸுமோட்டோவைக் கைது செய்து வைத்திருக்க அவரைக்காப்பாற்ற நடக்கும் சண்டையும் இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த சண்டைக்காட்சிகள். இந்தப்படம் பெரும்பான்மையான இடங்களில் அல்கெரன் கதைசொல்வதாக நகரும். கடைசியில் அவருடன் ஜப்பானுக்கு வரும் டிமோத்தி ஸ்பெல் சொல்வதாக முடியும், டிமோத்தியின் கதாப்பாத்திரமும் மிகஅழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தின் இயல்பிற்கு மிகஅழகாக இவர் செய்யும் சில நகைச்சுவைக்காட்சிகள் இருக்கும்.

சாமுராய்களைப்பற்றிய என்னுடைய ஆர்வமும் இந்தப்படம் எனக்கு பிடித்திருந்ததற்கான ஒரு முக்கிய காரணமம். முன்பே சொன்னதுபோல் படமாக்கப்பட்ட முறைதான் இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருமுறை நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்தான் த லாஸ்ட் சாமுராய்.



இயக்கம் எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன், மார்ஷல் எர்க்ஸ்கோவிட்ஸ், எட்வேர்ட் ஸ்விக், கதை ஜான் லோகன் எழுதிய ஒரு கதையின் தழுவலில் எடுக்கப்பட்டது. டாம் குரூயிஸ், டிமோத்தி ஸ்பெல், கென் வாடனபே, கொயுகி ஆகியோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

சின்டிரெல்லா மேன்



சின்டிரெல்லா மேன், இந்த படத்தைப்பற்றிய எதிர்பார்ப்பு சிலகாலமாகவே இருந்து வந்தது, இதற்கு முக்கியமான சில காரணங்களும் உண்டு. ரான் ஹோவார்ட் இயக்கத்தில், ரஸல் குரோ நடிப்பதால் வந்த எதிர்பார்ப்பு. இவர்களின் சேர்க்கையில் வந்த ‘A Beautiful Mind’ படம் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால். இந்த படத்தையும் பார்க்கவேண்டும் எண்ணம் ஆரம்பத்திலேயே எழுந்தது.

இது அமேரிக்காவின் டிப்ரஷன் எராவில் நடந்த ஒரு குத்துச்சண்டை வீரனைப்பற்றிய உண்மைச் சம்பவத்தைப்பற்றிய படம். அமேரிக்க மக்கள் முட்டிக்காலில் நின்றுகொண்டிருந்த பொழுது அவர்களை தன் பாக்ஸிங் திறமையால் நுனிக்காலில் நிற்கவைத்தவர் என்ற பெருமை பெற்ற ஜேம்ஸ் பிராட்டாக் பற்றிய உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் சின்டிரெல்லா மேன்.



படத்தின் தலைப்புக்கு கவித்துவமான விளக்கம் உண்டு, அதாவது ஜேம்ஸ் பிராட்டாக் சிறிய அளவிலான பாக்ஸராக இருந்து உலகத்தின் ஹெவிவைட் சாம்பியனானது ஒரு கற்பனைக்கதையைப் போன்றதாகவே இருந்தது. தன்னுடைய முப்பதாவது வயதில், பாக்ஸிங் ரிங்கில் தன்னுடைய தாக்குதலால் இரண்டு நபர்களை கொன்றதாக பெயர்பெற்ற மாக் பியரரை வென்றது ஹெவிவைட் பாக்ஸிங்கில் இன்றும் குறிப்பிடப்படும் ஒரு மிகப்பெரிய வெற்றி. போட்டிக்கு முன்பு 1/10 மட்டுமே வெல்வதற்காக பெற்றிருந்த பிராட்டாக் வென்றது பாக்ஸிங்கின் மிகப்பெரிய அப்செட் இன்றைக்குவரைக்கும்.



மில்லியன் டாலர் பேபியைப்போன்றோ, இல்லை அதற்கு முன் வந்த பாக்ஸிங் படங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டது இந்த சின்டிரெல்லா மேன். படத்தில் பாக்ஸிங் இடம்பெற்றிருந்தாலும். ஜேம்ஸின் வாழ்கையைத்தான் இயக்குநர் வெகுவாக படமாக்கியிருப்பார். அவருடைய ஏழ்மை, அமேரிக்காவின் தொழில் முடக்கம் இப்படியாக.



படம் 1929ல் ஜேம்ஸ் லைட்வைட் சாம்பியன்ஷிப்பிற்காக மோதும் போட்டியில் தொடங்கும். அப்பொழுது அவர் குடும்பம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தேவையான பணத்தை சம்பாதித்துக்கொண்டு இருக்கும் பிராட்டாக், பிறப்பில் ஒரு ஐரிஷ். பின்னர் நடக்கும் அமேரிக்க ஸ்டாக் மார்க்கெட் இழப்பில் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அளவிற்கு போய்விடும். பின்னர் சாப்பாட்டிற்கு கூட காசில்லாமல், தன்னுடைய வலது கையில் அடிபட்டிருக்கும் நிலையிலும் சண்டையில் பங்கேற்று கையை உடைத்துக்கொள்ளும் பிராட்டாக்கின் பாக்ஸிங் லைசன்ஸ் ரத்துசெய்யப்படும்.

இந்தச் சமயத்தில் அவர் குடும்பம் மின்சாரத்திற்கு கூட பணமில்லாமல் வீட்டில் இருந்து இணைப்புத்துண்டிக்கப்படும். இப்படியாக மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பாக்ஸிங் வீரரின் முன்னறிவிப்பில்லா விலகலில் மீண்டும் பாக்ஸிங் செய்ய பிராட்டாக்கிற்கு ஒருவாய்ப்பு வழங்கப்படும். பின்னர் அந்தப்போட்டியில் வெற்றி பெற்று பிராட்டாக் எப்படி உலக ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் மாக்ஸ் பியரரை வெல்கிறார் என்பதே கதை.




