ராணுவம் இருக்கும் இடங்களில் இருக்கும் வன்முறை, சிறுவர்களை வன்புணர்ச்சிக்கு அழைத்துச் செல்வது, பெண்களைக் கொடுமைப்படுத்துவது சிறுவர்களை ராணுவத்துக்கு என்று அழைத்துச் செல்வது என்று தொடர்ச்சியாக அத்தனையையும் பதிவு செய்கிறது படம். ஸில்வெஸ்டர் ஸ்டலோன் படத்தின் சில காட்சிகளில் மெல்லிய நகைச்சுவையைக் காட்டியிருந்தாலும் ஆனால் அது தொடராமல் விடப்பட்டிருக்கிறது. அதுவும் சரிதான்.
இந்த மூடப்பட்ட மண்டபத்தில் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
சமணர்படுக்கையின் தற்போதைய நிலை - பலங்காலத்துக் கல்வெட்டுக்களைக் காட்டிலும் நம் காலத்து ஹார்டின்களும் இன்ன பிற பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
நாங்கள் சென்றிந்த பொழுதும் நாலைந்து கப்புள் பூங்காவிலும் மேலே சமணர் படுக்கை அருகில் மூன்று கப்புள்களும் இருந்தனர். லால் பாஹ், கப்பன் பார்க் அளவிற்கு இறங்கி வேலை பார்ப்பதாக தொல்பொருள் துறை ஊழியர் புலம்பினார். இதில் தண்ணியடித்துவிட்டு அவரிடம் வேறு கரைச்சல் செய்வார்களாம், வெட்கக்கேடு. சரி நல்ல விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பித்து அப்படியே நகர்ந்துவிட்டது.
இந்த குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியிலிருந்து குன்றின் மீது ஏறி குகையின் வாயிலில் உள்ள ஏழு படிக்கட்டுகளைக் குடைந்து குகையினுள் நுழைகிறோம். எனவே தான் இவ்விடம் ஏழப்பட்டம் எனப் பலராலும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலக வாழ்க்கை விடுத்து ஏழுவிதமான ஆன்மீக உறுதிகளை மேற்கொண்டு, உண்ணாநோன்பு இருந்து உயிர்நீக்க விழைந்த சமண முனிவர்கள் தங்கியிருந்ததால் ஏழடிப்பட்டம் எனப் பெயர் பெற்றது எனக் கொள்ளுதல் பொருந்தும். எனினும் இப்பெயர் மிகவும் பிற்காலத்திலேயே வழக்கிற்கு வந்ததாகத் தெரிகிறது.
ஆனால் குகைக்கோயிலின் வெளிப்பக்கம் தென்புறச் சுவற்றில் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது பாண்டிய மன்னர்களது கலைப்படைப்பு என்பது தெரியவந்தது. கி.பி 9ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட, ஸ்ரீமார ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில்(815 - 862) மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் என்னும் சமண முனிவர் குகைக்கோயில் முன் மண்டபத்தைப் புதுப்பித்து தற்போது நாம் காணும் ஓவியங்களையும் வரைந்து வைத்ததாக இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
வருடக்கணக்கில் எடுத்து வந்திருக்கும் படம், விக்ரமுடைய உழைப்பு தெரிகிறது. ஆக்ஷன் படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும் கொடுத்தக் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இயக்குநரின் தைரியம் பாராட்டுதலுக்குரியது, இது போன்ற க்ளைமாக்ஸ் வைக்கப்போகிறார் என்றால் இடைவேளையில் ஒரு சின்ன க்ரிப் கொடுக்கணும் என்ற அவசியம் இல்லைதான். படம் க்ளாமாக்ஸ் காட்சியை நோக்கி அழகாக நகர்த்தப்படுகிறது. சண்டைக்காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளன, மற்றவர்களைப் பற்றித் தெரியாது சண்டைக்காட்சிக்காக, அதுவும் ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால் நான் மாட்ரிக்ஸ் 1ம், த லாஸ்ட் சாமுராய் படமும் இப்படி ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக, அந்த சண்டைக்காட்சி வரப்போகிற தருணத்திற்காகக் காத்திருந்து பார்த்திருக்கிறேன்.
மாட்ரிக்ஸில் முதன் முதலில் கியானோ ரீவ்ஸ், தனக்கு சண்டை போடத்தெரியும் என்று சொல்ல அதைப் பார்க்கலாம் என்று சொல்லி Laurence Fishburneவும் கியானோ ரீவ்ஸும் இறங்கும் சண்டைக்காட்சி அருமையாக இருக்கும் அதைப் போலவே. லாஸ்ட் சாமுராயிலும் டாம் க்ரூயூஸ் கத்திச் சண்டையைக் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டிருக்கும் பொழுது சாமுராயைக் கொல்லவரும் ஆட்களுடன் சண்டை போடுவது பிரம்மாதமாக அமைந்திருக்கும். இந்த இரண்டு காட்சிகளுக்காக நிறைய முறை இந்தப் படங்களைப் பார்த்திருப்பேன். நீண்ட நாள் கழித்து அது போல் என்று ஒப்பீட்டு அளவில் சொல்லாவிட்டாலும் ரசித்துப் பார்த்த சண்டைக்காட்சி படம் 'பீமா'.
சும்மா வன்முறை அதிகமாயிருக்கு என்று சொல்பவர்கள், லிங்குசாமியின் விக்ரமிற்கான படத்தில் "A" சர்டிபிகேட் எதற்காகத் தந்திருப்பார்கள் என்று தெரியாமல் படம் பார்க்கச் சென்றார்கள் என்றால் ஆச்சர்யமே. கனல் கண்ணன் என்று நினைக்கிறேன் சண்டைப் பயிற்சி பாராட்டுக்கள், சண்டையின் பொழுது லைட்டிங் அருமை - ஒளிப்பதிவாளர் விளையாடியிருந்தார். பாடல்கள் அனைத்தும் முன்னமே வெளிவந்து ரசிக்கவைத்தவை தான். பாடல்காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன, பாடல்காட்சிகளின் ஹீரோ ஹீரோயின் உடைகள் அழகாக தேர்வுசெய்யப்பட்டு ஏற்கனவே இருக்கும் விக்ரம்-த்ரிஷா கெமிஸ்ட்ரியில், பிஸிக்ஸ், ஸூவாலஜி எல்லாம் சேர்த்து டோட்டல் சயின்ஸே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் ஹீரோயினின் வேலை என்னவோ அதை மட்டும் த்ரிஷா செய்திருக்கிறார் சும்மா மொட்டைமாடியில் இருந்து திருடன் துப்பாக்கியுடன் கீழே குதித்தால் காதல் வருமா என்றால் இந்தக் காலப்பெண்களுக்கு வந்தாலும் வருமாயிருக்கும் :). நான் காலேஜ் முடித்து ஐந்தாண்டு ஆகிவிட்டது, அப்பொழுது என்னுடம் படித்த பெண்களே கூட இப்படி சிகரெட் குடிக்கிறான், பாத்ரூமில் வைத்து இரண்டு பேரை அடிக்கிறான் என்று காதலித்தப் பெண்ணைத் தெரியும் கடைசியில் "இந்த ஆம்பளைங்களே மோசம்" என்ற ஒரு வரியில் முடிந்துவிட்டது அத்தனையும் மூன்றாண்டிற்குப் பிறகு. பெண்களை முட்டாள் என்று சொல்லவில்லை ;) ரௌடியோ என்ன எழவோ அவர்களுக்குப் பிடித்தவர்கள் அவர்கள் காதலிக்கிறார்கள் அஷ்டே!
