In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 6

ஒரு நல்ல மாட்சை எதிர்பார்த்து உலகக்கோப்பை வாசகர்கள் காத்திருக்கிறார்கள். உண்மைதான் ரொம்ப நாளாகவே காத்திருக்கிறார்கள் இரு பக்கமும் சம பலமுள்ள அணிகளின் மோதலுக்காக. இந்த ஆஸ்திரேலியா இலங்கை போட்டியில் அது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

இரண்டு அணிகளுமே உலகக்கோப்பைக்காக தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்து வந்துள்ளது தெரிகிறது. பெரும்பாலும் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே காணப்படக்கூடிய Never say Die அட்டிட்டியூட் இப்பொழுது இலங்கை அணியிலும் காணக்கிடைக்கிறது. நல்ல வித்தியாசமான பௌலிங் அட்டாக், அப்படியே ஆஸ்திரேலியாவைப் போல, கண்ட்ரோலான ஆனால் வேகம் குறைந்த விக்கெட் டேக்கிங் பௌலர்களாக மெக்ராத் மற்றும் வாஸ், வேகம் மட்டுமே குறியாய் மலிங்கா மற்றும் ஷான் டைட். தனித்திறமையான ஸ்பின் பௌலிங்கிற்கு முரளீதரன் மற்றும் ப்ராட் ஹாக். மற்றும் மிதவேக, ஸ்பின் பௌலர்கள் இரண்டு அணியிலும்.(ப்ராட் ஹாக்கையும் முரளியையும் ஒப்பிட நேர்ந்தது அவர்கள் அணிக்காக விளையாடும் பொசிஷனுக்காக மட்டுமே. ;))

பேட்டிங் வரிசையில் தான் ஆஸ்திரேலியா, இலங்கையை விட தற்சமயம் நல்ல நிலையில் இருக்கிறது. மாத்யூ ஹைடன், கில்கிறிஸ்ட், பாண்டிங், மைக்கேல் கிளர்க், மைக்கேல் ஹஸ்ஸி, அண்ட்ரூ சைமண்ட்ஸ் என பிரகாசமான அணிவரிசை எந்த வலுவான அணியையும் போட்டுத்தாக்கும் வலுவுள்ளது. எனவே ஆஸ்திரேலியாவின் வீக் சைட் ஆன(பேட்டிங்கோடு ஒப்பிடும் பொழுது) பௌலிங்கைத் தான் இலங்கை முழுதாகப் பயன்படுத்த வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றிபெற. முதல் பதினைந்து ஓவர்களுக்கு இலங்கை விக்கெட் இழக்காமல் இருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல போட்டியை இலங்கை ஆஸ்திரேலியாவிற்கு தரும்.

ஆனால் வெற்றி பெருவதை எல்லாம் கனவில் தான் நினைத்துப் பார்க்கவேண்டும்.



Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Marooned In Iraq

எனக்கு அகதிகளைப் பற்றிய அறிமுகம், போர் பற்றி எரியும் நாடுகளின் எல்லைகளைப் பற்றிய பிரகாசமான அறிமுகம் கிடையாது. அதாவது எப்படியென்றால் புத்தக அறிவைத் தவிர்த்த அறிவைப் பற்றி பேசுகிறேன். மற்றபடிக்கு, இலங்கை, ஈரான் ஈராக் இஸ்ரேல் லெபனான் பற்றிய படிப்பறிவு உண்டு. ஆனால் படிப்பறிவு இந்த விஷயங்களில் பெரும்பான்மையான சமயங்களில் இரண்டு பக்கங்களின் விஷயங்களையும் சொல்வதில்லை. அது மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றிய ஒரு முன்முடிவும் எனக்கு இரண்டு பக்கங்களையும் பார்க்கவிடாமல் தடுத்துவிடுகிறது.



மரூன்ட் இன் இராக் படம் அப்படித்தான் எனக்கு இதுவரை தெரியாத ஈராக்கை, ஈரானை இல்லை அவற்றின் ஒரு பகுதியை அறிமுகப்படுத்தியது. படம் ஈரானின் எல்லையில் உள்ள குர்தீஸ்தானில் ஆரம்பிக்கிறது, அங்கே வயதான மிகப்பிரபலமான பாடகரான மிர்ஸாவிற்கு அவருடைய முன்னால் மனைவியைப் பற்றிய செய்தி வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அவரது முன்னால் மனைவி இருப்பது ஈராக்கின் குர்தீஸ்தானில், போர் நடந்து கொண்டிருக்கும் சமயம்(அதாவது சதாம் உசேன் பதவியில் இருந்த காலம். அவர் தீவிரமாக குர்தீஸ்களை கொன்று கொண்டிருந்த சமயம், அவர் குர்தீஸ்களைக் கொல்ல கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் படம் சொல்கிறது.)

அந்தச் சமயத்தில் இவர்கள், அதாவது மிர்ஸாவும் அவருடைய இரண்டு மகன்களும் மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேராவைத் தேடி பயணத்தைத் தொடர்கிறார்கள். இங்கே ஒரு விஷயம் மிர்ஸாவின் இரண்டு மகன்களும் பரட் மற்றும் அயுத்தும் கூட அவர்களுடைய தந்தையைப் போலவே பாடகர்கள், கொஞ்சம் பிரபலமானவர்களும் கூட. இதில் அவருடைய இரண்டாவது பையனுக்கு ஏழு மனைவிகள் பதிமூன்று பெண் குழந்தைகள். அவர் வார்த்தையிலே சொல்ல வேண்டுமானால் தனக்கு ஆண் குழந்தை பிறக்காத வரை அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணையும் விடமாட்டேன் என்று சொல்கிறார், ஆனால் யாரையும் வற்புறுத்துவதில்லை என்பதும் இந்த விஷயத்தை படம் முழுவதும் இயக்குநர் காமெடியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படத்தில் இசையும் நகைச்சுவை உணர்வும் வழிந்து கொண்டேயிருக்கின்றது.

ஆரம்பத்தில் இரண்டாவது மகன் அயுத் தன் மனைவிகளையும் குழந்தைகளையும் விட்டு தந்தையுடன் இந்த பயணத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். ஆனால் தந்தை வற்புறுத்தி இருவரையும் அழைத்துக் கொண்டு போகிறார். மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேரா அவருடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு மிர்ஸா நடத்திய பாடற்குழுவில் பாடிக்கொண்டிருந்த சயீத்-ஐ திருமணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார். ஏனென்றால் ஒரு சமயத்தில் இரானில் பெண்கள் பாடக்கூடாதென்று கண்டிப்பு வந்துவிட தொடர்ந்து பாடவேண்டும் என்று நினைக்கும் ஹனேரா சயீத்தை கல்யாணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார்(இராக்கில் உள்ள குர்தீஸ்தானிற்கு - அப்பொழுது சதாம் ஈராக்கில் பெண்களுக்கு சில பல உரிமைகளை தந்துவந்துள்ளதாகத் தெரிகிறது).

தற்சமயம் அந்த ஹனேரா தான் ஈரான் ஈராக் எல்லையில் அகதிகளை மகிழ்விப்பதற்காக பாடிவருவதாகவும் அவருக்கு மிர்ஸாவின் உதவி தேவையென்பதும் தான் மிர்ஸாவிற்கு கிடைத்த செய்தி. உடனே தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார். இந்த மூவரும் போகும் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. முதலில் இரானிய எல்லையில் இருக்கும் அகதி முகாமில் ஹனேராவின் தற்போதைய கணவர் சயீத்தின் அம்மாவைப் பார்க்கிறார்கள். சயீத் கொடுத்த ஒரு கடிதத்தை அவரிடமிருந்து பெற ஆனால் அந்தம்மா அந்தக் கடிதத்தை எங்கே போட்டார் என்பதை மறந்து போயிருக்கிறார். இப்படியாகத் தொடரும் பயணம் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாகயில்லை.

தொடரும் அவர்கள் பயணத்தில் அவர்களுடைய பணம், ஓட்டி வந்த வாகனம் போன்றவை கொள்ளையடிக்கப்படுகின்றன. கடைசியில் அவர்கள் நடைபாதையாக ஹனேராவைத் தேடத் தொடங்குகிறார்கள். அவர்கள் கடக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களுக்கும் மிர்ஸாவைத் தெரிகிறது அதே போல் ஹனேரா மிர்ஸாவின் உதவியை நாடியிருப்பதும். இப்படியாக தொடரும் பயணத்தில், முதல் மகன் பரட் ஒரு பெண்ணின் குரலில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ளக் கேட்கிறார். இரண்டாவது மகன் அயுத்திற்கு அகதிகள் முகாமில் இருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்ளக் கிடைக்கிறார்கள். இப்படி இவர்கள் ஒருவாறு மிர்ஸாவை பிரிந்துவிடுகிறார்கள் பயணத்தின் ஒரு பகுதியில்.

இரண்டாவது மகனை மிர்ஸா தானே ஒரு பகுதிக்கு மேல் வரவேண்டாம் என்று நிறுத்திவிட, பரட் கொஞ்சம் வாட்ட சாட்டமாக இருப்பதால் எல்லைப் படையினர் பிடித்தால் இராணுவத்திற்கு பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயத்தில் பரட்டை மிர்ஸா தன்னைத் தொடர்ந்து வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

பின்னர் தன்னந்தனியாக தொடரும் பயணத்தில் ஒருவாறு ஹனேராயிருக்கும்/இருந்த இடத்தை அடைகிறார் மிர்ஸா, ஆனால் அவரை சந்திப்பதோ; ஹனேராவின் தற்காலக் கணவரின் சகோதரி. அங்கே தான் சயீத் இறந்து போன விஷயத்தை தெரிந்துகொள்கிறார் மிர்ஸா. சயீத்தின் கடைசி ஆசையான, மிர்ஸாவுடன் சேர்ந்து பாடவேண்டும் என்ற ஆசையும் நடக்காமல் போய்விட, சயீத் தன் உடலை மிர்ஸா தான் தகனம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்க அதன் படியே மிர்ஸாவும் செய்கிறார்.