கொஞ்சம் மென்மைத்தன்மையுள்ள பாக்ஸராக பிராட்டாக்கின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆஸ்கர் வின்னர் ருஸல் குரோ, குறிப்பாக சில காட்சிகளில் வசனங்கள் இல்லாமல் தன்னுடைய முகபாவத்திலேயே பேசும் பொழுது பின்னுகிறார். அவருடைய மனைவியாக மற்றொருமொறு ஆஸ்கர் வின்னர் ரெனி ஷெல்வேக்கர் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் பரவாயில்லை செய்திருக்கிறார், கொஞ்சம் கஷ்டமான கதாப்பாத்திரம், இருந்தாலும் பரவாயில்லை லெவல்தான். பிராட்டாக்கின் மேனேஜராக பவுல் கிமாட்டி நடித்திருக்கிறார் அவரின் திறமை பல காட்சிகளில் பளிரிடுகிறது. பாக்ஸிங் போட்டிகளில் காமிராவின் கோணங்கள் எனக்கு கொஞ்சம் புதியதாய்ப்பட்டது. மற்றபடி இயக்குநரின் திறமை படமாக்களில் தெரியத்தான் செய்கிறது.



தன் மகன் சாப்பாட்டிற்காகத் திருடிவிடும் சூழ்நிலையில், எக்காரணம் கொண்டும் அவனை மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அனுப்பமாட்டேன் என்று சொல்லும் காட்சி நன்றாய் இருக்கும். பிறகு ஹெவிவைட் சாம்பியன்ஷிப்போட்டிக்கு முன் நடக்கும் பேட்டியில், தான் சண்டையிடுவதும் வெற்றிபெறுவதும் தன் குடும்பத்திற்கு தேவையான பாலை(சாப்பாட்டை) தரவே என்று சொல்லும் காட்சியும் நன்றாய் இருக்கும்.

இதுபோல இயக்குநரின் டச் சில இடங்களில் தெரியும், பாக்ஸிங் படமாதலால் கொஞ்சம் கெட்டவார்த்தைகள் நிரம்பிய படம் தான் இதுவும்.

பிராட்டாக் அந்தப்போட்டிக்கு பிறகு, இரண்டாண்டு கழித்து தன் ஹெவிவைட் சாம்பியன்ஷிப்பை ஜான் எஹுன்றி லீவிஸிடம் இழந்தார். ஆனால் அந்தப்போட்டியில் கிடைத்த பணத்தில் கடைசிவரை அவர் வாழவழிகிடைத்தது. அதன்பிறகு அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்றார். இவருடைய திறமையைக் கருத்தில் கொண்டு அமேரிக்க அரசு இவருடைய படம் இடம்பெற்றுள்ள தபால்தலையை வெளியிட்டது.



இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் ரஸல் மற்றும் ரோன் ஹோவார்ட் இருக்கிறார்கள் இந்தப்படத்திற்காக கிடைக்குமா தெரியவில்லை. மற்றபடிக்கு ரோன் ஹோவார்டுக்காகவும் ரஸல் குரொவுக்குமாக ஒருமுறை நிச்சயமாய்ப் பார்க்கலாம்.

References

http://movies.yahoo.com
http://en.wikipedia.com
http://www.jamesjbraddock.com

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கவிதைகள் சுய சொறிதல் சொந்தக் கதை

பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும்

இன்னும் படித்துக்கொண்டிருக்கும்
என் அக்காவிற்கு 
நேற்றிரவு 
நாய்கள் என்னைப்பார்த்தது
நக்கலடிப்பதாய்ப்பட்டது 
தெரியப்போவதில்லை

உள்ளிருப்பது தெரிய 
வலையவரும் பெண்கள்
என்னிரவுகள் நினைவுபடுத்தும்
மனக்கணக்குகள் 
அறிவதில்லை

கழுதையோ எருமைமாடோ 
ஏதாவதொன்றை 
நானாய்க்கேட்டாலொழிய 
தலையில் கட்ட மறுக்கும் பெற்றோர்
உணர்வதில்லை 
ஜோடிகளின் இறுக்கத்தில் புழுங்கும் 
மனதின் வெம்மையை

மற்றவற்றை போலில்லாமல்
கட்டுடைக்கத்தூண்டும் 
பனிக்காலத்தின் கிளர்ச்சிகளை 
புறந்தள்ளி காத்திருக்கிறேன்
இன்னுமொறுமுறை

Read More

Share Tweet Pin It +1

1010 Comments

In சிறுகதை

தமிழீழக்காதல்(1) - நீங்கள் கேட்டவை

அது நடந்து இரண்டாண்டு ஆகியிருக்கும், சந்திரா கண்கலங்க தன் படிப்பை முடித்துவிட்டு தன் அண்ணனுடன் சென்ற நாள் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. அதற்கு பின் சில மாதங்கள் அவளுடன் தொலைபேசித்தொடர்பு இருந்து வந்தது. அதற்குப்பின்னர் என் வேலை காரணமாக புனேவிற்கு மாறியதிலிருந்து தொடர்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஒவ்வொருமுறை இணையப்பக்கங்களில் ஈழத்தமிழர்களுடன் உரையாடும்பொழுதோ இல்லை ஈழத்தமிழை உரைநடையில் படிக்கும் பொழுதோ சந்திராவின் ஞாபகங்கள் வராமல் இருந்ததில்லை.

எங்கள் வீட்டில் நான் புனேவிற்கு வந்ததும் இவ்வளவு தூரம் வரமுடியாதென்று சொல்லி பெங்களூர் வீட்டைவிற்றுவிட்டு சொந்த ஊரான காரைக்காலிற்கே குடிபோய்விட்டார்கள். ஒரு தீபாவளி விடுமுறையில் வீட்டிற்கு வந்தபொழுது பிரான்ஸில் இருந்து வந்த அப்பா வழி மாமா, என்னை பிரான்ஸ் வந்துவிடுமாறு வற்புறுத்த நானும் சிறிதுகாலம் வெளிநாட்டில் வேலைசெய்துவிட்டு வந்தால் இந்த தொல்லை பிடித்த ஐடி வேலையை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு பெரிய கல்லூரியில் லெக்சரராய் சேர்ந்துவிடும் எண்ணமும் இருந்தது. அதுவுமில்லாமல் நான் பிறந்தது காரைக்கால் என்பதால் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு பிரஜையாகத்தான் இருந்தேன். அதாவது என் அப்பா தன் இந்தியஉரிமையை விட்டுத்தர மறுத்துவிட்டாலும் அம்மா இன்னும் பிரான்ஸ் தந்திருந்த பிரஜா உரிமையின்படி பிரஞ்ச் பிரஜையாக இருந்தார்.

