In கவிதைகள் சொந்தக் கதை

எழுதப்படாத என் கவிதைகள்



பாப்லோ நெருதாவைப் பற்றி எழுத அரிப்பெடுக்கும் என் நினைப்பை மட்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உள்ளிருந்து வெளிப்பட்டதும் மறைந்துபோய்விடுவதாய் நினைக்கும், மீண்டும் இன்பக்கிளர்ச்சி வருவதேயில்லை.

--------------------------

நழுவிச் செல்லும்
சொற்களைப் படிமமாக்கி
அழகுபடுத்தப்படும்
அக்கவிதை
ஒருமுறை படிக்கப்பட்டதும்
இறந்துபோனதாய் உணரப்படுவதால்
அழிக்கப்படுகிறது
இரைச்சலுடன் பறந்துபோகும்
சொற்களைப் பார்த்தவாறே
நிரப்பப்படாத பக்கங்களாய்
எழுதப்படாத என் கவிதைகள்.

- நான் தான் எழுதினேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

எனக்கும் மகாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமை

இதையொன்னும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும் என்று இல்லை. என் பெயரைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாத சில விஷயங்களைப் பத்தி மட்டும் இங்கே பார்ப்போம்.

எனக்கு உண்மையில் மோகன்தாஸ் என்று பெயர் வைத்தது, மக நட்சத்திரம் சிம்ம ராசிங்கிறதால மட்டும் தான் என்பது தான் உண்மை.(சரி சரி உண்மையைச் சொல்லவேண்டியது தானே. ஆனால் எனக்கு நட்சத்திரம் 'பொச்'சத்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லை - அதற்காக பெயரை மாற்றுவதாகவும் உத்தேசம் இல்லை). ஆனால் நான் சரி ஏதோ வைச்சது வைச்சிட்டாங்க நம்மலால முடிஞ்சது கொஞ்சம் கதையை சொல்லுவோம்னு, என் பெயர் எப்படி வந்ததுன்னு ஒரு கதை சொல்லுவேன் பெரும்பாலான இடத்தில் அந்தக் கதை.

எங்கம்மா அப்பாவிற்கு காந்தின்னா ரொம்ப பிடிக்கும், அது மட்டுமில்லாமல் காந்தி இறந்த அன்று(சொல்லப்போனால் அடுத்தநாள் ஆனால் அரைமணிநேரம் தான் என்பதாகவும் ஒரு கிளைக்கதை உண்டு) முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்ததால் தான் இந்தப் பெயரை வைத்தார்கள் என்று. பலர் அப்படியா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்(;)).

இதைச் சொல்லும் பொழுது இன்னொரு ஜோக் நினைவில் வருகிறது. பிறந்தப்ப என் மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்குமாம்(இப்ப இல்லையான்னு கேட்காதீங்க) அம்மாவுக்கு பக்கத்து பெட்டில் பிரசவம் செய்து கொண்ட பொண்ணு ஏன் இப்படி சப்பையா இருக்குன்னு கேட்க அம்மா, "அதுவா பஸ் ஏறிருச்சு"ன்னு சொன்னாங்களாம். அந்தம்மாவும் அப்படியான்னு கேட்டுக்குச்சாம். (So இது காலம் காலமா வருது...)

மற்றபடிக்கு எனக்கும் காந்திக்கும் தான் ஒற்றுமையிருக்குன்னு கதை சொல்றதுண்டா, அதனால நான் தண்ணியடிக்காம, தம்மடிக்காம இருக்கிறதுக்கும்(சரியா கவனிச்சுக்கோங்க மூன்றாவது கிடையாது!) காந்தி தான் காரணம் என்று ஒரு புகைச்சல் விடுறது வழக்கம். எப்படின்னா அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கினாங்கன்னு தான்.

இதுமாதிரி நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதுமுன்னு நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ்

குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் ஜல்லியடித்தலும்

அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறதுக்கு முன்னாடியே குவாண்டம் கம்ப்யூட்டிங் அப்பிடின்னு ஒன்னு இருக்குறது தெரியும் ஆனா அப்பிடின்னா என்னன்னு சுத்தமாத்தெரியாது. பின்னாடி கொஞ்சம் கூகுளிட்டு, கொஞ்சம் விக்கியிட்டு தெரிஞ்சிக்கிட்டதை(தெரிஞ்சிக்கிட்டதா நினைச்சிக்கிட்டதை) ஜல்லியடித்துவிட்டு போகலாம்னுதான் இந்த பதிவைப்போட்டிருக்கேன்.

இதைப் படிக்கப்படிக்கத்தான் குவாண்டம் கம்ப்யூட்டிங்கோட சீரியஸ்னஸ் தெரியவந்தது.(கொஞ்சம் பில்டப் கொடுக்கணும்ல). அந்த காலத்தில கம்ப்யூட்டர் எல்லாம் பெரிய பெரிய மெஷினா இருக்குமாம். பத்தையும் பத்தையும் பெருக்கி போடுன்னு சொல்லிட்டு, கீழே கடைக்குப்போய் காப்பி சாப்டுட்டு வந்துபார்த்தா, கணக்கு போட்டு முடிச்சிறுக்குமாம். இப்ப நமக்கு இதையெல்லாம் நினைச்சா சிரிப்புவரலை. பின்னாடி காலத்தில நம்ம பையன் பொண்ணெல்லாம்(பின்ன பெண்ணீயவாதியில்லையா!!!) நாம இப்ப உபயோகிக்கிற கிளாசிக்கல் கம்ப்யூட்டரைப்பார்த்து சிரிக்கும் நிலைமை நிச்சயமா ஏற்படும், இந்த குவாண்டம் கம்ப்யூட்டிங்கால.

அது என்ன விஷயம்னா வேறொன்னும் இல்லை, கம்ப்யூட்டர் படிச்சங்களோ இல்லையோ ஒருவிஷயம் தெரிஞ்சிருக்கலாம் அதாவது கம்ப்யூட்டரில் நாம என்ன என்ன வேலையெல்லாம் பண்ணாலும் கம்ப்யூட்டருக்கு (உண்மையிலேயே) தெரியறது 1 மற்றும் 0 தான்னு. அத்தனை விஷயத்தையும் இதிலயே நாம உபயோகிச்சித்தான் பண்ணிக்கிறோம் இல்லையா.

நீங்க கம்ப்யூட்டரில் 2 யையும் 3 யையும் பெருக்குன்னு சொன்னீங்கன்னா, அத வந்து கம்ப்யூட்டர், 0010 0011 அப்படின்னு 2 யையும் 3யையும் மாத்தி பின்னாடி உள்ளப்போய் லாஜிக்கேட்ஸில் விட்டு கூட்டி 1000 அப்பிடின்னு விடையை கிராபிகல் யூசர் இன்டர்பேசுக்கு அனுப்பி அந்த 1000 நம்மக்கிட்ட 6 ன்னு தெரியும்னு கதையெல்லாம் சொல்ல நான் விரும்பலை. அதை சொல்லறதுக்கான பதிவும் இது இல்லை.

இப்ப குவாண்டம் கம்ப்யூட்டிங்கல இருக்குற அட்வான்டேஜை மட்டும் நான் சுலபமா சொல்லிற்றேன். அதாவது நாம இப்ப உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டரில் உபயோகப்படுத்துறதுக்கு பிட் அப்பிடின்னு பேரு இதில 0 மற்றும் 1யை மட்டும் தான் பயன்படுத்தமுடியும். But quantum computer maintains a set of qubits. A qubit can hold a one, or a zero, or a superposition of these. A quantum computer operates by manipulating those qubits, i.e. by transporting these bits from memory to (possibly a suite of) quantum logic gates and back.

An n-bit binary word in a typical computer is accordingly described by a string of n zeros and ones. A quantum bit, called a qubit, might be represented by an atom in one of two different states, which can also be denoted as 0 or 1. Two qubits, like two classical bits, can attain four different well-defined states (0 and 0, 0 and 1, 1 and 0, or 1 and 1). But unlike classical bits, qubits can exist simultaneously as 0 and 1, இதை வைச்சிக்கிட்டே இப்ப இருக்கிற கம்ப்யூட்டரை விட அதிவேகமாக சிந்திக்கிற (அதாவது கணக்கு போடுற) கம்ப்யூட்டரை தயாரிக்க முடியும்.

இப்ப இதுக்கும் நாம ஆரம்பத்தில் பார்த்த ஒளியின் வேகத்தை குறைத்ததுக்கும்(நிறுத்தினதுக்கும்) என்ன சம்மந்தம். நீங்க நினைச்சுப்பாருங்க ஒளியைப்பத்தி, மிகவும் வேகமாகப்பயணிக்கக்கூடியது, அதன் வேகத்தில பயணம் செஞ்ச பூமியை ஒரு நிமிடத்தில் ஏழுமுறை சுற்றிவந்துவிடலாம். இந்த ஆராய்ச்சியாளர்கள் என்ன பண்ணாங்கன்னா இத்தனை வேகமான ஒளியை ஒரு படிமத்தில் சேகரிக்கும் முயற்சியில் இருந்தார்கள். முதலில் எதிலெதிலோ சேகரிக்கப்பார்த்து இப்ப அதை பிரசயோடைமியம்(Praseodymium) அப்பிடிங்கிற ஒரு விநோதமான வஸ்துவில் சேகரித்துட்டாங்க.

The team made a quantum bit by shining two laser beams at a silicate crystal containing atoms of a rare element called praseodymium that can absorb these light beams. Previous attempts to freeze light in the laboratory have used the atoms in a vapor, not a solid.

அதாவது அந்த படிமத்தில் ஒளியானது ஒரு குறிப்பிட்ட நேரம் அங்க இங்க நகராம அமைதியா உக்காந்திருக்க வைச்சிட்டாங்க இதனால நமக்கு கம்ப்யூட்டர்ல என்ன உபயோகம்னா அந்த படிமத்தில உக்கார வைச்ச அந்த அய்டம்தான் குவாண்டம் பிட் அப்பிடின்னு முன்ன சொல்லப்பட்டது. இந்த குவாண்டம் பிட்டு தான் மூன்று நிலைகளை(ஸ்டேட்டை) தன்னுள் அடக்கிக்கொள்ளும் திறமை வாய்ந்தது. அது எப்படின்னா நிறுத்தி வைச்ச அந்த ஒளியில் எல்லா அணுக்களுக்கும் இருக்கும் போட்டான் என்னும் ஒரு விஷயமும் இருக்கும். இப்ப இந்த போட்டானில் உள்ள நியூக்ளியர் சுற்றில்தான் அந்த 00, 01, 10, 11 என்ற தகவலை சேகரிப்பாங்க.

The researchers can transfer information onto light beams using the "nuclear spin" of the photons in the laser beam. The spin is basically the orientation of each the particles, and can be oriented either up or down — or both

This arrangement is known as quantum superposition, and can be exploited to create a unit of information known as a "qubit" (or quantum bit).

பின்னாடி இந்த தகவலைத்தான் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பிவைப்பாங்க நம்ம சாதாரண பிட்டை( 0 & 1) யை அனுப்பி வைப்பதுபோல்.

இதுல என்ன அற்புதம்னா 200 இலக்க உள்ள ஒரு ப்ரைம் நம்பரையும்( 7 ஒரு ப்ரைம் நம்பர் ஏன்னா ஏழை ஒன்னாலையும் பின்னாடி அதே ஏழாலையும் மட்டும் தான் வகுக்க முடியும்.) இன்னொரு 200 டிஜிட் உள்ள இலக்க நம்பரால பெருக்கிவந்த நம்பரை பகுக்குறது(Factorizing) அப்படிங்கிறது இப்ப நம்ம கம்ப்யூட்டரால முடியாத விஷயம். ஆனா இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் உதவியால இத பண்ண முடியுங்கிறது மட்டுமில்லை சீக்கிரமாவும் பண்ணிவிடலாம். இதனால நாம இப்ப உபயோகித்துக்கொண்டிருக்கும் கிரிப்டோகிராபித் தத்துவங்கள் அடிபட்டுப்போகும் நாம் உபயோகப்படுத்தும் அத்தனை என்கிரிப்ஷன் முறைகளும் அடிபட்டுப்போகும்.

Factoring a number with 400 digits--a numerical feat needed to break some security codes--would take even the fastest supercomputer in existence billions of years. But a newly conceived type of computer, one that exploits quantum-mechanical interactions, might complete the task in a year or so, thereby defeating many of the most sophisticated encryption schemes in use. Sensitive data are safe for the time being, because no one has been able to build a practical quantum computer.

இதெல்லாம் நடப்பதற்கு முன்பே குவாண்டம் கிரிப்டோகிராபி என்ற முறை வழக்கத்தில் வந்துள்ளது. ஏனென்றால் தகவல் பரிமாற்றம் என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது.

இதெல்லாம் நான் புரிஞ்சிக்கிட்டதா நினைச்சு சொல்றது. நான் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் நீங்களும் படித்துப்பாருங்கள். பிற்காலத்தில் நீங்கள் இந்த வார்த்தையை அதிகம் தடவை கேட்க நேரலாம் அதற்கு இப்பொழுதே ஒரு முன்னோட்டம் பார்த்துக் கொள்ளுங்கள். இதை இன்னும் விளக்கமா என்னிலும் புரியும்படி எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான ஒரு வாய்பாகவே இதை அமைத்தும் கொள்கிறேன்.

References

http://www.en.wikipedia.org
http://www.sciencecentral.com
http://www.media.mit.edu

Edited,

Further Reading,

http://rozavasanth.blogspot.com/2005/12/blog-post_22.html
http://www.domesticatedonion.net/blog/?item=676

Read More

Share Tweet Pin It +1

27 Comments

In Only ஜல்லிஸ்

குரு இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்

மிக நிச்சயமாக 'குரு' மணிரத்னத்தின் ஆகச் சிறந்த படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்... படம் நெடுகிலும் கண்ணீரை அடக்கமுடியாமல் பார்த்ததென்பது எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆனால் காட்சிகள் எதுவும் மிகை உணர்ச்சி செண்டிமெண்ட்டல் வெளிப்பாடுகளாக இல்லை.

இதையெல்லாம் சொல்வது நானில்லை, சாரு நிவேதிதா. இங்கே படிக்கலாம் ஆகக்கூடி பத்ரியும் இவரைத்தான் சொன்னதாக நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி

நான் காதலித்த கதை

இது என் காதல்(சொல்லலாமா தெரியவில்லை, வேண்டுமென்றால் விடலை காதல்) கதை, இதில் ஒரு குடும்பமும் ஒரு பெண்ணும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை எதையும் தவறாக எழுத போவதில்லை நான். சில முக்கியமான காரணங்களுக்காக நான் பெயரையும் இடத்தையும் மாற்ற முடிவு செய்திருக்கிறேன். மற்றபடி நடந்த நிகழ்வுகளே இந்தக் காதல்(வைத்துக் கொள்கிறேன்)கதை.

இது நடந்த பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் மீனா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், காதலிக்கவோ இல்லை, அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவோ கூட, கூடாத வயது அது. ஆனால் வாழ்க்கையில் காதல் இப்படித்தான் வரும்.

பார்த்த முதல் தடவையே எனக்கு காதல் வரவில்லை, நிச்சயமாய் தெரியும். எங்கள் குவார்ட்டர்ஸ்க்கு (இன்னும் சொல்லப்போனால் என் வீட்டெதிரில்) அவர்கள் குடும்பம் வந்து சில மாதங்கள் இருக்கும். இதற்கு முன் என்னைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் அவ்வளவு அழகானவன் இல்லை, எங்கள் குடும்பம் மிகவும் நடுத்தரமான குடும்பம் தான். முக்கியமாக நான் தமிழ் மீடியத்தில் படித்துவந்தேன். இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எங்கள் குவார்ட்டர்ஸ்ஸில் தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் மிகக் குறைவு.

அவள் குடும்பம் சிறிது வசதியானது என்று நினைக்கிறேன். எங்கள் ஊரின் மிக நல்ல பள்ளியில்(ஆங்கில மீடியம்) படித்துவந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன், சரியாக என் வயது ஒத்தவன். நான்படிக்கும் அதே வகுப்பை வேறொரு பள்ளியில் படித்து வந்தான். நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம், ஒன்றாய். அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கும் என்று நினைக்கிறேன். பேசிய பொழுதெல்லாம் நன்றாக பேசியதாக ஞாபகம்.

சரி இப்போது என் காதலுக்கு, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கேள்விபட்டவரையில் அறிவுமில்லை, ஆனால் நான் அப்படியில்லை ஒரளவுக்கு நன்றாக படிக்கக்கூடியவன், இன்னும்சொல்லப்போனால் அவள் அண்ணன் ஒரு பப்ளிக் தேர்வில் வாங்கியதை விட இரண்டு மடங்கு மதிப்பெண் வாங்கியவன். ஆனால் நாளாக, நாளாக, நான் படித்த சாண்டில்யன் கதைகளும், பாலகுமாரன் கதைகளும், என்னை அவளைப் பார்க்க சொல்லியது.