பிரகாஷ்ராஜ் - ஒரு அருமையான நடிகன் என்பது எல்லாருக்கும் நன்றாகவேத் தெரியும். இயக்குநர் அவரிடம் இருந்து நல்ல பெர்ஃபார்மென்ஸைக் கொண்டுவந்திருக்கிறார். "பத்மா" பெயரைக் கேட்டதும் வழியிறது, இடையில் தன்னை மீறி விக்ரம் நகரும் பொழுது மிதமான அதிர்ச்சியை வெளிக்காட்டுவது என தன்னுடைய பங்கிற்கு பீமனின் ஒரு கையாக அவரும் இருக்கிறார்.
இயக்குநர் மனதில் க்ளைமாக்ஸ் காட்சி ஆரம்பத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும். படம் பார்த்து முடித்த பின்னால் அதை நோக்கி காட்சிகளை இயக்குநர் நகர்த்தியிருப்பது தெரியவரும். மையக் கருவை நோக்கி நகரும் காட்சிகள் அவர் சொல்ல வந்த மையக் கருவை தீர்மானிக்கும் நிறுவும் அனுபவங்கள் என்று அருமையாக நகர்கிறது. ஜெயமோகன் ஒரு தேர்ந்த கட்டுரைக்கான அம்சமாகச் சொன்ன "ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்" வரிகள் நினைவில் வருகின்றன. இது திரைப்படத்திற்கும் பொறுந்தும் என்று நினைக்கிறேன். அந்த ஒரு உடைவாக இந்த பீமா படம் க்ளைமாக்ஸ் காட்சியை முன்வைக்கிறது எனவே வேறு இடைவேளை உடைதல்கள் அநாவசியமே.
கதாநாயகன் காதல் வசப்படும் காட்சியும், தடுமாறுவதும், முக்கியமான தீர்மானத்தை முன்னெடுக்கும் காட்சிகளும் நெருடாமல் படத்தின் ஓட்டத்துடனேயே அமைகின்றன.
சுஜாதா எப்பொழுதும் திரைப்படத்திற்கான க்ளைமாக்ஸ் does matters என்று சொல்வார். ஒரு தேர்ந்த சிறுகதை எப்படி அதன் முடிவை நோக்கிச் செல்கிறதோ அப்படி ஒரு தேர்ந்த திரைக்கதை க்ளைமாக்ஸை நோக்கிச் செல்ல வேண்டும்.
முதலில் இந்தப் படம் எந்தப் படத்தைப் போலவும் இல்லை என்பதைச் சொல்லவேண்டும், சும்மா நாயகன் போல், தளபதி போல் இருக்கிறது என்பதெல்லாம் காமெடியாயிருக்கிறது. இனிமேல் காதல் கதை ஒன்றை எடுத்தீர்கள் என்றால் உள்ளூர் சினிமாவோ வெளிநாட்டு சினிமாவிலோ இருப்பதைப் போன்ற காட்சிகள் இல்லாமல் ஒரு கதையை எடுக்க முடியுமா? இயக்குநர் மற்ற படங்களின் பாதிப்பு இருக்கக்கூடாது என்று கவலைப்பட்டிருப்பதும் அக்கறை எடுத்திருப்பதும் தெரிகிறது.
த்ரிஷா வரும் காட்சிகளில் வரும் மெல்லிய நகைச்சுவை படத்தை தொந்தரவு செய்யவில்லை, முன்பே சிவாஜியின் பொழுது சொன்னதுதான் கதாநாயகிகள் ஆறாம் விரல் தான் பாடல்காட்சிகள் ஆறாம் விரலின் நகங்கள் தான். இவை தமிழ்சினிமாவின் நகச்சுத்திகள் போலத்தான் என்றாலும் இதிலிருந்து மீறிவர அதிக துணிவு தேவைப்படுகிறது. "பணம்" முக்கிய இடத்தை வகிக்கும் தமிழ்ச்சினிமாவில் பாலாக்களே சிம்ரனின் மூடப்பட்ட தொப்புள்களை நம்பவேண்டியிருப்பது நிச்சயமாய் ஆரோக்கியமானது இல்லைதான் ஆனால் தொடர்ச்சியாக வந்த ஒரு விஷயம் சட்டென்று நிறுத்திவிட முடியாதது.
இளம்பெண்கள் பெங்களூருவில் உள்ளாடை அணியாமல் உடல் தெரிய மேலாடை அணிந்து மால்களுக்கு வருவது இப்பொழுதைய ஃபேஷனாகயிருப்பது போல் க்ளவேஜ் காண்பிப்பது தற்போதைய தமிழ்சினிமாவின் பேஷன் போலிருக்கிறது :) பீமாவும் த்ரிஷாவும் விதிவிலக்கல்ல. லாஜிக்களை மூட்டைகட்டிவிட்டல்ல லாஜிக்குகளை எடுத்துக் கொண்டு போய் கூட பீமாவைப் பார்க்கலாம். படம் நன்றாகத்தான் இருக்கிறது - முன்னர் வந்த ரௌடி கதைகள் போலில்லாமல்.
புத்தகக் கண்காட்சிக்கு முதல் நாளே சென்றிருந்தேன் தொடர்ச்சியாய் மேலும் மூன்று நாட்கள் சென்னையில் இருந்ததால் புத்தகக் கண்காட்சியை நன்றாக சுற்றிப்பார்க்க முடிந்தது. ஆனால் முன்னமே முடிவு செய்திருந்த புத்தகங்களைத் தவிர்த்து ஒரு புத்தகம் கூட அடிஷனலாய் வாங்கலை என்பது என் வரையில் அதிசயமே. 'கிழக்கின்' விடுதலைப்புலிகள் புத்தகம் வாங்காதீர்கள் புலிகள் பற்றி தெரிந்துகொள்ள என்று நண்பர்கள் சொன்னதையும் மீறி வாங்கினேன். எழுதப்பட்டிருந்த டோன் சுத்தமா பிடிக்கலை, அதிசயமாய் ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் வேறு என்ன சொல்ல. 'உயிர்த்தலம்' ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆபிதீனின் தொகுப்பு பெரும்பாலும் படித்த கதைகள் தான் என்றாலும் புத்தகத்தில் படிப்பதில் சுகமே தனிதான்.
'பின்தொடரும் நிழலில் குரல்' லும் 'காடு'ம் படித்திருந்தேன். இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றி நிறைய எழுதணும் என்று அரிப்பு அதிகமாயிருக்கிறது.