பின்னர் மிர்ஸா ஹனேராவைப் பற்றிக் கேட்க, அவர் கெமிக்கல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு குரல், முகம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் மிர்ஸாவுக்காக ரொம்ப காலம் காத்திருந்ததாகவும் பின்னர் வேறெங்கேயோ சென்று விட்டதாகவும் செய்தி கிடைக்கிறது. பின்னர் கடைசியில் ஹனேரா மிர்ஸாவிற்காக விட்டுச் சென்ற ஹனேரா/மிர்ஸாவின் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஈராக்கிய எல்லையைத் தாண்டி ஈரானிய எல்லைக்குள் நுழைவதுடன் படம் முடிவடைகிறது.

---------------------------------------------

படம் நானெல்லாம் முழுக்க முழுக்க பாலைவனம் என்று நினைத்துகொண்டிருந்த ஈராக்கில் முழுக்க முழுக்க பனிப்பொழிவில் நடக்கிறது. அதற்கு காரணம் சொல்லும் இயக்குநர், குர்தீஸ்தானில் இயற்கையழகு மிகச் சிறப்பாகயிருக்கும் இதே படத்தை நான் இலையுதிர் காலத்திலோ வசந்த காலத்திலோ எடுத்திருந்தால் பார்ப்பவர்கள் குர்தீஸ்தானின் இயற்கையழகில் கவனத்தை செலுத்தி நான் சொல்லவந்த விஷயத்தை மறந்திருப்பார்கள் என்பதும்.

உண்மைதான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதும் வெள்ளைப் பனியாலும், ஒன்றிரண்டு கறுப்புப் புள்ளிகளாக மக்கள் தோன்றுவதையும் காணலாம். இதையும் குறிப்பிட்ட இயக்குநர் சிம்பாலிக்காக மக்களின் துயரத்தை விளக்குவதற்காக இப்படி செய்ததாக சொல்லியிருந்தார்.

படத்தில் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் ஹனேராவை காண்பித்திருக்கவே மாட்டார் இயக்குநர் காரணம் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் தான் சொல்லவந்தது குர்தீஸ்தானில் இருக்கும் மக்கள் வாழ்நிலையை அதற்காக எடுத்துக்கொண்ட ஒரு கதை தான் ஹனேராவைப் பற்றியது. மக்கள் ஹனேராவைப் பற்றி யோசிக்காமல் கதையை, மக்களை, அவர்களில் வாழ்வாதரவிற்கான பிரச்சனையைப் பார்க்கவேண்டும் என்றுதான் அப்படி செய்ததாகவும் சொல்வார்.

குர்தீஸ்தான் மக்களின் அடிப்படை வாழ்வியல் விஷயங்களாக இருக்கும் நகைச்சுவை உணர்வையும் இசையையும் கொண்டுவரவே முயன்றதாகச் சொல்லியிருப்பார் இயக்குநர், உண்மைதான் மைல்ட் காமெடியும் இசையும் படம் முழுவதிலும் ஆக்கிரமித்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது அன்றாட விஷயமாகிவிட்ட மக்களிடம் மரணம் என்பது ஒரு விளையாட்டாகயிருப்பதாகச் சொல்வார் இயக்குநர் உண்மைதான், கண்ணிவெடிகளிலும், கெமிக்கல் ஆயுதங்களாலும் மக்கள் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட அவர்களின் வாழ்க்கையை இன்னமும் நகர்த்திக் கொண்டிருக்க உதவுவது இசையும் நகைச்சுவையுமாகவேயிருக்கும். இருக்க முடியும்.

கதைப்படி எல்லோருக்கும் ஒரு ஹாப்பி எண்டிங் இருக்கும், பரட்டிற்கு அவர் ஆசைப்பட்ட பெண் கிடைப்பாள், அயுத்திற்கு இரண்டு ஆண் குழந்தைகள், மிர்ஸாவிற்கு சயீத்/ஹனேராவின் குழந்தை என இதை விளக்கும் இயக்குநர் தான் ஆப்டிமிஸ்டிக்கா இருப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார்.

உண்மையில் ஒரு அருமையானப் படம் இந்த "மரூன்ட் இன் இராக்". வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள், அதே போல் இயக்குநரின் பேட்டியையும் கண்களால் சிரித்துக்கொண்டு அந்த மனிதர் படத்தைப் பற்றி விளக்குவது பிரம்மாதம்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In உண்மைக்கதை மாதிரி குரல்பதிவு

நான் காதலித்தக் கதை - ஒரு குரல் பதிவு

என்ன சொல்றது இன்னுமொரு குரல் பதிவு. இந்த முறை நான் +2 படித்த பொழுது செய்த காதல் அனுபவத்துடன். கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டது.



தொடர்புடைய பதிவுகள்

நான் காதலித்தக் கதை
காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை - முதல் பகுதி
காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை - இறுதிப் பகுதி

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?

இது என்ன இதுதான் பேஷனா என்றால் தெரியவில்லை இருக்கலாம். இதை நான் எழுத வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது என்று சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். சொன்னால் சரிசெய்யப்படுமா இல்லை, இந்த வேண்டுகோளும் தூங்குமா என்று தெரியவில்லை.

சரி மேட்டருக்கு, இரண்டு விஷயங்கள் பற்றி என்னுடைய கேள்விகள்.

முதலாவது பூங்கா, நீங்கள் உங்கள் பதிவை எழுதிவிட்டு தமிழ்மணத்திற்குள் இணைக்கும் பொழுது, பூங்கா இதழுக்கு சேர்க்கலாமா சேர்க்க வேண்டாமா என்று கேள்வி கேட்கப் படுகிறது. என்னைப் பொறுத்தவரை இணையத்தில் இது போன்ற Yes/No Agree/Dis Agree, விஷயங்களில் No, Disagree யே டிபால்ட்டாக இருக்கும். ஆனால் பூங்காவிற்கு இணைப்பதை மட்டும் டீபால்ட்டாக வைத்திருக்கிறார்கள்.

முதலில் ஏதோ இன்னுமொரு வகையறா விஷயம், இந்த டேக் இடுவதைப் போல என நினைத்து அதைக் கண்டுகொள்ளவேயில்லை அதே போல் பூங்கா படிப்பதையும் தான். வந்த ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு லிங்க் அதுவாய்த் தோன்றியது என் வலைப் பக்கத்தில் கிளிக்கிப் பார்த்தால் பூங்காவில் இணைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மேட்டர் தெரிந்தது.

என் கேள்வி, இந்த Default தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு எதுவும் அரசியல் உண்டா இல்லையென்றால் Default-ஆக அதை Noவிற்கும் Disagreeக்கும் கொண்டுவாங்களேன்.

----------------------------

இரண்டாவது நட்சத்திரக் குத்து

தமிழ்மணத்தில் ஒரு காலத்தில் ரொம்ப பேமஸான விஷயமாக இந்த விஷயம் இருந்த பொழுதே இந்த ஒன்றைப் பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் சிலர் அந்த வாசகர் பரிந்துரையை மட்டும் படித்து, அதிலிருந்து உங்கள் பக்கத்திற்கு வருவார்கள் என்று தெரியும். உதாரணமாக ரோசா வசந்த் போன்றவர்கள். உங்கள் பதிவு மிகச்சிறந்த பதிவாக வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அப்படி என்ன கிழித்திருக்கிறீர்கள் என்று பார்க்க ;) வருவார்கள்.

முன்பு தமிழ்மணத்தில் அதை தூக்கும் வசதி கிடையாது. ஆனால் புதிய தமிழ்மணம் வந்த பொழுது இது வாசகர்கள் அவர்களாக தேர்ந்தெடுக்கலாம் ஒரு பதிவுக்கு நட்சத்திரக் குத்து வேண்டுமா வேண்டாமா என்று.

ஆனால் என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும் நான் அதை De-Select செய்துதான் உள்நுழைப்பது வழக்கம் ஆனால் அந்த நட்சத்திர டப்பா வந்துவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்த ஜாவா ஸ்கிரிப்டை உடைத்தும் பார்த்தேன் ஒன்றும் விளங்கவில்லை. எந்த இன்புட் கொடுத்தாலும் தமிழ்மணத்தில் கொடுக்கப்படும் பட்டை அந்த நட்சத்திர டப்பாவுடன் சிரிக்கிறது.

நாம ரொம்ப சீரியஸா ஒரு பதிவு எழுதிட்டு போனால் வேண்டுமென்றே அந்தப் பதிவிற்கு வந்து ஒரு நெகட்டிவ் குத்து விட்டுவிட்டுப் போகிறார்கள். சில சமயம் ஏகக் கடுப்பாக வரும்.

எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வலைபதிவரின் வலைபதிவில் நட்சத்திர டப்பா இல்லாத தமிழ்மணப் பட்டை பார்த்திருக்கிறேன். அவரிடம் எப்படி என்று கேட்கும் மனநிலையில் நான் இப்பொழுது இல்லை. அதனால் அந்தப் பட்டையை கொடுக்கும் தமிழ்மணமே இதை விளக்கலாம்.

அவ்வளவுதான் சாமி...

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In குரல்பதிவு

இன்னுமொறு குரல் பதிவு

எனக்கு கண்ணதாசனுடைய, வைரமுத்துவினுடைய பாடல் வரிகளை விடவும் அவர்களுடைய கவிதை வரிகள் பிடிக்கும்.

கண்ணதாசனுடைய ஸ்பெஷாலிட்டியே என்னான்னா, நேரடியாய் அவரை பாதித்த ஒரு நிகழ்வை அவர் எழுதுவது தான். அப்படி எழுதியது தான் 'அவனை எழுப்பாதீர்கள்' கவிதையும். நண்பருடைய குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இறந்துவிட எழுதியது இந்தக் கவிதை.

"...கோடிக்கு அதிபதி என குறையாது வந்தாலும்
நாட்டுத் தலைவனென நலவாழ்வு பெற்றாலும்
கேட்டப் பொருளெல்லாம் கிடைத்தாலும்
அவன் வீட்டு மாட்டுக்குக் கூட மரியாதை கிடைத்தாலும்
பஞ்சனைகள் இருந்தாலும்
பால் பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது..."

கண்ணதாசனால் தான் இப்படி ரசித்து எழுத முடியும்.



அடுத்து பாரதிதாசனின், "நீலவான ஆடைக்குள்..." என்று தொடங்கும் ஒரு பாடல். நிலாவைப் பற்றி பாடப்படும் கவிதையில் ஒருவேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாத மக்களைப் பற்றிய வர்ணனைகள் சொல்ல முடியுமா. முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பாரதிதாசன்.

