In நாத்தீகம்

நாகார்ஜுனனின் அரசியல்

ஒரு நபர் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் நேரடி அனுபவத்தை விடவும் எழுத்தின் வழி தீர்க்கமாக பதிந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன். எனக்கு நாகார்ஜுனன் அறிமுகமானது அத்தனை நல்லவிதமாய் இல்லைஜெயமோகனின் இந்த கோணங்கியைப் பற்றிய பதிவில் தான் எனக்கு நாகார்ஜுனனின் அறிமுகம் கிடைத்தது. 'பின் தொடரும் நிழலின் குரல்' பற்றிப் பேசும் பொழுதெல்லாம் சொல்லும் 'ரஷ்ய வரலாறு' அப்படிங்கிற ஒரு ஐட்டத்தை தனிப்பட்ட முறையில் எங்கையாவது படிச்சிட்டு பின்னாடி இந்தப் புத்தகத்தை கையில் எடுங்க என்ற அறிவுரையை எனக்கு நானே திட்டத்தில் செய்து கொள்ளாததன் பிரச்சனை நாகார்ஜுனனைப் பற்றி மனதில் பதிந்து போன இமேஜ். இதில் கொடுமை என்னான்னா, இவரை விடவும் 'அசிங்கப் படுத்தியிருக்கும்' கோணங்கியைப் பற்றி ஜெ.மோவின் பதிவு படிப்பதற்கு முன்னமே கொஞ்சம் தெரியுமென்பதால் ஜெமோவின் கோணங்கி இமேஜ் அத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தலை; ஜெயமோகனின் வயித்தெரிச்சலை பற்றி ஏற்கனவே மனதில் உருவாகியிருக்கும் கோட்டோவியத்தில் இன்னொரு கோடொன்று அதிகமானதைத் தவிர்த்து. நல்ல வேளை 'நவீன தமிழ் இலக்கியம்' எனக்கு ஜெயமோகனின் அறிமுகத்தில் இருந்து தொடங்கவில்லை என்று எப்பொழுதும் நினைத்துக் கொள்வதுண்டு.

என் அரசியலுடன் 95% பொருந்தக்கூடிய அரசியல் கொண்டவராயிருந்தாலும், 'கடவுள் நம்பிக்கை' என்கிற விஷயம் தான் என்னை அந்த நபரின் பேரில் ஈர்க்கவோ விலக்கவோ செய்கிறது. பாலாவினைப் போல ஜெயமோகனும் என் வயதில் ஒரு பகுதியை காவு வாங்காமல் போனதற்கு ஒரே காரணம் அதே பாலகுமாரன் தான், அங்கே பட்டது ஜெயமோகன் விஷயத்தில் கவனமாக இருக்க வைத்தது. இல்லையென்றால் எனக்கு ஜெயமோகனின் எழுத்து பிடித்திருந்த வேகத்திற்கு 'தோ கிடைச்சிட்டார் நம்ம குரு' என்று தான் ஆகியிருப்பேன், தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் தான். இன்றைக்கும் ஜெயமோகனின் எழுத்தின் மீது அதீத பிரியம் உண்டு ஆனால் அவர் சொல்லும் எல்லாவற்றிற்கும் மற்றொரு பக்கம் (நிச்சயமாக) இருக்கும் என்ற நம்பிக்கையுடன். வாழைப் பழத்தின் மேல் ஊசியேற்றுவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஜெமோ அதைச் செய்வதில் வெகு சாமர்த்தியசாலி, என்னிடம் இருந்த நாகார்ஜுனனின் பிம்பம் அதற்கு மிக நிச்சயமான உதாரணம்.

என் ignoranceன் விளிம்பிற்குள் மாட்டிக் கொண்டிருந்த நாகார்ஜுனனுடைய பதிவுகளை எப்படியோ(விழிகளின் கதை வழி?!) படிக்கத் தொடங்க, என் இயல்பான பழக்கமான தொடர்ச்சியான மேய்தலில் இரண்டொரு பதிவிலேயே வேறு ஒரு இமேஜை கொண்டு வந்திருந்தார். தொடர்ச்சியான பதிவு வாசிப்பின் வழி, நான் தேடிக் கொண்டிருக்கும் கொண்டிருந்த அறிமுகம் எனக்கு கிடைக்கத் தொடங்கியது. அவருடைய பதிவில் ஒரு மறுமொழி போட்டிருப்பேனாயிருக்கும், நிறைய பதிவுகள் படித்திருந்தேன். ஒரு இரவு 10 மணி போல் அவர் பதிவில் நுழைந்து காலை நான்கு நான்கரை மணிக்கு வெளியேறிய நினைவெல்லாம் உண்டு. நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டிய பதிவுகள், light reading வகையைச் சார்ந்தவை அல்ல. தொடர்ச்சியான அவர் பதிவு மேயல்களின் வழி, அவருடைய அரசியலானது நான் இப்பொழுது என்னுடையது என்று நம்பிக்கொண்டிருக்கும் அரசியலை ஒத்ததாகவே இருக்கிறது இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் காலம் வரையிலும்.

ஃபூக்கோ பற்றிய, அல்துஸ்ஸார் பற்றிய பதிவுகள் வேண்டுமானால் உதாரணத்திற்குச் சொல்லலாம். ஒரு நிறைவான பணியை அவர் தமிழிணையத்திற்குச் செய்து கொண்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். அவர் சில சமயம் வாசகர் எண்ணிக்கை பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் பின்னூட்டம் போடலாம் என்று கைகள் அரிப்பதுண்டு இதுவரை பொறுத்துக் கொண்டேயிருந்திருக்கிறேன். தமிழிணையத்தில் நிறைய நன்றாய் எழுதும் மக்கள் இந்த வாசகர் எண்ணிக்கை, பின்னூட்டம் போன்ற அரசியல்களில் தலை கால்களை இட்டு நகர்ந்திருப்பதை அறிவேன். வளர்மதியிடம் நான் எதிர்பார்த்த விஷயங்களை நாகார்ஜுனன் செய்துவருகிறார், வலையுலக மொக்கை அரசியல்களைத் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்துவிடுங்கள் என்று வளர்மதியிடம் சொல்லாத நாளில்லை, நாகார்ஜுனன் செய்து வருகிறார். இதையெல்லாம் விட பெரிய அரசியலைச் சந்தித்தவர் என்பதால் இது சாத்தியமாகியிருக்கலாம். இணையத்தில் படிக்கத் தொடங்கிய பின்னர் என் கொள்கைகள் என்று வைத்திருந்தவைகளில் பல சுக்கு நூறாகி நொறுங்கியிருக்கிறது, சிலவற்றின் கனம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. நொறுங்கியதில் முக்கியமானவை இந்திய தேசம், இந்து மதம், ஜாதி வித்தியாசம் சம்மந்தப்பட்டவை இன்று முற்றிலும் காணாமல் போய்விட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் முன்பிருந்த அளவுகளில் நிச்சயம் இல்லை என்று சொல்வேன்.

அதற்கு முக்கியக் காரணம் கடவுள் நம்பிக்கையின்மை என்பது தான். அதுதான் தொடக்கப்புள்ளி, அங்கிருந்து தான் உடையத் தொடங்கின மேற்சொன்னவை அனைத்தும். கடவுள் நம்பிக்கை உடையவர்கள் உடன் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் என்னால் கொள்கை அளவில் அவர்கள் சொல்லும் அனைத்திலும் கடவுள் நம்பிக்கை என்ற கடைசி இழை தொங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணர முடிகிறது. கடைசி வரை சுந்தர ராமசாமி கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தார் என்று படிக்க நேரும் பொழுது அவருடைய அரசியல் தாண்டியும் அவரை தொடர முடிகிறது. ஒரு பழக்கத்தைக் கொண்டு ஒருவரை அறியும் முயற்சி படு தோல்வியில் முடியலாம், உதாரணம் ஹிட்லர்; தீவிரமான வெஜிடேரியன். ஆனால் கடவுள் நம்பிக்கையின்மை என்பது அப்படியல்ல என்றே நினைக்கிறேன், நீங்கள் வெளிக்காக நடிக்காமல் உண்மையில் நாத்தீகவாதியாக இருந்தால் நீங்கள் வைத்திருக்கும் எந்தக் கொள்கையையும் கேள்வி கேட்க முடியும். கடவுள் நம்பிக்கையின்மை முதற்கொண்டு, அதனால் தொடர்ச்சியாக நீங்கள் செய்யும் தவறுகளை உணர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

இதைப்பற்றி என் நண்பர்களுடன் பேசும் அத்தனை சந்தர்ப்பங்களிலும் என் பெண்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளும் பின்னூட்டங்களும் சண்டைகளும் நினைவுபடுத்தப்படும். உன் கடவுள் நம்பிக்கையின்மை, பெண்கள் எழுதுவதை எல்லாம்(பெண்ணியத்தை அல்ல) எதிர்ப்பதை தவறென்று சொல்லவில்லையா என்று கேட்கப்படும். நான் கடைசி வரை இதைத்தான் சொல்லி வந்திருக்கிறேன், பெண்ணியம் என்கிற பெயரில் இங்கே பதிவில் அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு பதில் சொல்வது தவறென்று எனக்கு இன்னமும் படவில்லை. பெண் சுதந்திரம் பெண்ணியம் என்பது என் அளவில் வித்தியாசமானவையாக இன்று இருக்கின்றன, நாளை தொடர்ச்சியான என் வாசிப்பினால் அது மாற்றமடையலாம். அன்று நான் முன்பு எழுதியவை எதுவும் தவறானவை என்ற எண்ணம் எனக்கு வருமென்றால் அதை வெளிச்சொல்வதில் இருக்கும் தயக்கத்தை கடவுள் நம்பிக்கையின்மை போக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சிறுகதை தேன்கூடு

அவளை அவன் கண்விடல்

அன்று ஒரு அதிர்ஷ்டமான நாள் என்பதற்கான அறிகுறி காலையிலேர்ந்து தெரியவில்லை, பாட்டரி தீர்ந்திருந்ததால் நின்று போன அலாரம் க்ளாக், தலைநகரின் டிசம்பர் மாதக் குளிரில் குளிக்க அயர்ன் ராட் போட்டுவிட்டு ஞாபகமறதியில் சுவிட்சை அணைக்காமல் சூடுபார்க்கிறேன் பேர்வழி என்று கையில் நறுக்கென்று வாங்கிய மின்சாரக்கடி, இனிமேல் ஆபிஸ் போனாலும் அரைநாள் விடுப்புதான் எனத் தெரிந்தாலும் பார்க்கவேண்டிய வேலை பாக்கிக்காக, அவசரஅவசரமாக எடுத்த பல்ஸர் பெட்ரோல் இல்லாமல் பங்கிற்கு 100 மீட்டர் முன்பே நின்றுவிட நான் நிச்சயமாய் நினைக்கவில்லை இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்குமென்று. எல்லாம் மாறியது ஒரு நொடியில்.

வெள்ளை சுகிதாரில், குளிருக்கு இதமாய் கருப்புநிற ஸ்வெட்டர் அணிந்த பஞ்சாப் கோதுமை நிற பிகரொன்று ரோட்டோரத்தில் லிப்ட் கேட்க, நான் யோசித்துப் பார்த்தேன் டெல்லி டிபார்ட்மெண்ட் ஆப் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட்டில் வேலைக்குச் சேர்ந்த இந்த இரண்டு வருடத்தில் எத்தனை நாட்கள் கனவு கண்டிருப்பேன் இதுபோல் பிகரொன்றை பல்ஸரில் ஏற்றிக்கொண்டு வீதிஉலா வரவேண்டும் என்று, நான் விட்ட பெருமூச்சை அவள் உணர்ந்திருப்பதற்கானச் சாத்தியக்கூறுகள் குறைவுதான். அவளருகில் வண்டியை நிறுத்தினேன் அவள் எங்கே போகவேண்டும் என்கிறாளோ அங்கே போவதற்கான முடிவை எடுத்தவனாய், ஹெல்மெட்டைக் கழட்டினேன்.

“சவுத்எக்ஸ்-பே டிராப் கர்ஸக்தா க்யா? தோடாஸா அர்ஜண்ட் காம் ஹை. பஸ் நை மில்ர” அவள் கெஞ்சும் பாணியில் கேட்க, “நோ ப்ராப்ளம்” என்று சொல்லாமல் தோளைக் குலுக்கிக் காட்டியவனாய் மீண்டும் ஹெல்மட் தலைக்கு நான் மாற்றும் நேரத்தில் பட்சி வண்டியில் கெத்தாய் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து பிடிமானத்திற்காய் தோளில் கை வைத்தாள். சாதாரணமான விஷயமாக அவள் செய்த இதை சாதாரணமா நான் எடுத்துக்கொள்ள நிறைய நேரம் பிடித்தது. நான் அணிந்திருந்த ஜெர்கின், ஆஃப் ஸ்வெட்டர், சட்டை, பனியன் இதையெல்லாம் தாண்டி அவள் உள்ளங்கையின் வெப்பம் உடலைத்தாக்குவதாய்ப் பட்டதை உள்மனம் மட்டும் மாயை என்று சொல்லியது. அதை அடக்கி இன்ஜினை விரட்டினேன்.

கிட்டத்தட்ட ஐஐடி டெல்லி, ஹவுஸ்காஸ் எல்லாம் நொடியில் தோன்றி மறைந்து அய்ம்ஸை நெருங்கும் சமயத்தில் பக்கத்தில் வந்து கொண்டிருந்த மாருதி ஜிப்ஸி ஒன்று இன்டிகேட்டர் சிக்னல் ஒன்றும் கொடுக்காமல் பட்டென்று வலதுபக்கம் திரும்ப டிஸ்க் பிரேக்கையெல்லாம் தாண்டியும் என் வண்டி குடைசாய்ந்தது.

“குத்தே கம்மினே…” நான் திட்டிக் கொண்டே முதலில் அந்த கார்க்காரனை அடிக்கக் கிளம்பினேன், பின்னர் தான் ஞாபகம் வந்தது பின்னால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த தேவதையின் நினைவு. அவளும் கீழே விழுந்திருந்தாள் முழுங்கையில் நல்லஅடி நெற்றியில் லேசாய்ச் சிராய்ப்பு. அந்த நிமிடத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்த எனக்கு அவள் பின்பக்கமாய் விழுந்திருக்க வேண்டுமென்பது புரிந்தது. பின்பக்கத்தில் நல்ல அடி பட்டிருக்க வாய்ப்புண்டு. சமீபத்தில் சிக்னல் இருந்ததால் கொஞ்சம் ஸ்லோவாய் வந்ததால் பெரிய காயம் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் பெண்ணல்லவா கையைக் கொடுத்து தூக்கிவிட்டேன்.

“ஸாரிஜி, உஸ்கா கல்தி ஹை.” மன்னிப்பு கேட்கும் மனோபாவத்தில் நான் தாமதித்த சில நிமிடங்களில் ஜிப்ஸிக்காரன் எஸ்க்கேப் ஆகியிருந்தான்.

முழங்கையில் இருந்து வழிந்த இரத்தத்தை துடைக்க ஜீன்ஸிலிருந்து கர்சீப்பை எடுத்துக்கொடுத்தேன். “தேங்க்ஸ்” சொல்லி வாங்கிக் கொண்டவளை, எதிர்பக்கம் இருந்த எய்ம்ஸிற்கு கூட்டிக்கொண்டு வந்தேன். அடுத்த அரைமணிநேரத்தில் டிரஸ்ஸிங் முடிந்து கையிலும், தலையில் கட்டுப் போட்டிருந்த வாக்கில் கேன்டீனில் உட்கார்ந்து டீ ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“நீங்க தமிழா?”

எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, அவள் தமிழில் பேசியதைக் கேட்டதும்.

“நீங்க தமிழா? உங்களுக்கு எப்டி தெரியும் நான் தமிழ்னு?”

“நீங்க அந்த மாருதிக்காரனை திட்டினீங்க தமிழில்.”

ஆஹா திட்டினீங்களா, அவனைக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தேன். நல்ல தமிழாவா இருக்கும் எல்லாம் மோசமானத் தமிழ் தான். ஒரு பிகரைக் கூட்டிக்கொண்டு போகும் நல்ல சந்தர்ப்பத்தில் இப்படி ஆக்ஸிடெண்ட் பண்ணி மானத்தை வாங்கிட்டானேன்னு நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளால் திட்டியிருந்தேன். அதுவரை கண்களை மட்டும் பார்த்து பேசிக் கொண்டிருந்தவனுக்கு அதன் பின் கண்களை பார்க்க முடியாமல் போனது. திரும்பத்திரும்ப என்ன கெட்டவார்த்தை ப்ரயோகித்தேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“எங்க அப்பா ஒரு பஞ்சாபி, அம்மா தமிழ்க்காரங்க அதனால எனக்குத் தமிழ் தெரியும்.” அவள் சொல்ல,

“நீங்க பஞ்சாபியாத்தான் இருப்பீங்கன்னு நினைச்சேன்…” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டேன். என்னவோ புரிந்தவளாய்ச் சிரித்தவள் “எப்டி அப்டி நினைச்சீங்க…” அவள் கேட்டதற்கு பதிலெதுவும் சொல்லாமல் தரையையும் கையில் இருந்த டீ கப்பையயும் பார்த்துக் கொண்டிருந்தவன், ஏதோ நினைவுக்கு வந்தவனாய்,

“முக்கியமான வேலை இருக்கிறா சொன்னீங்க. இல்லையா?”

அப்படியும் ஈர்க்கும் அந்தக் கண்களைப் பார்ப்பதை தவிர்க்கமுடியாமல் பார்த்தவனுக்கு தெரிந்தது அவளிடம் இருந்த தமிழ் அழகுகள். இதை எப்படி அப்பொழுது கவனிக்காமல் போனேன் என்று நினைத்தேன். பின்னர், பார்க்கவேண்டியதைப் பார்க்காமல் வேற எதையாவது பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் வந்தது, பார்த்ததை வைத்து மாநிலத்தை மட்டுமல்ல எதையுமே கணிக்க முடியாதென்று நினைத்தவனாய் மெலிதாய் சிரித்தேன்.

என் மனதில் ஓடுவதை படிப்பவளைப் போல் கண்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள்,

“என்ன சிரிக்கிறீங்க?” கேட்க,

“இல்ல அந்த மாருதிக்காரனுக்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கணும்னு நினைத்தேன் சிரிப்பு வந்தது.” சொல்லிவிட்டு சிரித்தேன்.

கண்களை முடிந்த அளவிற்கு விரித்து, அதன் ஓரத்தில் ஒரு கேள்விக்குறியை நிறுத்தியவளுக்கு பதிலாய்,

“இல்லாவிட்டால் இந்நேரம் உங்களை சவுத்எக்ஸில் இறக்கி விட்டுட்டு ஆபிஸ் போயிருப்பேன். உங்கக்கூட பேசிக்கிட்டிருக்கிற இந்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்குமா அதான்.”