சர்வேசனின் 'நச்' போட்டியில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றதும் சந்தோஷமாய் இருந்ததைப் போல் இல்லாமல் கடைசியில் wild-card என்று என்னன்னமோ நடந்து 'நடுவர்'களின் தேர்வுகளுக்குப் பின் மூன்றாவது வந்ததில் சரியான 'காண்ட்'டாகியிருந்தேன். அக்கா இதைப் பற்றிச் சொல்ல முதலில் எனக்குப் புரியவேயில்லை நான் எப்படி கடைசி சுற்றுக்கு வந்தேன் என்று. இன்னொரு நடுவர் பற்றிய பிரச்சனையா என்றால் சொல்லத் தெரியலை, மற்றதைப் போலில்லாமல் நானாய் சென்று சேர்ந்து கொண்டது என்பதால் என்ன சொல்வதென்றே தெரியலை, ஆனால் 'நடுவர்' வகையறா விஷயம் சர்வேசன் முன்னமே சொல்லாதது. ஆனாலும் முக்கியமான விஷயம் நானாய் சென்று கலந்துகொண்டது ஆனாலும் நான் நினைப்பதை எழுதுவதில் தவறில்லை என்பதால் எழுதுகிறேன். முன்னமே இப்படி ஒரு ஐடியா இருப்பதையோ இன்னார் நடுவராக வருவார்கள் என்றோ சொல்லியிருந்தால் கலந்துகொண்டிருந்திருப்பேனா? தெரியலை!
ஆஸ்திரேலிய அணி இந்தக் கடைசி போட்டியில் ஜெயிச்சுருவாங்க என்று தான் நான் நினைக்கிறேன், எல்லோரும் கஷ்டமான டார்கெட் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் எனக்கென்னமோ நம்பிக்கை இருக்கிறது பார்க்கலாம். Go Aussie Go!!!
Politically correct ஆ இல்லையா என்று பார்க்காதீர் உங்களுக்கு சரின்னு பட்டதை எழுதித் தொலையும், மொன்னையா இருக்கு நீங்க எழுதுறதெல்லாம் என்று நண்பர் ஒரு சொன்னதில் இருந்து அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் கொஞ்சமாய் செயல்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் சொன்ன நண்பருடனேயே சண்டை போடும் நிலை வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் ஆனால் நண்பர் அதையே(மனசில் பட்டதைச் சொல்பவர்) செய்பவர் என்பதால் புரிந்துகொள்வார் என்று தெரியும். ஆனால் இப்படி எல்லா விஷயங்களிலும் எழுதிவிடமுடியுமா என்று தெரியலை! சில விஷயங்களைப் பார்த்தும் வாயை மூடிக்கொண்டிருப்பது அயோக்கியத்தனமான மௌனம் தான் என்றாலும் இப்போதைக்கு இதை மட்டுமே செய்ய முடிகிறது. பார்க்கலாம் எத்தனை விஷயங்களில் பேச முடிகிறதென்று.
சென்னையில் இருந்த பொழுது நண்பர்களுடன், The Legend, புலிவருது, அப்புறம் இன்னொரு முறை பில்லா பார்த்தேன்(இந்த முறை சூப்பரான தூக்கம்). புலிவருது படம் பத்தி என்ன சொல்றதுன்னு தெரியலை கனவு கனவுன்னு சொல்லி கடுப்பேத்தினாலும் ஏதோ மூணு மணிநேரம் பார்க்கிற மாதிரி இருந்தது. இரண்டு பாடல் கேக்குற மாதிரி இருந்தது. வேடந்தாங்கலுக்கும் சென்னை மியூஸியத்திற்கும் சென்றிருந்தேன் சுகமான அனுபவங்கள் இரண்டுமே. என் காமெரா லென்ஸ் போதாமை ஒரு குறை என்றாலும் வேடந்தாங்கல் நன்றாகயிருந்தது.

சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் தால் ஏரியில் கடந்து செல்லும் ஷிக்காரா படகிற்காக காத்திருந்து சூட்டிங் போட்ட படம்.
தால் ஏரி பிரம்மாண்டம் என்ற வர்ணித்தால் சொன்னால் கிளிஷே ஆகிவிடும், ஆனால் சூரியனின் அசைவுகளுக்கு(indeed பூமியின்) ஏற்ப தால் ஏரி காட்டும் வண்ணக்குழப்பம் பிரம்மாண்டம். காஷ்மீருக்கு சென்று இந்த வித்தையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கலாம், அப்படி ஒரு தருணம் தான் மேலே படத்தில்.
அன்பு நண்பர் இராமநாதன் ஏதோ விளையாட்டென்று கூப்பிட்டிருந்தார். நான் ஊரில் இல்லாத காரணத்தால் போன வாரம் போல் போடுறேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு போடாமல் விடப்பட்டது. இராம்ஸ் போட்டாச்சு!
ஆட்டத்துக்கு கூப்பிட்டே ஆகணுமா தெரியலை. கூப்பிட்டு வைக்கிறேன் நான் கூப்பிட்டா படம் போடுவாங்களா தெரியாது இருந்தாலும் ஏதோ என்னால் ஆனது.
1) பெயரிலி அண்ணாச்சி(ஏற்கனவே ஒரு தடவை மறுத்துட்டீங்க, இது உங்க கிரவுண்டு வந்து விளையாடுங்க).
2) ஹரன்பிரசன்னா(வாங்கய்யா வாங்க சீக்கிரமா ஒரு நல்ல படம் போடுங்க.)
3) உஷா அக்கா(பாத்துக்கோங்கப்பா நாங்க மூன்றில் ஒன்று சதவீதம் தந்துட்டேன்.)
என் எல்லைகளைப் பற்றிய கேள்வி
ஒரு நாளைப் போலில்லாவிட்டாலும்
எல்லா நாட்களிலும் இருக்கிறது
நீள அகலமாய் குட்டை நெட்டையாய்
அவரவர்களுக்கென்று எனக்கான
எல்லை கனசதுரமாய்
சுருங்கத்தான் போகிறதென்றாலும்
நீண்டு கொண்டேயிருக்கும் வெளியின்
சாத்தியக்கூறுகளுடன் எனக்கான
எல்லை ஒளி ஆண்டுகளாய் நீள்கிறது
என் நிழலின் நடமாட்டம்
தடுமாற்றங்களுடன் முகத்தில் அறைந்து
ஒப்புக்கொள்ள முடியாததாயும்
நகரும் நாளின் ஒவ்வொரு பக்கத்திலும்
உடைத்தெரியப்பட்ட கனசதுரத்தின்
தெறிக்கும் ஒலியுடனும் சிரிக்கும் ஒளியுடனும்
வெளிகளைக் கடந்து நீளூம் என் பயணத்தின் குறிப்பு
நிரப்பப்படுகிறது
நிரப்பப்படாத பக்கங்களைப்
பற்றிய பயமில்லாமல்
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் சொல்ல வேண்டும் என்று என்னுள் நிறைய கேள்விகள் தோன்றியிருக்கின்றன. நாளை மற்றொரு நாளே என்பது போன்ற எண்ணங்கள் உண்டென்றாலும், கொண்டாட்டங்களுக்கான நாட்கள் என்று எனக்கும் சில இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன.
