Tuesday, April 1 2025

In கவிதைகள்

திருத்தி எழுதப்படுமா தீர்ப்புகள்?

கேள்விகளுக்கானஎன் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றனதெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்பிரபஞ்சத்தை அதன் நீள அகல உயரங்களுக்குவிரும்பும் என்னை, என் நீள அகல உயரங்களுக்குஅர்பணித்தப் பின்னும் ஜன்னல்களுக்கான பயமில்லை என்பதாய்ஜன்னல்கள் இல்லாமல் போன வீடுகளைபெரும்பாலும் புறக்கணித்தப்படியே என் பயணம் தொடர்கிறதுவீதிக்கு வந்துவிட்ட வீடுகள் ஜன்னல்கள் இல்லாமல்போராட வந்துவிட்டு வலிகளுக்காக புலம்புவதைப் போல்முகத்தில் படறும் குறுநகை மறைக்கப்படுவதில்லைமறைக்கப்படாததாலேயே குறுநகை இகழ்ச்சிக்குரியதாய் நீள்கிறதுநீண்டு கொண்டேயிருக்கும் இரவுபொழிந்து கொண்டேயிருக்கும் பனிநகர்ந்து கொண்டேயிருக்கும் நான்கேள்விகளுக்கானஎன் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றனதெரிவிக்கப்பட்ட கல்லறை...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா விமர்சனம்

Bridge to Terabithia

இப்படி ஒரு படம் தமிழில் வராதா என்று நான் ஆச்சர்யப்படும் படங்கள், நான் லீனியர், டிரை லாஜி படங்களை மட்டுமில்லை. கொஞ்சம் ஜிம்மிக்ஸ் கலந்த ஆனால் திறமையான நடிகர்களால் நேரம் போவதே தெரியாமல் செய்யும் பிரிட்ஜ் டு தெரிபிதியா போன்ற படங்களையும் தான். மிகச் சாதாரணமானக் கதை, படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு கிராபிக்ஸால் பிரமாதப்படுத்தப்படப்போகும் ஒரு படத்தைப் பார்க்கும் ஆர்வம் தான் இருந்தது. அதுவும் "க்ரோகினிகல்ஸ் ஆப்...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In புத்தகங்கள்

புலிநகக் கொன்றை

புலிநகக் கொன்றை எனக்கு அறிமுகமானது மரத்தடியில். சாதாரணமாகவே அந்தக் காலக்கட்டத்தில் கிடைத்ததையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். சூழ்நிலை அப்படி, கேன்பேவில் பெஞ்சில் இருந்த காலக்கட்டங்கள் அவை. அப்படிப்பட்ட ஒரு நாளில் அறிமுகம் ஆனது தான் புலிநகக் கொன்றை. மரத்தடி மக்கள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தப் புத்தகம். இன்னும் சிலர் தாங்கள் படித்ததிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்றெல்லாம் எழுதி ஓவர் ஹைப் கிடைத்திருந்த புத்தகம். ஆனால் கைகளில் அந்தப் புத்தகத்தைப்...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் புத்தகங்கள்

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

இந்தத் தலைப்பில் ஒன்றை சுரேஷ் கண்ணன் எழுதியிருந்த பொழுதே அய்ட்டம் பிடித்திருந்ததால் எழுதியிருந்தேன். ஆனால் எங்கும் லிங்க் கொடுக்கவில்லை. இப்பொழுது கார்த்திக் பிரபு இதே போன்ற ஒன்றை எழுதி என்னைத் தொடருமாறு அழைத்திருந்தார்.நான் ஏற்கனவே எழுதியதை மறுபதிவிடுகிறேன். எனக்குத் தொடர்ச்சியாய் லிங்க் கொடுத்துக்கொண்டே போவதில் விருப்பம் கிடையாது என்றாலும், பொன்ஸை Tag செய்கிறேன். விருப்பப்பட்டால் போடலாம்.-----------------------------------பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள்...

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

ஆஸ்திரேலியா - உலகக் கோப்பை

போன தடவையும் இதேபோல் ஒரு மாப் போட்டுக்கொடுத்தேன். 90% அப்படியே நடந்தது. ஏன்னா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வச்சு போட்ட மாப் அது விஷயம் என்னான்னா, ஆஸ்திரேலியா ஒரு மாட்ச் கூட வேர்ல்ட் கப்பில் தோற்காது என்பதுதான்.அப்படியே நான் சொன்ன இன்னொன்று இந்தியா பைனல்ஸ் வருமென்பது, பைனல்ஸ் ஒன் சைட்டைட் மேட்ச் ஆகயிருக்கும் என்பதும் தான். எனக்கென்னவோ நான்காண்டுகளுக்குப் பிறகும் மாற்றம் எதுவும் தெரியவில்லை. கீழே...