அதனால் தஸ்தாவேஜ்கள் எல்லாம் சீக்கிரமே நகர ப்ரான்ஸ் நாட்டிற்கான விசாவும் விரைவாகவே கிடைத்தது. ஏற்கனவே பிரான்ஸில் இருந்த மாமாவின் வீட்டிற்குத்தான் போயிருந்தேன். அந்த வீட்டில் எனக்கு முறைப்பெண் ஒருத்தியும் இருந்தாள். மனது முழுவதும் சந்திராவேயிருந்ததால் மாமா பெண் சுமதியைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கவேயில்லை. நான் முன்பே சிஸ்டம் சைட் புரோக்கிராமில் வேலை செய்துகொண்டிருந்ததால் அத்துனை தூரம் பணிசார்ந்த பிரச்சனைகள் இல்லை. பள்ளிப்படிப்பில் ப்ரெஞ்சை ஒரு பாடமாக படித்திருந்ததாலும் நான் ப்ரான்ஸில் வாழ்வதற்கான பிரச்சனை எதையும் சந்திக்கவில்லை. இங்கே வந்தது செங்கன் விசா என்பதால் ஆறுமாதம் கழித்து வந்த விடுமுறையில் ஐரோப்பிய யூனியனில் இருந்த அத்தனை நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுவந்திருந்தேன்.

ஜெர்மனி, இத்தாலி, ஸ்விஸ், இங்கிலாந்து எல்லா நாடுகளையும் சுற்றிவிட்டு கடைசியாக பிரான்ஸை சுற்றிப்பார்க்க வந்திருந்தேன். ப்ரான்ஸ் ஒரு அற்புதமான நாடு, அதைப்போலவே மக்களும். நான் முதன்முதலில் பரியில் இறங்கியதிலிருந்தே அந்த மக்களஇன் பழக்கவழக்கங்கள் ஆச்சர்யத்தை அளஇத்திருக்கின்றன. அந்த நாட்டு மக்களின் நாட்டுப்பற்று தீவிரமானது. ப்ரெஞ்ச் மொழிமேல் அந்த மக்கள் கொண்டிருந்த ஈடுபாடு அலாதியானது. குதிரை வண்டிக்காரனிடம் பேசும் மொழி ஜெர்மன் என்றும், தொழிலாளியிடம் பேசுவதற்கான மொழி ஆங்கிலமென்றும் காதலியிடம் பேசும் மொழி ப்ரெஞ்ச் என்றும் விளையாட்டாக உடன் வேலைசெய்யும் நண்பர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். லூர்து மியூசியம், நெப்போலியனின் அரண்மனை முதற்கொண்டு பலவற்றை அன்று பார்த்துவிட்டு நான் தோரபெல் வந்தேன். அதைப்பார்த்துவிட்டு அதன் பிரமாண்டத்தில் வாயை மூடயியலாமல் இருந்தபொழுதுதான் அவளைப்பார்த்தேன் ஆனால் முதலில் தோற்றமயக்கம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவளாய் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டேன்.

"ஏய் மோகன் நீங்கள் எப்பிடி இங்க?" என் கண்களை என்னால் நம்பவேமுடியவில்லை.

சிறிதுநேரம் நன்றாய் விழித்துவிழித்து பார்த்துவிட்டு,

"ஏய் சந்திரா நீ எங்க இங்க, சொரூபன் எப்படியிருக்கான். கல்யாணமாயிருச்சா உனக்கு" எனக்கு நாங்கள் பெங்களூரில் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வந்தது. இன்னும் அப்படியேத்தான் இருந்தாள், எனக்கென்னவோ அவள் கண்களில் பிரகாசம் கூடியிருப்பதாய்ப்பட்டது.

"இல்லை இன்னும் ஆகலை சொரூபன் அண்ணா சுகமா இருக்கிறான்; அவனும் இங்கதான் இருக்கிறான். அது சரி நீங்கள் இங்க என்ன செய்யுறங்கள்" சந்திரா பேச முன்பைப்போல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் இரண்டு கைகளையும் அசைத்தவளாய் என் கவனத்தைக் கலைத்தாள்

"நான் உன்கிட்ட முன்னயே சொல்லியிருந்தேன்ல, எங்கம்மாவிற்கு பிரெஞ்ச் ஸிட்டிஷன்ஷிப் இருக்குன்னு. அதான் கொஞ்சநாள் பிரான்ஸ் வந்து நிறைய சம்பாதித்துவிட்டு. இந்தியா போய் செட்டில் ஆய்டலாம்னு இங்கே வந்தேன். நான் உன்னை இங்கே எதிர்பார்க்கவேயில்லை"

நான் சொல்லிக்கொண்டிருந்ததை ஆர்வமாய்க் கேட்டவள்.

"உங்கட அக்கா மோகனா எப்பிடியிருக்கிறா?"

"அவளுக்கென்ன கல்யாணமாயிருச்சு, அமேரிக்க மாப்பிள்ளை என் சொத்தில் பாதியை எடுத்துக்கிட்டு அமேரிக்கா போய் செட்டில் ஆய்ட்டா." சொல்லிவிட்டு நான் சிரிக்க முதலில் சிரித்தவள்.

"விளையாட்டுக்குக்கூட அப்படி சொல்லாதயுங்கோ மோகன். அக்காக்கு செய்தால் உங்களுக்கு இரண்டு மடங்காய் திரும்பக்கிடைக்கும்."

"ஏய் அப்ப உன்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்கண்ணன் நிறைய வரதட்சணை தருவான்னு சொல்லு." கேட்டுவிட்டு அவளின் பதிலுக்காய் காத்திருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான் அவளிடம் காதலுக்காக வேண்டினேன். இதைக்கேட்ட அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள் பிறகு வேறு பக்கம் முகத்தை திருப்பியவளாக,

"மோகன் சொரூபனை நீங்கள் இப்பப் பார்த்தால் நம்பவேமாட்டீங்கள். இங்க ஒரு ஸாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஒரு வருஷத்திலேயே நாங்கள் எங்கள் உறவினர்கள் வழியாக இங்கே வந்திட்டம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்ததுதான் ஆனால் இப்ப எல்லாம் பழகிட்டுது..."