தாஸ் நீ எங்கேயோ போய்ட்டடா, நீதானா நீதானா இப்படி. மனதின் உள்ளிருந்து எனக்கு மட்டும் காதுகிழியும் அளவிற்கு சப்தமாய்க் கேட்கும் சப்தத்தை உதறித்தள்ளியவனாய், அவளுடைய மறுமொழியை அறிந்து கொள்ளும் ஆவலில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அழகாய் உதடு பிரிக்காமல் சிரித்தவள்.

“நல்லா பேசுறீங்க, தமிழ்ல பேசிக் கேட்டு ரொம்ப நாள் ஆகுது. அதுவும் உங்கள மாதிரி வேடிக்கையா பேசிக்கேட்டு ரொம்ப வருஷம் ஆகுது.” சிரித்தாள்.

சிறிது நேரம் இப்படி வேடிக்கையாய் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவள் கேட்கப்போய்தான் நினைவில் வந்தது வேலைக்கு போகாமல் இங்கே உட்கார்ந்திருந்தது, என்னதான் இவ்வளவெல்லாம் பேசினாலும் மொபைல் நம்பர் கேட்க தைரியமில்லாமல் குட்பையுடன் முடிந்தது அந்தச் சந்திப்பு.

ஒட்டுமொத்த என்னுடைய ஐந்தாண்டு வெளிமாநில அனுபவத்தில் பெண்களுடன் அதிகப்படியாக பழகியது அதுதான் முதல் முறையாக இருக்கும். எப்படியிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் பிரியப்போகிறவள் தானே என நினைத்ததால் என்னுடைய ஈகோ கொஞ்சம் உறங்கியிருந்த சமயத்தில் நடந்த சந்திப்பில் முழுதாய் பறிகொடுத்துவிட்டதாய் உணர்ந்தேன் ஏதோ ஒன்றை.

இது நடந்த இரண்டாவது நாளில் மற்றொரு அதிர்ஷ்டமான நேரத்தில் நேரு ப்ளேஸின், இருபத்தைந்தடுக்கு பில்டிங்கின் லிப்ட் ஒன்றில் அவளைச் சந்தித்தேன், அதுவும் தனியாய் நானும் அவளும் மட்டும். ஆச்சர்யங்கள் எப்பொழுதும் நடப்பதில்லைதான் ஆனால் எனக்கு நடந்தது. நான் மனதின் ஓரத்தில் நினைத்ததை தேவர்கள் கேட்டு ‘ததாஸ்து’ சொல்லியிருக்க வேண்டும் லிப்ட் அரைகுறையாய் நின்றது நடுவில்.

என்னைப் பார்த்து அவள் அடைந்த ஆச்சர்யத்தை அவள் கண்கள் படம் போட்டுக் காட்டின.

“வாட் அ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ், இன்னிக்கு காலையில் தான் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். அன்னிக்கு உங்க போன் நம்பர் கூட வாங்கலைன்னு அதற்குப் பிறகு தான் ஞாபகம் வந்தது.”

அவள் சொல்லச்சொல்ல எனக்கு தேவர்கள் பூமாறி பொழிவதாகத் தோன்றியது, அதன் பிறகு நடந்ததாகத்தான் இருக்க வேண்டும் அந்த ததாஸ்து சம்பவம். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை, அவளும் கொஞ்சம் கூட பயப்படாமல்,

“இங்க இப்படித்தான் அடிக்கடி லிப்ட் பெயிலியர் ஆயிரும். அஞ்சு பத்து நிமிஷத்தில் சரியாயிரும்.”

என்னவோ நான் அது சரியாக வேண்டும் என்று கவலைப்படுவதாய் நினைத்து. அதைப் பற்றிய ப்ரக்ஞையே இல்லாமல் நான் இரண்டு நாளாக கனவில் அவளுடன் பேசியதில் நினைவாக்க எந்த ஒன்று நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

லிப்ட் கடகடவென சப்தத்துடன், மெதுவாய் ஒருமுறை ஆட அதுவரை சாதாரணமாய் எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தவள் பயந்துபோய் அருகில் வந்து ஒட்டி நின்றுகொண்டாள். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை, ஆனால் இருவருக்குமே பேச்சு வரவில்லை, சிறிது நேரத்தில் கரெண்ட் கட்டாகிப் போய் இன்னுமொறுமுறை லிப்ட் ஆடத்தொடங்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்தவள் பயந்துபோய் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள், அந்தப் பயங்கரமான சூழ்நிலையிலும் அவள் போட்டுக்கொண்டிருந்த செண்டின் வாசம் என்னை அலேக்காகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டது. நான் அவளுக்கு தைரியத்தை ஏற்படுத்த நினைப்பவனாக ஒரு கையை அவள் தோளைச் சுற்றிப் போட்டு இறுக்கிப் பிடித்தேன். அப்பொழுது தான் அவளுக்கும் எனக்குமான உயர வித்தியாசம் தெரியவந்தது அப்படியே எங்கள் இருவருக்குமான நிறங்களின் வித்தியாசமும். அன்று அவள் ஸ்லீங்லெஸ் ஜாக்கெட் அணிந்து புடவை கட்டியிருந்தாள்.

“ப்ரார்த்தனா பயப்படாதீங்க, இதே பில்டிங்கில் நம்ம பிரண்டொருத்தன் இருக்கான் அவனைப் பார்க்கிறதுக்காகத்தான் வந்தேன். ஒரு நிமிஷம் போன் செய்து அவனைப் பிடிக்கிறேன்.”

தோள்களில் இருந்து கைகளை எடுக்காமல் இடது கையாலேயே மொபைலை எடுக்க துரதிஷ்டிர வசமாக சிக்னல் கிடைக்கப்போய், அவனிடம் நாங்கள் இருக்கும் நிலையை விவரித்து, அவன் வருகைக்காகவும் உதவிக்காகவும் காத்திருந்த சமயங்கள் மிகவும் அழகானவை சொல்லப்போனால் போதையானவை. அவளுடைய அருகாமை என்னுள் பெரும் மாற்றத்தை உருவாக்கியிருந்தது. அருகாமையென்றால் ஒருவருடன் ஒருவர் உரசிக்கொண்டு இருந்ததில் எதையோ ஒன்றை இழந்து கொண்டிருந்தேன் என்பது தெளிவாக விளங்கியது.

ஒருவழியாய் லிப்டை மேலே தூக்கி நாங்கள் வெளியில் வந்ததும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூட வெட்கப்பட்ட நாங்கள் ஒரு மணிநேரத்தில் டெல்லியின் பிரபலமான ஒரு ஹோட்டலில் அருகருகே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

“அட நீங்க ஒன்னுங்க லேப்டாப் ரொம்ப செக்யூர்டா இருக்கணும்னு கவர்மெண்ட் செக்யூர்ட் கீ கான்பிகர் பண்ணிக்கச் சொல்லி இங்க அனுப்பினாங்க. அந்த செட்டப் எல்லாம் முடிச்சி இரண்டு மூணு தடவை யூஸ் பண்ணிப் பார்த்துட்டு வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆய்டுச்சு. ரொம்ப லேட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.”

நான் முதல்முறை அவளைச் சந்தித்த பின் தான் நினைவில் வந்தது அன்று லாப்டாப் என்னிடம் இல்லாதது, டிஆர்டிவோவில் லேப்டாப் கொடுத்ததும் சந்தோஷமாய் வாங்கியதற்கு ஒரே காரணம். இனிமேல் ரோட்டில் சீன் போடலாம் என்றுதான். அன்றைக்கென்று பார்த்து லேப்டாப் கையில் இல்லாததை ஒரு பெரிய குறையாக நினைத்தேன். என்னை அவளிடம் சரியாய் லேப்டாப் அறிமுகம் செய்து வைக்கும் என்று நினைத்தே அந்தப் பேச்சை இழுத்தேன். அப்படியே வேலை செய்தது.

செக்யூர்டு கீயை இன்னொரு முறை சோதனை செய்து பார்ப்பவனைப் போல் ஹோட்டலிலேயே அவளுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்ட அவள் முகம் பிரகாசமடைவதை உணரமுடிந்தது. அவளும் ஆர்வமாய் சில கேள்விகள் கேட்க, அவளுடைய கம்ப்யூட்டர் திறமையை ஆச்சர்யத்துடன் கவனித்தேன். முதல் முறையைப் போலில்லாமல் அவளுடைய பர்ஸனல் விவரங்களை அடுக்கியவள் மறக்காமல் மொபைல் நம்பரை கொடுத்து என்னுடையதை பெற்றுக்கொண்டு சென்ற ஒரு வாரத்தில் எல்லாம் எங்களுக்கிடையேயான இடைவெளி குறைந்திருந்தது, எவ்வளவென்றால் ஆடையின் அவசியம் எங்களுக்கிடையில் இல்லாமல் போகுமளவிற்கு.

இது எனக்கும் ஆச்சர்யமான விஷயம் தான். டெல்லி போன்ற ஒரு சிட்டிக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களாக பிரம்மச்சரியத்தையும் ஆஞ்சநேயரையும் சைட் அடிப்பது என்ற ஒரே ஒரு எக்ஸம்ஷனுடன் காப்பாற்றி வரும் நான் இப்படி ஆனது வேதனையுடன் சேர்த்து சந்தோஷத்தையும் அளித்தது. யாரிடமோ எதையோ ப்ரூவ் பண்ண நினைத்தவன் வெற்றுடம்புகளின் வெம்மைப் பரிமாற்றத்தில் அதை சாதித்ததாய் உணர்ந்தேன். ஆனால் உள்மனம் யாரோ ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோரை ஏமாற்றுவதாய் உளறிக்கொட்ட, ப்ரார்த்தனா ஒன்றும் சின்னப் பெண் கிடையாது அவள் செய்வது எத்தகையது என்பதைப் பற்றி அவளுக்குத் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.

அத்தனை நாள் பிரம்மாண்டமாய் தோற்றமளித்த அவள் குறிப்பாய் அவள் உடல் பற்றிய எண்ணங்கள் நிர்வாணத்தில் கரைந்து கொண்டிருந்தன. அத்தனை நெறுக்கும் பயத்தையும் அவளின் மீது பச்சோதாபத்தையும் ஏற்படுத்தியது. அசந்து தூங்கிக் கொண்டிருந்தவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்க இன்டலிஜென்ஸ் பீரோ ஏஜன்டுகள் வந்து எழுப்பி “இராணுவ சம்மந்தமான தகவல்களை வெளியானதற்காக” கைது செய்வதாய் சொன்னதும் தான் ஒரு வாரம் நடந்தவைகளை திருப்பிப் பார்த்தேன் ஒரு திருத்தப்பட்ட குறளுடன்.

இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து
“அவளை” அவன் கண்விடல்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In Only ஜல்லிஸ்

குத்துங்க எசமான் குத்துங்க

குத்துங்க எசமான் குத்துங்க, இந்த சாஃப்ட்வேர் வேலை செய்யறவனுங்களே இப்படித்தான். குத்தங்க எசமான் என்கிற அளவில் சாஃப்ட்வேரில் வேலை செய்பவர்களையெல்லாம் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தவர்கள் என்கிற ரேஞ்சில் அடிக்கடி போட்டு கும்முவது தெரிந்தது தான், அறிவுரை சொல்வதற்கு தகுதி என்கிற பெயரில் ஒன்றும் தேவையில்லை. சிலருக்கு வயதாகிவிட்டதே தகுதி இன்னும் சிலருக்கு 'வேலை விட்டு தூக்கப்பட்ட இரண்டு பேருக்கு' வேலை வாங்கித் தந்ததே தகுதி.

தகுதியைப் பற்றி பேச ஆரம்பித்தால், "கற்றதனால் ஆன பயனென்ன" கருமாந்திரமெல்லாம் நினைவிற்கு வந்து தொலைப்பதால் அப்படியே எஸ்கேப் ஆகிவிடுகிறேன். எழுதி இவன் sexual harassment செய்கிறான் என்று கையெழுத்து வேட்டை தொடங்கிவிடுவார்களோ என்ற பயம். தனக்கு தெரிந்த ஆட்களுக்கெல்லாம் 'மெயில்' அனுப்பி உடனே உதவவும் என்று சொல்லி முடிக்காதவேளையில் எங்கிருந்தோ குதித்து தழல்(:)) எரிக்கும் அன்பர்களைக்கண்டும் பயம் என்று ஆரம்பித்தால் தெனாலி கமலஹாசனைவிடவும் அதிகமாக பயப்படும் விஷயங்களை லிஸ்ட் போட்டு தாளாது.

"மண் புயல் தணிந்துவிட்டது
ஆனால் போர் தொடர்கிறது - இடம் பெயர்கிறது" - என்ற தருமு அரூப் சிவராம்(பிரமிள்) கவிதை தான் நினைவிற்கு வருகிறது.

இன்னும் சுலபமாக,

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா என்ற வரிகளில் சிச்சுவேஷனை விளக்கிவிடலாம்.

எங்கே இல்லை பிரச்சனை எதில் இல்லை குறை, குறை இல்லாத ஒன்றிருக்குமென்றால் அது இல்லாத இறையாகத்தான் இருக்க முடியும். அமேரிக்காவில் நிதி நெருக்கடி வந்ததோ இல்லையோ இங்கே பிங்க் சிலிப் பற்றியும் வேலையை விட்டு நிறுத்துவதைப் பற்றியும் நாளொரு விதமாய்ப் பதிவுகள், அறிவுரைகள் அள்ளி வீசுகிறார்கள். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எங்கே இல்லை பிரச்சனை?

வண்ணநிலவனின் கவிதையோடு முடித்துக்கொள்கிறேன் வாயில் நல்ல வார்த்தையா வருது.
அவரவர் வானம்
அவரவர்க்கே யானாலும்
அடியாமல் படியாமல்
வசப்பட வழியில்லை.

தண்ணியடிக்காமல், சிகரெட் பிடிக்காமல் ஏன் இன்னும் பொம்பளைப் பழக்கம் இல்லாத சாப்ஃட்வேர் மக்களிற்கு...


PS: முதலில் ஊருக்கு இளைச்சவன் சாஃப்ட்வேர் ஆண்டின்னு எழுதலாம்னு நினைச்சேன், ஏற்கனவே அந்த பெயரில் இன்னும் சில பதிவுகள் இருப்பது அறிந்து கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டுவிட்டேன்.

PS1: இந்த மாதிரி பதிவின் கடைசியில் 'ற்கு...' என்று முடிக்காவிட்டால் இலக்கியவாதின்னு ஒத்துக்க மாட்டாங்களாமே அப்படியா ;)

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சினிமா விமர்சனம் பெண்ணியம்

கபி அல்விதா நா கெஹ்னா, கட்டுடைத்தல், கரண்ஜோஹர் மற்றும் ஜல்லி

கட்டுடைத்தல் அப்படின்னு சொன்னதும் உங்களுக்கெல்லாம் யார் யார் நினைவுக்கு வருவாங்கன்னு தெரியாது எனக்கு ஆசிப் அண்ணாச்சியும் 'நண்பன்' பீர் முகமது அண்ணாச்சியும் தான் நினைவுக்கு வருவாங்க, குஷ்பு மேட்டர் வந்திருந்தப்ப கட்டுடைத்தலை படம் போட்டு விளக்கினவரு ஆசிப்புன்னா, பின்நவீனத்துவ கவிதை எழுதி விளக்கினவரு பீர் முகமது. சுட்டிகள் தேடிப்போட்டு மீண்டும் உதைவாங்க நான் தயாராயில்லை. இணைய உலகில் வலம் வரும் சில பெயர்களுக்காக கதைகளைப் படிக்க ஆரம்பிப்பதுண்டு, இந்தப் பழக்கம் கவிதைக்கு கிடையவே கிடையாது என்ற நிலையிலிருந்து ஒரு அடி பின்வாங்கினேன் என்றால் அது நண்பனின் கவிதை வரிகளுக்காக மட்டும் தான்.

முதலில் இந்தக் கட்டுரையை அல்லது டைரிக்குறிப்பை அல்லது திரை விமரிசனத்தை 'கட்டுடைத்தலும் ஒன்றிரண்டு கரப்பான் பூச்சிகளும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்திருந்தேன், அதுவும் ஒருவாரத்திற்கு முன்பே பலருக்கு நான் எழுத நினைத்த காரணம் தெரிந்திருக்கும். பின்னர் இன்று காலை படம் பார்த்துவிட்டு வந்ததும் 'கட்டுடைத்தலும் சில பக்வாஸ் ஆத்மிக்களும்' என்ற தலைப்பில் தான் எழுத நினைத்தேன். கடைசியில் எழுத உட்காரும் பொழுது அதையும் மாற்றி தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் 'கட்டுடைத்தலும் கரண் ஜோஹரும்' என்ற தலைப்பில் எழுதுகிறேன். என் பல சிறுகதைகளை அதன் ஒருவரி முடிவை நோக்கி கொண்டுசெல்ல முயலாததைப்/இயலாததைப் போல், தலைப்பை தேர்ந்தெடுப்பதிலும் சில காலமாக நான் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகிவருகிறேன்.

உலகம் மாறுகிறது, நான் திருச்சியில் சினிமா பார்த்த நாட்கள் இன்று நினைவில் வந்தன, மாரிஸில் முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க நான் படாதபாடு பட்டிருக்கிறேன். அமர்க்களம் மாரிஸில் ரிலீஸ், நான் காலேஜில் படித்தக் காலம் அது, என்னமோ அஜித் மேல ஒரு கிரேஸ் இருந்தது. சுதந்திர தின ரிலீஸ் என்று நினைக்கினே, மாரிஸ் தியேட்டர் காம்பளக்ஸில் ரசிகர் ஷோ கிடையாது, ஆனால் கிளம்பி வந்து வம்பிழுக்கும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ரௌடிகளை விட்டுவிட்டு எங்களைப் போட்டுக் காச்சியெடுத்தது நினைவில் வந்தது. இங்கே இரவு பன்னிரெண்டு மணிக்கு ஃபேம் சினிமாஸில், இரண்டு நாட்களில் ரிலீஸ் ஆகப்போகும் கரண்ஜோஹரின், கபி அல்விடா நா கெஹனா(Kabhi Alvida Na Kehna - Dont say Good Bye) படத்திற்கு உட்காரும் ஸீட் முதற்கொண்டு இன்டர்நெட்டில் புக்செய்து, கிரெடிட்கார்டை ஸ்வைப்(இன்டர்நெட்டில்-ங்க) செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு போகும் அளவிற்கு முன்னேற்றம்.












