நான் இந்தப் பெண்ணியம் பத்தி பேச ஆரம்பிச்சாலே பிரச்சனையாயிடுதுன்னு நினைக்கிறேன். அப்படிக்கும் ஒன்றும் கேவலமான, அசிங்கமான, தனிநபர் விரோதமான பின்னூட்டங்கள் போடவில்லையென்றாலும் என்னுடைய பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன இல்லை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன. அப்படித்தான் தற்சமயம் தமிழ்மணம் விவாதக்களத்திலும் நடந்தது. என் பின்னூட்டன் வெளியிடப்பட்டு, ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகு முற்றிலுமாக தூக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. அவையிரண்டும் நான் எழுதியபடியே இங்கே. (இதையெல்லாம் ஆளைவைச்சா எழுதுறோம், எழுதின நேரத்திற்காவது மதிப்புக்...
ஆங்கிலப் படங்களை பெரும்பாலும் விமர்சனம் தெரிந்துகொண்டு பார்ப்பதில்லை, ஏனென்றால் அது நான் ஏன் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத் தொடங்கினேனோ அந்த விஷயத்தில் இருந்து என்னை நகர்த்திவிடும். ஆனால் படம் பார்த்தபின் அதைப் பற்றிய விமர்சனங்கள், நல்லது கெட்டதுகள், என்று ஒரு பயங்கரமான தேடுதலே அந்தப்படத்தைப் பற்றி செய்திருப்பேன். இதற்கும் நான் ஆங்கிலப்படங்களை ஏன் பார்க்க ஆரம்பித்தேன் என்பது தான் காரணம். ஏனென்றால் நான் பள்ளிப்பருவம் முழுவதும் தமிழ்மீடியத்தில்...
ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் போனேன், இல்லையென்றால் ஓரளவிற்கு நடமாட்டம் இருந்துகொண்டிருந்த மரத்தடி, இன்று நடமாட்டம் இல்லாமல் போனதற்கு நானும் என் கதைகளும் ஒரு காரணம் என்று பாஸ்டன் பாலா ஒருமுறை ஜல்லியடித்ததைப் போல் ராயர் காப்பி கிளப்பிலும் ஏதாவது நடந்திருக்கும். உண்மையில் எனக்கு நான் ஏன் அங்கே உறுப்பினர் ஆகவில்லை என்ற...
போக்கிரி - பார்க்கலாம்இந்த வாரம் தொடர்ச்சியாக திரை விமரிசனங்கள் தரலாம் என்று உத்தேசம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்தப் படத்தின் விமர்சனம். உண்மையில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தைப் பார்த்துவிட்டும் அதற்கான விமர்சனத்தை எழுதிவிட்ட பிறகும் சரி. நான் ரொம்ப நாட்களுக்கு அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு பொதுபுத்தி கிடையாது என்று மெய்ப்பிப்பதற்காக எழுதப்பட்ட விமர்சனம் மட்டும் தானா அது என்று.ஏனென்றால் அப்படிப்பட்ட விமர்சனங்களை நான் வலையுலகில் பார்த்ததுண்டு....
பகுத்தறிவு என்றால் என்ன?நல்ல கேள்வி ;), //எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு.//இந்த நல்லது எது கெட்டது எது என்று தீர்மானிப்பது எப்படி. உங்களுக்கு நல்லாதாகப் படும் விஷயம் எனக்கு தவறானதாகப் படும் இல்லையா? சதாம் தலையில் தட்டியதை நான் உட்பட பலர் அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு கெட்டது எனத் தீர்மானிக்கிறோம்...
ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக...
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றான் தொழாஅர் எனின். "தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை." வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு விக்கி மக்கள் கொடுத்திருக்கும் விளக்கம்.உண்மையில் கல்வி கற்பது என்பதை நாம் ஒரு விஷயமாக பெரும்பாலான இடத்தில் எடுத்துக்கொள்ளவே முடியாது. அதனால் தான் இன்றுவரை இந்தியாவில் அரசியல்வாதியாவற்கு கல்வி ஒரு...
மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக மட்டும் அவன் இந்த நாளுக்காக காத்திருக்கவில்லை. அவன் செய்த கொலையையே இல்லாமல் செய்துவிடும் வல்லமை பெற்ற நாள்தான் என்பதற்காகவும்தான். இன்னும் அந்த நாள் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது. அவனுடைய நண்பனுக்கும் அவனுக்குமிடையில் ஏற்பட்ட...