எனக்கும் சில வருடப் பிறப்பு நினைவுகள் உண்டு, கிரிக்கெட் பித்து பிடித்து அழைந்த நேரத்தில் 12 மணிக்கு தேசியக் கொடியேற்றி தெருவிற்கே இனிப்பு வழங்கி கலாய்த்திருக்கிறேன் என் கிரிக்கெட் அணியுடன். ரோடு முழுக்க பெரிதாய் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எழுதியிருக்கிறேன், என் கையெழுத்து காரணமாய். பைக்கில் வேகமாய் சுற்றியிருக்கிறேன் பிஎச் இஎல் ரோடுகளில். நான்கைந்து முறை சர்சிற்குச் என்று என் பாவங்களைக் கழுவியிருக்கிறேன், அப்படியே கோவில்களுக்கும். ராத்திரி 12.00 மணிக்கு சர்ச், 6.00 மணிக்கு கோவில்.
இப்பொழுதெல்லாம் அத்தனை பெரிதாய் மனம் தத்தளிப்பதில்லை, புது வருடப் பிறப்பென்று ஆனாலும் மற்றவர்களுக்காக நானும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வாழ்த்துக்கள் பெற்று அனுப்பி வருகிறேன் இந்த வருடமும்.
வலைபதிவு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)
புதிய வருடம் உங்களுக்கு மேன்மைகளைக் கொண்டு வரட்டும். :)
இன்று டெல்லியில் எனக்கிருந்த ப்ளான்களை திருப்பிப்போட்டது, ஆசிப்பின் சூடான இடுகையில் இருந்த இந்தப் படத்தின் விமர்சனம். சட்டென்று புரட்டிப் பார்த்துவிட்டு நேரம் இருந்ததால் சட்டென்று கிளம்பி வசந்த் விகார் பிவிஆர் சினிமாஸில் இந்தப் படத்தின் டிக்கெட்கள் கேட்டேன், ஏற்கனவே புக் செய்திருந்த ஒரு குடும்பத்தில் ஒரு டிக்கெட் மீந்துவிட எனக்கு தந்துவிட்டார்கள் காசுக்குத்தான்.
இதனால் இந்தப்படத்தைப் பற்றிய ஆர்வம் இன்னும் அதிகமானது.
Dyslexia என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனைப் பற்றிய கதையிது. படத்தின் தொடக்கத்தில் அந்தப் பையனின் பெயரைப் போட்டு பின்னர் அமீர்கான் பெயர் போடுவதெல்லாம் எனக்குப் பெரிய விஷயமாகப் படவில்லை. ஏனென்றால் இந்தப்படத்தைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் அந்தச் சிறுவன் தான் ஹீரோ என்பது தெரியும் அப்படியிருக்க அமீர்கானின் பெயரைப் போடாமல் அவர் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டார் என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்ததற்காக அமீர்கானை, டைரக்டராக, தயாரிப்பாளராக நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். படம் மனதைக் கவர்வதாக, பிசைவதாக, கண்ணீர் சிந்த வைப்பதாக இருக்கிறது. நான் படம் பார்த்து கண்ணீர் விடுவதெல்லாம் பெரியவிஷயம் இல்லை, ஏனென்றால் நிறைய படங்கள் பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன், ஆனால் ஒன்று கிளைமேக்ஸில் ஆயிருக்கும் இல்லாவிட்டால் படத்தின் ஏதோ ஒரு தருணத்தில் ஆய் இருக்கும். ஆனால் இந்தப் படம் என்னை கண்ணாடிக்குள் இருக்கும் கண்களைத் துடைத்தபடியே படம் பார்க்க வைத்தது.
அந்தப் பையனை தேர்ந்தெடுத்தது யாரென்று தெரியவில்லை, படத்தில் அமீர் கான் தவிர்த்து மற்ற அனைவரும் மிக இயல்பாகவே பொருந்துகிறார்கள். அந்தப் பையனின் அப்பா, அம்மா ஆகட்டும் அண்ணன் ஆகட்டும் ஆசிரியர்கள் ஆகட்டும்(அமீர் கான் தவிர்த்து) தேடிப்பிடித்து கோர்த்தது போல் இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடுமாற வைக்காத இசை, பின்னணி இசை பாடல்கள் அனைத்துமே அருமையாக இருக்கின்றன. ஏற்கனவே கேட்ட பாடல்கள் தான்.
ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது, படத்தில் வண்ணங்கள் ஒரு பகுதி என்பதால், ஒளிப்பதிவின் தேவை அதிகமாகயிருந்திருக்கும் நன்றாகச் செய்திருக்கிறார் காமராமேன். ஓவியங்கள் வரைந்தது யார் என்று தெரியவில்லை அருமையாக இருக்கிறது ஒவ்வொன்றும் அதிலும் கடைசியில் அந்தச் சிறுவன் வரைந்த ஒன்றும் அமீர்கான் வரைந்த ஒன்றும் பிரம்மாதமாகயிருக்கிறது.
லகே ரஹோ முன்னாபாய்க்கு பிறகு ஸ்டான்டிங் அப்ளாஸ் எனக்குத் தெரிந்து நான் பார்ப்பது இந்தப் படத்திற்குத்தான்.
தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் சென்று பார்க்கவேண்டும் என்று கட்டளை ஒன்று போட்டால் நன்றாகயிருக்கும் ஆனால் பாவம் மக்களுக்கு இந்தி தெரியாதே(:)) ஜோக்ஸ் அபார்ட் நிச்சயம் படம் சொல்ல வரும் விஷயம் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் சென்று சேரக்கூடியது. அதென்ன தமிழ்க்குடும்பங்கள் என்று சண்டைக்கு வராதீர்கள், வேண்டுமானால் கல்யாணம் ஆகி குழந்தைக்காகக் காத்திருக்கும் அனைவருமே பார்க்கவேண்டிய ஒரு படம்.
ஆனால் ஒரு படம் சமுதாயத்தை மாற்றிவிடுமா தெரியவில்லை, ஓவியத்தின் மூலம் போட்டிகளின் உலகத்தின் கத்திச் சண்டை போட முடியுமா தெரியவில்லை. படத்தை மசாலா தடவித்தான் எடுத்திருக்கிறார் அமீர்கான், படத்தின் முடிவு எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது இதைத் தவிர்த்து ஒரு முடிவை இந்தப் படம் வைத்திருக்கவே முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. அவ்வளவே. குஜராத்தில் இந்தப் படம் ஓடுகிறதா என்று தெரிந்து கொள்ள ஆசையாகயிருக்கிறது. அமீர்கான் 'கஜினி' ரீமேக் போன்ற பக்வாஸ் படங்களை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இது போல் இறங்கலாம் என்று மனம் சொன்னாலும் அவருடைய பொருளாதாரம் அதற்கு அனுமதிக்காதென்றே நினைக்கிறேன். எல்லோரும் ஒரு முறை பார்க்கவேண்டிய படம் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை, அம்மாவையும் அப்பாவையும் அழைத்துவந்து காண்பிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆவலும் எழுகிறது.
படம் பார்த்து முடித்ததும் நிச்சயமாய் சொல்லலாம் அமீர்கான் என்னமோ கிழித்துத்தான் இருக்கிறார் என்று. ஆனால் அது அழகான ஓவியமாக இருக்கிறது.
காஷ்மீரின் லோக்கல் கார்டன்கள், கோவில்கள் ஒருநாள் சுற்றிவிட்டு, இன்னொரு நாள் குல்பர்க் சென்றுவிட்டு கடைசியாக காஷ்மீர் நினைவாக பர்சேஸ் முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கு இன்று காலை வந்து சேர்ந்தேன். முடிவு செய்திருந்ததை விடவும் அதிக நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்தேன் என்றே சொல்லலாம். ஆனால் நிச்சயமாக வாழ்நாளில் அனைவரும் ஒரு முறை வின்டரில் காஷ்மீர் வந்து செல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.
அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள், வாழ்க்கையில் ஒரு தடவை செய்யப்போற சந்தோஷமா செய்துட்டு வா என்று, ம்ஹூம் இனி வருஷத்தில் ஒரு தடவை கூட வந்து போகலாம் என்று நினைக்கிறேன்.ஆனால் சீசனில் ஒரு முறை வரவேண்டும் என்ற ஆசையும் ஆவலும் இப்பொழுதே வருகிறது. :)
பிற்பாடு விரிவாக எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.
அடுத்த இரண்டு நாட்கள் 30,31 டெல்லியில் தங்குவேனாயிருக்கும். இடையில் ஜெய்பூர் சென்றுவரும் ஒரு ப்ளானும் இருக்கிறது.
காலம் ரொம்ப வேகமாய் ஓடுகிறதாயிருக்கும்.
காலையில் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டு வந்தார்கள். கல்லூரி மாணவர்களாம், வைஷ்ணவ் தேவி பார்க்க வந்திருக்கிறார்கள், நான் ஜம்மு வரை வந்து வைஷ்ணவ் தேவி பார்க்கவில்லை என்றதும் கிறிஸ்தியனா என்று கேட்டார்கள், என் பெயரும் ஒரு மாதிரி சுத்தி கிறிஸ்துவப்பெயர் போல் இருப்பதால் இந்த சந்தேகம் வந்திருக்கலாம் என்று நினைத்தேன்.
நானென்னமோ ரொம்பவும் குளிரும் என்று ஸ்வெட்டர் போட்டு மேலே ஜெர்கின் போட்டுக்கொண்டு ஜம்முவில் இறங்கினால் அத்தனை குளிரில்லை, இப்பொழுது ஜெர்கினின் உள் வேகிறது. இங்கிருந்து ஸ்ரிநகர் 12 மணிநேர பயணம் என்று சொல்கிறார்கள். ஜம்முவிலிருந்து ஸ்ரி நகர் போகும் வழி பிரம்மாதமாகயிருக்கும் என்று சொல்லி ஆர்வத்தைக் கிளறிவிட்டிருக்கிறார்கள். பார்ப்போம். இன்று வரை வைஷ்ணவ் தேவி போகும் ஆவலில்லை, தெரியாது. ஸ்ரிநகரில் இருந்து வந்த பிறகு நேரம் இருந்தால் ஒரு தடவை போய்வரலாம் என்றிருக்கிறேன்.
முந்தையது
கர்நாடகா எக்ஸ்பிரஸ் பயணத்தில் 'குறட்டைச் சுதந்திரம்' என்றொரு கதையொன்று எழுதும் ஐடியா தோன்றியது. அதனால் அந்தத் தலைப்பை பதிவு செய்து வைக்கிறேன். ஆக்ராவில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் சென்று சேர்த்த பொழுது மணி 7.20 போல, நான் நேராய் ஹோட்டலுக்கு போகலாமா இல்லை தாஜுக்கே போய்விடலாமா என்று யோசனை செய்தேன். என்னவோ நினைத்தவனாய் தாஜிற்கு சென்றேன் நல்லதாய்ப் போனது. என்னால் மிக எளிதாய் உள்ளே செல்ல முடிந்தது. நான் தாஜில் இருந்து வெளியில் வரும் பொழுது 2 அல்லது 3 கிலோமீட்டருக்கு கியூ.
அதிகமாய் இல்லாமல் கொஞ்சம் புகைப்படம் எடுத்தேன். என்னை தாஜ் மகாலுடன் சேர்த்து பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றாலும் ஒருவரை தொந்தரவு செய்து படம் ஒன்று எடுத்துக் கொண்டேன். ஆக்ரா கோட்டை போகும் எண்ணம் எதுவும் இல்லை, முன்னமே இரண்டு முறையோ என்னமோ பார்த்திருக்கிறேன். ஷாஜகான் அங்க படுத்தார் இங்க உருண்டார் எல்லாம் ஏகப்பட்ட தடவை கேட்டாகிவிட்டது, பயணிகள் தொடர்ச்சியாகச் செல்லும் இடங்களுக்குச் செல்ல இப்பொழுதெல்லாம் அலர்ஜியாக உள்ளது. என்ன செய்ய சொல்லுங்கள். ஆனாலும் கொடுமையே கொடுமை என்று இன்னுமொறு முறை என் காமெராவிற்காக சென்று வந்தேன்.
ஆக்ராவில் இருந்து மீண்டும் திலிக்குச் செல்ல தாஜ் எக்ஸ்பிரஸ் பிடித்துக் கொள்ள, டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை கடைசிவரையில் வெயிட்டிங் லிஸ்ட் 350 எல்லாம் ரொம்ப ஓவர் என்று எனக்கே தெரியும். தில்லிக்கு வந்து ஹோட்டலில் படுத்து தூங்கிவிட்டு கிளம்பி பழைய இடங்களைப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் இந்தியா கேட்டுக்கு சென்று வந்து இப்ப தூங்கப் போகிறேன் அதற்கு முன் சும்மா வந்த இன்டர்நெட் பூத்தில் என் காமெரா வொர்க் ஆக சரி பதிவொன்னு எழுதுவோம் என்று உட்கார்ந்துவிட்டேன்.
கடைசியில் இருக்கும் ரோடு ராஜ்பத் என்றழைக்கப்படும் ஜனவரி 26ல் இந்திய ராணுவத்தின் பரேட் நடக்கும் ரோடு. சிங்கிள் ஸ்ட்ரெயிட்டா இந்த ரோடுதான் இந்தியாவிலேயே பெரிசு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.



PS1: என் புகைப்படங்கள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று ரோமிங்கில் இருக்கும் எனக்கு போன் போட்டுச் சொன்ன நண்பருக்கு நன்றிகள்.(உட்கார்ந்து யோசிப்பாங்க்யளோ???)
PS2: பைக்கில் ஜம்மு வரும் நண்பரை இங்கே டெல்லியில் சந்திக்க வேண்டியது, நண்பர் ஜெய்சல்மர் நன்றாகயிருக்கும் அங்கே போகாமல் இருக்காதீர்கள் என்று நண்பர்கள் சொல்லப்போய் அவர் ஜெய்சல்மர் சென்று விட, இப்போதைக்கு ஜம்முவில் சந்திப்பதாக உத்தேசம் நான் Srinagar சென்று விடுவேன் என்றாலும் பார்த்துக் கொண்டாலும் கொள்வோம்.
PS3: பின்னூட்டங்கள் அவ்வளவு சீக்கிரம் வராதாயிருக்கும் நண்பர்கள் பொறுத்தருள்க.