முதல் நாள் முதல் ஷோ, அமிதான் பச்சன், ஷாரூக்கான், அபிஷேக்பச்சன், ராணி முகர்ஜி, பிரீத்தி ஜிந்தா என் ஓரளவு இல்லாமல் நன்றாகவே அறிமுகம் ஆன முகங்கள், அப்படித்தான் கரண் ஜோஹரும், குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம் போன்ற நான் பார்த்த மிகச்சில இந்திப்படங்களின் இயக்குநர் இவர்தான். இப்படியாக இயல்பாகவே ஒரு நல்ல படத்தை எதிர்பார்த்துத்தான் போயிருந்தோம்.

இன்டர்நெட்டில் தியேட்டரில் கடைசி வரிசையில், நடுவாக புக் செய்ததாக நினைத்துப் போக, நாங்கள் தவறுதலாக இன்டர்நெட்டில் கொஞ்சம் நடுவரிசையில் ஆனால் திரையின் நடுவாக புக் செய்திருந்தது தெரிந்தது. ஆனால் கொடுமையிலும் ஒரு நன்மையாக, மொத்த வரிசையிலேயே நாங்கள் நால்வர் மட்டும் தான் ஆண்கள். இப்படியாக 35 ரூபாய் பெப்ஸி கப்புக்களுடன், பாப்கார்களுடனும் தொடங்கியது சினிமா.

ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குடும்பங்களை மையமாக கொண்டு கதை வளர்ந்து வந்தது, அதாவது, அமிதாப், அபிஷேக், ராணிமுகர்ஜி ஒரு குடும்பம், ஷாரூக், பீரித்தி ஜிந்தா, கிரண் கெர் இவர்கள் ஒரு குடும்பம்.

கதை இவ்வளவுதான், ஷாரூக் ஒரு கால்பந்தாட்ட வீரர் (ஒரே ஒரு ஷாட்டோடு நிறுத்திவிட்டார்கள் பரவாயில்லை), அவரது மனைவி ஒரு மாடல் மேகஸினுக்காக வேலை பார்ப்பவர், அவரது இருபத்திநாலு மணிநேர வேலை சம்மந்தமாக கணவனுடனான உறவு அவ்வளவு இனிமையாக இல்லை. ஆனால் இருவருக்கும் ஒரு குழந்தை உண்டு பெயர் அர்ஜூன்.

இதேபோல், அமிதாப் குடும்பம், மனைவியற்ற அமிதாப் ஒரு ஜாலிப்பேர்வழி, மகனுக்கு அவர் அப்பாவின் தொழில்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ராணி முகர்ஜி, அபிஷேக்கின் மனைவி. எல்லாவற்றிலும் சுத்தத்தை எதிர்பார்க்கும் பார்ட்டி போன்ற லேட்நைட் விஷயங்களில் விருப்பமில்லாத கொஞ்சம் சராசரி இந்திய மனைவி. இவருக்கும் இவர் கணவருக்கும் அவ்வளவு கொஞ்சிக்கொள்ளும் படியான உறவில்லை.

இவர்களுக்கிடையில் சூழழும் கதையின் போக்கில் ஷாரூக்கிற்கும், ராணி முகர்ஜிக்கும் இடையில் ஒரு அஃபயர் வந்து விடுகிறது, இந்தக் காட்சிகள் மிகவும் அருமையானவை, படத்தில் முக்கியமான கதைத்திருப்பதிற்கு காரணமான விஷயங்கள் என்பதால் நுணுக்கமாக எடுத்திருப்பார் கரண். நிறைய விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் போல் இருக்கிறது இந்தப் படத்தில்.

ஷாரூக்கின் குறும்புகள், அமிதாப்பின் ஆளுமை, கொஞ்சம் வயதாகிவிட்டிருந்தாலும் ராணி, மற்றும் பிரீத்தி ஜிந்தாவின் அழகு என்று இதெல்லாம் மேலோட்டமானவை, கதை சொல்லும் பாணியும் நன்றாக இருந்தது. ஷாரூக்கிற்கும், ராணிக்கும் இடையில் வந்துவிட்ட ஆனால் சொல்லப்படாத அஃபயர் காலத்தில் அவர்கள் நாடகத்தனமாக மீண்டும் தன் கணவன் மனைவிகளுடன் சேர போடும் திட்டம் வேடிக்கையாவதும். ஆனால் உண்மையில் இந்தப் பிரிவை விரும்பாத அபிஷேக் மற்றும் பிரீத்தி போடும் திட்டம் சக்ஸஸ்புல்லாகவும் அமைவதைக் காட்டியிருக்கும் இயக்குநருக்கு ஒரு சபாஷ். உண்மையில் நன்றாக யோசித்து கதை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

தமிழின் மீதிருந்த காதலால், எனக்கு அமிதாப்பைப் பற்றிய ஒரு தவறான முன்முடிவிருந்தது, ஆனால் அவருடைய ஸ்கிரீன் பிரஸன்ஸ் அருமையிலும் அருமை. அதுவும் ஷாரூக்கும் அமிதாப்பும் ஜோக்கடிக்கிறேன் பேர்வழியென குடும்பத்தினரை வம்பிழுக்கும் நேரத்தில் உண்மையில் அவரின் ஆளுமையை உணர்ந்தேன். “குட் ஜோக்” என்று அமிதாப் ஷாரூக் தன்னை ஏமாற்றுவதாய் நினைத்துக்கொண்டு சொல்லும் நேரத்தில் சொல்லும் பொழுது தலைவர் பின்னியிருக்கிறார். எப்பொழுதும் போல் ஷாரூக்கின் திறமை படம் முழுதும் வெளிப்படுகிறது, கையில் இருக்கும் விக்டரி பச்சையை நன்றாக கன்டின்யூ பண்ணியிருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு ஒரு தவறை நான் செய்தேன், அதாவது பெரும்பாலான நேரத்தில் படத்தின் முடிவை ஊகிக்கிறேன் பேர்வழி என்று யோசித்துக் கொண்டு தமிழ்ப்பட பாணியில் நானாய் ஒரு முடிவைக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். பரவாயில்லை ஓரளவிற்கு நான் ஒத்துக்கொள்ளும் முடிவைத்தான் இயக்குநர் தந்திருக்கிறார். ஆனால் தமிழ்ப்பட பாதிப்பால் எதிர்பார்த்தது வேறு. நல்ல முடிவிற்கு நன்றி இயக்குநரே. கட்டுடைத்தலைப்பற்றி பின்னால் வரப்போகும் பத்திக்கு முன் இதை எழுதி விடுகிறேன். கட்டுடைத்தலை மிக அழகாக அவர்கள் இருக்கும் வாழ்வுமுறையில் சொல்லியிருக்கிறார், ஆனால் நிறைய மசாலாத்தடவி. என்னுடன் வந்த மூன்று பேருமே பக்வாஸ் படம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை நல்ல பாலச்சந்தர், ராம நாராயணன், ஷங்கர் கடேசியாக செல்வராகவன் எல்லோரும் சேர்ந்து இயக்கிய படம் போலிருந்தது. காமெடியும் அருமை. கட்டுடைத்தலை மசாலாத் தடவி சொல்லியிருக்கிறார்கள், இந்தி வசனங்கள் அதிகம், மீண்டும் ஒருமுறை நார்த் இண்டியா பக்கம் வாசனையுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மூன்றரை மணிநேரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் டீக்கே, ஆசாத்பாய் பாணியில் சல்தா ஹை. இப்போ கொஞ்சம் பழைய கணக்கு...


----------------------------------


ஆரம்பக்காலத்தில் என் மாமாக்கள்(இரண்டுபேர்) சொல்வது தான் வேதவாக்காக இருந்த காலத்தில், அவர்களுடைய கருத்துக்ளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன் பெரும்பாலும், வரதட்சணை வாங்கக்கூடாது என்பது அதில் மிகமுக்கியமான ஒன்று, இதில் பெரியவருக்கு அப்படியே தான் நடந்தது திருமணம், தன் பெயருக்குப் பின்னால் டிகிரியைப் போட்டுக்கொள்ள விரும்பாத அவருடைய போக்கை அப்படியே கடைபிடிக்கும் கிளிக்குட்டியாக நான் இருந்தேன், ஆனால் ஒன்றிரண்டு வருடங்களில் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருந்தது. அம்மாவிடம்,

“கோடிஸ்வர வீட்டுப்பொண்ணை பாருங்கம்மா, வேலை செஞ்சு செஞ்சு அலுத்துப்போச்சு, (மொத்தமாக மூன்றே வருடங்கள்) கல்யாணம் பண்ணினமா, வீட்டோ மாப்பிள்ளையா செட்டில் ஆனமான்னு இருந்திடலாம்னு நினைக்கிறேன், மாமனார் எதாவது பிஸினஸ் வைச்சிருந்தாருன்னா அப்படியே பார்த்துக்கிட்டு... வாழ்க்கையை ஓட்டிடலாம்னு நினைக்கிறேன்”னு சொல்ல வைத்தது.

ஒரு வருடம் கழித்து வீட்டிற்கு வந்த பையன் சொல்வதைக் கேட்ட பழங்காலத்து அம்மா, என் தலைக்கு எலுமிச்சைப் பழத்தால் குளிப்பாட்டி விட்டால் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும் என்று நினைத்ததில் தவறில்லையென்று நினைக்கிறேன். பாவம் அம்மாவிற்கு கட்டுடைத்தலைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை இல்லையா, வேலை விஷயமாக டிசைன் பேட்டர்ன்ஸ் பற்றி ஒரு செஷன் எடுக்கிறேன்னு மூன்று மாசமா டிமிக்கு கொடுக்கும் எனக்கு, ஒன்றுமே தெரியாத கட்டுடைத்தல் பற்றி அம்மாவிற்கு சொல்லிக் கொடுப்பதில் விருப்பம் இல்லை.

சரி அம்மாவிற்கு கட்டுடைத்தலைப் பற்றித் தெரியாதா? நல்ல கேள்வி, கட்டுடைத்தல் என்ற வார்த்தையில் பின்னால் கோர்க்கப்டும் நிகழ்வுகளைப் பற்றி அந்த வார்த்தையால் தெரிந்திருக்க நிச்சயம் நியாயமில்லை, ஆனால் உண்மை விஷயம், நன்றாகத் தெரியும். மிக நன்றாக, சிதம்பரம், மதுரை என்று சொன்னால் புரிந்துவிடுமா என்று யோசித்தேன், பின்னர் ஏதோ நம்பிக்கை வந்தவன் போல், நம்ம சொந்தக்கார மாமாவைப் பற்றிச் சொன்னால் தெரிந்து கொண்டு போகிறார்கள் என்று நினைத்தேன். தூரத்துச் சொந்தத்தில் உள்ள மாமா ஒருத்தர் இப்படித்தான், அவருக்கு இங்கே அம்மாவும் நைனாவும் வேலை பார்க்கும் பிஎச்யிஎல் ஸ்கூலில் பெல் ஸ்கீமில் வேலை, ஆரம்பச் சம்பளம் 1500 பின்னர் இரண்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1800 ஆக உயர்ந்ததாகக் கேள்வி, ஆனால் அவர் கல்யாணம் செய்து கொண்ட அத்தைக்கு கவர்மெண்ட் உத்தியோகம் அதும் தஞ்சாவூரில் நம்ம மாமாவுக்கு வீடும் அங்கதான், காலையில் கிளம்பி திருச்சி வந்து வேலைசெய்துவிட்டு சாயங்காலம் திரும்பவும் பஸ் பிடித்து திரும்பப் போய்க்கொண்டிருந்தார்.

எங்கக் குடும்பத்தைப் பிடித்த சாபமோ என்னவோ தெரியலை ஏகப்பட்ட சொந்தக்காரங்க டீச்சராவேயிருந்துத் தொலைச்சிருறாங்க. இப்படி இவரு 1800க்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு ஆடி ஓடி தெருவில் நின்னப்பத்தான் அவரு சம்சாரம் அதான் எங்க அத்த, ஓய் நீரு இப்படி கிழிச்சது போதும், (இதில மாசச்சம்பளத்தில் பாதி திருச்சி – தஞ்சாவூர்) டிக்கெட் சார்ஜூக்கு சரியா இருந்தது.) அந்த 1800 ரூபாய்க்கு நான் டியூசன் எடுத்து உனக்குத் தந்திர்றேன், வேலைக்கும் போய்கிட்டு, சமையலும் செய்துக்கிட்டு, புள்ளையையும் பார்த்துக்க முடியலை, நீ ஒழுங்கு மரியாதையா வேலையை ரிஸைன் பண்ணிட்டு வீட்டோ வந்து சேருன்னு சொல்லிடுச்சு, மாமனாரும்(மாமாவோட) வீட்டுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடை போட்டுக்கொடுத்திட்டாரு, இவருக்கு இப்ப பொழுது போக்கு, பொழப்பெல்லாம் அவரோட பொண்ணை கண்ணும் கருத்துமா, (பொட்டிக்கடையுமா?) வளர்த்துக்கிட்டு வர்றாரு, மக்களே பொறாமைப் படாதீங்க எங்க இரண்டு பேருக்கும் வயது வித்தியாசம் பதினைந்திற்கு மேலிருக்கும்.

ஆனால் பாவம் அவருக்கு அவர் பண்ணினது கட்டுடைத்தல்னு தெரியாது, எங்கம்மாவிற்கும் தான். பின்ன ஒரு பேட்டி உண்டா, போட்டாகிராப் தான் உண்டா, அச்சு இதழ் வேண்டாம் சார், ஒரு இணைய இதழ், இல்லாட்டி போனா நட்சத்திர வாரத்தில் இலவச இணைப்பு, ஓஹோ அவரு அம்மேரிக்காவில் போய் இந்த ஊழியம் செய்யலையே, தமிழ்நாட்டில் இல்லடா செய்யறாரு அதுவேணும்னா ஒரு காரணமா இருக்கலாம் இல்லையா? ஆனா அம்மாவிற்குத்தான் தன் தூரத்துத் சொந்தக்காரத் தம்பி இப்படி பொண்டாட்டி தாசனா(அவங்களோட வார்த்தை) இருக்கிறதைப் பார்த்தா பிடிக்கிறதில்லை, அடிக்கடி தம்பி இந்த சி, சி++, ஜாவான்னு என்னென்னமா சொல்றியே அவனுக்கும் ஏதாவது இப்படிச் சொல்லித்தந்து, இந்தக் கண்ணாடிக்கிட்டேர்ந்து(அத்தை அந்தக் கால ஆசிரியர் மாதிரி கண்ணாடியெல்லாம் போட்டிருப்பாங்க) காப்பாத்தேம்பான்னு புலம்பிக்கிட்டேயிருப்பாங்க,

நானும் ஒருநாள் எக்குத்தப்பா, மாம்ஸ் நான் வேணும்னா ஏதாவது நல்ல சென்டரில் சேர்த்துவிடுறனே, ஈகாமர்ஸ் அது இதுன்னு இப்ப ஏகப்பட்டது இருக்கு என்ன சொல்றீங்கன்னு கேட்க, அதெல்லாம் வேணாம் மாப்பிள்ளை நான் நல்லா சந்தோஷமாத்தான் இருக்கேன், செல்வியை நினைச்சாத்தான் பயமா இருக்கு எப்படி கல்யாணம் பண்ணிக் கொடுக்கப்போறமோன்னு இருக்குன்னு சொல்ல நான் கிரேட் எஸ்கேப் ஆகி அம்மாவிடம், மம்மி, அந்தாளு சந்தோஷமாத்தான் மம்மி இருக்கிறாரு நீதான் தேவையில்லாம கவலைப்படுற, அதெல்லாம் சரி, நம்ம சொந்தத்தில் இந்த மாதிரி, சாப்ட்வேரில் லண்டன், பிரான்ஸ், ஜெர்மன்ல ஏதாவது பொண்ணுங்க இருந்தாங்கன்னா, சமைக்க துணிவைச்சிப் போட்டு, பிள்ளைகளை வளர்க்க நல்ல கணவனா ஒருத்தன் (நான்) இருக்கான்னு சொல்லி கேட்டுப்பாரேன்னு சொன்னேன், அவர் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் எலுமிச்சை செடியில் பத்து பதினைந்தாய் காய் பறிக்கச் செல்லும் நேரத்தில் ஒரேயடியாய் பழங்கால தமிழ்நாட்டிற்கு பைபை சொல்லிவிட்டு பின்நவீனத்துவ புனேவிற்கு ரயில் ஏறினேன்.

Read More

Share Tweet Pin It +1

8 Comments

In புத்தகங்கள் பெங்களூர்

பெங்களூர் புத்தகக் கண்காட்சியை புறக்கணித்த பதிப்பகங்கள்

தொடர்ச்சியாய் இது மூன்றாவது வருடம் நான் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு போவது, ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். நான் விரும்பி புத்தகம் வாங்கும் பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சிக்கு வரவில்லை. குறிப்பாய் உயிர்மை, கிழக்கு மேலும் கண்ணதாசன், நர்மதா, அல்லயன்ஸ், கலைஞன் இப்படி நிறைய வந்த பதிப்பங்களை சுலபமாகச் சொல்லிவிடலாம்.

வழமை போல் காலச்சுவடு, விகடன், திருமகள், வானதி, நாதம் கீதம், NCBH, பிறகு மேலும் ஒரு தமிழ்ப் பதிப்பகம். அவ்வளவு தான் தமிழில் மொத்தமே. NCBH சில கிழக்கு புத்தகங்கள் வைத்திருந்தார்கள் அத்தனையும் பழசு. மொத்தமே ஐந்து பத்து எண்களுக்குள் தான் இருக்கும். மற்றவர்கள் வராததற்கு காரணமாக கடந்த முறை விற்பனை மோசமாக இருந்ததைக் குறிப்பிட்டார்கள்.

