In கவிதைகள்

நகுலன்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நகுலன் பற்றி சாருநிவேதிதா எழுதி சாருவினுடைய வெப்சைட்டில் பார்த்த நியாபகம் தான் முதலில் வந்தது ஆனந்தவிகடனுடைய நகுலன் கவிதைகளைப் படித்தபொழுது...


நகுலன்



‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!



என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!





யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!



நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!



உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?





ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!



முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!



வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

credits vikatan.com, charu nivedita.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா விமர்சனம்

திருவிளையாடல் ஆரம்பம் - ரொம்ப முக்கியம்

வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டதாக வருந்துகிறேன்.

ஒழுங்கு மரியாதையா இந்தி, இங்கிலீஸ் படங்களை மட்டும் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டிருந்த நான் திருவிளையாடல் ஆரம்பம் என்ற தனுஷின் படத்திற்கு சென்றதைத்தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இந்த தனுஷ் படங்களால் நான் மிகவும் வெறுப்படைகிறேன். இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு படம் பேரு நினைவில் இல்லை(அவங்க அப்பா இயக்கியிருந்தாரு - துள்ளுவதோ இளமையில்லை). சரியான கடி. அதுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்தப் படம். ஏண்டா படத்திற்கு போனோம் என்று ஆகிவிட்டது.

இந்த புண்பட்ட மனதை இன்னும் சில இந்தி ஆங்கில படம் பார்த்துத்தான் ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் காரணமாக சில படங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இந்தப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சொந்தக் கதை

அயர்லாந்து ஒரு அறிமுகம்

என்னடா இவன் இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு எதுவும் போய்ட்டானா என்று அவசரப்படுபவர்களுக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நான் கேன்பேவிலிருந்து மாறி பெங்களூருக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். நான் இங்கே வந்து சேர்ந்திருக்கும் ஒரு கம்பெனி ஒரு அயர்லாந்து பேஸ்டு கம்பெனி. இதனாலெல்லாம் நான் அயர்லாந்து ஒரு அறிமுகம் போடவேண்டுமானால். முதலில் அமேரிக்கா ஒரு அறிமுகம் தான் போடவேண்டும்.

சரி விஷயத்திற்கு வரலாம்னா ஒரு கன்டின்யுட்டி வேணும்ல அதனால இன்னும் கொஞ்சம் சுயசொறிதல். அதாவது நான் சேர்ந்திருப்பது ஒரு சிறிய கம்பெனியாக இருந்தாலும்(கேன்பேவுடன் ஒப்பிடும் பொழுது) ப்ரொடக்ட் பேஸ்டு கம்பெனி. இதனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் இன்டஸ்டிரியில் உபயோகப்படுத்தும் ஆர்க்கிடெக்சர்களை உபயோகப்படுத்தாமல்(சரியாகச் சொல்லவேண்டுமானால் - நேரடியாக உபயோகப்படுத்தாமல்) சொந்தமாக ஆர்கிடெக்சர் வைத்திருக்கிறார்கள். (டெக்னிக்கலாக இன்னுமொறு பதிவு போட விரும்புவதால் இப்போதைக்கு சுறுக்கமாக.)

இந்த மாதிரி வைத்திருப்பதால் வரும் கஷ்டம் என்ன என்றால் கூகுளாண்டவர் கோட் எழுத உதவமாட்டார். காப்பி பேஸ்ட் எல்லாம் ஒரளவிற்கு மேல் உதவாது. அதன் காரணமாக எங்களுக்கு அந்த ஆர்கிடெக்சரை சொல்லித்தருவதற்காக அந்த ஆர்கிடெக்சரை டிசைன் செய்த மக்களை - இல்லை நன்றாக அந்த ஆர்கிடெக்சர் அறிந்தவரை - இல்லையென்றால் என்னைப்போல பெரிய கம்பெனியில் இருந்து வந்த மக்களை கொஞ்சமாவது சமாதானப்படுத்துவதற்கு - அயர்லாந்து மக்கள் வந்திருந்தார்கள். அப்பாடா ஒருவழியா கதைக்கு வந்துட்டேன்.

ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அன்றைக்கான வகுப்புகள் இல்லாததால் வழக்கம் போல் தமிழ்மணத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மெயில் உடனடியாக நாம் எல்லோரும் சந்திக்கிறோம் என்று. (நாம் என்பது அந்த அயர்லாந்துக்காரர் மற்றும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நாங்கள்). நான் என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் ஆகா நாம எக்ஸர்சைஸ் ஒழுங்கா செய்யாம டிமிக்கி கொடுக்கிறது தான் தெரிஞ்சு கூப்பிடுறான் போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு. இருந்தாலும் வடிவேலு மாதிரி இருக்கிற மீசை விறைப்பா வைச்சிக்கிட்டு உள்ள போனேன் அந்த கான்பிரன்ஸ் அறைக்கு.

அந்த மனிதர் அயர்லாந்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு கொஞ்சம் போல் நிமிர்ந்து உட்கார்ந்தேன். விஷயம் என்னான்னா - பயிற்சி எடுத்துகொண்டிருந்த ஒரு அதிகப்பிரசங்கி, அந்த நபரிடம்(பேரு டோனின்னு வைச்சுக்கோங்களேன்.) அயர்லாந்து ஒரு நாடில்லை போலிருக்கே, அது இங்கிலாந்தோட ஒரு மாநிலமாமுல்ல - என்பதாகவோ இல்லை அதற்கு ஈடான ஒன்றையோ கேட்டுத் தொலைக்க எனக்கு இந்தப் பாடம். பெரும்பாலும் இது போல் பயற்சியளிக்க வருபவர்கள் கொஞ்சம் நெருக்கமாக பழகமாட்டார்கள். முக்கியமாக தற்பெருமை பேசமாட்டார்கள் அதனால் தான் டோனி முதலில் இதைப்பற்றி ஆரம்பித்ததும் நான் மலைத்தது - இதற்கெல்லாம் காரணம் நாட்டுப்பற்று என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

இனிமேல் கொஞ்சம் போல் அயர்லாந்து ஒரு அறிமுகம்.

எனக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு மாநிலம் கிடையாது அது ஒரு தனிப்பட்ட நாடென்று தெரியும். அதேபோல நார்தர்ன் அயர்லாந்து பிரச்சனையும் கொஞ்சம் தெரியும். எப்படின்னா ஒரு சமயம் எந்த தேசத்தின் தேசியப்பாடல் சிறந்தது என்பதாகவோ இல்லை அதற்கு ஈடானதோ ஒரு போட்டியை பிபிசி(?) அறிவித்திருந்தது. அந்த முடிவுகளில் நார்தர்ன் அயர்லாந்தின் தேசியப்பாடல் முதல் இடம் பெற்றதாக ஞாபகம். விடுதலைப்புலிகளினுடையது இரண்டாவது வந்ததென்று நினைக்கிறேன். (நான் நிச்சயமாக போட்டோஜெனிக் மெம்மரி உடையவனெப்பது எனக்கு தெரியும் ஆனால் வரவர சாதாரண விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.)

என்ன பிரச்சனை என்றால், இந்தியாவைப் போல் அயர்லாந்தும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருந்தது. பின்னர் 1949ல் இரண்டாம் உலகப்போரின் பின் சுதந்திரம் அடைந்து ரிப்பப்ளிக் ஆப் அயர்லாந்து என்ற பெயரில் தனிநாடனது. அங்கே தான் ஒரு சின்ன பிரச்சனை. நம்முடைய காஷ்மீரைப்போல(இது ஒரு சாதாரணமான கம்பேரிஸன் - மக்களுக்கு பிரச்சனை புரியவேண்டுமென்பதற்காக மட்டுமே.)

பிரச்சனை என்னவென்றால் அயர்லாந்தின் ஒட்டுமொத்த பகுதிகளும் கிறிஸ்துவத்துன் ஒரு பிரிவான கேத்தலிக் மக்களைக்கொண்டது. ஆனால் நார்தன் அயர்லாந்து பெரும்பான்மையாக ப்ரோட்டஸ்டண்ட் பிரிவினரைக்கொண்டது. இதனால் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்த பொழுது இந்த வட அயர்லாந்து மக்கள் மட்டும் தாங்கள் இங்கிலாந்துடன்(இங்கிலாந்து ஒரு ப்ரோட்டஸ்டண்ட் நாடு) இருந்துவிடுவதாக சொல்லிவிட. இன்று வரை வட அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதி. அந்த அதிகப்பிரசங்கியும் இந்த வட அயர்லாந்தை மட்டும் எடுத்துக்கொண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதி தான் ஒட்டு மொத்த அயர்லாந்து என்று சொல்லிவிட நான் இங்கே உங்களுக்கு இதையெல்லாம் விளக்குகிறேன்.

இன்னமும் வட அயர்லாந்தில் இருக்கும் கேத்தலிக் மக்கள்(சொல்லலாமா?) வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைந்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது தான் சுருக்கமான இல்லை மிகச்சுருக்கமான அயர்லாந்தின் வரலாறு.

கேலிக் புட்பால்னு ஒரு அய்ட்டம். அப்புறம் ஒரு வகையான ஐரிஷ் டான்ஸ்.

இந்த கேலிக் புட்பால் என்கிற அய்ட்டம் கொஞ்சம் போல் புட்பால், கிரிக்கெட், ஹாக்கி எல்லாம் கலந்த ஒரு கலவை. உண்மை என்ன என்பது தெரியாது ஆனால் டோனி இந்த ஆட்டத்திலிருந்து தான் கிரிக்கெட் கொண்டுவந்தார்கள் என்பதைப் போன்ற ஒன்றை சொன்னார். ஆனால் நான் கூகுளை நாடவில்லை இதைக் கண்டுபிடிக்க.

மற்றது ஐரிஷ் டிரடிஷினல் மியூசிக் வகையில் வரும் ஒரு வகை டான்ஸ். நான் ரொம்ப நாளாக இந்த வகை டான் ஸ்பானிஷ் வகையறா என்று தான் நினைத்து வந்தேன். இந்த டான்ஸில் ஒரு விஷயம் அவர்கள் இந்த ஷூக்களை ஒரு சின்க்கில் ஆடும் பொழுது ஒரு பிரபலமானவர் ஒரு செகண்டில் அந்த ஷூவை 100க்கு பக்கத்தில் தட்டுவார் எனவும் டோனி சொன்னார். ரியலி அம்மேசிங். உங்களுக்காக ஒரு கேலிக் புட்பால் வீடியோவும், இந்த டான்ஸ் வகையறாவும் யூடுயூபில் கொடுக்கிறேன். பார்த்து மகிழுங்கள்.



இரண்டு நிமிஷங்களுக்கு பிறகு வரும் அந்த டான்ஸைப் பார்க்கத் தவறாதீர்கள்




கடேசியில் ஒரு விஷயம் மற்றும் சில டீட்டெய்ல்ஸ்.

விஷயம் என்னன்னா டோனி இந்தக் கதையெல்லாம் சொல்லி இனிமேல் நீங்களெல்லாம் யாரவது ஒரு நபரிடமாவது அயர்லாந்து தனிநாடு. இங்கிலாந்தின் மாநிலம் என்பதை விளக்கவேண்டும் என கொஞ்சம் விளையாட்டாகச் சொன்னார். நான் அதைச் செய்து விட்டேன். இன்மேல் உங்களிடம் யாராவது மேற்சொன்ன விஷயத்தைச் சொன்னால் ப்ளீஸ் விளக்கவும்.

அப்புறம் அந்த டீட்டெய்ல்ஸ், டோனி அயர்லாந்தில் பிறந்தவர்களைப்(சில சமயம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அயர்லாந்து தொடர்பு உள்ளவர்களைப்) பற்றிச் சொல்லும் பெரும்பாலானோர் வியந்துதான் போனோம் நீங்களும் அந்தப் பட்டியலை ஒரு முறைப் பாருங்கள்.

Irish People

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In கிரிக்கெட்

போய் வா வார்னே! தலைமகனாய்...

வார்னே இந்த ஆஷஸ் சீரிஸ் முடிந்ததும் ரிட்டயர்ட் ஆகப்போவதாக ஒரு செய்தியை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

700 விக்கெட்டுக்களுக்கு ஒன்று குறைவாய் உள்ளது. கவாஸ்கரைப் போல, தற்போதைய டெண்டுல்கரைப் போலில்லாமல் தான் தன் திறமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுதே வெளியேறும் மனது யாருக்கு வரும்.

நிறைய எழுதவேண்டும் போல் இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் இவ்வளவே.

"... He passed Dennis Lillee's Australian record of 355 in New Zealand in 2000 and took the world mark four years later in India. His best figures of 8 for 71 came against England at the Gabba in 1994-95 and he holds an unwanted record of having the most runs (3043) without scoring a century. He said the biggest lows of his career were the 1996 World Cup loss and the one-run defeat against West Indies in 1992-93 while the Adelaide victory earlier this month was the greatest match he played in.

After 143 Tests he is one away from taking his 700th victim at the MCG from Boxing Day. He wants to be remembered as "an entertainer, who enjoyed himself along the way". "I sit here today with every single trophy in the Cricket Australia cabinet," he said. "I retire a very happy man..."

http://content-aus.cricinfo.com/australia/content/story/273509.html

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை

ஒரு அறிவிப்பு

இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு நிச்சயம் செய்யணுமா என்று தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத்தான் இந்த அறிவிப்பு.

தமிழ்மணமும் அதன் வாசகர்களும் ஒரு திணிப்பை அளித்திருப்பதாகவே பல சமயம் நினைத்திருக்கிறேன். எப்படி என்றால் உண்மையான வலைப்பதிவென்பது நாள்தவறாது எழுதப்படும் டைரி போல் இல்லாமல், சுவாரசியமாகவும் நிறைய பேர் படிப்பதற்காகவும் எழுதப்படும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கைப் போல் மாற்றப்பட்டுவிட்டதாகவேப் படுகிறது எனக்கு.

இதில் நிறைய அட்வான்டேஜ்கள் இருந்தாலும் பல டிஸ் அட்வான்டேஜ்களும் இருப்பதாகப் படுகிறது. என்னைப்போன்ற ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரமும் கணிணியையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பத்து வரி அன்றைய நாளைப்பற்றி எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை கிடையாது தான்.