அவள் மறைமுகமாக இந்த விஷயத்தைப்பற்றி பேசாதீர்கள் என்று சொல்வதாய்ப்பட்டதால் நானும் விட்டுவிட்டேன். பிறகு நாங்கள் தோரபெல் மேலேயிருந்து கீழிறங்கி வரும் பொழுது எங்களை வரவேற்ற நபரை எனக்கு நிச்சயமாய் அடையாளம் தெரிந்தது. அது சொரூபன்தான் நன்றாய் சதையடித்திருந்தான். முதலில் என்னைப்பார்த்து வியந்தவனாய். 'மோகனண்ணா நீங்கள் எப்பிடி இங்க நிச்சயமாய் னஉங்களை நான் இங்கே எதிர்பார்க்கவேயில்லை. சந்திராவை பார்த்தனீங்களோ?'ன்னு கேட்டதில் நான் வியந்துபோனேன். பின்னே அச்சு அசலாய் அமேரிக்க அக்சென்டில் சொரூபன் பேச என் புருவங்கள் விரிவடைவதை தவிர்க்கவே முடியவில்லை. நானும் திறமையைக்காட்ட சொரூபா நானும் அப்படித்தான். உன்னை இந்த நிலையில் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறதுன்னு ப்ரெஞ்சில் சொல்ல. எல்லாம் ஆண்டவன் அருள் அண்ணே, கதிர்காமக்கந்தன் அருள். வாங்க நமக்குத்தெரிந்த கடையொன்னு பக்கத்தில் இருக்கு அங்கப்போய் பேசலாம். அப்படின்னு அவனும் தெள்ளத் தெளிவான ப்ரெஞ்சில் சொல்ல எனக்கு நான் இருந்த இடம் லேசாய் ஆடுவதைப்போல் இருந்தது. சத்தியமாய் சந்தோஷத்தில் தாங்க.

நாங்கள் ஒருவழியாய் சொரூபனின் ஈழ நண்பன் ஒருவனுடைய கடைக்கு வந்திருந்தோம். சொரூபன் என்னை தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்த எனக்கு கிடைத்த மரியாதை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் சம்மந்தம் கிடையாது என்பதில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கை அளவிடமுடியாதது. சொரூபனையும் சந்திராவையும் தவிர்த்து எனக்கு ஈழத்தைப்பற்றி தெரிந்தது கையளவே. இதன் போன்ற காரணங்களால் முன்பே மனதில் விசுவரூபமெடுத்திருந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய நல்லெண்ணம் பின்பு வாமன ரூபம் கொண்ட மகாப்பிரபு இரண்டடியை அளந்துவிட்டு மூன்றாம் அடிவைக்க நிலம் கேட்ட பொழுது தன் தலையைக் கொடுத்த மகாபலியைப்போன்று என் திருவடியைக்காட்டி எந்தன் உள்ளும் புறமும் புகுந்து எங்கும் நிறைந்த பரம்பொருள் போன்றதொரு நிலையை எட்டியிருந்தது.

"அண்ணே நான் ஒண்டு கேட்டால் கோவிக்க மாட்டீங்கள்தானே" சந்திரா அந்த கடை நடத்தும் அன்பரின் வீட்டிற்குள் சென்றதும் சொரூபன் உயர்தர ஆங்கிலத்தில் கேட்க,

"நிச்சயமாய் சொரூபா" தமிழில் தான் பதிலளஇத்தேன்.

"உங்களுக்கு ஞாபகமிருக்கோ தெரியேல்ல ஒருநாள் உங்க அக்காவை குறிக்க நான் பெட்டைன்னு சொல்லிட்டன் நீங்கள் என்னை அடிக்க கையை உயர்த்தினீங்கள்." அவன் கேட்டுவிட்டு என்னையே பார்த்தான்.

"நினைவிருக்கிறது சொரூபா."

"அண்ணை பெட்டைகள் எண்டால் எங்கட வழக்கில பெண்பாலைக் குறிக்கும் சாதாரண வார்த்தைப் பிரயோகம்."

"ஆனால் எனக்குத் தெரியாதே சொரூபா, தமிழீழ வார்த்தைகள் மட்டுமில்லை, சில தூய தமிழ் சொற்களோட அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. உதாரணத்துக்கொன்னு எடுத்துக்கோயேன் நாற்றம் அப்பிடின்னா தூயதமிழ்ல வாசனைன்னு அர்த்தம், அதையே மெட்ராஸ்ல இருக்குற ஒருத்தன்ட போய் அண்ணே உங்க சட்டைலேர்ந்து அற்புதமான நாற்றம் வருதுண்ணேன்னு சொல்லிப்பாரு தெரியும். அதுக்காக தமிழ்நாட்டுக்காரனுக்கு தமிழ் மேல மதிப்பில்லை மரியாதையில்லை ஏட்டிக்குப் போட்டியாய் பேசுறான்னு அர்த்தமா? இதைக்கூட நீ என்னை இன்னும் நல்லா புரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். அதெல்லாமிருக்கட்டும் நான் உனக்கு பெங்களூரில் எவ்வளவோ உதவியிருக்கேன். நான் சொல்லிக் காண்பிக்கிறேன்னு நினைக்கக்கூடாது உனக்கு கடைசியில் என்னைப்பற்றிய நினைவு வரும்பொழுது அந்தப் பெட்டைன்னு நீ சொன்னதுக்காக நான் கோபப்பட்டதுதான் நினைவிற்கு வருதா?" நான் கேட்க என்னவோ பதில் சொல்லவந்தவன் நிறுத்திக்கொண்டு,

"உங்கட அம்மா அப்பாவை நம்பி என்ர தங்கச்சியை விட்டுட்டுப் போனால் நீங்கள் கையைப்பிடிச்சு காதலிக்கிறியா எண்டு கேட்டது மட்டும் சரியோண்ணா?. எங்கடப் பெண்கள் எண்டா உங்களுக்கு அவ்வளவு கேவலமா?" இதைக்கேட்ட பொழுது அவன் கண்கள் கோபத்தில் சிகப்பேறியிருந்தது. சிறிது நேரம் யோசித்தவனாய்.

"உண்மைதான் சொரூபா, ஒரு பதின்ம வயது பெண்ணிடம் ஏற்பட்ட சாதாரண இனக்கவர்ச்சியை தவறா உபயோகப்படுத்திக்கிட்டனோன்னு அப்பவே நினைத்தேன். ஆனால் இதெல்லாம் நாம சந்திராவை கல்யாணம் செய்துக்கிட்டா தப்பாகாதுன்னும் நினைச்சதால சரின்னு நினைச்சிட்டேன். ஆனால் இன்று வரை அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் நிச்சயமாய் தப்புதான் சொரூபா, தப்புதான்."

இந்த பதில் சொரூபனின் முகத்தில் ஏற்படுத்திய மாற்றங்ளை குறிப்பெடுக்க நினைத்த எனக்கு குறிப்பெதுவும் கிடைக்கவில்லை. அவன் அந்த பதிலை ஜீரணம் செய்துவிட்டவனைப்போல் நகர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சந்திராவை பார்த்த பொழுது முன்பிறுந்த மனநிலையில் எந்தவொருமாற்றமும் இல்லை.