இதை விடவும் அவருடைய மேலும் பல பாடல்கள் எனக்குப் பிடிக்குமென்றாலும், உருத்தாத வர்ணனைகள் எனக்கு இந்தப் பாடலில் பிடிக்கும்.



அடுத்து, பாரதியின் "யாமறிந்த மொழிகளிலே..." அப்படியொரு வார்த்தையை போடுவதற்கான உரிமை பாரதிக்கு நிச்சயமாய் உண்டு. "உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" போன்ற வரிகள் எழுதியிருக்கிறான் என்றால் அவனால் நிச்சயமாய் மக்கள் எப்படி இந்தப் பாடலை புரிந்துகொள்வார்கள் என்ற கவலைபட்டிருக்காமல் இருக்க முடியாது.



அடுத்தது வைரமுத்து - அவருடைய தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம் எவ்வளவு பிடிக்குமோ அப்படி எனக்கு இந்தப் பாடலும் பிடிக்கும். சொற்சிலம்பம் ஆடுவதில் வல்லவரான வைரமுத்து இதிலும் ஆடியிருப்பார் அப்படியே, "என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் உங்கள் கல்லறையைத் தோண்டியெடுத்து. நீங்கள் எழுதியதைப் பற்றி கேள்வி கேட்கப்படும். பதில் சொல்லக் காத்திருங்கள்." என்பது போல அவருடைய திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புகள் கவிதையில் இருக்கும்.

அதே வேகத்தில் எழுதியது போலிருக்கும் இந்தப்பாடலும். "கம்பனிடம் ஒரு கேள்வி..."



---------------------------

இந்தக் கவிதைகள் எல்லாவற்றையுமே தங்குதடையின்றி, தலைப்பின் சாதக பாதகம் பற்றி யோசிக்காமல் பேச்சுப்போட்டிகளில், பட்டிமன்றங்களில் உபயோகித்திருக்கிறேன். அதனால் எப்பொழுதும் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும் பாடல்கள் இவைகள்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 5

Go Aussie Go!!! - 5

இங்கிலாந்து போய்க்கொண்டிருந்த நிலையில் இந்தப் போட்டியைப்(ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து - சூப்பர் எய்ட்'ஸ்) பற்றி பெரிதாக எழுத எதுவுமில்லையென்றே நினைத்தேன். CB சீரியஸில் ஜெயித்திருந்தாலும் அவர்களுடைய உலகக்கோப்பை ரெக்கார்ட் அவ்வளவு நன்றாக இல்லை.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா போய்க் கொண்டிருக்கும் வேகத்தில் எவரும் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தான் நினைக்கிறேன் இன்னும் ஸ்ரீலங்கா, நியூஸிலாந்து இரண்டு பேருடன் ஆஸ்திரேலியா விளையாடும் போட்டிகள் தான் விறுவிறுப்பாக இருக்கும்.

நான் இன்னமும் குறைவாகத்தான் எடுப்பார்கள் என்று நினைத்தேன் இங்கிலாந்து. பரவாயில்லை நன்றாக விளையாடினார்கள். ஆனால் கெவின் பீட்டர்சன் தன்னுடைய நூறு ரன்களிலேயே குறியாகயிருந்து கவிழ்த்துவிட்டார். சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதைப் பார்ப்பது போலிருந்தது சரியாய் 100 அடித்த கொஞ்ச நேரத்தில் அவுட் ஆகி நான் நினைத்ததை நிரூபித்துவிட்டார்.



ப்ராட் ஹாக், நாதன் ப்ராக்கன், ஷான் டைட் இடைப்பட்ட ஓவர்களில் நன்றாக பௌலிங் செய்தார்கள், இங்கிலாந்து ஒரு சமயத்தில் பலமாக 300 அடித்துவிடும் நிலையில் இருந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் பந்து வீச்சாளர்களின் திறமை அவர்களை தடுத்துவிட்டது. ஆரம்ப ஓவர்களில் சற்று உதை பட்டாலும் தன்னுடைய முழு திறமையை மெக்ராத் உபயோகித்து ஸ்லாக் ஓவர்களில் பிரமாதமாக பந்து வீசினார். சிங்கம் வயசானாலும் சிங்கம் தான் என்று இன்னுமொறு முறை நிரூபித்திருக்கிறது.



உண்மையில் மைக்கேல் வாஹ்னனைத்தான் பாராட்டணும், உண்மையில் நல்ல முடிவு ஆஸ்திரேலியா திறமையாக அதிக ரன்கள் செட் செய்து ஜெயித்துவரும் நிலையில் அவர்கள் இதுவரை உலகக்கோப்பையில் செய்யாத ஒன்றை நோக்கி அவர்களை புல்(PULL) செய்திருக்கிறார்கள். (பங்க்ளாதேஷ்ஷை நாங்கள் டீமாயெல்லாம் கன்ஸிடர் செய்யலை.) சௌத் ஆப்பிரிக்காவின் தேவையற்ற புகழ் இப்பொழுது இருக்காதென்று நினைக்கிறேன்.

இன்னொரு டீம் நியூஸிலாந்து, உங்களுக்கு இருக்குடீ மாப்பிள்ளை அப்படின்னு ஆஸ்திரேலியா காத்திருக்கிறார்கள். பிரகாசமான ஒரு மேட்சிற்காகக் காத்திருக்கிறேன்.

--------------

மற்றபடிக்கு இந்தப் பதிவை இன்னொரு முறையோ இல்லை இரண்டு முறையோ அப்டேட் செய்வேன் என்று ஐம்பது ஓவர்கள் ஆஸ்திரேலியா விளையாடும் என்ற நம்பிக்கை இல்லை எனக்கு. பார்க்கலாம்.

--------------------

Go Aussie Go!!! - 1
Go Aussie Go!!! - 2
Go Aussie Go!!! - 3
Go Aussie Go!!! - 4

--------------------

ம்ம்ம் ஜெயிச்சாச்சு, இன்னும் முன்னாடியே முடிச்சிருவாங்கன்னு நினைத்தேன். எப்படியிருந்தாலும் வெற்றி வெற்றி தான். பான்டிங் இன்னொரு 100 மிஸ் செஞ்சாச்சு :(. Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சொந்தக் கதை சோழர்கள் பயணம்

கங்கை கொண்ட சோழபுரம் - பயணம்

அப்பொழுதுதான் எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்திருந்தது. கல்லூரி வாழ்வில் அனைவரும் பேர்வெல் பார்ட்டி கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் நாங்கள் (நான் மற்றும் என் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்) கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியும் அந்தக் கல்லூரியில் நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்று. அதாவது நாங்கள் அந்தக் கல்லூரியை பிரிவதற்காக வருந்தவேயில்லை. நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததைப் போல் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினோம்.

2003 மேயிலிருந்து அடுத்த 2004 மே வரை நான் ஊர் சுற்றியது மிகவும் அதிகம். முதலில் என் கல்லூரி நண்பர்களுடனான பயணம். நாங்கள் அனைவரும் முதலில் திருச்சியிலிருந்து கிளம்பி பிரபுவின்(துறையூர்) வீட்டிற்கு வந்திருந்தோம். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், மொத்தம் ஆறு பேர், நான், ராஜேஷ், உதயசங்கர், பிரபு, பார்த்திபன், ராஜாமணி. இதில் பிரபுவையும் ராஜாமணியையும் தவிர்த்து எங்கள் அனைவருக்கும் எந்த பேப்பர்களும் பாக்கியில்லை. கொஞ்சம் நன்றாய் படிக்கும் சொம்பு கும்பல் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் அதில் சேர்ந்தது தான் ஆச்சர்யமே. நன்றாய் படிக்க மாட்டேனா என்றால் அப்படியில்லை. கொஞ்சம் ரௌடி, ஒரு முறை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தும், லீவ் போட்டுக்கொண்டு பெங்களூர் வரை வந்து ஊர் சுற்றியதால் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன் அது வேறு ஒரு கதை.

ஒரு முறை கல்லூரியிலிருந்து "பார்ட்" பெஸ்டிவலிற்கு பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தும் மேலாளர் சொன்னார் என்பதற்காக வேறொரு பெண்ணை அனுப்பிவிட கல்லூரியின் அனைத்து தமிழ்ச்சங்க பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டேன், அந்த நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்தது. இப்படியாக நன்றாய்ப் படித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் இல்லை நன்றாகவே கெட்டப்பெயர் வாங்கியிருந்தேன்.

வந்துட்டேன் பயணத்திற்கு, இப்படியாக நாங்கள் சுற்றுலாவை துறையூரிலிருந்து தொடங்கினோம், பிரபுவின் வற்புறுத்தலுக்காக மட்டுமே துறையூர் வந்திருந்தோம் ஏற்கனவே பார்த்த ஊர், பார்த்த இடங்கள். இருந்தாலும் புளியஞ்சோலை என்ற பெயர் மனதின் ஓரத்தில் அனைவருக்குமே அறித்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்த இரவு பிரபுவின் வீட்டில், டைட்டானிக் படம் பார்த்தோம். ஆமாம் பிரபு காதலித்துக் கொண்டிருந்தான். புளியஞ்சோலையில்லாமல் நாங்கள் துறையூர் வந்ததற்கு இன்னொரு காரணம் அவன் காதல். அந்தப் பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழியென்று கூப்பிட்டுவந்திருந்தான் எங்களை. அது ஒரு பெரிய தமாசு.




காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து பார்த்தால், கிராமமே எழுந்திருந்தது. வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஒரு கிராமத்தை நினைவு தெரிந்து பார்த்தேனேயானால் அது துறையூர் தான். பிரபுவின் அம்மா காலையில் எழுந்து எங்களுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் கிணற்றில் குளித்துவிட்டு வருவதற்குள். ஆறு பேருக்கும் எலுமிச்சை சாதம் தயார்செய்து வைத்திருந்தார்கள். இன்று சொல்கிறேன், அவர்கள் எலுமிச்சை சாதம் செய்து தருவதாகச் சொன்னால் வேலைப் பளுவின் இடையிலும் புளியஞ்சோலை சென்றுவரத் தயாராயிருக்கிறேன்.