ஆனால் தினம் தினம் புதிதாகவும், வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் விதத்திலும் பதிவிடுவதென்பது முற்றிலும் இயலாத ஒன்றாகிவிட்டது. எதுக்கு இந்த பில்டப் என்றால். இன்னும் சிறிது நாட்களில்(இரண்டு நாட்களில்) எனக்கு கொஞ்சம் வேலைப்பளூ குறையும் வாய்ப்பு இருப்பதால், 2005ன் ஆரம்பத்தில் இருந்த உத்வேகத்துடன் பதிவெழுதும் வேகத்தை அதிகரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் நாளைக்கு ஒரு பதிவாவது(!), எல்லோரும் அவரவர்களுடைய வாழ்க்கையை இனிதாக்கிக்கொள்ள பதிவெழுதுவதையே விட்டு வெளியே போகும் பொழுது நான் அதிகப்பதிவெழுதப்போகிறேன் என்று ஒரு அறிவிப்பை விடுப்பதற்கு மேற்சொன்ன காரணம் மட்டும் தான் உண்டு. அதனால் மக்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் என்பதை சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு.

நான் சிறுகதைகள் எழுதுவதை அடியோடு சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதால் தைரியமாக இருக்கலாம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Only ஜல்லிஸ் கிரிக்கெட் சொந்தக் கதை

கோ ஆஸி கோ

ஆஸ்திரேலியா டீம் மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.





நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சொந்தக் கதை புத்தகங்கள்

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் முதல் வாய்ப்பு என்பதால் விட மனசில்லாமல், சென்றிருந்தேன். மனதிலே சில புத்தகக் கணக்குகளுடன்.

பன்சங்கரியில் இருந்து பேலஸ் கார்டனுக்கே முதலில் ஆட்டோவே கிடைக்காமல் அரைமணிநேரத்திற்கு பிறகு கிடைத்தது.

வந்து சேர்ந்ததும் மூன்று கடைகளைத் தேடினேன். முதலாவது காலச்சுவடு, இரண்டாவது உயிர்மை, மூன்றாவது பத்ரியின் கிழக்கு.

முதலாவதும் மூன்றாவதும் வந்திருந்தன.

காலச்சுவடு கடைக்குள் நுழைந்ததுமே, தெரிந்துவிட்டது, தமிழ்க்கடைகளில் காற்றடிக்கும் நிலை, நன்றாக நினைவில் இருக்கிறது. டெல்லியில் நானிருந்த பொழுது நடந்த புத்தகக்கண்காட்சி.

அப்பொழுதெல்லாம் இலக்கியம் என்றால் எனக்கு சுஜாதாவும் பொன்னியின் செல்வனும் தான். அதனால் வந்திருந்த காலச்சுவடு கடைக்குள் நுழைந்து சுஜாதாவின் புத்தகங்களைக் கேட்க அவர்கள் என்னை புழுவைப்போல பார்த்தது அப்பொழுது புரியவில்லை.

ரொம்ப சண்டை போட்டேன் அன்று, சுஜாதா பாலகுமாரன் புக்கெல்லாம் எடுக்காமல் ஏன் வருகிறீர்கள் என்று.

அந்த நினைவுகள் பசுமையாக ஓட, காலச்சுவடு கடைக்குள் நுழைந்து நான் சில புத்தகங்களைக் கேட்டதும். அந்தப் புத்தகக் கடைக்காரரின் முகம் பிரகாசமானதை உணரமுடிந்தது. ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த ஜேபி சாணக்கியாவின், என் வீட்டின் வரைபடம் மற்றும் கனவுப் புத்தகம் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அப்புறம் ஒரு படுபாவி வீட்டில் இருந்து ஏற்கனவே இருந்த ஜேஜே, வை சுட்டுக்கொண்டு போய்விட்டதால் அதையும் ஒருமுறை வாங்கினேன்.(இன்னொருமுறை).

என்னவோ இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாங்கியதாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சில புத்தகங்களை வெறும் பத்து எண்ணிக்கை போடுவது பற்றி வருத்தப்பட்டார்.

அடுத்து நுழைந்தது, கிழக்கு. ஒரு ஓரமாய் திங்க்பேடும் கையுமாக பத்ரி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ஒரு மனநிலைக்கு தயார் செய்து போகாததால் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.

ஆதவனின் சிறுகதைகள் இவர்கள் கொண்டுவந்த ஞாபகம் இருந்தது. அதனால் நுழைந்ததுமே அந்தப் புத்தகத்தைக் கேட்டேன் ஆனால் வந்ததோ வேறொரு புத்தகம். ஆத்தர் நேமும் ஆதவன் இல்லை புத்தகத்தின் பெயரும் ஆதவன் இல்லை. ஆனால் இந்தப் புத்தகமும் நல்லப் புத்தகம் என்ற விளக்கம் வேறு கிடைத்தது.

சரி போனால் போகிறதென்று வேறு ஒருவர் எங்கேயோ போய் எடுத்துக்கொண்டு வந்தார்(ஷாயித் நிவேதா - இந்த விஷயத்துக்கு பிறகு வருகிறேன்). அந்தப் புத்தகம் கிடைத்தது. அப்புறம் நம்ம ஊர்க் கதையான அரசூர் வம்சம் வாங்கினே. முன்பே கொஞ்சம் நிறைய படித்திருக்கிறேன் திண்ணையில்.

ஆனால் புத்தகமாக இருப்பதில் கிடைக்கும் சுகத்தால் அதையும் வாங்கினேன்.

அந்தச் சமயத்தில் தான் இராகவன்(அவருதான்னு நினைக்கிறேன்!) அந்தப் பக்கம் வந்தார். கையில் ஹெல்மெட் பின்னால் பேக் என்று. ஆனால் நிச்சயமாகத் தெரியாததாலும் என்னுடைய அன்றைய மனநிலை காரணமாகவும் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

இடையில் தான் நினைவில் வந்தது, ஆதவனின் இன்னொரு நாவல். ஆனால் பெயர் நினைவில் வரவில்லை. கிழக்கின் மத்த நபர்களைக் கேட்பதைவிட பத்ரியையே கேட்டுவிடலாம் என்று கேட்டேன். என் பெயர் ராமசேஷன் இல்லாமல் மற்ற நாவல் என்று. என் மனதில் கண்ணீர்ப் பூக்கள் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு உண்மையான பெயர் வரவேயில்லை. ஆனால் பத்ரி சரியாகச் சொன்னார்.

பின்னர் ராம்கியின் முகவையும், ரஜினி பற்றிய புத்தகதையும் எடுத்துக்கொண்டு முன்னுரையைப் படிக்கத்தொடங்கியிருப்பேன். சார் இந்த கிமு கிபி புத்தகத்தை எடுத்துக்கோங்க என்று பிஸினஸ் ஸ்டிரேடஜி மூஞ்சில் வீசப்பட்டது. பின்னர் இன்னும் இரண்டு மதனின் புத்தகங்களும் அதே கொள்கையுடன் முகத்தில் வீசப்பட, ஹெல்மட் இல்லாமல் ஆம்ப்ரோஸின் பந்தை விளையாடச் சென்ற ஒரு உணர்வு தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் பொறுக்கமுடியாமல் "மதன் புக் படிக்கிற அளவுக்கு இப்போ மூடில்லை" என்று பின்நவீனத்துவ மூஞ்சியை திருப்பிக் காட்டினேன். பின்னர் ஆரம்பித்தது இட்லிப் பிரச்சனை.

ஜினடின் ஜிடேனை "மொட்டை" என்று சொல்லியதால் தான், அவர் மற்ற அணிவீரரை முட்டித்தள்ளினார் என்ற செய்தி புதிகாகக் கிடைத்தது "இட்லி..." பற்றிய புத்தகத்தின் கேன்வாஸாக. அறிமுகமே சரியில்லாததால்( ;-)).

வாங்கின இரண்டு புத்தகங்களுக்கு பில் போடுங்க என்று கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அங்கேயும் பிரச்சனை. ரொம்ப வேகமாக கார்ட் நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். நான் சட்டப்படி அது குற்றம் என்று இந்தியில்(!) ஆர்க்யூ பண்ண(அந்த பையன் கன்னடிக்கா - இது சிக்கன் டிக்கா இல்லை) ஒன்றும் பேசமுடியாமல் ஹாட்கேஷ் இல்லாத பர்ஸும் வாங்கிய புத்தகத்தை திரும்பக் கொடுக்க மனம் வராமலும் நானும் எழுதிவைத்து வந்தேன்.

திரும்ப வரும்பொழுது ராகவனும் பத்ரியும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள், ஒருவாரு அவர்தான் என்று உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விகடனுக்குள் நுழைந்தேன்.

அங்கே சின்ன பையனுங்களெல்லாம் காசுக்கொடுத்து தங்கள் விளம்பரங்களை வருபவர்களுக்கு கொடுக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக உணர்வு பெருக்கெடுத்து குழந்தைத் தொழிலாளர் வைச்சுக்கக்கூடாது தெரியுமில்லை. என்று தெரியாதவருக்கு சொல்வதாகச் சொன்னேன். அதைக் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை. நான் இதை எழுதி அனுப்புவேன்னு சொன்னதற்கு செய்யுங்களேன் என்று சொன்னதும் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டு வெளியேறினேன்.

கிழக்கிற்கும் உயிர்மைக்கும் என்ன காண்டு என்று தெரியாது. சாதாரணமாகத்தான் கிழக்கில் உயிர்மை வரலையே யாரவது அவங்க புத்தகம் எடுத்துக்கிட்டு வந்திருக்காங்களான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டாங்க சரி நானும் அப்படித்தான்னு போய்ட்டேன். திரும்ப மிளகாய் பஜ்ஜி வாங்க வெளிய வரும் பொழுது காலச்சுவட்டைக் கடந்தேன்.

மனுஷ்யபுத்திரனுக்கும், காலச்சுவடிற்கும் பிரச்சனை இருப்பதாக நான் நினைத்து இவரிடம் எப்படிக் கேட்கலாம் என நினைத்து பிறகு, சில இலக்கிய புக் வாங்கிய நல் மதிப்புடன் கேட்டேன், முழு விளக்கங்களுடன் சொல்லிவிட்டு நிவேதாவில் கிடைக்கும் போய்ப்பாருங்க என்று சொன்னார்.

அங்கே வந்து நண்பர் ஒருவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டு போன ஜீரோ டிகிரியையும். வாங்கிவிட்டுப் பார்த்தால் முகவும், ரஜினியும் கிழக்கு அட்டைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

PS: எழுதியதற்கு அப்பால் தான் பார்த்தேன், கிரெடிட் கார்ட் பற்றி எழுதியிருந்தது கொஞ்சம் போல கிழக்கு நேரடியாக கிரெடிட் கார்ட் எண்ணை வாங்கி எழுதியது போன்ற பிம்பம் என்னால் உருவாக்கப்பட்டிருந்ததை. ஆனால் உண்மையில் கார்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் செய்தது புத்தகக்கண்காட்சி நடத்தியவர்கள் தான். இது வேண்டுமென்று நடந்த தவறு அன்று. எழுதும் பொழுது சொற்கள் தவறிவிழுந்து வரிகள் வேறு அர்த்ததத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.

தனிப்பட்ட விளக்கங்களுக்கு நன்றி பத்ரி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா விமர்சனம் சொந்தக் கதை

The Departed

அவன் கண்விடல், கதைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக வலைபதிவிற்காக எதையும் எழுதவில்லை, இடையில் முன்பொருமுறை வந்த விஷயத்தை மீள்பதிவு செய்ததை தவிர. அது செய்துமே ஒரு மாதம் ஆகிறது. இது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சில பல நாட்கள் தமிழ்மணம் பக்கம் கூட வராமல் இருந்திருக்கிறேன். தீபாவளிக்காக திருச்சி சென்று வந்தேன். மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருவதாக சந்திப்பின் முந்தைய நாள் தொலைபேசிய தருமியிடம் வாக்களித்தும் வரமுடியாமல் சேய்த இடியாப்பச் சிக்கல்கள்.

வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது, நிற்காமல். அதே போல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கண்ணதாசனின், "மாற்றம் என்பது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்" என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

பில்டப் போதும் என்று நினைக்கிறேன், அம்மாவிடம் நான் "கேன்பே" வை விட்டு வேறு கம்பெனியில் சேரும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொன்னபொழுது அம்மா என்னிடம் கேட்டதுதான் நினைவில் வருகிறது. "எப்பிடிடா இவ்ளோ பிடிச்ச கம்பெனியை விட்டு போக மனசுவருது. கஷ்டமாயிருக்காதா?" என்று, அம்மா ஆசிரியை, பெரும்பாலும் ஆசிரியர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு பள்ளியில் இருந்து முடித்து விடுவார்கள். (அம்மா கொஞ்சம் வித்தியாசம் இரண்டு பள்ளிகள், அது கொஞ்சம் உள்ளூர் பாலிடிக்ஸ்.)

நான் சொன்னேன், "அந்தக் காதல் இல்லாமல் எந்தக் கம்பெனி சேர்ந்தாலும் வேலை செய்ய முடியாது என்னால்" என்று. என்னை நன்கறிந்த நண்பர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள் நான் வேலை மாறி பெங்களூர் செல்கிறேன் என்று சொன்னதும். எக்ஸிட் கிளியரிங்கில் கேட்கப்பட்ட, திரும்பவும் கேன்பே வரவிரும்புவீர்களா, போகும் கம்பெனியில் நண்பர்களுடன் கேன்பே அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்களா போன்ற கேள்விகளுக்கு முழுமனதுடனேயே ஆமாம் என்று எழுதினேன்.

பேப்பர் போட்டாச்சுன்னாலே அடுத்த விஷயம் பார்ட்டி தானே, அதுவும் தொடங்கியது. புனேவில் புகழ்பெற்ற ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸில் படம் பார்க்கவும் அப்படியே சிட்டியில் டின்னர் சாப்பிடவும் திட்டமிட்டோம். நல்ல நேரம் "த டிபார்டட்" படத்திற்கான டிக்கெட் நாங்கள் நினைத்த நேரத்திற்கே கிடைத்தது. அப்படியே பக்கத்தில் இருந்த "ஃப்லேக்"(Flag) ரெஸ்டாரென்டில் தண்ணி பார்ட்டி, சென்றிருந்தவர்களில் நான் மட்டும் தான் கெட்டபையன் அதாவது தண்ணி அடிக்காத பார்ட்டி. சிக்கன் கபாப்களும், தம்ஸ் அப், மேங்கோ ஜஸ் என்று அவர்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தேன். அந்தப் பக்கம் பூரா ஷிவாஸ் ரீகல், வழிந்தோடியது. ஷார்ட் ஸ்கர்ட் போட்ட அமேரிக்க பிகர்களை நோட்டம் விட்டபடி ஒரு வழியாக பில் செட்டில் செய்து தியேட்டரில் உட்கார்ந்தோம்.