"மோகன் நான் முந்தியே உங்களிட்ட சொன்னானல்லே. ஆரம்பத்திலாவது பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது. நீங்கள் சொரூபன் அண்ணா உண்டியல் பணம் போட உங்கட வங்கிக்கணக்கை கேக்க நீங்க தரமறுத்து ஏதோ கொலைக்குற்றவாளி போல் பார்த்தீங்களாம்.
உண்டியல் பணம் என்றது கடத்தல் பணமோ திருட்டுப்பணமோ இல்லை தெரியுமோ? நேர்மையான வழியில் சம்பாதிக்கிற பணம்தான்."

"சந்திரா நீ கூடவா என்னை புரிஞ்சிக்கவில்லை. தமிழ்ல கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை அப்படின்னு ஒரு பழமொழியிருக்கு. எல்லாப் பழமொழியையும் போல இதையும் மக்கள் திரிச்சிட்டாங்க. கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனைன்னு, கழு அப்படிங்ற ஒரு வகையான பருத்தி வளர்றப்போ கற்பூரம்போல் வாசனை வரும். அதை அறுவடை செஞ்சு தறியில நெஞ்சு துணியா மாத்தினா அந்த பருத்தியில இருக்கிற கற்பூர வாசனை போயிரும் அப்பிடிங்கிறதுதான் அந்த பழமொழி. ஆனா இப்ப மக்கள் கிட்ட இருக்குற பழமொழியோட அர்த்தம் வேறயில்லையா. அதுமாதிரிதான் உண்டியல் சம்மந்தப்பட்ட என்னோட அறிவும். நான் தமிழ்ல கதை கட்டுரையெல்லாம் எழுதுவேங்கிறதுக்காக இந்த விளக்கத்தையெல்லாம் நான் தெரிஞ்சிருக்கணும் அப்படின்னு நினைக்கிறது முட்டாள்தனம் இல்லையா. அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன் உங்கண்ணனை போலீஸ்கிட்டையா புடிச்சிக் கொடுத்தேன். என் அக்கௌன்ட் டீடெய்ல் தரமுடியாதுன்னுதானே சொன்னேன். அதுல வேற பிரச்சனையேயில்லையா, நாளைக்கே நான் டேக்ஸ் ரிட்டர்ன் காமிக்கிறப்ப அந்த பணம் எதுக்கு வந்துச்சுன்னு கேள்விவராதா. நான் எங்கப்போய் பதில் சொல்வேன். ஒன்னும் தெரியாம குய்யோ முறையோன்னு கத்தக்கூடாது."

"அதைத்தான் நானும் சொல்றன். எங்களுக்குள்ள மொழி முதற்கொண்டு பிரச்சனையிருக்கு. அதால நமக்குள் இடைவெளிகள் அதிகம் என்னதான் முயன்றாலும் எங்களைப்பற்றி உண்மையாக நீங்கள் தெரிந்துகொள்வதில் 1 சதவீதம் கூட உண்மையிருப்பதில்லை. அதனால் நீங்க உங்கள் வழியைப் பார்த்து ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணுங்கோ. ஒருவிஷயம் மட்டும் நீங்க நல்லா புரிஞ்சு கொள்ளுங்கோ நீங்கள் பெங்களூரில் செய்த உதவியை நாங்கள் ஒருநாளும் மறக்கமாட்டம். இன்று நாங்கள் நல்ல நிலைக்கு வந்திட்டதால சொரூபன் அண்ணாவோ நானோ இப்படி கதைக்கிறம் எண்டு நீங்கள் நினைக்கக்கூடாது. ஏதோ மனசை உறுத்திக்கிட்டிருந்தது கேட்டிட்டன் அவ்வளவுதான்."

அவள் முன்னமே முடிவெடுத்துவிட்ட ஒரு நிலையில் இருப்பதையே உணர்ந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நான் கேட்டதற்கும் அவள் அவ்வளவு சாதகமாய் பதில் சொல்லியிருக்காததால். நானும்,

"இல்லை சந்திரா இதுதான் நல்லவழிமுறை. என்பேர்ல எதாவது குற்றம் இருந்தால் அதை நேரா கேட்டுடணும். என்னால முடிஞ்ச பதிலை நானும் கொடுப்பேன். உன்விரும்பம் அதுதான்னா எனக்கும் பிரச்சனை கிடையாது."

சொல்லிவிட்டு அவளின் தொலைபேசி எண்ணை ஒப்புக்காய் வாங்கியவனாய் தோரபெல்லில் என் காதலை தலை முழுக நினைத்தேன். நினைவுகளை காற்றிலே கரைக்க நினைத்தவனாய் சப்தமாய் மூச்சுவிட்டுக்கொண்டே நான் வந்திருந்த பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தேன். என்னவோ ஒன்று நீண்டநாளாய் அரும்பாடுபட்டு காத்துவந்தது உடைந்துவிட்டதைப்போன்றதொறு எண்ணம் உண்டானது. என்னவோ நினைவில் செல்லிடைபேசியை எடுத்தவன் மாமாவின் எண்ணை அழைக்க,

"மாமா, நான் சுமனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்."

"தம்பி அதை நீ சுமன் கிட்டையே கேளு." சொல்லியவுடன் தொலைபேசி இடம்மாற,

"சொல்லுங்க வாவா, என்ன விஷயம்?"

"இல்லை உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு மாமாக்கிட்ட கேட்டேன் அவர்தான் உன்கிட்ட கேக்கச்சொன்னாரு. அதான்"

"வாவா இதென்ன என்கிட்ட கேக்குறீங்க, நைனாக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா. இங்க நேர்ல வாங்க பேசிக்கலாம். ஆமாம் இப்ப எங்க இருக்கீங்க, எப்ப வீட்டிற்கு வர்றீங்க." சுமன் கேட்க, யாரையோ பழிவாங்க நினைத்தவனாய்.

"சுமன் மாமாக்கிட்ட சொல்லீறாத, நான் இப்ப தோரபெல்லில் இருக்கேன். முல்லா ரூஜ் போய்ட்டு இன்னிக்கு நைட் வந்திற்ரேன்."