நான் காலச்சுவட்டில் மட்டும் புத்தகங்களை தட்டிக் கொண்டுவிட்டு கொஞ்சம் புகைப்படம் எடுத்துவிட்டு நகர்ந்துவிட்டேன். நான் காலச்சுவட்டில் வாங்கிய புத்தகங்களை புத்தகப் பையில் அடுக்கிக் கொண்டிருந்த பொழுது, துப்பறியும் சாம்பு புத்தகம் கேட்டு காலச்சுவட்டில் வந்து நின்ற பெரியவர் வருத்தத்துடன் நகர்ந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் வாங்கவும் மக்கள் அலைந்தது தெரிந்தது. நான் 2004 டெல்லி புத்தகக் கண்காட்சியில் காலச்சுவட்டிடம் சுஜாதா, பாலகுமாரன் புத்தகமெல்லாம் எடுக்காம ஏன் சார் வர்றீங்க என்று கேட்ட நினைவு நிழலாடியது. நான்கு வருடங்களில் என்னிடம் தான் எத்தனை மாற்றம் என்று நினைத்தவாறு புத்தகங்களை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

மொத்தத்தில் பெங்களூர் புத்தகக் கண்காட்சியை இந்த முறை பதிப்பகங்கள் புறக்கணித்துவிட்டன என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வாங்கிய புத்தகங்கள்

ஆத்மாநாம் படைப்புகள்
புனலும் மணலும்
ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
நினைவுப் பாதை - நகுலன்
சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - ராஜமார்த்தாண்டன்
ஜி. நாகராஜன் - சுந்தராமசாமி நினைவோடை
தி. ஜானகிராமன் - சுந்தரராமசாமி நினைவோடை
சி.சு. செல்லப்பா - சுந்தரராமசாமி நினைவோடை
க.நா.சு - சுந்தரராமசாமி நினைவோடை
சொல்லில் அடங்காத வாழ்க்கை - காலச்சுவடு சிறுகதைகள்
நடந்தாய்; வாழி, காவேரி! சிட்டி - தி. ஜானகிராமன்
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை - தமிழில் சுந்தர ராமசாமி
தூர்வை - சோ. தர்மன்
நிழல் முற்றம் - பெருமாள் முருகன்

சில புகைப்படங்கள்








Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம் படத்திற்கு நேற்று முன்பதிவு செய்யும் பொழுது வெறும் 2 சீட்டுகள் தான் மீதமிருந்தது. சூர்யாவிற்கும், காக்க காக்கவினால் கௌதம் மேனனுக்கும் நல்ல மவுசு பெங்களூரில் என்று நினைத்துக் கொண்டேன். இன்று காலையில் டிவிட்டரில் என் விருப்பமில்லாமல் கண்ணில் பட்டுவிட்ட, வாரணம் ஆயிரம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'த்தைவிட கேவலம் என்ற ரிவ்யூ காண்டாக்கியது என்னவோ உண்மை. நானாய்ப் போய் பார்க்காமல் தானாய் வந்து விழுந்த இரண்டு வரி விமர்சனம் எரிச்சலைக் கிளப்பியது. அதனால் இரண்டு டிவிட்டு டிவிட்டி விட்டு ஓய்ந்தேன். என் நல்ல நண்பர் ஒருவருக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகயிருக்கிறது, அவர் அளித்த பேச்சுலர் பார்ட்டியில் இருந்து பாதியில் தப்பித்து வந்து 'வாரணம் ஆயிரம்' படம் பார்த்தேன்.

நிச்சயமாய் கௌதம் மேனனின் படம் போல் இல்லை தான், ஒரு காக்க காக்கவையோ, வேட்டையாடு விளையாடுவையோ நினைத்துக் கொண்டு வந்திருந்தால் படம் அப்படியில்லை. ஆனால் நான் ரசிக்கக் கூடிய அளவிற்கு படமிருந்தது. இதற்கு மேல் கதை ஆங்காங்கு தட்டுப்படலாம். அதனால் படம் பார்க்க நினைக்கிறவர்கள் இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவது நல்லது.

படம் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டு பின்னர் அசாதாரணமாக நகர்ந்தாலும் கடைசி வரையிலும் சாதாரண மனிதர்களையே தூக்கிப் பிடிப்பதால் பரவாயில்லை. நான் சொல்லவருவது அப்பா கேரக்டரை, இந்தக் கேரக்டரின் காதல் காட்சிகள் தவிர்த்து மற்றவைகள் பரவாயில்லை ரகம். சூர்யாவின் முதல் காதல் ஒவ்வொரு 'சிறுகதை ஆசிரியர்'ன் கனவிலும் வந்து போயிருக்கக்கூடிய ஐஸ்கிரீம் காதல், அந்தப் பெண் அழகாக இருக்கிறாள், அழகாக சிரிக்கிறாள், ரொம்ப நாள் கழித்து எனக்கு ஒரு சினிமா ஹீரோயின் பிடித்துப் போயிருக்கிறாள். இந்தப் பெண் நடித்த மற்ற படங்களைப் பார்க்க விரும்பவில்லை - மோகமுள் படத்தில் வரும் ஜமுனா கதாப்பாத்திரம் போல்.

அந்தப் பெண்ணின் ட்ரெஸ்ஸிங் செலக்ஷன் பிரம்மாதம், மொத்த படத்தின் காஸ்ட்யூமுமே தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள் என்றாலும், இந்தக் கதாப்பாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது, உடல்மொழியின் வழி, ஆடைகளின் வழி எல்லாவற்றிலும்.

சூர்யா நிறைய உழைத்திருக்கிறார் நன்றாகத் தெரிகிறது, அதுவும் முதல் காதலின் பொழுது - அந்தப் பெண் தன் காதலைச் சொன்ன பிறகு, நல்ல முன்னேற்றம். சிக்ஸ் பேக்ஸ் காண்பிக்கிறார், ஆர்மி உடையில் கச்சிதமாகப் பொறுந்துகிறார். வயதான கெட்டப்பில் கொஞ்சம் மேக்கப் பிசிறு தட்டினாலும் 'தசாவதாரம்' அளவிற்கு இல்லை. உடம்பைக் குறுக்கி கண்களைக் குறுக்கி உடல் மொழியை மாற்றி நன்றாகச் செய்திருக்கிறார்.

படத்தில் கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும், கமர்ஷியலாக இந்தப் படம் பெயிலாகாமல் இருக்கச் செய்திருக்கிறார்கள் என்று தள்ளி வைத்துவிடலாம். நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே இருக்கிறது.



ஒளிப்பதிவு எனக்குப் பிடிக்கவில்லை, ப்ரீஸ் செய்யும் பொழுது பிசிறு தட்டுவது தெரிகிறது என்ன பிரச்சனை? கௌதம் மேனனின் ரிச்னஸ் பாதி படத்தில் இல்லாமல் இருக்கிறது. ஒரு வேளை தெரிந்தே செய்தார்களா தெரியாது. இடையில் திருச்சி REC, மூகாம்பிகை கல்லூரி எல்லாம் வருகிறது; கொஞ்சம் போல் மனசு குறுகுறுத்தது.

மூன்று மணி நேர படத்தை கொஞ்சம் தட்டியிருக்கலாம், முதல் நாள் என்பதால் ஓட்டினார்களாயிருக்கும். நாளையிலிருந்து ஆப்பரேட்டர் கைவைத்துவிடுவார். ஆனால் கொஞ்சம் அலுப்பாய் இருந்தாலும், எப்படா இண்டர்வெல் விடுவார்கள், எப்படா முடிப்பார்கள் என்று இருந்தாலும் இந்த முயற்சியை பாராட்டியே ஆகவேண்டும். நல்ல டிரை.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு பகுதியில் நீங்கள் உங்களை உணர்வீர்கள், எனக்கு அது போல் நிறைய இருந்தது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சூர்யாவையும், கௌதமையும் பிடிக்குமென்றால் நிச்சயம் பார்க்கலாம்.

Credits - For Photos

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In Only ஜொள்ளூஸ்

Bond கேர்ள்-உம் பொல்லாத இருத்தலியமும்



நேற்று Quantum of Solace படத்திற்குச் சென்றிருந்தேன், இரண்டு வருடங்களுக்கு முன் நான் தற்சமயம் வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த அன்று ரிலீஸாகியிருந்த - Casino Royale பார்த்த நினைவு; இரண்டு வருடம் ஆகிவிட்டது.

அதிரடி ஆக்‌ஷன் பட ஆர்வலர்களுக்கான படம் - அவ்வளவு தான். எனக்குப் பிடித்திருந்தது.

Hi-fi கார்களின் பயணம் செய்யும் பாண்ட், ஓட்டை அம்பாஸிட்டர் வகையறா கார்களிலும், BMTCயை விடவும் கேவலமான பஸ்ஸில் பயணம் செய்திருப்பதும் ஆச்சர்யமான விஷயம். ஹீரோயினிக்காக இன்னொரு முறை படம் பார்க்க உத்தேசம்.

மேலிருக்கும் பாண்ட் கேர்ள் படம் இங்கிருந்து சுடப்பட்டது, மேலும் படங்களுக்கும் க்ளிக்கலாம். தாராளமாய். ரொம்பக் காலம் கழித்து ஒரு வீக் எண்ட் ஜொள்ளு பதிவு.

இதுவயது வந்தவர்களுக்கு மட்டும்

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ்

கேர்ள் ஃப்ரண்ட் தேவையா

முதலில் ஒரு டிஸ்க்ளெம்பர், இது எந்தப் பதிவிற்கு பதில் சொல்லும் விதமாய் எழுதப்பட்ட பதிவில்லை; நல்ல ஒரு நாளில் இந்த விதமான எண்ணம் கொண்ட ஒரு பதிவெழுத முடிந்ததற்கு வேண்டுமானால் அந்தப் பதிவிற்கு நன்றிகள். நேரடியாய் விஷயத்திற்கு வருகிறேன்.

என்னிடம் கூகுளில் சாட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். முதலில் உன்கிட்ட இருக்கும் ஈகோ போனால் தான் உனக்கு பெண் நண்பர்கள் கிடைப்பார்கள் என்று. சொல்லப்போனால் இது நான் புலம்பியோ(எனக்கு கேர்ள் ப்ரண்டேயில்லை) இல்லை அவர்களிடம் அட்வைஸ் கேட்டோ(கேர்ள் ப்ரண்டு எப்படிங்க கிடைப்பாங்க) கிடைத்த அட்வைஸ் கிடையாது. சரி போவுதுன்னு கிட்ட நெருங்கி அது என்னய்யா ஈகோ என்று கேட்டால் சொல்கிறார்கள்,

"வேறொன்னுமில்லை, ஏற்கனவே இதயத்தைக் கேட்டு வேலைசெய்ய ரஜினி இருக்காரு நான் மெலெருக்கிறதைக் கேட்டு வேலை செய்வேன்னு சொல்றியே! அதுதான் பிரச்சனை."

"அப்ப மேலிருக்கிறதை நம்பி வேலை பார்த்தால் கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டாங்களா?"

"யோவ் மேலிருக்கிறதை நம்பினா, நீ முட்டாளை முட்டாள்னு சொல்லணும், அழகில்லாததை அழகில்லைன்னு சொல்லணும், பிடிக்காததை பிடிக்கலைன்னு சொல்லணும், நல்லாயில்லாததை நல்லாயில்லைன்னு சொல்லணும் இல்லையா?"

"ஆமாம் அதுக்கென்ன..."

"அதனால் தான் உனக்கு கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டேங்குது."

இப்படிப்பட்ட பதில் வரும் ஒவ்வொரு சமயமும் நான் ஒரு விஷயம் சொல்லுவேன்.

"இங்கப்பாருங்கய்யா அதெல்லாம் கிடையாது, எல்லாம் நம்ம லுக்கு தான் காரணம். இந்த மொகரக்கட்டையைப் பார்த்தா எந்த பிகரு பிரண்டாகும். இருக்குற நாலு முடியும் கொட்டுறதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைச்சிடுங்கன்னு சொன்னா(அவரு எனக்கு ஒரு விதத்தில் உறவினர்) அதைக் கேட்காம கேர்ள் பிரண்டு புடின்னு சொன்னா எப்படி"

"இங்கத்தான் நீ தப்பு பண்ணுற, பொண்ணுங்களை தப்பா எடை போடுற. பொண்ணுங்க உன் தலையில் எத்தனை முடியிருக்குன்னு கணக்கு போட்டு பிரண்டாவதில்லை; மூளை இருக்கா இல்லையா அப்படிங்கிறத கணக்குப் போட்டுத்தான் பிரண்டாவாங்க."

"அப்படின்னா?"

"மூளை இல்லைன்னா ஓக்கே இருந்தா ரிஜக்டட். அதுவுமில்லாமல் நீ பேச ஆரம்பிச்சா கேப்பே விடாம பேசிக்கிட்டேயிருப்ப; அப்புறம் உன்கூட பொண்ணுங்க எப்படி சிநேகிதமாகும். சொல்லு. ஏன்னா இது ஒரு வழிப்பாதை மாதிரி பொண்ணுங்க பேசுவாங்க நீ பேசக்கூடாது, அவங்க கேள்வி கேட்பாங்க நீ பதில் சொல்லக்கூடாது.

அதுவும் அவங்க செஞ்ச எதையாவது ஒன்னை காண்பிச்சு நல்லாயிருக்கான்னு கேட்டா; அதைப் புகழந்து அரைமணிநேரம் பேசணும். நீயோ குத்தம் குறையெல்லாம் சொல்லிட்டு கடைசியில் இத்தனையிருந்தாலும் உங்க பதிவு நல்லாயிருக்குன்னு அடிக்கிற ஜல்லியெல்லாம் அங்க நடக்காது."

"அப்ப இன்டலக்சுவல் ப்ரண்ட்ஷிப் அப்படிங்கிறதே இல்லையா?"

"யோவ் நீ உதை வாங்கப்போற - பொண்ணுங்கக்கிட்ட இன்டலக்சுவலா பேசின அப்புறம் அவ்வளவுதான். கனவுலகத்திலேயே இருக்காதய்யா வெளிய வா! பறந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தைப் பார். எவ்ளோ பொண்ணுங்க இருக்கு உனக்கு ஏன் ஒரு கேர்ள் பிரண்ட் இல்லைன்னு யோசிச்சுப் பார்."

"சரி இவ்வளவும் செய்றேன்னே வைச்சுப்போம் அதனால எனக்கு என்ன யூஸ்"

"ஆரம்பிச்சிட்டான்யா? உனக்கு கேர்ள் பிரண்டிறது முள் கீரீடமாயிருந்தாலும். வெளியில் இருந்து பார்க்கிறவனுக்கு அது மலர்க்கிரீடம். அதுவும் கொஞ்சம் அழகான ஸ்டைலான பிகர் மாட்டிக்கிச்சுன்னு வையேன். 'யோவ் இவனுக்கு வந்த வாழ்வைப் பாருய்யான்னு' பொழம்புவாங்கய் பாரு. அப்ப கிடைக்கிற திருப்தி 'உங்களோட அந்தக் கதையைப் படிச்சேன். ச்ச எப்படிங்க அப்பிடி எழுதினீங்க சான்ஸேயில்லை.' அப்படின்னு சொல்றதை விடவும் அதிகமாகயிருக்கும். ஏன்னா 'நீங்க எழுதின கதையிலேயே அது ஒன்னு தான் தேறிச்சு' அப்படிங்கிற உள்குத்து அதில் இருக்கும். ஆனால் உள்குத்தே இல்லாமல் பொறாமைப் படவைக்கும் கேர்ள் பிரண்ட் இருந்தால்."

"அப்ப கேர்ள் பிரண்ட் வைச்சுக்கிறது மத்தவனை பொறாமப் பட வைக்கத்தானா?"

"இல்லையா பின்ன, எப்படியிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை. நைனா கழுத்தில் அருவா வைச்சிடுவார் இல்லையா. அதுவுமில்லாமல் கேர்ள் பிரண்ட்களை கல்யாணம் செஞ்சிக்கக்கூடாது. இல்லேன்னா கல்யாணத்துக்கப்புறம் டாமினேட் செய்ய முடியாது பாரு."

"ஆனாலும் இதெல்லாம் மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல ஆய்டும் போலிருக்கு?"

"இங்கப்பாரு இந்த மூட்டைப் பூச்சி வீட்டைக் கொழுத்துறது மாதிரி விஷயத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுட்டு கேர்ள் பிரண்டு பிடிக்கிற வழியைப்பாரு."

இப்படியெல்லாம் நண்பர்கள் அட்வைஸ் ஆயிரம் கொடுத்தாலும், நம்ம மூளை ஒத்துக்கவே மாட்டேங்குது. எனக்குத் தெரிந்து என்னுடன் சாட்டும் நண்பர்கள் அனைவருமே எனக்கு கேர்ள் பிரண்ட் கிடைக்காததற்கு ஆயிரம் காரணங்கள் இன்னமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ;)

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In Only ஜல்லிஸ் உண்மைக்கதை மாதிரி சிறுகதை தேன்கூடு

ஆட்டோபயோகிராஃபி

வாழ்க்கையில் ஆட்டோபயோகிராபி எழுதும் ஐடியா சின்னவயதிலிருந்தே உண்டு, யாராவது வாங்கி படிப்பார்களா என்றால், அதற்காகயெல்லாம் வருத்தப்படுவதென்றால் நான் பதிவுகள் கூடத்தான் எழுதமுடியாது. சரி விஷயத்திற்கு வருகிறேன், அப்படி எழுதும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்வதற்காக குறிப்புக்களை இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்கிறேன். அப்படி எழுதத்தொடங்கிய ஒரு சிறுகுறிப்பு போட்டிக்காக...,

------------------------------------------------------------------

அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி சொல்லப்போகத்தான் எவ்வளவு தவறான அனுமானத்துடன் என்னை மற்றவர்கள் அணுகுகிறார்கள் எனத்தெரிந்தது, அதில் என் பங்கு பெருமளவில் உண்டு. இங்கே ஒரு கம்பெனியில் பல ப்ரொஜக்ட்கள் இருக்கும், பெரும்பாலும் தற்சமயம் கணிணித்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் ஒரு நபர் ஒரே அலுவலகத்தில் ஒராண்டிற்கு மேல் வேலை செய்வதென்பதே நடக்கிறக் கதை கிடையாது. அதிலும் குறிப்பாக எங்கள் கம்பெனியில் இரண்டாண்டிற்கு ஒருமுறை தான் ஒரு ப்ரொஜக்ட்டிலிருந்து வேறொரு ப்ரொஜட்டிற்கு மாற்றுவார்கள். நான் இங்கே குறிப்பிடுவது சாதாரண ப்ரொஜக்டை அல்ல ஒரு அக்கவுண்டை என்று வைத்துக் கொள்ளலாம்.

அதாவது இப்பொழுது நான் எச்எஸ்பிசி(HSBC) அக்கவுண்டில் இருக்கிறேன் என்றால் நான் இரண்டாண்டிற்கு மேல் இதே அலுவலகத்தில் வேலை செய்தால் மட்டுமே இன்னொரு அக்கவுண்டிற்கு மாற்றுவார்கள். அதாவது மார்கன் ஸ்டான்லிக்கோ(Morgan Stanley), இல்லை சிட்டி பேங்கிற்கோ(City Bank). எதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்றால் அந்த இரண்டு வருடங்களில் நீங்கள் செய்த உழைப்பென்பது உங்கள் பழைய அக்கவுண்ட் சார்ந்தவர்களுக்குத்தான் தெரியும் பெரும்பாலும். இப்படி அக்கவுண்ட் விட்டு அக்கவுண்ட் மாறும் பொழுது நீங்கள் புதிதாய் வேலை செய்யத் தொடங்குவதைப் போன்ற உணர்வும் ஏற்படும், புதிய பங்காளிகள் புதிய இடம் புதிய மேலாளர்கள் என மொத்தமாய்ப் புதிதாய் இருக்கும்.