புளியஞ்சோலை என்று நான் சொன்ன ஊரை உங்களில் பெரும்பால் ஆனவர்களுக்கு தெரிந்து வாய்ப்பிருக்கிறது. அது ஒரு மலையடிவாரம், அங்கே ஆறு மலைமேலிருந்து ஒடிவருகிறது. மிக ரம்மியமான இடம், ஆனால் கொஞ்சம் மோசமான இடமும் கூட, திருச்சி காதலர்களுக்கான இடங்களில் புளியஞ்சோலையும் ஒன்று. காலையில் ஓட்டிக்கொண்டுவந்து விட்டு சாயங்காலம் திரும்பும் ஓட்டிக்கொண்டு போவதை அனாயாசமாகப் பார்க்கலாம்.

நாங்கள் நன்றாய் மலையில் உள்வரை சென்று அருமையாக கலக்கப்படாமல் இருந்த ஆற்றுநீரை ஐந்துமணிநேரம் கலக்கிவிட்டு, பின்னர் எடுத்த பசியில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதத்தை முடித்திருந்தோம். இந்த விஷயத்தில் பெரியவர்களின் அனுபவம் ஆச்சர்யம் அளிக்கும். நாங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பிரபுவின் அம்மா கட்டிக்கொடுத்த அதிகப்படியான சாதம் எங்களுக்கு சொல்லப்போனால் மிகச்சரியாக இருந்தது.



இப்படியாக நாங்கள் புளியஞ்சோலை பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்த ஊர், ஜெயங்கொண்டம், இது பார்த்திபனுடைய சொந்த ஊர். அவர்கள் வீட்டில் தறிநெய்வது தான் தொழில். அம்மா அப்பா தம்பி, தங்கை சில சமயங்களில் பார்த்தியும் நெய்வதுண்டு என்று சொல்ல எங்கள் அனைவருக்கும் நாங்களும் நெய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அவர்கள் பிழைப்பை கெடுத்து விடாமல் தவிர்த்துக் கொண்டோம்.

இன்னுமொரு விஷயம் பயணத்தை தவிர்த்து, நாங்கள் அனைவரும் கல்லூரி படிப்பவர்கள் எங்கள் வீடுகளும் அத்துனை வசதியானது கிடையாது, அதுவும் கல்லூரி படிக்கும் ஆறு தடிமாடுகளுக்கு சாப்பாடு ஆக்கிப்போடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதனால் நாங்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே கணக்குப்போட்டுக் கொண்டது. யாருடைய வீட்டிலும் சாப்பிடுவது இல்லையென்று. ஆனால் பிரபுவின் வீட்டிலேயே இந்த விரதம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் புளியஞ்சோலையில் சாப்பிட வேறு இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தயாராகிவிடவேண்டும், பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை சீட்டுக்கட்டு(ஏஸ்) ஆட்டம் போடத் தொடங்கினால் அது முடிய இரண்டு மணிநேரம் ஆகும் பிறகு பிரபுவை வம்பிழுக்க ஆரம்பித்தோமானால் ஒரு வழியாக நாங்கள் தூங்க மூன்று மணியாகிவிடும் பிறகு ஒரு மணிநேரத்தில் எழுந்து கிளம்பிவிடவேண்டும். வேண்டுமானால் தங்கும் வீட்டில் காப்பி சாப்பிடாலாம்.

ஆனால் நாங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே, எப்படியும் அந்த ஊரை தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்பதால் அவனிடம் கேட்டுக்கொண்டு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைக்கும் கடைக்குச் சென்றுதான் சாப்பிடுவது, காலை மதியம் இரண்டிற்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு சமைத்து தயாரான பதினொன்று மணிவாக்கில் உட்கார்ந்தோமானால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத்தான் நகர்வது.



ஜெயங்கொண்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது அது, பார்த்திபனின் வீட்டிற்று பக்கத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வீடும் இருந்தது. பார்த்தின் வற்புறுத்தி அனைவரும் ஜோசியம் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட என்னைத் தவிர்த்த அனைவரும் பார்த்தனர்.

பின்னர் நாங்கள் வந்திறங்கிய இடம் தான், ஜெயங்கொண்ட சோழபுரம் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தெரிகிறதா, அதுதான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அதாவது ராஜராஜனின் மகன் கட்டியக் கோவில், தந்தைக்கும் மகனுக்கும் என்ன காண்டு என்று தெரியாது. அப்பனைப் போலவே மகனும் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் கட்டியிருந்தான்.

ஆரம்பத்தில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் துறையினரிடம் இருப்பதலால் கொஞ்சம் நன்றாய் இருப்பதாகவும் பார்த்திபன் சொன்னான். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலை பார்த்தே ஆவது என நான் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்ததால், அவனுடைய அப்பா போட்டுக் கொடுத்த பிளானையை கொஞ்சம் மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்திருந்தோம்.

அழகான அமைதியான ஊர், புல்வெளிகளுக்கு மத்தியில் சிவன் கோவில். மற்றவர்கள் ரொம்பத் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க நான் சுற்றிப் பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி சிறு அறிமுகம்.

உடையார்ப் பாளயம் தாலுகாவில் 16 மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக ஒரு கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வலிமை வாய்நத பல பெரிய கலிங்குள் உள்ளன. இது முன் காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரியின் முக்கியமான வருவாய்க் காலாகும்.

ஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கு கொண்டு வருகிறது. இந்த ஏரி தூர்ந்து விட்டதால், பல ஆண்டுகளாக அது எவ்விதத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதிலும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி, படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த கொடுஞ்செயலால் அழிந்து விட்டதாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவருகிறது.

ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கைகொண்டபுரம் என்னும் பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும், அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோயில் இருக்கிறது. அதற்கு அருகே காடுசூழப்பட்ட பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலை மேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ளன.

இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுப் படுத்துகின்னற. மிகப் பரந்த பகுதியில் அழகிய ஒரு அரண்மணை இருந்தது என்றும் அதன் பல்வேறு பகுதிகள் தான் இவ்வாறு இடிபாடுகளாகக் காட்டியளிக்கின்றன என்றும் கிராமத்திலுள்ள முதியோர் சொல்கின்றனர்.

இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கைகொண்டபுரம் முடியடைய மன்னர் ஒருவரின் செல்வமுக் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது. இப்போது ஒற்றையடிப்பாதை ஓட இல்லாத காடாகக் காட்சி தரும் பகுதியில் மைல் கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி வளத்தை வாரி வழங்கிற்று.

இந்த மாபெரும் அணையை மீண்டும் கட்டவேண்டும் என்று அடிக்கடி பேசப்பட்டு வந்திருக்கிறுது.

என்று 1855 ம் ஆண்டில் வெளியான ஸ்தல சஞ்சிகை ஒன்று நினைவு கூர்கிறது.

இவ்வாறெல்லாம் நினைவுகூறப்படும் கங்கை கொண்ட சோழபுரம், இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இம் மன்னனை பற்றிய ஒரு சிறு குறிப்பு, தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும், ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இவனது தந்தை இவனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன். பெருநிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகிறோரது உரிமைகளைப் பாதுகாக்கவும். அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமுக் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரரைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புக்களை அழிக்கவும் வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவி புரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றிய பின், அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறு செய்ய அவன் ஒரு சிறந்த கடற்படையும் வைத்திருந்தான்.

இக்கடற்படை உதவியுடன் கிழக்கிந்திய தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்தின் தன்நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக்கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப்பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான்.

வரலாற்றின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவனான இராஜேந்திரனின் அரண்மனையும் தலைநகரமும் இன்றிருக்கும் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.

இது ஒரு பெரிய சுற்றுலாக் கதையென்பதால் இதனை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் நாங்கள், மீனாட்சி அம்மன்கோவில், பெரிய கோவில், சூரியனார்க் கோவில், பாரி ஆட்சி செய்த ஒரு மலைக்கோட்டையில் இருக்கும் ஒரு கோவில் (பெயர் மறந்துவிட்டது) என ஏறக்குறைய 20 கோவில்களுக்கு மேல் சென்றோம். முடிந்தால் என் பக்கத்தில் அதைப்பற்றி குறிப்புக்களை எழுத முனைகிறேன்.

--------------------------------

இது நான் தமிழோவியத்திற்காக எழுதிய ஒரு பதிவு.

பதின்மத்தில் நான் செய்த பயணம்

நன்றி தமிழோவியம். வாய்ஸ் பதிவு போட்டப்ப நினைவில் வந்தது, தேடிப் பார்த்தேன் என் பதிவில் என் கண்ணில் படாததால் மீண்டும் ஒருமுறை.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ்

கடவுள் இதற்கெல்லாம் பெரியவரா?

கடவுளைப் பற்றிய என்னுடைய டப்பா கான்செப்ட் எல்லாம் கிடையாது, நமது பூமி, சூரியன் மற்றும் இன்னும் சில நட்சத்திரங்களின் அளவுகளைப் பற்றிய ஒரு வீடியோப் பதிவு. இதையெல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் அந்தக் கடேசி நட்சத்திரத்தை விடவும் பெரியவராகவும். அதை உருவாக்கும் திறமை படைத்தவராகவும் இருக்க வேண்டுமல்லவா.

அவருடைய கைகள் எவ்வளவு பெரிதாகயிருக்கும்.?????


Read More

Share Tweet Pin It +1

5 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 4

இன்று ஆஸ்திரேலியாவிற்கும் பங்ளாதேஷ்ற்கும் இடையேயான சூப்பர் எய்ட் மேட்ச், இதைப் பற்றிய பதிவெதுவும் எழுதும் ஆர்வம் எனக்கு சுத்தமாகயில்லை. மழையால் பாதிக்கப்பட்ட மேட்ச் 22 ஓவர்களுக்கு மட்டும் நடைபேற்றது.

முதல் முறையாக இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா பீல்டிங் செய்தது. பங்ளாதேஷை 104 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா, மெக்ராத் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியின் இரண்டாவது விக்கெட் எடுத்த பொழுது பெற்றார்.



விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா சுலபமாக இந்தப்போட்டியை வென்றது. அடுத்தப் போட்டி, அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்திற்கு எதிராக. அதுவரை பொறுமையாக மற்றப் போட்டிகளைப் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

Weird ஒரு வாய்ஸ் பதிவு

என்ன சொல்றது எல்லாரும் நல்லா மாட்டினீங்க. நான் என்னுடைய லூசுத்தனங்களைப் பத்தி ஒரு வாய்ஸ் பதிவு போட்டிருக்கேன் அவ்வளவுதான்.