நிராகரிப்பின் வலி எல்லா சமயமும் அடக்கிவிட முடிவதாய் இருப்பதில்லை, அதன் ரணங்கள் பெரும்பாலும் நேர்மறையான வினைகளையே ஆற்றியிருந்தாலும் சில சமயங்களில் எதிர்மறையான வினைகளும் அதனால் ஏற்பட்டுவிடுகிறது. யுயுத்சு நூறு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் பிறந்தவன் ஆனாலும் அவனுக்கு சமூகத்தில் அத்தனை நபர்களஇன் நிராகரிப்புத்தான் பரிசாய்க்கிடைத்தது. அதேபோல் தான் அம்பையும் பீஷ்மனின் வில்லின் வலிமையில் சால்வன் தன் இயலாமையைக்கண்டதால் நிகழ்ந்த நிராகரிப்பு, பின்னர் கங்கை புத்ரர் வரை தொடர்ந்தது. நிராகரிப்பின் சுழற்சியில் இருந்து வெளிவர நினைத்தவனாய் இந்த பதிலை சுமனிடம் சொன்னேன். மறுமுனையில் அவள் நக்கலாய்ச் சிரித்தபடி தொலைபேசியை வைக்க, என் ஐந்தாண்டு நினைவை மூளை மடிப்புக்களில் உள்ள நியூரான்களிடமிருந்து ஆஸிட் ஊற்றி அழித்துவிட நினைத்தவனாய் முல்லா ரூஜ்ஜை நோக்கி நகர்ந்தேன்.


--------------

மீண்டும் ஒருமுறை ஈழமக்களின் உரையாடலை திருத்தி எழுதிக்கொடுத்தமைக்கு சினேகிதிக்கு நன்றி. :-) :D

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In சிறுகதை சுஜாதா

சுஜாதாவை கடத்தப்போறேன்

பெர்லின் - ஜெர்மனி

"சுஜாதாவை கடத்தப்போறோம்**."

மோகன் சொன்னதும் வந்தியின் முகத்தில் வலது புருவம் உயர்ந்ததை தவிர வேறு எந்த உணர்ச்சி மாற்றமும் நிகழவில்லை.

"என்ன பிளான்? "

"அதே பழைய பிளான்தான்."

"ம்ம்ம்... சொல்லு."

"வழக்கம் போல நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச கடைசிநாள், கிளம்பறதுக்கு இரண்டு மணிநேரம் முன்னாடி, கடத்தப்போற இடம் கடற்கரை, அரைமணிநேர வேலை, வேலை முடிஞ்சதும் மூணு மணி நேரத்துக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துட்டு கிளம்புறோம். அதுவும் தேவைப்பட்டாத்தான்."

"வெப்பன்ஸ்?"

"ஒரு பிஸ்டல், இம்போர்ட்டட் மாஸ்க், ஒரு கார்."

"மற்றபடி..."

"இந்த முறை ரொம்ப தூரம் போகமுடியாது, எந்த இடமும் வேண்டாம், அதனால நோ புக்கிங், எல்லாமே காருக்குள்ள தான்."

"காருக்குள்ளயா?"

"ஆமாம் காருக்குள்ளத்தான். ஓகே டன். இப்ப உன்நேரம். நெகட்டிவ் கொஸ்ஸின்ஸ். "

"முதல் கேள்வி எழுத்தாளர் சுஜாதாவைக் கடத்தி என்ன செய்யப்போற. பணம்ங்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நம்மக்கிட்ட இல்லாத பணமா. வேற என்னதான் ரீஸன். "

"கொஞ்சம் கேள்வி கேட்கணும்."

"எதைப்பத்தி?"

"கடவுளைப்பத்தி."

"இதை கடத்திட்டு வந்துதான் கேட்கணுமா? நேரிலே போய்க்கேட்டா ஆகாதா. அவரும் நம்ம
ஆளுதானடா. "

"என்ன ஐயங்கார்னு சொல்றியா."

"அதில்லைடா, அன்னிக்கு படிக்கலை 'யாருப்பா அது மைக்ரோசாப்ட் நாங்கல்லாம் லினக்ஸ்'னு ஒரு ஆனந்தவிகடன்ல. நாமளும் லினக்ஸ்னு சொல்லுவோம். நம்ம பேக்ரவுண்டையும் சொல்லுவோம். நிச்சயமா பேசுவாருடா. அப்ப கேளு உன் கேள்வியெல்லாம். "

"அப்பிடிப்போனா ஒருவேளை அவங்க சொந்தக்காரங்க இருக்கலாம். இல்ல உதவியாளர்ன்ற பேர்ல ஒருத்தராவது இருக்கலாம், அவங்களுக்காக அவர் தன்னோட நிலையை மாத்திச் சொல்லலாம் இல்லியா. அதுனால நம்ம இடத்துல தனியா வைச்சிக்கேட்டா சொல்லுவார்ல. நாமயென்ன மிரட்டப்போறமா இல்ல வேற எதாவது பண்ணப்போறமா. அழகா உட்காரவைச்சி கேட்கப்போறோம். "

"அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்னுட்டார்னா?"

"அவர்க்கிட்ட கேட்க கேள்விக்கா பஞ்சம். லினக்ஸப்பத்தி, ழ இயக்கத்தைப்பத்தி,
மைக்ரோசாப்ட், பில்கேட்ஸ், கமல், சங்கர், மணிரத்னம், அவரோட பேரன், இன்கம்டாக்ஸ், மேஜை நாற்காலிகள், க்வாண்டம், ரிலேட்டிவிட்டி, ஐன்ஸ்டீன், வெண்பா, கட்டறை கலித்துரை, ராமானுஜர், அர்த்த சாஸ்திரம், சாண்டில்யன், நாலாயிர திவ்ய பிரபந்தம், கொஞ்சம் டயாபடீஸ், நிறைய பைபாஸ் சர்ஜரி இப்பிடி எவ்வளவோயிருக்கு முக்கியமா அந்த ஒரு எழவும் தெரியாத ஓட்டிங் மிஷினைப்பத்தி. ஆனா ரொம்ப முக்கியம் கடவுள் பத்தியது தான்."

"கடவுளைப்பத்தியென்ன கேட்கணும்."