அப்படி நான் ஒரு அக்கவுண்டிலிருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு வந்த பொழுதுதான் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன், இதற்கு முன்னர் இரண்டு மூன்று சமயங்களில் சந்தித்திருக்கிறேன், தென்னிந்தியா என்று தெரியும் ஆனால் தமிழ்நாடென்று தெரியாது. எங்கள் அலுவலகத்தில் ஒரு பழக்கம் உண்டு, வாலிபால் போட்டி நடக்கும் பொழுது பெண்களுக்கும் இடமளிக்கும் வகையில், ஆறுபேரில் ஒரு நபர் பெண்ணாக இருக்கும் படியாக எங்கள் அலுவலகம் ஒரு சட்டத்தை வைத்திருந்தது. அப்படி நான் வேறொரு அக்கவுண்டிற்காக விளையாடிய காலத்தில் இந்தப் பெண்ணை எச்எஸ்பிசி அக்கவுண்டிற்காக விளையாடும் சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.

சாதாரணமாக என்னைப் பார்க்க கரடுமுரடானவனாகத் தெரியும் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது, அந்த மனநிலையை நானும் இன்னும் அதிகம் தான் படுத்துவேன். இப்படித்தான் அந்தப் பெண் நான் சேர்ந்திருந்த புது அக்கவுண்ட் உபயோகப்படுத்தும் விஷயம் சம்மந்தமாக ஒரு செஷன் எடுத்துக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் நான் சொந்தமாகப் படித்துதான் தெரிந்து கொள்வேன் என்பதாலும், செஷனில் சொக்கிச் சொக்கி விழும் என் தூக்கத்தைப் போக்க எடக்கு மடக்கானக் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருப்பேன். அப்படி நான் தூங்கிவிழுவதையும், கேள்வி கேட்பதையும் வைத்துக்கூட அந்தப் பெண் என்னைப் பற்றிய தவறான எண்ணத்திற்கு வந்திருக்க வாய்ப்புண்டுதான். ஆனால் அது அப்படியில்லை என்று இன்றுவரை நம்புகிறேன் அதற்கு முழுப்பொறுப்பு என் உருவத்தோற்றமாகக்கூட இருக்கலாம்.

பெரும்பாலும் முசுடாக யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் அவள் பின்னாலிருந்து நான் தமிழில் டைப்புவதைப் பார்த்து நீங்க ப்ளாக் எல்லாம் எழுதுவீர்களா என்று கேட்டது நினைவில் உள்ளது, நான் பெரும்பாலும் விளம்பரம் செய்வதில்லை ப்ளாக் எழுதுவதாக அவள் கேட்டுக்கொண்டதற்காக லிங்க் கொடுக்க பார்த்தவள் கூகுள் 'ஆட்'கள் என் பக்கத்தில் இருப்பததைப் பார்த்தே தெரிந்து கொண்டவளாய், ரொம்ப நாளாய் எழுதுவீங்களோ என்று கேட்டாள் என்றாள் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அன்றைக்கு இரண்டு நல்ல நகைச்சுவை சம்பவம் நடந்தது, அதன்பிறகு என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தவள், சாதாரணமாக இந்த கல்கியின் கடல்புறா புத்தகம் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்க, நான் அவளுடைய தமிழறிவை மொத்தமாகப் புரிந்து கொண்டேன் கொஞ்சம் தவறாக என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இப்படியாக நாங்கள் பேசத் தொடங்கிய ஒரு நாளில் தான் அவள் சொன்னாள், உங்களைப் பார்த்தால் இவ்வளவு நல்லபடியாக பேசுபவராகத் தெரியவில்லையென்று. உருவத்தைப் பார்த்து எடைபோடுவதில் உள்ள தவறு பெரும்பாலும் பலருக்குத் தெரியவில்லை.

அதே நாளில் என் ப்ளாக்கில் இருந்து ஒரு கதையை பிரிண்ட் அவுட் எடுத்துப் படிக்கப்போவதாகவும் ஒரு நல்ல கதை சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு கூச்ச சுபாவத்தில் நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன், அதன் பயனை பிற்பாடு அனுபவித்தேன். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அன்றுதான் முதன் முறையாக தமிழில் பேச ஆரம்பித்திருந்தோம். அந்தப் பெண் தேர்ந்தெடுத்த கதை 'மக்குக் குடும்பம்', குளிர்கால டிசம்பர் மாதத்தின் தாக்கத்தில் எழுதப்பட்ட ஒரு 'ஏ'த்தனமான கதையது. அன்றிரவு போகிற போக்கில் விண்டோ மெஸஞ்சரில் அவள் இந்த விஷயத்தை தட்டிவிட்டுச் சென்றாள்.

அதற்கு முன் அந்த மாதிரி கதை எழுதுவதைப் பற்றி எந்த முன்முடிவும் இருந்ததில்லை, சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா படித்து கொஞ்சம் செக்ஸியாக எழுத வேண்டுமென்று பெரும்பான்மையான என்னுடைய எல்லாக் கதையிலுமே பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும் 'அது'. அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை, அந்தப் பெண் கதையைப் படித்து என்ன நிலையில் நாளை வருவாள் என்று. ஆனால் பெரிய வித்தியாசம் அடுத்த நாள் எனக்காக காத்திருக்கவில்லை, மிகவும் சாதாரணமாக அந்தக் கதை அப்படிப்பட்டதென்று சொல்லியிருக்கலாமே என்று சொன்னாள் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் மனதில் அந்தக் கதை படிந்திருந்ததை நான் இன்னொரு சமயத்தில் பார்த்திருக்கிறேன், நாங்கள் நல்ல நண்பர்களாக ஆன ஒருநாள் விளையாட்டிற்காக கப்டேரியாவில் சென்று கொண்டிருந்த பெண்ணை சைட் அடிப்பதாகச் சொல்லப்போக அந்தப் பெண் அவகிட்ட என்ன இருக்கு அயர்ன் பாக்ஸ் என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்தாள் நான் பதிலெதுவும் சொல்லவில்லை.

சொல்லப்போனால் எங்களிருவரிடமும் ஈகோ உண்டு, அதிலும் நான் எப்பொழுதுமே உள்ளர்த்தம் வைத்து மட்டுமே பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தேன். இப்படி இருவருமே உள்ளர்த்தம் வைத்தும் 'ஈயம்' 'ஈயம்'(பெண்ணீயம், ஆணீயம்) என்றும் பேசிவந்ததால் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொண்டாமோ என்று இருவருமே மற்றவரைப் பற்றி ஆராய்வதுண்டு அப்படிப்பட்ட ஒரு ஆராய்தல் தான் அன்று நடந்தது.

இப்படியாக அவள் என் கதைகளைப் படித்து ஒரு முன்முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்னைய்ப்பற்றி, நாங்கள் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டிருந்த இன்னொரு நாளில் நீங்க காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற எடக்குமடக்கான கேள்வியைக் கேட்டாள், நான் ஒரே வார்த்தையாக முட்டாள்தனம் என்று பதிலளித்தேன். அவளுக்கு அது ஆச்சர்யமாகக் கூட இருந்திருக்கும், அவள் ஈகோவை விடுத்து, என்னால் இதை நம்பவேமுடியவில்லை, நீங்கள் இப்படி சொல்வீர்கள் என்று காதல் பற்றி கதைகதையாய் எழுதிக்கொண்டு காதலை முட்டாள்தனம் என்று சொல்வீர்கள் என்று. நான் காதலைப்பற்றிய என்னுடைய எண்ணங்களைத் தெளிவாக மிகத்தெளிவாகச் சொன்னேன், இன்னும் சொல்லப்போனால் அவளை நன்றாகக் குழப்பினேன்.

அன்று அவளிடம் நான் கல்லூரிக் காலங்களில் நம்மிடம் ஏற்படுவது காதலே கிடையாதென்றும் அது வெறும் இனக்கவர்ச்சி மட்டும் தான் என்றும் வாதாடினேன், இரண்டு மணிநேரம். என் பட்டிமன்ற நடுவர்களை பத்து நிமிடப்பேச்சால் என்னால் மாற்ற முடிந்திருக்கிறது. ஆனால் இது ரியல் டைம் கேள்விகள் நேருக்கு நேராய் கேட்கப்படும், கான்சப்டில் குழப்பமிருந்தால் பிரச்சனையாகிவிடும். அவள் யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெண்ணை கல்லூரி இறுதி ஆண்டிலிருந்து காதலிப்பதாகவும் முதலில் அந்தப் பெண் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கல்லூரி முடிந்த இரண்டாண்டுகளில் அதற்குப் பிறகு ஒருமுறை கூட நேரில் பார்த்திராத சமயத்திலும் அவன் அந்தப் பெண்ணையே நினைத்து கொண்டிருந்ததால் அதன் பின்னர் ஒப்புக்கொண்டதாயுமான அவளின் கல்லூரி நண்பர்கள் பற்றீய கதையைச் சொன்னாள். நான் அதைப்பற்றிய என் புரிதல்களையும் விளக்கத்தையும் அளித்தேன். அது இங்கே தேவையில்லாதது, அந்தக் காதலைப் பற்றியும் அந்தப் பெண்ணைப் பற்றியும் நான் முற்றிலுமாக மறந்து போய்விட்டேன் அந்தப் பொழுதில், முற்றிலுமாக. என் மனம் முழுவதும் இப்பொழுது சார்லஸூம் கனிமொழியும் தான் இருந்தார்கள்.

நான் படித்தது ஒரு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி அதாவது பன்னிரெண்டாவது படித்து முடித்தவர்களுக்கு இரண்டவாது ஆப்ஷனாக வைத்திருப்பார்களே அது, அதுதான் எனக்கு முதல் ஆப்ஷனாகக் கிடைத்தது அதைப்பற்றி முன்பே எழுதிவிட்டதால் இப்பொழுது மற்றது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு டிரீம் கப்புள் இருப்பாங்க என்பது என் விஷயத்தில் உண்மை. அந்த டிரீம் கப்புள் தான் சார்லஸூம் கனிமொழியும், சொல்லப்போனால் கொஞ்சம் கூட ஒத்துவராக ஒரு ஜோடி, கனிமொழி ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து குடுப்பப் பிரச்சனைகள் காரணமாக எங்கள் காலேஜில் படித்துவந்தால், சார்லஸிற்கோ அந்தக் கல்லூரியை விட்டால் வேறு காலேஜ் இல்லையென்ற நிலை. பேரிலேயே தெரிந்திருக்கும் முக்கியமான வித்தியாசம்.

முதல் வருடம் நான் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன், சார்லஸ் தான் ஏழு பேர் கொண்ட எங்கள் ரௌடி குரூபின் தலைவன் போன்றவன். அதற்கு முக்கியக் காரணம் கனிமொழியை அவன் காதலித்தது கிடையாது. அவன் உண்மையிலேயே ரௌடி, சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது பெண்களுடன் பயமில்லாமல் பேசுவது இதுதான் அந்தக் காலத்தில் தலைவனுக்கு உண்டான அடையாளம், இதில் எதிலும் சார்லஸ் குறைவைக்கவில்லை. இதற்கெல்லாம் மகுடமாக தன்னிடம் சண்டித்தனம் செய்த ஒரு சீனியரை பாத்ரூமில் வைத்து கன்னம் கன்னமாக இழுக்க ஹீரோ ஆனான். மொத்தம் எட்டு பேர், சார்லஸ், பெஞ்சமின், விமல்ராஜ், சரவணலால் ஜெயன், கலைராஜா, இளையராஜா, மோகன்தாஸ் அப்புறம் கடேசியாய் அன்சர்.

ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்வதற்கு நிச்சயமாய் ஒரு கதை உண்டு, இதில் விமல் கொஞ்சம் தலைமைப் பண்புகள் உள்ளவன் நான் சொல்ல வந்தது மேலே உள்ள தலைமைப் பண்புகளை முன்வைத்து. இந்த குரூப்பில் நானும் அன்சரும் இருந்தது தான் ஆச்சர்யமே பலருக்கும். ஏனென்றால் எங்களிருவருக்கு மட்டும் தான் அரியர் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நானும் அவனும் கொஞ்சம் நன்றாய்ப் படிக்கக்கூடியவர்கள், இந்தக் கொஞ்சமும் மற்ற அறுவர்களுடனான ஒப்பீட்டு மதிப்புதான். ஏன் விமலைப் பற்றி மட்டும் இழுக்கிறேனென்றால் அவனுக்கு இந்த மாதிரியான தலைமைப் பண்புகள் இருந்ததென்றாலும் கொஞ்சம் ப்ராக்டிகலானவன், சொல்லப்போனால்.

இதற்கு ஒரே காரணம் சார்லஸ் கனிமொழியைக் காதலிப்பதாகவும் அந்தப் பெண்ணும் அவனைக் காதலிப்பதாகவும் ஒரு கீழ்த்தர பாரில் பார்ட்டி கொடுத்தபடி சொல்ல முதலில் கண்டித்தவன் அவன்தான். சார்லஸின் முகத்திற்கு எதிராக 'வேண்டாண்டா பங்காளி அவளை விட்டுடு' என்றான். சார்லஸிற்கு கொஞ்சம் கோபமுண்டு இதனால். நானெல்லாம் முதலில் இந்த விஷயத்தை நம்பவேயில்லை, முதலில் ஒரு விஷயத்தை உறுதிசெய்துவிடுகிறேன். என் வயதின் படி, நான் ஒரு வருடம் முன்பே பள்ளியில் சேர்க்கப்பட்டவன், ஆசிரியரான அப்பாவின் கைங்கர்யம். அதனால் பெரும்பாலும் கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள் என்னை விட குறைந்த பட்சம் ஒருவயது அதிகமானவர்கள். கனிமொழியும் சரி கூடப்படித்த மற்ற ஆறு பெண்களும் சரி என்னைவிட வயதில் மூத்தவர்கள் தான் பெரும்பாலும் அக்கா என்றுதான் எல்லோரையும் அழைப்பேன். சரி விஷயத்திற்கு,

இந்தக் காதல் பெரும் படமெடுக்கும் அளவிற்கு கல்லூரியில் நடந்தது, காதலென்றால் ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லி அவர்களை அமரக் காதலர்களாக்க வேண்டுமென்ற அவசியம் எனக்குக் கிடையாது. அவர்கள் மற்ற எல்லா கல்லூரிக் காதலர்களைப் போலவும் காதலித்தார்கள். என்ன கொஞ்சம் தீவிரமாய், இடையிடைய எங்கள் ஜிங்கிச்சாவையும் மீறி விமல் மட்டும் இதை எதிர்த்துக்கொண்டேயிருந்தான், மூன்றாவதாண்டில் அவனும் ஒரு முதலாமாண்டு பெண்ணைக் காதலிக்க எதிர்ப்பேயில்லாமல் கனிமொழி எங்கள் எல்லோருக்கும் அண்ணியானாள். நான் நிகழ்வுகளை வர்ணிக்க இங்கே எத்தனிக்கவில்லை. இப்படியாக அவர்கள் காதல் எங்கள் கல்லூரியின், வரலாற்றுப் புகழ்பெற்ற காதலானது, கடைசியாக கல்லூரிக்கும், தமிழ்நாட்டிற்கும் டாட்டா காண்பித்து நான் டெல்லி புறப்படும் வரை. எனக்கு சந்தேகமேக்கிடையாது, சார்லஸ் தண்ணியடித்துவிட்டு உளறிய உளறலிலிருந்தும் கனிமொழியுடனான அவனுடைய நேருக்கத்திலிருந்தும், எதிர்ப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு அவர்கள் காதல் சக்ஸஸ் ஆகிவிடுமென்பதில்.

பின்னர் கல்லூரியைப்பற்றியோ, சார்லஸ் கனிமொழியைப் பற்றியோ நினைக்க மட்டுமல்ல என்னைப் பற்றியேக் கூட நினைக்க முடியாத நாட்கள் அவை, டெல்லி, பேங்களூர், புனே என மூன்றாண்டுகள் அப்படியென்பதற்குள் ஓடிவிட்டன. கடைசியாண்டு ப்ரொஜக்ட் செய்வதற்காக என் நண்பர்கள், இவற்கள் வேறு படிக்கிற செட், வந்து புனேவில் தங்கி ப்ரொஜக்ட் செய்துவிட்டு போன பொழுது கூட நான் கேட்கவில்லை சார்லஸ் கனிமொழியைப் பற்றி. ஆனால் என் அலுவலகத் தோழி கேட்ட அன்று எங்கிருந்தோ நினைவில் வந்ததைப் போல சார்லஸ் கனிமொழியைப் பற்றிய விஷயத்தை நினைத்தவனாய். என் அத்துனை தொடர்புகளையும் பயன்படுத்தி அன்றிரவே என்னானார்கள் அவர்கள் என்று கேட்கும் ஆவல் முற்றியது.

முயன்றேன், சார்லஸின் எண் கிடைத்தும் பேச முடியாத சிக்கல், இந்தச் சமயத்திலேயே ஒருவாறாக நண்பர்களின் மூலம் அவர்களைப் பற்றிய செய்தி கிடைத்திருந்தது, ஏனென்றால் முன்பே சொன்னேனே காவியக் காதலர்கள் என்று அவர்கள் தொலைபேசி எண்ணைக் கேட்டால், முழு வரலாற்றையே சொல்லிப் புலம்பாத நண்பர்களே இல்லை, அப்படியிப்படி என்று ராத்திரி பதினொன்று மணிக்கு கனிமொழியின் செல் நம்பர் கிடைத்தது, சாப்ட்வேர் உலகத்தின் மகிமையால் அந்த நேரத்திலும் கால் செய்ய நான் தயங்கவில்லை.


"ஹலோ கனிமொழிங்களா, நான் மோகன் பேசுறேன்.

"ஹலோ எந்த மோகன் தெரியலையே,"


"... காலேஜ், கம்ப்யூட்டர் சைன்ஸ், முத பெஞ்சில் உட்கார்ந்திருப்பேனே மோகன்."

"இல்லங்க தெரியலை."

"கனிமொழி, என் நம்பர் கூட 018, கனிமொழி, லிஜோ பாபு, மலர்விழி, நரேந்திரன் அப்புறம் நான் மோகன் தெரியலையா."

"ம்ஹும் தெரியலை."

"என்னங்க வேறென்னத்தை சொல்ல, சரி நீங்க நல்லாயிருக்கீங்களான்னு கேட்கத்தான் போன் செய்தேன், நல்லாயிருக்கீங்கல்ல சரி வைக்கிறேன்."

"சரி சொல்லுங்க."

"யாருன்னு தெரிஞ்சுதா?"

