In Only ஜல்லிஸ்

Weird ஒரு வாய்ஸ் பதிவு

என்ன சொல்றது எல்லாரும் நல்லா மாட்டினீங்க. நான் என்னுடைய லூசுத்தனங்களைப் பத்தி ஒரு வாய்ஸ் பதிவு போட்டிருக்கேன் அவ்வளவுதான்.

சொல்லியிருக்கும் லூசுத்தனங்களைப் பத்தி மேலோட்டமா ஹிண்ட் மற்றும் கொடுக்கிறேன் இங்க,

1) ஆஸ்திரேலியா சப்போர்ட்
2) கோயிலுக்குப் போறது
3) என் ஸ்கூல் காலத்தில் நடந்த ஒரு விஷயம்
4) என் காலேஜ் காலத்தில் நடந்த ஒரு விஷயம்
5) தமிழ்ல பதிவெழுதுவது.



வொர்க் ஆகும்னு நினைக்கிறேன். கொஞ்சம் பெருசா வந்திருச்சு, பிரிபேர் எல்லாம் செய்யாமல் பேசியது. அது, இது, அங்க, இங்க எல்லாம் கொஞ்சம் அதிகமாயிருக்கு. ஒரே ஒரு பிழையும், நான் டூர் போனதப் பத்தி சொல்லியிருப்பேன் அது +2 அப்ப நடந்தது இல்லை காலேஜ் முடிஞ்சப்ப செய்தது. இவன் இந்தமாதிரி போடச்சொன்னதுக்கு சும்மாவேயிருந்திருக்கலாம்னு சினேகிதி நினைச்சா மட்டும் போதும். ஹாஹா.

மற்றபடிக்கு கேட்டுப்பார்த்துட்டு சொல்லுங்க.

அஞ்சு பேரை இணைக்க விட்டுட்டேன்

1) பிகேஎஸ் அண்ணாச்சி
2) ஹரிஹரப் பிரசன்னா அண்ணாச்சி
3) கேவி ஆர் அண்ணாச்சி
4) ஆசாத் அண்ணாச்சி
5) ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அக்காச்சி(இவங்களை பதிவுலகத்திற்கு இழுக்கணும்.)

சரி சரி போட்டுறுங்கப்பா...

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்

காதில் வரும் புகையைப் பற்றிய ஜல்லிகள்

ஆ வருது வருது, புகை வருது வருது. அண்ணாச்சி என்னமோ இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு பிரச்சனை வருமென்று சொன்னார். எனக்கென்னமோ ஒரு பாதி முடிந்த பின்னர் அப்படித் தோன்றவில்லை. ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் என்று தான் நினைக்கிறேன். கடைசியாக ஆஸ்திரேலியா எப்பொழுது உலகக்கோப்பைக் கோப்பையில் தோற்றது தெரியுமா, இரண்டு உலகக்கோப்பைக்கு முன்னர் அதாவது. போன உலகக்கோப்பைக்கு முந்தைய உலகக்கோப்பையில்(ஸ்டீவ் வா தலைமையில் ஜெயித்தது) செமி பைனல்ஸ் ஆகயிருக்குமென்று நினைக்கிறேன்(டிராவை கம்பேர் செய்வதாகயிருந்தால்.) இல்லையென்றால் அதற்கும் முன்னர் தோற்றிருக்க வேண்டும்.

எனக்கென்னமோ இந்த உலகக்கோப்பையிலும் ஒரு போட்டியிலும் தோற்கும் என்று தோன்றவில்லை.

------------------------------

மஹா மட்டமான டெலிகாஸ்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் சோனி. அந்தக் கொடுமையாவது பரவாயில்லை என்றால் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் என்ற பெயரில் நடத்தும் ஒரு டப்பா ஷோ. மந்திரா பேடியையும் அந்தம்மா கொடுக்கும் பிரம்மாதமான நடிப்பையும் பார்க்கவேண்டாமென்றே நான் டாஸ் யார் ஜெயித்தார்கள் என்று கூட பார்க்கவில்லை. ஏழு மணி மேட்சா அப்பத்தான் உள்ள போறது. கடைசி பால் போட்டா வேற பக்கம் வந்திர்றது, இப்படியே போகுது என் உலகக் கோப்பை.

கிரிக்கெட்டைப் பற்றி ஒரு பொம்பளை பேசுவது எனக்கு பிரச்சனை கிடையாது, நானும் என் அக்காவுமே புள்ளி விவரங்களை அடுக்கி பேசுவோம். (சரி வீட்டை விட்டு வெளி நபர்களிலும் கூட இந்த மாதிரி பெண்களுடன் பேசுவதுண்டு கிரிக்கெட்டைப் பற்றி உண்மையான சுவாரசியத்துடன் பேசினால்.) இந்த ஆண்ட்டி ஒன்னுமே புரியாமல் அடித்த ஜல்லி தாங்காமல் போன உலகக்கோப்பையில் விட்டது. ஆண்ட்டி போட்டிருக்கும் டிரெஸ் கலெக்ஷனுக்காகயெல்லாம் பார்க்கிற அளவுக்கு என்னுடைய கலாரசனை இன்னும் மோசமாகவில்லை. உண்மையில் இங்கே தான் இஎஸ்பிஎன்'ஐ ரொம்பவும் மிஸ் செய்றேன்.

எதுக்காக இந்த ஜல்லியென்றால் பொதுவாகவே ஆஸ்திரேலியா மாட்ச் என்றால் ஒன்றையும் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டுமென்று விரும்புவேன். இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மாட்சில் மழை பெய்ய வேறுவழியில்லாமல் இந்த ஆண்டியின் ஜல்லியை கேட்க வேண்டியதாயிற்று.

ரொம்ப சீரியஸாக டோனி கிரிக்கும், இயன் செப்பலும் பந்து மற்றும் மட்டையில் தேவைப்படும் தேவைப்பட்ட மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆண்ட்டி தனக்கு பிடித்த கலரையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது. பிங்க் கலர் என்பது அமேரிக்க கலாச்சார அல்லது மேற்கத்திய கலாச்சார பெண்ணிய மக்களின் ஒரு டப்பா கலர். நீங்கள் இந்தக் கலரை பெண் குழந்தைகளின் மேல் திணிப்பதைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் குழந்தைக்கு இந்தக் கலர் பிடித்திருந்தால் ஓக்கே. ஆனால் பள்ளிக் கூடத்திலும், மற்ற ஏற்கனவே திணிக்கப்பட்ட குழந்தைகளாலும் இந்தக் கலர் திணிக்கப்படுகிறது.

தற்சமயம் பெண்களுக்கென்று உருவாகி(பெண் பதிவர்கள் பதிவுகளில் இதன் லிங்கை கட்டாயமாகப் பார்க்கலாம்) ஒரு கலெக்ஷன் எக்ஸெம்மல் பைல் கூட இந்த பிங்க் நிறத்தில் இருந்ததைப் பார்த்து ஒரு புன்முறுவல் என் முகத்தில் படர்ந்தது.

ஆனால் மந்திரா ஆண்ட்டி சொன்ன/சொல்லும் விஷயங்களை அங்குள்ள பெருந்தலைகள் கவனிப்பதில்லை என்பது வேறுவிஷயம்.(Bunch of MCP's ;-))

ஹைடனின் அற்புதமான ஆட்டம் பார்க்க கண்கொள்ளாக் காட்சி, முதல் சுற்றைப் போலில்லாமல் அளவில் பெரிய மைதானங்கள், ரொம்ப ஸ்லோவான அவுட்பிச். பந்து பேட்டிற்கே வர மாட்டேன் என்கிறது. ஆனாலும் அற்புதமான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை செய்துவிட்டார்கள். எனக்கென்னமோ மேற்கிந்தியத் தீவுகள் இருநூறு சொச்சம் தான் அடிப்பார்கள் என்று படுகிறது பார்க்கலாம்.

-----------------------------

இதையெல்லாம் சொல்லிக் காண்பிக்கணும்னு இல்லைன்னாலும் நான் சொன்னது தான் நடந்திருக்கு இல்லையா? இருநூத்தி சம்திங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் அவுட் ஆயாச்சு. இன்னுமொறு 100 ரன்கள் வித்தியாசத்தில் வின்.

எனக்கென்னவோ இதுவும் ஒரு ஒன்சைட்டட் வேர்ல்ட் கப்பாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

மருத்துவர் ராமதாஸுக்கு

ராமதாஸைப் பற்றி எனக்கு பதிவெழுத வருமுன் அவ்வளவாகத் தெரியாது. மரம்வெட்டிக் கதைகளைக் கேட்டிருக்கிறேன், ஆண்டிமடம் சென்றிருந்த பொழுது நண்பர்களால் காடுவெட்டி குரு பற்றிய தலைவெட்டி கதைகளையும் கேட்டிருக்கிறேன்(எவ்வளவு உண்மை என்று தெரியாது.) ஆனால் குழலியின் மருத்துவர் சீரிஸ் படித்து என்னுடைய ராமதாஸை நோக்கும் பார்வை மாறியிருப்பது உண்மை.

இப்ப நான் போடப்போற பதிவுக்கும் இந்த ஜல்லிக்கும் சம்மந்தமே கிடையாது. சமீபத்தில் யூடியூபில் ஒரு வீடியோ பார்த்தேன். இன்னிக்கு தமிழ்நாட்டு மக்கள் தமிழ் பேச தமிழில் எழுதியதைப் படிக்க திணறுவதை கண்கூடாகப் பார்த்தவன் என்ற முறையில் ராமதாஸ் அவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்ப வேண்டிய கடமைப் பட்டவன் ஆகிறேன். சரியான காமடியாகயிருக்கிறது.