In நாட்குறிப்பு
நெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்
Posted on Wednesday, December 19, 2007
கொம்மாஞ்சக்க, எவனுக்கு எவன்டா விருது கொடுக்குறது. தகுதியை நிரூபிக்கணுமாம். எவனோட தகுதியை எவன்கிட்ட நிரூபிக்கணும். தன்னைத்தானே பீடத்தில் அமர்த்திக்கிட்டு கூட இன்னும் கொஞ்சம் பேரையும் நீயும் உக்காந்துக்க நீயும் உக்காந்துக்க என்று பீடத்தை பகிர்ந்து கொடுத்துட்டா போச்சுதா பீடத்தில உட்கார்ந்தவனுங்க எல்லாம் கிழிச்சிட்டதா அர்த்தமா? இந்த கிழிச்ச பிரகஸ்பதிகள் தான் 2007ல் நீதான் பெஸ்டா கிழிச்சன்னு சொல்வாங்களா?
நல்லா இருக்கே உங்க கதை! இப்படியே போனா எல்லாரும் கடைசியில் பீடத்தில் உட்கார்ந்துக்குக்கிட்டு வேடிக்கதான் பார்க்கணும் என்கிட்ட வாங்க விருதுவாங்க என்கிட்ட வாங்கன்னு. கொடுக்கத்தான் ஆளிருக்கும் வாங்க இல்ல. கடைசியில் பெரிய அடிதடி நடக்கப்போகுது இவர நான் தான் முதல்ல நடுவரா நியமனம் செய்தேன் அவரை நீ எப்படி கூப்பிடலாம்னு.
முதல்ல விருது கொடுக்குறதுக்குள்ள தகுதியை வளர்த்துக்கோங்க அப்புறம் கொடுக்கலாம் விருது. இன்னிக்கு வெப்சைட் தொடங்கி நாளைக்கு அறிவிப்பு செய்து அடுத்த நாளே விருது கொடுத்திடுனுமாம் ஏன்னா பயமாம், எங்கடா புலியொன்னு வந்திடும்னு. இன்னும் நாலு மொக்கைப் பதிவைச் சேர்த்து போடு, பின்னூட்ட விளையாட்டு விளையாடு அப்புறம் என்ன தேவைப்படுற டிராபிக் கிடைக்கும். அதுக்கு ஏன்டா எழுதுறவங்க தாலிய அறுக்குறீங்க.
முதலில் நீயாரு நீயென்ன கிழிச்சன்னு பாரு அப்புறம் 2007ல் எவன் என்ன கிழிச்சான்னு அவார்ட் கொடுக்கலாம். வர்ட்டா!
நாங்கள் செய்துகொண்டிருந்த ப்ரொஜக்ட் வெற்றிகரமாக UAT முடிந்து கொண்டிருந்ததால், இன்னொரு சின்ன ப்ரொஜக்ட் பார்ட்டி தருவதாகச் சொல்ல, கூட வேலை செய்யும் பெண்கள் ஒரு படம் பார்த்துவிட்டு பார்ட்டிக்குப் போகலாம் என்று வற்புறுத்த, அங்கேயும் பெண்கள் பாலிடிக்ஸ் செய்து "Jab we met" என்ற ஹிந்தி படத்தை தேர்ந்தெடுத்துத் தொலைத்தார்கள். நானும் ஃபோரம் இல்லாவிட்டால் கருடா மாலிற்குத்தான் செல்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் கேள்விப்படாத சிக்மா மாலின் Fun Cinemaவில் டிக்கெட் பதிவு செய்ய, கன்னிங்கஹாம் ரோட்டில் அந்த தியேட்டர் பரவாயில்லை என்று தான் சொல்வேன்.
ஷாஹித் கபூரும் கரீனா கபூரும் நடித்தப் படம், அப்பா இறந்துவிட அம்மா இன்னொரு நபருடன் ஓடிவிட, காதலித்த பெண் இதன் காரணங்களுக்காக விட்டுவிட்டு வேறொருவனை மணந்துகொள்ள, அம்மா ஓடிப்போனதால் கம்பெனி ஷேர்களில் இருந்த பிரச்சனைகள் பெரிதாக ஹீரோ வீட்டை விட்டு வெளியேறுவதில் தொடங்குகிறது படம். சரி பயங்கர மொக்கை படம் போலிருக்கு என்று நினைக்கும் பொழுது கரீனா கபூரின் அறிமுகம், படத்தை தாங்கி நிற்கிறார் கரீனா. பின்னர் ஹீரோவின் காரணமாக ஹீரோயின் டிரெயினில் இருந்து கீழிறங்க, டிரெயினை கோட்டை விட்டுவிட்டு பின்னர் ஹீரோயினை அவரது வீட்டுற்கு கூட்டிக்கொண்டு போகும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார் ஹீரோ. வீட்டிற்குச் சென்றதும் ஹீரோயின் தனக்கு பார்த்திருக்கும் மணமகனை விரும்பாமல் வீட்டை விட்டு ஓடிச் செல்ல நினைக்க வரும் பிரச்சனைகள் கடைசியில் எப்படி ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.
கரீனா கொஞ்சம் ஷாஹித் கபூரை விட வயதானவராகத் தெரிகிறார், ஆனாலும் கனமான கதாப்பாத்திரம் என்பதால் வேறுவழியில்லை என்று நினைத்திருக்கலாம். கொஞ்சம் சிவாஜி போல் ஓவர் ஆக்ட் போல் இருந்தாலும் ரொம்பவும் ஆட்(Odd)ஆக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்திற்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார்கள் என்ற கோபத்தில் நானும் ஹிந்தி தெரியாத/புரியாத சோகத்தில் பிரபுவும் சோகக்காட்சியில் எல்லாம் கெக்கெபிக்கே என்று சிரித்து கூட வந்திருந்த இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தவர்கள் வம்பிழுத்துக்கொண்டிருந்தோம். படம் முடிந்து இன்ஃபேண்ட்ரி ரோட்டில் உள்ள ஓரியண்டல் ஸ்பைஸஸில் இரவு உணவு முடித்துக்கொண்டு வந்ததும் வந்த களைப்பில் உறங்கிவிட இன்றைக்கு காலங்கார்த்தாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. சரி இன்னிக்கு தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்தவனுக்கு சட்டென்று லால்பாஹ் நினைவில் வர வேகவேகமாய்க் கிளம்பிச் சென்றேன். ஆறுமணிக்கு அங்கே இருந்தேன்.
ஆனால் கொடுமை என்னவென்றால் ஒட்டுமொத்த லால்பாஹ்விலும் ஒரே ஒரு ரோஜாப்பூதான் இருந்தது. ரோஸ் கார்டன் என்றே ஒரு இடம் உண்டு லால்பாஹ்வில் ஆனால் இது சீசன் இல்லையாமாம், பக்கத்தில் இருந்த லோட்டஸ் பாண்ட்டில் தாமரை இருக்கா என்று பார்க்கச் செல்ல இருந்த ஒன்றிரண்டு சின்ன தாமரை மொக்குகள் பக்கத்தில் கூட என் ஷூம் செல்லவில்லை என்பதால் பக்கத்தில் இருந்த வேறு சில மலர்களைச் சூட்டிங் போட்டுக்கொண்டு வந்தாகிவிட்டது. எடுத்த சில படங்கள் கீழே.