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

The Beautiful Mind - John Nash - Game Theory

நான் இந்த திரைப்படத்தை முதன் முதலில் பார்த்த பொழுது, எல்லா ஆங்கில திரைப்படங்களைப்போல இதுவும் முழுமையாக விளங்கவில்லை. அதற்கு என் ஆங்கில அறிவுத்திறனே காரணம். சின்ன வயதில் இந்திப்படங்கள் பார்த்ததைப்போலத்தான் நான் ஆரம்பத்தில் ஆங்கிலப்படங்கள் பார்த்து வந்துள்ளேன். அதாவது முதலில் படத்தின் சூழ்நிலையை(situation) நன்றாக புரிந்து கொள்வது, பிறகு சம்பவத்தின் சூழ்நிலையை புரிந்துகொள்வது, பிறகுதான் உரையாடல்கள், யார் கொடுத்த வரமோ சூழ்நிலைகளை கொஞ்சம் சரியாக புரிந்து கொள்ளத்தெரிந்ததால்,...

Read More

Share Tweet Pin It +1

20 Comments

In வகைப்படுத்தப்படாதவை

கட்டபொம்முவும் உண்மையும்

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது வியப்பளிக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும்...

Read More

Share Tweet Pin It +1

23 Comments

In கவிதைகள் சொந்தக் கதை

எழுதப்படாத என் கவிதைகள்

பாப்லோ நெருதாவைப் பற்றி எழுத அரிப்பெடுக்கும் என் நினைப்பை மட்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உள்ளிருந்து வெளிப்பட்டதும் மறைந்துபோய்விடுவதாய் நினைக்கும், மீண்டும் இன்பக்கிளர்ச்சி வருவதேயில்லை.--------------------------நழுவிச் செல்லும்சொற்களைப் படிமமாக்கிஅழகுபடுத்தப்படும்அக்கவிதைஒருமுறை படிக்கப்பட்டதும்இறந்துபோனதாய் உணரப்படுவதால்அழிக்கப்படுகிறதுஇரைச்சலுடன் பறந்துபோகும்சொற்களைப் பார்த்தவாறேநிரப்பப்படாத பக்கங்களாய்எழுதப்படாத என் கவிதைகள்.- நான் தான் எழுதினேன். ...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

எனக்கும் மகாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமை

இதையொன்னும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும் என்று இல்லை. என் பெயரைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாத சில விஷயங்களைப் பத்தி மட்டும் இங்கே பார்ப்போம்.எனக்கு உண்மையில் மோகன்தாஸ் என்று பெயர் வைத்தது, மக நட்சத்திரம் சிம்ம ராசிங்கிறதால மட்டும் தான் என்பது தான் உண்மை.(சரி சரி உண்மையைச் சொல்லவேண்டியது தானே. ஆனால் எனக்கு நட்சத்திரம் 'பொச்'சத்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லை - அதற்காக பெயரை மாற்றுவதாகவும் உத்தேசம் இல்லை)....

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ்

குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் ஜல்லியடித்தலும்

அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறதுக்கு முன்னாடியே குவாண்டம் கம்ப்யூட்டிங் அப்பிடின்னு ஒன்னு இருக்குறது தெரியும் ஆனா அப்பிடின்னா என்னன்னு சுத்தமாத்தெரியாது. பின்னாடி கொஞ்சம் கூகுளிட்டு, கொஞ்சம் விக்கியிட்டு தெரிஞ்சிக்கிட்டதை(தெரிஞ்சிக்கிட்டதா நினைச்சிக்கிட்டதை) ஜல்லியடித்துவிட்டு போகலாம்னுதான் இந்த பதிவைப்போட்டிருக்கேன்.இதைப் படிக்கப்படிக்கத்தான் குவாண்டம் கம்ப்யூட்டிங்கோட சீரியஸ்னஸ் தெரியவந்தது.(கொஞ்சம் பில்டப் கொடுக்கணும்ல). அந்த காலத்தில கம்ப்யூட்டர் எல்லாம்...

Read More

Share Tweet Pin It +1

27 Comments

In Only ஜல்லிஸ்

குரு இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்

மிக நிச்சயமாக 'குரு' மணிரத்னத்தின் ஆகச் சிறந்த படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்... படம் நெடுகிலும் கண்ணீரை அடக்கமுடியாமல் பார்த்ததென்பது எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆனால் காட்சிகள் எதுவும் மிகை உணர்ச்சி செண்டிமெண்ட்டல் வெளிப்பாடுகளாக இல்லை. இதையெல்லாம் சொல்வது நானில்லை, சாரு நிவேதிதா. இங்கே படிக்கலாம் ஆகக்கூடி பத்ரியும் இவரைத்தான் சொன்னதாக நினைக்கிறேன். ...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி

நான் காதலித்த கதை

இது என் காதல்(சொல்லலாமா தெரியவில்லை, வேண்டுமென்றால் விடலை காதல்) கதை, இதில் ஒரு குடும்பமும் ஒரு பெண்ணும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை எதையும் தவறாக எழுத போவதில்லை நான். சில முக்கியமான காரணங்களுக்காக நான் பெயரையும் இடத்தையும் மாற்ற முடிவு செய்திருக்கிறேன். மற்றபடி நடந்த நிகழ்வுகளே இந்தக் காதல்(வைத்துக் கொள்கிறேன்)கதை.இது நடந்த பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் மீனா எட்டாம்...