சொல்லியிருக்கும் லூசுத்தனங்களைப் பத்தி மேலோட்டமா ஹிண்ட் மற்றும் கொடுக்கிறேன் இங்க,

1) ஆஸ்திரேலியா சப்போர்ட்
2) கோயிலுக்குப் போறது
3) என் ஸ்கூல் காலத்தில் நடந்த ஒரு விஷயம்
4) என் காலேஜ் காலத்தில் நடந்த ஒரு விஷயம்
5) தமிழ்ல பதிவெழுதுவது.



வொர்க் ஆகும்னு நினைக்கிறேன். கொஞ்சம் பெருசா வந்திருச்சு, பிரிபேர் எல்லாம் செய்யாமல் பேசியது. அது, இது, அங்க, இங்க எல்லாம் கொஞ்சம் அதிகமாயிருக்கு. ஒரே ஒரு பிழையும், நான் டூர் போனதப் பத்தி சொல்லியிருப்பேன் அது +2 அப்ப நடந்தது இல்லை காலேஜ் முடிஞ்சப்ப செய்தது. இவன் இந்தமாதிரி போடச்சொன்னதுக்கு சும்மாவேயிருந்திருக்கலாம்னு சினேகிதி நினைச்சா மட்டும் போதும். ஹாஹா.

மற்றபடிக்கு கேட்டுப்பார்த்துட்டு சொல்லுங்க.

அஞ்சு பேரை இணைக்க விட்டுட்டேன்

1) பிகேஎஸ் அண்ணாச்சி
2) ஹரிஹரப் பிரசன்னா அண்ணாச்சி
3) கேவி ஆர் அண்ணாச்சி
4) ஆசாத் அண்ணாச்சி
5) ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அக்காச்சி(இவங்களை பதிவுலகத்திற்கு இழுக்கணும்.)

சரி சரி போட்டுறுங்கப்பா...

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்

காதில் வரும் புகையைப் பற்றிய ஜல்லிகள்

ஆ வருது வருது, புகை வருது வருது. அண்ணாச்சி என்னமோ இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு பிரச்சனை வருமென்று சொன்னார். எனக்கென்னமோ ஒரு பாதி முடிந்த பின்னர் அப்படித் தோன்றவில்லை. ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் என்று தான் நினைக்கிறேன். கடைசியாக ஆஸ்திரேலியா எப்பொழுது உலகக்கோப்பைக் கோப்பையில் தோற்றது தெரியுமா, இரண்டு உலகக்கோப்பைக்கு முன்னர் அதாவது. போன உலகக்கோப்பைக்கு முந்தைய உலகக்கோப்பையில்(ஸ்டீவ் வா தலைமையில் ஜெயித்தது) செமி பைனல்ஸ் ஆகயிருக்குமென்று நினைக்கிறேன்(டிராவை கம்பேர் செய்வதாகயிருந்தால்.) இல்லையென்றால் அதற்கும் முன்னர் தோற்றிருக்க வேண்டும்.

எனக்கென்னமோ இந்த உலகக்கோப்பையிலும் ஒரு போட்டியிலும் தோற்கும் என்று தோன்றவில்லை.

------------------------------

மஹா மட்டமான டெலிகாஸ்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் சோனி. அந்தக் கொடுமையாவது பரவாயில்லை என்றால் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் என்ற பெயரில் நடத்தும் ஒரு டப்பா ஷோ. மந்திரா பேடியையும் அந்தம்மா கொடுக்கும் பிரம்மாதமான நடிப்பையும் பார்க்கவேண்டாமென்றே நான் டாஸ் யார் ஜெயித்தார்கள் என்று கூட பார்க்கவில்லை. ஏழு மணி மேட்சா அப்பத்தான் உள்ள போறது. கடைசி பால் போட்டா வேற பக்கம் வந்திர்றது, இப்படியே போகுது என் உலகக் கோப்பை.

கிரிக்கெட்டைப் பற்றி ஒரு பொம்பளை பேசுவது எனக்கு பிரச்சனை கிடையாது, நானும் என் அக்காவுமே புள்ளி விவரங்களை அடுக்கி பேசுவோம். (சரி வீட்டை விட்டு வெளி நபர்களிலும் கூட இந்த மாதிரி பெண்களுடன் பேசுவதுண்டு கிரிக்கெட்டைப் பற்றி உண்மையான சுவாரசியத்துடன் பேசினால்.) இந்த ஆண்ட்டி ஒன்னுமே புரியாமல் அடித்த ஜல்லி தாங்காமல் போன உலகக்கோப்பையில் விட்டது. ஆண்ட்டி போட்டிருக்கும் டிரெஸ் கலெக்ஷனுக்காகயெல்லாம் பார்க்கிற அளவுக்கு என்னுடைய கலாரசனை இன்னும் மோசமாகவில்லை. உண்மையில் இங்கே தான் இஎஸ்பிஎன்'ஐ ரொம்பவும் மிஸ் செய்றேன்.

எதுக்காக இந்த ஜல்லியென்றால் பொதுவாகவே ஆஸ்திரேலியா மாட்ச் என்றால் ஒன்றையும் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டுமென்று விரும்புவேன். இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மாட்சில் மழை பெய்ய வேறுவழியில்லாமல் இந்த ஆண்டியின் ஜல்லியை கேட்க வேண்டியதாயிற்று.

ரொம்ப சீரியஸாக டோனி கிரிக்கும், இயன் செப்பலும் பந்து மற்றும் மட்டையில் தேவைப்படும் தேவைப்பட்ட மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆண்ட்டி தனக்கு பிடித்த கலரையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது. பிங்க் கலர் என்பது அமேரிக்க கலாச்சார அல்லது மேற்கத்திய கலாச்சார பெண்ணிய மக்களின் ஒரு டப்பா கலர். நீங்கள் இந்தக் கலரை பெண் குழந்தைகளின் மேல் திணிப்பதைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் குழந்தைக்கு இந்தக் கலர் பிடித்திருந்தால் ஓக்கே. ஆனால் பள்ளிக் கூடத்திலும், மற்ற ஏற்கனவே திணிக்கப்பட்ட குழந்தைகளாலும் இந்தக் கலர் திணிக்கப்படுகிறது.

தற்சமயம் பெண்களுக்கென்று உருவாகி(பெண் பதிவர்கள் பதிவுகளில் இதன் லிங்கை கட்டாயமாகப் பார்க்கலாம்) ஒரு கலெக்ஷன் எக்ஸெம்மல் பைல் கூட இந்த பிங்க் நிறத்தில் இருந்ததைப் பார்த்து ஒரு புன்முறுவல் என் முகத்தில் படர்ந்தது.

ஆனால் மந்திரா ஆண்ட்டி சொன்ன/சொல்லும் விஷயங்களை அங்குள்ள பெருந்தலைகள் கவனிப்பதில்லை என்பது வேறுவிஷயம்.(Bunch of MCP's ;-))

ஹைடனின் அற்புதமான ஆட்டம் பார்க்க கண்கொள்ளாக் காட்சி, முதல் சுற்றைப் போலில்லாமல் அளவில் பெரிய மைதானங்கள், ரொம்ப ஸ்லோவான அவுட்பிச். பந்து பேட்டிற்கே வர மாட்டேன் என்கிறது. ஆனாலும் அற்புதமான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை செய்துவிட்டார்கள். எனக்கென்னமோ மேற்கிந்தியத் தீவுகள் இருநூறு சொச்சம் தான் அடிப்பார்கள் என்று படுகிறது பார்க்கலாம்.

-----------------------------

இதையெல்லாம் சொல்லிக் காண்பிக்கணும்னு இல்லைன்னாலும் நான் சொன்னது தான் நடந்திருக்கு இல்லையா? இருநூத்தி சம்திங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் அவுட் ஆயாச்சு. இன்னுமொறு 100 ரன்கள் வித்தியாசத்தில் வின்.

எனக்கென்னவோ இதுவும் ஒரு ஒன்சைட்டட் வேர்ல்ட் கப்பாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

மருத்துவர் ராமதாஸுக்கு

ராமதாஸைப் பற்றி எனக்கு பதிவெழுத வருமுன் அவ்வளவாகத் தெரியாது. மரம்வெட்டிக் கதைகளைக் கேட்டிருக்கிறேன், ஆண்டிமடம் சென்றிருந்த பொழுது நண்பர்களால் காடுவெட்டி குரு பற்றிய தலைவெட்டி கதைகளையும் கேட்டிருக்கிறேன்(எவ்வளவு உண்மை என்று தெரியாது.) ஆனால் குழலியின் மருத்துவர் சீரிஸ் படித்து என்னுடைய ராமதாஸை நோக்கும் பார்வை மாறியிருப்பது உண்மை.

இப்ப நான் போடப்போற பதிவுக்கும் இந்த ஜல்லிக்கும் சம்மந்தமே கிடையாது. சமீபத்தில் யூடியூபில் ஒரு வீடியோ பார்த்தேன். இன்னிக்கு தமிழ்நாட்டு மக்கள் தமிழ் பேச தமிழில் எழுதியதைப் படிக்க திணறுவதை கண்கூடாகப் பார்த்தவன் என்ற முறையில் ராமதாஸ் அவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்ப வேண்டிய கடமைப் பட்டவன் ஆகிறேன். சரியான காமடியாகயிருக்கிறது.

PS: நான் அந்த அடியில் இருந்து தப்பித்துவிடுவேன் என்றுதான் நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 3

முன்னாடி இரண்டு தெய்வங்களை நம்பி நான் போட்ட வேர்ல்ட் கப் மேப், ஊத்திக் கொண்டது உண்மைதான். இந்தியாவை பைனல்ஸ் வரை கொண்டு சென்றது என்னுடைய தேசபக்தியால் மட்டும் கிடையாது. அவர்களுக்கு நிச்சயமாக அந்தத் திறமை உண்டு. என்னவோ யார் செய்த சதியோ, வைத்த சூனியமோ ஊத்திக் கொண்டு முதல் ரவுண்டிலேயே வெளியேறும் நிலை.