அந்தக் காலத்தில் நாம் யாரயாவது காதலித்து(அல்லது நடித்தாவது) தொலையவேண்டியிருக்கிறது. இந்த நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் நானும் காதலிக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன். அதற்கு சேர்ந்தால் போல் இவளும் வந்தாள். எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை தான்.

அவள் அந்த சமயத்தில் தலை முடியை பாப் கட் அடித்திருப்பாள். நான் நினைக்கிறேன், குறிப்பாக இவளிடம், அந்த உணர்ச்சியை பெற்றது இதனால் தான் என்று. ஏனென்றால் எல்லா பெண்களும் நீண்ட முடி வைத்திருந்த காலமது. அதுமட்டுமில்லாமல் அவள் ரோட்டிலோ இல்லை சாதாரணமாக வேறு இடங்களிலோ அதிகம் பேசி பார்த்ததில்லை நான். இதுவும் ஒரு காரணம். அவ்வளவுதான் நான் விழுந்துவிட்டேன். இதன் பிறகு நடந்த கூத்துக்களே நான் சொல்ல நினைப்பது.

ஒரு முக்கியமான விஷயம், நான் அந்தப் பெண்ணை காதலிப்பது(பார்த்துக் கொண்டு பின்னாலேயே சுற்றுவது) என் வீட்டில் அப்பாவை தவிர எல்லோருக்கும் தெரியும். எங்கள் வீட்டில், அப்பாவுக்கு இந்த விஷயங்களில் விருப்பமில்லை. அம்மா, அக்கா இருவருக்குமே நன்றாகவே தெரியும். இருவருமே ஒன்றும் சொல்லவில்லை, இன்னும் சொல்லப்போனால் எங்க அம்மா சில சமயங்களில், தம்பி இன்னிக்கு பல்லு விளக்கலைன்னா மீனு அம்மாகிட்ட சொல்லிடவேண்டியது தான்னு சொல்லி பயமுறுத்துவாங்கன்னா பார்த்துக்கோங்களேன். நான் சிறிது ஓவியம் கூட வரைவேன். எங்கள் வீட்டு சுவரில் இரட்டை சடை(கொஞ்ச நாளில் அவங்க அம்மா பாப் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன், என் வாழ்க்கையில் நான் மிகவும் வருத்தப்பட்ட நாட்கள்) போட்டு அவளை மாதிரியே
ஒரு படம் வரைந்து வைச்சிருந்தேன்(இன்னும் சுவற்றில் இருப்பதாக ஞாபகம்). ஓரளவுக்கு நல்ல ஒற்றுமையே இருக்கும் அந்த படத்தில், அவளைப்போல. இதனால் என் அப்பாவுக்கும் விஷயம் தெரிந்திருக்கக்கூடும்.

இப்படியாக சாதாரணமாக நான் அவளைப் பார்த்துக்(காதலித்துக்) கொண்டிருக்கையில்.
ஒருநாள் அவளும் அவள் நண்பியும் எதையோ சொல்லி என்னைப் பார்த்து சிரித்து
தொலைத்தார்கள். அவ்வளவுதான் முடிந்துபோனது என் சந்தோஷ வாழ்க்கை.

அதன் பின்னால் என்னைப் பார்க்க வேண்டுமென்றால் மீனு எங்கருக்காளோ அங்கதான் இருப்பான் என்றுஎங்க வீட்டில் சொல்லுமளவுக்கு அட்டகாசம். பொண்ணு மேக்ஸில் பெயிலாகி ட்யூஷன் போயிக்கிட்டிருந்தது. அவள் வீட்டிலிருந்து கிளம்பும் போது பின்னாலேயே கிளம்புவது. அவள் ட்யுஷன் சென்டர்வரைக்கும் கொண்டுவிட்டுவிட்டு; பின்னர், அருகே உள்ள கிரெவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அவள் வீட்டிற்கு திரும்பும் போது அவள் பின்னாடியே வந்து வீட்டிற்கு கொண்டுவிடுவது. இதெல்லாம் அவளுக்கு தெரியாமலே.

தினமும் இப்படித்தான் இதில் கொடுமை என்னவென்றால் நான் அப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் படிக்கிறதாவது அப்பிடின்னா என்னன்னு கேட்டுக்கிட்டிருந்த காலமது. என் நாட்கள் இப்படியே போய்க்கிட்டிருந்தது, அப்பொழுது ஒருநாள் பக்கத்தில் உள்ள ஒரு கிளப்பில்(கொஞ்சம் பெரிய) ஒரு விழா, நடத்தும் பொறுப்பில் இருந்த எங்கள் பள்ளி N.S.S. மாணவர்களை அங்கே அனுப்பியது. நானில்லாமலா, அங்கே போனபின்தான் தெரிந்தது. மீனு படிக்கும் பள்ளியும் வந்திருந்தது என்று பிறகென்ன ஒரு திருவிழாத்தான்.

ஆனால் நான் போட்டிகளில் பங்குகொள்ள முடியாது. ஏனென்றால் நாங்கள் தான் நடத்துவதற்கு உதவி செய்ய வேண்டும். அவள் என்னவோ செய்தாள் சரியாக ஞாபகமில்லை, நாட்டியமோ, ஆங்கிலப்பாடலோ பாடினாள் என நினைக்கிறேன். மதியம் வரை சரியாக சென்றது. எல்லோரும் சாப்பிட சென்றார்கள். எங்களுக்கு பரிமாறும் பொறுப்பு. மதியம் உணவு முடிந்து அனைவரும் வந்து அரங்கத்தில் அமர்ந்தார்கள்.

அப்பொழுது நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் இருந்தது. மேடை அறிவிப்பாளர், மைக்கில் இந்த நேரத்தை உபயோகித்து மக்களை மகிழ்விக்க யாராவது முன்வந்தால் வந்தனம் என்றார். நான் காத்திருந்த வாய்ப்பு கிடைத்தது. சிறிது கூட கவலைப்படாமல் நான் மேடையேறி,திருவிளையாடல் வசனத்தை(நக்கீரன் சிவன் வாக்குவாதம்) சொன்னேன். சொல்லிமுடித்ததும் அரங்கம் அதிரும் சத்தம், (அத்துனையும் உண்மை). ஏனென்றால் அதில் சிவன் ஒரு பாடல்சொல்வதாக வரும் அந்த பாடல் முதற்கொண்டு நான் சரியாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மேடையில் இருந்து கீழிரங்கினால் ஒரே பாராட்டு மழை, நான் சுற்றி சுற்றி பார்க்கிறேன் அவள்
இருக்கிறாளா? பார்த்தாளா? என்று. என் கண்ணுக்கு அகப்படவில்லை. ஒன்று தெரியுமா! அன்று எந்தப்போட்டியிலும் கலந்து கொள்ளாத எனக்கு ஒரு பரிசு கூடக் கொடுத்தார்கள்!.

பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது, எதிரில் அவள் வந்து கொண்டிருந்தாள். ஆகா இவள் பார்க்கவில்லை போலிருக்கிறது என நினைத்து வருந்தினேன். அவள் நேராக என்னிடம் வந்து நல்லாயிருந்தது என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்(இது நாள் வரை அவள் என்னிடம் பேசிய ஒரே ஒரு வார்த்தை இதுதான்). அப்போழுது கூட நான் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

பின்னாட்களில் எங்கள் வீட்டெதிரில் கிரிக்கெட் விளையாடும் பொழுது, வேண்டுமென்றே
பந்தை அவர்கள் வீட்டு மாடிக்கு அடித்து விட்டு அதைக் கேட்கும் சாக்கில் போயிருக்கிறேன்.
வீடு அழகாக இருக்கும். சுத்தமாக பளிச்சென்று. பிறகு உண்மைநிலை உணர்ந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு படிக்க ஆரம்பித்தேன். என்னையும் ட்யுஷன் அனுப்பினார்கள்.(இது வேறு இடம் இன்னும் சொல்லப்போனால் எங்கள் வீட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள இடம்.).

அப்பொழுது தான் காதலர்தினம் படம் வந்தது, அதில் வரும் ரோஜா ரோஜா பாடலைத்தான் நான் முதல் முதலாக மனப்பாடம் செய்தேன். பிறகு இன்றுவரை தொடர்கிறது. இதற்கு வாலியின் வரியமைப்பு காரணமா, தமிழ் உள்ளே ஊறியது காரணமா, இல்லை அவள் காரணமா தெரியாது. ஆனால் நல்லது தான். மனனம் செய்வது எப்பொழுதுமே நல்லதுதான். (பராசக்தி, மனோகரா,சாம்ராட் அசோகன், திருவிளையாடல் என மனப்பாடம் செய்தது அதிகம், இன்றும் அத்துனைவசனங்களும் நினைவிருக்கிறது). ஆனால் பாடல்களே பிடிக்காமல் இருந்த என்னை, பாடல்களின் பின்னால் திரும்ப வைத்ததில் அவளுக்கும் என் காதலுக்கும் சம்மந்தமுண்டு.

தினமும் காலையில் 6 மணிக்கு ட்யூஷனுக்கு கிளம்பவேண்டும், முடிந்ததும் பஸ் ஏறி பள்ளிக்கூடம் வந்துபடிக்கவேண்டும், பிறகு மாலை இரண்டு ட்யுஷன் இதில் என்ட்ரென்ஸ்க்கு தனியாக ட்யுஷன் வேறு. (மொத்தமாக இவையெல்லாம் உபயோகமாகவில்லை என்பது வேறு விஷயம். கடைசியில் நான் இன்ஜினெயரிங் படிக்கவில்லை, அதற்கு சில சொந்த காரணங்கள் உண்டு, அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை). ஆனால் தினமும் நான் ரோஜாப்பூவாங்கி வருவேன்,(அவளுக்குக் கொடுக்கத்தான்)ஆனால் கொடுத்ததில்லை.

அக்கா அந்த ரோஜாப்பூவை காந்தி புகைப்படத்துக்கு வைப்பாள், பிறகு இரவு நான் அந்தப் பூவைபாடமாக்கி வைக்க பெரிய புத்தகங்களின் மத்தியில் வைப்பேன். இன்றும் இப்படி பாடமாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரோஜாக்கள் என்னிடம் உள்ளன(என் முதல் காதல் நினைவாய்).

அதே கிளப்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் படம் போடுவார்கள். எங்கள் அப்பாவிற்கு பாஸ் கிடையாது. ஆனால் அவள் வீட்டிற்கு உண்டு(இந்த வேறுபாடுகள் தான் நான் சொன்னது நடுத்தர குடும்பம்).ஆனால் காதலுக்கு முன்னால் எடுபடுமா நான் என்னென்னமோ தந்திரங்கள் செய்து அங்கே படம் பார்த்திருக்கிறேன். சில சமயங்கள் அவளும் என்னைப் பார்ப்பாள் பார்த்து சிரிப்பாள். அவ்வளவுதான், இதற்குத்தான் நான் பாடுபட்டு, வீட்டில் அடிபட்டு அந்தப் படங்கள் பார்க்க போனது. எங்கப்பாவுக்கு எட்டுமணிக்கு மேல் வெளியில் இருந்தால் பிடிக்காது. ஆனால் படமோ ஏழுமணிக்குத்தான் தொடங்கும், இடைவேளை எட்டரைக்குத்தான், அப்பொழுது தான் முறுக்கு, சீடை வாங்க வருவாள். அங்கேதான் அவள்
என்னை பார்க்க முடியும் (நான்தான் அவளை பார்த்தக் கொண்டேயிருந்தேனே). என்னை கிளப் வாசலில் விடமாட்டார்கள். அதனால் சுவர் ஏறிக் குதித்து, கதவின் கீழ்வழியாக வந்து இப்படியெல்லாம் ஹீரோயிஸம் காட்டியும், நான் அந்தப் படம் பார்க்கமாட்டேன்.

அரைமணிநேரத்தில் வீட்டிற்கு போகவேண்டும் (அதாவது எட்டரை) இல்லையென்றால் செருப்படி. படமும் பார்க்காமல், அவளும் என்னைப் பார்க்காமல் வேதனையில் தள்ளிய நாட்களும் உண்டு.

அவர்கள் இங்கே வ்ந்த பிறகு முதல் வருடபிறப்பு. அவள் வீட்டில் எல்லோரும் அந்தக் கிளப்பில் கொண்டாடினார்கள். அதற்காக நானும் உள்ளே போகலாமென்றால் உள்ளே விடமாட்டார்கள், மேலும் பார்ட்டியே பத்துமணிக்கு பிறகு தான். என் வாழ்நாளில் நான் பத்துமணிக்கு மேல் வெளியில் இருந்ததில்லை. ஆனால் வெளியில் இந்த வருடம் இருக்க வேண்டும். என் அப்பாவிடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி, அம்மாவின் ஒப்புதல்லோடு நான் முதல் முறையாக வெளியே வந்தேன்.

எட்டுமணி இருக்கும், கிளப்பிறகு சென்று நான் உள்ளே நுழையும் இடங்களைப் பார்த்தால் செக்யுரிட்டி நின்று கொண்டிருந்தார்கள். அன்று என்னிலும் மூத்தவர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்வார்கள் என்பதால் அந்த ஏற்பாடு. எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. நான் உள்ளே நுழையும் அத்துனை வழியும் அடைபட்டிருந்தது. ஆனாலும் நான் உள்ளே செல்ல வேண்டும். அப்பாவிடம் அவ்வளவு போராடி அனுமதிபெற்று வந்தால் இப்படியரு நிலைமை. அழுகையே வந்தது எனக்கு. பிறகு தான் ஐடியா வந்தது. என்வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் அந்தக் கிளப்பில் உறுப்பினர். நான் நேராக அவரிடம் சென்று எனக்கு உங்கள் மெம்பர் கார்டு கிடைக்குமா? என்று கேட்டேன்(இன்று நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கி
றது). அவரும் கொடுத்தார்.

மேலும் சோதனை நான் அந்தக் கார்டை எடுத்துக்கொண்டு நான் ஒரு வாசலுக்கு வந்தேன் அங்கிருந்தவரிடம்(கேட் கீப்பர்) மெம்பர் கார்டை காட்டினேன். அவர் கார்டை பார்த்துவிட்டு, உங்கப்பாவுக்கு பாஸ் கிடையாதே யாரோடது இதுன்னு கேட்டாரே பார்க்கலாம். நடுங்கிட்டேன் உடனே கார்டை வாங்கிட்டு திரும்பிவந்திட்டேன். கொஞ்ச நேரம் கழித்து நான் நினைத்தது போலவே, அவர் ஒரு செக்யூரிட்டியிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். நான் பருப்புபோல் கார்டை அந்த செக்யூரிட்டியிடம் காட்டிவிட்டு உள்ளே வந்துவிட்டேன். ஆனால் சோகமே அன்று அவள் என்னை பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் தைரியத்தையெல்லாம் திரட்டி அவளிடம் சொல்ல நினைத்த Happy NewYear கூட அவளிடம் சொல்லவில்லை.

நான் அவளை நிறைய தடவைப் பார்த்தது, நிறைய நேரம் பார்த்தது, எல்லாமே. அவள் பள்ளியில் இருந்து திரும்பி வரும்பொழுது தான். அழகா குதிரை மாதிரி நடந்து வருவாள், எப்பவுமே தனியா வரமாட்டாள். யாராவது ஒரு பெண் அவள் கூடவே வருவார்கள். ஆரம்ப காலங்களில் சுமார் ஆறு மாதங்களுக்கு நான் அவள் நடந்து வரும்பொழுது வீட்டின் வெளியே சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு பார்ப்பேன், இல்லையென்றால் சிலசமயம் ஜன்னலில் இருந்தும் பார்ப்பேன். பிறகு சிறிது தைரியம் வளர்த்துக்கொண்டு அவள் நடந்து வரும் பொழுது நான் புத்தகத்தையோ, இல்லை கிரிக்கெட் மட்டையையோ எடுத்துக்கொண்டு எதிரில் நடந்து வர ஆரம்பித்தேன். சில நாட்கள் இப்படியே சென்றது பிறகு எப்பொழுதெல்லாம் நான் அவள் எதிரில் இப்படி நடந்து வர ஆரம்பிக்கிறோனோ அப்பொழுதெல்லாம் அவளும் அவள் நண்பியும், என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார்கள்(பின்னாட்களில் தான் அவர்கள் நக்கலாகத் தான் சிரித்தார்கள் என்று உணர்ந்து கொண்டேன்). இதெல்லாம் சொர்க்க காலம். அதாவது என் காதலின் கடைசிக்காலம்.