என்னோட சாய்ஸ் முதலாவதும் ஐந்தாவதும்
சில முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள்
Posted on Wednesday, December 12, 2007
அது போகட்டும் இந்த வருட கிறிஸ்மஸ் பார்ட்டி செலவு 25 லட்சம் என்றதும் ஏகக்கோபமாகிப்போனார்கள் உடன் வேலை செய்யும் நண்பர்கள். பெங்களூரில் இருக்கும் அங்ஸானா ரிஸார்ட்டில் சனிக்கிழமை மதியத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஆன செலவு இது! பேச்சுலர் மக்களுக்காவது எதாவது செய்து போனஸ் தொகை இல்லாமல் போனதை சரிசெய்துவிடமுடியுமாயிருக்கும். குடும்பம் என்ற அளவில் செட்டில் ஆனவர்களுக்கு அது முடியாதது என்ற அளவில் 25 லட்சம் செலவைக் கேட்டதும் கொஞ்சம் போல் ஆடித்தான் போய்விட்டார்கள் மணமானவர்கள். பேச்சுலர்களுக்கும் இது ஒரு பெரிய இடிதான் என்றாலும் பேச்சிலருக்கு இது அடர்ப் பச்சையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ரிசார்ட் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, கம்பெனி டிராவலுக்கான வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் நாங்கள் எங்கள் க்ரூப்பாக டூவீலரில் சென்றிருந்தோம். இரண்டு நாடகங்கள் நடத்தினார்கள், இரண்டு ஐட்டம் நம்பர்ஸ் பிறகு வழமையான பேஷன் ஷோ. கொஞ்சம் போல் புகைப்படங்கள் தட்டினேன். வழமை போலவே தண்ணியடித்ததும் ஏகப்பட்ட உண்மைகள், அழுகைகள், கேலிகள் தொடர்ந்தன. எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு சிக்கன் கபாப்களை காலி செய்து கொண்டிருந்தேன். இரவு camp fireல் சினிமா பேர் கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டைத் தொடர்ந்ததும் சண்டை போட்டு இந்தியுடன், ஆங்கிலப்படங்களையும் சேர்த்தோம். தண்ணியடித்தவர்கள், அடிக்காதவர்கள் என ரகளையாக நடந்தது. பெங்களூரில் பனிதான் பொழிந்து கொண்டிருந்தது நேற்றில் இருந்து மழைவேறு பெய்கிறது. டெல்லி குளிருடன் ஒப்பிட முடியாதென்றாலும் winter இங்கேயும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. காலையில் கம்பளியில் இருந்து விடுவித்துக் கொண்டு கம்பெனிக்கு கிளம்புவதற்கு முதலில் மனதை தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. திரைப்படம் ஒன்றை தியேட்டரில் சென்று பார்த்து மாதக்கணக்காகிறது! காரணம் புரிவதால் என்னை நானே விடுவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சிறுவயதிலிருந்தே தொடரும் வழக்கமாக விடுமுறைக்கான நாட்களை நோக்கியபடி இப்பொழுதெல்லாம் நினைவுகள் அலைமோதுகிறது. இந்த பலூன் விடுமுறையின் கடைசி நாட்களுக்கு முன்னர் உடைந்து மனமெங்கும் பரப்பும் வெறுமை எழுதித்தள்ள முடியாததாக இருக்கிறது. இந்த முறையும் தொடரும் என்று நினைக்கிறேன்.
எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன் முதலாக அந்தப் பகுதியில் பார்க்கிறேன். முதல் கேள்வியிலேயே ஆளைக் காலி செய்வதற்காக நான் உபயோகித்த ஆயுதம் தான் என் முதல் கேள்வி. என்னைப் பார்த்து என் வயதை ஊகிப்பதென்பது சாத்தியமேயில்லை என்று எனக்குத் தெரியும்.
மர்மமாகச் சிரித்தவர், "சரி..." என்றபடி மேலும் கீழும் என்னைப் ஒருமுறை பார்த்துவிட்டு, "உங்க வயசு 24 தானே!" உண்மையில் நான் அசந்தே போய்விட்டேன். சாத்தியமேயில்லை என்னைப் பார்த்து வயதைச் சரியாகச் சொன்னவர் இதுவரை யாருமேயில்லை. என் ஆச்சர்யம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.
தொடர்ந்து என் கைகளை ஊன்றிக்கவனித்தவர்,
"உனக்கு ஒரே ஒரு சகோதரி மட்டும் இருக்காங்க இல்ல, உங்க அம்மா அப்பா இரண்டு பேரும் ஆசிரியர்கள் இல்லையா?"
கிழிஞ்சது அடச்சே நான் காண்பது கனவு மாதிரியிருக்கே ஒருவேளை மாஜிக்கல் ரியலிஸம் பத்தி யோசிச்சு யோசிச்சு இப்ப கனவிலேயே வந்துவிட்டதோ என்று நினைக்கும் பொழுது உணர்வின் வழியில் இல்லை இது கனவில்லை கண்முன்னே இருக்கும் நபர் உண்மை நான் அவருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை என்றும் உணர்ந்தேன்.
"கனவில்லை நண்பனே நீ காண்பதும் கனவில்லை நான் சொல்வதும் மாயமில்லை!" தாடியை நீவிவிட்டுக்கொண்டே அந்த நபர் சிரிக்க எனக்கு உள்ளே பகபகவென்று எரிந்தது. இது சாத்தியமாயிருக்க நியாயமில்லை அந்த நபர் இதையும் ஏதோ அதிர்ஷ்டத்தில் சொல்லியதாகத்தான் நான் நினைத்தேன். அவ்வளவு எளிதாய் என் தத்துவ நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்ட கோட்டையை தகர்த்துவிட முடியவில்லை. ஜோசியம் ஜாதகம் கைரேகை பார்ப்பது எல்லாம் மூடநம்பிக்கை தான் அது உண்மையாகயிருக்க வாய்ப்பேயில்லை என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.
"உன் கைரேகை படி இருபது வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்ப, உன் இருபத்தொன்னாவது பிறந்தநாளின் பொழுது நீ வாழ்க்கையில் எதையெதையெல்லாம் அடையணும்னு நினைச்சிருந்தாயோ அதெல்லாம் உனக்கு கிடைத்திருக்கும். அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலும் உனக்கு இறக்கமேயில்லாமல் ஏற்றம் மட்டுமே இருந்திருக்கும். நீ இன்வெஸ்ட் செய்த இடங்களில் எல்லாம் உனக்கு லாபமே கிடைத்திருக்கும், ஆகமொத்தத்தில் கடைசி பத்துவருடங்களில் நீ அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைத்திருக்கும்."
சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார், என்னவோ என் கண்களில் இருந்து அடுத்த உண்மைகளைக் கொண்டுவரப்போகிறவராய். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை, நான் நினைத்தேன் என் நண்பர்கள் தான் என்னுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று. என் நாத்தீக வாதத்தை எதிர்க்கமுடியாமல் என் நண்பர்கள் பர்ஸனல் இன்ஃபர்மேஷன்களைக் கொடுத்து இந்த சாமியார்களைச் செட்டப் செய்திருப்பார்கள் என்று. இதுவரை அந்த சாமியார் சொன்ன விஷயங்கள் முழுவதுமே என்னைப் பற்றி கொஞ்சம் நன்றாய்த் தெரிந்த நபர்கள் கொடுத்திருக்கக்கூடியவை தான். என் சந்தேகம் வழுக்க நான் கேள்வியை கொஞ்சம் கடினமாக்கினேன்.