நான் இப்படியே ஜல்லியடித்துவிட்டு போய்விடலாம்னு நினைத்தேன் ஆனால் அது முடியாது போலிருக்கிறது. பரவாயில்லை ரொம்ப விளக்காமாகவும் போகாமல் ரொம்ப மேலோட்டமாகவும் போகாமல் விவரிக்க முயல்கிறேன்.இரண்டாம் உலகப்போரின் முக்கயத்துவத்தை கருத்தில் கொண்டு, எல்லா முக்கயமான நாடுகளும் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற, பலமுறைகளில் இந்த கிரப்டோகிராபியை பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியினர், உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒரு சிப்பரை தாங்கள் வைத்திருக்கும் எனிக்மாவை(Enigma) உருவாக்கி உபயோகித்து வந்திருந்தார்கள். இந்த...
நான் வழக்கமான பதிவுகளாக இல்லாமல், ஆழமான பதிவுகள் மட்டுமே போடவேண்டும்(தலைப்பில் கூட உம்மைத்தொகையிருக்கிறது.) என நினைத்ததும் நினைவுக்கு வந்த முதல் எண்ணம் சோழர்களைப்பற்றி, அடுத்து நினைவிற்கு வந்தது தான் இந்த கிரிப்டோகிராபி. கிரிப்டோகிராபி என்பது ஒன்றும் பெரிய விளங்காத விஷயமில்லை, சுலபமானதுதான். சில கணித முறைகளைப்பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் கிரிப்டோகிராபி. முக்கியமாக தகவல்தொடர்பின் பொழுது. அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலை பரிமாறும்...
சமீபத்தில் வெட்டிப்பயலின் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. நிச்சயமாய் அந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கலாம் தான். ஆகக்கூடி ஒரு ஜல்லிப்பதிவு போடுவதுன்னு ஆச்சுது. சரி அதேநேரத்தில் பதிவிடும் நேரத்தை ஒரு நல்ல மனிதனுக்காக செலவிடும் நல்ல எண்ணத்தில் இந்தப் பதிவு.
உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த செந்தழல் ரவி, ஒரு சாதாரண பதிவர் பின்னூட்டங்களில் ஜல்லியடிப்பவர் அவ்வளவே. சொல்லப்போனால் ஒரு 'வடை' பிரச்சனையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை கூட இருந்தது.
ஆனால் அவர் இந்த வேலைவாய்ப்பு விஷயத்தை தொடங்கியதும், (நான் படித்ததும்) செய்த முதல் வேலை எனக்குத் தெரிந்த வேலை வாய்ப்புக்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது. அவருக்கு அந்தச் சமயம் தொலைபேசியிருந்தேன். வெட்டிப்பயல் சொன்ன அத்தனையும் உண்மை, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாத என்னைப் போன்ற மேல்மாடி காலியாயிருந்த(நான் மட்டும் - இது கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகாத மற்றவர்கலை குறிக்கவில்லை) மக்களுக்கு எவ்வளவு உதவியாகயிருக்கும் என்பது.
என்னுடைய ஓட்டை( ;-) ) இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் டெல்லியில் வேலை தேடிய அனுபவத்தில் எனக்கு நன்றாகவேத் தெரியும். எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.
வாழ்க நீ எம்மான், வளர்க உன் தொண்டு.
----------------------------------------------------
என்னை நேரில் பார்த்த அதாவது நான் தான் என்று தெரிந்து பார்த்த இரண்டு பதிவர்களில் செந்தழலாரும் ஒருவர். ஒரு அபாக்கியமான சமயத்தில் நாங்கள் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய டெபிட் கார்ட் தொலைந்து போய், அதை இன்னொரு நபர் ஸ்வைப் பண்ணிக்கொண்டிருந்த வேளையில் நடந்த சந்திப்பு அது.
சொல்லிக்கொள்ளும் படியாக அவர் நிறையப் பேசினார். நான் வழக்கம் போல் ஜல்லிதான். ஆனால் நான் நினைத்ததுதான் நடந்தது, என்னுடைய வயசை அவர் சுத்தமாக நம்பவேயில்லை. அடுத்த முறை பார்க்கும் பொழுது பாஸ்போர்ட் சகிதம் பார்த்து உண்மையை நம்பவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
அவரிடம் ப்ராமிஸ் செய்த ஒரு விஷயத்தை செய்யவில்லை, விஷயம் அவருக்குத் தெரியும். வேறென்ன கேட்கப்போகிறேன்.
மாப்பு, மாப்பு மற்றும் இன்னொரு முறை மாப்பு.
-----------------------------
தலைப்பு வழக்கம் போல ஜல்லி தான், அர்த்தம் கேட்டால் ஐகாரஸிடம் அனுப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன் பின்னர் ஒருவழி எழுதுவதில் தவறில்லையென்று. "வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கித்தந்தே தீருவேன் என்று ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி உங்களுக்கு?". இதுதான் நான் நினைத்த தலைப்பு. தமிழ்மணம் தாங்காது ஆதலால் எனக்கு வேண்டிய பாகத்தை வெட்டி ஒட்டி இந்த தலைப்பு.
உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த செந்தழல் ரவி, ஒரு சாதாரண பதிவர் பின்னூட்டங்களில் ஜல்லியடிப்பவர் அவ்வளவே. சொல்லப்போனால் ஒரு 'வடை' பிரச்சனையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை கூட இருந்தது.
ஆனால் அவர் இந்த வேலைவாய்ப்பு விஷயத்தை தொடங்கியதும், (நான் படித்ததும்) செய்த முதல் வேலை எனக்குத் தெரிந்த வேலை வாய்ப்புக்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது. அவருக்கு அந்தச் சமயம் தொலைபேசியிருந்தேன். வெட்டிப்பயல் சொன்ன அத்தனையும் உண்மை, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாத என்னைப் போன்ற மேல்மாடி காலியாயிருந்த(நான் மட்டும் - இது கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகாத மற்றவர்கலை குறிக்கவில்லை) மக்களுக்கு எவ்வளவு உதவியாகயிருக்கும் என்பது.
என்னுடைய ஓட்டை( ;-) ) இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் டெல்லியில் வேலை தேடிய அனுபவத்தில் எனக்கு நன்றாகவேத் தெரியும். எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.
வாழ்க நீ எம்மான், வளர்க உன் தொண்டு.
----------------------------------------------------
என்னை நேரில் பார்த்த அதாவது நான் தான் என்று தெரிந்து பார்த்த இரண்டு பதிவர்களில் செந்தழலாரும் ஒருவர். ஒரு அபாக்கியமான சமயத்தில் நாங்கள் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய டெபிட் கார்ட் தொலைந்து போய், அதை இன்னொரு நபர் ஸ்வைப் பண்ணிக்கொண்டிருந்த வேளையில் நடந்த சந்திப்பு அது.
சொல்லிக்கொள்ளும் படியாக அவர் நிறையப் பேசினார். நான் வழக்கம் போல் ஜல்லிதான். ஆனால் நான் நினைத்ததுதான் நடந்தது, என்னுடைய வயசை அவர் சுத்தமாக நம்பவேயில்லை. அடுத்த முறை பார்க்கும் பொழுது பாஸ்போர்ட் சகிதம் பார்த்து உண்மையை நம்பவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
அவரிடம் ப்ராமிஸ் செய்த ஒரு விஷயத்தை செய்யவில்லை, விஷயம் அவருக்குத் தெரியும். வேறென்ன கேட்கப்போகிறேன்.
மாப்பு, மாப்பு மற்றும் இன்னொரு முறை மாப்பு.
-----------------------------
தலைப்பு வழக்கம் போல ஜல்லி தான், அர்த்தம் கேட்டால் ஐகாரஸிடம் அனுப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன் பின்னர் ஒருவழி எழுதுவதில் தவறில்லையென்று. "வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கித்தந்தே தீருவேன் என்று ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி உங்களுக்கு?". இதுதான் நான் நினைத்த தலைப்பு. தமிழ்மணம் தாங்காது ஆதலால் எனக்கு வேண்டிய பாகத்தை வெட்டி ஒட்டி இந்த தலைப்பு.
சொல்லப்போனால் நேற்று, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இங்கே இந்து முஸ்லீம் பிரச்சனை நடந்தது. பெங்களூரின் சிவாஜி நகர் பகுதி முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி. அவர்களில் ஒரு பகுதியினர், சதாம் உசேனைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். கண்டித்தது இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தில்லை அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து.வழியில் ஒரு கோவிலில் பிரச்சனை செய்ததாகக் கேள்வி. இது நடந்த பிறகு, நேற்று விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு மாநாடு...
In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை
ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்
Posted on Monday, January 22, 2007
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஒருவாறு ஊகிக்க முடிந்தும் அந்தச் செயலை செய்வது எனக்கு ஆச்சர்யத்தை அளிப்பது. அன்றும் அப்படித்தான் நடந்தது. நான் இந்த விஷயத்தை எப்படி அகிலாவிடம் சொல்வது என்று முன்னூறு முறை ஒத்திகை பார்த்து அலுத்துப்போய் சொல்லியேவிட்டேன், அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும், என்று நினைத்து. “அகிலா, உன்...