"இல்லங்க தெரியலை, பரவாயில்லை சொல்லுங்க." என்றவள் ஏதோ ஞாபகம் வந்தவளாக, "ம்ம்ம் நீங்களா சொல்லுங்க, ராத்திரி இல்லையா தூங்கிக்கிட்டிருந்தேன் ஞாபகத்தில் வரலை."

"சரிங்க கனிமொழி நீங்க தூங்குங்க நான் காலையில் போன் பண்றேன்."

வைத்துவிட்டேன், உண்மையில் அதை நான் எதிர்பார்க்கவில்லைதான், ஏனென்றால் நான் படித்த ஒரே ஒரு கல்லூரி அதுதான், அதனால் அந்த நினைவுகள் என்னிடம் எப்பொழுதும் உண்டு, சொல்லப்போனால் என் கதைகளில் கூட அவர்களை வேறு கதாப்பாத்திரப் பெயர்களால் குறித்திருப்பேன். நம்பர், உட்கார்ந்திருந்த இடம் எல்லாமே இன்னும் நன்றாய் ஞாபகத்திலிருக்கிறது. ம்ஹும் கதையெழுதுகிறேன் இல்லையா நினைவில் கொண்டு வந்திருப்பேனாயிருக்கும்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் போன் செய்தேன், போனை எடுத்தவள் கண்டுபிடித்துவிட்டாள், சொல்லப்போனால் என்னை அவளுக்கு நன்றாய்த் தெரியும் சில நாட்கள் சார்லஸ் சொல்லப்போய் லெட்டர் எல்லாம் கொடுத்திருக்கிறேன் மிகவும் பர்ஸனலான விஷயங்களாகக் கூட இருக்கும் அந்தக் காகிதங்கள். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவள் என்னைப் என் பெயரால் அவள் அறிந்திராததையும் கல்லூரி நினைவுகள் அவ்வளவாக இல்லாததையும் சொன்னாள், என்னைப் பற்றிக் கேட்ட அவளுக்கு விவரங்களைச் சொன்னேன், மறுபக்கத்தில் வரப்போகும் ஆச்சர்யத்தையும் கணக்கிட்டுத்தான்,

'அப்ப செட்டிலாயிட்டேன்னு சொல்லுங்க, சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கங்க', நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு சைபர் இல்லாத சம்பளம் கூட தங்களுக்கு கிடைப்பது அரிதாக இருப்பதான புலம்பல்கள் ஆரம்பித்ததும் நான் ஆரம்பித்தேன் சார்லஸ் பற்றி, அவள் ஒரேயொரு வார்த்தை தான் சொன்னாள்.

"உங்கக்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..."

"கேளுங்க..."

"இல்லை நீங்கதான் எங்க காலேஜோட டிரீம் கப்புள்..."

"புரியலை என்ன சொல்றீங்க..."

"இல்லை நீங்களும் சார்லஸூம் தான் அந்தக் காலேஜின் டிரீம் கப்புள்ஸ், என்னாச்சுன்னு கேட்கிறேன்."

"இந்த ஆம்பளைங்க எல்லாமே ஏமாத்துறவங்க தானே, அதை விடுங்க. எல்லாம் அத்துப்போச்சு."

இப்படி நான் கனிமொழி, சார்லஸ் நம்பர்களைத் தேடிய பொழுது கிடைத்த விமல் நம்பருக்கும் போன் செய்தேன்,

"மாப்ள, இது உனக்குத் தெரியாதா இல்லை எனக்கு தெரியாதா, ஆனாலும் நான் அப்பவே சொன்னேன் அந்தப் பொண்ணு பாவம் விட்டுறுன்னு. உனக்குத் தெரியாது ரொம்பக் கஷ்டமாயிருச்சு..."

அதற்கு மேற்பட்ட விஷயங்கள் பர்ஸனலானவை உண்மை பெயர்களை உபயோகிப்பதால் வேண்டாம், என் அலுவலகத் தோழியின் கல்லூரியில் நடந்த காதல் என்ன முடிவிற்கு வந்திருக்கும் என்று கேட்கும் ஆசை சுத்தமாக இல்லை. நான் அவளிடம் பிரயோகித்த என் தர்க்கங்ளை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தி அது எத்தனை தூரம் உண்மையென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In புத்தகங்கள்

இரா.முருகனின் நெம்பர் 40 ரெட்டைத் தெரு

இரா. முருகனின் இந்தப் புத்தகத்தை எந்த வகையில் வைப்பது என்று தெரியவில்லை உண்மையில், நாவல் - குறுநாவல் - சிறுகதைத் தொகுப்பு(?!) எதிலுமே வைக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். நாவலுக்குரிய அகச்சிக்கல் என்று எதுவும் இல்லை என்பதால் நாவலாக வைக்கமுடியாது, கூர்மையிருந்தாலும் சிறுகதைக்குரிய அளவில் இல்லை என்பதால் சிறுகதைத் தொகுப்பென்றும் சொல்லமுடியாது. தன்னுடைய வயதைக் குறிக்கும் வகையில் எழுத நினைத்தாரோ என்னவோ 54 (கொஞ்சம் பெரிய)பத்திகளில் தன் பத்து வயதில் தான் வாழ்ந்த இடத்தைப் பற்றிய குறிப்புக்களை எழுதியிருக்கிறார்.

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது; இத்தனை விஷயங்களை நினைவில் வைத்திருந்திருக்கிறாரே என்று இரா.மு.வின் அரசூர் வம்சம் படித்துவிட்டு எப்படி இவரால் இப்படி ஒரு நாவல் எழுத முடிந்தது என்று ஆச்சர்யப்பட்டது நினைவில் இருக்கிறது. அந்த ஆச்சர்யம் அப்படியே தொடர்கிறது இங்கேயும், கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் ‘அடல்ஸ் ஒன்லி' விஷயத்தில் என்பது மட்டும் ஏனென்று தெரியாவிட்டாலும். கூர்மை அப்படியே இருக்கிறது அத்தனை பத்திகளிலும், என்னமோ டைரி ஒன்றில் சிறு வயதில் இருந்து குறித்துக் கொண்டு வந்துவிட்டு இன்று இணைத்து எழுதியிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறது.

ஒரு தெரு அதைத் சுற்றி இருக்கும் வீடுகள் அதைச் சார்ந்த பள்ளி இன்ன பிற வகையறாக்கள் அதைச் சார்ந்த மக்கள் என்று மொத்தமாக எல்லாவற்றையும் பற்றிய தன் நினைவுகளை அன்றைய காலநிலையோடு, அரசியலோடு சேர்த்து எழுதியிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது.

மொத்தமாய் படித்து முடித்த பின்னும் நினைவில் நீங்காமல் இரா.முருகனின் சில கதாப்பாத்திரங்கள் அப்படியே நின்றுவிடுகிறார்கள். பஞ்சவர்ணம் வாத்தியார் மாதிரி கடைசியில் அவர் வைக்கும் கேள்வியோடு “எல்லாக் கணக்கும், வாழ்க்கையும் தெக்கத்தி மிட்டாயாக இனிக்காமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.” சீரங்கத்தம்மா போல், “அந்தக் காலத்துலே சாரட்டுலே கல்யாண ஊர்வலம் வந்தவள்டா சீரங்கத்தம்மா” இதுபோல் நிறைய நான் என் வாழ்நாளில் கேட்டிருக்கிறேன். உருவாக்குவதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் மூன்று பக்கங்களில் இப்படி நிறைய பேரை உலவவிடுகிறார். நான் சொன்னது இரண்டு நபர்களைத் தான் ஆனால் இந்தப் புத்தகம் முழுக்க இப்படித்தான் ஆட்களாய் நிரம்பியிருக்கிறார்கள்.

புத்தகம் முழுவதும் நகைச்சுவை வழிந்து கொண்டிருக்கிறது, மெல்லியதாய், வாசிப்பை சுவாரசியப்படுத்துவதாய்.

“... தினசரியில் ‘சர்ச்சில் கவலைக்கிடம்’ என்று கொட்டை எழுத்தில் வந்தது. கோகலே ஹால் நூலகத்தில் பேப்பர் படித்த எனக்கு, இப்படி அரைகுறைச் செய்தியை அதுவரை படித்ததாக நினைவில் இல்லை. சர்சுக்கு யார் போனது, அதில் என்ன கவலை என்ற தகவல் ஏதும் இல்லாது, ஒரு வெள்ளைக்காரக் கிழவர் போட்டோவோடு வந்த செய்தி. படிக்கப் பொறுமையில்லாமல் ‘சரோஜாதேவி தினசரி என் கனவில் வருகிறாரே’ என்று முறையிடும் கேள்வி-பதில் படிக்கப் பக்கத்தைத் திருப்பினால், பேப்பர் படக்கென்று பிடுங்கப்பட்டது...” புத்தகம் முழுதும் விரவியிருக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.

முக்கியமான இந்தி எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர் நகைச்சுவையில் விழுந்திருப்பது சரியானதுதானா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது; அதுதான் அவரது ஸ்டைல் எண்ணும் பொழுது அப்படியே விடுவது தான் சரியானதாயிருக்கும்.

“...எனக்கும் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மேல் இப்படி அப்படி என்றில்லாத கோபம் வந்தது. கோயில் பிரகார உத்திரத்தில் வௌவால் தொங்குகிறது போல் வரிசையாக தொங்குகிற எழுத்தோடு இந்தியைப் படித்துக் கொண்டு தினசரி காய்ச்சல்காரன் போல சுக்கா ரொட்டி சாப்பிட்டுக் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்க எனக்கென்ன தலைவிதி? இந்தி இருந்த பழைய ரயில்வே கைடு புத்தகத்தை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு வந்து எரிகிற தீயில் போட்டேன். ஒழியட்டும் இந்தி...”

பத்துவயது கதைசொல்லியின் வருத்தம் இது. கீழிருப்பது 54 வயது கதைசொல்லியின் குரல்,

“...இன்றைக்கு எனக்கு இந்தி தெரியும். மனிதர்கள் பேசிப் புழங்குகிற ஒரு மொழி என்ற மட்டில் அதன் பேரில் வெறுப்பு எதுவும் இல்லை. ஆனாலும், 'இந்தி ராஜ்பாஷா; தேசிய மொழி அதுதான்’ என்று யாராவது பேச ஆரம்பித்தால், ‘சரிதான் உட்காருடா’ என்று மண்டையில் தட்ட மனத்தில் ஒரு சின்னப் பையன் எழுந்து வருகிறான். அவனுக்கு கோடிக்கணக்கில் சிநேகிதர்கள் உண்டு என்பதை அவன் அறிவான்...”

எல்லாவற்றிற்கும் பிறகும் இந்தப் புத்தகம் எனக்குப் பிடித்த ஒன்றாகயில்லை, அரசூர் வம்சம் என்னிடம் உருவாக்கியிருந்த பிம்பம் இரா.முருகனின் அடுத்தப் புத்தகத்தைப் பற்றி நான் வைத்திருந்த எண்ணம் எதையும் இந்தப் புத்தகம் நிவர்த்தி செய்யவில்லை. இது நாவல் பற்றிய என்னுடைய மனநிலைப் பிரச்சனையாகக் கூட இருக்கலாம், ‘புலிநகக்கொன்றை’ போல் நாயகன் நாயகியையோ இல்லை ஒரு பரம்பரையின் கதை பேசுவதாகவோ இந்த நாவலை நகர்த்தியிருந்தால் நான் விரும்பியிருக்கக்கூடும். ஒரு ஹீரோ ஹீரோயினைச் சுற்றி நிகழும் ‘நாவல்’களை நான் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதை மீறியும் எதையோ இந்த நாவலில் நான் இழக்கிறேன், காரணம் தெரியவில்லை. ஒட்டுதல் வரவில்லை என்று கூட சொல்லலாம், இதுவரை என் வாழ்நாளிலேயே மிகவும் கஷ்டப்பட்டு படித்ததாக நினைக்கும் ‘புளியமரத்தின் கதை’யின் மீது கூட எனக்கு ஒட்டுதல் இருந்தது. இத்தனைக்கும் சுராவின் நெருங்கவிடாத எழுத்திற்கு அப்பாலும் சென்று என்னால் நெருக்கத்தை உருவாக்க/உணர முடிந்திருந்தது ஆனால் இந்த அணைத்துச் செல்லும் வகை எழுத்தில் என்னால் அதை உணர முடியவில்லை.ஒரு வேளை லைட் ரீடிங் வகையறா எழுத்துக்கள் எனக்கு போரடிக்கத் தொடங்கிவிட்டதா தெரியவில்லை. லைட் ரீடிங் என்று நான் சொல்வது கோணங்கியின் ‘இருள்வ மௌத்திகம்’ ரமேஷ் - ப்ரேமின் ‘சொல் என்றொரு சொல்’ முதலானவற்றோடு ஒப்பிட்டே.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் ‘கிரேஸி’ மோகனின் முன்னுரை(அல்லது whatever) புத்தகத்திற்கான முன்னுரை பதிப்பகம் கேட்டு வாங்குமா எழுத்தாளர் கேட்டு வாங்குவாரா தெரியாது. என்ன கொடுமைங்க இது சரவணன். என்னமோ புத்தகக் கண்காட்சிக்காகவே கேட்டு வாங்கியது போல் ஒரு முன்னுரை. இரா.முவை விடுத்தும் அவர் மொழியின் மீதான நம்பிக்கையை விடுத்தும் புத்தகம் விற்பதற்கான இன்னொரு ஸ்ட்ராடஜியாக ‘கிழக்கு’ இதை முன்வைத்தார்களா தெரியாது. நான் அறியேன் பராபரமே! (இரா.முருகனுக்கு; சார் நான் எல்லாம் அறிவுரை சொல்கிற அளவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று சொல்லலை, இதற்கு முன்னுரை இல்லாமலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வெளிவிட்டிருக்கலாம்.) ஆனால் அவர்களும் என்ன தான் செய்வார்கள் பாவம்.
சுஜாதாவை விடவும் இரா.முருகனின் ராயர் காப்பி கிளப் பத்திகள் நன்றாக இருப்பதாக நான் சொன்ன நினைவு, ஆனால் இரா.முவை சுஜாதாவாக ஆக்க முயல்கிறார்களோ என்பதில் எனக்கு பயமே வருகிறது. உதாரணத்திற்கு இந்தப் புத்தகத்தில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் அள்ளி வீச முடியும், எனக்கு உண்மையிலேயே தெரியாது ‘கிழக்கு’ உடன் காண்ட்ராக்ட் போட்டு எழுதப்பட்ட நாவலா ‘ரெட்டைத் தெரு’ என்று. பொலிடிகலி கரெக்ட்னெஸ் இல்லாத பத்தியே இல்லை என்று சொல்லலாம்.

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்

எழுதிய மனம் தான், செம்மீன் பற்றிய பத்தியையும் எழுதியிருக்கும் என்று சொன்னால் நான் சத்தியமாக நம்ப மாட்டேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In ஓவியம் கவிதைகள்

கடந்தகாலத்தின் செருப்புக்கள்

நிகழ்காலமென்னும் உலகில் நுழைய
கடந்தகாலத்தின் செருப்புக்களின்
தேவையில்லை
அப்படியே கேள்விகளும்
எளிமையானதாய் மென்மையாய்
வன்மமானதாய் சுழலின்தன்மையானதாய்
விடைகளில்லாததாய்
புரிந்துகொள்ளமுடியாததாய்
புறக்கணிப்பின் பொல்லாத பொறுக்கித்தனத்தில்
பொசுங்கிப் போகின்றன அத்தனையும்
சுமந்தபடி செல்கிறேன்
புதுச்செருப்புடனான பயணத்தில்
கழட்டிப்போட்ட செருப்புக்களின்
எண்ணிக்கையைப் பற்றிய கேள்விகள்
எழுப்பும் புன்முறுவலை சுமந்தபடி







Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா

சினிமா

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

ஏழு எட்டு வயதில் ஆரம்பித்தது, நினைவு தெரிந்து முதலில் பார்த்த படம் கர்ணன். டிவிப் பெட்டிக்குள் உண்மையில் எல்லாம் நடக்கிறது என்று நம்பினேன். அம்புகள் டிவியின் கண்ணாடித்திரையைத் தாண்டி வரக்கூடாது என்று பயந்தேன், டிவிப் பெட்டியை உடைத்துக் கொண்டு கர்ணனுக்காக உதவ எண்ணினேன்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

’காதலில் விழுந்தேன்’

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

காதல் - வீட்டில் - டிவியில் - இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை.

4.மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

குருதிப்புனல், மகாநதி - சட்டென்று நினைவுக்கு வந்ததும் மனது தானாய்ப் பதறும் இரண்டு படங்கள்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என் காலம் இல்லாவிட்டாலும் பராசக்தி முதலான ‘திராவிட’ படங்கள் ஏற்படுத்திய தாக்கம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு - குறிப்பாய் சொல்லவேண்டுமானால் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, ஜீவா இவர்களின் படங்கள். இன்னமும் கூட நிறைய பேரைச் சொல்லலாம்.

6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் படும் எல்லாவற்றையும்.

7.தமிழ்ச்சினிமா இசை?

கேட்பதுண்டு. பெரும்பாலும் புதிய படங்களின் இசையில் கைவைப்பதில்லை. எனக்கான பழைய - புதிய பாடல்கள் தொகுப்பு உண்டு. பிடித்திருக்கிறது - நன்றாயிருக்கிறது என்ற சொன்ன பிறகு கேட்பதுண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தற்சமயம் தமிழ் சினிமா எ உலக சினிமா 10 : 90 என்ற விகிதத்தில் உள்ளது. அதிகம் தாக்கிய படங்களின் வரிசை இந்தப் பதிவை விட நீண்டு விடும் என்பதால், குறிப்பாய் தற்சமயம் பார்த்து என் பதிவில் குறிப்பிடாத சில,

Perfume, Days of Glory(Indigழூnes), The golden pond, One flew over cuckoo's nest, Mamma Roma, Oedipus Rex...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நன்றாகயிருக்கிறது. ‘ரே’ ‘கத்தக்’ அளவிற்கும் அதற்கு மேலும் பெயர் தரக்கூடிய படங்கள் விரைவில் வரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நான்கு வருடம் முன்பென்றால் உலகமே இரண்டது போலிருந்திருக்கக்கூடும். இப்பொழுது பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்னைப் பொறுத்தவரை. அதுவும் தமிழ்சினிமா மட்டுமென்றால். தமிழர்கள் தங்கள் முதல்வரை வேறெங்கேணும் தேடத் தொடங்குவார்களாயிருக்கும்.

பதிவு போட அழைத்த மதிக்கு நன்றி.

நான் அழைக்க விரும்புபவர்கள் - விருப்பமிருந்தால் போடலாம்.