"எல்லா விஷயத்திலும் முடிவா ஒரு கருத்தை சொல்பவர் கடவுள் விஷயத்தில் மட்டும் ஒரு முடிவுக்கே வரமாட்டேங்குறார். அவர மாதிரி ஜினியஸ்ஸெல்லாம் கடவுள் இல்லைன்னு ஒத்துக்கிட்டா. சொல்லி வாதாடுறதுக்கு ஒரு ஆள் கிடைப்பாருல்ல. தனக்கு புரிந்த, தெரிந்துகொண்ட விஷயத்தை சுஜாதா எல்லார்க்கும் சொல்வார்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால தான் கேட்கிறேன். எவ்ளோபேர் கேட்டிருக்காங்க தெரியுமா. எங்ககிட்ட உன் நாத்திகத்தையெல்லாம் பேசாதே. சுஜாதா, சுஜாதான்னு சொல்றியே அவரே கடவுளை நம்புறார் தெரியுமான்னு. "

"இங்க பாரு தாஸ், அவரால சில விஷயங்களைத்தான் சொல்ல முடியும். முதல்ல மக்களுக்கு புரியுமான்னு பார்க்கணும். பத்திரிக்கைல ஒத்துக்குவாங்களான்னு வேற யோசிக்கணும். விகடன்லயே சில விஷயங்களை ஒத்துக்கலைன்னு அன்னிக்கு ஆதங்கமா இளமை விகடன்ல எழுதல. அதுமாதிரிதான் இதுவும். அதுவும் இது கடவுள் பத்தியது. ஒரு ஒரு தனிமனிதனுக்கும் இதைப்பத்தி கருத்து வேறயாயிருக்கும். அதான் அப்ப அப்ப சூசகமா எதாவது எழுதவார்."

"என்ன எழுதுறார்?"

"காஸ்மாலஜியைப்பத்தி சொல்லும் போது அதன்மூலமாத்தான் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அது வரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளஇந்திருக்கிறாரானு தேட முடிந்ததுனு சொல்லிட்டு இன்றுவரை அகப்படவில்லை சொல்லியிருக்காருல்ல, அப்பிடின்னா என்ன அர்த்தம். இல்லைன்னுதானே சொல்லவர்றார்."

"அட நீ வேற ஒரு தடவை இப்பிடித்தான். அரியென்று சொல்வார்... அல்லாவென்று
சொல்வார்... அப்பிடின்னு ஆரம்பிக்கும் ஒரு கவிதை, முடிவுல கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்னு சொல்லி முடிப்பார் கவிஞர். இந்த கவிதையை குறிப்பிட்டுட்டு கீழே இவர் எழுதுறார் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன்னு. இதுக்கு என்ன சொல்ற. அதனால நாம இரண்டுபேரும் பேசிக்கிறதால இதுக்கு தீர்வு கிடைக்கும்னு தோணலை. அது போகட்டும், போன தடவையைப்பத்தி என்ன விவரம் கிடைத்தது."

"இல்ல அந்த நடிகை நடந்ததைப்பத்தி யாருக்கிட்டையும் சொல்லவேயில்லை, சொல்லப்போனா நம்ம இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுபோயிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் அன்னிக்கு கேட்ட எல்லா கேள்விக்கும் பட்டு பட்டுன்னு பதில் சொல்லிச்சு. நாம மறுபடியும் நேர்ல போய்ப்பார்த்தா, நல்லாவே பேசும்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு வந்தியத்தேவன் சிரித்தான்.

"நாமன்னு ஏண்டா என்னையும் சேத்துக்குற, நீ போய்ப் பார்த்தான்னு சொல்லு, நம்ம அப்பா எப்பிடித்தான் உனக்கு இப்பிடி சரியான பேர் வைத்தாரோ வந்தியத்தேவன்னு சரியான வழிசல்டா நீ. புடிச்சபாரு ஒருத்தியை கடத்துறதுக்கு அதுக்கு நான் எவ்வளவோ தேவலை. "

"சரி சரி, ஆளு ரொம்ப வயசானவரு, ஏதோ இளமையா எழுதுரதால தப்பா நினைச்சுராத. அவரோட பாதுகாப்புக்கு..."

"எல்லாம யோசிச்சாச்சு, அதனாலத்தான் வெளியெடத்துக்கு போகாம காருக்குள்ளயேன்னு சொன்னேன். காரும் ஏதாவது பெரிய ஆஸ்பிடலுக்கு 100 மீட்டருக்குள்ளயே சுத்துறமாதிரி பார்த்துக்கோ."

சென்னை - இந்தியா

"டேய் நல்லா பாத்தியா அதே இடம்தானே." மோகன் கேட்க.

வந்தி சொன்னான் "அதே பெஞ்சும் தான், பேசாம பெஞ்சோட தூக்கிட்டு போய்டுவோமா."

"நக்கலெல்லாம் போதும், நாளைக்கு கடத்தணும் ஞாபகம் இருக்கில்ல. சரி என்ன பண்ணப்போறோம் சொல்லு?"

"நான் கார்ல இருப்பேன், அவர் தனியா இருக்கிற எதாவது ஒரு சமயம், நீ பக்கத்தில போய்.
உன்கிட்ட இருக்கிற பிஸ்டலை எடுத்துக்காட்டி, இந்த மாதிரி உங்களை கடத்தப்போறோம்னு
சொல்லு. அப்புறம் காரைக்காட்டி அந்த வண்டியில இருக்கிற ஒரு நபர்கிட்ட லாங் ரேஞ்ச் ரைபிள் இருக்கு. சுத்தம் போடாம வந்திட்டீங்கன்னா. அரை மணிநேரத்தில விட்டிருவோம். இல்லைன்னா நடக்கிற எதுக்கும் நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லு. வந்துட்டார்னா நீ சொன்ன மாதிரி அரைமணிநேரம் அப்புறம் நேரா ஜெர்மனி. சுத்தம் போட்டுட்டார்னா ரெண்டு வழி. ஒன்னு ரெண்டு பேரும் தப்பிக்கணும். இல்லைன்னா ஒரு ஆள் தப்பிச்சு இன்னொரு ஆளை கேஸ்லேர்ந்து காப்பாத்தணும். சரியா?"

"சரிதான், சத்தம் போட்டுட்டார்னா நான் ஒரு கன் ஷாட் பண்ணுரேன். நீ வந்திடு. ஜன
நடமாட்டம் அதிகமா இருக்கிற இடத்தில என்னை இறக்கி விட்டுட்டு. நீ இன்னொரு இடத்துல இறங்கிட்டு வேஷத்தயெல்லாம் களைச்சிட்டு ஸே·ப்க்கு போய் உன்னுடயதெல்லாம் எடுத்துக்கிட்டு நேரா ஏர்போர்ட் வந்திரு. ஓகே வா?."