டிசேவின் பதிவில் இருந்து ஆரம்பமானது தான் இந்தத் தேடல். முன்பு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரிகளை இன் டர்நெட்டில் தேடப்போக ஆச்சர்யமாக இருந்தது நான் வழமையாக எழுதிய பல போரம்களை காணவேயில்லை. இருந்த போரங்களும் முழுமையாக மாற்றப்பட்டு ஆச்சர்யமாகயிருந்தது.நான் அந்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல் இந்தக் கவிதையை, வைரமுத்துவின் கவிதைத்தொகுப்பு புத்தகம் வாங்கிய மறுநாள் மனனம் செய்தது. இன்னமும் நினைவில் உள்ளது சில மாற்றப்பட்ட வரிகளுடன்....
எப்பவுமே விகடன்.காம் ஓப்பன் பண்ணினா கற்றதும் பெற்றதும் முதலில் படிக்கிறது வழக்கம். இன்னைக்கு சுஜாதா சொல்லியிருந்த ஒரு விஷயம் சிறிது உறுத்தியது.ராமானுஜன் என்றால், ராமனின் உடன்பிறப்பு. எனக்குப் பிடித்த பெயர்களில் அது ஒன்று. நான் மிகவும் வியப்பது மூன்று ராமானுஜர்களை! 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, விசிஷ்டாத் வைதக் கருத்துக்களை நிறுவி, ஸ்ரீபாஷ் யம் தந்த ராமானுஜர் அதில் முதல்வர். கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இரண்டாமவர். கவிஞரும்,...
வானவில்லை நீங்கள்தண்ணீர்த் தூறலில்தரிசித்திருப்பீர்கள்நீங்கள்கலையாத வானவில்லைகண்டதுண்டா?கண்ணீர்த் தூறலில்முளைப்பதால் தானோஅது கலையாமல் இருக்கிறதுஅது தான்காதல்காதல் மனிதனைத் தேவனாக்கும்இரண்டாம் பரிணாமம் இதுஇந்த காதல் மேகம் தான்மனமென்னும் எரிமலையில்மழைசிந்தி, மழைசிந்திஅதில் உல்லாச வனங்களைஉற்பத்தி செய்யும்இதய ரோஜாச் செடியில்இந்தஒற்றைப்பூப் பூத்துவிட்டால்அத்துனை முட்களும்உதிர்ந்து போகின்றனவாலிபம் ஏந்திப்பார்க்கும்?திருவோடும் இதுதான்வாலிபம் சூடிப்பார்க்கும்கீரிடமும் இதுதான்முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்சரியாய் விளங்கவில்லைஇப்போதோ மௌனத்திற்கும் கூடஉரையெழுத முடிகிறதுகாதல் காதுகுடைந்து போட்டகோழி இறகுங்கூடமயிலிறகுக்கானமரியாதைக்குரியதுகாதல் கடிதங்கள்பருவம் எழுதும் பரீட்சைகளில்எழுத்துப்பிழைகள் மன்னிக்கப்படுவதுஇந்தப் பரீட்சையில்தான்அக இலக்கணம்அதைக்காதல் வழுவமைதி என்றுகணக்கில் வைத்துக்...
அம்மாவின் பிறந்தநாள்ஆயிரந்தான் கவிசொன்னேன்அழகழகாய் பொய் சொன்னேன்பெத்தவளே ஒம் பெருமைஒத்தவரி சொல்லலையே!எழுதவோ படிக்கவோஏலாத தாயப்பத்திஎழுதி என்ன லாபமின்னுஎழுதாமப் போனேனே!எங்கேயோ, எப்படியோ, யாரா சொல்லக் கேள்விப்பட்ட இந்தவரிகளால் மூச்சடைத்துப் போய்உட்கார்ந்திருந்தேன். திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியிருந்தது. மனதிற்கு தெரிந்துதான் இருந்தது, இன்றைக்கு வேலை கோவிந்தாவென்று. பக்கத்து கியூபிற்கு வந்து உட்கார்ந்த அந்த காஷ்மீரத்து பெண் என் முகத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒன்றுமே பேசாமலிருந்தாள், முன்பு சிலசமயம்...
நான் பார்த்த முதல் பின்நவீனத்துவப் படம்.உண்மையில் திருவிளையாடல் படம் பார்த்துவிட்டு வெறுத்துப் போய்தான் இருந்தேன். என் நினைவில் இருப்பது வரை நான் தமிழ்ப்பட விமர்சனம் என்று இறங்கியதில்லை, நிச்சயமாக அதை திருவிளையாடலில் இருந்து தொடங்க விரும்பவேயில்லை தான். ஆனால் அந்தப் படம் என்னை எழுத வைத்தது. என்னுடைய எட்டு நாள் விடுமுறையை பாதிக்கும் அளவிற்கு அந்தப்படம் என்னுள் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது உண்மை. முள்ளை முள்ளால் தான் எடுக்க...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணால...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...