Read More

Share Tweet Pin It +1

26 Comments

In ஓவியம்

இன்னும் கொஞ்சம் ஓவியங்கள்

இதெல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்பு வரைந்தது பத்து வருஷமாவது இருக்கும். என்னுடைய பழைய வெப்சைட்டில் கிடைந்தன. எதற்கும் இருக்கட்டுமே என்று. இன்னும் சில பெண் ஓவியங்கள் உண்டு ஆனால் கொஞ்சம் போல் நன்றாகயிருக்காது. அதனால் அப்படியே தூங்குகின்றன. ...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In ஓவியம்

எனது ஓவியங்கள்.

முக்கியமா ஒன்னு நான் ஓவியனெல்லாம் ஒன்னும் கிடையாது. சொல்லப்போனால் ஓவியம் வரையரதப்பத்தியும் ஒன்னும் தெரியாது. ம.செ ஓவியங்களைப்பார்த்து கத்துக்கிட்டதுதான். அதனால் ஓவியத்தில் தவறு இருந்தால் மன்னிச்சுறுங்க.முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைவதற்கு முன் நான் வரைந்த படங்களை போட்டதாக ஞாபகம், ஆனாலும் அந்தப்படங்கள் நான் வரைந்ததுதானா என பலரும் சந்தேகம் எழுப்புவதால் அதன் சுருக்கப்பட்ட படங்களை போடுறேன். (சைஸ் கம்மிங்கோ).நம்புக்கப்பா!!! ...

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி

நாற்றத்தை உணரும் சக்தி போல் எனக்கு பிரச்சனைகளையும் உணரும் சக்தி வந்துவிட்டதாக நான் நினைக்கத் தொடங்கியதற்கு, அக்கா போன் செய்ததும் அவளால் வரப்போகும் பிரச்சனையை முன்கூட்டியே கண்டுபிடித்தது மட்டும் காரணம் கிடையாது. என்னை அவள் வீட்டிற்கு வந்து அவளை பிக்கப் செய்து கொள்ளச் சொல்லும் பொழுதே எனக்குத் தெரிந்துவிட்டிருந்தது இன்றைக்கு வீட்டில் புயல் கிளப்பப்போகிறாள் என்பது. ஆனால் எனக்குப் புரியாத ஒன்று அந்த விஷயத்தை யார் இவளுக்கு...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In பெங்களூர்

பெங்களூரில் இன்று

பெங்களூரில் வியாழக்கிழமை பந்த் அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லாக் கம்பெனிகளும் பள்ளிக்கூடங்களும் விடுமுறை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.கட்டிடங்கள் ஏற்கனவே மஞ்சள்/சிகப்பு கொடிகளை கட்டிக்கொண்டு நிற்கின்றன.தமிழ்சானல்கள் கருப்படிக்கப்பட்டு நாளாகிறது. போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பெங்களூருக்கும் இடையில் இல்லை. அவசர ஆத்திரம் என்றால் கூட பெங்களூரில் இருந்து கேரளாவோ, ஹைதராபாத்தோ சென்றுதான் தமிழ்நாடு வரமுடியும் என்று நினைக்கிறேன். பிளைட் ஒன்று உண்டு பெங்களூரையும் திருச்சியை கனெக்ட் செய்ய, கிங் பிஷர். மொத்தமாக பிசியாக...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

அய்யா லீவு

Hello,As many of you are aware, it is anticipated that there may be some violence and disruptions on the streets today based on the result of the Cauvery Water Disputes Tribunal. Thousands have police have been drafted in to help enforce law and order and hopefully maintain peace...

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுய சொறிதல் பெங்களூர்

என்ன நடக்கும் இன்று பெங்களூரில்

நாளைக்கு(நேற்றே எழுதியது) காவிரி பற்றிய தீர்ப்பு வெளிவரயிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் நாள் குறித்தவுடனேயே எங்கள் வீட்டிலிருந்து போன் மேல் போன் வந்துகொண்டிருக்கிறது பத்திரமாகயிருங்கள் என்று. ஏனென்றால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. பஸ்கர் எரிக்கப்படலாம், ஆட்டோக்கள் கொழுத்தப்படலாம். கூடவே சில மனிதர்களும், அம்மா எப்பொழுது சொல்வார்கள் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்கா இருக்காதே என்று எனக்குத் தெரியவில்லை நான் பெங்களூரைப் பார்த்து பயப்படுவதை பார்த்தால் நானெல்லாம் ஆப்டிமிஸ்டிக்கா என்ற...