கேங்ஸ் ஆப் நியூயார்க், தி ஏவியேட்டர் போன்ற படங்களின் இயக்குநர் என்பதாலும், ஜாக் நிக்கல்ஸன், லியனார்டோ டிகாப்ரியோ, மாட் டேமன், மார்க் வால்பர்க், போன்ற தகுதியான நடிகர்களாலும் நல்ல எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தோம். படம் பூராவும் அமேரிக்கன் எஃப் வேர்ட் தான் ஆக்கிரமித்திருந்தது. எப்படி சென்னை ரவுடிகளைப்பற்றிய படம் எடுக்கும் பொழுதும் "கோத்தா"க்களும் "தே" வேர்டும் நெஸஸரியோ அப்படி. (ரவுடி என்ன ரவுடி "தே" வேர்ட் தவிர்த்த அனைத்து கெட்ட வார்த்தைகளும் அனாயாசமாய் கல்லு\ரிக் காலங்களில் நானே பேசியிருக்கிறேன். ஒரு சென்ட்டென்ஸ் முடியும் பொழுது ஒரு கெட்டவார்த்தை இருப்பதென்பது அப்பொழுதெல்லாம் வழக்கம். ஒரு முறை சென்னையில் தங்கியிருந்த பொழுது சிஃபியில் ப்ரௌசிங் செய்ய போயிருந்தேன். "எஃப்" வேர்ட் ரொம்ப சகஜமாக சர்வசாதாரணமாக சென்டரெங்கும் நிரம்பிவழிந்தது. அது விளையாடும் இடம் என்று நினைவு.)






"அ ப்யூ குட் மேன்" படத்தில் பார்த்த ஜாக் நிக்கல்ஸனா அது. கொஞ்சம் தளர்ந்தது போல் இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் அடிச்சி ஆடுறார். மார்க் வால்பெர்க், ஆரம்பத்தில் புதிதாக ஸ்டேட் போலீஸில் சேரும், மாட் டேமனையும், டிகாப்ரியோவையும் இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் அசால்டாக படம் காண்பிக்கிறார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது. "த பிக் ஹிட்" படம் பார்த்துதான் நினைவில் வருகிறது. அவரா இவர் என்று யோசிக்க வைக்கிறது. குண்டா, Eஹுர்ஸ்டைல் மாற்றி, "த பிரெசிலியன் ஜாப்" இரண்டாம் பாகம் 2008ல் வரத் தயாராகிவருகிறது. பார்க்கலாம் அப்பொழுது எப்படி இருக்கிறார் என்று.

ஜாக் நிக்கல்ஸன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மாட் டேமென், டிகாப்ரியோ நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறிப்பாக தன்னுடைய சக அதிகாரியை போட்டுத்தள்ளும் இடத்திலும், தொடர்ச்சியான மனவழுத்தத்தில் தடுமாறும் பொழுதும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது. மாட் டேமென் இயல்பாய் செய்திருக்கிறார். பார்ன் ஐடென்டிடி, பார்ன் சுப்ரிமஸிக்குப் பிறகு நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நடிகர்களில் ஒருவர்.

ஒரே ரத்தம், துப்பாக்கிச்சூடு, கெட்டவார்த்தைகள் தான் இந்தப் படம். கிளைமாக்ஸ் ஒரிஜினல் வாழ்க்கையை காண்பித்தாலும், தியேட்டரை விட்டு வெளிவரும் பொழுது ஒத்துக்கொள்ள முடியவில்லைதான். ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான். நடிகர்களின் பிரமாதமான நடிப்பிற்கும், இயக்குநரின் திறமைக்கும், வேகமாக கொண்டு செல்லும் எடிட்டிங்கிற்காகவும் நிச்சயாமய் ஒரு முறை பார்க்கலாம்.

ராத்திரி படம் பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு மேல், புனேவில் (கொஞ்சமாக இருக்கும்)அற்புதமான ரோட்டில், தடையில்லாமல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நினைவில் இருக்கும் நிச்சயமாய்.


Directed by Martin Scorsese; written by William Monahan, based on the screenplay for the film "Infernal Affairs"; director of photography, Michael Ballhaus; edited by Thelma Schoonmaker; music by Howard Shore; production designer, Kristi Zea; produced by Brad Pitt, Brad Grey and Graham King; released by Warner Brothers Pictures. Running time: 150 minutes.

WITH: Leonardo DiCaprio (Billy Costigan), Matt Damon (Colin Sullivan), Jack Nicholson (Frank Costello), Mark Wahlberg (Dignam), Martin Sheen (Queenan), Ray Winstone (Mr. French), Vera Farmiga (Madolyn), Alec Baldwin (Ellerby) and Anthony Anderson (Brown).

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In இந்தி சொந்தக் கதை டெல்லி

'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

ஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலைப் பார்ப்பதால் 'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?

இந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அது ஒரு கல்லூரி வகுப்பு நாள் தமிழாசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார், அப்படியானால் இரண்டாம் ஆண்டாக இருக்கவேண்டும். அவர் பெயர் 'கோடையிடி' கோபாலகிருஷ்ணன், தமிழில் டாக்டரேட் வாங்கியவர்(அவர் சொன்னது உண்மையென்னும் பட்சத்தில் இன்னும் பலர் வாங்க பேப்பர் எழுதிக்கொடுப்பவர்.) திருச்சி பட்டிமன்றங்களில் நீங்கள் சர்வசாதாரணமாய் கேள்விப் பட்டிருக்கக்கூடிய ஒருவர்.

எடுத்துக்கொண்டிருந்த பாடம், "தமிழர்களின் வீரம்" உதாரணம் சொல்லிக்கொண்டிருந்தது கம்பராமாயணத்தின் ராமனைப் பற்றி, கொஞ்சமும் கவலைப்படாமல் நான் கேட்டேன் 'சார் தமிழனுக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு' என்று. இது உண்மை நடந்தந்து. அப்பொழுதெல்லாம் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தவன். பாரதிதாசனின் 'தென் திசையைப் பார்க்கின்றேன்' என்ற பாடலின் மொத்த வரிகளையும் சொல்லி வேறேதொபாடலில் வரும், 'மறைந்திருந்து அம்பெய்திய ராமனின் வீரத்தைப் பாரட்டுவதால் தான் நாம் கோழைகளாகிவிட்டோம்' என்று வரும் பாடல் வரிகளையும் சொல்லி ராமனின் வீரத்தை எப்படி தமிழனின் வீரத்துக்கு மதிப்பிடலாம் என்று கேட்டேன்.

நான் அந்தக் காலத்தில் ரொம்ப 'ரா'வானவன். அதற்கு அந்த ஆசிரியர் சொன்ன பதில் ஒருபக்கம் இருக்கட்டும் இன்று இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் 'முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை' ஏற்படுமே ஒழிய நிச்சயம் எதிர்த்து கேட்டிருக்க மாட்டேன். இது உண்மை, அந்த நிகழ்ச்சியால் நான் இழந்தது அதிகம் அந்த பேராசிரியர், வெளியில் என்னைத் தட்டிக் கொடுத்து தம்பி நீ இதை என்னிடம் தனியில் கேட்டிருக்கணும் உன்னை பெரிய அளவில் பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருப்பேன், அற்ப சந்தோஷத்துக்காக ஸ்டூடண்ஸ் மத்தியில் பெயர் எடுப்பதற்காக அங்கே சொல்லி ஒரு நல்ல வாய்ப்பை இழந்திட்ட' இதுவும் அவர் சொன்னது. உண்மை சுட்டது என்னை அவர் என்னிடம் பேசிய இந்த வார்த்தைகள் மாணவர்களிடம் பரப்பட்டது, அவர் தமிழில் பாடம் எடுக்க முடியாத அளவிற்கு நான் பிரிபேர் செய்து வந்து தமிழில் கேள்விகள் கேட்பேன்.

நல்ல வேடிக்கையாய் இருக்கும், இருவரும் பாடல்களால் சண்டை போட்டவாரு இருப்போம். ஆனால் இன்று வேதனையாக இருக்கிறது, நான் இழந்தது என் கண்ணில் தெரிகிறது.(இதற்கும் காரணம் டெல்லிதான்.)

நான் இப்படிப்பட்டவனாய்த் தன் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஏறினேன், 'ரா'வாக, என்னை ஒரு பொரடக்ட் ஆக மாற்றியது டெல்லி, மற்றும் டெல்லி வாழ் உறவினர்கள், அந்த பழக்கவழக்கங்கள்.

அதுவரைக்கும் அடுப்பாங்கரைப் பக்கமே போகாத எனக்கு நான் சாப்பிட்ட தட்டை கழுவக் கூட கற்றுக்கொடுத்தது டெல்லிதான், ருசியில்லாத சாப்பாடாயிருந்தாலும் சாப்பிட்டால் தான் உயிர் வாழமுழியும் என்ற வாழ்க்கையின் ரகசியம் சொல்லித்தந்தும் டெல்லிதான். மனிதர்களிடம் பழகுவதற்கும் ஒரு பிரச்சனையை அணுகும் விதத்தை சொல்லித்தந்ததும் டெல்லிதான்.

ரோட்டில் சிகரெட் குடிக்கும் பெண்ணை உங்களால் மரியாதையாய் பார்க்க முடியுமா? புருஷனுடன் சேர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு தண்ணியடிக்கும் ஒரு கொலிக்கை தப்பான பார்வையில்லாம் பார்க்க முடியுமா? மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்துட்டு அந்தப் பெண் 'தேவிடியா' இல்லைன்னு வாதாட முடியுமா? இது எல்லாம் நடந்தது எனக்கு. நான் ஒன்றும் சினிமாவில் வருவது போல ஒரு பாடலில் மாறிவிடவில்லை நிச்சயமாய். அடிபட்டு உதைபட்டு, பித்துபிடித்தவைப் போல் அலைந்து திரிந்து எனக்கு வாக்கப்பட்டுது இவைகள். இன்னும் இவைகள் பலருக்கு தவறானவைகளாக இருக்கமுடியும் தான்.

டெல்லி ஒரு வித்தியாசமான நகரம், கேளிக்கைகள் நிறைந்தது, வெகுசுலபமாக பெண்டாளும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு ஊர் தான். தனிமனித உரிமைகள் என்ற ஒரு விஷயம் எனக்கும் அடிமுதல் கற்பிக்கப்பட்ட ஊர். புருஷன் பெண்டாட்டி இடையே கூட இந்த உரிமைகளை எதிபார்க்கும் மக்கள் இருக்கும் ஊர். என் அம்மா அப்பாவை, அம்மா அப்பாவாகத்தான் எனக்குத் தெரியும். அவர்களையும் கணவன் மனைவியாக அறிமுகம் செய்து வைத்த ஊர். என் அப்பாவிடம் அம்மாவைப் பற்றி இருக்கும் 'பொசசிவ்நஸ்' புரிய வைத்த ஊர். அவர்களுடைய தனிமனித உரிமைகளில் தலையிடுவதை சுத்தமாக விரும்பாத பல மனிதர்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் அவர்களுடைய உறவினனாக இருந்த பொழுதிலும் பல விஷயங்களில் என் தலையீட்டைக் கூட விரும்ப மாட்டார்கள் தான்.

இதை புரிந்து கொள்வது கஷ்டம், என் மாமா, என் அத்தை என்பதே கிடையாத ஒரு ஊரில் என் தமிழன் என்பதை தேடிக்கொள்வதை என்னவென்று சொல்வது. டெல்லி மாதிரியான ஒரு நகரத்தில் பெரிய வேலையில், அரை லட்சம்(நன்றி குழலி) மேல் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட சனிக்கிழமைகளில் வேலை பார்க்கவேண்டியிருக்கும். அவர்களை பொறுத்தவரை மீதமுள்ள விடுமுறையை கொஞ்சமும் பாழாக்க விரும்பமாட்டார்கள் அது என்னவாக இருந்தாலும். நாம் சென்று 'நான் டெல்லிக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை, இந்தியும் அவ்வளவா தெரியாது, இங்கிலீஷும் மெதுவடை(நன்றி 'செந்தழல்' ரவி) மாதிரி, நார்த் டெல்லியில் இன்டர்வியூ இருக்கு கொஞ்சம் வந்து உதவ முடியுமா?' என்பது போன்ற கேள்விகள் டெல்லியில் முட்டாள்த்தனமானவை தான். கையில் மேப்பைக் கொடுத்து வண்டி நம்பர்களை கொடுத்து, என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதையும் எழுதிக் கொடுப்பார்களே ஒழிய வந்து வெயிட் பண்ணி உங்களை இன்டர்வியூ முடித்து அழைத்துச் செல்ல மாட்டவேமாட்டார்கள்.

அவர்களுக்கு உங்கள் மீது பாசம் கிடையாதா என்றால் அப்படியில்லை அந்த பாசத்தை விடவும் முக்கியமான விஷயம் இருக்கிறது பார்ப்பதற்கு என்பதுதான் அதற்கு பொருள். இப்படியிருக்க 'சார் நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன், இங்கிருக்கிற தமிழ்ச்சங்கம் எங்கேயிருக்குன்னு தெரியலை கொஞ்சம் வண்டியில் இறக்கி விட்டுர்றீங்களா?' என்பது போன்ற கேள்விகளுக்கு எந்த மாதிரியான ரியாக்ஷன் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயத்தை எழுதி உணர்த்தவில்லை அது நான் டெல்லி வரும் மக்களிடம் தமிழில் உரையாடுவேனா உதவுவேனா என்பதைப் பற்றியது அதற்கான விடையை நான் சொல்லாமல் நீங்களே ஊகித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். ஆனால் ஒரு விஷயம் இந்த 'தனிநபர்' கான்சப்டை அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ள முடியாதுதான்.

நான் இளங்கன்றாய் இருந்தாலும் எதைப்பற்றியுமே ஒரு ஒப்பீனியன் பெரும்பாலும் இல்லாமல் இருந்ததாலும் அந்த சூழலுக்கு மாறிக்கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டு சூழலில் தாம்பத்தியம் நடத்தி பின்னர் டெல்லி வந்தால் வரும் பிரச்சனைகளை என்னால் சொல்லாமலே விளங்கிக்கொள்ள முடிகிறது.

உண்மைதான் இங்கிருக்கும் டெல்லி வாழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு(குறிப்பாக பெண்களுக்கு) டெல்லி வாழ்க்கை முறை தெரிந்த, இங்கே வாழ்ந்தவர்களின் பையனைத்தான் விரும்புகிறார்கள். வண்டியில் ஒன்றாய் பயணம் செய்வது, ஹக்கிக் அண்ட் கிஸ்ஸிங் வெற்ய்ம் எழ்யுத்தாய் இருக்காமல் சர்வ சாதாரணமாய் இருக்கும் ஊர் பெண்களை தமிழ்நாட்டு பாரம்பரிய மணமகன் புரிந்துகொள்வதில் உள்ள பிரச்சனை அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.

இதைத் தான் நான் மங்கையின் பதிவில் மென்டாலிட்டி மாறாமல் டெல்லியில் வாழ்வது வேஸ்ட், நீங்களும் கஷ்டப்படுவீர்கள் மற்றவர்கள்யும் கஷ்டப்படுத்துவீர்கள் என்று கூறினேன். பல சமயங்களில் இந்த விஷயத்தை புரிந்து கொள்வதற்கு உங்கள் படிப்பறிவு போதாது பட்டறிவு அவசியம்.

ஒரு பெண் இன்று என்னுடனும் அடுத்த நாள் இன்னொரு பையனுடனும் பைக்கில் பயணம் செய்வதும், என்னுடனும் அந்தப் பையனுடனும் உரசிப் பேசுவதும் உங்களுக்கு தேவிடியாத்தனமாகத் தெரியலாம். ஆனால் அந்த ஊரில் வளர்ந்த பெண்ணுக்கு அது சர்வ சாதாரணம்.

நான் இந்தப் பதிவில் எங்கேயும் கற்பைப்(???) பற்றி குறிப்பிடவில்லை. அதுமட்டுமில்லாமல் இவைகள் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே, இதை பொதுப்படுத்த முடியாது. ஒன்றே ஒன்று, இவையெல்லாம் இல்லாமல் தமிழ் தமிழ் என்று உயிரைக் கொடுக்கக்கூடியவர்கள் டெல்லியில் மிக அதிகம் பேர் இருக்கிறார்கள். மிக அதிகம் பேர், அவர்கள் ஏன் அப்படியிருக்கிறார்கள் என்று கேட்பதுவும் தவறு, மற்றவர்கள் ஏன் அப்படியில்லை என்று கேட்பதுவும் என்னைப் பொறுத்தவரையில் தவறுதான்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In இந்தி சொந்தக் கதை டெல்லி

இந்தி இந்தியாவின் தேசிய மொழியா???

இது பெரும்பாலும் இந்தியாவின் வடமாநிலங்களில் வேலை பார்த்த அனைத்து தமிழ் நாட்டு மக்களுமே தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யாராவது அவர்களிடம் கேட்டிருக்ககூடிய கேள்விதான். என்னிடமும் இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டிருக்கிறது. தேசிய மொழி தெரியலைன்னு சொல்ரியே கேவலமாயில்லையான்னு, நிறைய முறை மறுத்து பேசியிருக்கிறேன் என்றாலும் மனதின் ஒரத்தில் ஒரு முழுமையான நிறைவு இல்லாமல் தான் அப்படி பேசியிருப்பேன் காரணம்.

ஒரு வகையில் சொந்தமாக இந்தி படித்துவிட்டு, சும்மா பேருக்கு இந்தியை எதிர்த்துக்கிட்டு ஆனால் சொந்தக்காரங்களை இந்தி படிக்கவைக்கும் சில அரசியல் வாதிகளுக்கும் எனக்கும் பிறகு என்ன வித்தியாசம் இருக்க முடியும். ஆனால் முட்டாள்த்தனமாக இந்திக்காரர்கள் இந்தி தெரியாதவனை கேவலமாப் பேசினா எதிர்த்து சண்டை போட்டிருக்கேன், போட்டுக்கொண்டிருக்கிறேன் நிச்சயம் இனிமேலும் போடுவேன்.

ஆனால் யாரோ ஒரு ப்ளாக்கர் சொன்ன மாதிரி, அமேரிகாவுக்கு போறிங்கன்னா கொஞ்சமாவது இலக்கணப் பிழையில்லாம ஆங்கிலம் பேசக்கத்துக்கிட்டு போறது பெட்டர் மாதிரி. உங்களுக்கு தேவையிருக்கும்னு தெரிஞ்சால், பிற்காலத்தில் உங்களுக்கு இந்தியாவின் வட மாநிலங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பாவது இருக்கும்னு தெரிந்தால் இந்தி படித்து வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து நேராய் அமேரிக்கா போகும் அளவிற்கு தகுதியிருப்பவர்களுக்கு இந்தப்பிரச்சனையெல்லாம் கிடையாது.

உண்மையை சொல்றேனே, நான் படிச்சது பிஎஸ்ஸி, நான் மெட்ராஸில் தான் வேலைக்கு போவேன்னு உட்கார்ந்திருந்தால் ஒருவேளை என் திறமைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை கிடைத்திருக்கும். ஆனால் நானெல்லாம் முடிச்ச சோட்டுல, டெல்லியைப்பார்க்க போய்ட்டேன். சுலபமா வேலை கிடைத்தது. முதலில் எனக்கு பிஎஸ்ஸி முடித்ததும், மாஸ்டர்ஸ் படிக்காமல் வேலைக்கு போய்விட முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது என்னுடைய கணிணித்திறமையென்றால், அதற்கு உதவியது டெல்லியில் இருக்கும், இருந்த என் சொந்தக்காரர்கள் என்றால், ஒரு சதவீதமாவது உதவியது என்னுடைய, டெல்லியில் எனக்குத்தெரிந்த இந்தி பேசி சமாளித்துவிடமுடியும் என்ற ஒரு கான்பிடன்ஸ்.

நீங்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்திருந்தால் வேலை கிடைக்காதென்றொ இல்லை கஷ்டப்படுமென்றோ சொல்லவில்லை. ஆனால் நீங்கள் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் டெல்லிக்கு சென்று வேலை தேட நினைக்கிறீர்களா? டெல்லியில் உங்களுக்கான வேலை காத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இந்தி தெரிந்தால் ஒரு மாதம் யோசிக்கும் நீங்கள் அந்த முடிவை இன்னும் சீக்கிரத்தில் எடுக்க முடியும்.

அதற்கு எனக்கு உதவியது டெல்லியில் இருக்கும் உறவினர்கள் கொஞ்சம் என்றாலும் நானெல்லாம் தைரியமாய் அம்மா, அப்பாவை விட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் உட்கார்ந்தது நாலு வார்த்தை இந்தியில் பேசி சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான். இதேபோல் கூட இல்லை என்னை விட மேல் படிப்பு படித்துவிட்டு வேலையில்லாமல் உட்கார்ந்திருக்கும் என் உறவினர்களையும் அழைக்கத்தான் செய்கிறார்கள் டெல்லியிலிருந்து. ஆனால் போகாமலிருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் என்றால் அதில் இந்தி தெரியாதென்பது ஒன்றாகயிருக்கிறது.

அங்கே போய் இந்தி படித்துக்கொள்ளலாம் என்பதெல்லாம் உண்மைதான். இதெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வரணும் என்று நினைக்கும் கேட்டகிரியினருக்கு சரிவரும். சி, சி++, ஜாவா படித்தாலே வேலை கிடைக்கும் நிலை இன்றும் இருக்கும் பொழுது, அதன் அட்வான்ஸ்ட் டெக்னாலஜிக்களை படித்து வைத்துக்கொள்வதில்லையா, J2EE, Struts, EJB இப்படி.

இதெல்லாம் வேலையில் சேர்ந்த பிறகு படிக்க முடியாதா என்றால். நிச்சயம் முடியும். எனக்குத்தெரிந்து எத்தனை பேர் வட இந்தியாவில் மூன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் வேலைசெய்துவிட்டும் கூட இந்தியில் நாலு வார்த்தை பேச முடியாமல், துணிவாங்கணும்னா, கடையில் போய் காய்கறி வாங்கணும்னா, சலவைக்கு போட்ட துணிகளை திரும்ப வாங்கணும்னா, இல்லை ஆட்டோவில் போகணும்னா, நாலுவார்த்தை இந்தி தெரிந்த ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலையை நிறையப் பார்த்திருக்கிறேன்.

இன்னும் ஒரு விஷயம், என்னுடன் வேலை செய்த எத்தனையோ நண்பர்களுக்கு அவர்களுக்கு கிடைப்பதை விட, கூடுதலாய் 30% ஹைக், டெல்லிக்கு வந்தால் கிடைக்கும் என்ற நிலையில் டெல்லிக்கு போக மனமில்லாமல், இங்கேயே இருக்கிறார்கள் சிலசமயம் அவர்களுடைய மனநிலை வினோதமாகயிருக்கும். புனேவில் சமாளித்துவிட முடியும் என நினைத்து வருபவர்கள் கூட டெல்லிக்கு போக பயப்படுகிறார்கள். கேட்டால் இது பக்கம் என்று பதில் வேறு.

இன்றும் நான் வேலை செய்யும் கம்பெனியில் அது ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியாக இருக்கும் பொழுதும், எங்களுடைய டீம் மீட்டிங்கள் இந்தியில் போய்க்கொண்டிருப்பது தான் உண்மை, சில சமயம் ஆன்சைட் குவார்டினேட்டர்களுடனான மீட்டிங்குகள் கூட, தமிழ் நாட்டில் மீட்டிங்குகள் தமிழில் செல்வதாக நான் கேள்விப்பட்டதில்லை(நான் இதுவரை தமிழ்நாட்டில் வேலை பார்க்கவில்லை).

ஒரு ப்ரொஜக்ட் டீமில் இருக்கும் எட்டு ஒன்பது பேரில் ஒருவர் தமிழராக இருக்கப்போய், அவருக்காக அந்த டீம் முழுவதும் இந்தியை விட்டுவிட்டு கம்பெனியின் மொழி ஆங்கிலம் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசுவார்கள் செய்துகொண்டு வரும் தமிழர்கள் படும் பாடு வேடிக்கையாகயிருக்கும். ஒரு விஷயம் மட்டும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிச்சயமாக நடக்கும் அது அவர்கள் டீமிலிருந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். சிறுபான்மை சமுதாயம் எங்கும் உண்டு அதாவது அப்படி ஒருவர் இருக்கும் பொழுது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கும் டீம் லீடுகள் இங்கேயும் உண்டு ஆனால் பர்சன்டேஜ் குறைவு. மிகவும்.

என்னைப் பொறுத்தவரை. இன்று வடமாநிலத்தில் இருக்கப்போகிறேன் என்று தெரிந்ததால் இந்தி கற்றுக்கொண்டது போல் நாளை ப்ரான்சிற்கொ இல்லை ஜெர்மனிக்கோ போக நினைக்கும் பொழுது அந்த மொழிகளை கற்றுக்கொள்ள நிச்சயம் முனைவேன். அந்த மொழியில் மாஸ்டர் ஆக நினைக்காமல் நாலுவார்த்தை பேசவும் அந்த மொழியை புரிந்து கொள்ளவும் என்னால் ஆன முயற்சி நிச்சயமாக செய்யப்படும் அது ப்ரான்ஸிற்கோ இல்லை ஜெர்மனிக்கும் போன பிறகாக நிச்சயம் இருக்காமல் இங்கிருக்கும் பொழுதே செய்யப்படும் முயற்சியாக இருக்கும்.

யாரையும் இந்தி படிக்கச் சொல்லும் படி நான் நிச்சயமாக வலியுறுத்தவில்லை, இன்று வரை என்னை பொறுத்தவரை இந்தி இந்தியாவின் தாய்மொழி கிடையாது தான். நிச்சயமாக. ஆனால் உங்களுக்கு தேவையிருக்குமானால் அது இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை.

Read More

Share Tweet Pin It +1

42 Comments

In இந்தி சொந்தக் கதை டெல்லி

ஹாஞ்ஜி அச்சாஜி டீக்கேஜி

//அவசியத்தை உணர்ந்து ஒரு மீள்பதிவு, இது மொத்தம் இரண்டு பாகமா நான் எழுதியது. நாளை மற்ற பாகத்தை மீள்பதிவிடுகிறேன். அவசரமென்றால் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்.

தலைப்பு இந்தி இந்தியாவின் தேசிய மொழியா?//

கொஞ்சம் இந்தியாவிற்கு மேல்புறமாய் வேலை செய்திருப்பவருக்கு இந்த மூன்றும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அச்சாஜியும் டீக்கேஜியும் கொஞ்சம் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருந்தாலும் ஹாஞ்சி பெரும்பாலும் தெரியாது. இது வட இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் அதிகமாய்ப் பயன்படுத்தப்படும் ஒரு இந்தி வார்த்தை.

நான் முதன் முதலில் டெல்லியில் போய் இறங்கியதும் எனக்கு சொல்லித்தரப்பட்டவை இந்த வார்த்தைகள் தான். இதற்கு பெரும் முன் உதாரணங்கள் எல்லாம் சொன்னார்கள். எப்படியென்றால், இந்த மூணே மூணு வார்த்தைகளை மட்டும் வைச்சிக்கிட்டு டெல்லியை சமாளிச்சிடலாம். பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு நாங்கள் இதைத்தான் முதலில் சொல்லித்தருவோம் என்று பெரும் பீடிகையெல்லாம் வேறு.

நான் ஒன்றும் இந்தி தெரியாதவன் அல்ல, எனது மாமாக்கள் டெல்லியில் முன்பே இருந்ததாலும் நான் கம்ப்யூட்டர் தான் படிக்கப்போகிறேன் என்பது நான் எட்டாவது படிக்கும் பொழுதே முடிவு செய்யப்பட்டதாலும், இந்தி படிக்கும் படி திணிக்கப்பட்டேன். ஏன்னா நமக்குத்தான் செகண்ட் லேங்குவேஜ் தேர்ட் லேங்குவேஜ் ஒரு இழவும் கிடையாதே. படிச்சதோ தமிழ்மீடியம், மேடைக்கு மேடை 'தமிழ் பழித்தானை தாய் தடுத்தாலும் விடேன்' 'பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் நன்னாள்' இவைகளை சொல்லாமல் விட்டவன் இல்லையாகையால். எனக்கு முதலில் இந்தி என்மீது திணிப்பதாகவேப் பட்டது.

அதுவும் கிரிக்கெட்டின் மீதான கவர்ச்சி அதன் உச்சத்தில் இருந்த நேரம் எட்டாவது ஒன்பதாவது படிக்கும் நாட்கள். கொஞ்சம் விவரம் தெரிந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் நாட்கள் அவை, அந்த சமயத்தில் சாயந்திரம் ஆறு டூ எட்டு இந்தி கிளாஸ்னு சொல்லப்போக, எதிர்கால, டெல்லி அதனைத்தொடர்ந்த அமேரிக்க வாழ்க்கையின் மோகத்தில் கொண்டு செல்லப்பட்டேன்.

அப்படி இப்படின்னு நானும் படிச்சேன் அதுக்கு பாடம் எடுத்த இந்தி டீச்சரும் ஒரு காரணம். அங்கேயும் ஒரு நல்ல ஆசிரியை. ஆனாலும் நான் பிராத்மிக் கூட முடிக்கலை.(அது இந்தியில் ஒன்னாம் வகுப்பு மாதிரி.) இருந்தாலும் எனக்கு எழுத படிக்க வரும். பேச மட்டும் தான் ஆரம்பகாலத்தில் டெல்லி போயிருந்தப்ப வராது.

அப்புறம் மறந்துட்டேனே அந்த மூன்று ஜீக்கள். இவங்க அஜித்தோட அண்ணா தம்பிகள் கிடையாது, (இதை சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ) இந்த மூன்று ஜீக்களுமே ஒருவாறு சுத்திவளைச்சு மையமா ஒரே மீனிங்தான் வரும்னு வச்சுக்கொங்களேன். யாரவது உங்கக்கிட்ட வந்து ஏதாவது கேட்டா இந்த மூன்று ஜீக்களில் எதையாவது ஒன்னை சொல்லணும் இப்படித்தான் முதலில் சொல்லித்தந்தாங்க. எப்படின்னா,

"ஆப் கஹான்சே ஆரஹேஹே?"("நீங்க எங்கிருந்து வரீங்க?")
ஹாஞ்ஜி. (ஒரு மாதிரி தமிழில் சரிங்க.... இல்லை ஆமாம்...)

"ஆப்கோ இந்தி ஆத்தா ஹேக்கி நஹி ஹே??"
டீக்கேஜி (ஒரு மாதிரி பார்த்தால் சரிங்க இல்லை ஆமாம்...)

து பாகால் ஹேக்க்யா( நீ பைத்தியமா....)
ஹாஞ்ஜி... (ஒரு மாதிரி தமிழில் சரிங்க இல்லை ஆமாம்.)

இப்படித்தான் ஆரம்பிக்கும் நீங்கள் மேற்சொன்ன வழியை பாலோ பண்ணினால், இந்திக்காரன் சாலே மதராஸி அப்படின்னு சொல்லிட்டு திரும்பிக்கூட பார்க்காம ஒட்டம் எடுத்துறுவான். ஆனால் சில சமயம் நீங்க நல்லா இந்தி பேசுறவறாக் கூட இந்த மூன்று வார்த்தைகளை மாற்றி பேசுவதால் சூழ்நிலை உருவாக்கிவிடும். அப்படித்தான் நிகழ்ந்தது நண்பர் ஒருவருக்கும் அதாவது, அவரும் அப்பொழுதுதான் படித்து முடித்துவிட்டு வேலை தேடி டெல்லி வந்திருந்தவர். ஆனால் பக்கா தமிழன் (நானெல்லாம் அரைவேக்காடு) அதாவது இந்தின்னா அப்படின்னான்னு கேக்குறவரு.

எங்க ஆளுங்க அவருக்கும் இதே மூணுவார்த்தையை சொல்லிக்கொடுத்திருக்க, ஒருநாள் முனிர்க்காவிலிருந்து கனாட்ப்ளேஸ் போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த நண்பரின் அருகில் ஒரு பஞ்சாபி உட்கார்ந்திருக்கிறார். நம்மாளோ பார்க்கிறது கொஞ்சம் மாநிறமா பீகார்க்காரங்க போல இருப்பாரு. அவனும் முதலில் ஏதோ கேட்கப்போய் இவரும் ஹாஞ்ஜின்னு சொல்லியிருக்காரு, இப்படி வைச்சுக்கோங்களேன்

ஆப் கனாட் ப்ளேஸ் ஜாரேக் கியா? (நீங்க கனாட் ப்ளேஸ் போறீங்களா?)
இவரு ஹாஞ்ஜீன்னு சொல்ல அப்ப ஆரம்பிச்ச கூத்து, சுமார் ஒரு மணிநேரம் பஞ்சாபி தன்னோட குடும்பக்கஷ்டத்தையெல்லாம் சொல்லப் போக இவரும் இந்த மூணு வார்த்தைகளை திருப்பி திருப்பி போட்டு பேசியிருக்காரு. அதுவும் சந்தர்ப்பம் ஒருமாதிரி ஒத்துப்போக போய்க்கிட்டிருக்கிறது. கடைசியில் கனாட்ப்ளேஸில் இறங்குவதற்கு முன்னர் பஞ்சாபிக்கு எப்படியோ சந்தேகம் வந்து விசாரிக்க நம்ம ஆளு இந்தி தெரியாதுன்னு ஒரு மாதிரி சொல்ல பஞ்சாபிக்கு பலமா கோபம் வந்து கீழே இறக்கிவிட்டு ஒரு அரைமணிநேரம் கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டியிருக்காரு. நம்ம ஆளுக்குத்தான் அந்த மேற்சொன்ன மூணைத்தவிர வேறொன்னும் தெரியாதா இவரும் தேமேன்னு முழிக்க கொஞ்ச நேரம் திட்டிய பஞ்சாபி இது ஒன்னுக்கும் தேறாதுன்னு நினைச்சுக்கிட்டே போய்ட்டாராம்.

இதை நண்பர் எங்களிடம் சொல்லப்போய் பின்னர் ரொம்ப நாளைக்கு அந்த நபரை வம்பிழுத்துருக்கிறோம் இதைச்சொல்லி.

டெல்லியில் பெங்களூரில் புனேயில் என்று இந்தி பேசிக்கொண்டு மூன்றாண்டுகள் ஓடிவிட்டதால், எனக்கேற்ப்பட்ட சில இந்தி சார்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்துள்ளேன் ஆரம்பத்தில் காமடி பின்னர் மேட்டர். அடுத்த பதிவு காமடியாவா இல்லை மேட்டரான்னு முடிவு செஞ்சுட்டு அப்புறம் போடுறேன். அதுக்கு முன்னாடி கீழ்க்கண்ட பதிவுகளை படித்துக்கொள்ளுங்கள்.

holyox.blogspot.com/2006/01/blog-post_31.html
muthuvintamil.blogspot.com/2005/10/blog-post_28.html
kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா விமர்சனம்

லஹே ரஹோ தாஸ் பாய்

முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல்ராஜா எம்பிபிஎஸ், சங்கர்தாதா எம்பிபிஎஸ் என ஒருவாறு எல்லோருக்குமே நன்றாய் அறிமுகமான படம்தான். அதனுடைய ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் என்றவுடன் எல்லோரையும் போல் எனக்கும் ஆஹா சும்மா பெயரில் இருக்கும் ரெபுடேஷனை வைத்து காசு பார்க்கப் பார்க்கிறார்கள். ஏன் தான் இப்படி நல்லபடத்தின் ஸெக்யூல் வெர்ஷன் ரிலீஸ் பண்ணி முதல் பாகத்தின் பெருமையையும் குலைக்கிறார்கள் என்று நினைத்தேன் முதலில். ஆனாலும் இந்த படத்திற்கு இன்று சென்றததற்கான காரணம் ரொம்பவே முக்கியமானது.

சஞ்சய் தத்திற்குள் இருக்கும் காமெடியனை முன்னாபாயில் பார்த்ததாலா இல்லை அந்த பொண்ணு பேரு என்ன வித்யா பாலனைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளிவிட்டுட்டு வரலாமான்னா என்று கேட்டால், இருக்கலாம் இவையெல்லாம் ஒரு பக்கம் நிச்சயமாய். முக்கியமான காரணம் ஒன்று உண்டு, தொடர்ச்சியாய் என்னுடைய இந்தி சினிமா விமரிசனங்களைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கள் ப்ரொஜக்ட்டின் மிக முக்கியமான கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது.



எனக்கு முன்னால் யூஸ்கேஸை இம்பிளிமெண்ட் செய்த புண்ணியவான் அல்லது புண்ணியவதி என்ன நினைத்துக்கொண்டு இம்ப்ளிமெண்ட் செய்தார்களோ ஒரு ப்ளோ மொத்தமாக தவறாக இருந்தது. எஸ்ஐடி மொத்தமாக முடிந்து யூஏடி ஆரம்பிக்க இருந்த சமயத்தில் இதைக் கண்டுபிடித்ததால் கடைசி மூன்று நாட்களாக வீட்டிற்கே போகாமல் கம்பெனியின் டோர்மென்ட்டிரியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கோட் சேஞ்சஸ் செய்ய வீக் எண்ட் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம்.

இல்லையென்றால் திரும்பவும் திங்கட்கிழமை வரும் பிரஷரை சமாளிக்க முடியாது அதனால் சற்றும் முடியாத சூழ்நிலையில்(மூன்று நாளாய் சுத்தமாய் தூக்கம் இல்லை) வேண்டுமென்றே என்னை வற்புறுத்தி சென்ற படம் லஹேரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்பிபிஎஸ் இன் ஸெக்யூல் வெர்ஷன். என் சூழ்நிலையை உணர்ந்திருக்கலாம், கொஞ்சம் கம்ப்யூட்டர் பக்கம் பழக்கம் இருந்தால் கூட, என்னதான் சஞ்சய் தத், அர்ஷத்(ஆந்தனி கோன் ஹை, முன்னாபாய் எம்பிபிஎஸ்) அப்புறம் கொஞ்சம் ஜொள்ளுவிட வித்யாபாலன் இருந்தாலும். கொஞ்சம் பிசிறு தட்டியிருந்தாலும் தியேட்டரில் இருந்த அடுத்த நிமிடமே வீட்டிற்கு வந்து தூங்கியிருப்பேன்.

ஆனால் என்னை முழுவதுமாக தங்கி பார்க்கவைத்து, பின்னர் லேப்டாப் திறந்து விமர்சனம் எழுதவைத்து அப்லோட் செய்கிறேன் என்றால் முழுபெருமை, படத்திற்கு உண்டு. பெரும்பாலும் நகைச்சுவை சம்மந்தப்பட்ட படத்திற்கு, முகமூடிகளைக் கழட்டிவிட்டுத்தான் செல்வேன். அதனால் தான் என்னால் மைக்கேல் மதன காமராஜன், மும்பை எக்ஸ்பிரஸ்ஸை ரசிக்க முடிந்தது. எனக்குத்தேவை விடுதலை கடுமையான கம்ப்யூட்டர் பணிகளுக்கு மத்தியில் உண்மையில் சப்தமாய் சிரித்து மகிழ ஒரு படம். அப்படிப்பட்ட படமாய் இருந்தது லஹே ரஹோ முன்னாபாய்.

கதையொன்னும் அப்படி பெரியவிஷயம் இல்லை, நம்ப முன்னா பாய்க்கு ரேடியோ ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஜான்வியின் குரலில் மயங்கி காதல். இப்படியாக அவர் அந்தக் குரலிலேயே மயங்கிக் கிடக்கும் வேலையில் ஒரு வாய்ப்பு வருகிறது அவரை சந்தித்து நேரடியாக ரேடியோவில் உரையாட, அதை நம்ப முன்னாபாய் தன்னுடைய சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி செஞ்ர்ராரு. அப்படி செய்வதனால் வரும் இன்னல்களைத் தீர்த்து எப்படி அந்த ரேடியோ பார்ட்டியைக் கைப்பிடிக்கிறார் என்பதை அதன் முந்தைய வெர்ஷனைப் போலவே, இன்னும் சொல்லப்போனால் இன்னும் நல்ல முறையில் செய்திருக்கிறார்கள்.

முகமூடியை இன்டீட் மூளையைக் கழட்டி வைத்து விடுவதால், படத்தில் லாஜிக் பெரும்பாலும் நான் பார்ப்பதில்லை, அப்படி லாஜிக் எல்லாம் பார்த்தும் படம் பார்ப்பதுண்டு அப்படிப் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம், ஓம்காரா. பெரும்பாலும் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதி அது எனக்கு மிகவும் பிடித்திருந்தால், அதைவிட நன்றாய் எழுதமுடியுமென்றால் மட்டுமே எழுதுவேன் ஏற்கனவே ஆசாத்பாய் அதைச் செய்துவிட்டதால் அப்படியே மூடிக்கொள்கிறேன்.

அப்புறம் தலைப்புக்கு, லஹே ரஹோ தாஸ் பாய் தலைப்பு என் பெயருக்காக வைத்துக் கொண்டதல்ல, லஹே ரஹோ முன்னாபாயில் முக்கியமான கதாப்பாத்திரம் காந்தி தாத்தா. ஒரு தாதா(அட நம்ம முன்னாபாய்) காந்தியப் பத்தி படிச்சி அதனால கொஞ்சமே கொஞ்சம் மென்டல்(?) ஆனதால் காந்தி அவருக்கு கண்களில் தெரிகிறார். உண்மையில் மென்டலா இருக்கிறவங்களுக்கும் காந்திக்கும் ஏதாவது தொடர்புண்டா என்பது போன்ற கேள்வியை நான் முகமூடியை மாட்டிக்கொண்டு விமர்சனம் எழுதினால் நிச்சயம் கேட்பேன். தலைப்புக்கு காரணம் படத்தில் காந்தி தன்னை மூன்று நான்கு முறையாவது இன்ட்ரொடுயூஸ் செய்து கொள்கிறார், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக. இப்பல்லாம் இதுதானே பேஷன், முன்பே படித்த கமலின் “மோகனுக்கு ஒரு கவிதை” அப்புறம் இணையத்தில் எங்கோ காந்தியை மோகன் என்று விழித்த ஒரு கட்டுரை. அப்புறம் “மோகன்தாஸ் வெர்ஸஸ் காந்தி”(இது நாடகம் தானே?) இப்படியாக காந்தியை அவரைப் பற்றி அறியாத ஒரு பெயரில் விளிக்க நான் நினைத்தேன் கண்டறிந்தது தான். லஹே ரஹோ தாஸ் பாய், தாஸ்னு சர்நேம் சொல்றது தப்புன்னா லஹே ரஹோ மிஸ்டர் தாஸ் பாய்னு சொல்லலாம். ஆனால் இது என் பெயரும் ஆதலால் என்னை ரொம்பவும் அறிந்தவர்கள் தாஸ் என்று என்னைக் கூப்பிடுவதுதான் எனக்கு பிடிக்குமென்பதால் ‘ப்யாராஸே’ லஹே ரஹோ தாஸ் பாய் தான். (அப்பாடா தலைப்பிற்கு விளக்கம்னு சொல்லி ஒரு பத்தி வளர்த்தாச்சு.)



தியேட்டரில் மக்கள் கைத்தட்டிப் பார்த்து நெடுங்காலம் ஆகிவிட்டிருந்தது, பெரும்பாலும் திருச்சி தியேட்டர்களில் நான் இதைப் பார்த்ததில்லை. பிட் பார்ப்பதற்காக படத்திற்குப் போய்விட்டு, இன்டர்வெல் வரைக்கும் காத்திருக்கும் பொறுமையில்லாமல் மக்கள் விசிலடிப்பதைப் பார்த்திருக்கிறேன். ரஜினி, விஜய் க்கு பாலாபிஷேகம் பண்ணும் விஷயத்தை நான் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஸ்டேண்டிங் ஓயேஷன் மட்டும் தான் இல்லை நான் பார்த்த இந்த திரைப்படத்தில்.



காந்தி வழியைப் பின்பற்றுவதால் ஏற்படும் சில நன்மைகளை ப்ராக்டிகலாச் சொல்ல அதன் ரியாலிடியை உணர்ந்ததாலோ என்னவோ மக்கள் கைத்தட்டி உற்சாகப் படுத்தினார்கள். நான் கைத்தட்டினேனா என்ற கேள்விக்கு பதில் கடேசியில். ஹர்ஷத் வர்ஷியின் முகபாவனைகள் எப்பொழுதும் தண்ணியிலேயே இருப்பதாய் இருக்கும் காட்சிகள் முகபாவனைகளுடனான அவருடைய டயலாக் டெலிவரி ம்ம்ம் அருமை. வித்யா பாலன் “குட்மார்னிங் மும்பை”யை நம்ம நிர்மலா பெரியசாமி மாதிரி சொல்கிறார். கொஞ்சம் நடிக்கிறார், ஸ்கிரீனில் அருமையாக இருக்கிறார். இதைப் படிக்கும் அக்காவுக்கு ஒரு நோட், கொஞ்சம் பர்ஸனல் அதனால எல்லோரும் அடுத்த பேராவுக்கு போயிருங்க, “எனக்கு பொண்ணு பார்த்தா வித்யா பாலன் மாதிரி பாருங்க.” (வழியும் ஜொள்ளுடன் மோகன்தாஸ்.)

எப்பொழுதும் போல சஞ்சய்தத் தனது ஆகிரிதியுடன் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைக்கிறார். அதை விட சோகக்காட்சிகளில் அவருடைய சினிமா எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது.



கமல், தசாவதாரம் படத்திற்குப் பின்னர் உங்கள் பைனான்சியல் ஸ்டேட்டஸ்ஸை உயர்த்தும் நோக்கத்தில் காமெடிப்படம் பண்ணும் ஐடியா வருமானால் ப்ளிஸ் கோ பார், வசூல்ராஜாஸ் ஸெக்யூல் வர்ஷன்.

படத்தில் வரும் காந்தி பற்றிய காட்சிகளில் கைத்தட்டல் இருந்ததென்று சொல்லிவிட்டு நான் கைத்தட்டினேனா என்று கடேசியில் சொல்கிறேன் என்று சொன்னேன், காமெடிப்படமென்றாலும் மெஸேஜ் சொல்வதாய் வரும் சமயத்தில் கழட்டப்பட்ட இன்ட்டலெக்ட்சுவல் தன்மை, தானாய் மீண்டும் புகுந்து கொள்வதால் படத்தில் சொல்வதைப் போல் செய்யமுடியாமா என்று நான் யோசிக்கும் நேரத்தில் அடுத்த காட்சி வந்துவிடுவதால் சாரி கைத்தட்டவில்லை.


Credits,

famecinemas.com

Read More

Share Tweet Pin It +1

10 Comments

In சினிமா விமர்சனம்

ஆந்தனி கோன் ஹை

நான் ஆரம்பத்தில் ப்ளாக் உலகத்தில் கால்வைத்த பொழுது பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்துகொண்டிருந்தன. பெரும்பாலும் இயல்பு வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆன்லைன் டைரிக்குறிப்புகள் அவ்வளவுதான். ஆங்கிலத்தில் எழுதும் ஆர்வமும் திறமையும் இல்லாத காரணத்தால் விட்டு வேகமாக நகர்ந்துவிட்டேன். பின்னர் மரத்தடி நாட்களில், சில மக்களின் பதிவுகளைப் படிப்பதற்காக வருவேன். அப்பொழுது அங்கே தெரியும் தமிழ்மணம் பட்டனைக் கிளிக்கியதில்லை, காரணம் பெரும்பாலும் வெப்சைட்களில் கொடுக்கப்படும் லிங்குகள் தேவையற்ற இடங்களுக்கே செல்லும் என்ற நம்பிக்கையிருந்தது.(மூடநம்பிக்கையின்னு கூட வைச்சிக்கலாம்.)

அதுமட்டுமில்லாமல், மரத்தடி மெயில்களைப் படித்ததில் இருந்து ப்ளாக் உலகில் பெரும்பாலும் ஒரு குரூப் குரூப்பாத்தான் இருப்பாங்க, நீங்க பின்னூட்டமிட்டா உங்களுக்கு பின்னூட்டம் கிடைக்கும் என்பதைப் போன்ற எண்ணம் மனதில் தோன்றியிருந்தது, அதற்கு மரத்தடி காரணம் கிடையாது ஒருவேளை நான் படித்த மெயில்களாக இருக்கலாம், லிங்குகள் தேடவில்லை. எனக்கென்னவோ எழுதிப்பழகும் இடமாக மரத்தடியைப் பார்க்க பிடிக்கவில்லை, அதனால் தான் விலகினேன், நல்ல கதைகளை எழுதிப்பழகி பின்னர் வரவேண்டுமென்று நினைத்து. படிப்பதை விட எழுதுவது அதிகமாக இருந்த நாட்கள் அவை.

அப்படியாக நான் பதிவுலகத்திற்கு வந்த பொழுதும் இதை ஒரு டைரியாக எழுதும் எண்ணம் தான் முதலிலிருந்து இருந்தது. அப்படி இல்லாமல் போனதிற்கு இரண்டு காரணங்கள், நான் பார்த்த பெரும்பாலான பதிவுகள் அப்படி இல்லாமல் போனது, மற்றது நான் சாப்ட்வேர் இன்டஸ்டிரியில் வேலை பார்த்து வந்தது, இங்கே புதியவிஷயங்கள் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நான் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்துமே மற்றவர்கள் அனுபவித்த ஒன்று அதனால் அந்த எண்ணத்தை கைவிட வேண்டியிருந்தது. இன்னுமொன்று உண்டு அது அந்த நோக்கத்தில் எழுதப்பட்ட சில பதிவுகள் கவனமற்று இருப்பதாகப் பட்டதும் ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ஒரு பதிவு கவனம் பெறுகிறது என்பதற்கு நான் வைத்திருந்த ஒரே ஒரு அளவுகோல் பின்னூட்டம் என்பது, பின்நாட்களில் அது எவ்வளவு தவறான ஒருவிஷயம் என்பது புரிந்தது.

பின்னூட்டம் அதிகம் பெரும் பதிவுகளைக் குறை கூறவில்லை, அந்த மாதிரி நமக்கு எழுதவரவில்லை அவ்வளவுதான் என்று விட்டுவிட்டு நகர்ந்து போய்விடவேண்டும் என்பதும், பின்னூட்டம் அதிகம் பெருவதற்காக மட்டுமே எழுதப்படும் பதிவுகளில் இருக்கும் என் பல பதிவுகளில் இருந்த ஒரு நாடகத்தன்மை பின்நாட்களில் மீண்டுமொறுமுறை படித்துப் பார்த்த பொழுது விளங்கியது. ஆரம்பக்காலத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் குறியாக இருந்தேன், அது, நான் தவறு செய்வதாக யாராவது சுட்டிக்காட்டினால் கோபப்படுவது மட்டும் செய்யாமல் நல்ல மூடிருக்கும் ஒரு நாள் உண்மையில் யார் பக்கம் தவறென்று யோசிக்கவும் செய்வேன், என் பக்கம் தவறிருந்தால் ஒப்புக்கொள்வேன் என்னளவில். சுட்டிக்காட்டியவருக்குக் கூட தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது எனது எண்ணம்.

ஏன் இவ்வளவு புலம்பல்கள் என்றால், இன்று காலை ஒரு இந்திப் படத்திற்குச் சென்றிருந்தேன். எங்கள் வாழ்க்கையில் இது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லாவிட்டாலும், முக்கியமானதைப் பற்றி மட்டும் தான் எழுதவேண்டுமா என்று யோசித்துப் பார்த்த பொழுது மனதில் பட்டதைக் கொட்டியிருக்கிறேன்.

புரோஜக்ட் இன்டகிரேஷன் டெஸ்டிங்கில் இருப்பதாலும், மெயின்பிரேம் தனியாக, நாங்கள் ஜாவா ஆட்கள் தனியாகவும் ப்ரோக்கிராம் எழுதி இந்த ஒன்றிரண்டு வாரக்காலத்தில் இரண்டையும் இணைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதால், கொஞ்சம் ஆளை அசரடிக்க வைக்கும் வேலை, ஜிமெயிலில் என்னுடன் சாட்டுபவர்களுக்குத் தெரிந்திருக்கும் இந்திய மணிநேரம் இரவு ஒன்று இரண்டெல்லாம் அசாதாரணமாக அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதும், சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கடனாய் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது.

நேற்றிரவு அப்படிப்பட்ட ஒருநாள், ஏழரை மணிக்கு 'ஆப்ஷோரில்' செய்யப்பட்ட 'பில்ட்'(Build), ஊத்திக்கொள்ள, கடைசியாக செக்கின்(Check-in) பண்ணியவன், தன்னால் இல்லை இன்டகிரிட்டி செர்வர் தவறால் தான் படுத்துக்கொண்டது பில்ட் என்று ஒற்றைக்காலில் நிற்க, கிளயண்ட் விவோஅய்பியில்(VOIP) அலற, மீண்டுமொறு முறை பில்ட் செய்யும் பொறுப்பு என் நண்பனிடம் ஒப்படைக்கப்பட்டது, எல்லா ப்ரோஜக்ட்களையும் மீண்டும் ஒருமுறை சானிட்டி செக்கிற்காக(Sanity Check) என் லோக்கல் சிஸ்டத்தில் பில்ட் செய்யும் இடைவெளியில் இரவு சாப்பிட்டு விட்டு வந்தோம்.

பின்னர் அப்படியிப்படி 'இன்டகிரிட்டி சர்வர்'(MKS Integrity Server) ப்ரோப்ளம், ஸ்லோ என்று காலை ஆறு மணிக்கு பில்ட் ஒருவாறு சக்ஸஸ்புல்லாக முடிய, பொட்டியை மூடிவிட்டி கிளம்பிய நாங்கள் வழியில் டீக்கடையில் உட்கார்ந்த பொழுது வந்த ஐடியாதான் படம் பார்க்க செல்வதென்ற ஒன்று. சமீபத்தில் வெளியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓங்காரா என்ற படத்திற்குத்தான் போவதாக முடிவு. மொத்தம் இரவு தங்கிய மூன்று பேருமே இந்த விஷயத்தில் வீக் என்பதால், நாங்களாக கற்பனை செய்து கொண்டு போன நேரத்தில் படம் தொடங்கியிருந்தது. மல்டிபிளக்ஸ் என்பதால் அடுத்த இரண்டு மணிநேரத்தில் படம் பார்த்துவிடலாம் என்றால் படம் பார்த்துவிட்டு, பார்க்க வேண்டிய வேலை நினைவில் வந்தது.

சரி போனால் போகிறதென்று இந்தப் படம், "ஆந்தனி கோன் ஹை"ற்கு சென்றோம். எனக்குத்தெரிந்த நடிகர் "சஞ்சய் தத்" மட்டுமே, சஞ்சய் தத், விளம்பரத்தில் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருப்பதைப் போன்ற பார்த்ததும். கொஞ்சம் சங்கடமாகத்தான் உணர்ந்தேன், பெரும்பாலும் வீம்புப்பிடியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படத்தை பார்த்தே தீருவது எனப் பார்த்த விஜய் படங்களினால் வந்த தலைவலியின் காரணமாக கொஞ்சம் பயந்தேன். ஆனால் கூடவந்தவர்கள் படம் காமெடிப்படம் என்று சொல்லியதும் சமாதானம் ஆனேன். படத்தின் கதை ஒன்றும் பிரமாதமானது இல்லை.



சஞ்சய் தத், தாய்லாந்தில் ஒருவனைக் கொலை செய்வதற்காக, அவன் இருக்கும் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து "ஆந்தனி கோன் ஹை" என்று ஹீரோவிடம் கேட்க ஹீரோ நான்தான் ஆந்தனி என்று சொல்ல முகத்தில் குத்துவதுடன் படம் தொடங்குகிறது. பின்னர் ஹீரோவை தலைகீழாகத் தொங்கவிட்டு கொலை செய்ய பணம் கொடுக்கவேண்டியவனிடம், பணத்தை டிரான்ஸ்பர் செய்யவேண்டுமாறு கேட்க அவன் கொடுக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ள அந்த சமயத்தில், டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் படம் எதுவும் பிடிக்காமல், ஹீரோவிடம் சரி நீ யாருன்னு சொல்லு என்று கதை கேட்க, ஹீரோவைக் கதைச்சொல்லியாகக் கொண்டு படம் நகரத் தொடங்குகிறது.

அநாயாசமான திருப்பங்கள், வெட்டுக்குத்து, படபடவென்று சுடுவது, கட்டிவைத்து பத்து பக்க வசனம் படிப்பது என்றில்லாமல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது கதை. இந்த வகையான கதை சொல்லும் பாங்கு எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. அதுவும் கூட ஒரு காரணம் இந்தப் படத்தைப் பார்த்து எனக்கு தலைவலி வராததற்கு.

'பில்ட் டென்ஷன்', 'கோட் ஃபட்ற', போன்ற பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் விலகி மூன்று மணிநேரம் நிம்மதியான, ஏசிக்காற்றில் உண்மையான டிஜிட்டல் சவுண்டுடன், அலட்டலில்லாத இந்தப் படம் ஒரு நல்ல மாறுதலாக இருந்தது. பாடல்கள் நன்றாக இருந்தன, பட ஆரம்பத்தில் மியூஸிக் ஸ்கோர் ஸமீர் என்று பார்த்த ஞாபகம் இருந்தது. கடைசியில் தலைவர் வந்து மைக்குடன் தோன்றவும் முதலில் ஆச்சர்யப்பட்டேன் பின்னரும் ஆச்சர்யப்பட்டேன்.

மியூசிக் ஹிமேஷ் ராஷ்மியா, மக்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் தசாவதாரத்திற்கு தலைவர் தான் மியூஸிக் என்று. தெரியவில்லை கமல் படத்திலும் மைக் பிடிப்பாரா என்று ஆனால் தமிழில் நல்ல இசையில் மூக்கு நுனியில் இருந்து நல்ல இரண்டு பாடல்களுக்கு நான் உத்திரவாதம்.



படம் முடிந்ததும் திரும்பவும் அலுவலகத்திற்கு வந்து ஓட்டிய பில்டில் வந்து கொண்டிருக்கும் பக்ஸ்களை பிக்ஸிக்கொண்டிருக்கிறேன். என்னவோ இன்று டைரியைப்போல எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. எழுதுகிறேன். நார்த் இண்டியா பக்கம் வாசனையுள்ள மக்கள் சென்று நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். ஆனால் என் மனதில் நகைச்சுவைப் படத்திற்குண்டான இடம் எப்பொழுதும் உண்டென்பதால் ஜாக்கிரதை.

மோட்டரோலா V3I உபயோகித்து இரண்டு பாடல்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டுவந்தேன் முதலில் .3gp பைல்களாக இணைக்கத்தான் நினைத்திருந்தேன் பின்னர் வேண்டாமென்று விட்டுவிட்டேன். வேண்டுபவர்கள் தனிமெயில் அனுப்புக, குறிப்பு பாடல்கள் - இந்திப் பாடல்கள்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ்

கருத்துச் சுதந்திரம்

கியூபாவில் நடக்கும் விஷயத்தைப் பற்றி யாரும் எழுதிய பாடைக் காணோம். அதுதான் ஒரு சின்ன உறுத்தலாகவேயிருந்தது.

பிடல் காஸ்ட்ரோ பதிவியிலிருந்து விலகி பதவி அவரது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் வந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. சில செய்திகள் பரப்பும் விஷயங்களை நம்பவேண்டாம் என்று மனம் சொல்கிறது பார்க்கலாம். 1959 ற்கு பிறகு நடக்கும் முதல் ஆட்சிமாற்றம் இது கியூபாவில். எந்த பத்திரிக்கை தகவலையும் நம்ப முடியவில்லை, எல்லாவற்றிலும் அமேரிக்க ஏகாதிபத்தியமே தலைவிரித்தாடுவதாகவே உணர்கிறேன்.

மற்றபடிக்கு இந்த வாரம் எழுதுவதாக உத்தேசித்திருக்கும் தலைப்புகள்,

1) கட்டுடைத்தலும் ஒன்றிரண்டு கரப்பான் பூச்சிகளும்.
2) யானை எலி மற்றும் பின்நவீனத்துவம்.

எப்படியோ குப்பை கொட்டுறதுன்னு முடிவு பண்ணியாச்சு, அதனால கருத்து சுதந்திரத்திற்கும் மதிப்பளித்துவிடலாம் என நினைத்து, பின்னூட்டப்பெட்டியை திறக்கிறேன்.(யாரவது போடுவாங்களான்னா அது தெரியாது.)

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ் சுஜாதா பாப்லோ நெருதா

நெருடாபுருடா

சுஜாதா மீண்டும் தன்னுடைய வழமையைத் தொடங்கியிருக்கிறார்.(சரிதானா வாக்கியம்.)

"அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது’

என்று சொல்லும் கனிமொழி, சென்ற தேர்தல் பிர-சாரத்தின்போது தமிழகமெங்கும் தன் தந்தையுடன் சுற்றுப்பயணம் செய்தபோது, மக்கள் முகங்களில் கண்ட ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பார்த்துப் பிரமிப்பாக, ஏன் பயமாகக்கூட இருந்தது என்கிறார். கொதிக்கும் மத்தியான வெயிலில், தலைவரின் ஒரு செகண்ட் தரிசனத்துக்காகக் காலையிலிருந்து காத் திருக்கும் இளைஞர்களையும், புதுசணிந்து வாசலில் வந்து நிற்கும் பெண்களையும் கவனித்து, ஒரு நீண்ட கவிதையாக எழுதியிருக்கிறார். படித்துப் பார்த்தேன். அலுக்கவில்லை.

அரவிந்தன் வழக்கம் போல் அட்டை போட்டு, ‘Bill Bryson-ன் ‘A Short History of Nearly Everything’ என்ற புத்தகத்தை அன்பளித்தார். ஸபானிஷ் மொழியில் இளங்கலை படிக்கிறார்.

‘தமிழ்க் கவிதைகளை ஸ்பானி-ஷில் மொழிபெயர்ப்பது எளிது. அங்கிருந்து இறக்குவதுதான் கஷ்டம். அதில் reflexive verbs ஏராளம்’ என்றார்.

இப்படி யாராவது உண்மை-யாகவே ஸ்பானிஷ் படித்து, தமிழில் உலவும் நெருடாபுருடாக்களைத் தெளிவாக்கலாம்."

எல்லாருக்கும் புரிதா இந்த நெரிதா மேட்டர். - இது நான்.

மொத்தம் பதினேழு ஓட்டுக்கள் ஆச்சர்யமாகயிருக்கிறது, ஒரு நபர் தனக்கு அந்தக் கதை சுத்தமாகப் புரியவில்லையென்று சொன்னதும் நினைவில் வருகிறது. ஓட்டுப்போட்ட அத்தனை நபர்களுக்கும் நன்றி.

முன்பு தமிழோவியத்திற்காக எழுதிய செகுவாரா பற்றிய குறிப்புகளையும் சேர்த்து.

என்ன ஒரு தொடர்பு, செகுவாராவிற்கு பாப்லோ நெருதாவை பிடிக்குமாம். அதிகம் படிக்கவும் செய்வாராம். ஆனால் பாப்லோ நெருதா ஒரு பாடிஸ்டாவின் ஆதரவாளராம். வேடிக்கை....

-----------------------செகுவாரா---------------------------


எனக்கு எப்பொழுதுமே ஒரு விஷயம் எப்படி எனக்கு தெரியக்கிடைத்தது என்பதனை யோசித்து ஒருவாறு உறுதிசெய்து கொள்வேன். அதாவது முதன் முதலில் எனக்கு செகுவாராவை தெரிந்ததெப்படி என்பதைப் போன்ற கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள சில மாலை நேரங்களை இழப்பதைக் கூட அனுமதிப்பேன் இப்படித்தான் ஒருமுறை செகுவாராவை எனக்கு எப்படி தெரியவந்தது என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பக்காலத்தில் இருந்தே கொஞ்சம் அமேரிக்கா என்றால் அலர்ஜி அதன் ஒரு பக்கமாய் தெரிந்து கொண்ட கியூபா நாட்டு சரித்திரமும் அதன் பின்ணணியில் இருந்த பிடல் காஸ்ட்ரோவும், செகுவாராவும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

த பைசைக்கிள் டைரிஸ் படம் பார்ப்பதற்கு முன்பே கொஞ்சம் அறிமுகம் இருந்தது. என்றாலும் எப்படி த ப்யூட்டிபுல் மைண்ட் பார்த்தபின் ஜான் நேஷ்ஷைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததோ அதைப்போல் இந்தப் படம் பார்த்தபின்னர் செகுவாராவைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். சன்டிவியின் டாப்டென் மூவிஸில் சொல்வதைப் போல் இந்தப் படத்தை ஏற்கனவே ஏகத்திற்கு அலசிவிட்டதால் நேராய் விஷயத்திற்கு வருகிறேன்.

உலகம் முழுவதும் இப்பொழுதெல்லாம் புரட்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பிக்க முயலும் எல்லோரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை அல்லது ஆள் செகுவாரா(சேகுவாரா - ஆரம்பத்தில் இருந்து அப்படியே பழகிவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்க.) ஆனால் இதற்கெல்லாம் அவர் தகுதியானவர் தானா? உலகத்தின் எல்லா மூலைகளிலும் விடுதலைக்கான போர் என்பது நடந்து கொண்டேயிருக்கிறது. ஒருவருக்கு விடுதலைப்போராகப்படும் விஷயம் மற்றவருக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது. அப்படியிருக்க எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கியூபாவின் வெற்றிகரமான விடுதலையில் பங்கு கொண்டதற்காக இவருக்கு உலக அரங்கில் இருக்கும் மரியாதை இவருக்கு உரித்தானதுதானா? அப்படியென்ன சாதனையை செய்துவிட்டார் செகுவாரா? கியூபாவைத் தவிர்த்து அவர் போராட்டத்தில் இறங்கிய பொலிவியா மற்றும் காங்கோவில் அவருடைய போராட்டம் தகர்க்கபட்டது மட்டுமல்லாமல், அவர் உறுதியாக நம்பிக்கொண்டிருந்த அவர் வகையான கொரில்லாப் போரும் தோற்றுப்போனதுதானே. பின்னர் எந்தவகையில் அவரை உலகம் மிகப்பெரும் போராளியாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கேள்விக்களுக்கான விளக்கங்களைத் தேடி அலைந்த சமயங்களில் எனக்கு கிடைத்த அல்லது நான் தெரிந்து கொண்டதாய் நினைக்கும் சில குறிப்புக்களை உங்களுக்கு கொடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் மட்டுமல்ல உலக அரங்கிலும் கியூப நாட்டு அதிபர் பிடல் காஸ்ட்ரோவைப் போன்றே கம்யூனிஸவாதியாக தவறாக கருத்தில் கொள்ளப்பட்டவர் செ, உண்மையில் செகுவாரா கம்யூனிஸ்டா என்றால் நிச்சயம் கிடையாது இதை அவரது மனைவியின் வார்த்தைகளிலும் இன்னும் ஏன் பிடல் காஸ்ட்ரோவின் வார்த்தைகளில் இருந்துமே அறிந்து கொள்ளலாம். ஆனால் இங்குதான் நாம் செகுவாராவின் வாழ்க்கையை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

கியூபா செகுவாராவின் சொந்தநாடு கிடையாது, அவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். அந்த நாட்டில் போராடிக் கொண்டிருந்தவர்கள், அவருக்கு வேறு எந்தவிதத்திலும் உறவும் கிடையாது. ஆனால் தனது மிகப்பிரபலமான லத்தீன் அமேரிக்க பைக் பயணத்தில் அவர் கண்டுகொள்ளும் மக்களின் இன்னல்கள் செவின் மனதை பாதிக்கின்றது. மக்களுக்காக போராடுவதற்காக செகுவாரா களத்தில் இறங்குகிறார். இன்னுமொறு விஷயம், செகுவாரா இளம் பிராயத்திலிருந்தே ஒரு ஆஸ்துமா நோயாளி.

இப்படி செகுவாரா தன்னுடைய போராட்டத்தை மக்களுக்காகத் தொடங்கியதால் தான், கியூபாவில் கிடைத்த வெற்றிப் பின்னர் கிடைத்த அரச உத்தியோகத்தை விடவும் மீண்டும் மக்கள் போராட்டத்தை உற்சாகமாய்த் தேர்ந்தெடுக்க உதவியது. கியூபாவின் விடுதலைப் போருக்குப் பின்னர், அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் தலைவராக இருந்து வந்த செகுவாராவிற்கும் முதலாவதான பிடல் காஸ்ட்ரோவுக்கும் சித்தாந்தந்தகளின் அடிப்படையில் சில கருத்துவேறுபாடுகள் இருந்துவந்தது. என்னதான் கம்யூனிஸ ரஷ்யாவின் உதவியால் மட்டுமே இயங்கக்கூடிய நிலையில் கியூபா இருந்தாலும். விடுதலைக்குப் பின் நேரடியாய் கியூபாவை கம்யூனிஸ நாடாக மாற்றுவதில் இருந்த பிரச்சனைகளை செகுவாரா உணர்ந்திருந்தார், மக்களுக்கு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முதலில் செய்து விட்டுத்தான் அவர்களை கம்யூனிஸ்ட்களாக மாற்றவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்துவந்தார்.

கியூபன் மிஸைல் கிரைஸில் எனப்படும், ரஷ்யாவின் அணுஆயத ஏவுகணைகள் கியூபாவில் கொண்டு வந்து வைத்திருந்து அமேரிக்காவை அலறடித்ததில் செகுவாராவின் பங்கு அபரிமிதமானது. ஒரு பேட்டியில் அந்த ஏவுகணைகளை இயக்கும் வாய்ப்பும் அனுமதியும் இருந்திருந்தால் (அவரிடம்) அந்த ஏவுகணைகள் அமேரிக்காவின் மீது நிச்சயமாய் வீசப்பட்டிருக்கும் என்று சொன்னவர் செ. அப்பொழுது மிகப்பிரபலமான ஒன்றாக பேசப்பட்டு வந்த மாவோயிஸத்தை (ரேபிட் இன்டஸ்டிரியலைஷேஷன்) கியூபாவில் நடைமுறைப்படுத்த நினைத்தார் செகுவாரா. ரஷ்யாவோ தங்களுடைய கம்யூனிஸ முறைகளை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் காஸ்ட்ரோவை வற்புறுத்தினர். உண்மையில் ரஷ்யா மற்றும் சீனாவிற்கிடையேயான பிரச்சனை கியூபாவிலும் செகுவாராவால் நீண்டது.

இந்தப் பிரச்சனையால் தான் செகுவாரா கியூபாவில் இருந்து வெளியேறி காங்கோவிற்கு சென்றாரர் என்றாலும், பிடல் காஸ்ட்ரோவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, கியூபாவிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் சுகமாய்க் கழித்திருக்க முடியும். அது மட்டுமில்லாமல் எந்த விதமான் ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தவர் செகுவாரா. (பாடிஸ்டாவின் ஆர்மி தவிர்த்த ஆட்களையும் கொன்றார் என்பதற்கான காரணங்கள் வேறுஉண்டு.)

ஒரு மருத்துவராக வாழ்க்கையைத் துவங்கி, போராளியாகி அதில் வெற்றியும் பெற்று, அந்த நாட்டின் இரண்டாம் பெரும் தலைவராகவும் இருந்தவருக்கு மீண்டும் போராளியாக மாற வேண்டிய கட்டாயம் நிச்சயம் இல்லைதான். அதையும் மீறி மக்களுக்குக்காக போராளியாக முடிவெடுத்து அந்த போராட்டத்திலேயே உயிரையும் மாய்த்துக் கொண்டவர் செகுவாரா. அதற்குப் பின்னால் இருந்த அமேரிக்க தலையீட்டை மறைக்க முடியாது. தனியாளாக (சிறிய கும்பலுடன்) அமேரிக்க ஆதரவு பொலிவிய ராணுவத்தை எதிர்த்து போராடும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது கியூப விடுதலைச் சரித்திரம். அதைப் பொறுத்தவரையில் ஒரு இடத்தில் நடந்தது இரண்டு இடங்களில் நடக்கவில்லை அவ்வளவே. ஆனால் இன்று பொலிவியாவின் ஆட்சியில் நடந்த மாற்றம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செகுவாரா விட்டுச்சென்ற கொரில்லா யுத்தத்தின் காரணத்தாலே.

இன்றும் கியூபாவை அடக்கிவிடத் துடிக்கும் அமேரிக்காவிற்கும், அது பிடல் காஸ்ட்ரோ உயிரோடு இருக்கும் வரை நடக்காது என்பது தெரிந்துதான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் செகுவாராவின் பேருக்கும் புகழுக்கும் முழுமையான தகுதியுடையவர் அவர்.


Credits, Vikatan.com, Tamiloviam.com.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In

தாமதமாக வந்துசேரும் அறிவு

ஆனாலும் ஒருதுளி

துளியெனும் ஒரு சொல்லில்
அடங்காதெத் துளியும்
கடலெனும் ஒரு சொல்லில்
கண் விழிப்பதுண்டு பெருங்கடல்
இடைவெளிவிட்டே எழும் சிறு ஓசையில்
என்னைப் பிடியெனச் சொல்லித் தப்பிக்கும்
காந்தமுள்ளில் அலைவுறும் திசைகள்
நடுவில் இருளையும் விளிம்பில் ஒளியையும்
வைத்து விளையாடும் சோதியின் மோனம்
படிகத்துள் சிக்கிய பசும்புல் நுனியில்
உறைந்த ஒரு வெற்றிடம்
பனியோ நிறம்மாறும் சூரியனோ என
யூகிக்க நீளும் இத்தவம்

என்றாலும் ஒற்றைத் துளியை
உச்சரித்துவிட முடியாமல்
ஒவ்வொரு துளியாய் வீணில் கழிகிறது
உடல்கலம் எங்கும் சேமிக்கப்பட்ட
உயிர்த் தளும்பும் மொழி.

மழை பற்றிய செய்தி

மழை பற்றிய செய்தியைக் கேட்டுக் காத்திருந்தோம்
மழை வருகிறதென்ற செய்தி தாமதமாக
வந்த ஒரு நாளின் பின்
மழை வந்தது தாமதமாக
மழை பொழிந்ததின் வரலாறு
மரங்களில் உச்சிக் கிளைகளில்
செடி கொடிகளின் இலைகளில்
கிளைகளில் சற்றே கீழிறங்கி
வேர்களில் மண்ணில் என் உள்ளோடி
வளர்ந்தது வரலாற்றுப் பிரதிகளின் பக்கங்கள்
நீரான எழுத்துக்களால்
மழையைப்பற்றிய செய்திகள்
இவ்வளவுதான்
காரணம் வரலாறு என்பது என்றைக்கும்
தாமதமாக வந்துசேரும்
அறிவுதானே.

பாவனை

அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில்
அசைவற்று மிதந்துகொண்டிருக்கும் நிலாவை
பொத்துக்கொண்டுத் துள்ளியது மீன்
நீருக்கு மேலே ஒரு கண வெட்டவெளி
கலங்கிய நிலா அதிர்வுகளடங்கி
தன்னைச் சரிசெய்து தணிவுகொண்ட
கால அளவில் தன்னை நீந்தி நிரம்பிய மீன்
ஐம்பது மீட்டர் நீளம் கொண்டதாய் மாறி
எனது தூண்டில் முள்ளில் சிக்கிப் புரண்டது
முள் தைத்த நீரின் பரப்போ ஒரு துளி ஆறு

இளம் விடியலில்தான் தெரிந்தது
மணலடர்ந்த ஆற்றில் மிதந்து அமிழ்ந்தது
நிலாவல்ல சிறு கூழாங்கல் என்பது
ஆனால் எனது ஐம்பது மீட்டர் நீள மீனை
ஊர்க்கூடி அதிசயித்ததே
அதுபோதும் எனக்கு.


இவைகள் ரமேஷ்-பிரேமின் பேரழகிகளின் தேசம் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள். வெளியீடு மருதா. எனக்கென்னமோ இன்று படித்த இந்த நிலா கவிதை 'நீலவான ஆடைக்குள் முகமறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை' என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் நினைவில் வந்தது.

அந்தக் கவிதை முழுவதுமே பாரதிதாசன் உவமைகளின் பின்னியிருப்பார்.
"வானச்சோலையிலே பூத்த தனிப்பூவோ"
"சொக்கவெள்ளிப் பாற்க்குடமோ"
"அமுத ஊற்றோ"
"காலை வந்த செம்பருதி கடலில் மூழ்கி கனல் மாறி குளிரடைந்த ஒளிப்பிழம்போ."

கல்லூரி படிக்கும் பொழுது எனக்கு தமிழாசிரியர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாரதிதாசனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்தமானது. கவிதை வரிகள் உரியவர்களுக்கே சொந்தமானவை. நன்றிகள் ரமேஷ்-பிரேம், மருதா.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி சுய சொறிதல்

ஒரு சிறு அறிமுகம்

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் திருச்சியில் தான். அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். என்னைப்பற்றிய அறிமுகம் என் கதைகளின் மூலமாக ஏற்கனவே நிறைய எழுதிவிட்டதால் கொஞ்சம் வித்தியாசமாய், என் பதிவுலக ஆரம்பம் வளர்ச்சி என சில வரிகள்.

நான் முதன்முதலில் இணையத்தளத்தை வலம் வர தொடங்கிய பொழுது என் மாமாவெல்லாம் தமிழில் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர் (அதேதான் நிலா, காதல், மற்றும் இன்னபிற - அவர்களை எல்லாம் பார்த்தால் ஆச்சர்யமாய் இருக்கும் இதையெல்லாம் கூட கவிதையாய் இப்படியெல்லாம் எழுதலாமா என்று :-)). அதனால் ஏஞ்சல் பயர் அறிமுகமாகி, அப்புறம் காப்பி பேஸ்ட் டெக்னாலஜிக்களை வைத்து முதன்முதலில் ஒரு இணையத்தளத்தை ஏஞ்சல் பயரில் தொடங்கினேன். பின்னர் ஜியோசிட்டியில் ஒன்று. பிறகுதான் கொஞ்சம் அளவாய் கதை எழுதுகிறேன் பேர்வழியென்று. கீதம்.நெட்டை கொஞ்ச காலம் வாட்டி வதைத்தேன்.

பின்னர் போதும் நீ கீதத்தில் கிழித்தது என்று நானே நினைத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், தான் காலச்சுவட்டில் ஜேபி சாணக்யாவின், ஆண்களின் படித்துறையை படித்து விட்டு, ஜேபி யை கூகுளில் தேட அது பிகேசிவக்குமாரின் வலைபதிவிற்கு சென்றது. இலக்கியத்தேடல் எனக்கு இருந்ததுன்னு இப்பவாவது ஒத்துக்கோங்க மக்களே, வேற வழியேயில்லை. அங்கே போட்டேன் முதல் பின்னூட்டத்தை. ஆனால் அவர் அதை கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அதனால அப்படியே விட்டுற்றதா, நான் யாருன்னு காண்பிக்காம விடறதில்லைன்னு மரத்தடிக்கு போனேன்.

பின்னர் அப்படியே கொஞ்ச நாள் மரத்தடியில் ஓசி காஜி அடித்துவிட்டு, தொடங்கியது தான் என்னுடைய வலைத்தளம். (கேவிஆர், நடராசன், ஆசாத் பாய், மீரான் அண்ணாச்சி போன்றோர் இனிமேல் கதையெல்லாம் எழுதினே கையக்காலை உடைச்சிறுவேன் பயமுறுத்தியதால் தான் நான் மரத்தடியை விட்டு(அந்தப் பழம் புளிக்கும்) வலைத்தளம் தொடங்கினேன் என்பதெல்லாம் வதந்தி என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.)

அப்படியே தமிழ்மணத்திற்கு தொடுப்பு கொடுத்துவிட்டு பார்த்தால், பெரிய பெரிய விஷயமெல்லாம் நடத்துக்கிட்டு இருந்தது தமிழ்மணத்தில். சரி இதையும் ஒரு கை பார்ப்போமுன்னு களத்தில் குதித்தேன். இருக்கவே இருந்தது விகடன்.கொம். வெள்ளிக்கிழமை சுடச்சுட விகடனிலிருந்து மாவெடுத்து தோசையை நான் என் வலைபதிவில் சுட, பின்னூட்டம் வந்துச்சோ இல்லையோ கவுண்டரு எப்பப்பாரு ஆயிரம் பேரு வந்தாங்க வெள்ளிக்கிழமைன்னு சொல்லிக்கிட்டேயிருந்துச்சு.

சரி இப்படியே உட்டால் அப்புறம் சரி வராதுன்னு, நம்ம பழைய கதையை எல்லாம் விட்டேன் இதையும் யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அப்ப முடிவெடுத்தது வாத்தியாரோட பிரம்மாஸ்திரம், ஜல்லியடிக்கிறதுங்கிறதை. கொஞ்ச நாள் நானும் நல்லாத்தான் ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியா இவ்வளவு நாளா நான் புரொஜெக்டில் என்னத்த கிழிக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்ட கம்பெனி, ஒட்டுமொத்தமா ப்ளாக்கரையே பேண்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் மூடிக்கிட்டிருந்த நான் இப்பல்லாம் அதிகமா பொலம்பாம அப்பப்ப புலம்பிக்கிட்டிருக்கேன்.

நானும் கதையெழுதுகிறேன் பேர்வழியென்று எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் கூட என் கல்லூரியை மையமாக வைத்து ஒரு நாவல் மாதிரி எழுதுகிற ஐடியாவெல்லாம் உண்டு. (பைவ் பாய்ண்ட் சம்திங்கின் தாக்கம்) ஆரம்பத்தில் இருந்தே சொல்லிவந்தது போல் கிடைக்கும் நேரம் குறைவாக இருப்பதால் அதை மறந்து விட்டேன். (எழுதினாலும் அச்சில் எல்லாம் இப்போதைக்கு கொண்டுவரமாட்டேன் பயப்படாதீர்கள். கல்யாணத்திற்கு வாங்கும் வரதட்சணையை வைத்து தமிழுக்கு என்னாலான உதவியை(அச்சில் கொண்டுவருவது) செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன். எல்லாம் வல்ல எங்கம்மாவும் அக்காவும் இதற்கு உடன்பட வேண்டும் (கேவிஆர் - இங்கேயும் இழுத்துட்டேன்)) மற்றபடிக்கு தற்சமயம் நிறைய விஷயங்களை படித்துக்கொண்டும், சில விஷயங்களை எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

நான் எழுதியவைகளில் தேவதையின் காதலன் என்ற சிறிய தொடர்கதை எனக்கு பிடித்தமானது. நான் பைவ் பாய்ண்ட் சம்திங் போல் ஒன்று எழுதினால் அது இந்தக் கதையின் விரிவாகத்தான் இருக்கும்.

Thanks: Tamiloviam.com

PS: நான் பிகேஎஸ் பதிவைப்பற்றி எழுதியிருந்ததற்கு பிகேஎஸ் தமிழோவியத்தில் பதிலளித்திருந்தார். பார்க்கவேண்டுமானால் மேலேயுள்ள லிங்கை கிளிக்கவும்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In வகைப்படுத்தப்படாதவை

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.

எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.

படித்ததில் பிடித்தது,
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா - உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.

கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)

நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)

பார்த்ததில் பிடித்தது நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு

நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.

சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

கொஞ்ச நாளைக்கு லீவில் போறேன்

ஏற்கனவே லீவில் இருப்பது போலத்தான் இருக்கேன். இருந்தாலும் கொஞ்சம் சங்கோஜமா இருந்தது. ஆத்தில் இறங்குறதுனா இறங்கணும் இல்லை சேற்றில் நிற்பதுன்னா நிக்கணும். அதைவிட்டுட்டு ஆத்தில் ஒரு கால் சேத்தில் ஒரு கால் வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

அதனால் கொஞ்ச நாள் என் கம்ப்யூட்டர் வேலையை கருத்தில் கொண்டு நீண்ட ஓய்வில் செல்லலாமென்றிருக்கிறேன். அப்படியே ஒரு விஷயம் இந்த வாரம் தமிழோவியத்தில் சிறப்பு ஆசிரியராக நான்கு விஷயங்களை எழுதியுள்ளேன்.அந்த வாய்ப்பை கொடுத்ததற்கு தமிழோவியத்திற்கும் கணேஷ் சந்திராவிற்கும் நன்றி.

வருகிறேன்.

(இந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் பதிவிடப்படாது. அதனால் கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்னூட்டமிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.)

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

பொன்னியின் செல்வனும் என் பொடலங்காய் ஐடியாவும்

பொன்னியின் செல்வனைப் பற்றி இப்பொழுது வலைப்பதிவுகளில் சில விஷயங்கள் பேசப்பட்டுவருகிறது.

நானும் பொன்னியின் செல்வனைப் படித்திருப்பதால் அதைப்பற்றிய என்னுடைய புடலங்காய் ஐடியாவையும் தரலாம் என்று உத்தேசம்.

என்னைப் பொறுத்தவரை வந்தியத்தேவனுக்கு சரியான சாய்ஸ் ரஸல் குரோ, கிளாடியேட்டர் படத்தில் உணர்ச்சியைக் கொட்டி நடித்திருப்பார்.



பிறகு குந்தவைக்கு கொஞ்சம் பொறுத்தமான சாய்ஸ் ஏஞ்சலினா ஜூலி. அலெக்ஸாண்டர் படத்தின் காரணமாய். மகனுக்கு அறிவுரைகள் சொல்லும் அவரை தம்பிக்கு அறிவுரை சொல்பவராக ஆக்கிவிடலாம்.

அப்படியே பொன்னியில் செல்வருக்கு கொலின் பெரல்,
ஆதித்த கரிகாலனுக்கு டென்சல் வாஷிங்க்டன்
பிரம்மராயருக்கு டாம் ஹாங்ஸ் (என்னைப் பொறுத்தவரை மிகச்சரியான பொறுத்தம்)



டாம் குருஸைத்தான் அக்காமொடேட் பண்ணமுடியாது, வேண்டுமானால் பொன்னியின் செல்வன் கதையில் நந்தினி கதாப்பாத்திரக் கற்பனைப்போல படத்தில் வேறு ஒருவரை போர்வீரனாக் போட்டு அதில் டாமை தள்ளிவிடலாம், சாமுராய் படத்தில் போட்டுத்தாக்கியிருப்பார்.

வானதிக்கு என்னைப்பொறுத்தவரை கொஞ்சம் இளசாய் விளையாட்டுத்தனத்துடன், ட்ரூ பாரிமூர் சரியாகவருவார்.

நந்தினியாக ஷெரன் ஸ்டோன், பழிவாங்கும் கதாப்பாத்திரம் கனகச்சிதமாக பொறுந்துவார் இல்லையென்றால் மடோனா.

என்ன பட்ஜெட் கொஞ்சம் இடிக்கும் ஆனால் இன்டெர்னேஷனல் படமாக இருக்கும் என்பதால் விட்டுப்பிடிக்கலாம், என்னது கமல்ஹாசனை மறந்திட்டனே, வேண்டுமானால் ரவிதாஸன் கிரமவித்தன் கதாப்பாத்திரம் சரிவரும் அவருக்கு. அடப்போங்கப்பா!

Read More

Share Tweet Pin It +1

6 Comments

Popular Posts