1) பெயரிலி
2) ஹரன் பிரசன்னா
3) சன்னாசி
4) நண்பன் ஷாஜி
5) ஜமாலன்

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In பயணம் புகைப்படம் லதாக் பயணம்

லதாக் இயற்கை வளம்

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

IMG_8824

IMG_8812

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Ladakh Landscapes

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சிறுகதை தேன்கூடு

தேர்தல் - 2060 கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்

“என்னது கருணாநிதி பிரச்சாரம் செய்கிறாரா?”

ஐம்பது ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்டும் நினைவு திரும்பியுள்ள தாத்தா கேட்டது, மோகனுக்கு பெரிதும் ஆச்சர்யமளிக்கவில்லை,

“அட நீங்க வேற தாத்தா ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு சாதகமா பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க...” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அறைக்குள் நுழைந்த பவானி, மோகனின் முதுகில் செல்லமாகத் தட்டியபடி,

“டேய் உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தாத்தாவை தொந்தரவு செய்யக்கூடாதுன்னு.” சொல்லிவிட்டு, பின்னர் தன் தந்தையிடம்,

“என்ன நைனா இப்ப எப்படியிருக்கு?”

“பவானி என்னடா சொல்றான் உன் பையன். கருணாநிதி, ஜெயலலிதாவெல்லாம் இன்னும் உயிரோட இருக்காங்களா?”

ஆம், சுயநினைவை இழந்தவராய் ஐம்பது வருடம் கோமாவில் இருந்தவருக்கு நடந்தவையெல்லாம் தெரிந்திருக்க நியாமில்லைதான். அவனால் கூட கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. பத்து வயது சிறுவனாக இருந்த பொழுது ஒருநாள் அவன் தந்தைக்கு ஏற்பட்ட விபத்தில் அவர்f இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்து பார்த்தால் உயிர்மட்டும் தான் போகாமல் இருந்தது.

இன்று நினைவிற்கு வந்துவிடுவார், நாளைக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கை மாறாததைப்போல் அவருடைய நிலைமையும் சுத்தமாக மாறவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்த மருத்துவ வசதிகள், மருத்துவ உலகின் சாதனைகள் அவர்களின் நம்பிக்கையை இழக்காமல் வைத்திருந்தது. அவனால் கூட நினைத்துப்பார்க்க முடியவில்லை நடந்தவைகளையெல்லாம் கனவு போல்தான் இருந்தது.

மத்திய ஆசியாவில் இஸ்ரேல் தொடங்கிவைத்த யுத்தம் உலகப்போராக மாறுமென்று யாருமே உத்தேசித்திருக்கவில்லைதான். இல்லவேயில்லை என்று சொன்ன நாடுகள் எல்லாம் தூக்கி ஒரேயடியாக குண்டைப் போட்டுக்கொள்ள, இந்த நாட்டுக்கு சாதகமா அவன்வர அந்த நாட்டுக்குச் சமமா இவன்வர, இன்னுமொரு உலகப்போர் உருவாகியது தான் மிச்சம். ஆனால் அனைவருக்குமே இதன் முடிவு எப்படியிருக்கும் என்று தெரிந்திருந்ததாலும் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

எப்படியிருந்தாலும் மொத்தமாக உலகம் அழியாமல் இருப்பதற்கு, போர் தொடங்கிய சில காலங்களில் உருவாகிய மக்கள் எழுச்சியே காரணம், மக்களுக்கு அணுஆயுதப்போரின் தீவிரம் நன்றாகத் தெரியத்தொடங்கியது. தொலை தொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி காரணமாக பாதிப்போரின் பொழுதே, சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்பதைப் போன்ற இயக்கங்கள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டிருந்தன.

அந்தந்த நாட்டு மக்களின் பெரும் புரட்சியினை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசுகளும், அணுஆயுத நாடுகளும் போரிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருந்தன. ஆனால் அதுவரை நடந்து முடிந்திருந்த போரின் தாக்கம் பெருமளவில் இருந்தது. இதெல்லாம் நடந்தது இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டில்.

எல்லாம் முடிந்திருந்தது, ஆனால் அந்தப் போர் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு மாற மற்றுமொரு இருபத்தைந்தாண்டுகள் ஆனது. உலகமெங்கும், சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்ற இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. மக்களுக்கு ஆயுதம், போர் மீதிருந்த பயம் கடைசிவரை போகவேயில்லை. அறிவியல் அதன் அதிகபட்ச உச்சத்தை எட்டியிருந்தது, அதுவரை யுத்தம் தளவாடம் ஆகியவற்றில் செலவிடப்பட்டுவந்த மொத்த பணமும், அறிவியலுக்கு செலவிடப்பட, அறிவியில் உலகம் பல விந்தைகளை செயல்படுத்திக் காட்டியிருந்தது அதில் ஒன்று, தானாகவே சிந்திக்கும் கணிணிகள்.

முதலில் ஆராய்ச்சி வடிவத்தில் வரத்தொடங்கிய இந்தக் கணிணிகள் பின் பெரிய அளவில் எழுச்சி பெற்றது. அந்தச் சமயத்தில் கொண்டுவரப்பட்ட ஒன்று தான் இந்த கணிணிக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்ற கோஷமும். அதுவரை அரசியல்வாதிகளைத் தெர்ந்தெடுக்க நடத்தப்பெற்ற தேர்தல்களில் முதல் முறையாக சுயமாகச் சிந்திக்கும் கணிணிகளும் போட்டியிட்டன, ஒரே ஒரு கோஷத்துடன், கணிணிக்கு ஒரு வாய்ப்பைத்தாருங்கள் என்பதுதான் அது. அந்த கணிணியை வடிவமைத்தவர்கள் சொல்லியிருந்தது மக்களை ஆச்சயர்யத்தில் ஆழ்த்தியது. மக்களுக்கான திட்டங்கள், அடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்கள் இவை அனைத்தையும் தீர்மானிக்கும் கணிணிகள் என்று பிரசாரப்படுத்தப்பட்டது.

முதல் தேர்தலில் ஒரு சில நாடுகளில் முழுவதுமாக தோல்வியடைந்த இந்த திட்டம், மிகச்சில நாடுகளில் மிகச்சில இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. பின்னர் அந்த நாடுகளின் அந்தந்த பகுதிகள் அடைந்த வெற்றிகள் மேலும் மேலும் அந்த வகையான கணிணிகளுக்கு பெயர் பெற்றுத்தர அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கியது. இதற்கு முன்பே அந்த தலைமைக் கணிணியின் ஒட்டுமொத்தமான இயங்குதிறன் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டு நன்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

ஒரு சமயத்தில் உலகத்தில் எங்கும் கணிணிகளின் கீழ் செயல்படும் அரசாங்கமே இருந்தது, ஆனால் மக்களுக்கான அத்துனை சுதந்திரங்களும் இருந்தது, தேர்தலில் ஓட்டளித்து கணிணிகளை தோல்வியடையச் செய்யவும் முடிந்திருந்தது. ஆனால் அவைகள் சுயமாக மட்டுமல்லாமல், நன்மையாக மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால் பெரும்பாலும் அவைகள் தோல்வியடையவில்லை.

இப்படியே ஒரு பத்தாண்டுகள் கடந்தது, மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்து வந்தாலும் எதையோ ஒன்றை இழந்துவிட்டதைப்போன்ற ஒரு உணர்வு இருந்தது. ஆனால் நிச்சயமாக இதைத்தான் இழந்துவிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலிலும் கணிணிகளை எதிர்த்து நிற்கவே ஆட்கள் இல்லாதிருந்த நிலை இப்பொழுது கொஞ்சம் மாறியிருந்தது. அந்த கணிணிகளால் சிந்திக்க முடியாத விஷயங்களை நாங்கள் செய்கிறோம் என்று கூறி இப்பொழுதெல்லாம் மக்கள் இயக்கங்கள் சிறிதளவில் ஆரம்பித்திருந்தன. ஆனால் ஆண்டாண்டுகளாக மக்கள் இதுமாதிரியான பிம்பங்களில் இருந்து பட்டிருந்ததால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தார்கள்.

இப்படி கணிணியை எதிர்த்து எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று நினைத்த அந்த குழுவினர் செய்த ஏற்பாடு தான் மக்களைக் கவர்ந்த வரலாற்று அரசியல்வாதிகள். நேனோ டெக்னாலஜி அதன் உச்சத்தை அடைந்திருந்தது, மாலிக்கியூளர் ரிப்பேர் முறையின் மூலமாக ஏற்கனவே இறந்து போனவர்களை அணுஅணுவாக உருவாக்கிவிடும் வல்லமையை அறிவியல் உலகம் செய்திருந்தது. அதனை பயன்படுத்தியே அந்த நவீன அரசியல்வாதிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கணிணிக்கு எதிரான தேர்தலில் மக்கள் கழகத்தை ஆதரித்து, வழமையான தமிழில் கருணாநிதி பேச, நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஜெயலலிதா பிளந்து கட்ட, ஜெயிக்கமாட்டார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலும், மக்களுக்கு இது ஒரு அற்புதமான பொழுதுபோக்காக இருந்தது.

“நைனா உங்களுக்கு ஒரு டெஸ்ட் பண்ணனும் இப்ப பண்ணலாமா?” பவானி கேட்க, லேசாக முகத்தைச் சுழித்தவர்.

“இப்ப நல்லாத்தானே இருக்கேன். என்னாத்துக்கு டெஸ்ட்” அவருடைய வருத்தம் தெரிந்துதான் இருக்கிறது பவானிக்கு என்றாலும், செய்யவிருக்கும் டெஸ்டின் அருமை தெரிந்தவன் என்பதால் அதன் நன்மையை விளக்கத் தொடங்கினான்.

“அதாவது நைனா, கொஞ்சம் மேலோட்டமா சொல்றதுன்னா, நம்ம மூளையில் எல்லா விஷயமும் பதிவாகியிருக்கும், ஆனால் பதிவான அந்த விஷயங்களை நினைவு கூர்ந்து திரும்பவும் எடுப்பதென்பது கொஞ்சம் கஷ்டமான வேலை. அந்த திறமைதான் ஒவ்வொருவரிடமும் கல்விக்கான வேறுபாடுகளை உண்டாக்கியிருந்தது இல்லையா.

இப்ப அந்த பிரச்சனையில்லை, ஒரு சின்ன சிப்பை உங்கள் முளையில் வைத்துவிடுவார்கள். எல்லா உணர்ச்சிகளும், மூளைக்கு செல்லவேண்டிய எல்லாவிஷயமும் முதலில் இந்த சிப்பிற்கு செல்லும். பின்னர் அந்த சிப் உங்கள் மூளையில் நீங்கள் விரும்பிய தகவலைத் தேடித்தரும். இந்த விஷயம் வந்ததில் இருந்து, அறிவாளி முட்டாள் அப்படிங்கிற விஷயம் இல்லாமல் போய்விட்டது,

அதுமட்டுமில்லாமல் இந்த சிப் வெளியில் இருந்தும் கட்டுப்படுத்தக் கூடியதாய் இருக்கும், பப்ளிக் மெம்மரி, பிரைவேட் மெம்மரி என்று இரண்டு பாகங்கள் இருக்கும் இதில் பப்ளிக் மெம்மரியை யார் வேண்டுமானால் உபயோகப்படுத்தக் கூடியதாக இருக்கும், இதையே கூட உங்களின் விருப்பதிற்கு ஏற்றது போல் மாற்றிக் கொள்ளலாம். புதிதாய் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதும் கூட மிகச்சுலபமே, உங்கள் மூளையின் மெம்மரியைக் கூட உபயோகப்படுத்த வேண்டுமென்பது கிடையாது. இப்பொழுது மூளையை வாடகைக்கு விடுவதென்பது பிரபலமாக இருக்கிறது. இதற்கான சிப்களும் கிடைக்கின்றன அதாவது நீங்கள் மற்றவரின் மூளையில் உள்ள பிரைவேட் மெம்மரியை வாடகைக்கு எடுத்து விஷயத்தை போட்டு வைத்துக்கொள்ளலாம். அந்த மூளையின் சொந்தக்காரரால் கூட அந்த விஷயத்தை உபயோகப்படுத்த முடியாது ஆனால் உங்களால் முடியும்.”

ஆரம்பத்தில் கொஞ்சம் ஆர்வமில்லாமல் கேட்கத்தொடங்கிய, சீனியர் மோகன் பின்னர் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டிருக்கும் என யோசித்தவராக அந்த டெஸ்டிற்கு ஒப்புக்கொண்டார். ஏற்கனவே அவரது மூளையிலும் பொறுத்தப்பட்டிருந்தாலும் கோமாவில் இருந்ததால் அதனை உயிர்ப்பிக்க முடியாமல் இருந்து வந்ததை இப்பொழுது உயிர்ப்பித்து சோதனை நடத்த வேண்டும்.

உயிர்ப்பித்ததும், தந்தையிடம் பவானி,

“நைனா இப்ப உங்களோட பழைய மெம்மரியை எல்லாம் சிப் ரீட் பண்ணி கீ வேல்யு பேர்களா மாத்தியிருக்கும், இதுதான் இந்த சிப்பின் பியூட்டியே. இப்ப நீங்க பழைய சம்பவம் எதையாவது யோசித்துப்பாருங்கள், சீக்கிரமே நினைவில் வரும். தேதியை மட்டும் நினைத்தால் போதும்...”

ஒரு நிமிடம் கூட அவர் யோசிக்காமல் தன்னுடைய முதல் இரவைப்பற்றி யோசித்தார். அப்படியே பளிச் பளிச் என்று நினைவுகள் பிரகாசமாய்த் தெரியத்தொடங்கின,

அகிலா வந்து கட்டிலில் உட்கார்ந்ததுமே,

“ஒரு கவிதை மட்டுமே எழுதி கல்யாணம் பண்ணிக்கிட்டவர் நீங்களாத்தான் இருக்கும்” சொல்லிச்சிரிக்க அவர் எழுதிய அந்தக் கவிதை நினைவில் வந்தது, வரிகள், மடிப்புகள் எல்லாமே,

“இன்னும் படித்துக்கொண்டிருக்கும்
என் அக்காவிற்கு
நேற்றிரவு
நாய்கள் என்னைப்பார்த்தது
நக்கலடிப்பதாய்ப்பட்டது
தெரியப்போவதில்லை

உள்ளிருப்பது தெரிய
வலையவரும் பெண்கள்
என்னிரவுகள் நினைவுப்படுத்தும்
மனக்கணக்குகள்
அறிவதில்லை

கழுதையோ எருமைமாடோ
ஏதாவதொன்றை
நானாய்க்கேட்டாலொழிய
தலையில் கட்டமறுக்கும் பெற்றோர்
உணர்வதில்லை
ஜோடிகளின் நெறுக்கத்தில் புழுங்கும்
மனதின் வெம்மையை

மற்றவற்றைப் போலில்லாமல்
கட்டுடைக்கத்தூண்டும்
பனிக்காலத்தின் கிளர்ச்சிகளை
புறந்தள்ளி காத்திருக்கிறேன்
இன்னுமொறுமுறை.”

அவருக்கும் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது, சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கவிதை வரிக்குவரி அப்படியே நினைவில் வந்ததை நினைத்தவருக்கு,

அதில் வரும் கழுதையோ எருமைமாடோ என்ற பதத்தை உபயோகப்படுத்த வேண்டி வந்த சூழ்நிலையும் அதைக்காட்டி, அகிலா அவரை சீண்டியதும் நினைவில் வர, அவரையறியாமலேயே புன்னகை அவர் முகத்தில் பரவியது. அவருடையக் காலத்தில் எல்லாம் ஐம்பதாண்டு அறுபதாண்டு பழமையான கவிதைகளை நினைத்ததும் நினைவில் வருவது பெரியவிஷயம். கலைஞர் கருணாநிதியின் தனித்துவமே அதுதானே என நினைத்தவருக்கு, கலைஞர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று பேரன் சொன்னது நினைவில் வந்தது.

“பவானி, கலைஞர் இன்னும் உயிரோட இருக்காரா?”

மருத்துவரும், பவானியும் தந்தையின் முகத்தில் நொடிக்கொரு விதமாய் மாறும் பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கவனத்தை கேள்வி சற்று திசை திருப்ப,

“அது ஒரு பெரிய கதை நைனா பின்னாடி சொல்றேன். இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், அவசர அவசரமா உங்கள் மூளையில் சிப் பொறுத்தியதற்கு காரணம் கூட அதுதான். இன்னிக்கு தேர்தல் நாள்.”

சீனியருடைய முகத்தில் தெரிந்தை வியப்பை குறித்துக் கொண்டவனாக,

“ஆனால் பழைய காலம் போல் பூத் சென்று ஓட்டு போடவேண்டுமென்பதெல்லாம் கிடையாது, உங்கள் பப்ளிக் மெம்மரியில் சரியாக பத்துமணிக்கு தேர்தல் நினைவு வரும். உங்கள் பகுதியில் நிற்பவர்களின் விவரங்கள் கூட நினைவில் வரும். பின்னர் நீங்கள் அந்த நொடி நீங்கள் மனதில் இவருக்கு ஓட்டு போடலாம் என நினைத்தால் உங்கள் ஓட்டு அவருக்கு சென்றுவிடும். இதனை சேகரிக்க மிகப்பெரிய அளவில் கணிணிகள் இருக்கிறது.” சற்று நிறுத்திய பவானி,

“இதனால் 100 சதவீத ஓட்டுகள் ஏதாவது ஒரு சாய்ஸில் வந்துவிடும், நீங்கள் அந்த நொடியில் என்ன நினைக்கிறீர்களோ அது பதிவாகிவிடும். பின்னர் அதற்கேற்றார் போல், சில நிமிடங்களில் ஒட்டுமொத்த மக்களிடம் பெற்ற வாக்குகளை கணக்கிட்டு வென்றவரை தலைமைக் கணிணி வெளிவிடும். பத்து நிமிடங்கள் அவ்வளவுதான் தேர்தல்.”

அடுத்த பத்து நிமிடங்களில் நினைவில் தேர்தல் நடந்து முடிந்துவிட, கணிணிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் அமைப்பு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, பவானியும் ஜூனியர் மோகனும் சிரித்தனர்.

“கருணாநிதி...”

பெரியவர் விடாப்பிடியாக, கேட்டுக்கொண்டேயிருந்ததால், சுருக்கமாக நானோ டெக்னாலஜியின் வெற்றியை விவரித்த பவானி, கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாலிக்யூலர் ரிப்பேர் செய்வதற்கான சொத்துக்களை விட்டுவிட்டு போனதால் இறந்த சிறிது காலத்தில் அவர்களை உயிருடன் கொண்டுவரப்பட்டதை விளக்க, பெரியவருக்கு எங்கேயோ பொறிதட்டியது,

“டேய் தம்பி, இதுவந்து நான் எழுதிய ஒரு கதை மாதிரியில்லை இருக்கு.”