அப்பொழுதெல்லாம் மழை பெய்தால் வீட்டில் உட்காருவதில்லை, வெளியில் நிற்பது, கவிதை
எழுதுவது, இல்லை மழையில் டான்ஸ் ஆடுவது என்று உடல் நலத்துக்கு நல்லதில்லாத எல்லாவற்றையும் செய்து வந்தேன். இதன் காரணங்களால்(மேலும் சில காரணங்களாலும்) நான் இன்ஜினியரிங் படிக்க இயலாமல் போனது. ஏன் இந்த காரணங்களால் என்று குறிப்பிடுகிறேன் என்றால், என் அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள், அதனால் நான் ஆரம்ப காலங்களில் இருந்தே வீட்டில் படிப்பது என்பது சுத்தமாக கிடையாது. இதனால் என் பெற்றோர் நான் முதல் மாணவனாக வந்த பொழுதும் என்னை ட்யூஷனுக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கே போயும் நானும் படிக்காமல் மற்ற மாணவர்களை படிக்கவிடாமல் இருந்ததால். முக்கால்வாசி ட்யூஷன் சென்டரில் இருந்து விலக்கப்பட்டேன்
(அதென்ன முக்கால்வாசி என்றால் மற்ற ட்யூஷன் மாஸ்டர்களெல்லாம் அப்பாவிற்கு பயப்பி
டுபவர்கள் அதனால் விலக்க முடியாத பயம். அந்த முக்கால் வாசியும் என் அப்பாவிடம் வந்து, சார் எல்லாரையும் கெடுக்குறான் சார்ன்னு புலம்பித்தான் நிறுத்தினார்கள்).

இப்படி நான் படிக்காமலே நல்ல மதிப்பெண்ணும் ரேங்க்கும் வாங்கிய காலமது. ஆனால் இப்படியெல்லாம் படித்து மார்க் வாங்க முடியாது என எனக்கு உணர்த்தியது 10 வகுப்புத் தேர்வு. எல்லோரும் நான் பள்ளியில் முதலிடம் வருவேன் என நினைத்த பொழுது எல்லாருடைய எண்ணங்களையும் தகர்த்தெறிந்தேன். ஆனாலும் 80% வாங்கினேன். எதிர்பார்த்ததுக்கு மிகவும் குறைவான மார்க்குகள். இப்படியாக நான்
இருந்த பொழுதுதான் +2 தேர்வு. நான் படிக்கும் அறைக்கு நேர் எதிரே அவள் வீட்டு மாடி ஜன்னல். திரைபோட்டுத்தான் இருக்குமென்றாலும். வெய்யில் காலங்களில் திறந்துமிருக்கும். நான் தேவதைக்காக காத்திருந்து தேர்வில் கோட்டைவிட்டேன்.(கோட்டைவிட்டேன் என்றால் பெயில் இல்லை). சரி பையன் திருந்தி விட்டான் எப்பப் பார்த்தாலும் புத்தகத்தோடு மேஜையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். இந்த முறை நிச்சயம் நல்ல மார்க் வாங்கிவிடுவான்(பள்ளி முதல் மாணவன் கனவெல்லாம் உடைத்தாகிவிட்டது). ஒரு 1000 ஆவது வாங்கிவிடுவான்னு நினைத்தார்கள். வாங்கியதோ 70% (மொத்தம் 1200 க்கு கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்).

சரியான அடி(மனதில்) இரண்டு நாள் அப்பாவும் அம்மாவும் அக்காவும் என்னை விட்டு நகரவேயில்லை, நான் எங்கே தற்கொலை செய்துகொள்வேனோ என நினைத்தார்கள்(பின்நாட்களில் அவர்களே சொன்னது). கட்டாப் பரவாயில்லை தான் (224 னு நினைக்கிறேன்). நான் என்ட்ரென்ஸில் நல்ல(சொல்லிக்கிட்டாங்க) மார்க் வாங்கியிருந்தேன். இன்ஜினெயரிங் கூட கிடைத்திருக்கும் (சிவில், மெக்கானிக்கல்). ஆனால் என் மாமாக்களின்(அமேரிக்க) ஆலோசனையின்(கட்டளையின்) படி. கம்ப்யூட்டர் தான் படிக்க வேண்டும் என்று முடிவானது. நான் இன்டர்வியூவுக்குள் போவற்குள் கம்ப்யூட்டர் ஸீட் முடிந்து போனது. (அடுத்த வருடம் சுமார் ஐயாயிரம் கம்ப்யூட்டர் ஸீட்டுகள் இருந்தன பில்லப்செய்யப்படாமல்).

அப்புறமென்ன, அலையோ அலையென அலைந்து எனக்கு பிஎஸ்ஸி ஸீட் வாங்கித்தந்தார்கள். நான்வேண்டிக் கேட்டுக் கொண்டு ஹாஸ்டலில் தங்கினேன். காதலை(என் காதலை) விட்டு விட்டு வேறுஎங்கோ போகிறேன்னு நினைக்கிறீங்களா இல்லை தோ வந்துட்டேன். அதன் பிறகு அவளை நான் பார்ப்பது சிறிது சிறிதாக குறைந்தது(கல்லூரியல் சேர்ந்து விட்டேனே). அடுத்த வருடம் நியூயியரில் அதே கிளப்பில் பார்த்ததாக ஞாபகம். அன்று தான் நான் அவளிடம் ஹேப்பி நியூயியர் சொன்னேன். அது தான் நான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை. பிறகு நான் டிகிரி முடித்து டெல்லி, பெங்களுர் என்று இரண்டு வருடம் இருந்துவிட்டு சற்று நாளைக்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன்.

அதே ஜன்னல் முன்னாலிருந்து சிரித்துக் கொண்டிருந்தேன். அக்கா வந்து `என்னடா தம்பி' என்றாள். நான் 'மோனா மீனா எங்கன்னு தெரியுமான்னு' கேட்டேன். அதற்கு அவள் 'அவங்க குடிமாறிபோயிட்டாங்க. ஏய்! உனக்கு அவளை இன்னமும் ஞாபகம் இருக்கிறதா?'ன்னு கேட்டா. பிறகு 'தெரியுமா நீ இங்க இல்லைல்ல அவளுக்கு பல்லு கொஞ்சம் வெளிய தெரிய ஆரம்பிக்க, கிளிப்போட்டிருந்தா, அவங்கம்மா கூட உன்னை சில தடவை கேட்டாங்க. அன்னிக்கு அவங்க வீட்ட கிரகப்பிரவேஷத்துக்கு அம்மா போயிருந்தப்ப, அம்மாகிட்ட சரியா நடந்துக்கலைன்னு(நாங்க அப்ப நடுத்தரகுடும்பம்) அம்மாவுக்கு கோபம்'னு, ஏதேதோ சொல்லிட்டுப் போனாள் என் அக்கா.

எனக்கு அன்றைய நாட்களை நினைத்தால் சிரிப்பாக இருந்தது. சைக்கிளில் அவள் பின்னாடி
போறதும், கதவு இடுக்கில் புகுந்து சினிமா பார்க்கிறதும், அவளைப்பற்றி கவிதை எழுதி
யதும். அன்னிக்கு முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். அம்மாவுக்கு ஒரே பயம், கம்ப்யூட்டரில் ரொம்ப வேலைப் பார்த்தா லேசா பைத்தியம் பிடித்திடும்னு யாரோ அம்மாகிட்ட சொல்லியிருந்தது தான் அதற்கு காரணம்னு நான் நினைத்தேன். அவள் வீடு எங்கிருக்கிறதுன்னு தெரியும், எப்பிடி போறதுன்னும் தெரியும். வருடத்திற்கு இரண்டு நாட்களாவது நான் சொந்த வீட்டுக்குபோறேன் அதனால நேரமும் உண்டு. ஆனால் ஈகோ தடுக்கிறது. இப்போழுது நாங்கள் பணக்காரர்கள் (இரண்டு கவர்மெண்ட் எம்ப்ளாயிஸ், இரண்டு சாப்ட்வேர் ப்ரொப்ஷனல்ன்னு நாங்க பணக்காரங்க), ஆனால்
எங்கம்மாவை கிரகப்பிரவேசத்துல ஒழுங்கா நடத்தாததுதான் இப்போ ஞாபகம் வருது.

இப்போவும் போய்க் கேட்கலாம் அம்மா மீனாவீட்டுல போய் பெண்ணு கேளுங்கன்னு. ஆனா
வேணாம் அதுக்கு சில பர்ஸனல் காரணங்கள் இருந்தாலும் ஈகோத்தான் முதல் காரணம்.

Read More

Share Tweet Pin It +1

26 Comments

In ஓவியம்

இன்னும் கொஞ்சம் ஓவியங்கள்

இதெல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்பு வரைந்தது பத்து வருஷமாவது இருக்கும். என்னுடைய பழைய வெப்சைட்டில் கிடைந்தன. எதற்கும் இருக்கட்டுமே என்று. இன்னும் சில பெண் ஓவியங்கள் உண்டு ஆனால் கொஞ்சம் போல் நன்றாகயிருக்காது. அதனால் அப்படியே தூங்குகின்றன.









Read More

Share Tweet Pin It +1

1 Comments

In ஓவியம்

எனது ஓவியங்கள்.

முக்கியமா ஒன்னு நான் ஓவியனெல்லாம் ஒன்னும் கிடையாது. சொல்லப்போனால் ஓவியம் வரையரதப்பத்தியும் ஒன்னும் தெரியாது. ம.செ ஓவியங்களைப்பார்த்து கத்துக்கிட்டதுதான். அதனால் ஓவியத்தில் தவறு இருந்தால் மன்னிச்சுறுங்க.

முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைவதற்கு முன் நான் வரைந்த படங்களை போட்டதாக ஞாபகம், ஆனாலும் அந்தப்படங்கள் நான் வரைந்ததுதானா என பலரும் சந்தேகம் எழுப்புவதால் அதன் சுருக்கப்பட்ட படங்களை போடுறேன். (சைஸ் கம்மிங்கோ).

நம்புக்கப்பா!!!







Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி

நாற்றத்தை உணரும் சக்தி போல் எனக்கு பிரச்சனைகளையும் உணரும் சக்தி வந்துவிட்டதாக நான் நினைக்கத் தொடங்கியதற்கு, அக்கா போன் செய்ததும் அவளால் வரப்போகும் பிரச்சனையை முன்கூட்டியே கண்டுபிடித்தது மட்டும் காரணம் கிடையாது. என்னை அவள் வீட்டிற்கு வந்து அவளை பிக்கப் செய்து கொள்ளச் சொல்லும் பொழுதே எனக்குத் தெரிந்துவிட்டிருந்தது இன்றைக்கு வீட்டில் புயல் கிளப்பப்போகிறாள் என்பது. ஆனால் எனக்குப் புரியாத ஒன்று அந்த விஷயத்தை யார் இவளுக்கு சொல்லியிருப்பார்கள் என்பதுதான்.

பிக்கப் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததும், இவளைப் பார்த்து அம்மா அடைந்த அதே ஆச்சர்யத்தை அகிலாவை காட்டினாள். நான் கண்களாலேயே இதற்கெல்லாம் நீதான் காரணமா என்று கேட்க மறுத்தவளின் கண்கள் நம்பத்தான் சொல்லின என்னிடம். ஆனால் மறுக்கச்சொல்லியது அக்காவின் அடுத்தக் கேள்வி, இந்தக் கேள்வியைத் தான் கேட்கப்போகிறாள் என்று ஊகித்திருந்தாலும் கேட்கும் பட்சத்தில் யார்சொல்லியது என்ற துணைக்கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

"டேய் நீ அமேரிக்காப் போறியா?"

நான் திரும்பி அகிலாவை என்னயிது என்பதைப் போல் பார்க்க எனக்குத் தெரியாது என சத்தியம் செய்தன அவள் கண்கள்.

"ஆமாம் போறேன் அதுக்கென்ன இப்ப?"

"இந்தத் தடவையும் இவளைக் கூட்டிக்கிட்டு போகலைதானே நீ."

இந்த முறை நான் அகிலாவைப் பார்க்கவில்லை, ஒருவாறு அவள் மனதிலும் இந்தக் கேள்வி ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அவள் கேட்கவில்லை இங்கே கேட்கப்படுகிறது. பதில் சொல்லவேண்டிய கடமையிருந்ததாலும் இவளுக்குச் சொன்னால் விஷயம் அகிலாவிற்கும் சொல்வதுபோலாகும் என்பதால் சொன்னேன்.

"இங்கப்பாரு, நான் ஊர் சுத்திப்பார்க்க அமேரிக்கா போலவில்லை, ப்ரொஜக்ட் ஊத்தி மூடிக்கிட்டிருக்கு வேற வழியில்லாமல் அங்கப்போறேன். சிகப்பில் இருக்கும் ஸ்டேட்டஸை பச்சையாக்கப் போகிறேன்.

அங்கே போனாலும் நான் எத்தனை மணிக்கு திரும்பிவருவேன்னு தெரியாது. இங்கயப் போலவே அங்கேயும் சனி, ஞாயிறு குப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அதனால என்கூட வந்தா இவளுக்கு போரடிக்கும். எவ்வளவு நேரம் தான் இவளும் டீவியையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பா. அதுமட்டுமில்லாம பேச்சுலர்னா பிரச்சனையே வேற, பேமிலியைக் கூட்டிட்டுப் போறதுன்னா பிரச்சனையே வேற. ஏகப்பட்ட செலவாகும்."

காரணங்களை அடுக்கிக்கொண்டே போனேன். அத்தனையையும் நிராகரித்தவளாய்,

"இல்லை நீ பொய் சொல்ற, அவளை அமேரிக்கா கூட்டிக்கொண்டு போவதற்கு ஏனோ பயப்படுற நீ. எனக்கு என்ன காரணம்னு தெரியாது. ஆனால் நீ பயப்படுறேன்னு தெரியும். எனக்குத் தெரியாது உன் மாமன், அவளை அமேரிக்கா கூட்டிக்கிட்டுப் போனா என்னன்ன பிரச்சனைவரும்னு சொன்னானா, இல்லை நீயே நினைச்சிக்கிட்டிருக்கிற விஷயங்களை மனசில வச்சிக்கிட்டு இவளை இங்கேயே கலட்டி விட்டுட்டுப்போறியா எனக்குத் தெரியாது. ஆனால் இது சரியில்லை, அதை மட்டும் நான் சொல்லிட்டேன்."

கடைசிவரை என்னுடைய காரணங்களை ஒப்புக்கொள்ளவேயில்லை, அம்மாவிடம் காப்பிவாங்கிக் குடித்துவிட்டு, என்னுடைய காரை அவளே டிரவ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு போனதும் வீடு ஏறியிறங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்ட நாளொன்றின் கடைசியில் அடுத்த நாளுக்காக காத்திருக்கும் லிப்டைப் போல் அமைதியாகயிருந்தது அடுத்தப் பிரச்சனையை நோக்கி. என்னுடைய பயமெல்லாம் இதுவரை இப்படிப்பட்ட ஒன்றை நினைத்து பார்த்திராத அகிலா இதைப்பற்றி என்ன நினைப்பாள் என்றுதான்.

இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இல்லையா என்றால் சொல்லமுடியவில்லை என்றுதான் பதில் வந்தது. உண்மையில் கல்யாணவயதில் இந்தக் கேள்விகள் இருந்ததுண்டு. ஆனால் அகிலாவுடனான திருமண வாழ்க்கை அந்த பழைய எண்ணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது. இப்படியாக ஏகப்பட்ட எண்ணங்கள் மனதை அலைக்கழிக்க யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அகிலா அருகில் வந்ததே தெரியவில்லை. தோளைத் தொட்டுத்திருப்பியவள்.

"என்ன ஒரே யோசனை, எந்தப் பொய்யைச் சொன்னால் இவளை வாகாய் கழட்டிவிட்டுட்டுப் போகலாம்னு யோசனை பண்ணுறீங்களோ."

ஆனால் நான் உண்மையில் அதை நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அவள் பொய்யைப் பற்றிப் பேசியதும் சும்மாப் போட்டுப்பார்த்தேன் சில பொய்களை.

"இங்கப்பாரு அகிலா, உன்னை அமேரிக்கா கூட்டிட்டுப் போறதா பெரிய விஷயம். நாளைக்குச் சொன்னேன்னா உனக்கும் விசா ஏற்பாடு பண்ணிடுவாங்க. B1 தானே, ஆனால் நீ அங்கவந்தும் சேலையில்ல கட்டுவேன்னு ஒத்தக்காலில் நிப்ப?" உண்மையில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைப்பற்றித்தான் இத்தனை நேரமும் யோசித்ததாய் நம்பவைக்க என்னால் ஆன நடவடிக்கைகள் அத்தனையையும் செய்தேன்.