ஆறு மணி - சென்னை கடற்கரை

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. சுஜாதா வந்து அந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து சிறிது
நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தை நோக்கி மோகன் போய்க் கொண்டிருக்க, சிறிது நேரத்தி
ல் அந்த இடத்தில் கொஞ்சம் பரபரப்பு மோகன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டுகிறான். இது பிளான் கேன்சல் ஆகிவிட்டதிற்கான சிக்னல். இதையெல்லாம் சிறிது தூரத்தில் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் காரை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

எட்டு மணி - ஜெர்மன் விமானம்

என்ன வேண்டுமெனக் கேட்டக் கொண்டிருந்த ஜெர்மானிய பணிப்பெண்ணிடம் வழிந்துவிட்டு,

"என்னதாண்டா ஆச்சு?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"யாரோ அவரோட செல்போனை சுட்டுட்டாங்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாகிவி
ட்டது. அதனால இப்ப கடத்தவேணாம்னுதான் கேன்ஸல் பண்ணிட்டேன். எங்க போய்வி
டப்போறார். அடுத்த முறை அந்த பெஞ்சோட தூக்கிருவோம்." சொல்லிவிட்டு சிரித்தான் மோகன்தாஸ்.

"சரி நாம கடத்தி, நீ அந்த கேள்வியை கேட்டிருந்தா அவர் என்ன பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிற?".

"ரிட்டையர் ஆகி, உனக்கும் பைபாஸ் ஆபரேஷன் பண்ணினா தெரியும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்." சொல்லிவிட்டு கீழே தெரியும் கடலைப்பார்த்து மீண்டும் சிரித்தான் மோகன்தாஸ்.

வந்தியத்தேவன் ஜெர்மானிய விமானப்பணிப்பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான்.

** திரு ரங்கராஜன் அவர்கள் ஆனந்தவிகடனில் அவருடைய செல்போன் தொலைந்ததைப் பற்றி சொல்ல, மனதில் தோன்றிய ஒரு சிறு புனைவு. இது ரொம்ப முன்னாடியே எழுதியதுதான்னாலும் திரும்பவும் ஒருமுறை.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சுய சொறிதல்

விசிலடிச்சான் குஞ்சுகளூம் வெளக்கமாத்து கட்டையும்





விசில் அப்படின்னதுமே எனக்கு நினைவுக்கு வருவது. எங்க BHELலில் காலங்காத்தாலயே விசில் அடிச்சு எம்ப்ளாயிங்கள தூக்கத்திலிருந்து எழுப்பிவிடறதுதான், பின்னாடி வீட்டிலேர்ந்து கிளப்பி கம்பெனிக்கு வர வைக்கிறதுக்கு ஒரு விசில். இந்த விசில் சப்தம் நான் பிறந்ததிலிருந்தே கேட்டுவருகிறேன்.



(பிறந்திலிருந்தே கூடவேவருது)


அப்புறம் எங்கப்பா ஒரு பியிடி(PET) அப்பிடிங்கிறதால எங்க வீட்டில் நிறைய விசில் இருக்கும். இதில் எங்கப்பா உபயோகிக்கிற ஒரு அமேரிக்காவிலிருந்து வாங்கிவந்த விசில் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா ஆசிரியர்களையும் போல அவர் அந்த விசிலை மற்றவர்கள் உபயோகிப்பதை விரும்ப மாட்டார். ஆனால் நான் எங்க கிளப்பில் நடக்கும் பேஸ்கட்பால் மாட்சுக்கு போய் கலாட்டா பண்ண ஒருமுறை எடுத்துட்டு போய் அப்பாக்கிட்ட பயங்கரமாய் உதை வாங்கியிருக்கேன்.

அந்த மாட்சுக்கு வந்த அப்பாவோட ஒரு பிரண்ட் பின்னாடி நான் வேற ஒரு வாலிபால் மாட்சுல பிரச்சனையே பண்ணாம மாட்டினப்ப 'இவன் தானே நிச்சயம் செஞ்சிருப்பான். விசிலடிச்சான் குஞ்சு தானே இவன்.' அப்படின்னு போட்டுக்குடுத்தார்.(வேற அர்த்தமாயிருக்குமோ ??? :-))

அதிலிருந்து அந்த டெர்ம்மை யார் உபயோகித்தாலும் எனக்கு பிடிக்காது.

பின்னாடி காலேஜ் வந்ததும் சினிமாவுக்கு போனா விசிலடிக்கிறதுக்குன்னே என்னையும் கூட்டிக்கிட்டு போற அளவுக்கு நான் விசில் அடிப்பதில் தேர்ந்திருந்தேன்.

இப்புடி நான் விசில் அடிக்கிறதுல பெரிய ஆள் ஆனதிற்கு எங்கப்பாவும் ஒரு காரணம் அவரு கபடி, கொக்கோ மாட்சுக்கெல்லாம் ஊதுறதுக்கு போவாரு.(சிலசமயம் என்னையும் கூட்டிக்கிட்டு). அப்ப ஏற்பட்ட பழக்கம் தான்.

பின்னாடி நான் இன்டஸ்டிரிக்கு(Software Industry) வந்ததுக்கு அப்புறமும் விசில் என்னை விடலை. இங்க நடக்குற இன்டர் கம்பெனி வாலிபால், டக்வார், பேஸ்கட்பால் மேட்சுக்கெல்லாம் ஊதிக்கிட்டு(விசிலைத்தான்) இருக்கேன்.





அப்புறம் வெளக்கமாறைப்பத்தி, ஒருமுறை இப்படித்தான் டெல்லியில் பார்க்க நார்த் இன்டியன் மாதிரியே இருந்த ஒரு பெண்ணைப்பார்த்து விசிலடிச்சிக்கிட்டே ஒரு பாட்டு பாட நேராய் என்கிட்ட வந்து வெளக்கமாறு பிச்சிறுன்னு சொன்னிச்சே பார்க்கணும் எனக்கு தூக்கிவாறிப்போட்டுறுச்சு.

இப்படியாக எனக்கும் விசிலுக்குமான தொடர்ப்பு நீண்டு நெருக்கமாய் இருக்கிறது. மற்றபடிக்கு இந்த பதிவுக்கும் தற்சமயம் வெளிவந்திருக்கும் எந்தபதிவுக்கும் எந்தச்சம்மந்தமும் கிடையாது.

For more reference on Whistle

http://en.wikipedia.org/wiki/Whistle
http://en.wikipedia.org/wiki/Whistling
(பதிவு ஆழமாயிருக்கணுமில்ல அதான்)

Read More

Share Tweet Pin It +1

22 Comments

Popular Posts