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In புத்தகங்கள்

மோகமுள்

"இதற்குத்தானே", "இதற்குத்தானே" என்று இரண்டு நாட்களாக மனம் அலைபாய்கிறது, காரணம் உண்டு. பாலகுமாரன் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்று எழுதியிருந்த பொழுது அதனால்தால் பிரபலமானது இந்த டெர்ம் என்று நினைத்திருந்தேன். ஆனால் "மோகமுள்" படித்ததும் இந்த ஒரு வார்த்தை தான் மனதில் ஒட்டிக்கொண்டு நகரவே மாட்டேன் என்கிறது. நான் முன்பே மரப்பசு படித்திருக்கிறேன், மோகமுள் பார்த்திருக்கிறேன்.நான் படிக்காமல் போனதற்கு பல காரணங்கள், முதலில் புத்தகத்தின் தலைப்பு இந்தத்...

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சினிமா விமர்சனம்

என்னுடைய கதை ஹாலிவுட்டில்

உண்மையில் இந்தத் தலைப்பைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியாகியிருந்தீர்கள் என்றால், நானும் அது போன்ற ஒரு சூழ்நிலைக்குத்தான் தள்ளப்பட்டேன் Deja vu படம் பார்த்த பொழுது. படம் ஒருவாறு இதைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று நினைத்துச் சென்றிருந்தாலும் ஒருவாறு நான் உபயோகப்படுத்த நினைத்த கதை. தனித்தனியாக, பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல் என்று அந்தக் கதையெழுத நிறைய படித்திருந்ததால் கொஞ்சம் போல் நிறைய விஷயங்கள் புரிந்தது....

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In

சில விளக்கங்கள்

உண்மையில் செல்வநாயகியின் கடைசி பதிவு படிக்கும் பொழுதுதான் தெரிந்தது அவர் மனதளவில் என்னுடைய கதைகளாலோ, கதைத் தலைப்புக்களாலோ, பின்னூட்டங்களாலோ வருத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. சில தடவைகள் அவருடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைக்கவேண்டுமே என்று கதையெழுதியிருக்கிறேன் உண்மை.ஆனால் அவர் நினைப்பது போல் தெய்வநாயகி நிச்சயமாக அவரை வம்பிழுக்க வேண்டும் என்றோ மற்றும் இன்னபிற விஷயங்களை நினைத்தோ எழுதுப்படவில்லை. அந்தக் கதை இந்தப் பிரச்சனைகள் எல்லாம் எழுவதற்கு முன்பே எழுதப்பட்டது....

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Only ஜல்லிஸ்

நான் வேலை பார்க்கிறேனா இல்லையா?

இதுதான் இப்ப தமிழ்மணத்தின் ரொம்ப முக்கியமான கேள்வியா உலவுதுன்னு சொன்னா அப்புறம் நான் தினம் தினம் பார்க்கும் என் ஸ்டாட் கவுண்டர் தப்பா சொல்லுதுன்னு அர்த்தம் ஆய்டும். அதனால் ஒருவாறு கேள்வியா இருக்கு.இந்த வாரம் ஒரு ஐந்து திரைப்படங்களின் விமர்சனங்களைப் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதற்காக போன லாங் வீக் எண்டிலேயே எழுதிவைக்கப்பட்டு ப்ளாக்கரில் காத்திருந்தன ஐந்து விமர்சனங்கள் நாளொன்றாக வெளியிடப்படுவதற்கு.என் முதலாளிக்கு நான் நல்லவனாயிருக்கிறேனா என்று...

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

21 Grams

ஒரு கவித்துவமான தலைப்பைக் கொண்ட கவித்துவமான படம். சொல்லப்போனால் Babelனை எடுக்க இயக்குநர் உபயோகித்த அதே அணுகுமுறை(சொல்லப்போனால் தலைகீழாக வரும்.) Non-Linear, Tri Logic படத்திற்கான ஒரு அற்புதமான உதாரணம். Babel பார்த்துமுடித்ததும் எப்பொழுதும் போல் அந்தப் படத்தைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டதுதான் கிடைத்தது 21 Grams படம் பற்றிய குறிப்புகள்.இதயம் பழுதடைந்த ஒரு கணித ஆசிரியர், அவரை பார்த்துக்கொள்ளும் முன்னாள் மனைவி. இந்நாள் காதலி -...

Read More

Share Tweet Pin It +1

2 Comments

Popular Posts