அகிலா ஏன் அந்த முடிவிற்கு வந்தாள் என்று தெரியாது ஆனால் அவள் சேலை மட்டும் தான் கட்டுவாள். எவ்வளவோ வற்புறுத்தியும் கூட நைட்டி போடமாட்டேன் என்று அடம்பிடித்தவள் அவள். சில தடவைகள் வற்புறுத்திய பொழுது, நான் ட்ரெஸ் பண்ணிக்கிறதில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லியிருந்தாள். உண்மையில் அவளுடைய உடை விஷயத்தில் பெரும்பாலும் தலையிடுவதில்லை, உனக்குப் பிடித்திருந்தால் உடுத்திக்கொள் அவ்வளவுதான் என்வரையில்.

"நான் அப்பவே நினைச்சேன் இப்படி உப்புச்சப்பு இல்லாத காரணத்தையெல்லாம் சொல்லி என்னை உங்கக்கூட வரவிடாம பண்ணிடுவீங்கன்னு?"

ஆக என்னுடன் அவள் அமேரிக்கா வரும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டுருந்தது. இதற்கு மேலேயும் நான் எதையாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், உண்மையாக அவளாய் யோசிக்காவிட்டாலும், அக்கா சொல்லிக்கொடுத்திருந்தது நினைவில் வரலாம் என்பதால். கொஞ்சமாக அகிலாவை சேலையிலிருந்தாவது விடுவிக்கலாம் என்று நினைத்து.

"சரி நீ இப்பச் சொல்லு, சேலை தவிர ஏதாவது மாட்ர்ன் டிரெஸ் போட்டுக்கொள்ள சம்மதம் என்று. நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்."

அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும் பிரச்சனை சேலையில்லை என்று, ஆனாலும் நாங்கள் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருந்தோம்.

"தெரியுமே நீங்க அமேரிக்காவைச் சாக்கா வைச்சு, என்னை டூ பீஸ் போட வைக்கலாம் என்று பாக்குறீங்க. ஆனா அதெல்லாம் நடக்காது."

உண்மையில் கல்யாணம் ஆவதற்கு முன் என் பெண்டாட்டியை எந்தெந்த உடைகளில் பார்க்கவேண்டும் என்ற கனவுகள் இருந்ததுண்டு ஆனால் அவையெதிலும் அவள் சொன்ன உடை கிடையாது. ஷேக்ஸ்பியர்ஸ் இன் லவ் படத்தில் அந்தக் கதாநாயகி அணிந்திருக்கும் பாரம்பரிய இங்கிலாந்து உடை பிடிக்கும் எனக்கு, அதே போல் த லாஸ்ட் சாமுராய் படத்தில் சாமுராயின் தங்கையான ஜப்பானியப் பெண் அணிந்திருக்கும் உடை, வெள்ளைப் பனியை ஆடையாக அணிந்திருப்பதைப் போன்ற மேற்கத்தியப் பெண்மக்களின் கல்யாண உடைகூட நிறையப் பிடிக்கும். கடேசியாக எப்பொழுதாவது அகிலா அணியும் மடிசார். இவையெல்லாம் அகிலாவிற்கும் தெரிந்திருக்கும்.

"எனக்கு ஏம்மா உன்னை டூ பீஸில் பார்க்கணும் நான் தான் பீஸே இல்லாமல் பார்த்திருக்கேனே..." சொல்ல தலையில் கொட்டியவள்.

"சரி கொஞ்சம் சீரியஸாய் பேசுவோமா, உங்கக்கா சொன்னதுதான் பிரச்சனையா? நீங்க பயப்படுறீங்களா நான் அமேரிக்கா போனா மாறிருவேன்னு. இவ்வளவுதானா இத்தனை வருடங்களில் நீங்கள் என்னை புரிந்துகொண்டது.

சரி மாறிருறேன்னே வைச்சுக்கோங்களேன். அதுல என்ன தப்பு, புது ஊரு, புது கலாச்சாரம், புது மக்கள்ன்னு வாழ்ந்தா மென்ட்டாலிட்டி மாறித்தானே போகும். என்ன உங்களுக்கு என்னையக் கூட்டிக்கொண்டு போறதுக்கு முன்னாடி உங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போகணும், அப்படியில்லாட்டி இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் அது உங்க பட்ஜெட்டுக்கு சரிவராது அவ்வளவுதானே. தாராளமாய் உங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு போங்க.

இருபத்தைந்து வருடங்களாய் உங்களை வளர்த்தவங்க அவங்கதானே, அதுக்கப்புறம் ஒரு பத்துவருஷம். இல்லை அதுவும் தான் சொல்லமுடியாதே ஒன்பது வருஷம் தானே உங்களை எனக்குத் தெரியும். இடையில் வந்த எனக்கு அவங்களை விட அதிக உரிமையிருக்க முடியாது தான்."

உண்மையில் அக்கா சொன்ன காரணங்களைவிடவும், அகிலா சொன்னதுதான் சரியென்று மனதிற்குத் தோன்றியது. சரி பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாகிவிட்டது பேசிமுடித்துவிடலாம் என்று நினைத்து அவளை அருகில் இழுத்து அமர்த்தினேன். ஆரம்பத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள பயந்தது எங்கே எனது மனைவி என்னைப் புரிந்து கொள்ளமுடியாதவளாய் போய்விடுவாளோ என்றுதான்.

எனக்கும் அக்காவிற்கும் பல விவாதங்கள் பறக்கும், நான் பள்ளியிறுதி கூட தாண்டியிறாத, கிராமத்துப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, ஏன் அப்படி நினைக்கிறாய் நகரத்துப் பெண்கள் சரியானவர்களாகவும் கிராமத்துப் பெண்கள் தவறானவர்களாகவும் இருந்துவிட்டால் என்று விவாதிப்பாள். நல்லவேளை அவள் சொன்னது போல் படித்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருந்தேன், அது இப்பொழுது உதவுவதாகப் பட்டது. ஆனால் கிராமத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாததால் அக்காவின் கருத்தை தவறென்று ப்ரூப் பண்ணமுடிந்ததில்லை.

"உண்மைதான் அகிலா, ஆரம்பத்திலிருந்தே மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் இது. இந்த பதினைந்தாண்டு சாப்ட்வேர் வாழ்க்கையில் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அம்மாவை அழைத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இன்று கூட்டிட்டுப்போவோம், நாளைக்குக் கூட்டிக்கொண்டு போவோம் என்று நினைத்து தட்டிக்கழிந்து கொண்டே வந்தது. இவையனைத்தும் என் மனதில் அடிஆழத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவே நான் நினைத்திருந்தேன். அம்மாவிற்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, அது உனக்கே தெரியும். ஆனால் இது நிச்சமயமான காரணமாகயிருக்கும் என்று நீ சொன்னதற்கு பிறகுதான் எனக்கேத் தோன்றுகிறது.

ஆனாலும் பரவாயில்லை, அம்மா ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள் நீ தயாராயிரு நான் உன் விசாவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்கிறேன்."

அதுவரை நான் சொல்வதையே மிகக்கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அகிலா.

"எனக்கு இதுவும் தெரியும். எனக்காகவோ இல்லை உங்களுக்காகவோ நீங்கள் கூட்டிக்கொண்டு போகவில்லையென்றாலும். மோகனா அக்காவிற்காக நீங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போவீர்கள் என்று, ஆனால் அது தேவையில்லை. நான் வெயிட் பண்றேன், இன்னும் நிறைய நாட்கள் அங்கே தங்கியிருக்கும் அளவிற்கு ஒரு வாய்ப்பு வந்ததும் நானே புடுங்கி எடுத்து உங்களைக் கூட்டிப்போக வைக்கிறேன்.

நான் உங்கக்கிட்ட சொல்லவிரும்பியது, விரும்புவது, விரும்பப்போவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான், உங்கள் அக்காவைப் போல, அம்மாவைப் போல நானும் உங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முழுசா புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லமாட்டேன். ஆனால் வெளியில் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் உள்மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்களை நன்கறிந்த மற்றவர்களைப் போல நானும் அறிந்து கொள்ள நிறைய முயற்சி செய்கிறேன் அவ்வளவுதான்."

லெக்சர் அடிக்கத்தொடங்கினாள், இது சிலசமயம் அகிலாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். புனிதபிம்பமாகத் தன்னைக் காண்பித்துக் கொள்வது. ஆனால் இந்தச் சூழ்நிலையில் இன்னொரு பிரச்சனையை நான் கிளப்ப நினைக்காததால்.

"இங்கப்பாரு அகிலா இப்படி நிமிஷத்துக்கு ஒரு பேச்சு பேசிக்கொண்டிருந்தால் என்ன சொல்ல, அதெல்லாம் முடியாது நீ வந்துதான் ஆகணும். நீ என்கூட வந்தால் அமேரிக்காவில் டிவியில் பே சானலுக்கு நாளொரு மேனிக்கு டாலர் அழவேண்டியிருக்காதேன்னு யோச்சிச்சேன். நீயிருக்கிறப்ப டீவியில் தெரிகிற பொம்மை எதுக்குச் சொல்லு. அதனால நீ வந்துதான் ஆகணும்."

தன்னை என்னிடம் இருந்து விலக்கிக்கொண்டவள், இது திருந்தாத கேசு என்று சொல்லிக்கொண்டு, தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றாள். கனவில் நான் அமேரிக்காவில் பின்புறம் நீலக்கலர் பூக்களின் மத்தியில் ஜீன்ஸ் டீஷர்ட்டுடனும், என் மனைவி சேலையிலும் "நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேண்டி" பாட்டிற்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தோம்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In பெங்களூர்

பெங்களூரில் இன்று

பெங்களூரில் வியாழக்கிழமை பந்த் அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லாக் கம்பெனிகளும் பள்ளிக்கூடங்களும் விடுமுறை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.

கட்டிடங்கள் ஏற்கனவே மஞ்சள்/சிகப்பு கொடிகளை கட்டிக்கொண்டு நிற்கின்றன.

தமிழ்சானல்கள் கருப்படிக்கப்பட்டு நாளாகிறது. போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பெங்களூருக்கும் இடையில் இல்லை. அவசர ஆத்திரம் என்றால் கூட பெங்களூரில் இருந்து கேரளாவோ, ஹைதராபாத்தோ சென்றுதான் தமிழ்நாடு வரமுடியும் என்று நினைக்கிறேன். பிளைட் ஒன்று உண்டு பெங்களூரையும் திருச்சியை கனெக்ட் செய்ய, கிங் பிஷர். மொத்தமாக பிசியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

வாழ்க இந்தியக் குடியுரிமை.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

அய்யா லீவு

Hello,

As many of you are aware, it is anticipated that there may be some violence and disruptions on the streets today based on the result of the Cauvery Water Disputes Tribunal. Thousands have police have been drafted in to help enforce law and order and hopefully maintain peace on the streets.

Some of the I.T. companies have closed and are opting to work on Saturday instead.

We have been made aware informally that some of the roads are becoming blocked.

For your own safety and protection you are free to finish up work now. I will keep you posted on any further updates and hope you all get home safely

Kind Regards
*********

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுய சொறிதல் பெங்களூர்

என்ன நடக்கும் இன்று பெங்களூரில்

நாளைக்கு(நேற்றே எழுதியது) காவிரி பற்றிய தீர்ப்பு வெளிவரயிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் நாள் குறித்தவுடனேயே எங்கள் வீட்டிலிருந்து போன் மேல் போன் வந்துகொண்டிருக்கிறது பத்திரமாகயிருங்கள் என்று. ஏனென்றால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. பஸ்கர் எரிக்கப்படலாம், ஆட்டோக்கள் கொழுத்தப்படலாம். கூடவே சில மனிதர்களும், அம்மா எப்பொழுது சொல்வார்கள் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்கா இருக்காதே என்று எனக்குத் தெரியவில்லை நான் பெங்களூரைப் பார்த்து பயப்படுவதை பார்த்தால் நானெல்லாம் ஆப்டிமிஸ்டிக்கா என்ற டவுட்டே வருகிறது. நான் பெஸிமிஸ்டிக்கோ என்ற சந்தேகமும் சேர்ந்தே.

பெங்களூர் மைசூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உதவாது சும்மா பேருக்குத் தான். பலரும் ராஜ்குமார் மரணத்திற்குப் பிறகு நாளை பெரிய பிரச்சனை வரலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டொரு நாளைக்குத் தமிழில் பேசமாட்டேன்(அப்படியே ரொம்பத் தமிழில் பேசிருவனோன்னு கேட்டீங்கன்னா, ஒரு பதிவரிடம் சமீபத்திய பிரச்சனைப் பற்றி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது. பதிவர் பயந்துவிட்டார் ஆஹா இவன் இப்படியே போர் அடித்து இன்னைக்கு முழுக்கவே பேசியே தீர்த்துடுவானோன்னு. அரைமணிநேரம் பேசியிருப்போம். பாவம் அந்தப்பக்கத்து நபரின் முகபாவங்களை கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.) ஆனால் பெங்களூரில் போலீஸ்காரர்களிடமோ, கடைக்காரர்களிடமோ பெரும்பாலும் தமிழில் பேசுவது கிடையாது. முடிந்தவரை இந்தி, இல்லாவிட்டால் ஆங்கிலம்.

அப்படியும் முடியலைன்னா, "மாடி" "சொல்ப" இப்படி கன்னட வார்த்தைகள் இணைக்கப்பட்ட தமிழ். தெரியலை நாளைக்கு என்ன நடக்கும் என்று.

JUDGEMENT: KAVERI WATER DISPUTE TRIBUNAL

Dear ,

After nearly 17 years of protracted proceedings, a final award of the Cauvery Water Disputes Tribunal will be pronounced on 5 Feb 07. Reactions to the judgment are likely by both parties and protests/agitations in Karnataka and TN cannot be ruled out. Police authorities across both states are seized of the threat and have planned adequate deployment to monitor and handle the law and order situation. Find below a set of suggestions to ensure your personal safety:

· Avoid use of KA & TN registered vehicles (personal and public) in Tamil Nadu & Karnataka respectively, during the week 5th to 10th Feb.

· Avoid inter-state road/rail travel for the same duration.

· Keep abreast with local situation while commuting and avoid trouble spots.

· Avoid communal gatherings & crowded places including cinema theatres.

· Avoid disclosing your ethnic identity.

· Employees who are residing in sensitive areas like Ulsoor, Indiranagar, Magadi Road, Rajaji Nagar, Srirampuram, Basaveshwar Nagar, Kamakshipalya, Kurubarahalli, Mysore Road, J. J. Nagar, Kalasipalyam, Azad Nagar, Byatarayanapura, Madiwala, Tilak Nagar, Attibele, Sarjapur and Hosur Road.

The possibility of disruption on 6 Feb 2007 cannot be ruled out.

Please pass on any related information to your Facilities In charge.

இப்படி ஏகப்பட்ட பார்வேர்ட் மெஸேஜ் வேறு. ;)

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In புத்தகங்கள்

மோகமுள்

"இதற்குத்தானே", "இதற்குத்தானே" என்று இரண்டு நாட்களாக மனம் அலைபாய்கிறது, காரணம் உண்டு. பாலகுமாரன் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்று எழுதியிருந்த பொழுது அதனால்தால் பிரபலமானது இந்த டெர்ம் என்று நினைத்திருந்தேன். ஆனால் "மோகமுள்" படித்ததும் இந்த ஒரு வார்த்தை தான் மனதில் ஒட்டிக்கொண்டு நகரவே மாட்டேன் என்கிறது. நான் முன்பே மரப்பசு படித்திருக்கிறேன், மோகமுள் பார்த்திருக்கிறேன்.

நான் படிக்காமல் போனதற்கு பல காரணங்கள், முதலில் புத்தகத்தின் தலைப்பு இந்தத் தலைப்புள்ள புத்தகத்தை ஒரு பதினாறு வயது பையனோ இல்லை பதினெட்டு வயது பையனோ படித்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய சமூகத்தில் நான் வளரவில்லை, அதுமட்டுமில்லாமல் மோகமுள் படத்தை ஒரு பிட்டுப் படம் போல் வியய்டீவி இரவில் போடுவதால் பலருக்கும் அதைப் பற்றி ஒரு "உவ்வே" படிக்காமல், தெரியாமல், என்னவென்றே உணராமல். என் வீட்டில் படித்திருந்தால் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள் தான். கடல்புறாவை, யவனராணியை, இன்னும் பல ஸிட்னி ஷெல்டன் நாவல்களையே நான் படிப்பதைத் தடுக்காதவர்கள் மோகமுள்ளைத் தடுத்திருக்க மாட்டார்கள் தான். என்னவோ என்னால் முடிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் பொழுது மரப்பசுவுடன்(முன்பே சொல்லியிருந்தது போல்) மோகமுள்ளையும் வாங்கினேன். கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்களையே இப்பொழுது அதிகம் வாங்குவதால் புக் குவாலிட்டி மனதிலேயே நின்று கொண்டிருந்தது மோகமுள்ளும் மரப்பசுவும் வடிவமைப்பிலாவது மாறியிருக்கும் என்று, செம்பதிப்பென்று எழுதியிருந்தது நினைவில் வந்தது. தேவையில்லாத இடங்களில் எல்லாம் அப்பாஸ்டெப்பி, உரைநடையில்லாத இடங்களில் எல்லாம் ஆரம்பித்து விட்டு பின்னர் விட்டுர்கிறார்கள். நிறைய இடங்களில் அவருடய் கற்பனை வளம் ஒற்றை அப்பாஸ்டெப்பியுடன் நிற்கிறது.