ஆனால் என்னுடைய புல் சப்போர்ட் அணி பிரமாதமாக விளையாடிவருகிறது. எனக்கென்னமோ இந்த முறையும் ஆஸ்திரேலியா எந்த பிரச்சனையும் இல்லாமலே ஜெயித்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்த ஸ்டுவர்ட் கிளார்க்கை ஆஸ்திரேலியா களம் இறக்கவேயில்லை :@, அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சூப்பராக விளையாடுவதால் Mr. Cricketற்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன :(.

Home Team வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவிற்கு கொஞ்சம் பைட் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இந்த இரண்டு டீமிற்கு இடையிலான குவாலிட்டி டிஃப்ரன்ஸ் ஆஸ்திரேலியாவை சுலபமாக ஜெயிக்க வைக்கும். பாண்டிங் தன்னுடைய ஐந்தாவது உலகக்கோப்பை செஞ்சுரியை நலுவவிட்டார்(91 Runs). ஆனால் பிரமாதமான பார்மில் இருக்கும் அவர் இன்னும் குறைந்த பட்சம் இரண்டு செஞ்சுரியாவது அடிப்பார் என்று அடித்துக்கூறலாம். அதுவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டமான போட்டிகளில் Captain's Knock ஐ அவரிடமிருந்து நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மார்க் வா' வின் வேர்ல்ட் கப் ரெக்கார்டுகளை அவர் உடைக்கும் பொழுதெல்லாம் மனசுக்கு கஷ்டமாகயிருந்தாலும். ஒரு சிறந்த ப்ளேயர் இன்னொரு சிறந்த ப்ளேயரின் ரெக்கார்டுகளை உடைக்கிறார் என்ற சந்தோஷம் எப்பொழுதும் உண்டும்.



கடந்த ஆட்டத்தில் அடித்த முதல் 8 ரன்கள் மூலமாக 10,000 ரன்களைக் கடந்த ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு பொக்கே.(பொக்கை இல்லை) மெக்ரத்திற்கு இன்னும் நான்கு விக்கெட்கள் பாக்கியிருக்கின்றன. ஷான் டைட் பரவாயில்லை, 61 ரன்கள் கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் இரண்டு பேரை தூக்கினார், பிராட் ஹாக்கை இந்த மாட்சுக்கு எடுக்கும் பொழுது கமேண்டேட்டர்கள் இது சரிவராது என்றார்கள், ஆனால் சரியாக வந்தது. மாத்யூ ஹைடனின் பார்ம் பிரமிக்க வைக்கிறது, அண்ணாத்தையை பார்மில் இல்லையென்று வெளியில் தூக்கி வைத்திருந்தது நினைவில் வந்தது.



ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் நான்கு போட்டிகள்(Super Eight's) விறுவிறுப்பு இல்லாமல் இருக்குமென்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா நியூஸிலாண்டை துவம்சம் செய்யும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

---------------------

முதல் சுற்று போட்டிக்குப் பிறகு திருத்தியமைக்கப்பட்ட என்னுடைய மேப். சௌத் ஆப்பிரிக்கா செமிஸ் வரக்கூடாது என்று இல்லை ஆனால் வரமாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்.

Group A

1. Australia
2. South Africa

Group B

1. IndiaSrilanka
2. SrilankaBangladesh

Group C

1. New Zealand
2. England

Group D

1. PakistanWest Indies
2. West IndiesIreland

Then Super Eights

A1 & D2 - Australia Vs West Indies - Australia
A1 & B2 - Australia Vs Srilanka - Australia
A1 & C2 - Australia Vs England - Australia
A1 & D1 - Australia Vs Pakistan - Australia
A1 & B1 - Australia Vs India - Australia
A1 & C1 - Australia Vs New Zealand - Australia

March, Tue 27 - Australia v West Indies
March, Sat 31 - Australia v Bangladesh
April, Sun 8 - Australia v England
April, Fri 13 - Australia v Ireland
April, Mon 16 - Australia v Sri Lanka
April, Fri 20 - Australia v New Zealand

The Semi finalists

1. Australia
2. England
3. IndiaNew Zealand
4. West Indies

அப்படின்னா
Australia Vs West Indies - Australia
England Vs IndiaNew Zealand - England

இன்னமும் சொல்லணுமா

Finals

Australia Vs IndiaEngland - Australia

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Bermuda in match pixing scandal

உலகக்கோப்பைப் போட்டியில் பெர்முடாஸ் அணி மேட்ச் பிக்ஸிங் செய்தது தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஐசிசியின் தலைவர் மால்கம் ஸ்பீட் தெரிவித்தார். இன்று மதியம் போல் பெர்முடா அணியின் கேப்டன் Irvine Romaine ஐசிசியின் மேட்ச் பிக்ஸிங் தடுப்புக் குழுவால் விசாரிகப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தியா அணிக்கெதிரான போட்டியின் உத்தப்பாவின் கேட்சைப் பிடித்த Dwayne Leverock ஒரு போலீஸ்காரர் என்பதால் அவரால் தான் இந்த ஸ்காண்டல் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.

பத்திரிக்கையாளர்கள் மால்கம் ஸ்பீடிடம் எப்படி இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது என்று கேட்ட பொழுது, பெர்முடாஸ் இந்திய அணியிடம் தோற்ற பொழுதே இதைப் பற்றிய சந்தேகம் எழுந்ததாகவும், பின்னர் பெர்முடா அணியினரின் தொலைபேசிப் பேச்சுக்களை கேட்டதில் இந்தச் சந்தேகம் உறுதியானதாகவும் தெரிவித்தார்.

இதைப் பற்றிய விரிவான வெள்ளை அறிக்கை நாளை வெளியாகுமென்று தெரிகிறது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 2

ஒருவழியா வேர்ல்ட் கப் இரண்டாவது பாகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் டீம் இப்படி முதல் ரவுண்டிலேயே வெளியேறிரும் என்று நான் நினைக்கவில்லை. சரி போகட்டும். இந்தியா தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது சூப்பர் எய்ட்டில் நுழைவதற்கு. என்னைப் பொறுத்தவரை இந்திய இலங்கையை சுலபமாக வென்றுவிடும். அந்த ஆட்டதிலும் சேவாக் நன்றாக விளையாடுவார் என்பது என் எண்ணம். இதே முதல் ஆட்டம் பார்படாஸுடன் இருந்து இரண்டாவது ஆட்டம் பங்க்ளாதேஷுடன் இருந்திருந்தால் இந்தியா அதிலும் வரலாறு படைத்திருக்கும். அதைவிடுவோம்.

ஆஸ்திரேலியாவிற்கும், சௌத் ஆப்பிரிக்காவும் ஆன முதல் ரவுண்ட் மேட்ச், காலிறுதி அரையிறுதி(உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிப் போட்டி பெரும்பாலும் ஒன் சைட்டட் ஆகவே இருந்துவிடுகிறது) அளவிற்கு பேசப்படுகிறது, காரணம் ODI Ranking ல் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதுதான் காரணம். இவர்கள் இருவருக்குமான கடைசி சீரியஸும் மிக நன்றாகவே சென்ற ஞாபகம்.



இரண்டு அணிகளும் மைண்ட் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாமல் இருந்த ரேங்கிங்கைப் பற்றிய ஜல்லிச் சத்தம் இப்பொழுது கேட்கத் தொடங்கியிருக்கிறது. சௌத் ஆப்பிரிக்கா கேப்டனை இதுவரை ஆஸ்திரேலியா அணி திறமையாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள், அதை இந்தப் போட்டியிலும் தொடரப் போவதாக Mr. Cricket பேட்டி கொடுத்திருந்தார். இப்பொழுது பிரஷர் முழுக்க சௌத் ஆப்பிரிக்காவிற்குத் தான், ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் வேறு ;). பாண்டிங் நக்கலாகச் சொல்லியிருந்தார் இந்த வேர்ல்ட் கப்பை எடுத்துக் கொண்டு போகும் பொழுது ஆட்டோமேட்டிக்கா ரேங்கிங் அவர்கள் பக்கம் வந்துவிடும் என்று.



ஷான் டைட் உடைய ஆர்ம் ஆக்ஷன் கொஞ்சம் போல் ஸ்டீவ் வா-வை நேரில் பார்ப்பதாகயிருந்தது. முதல் இரண்டொரு ஓவர்களில் லைனைப் பிடித்துவிட்டு பேஸை அதிகப்படுத்தினால் சரியாகிவிடும். ஸ்டுவர்ட் கிளார்க் இல்லாமல் நாதன் ப்ராக்கன்னை வைத்து ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. மெக்கிராத் பர்ஸ்ட் சேஞ்சாக இறக்கப்படுவது ஆஸ்திரேலிவின் பலம். ஷான் டைட்டும் நாதன் ப்ராக்கன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுக்களை முதல் எட்டு பத்து ஓவர்களில் கழட்டி விட்டால் நிச்சயமாக எதிரணியின் ரன் அடிக்கும் வேகம் மெக்கிராத்தால் தடுக்கப்படும். பாண்டிங்கின் இன்னொரு பேட்டியின் அடிப்படையில் இந்த அணி பெரும்பாலும் மாற்றப்படாது என்று தெரிகிரது. சைமண்ட்ஸை தவிர்த்து.

சைமண்ட்ஸ் முழுத் தகுதி பெற்றுவிட்டதாக ஆஸ்திரேலியாவின் பிசியோ சொல்லியிருக்கிறார். செஞ்சுரி அடித்த பிறகும் பிராட் ஹாட்ஜ் வெளியே உட்காரும் நிலைவரும் என்று நினைக்கிறேன், ஆனால் சைமண்ட்ஸ் நிச்சயமாக ஒரு போட்டியின் தன்மையை தனியொறு ஆளாக மாற்றிவிடும் சாமர்த்தியம் உடையவர் தான்.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா சேஸ் பண்ணினால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்துவிடுவார்கள். செட்டிங் என்றால் கொஞ்சம் போல் கஷ்டப்பட்டு ஆனால் ஜெயிப்பார்கள். ஆனால் இப்படி ஒரு முன்முடிவிற்கு வரும் அளவிற்கு இருப்பதாலேயே ஆஸ்திரேலியா செட்டிங் செய்து ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். சின்ன கிரவுண்ட் என்பதால் நிச்சயமாய் ஹை ஸ்கோரிங் கேம் தான். சௌத் ஆப்பிரிக்கா பெற்றிருக்கும் தேவையற்ற பிம்பம் இந்தப் போட்டியில் தகர்த்தெறியப்படும்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா சினிமா விமர்சனம் சுய சொறிதல்

Apocalypto, 300, மொழி & ராஜராஜன்

சமீபத்தில் அபோகலிப்டாவும், 300 வும் பார்க்க நேர்ந்தது, முதலாவது முற்றிலும் தற்செயலான ஒன்று எப்படியென்றால், முந்தைய நாள் டிரைலர் பார்க்க பிடித்துப்போய் இந்தப் படம் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் 300 பற்றிய விமர்சனங்கள், டிரைலர்கள் என பலவற்றைப் பார்த்துவிட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் நாளுக்காக காத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை முதலாவது படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது, காரணம் எல்லாம் சொல்லமுடியாது.