"சரி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள், என் வாழ்க்கையிலேயே ஒருதடவை தான் நான் காதலித்திருக்கிறேன். அது எப்ப? என் காதல் என்னாச்சு? யார் அந்த பொண்ணு?"
பதின்மைத்தின் தொடக்கத்தில் நான் செய்த காதலைப் பற்றி தெரிந்தவர்கள் ரொம்பவும் குறைவே, என் குடும்பத்தினர் தவிர்த்து ஒன்றிரண்டு பள்ளி நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். பார்ப்போம் இந்த போலிச் சாமியார் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று நினைத்தேன்.
"தம்பி உன் கண்களைக் கூட என்னால் படிக்கமுடியும் நீ உன் நண்பர்களைச் சந்தேகிக்கிறாய் அப்படியே என் திறமையையும் சரி ஒரு நிமிடம் பொறு!" என் கைகளை ஊன்றிக் கவனித்தவர், ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து கணக்குப் போடத்துவங்கினார்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த நோட்டில் கடைசியாய் இரண்டு புள்ளிகள் வைப்பது மட்டும் எனக்குப் புரிந்தது. சட்டென்று நிமிர்ந்தவர்,
"நீ சொல்ற காதல் நடந்தப்ப உனக்கு 18 வயது நீ பன்னிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தாய், அந்தப் பெண் எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். உன் காதல் நிறைவேறாத ஒன்றாகயிருந்திருக்க வேண்டும், அதைக் காதல் என்று கூட நீதான் சொல்கிறாய் நான் அல்ல. என் கணக்கின் படி பார்த்தால் அவளது பெயர் Mல் தொடங்க வேண்டும். பெரியதாக இல்லாமல் சுருக்கமான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். என்னுடைய ஊகத்தின் படி அவள் பெயர் மீனாவோ இல்லை மீனாக்ஷியோ! சரியா?"
ஏறக்குறைய நான் மயக்கம் போட்டுவிடும் நிலைமைக்கு வந்துவிட்டேன். அவள் பெயர் மீனாதான் பெயர் அளவிற்குத் தெரிந்தவர்கள் என் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை விசாரித்திருந்தால் நிச்சயம் என்னிடம் சொல்லியிருப்பார்கள் அப்படியென்றால் இந்தச் சாமியார் போலியல்ல என்று உணர்ந்தேன்.
"என் கைரேகையை வைத்து இவ்வளவு விஷயம் சொல்லமுடியுமா?"
"உன்னுடைய ஏழு பிறவிகளையும் சொல்லமுடியும் உன் கைரேகையை வைத்து! அந்த அளவிற்கு இந்த வித்தையை அறிந்தவர்கள் தற்சமயம் மிகமிகக் குறைவு. அதன் காரணமாகவே இருக்கும் சிலரையும் மக்கள் போலியானவர்கள் என்று நம்பும்படியாகிவிடுகிறது."
"சரி இத்தனை திறமையுள்ள நீங்கள் என்னிடம் இதைச் சொல்ல நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன? என்னை நாத்தீகனிலிருந்து ஆத்தீகனாக்குவது தான் ஒரே காரணமா?"
"இல்லை யாரையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக்குவது என் வேலையல்ல, முடியக்கூடியதுமல்ல அது. சொல்லப்போனால் எதையும் சந்தேகிக்காமல் ஏற்றுக்கொள்வது சரியான முறையல்ல. அதனால் தான் நாத்தீகனாயிருந்து எல்லாவற்றையும் கேள்விகேட்டு கடைசியில் பதில் கிடைத்து ஆத்தீகனானவர்களுக்கு உலகின் ரகசியங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆத்தீகனாயிருப்பவர்களை விடவும் எளிதில் தெரியும்! நீ கேட்டாயே எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று, நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்னால் இல்லை, நமக்கு எல்லாம் மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறதே அதனால். இந்தத் தந்திரங்களைப் பயன்படுத்தி உன்னை பரம்பொருளை நம்பவைப்பது என்பதே கூட எனக்கு ஒவ்வாத ஒரு காரியம் தான். ஆனால் இது இப்படி இப்பொழுது நடந்தே ஆகவேண்டும் நடக்கிறது!"
கண்களை மூடி கடவுளிடம் பேசுவதைப்போல் தலைநிமிர்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தச் சாமியார். நான் எனக்கு நடக்கும் எதையும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அவரையே பார்த்தபடி நான் இருந்தேன்.
"உன் வாழ்க்கையில் எத்தனை முறை எத்தனை பேரைக் கேட்டிருப்பார் நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா என்று? இன்று உனக்கு நான் காண்பிக்கிறேன் கண்களை மூடு! உன் மூளையை மட்டும் திறந்து வைத்துக் கொள்!"
சொன்னவர் மெதுவாக என் கண்களை மூடி வரப்போவது அனுபவிக்கத் தயாரானேன். அவருடைய கைகள் என் தலையில் ஆசிர்வாதம் அளிப்பதைப் போல் தொட, எனக்குள் ஒரு உள்ளொளி பரவியது, உடம்பெல்லாம் ஒரு அதிர்வு, யாரோ என்னை ஆட்கொள்வதைப் போன்ற உணர்வு தூரத்தில் ஒரு ஒளி அதுவரை இருண்மையாக இருந்த என் மனதின் வெளிச்சமாய் இறைவன் பரவுவதை உணர முடிந்தது. ஆஹா எவ்வளவு முட்டாள்த்தனமாயிருந்துவிட்டோம்! கடவுளே! சரி இதுவும் கூட நமக்கான ஒரு பயிற்சிதான். என் கைகள் நானாகவே உணராமல் அந்த உள்ளொளியை நோக்கி கரம் குவித்தது. மெதுவாய் அந்த அதிர்வு குறைந்து மனம் நிறைந்ததைப் போலிருந்தது. நான் மெதுவாகக் கண்களைத் திறந்தேன்.
ஷிட் ஐம்பது அறுபது நபர்கள் என்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள், நான்கைந்து காமெராக்கள் என்னைச் சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தன. அந்தச் சாமியார் என்னை நெருங்கி வந்து, "சார் நாங்க Q TVல் இருந்து வருகிறோம், Just for laughs gags நிகழ்ச்சிக்காக. உங்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஒரு டிடெக்டிவ் நிறுவனம் வைத்து சேகரித்தோம், கடைசியா நீங்க ஃபீல் பண்ணினது ஒரு மைல்ட் ஷாக் அவ்வளவே!" என்று சொல்ல நான் முகம் முழுவதும் வழிவதைத் துடைக்கமுடியாமல் அப்படியே நின்றேன்.
Popular Posts
-
இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்குமாயிருக்கும். அத்தனை எழுதுவதில்லை தற்சமயங்களில் என்பதைப் போல் அத்தனை வாசிப்...
-
பொன்னியின் செல்வன் குந்தவை - வந்தியத்தேவனுக்குப் பிறகு நான் மிகவும் விருப்பம் காட்டிய அடுத்த காதல் ஜோடி ஜார்ஜினா - சத்தியநாராயணாகத்தான் இர...
-
இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கே...