சொன்னதும் தான் தாமதம், மருத்துவரும் பவானியும் கைகுலுக்கிக் கொள்ள, ஜூனியரும் சிரித்தான்,

“நைனா உங்கள் மூளையில் பொறுத்தப்பட்ட சிப் நன்றாக வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது, ஆமாம் இது உங்களுக்கு விபத்து நடப்பதற்கு முன்னர் நீங்கள் எழுதிய கதையின் சாராம்சம்தான். இதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய நவீன உலகத்தின் மிகவும் ஆச்சர்யப்படும் மனிதர்களில் ஒருவராக இருக்கிறீர்கள்.

எப்படி உங்களால் அறுபது ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கப்போவதை இத்தனை தூரம் சரியாய் ஊகிக்க முடிந்ததென்பதை அறிய பல விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் தனிநபரின் ஒத்துழைப்பில்லாமல் அவரிடம் இருந்து இன்பர்மேஷன் வாங்குவது நவீன உலகத்தில் தவறான காரியம் ஆதலால், உங்களின் ஒத்துழைப்பிற்காக காத்திருக்கிறார்கள்.”

என்று சொன்னதும் தான் தாமதம், அவருடைய நினைவில் சில பல டாக்டர்களின் பயோடேட்டாகள் வந்து போய்க்கொண்டிருந்தன.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In பயணம் புகைப்படம் லதாக் பயணம்

இன்னும் கொஞ்சம் லதாக் படங்கள்

Girl @ Leh Road

Girl @ Pang

Hiding

Proud Mother

Lovely smile

Smile

IMG_9119

Smile

Girl in Leh Market Area

Road to Leh

Road to Hanle

Hanle - Leh

Road to Leh

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

மௌனத்தில் உறைந்திருக்கும் சுயம் - Children of a lesser god



வெகு சில படங்கள் பார்த்து முடித்ததும் மனம் ஜில்லென்று ஆகிவிடுவதுண்டு, பெரும்பாலும் சந்தோஷமான முடிவுகளைக் கொண்டிருக்கும் படங்களில் தான் இந்த உணர்வு வரும். சோகமான முடிவுகளைக் கொண்டிருக்கும் அட்டகாசமான படங்கள் வெகு காலத்திற்கு மனதில் தங்கினாலும் படம் பார்த்து முடித்ததும் காற்றில் பறக்கும் உணர்வைக் கொண்டுவருவதில்லை. சமீபத்தில் பார்த்த Children of a lesser god படமும் அப்படித்தான், காற்றில் பறக்கும் அனுபவத்தைத் தந்தது. மெலோடிராமா தான் என்றாலும் இன்னும் அதன் முடிச்சுகளில் இருந்து விலகிவிடவில்லை என்பதால் ரசிக்க பறக்க முடிந்தது. பொன்னியின் செல்வனின் மணிமேகலைக்கும் வந்தியத்தேவனுக்குமான உரையாடல், பயணிகள் கவனிக்கவும்-ல் ஜார்ஜினாவிற்கும் சத்தியநாராயணாவிற்குமான உரையாடல், என் பெயர் ராமசேஷனில் வரும் ராமசேஷன் - பிரேமா, ராமசேஷன் - மாலா உரையாடல்கள் என்று உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் புத்தகத்தில் இருந்து கூட அந்த உணர்வு சில சமயங்களில் வருவதுண்டு, இதை வேண்டுமானால் pleasure of text என்று சொல்லலாம்.

Children of a lesser god திரைப்படத்தின் கதை சுலபமானது, கவிதை போன்றது. மனதைப் பற்றியதாயும் உள்ளுணர்வுகளைப் பற்றியதாயும் சுயத்தைப் பற்றியதாயும் திரைக்கதை விரிகிறது. சுயத்தை இழக்க விரும்பாத ஒரு காது கேட்க இயலாத பெண்ணைப் பற்றியதும், அந்தப் பெண் இழக்கப்போவதாய் நினைப்பது சுயமே இல்லை; அவள் இழக்கப்போவதாய் நினைக்கும் சுயத்தின் விளைவாய் அவள் வாழ்க்கைக்கான இன்னொரு சாளரம் திறக்கப்போகிறது என்றும் தீவிரமாய் நம்பும் ஒரு ஆணைப் பற்றியதுமானது இக்கதை. மொழி படத்தில் நான் இல்லாததாய் உணர்ந்தது என்னவென்று இந்தப் படம் பார்த்ததும் புரிந்து கொண்டேன். ராதாமோகனின் 'மொழி' படத்திற்கான உந்துதல் இந்தப் படத்திலிருந்து கிடைத்திருக்கும் என்றே நினைக்க வைக்கிறது இந்தப் படத்தில் வரும் பல காட்சிகள், இல்லாமலும் இருக்கலாம். ஏகப்பட்ட ஒற்றுமைகள் இரண்டு படத்திற்கும் இடையில், அது இங்கே தேவையில்லாதது நிறுத்திக் கொள்கிறேன்.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நினைத்துக் கொண்டேன், don't tell me she(heroine) can actually hear and speak என்று, கடைசியில் அது உண்மையாகி அந்தப் பெண்ணால் உண்மையிலேயே கேட்க முடியாதென்று தெரிந்த பொழுது வருத்தமாகயிருந்தது. அற்புதமான டேலண்ட், இந்தப் படத்திற்காக Marlee Matlinக்கு சிறந்த நடிகைக்கான அக்காதமி அவார்ட் கிடைத்திருக்கிறது. William Hurtற்கு சிறந்த நடிகருக்கான அக்காதமி ஏன் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் உண்டு என்றாலும் சந்தோஷமாகயிருந்தது.

ஹீரோ காதுகேளாதோர் பள்ளிக்கு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பேசக் கற்றுத் தருவதற்காக வருகிறார். அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஹீரோயினை அவர் முதன் முதலில் சந்திக்கும் இடத்திலேயே அவளுடைய கோபத்தின் காரணமாய் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் ஒரு விருப்பம் வந்து விடுகிறது. ஆனால் பின்னர் ஹீரோயின் "she is one of the brightest students we ever had" என்ற அறிமுகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அந்தப் பள்ளியில் சுத்தம் செய்யும் பெண்ணாய் வேலை செய்யும் விஷயம் தெரிந்ததும் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள முயலும் ஹீரோவுக்கு அவளுடைய பிரச்சனை புரியவருகிறது. அதன் பின்னர் அந்தப் பிரச்சனையை ஹீரோ எப்படித் தீர்த்து வைக்க முயல்கிறார், முடிந்ததா என்பது தான் கதை.

அந்தப் பிரச்சனை மிக முக்கியமானதாக இருப்பதுவும், ஏனோ தானோவென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அந்தப் பிரச்சனையை அணுகாமல் இருப்பதுவும் தான் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்திருப்பதற்கான காரணங்கள். ஹீரோயினின் பிரச்சனை எல்லோரும் அவளையே 'லிப் ரீடிங்' கற்றுக் கொள்ளச் சொல்வதும், பேச முயற்சி செய்யச் சொல்வதும் தான். ஏன் மற்றவர்கள் 'Sign language' கற்றுக் கொள்ளக் கூடாது என்பது அவள் கோபம். இதில் முக்கியமான இன்னொரு பிரச்சனை ஹீரோவின் வேலையே காது கேளாத மக்களுக்குப் பேசக் கற்றுக் கொடுப்பது தான். ஹீரோவுக்கு 'Sign language' தெரியுமென்றாலும் அத்தனை வேகம் கிடையாது, ஆனால் அதை விட பெரிய பிரச்சனை ஹீரோயினை தொடர்ந்து பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது தான்.

இப்படி ஹீரோயினை பேசக் கற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதில் தொடங்கும் ஒன்று, பின்னர் காதலாக மாறி அவர்களை சேர்ந்து வாழும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக ஹீரோ, ஹீரோயினை பேசச் சொல்வது அவளுக்கு அவள் சுயத்தை இழப்பதைப் போன்று தோன்றுவதால் இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஹீரோயினின் இளமைப் பருவத்தில் அவளுடன் பழக நினைத்த ஆண்கள் எல்லோரும் ஒரு உரையாடலை/தொடக்கத்தைக் கூட அவளிடம் செய்யாமல் நேரடியாய் உடலுறவையே நினைத்தது அவளை இன்னும் கோபத்தில் கொண்டு போய் மேலும் அவளைத் தனிமைப் படுத்தியிருப்பது ஹீரோவிற்கு புரியவருகிறது. அவளை 'அவள் எப்படி இருக்கிறாளோ' அப்படி ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதாடுவதில் இருக்கும் உண்மை ஹீரோவிற்குப் புரிந்தாலும் பேச முடியாததும், 'உதடுகளைப் படிக்க' முடியாததும் அவளைத் தனிமைப் படுத்துகிறது என்று நினைப்பதால் ஹீரோ தொடர்ச்சியாக அவளை அவள் விரும்பாததை செய்யச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறான்.

கடைசியில் ஹீரோவும் சரி ஹீரோயினும் சரி தங்கள் பக்கமும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததும் இருவரும் இணைய படம் சுபம்.

ஹீரோயின் மார்லி மாட்லின் இயற்கையிலேயே காது கேட்க முடியாதவர் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு அருமையாக ஒன்றிப் போய்விடுகிறார், படத்தின் ஆரம்பப் பகுதி முழுவதும் கோபக்காரராக வந்துவிட்டு முகத்தை தூக்கிக் கொண்டே வந்துவிட்டு இடையில் ஒரு முறை சிரிக்கும் பொழுதுதான் தெரிகிறது எத்தனை அழகாய் இருக்கிறது அவருடைய புன்னகை என்று. எனக்கென்னமோ கையில் பூனைக் குட்டியுடன் ஹீரோவிற்காக அவர் வீட்டின் முன் காத்திருக்கும் பொழுது அவர் சிரிப்பது விகல்ப்பமில்லாமல் வந்திருப்பதாகப் படுகிறது. அழகான பெண், கோபப்படும் பொழுதும், சிரிக்கும் பொழுதும், ஒவ்வொரு முறையும் 'Sign' செய்யாமல் ஹீரோ பேச முயலும் பொழுதும் தன் தலையைத் திருப்பி அவர் உதட்டை படிக்காமல் இருக்கும் பொழுதும், உணர்ந்து செய்திருக்கிறார். காட்சிகள் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது எனக்கு.

ஹீரோவாக வில்லியம் ஹர்ட், மாட்லின் போலில்லாமல் படத்திற்காக 'Sign language' கற்றுக் கொண்டிருப்பாராயிருக்கும். அவர் எப்படி இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ஆச்சர்யமே வருகிறது ஒவ்வொரு முறையும் அவருடைய கதாப்பாத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது. அவருக்கு எதிரில் நடிப்பவர்கள் செய்யும் 'Sign'ஐ தனக்குத் தானே சொல்லிக் கொண்டும் தன்னுடைய வசனங்களை 'Sign'உடன் பேசிக் கொண்டும் நடிப்பது பெரிய விஷயம். இது எல்லாவற்றையும் விட முக்கியமானது இப்படிச் செய்யும் பொழுது அவர் கஷ்டப்படுகிறார் என்பது போன்றோ, அவர் நடிக்கிறார் என்பது போன்றோ தெரியாமல் இருப்பது. அவருடைய நடிப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. மாட்லின் உடைய கோபத்தைப் பார்த்து சிரிப்பது, அவள் சுயத்தின் மீது காரணத்தைச் சொல்லி தனிமைப் படுத்திக் கொள்ளும் பொழுது வருத்தப் படுவது, துரத்தி துரத்தி அவளைப் பேசச் சொல்வது, பின்னர் இருவரும் பிரிந்து வாழும் சமயத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே இருப்பது என தன் பங்கிற்கு படம் காண்பித்திருக்கிறார் மனிதர்.

இதைத்தவிர்த்தும் மற்ற காது கேளாத மக்களை நம்மிடையே பள்ளி மாணவர்களின் வழியாய் காண்பித்திருக்கிறார் இயக்குநர் Randa Haines, எனக்கு இந்தப் படம் பார்த்ததில் இருந்து Sing language கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகயிருக்கிறது அதை ஆசையாய் முடித்துக் கொள்ளாமல் எதுவும் சீரியஸாய் செய்யவேண்டி இந்தப் பேச்சை இங்கே முடித்துக் கொள்கிறேன்.

வசனங்கள் அத்தனையும் அருமை என்று சொல்லலாம், எல்லா வசனங்களுமே ரொம்ப 'ஷார்ப்'. Broadwayயில் நாடகமாக வந்து கொண்டிருந்ததை படமாக எடுத்ததால் அவர்களுக்கு இந்த வரம் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். நான் கதை எழுதும் பொழுதெல்லாம் மெல்லிய நகைச்சுவை இருப்பது போலவே கதை எழுதி வந்திருக்கிறேன், எனக்கு இந்த மெல்லிய நகைச்சுவையின் மீது காதல் உண்டு. ஆனால் முழுநீள நகைச்சுவையின் மீதல்ல, நான் இதுவரை முழுநீள நகைச்சுவையாய் எதுவும் எழுதிய நினைவு இல்லை. எனக்கு இந்தப் படம் பிடித்திருந்ததற்கான இன்னொரு முக்கியக் காரணம் இதன் வசனங்கள்.

கடற்கரையில் ஹீரோ, ஹீரோயினியிடம் முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, "Hey you want to play stand up sit down again" விற்கு பதில் சொல்லாமல் ஆனால் அந்தக் கேள்வி எழுப்பிய உணர்வால் மனதால் சிரித்து அதன் எதிரொளிப்பு சிறியதாய் முகத்தில் தெரிய, ஹீரோ சொல்லும் "Ohh careful, you almost smiled"ல் கடுப்பாகி முறைக்க ஹீரோ மீண்டும் சொல்லும், "Ahh Thats the girl, Thats Sarah Norman we all know and love" வசனம் காட்சியை கேரக்ட்டரைசேஷனை சிறிய வசனங்கள் மூலம் நகைச்சுவையாகச் சொன்ன தந்திரம் பிடித்திருந்தது.

ஹோட்டலில் ஒன்றில் ஆர்டர் எடுக்க வரும் சர்வர், ஹீரோயின் ஹீரோவிடம் Sign languageல் பேசுவதைப் பார்த்து அதிசமயாகப் பார்க்க அதற்கு ஹீரோயின் சர்வர் தன்னை முட்டாளாகப் பார்க்கிறான் என்று சொல்ல, ஹீரோ "He doesnt think you stupid, he thinks you a deaf." என்று சொல்லும் பதிலில் திருப்தியடையாமல் ஹீரோயின் மீண்டும், காதுகேட்கும் மக்கள் தங்களை(காது கேளாதவர்களை) முட்டாளாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல, ஹீரோ சொல்லும், "Only stupid hearing people thinks that deaf people are stupid" என்ற பதிலில் ஹீரோயின் கண்களில் தெரியும் நன்றியுணர்ச்சி ஒரு கவிதை. எனக்குத் தெரிந்து அவளுக்கான காதல் இங்கே தொடங்குவதாகத்தான் நான் நினைக்கிறேன்.

ஹீரோயின் தான் டான்ஸ் ஆட விரும்புவதாகச் சொல்லும் காட்சியில், ஹீரோ கேட்கும், "Can you feel it?"ற்கான பதிலாய் ஹீரோயின் முகத்தை அசைத்து ஆமென்று சொல்லிவிட்டு சைகையில் "vibrations..." "...through my nose" என்று சொல்லி ஹீரோவை நக்கல் செய்வது.

ஹீரோவை டான்ஸ் ஆட அழைத்துச் சென்றுவிட்டு அவள் மற்றும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக ஆடிக் கொண்டிருக்க ஹீரோ அவள் நகர்தலில் மயங்கி நின்று கொண்டிருக்க, அவள் தனியாய் ஆடும் சூழ்நிலையை ஒப்பு/ஏற்றுக் கொள்ளும் அந்தப் பாடல் முடிந்து ஜோடியாய் ஆடும் பாடல் வந்ததும்; அதிர்வு இல்லாததால் கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு எல்லோரும் ஜோடியாய் ஆடத் தொடங்கியதை அறிந்து கொண்டு ஹீரோவைப் பார்க்கும் பொழுது ஹீரோ முகத்தில் 'இப்ப என்ன செய்வ' என்பதைப் போன்ற உணர்ச்சி ஒரு ஹைக்கூ கவிதை.

தொடர்ச்சியாய் அறை ஒன்றில் ஹீரோயின் ஹீரோவிடம் தான் ஏன் பேசவிரும்பவில்லை என்பதற்கு தன்னுடன் படுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன் பின்னால் அலைந்த பையன்கள் பற்றியும் அவர்கள் ஒரு கோக் வாங்கிக் கொடுத்து தன்னுடன் பேசவிரும்பாமல் தன்னுடன் படுப்பதையே குறியாக வைத்திருந்ததைச் சொல்லிவிட்டு தன்னைப் பற்றி ஹீரோவும் அப்படித்தான் நினைப்பதாகச் சொல்லி அவனைக் கோபப்படுத்தும் காட்சி ரொம்பவும் இறுக்கமானது அதன் வசனங்களும் அப்படியே.

ஹீரோயினை தன் வீட்டிற்கு அழைக்கும் காட்சியில் ஹீரோ கேட்கும் உனக்கு என்ன வேண்டும் என்ற கேள்விக்கு, நீ என்றும் குழந்தைகள் என்றும் சொல்லிவிட்டு பின்னர் காது கேளாத குழந்தைகள் என்று சொல்ல ஹீரோ, நான் எனக்கு காதுகேளாத குழந்தை வேண்டும் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்துவிட்டு ஆனால் அப்படி இருந்தால் அதில் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லும் வசனம்.

தனக்காய் ஹீரோ பேசுவது பிடிக்காமல் சண்டை போட ஆரம்பிக்கும் ஹீரோயின், தன்னை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்ற நினைப்பதும் தனக்காய் பேச ஆரம்பிப்பதும் பிரச்சனையாய் மாறுவதைச் சொல்லிவிட்டு.

"Until you let me being an I where you are, you can never come inside my silence and know me and I wont let myself know you. Until that time we cant be like joined."

என்ற வசனத்தோடு இந்த வசனக் கதையை விட்டுவிடுகிறேன். இந்தப் படத்தை நான் இஞ்ச் பை இஞ்ச் ஆக ரசித்துப் பார்த்ததன் விளைவு என்னால் எதையுமே விடமுடியவில்லை. கடைசியில் அந்த மௌனத்தை உடைத்துக் கொண்டு அதில் உறைந்திருந்த சுயத்தை ஹீரோ எப்படி உணர்ந்தான் என்பது தான் Children of a lesser god படத்தின் கதை. அற்புதமான படம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூட சொல்லலாம்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

Popular Posts