Mayan civilization ல் நடக்கும் கதையாய் சொல்லப்படுகிறது. படம் நகர்வதே தெரியவில்லை, காட்டில் பன்றியொன்றை வேட்டையாடுவதில் தொடங்கும் படம், ஹீரோ Jaguar Paw (Rudy Youngblood), பக்கத்து கிராமத்து(சொல்லப்போனால்) மக்கள் ஊரைவிட்டு போவதைப் பார்ப்பதில் இருந்து சூடுபிடிக்கிறது. அவர்கள் ஏன் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது கதை.

மேட்டர் என்னான்னா, இந்த மாயன் சாம்ராஜிய மன்னர், சூரிய கிரகணத்தின் மீதான தன்னுடைய தவறான புரிதல்களால் அவர்களுடைய சூரிய கடவுளான (sun god Kukulkan) திருப்தி செய்வதற்காக நரபலி கொடுக்கிறார். அப்படி நரபலி கொடுக்க வேண்டிய ஆட்களை பிடித்துச் செல்ல ஹீரோவின் ஊருக்கும் வருகிறார்கள். அந்த களேபரத்திலும் ஹீரோ தன் புள்ளைத்தாச்சி மனைவியையும் அவருடைய குழந்தையையும் காப்பாற்றி ஒரு கிணற்றில் விட்டுவிட்டு அவர்களிடம் சிறைபடுகிறார். பின்னர் எப்படி இந்த நரபலி ஆட்களிடம் இருந்து தப்பித்து தன் மனைவி குழந்தையைக் காப்பாற்றுகிறார் என்று மெல் கிப்ஸனின் டைரக்ஷனில் பார்க்கலாம்.

இரத்தத்தை உறையச் செய்யும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த படம். அதுவும் அந்த நரபலி கொடுக்கும் காட்சிகள், படம் R rated. மெல்கிப்ஸனின் முந்தைய படங்களில் அறிமுகம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். பாஷன் ஆப் கிறிஸ்ட், பிரேவ் ஹார்ட் பார்த்திருந்தால் புரியும். பாஷன் ஆப் கிறிஸ்டைப் போலவே ஒரு கோட்டுடன் ஆரம்பித்து படத்தின் கடைசியில் கிரடிட்ஸ்.

Opening quote: "A great civilization is not conquered from without until it has destroyed itself from within." — W. Durant

இதுதான் கோட்.

அடுத்தது பார்த்தது 300, ஏற்கனவே சிறில் அலெக்ஸ் இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதியிருந்தார். பிராங்க் மில்லரின் கிராபிஃக் நாவலை ஃசேக் ஸிண்டர் படமாக எடுத்திருக்கிறார். எனக்கென்னமோ படத்தை விடவும் டிரைலர் தான் ரொம்பவும் பிடித்திருந்தது. ஹிஹி. படத்தின் ஹீரோ ஜெராட் பட்லர், தான் படத்தின் ஹீரோவாகயிருந்ததால் பட்ட கஷ்டங்களை சொன்ன பேட்டி ஒன்றை யூடியூபில் பார்த்திருந்தேன். உரலைத் தொலைத்துவிட்டேன். அதில் அவருடைய மேட்டர்(;) புரியுதா) பெரிதாகத் தெரிவதற்காகப் பட்ட கஷ்டங்களை சொல்லியிருந்தார், சாக்ஸ் எல்லாம் வைப்பார்களாம் உள்ளே.

படம் பிரமாண்டமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அபோகலிப்டோ பிடித்த அளவு இந்தப் படம் பிடிக்கவில்லை. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குகிறது.

மூன்றாவது பார்த்தது மொழி, தமிழ் படங்களில் வித்தியாசமான முயற்சி, வில்லன்கள் கிடையாது, வெட்டிச் சண்டை கிடையாது, அதிக லாஜிக் மீறல்கள் கிடையாது. ஜோதிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார் டவ் அண்ட் டம்மாக. ஆனால் பாபெல் படத்தில் அந்த ஜப்பானியப் பெண் செய்திருந்த கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன். எனக்கென்னமோ அந்தப் பெண் இன்னும் இயல்பாகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் பாலிடிக்ஸ் எதுவும் கிடையாது.

கடைசியாக அபோகலிப்டோ பார்த்ததும், முன்பு ராயர் காப்பி கிளப்பில் படித்த இந்தக் கவிதையும் அதைத்தொடர்ந்த சில வரிகளும். எனக்கென்னமோ ராஜராஜர் ராஜேந்திரர் காலத்தில் நரபலியைத் தவிர்த்து அத்தனையும் நடந்திருக்கும் என்று படுகிறது.

ராஜராஜன்

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த
இம்மன்னன்
எதைச் செய்து கிழித்துவிட்டானாம்?
ஈழம் கொண்டானாம்...
சாவகம் வென்றானாம்...
காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழாச்செய்த காமுகன்
இம் மன்னன்.
மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னும் கற்பழிக்கிறான்

ராஜராஜ சோழன் பற்றிய இன்குலாப் கவிதையின் பகுதி மேற்கண்டது.

'ராஜராஜ சோழனுக்கும் அவன் மகனுக்கும்(ராஜேந்திர சோழன்) வாழ்க்கையில் இரண்டு முக்கியமான வேலைகள் தான் உண்டென்று தெரியவருகிறது. அவர்கள் போர் செய்யாத போதெல்லாம் கோவில் கட்டினார்கள். கோவில் கட்டாத பொழுதெல்லாம் போர் செய்தார்கள். போரில் எதிரிகளை வென்று அவர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருளையெல்லாம் கோவில் கட்டுவதில் செலவழித்தார்கள்.'

இதை எழுதியவர் சாட்சாத் கல்கி தான்.


ஒரு சேஞ்சுக்காக இந்தப் பதிவில் படங்கள் எதுவும் போடவில்லை. இந்தப் பதிவிற்கான படங்கள் தனியாக இன்னொறு பதிவாகப் போடப்படும்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In உலகக்கோப்பை

Go Aussie Go!!! - 1

சொல்லப்போனால் இந்த ஆட்டத்துக்கெல்லாம் பதிவெழுதி ஸ்காட்லாந்தை ஆளாக்கணுமா என்றுதான் நினைத்தேன். ஆனால் உலகக்கோப்பை ஆரம்ப ஆட்டமாக(ஆஸ்திரேலியாவிற்கு) இருப்பதால் வேறுவழியில்லை.

இந்த உலகக்கோப்பையின் சிறந்த பந்துவீச்சாளராக, ஸ்டுவர்ட் க்ளார்க் இருப்பாரென்று நினைக்கிறேன் அதேபோல் சிறந்த பேட்ஸ்மேனாக, Mr. Cricket இருப்பாரென்றும் நினைக்கிறேன். அதுயாரு Mr. Cricket என்று கேட்பவர்களுடன் நான் "கா".

சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை இந்தப் போட்டியைப் பற்றி. ஆனால் சில கணிப்புகள், ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்தால் பீல்டிங் கேட்கும், அதேபோல் ஸ்காட்லாந்து ஜெயித்தால் பேட்டிங் கேட்பார்கள். ஆஸ்திரேலியா மெக்ராத், ஷான் டைட், ஸ்டுவர்ட் க்ளார்க் வைத்து விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அது ஆட்டத்தின் தளத்தைப் பொறுத்து மாறுபடலாம். சைமண்ட்ஸ் எதிர்பார்க்காத அளவிற்கு உடல்தகுதியில் முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றபடிக்கு சரியான நேரத்திற்கு ஷான் வாட்சன் பார்மிற்கு வந்திருக்கிறார். மேடி உடல்நலம் சரியில்லாமல் போனாலோ இல்லை ஒரு மாற்றத்திற்காகவோ வாட்சன் ஒப்பனராக களமிறங்கலாம்.(பான்டிங்கின் நீண்ட நாள் ஆசை. ஆனால் கில்லியையோ, மேடியையோ தூக்கமுடியாத சிட்சுவேஷன்.)

பிரட் லீ இல்லாத குறையை ஷான் டைட் சரி செய்வாரா? தெரியாது, ஆனால் 150 K போடுவார் என்று தெரியும், அக்யூரஸி எவ்வளவு இருக்கும், இன் ஸ்விங்கிங் யார்கர்கள் கஷ்டப்படாமல் போடுவாரா என்பதெல்லாம் இந்த உலகக்கோப்பையில் பார்க்கலாம்.

மெக்ராத்திற்கு இன்னும் பதினோறு விக்கெட்கள் தேவை வாசிம் அக்ரமின் வேர்ல்ட் கப் ரெக்கார்டை முறியடிக்க, மெக்ராத்திற்கும், ஸ்டுவர்ட் கிளார்க்கிற்கும் வெஸ்ட் இண்டீஸ் தளங்கள் நிறைய சப்போர்ட் செய்யும் என்று நினைக்கிறேன். அவ்வளவாக வேகத்திற்கு சப்போர்ட் இருக்கும் தளங்களாகத் தென்படவில்லை, பிட்சில் மூவ்மெண்ட் இருந்தால் இவர்கள் இருவருக்கும் கொண்டாட்டமே. அதுவும் ஸ்டுவர்ட் கிளார்க்கின் சட்டென்று உள்ளே வரும் இன் ஸ்விங்கர்ஸ் வித்தைகள் செய்யும்.

அதிசயமாக ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பேட்டிங் செய்தால் எனக்கு கொண்டாட்டம்.

Australian Team...