படம் பார்த்ததால் ஒரு விஷயம், பாபுவாக நடித்திருந்தவரை பாபுவாகவும், யமுனாவாக நடித்திருந்தவரை யமுனாவாகவும் என்னால் ஒப்புக்கொள்ளமுடிந்திருந்தது. அதுவும் பாபு விஷயத்தில் தான் கொஞ்சம் உதைத்தது. மற்ற விஷயத்தில்(யமுனா) அப்படிச் சொல்லமுடியாது, நான் அந்த நடிகை நடித்த மற்ற படங்கள் பார்க்காதது காரணமாய் இருக்கலாம். அந்தப் பொண்ணு வேறுபடம் நடித்து நான் பார்த்திருந்தால் எனக்கு உவ்வே என்றுதான் வந்திருக்கும்.(ஹிஹி, இதைத்தான் மெலோட்டிராமா பிடிக்காமல், ஆனால் மெலோட்டிராமாவில் தங்களுடைய சோகத்தை, பிரச்சனைகளைக் கழுவிக் கொள்கிறவர்கள் என்று ஆதவன் 'என் பெயர் ராமசேஷனில்' சொல்வார்.)

மற்றபடிக்கு என்னால் ராஜமாக விவேக்கையோ, ரங்கண்ணாவாக நெடுமுடிவேணுவையோ நினைக்கமுடியவில்லை, முதலாவதற்கு காரணம் சொல்லவேண்டிய அவசியம் மோகமுள் படித்து படம் பார்த்தவர்களுக்குத் இல்லையென்பது தெரிந்திருக்கும் ஆனால் இரண்டாவதற்கு எனக்கே காரணம் தெரியவில்லை.

சரி கதைக்கு,

உண்மையில் ஆரம்பம் படித்துக்கொண்டிருந்த பொழுது நினைத்தேன் சரி அந்த பழைய மோகன்தாஸ் கிடையாது ஒன்றரை மணிநேரம்(அதுவே இப்பல்லாம் அதிகம்) படித்துவிட்டு வைத்துவிடுவேன் என்று. ஆனால் புத்தகத்தை வைக்கவே முடியவில்லை, இன்னொருமுறை என் தலையில் தட்டப்பட்டுவிட்டது உனக்கு இன்னும் பொதுபுத்து போகவில்லை என்று. ஆனால் திஜாவின் இந்தப் புத்தகத்தை பொதுபுத்தியில் சேர்க்கலாமா என்று. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தீர்கள் என்றால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இது பொதுபுத்திக் கதை தான். தன்னைவிட பத்துவயது பெண்ணைக் கலியாணம்(???) செய்து கொள்வதை இல்லை சேர்ந்து வாழ்வதை, இன்றைய நாளில் கூட சர்வ சாதாரணமாகப் போய்விடாத ஒன்றை அந்தக் காலத்தில் சொல்லமுயன்றதால் மட்டும் பொதுபுத்தி நாவல் இல்லையென்று சொல்லமுடியாது.

கதை படிக்கப் படிக்க, நான் அதனுடைய முடிவைப் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது எனக்கு படம் பார்த்து ஒருவாறு அதன் முடிவு தெரியும் அதனால் அதை தியாவின் வார்த்தை யாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன் அவ்வளவுதான். அதுவும் பாபு மெட்ராஸ் வந்ததும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனசெல்லாம்(மூளை நியூரான் செல்கள் ???) கல்லாகிவிட்டதைப் போன்ற உணர்வு. எனக்குத் தெரிந்த மோகமுள் படத்தில் அர்ச்சனா யோக்லேக்கர் "இதற்குத்தானே" என்று கேட்டுவிட்டு போய்விடுவதாகத்தான் நான் உணர்ந்திருந்தேன்(படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டுருக்கிறது - நினைவில்லை - தவறிருந்தால் திருத்தலாம்). கதையில் முடிவிற்கு இருநூறு பக்கங்களுக்கு முன்பே இந்த முடிவைப் பற்றிய எண்ணங்கள் ஓடத்தொடங்கின.

எனக்கு சமீபத்தில் பார்த்த 'தேயா வு' படம் தான் நினைவில் வந்தது டென்சல் வாஷிங்டன் ஒரே சமயத்தில் கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் இருப்பார் நானும் அதே நிலையில், முடிவு தெரிந்த பிறகும் நிகழ்காலத்தில் கடந்தகாலத்தில் நடந்ததைப் பற்றி படித்த உணர்வு. உண்மையில் படத்தில் காண்பித்தது போலில்லாமல் ஹாப்பி எண்டிங். என்னைப் பொறுத்தவரை. அதுவும் கடைசியில் பாபுவும் யமுனாவும் பேசுவது ஒரு காலத்தில் வந்தியத்தேவனும்-குந்தவையும் பேசும் பொன்னியின் செல்வன் வசனங்களைப் போல் உற்சாகப்படுத்தியது. படித்துமுடித்துவிட்டு மணியைப் பார்த்தால் மணி ஆறரை. சாயங்காலம் ஒரு ஒன்பதரை பத்திற்கு எடுத்து வைத்திருப்பேன்.சுஜாதா அளவிற்கு fast reading இல்லையென்றாலும் நானும் fast reader தான்(இது சும்மானாச்சுக்கும்) ஆனால் பிரச்சனை அது இல்லை. அடுத்த நாள் விடுமுறை கிடையாது. இடையில் நான்கைந்து முறை டீ குடித்தது, மற்றும் இன்னபிற தவிர்த்து தூக்கம் என்பது பக்கத்தில் வரவில்லை. நான் பயந்தது அடுத்த நாள் வேலையைப் பற்றி.

நீ மூன்றாண்டு எக்ஸ்பீரியன்ஸாயிரு, எத்தனையோ சர்டிபிகேஷன்ஸ் பண்ணியிரு, கொடுத்த வேலையை அவர்கள் நினைத்ததற்கு முன்பேகூட எத்தனையோ முறை செய்திரு வேஸ்ட். கடந்த காலம் சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் வேஸ்ட், நீங்கள் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களைப் ப்ரூப் பண்ணவேண்டும். போட்டிகள் ஏராளம், வாய்ப்புகள் ஏராளம், பொறாமைகள் ஏராளம், பாலிடிக்ஸ் ஏராளம் செட்டிலாகி உட்கார்ந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் தலையில் கால்வைத்து போய்விடுவதற்காக காத்திருப்பவர்கள் ஆயிரம். ஆனால் உண்மையில் ஒரு ஹாப்பி எண்டிங் என்னால் ஆறரை மணிக்குப் பிறகு கிடைத்த இரண்டரை மணிநேரத் தூக்கத்தில் அடுத்த நாள் வேலையை நான் நினைத்ததை விடவும் சீக்கிரமாக செய்துவிட்டு இன்னொருமுறை மீள்வாசிப்பு செய்யவைத்தது.

என்னுடன் ஒரே அறையில் இருந்த ப்ளாக்கர் ஞானசேகருக்குத் தெரிந்திருக்கும், இரவு எத்தனை மணிக்கு ஆபிஸில் வருகிறேன் என்ற கணக்கு இல்லாமல் இருந்த காலத்தில் எல்லாம் 'என் பெயர் ராமசேஷன்' இரண்டு பக்கமாவது படித்திருக்கிறேன் தினமும். அவன் கூட கேட்டிருக்கிறான் அந்தப் புத்தகத்தைத் தான் படித்துவிட்டீர்களே என்று. ஆனால் படித்தப் புத்தகத்தின் படித்தப் பக்கங்களில் மீண்டும் மூழ்குவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பல புத்தகங்கள் திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன் உபபாண்டவம் கைவசம் இருந்த நாட்களில் கூட அப்படித்தான்.

ஒவ்வொரு கதையிலும் நாம் யாரோ ஒருவராகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு படிக்கத் தொடங்குறோம் இது இன்றைய பின்நவீனத்துவ நாவல்களுக்கு மட்டும் பொறுந்தாது, வேண்டுமானால் என்வரையில். ராமசேஷனும் சரி, பாபுவும் சரி கதையில் பல சமயங்களில் என்னுடன் நிறையத் தொடர்புடையவர்களாகப் பட்டது. அதுவும் பாபு - யமுனா. நான் முன்பொருமுறை கதையில் ஒரு வார்த்தை எழுதியிருந்தேன் நினைவில் இருக்கிறது.

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."

இதுவருவது முதலிரவு சிறுகதையில். அந்த ஒரு கையில்லாத ஆன்ட்டி அப்படியே யமுனா என்று வைத்துக்கொள்ளலாம், யமுனாவிற்கு ஒரு பிரச்சனை என்றால் இவங்களுக்கு ஒரு பிரச்சனை ஒரு கை கிடையாது. அந்தக் காலத்தில் நினைத்திருக்கிறேன் பெரியவனானதும் இவங்களைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று. நான் என்ன அப்பொழுது பத்தாவது படித்துக்கொண்டிருந்தால் ஆச்சர்யம். அவர்களுடன் பேசுவதற்காக, நின்று அவர்கள் வருவதைப் பார்ப்பதற்காக ஆயிரம் ப்ளான் போட்டிருக்கிறேன். சின்னப் பிள்ளை ப்ளான் இல்லையா எல்லாமே பெயிலியர் தான். ஆனால் ஒன்றிரண்டு தடவை பேசியிருக்கிறேன் அவ்வளவே. அவங்க இருக்கும் பொழுதே அவங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆனது நினைவில் இருக்கு.

அந்தக் குடும்பத்தில் எல்லாரும் ஏதோ ஒரு துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு அதை மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். நல்லவேளை பத்தாவது படித்த பொழுது மோகமுள் கதையைப் படிக்கவில்லை என்று இப்பொழுது நினைக்கிறேன் ;).

ஆனால் இன்று "இதற்குதானா" என்று ஒரு கேள்வி, திஜா மூலமாய், யமுனா மூலமாய், மோகமுள் மூலமாய் என்னிடம் நேரடியாய்க் கேட்கப்பட்டதாக உணர்கிறேன். என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் "அதற்குத்தானா" உண்மையில் தெரியவில்லை. ஆனால் இனக்கவர்ச்சியெல்லாம் அங்கேதான் சென்று முடியும் இல்லையா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராகக் கூடயிருக்கலாம், நான் என்னுடன் பாபுவையும் அந்த ஆன்ட்டியுடன் யமுனாவையும் ஒப்பிட்டது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இதுபோன்ற உணர்வுகள் வருமென்று தான் நினைக்கிறேன். பாலகுமாரன், அநிருத்த்ர பிரம்மராயர் நான் தான் என்று முடிவளர்த்து இருப்பதைப் போல, நான் தான் வந்தியத்தேவன் என்று குதிரையைத் தேடி அலையாமல் நிற்கும் வரை என் மனநிலை ஒரு சமானத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

PS: இனிமேல் என்னுடைய சில கதைகளைல் யமுனா என்ற கதாப்பாத்திரம் அதிகம் இடம்பெறலாம் யாருக்காவது பிரச்சனையிருந்தால் ஒருவரி எழுதிவிடுங்கள்.

mohandoss.i@gmail.com

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சினிமா விமர்சனம்

என்னுடைய கதை ஹாலிவுட்டில்

உண்மையில் இந்தத் தலைப்பைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியாகியிருந்தீர்கள் என்றால், நானும் அது போன்ற ஒரு சூழ்நிலைக்குத்தான் தள்ளப்பட்டேன் Deja vu படம் பார்த்த பொழுது. படம் ஒருவாறு இதைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று நினைத்துச் சென்றிருந்தாலும் ஒருவாறு நான் உபயோகப்படுத்த நினைத்த கதை. தனித்தனியாக, பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல் என்று அந்தக் கதையெழுத நிறைய படித்திருந்ததால் கொஞ்சம் போல் நிறைய விஷயங்கள் புரிந்தது. டாப் கன், எனிமி ஆப் த ஸ்டேட் என எனக்குப் பிடித்த பல படங்களில் இயக்குநர் டோனி ஸ்காட்.

543 மூன்று பேர் பயணமாகும், ஒரு பெரிய போட் இல்லை சிறிய கப்பல் உண்மையில் ஒரு Ferry. வெடித்துச் சிதறுவதில் தொடங்குகிறது இந்தப் படம். Bureau of Alcohol, Tobacco, Firearms and Explosives ல் இருந்து இதைப் பற்றி விசாரணை செய்யவரும் டென்ஸல் வாஷிங்டன். அதில் இருக்கும் ஒரு உடல் ஏற்கனவே அதாவது அந்த Ferry வெடிப்பதற்கு முன்பே கொல்லப்பட்டு ஆனால் உண்மையில் அந்த Ferry-ல் வெடித்திருந்தால் உடலுக்கு என்ன பாதிப்பு வருமோ அந்தப் பாதிப்பை ஏற்படுத்தி Ferry-ன் உள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்ததும் படம் விறுவிறுப்பாகிறது.

இந்த இடத்தில் தான் மக்கள் டைம் மெஷின் கான்சப்டை வைக்கிறார்கள், முந்தைய படங்களைப் போலில்லாமல் அதிக டெக்னிக்கல் வார்த்தைகள். பின்னொரு காலத்தில் கண்டறியப்படும் சாத்தியக்கூறுகளை மட்டும் வைத்து சாத்தியப்பட்டதாகக் காண்பிக்கிறார்கள். இதற்கு மேல் படம் எடுத்தவர்களுக்கே டைம் கான்சப்ட்டில் உள்ள பிரச்சனை நன்றாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் கடேசியில் செத்துப்போன டென்ஸல் வாஷிங்டன் உயிருடன் வருவது. ஆனால் இதையெல்லாம் நான் தவறென்றும் கூறமுடியாது.

ஏனென்றால் இதுவரை கண்டறியப்படாத ஒரு விஷயம் கண்டறியப்பட்டால் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது அல்லவா. கொஞ்சம் புரிகிறது போல் சொல்லவேண்டுமானால், நீங்கள் டைம் மெஷினை உபயோகித்து பழங்காலத்திற்குப் போகிறீர்கள் என்றால் அங்கே செய்யப்பட்ட மாற்றம் எப்பொழுது நிகழ்காலத்தை அபெக்ட் செய்யும். உடனேயா இல்லை நடந்த வரலாறு அப்படியே இருக்க இன்னொரு புதிதான வரலாறு எழுதப்படுமா, சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் சாப்ட் டெலிட் என்றொரு விஷயம் உண்டு அதைப்போல்.

எதையும் டெலிட் செய்யாமல் இந்த நிமிடத்தில் இருந்து இது இல்லை, புதிதான ஒன்று தான் முன்பிருந்தது என்பதைப் போல் செய்யமுடியுமா? சாத்தியக்கூறுகள் உண்டா? தெரியவில்லை. ஆனால் அதைத்தான் முடியுமென்கிறார்கள் இந்தப்படத்தில். நிறைய விஷயங்கள் உழைத்திருக்கிறார்கள். டென்ஸல் முதன்முதலில் வீட்டிற்குப் போகும் பொழுது கையுறை அணிந்திருப்பார், படத்தின் வரிசைப் படி அவரிடம் பேசும் டிடக்டிவ் ஏன் கையுறை அணியாமல் போனாய் என்று கேட்பார் அதைப்போலவே, கொலைகாரனின் வீட்டை டென்ஸல் வாஷிங்டன் முதல் முறை அடையும் பொழுதே ஆம்புலன்ஸ் நிற்கும். இப்படி நீங்கள் டைம் மிஷின் துணை கொண்டு முன்காலத்திற்குச் சென்று திரும்பினால் நிகழ்காலம் மாற்றப்படும் என்று ஒவ்வொரு பகுதியிலும் நினைத்து நினைத்துச் செய்தவர்கள். டென்ஸல் செத்துப்போன பிறகு உயிரோடு ஒன்றும் நடந்தது தெரியாது போல் வருவது டைரக்டரின் குழுப்பம்.

ஒரே சமயத்திலேயே நிகழ்காலத்திலும் இருந்துகொண்டு கடந்தகாலத்தையும் பார்க்க முடிவது போல் டென்ஸல் செய்திருக்கும் காட்சிகள் கான்செப்ட் அளவில் அருமை. படத்திலும் நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் டைம் மெஷின், மற்றும் காலத்திற்கு முன்னர் செல்வது போன்றவற்றில் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் கான்செப்டை படத்தின் இயக்குநரின் கான்செப்ட்டுடன் ஒப்பிட்டுப்பார்க்க நிச்சயம் படத்திற்குச் செல்லலாம். இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம் என்று தான் சொல்லவேண்டும் நிறைய உழைத்திருக்கிறார்கள்.

இன்னுமொறு டைம் மெஷின் பற்றிய கதையை எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டார்கள். ஹிஹி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In

சில விளக்கங்கள்

உண்மையில் செல்வநாயகியின் கடைசி பதிவு படிக்கும் பொழுதுதான் தெரிந்தது அவர் மனதளவில் என்னுடைய கதைகளாலோ, கதைத் தலைப்புக்களாலோ, பின்னூட்டங்களாலோ வருத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. சில தடவைகள் அவருடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைக்கவேண்டுமே என்று கதையெழுதியிருக்கிறேன் உண்மை.

ஆனால் அவர் நினைப்பது போல் தெய்வநாயகி நிச்சயமாக அவரை வம்பிழுக்க வேண்டும் என்றோ மற்றும் இன்னபிற விஷயங்களை நினைத்தோ எழுதுப்படவில்லை. அந்தக் கதை இந்தப் பிரச்சனைகள் எல்லாம் எழுவதற்கு முன்பே எழுதப்பட்டது. அந்தப் பெயரும் ஒரு உண்மையான நபரின் பெயர் தான். என்னுடைய நண்பர்கள் சிலர் தேன்கூடு போட்டிக்கு அனுப்பும் முன்னரே அந்தக் கதையைப் படித்திருக்கலாம். மரத்தடியில் பயின்றதுக்கு பிறகு கதைகளை எழுதியதும் போடும் பழக்கம் கிடையாது. அதுவும் அந்தக் கதை இருபது தடவைகளுக்கு மேல் திருத்தி எழுதப்பட்ட ஒன்று.

நான் கதையெழுத சுஜாதாவைத் தான் குருவாகத் தீர்மானித்திருந்தேன். அதனால் சில நடைமுறையில் நடக்கும் விஷயங்களை, மாற்றி, என்னுடன் சேர்த்து கதையெழுதும் பொழுது அட்வாண்டேஜ்கள் என்னை அந்த வகையான எழுத்துடன் தொடரச் செய்தன.

உண்மையில் அந்தத் தண்ணிப்பார்ட்டி எல்லாம் உண்மையே, பேச்சுலர் ஆண்களிடம் கல்யாணத்தைப் பற்றியும், வரப்போகும் பெண்களைப் பற்றியதுமான சிந்தனைகள் பெரும்பாலும் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னிடமும் அப்படியே. கல்யாணம் ஆன ஆண்கள் என்னிடம் அவர்களுடைய கல்யாண வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள்.

நான் பேச்சுப்போட்டியைப் பற்றிச் சொன்னது நிச்சயம் அவரைக் குறித்தல்ல, நானும் என் அக்காவும் உண்மையில் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது அக்கா சொன்ன விஷயம் அது. நான் அவளை பேசிப்பேசி ஜெயிப்பதாக நினைத்தவள் உனக்கும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் பெண்ணைத்தான் கட்டிவைப்பேன் என்று சொல்ல எழுதியது.

ஒற்றைப் பெண் விஷயமும் அப்படியே, எனது நெருங்கிய சொல்லப்போனால் ரொம்பவும் நெருங்கிய உறவினரொருவருக்கு அப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்க அவர் ஒரு தண்ணிப் பார்ட்டியில் புலம்பியது தான் அந்த விஷயம்(செல்வநாயகியைப் பற்றி யாரிடமும் இதுவரை விசாரித்ததில்லை, அவர் நினைப்பது போல் வேறெந்த வெரிபிகேஷனும் இதைப் பற்றிச் செய்யவில்லை. சொல்லப்போனால் அவருடைய பதிவுகளில் பலவற்றைக் கூட இன்னும் நான் படித்திருக்கவில்லை என்பதே உண்மை.)

மற்றபடிக்கு அவர் சொன்ன சில கருத்துக்களை மறுத்து அதற்கு கதையெழுதினேன் என்பது உண்மை ஆனால் அவரை பர்ஸனலாக தாக்கி எழுத வேண்டுமென்று மனதால் கூட நினைக்கவில்லை. என்னை நன்கறிந்த நண்பர்களுக்குத் தெரியுமது. எங்கள் குடும்பம் முழுவதும், பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், நாடகம் போன்ற விஷயங்கள் இன்வால்வ் செய்யும் ஒன்று. அதனால் நான் என் குடும்பத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதியது அவருக்குத் தவறாகத் தன்னை சொல்லியதாக உணரலாம்.

மற்றபடிக்கு அவர் அப்படி நினைக்கும் படி இருந்தது முற்றிலுமாக தற்செயல் நடவடிக்கையே. அதற்காக அவர் மனம் வருந்துவாராயின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இதையெல்லாம் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்பது இல்லை என்றாலும் விளக்க வேண்டியது என் கடமை செய்கிறேன் அவ்வளவே. வேறெதும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Only ஜல்லிஸ்

நான் வேலை பார்க்கிறேனா இல்லையா?

இதுதான் இப்ப தமிழ்மணத்தின் ரொம்ப முக்கியமான கேள்வியா உலவுதுன்னு சொன்னா அப்புறம் நான் தினம் தினம் பார்க்கும் என் ஸ்டாட் கவுண்டர் தப்பா சொல்லுதுன்னு அர்த்தம் ஆய்டும். அதனால் ஒருவாறு கேள்வியா இருக்கு.

இந்த வாரம் ஒரு ஐந்து திரைப்படங்களின் விமர்சனங்களைப் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதற்காக போன லாங் வீக் எண்டிலேயே எழுதிவைக்கப்பட்டு ப்ளாக்கரில் காத்திருந்தன ஐந்து விமர்சனங்கள் நாளொன்றாக வெளியிடப்படுவதற்கு.

என் முதலாளிக்கு நான் நல்லவனாயிருக்கிறேனா என்று யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது எனக்கும் என் முதலாளிக்கும் தெரிந்தால் போதும். என் வேலையைப் பற்றி விளக்கி நான் ப்ளாக் முன்பே எழுதிவைத்திருந்ததைப் போன்ற என்னுடைய மூன்றாண்டு(மூன்றரையாண்டு) சாப்ட்வேர் உலகத்தில் உயிர்வாழ்வது எப்படி என்ற கண்டுபிடித்து வைத்திருப்பதை சாதாரணமாக வெளியில் சொல்லமுடியாது.

சிதம்பர ரகசியத்தைப் போன்றது அது. பல ஆயிரம் $$$$$ சம்மந்தப்பட்டது. எனவே என் வேலையை, என்னை, என் முதலாளியைப் பற்றிய உங்களின் கன்செர்ன்களை தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு மனதை உங்கள் பக்கமாக திருப்பிக்கொள்ளுங்கள். கடேசியில் ஒன்றே ஒன்று நான் இப்பொழுது பெஞ்சில் இல்லை.(போதுமா! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

21 Grams

ஒரு கவித்துவமான தலைப்பைக் கொண்ட கவித்துவமான படம். சொல்லப்போனால் Babelனை எடுக்க இயக்குநர் உபயோகித்த அதே அணுகுமுறை(சொல்லப்போனால் தலைகீழாக வரும்.) Non-Linear, Tri Logic படத்திற்கான ஒரு அற்புதமான உதாரணம். Babel பார்த்துமுடித்ததும் எப்பொழுதும் போல் அந்தப் படத்தைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டதுதான் கிடைத்தது 21 Grams படம் பற்றிய குறிப்புகள்.

இதயம் பழுதடைந்த ஒரு கணித ஆசிரியர், அவரை பார்த்துக்கொள்ளும் முன்னாள் மனைவி. இந்நாள் காதலி - சொல்லப்போனால் அவர் இறக்கும் நிலையிலும் அவரின் மூலமாய் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நிலையில் இருப்பவர் - இருவரும் சொல்லப்படாத(கதையில்) முன்னர் பிரியும் சூழ்நிலை வந்த பொழுது, தான் கர்ப்பமாகயிருந்ததால் ரிஸ்க்கான சந்தர்பத்திலும் கருகலைப்பு செய்துகொண்டவர்.

இரண்டாவது, ஒரு டிரக் அடிக்ட், மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்காக உதவும் அவருடைய கணவன் மற்றும் இருமகள்கள்.

மூன்றாவது, முன்னால் குற்றவாளி, ஏசு கிறிஸ்துவிடன் தன்னை ஒப்புமை கொடுத்துவிட்டு, தலையில் ஒரு முடி நகர்ந்தாலும் அதற்கு இறைவனே பொறுப்பு என்ற மனநிலையில் இருப்பவர். அதையே போதிப்பவர். அவருடைய மனைவி, குழந்தைகள்.

இப்படி முன்னுக்குப் பின் சம்மந்தமில்லாத மூன்று குடும்பங்களை, ஒரு ஆக்ஸ்டெண்ட் மூலமாய் சம்மந்தப்படுத்தி ஒரு அற்புதமானக் கதையைத் தந்திருக்கிறார் இயக்குநர். முன்பே சொன்னது போல் Non-Linear கதை, அதாவது வரிசைக்கிரமமாக வராது, நான் ப்ளாக்கில் எழுதுவதை முழுதும் படிக்கு அன்பர்களுக்கு ஒரு உதாரணம் தரவேண்டுமானால். என்னுடைய "இப்படியும் ஒரு தொடர்கதையை" Non-Linear கதையென்று சொல்லலாம்(ஜல்லி, ஆன் ஜல்லி, ஆன் ஜல்லி) உண்மையில் அப்படி வரவேண்டுமென்று நினைத்து உருவாக்கவில்லையென்றாலும் கதை அப்படித்தான் வந்துகொண்டிருக்கிறது.

இங்கே மனிதர்களின் மனநிலையை இயக்குநர் படம் பிடிப்பது தான் அருமையாகயிருக்கிறது.

1) இதய மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர் - அந்த இதயம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்று ஆராய்வது.
2) தன் குடும்பத்தில் இரண்டு மகள்கள், மற்றும் கணவன் ஆகியவற்றை இழந்தப் பெண். தன் கணவருடைய இதயத்தை நன்கொடையாகத் தருவது.
3) ஏதோ ஒரு விதத்தில் கில்டியாக நினைக்கும் ஆசிரியரின் முன்னால் மனைவி, அவருடைய குழந்தையை தன்மூலமாக பெற்றுக்கொள்ள முயல்வது.
4) திருந்திவிட்டார் என்பதால் தன்னால் ஆன உதவியை செய்துவரும் நண்பர், தன்னுடைய மேலதிகாரிகளின் கட்டளைப்படி வேலையை அவரிடம் இருந்துபரிப்பது பின்னர் இன்னொரு வேலைக்கு ஏற்பாடு செய்வது....

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் இந்தப் படத்தைப்பற்றி.

தேர்ந்த நடிகர்கள், Sean Penn, Naomi Watts, Benicio Del Toro. எழுதியது Guillermo Arriaga, இயக்கியது Alejandro González Iñárritu.

இதில் Benicio Del Toroக்கும் Naomi Wattsக்கும் ஆஸ்கர் நாமினேஷன் கிடைத்தது. ஒரு அறிமுகத்திற்காக மட்டுமே இந்த விமர்சனம், படத்தைப் பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. நேரம் கிடைத்தால் இன்னொரு நாள்.

PS: The title of the movie comes from the work of Dr. Duncan MacDougall, who in the early 1900s sought to measure the weight purportedly lost by a human body when the soul departed the body upon death. MacDougall weighed dying patients in an attempt to prove that the soul was material and measurable. These experiments are widely considered to have had little if any scientific merit, and although MacDougall's results varied considerably from 21 grams, for some people this figure has become synonymous with the measure of a soul's mass.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சுய சொறிதல் பெண்ணியம்

தமிழ்மண விவாதக்களமும், பெண்ணியமும்

நான் இந்தப் பெண்ணியம் பத்தி பேச ஆரம்பிச்சாலே பிரச்சனையாயிடுதுன்னு நினைக்கிறேன். அப்படிக்கும் ஒன்றும் கேவலமான, அசிங்கமான, தனிநபர் விரோதமான பின்னூட்டங்கள் போடவில்லையென்றாலும் என்னுடைய பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன இல்லை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.

அப்படித்தான் தற்சமயம் தமிழ்மணம் விவாதக்களத்திலும் நடந்தது. என் பின்னூட்டன் வெளியிடப்பட்டு, ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகு முற்றிலுமாக தூக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. அவையிரண்டும் நான் எழுதியபடியே இங்கே. (இதையெல்லாம் ஆளைவைச்சா எழுதுறோம், எழுதின நேரத்திற்காவது மதிப்புக் கொடுங்கப்பா.)

--------------------------

இது முதல் பின்னூட்டம்.

உங்களுடைய கேள்விகளுக்கு என்னளவில் தோன்றும் பதில்களைத் தருகிறேன். இந்த பதில்கள் எந்த சந்தர்ப்பத்திலும் என் மனதில் தோன்றும் ஒன்றை மறைத்து வந்தவையாக இருக்ககூடாதென்றே நினைக்கிறேன்.

//பெண்ணடிமை/ஆணாதிக்கம் என்பதன் நிகழ்வு வீதம் என்ன?//

1. நிச்சயமாகக் கிடையாது. இது என் கண்ணால் நான் பார்த்த உண்மை.
2. ஆமாம் எதிர்நிலைகள் உண்டு.(பர்சண்டேஜ் பற்றி பேசுபவர்களுக்காக, எல்லா சமயங்களிலும் பர்சண்டேஜ்கள் உண்மையைச் சொல்லுவதில்லை.)
3. நிச்சயமாக.
4. எனக்குத் தெரிந்த வரலாற்றின் படி கிரேக்கர்கள் பெண்களை வெறும் பிள்ளை பெறும் எந்திரங்களாகப் பயன்படுத்தினார்கள் - உண்மை. உடலுறவுக்குக் கூட ஆண்கள் தான் ஒன்லி புள்ளப் பெத்துக்கிறதுக்கு மட்டும் தான் பெண்(உடலுறவு இல்லாமலா என்றெல்லாம் கேட்கக்கூடாது) - ஏனென்றால் அந்தக் காலத்தில் உடல்வலு மட்டுமே உரிமையைத் தீர்மானித்தது.

இந்த மாற்றம் வரவர இந்த நிலையில் மாற்றம் இருந்திருக்கும்.

//எந்த ஒரு குழந்தையின் முதன்மை வழிகாட்டி, ஆசிரியர், கருத்து உருவாக்கி யார்?//

1. நிச்சயமாக, (அம்மா பிரசவத்தில் இறந்துபோயோ இல்லை வேறு சில காரணங்களால் அம்மா இல்லாமல் போகும் போதோ மட்டுமே இதில் மாற்றம் இருக்கும்.

2. ஆனால் இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு, ஒரு பிள்ளைக்கு தன் தகப்பன் வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறான் பெரும்பாலான சமயங்களில், அப்படி தன் தந்தையை அவன் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத சமயங்களில் வெளி உலகத்தில்(Note this point.) உலவும் ஆண்களைத் தேடுகிறான். ஒரு ஆணால் தன்னுடைய தாயை வாழும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த அம்மா பாதிப்பு தனக்கு உற்றாளைத் தேடும் போது வருகிறது. தன் மனைவி தன் அம்மாவைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறான்(அம்மா அவனுக்கு நல்லவளாகத் தோற்றமளிக்கும் பட்சத்தில் இல்லாவிட்டால், உலக அளவில் தேடாமல் தன்னுடைய உறவினர்களில் தேடுகிறான். அக்கா, தங்கை அத்தை சித்தி என்று.)

நடத்தையில் தாயின் பங்கு அதிகம் தான், மறுக்கவில்லை, ஏனென்றால் தான் வேலை(இல்லை அது சம்மந்தமான விஷயங்களில்) தந்தையையோ இல்லை அவனுக்குப் பட்ட இன்னொரு ஆணையோ வழிகாட்டியாக கருதும் அதே வேளையில் தாயிடம் இருந்து குடும்பத்தை எடுத்து நடத்தும் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறான்.

//எப்படி பெண்ணடிமை/ஆணாதிக்கம் தோன்றியது?//

1. முன்பே சொன்னது போல் பெண்ணடிமை தோன்றியது அவர்களுடைய உடலில் பளுஇல்லாத காலங்களிலேயே, அவனுக்கு நாடு பிடிக்கும் ஆசைதான் அதிகமாயிருந்தது. அப்படிப் பிடித்த நாட்டை தன்னிலிருந்து தன் அடுத்த சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் கருவியாக அவளைப் பயன்படுத்தினான்.

அப்படி தன்னிலிருந்து அடுத்த சமுதாயத்திற்கு அவனுடைய வெற்றிகளை, பணத்தை, வீரத்தை கொண்டு செல்லும் பொழுது அதில் தவறு(சார்லஸ் அவருடைய இரண்டு பிள்ளைகள் தனக்குப் பிறந்தது தானா என்று வெரிபிகேஷன் செய்தது தான் நினைவில் வருகிறது - உண்மையில்லையா?) நடந்துவிடக்கூடாது என நினைத்ததன் விளைவுதான் பெண்ணடிமை. எப்பொழுது பெண்ணடிமை தோன்றியதோ அப்பொழுதே ஆணாதிக்கமும் தோன்றிவிட்டது.

2. ஆரம்பக்காலத்தில் அவன் தன்னுடைய சகோதரியையும், பெண் பிள்ளைகளையும், மனைவியையும் ஒன்றாக பார்த்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் பிற்காலத்தில் அவன் அந்த வலிமை குறைந்த பெண்ணிடம் இருந்து வெளிப்பட்ட(?) அறிவுசார்ந்த விஷயங்களினால் ஆட்பட்டு வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று அந்த வித்தியாசம் தெரிந்த பிறகு அவன் தன் மகளையும் தன் மனைவியையும் ஒன்றாகத் தான் பார்த்திருப்பான் என்று என் மனம் சொல்கிறது.சும்மா ஜல்லியடிப்பதற்காக மகளை வேறு ஜன்மமாகவும் மனைவியை வேறு ஜென்மமாகவும் பார்த்தான் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வேண்டுமானால் அவனுக்கு இப்படித் தோன்றியிருந்தால் அந்தப் பெண்ணை பெற்றவர்களுக்காக அவள்(மனைவி) இதை(ஏதாவது ஒரு முடிவை எடுக்க) தன்னைச் செய்யச் சொல்கிறாளோ என்ற பயம் கடேசி காலம் வரை வந்திருக்கலாம், ஏனென்றால் தான் பெற்ற பெண் தன்னை அப்படி மோசம் செய்ய மாட்டாள் என்று நினைத்திருக்கலாம்.

//குழந்தை வளர்ப்பு://

1. இதில் ஆணாதிக்கம் கொண்ட பெண்களை திணிப்பது சுத்த ஜல்லி, அப்படி அவன் மீது திணிக்கப்பட்டிருந்தாலும் அது நிச்சயமாக ஒரு பெண்ணால் இருந்திருக்க சாத்தியக்கூறு குறைவுதான். தன் மகன் தன்னிடம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கும் எந்தப் பெண்ணும் இது போன்ற விஷயங்களைச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பெண்டாட்டியை குறைவுள்ளவள் என்று சொல்வது தன்னையே சொல்வது தான் என்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவன் வாழ்ந்து வந்த ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு பொறுப்பு, அவன் கற்ற கல்வி, அவனுடைய அனுபவங்கள் இப்படி நிறைய விஷயங்களால் அவன் அப்படிப்பட்ட ஒரு கருத்திற்கு வந்திருக்கலாம்.

2. எங்கள் வீட்டில் உண்டு, எங்க வீட்டுப் பெண்பிள்ளைகளுக்கு அதிக அதிகாரம் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆண்களைவிட. சும்மா ஜல்லியடிக்கச் சொல்லவில்லை, அக்காவை மாஸ்டர்ஸ் படிக்க வைத்தார்கள் என்னை படிக்கவைக்கவில்லை. இதற்கு நான் பேச்சுலர்ஸில் வாங்கிய மார்க் காரணம் இல்லை. பொருளாதாரம் என்று வருவோமென்றால் அப்பாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் தன் பெண்ணை படிக்க வைத்தால் என்னை மாஸ்டர்ஸ் படிக்க வைப்பதற்கான வாய்ப்புக்கள் குறையும் என்று. இருந்தாலும் அப்படி நிறைவேற்றப்பட்டது. இது ஒரு சிறு உதாரணம். இது போன்ற ஆயிரம் உதாரணங்களை அடுக்கலாம் நான் வாழ்ந்த பகுதியில் கூட. என்னைப் பொறுத்தவரை அம்மாக்களுக்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளைத்தான் பிடித்திருக்கிறது. தன் ஆண்பிள்ளையிடம் பேசமுடியாத பல விஷயங்களை அவளால் தன் பெண் பிள்ளையிடம் தான் பேச முடிந்திருக்கிறது.

3. சொல்லமுடியாது சரியாய். இது சமூகத்தால் போற்றப்பட்ட ஒன்று, பெண்குழந்தை வளுஇல்லாதது. அதனால் சம்பாதிக்க முடியாது இந்த ஆண்களின் சமுதாயத்தில் பெண்களால் வெளியில் நடமாட முடியாது என்பது கட்டமைக்கப்பட்டது தான்.

ஆனால் வேலை என்ற விஷயம் மாறி வரும் நிலையில். இது நிச்சயமாக மாறிவிட்டது. கத்தியெடுத்து சண்டை போட்டுத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு நிலை போய்விட்ட நாளைக் கணக்கெடுத்தால் அந்த நாட்களில் இருந்தே இந்த விஷயம் மாறியிருக்க வேண்டும். வேண்டுமானால் பர்சண்டேஜ்கள் குறைவாக இருக்கலாம்.

//சொத்து/ஆதிக்கம்://

இது பெண்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்ல முடியாது. ஆனால் பர்சண்டேஜ்கள் அவர்களைத்தான் அதிகமாகக் காட்டும். பெண்ணை வாயைப் பொத்தி வீட்டில் வைத்திருக்க ஆண்கள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம் தான் இந்த விஷயம். வீடுகட்டிக்கொடுத்து, வேண்டுமென்ற நகைகள் செய்துகொடுத்து பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்து. அவர்களை அப்படிப்பட்ட உயர்ந்த(?) விஷயங்கள் இல்லாமல் வாழும் பெண்ணை பார்க்கவைத்து பயமுறுத்தும் ஒரு விஷயம் தான் இது.

சமுதாயத்தில் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று பயந்துதான் பல பெண்கள் தங்கள் கணவனுடன் வாழ்கிறார்கள் என்பது நிச்சயமாக மறுக்கமுடியாத உண்மை. இதுவும் நிச்சயமாக மாறும். ஆனால் கொஞ்சம் டைம் எடுக்கும். அதற்குள் ஒரு உலக்ப்போர் வந்துவிட்டால் ஒன்றும் சொல்லமுடியாது. உலகம் அழிவை நோக்கி நகர்த்தப்படும்.

2. ஒரு ஆளும் கிடையாது. எல்லோருக்கும் இது வேண்டும். அவன் அணிகிற சட்டைத் துணியிலிருந்து வாங்கும் கார் கலர் வரைக்கும். ;)

3. பெண்ணியவாதிகள் இதைத் தான் மறுக்கிறார்கள். நிலைத்து வாழவேண்டும் என்ற ஒரு விஷயம் மனதில் வந்துவிட்டால் நாம் சில விஷயங்களுக்கு ட்பண்ட் ஆகிவிடுகிறோம். அது தேவையில்லை, உனக்கும் எனக்கும் எல்லாம் சரியா ஒத்துவருதா வாழலாம் இல்லையா மூட்டைக்கட்டிவிடலாம் என்ற ஒரு நிலைக்கு வருவது தான் என்னைப் பொறுத்தவரை. குடும்பங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது. அதற்கு அந்தப் பெண் ஆண் அவன் குடும்பம் மட்டும் போதாது சமுதாயமும் திருந்த(?) வேண்டும்.

இவைகள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டவை. உங்களுடைய கடவுள்களின் பெயர்களால், நீங்கள் படிக்கும் புத்தகங்களில் பெயர்களா, மற்றும் உங்களை எந்தெந்த விதங்களில் எல்லாம் கட்டிப்போட முடியுமோ அந்தந்த விதங்களால். இதில் ஒன்று மாறாமல் இன்னொன்று மாறமுடியாது.

ஆனால் அப்படிப்பட்ட சமுதாயம் அமைக்கப்படும் பொழுது இந்தியா அமேரிக்காவாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில்.


----------------------------------

இது நம்ம நண்பர் ஒருத்தர் அடிச்ச ஜல்லிக்கு பதில் சொன்னது.

//நாங்களும் காதல், பரிவு, இரக்கம், நேசம், பாசம் எல்லாம்கொண்ட சகமனுஷிகளே. ஒரு ஆணின் நேசத்தில் பூ விரிவதுமாதிரி இதயம்
மலரவும், அன்னியோன்யமான, ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கிற, அந்த நேசத்தைக்கொட்டி வாழ்கிற தம்பதிகள் காண்கிறபோது
வெயிலுக்குப் பனி கரைவது மாதிரி மனம் கரையவும் முடிந்தவர்களே நாங்கள். //

ஒவ்வொரு முறையும் நண்பர் இந்தக் கருத்தை வைப்பதை தன் வாடிக்கையாக வைத்துள்ளார். நான் அவருடைய இந்தக் கருத்தைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை.

அப்படியில்லாமல் போய்விட்டவர்களை, இவர் பெண்கள் இல்லையென்று கருதுகிறாரா? அதுதான் எனக்குப் புரியவில்லை.

காந்தியின் கடேசிக் காலங்களில் அவருடைய தோள்களைத் தாங்கிப்பிடித்து நடந்துவந்த சகோதரிகளைப் பற்றித் தெரிந்திருக்கும் பலருக்கு. இதனை மட்டுமே காரணமாகக் காட்டி, காந்தியை ஆணியவாதி என்றும் Male Chavanist என்றும் சொன்ன அம்மையார்(பெண்ணியவாதி) ஒருவரை நண்பருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரை, அவரும் பெண்தான், பெண்ணியவாதிதான். அவருக்கு காதல், பரிவு, பாசம் இதெல்லாம் கிடையாது என்று சொல்லவில்லை தேவையில்லை என்று நினைக்கிறார். தவறில்லை; நண்பர் சொல்வதை ஒருவகையான சமரசம் என்று தான் நான் எடுத்துக்கொள்வேன். இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாத சமரசம், நாத்தீகம் எப்படி திராவிடக் கழகங்களில் இருந்து மறைந்து போனது என்ற கேள்விக்கு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தைக் தூக்கிப்பிடித்த பொழுதுதான் என்று எங்கேயோ படித்த நிகழ்வு.

நீங்கள்(அவருக்கு கிடையாது) உங்களுக்கு உண்மையாகயிருங்கள் அதுபோதும், மற்றபடிக்கு சொல்றதையெல்லாம் சொல்லிட்டு வார்த்தைக்கு "முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" அப்படியென்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டாம். நாங்கள் முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்களையும் விரும்பவில்லை, 725 ரெசிப்பிக்களையும் விரும்பவில்லை.

நீங்கள் இப்படி சொல்லிச்சொல்லி தான், வரும் மனைவி முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரலாளாக வரவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்குகிறார்கள், அப்படியே 725 ரெசிப்பிக்கள் தெரிந்து வைத்திருப்பதையும். ஆரம்பத்திலேயே அதெல்லாம் முடியாது நான் நானாகத்தான் வருவேன், காந்தள் மெல்விரலாளாகல்லாம் வரமுடியாதுன்னு சொல்லீட்டிங்கன்னா, அப்படி மெல்விரலாளாக இருக்கும் பட்சத்திலும் பிரச்சனையில்லை இல்லாதபட்சத்திலும் பிரச்சனையில்லை.

//விமானம் ஓட்டுவதில் ஆண்களை விட பெண்கள் ஒழுங்குதன்மையோடு//

பர்சண்டேஜே உதைக்குமேம்மா, என்ன சொல்றீங்க நீங்க, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லக்கூடாது.


--------------------------------------

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

Blood Diamond

ஆங்கிலப் படங்களை பெரும்பாலும் விமர்சனம் தெரிந்துகொண்டு பார்ப்பதில்லை, ஏனென்றால் அது நான் ஏன் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத் தொடங்கினேனோ அந்த விஷயத்தில் இருந்து என்னை நகர்த்திவிடும். ஆனால் படம் பார்த்தபின் அதைப் பற்றிய விமர்சனங்கள், நல்லது கெட்டதுகள், என்று ஒரு பயங்கரமான தேடுதலே அந்தப்படத்தைப் பற்றி செய்திருப்பேன். இதற்கும் நான் ஆங்கிலப்படங்களை ஏன் பார்க்க ஆரம்பித்தேன் என்பது தான் காரணம். ஏனென்றால் நான் பள்ளிப்பருவம் முழுவதும் தமிழ்மீடியத்தில் படித்தவன், கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதினேன் என்றாலும் பாடம் முழுவதும் ஆங்கிலத்தில் சொல்லப்படாது. அதற்காக For, While Loop எல்லாம் தமிழில் கன்வெர்ட் செய்யப்பட்டு கொலைசெய்யப்படாது என்றாலும் உரையாடல் மொழி தமிழ்தான். இதனால் எனக்கு ஏற்பட்ட டிஸ் அட்வாண்ட்டேஜ்களை போக்கிக்கொள்ளவே ஆரம்பத்தில் ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதனால் கதையைத் தெரிந்துகொண்டு பார்ப்பது என்னுடைய நோக்கத்திற்கு பாதகமாகவேயிருக்கும். ஏன் இப்ப இந்த சுய சொறிதல்-னா நான் ப்ளட் டையமண்ட் பார்க்கப்போவதற்கு முன்பே மதியின் விமர்சனத்தைப் படித்திருந்தேன்.

சரியான ஸ்பாய்லர், அதை அக்காவும் சொல்லியிருந்தனம். இருந்தும்தான் படித்திருந்தேன். ஆனால் அதனால் கூட ஒரு அட்வாண்ட்டேஜ் படத்தின் கதையும் நடக்கப்போகும் சம்பவங்களும் முன்பே தெரிந்தவையாக இருந்ததால் படத்தை இன்னொரு பார்வையில் என்னால் பார்க்கமுடிந்தது.(வேண்டுமானால் பொதுபுத்தியில் இருந்து மாறியது என்று சொல்லிக் கொள்ளலாம் :-)) படத்துடைய trailers பார்த்துட்டு ரிலீஸ் ஆனவுடனேயே பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ரிலீஸ் ஆனது ஜனவரி 13. நான் தமிழ்நாட்டில் திருச்சியில் இருந்தேன். Fame Cinemas, PVR Cinemas ல் படம் பார்த்துவிட்டு (ரீலீஸ் ஆகியிருந்தாலும்?) சிப்பியில் பார்க்க மனம் வரவில்லை. அதனால் தான் அடுத்தவாரம் பார்த்தது. ஏற்கனவே இந்தப் படத்தின் டைரக்டருடைய மற்றய படம் The Last Samurai எனக்கு மிகவும் பிடித்தப் படம் அதற்கான விமர்சனமும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்படி நிறைய விஷயங்கள் என்னை இந்தப் படத்தைப் பார்க்க வரும்படி அழைத்தன.

படம் எனக்கென்னவோ ரொம்ப பரீட்ச்சையான ஒரு விஷயத்தைப் பற்றியதாகத் தோன்றியது பின்னர் யோசித்துப்பார்த்ததன் விளைவு, ஏற்கன்வே சிட்னி ஷெல்டனின் "மாஸ்டர் ஆப் த கேம்" படித்திருந்தேன். சொல்லப்போனால் இதே கதைதான். அதனால் உபயோகப்படுத்தப்பட்ட டெர்ம்ஸ், மற்றும் இன்னபிற விஷயங்கள் புரிவதில் கொஞ்சம் சிக்கலில்ல்லை. (அந்தப் புத்தகம் படித்திருந்தால் இந்தப்படத்தை நிச்சயம் பாருங்கள்.

ஒரு ஆக்ஷன் பாக்ட் மூவிக்குள் சமூகத்திற்கான மெஸேஜ் சொல்ல இயக்குநர் முயன்றிருக்கிறார். டைட்டானிக்கில் பார்த்த டி காப்ரியோவா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் மனிதர். இப்பல்லாம் டி காப்ரியோ சாவறதுதான் டிரண்ட் என்று நினைக்கிறேன். டைட்டானி, த டிபார்ட்டட், இப்ப பிளட் டயமண்ட்.

"நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொண்டதற்கு கடவுள் எங்களை மன்னிப்பாரா என்று வருந்தியிருக்கிறேன். ஆனால் கடவுள் இந்த இடத்தைவிட்டுச் சென்று ரொம்ப நாட்களாகிவிட்டது" என்று ஆஸ்கர் வின்னர் ஜெனிபர் கன்னோலியிடம், வெள்ளை ஆப்பிரிக்காக்காரரான டி காப்ரியோ தங்களையும், கருப்பு ஆப்பிரிக்காரர்களையும் பற்றி புலம்பும் இடத்தில் பிரமாதப்படுத்துகிறார்.

ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும், "huh..." போட்டு சௌத் ஆப்பிரிக்கன் ஸ்லாங்கில் பல சமயங்களில் ரொம்பவும் தொடர்ச்சியாகப் பேசும் பொழுது புரியாத நிலையிலும் மனிதர் உழைத்திருப்பது தெரிகிறது.

ஸ்ஸாலமன் வாண்டி-யாக நடித்திருக்கும் Djimon Hounsou யை நீங்கள் கிளாடியேட்டரில் பார்த்திருக்க முடியும். இந்த மனிதரின் நடிப்புப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. வரிசையாக அவார்ட்களை இந்தப் படத்திற்காக பெற்றுவருகிறார். ஆஸ்கர் கிடைக்குமா பிப்ரவரி 23ல் விடைகிடைக்கும். என்னுடைய கருத்தின் படி இவருக்கு Best supporting actor-ம், Babel-ல் நடித்த Rinko Kikuchi க்கு Best supporting actress-ம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அப்புறம் பத்திரிக்கையாளராக வரும் ஜெனிபர் கன்னோலி. முதலில் தன்னைப் பார்த்து ஜொள்ளுவிட்டு வரும் டி காப்ரியோவிடம் எப்படியாவது விஷயத்தைக் கறந்துவிட முயலும் காட்சிகள் ஆஆவ். இருவரும் பேசிக்கொள்ளும் பத்திரிக்கை தர்மம் பற்றிய காட்சிகளும் அதே வகையறாவைச் சேர்ந்தவை தான்.

எனக்கு டைமண்ட் பற்றி, அதை மக்கள் எடுக்க உபயோகப்படுத்தும் முறைகள் பற்றி, அதன் ரிஷிமூலம் நதிமூலம் ஒன்றும் அறியாமல் பயன்படுத்தும் மக்கள் பற்றி நன்றாகவேத் தெரிந்திருந்தது இந்தப் படம் பார்ப்பதற்கு முன்னர். சில நாவல்களாலும் படித்த சில ஆர்ட்டிக்கிள்களாலும். இந்தப் படம் எடுத்ததன் மூலமாய் நிச்சயமாய் டைரக்டரால் மக்களை Conflict டைமண்ட் வாங்குவதிலிருந்து தடுக்க முடியாவிட்டாலும். Conflict Diamond பற்றித் தெரியாத மக்களிடம் அதைக் கொண்டு சென்ற விதம் பாராட்டுதற்குரியது. ஏதாவது ஒரு தொடக்கம் தான் தேவையாயிருந்திருக்கிறது எனக்கு பெரும்பாலான சமயங்களில்.

அந்தத் தொடக்கம் சுஜாதாவால், மதனால் இருந்தால் கூட எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை, அதேபோன்ற மனநிலை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல படம். மூன்று மணிநேரங்கள்(அல்லது இரண்டரை மணிநேரங்கள்) போவதே தெரியாமல் பார்க்கலாம், மசாலாக்கள் எல்லாம் தூவித்தான் எட்வெர்ட் ஸ்விக் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

"ஆப்பிரிக்காவில் பெட்ரோல் கிடைக்காமல் இருக்கும் வரை பிரச்சனையில்லை." என்று ஆப்பிரிக்க வயதானவர் ஸ்ஸாலமனிடம் சொல்லும் பொழுது தியேட்டர் முழுவதும் சிரிப்பு அலை பரவியது. இதுபோல நிறைய விஷயங்கள் ஜெனிபர் கன்னோலிக்கும், லியனார்டோ டி காப்ரியோவிற்கும் இடையில் உண்டு. படத்தில் மெஸேஜ் சொல்வது, அதுவும் ஒன்றிரண்டு பிரேம் அழகாக(கொடூரமாக) எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளுக்கிடையில் உட்கார்ந்து நல்லது கெட்டது(பகுத்தறிவு?) பற்றி பேசுவது பிடிக்காத ஆட்கள் நிச்சயமாய் தப்பித்துக்கொள்ளலாம்.

மற்றபடிக்கு நிச்சயமாக ஒரு நல்ல படம். பார்க்கலாம்.

PS: அப்புறம் இது போன்ற மெஸேஜ்கள் எல்லாம் உபயோகப்படுமா என்று கேட்பவர்களுக்கு. எங்கள் வீட்டில் பட்டுப்பூச்சியின் உடலில் இருந்து தான் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் பட்டுப்புடவையே கட்டமாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்ற பெண்ணியவாதிகள் சிலரை நேரில் பார்த்திருக்கிறேன்.

அதே போல் சத்தியசோதனை படித்துவிட்டு இனிமேல் மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த பிடிக்கிற ஆட்கள் இன்னும் எங்கள் வீட்டிலேயே உண்டு. மெஸேஜ்கள் நிச்சயமாக உதவுகின்றன. ஆனால் அப்படி உதவும் பர்ஸண்டேஜ்கள்??????

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

ராயர் காப்பி கிளப்

ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் போனேன், இல்லையென்றால் ஓரளவிற்கு நடமாட்டம் இருந்துகொண்டிருந்த மரத்தடி, இன்று நடமாட்டம் இல்லாமல் போனதற்கு நானும் என் கதைகளும் ஒரு காரணம் என்று பாஸ்டன் பாலா ஒருமுறை ஜல்லியடித்ததைப் போல் ராயர் காப்பி கிளப்பிலும் ஏதாவது நடந்திருக்கும். உண்மையில் எனக்கு நான் ஏன் அங்கே உறுப்பினர் ஆகவில்லை என்ற கேள்வி உண்டு. அதற்கு நான் ராயர்களைப் பார்த்து பயந்தது ஒரு காரணமாகயிருக்கலாம். நான் கண்ட இரண்டொரு பெயர்களே கூட பயமுறுத்துவதாகயிருந்தது. உங்களுக்காக ஒன்றிரண்டு எக்ஸாம்புள்கள். பிரகாஷ்ராயன், ஆஸாத்ராயன், மத்தளராயன்.

இதெல்லாம் ஜல்லிக்காக, இரா. முருகன், பா. ராகவன், ஹரியண்ணா சிலசமயங்களில் பெரிய ராயர் சுஜாதா போன்றவர்கள் எல்லாம் அங்கே எழுதவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையில், மரத்தடியில் பட்டுக்கொண்ட பிறகு, கொஞ்ச நாளைக்கு வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். சரி மேட்டருக்கு.

இந்தத் தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் ராயர் காப்பி கிளப் By இரா. முருகன். யானை படம் போட்டிருப்பதற்காகயெல்லாம் புத்தகம் வாங்கி ஒன்றிரண்டு வரி விமர்சனம் எழுத நினைத்ததில்லை. ஆனால் “அரசூர் வம்சம்” புத்தகம் கொஞ்சம் படித்ததும், சரி ஆளு என்னவாவது சொல்ல டிரை பண்ணியிருப்பாரு. படித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கியதுதான் இந்தப் புத்தகம். 65 ரூபாய் விலைக்குத் தேவலைதான் புத்தகம்.

சொல்லப்போனால், கற்றதும் பெற்றதுமின் ஷார்ட் வெர்ஷன் மாதிரி இருந்தது. (அது அப்படியில்லைன்னு யாராவது சொன்னால் இந்த வரியைத் தூக்கிவிடுகிறேன்.) ரொம்ப சுய புகழ்ச்சியில்லாமல், ரொம்ப ஜல்லியும் அடிக்காமல் விஷயத்தை ரொம்ப சுருக்கமாச் சொல்லியிருக்கிறார். சுஜாதா அளவிற்கு பொதுபுத்தி மக்களை கவரணும் என்ற எண்ணம் கிளப்பில் எழுதும் பொழுது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ராயர்களை திருப்தி பண்ண மட்டும் எழுதப்பட்டதா என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடினேன். ஆனால் அப்படிக்கிடையாது என்றுதான் தெரிகிறது.

மாந்திரீக யதாரத்தத்தில் கான்செப்டில் தன்னுடைய போட்டியாளராகக் கருதும் கார்சியா மார்க்வெஸ்ஸின் புகழ்பெற்ற நாவலை தமிழில் நக்கலாக “பெரியாத்தா கருமாதி” என்று சொல்லும் பொழுதாகட்டும். ஒரு ஓவியர் தன்னை வரைந்து தந்து சொத்தையே அபகரித்துவிடுவார் என்று சந்தேகப்படும் பொழுதாகட்டும், இந்துவை சைக்கிள் கேப்பில் நக்கல் விடும் பொழுதாகட்டும், இலக்கியச் சந்தில் சிந்து பாடும் பொழுதாகட்டும் பின்நவீனத்துவத்தின் பிளஷர் ஆப் த டெக்ஸ்ட்(Pleasure of the text) தெரிகிறது எனக்கு. ஆமாவா இல்லையா என்று சாருவிடமோ இல்லை ரமேஷ் பிரேமிடமோ கேட்கலாம்.

செப்டம்பர் பதினொன்று அமேரிக்காவில் அழித்தது உயிர்களையும் உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் மட்டும் இல்லை. அமேரிக்கர்கள் இதுவரை உயர்த்திப் பிடித்த தனி மனித சுதந்திரத்தையும்தான் என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சில் சமூகத்தின் மீதான அவருடைய பார்வை தெரிகிறது. இப்படியேத்தான் லெனி ரைபென்ஸ்தாலைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்யாணச்சாவாக விழுந்திருக்க வேண்டிய ஒன்று ஈசானிய மூலைச்செய்தியாக உதிர்ந்துபோனதை பற்றி எழுதியிருப்பதிலும் அவருடைய அக்கறை தெரிகிறது.

புலம்பெயராத ஈழ எழுத்தாளர், குந்தவை, இம்ப்ரஷனிஸ ஓவியர் எட்வர்ட் மனே, “குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம்” என்ற புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ரெம்ப்ராண்ட் என்று தொட்டுச்செல்லும் விஷயங்கள் அதிகம். பெரிய ராயர் சுஜாதாவைப் போட்டுத்தாக்குவதில் ராயர்களுக்கே உரிய நக்கல், எஸ்ரா ரொம்பச் சீரியஸாக, இதுவரை மூன்று நான்கு நாவல்கள் தான் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கும். இவருக்கு ரஜினி சார் ஞாபகம் வருவது, அப்படியே கிருஷ்ணனுடைய “புளிநகக்கொன்றையை” கிழித்துத் தொங்கவிட்டு, ஜெர்மன் ஐயங்காரைப் பற்றி கேள்வி கேட்கப்படும் பொழுதும் தெரிகிறது.

நிறைய விஷயங்களை அவருடைய தெளிந்த நடையில் தந்திருக்கிறார்.

கோயில் மணியின் குரலும் ஒடுங்கிட
வாயில் அழுகை உயர்ந்திடும் சாவில்
அசைவு மறந்த சடலம் சிரிக்க
வசவு மொழியும் கிளி.

இது போல நடைமுறை வெண்பாக்கள் அங்கங்கே சொருகப்பட்டு படிப்பதற்கு நன்றாயத்தான் இருக்கிறது. இந்த இரா. முருகனின் ராயர் காப்பி கிளப்.

PS: அங்கங்கே ஸ்மைலி போட வேண்டும் என்று நினைத்தவாறே தான் எழுதினேன் எழுதிய பிறகு தான் தெரிந்தது. அப்படிப்போட்டால் பதிவில் ஸ்மைலி இல்லாமல் ஸ்மைலியில் பதிவு இட்டதாக ஆகிவிடும் ஆதலாம் ஒன்றைக்கூட போடவில்லை.

நான் போட நினைத்திருப்பேன் என்று நினைக்கும் இடங்களில் நீங்களே போட்டுப் படித்துக்கொள்ளுங்கள்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In சினிமா விமர்சனம்

போக்கிரி - பார்க்கலாம் போங்க

போக்கிரி - பார்க்கலாம்

இந்த வாரம் தொடர்ச்சியாக திரை விமரிசனங்கள் தரலாம் என்று உத்தேசம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்தப் படத்தின் விமர்சனம். உண்மையில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தைப் பார்த்துவிட்டும் அதற்கான விமர்சனத்தை எழுதிவிட்ட பிறகும் சரி. நான் ரொம்ப நாட்களுக்கு அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு பொதுபுத்தி கிடையாது என்று மெய்ப்பிப்பதற்காக எழுதப்பட்ட விமர்சனம் மட்டும் தானா அது என்று.

ஏனென்றால் அப்படிப்பட்ட விமர்சனங்களை நான் வலையுலகில் பார்த்ததுண்டு. மேலும் நான் அப்படிப்பட்ட ஒருவனாய் மாறி வருகிறோனோ என்ற சந்தேகம் எனக்கு அந்த விமர்சனம் எழுதத் தொடங்குவதற்கு முன்பே வந்தது. ஏனென்றால் இந்த வித்தியாசம் எனக்கு புத்தகம் படிப்பதில் வந்துவிட்டிருந்தது. அல்லது வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அதனாலும் சினிமாவில் எனக்காக ஏற்படாத பொதுபுத்தியிலிருந்து விலகிவிட்டதான ஒரு மனநிலையை நானாக என் மீது திணித்துக் கொள்கிறேனோ என்று என்னை நானே சந்தேகிக்கத் தொடங்கினேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் இல்லை நான் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் விமர்சனத்தை அந்த ஒரு காரணத்தை மனதில் கொண்டு எழுதவில்லை என்று நிரூபணமாகிவருகிறது. அதற்கு இன்னுமொறு உதாரணம் இந்தப் போக்கிரி படம்.

படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு குறையைத் தவிர, ஒரு தமிழ் படத்திற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் கச்சிதமாக பொறுந்தி இருக்கிறது இந்தப்படம். விமர்சனத்தைப் படித்த பிறகும் அதற்கும் முன்பும் ஒரு மட்டமான விஜய் படத்தைப் பார்க்கப்போகிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் அப்படியில்லை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவில் தான் இருக்கிறது இந்தப் படம்.

தேர்ந்த நடிகர்கள், பிரகாஷ்ராஜ், நாசர், நெப்போலியன் மற்றும் கொஞ்சமாக ஜொள்ளுவிட அசினும் இருக்கிறார்கள் படத்தில். வடிவேலுவின் காமேடி சில இடங்களில் அசிங்கமாக இருந்தாலும் மக்கள் வடிவேலு வந்ததுமே சிரிக்கிறார்கள். பாடல்கள் அனைத்துமே கேட்கக்கூடிய அளவில் இருக்கின்றன. இரண்டு பாடல்களின் நடனமும் நன்றாக இருந்தது.

பிரபுதேவா, விஜய் காம்பினேஷன் என்பதால் இன்னமும் எதிர்பார்த்தேன் நடனத்தில். லாஜிக் ஓட்டைகளே இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், பளீரென்று தெரியுமளவிற்கு ஒன்றும் இல்லை. (விஜய் போலீஸ் என்று விமர்சனம் படித்திருந்ததால் ஒருவேளை அந்த லாஜிக் உதைக்கலையோ என்னவோ.) நிறைய விஷயங்கள் யோசித்துச் செய்திருக்கிறார் பிரபுதேவா. தமிழ்ப்படங்களில் நடன இயக்குநராக பணி செய்திருந்து நன்றாக உதவியிருக்கிறது.

ஓவர் சென்டிமெண்ட் பில்டப்புகள் கிடையாது, ஒன்றுக்கும் உதவாத பஞ்ச் டயலாக்குகள் அதிகம் கிடையாது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவரா, ரத்தம் துப்பாக்கி சினிமாவில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரிந்தவரா(அதாவது எல்லாம் நடிப்பென்று - அவ்வளவே) அப்படியென்றால் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

நான் த டிபார்ட்டட் பார்த்ததனால் வந்த பாதிப்பா என்று தெரியாது, காட்சிகளை அந்தப் படங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே வந்தேன். விஜய்யின் படங்களில் கில்லிக்கு அடுத்தது இன்னொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம் என்று உத்தேசித்திருக்கும் படம் போக்கிரி.

விஜய்யின் ரியாக்ஷன்கள் தெரிந்திருந்ததால் அப்படியொன்றும் அவரிடம் இருந்து பெரிதாக எதிர்பார்த்துப் போகவில்லை. விஜய்க்கு பிரமாதமாக வருகிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் நகைச்சுவை நன்றாக வருகிறது. ஸ்டண்ட் காட்சிகளில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. என்ன த டிபார்டட்டில் சைலன்சர் பொறுத்தப் பட்ட துப்பாக்கி விஜய்யிடம் அது இல்லை, அங்கே பல்க் பல்க் என்று சுட்டதும் ஆட்கள் விழுவார்கள் இங்கே டமார் டமார் என சுட ஆட்கள் விழுகிறார்கள். பிரகாஷ்ராஜ் அந்தச் செல்லத்தை கொஞ்சம் விட்டுவிடலாம். மற்றபடிக்கு ஒரு சிறு கேள்வி, விஜய்யும் அசினும் சந்திக்கும் சமயங்களில் எல்லாம் பின்னணியில் ஓடவிடப்படும் அந்த மியூசிக் டிராக் எங்கேயோ ஒரு ஆங்கிலப் படத்தில் முன்பே கேட்டது போன்ற உணர்வு. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

Popular Posts