PS: நான் அந்த அடியில் இருந்து தப்பித்துவிடுவேன் என்றுதான் நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 3

முன்னாடி இரண்டு தெய்வங்களை நம்பி நான் போட்ட வேர்ல்ட் கப் மேப், ஊத்திக் கொண்டது உண்மைதான். இந்தியாவை பைனல்ஸ் வரை கொண்டு சென்றது என்னுடைய தேசபக்தியால் மட்டும் கிடையாது. அவர்களுக்கு நிச்சயமாக அந்தத் திறமை உண்டு. என்னவோ யார் செய்த சதியோ, வைத்த சூனியமோ ஊத்திக் கொண்டு முதல் ரவுண்டிலேயே வெளியேறும் நிலை.

ஆனால் என்னுடைய புல் சப்போர்ட் அணி பிரமாதமாக விளையாடிவருகிறது. எனக்கென்னமோ இந்த முறையும் ஆஸ்திரேலியா எந்த பிரச்சனையும் இல்லாமலே ஜெயித்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்த ஸ்டுவர்ட் கிளார்க்கை ஆஸ்திரேலியா களம் இறக்கவேயில்லை :@, அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சூப்பராக விளையாடுவதால் Mr. Cricketற்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன :(.

Home Team வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவிற்கு கொஞ்சம் பைட் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இந்த இரண்டு டீமிற்கு இடையிலான குவாலிட்டி டிஃப்ரன்ஸ் ஆஸ்திரேலியாவை சுலபமாக ஜெயிக்க வைக்கும். பாண்டிங் தன்னுடைய ஐந்தாவது உலகக்கோப்பை செஞ்சுரியை நலுவவிட்டார்(91 Runs). ஆனால் பிரமாதமான பார்மில் இருக்கும் அவர் இன்னும் குறைந்த பட்சம் இரண்டு செஞ்சுரியாவது அடிப்பார் என்று அடித்துக்கூறலாம். அதுவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டமான போட்டிகளில் Captain's Knock ஐ அவரிடமிருந்து நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மார்க் வா' வின் வேர்ல்ட் கப் ரெக்கார்டுகளை அவர் உடைக்கும் பொழுதெல்லாம் மனசுக்கு கஷ்டமாகயிருந்தாலும். ஒரு சிறந்த ப்ளேயர் இன்னொரு சிறந்த ப்ளேயரின் ரெக்கார்டுகளை உடைக்கிறார் என்ற சந்தோஷம் எப்பொழுதும் உண்டும்.



கடந்த ஆட்டத்தில் அடித்த முதல் 8 ரன்கள் மூலமாக 10,000 ரன்களைக் கடந்த ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு பொக்கே.(பொக்கை இல்லை) மெக்ரத்திற்கு இன்னும் நான்கு விக்கெட்கள் பாக்கியிருக்கின்றன. ஷான் டைட் பரவாயில்லை, 61 ரன்கள் கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் இரண்டு பேரை தூக்கினார், பிராட் ஹாக்கை இந்த மாட்சுக்கு எடுக்கும் பொழுது கமேண்டேட்டர்கள் இது சரிவராது என்றார்கள், ஆனால் சரியாக வந்தது. மாத்யூ ஹைடனின் பார்ம் பிரமிக்க வைக்கிறது, அண்ணாத்தையை பார்மில் இல்லையென்று வெளியில் தூக்கி வைத்திருந்தது நினைவில் வந்தது.



ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் நான்கு போட்டிகள்(Super Eight's) விறுவிறுப்பு இல்லாமல் இருக்குமென்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா நியூஸிலாண்டை துவம்சம் செய்யும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

---------------------

முதல் சுற்று போட்டிக்குப் பிறகு திருத்தியமைக்கப்பட்ட என்னுடைய மேப். சௌத் ஆப்பிரிக்கா செமிஸ் வரக்கூடாது என்று இல்லை ஆனால் வரமாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்.

Group A

1. Australia
2. South Africa

Group B

1. IndiaSrilanka
2. SrilankaBangladesh

Group C

1. New Zealand
2. England

Group D

1. PakistanWest Indies
2. West IndiesIreland

Then Super Eights

A1 & D2 - Australia Vs West Indies - Australia
A1 & B2 - Australia Vs Srilanka - Australia
A1 & C2 - Australia Vs England - Australia
A1 & D1 - Australia Vs Pakistan - Australia
A1 & B1 - Australia Vs India - Australia
A1 & C1 - Australia Vs New Zealand - Australia

March, Tue 27 - Australia v West Indies
March, Sat 31 - Australia v Bangladesh
April, Sun 8 - Australia v England
April, Fri 13 - Australia v Ireland
April, Mon 16 - Australia v Sri Lanka
April, Fri 20 - Australia v New Zealand

The Semi finalists

1. Australia
2. England
3. IndiaNew Zealand
4. West Indies

அப்படின்னா
Australia Vs West Indies - Australia
England Vs IndiaNew Zealand - England

இன்னமும் சொல்லணுமா

Finals

Australia Vs IndiaEngland - Australia

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Bermuda in match pixing scandal

உலகக்கோப்பைப் போட்டியில் பெர்முடாஸ் அணி மேட்ச் பிக்ஸிங் செய்தது தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஐசிசியின் தலைவர் மால்கம் ஸ்பீட் தெரிவித்தார். இன்று மதியம் போல் பெர்முடா அணியின் கேப்டன் Irvine Romaine ஐசிசியின் மேட்ச் பிக்ஸிங் தடுப்புக் குழுவால் விசாரிகப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தியா அணிக்கெதிரான போட்டியின் உத்தப்பாவின் கேட்சைப் பிடித்த Dwayne Leverock ஒரு போலீஸ்காரர் என்பதால் அவரால் தான் இந்த ஸ்காண்டல் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.

பத்திரிக்கையாளர்கள் மால்கம் ஸ்பீடிடம் எப்படி இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது என்று கேட்ட பொழுது, பெர்முடாஸ் இந்திய அணியிடம் தோற்ற பொழுதே இதைப் பற்றிய சந்தேகம் எழுந்ததாகவும், பின்னர் பெர்முடா அணியினரின் தொலைபேசிப் பேச்சுக்களை கேட்டதில் இந்தச் சந்தேகம் உறுதியானதாகவும் தெரிவித்தார்.

இதைப் பற்றிய விரிவான வெள்ளை அறிக்கை நாளை வெளியாகுமென்று தெரிகிறது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 2

ஒருவழியா வேர்ல்ட் கப் இரண்டாவது பாகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் டீம் இப்படி முதல் ரவுண்டிலேயே வெளியேறிரும் என்று நான் நினைக்கவில்லை. சரி போகட்டும். இந்தியா தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது சூப்பர் எய்ட்டில் நுழைவதற்கு. என்னைப் பொறுத்தவரை இந்திய இலங்கையை சுலபமாக வென்றுவிடும். அந்த ஆட்டதிலும் சேவாக் நன்றாக விளையாடுவார் என்பது என் எண்ணம். இதே முதல் ஆட்டம் பார்படாஸுடன் இருந்து இரண்டாவது ஆட்டம் பங்க்ளாதேஷுடன் இருந்திருந்தால் இந்தியா அதிலும் வரலாறு படைத்திருக்கும். அதைவிடுவோம்.

ஆஸ்திரேலியாவிற்கும், சௌத் ஆப்பிரிக்காவும் ஆன முதல் ரவுண்ட் மேட்ச், காலிறுதி அரையிறுதி(உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிப் போட்டி பெரும்பாலும் ஒன் சைட்டட் ஆகவே இருந்துவிடுகிறது) அளவிற்கு பேசப்படுகிறது, காரணம் ODI Ranking ல் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதுதான் காரணம். இவர்கள் இருவருக்குமான கடைசி சீரியஸும் மிக நன்றாகவே சென்ற ஞாபகம்.



இரண்டு அணிகளும் மைண்ட் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாமல் இருந்த ரேங்கிங்கைப் பற்றிய ஜல்லிச் சத்தம் இப்பொழுது கேட்கத் தொடங்கியிருக்கிறது. சௌத் ஆப்பிரிக்கா கேப்டனை இதுவரை ஆஸ்திரேலியா அணி திறமையாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள், அதை இந்தப் போட்டியிலும் தொடரப் போவதாக Mr. Cricket பேட்டி கொடுத்திருந்தார். இப்பொழுது பிரஷர் முழுக்க சௌத் ஆப்பிரிக்காவிற்குத் தான், ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் வேறு ;). பாண்டிங் நக்கலாகச் சொல்லியிருந்தார் இந்த வேர்ல்ட் கப்பை எடுத்துக் கொண்டு போகும் பொழுது ஆட்டோமேட்டிக்கா ரேங்கிங் அவர்கள் பக்கம் வந்துவிடும் என்று.



ஷான் டைட் உடைய ஆர்ம் ஆக்ஷன் கொஞ்சம் போல் ஸ்டீவ் வா-வை நேரில் பார்ப்பதாகயிருந்தது. முதல் இரண்டொரு ஓவர்களில் லைனைப் பிடித்துவிட்டு பேஸை அதிகப்படுத்தினால் சரியாகிவிடும். ஸ்டுவர்ட் கிளார்க் இல்லாமல் நாதன் ப்ராக்கன்னை வைத்து ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. மெக்கிராத் பர்ஸ்ட் சேஞ்சாக இறக்கப்படுவது ஆஸ்திரேலிவின் பலம். ஷான் டைட்டும் நாதன் ப்ராக்கன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுக்களை முதல் எட்டு பத்து ஓவர்களில் கழட்டி விட்டால் நிச்சயமாக எதிரணியின் ரன் அடிக்கும் வேகம் மெக்கிராத்தால் தடுக்கப்படும். பாண்டிங்கின் இன்னொரு பேட்டியின் அடிப்படையில் இந்த அணி பெரும்பாலும் மாற்றப்படாது என்று தெரிகிரது. சைமண்ட்ஸை தவிர்த்து.

சைமண்ட்ஸ் முழுத் தகுதி பெற்றுவிட்டதாக ஆஸ்திரேலியாவின் பிசியோ சொல்லியிருக்கிறார். செஞ்சுரி அடித்த பிறகும் பிராட் ஹாட்ஜ் வெளியே உட்காரும் நிலைவரும் என்று நினைக்கிறேன், ஆனால் சைமண்ட்ஸ் நிச்சயமாக ஒரு போட்டியின் தன்மையை தனியொறு ஆளாக மாற்றிவிடும் சாமர்த்தியம் உடையவர் தான்.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா சேஸ் பண்ணினால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்துவிடுவார்கள். செட்டிங் என்றால் கொஞ்சம் போல் கஷ்டப்பட்டு ஆனால் ஜெயிப்பார்கள். ஆனால் இப்படி ஒரு முன்முடிவிற்கு வரும் அளவிற்கு இருப்பதாலேயே ஆஸ்திரேலியா செட்டிங் செய்து ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். சின்ன கிரவுண்ட் என்பதால் நிச்சயமாய் ஹை ஸ்கோரிங் கேம் தான். சௌத் ஆப்பிரிக்கா பெற்றிருக்கும் தேவையற்ற பிம்பம் இந்தப் போட்டியில் தகர்த்தெறியப்படும்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா சினிமா விமர்சனம் சுய சொறிதல்

Apocalypto, 300, மொழி & ராஜராஜன்

சமீபத்தில் அபோகலிப்டாவும், 300 வும் பார்க்க நேர்ந்தது, முதலாவது முற்றிலும் தற்செயலான ஒன்று எப்படியென்றால், முந்தைய நாள் டிரைலர் பார்க்க பிடித்துப்போய் இந்தப் படம் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் 300 பற்றிய விமர்சனங்கள், டிரைலர்கள் என பலவற்றைப் பார்த்துவிட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் நாளுக்காக காத்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரை முதலாவது படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது, காரணம் எல்லாம் சொல்லமுடியாது.

Mayan civilization ல் நடக்கும் கதையாய் சொல்லப்படுகிறது. படம் நகர்வதே தெரியவில்லை, காட்டில் பன்றியொன்றை வேட்டையாடுவதில் தொடங்கும் படம், ஹீரோ Jaguar Paw (Rudy Youngblood), பக்கத்து கிராமத்து(சொல்லப்போனால்) மக்கள் ஊரைவிட்டு போவதைப் பார்ப்பதில் இருந்து சூடுபிடிக்கிறது. அவர்கள் ஏன் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது கதை.

மேட்டர் என்னான்னா, இந்த மாயன் சாம்ராஜிய மன்னர், சூரிய கிரகணத்தின் மீதான தன்னுடைய தவறான புரிதல்களால் அவர்களுடைய சூரிய கடவுளான (sun god Kukulkan) திருப்தி செய்வதற்காக நரபலி கொடுக்கிறார். அப்படி நரபலி கொடுக்க வேண்டிய ஆட்களை பிடித்துச் செல்ல ஹீரோவின் ஊருக்கும் வருகிறார்கள். அந்த களேபரத்திலும் ஹீரோ தன் புள்ளைத்தாச்சி மனைவியையும் அவருடைய குழந்தையையும் காப்பாற்றி ஒரு கிணற்றில் விட்டுவிட்டு அவர்களிடம் சிறைபடுகிறார். பின்னர் எப்படி இந்த நரபலி ஆட்களிடம் இருந்து தப்பித்து தன் மனைவி குழந்தையைக் காப்பாற்றுகிறார் என்று மெல் கிப்ஸனின் டைரக்ஷனில் பார்க்கலாம்.

இரத்தத்தை உறையச் செய்யும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த படம். அதுவும் அந்த நரபலி கொடுக்கும் காட்சிகள், படம் R rated. மெல்கிப்ஸனின் முந்தைய படங்களில் அறிமுகம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். பாஷன் ஆப் கிறிஸ்ட், பிரேவ் ஹார்ட் பார்த்திருந்தால் புரியும். பாஷன் ஆப் கிறிஸ்டைப் போலவே ஒரு கோட்டுடன் ஆரம்பித்து படத்தின் கடைசியில் கிரடிட்ஸ்.

Opening quote: "A great civilization is not conquered from without until it has destroyed itself from within." — W. Durant

இதுதான் கோட்.

அடுத்தது பார்த்தது 300, ஏற்கனவே சிறில் அலெக்ஸ் இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதியிருந்தார். பிராங்க் மில்லரின் கிராபிஃக் நாவலை ஃசேக் ஸிண்டர் படமாக எடுத்திருக்கிறார். எனக்கென்னமோ படத்தை விடவும் டிரைலர் தான் ரொம்பவும் பிடித்திருந்தது. ஹிஹி. படத்தின் ஹீரோ ஜெராட் பட்லர், தான் படத்தின் ஹீரோவாகயிருந்ததால் பட்ட கஷ்டங்களை சொன்ன பேட்டி ஒன்றை யூடியூபில் பார்த்திருந்தேன். உரலைத் தொலைத்துவிட்டேன். அதில் அவருடைய மேட்டர்(;) புரியுதா) பெரிதாகத் தெரிவதற்காகப் பட்ட கஷ்டங்களை சொல்லியிருந்தார், சாக்ஸ் எல்லாம் வைப்பார்களாம் உள்ளே.

படம் பிரமாண்டமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அபோகலிப்டோ பிடித்த அளவு இந்தப் படம் பிடிக்கவில்லை. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குகிறது.

மூன்றாவது பார்த்தது மொழி, தமிழ் படங்களில் வித்தியாசமான முயற்சி, வில்லன்கள் கிடையாது, வெட்டிச் சண்டை கிடையாது, அதிக லாஜிக் மீறல்கள் கிடையாது. ஜோதிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார் டவ் அண்ட் டம்மாக. ஆனால் பாபெல் படத்தில் அந்த ஜப்பானியப் பெண் செய்திருந்த கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன். எனக்கென்னமோ அந்தப் பெண் இன்னும் இயல்பாகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் பாலிடிக்ஸ் எதுவும் கிடையாது.

கடைசியாக அபோகலிப்டோ பார்த்ததும், முன்பு ராயர் காப்பி கிளப்பில் படித்த இந்தக் கவிதையும் அதைத்தொடர்ந்த சில வரிகளும். எனக்கென்னமோ ராஜராஜர் ராஜேந்திரர் காலத்தில் நரபலியைத் தவிர்த்து அத்தனையும் நடந்திருக்கும் என்று படுகிறது.

ராஜராஜன்

ராஜராஜனின் சிலைக்காக வருந்துகிறார்
ராஜராஜனின் சிலையின் உள்ளே
நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
சிலையாகுமுன்னர் ஜீவித்திருந்த
இம்மன்னன்
எதைச் செய்து கிழித்துவிட்டானாம்?
ஈழம் கொண்டானாம்...
சாவகம் வென்றானாம்...
காலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை
பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்
கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழாச்செய்த காமுகன்
இம் மன்னன்.
மக்களாட்சியின் மகத்துவத்தைச்
சிலையான பின்னும் கற்பழிக்கிறான்

ராஜராஜ சோழன் பற்றிய இன்குலாப் கவிதையின் பகுதி மேற்கண்டது.

'ராஜராஜ சோழனுக்கும் அவன் மகனுக்கும்(ராஜேந்திர சோழன்) வாழ்க்கையில் இரண்டு முக்கியமான வேலைகள் தான் உண்டென்று தெரியவருகிறது. அவர்கள் போர் செய்யாத போதெல்லாம் கோவில் கட்டினார்கள். கோவில் கட்டாத பொழுதெல்லாம் போர் செய்தார்கள். போரில் எதிரிகளை வென்று அவர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருளையெல்லாம் கோவில் கட்டுவதில் செலவழித்தார்கள்.'

இதை எழுதியவர் சாட்சாத் கல்கி தான்.


ஒரு சேஞ்சுக்காக இந்தப் பதிவில் படங்கள் எதுவும் போடவில்லை. இந்தப் பதிவிற்கான படங்கள் தனியாக இன்னொறு பதிவாகப் போடப்படும்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In உலகக்கோப்பை

Go Aussie Go!!! - 1

சொல்லப்போனால் இந்த ஆட்டத்துக்கெல்லாம் பதிவெழுதி ஸ்காட்லாந்தை ஆளாக்கணுமா என்றுதான் நினைத்தேன். ஆனால் உலகக்கோப்பை ஆரம்ப ஆட்டமாக(ஆஸ்திரேலியாவிற்கு) இருப்பதால் வேறுவழியில்லை.

இந்த உலகக்கோப்பையின் சிறந்த பந்துவீச்சாளராக, ஸ்டுவர்ட் க்ளார்க் இருப்பாரென்று நினைக்கிறேன் அதேபோல் சிறந்த பேட்ஸ்மேனாக, Mr. Cricket இருப்பாரென்றும் நினைக்கிறேன். அதுயாரு Mr. Cricket என்று கேட்பவர்களுடன் நான் "கா".

சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை இந்தப் போட்டியைப் பற்றி. ஆனால் சில கணிப்புகள், ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்தால் பீல்டிங் கேட்கும், அதேபோல் ஸ்காட்லாந்து ஜெயித்தால் பேட்டிங் கேட்பார்கள். ஆஸ்திரேலியா மெக்ராத், ஷான் டைட், ஸ்டுவர்ட் க்ளார்க் வைத்து விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அது ஆட்டத்தின் தளத்தைப் பொறுத்து மாறுபடலாம். சைமண்ட்ஸ் எதிர்பார்க்காத அளவிற்கு உடல்தகுதியில் முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றபடிக்கு சரியான நேரத்திற்கு ஷான் வாட்சன் பார்மிற்கு வந்திருக்கிறார். மேடி உடல்நலம் சரியில்லாமல் போனாலோ இல்லை ஒரு மாற்றத்திற்காகவோ வாட்சன் ஒப்பனராக களமிறங்கலாம்.(பான்டிங்கின் நீண்ட நாள் ஆசை. ஆனால் கில்லியையோ, மேடியையோ தூக்கமுடியாத சிட்சுவேஷன்.)

பிரட் லீ இல்லாத குறையை ஷான் டைட் சரி செய்வாரா? தெரியாது, ஆனால் 150 K போடுவார் என்று தெரியும், அக்யூரஸி எவ்வளவு இருக்கும், இன் ஸ்விங்கிங் யார்கர்கள் கஷ்டப்படாமல் போடுவாரா என்பதெல்லாம் இந்த உலகக்கோப்பையில் பார்க்கலாம்.

மெக்ராத்திற்கு இன்னும் பதினோறு விக்கெட்கள் தேவை வாசிம் அக்ரமின் வேர்ல்ட் கப் ரெக்கார்டை முறியடிக்க, மெக்ராத்திற்கும், ஸ்டுவர்ட் கிளார்க்கிற்கும் வெஸ்ட் இண்டீஸ் தளங்கள் நிறைய சப்போர்ட் செய்யும் என்று நினைக்கிறேன். அவ்வளவாக வேகத்திற்கு சப்போர்ட் இருக்கும் தளங்களாகத் தென்படவில்லை, பிட்சில் மூவ்மெண்ட் இருந்தால் இவர்கள் இருவருக்கும் கொண்டாட்டமே. அதுவும் ஸ்டுவர்ட் கிளார்க்கின் சட்டென்று உள்ளே வரும் இன் ஸ்விங்கர்ஸ் வித்தைகள் செய்யும்.

அதிசயமாக ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பேட்டிங் செய்தால் எனக்கு கொண்டாட்டம்.

Australian Team...

Ricky Ponting
Nathan Bracken
Stuart Clark
Michael Clarke
Adam Gilchrist (wk)
Brad Haddin (wk)
Matthew Hayden
Brad Hodge
Brad Hogg
Michael Hussey
Mitchell Johnson
Glenn McGrath
Andrew Symonds
Shaun Tait
Shane Watson

முந்தைய உலகக்கோப்பை பதிவுகள்

ஆஸ்திரேலியா - உலகக்கோப்பை

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ்

கயிறு பட்டம் மற்றும் என் ஜல்லி

கிழிந்துகொண்டே போகும்
பிரபஞ்சத்தைக் கட்டிப்போட
கயிறுகள் இல்லை

இல்லாமல் போன கயிறு
வலுவேறியதாய்
நிறமேறியதாய்
கற்பனையில்
கழுத்தை நெறிக்கிறது

கற்பனைகள் தொலைந்து போன
நாளொன்றின் கடைசியில்
விட்டு விடுதலையாகி விடியலைநோக்கிய
பயணம், நிச்சயமாய்த் தனிமையில்...

பட்டம் விடுதல்...



எங்கள் BHEL Quarter's பெரிய ஸ்டெடியம் ஒன்று உண்டு. எப்பொழுதோ ஒரு சமயம் இந்திய கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் பங்குபெற்ற 'சும்மா' போட்டியொன்று அங்கு நடந்திருக்கிறது. சொல்லப்போனால் மே மாதம் விடுமுறை நாட்களில் பட்டம் விடுவதென்பது ஒரு பொழுதுபோக்கு அந்தக் காலத்தில். மாஞ்சா போட்டு டீல் விடுவதும் கூட உண்டு.

பட்டத்தையும் நூலையும் இணைக்கும் "சூச்சா" அப்படின்னு ஒரு அய்ட்டம் இருக்கும், எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதைச் சரியாப் போடுவதென்பது ஒரு கலை, நாலு விரக்கடை விட்டுப் பிடிச்சு கீழே மேலேன்னு சரிபார்த்து சூச்சா போடுவது எல்லோராலும் எளிதாக ஆவதில்லை, அதைப் போடுவதற்கென்று சிலர் இருப்பார்கள்.

காசில்லாமல் கடையில் விற்கும் பட்டம் வாங்காமல், ஈர்க்குச்சி, நியூஸ் பேப்பர் என்று என்னுடைய பட்டங்கள் பெரும்பாலும் Economy பட்டங்களாகவேயிருக்கும். பட்டத்திற்கு ஆகும் நூல் தான் என்னை மாதிரி பட்டம் விடுபவர்களுக்குப் பிரச்சனை. நூற்கண்டு வாங்குவதற்கு பைசா கிடையாது. ஸ்டேடியம் முழுக்க அலைஞ்சு அலைஞ்சு கொஞ்ச கொஞ்சமா நூல் சேர்த்து அதற்கு முடிச்சு எல்லாம் போட்டு கொஞ்ச தூரம் பறக்கும் அளவிற்கு ரெடி செய்வோம், பிரச்சனை முடிச்சுகள் அவிழ்ந்து பட்டங்கள் சுதந்திரமாகப் பறந்துவிடுவதுண்டு.

சில புள்ளைங்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பின்னாடியே ஓடி மரம் மேலெல்லாம் ஏறி பட்டத்தை திரும்ப எடுத்துவருவதுண்டு, சில சமயங்களில் பட்டங்கள் முற்களில் சிக்கி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு கிழிந்துவிடுவதும் உண்டு. ஆனால் கடைகளில் வாங்கியப் பட்டங்கள் என்றால் விலையைப் பற்றி கவலைப்பட்டு தேடிப்போவதுண்டு. ஆனால் சொந்தமாக செய்த பட்டம் என்பதால் பெரும்பாலும் பட்டம் போனாப் பரவாயில்லை, என்று நூலை மட்டும் பத்திரமாக எடுத்துவருவோம். அடுத்தப் பட்டம் விடவேண்டுமல்லவா.

அம்மாவும் அக்காவும் திட்டுவார்கள், பட்டத்தையெல்லாம் இப்படியே பறக்க விட்டுட்டு, வீட்டில் இருக்கும் நியூஸ் பேப்பரையெல்லாம் வீணாக்குறேன் என்று. அவர்களுக்கு அந்த நியூஸ் பேப்பரை மாசக்கடைசியில் போட்டால் கிடைக்கும் ஐந்து ரூபாயில் சீனி வாங்கலாமா, துவரம் பருப்பு வாங்கலாமா என்ற கவலை. செஞ்ச பட்டத்தைக் காப்பாத்த முடியலை இன்னொரு பட்டம் எதுக்குடா செய்ற என்ற கேள்வி எழாத நாளில்லை.

ஆனால் பட்டம் மீதான என் காதல் ஒவ்வொரு முறையும் புதுப்பட்டத்தில் தான் சென்று சேர்கிறது. நியூஸ் பேப்பர் இருக்கும் வரை இந்தப் பழக்கம் நீளும் என்று சொல்லி அம்மா நியூஸ் பேப்பரை நிறுத்தாத வரை இது தொடர்ந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் டூம் கட்டி பறக்கவிடுவதென்பது பெரிய விஷயம், சில சமயம் டூமில் மெழுகுவர்த்தியெல்லாம் ஏற்றி பறக்கவிடுவதைப் பார்த்து ஏற்பட்ட ஆச்சர்யம் இன்றும் தொடர்கிறது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In வகைப்படுத்தப்படாதவை

இந்துவாக மதம் மாற முடியுமா?

சமீபத்தில் படித்த பதிவொன்றின் காரணமாக எனக்கு எழுந்த கேள்வி, முன்பே எப்பொழுதோ இதைப் பற்றிய பின்னூட்டம் எழுதிய நினைவு. கொஞ்ச நாள் பாலோ பண்ணிக்கொண்டிருந்தேன் பதில் வரவில்லை.

எங்க வீட்டிலெல்லாம் ரொம்பவும் தீவிரமான இந்து மக்கள், ஒவ்வொரு முறையும் மதமாற்றத்தைப் பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்ட பொழுதும் இந்து மதம் மதமாற்றத்தை அனுமதிக்காததைப் பற்றி பேசப்படும்.

மற்ற மதங்களை விடவும் இந்து மதத்தை அவர்கள் சரியானதென்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம், நான் படித்த சாமியார்ப்(இந்து) பள்ளிகளில் கூட இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, இந்த ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா மக்களை கூட இந்துக்கள் இல்லையென்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எனக்கு உண்மையிலேயே புரியவில்லை, இந்துவாக மதம் மாறுவதென்றால் என்ன என்று. எங்கள் வீட்டில் சொல்வது, இந்துவாக பிறந்தால் மட்டுமே இந்துவாக ஆகமுடியும் என்றும். மதம் மாறி இந்துவாக மாறமுடியாதென்றும் சொல்வார்கள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?

ராமகிருஷ்னர் கூட கொஞ்ச நாள் முஸ்லீமா இருந்துவிட்டு(அந்த மார்க்கத்தை தெரிந்துகொள்ள என்று நினைக்கிறேன்) திரும்பவும் இந்துவாக மாறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் சேர்ந்து குழப்புகிறது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In Only ஜல்லிஸ்

சீச்சி இந்தப் பழம் புளிக்கும்

பக்கத்தில் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அம்மா ஆரம்பக் கட்ட கேள்விகளுக்குப் பிறகு,

"என்னடா புத்தகம் போடப்போறியாமே?"

முறைத்தேன்.

"குந்தவை வந்தியத்தேவன் கதைகள், தலைப்புக்கூட நல்லாத்தானிருக்கு. என்ன ஒரு ஐம்பதாயிரம் ஆகுமா. நான் தர்றேன் போடு..."

எனக்கு உண்மையிலேயே என்ன நடக்கிறதென்று புரியவில்லை, சிறிது நேரத்தில் பின்னால் இருந்து கேட்ட சிரிப்பின் பிறகுதான் புரிந்தது. அக்கா எல்லாவற்றையும் வத்தி வைத்திருக்க வேண்டும்.

அவரே தொடர்ந்தார்.

"உனக்கு இந்தச் சமயத்தில் இது தேவையில்லாதது. நீ சொன்னது சரியா? தப்பான்னு நான் எதுவும் சொல்லலை. வேண்டாம் விட்டுடு. கொஞ்ச நாளைக்கு தமிழ் படிக்கிறது, தமிழில் எழுதுறது இரண்டையும் விட்டுறு.

உன் வேலைக்கு நீ மனசாலையும், மூளையாலையும் உழைக்கணும். மூளை மட்டும் உழைச்சா சரி வராது.

அப்படியில்லைய, பிரபந்தம் படி, கம்பராமாயணம் படி. உனக்கு ஒரு இருபது அபிராமி அந்தாதிப் பாட்டுத் தெரியுமா அதைப் படி.

நான் உன்னைப் படிக்க வேண்டாமுன்னு சொல்லலை. ஆனால் கொஞ்ச நாளைக்கு இந்த எழுதுற வழக்கம் வேண்டாமே, தமிழ் நாவல் படித்தால் அதைப் பற்றி எழுதுவேன்னு நிற்ப அதான். இந்த நாவல் வகையறாக்கள் எல்லாம் வேண்டாமே."

"இந்தாத இப்ப என்னத்தான் சொல்ற..." கேட்டதுதான் சாக்கென்று கையில் இன்ஹெரிடன்ஸ் ஆப் லாஸ் கொடுக்கப்பட்டது.

"நல்ல புத்தகமாம், புக்கர் ப்ரைஸ் கூட வாங்கியிருக்கு. இதைப் படி."

"மம்மி, இதெல்லாம் ஸிட்னி ஷெல்டன் புக் இல்லை. என் இங்கிலிபீஷுக்கு நான் படிக்கவே முடியாது..." சொல்லி முடிக்கவில்லை கையில் ஒரு டிக்சினரி திணிக்கப்பட்டது.

ஆக ஒட்டுமொத்தமா ப்ளான் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். சரிதான், நானும் நரியாய் ஆகி கொஞ்ச நாளைக்கு இந்தப் பழம்(தமிழ்) புளிக்கும் என்று ஆங்கிலத்துக்கு தாவப் போகிறேன். அந்தப் பழமும் கூடிய சீக்கிரம் புளிக்க வேண்டும்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கவிதைகள்

திருத்தி எழுதப்படுமா தீர்ப்புகள்?

கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்
பிரபஞ்சத்தை அதன் நீள அகல உயரங்களுக்கு
விரும்பும் என்னை, என் நீள அகல உயரங்களுக்கு
அர்பணித்தப் பின்னும் ஜன்னல்களுக்கான பயமில்லை என்பதாய்

ஜன்னல்கள் இல்லாமல் போன வீடுகளை
பெரும்பாலும் புறக்கணித்தப்படியே என் பயணம் தொடர்கிறது
வீதிக்கு வந்துவிட்ட வீடுகள் ஜன்னல்கள் இல்லாமல்
போராட வந்துவிட்டு வலிகளுக்காக புலம்புவதைப் போல்
முகத்தில் படறும் குறுநகை மறைக்கப்படுவதில்லை
மறைக்கப்படாததாலேயே குறுநகை
இகழ்ச்சிக்குரியதாய் நீள்கிறது

நீண்டு கொண்டேயிருக்கும் இரவு
பொழிந்து கொண்டேயிருக்கும் பனி
நகர்ந்து கொண்டேயிருக்கும் நான்
கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா விமர்சனம்

Bridge to Terabithia

இப்படி ஒரு படம் தமிழில் வராதா என்று நான் ஆச்சர்யப்படும் படங்கள், நான் லீனியர், டிரை லாஜி படங்களை மட்டுமில்லை. கொஞ்சம் ஜிம்மிக்ஸ் கலந்த ஆனால் திறமையான நடிகர்களால் நேரம் போவதே தெரியாமல் செய்யும் பிரிட்ஜ் டு தெரிபிதியா போன்ற படங்களையும் தான்.



மிகச் சாதாரணமானக் கதை, படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு கிராபிக்ஸால் பிரமாதப்படுத்தப்படப்போகும் ஒரு படத்தைப் பார்க்கும் ஆர்வம் தான் இருந்தது. அதுவும் "க்ரோகினிகல்ஸ் ஆப் நார்னியா" தயாரிப்பாளர்களிடமிருந்து. ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் குறைவே. சொல்லப்போனால் தேவையான அளவே.

ஒரு அமேரிக்க விவசாயக் குடும்பத்தில் இருந்து ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனைச் சுற்றி நகர்கிறது படம். ஆச்சர்யப்பட வைக்கும் ஓவியத் திறமை அவனிடம் இருக்கிறது, கொஞ்சம் கஷ்டப்படுகிற பேமிலி, மூன்று அக்காக்கள் ஒரு தங்கச்சி. அவனுடைய சூழ்நிலை அவனை அவன் உடன்படிக்கும் மாணவர்களிடம் இருந்து விளக்கிவைக்கிறது இன்னும் சொல்ல வேண்டுமானால் அந்த மாணவர்களுக்கு வம்பிழுக்க கிடைக்கும் ஒரு ஆளாகவே இந்தப் பையன் இருக்கிறான்.

அந்த வகுப்பில் புதிதாக ஒரு பெண் வந்து சேர சூடுபிடிக்கிறது படம், அதுவும் அந்தப் பெண், அந்தப் பையனின் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்துவிட இருவருக்கும் நட்பு உருவாகிறது. பிறகு அவர்களுடைய நட்பு தான் படமே, அப்பா அம்மா இருவரும் கதாசிரியர்களாக இருக்கும் அந்தப் பெண்ணின் கற்பனையில் உருவாவது தான் தெரிபிதியா. அதையெல்லாம் விவரித்து படம் பார்க்கப்போகும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

அவர்கள் இது போன்ற படங்களில் கூட லாஜிக் உதைக்கக்கூடாதென்று நினைப்பது வியக்க வைக்கிறது. மற்றபடிக்கு நம் ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இருந்த கனவுலகத்தை கொஞ்சமே கொஞ்சம் கிராபிக்ஸ் பயன்படுத்திக் காண்பிக்கிறார்கள். மியூசிக் டீச்சராக வரும் Zooey Deschanel நடிப்பு இயல்பாகயிருக்கிறது. நன்றாக கிதார் வாசிப்பார் போலிருக்கிறது? தெரியாதென்றால் நான் நிச்சயம் ஆச்சர்யப்படுவேன் அத்தனை அழகாக கார்ட் பிடிக்கிறார்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுய ஒருவர், என்ன ஒருவர் ஒரு சின்னப்பொண்ணு படம் காண்பிச்சிருக்கு(Bailey Madison), கீழ்வரிசையில் ஒரு பல் இல்லாமல்(அந்த இடத்தில் பல் இல்லாத குழந்தைகளை நான் பார்த்ததுகிடையாது - தேடிப்பிடித்தார்களா? - அடித்து உடைத்தார்களா? - ஹிஹி) தன்னைத் திட்டிய பெண்ணை, சகோதரனும் அவன் தோழியும் சேர்ந்து பழிவாங்கும் பொழுது ஒரு சிரிப்பு சிரிக்குது பாருங்கள் அந்தப் பொண்ணு Simply Superb.

மற்றபடிக்கு Josh Hutcherson (அந்தப் பையன்), AnnaSophia Robb (அந்தப் பொண்ணு), மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள், அந்தப் பொண்ணு இறந்துவிட்டதாகத் தெரியும் பொழுது அந்தப் பையனின் தாவங்கட்டையெல்லாம் அழுகிறது. ம்ஹூம் நல்லா டிரையினிங் கொடுத்திருக்காங்க.

நிறைய விஷயங்களைப் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள், அந்த குட்டீஸ் வைத்திருக்கும் பிங்க் கலர் பை, அந்தப் பொண்ணின் உடை மற்றும் பை, அவற்றில் குத்தியிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள்(மணிஷா என்றொரு குட்டீஸைத் தெரியும் எனக்கு டெல்லியில் இருந்த பொழுது. படத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்ததைப் போலிருந்தது - இந்தக் குட்டீஸைப் பார்த்த பொழுது). சின்ன குழந்தகளை கவனிப்பவன் என்ற முறையில் நிறைய கவனித்துச் செய்திருக்கிறார்கள்.

என்ன சொல்ல இந்த மாதிரியான ஒரு படம் தமிழில் வருவதற்காக காத்திருக்கிறேன்.







Read More

Share Tweet Pin It +1

2 Comments

In புத்தகங்கள்

புலிநகக் கொன்றை

புலிநகக் கொன்றை எனக்கு அறிமுகமானது மரத்தடியில். சாதாரணமாகவே அந்தக் காலக்கட்டத்தில் கிடைத்ததையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். சூழ்நிலை அப்படி, கேன்பேவில் பெஞ்சில் இருந்த காலக்கட்டங்கள் அவை. அப்படிப்பட்ட ஒரு நாளில் அறிமுகம் ஆனது தான் புலிநகக் கொன்றை. மரத்தடி மக்கள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தப் புத்தகம். இன்னும் சிலர் தாங்கள் படித்ததிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்றெல்லாம் எழுதி ஓவர் ஹைப் கிடைத்திருந்த புத்தகம். ஆனால் கைகளில் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது.

Tiger-claw tree என்று ஆசிரியர் பி. ஏ. கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை, தமிழிலும் (அ) எழுதியிருக்கிறார் (ஆ) மொழிபெயர்த்திருக்கிறார். சில இல்லை பல சமயங்களில் விஷயங்களுக்கு கிடைக்கும் ஹைப்புகள் அதன் டிஸ் அட்வான்ட்டேஜ்களாக ஆகிவிடுவதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் புத்தகத்திற்கு கிடைத்த ஹைப் சரியானதே.

"எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே..."

இந்தப் பாடல்களுக்குப் அர்த்தம் சொல்லறது வைரத்தைக் கரியாக்கற விவகாரம். இருந்தாலும் சொல்லறேன். தோழி கேள். நான் அவனைப் பற்றி நினைக்க மாட்டேன். யாரை? எவன் நாட்டிலன் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக்கொன்றை மரத்தின் – ஞாழல்னா புலி நகக் கொன்றை மரம் – புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்குச் சிறிது தூக்கம் கிடைக்கட்டும்.

ஐங்குறுநூறு 142ம் பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தான் தனக்கு இந்த நாவலுக்காந தலைப்பு கிடைத்ததாக ஆசிரியர் பி.ஏ. கிருஷ்ணன் சொல்கிறார். அந்தப் பாடலும் அதன் பொருளும் தான் மேலே காண்பது.

தென் தமிழ்நாட்டு, தென்கலை பிராமணர் வகையறாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய நான்கு தலைமுறைக் கதைகளை சொல்ல முயன்றிருக்கிறார் ஆசிரியர். முதல் பக்கம் கொடுத்திருக்கும் அட்டவணை ஆரம்பத்தில் பெரிதும் உதவுகிறது. இதனால் ஆசிரியரால் கதைக்குள் வேகமாக டைவ் பண்ண முடிகிறது என்பது உண்மையே. நூறு, நூற்று இருபது ஆண்டு கதைக்குள் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றிருக்கிறார் ஆசிரியர், அவருடைய எழுத்தில் தான் வைக்கும் விஷயங்கள் பிரச்சனையை ஏற்படுத்திவிடக்கூடாதே என்ற கவனம் தெளிவாகத் தெரிகிறது.

ஏனென்றால் தமிழ்நாட்டின் பிரச்சனைகளை இன்றும் ஏற்படுத்திவிடக்கூடய விஷயங்கள் அவை, கட்டபொம்மு, மருது பாண்டியர், சிதம்பரம் பிள்ளை, திலகர், வாஞ்சிநாதன், வவேசு ஐயர், சுப்பிரமணிய பாரதி, இராஜாஜி, பெரியார், எம்ஜிஆர், எம் ஆர் ராதா என தொட்டால் பற்றிக்கொள்ளக் கூடிய ஆட்கள் நாவலெங்கும் பரவியிருக்கிறார்கள் சில சமயங்களில் கதாப்பாத்திரங்களாக, சில சமயங்களில் விவரணைகளாக, சில சமயங்களில் உரையாடல்களாக.

கதையின் ஆரம்பக்கட்டங்களில் முற்றிலும் ஏற்படாத ஒரு தொய்வு என்னைப் பொறுத்தவரை, கம்யூனிஸம் மார்க்ஸிஸம் பற்றிய பேச்சு வரும் பொழுது எழுகிறது. இது ஆசிரியரின் தவறில்லை என்னுடையது. என்னுடைய தலைமுறை ஆட்களுக்கு கம்யூனிஸமோ மார்க்ஸ்ஸிஸமோ அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த யிசங்கள் பிரபலமாகயிருந்த காலத்தில் நடக்கும் கதையில் அவற்றைச் சொல்லாமல் விட்டுவிடமுடியாது தான். அதைப் போலவே மிகச் சுலபமாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு சுலபமான கான்ஸெப்டுகளும் கிடையாது அவர்கள்.

ஆனால் எது எப்படியிருந்தாலும், பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று ஒரு தீர்ப்பை முன்வைக்கவேயில்லை புலிநகக் கொன்றை, இந்த விஷயத்தில் மிகச் சிறப்பாகவே வந்திருக்கிறது. கடவுள் மறுப்பு, கடவுள் ஆதரிப்பு, காங்கிரஸ், திமுக இப்படி பல விஷயங்களை ஆசிரியர் அவர் பார்த்தது போலவே சொல்ல, நாமும் கேட்டுக்கொண்டதைப் போல பயணிக்க முடிகிறது நாவலில். பல சமயங்களில் ஒரு முடிவை சொல்லிவிடும்பொழுது அது நமக்கு பிடிக்காமல் போகும் பொழது நாம் நாவலின் சுவாரஸியத்தன்மையை இழக்கிறோம். அது புலிநகக் கொன்றையில் கிடையாது.

கதையின் சாராம்சம் இதுதான் என இரா. முருகன் காபி கிளப்பில் எழுதியது நீங்கள் கீழே காண்பது.

"...பொன்னா பாட்டி சாகக் கிடக்கிறாள். எந்தப் பொன்னாப் பாட்டி? நாங்குநேரி ஜீயரின் மடைப்பள்ளியில் புளியோதரைப் புலியாகக் கரண்டி பிடித்தவரின் ஒரே பெண். லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் ஒரே மகன் ராமனுக்குப் பெண்டாட்டியானவள்.

போஜனப் பிரியனான ராமன் சாப்பிட்ட நேரம் போகச் சற்றே பொன்னாவுடன் படுத்து எழ, நம்மாழ்வார், பட்சிராஜன் (பட்சி), ஆண்டாள் என்று மூன்று குழந்தைகள். அப்புறம் ஒரேயடியாகப் படுத்துத் திருநாடு அடைந்து விடுகிறார் அவர்.

நம்மாழ்வாருக்கு அப்போது புதிதாக எழுந்த தேசிய அலையில் கலக்க - வ.உ.சி, பாரதியோடு, காங்கிரஸ் தீவிரவாதிகளோடு செயல்பட விருப்பம். செயல்படுகிறான். கல்யாணம் ஆகி, மனைவி மது என்ற மதுரகவியைப் பிள்ளையாகப் பெற்றுக் கொடுத்து விட்டு உயிரை விடுகிறாள். தேசபக்தியும் வாழ்க்கையும் அலுத்துப்போய் நம்மாழ்வார் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

அறுபது வருடம் கழித்து நம்மாழ்வார் திரும்பி வரும்போது அம்மா பொன்னா இன்னும் உயிருடன் - உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறாள். தம்பி பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பெரிய வழக்கறிஞர். தங்கை ஆண்டாள் கன்னி கழியாமலேயே வாழ்க்கைப்பட்டு, அதேபோதில் கணவனைப் பறிகொடுத்து, இளமையில் விதவையாகி, சித்தம் தடுமாறி மனநோயாளியாக இறந்து போயிருக்கிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன்.

திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் (கதை சிப்பாய்க் கலக காலத்தில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரை நீள்கிறது) மாணவர் போராட்டத்தின்போது கண்ணன் வேலையை இழக்கிறான்.

நம்மாழ்வாரின் பிள்ளை மது பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டு இறக்கிறான். அவனுடைய மகன் நம்பி டாக்டராக, பெரிய பாட்டி பொன்னாவைக் கவனித்துக் கொள்வதோடு, தன் மனைவி ரோசாவோடு கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கிறான்.

நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைத்து நம்பி தான் அவரைச் சந்திக்கஅங்கே போகிறான்.

ஆனால் நம்மாழ்வார் திரும்ப வரும்போது நம்பி நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில்வைக்கப்பட்டு, விடுதலையான பிறகு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறக்கிறான்.

படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா தன் பிள்ளை நம்மாழ்வாரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையோடும் நம்பியின் நினைவோடும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.

கண்ணன் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று தில்லிக்குப் பயணமாவதில் கதை முடிகிறது..."


இதையெல்லாம் விட இந்தக் கதையை தெளிவாகச் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் காப்பி பேஸ்ட். மற்றபடிக்கு இந்தக் கதையைத் தொடர்ந்து நடந்த ஜெயமோகனுக்கும் பிஏ கிருஷ்ணனுக்கும் ஆன உரையாடல் நன்றாகயிருக்கும், அது இங்கே

அப்புறம் இரா.மு எழுதிய முழு விமர்சனம் இங்கே கிடைக்கும். ஆனால் பிரச்சனை டிஸ்கியில் இருக்கு மாற்றிக்கொள்ளுங்கள் மகானுபாவர்களே.

நன்றி இரா.முருகன், ராயர் காப்பி கிளப்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் புத்தகங்கள்

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

இந்தத் தலைப்பில் ஒன்றை சுரேஷ் கண்ணன் எழுதியிருந்த பொழுதே அய்ட்டம் பிடித்திருந்ததால் எழுதியிருந்தேன். ஆனால் எங்கும் லிங்க் கொடுக்கவில்லை. இப்பொழுது கார்த்திக் பிரபு இதே போன்ற ஒன்றை எழுதி என்னைத் தொடருமாறு அழைத்திருந்தார்.

நான் ஏற்கனவே எழுதியதை மறுபதிவிடுகிறேன். எனக்குத் தொடர்ச்சியாய் லிங்க் கொடுத்துக்கொண்டே போவதில் விருப்பம் கிடையாது என்றாலும், பொன்ஸை Tag செய்கிறேன். விருப்பப்பட்டால் போடலாம்.

-----------------------------------

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.

எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.

படித்ததில் பிடித்தது
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா - உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.

கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)

நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)

பார்த்ததில் பிடித்தது (நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு )

நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.

சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

ஆஸ்திரேலியா - உலகக் கோப்பை

போன தடவையும் இதேபோல் ஒரு மாப் போட்டுக்கொடுத்தேன். 90% அப்படியே நடந்தது. ஏன்னா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வச்சு போட்ட மாப் அது விஷயம் என்னான்னா, ஆஸ்திரேலியா ஒரு மாட்ச் கூட வேர்ல்ட் கப்பில் தோற்காது என்பதுதான்.

அப்படியே நான் சொன்ன இன்னொன்று இந்தியா பைனல்ஸ் வருமென்பது, பைனல்ஸ் ஒன் சைட்டைட் மேட்ச் ஆகயிருக்கும் என்பதும் தான். எனக்கென்னவோ நான்காண்டுகளுக்குப் பிறகும் மாற்றம் எதுவும் தெரியவில்லை. கீழே நான் கொடுத்திருக்கும் விவரங்கள் புரியுமென்று நினைக்கிறேன். இந்தப் பதிவு வேர்ல்ட் கப் முடியும் வரை அப்டேட் செய்யப்படும்.

Group A

1. Australia
2. South Africa

Group B

1. India
2. Srilanka

Group C

1. New Zealand
2. England

Group D

1. Pakistan
2. West Indies

Then Super Eights

A1 & D2 - Australia Vs West Indies - Australia
A1 & B2 - Australia Vs Srilanka - Australia
A1 & C2 - Australia Vs England - Australia
A1 & D1 - Australia Vs Pakistan - Australia
A1 & B1 - Australia Vs India - Australia
A1 & C1 - Australia Vs New Zealand - Australia

The Semi finalists

1. Australia
2. England
3. India
4. West Indies

அப்படின்னா
Australia Vs West Indies - Australia
England Vs India - India

இன்னமும் சொல்லணுமா

Finals

Australia Vs India - Australia

இன்னும் அதிக விவரங்களுடன் வருகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

The Beautiful Mind - John Nash - Game Theory

நான் இந்த திரைப்படத்தை முதன் முதலில் பார்த்த பொழுது, எல்லா ஆங்கில திரைப்படங்களைப்போல இதுவும் முழுமையாக விளங்கவில்லை. அதற்கு என் ஆங்கில அறிவுத்திறனே காரணம். சின்ன வயதில் இந்திப்படங்கள் பார்த்ததைப்போலத்தான் நான் ஆரம்பத்தில் ஆங்கிலப்படங்கள் பார்த்து வந்துள்ளேன். அதாவது முதலில் படத்தின் சூழ்நிலையை(situation) நன்றாக புரிந்து கொள்வது, பிறகு சம்பவத்தின் சூழ்நிலையை புரிந்துகொள்வது, பிறகுதான் உரையாடல்கள், யார் கொடுத்த வரமோ சூழ்நிலைகளை கொஞ்சம் சரியாக புரிந்து கொள்ளத்தெரிந்ததால், ஆங்கிலப்படங்கள் பார்க்கும் அறிவைப்பெற்றேன்.

பிறகு இரண்டு மூன்று முறைகள் பார்த்து உரையாடல்களையும் சரிபார்த்துக்கொள்வேன். சில படங்கள் பார்த்ததும் நான் புல்லரித்துப்போய் நின்றதுண்டு அதில் முக்கியமான ஒன்று இந்தப்படம். பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாய் இந்தப் படத்தைப்பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்க அது என்னை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்தியது. முதலில் இந்தப் படத்தைப்பற்றி,

ரான் ஹோவார்ட்(Ron Howard) தயாரித்து இயக்கிய இந்தப்படம், சில்வியா நாஸர்(Sylvia Nassar) என்பவர் எழுதிய த பியூட்டிபுல் மைண்ட்(The Beautiful Mind) என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டது. சில்வியா நாசர், இதற்காக மூன்று உழைத்து நேஷ்ப்பற்றியதகவல்களை சேகரித்து புத்தகமாக, நேஷ்ஷின் வாழ்கை வரலாறாக எழுதினார். இதற்கு அவருக்கு சிறந்த வாழ்கை வரலாற்று ஆசிரியருக்கான விருது கிடைத்தது.(Sylvia Nasser's efforts were recognized when the book won the 1998 National Book Critics Circle Award for Biography, a nomination for the Pulitzer Prize for Biography.)
ஆஸ்கர்(Oscar) விருதில் நான்கை தட்டிச்சென்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. இதற்கு முந்தைய வருடம்(2000) நடந்த ஆஸ்கரில் கிளாடியேட்டருக்காக(Gladiator), சிறந்த நடிகர் பரிசைப்பெற்ற ரஸல் குரோ(Russel Crowe), அடுத்த ஆண்டு(2001) இந்தப் படத்திற்காக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, பெண்களுக்கான ஆஸ்கரை கொடுத்துவிட்டு ரசல், ஆண்களுக்கான பிரிவின் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது.

துரதிஷ்டவசமாக அந்த ஆண்டு டென்சல் வாஷிங்டனிற்கு(Denzal Washington) அந்த விருது சென்றடைந்தது(எனக்கு மிகவும் விருப்பமான இன்னொரு ஆங்கில நடிகர்.) அந்தப் படத்தின் கதை ஒரு தலைசிறந்த கணிதமேதையான ரசல் குரோ (ஜான் நேஷ்) எப்படி schizophrenia நோய்க்கு ஆள்ப்பட்டு 25 வருடங்கள் அந்த நோயில் தீவிரத்தால் தன் கணிதத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் பின்னர் நோயிலிருந்து மீண்டு(விஷயமே இங்குத்தான் இருக்கிறது) 1994ம் ஆண்டிற்கான நோபல் பரிசை பெற்றதைப்பற்றிய கதைதான் அது.

அந்த நோய் 2 மில்லியன் அமேரிக்கர்களைத்தாக்கியதாகவும், உலகின் 100ற்றில் ஒருவருக்கு இருக்கக்கூடியதாகவும் கருதப்பட்ட மனவழுத்த வியாதியாகும். (Mental illness that affects more than two million Americans and 1 in 100 people across cultures: schizophrenia.) நேஷ்ஷின் விஷயத்தில் இது கொஞ்சம் விசித்திரமானது, தான் கணித மேதையென உணர்ந்த சமயத்தில் வெளிகிரக மனிதர்கள், இந்த உலகத்தைக் காக்க தன்னை தேர்ந்தெடுத்ததாக நினைத்துக்கொண்டு அதிலேயே வாழ்ந்ததுதான் நேஷ்ஷின் பிரச்சனை(delusions, frequent auditory hallucinations, illusions that messages are being sent to him through television or newspapers, a skewed view of reality leading to paranoia. And like many who have struggled to live functional lives with the illness). பலர் இந்த வியாதிக்கு ஆட்பட்டு பிறகு இந்தநோயிலிருந்து மீண்டு வராமல் அப்படியே இறந்துவிடும் நிலையில். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இந்த நோயிலிருந்து மீண்டது தான் ஜான் நேஷ்ஷின் ஆளுமை. இதை மிக அழகாக படமாக்கி இருப்பார் இயக்குனர்.

இனி ஜான் நேஷ்ஷைப்பற்றி


ஜான் நேஷ் நோபல் பரிசு பெற்ற பொழுது(வலது புறமிருப்பவர்)

ஆரம்பக்காலத்தில் இந்தப்படம் வெளிவந்த சமயத்தில் நேஷ்ஷை தாக்கிய இந்த நோய் பிரபலமான அளவிற்கு நேஷ்ஷின் புகழ் பிரபலமடையவில்லை. உலகின் ஒரு தலைசிறந்த கணிதமேதை அடையாளம் தெரியாமலே இருந்தார். இன்னமும்தான். (இங்கே எத்தனை பேருக்கு ஜான் நேஷ்ஷை தெரியும் என்று எனக்கு தெரியாது.) இனி நாம் இங்கு பார்க்கப்போவது ஜான் நேஷ்ஷைப்பற்றியும் அவருக்கு நோபல் பெற்றுத்தந்த கேம் தியரியைப்பற்றியும்(Game Theory) தான்.(எனக்கு உண்மையிலேயே நேரடியாக இந்த விஷயத்தை இழுக்க பயமாக இருந்த காரணத்தினால் தான் த பியூட்டிபுல் மைண்ட் படத்தை இழுத்தேன்.)

ஜான் நேஷ்ஷைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர் கேம் தியரியைப்பற்றியும் அதன் தேவையைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

கேம் தியரி(Game Theory)

அதாவது ஒரு பந்தயத்தை எப்படி வெல்வது என்பதைப்பற்றிய ஒரு தியரமாகவே இந்த கேம் தியரியைப்பார்க்கலாம். முதன் முதலில் இது, போடப்பட்ட முடிச்சுக்களை திறமையாக அவிழ்ப்பதில் தொடங்கி, பின்னர் சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களில் தன்னுடைய வெற்றியை நிர்ணயிப்பதில் இருந்தது.

இது போன்ற விளையாட்டுக்களில் எதிராளியின் நகர்வு நமக்குத்தெரிந்திருக்கும் உதாரணத்திற்கு சதுரங்கத்தில் எதிராளியின் நகர்தலை நாம் நேரில் பார்ப்பதைப்போல, ஆனால் சீட்டுக்கட்டை எடுத்துக்கொண்டால் மற்றவரிடம் இருக்கும் கார்ட் நமக்குத்தெரியாது. இதன் காரணங்களால் கணித வல்லுநர்கள் இந்த துறையில் கவனம் செலுத்தத்தொடங்கினர். இதில் நம் கணிப்புக்களும் இருக்கும் உண்மையான கணக்கும் இருக்கும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, வர்த்தகத்துறையிலும், போர்க்காலங்களிலும் பயன்படும் அளவிற்கு வளர்ந்தது. அதாவது மற்ற போட்டியாளர்கள் என்ன விதமாக சிந்திக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதிலிருந்து மற்றநாட்டின் இராணுவ விவகாரங்களை அறிந்து கொள்வது வரை.

இவர்கள் பணத்திற்காகவோ இல்லை ஒரு இடத்திற்காகவோ யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எதிராளியும் யோசிப்பார்கள். நம்முடைய காஷ்மீர் விவகாரத்தைப்போல் இரு நாட்டிற்கும் இதைப்பற்றிய சில கொள்கைகள் இருக்கும். அவர்கள் அதைவிட்டு மாற மாட்டார்கள். இதனால் இந்த மாதிரியான விவகாரங்களில் வெற்றி தோல்வி என்பதில்லாமல் நடுநிலைமை என்ற ஒன்று ஏற்பட்டுவிடும். நம் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரத்தைப்போல்.

இங்கே தான் வருகிறார் ஜான் நேஷ், இந்த கேம் தியரியை நிகழ்கால உலகம் பயன்படுத்தும் ஒரு விஷயமாக தந்த பெருமை இவரையே சாரும். 1950ல் இருந்து 1953 வரை நான்கு மிக முக்கியமான, இது(கேம் தியரி) சம்மந்தப்பட்ட தன் கண்டுபிடிப்புக்களை(Four papers that revolutionised game theory) நேஷ் வெளியிட்டார். தன் இளமைப்பருவத்தில் அதாவது தன் இருபதிலிருந்து இருபத்தைந்தாம் வயது காலகட்டத்திற்குள் இவர் இதை செய்து முடித்தார். இவர் தன் ஆராய்சிக்கு எடுத்துக்கொண்டது, கூட்டுத்தொகை பூஜ்ஜியம் வராத விளையாட்டுக்களை(பிரச்சனைகளை).

சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் பொதுவாக கூடுதல் தொகை பூஜ்ஜியம் வரும் விளையாட்டுக்கள், அதாவது யாராவது ஒருவர் வென்றால் மற்றவர் தோற்பார். இவர் எடுத்துக்கொண்டது இப்படி கூட்டுத்தொகை பூஜ்ஜியம் வராத விஷயத்தை(Non zero sum's), அதாவது ஒரு நிர்வாகத்தையும் அதன் யூனியனையும் எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு விவகாரத்தில் தவறு நிகழ்ந்தால் வேலை நிறுத்தம் தொடங்கி, உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருதரப்பிற்கும் நஷ்டம் ஏற்படும். ஆனால் இதற்கான ஒரு விஷயம் தான் ஜான் நேஷ் கண்டுபிடித்த கேம்தியரி, இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் ஒரு முடிவை நோக்கி விஷயத்தை நகர்த்துவது.

ஜான் இதற்கான தன் ஆய்வை கணித முறைகளைப்பயன்படுத்தி கண்டறிந்தார். அது ஒரு நடுநிலைமைக்காரணி(Nash Equilibrium) என்று கூறலாம். இருதரப்பிற்கும் வெற்றி தோல்வி இல்லாமல் ஆனால் பிரச்சனையை தீர்ப்பது.

தற்பொழுது நடைபெறும் பில்லியன்களை சம்மந்தப்படுத்தும் ஏல விவகாரங்களில் இவரது இந்த ஆய்வின் முடிவுதான் பயன்படுகிறது. ஆரம்ப காலங்களில் இருந்த சில தவறான முறைகளால், மிகவும் கவலைக்கிடமாக இருந்த இதைப்போன்ற ஏல முறைகள் பிற்காலத்தில் தாக்குபிடிக்க முடிந்தது இவரது கண்டுபிடிப்பால்தான்.

அதாவது, ஏலத்தொகையை தீர்மானிப்பது, நேர்முகமாகவா இல்லை மறைமுகமாகவா தங்களுடைய ஏலத்தொகையை தெரிவிப்பது என்று தீர்மானிப்பது, ஏலத்தொகைப்பற்றிய விவரங்களை எவ்வாறு பெறுவது என்பது சம்மந்தப்பட்ட விவகாரங்களை இவரது ஆய்வின் முடிவை வைத்துத்தான் தீர்மானித்தார்கள். இதற்கு நாஷ் கண்டுபிடித்த நடுநிலைமைக்காரணி(Nash equilibrium) முக்கிய பங்காற்றியது.

இதன் போன்ற காரணங்களால் தான் ஜான் நேஷ் ஒரு தலைசிறந்த கணிதமேதையாக கருதப்படுகிறார்.

நேஷ்ஷின் இந்த கண்டுபிடிப்பிற்காக(1950) 1994ம் ஆண்டு இன்னும் இரண்டு பொருளாதார வல்லுநர்களுடன் சேர்ந்து நேஷ்ஷிற்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முடிப்பதற்கு முன்னால் ஒன்று, நாஷ்ஷிடம், நீங்கள் மனவழுத்ததில் இருக்கும் பொழுது ஏன் அந்த அந்நிய கிரகவாசிகள் தன்னை இந்த உலகத்தை காப்பாற்ற தேர்ந்தெடுத்ததாக நினைத்தீர்கள் என்று கேட்டதற்கு, அவர் இதைப்போன்ற அதீத சக்திபெற்ற அந்நிய சக்திகளைப்பற்றிய எண்ணம் தோன்றிய அதே விதத்திலேதான் என் கணிதத்திறமைக்கான(சிக்கல்களுக்கான) சில எண்ணங்களும்(விடைகள்) தோன்றின அதனால் தான் என்றாராம். ("Because the ideas I had about supernatural beings came to me the same way that my mathematical ideas did. So I took them seriously.")


நான் உபயோகப்படுத்திய கட்டுரைகள்

நாஷ்ஷைப்பற்றி
சில்வியா நாசரைப்பற்றி
த பியூட்டிபுல் மைண்ட் படம் பற்றி

Read More

Share Tweet Pin It +1

20 Comments

In வகைப்படுத்தப்படாதவை

கட்டபொம்முவும் உண்மையும்

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது வியப்பளிக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும் தவறுமாக, திரித்ததைப்போல். சினிமாக்காரர்களால் திரிக்கப்பட்ட கதைகளே அதிகம், பாரதி படம் பார்த்து வருத்தப்பட்ட உண்மையான் பாரதி விசுவாசிகளை பார்த்துள்ளேன். அது போல்தான் இதுவும்.

ஆனால் பாரதியையும், கட்டபொம்மனையும், தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்களேத்தவிர வேறு எதையும் செய்துவிடவில்லை இவர்கள். கல்கி சோழர்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததைப் போல். நான் படித்த அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு,

நன்றி, ஜே ராஜா முகம்மது, அவருடைய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு.

-------------------------

கப்பத்தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், கட்டபொம்மனுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.

ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்ஸன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக கட்டப்பொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.

இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக.18,1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.

கட்டபொம்மன் தனது பரிவாரங்களுடன், ஜாக்ஸனை சந்திக்கச் சென்றார். ஆக.27, 1798ல் குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்டப் பொம்மனும் அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்துவிட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 400 மைல் அலைந்து, செப்.19, 1798ல் ராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.

கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா)மட்டுமே பாக்கி இருப்பதை கண்டுகொண்டார் ஜாக்ஸன். ஆகவே, மே 31,1798க்கும் செப். 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்ஸன், மேற்படி சந்திப்பின் போது கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்கவைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்படார். கட்டபொம்மன் தப்பித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டபொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)

கடிதத்தைக் கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்ஸனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரணை நடத்த வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரியவந்தது.

விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்ஸன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

Read More

Share Tweet Pin It +1

23 Comments

In கவிதைகள் சொந்தக் கதை

எழுதப்படாத என் கவிதைகள்



பாப்லோ நெருதாவைப் பற்றி எழுத அரிப்பெடுக்கும் என் நினைப்பை மட்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உள்ளிருந்து வெளிப்பட்டதும் மறைந்துபோய்விடுவதாய் நினைக்கும், மீண்டும் இன்பக்கிளர்ச்சி வருவதேயில்லை.

--------------------------

நழுவிச் செல்லும்
சொற்களைப் படிமமாக்கி
அழகுபடுத்தப்படும்
அக்கவிதை
ஒருமுறை படிக்கப்பட்டதும்
இறந்துபோனதாய் உணரப்படுவதால்
அழிக்கப்படுகிறது
இரைச்சலுடன் பறந்துபோகும்
சொற்களைப் பார்த்தவாறே
நிரப்பப்படாத பக்கங்களாய்
எழுதப்படாத என் கவிதைகள்.

- நான் தான் எழுதினேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

எனக்கும் மகாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமை

இதையொன்னும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும் என்று இல்லை. என் பெயரைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாத சில விஷயங்களைப் பத்தி மட்டும் இங்கே பார்ப்போம்.

எனக்கு உண்மையில் மோகன்தாஸ் என்று பெயர் வைத்தது, மக நட்சத்திரம் சிம்ம ராசிங்கிறதால மட்டும் தான் என்பது தான் உண்மை.(சரி சரி உண்மையைச் சொல்லவேண்டியது தானே. ஆனால் எனக்கு நட்சத்திரம் 'பொச்'சத்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லை - அதற்காக பெயரை மாற்றுவதாகவும் உத்தேசம் இல்லை). ஆனால் நான் சரி ஏதோ வைச்சது வைச்சிட்டாங்க நம்மலால முடிஞ்சது கொஞ்சம் கதையை சொல்லுவோம்னு, என் பெயர் எப்படி வந்ததுன்னு ஒரு கதை சொல்லுவேன் பெரும்பாலான இடத்தில் அந்தக் கதை.

எங்கம்மா அப்பாவிற்கு காந்தின்னா ரொம்ப பிடிக்கும், அது மட்டுமில்லாமல் காந்தி இறந்த அன்று(சொல்லப்போனால் அடுத்தநாள் ஆனால் அரைமணிநேரம் தான் என்பதாகவும் ஒரு கிளைக்கதை உண்டு) முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்ததால் தான் இந்தப் பெயரை வைத்தார்கள் என்று. பலர் அப்படியா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்(;)).

இதைச் சொல்லும் பொழுது இன்னொரு ஜோக் நினைவில் வருகிறது. பிறந்தப்ப என் மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்குமாம்(இப்ப இல்லையான்னு கேட்காதீங்க) அம்மாவுக்கு பக்கத்து பெட்டில் பிரசவம் செய்து கொண்ட பொண்ணு ஏன் இப்படி சப்பையா இருக்குன்னு கேட்க அம்மா, "அதுவா பஸ் ஏறிருச்சு"ன்னு சொன்னாங்களாம். அந்தம்மாவும் அப்படியான்னு கேட்டுக்குச்சாம். (So இது காலம் காலமா வருது...)

மற்றபடிக்கு எனக்கும் காந்திக்கும் தான் ஒற்றுமையிருக்குன்னு கதை சொல்றதுண்டா, அதனால நான் தண்ணியடிக்காம, தம்மடிக்காம இருக்கிறதுக்கும்(சரியா கவனிச்சுக்கோங்க மூன்றாவது கிடையாது!) காந்தி தான் காரணம் என்று ஒரு புகைச்சல் விடுறது வழக்கம். எப்படின்னா அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கினாங்கன்னு தான்.

இதுமாதிரி நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதுமுன்னு நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

Popular Posts