Ricky Ponting
Nathan Bracken
Stuart Clark
Michael Clarke
Adam Gilchrist (wk)
Brad Haddin (wk)
Matthew Hayden
Brad Hodge
Brad Hogg
Michael Hussey
Mitchell Johnson
Glenn McGrath
Andrew Symonds
Shaun Tait
Shane Watson

முந்தைய உலகக்கோப்பை பதிவுகள்

ஆஸ்திரேலியா - உலகக்கோப்பை

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ்

கயிறு பட்டம் மற்றும் என் ஜல்லி

கிழிந்துகொண்டே போகும்
பிரபஞ்சத்தைக் கட்டிப்போட
கயிறுகள் இல்லை

இல்லாமல் போன கயிறு
வலுவேறியதாய்
நிறமேறியதாய்
கற்பனையில்
கழுத்தை நெறிக்கிறது

கற்பனைகள் தொலைந்து போன
நாளொன்றின் கடைசியில்
விட்டு விடுதலையாகி விடியலைநோக்கிய
பயணம், நிச்சயமாய்த் தனிமையில்...

பட்டம் விடுதல்...



எங்கள் BHEL Quarter's பெரிய ஸ்டெடியம் ஒன்று உண்டு. எப்பொழுதோ ஒரு சமயம் இந்திய கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் பங்குபெற்ற 'சும்மா' போட்டியொன்று அங்கு நடந்திருக்கிறது. சொல்லப்போனால் மே மாதம் விடுமுறை நாட்களில் பட்டம் விடுவதென்பது ஒரு பொழுதுபோக்கு அந்தக் காலத்தில். மாஞ்சா போட்டு டீல் விடுவதும் கூட உண்டு.

பட்டத்தையும் நூலையும் இணைக்கும் "சூச்சா" அப்படின்னு ஒரு அய்ட்டம் இருக்கும், எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதைச் சரியாப் போடுவதென்பது ஒரு கலை, நாலு விரக்கடை விட்டுப் பிடிச்சு கீழே மேலேன்னு சரிபார்த்து சூச்சா போடுவது எல்லோராலும் எளிதாக ஆவதில்லை, அதைப் போடுவதற்கென்று சிலர் இருப்பார்கள்.

காசில்லாமல் கடையில் விற்கும் பட்டம் வாங்காமல், ஈர்க்குச்சி, நியூஸ் பேப்பர் என்று என்னுடைய பட்டங்கள் பெரும்பாலும் Economy பட்டங்களாகவேயிருக்கும். பட்டத்திற்கு ஆகும் நூல் தான் என்னை மாதிரி பட்டம் விடுபவர்களுக்குப் பிரச்சனை. நூற்கண்டு வாங்குவதற்கு பைசா கிடையாது. ஸ்டேடியம் முழுக்க அலைஞ்சு அலைஞ்சு கொஞ்ச கொஞ்சமா நூல் சேர்த்து அதற்கு முடிச்சு எல்லாம் போட்டு கொஞ்ச தூரம் பறக்கும் அளவிற்கு ரெடி செய்வோம், பிரச்சனை முடிச்சுகள் அவிழ்ந்து பட்டங்கள் சுதந்திரமாகப் பறந்துவிடுவதுண்டு.

சில புள்ளைங்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பின்னாடியே ஓடி மரம் மேலெல்லாம் ஏறி பட்டத்தை திரும்ப எடுத்துவருவதுண்டு, சில சமயங்களில் பட்டங்கள் முற்களில் சிக்கி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு கிழிந்துவிடுவதும் உண்டு. ஆனால் கடைகளில் வாங்கியப் பட்டங்கள் என்றால் விலையைப் பற்றி கவலைப்பட்டு தேடிப்போவதுண்டு. ஆனால் சொந்தமாக செய்த பட்டம் என்பதால் பெரும்பாலும் பட்டம் போனாப் பரவாயில்லை, என்று நூலை மட்டும் பத்திரமாக எடுத்துவருவோம். அடுத்தப் பட்டம் விடவேண்டுமல்லவா.

அம்மாவும் அக்காவும் திட்டுவார்கள், பட்டத்தையெல்லாம் இப்படியே பறக்க விட்டுட்டு, வீட்டில் இருக்கும் நியூஸ் பேப்பரையெல்லாம் வீணாக்குறேன் என்று. அவர்களுக்கு அந்த நியூஸ் பேப்பரை மாசக்கடைசியில் போட்டால் கிடைக்கும் ஐந்து ரூபாயில் சீனி வாங்கலாமா, துவரம் பருப்பு வாங்கலாமா என்ற கவலை. செஞ்ச பட்டத்தைக் காப்பாத்த முடியலை இன்னொரு பட்டம் எதுக்குடா செய்ற என்ற கேள்வி எழாத நாளில்லை.

ஆனால் பட்டம் மீதான என் காதல் ஒவ்வொரு முறையும் புதுப்பட்டத்தில் தான் சென்று சேர்கிறது. நியூஸ் பேப்பர் இருக்கும் வரை இந்தப் பழக்கம் நீளும் என்று சொல்லி அம்மா நியூஸ் பேப்பரை நிறுத்தாத வரை இது தொடர்ந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் டூம் கட்டி பறக்கவிடுவதென்பது பெரிய விஷயம், சில சமயம் டூமில் மெழுகுவர்த்தியெல்லாம் ஏற்றி பறக்கவிடுவதைப் பார்த்து ஏற்பட்ட ஆச்சர்யம் இன்றும் தொடர்கிறது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In வகைப்படுத்தப்படாதவை

இந்துவாக மதம் மாற முடியுமா?

சமீபத்தில் படித்த பதிவொன்றின் காரணமாக எனக்கு எழுந்த கேள்வி, முன்பே எப்பொழுதோ இதைப் பற்றிய பின்னூட்டம் எழுதிய நினைவு. கொஞ்ச நாள் பாலோ பண்ணிக்கொண்டிருந்தேன் பதில் வரவில்லை.

எங்க வீட்டிலெல்லாம் ரொம்பவும் தீவிரமான இந்து மக்கள், ஒவ்வொரு முறையும் மதமாற்றத்தைப் பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்ட பொழுதும் இந்து மதம் மதமாற்றத்தை அனுமதிக்காததைப் பற்றி பேசப்படும்.

மற்ற மதங்களை விடவும் இந்து மதத்தை அவர்கள் சரியானதென்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம், நான் படித்த சாமியார்ப்(இந்து) பள்ளிகளில் கூட இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, இந்த ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா மக்களை கூட இந்துக்கள் இல்லையென்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை, இந்துவாக மதம் மாறுவதென்றால் என்ன என்று. எங்கள் வீட்டில் சொல்வது, இந்துவாக பிறந்தால் மட்டுமே இந்துவாக ஆகமுடியும் என்றும். மதம் மாறி இந்துவாக மாறமுடியாதென்றும் சொல்வார்கள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?

ராமகிருஷ்னர் கூட கொஞ்ச நாள் முஸ்லீமா இருந்துவிட்டு(அந்த மார்க்கத்தை தெரிந்துகொள்ள என்று நினைக்கிறேன்) திரும்பவும் இந்துவாக மாறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் சேர்ந்து குழப்புகிறது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ்

சீச்சி இந்தப் பழம் புளிக்கும்

பக்கத்தில் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அம்மா ஆரம்பக் கட்ட கேள்விகளுக்குப் பிறகு,

"என்னடா புத்தகம் போடப்போறியாமே?"

முறைத்தேன்.

"குந்தவை வந்தியத்தேவன் கதைகள், தலைப்புக்கூட நல்லாத்தானிருக்கு. என்ன ஒரு ஐம்பதாயிரம் ஆகுமா. நான் தர்றேன் போடு..."

எனக்கு உண்மையிலேயே என்ன நடக்கிறதென்று புரியவில்லை, சிறிது நேரத்தில் பின்னால் இருந்து கேட்ட சிரிப்பின் பிறகுதான் புரிந்தது. அக்கா எல்லாவற்றையும் வத்தி வைத்திருக்க வேண்டும்.

அவரே தொடர்ந்தார்.

"உனக்கு இந்தச் சமயத்தில் இது தேவையில்லாதது. நீ சொன்னது சரியா? தப்பான்னு நான் எதுவும் சொல்லலை. வேண்டாம் விட்டுடு. கொஞ்ச நாளைக்கு தமிழ் படிக்கிறது, தமிழில் எழுதுறது இரண்டையும் விட்டுறு.

உன் வேலைக்கு நீ மனசாலையும், மூளையாலையும் உழைக்கணும். மூளை மட்டும் உழைச்சா சரி வராது.

அப்படியில்லைய, பிரபந்தம் படி, கம்பராமாயணம் படி. உனக்கு ஒரு இருபது அபிராமி அந்தாதிப் பாட்டுத் தெரியுமா அதைப் படி.

நான் உன்னைப் படிக்க வேண்டாமுன்னு சொல்லலை. ஆனால் கொஞ்ச நாளைக்கு இந்த எழுதுற வழக்கம் வேண்டாமே, தமிழ் நாவல் படித்தால் அதைப் பற்றி எழுதுவேன்னு நிற்ப அதான். இந்த நாவல் வகையறாக்கள் எல்லாம் வேண்டாமே."

"இந்தாத இப்ப என்னத்தான் சொல்ற..." கேட்டதுதான் சாக்கென்று கையில் இன்ஹெரிடன்ஸ் ஆப் லாஸ் கொடுக்கப்பட்டது.

"நல்ல புத்தகமாம், புக்கர் ப்ரைஸ் கூட வாங்கியிருக்கு. இதைப் படி."

"மம்மி, இதெல்லாம் ஸிட்னி ஷெல்டன் புக் இல்லை. என் இங்கிலிபீஷுக்கு நான் படிக்கவே முடியாது..." சொல்லி முடிக்கவில்லை கையில் ஒரு டிக்சினரி திணிக்கப்பட்டது.

ஆக ஒட்டுமொத்தமா ப்ளான் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். சரிதான், நானும் நரியாய் ஆகி கொஞ்ச நாளைக்கு இந்தப் பழம்(தமிழ்) புளிக்கும் என்று ஆங்கிலத்துக்கு தாவப் போகிறேன். அந்தப் பழமும் கூடிய சீக்கிரம் புளிக்க வேண்டும்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts